கனடாவில் சிங் ஒருவருக்கும் இதே பிரச்சினை உண்டானது. சிங்குகள் பெரிய முண்டாசை தலையில் கட்டி இருப்பது கலாசாரத்துடன் தொடர்புடையதென்பதால் ஹெல்மட் போட முடியவில்லை.
ஒரு வழக்கின் அடிப்படையில் அந்த சிங் தலைப்பாகை விழாமல் 100 கிலோமீட்டர் வேகத்தில் பைக் ஓட்டி ஹெல்மட் கட்டாய த் தி லிருந்து விலக்கு பெற்றார்
காங்கிரஸில் இருக்கும் rationalist என்று பேர் எடுத்த நேரு “மாமா”
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
இன்று சிகாகோ சென்றேன். மதியம் 3 மணியளவில் சிகாகோ சென்று சேர்ந்தேன். சற்று ஓய்வெடுத்துவிட்டு மாலை அருகே உள்ள பார்ட்லெட் நகரில் உள்ள ஸ்வாமிநாராயண் ஆலயம் சென்றோம்.
ஸ்வாமிநாராயண் சம்பிரதாயம் ஒரு குஜராத் வைணவ சம்பிரதாயமாகும். இந்தியாவின் பணக்கார மாநிலத்தின் கோயில் என்பதை நிருபிப்பது போல கோயில் பளிங்கில் பள,பள என மின்னியது. சிகாகோவில் உள்ள வேறு எந்த கோயிலும் பக்கத்தில் கூட வரமுடியாது என சொல்லுவது போல அத்தனை செலவு செய்து கோயிலை கட்டியிருந்தார்கள். ஸ்வாமிநாராயண் விஷிச்டாத்வைத சம்பிரதாயத்தை பின்பற்றுகிறது என உள்ளே எழுதியிருந்தார்கள். இது 1780 முதல் 1830 வரை வாழ்ந்த கன்ஷியாம் பாண்டே எனும் உபி பிராமணர் உருவாக்கிய அமைப்பு. நீலகண்ட வர்ணி எனும் பெயரில் 12 வயது முதல் இந்தியா முழுக்க அலைந்து பின் குஜராத் சென்று இவ்வமைப்பை நிறுவினாராம்.
கோயிலில் கிருஷ்ணர் சிலை, அருகே இவரது சிலை. இரு சிலைகளுக்கும் ஒரு இஞ்சு கூட வித்தியாசம் இல்லை எனும் அளவு இரட்டையர் போல தோற்றம். "ஏன் இப்படி?" என கேட்டதற்கு "கடவுள், அவரது தூய பக்தர்" இருவரையும் அருகருகே வைத்து வழிபடுவது மரபு" என சொன்னார்கள். ஏனோ மனம் அதை ஏற்கவில்லை. திருமால் அருகே தாயாரை மட்டுமே ஏற்கமுடியும். அத்தனை பக்தி நிரம்பிய ஆஞ்சநேயர் கூட இராமனின் காலடியில் தானே அமர்ந்திருக்கிறார்? அருகே சரிசமமாக நிற்கவில்லையே?
ஆனால் மற்றவர்கள் யாரும் அதைகண்டுகொண்டதாக தெரியவில்லை. இந்த அமைப்புக்கு குஜராத்தில் 2 கோடி பக்தர்கள் இருப்பதாக சொன்னார்கள். கோயில் அலங்காரம், வேலைப்பாட்டை பார்த்து ரசிக்கவே ஒரு நாள் போதாது. கோயிலில் டோக்ளா, சமோசா, அரிசி, இட்டிலி, சாம்பார், டீ எல்லாம் மலிவான விலையில் தான் விற்ரார்கள். எல்லாமே ஐந்து டால்ர். லஸி 2 டாலர். அமர்சித்ர கதா எல்லாம் ஒன்று முதல் இரண்டரை டாலருக்கு கிடைத்தது.
ஆக எப்படியும் பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் இக்கோயிலும் சேர்ந்துவிட்டது. கோயிலின் தத்துவம் பிடிக்குதோ இல்லையோ, இன்னொரு கலாசாரத்தையும், சம்பிரதாயத்தையும் அறியும் வாய்ப்பு கிட்டியதில் மகிழ்ச்சி.
நான் பார்த்தவரை வட அமெரிக்காவில் உள்ள இந்துகோயில்கள் பலவும் ஒன்று தமிழர் அல்லது தெலுங்கரால் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இதனால் இருநாட்டுக்கும் எல்லைச்சாமியான திருப்பதி பாலாஜி மட்டுமே இவற்றின் ஆஸ்தான தெய்வமாக இருக்கிறார். மெஜாரிட்டி கணக்கு பார்த்தால் அமெரிக்காவிலுள்ள் அறுதிப்பெருமான்மைக்கும் மேலான சதவிகித இந்துகோயில்கள் தென்னாட்டின் பங்களிப்பே என்பது என் கணிப்பு
அடுத்ததாக குஜராத்திகள் ஸ்வாமிநாராயண மந்திர் என சிலவற்றை கட்டியுள்ளார்கள். ஆனால் அவற்றின் எண்ணிக்கை வெகு குறைவே. திராவிடர்கள் போல கன்சர்வேடிவாகவும் வட இந்தியர்கள் இருப்பதாக தெரியவில்லை. பூஜை, விரதம் எல்லாம் நம் அளவுக்கு தீவிரமாக அவர்கள் அனுஷ்டிப்பதுமில்லை. ஐய்யப்பமாலை அணிந்து அமெரிக்காவில் இருந்து சபரிமலை போய்வரும் பல நண்பர்களை அறிவேன். நான் பார்த்தவரை இந்துமதம் மற்றும் பண்பாடு எல்லாமே அமெரிக்காவில் செழிக்ககாரணம் ஆந்திராவும், தமிழ்நாடுமே என தைரியமாக சொல்லலாம்.
உங்க ஊரில் எப்படி?
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
அந்த அதிகாரியை அவசர அவசரமா அவங்க ஊருக்கே திருப்பி அனுப்பிட்டாங்களாம். அவங்க நாட்டை விட்டு வெளியேறின பின்னர்தான் தகவல் பத்திரிக்கையாளர்களுக்கு வந்திருக்கும்போல