ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
அழகானதொரு கூடாகவும்
சமயங்களில் சுமையாகவும்
பிற்பொழுதுகளில்
அவளிற்கான அடையாளமாகவும் .
வரங்களிற்கான கூறுகளைத்
திரட்டிக் கொண்டு
நீ தேவதையென மாறுகிறாய் ....
எனக்குச் சிறகுகள் முளைக்கத் துவங்குகிறது !
http://gokulansirukathai.blogspot.com/
http://gokulanpoem.blogspot.com/
http://gokulanfotos.blogspot.com/
ஓட்டை தவிர்த்த நத்தை
கற்பனைகளில் தோன்றுவதில்லை
உடன்வரும் ஒன்று
அதற்கான அடையாளமாய் ...
உன்னைகாட்டிலும் போலியானது
என் காதலை கொழுத்து வளரவிட்ட
உன்னைபற்றியதான என் அனுமானங்கள்
>>>உன்னைகாட்டிலும் போலியானது
என் காதலை கொழுத்து வளரவிட்ட
உன்னைபற்றியதான என் அனுமானங்கள்<<<
போலி என்பது நம் எதிர்பார்ப்பிற்கு மாறாக இருப்பதனால் சொல்கிறோமா? இல்லை அசல் என சொல்லி நகல் ஏமாற்றிவிட்டதே என்பதனாலா?
>>உன் நெருக்கத்தின் வெம்மை கிடைக்காது போயினும்
உன்னைப் பற்றிய அனுமானங்களோடு
பயணிக்கத் துவங்கினேன்
காதலின் ஆபத்தான பள்ளங்களில்<<
பள்ளங்களில் பயணிப்பது ஆபத்தில்லையே!? ஊடே பள்ளங்கள் நிறைந்த குன்றுகளில் பயணிப்பது அல்லவா ஆபத்தானாது?
>>புள்ளியாய் மட்டுமே நீ தோன்றக் கூடிய தொலைவில்
புறப்படத் துவங்கிற்று என் பிரியத்தின் பிரவாகம்<<
தூரத்து கவர்ச்சி! எளிமையான வரிகள்!
>>என் அனுமானங்களுக்கு
உயிர் இருந்திருக்கலாம்
நான் மிஞ்சி இருக்ககூடும் ..<<
இருந்திருக்கலாம்! அப்படி இருந்திருந்தால் இந்த கவிதை இருந்திருக்காது!
>>பள்ளங்கள் பாதாளத்துக்கு கொண்டு போய் சேர்த்திட கூடாதே ...:-)<<
:). உண்மையில் பள்ளம் வேறு பாதாளம் வேறு என்று எனக்கு தோன்றவில்லை! நீங்கள் சொன்ன பதிலை பார்க்கும்போது பாதாளத்திற்கு பள்ளம் சிகரம் என்று தோன்ற செய்து விட்டீர்கள். சுவாரஸ்யமான பதில்! நன்றி!
உன் பாதைகளின் தன்மை குறித்து
இருளைக் காட்டிலும்
மோசமான தாக்கத்தை
நீ என்னில் ஏற்படுத்தலாம்
எனினும் உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்
உன் விரல் பிடித்துக் கொள்கிறேன் ...
================================
உன் விரல் பிடித்துக் கொள்கிறேன்
அனிச்சையாய் ..
இருள் படர
ஆயத்தமாகும் பொழுது
வகைபிரிக்க முடியாத உணர்வு
இருட்டில் பயணிப்பதென்பது
பயமாகவும் இருக்கலாம்
தைரியக்குறைவாகவும் இருக்கலாம்
ஆராய விருப்பமில்லாது
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்
உறுதியளிக்க முடியாது தான்
உன் பாதைகளின் தன்மை குறித்து
இருளைக் காட்டிலும்
மோசமான தாக்கத்தை
நீ என்னில் ஏற்படுத்தலாம்
எனினும் உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்
என்னென்னவோ காரணங்களை
எனக்கு நானே கற்பித்துக் கொண்டு
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்
இருட்டிலே
கொஞ்சம் கொஞ்சமாய்
என் சுயத்தின் சிதைவுகள்
தென்படக்கூடும் ..
சிறுகதைகள் : http://gokulansirukathai.blogspot.com/
ஆங்கிலக்கவிதைகள்:http://gokulanpoem.blogspot.com/
நன்றாக இருக்கிறது. இனிமையாகவும் இந்த சோகம் இருக்கிறது!
>நகர்கிறேன்
தெளிந்த நீரின் பிரவாகமாய்<
பிரவாகம் நகர்வதாக சொல்வது முரண்பாடல்லவா? :) நகர்ந்தால் நடை! பொங்கிப் பாய்ந்தால்தான் பிரவாகம்!
>பெருமழையின் சுவடுகள்
எதிர்பாராத வெள்ளமாயும்
வானவில்லின் பிரதிபலிப்பிலும்<
மழை ஓய்ந்துவிட்டதென்று மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் (அல்லது நான் அப்படி புரிந்துக் கொண்டேன்?)
வாழ்க!!
அன்புடன்
என் சுரேஷ்
அன்பு சுரேஷ்,
உங்கள் நன்றியை சாகம்பரியிடம் சேர்த்துவிட்டேன்.
நன்றி சொன்னது அவர்கள்தான்! :)
பத்திரமாய் படிந்திருக்கிறது
பட்டாம்பூச்சியின் வண்ணங்கள்
பழுப்பேறிய நோட்டுப்பக்கங்களில்
இதுவே போதுமானது
உயிரைப்பிழியும் என் தனிமையை
வரைதலில் எடுத்துரைக்க
ஜன்னல் கண்ணாடியில்
மங்கிய வெளிச்சத்தில்
எனதென ஊகிக்ககூடியதாய்
ஒரு பிம்பம்
அனுமதிப்பதில்லை
தனிமைக்கான என் சித்திரத்தை
தனிமையிலேனும்
உண்டாகிறது
எனக்கான என் இருத்தல்
On Oct 8, 10:08 pm, ezhil <nand...@gmail.com> wrote:
> அன்பு சுரேஷ்,
>
> உங்கள் நன்றியை சாகம்பரியிடம் சேர்த்துவிட்டேன்.
>
> நன்றி சொன்னது அவர்கள்தான்! :)
>
> On 10/8/08, N Suresh <nsureshchen...@gmail.com> wrote:
>
>
>
> > நன்றிக்கு நன்றி எழில்.
> > பலருக்கு தங்களின் படைப்புகளுக்கு என்ன பின்னூட்டம் வந்துள்ளது என்று
> > பார்க்கக்கூட நேரம் இல்லாத நிலையில் நீங்கள் நாங்களிட்ட
> > பின்னூட்டத்திற்கு நன்றி சொல்வது வியப்பாக உள்ளதால் நன்றி சொன்னேன்.
>
> > வாழ்க!!
> > அன்புடன்
> > என் சுரேஷ்
>
> > >> >> > > > > > நீங்கள் சொன்ன பதிலை...
>
> read more »
நத்தையை பெண்மைக்கு உவமைப்படுத்திய உங்கள் சிந்தனை பாராட்டுக்குரியது...!!!
இப்படிக்கு
உங்கள் தமிழ் ஆர்வத்தின்
இரசிகனில் இவனும் ஒருவன்...!!!
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
புதுமுகம் அறிமுகம்:பெயர்: விழியன்தம்பி பெயர் : உமாநாத்ஊர் : சென்னைவயது : 24, 34வேலை : கணினிசொந்த ஊர் : வேலூர்நன்றி,வணக்கம்
பண்புடன் தொடங்கும் போது வந்த மெயிலுக்கு பதில்
ரெண்டு மாடரேட்டரும் சேர்ந்த்து புது உறுப்பினரை கலாய்ப்பது நல்லாவா இர்ுக்்க்ு
Haja Mohaideen
from mi phone