உரை: குச்சிலியப் பெண்களின் முழுவதும் மூடின தனங்களும், பூவுலகினர் பாராட்டும் தமிழ்ப் பெண்களின் நன்கு மூடாத பருத்த முலைகளும், வெறுப்பை விளைக்கக் கூடியன வாதலால், இளைய தெலுங்குப் பெண்டிரது அழகு தெரியும்படி துணியினால் மூடியும் மூடப்படாமலும் இருக்கிற தனங்களைப் போல விருக்கும்படியாக, பாட்டு இயற்றுவாயாக!-ப. 260
சென்னைப் பேரகராதி “குச்சிலிய மாதர் குயமும்” என்ற தனிப்பாடலை மேற்கோள் காட்டுகிறது.முழுப்பாட்டும் இணையத்தில் காணோம். உங்களிடம் உள்ள தனிப்பாடற்றிரட்டு நூல்களில்இப்பாட்டு இருந்தால் தாருங்கள். நன்றி.குச்சிலியர் - கூர்ச்சர தேசத்தவர். குச்சிலிபாளையம், குச்சியன்பாறை - திண்டுக்கல் வட்டத்தில் உள்ளன.Tamil Lexicon:குச்சிலியர் kucciliyar , n. < gurjarī. Gujaratis, people of Gujarat; கூர்ச்சரதேசத்தவர். குச்சிலிய மாதர் குயமும் (தனிப்பா. ii, 75, 190).குச்சிலி ஓவியம்:குஜ்ஜிலி குஜிலி ஆகும். உ-ம்: குச்சிலியர் தெரு - திருச்சியில் குஜிலி தெரு என்கின்றனர்.குச்சிலியன்பாறை, குச்சிலிபாளையம் எல்லாம் திண்டுக்கல் அருகே இருக்கின்றன.இவை ராஜ கம்பளத்தாரோடு தொடர்புடையவை.குஜ்ஜிலியன் பாறை அருகே உள்ள குச்சிலி பாளையம். கம்பளத்து நாயக்கரில் ஒரு கூட்டம் : குச்சிலியர்,வடநாட்டில் நிகழ்ந்த அன்னிய படையெடுப்புகளால் விஜயநகரம் நோக்கிப் புலம்பெயர்ந்தவர்கள் பலர்.கூர்ச்சரம்/குச்சரம் நாடுகளில் இருந்து வந்தோர் குச்சிலியர் எனப்பட்டனர். பொந்தகண்ட நாட்டார் பொந்திலியர் என்றது போல்.குஜிலியன்பாறை அருகே உள்ள ஊர் குச்சிலிபாளையம். குச்சிலியர் கூட்டம் அமைத்த ஊர்.“நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் யூனியன் அலுவலககாவலாளியாக திண்டுக்கல் மாவட்டம் குச்சிலி பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி(52) என்பவர்பணியாற்றி வந்தார்.”திண்டுக்கல் - பழனி - உடுமலை பகுதிகளில் கம்பளத்து நாயக்கர்களின் பாளையங்கள் மிகுதி.
- காமைய நாயக்கனூர் ( கடவூர் ) - காமைய நாயக்கர்
- கன்னிவாடி - அப்பு நாயக்கர்
- கோம்பை( மதுரை ) - கன்னட தொட்டிய நாயக்கர் இனம்
- காடல்குடி
- கோலார் பட்டி - கலங்க நாயக்கர்
- தொட்டப்ப நாயக்கனூர்
- ஆவுலப்பன் பட்டி - குச்சிலி பொம்மு நாயக்கர்
- ஆலங்குளம் ( சிவகாசி )
- அருப்புகோட்டை
- ஆற்றங்கரை - பெதன்ன நாயக்கர்
- கொல்லப்பட்டி ( நில கோட்டை ) - மக்கால நாயக்கர் - கவரா இனம்
- பேரையூர் - ராமசாமி காமைய நாயக்கர்
ஆவுலுப்பம்பட்டியில் குச்சிலி பொம்மு நாயக்கர்.இதுபோன்ற குச்சிலியன் ஒருவனின் பாறை. குச்சிலியம்பாறை.பொந்திலியர் போல, குச்சிலியர்கள் இசுலாமியர் படையெடுப்பால் தென்னகம் நோக்கி,முதலில் ஆந்திர - கர்நாடகம், பின்னர் தமிழகம் வந்துள்ளனர். இதனால், வடக்கேஇருந்து தெற்கே வந்த கலந்தமைக்கு அடையாளமாக பொந்திலி, குஜ்ஜிலி எல்லாம்இருக்கின்றன. குஜ்ஜிலியன் குஜிலியன் ஆகியுள்ளது எனக் கருதுகிறேன்.இவர்கள் இபோதைய குஜராத்தியர் அல்லர். நாயக்கர் அரசாங்க காலத்து பாளையப்பட்டுகள்.காலின் மெக்கென்சி சுவடிகள், சமுதாய ஆவணங்கள், திண்டுக்கல் வட்ட வரலாறு, ...பார்த்தால் குச்சிலியர்/குஜ்ஜிலியர் வரலாறு தெரியும்.நா. கணேசன்