மூன்று கவிதைகள்

4 views
Skip to first unread message

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Aug 7, 2016, 1:56:52 PM8/7/16
to பண்புடன், tamizhsiragugal, zo...@googlegroups.com, tamizh...@googlegroups.com
மூன்று கவிதைகள்
============================================ருத்ரா



நியாயங்கள்


என்ன செய்து விடப்போகிறாய்?
கிழிச்செ!
இது என்ன‌
அவமானமா?
ஆவேசமா?
அலட்சியமா?
தராசு தட்டு அசைவுகள் கூட‌
இங்கு
ஃபாசில்கள்.

_______________________________________



கீதை


ஒரு கன்னதில் அறைந்தால்
இன்னொரு கன்னத்தில் காட்டு.
முதல் கன்னம்
உன்னுடையது!
இரண்டாவது கன்னம்
அவனுடையது.

_______________________________________________


வாய்தா


காலத்தின்
முதுகெலும்பு
வளைந்து வளைந்து
நொறுங்கியே போனது.
சுத்தியலுக்கும் வலிக்கவில்லை.
மேஜைக்கும் வலிக்கவில்லை.
ஆர்டர்! ஆர்டர்!

_________________________________________________

Reply all
Reply to author
Forward
0 new messages