மூன்று கவிதைகள்
============================================ருத்ரா
நியாயங்கள்
என்ன செய்து விடப்போகிறாய்?
கிழிச்செ!
இது என்ன
அவமானமா?
ஆவேசமா?
அலட்சியமா?
தராசு தட்டு அசைவுகள் கூட
இங்கு
ஃபாசில்கள்.
_______________________________________
கீதை
ஒரு கன்னதில் அறைந்தால்
இன்னொரு கன்னத்தில் காட்டு.
முதல் கன்னம்
உன்னுடையது!
இரண்டாவது கன்னம்
அவனுடையது.
_______________________________________________
வாய்தா
காலத்தின்
முதுகெலும்பு
வளைந்து வளைந்து
நொறுங்கியே போனது.
சுத்தியலுக்கும் வலிக்கவில்லை.
மேஜைக்கும் வலிக்கவில்லை.
ஆர்டர்! ஆர்டர்!
_________________________________________________