--சென்னை அரும்பாக்கத்தில்தான் இருக்காம். இந்த வீக்கெண்டுக்கு வில்லனையும் உதயனையும் அனுப்பி வைக்கலாமான்னு இருக்கேன். இவங்களுக்கும் பேயோட்டினாத்தான் சரிவரும்னு நினைக்கிறேன் :))
என்றும் அன்புடன்,
ரமேஷ்---
Sent via Epic Browser
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
சைதாப்பேட்டை, செப். 20–
பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பார்வையற்ற பட்டதாரிகள் தினமும் முக்கியமான ரோட்டில் பரபரப்பான நேரத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த செவ்வாய்க்கிழமை வேப்பேரி பெரியார் நெடுஞ்சாலையில், மறுநாள் அண்ணா சாலை நந்தனம் அருகில் நேற்று மெரினா கண்ணகி சிலை அருகே காமராஜர் சாலையிலும் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
அவர்களை கைது செய்த போலீசார் அனைவரையும் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். இவர்களின் போராட்டத்தால் நகரில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கிடையே சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த பார்வையற்ற பட்டதாரிகள் 9 பேரை திருவல்லிக்கேணி போலீசார் நேற்று அப்புறப்படுத்தினார்கள்.
அவர்களை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை அளிக்க அழைத்து செல்வதாக கூறி வேனில் ஏற்றிய போலீசார் மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரி முன்பு இறக்கி விட்டு விட்டு சென்று விட்டனர். இரவு முழுக்க ஆஸ்பத்திரி வளாகத்தில் தவித்த அவர்கள் இன்று காலை மற்றவர் உதவியுடன் சென்னை வந்தனர்.
போலீசாரின் இந்த செயலை கண்டித்து பார்வையற்ற பட்டதாரிகள் இன்று காலை கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காலை 9.30 மணிக்கு அவர்கள் மறியலை தொடங்கினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து கிண்டி போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்தனர். இவர்களில் 50 பேர் பெண்கள். கைதான அனைவரையும் சமூக நல கூடத்தில் தங்க வைத்துள்ளனர்.
Posted Date : 15:29 (20/09/2013)Last updated : 16:52 (20/09/2013) சென்னை: பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் விஷயத்தில் காவல்துறையினர் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும்போது காவல்துறையின் ஈரல் மட்டுமின்றி, இதயமும் அழுகிவிட்டதோ என்ற வேதனை ஏற்படுவதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அதன் உச்சகட்டமாக சென்னையில் நேற்று போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பார்வையற்றவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி வாகனத்தில் ஏற்றிச் சென்ற காவல்துறையினர், அவர்களை சென்னையிலிருந்து 100 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள மதுராந்தகத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்த முன்னாள் முதலமைச்சர், காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டதாக கூறியிருந்தார். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் விஷயத்தில் காவல்துறையினர் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும்போது காவல்துறையின் ஈரல் மட்டுமின்றி, இதயமும் அழுகிவிட்டதோ என்ற வேதனை ஏற்படுகிறது" என்று கூறியுள்ளார். |
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
:-)ரமேஷ்,ஒண்ணும் பண்ண முடியாது... இந்தியா போன்ற அரசு இப்படி தான் இயங்கும்...அது சாமானியர்களுக்கு மட்டுமே ஒருமுகத்தை காட்டும்.. முதலாளிகளுக்கும், மதவாதிகளுக்கு வேறு முகம் காட்டி இப்படி தான் வளைந்துக்கொடுக்கும்...ஜென்டில்மேன் படத்தில் வரும் பாலகுமாரன் வசனம் தான் ஞாபகம் வருகிறது 'வெட்ட துவங்கினா எத்தன பேர வெட்டனும் தெரியுமா?'
இன்னாது இந்திய அரசா??
நீங்க நிகழ்ச்சியை முழுசா பார்க்கலையா???தமிழக முதல்வர் ஒருவர் இவரை சந்தித்தாரம். அப்புறம்தான் இந்த ஆக்கிரமிப்பு எல்லாமாம்... :)
உனக்கு புரிகிறது மாதிரி சொல்லணுமுன்னா: இந்தியா சுதந்திரம் அடைந்த பின் ஆட்சி அமைத்த தமிழக முதலாமைச்சர்களில் யார் இந்தியா\இந்துமதவாதிகளை முற்றிலுமாக எதிர்த்து தமிழகத்தில் ஆட்சி செய்தது...
டி.ஜி.எஸ் எப்படி காருண்யாவை கட்டினார்னு கேட்டா சிறுபான்மையினரை பழிவாங்குறாங்கன்னு கொடிபிடிக்க ஒரு கூட்டம் கிளம்பிடும் :
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
அரசை கைப்பற்றுவது தான் இங்கே முக்கியமாக இருக்கிறதே தவிர, கோட்பாடுகளை தகர்ப்பதில் அல்ல...
ஜெர்மனியில் வந்து நான் இருந்து விட்டு 'உங்களுக்கு தெரியுமா, பவுத்தம் இவளவு மோசமான வேலைகளை இலங்கையில் செய்கிறது' என்று நான் சொன்னால் எங்க கோமாளி ஆவது நான் தான்.. :)
ஆனா ஒருவேளை சோத்துக்கு சிங்கியடிச்ச டி.ஜி.எஸ் எப்படி காருண்யாவை கட்டினார்னு கேட்டா சிறுபான்மையினரை பழிவாங்குறாங்கன்னு கொடிபிடிக்க ஒரு கூட்டம் கிளம்பிடும் :(
யாரும் எதிர்க்கமாட்டாங்க.. அதுதான் எதார்த்தம்.இது இந்துமதவாதிகளுக்கு மட்டுமல்ல என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
--
தாய்மதம் என்பதெல்லாம் மிகபெரிய ஜல்லிகள்... இந்தியா என்ற நிலபிராந்தியத்தில் பிறந்ததற்காகவே நான் 'இந்து' என்று நீங்கள் சொன்னால், இதே மண்ணில் தோன்றிய பவுத்தத்தையும், சமணத்தையும் என்னோடு எப்படி தொடர்பு படுத்துவீர்கள்?
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
நானெல்லாம் எனது குலசாமியை தேடி அஞ்சு தலைமுறை முன்னாடி போயும் கண்டுபிடிக்க முடியல... ஓரளவுக்கு பழையவர்களிடம் பேசியதில் இயற்கையை தான் வணங்கி இருக்கிறார்கள்..அதனால் தான் தாய்மதம் என்பதே ஜல்லி என்றேன்... :-)
நானெல்லாம் எனது குலசாமியை தேடி அஞ்சு தலைமுறை முன்னாடி போயும் கண்டுபிடிக்க முடியல... ஓரளவுக்கு பழையவர்களிடம் பேசியதில் இயற்கையை தான் வணங்கி இருக்கிறார்கள்..அதனால் தான் தாய்மதம் என்பதே ஜல்லி என்றேன்... :-)
லும், நாம வழிபடும் சிறுதெய்வ வரலாறு 400 வருசத்துக்குள்தான் இருக்கும். அதுக்கு முன்னாடி யாரை கும்பிட்டாங்கங்கிறதுக்கு நம்ம ஊர் திராவிட சித்தாந்தத்துக்கிட்ட பதில் இருக்காது :))
கும்பிட்டா தானே பதில் கிடைக்கிறதுக்கு...:)சமண கோயில்கள், பவுத்த கோயில்கள் எப்படி கபளீகரம் செய்யப்பட்டதுன்கிற பின் தொடர்ந்தா ஓரளவு தகவல் கிடைக்கலாம்.. ஆனா, எல்லா சமூகங்களுக்கும் அதை பொருத்திப் பார்க்க முடியாது..
ஸ் பெ ஜி,உங்க பகுதி ஸ்பெஷல் கேசா இருக்கலாம். இந்தியாவே சுதந்திர போராட்டத்தில் இருக்கும் போது உங்க பகுதி முன்னோர் கலந்துக்கலே. அப்படியொன்னு நடந்ததே தெரியாமல் இருந்திருக்கிறார்கள். தமிழகத்தில் கிட்டதட்ட ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பான பக்தி இலக்கியம், கோவில்கள் இருந்தும் உங்கள் முன்னோர்கள் இந்து மதத்தில் இருக்கலே. குறைந்த பட்சம் தமிழ் இலக்கியங்களில் சமணமும், சைவமும், வைணமும் விரிவா பேசபட்டு இருக்கு. அதனாலே தமிழகத்தில் மிகப் பெரும்பான்மையா -சைவ, வைணவ, சமண - என சில மதங்கள் இருந்துள்ளன.
ஒருவேளை உங்க தலைமுறை பவுத்தரா அல்லது சமணரான்னு சந்தேகம் இருந்திருந்தால்,
முதலில் சமணர் அப்புறமா பவுத்தர்/சைவர் அப்புறமா சைவரா இருந்திருக்க வாய்ப்பிருக்கு. இப்போ அந்த கண்ணியிலிருந்து அறுபட்டு கிறிஸ்தவரா இருக்கிங்க. இனி உங்க சந்ததி கண்ணிக்கு வரவாய்ப்பு மிகக் குறைவு
தமிழ்பயணி ஜி,மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் பழங்குடி மக்களின் வாழ்க்கையை கேட்டுப்பாருங்கள், அவர்கள் என்ன சமயம் என்ன என்று? அவர்களின் பதிலின் வழி தேடினால் எனது பதில் கிடைக்கும்.
மலைகளின் வழியாக உணவு தேடி அலைந்த ஒரு தமிழ் பழங்குடியின் நீட்சி என்பதாக தான் நான் என்னை நினைக்கிறேன்.. ஆண்ட பரம்பரை போன்ற கோஷங்களை குறைந்தபட்சம் என்னளவில் நம்ப தயாராக இல்லை..
இன்று நம்மிடம் இருப்பதாக சொல்லப்படும் பெரும்பாலான பிற்கால தமிழ் இலக்கியங்கள் கோயில்,சமயம், அரசு போன்றவற்றை சுற்றி சுற்றி வருவதாக எனது அவதானிப்பு.... இந்த மண்ணுக்கான, மக்களுக்கான இலக்கியங்கள் பல தீக்கிரையாக்கப்பட்டும், ஆற்றில் விடப்பட்டும், கவனிப்பாரற்றும் கரைந்து போயின..
திராவிட மாயையில் விழைந்த குழப்பமேயன்றி வேறில்லை.
இதுவரை வெளியாகியுள்ள அதிகாரபூர்வ முடிவுகளின்படி, ‘போனஸ் ஆசனங்கள்’ இன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு 28 ஆசனங்களையும், ஆளும் கட்சியின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது.
இலங்கை மாகாணசபை தேர்தல் விதிகளின்படி, ஒவ்வொரு மாகாணத்திற்கும் 2 போனஸ் ஆசனங்கள் வழங்கப்படும். அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ள வாக்குகளின் சதவீதம், அக்கட்சிக்கு இரு போனஸ் ஆசனங்களை பெற்றுத்தரும்.
வடக்கு மாகாணத்தில், மொத்தம் 5 மாவட்டங்கள் உள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகியவையே அந்த மாவட்டங்கள்.
இவற்றில் பலராலும் உற்று நோக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாவட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 213,907 வாக்குகளை பெற்று 14 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 35,995 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும் பெற்றுள்ளன. இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (ரணில் விக்ரமசிங்கே) 855 வாக்குகளைப் பெற்றுள்ள போதிலும் அக்கட்சிக்கு எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை.
சேது திட்ட வழக்கில் இருந்து அரசு வக்கில் மோகன் பராசரன் விலகல்.
இராமர் மீதும் சேதுபாலம் மீதும் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அந்த நம்பிக்கை க்கு எதிராக தம்மால் வாதட இயலாது என்று கூறி வழக்கிலிருந்து விலகினார்.
Posted Date : 09:06 (23/09/2013)Last updated : 11:42 (23/09/2013)
நைரோபி: கென்யாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான சென்னையை சேர்ந்த பொறியாளர் பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தாண்டு தீபாவளிக்கு தமிழகம் வருவதாக திட்டமிட்டு இருந்தனர் ஸ்ரீதர் தம்பதியினர். இதுபற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்திருந்த நிலையில் தான் துரதிருஷ்டவசமாக, நைரோபி வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஸ்ரீதர் பரிதாபமாக உயிர் இழந்தார். மஞ்சு படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. |
தீவிரவாதிகள், “அனைத்து முஸ்லிம்களும் வெளியேறுங்கள்” என உத்தரவிட்டுவிட்டு, மற்றையவர்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில், 2 இந்தியர்கள் உள்பட 39 பேர் பலியாகினர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கென்யா தலைநகர் நைரோபியில் இந்த அதிர வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.
இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் உள்ள கொடுமையான விஷயம், தீவிரவாதிகள் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்களை வீழ்த்திக் கொண்டிருந்தபோது, ட்விட்டரில் நேர்முக வர்ணணை செய்த வண்ணம் சுட்டுக் கொண்டிருந்தனர்.
எத்தனை பேர் தரையில் வீழ்த்தப்பட்டனர் என்ற விபரம், ட்விட்டரில் அப்டேட் செய்யப்பட்ட வண்ணம் இருந்தது!
நைரோபியில் உள்ள வெஸ்ட்லேன்ட் ஷாப்பிங் சென்டரில் நடைபெற்றது இந்த துப்பாக்கிச்சூடு.
இரு பிரெஞ்ச் பிரஜைகள் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கனேடிய பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில், இரு கனேடியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரில் ஒருவர், கனேடிய ராஜதந்திரி.
அமெரிக்க ராஜாங்க அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கர்கள் யாரும் கொல்லப்படவில்லை எனவும், நான்கு அமெரிக்கர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாப்பிங் மாலுக்குள் புகுந்த தீவிரவாதிகள், இங்கிருந்த முஸ்லீம் அல்லாதவர்களை மட்டுமே கொல்வது என்பதில் திடமாக இருந்தார்கள். கூட்டத்தில் இருந்த அனைத்து முஸ்லீம்களையும் வெளியேற சொன்ன அவர்கள், வெளியேறியவர்களிடம் “முகமது நபியின் தாயாரின் பெயர் என்ன?” என்ற கேள்வியை தனித்தனியாக கேட்டார்கள்.
“ஆமினா” என சரியாக பதில் அளிக்காதவர்கள் முஸ்லீம் அல்லாதவர்கள் என தெரிந்துகொண்டு, அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள்.
தீவிரவாதிகள் அனைவரது கைகளிலும் ஏ.கே.47 துப்பாக்கிகளும், கையெறி குண்டுகளும் இருந்தன.
சோமாலியாவை சேர்ந்த தீவிரவாத இயக்கமான அல்-ஷபாப் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது. அல்-காய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாத இயக்கம் இது என்ற போதிலும், இவர்கள் சுயாதீனமாக இயங்குகின்றனர். சோமாலியா நாட்டில் கென்யா ராணுவம் நிலைகொண்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே, இந்த தாக்குதல் நடத்தப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போதும், அதன் பின்னரும் அந்த ஷாப்பிங் மாலில் எடுக்கப்பட்ட போட்டோக்களை கீழேயுள்ள இணைப்பில் பார்க்கவும்:
http://viruvirupu.co/shopping-mall-us-embassy-international-attention-women-children-cars/
கென்யாவில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட தமிழர் குறித்து உருக்கமான தகவல்!
Posted Date : 09:06 (23/09/2013)Last updated : 11:42 (23/09/2013)
காந்திஜி வழியைதான் பின்பற்றுகிறார் மோடி:சுப்பிரமணிய சுவாமிமும்பை:பா.ஜ.க., குஜராத் முதல்வர் பங்கேற்கும் கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு கட்டணம் முறையை நடைமுறைப்படுத்தியது.இம் முறைக்கு பா.ஜ.க., தலைவர் சுப்ரமணிய சுவாமி ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார்.கட்டாயப்படுத்தவில்லை:இதில் தவறு என்ன இருக்கிறது? மக்கள் கட்டணம் செலுத்தி பங்கேற்க தயாராக இருக்கிறார்கள். யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. மகாத்மா காந்தியே இந்த முறையை தான் பின்பற்றினார். அவர் கையெழுத்திடுவதிற்கு ரூ.5 கட்டணம் விதித்தார். காங்கிரஸ் கட்சியினர் கட்டணங்கள் விதித்து அதனை தங்கள் பாக்கெட்டுக்களில் திணித்து கொள்கிறார்கள். ஆனால் மற்ற கட்சியினர் கட்டண தொகையை கட்சியின் வளர்ச்சி பணிக்காக வழங்குகிறார்கள்.இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி கூறினார்.
மும்பையில் போட்டியிடுவாரா சுவாமி:மேலும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் மும்பையில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த சுவாமி, இது குறித்து கட்சியின் மேலிடம் தான் முடிவு எடுக்க வேண்டும் நான் எடுக்க முடியாது என்றார்.மேலும் மும்பையில் இருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன் இது எனக்கு புகுந்த வீடு மாதிரி தான் என்றார். மேலும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி எங்கு சென்றாலும் நமது ஓட்டு இரட்டிப்பாகும். அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதே நம் எல்லோருடைய விருப்பம்’’ என்றார் சுவாமி.
--
Posted Date : 14:09 (27/09/2013)Last updated : 14:11 (27/09/2013) வேலூர்: இலங்கை, வடக்கு மாகாண தேர்தல், இந்திய-இலங்கை நாடுகளின் கூட்டுச் சதி என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் நளினியை சந்திக்க, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ இன்று வேலூர் வந்தார். தற்போது இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடக்க இருக்கின்றது. அனைவரும் போர்க்குற்றங்ளை நடந்த இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது என்றும், காமன்வெல்த் உறுப்பினர் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்றும் கூறிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இலங்கையில் அமைதி நிலவுவதாக கூறி 25 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு தேர்தலை நடத்தி நாடகம் ஆடுகிறார்கள். இலங்கையில் நடந்த தேர்தல் இந்திய-இலங்கை நாடுகளின் கூட்டுச் சதி. லட்சக்கணக்கான மக்களை அழித்த நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடத்துவது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாகும்’’ என்றார். -ஏ.சசிகுமார் |
இலங்கையில் நடந்த தேர்தல் இந்திய-இலங்கை நாடுகளின் கூட்டுச் சதி.
வடக்கு மாகாண தேர்தல்: இந்திய-இலங்கை நாடுகளின் சதி-வைகோ குற்றச்சாட்டு!
Posted Date : 20:07 (30/09/2013)Last updated : 20:07 (30/09/2013) நெல்லை: கூடங்குளம் அனு உலை எதிர்ப்பு போராட்ட குழுவை சேர்ந்த 39 பேர் மீது, காவல்துறை கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் மீனவ கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்டனிராஜ் |
கோவையில் வீடு வீடாக புத்தகம் விநியோகித்த 4 பேர் கைது - கோவை தினகரனில் செய்தி'புதிய ஜனநாயகம்' புத்தகத்தை விநியோகித்தற்காக கைது செய்திருக்கிறார்கள். அதில் மோடி பற்றிய செய்தியும் கார்ட்டூனும் இருந்திருக்கிறதுபுதிய ஜனநாயகம் புத்தகம் தடை செய்யப்பட்ட புத்தகமா என்ன?
சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெயாவின் கைப்பாவையாக உச்ச நீதிமன்றம்!
அண்ணே நான் ஆச்சரியப்பட்டதுக்கு காரணம் இருக்கு.கருணாநிதியோ அல்லது ஜெயலலிதாவோ தங்களை மீறிய ஒரு ஆளுமையை தமிழ்நாட்டுக்குள்ள அனுமதிக்கமாட்டாங்க.
அதுலையும் ஜெயலலிதா ஒருபடி மேல.. அதனாலதான் ஆச்சரியப்பட்டேன். அதுலையும் மோடியைப் பற்றி கட்டுரை & கார்ட்ரூன் வந்ததுக்காக தமிழ்நாட்டுல கைது செஞ்சாங்க என்பதெல்லாம் கேக்குறதுக்கே நாராசமா இருக்கு.
கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கலாம். இப்போ ப்ரியன் அண்ணன் லிங்க் தருவாரு. படிச்சிட்டு மேற்கொண்டு என்னான்னு பார்க்கலாம்.ப்ரியன் அண்ணனுக்கு பின்னூட்டம் போடுறதுக்கு முன்னாடி இன்றைய தினகரன் எடிசனை ஒரு ரவுண்டு பார்த்துட்டு வந்தேன். அதுல அப்படி ஒரு செய்தியும் இல்ல. பக்கம் 4ம், 13ம் நாட் அவைலபிள்னு சொல்லுது. அதனாலதான் எந்த பக்கத்துல இருக்குன்னு கேட்டேன்.
செய்தியை முழுசா படிச்சிட்டு மேற்கொண்டு பேசலாம். ஒருவேளை இந்த காரணத்துக்காகத்தான் கைது செஞ்சாங்கன்னு தெரிஞ்சா ரரக்களை ஒருபிடி பிடிக்கலாம் :))
முகப்பிலேயே சம்மபந்த பட்ட கார்டூன் உள்ளது. இந்த படத்திற்க்காக தடை என்பது நம்பவே முடியலே.
சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெயாவின் கைப்பாவையாக உச்ச நீதிமன்றம்!
அன்போடு
மோரு
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெயாவின் கைப்பாவையாக உச்ச நீதிமன்றம்!
இப்படியொரு கட்டுரை இதழில் வந்திருக்கு. இதற்க்காக இருக்க கூடும்.
இதுக்கு நியாயமா உச்சநீதிமன்றமே நடவடிக்கை எடுக்கனும். உச்சநீதிமன்றமும் சரிகிடையாது அது சரி வேற யாருய்யா நியாயஸ்தன்னு கேட்டா குதுருக்குள்ள தலைய வச்சிக்கிறது.
இருக்கலாம்.ப்ரியன் அண்ணன் லிங்க் கொடுத்த பின்னாடி முழூசா படிச்சி பார்க்கனும் மோடிக்கு தமிழ்நாட்டுல இம்புட்டு வெறியர்கள் இருக்காங்களான்னு.
பாரம்பரியமா வரக்கூடிய இந்துமதம் சம்பந்த பட்ட இதழ்களில் கூட மோடியை பற்றிய கட்டுரைகள் காணோம். எல்லாரும் ஆயுத பூஜை சுண்டல் ஸ்பெசல் போட்டுட்டு இருக்கிறார்கள்.
இதில் யார் சொல்லுவது பொய் ...?!
எனக்கு ரெண்டு செய்தியிலும் இருக்கும் முரண்பாடு தெரியவில்லை கொஞ்சம் விளக்க இயலுமா?
நஸ்ரியா நடித்தது போன்று வேறே ஆள் வைத்து டூப் போட்டு கிளு கிளு காட்சியை எடுத்து விட்டார்களாம். நஸ்ரியா நடிகர் சங்கத்தில் புகார்.
இது போல செய்திகளை போடுங்க சாமியளா எப்ப பார்த்தாலும் மோடி மோடி என்னும் மோடி வித்தைதான் கிடைத்ததா :-))))
தனுஷ் -ஐஸ்வர்யா உறவில் விரிசலாம் விவாகரத்து வரை செல்லும் என செய்திகள் கசிகிறது. ரஜனி மாப்பிள்ளையாக இருந்து கொண்டே வேற் இடத்தில் “மாப்பிள்ளை” யாக செயல் படுவது நைய்யாண்டி தானே
ஏஞ்சாமிகளாவேறே செய்திகளே இல்லியாதனுஷ் -ஐஸ்வர்யா உறவில் விரிசலாம் விவாகரத்து வரை செல்லும் என செய்திகள் கசிகிறது. ரஜனி மாப்பிள்ளையாக இருந்து கொண்டே வேற் இடத்தில் “மாப்பிள்ளை” யாக செயல் படுவது நைய்யாண்டி தானே
2013/10/8 sadayan sabu <sadaya...@gmail.com>
நஸ்ரியா நடித்தது போன்று வேறே ஆள் வைத்து டூப் போட்டு கிளு கிளு காட்சியை எடுத்து விட்டார்களாம். நஸ்ரியா நடிகர் சங்கத்தில் புகார்.நஸ்ரியாவின் அழகு முகத்தை பார்த்துமா இப்படியெல்லாம் ஏமாத்துறாங்க...செய்தி கேட்டதும் மனசுக்கு பக்குன்னு ஆயிடுச்சி...
--
என்றும் அன்புடன்அபு ஹஸ்மியா (ஜெகபர் அலி)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
தனுஷ் -ஐஸ்வர்யா உறவில் விரிசலாம் விவாகரத்து வரை செல்லும் என செய்திகள் கசிகிறது. ரஜனி மாப்பிள்ளையாக இருந்து கொண்டே வேற் இடத்தில் “மாப்பிள்ளை” யாக செயல் படுவது நைய்யாண்டி தானேவேறிடம் என்பதை என் போன்ற திரை ஞான சூனியங்கள் புரிந்து கொள்ளும் படியாக விளக்க இயலுங்களா.. :(
வருங்கால மாப்ளைக்குஇதெல்லாம் தேவையில்லாத விசயமுன்னேன்
2013/10/8 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>
தனுஷ் -ஐஸ்வர்யா உறவில் விரிசலாம் விவாகரத்து வரை செல்லும் என செய்திகள் கசிகிறது. ரஜனி மாப்பிள்ளையாக இருந்து கொண்டே வேற் இடத்தில் “மாப்பிள்ளை” யாக செயல் படுவது நைய்யாண்டி தானேவேறிடம் என்பதை என் போன்ற திரை ஞான சூனியங்கள் புரிந்து கொள்ளும் படியாக விளக்க இயலுங்களா.. :(வருங்கால மாப்ளைக்குஇதெல்லாம் தேவையில்லாத விசயமுன்னேன்
சாபுஜி,
எனக்கு ரெண்டு செய்தியிலும் இருக்கும் முரண்பாடு தெரியவில்லை கொஞ்சம் விளக்க இயலுமா?
கொஞ்சநாளைக்கு முன்னாடி பணம் பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையால் தங்கள் கூட்டணியிலிருந்து சித்திக் பிரிந்து சென்று விட்டதாக இரண்டாவது செய்திக்கு அர்த்தம். அதாவது இப்ப கைதாகி உள்ளவர்கள் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தங்களுக்குள் பங்கு தகராறு நடந்ததாக கூறியுள்ளார்கள்.
Posted Date : 17:23 (08/10/2013)Last updated : 17:24 (08/10/2013) புதுடெல்லி: வருகிற 2016 ஆம் ஆண்டு தனக்கு 70 வயதாகும்போது அரசியலிலிருந்து ஓய்வு பெற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி விருப்பம் தெரிவித்ததாகவும், இதனைத் தொடர்ந்தே ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. |
கொடுத்த சுட்டிகளை ஒரு முறை படிச்சுட்டு வந்து கேள்வி கேட்டாலும் விளக்கம் சொன்னாலும் நல்லா இருக்கும்...
பண பங்கீட்டில் பிரிந்த சித்திக்! பெங்களூரு, பா.ஜ., அலுவலக குண்டு வெடிப்புக்கு, "போலீஸ்' பக்ருதீன், 20 லட்ச ரூபாய் பெற்ற நிலையில், அதை பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில், சித்திக் பிரிந்து சென்றதுதெரியவந்துள்ளது. பெங்களூரு, மல்லேஸ்வரம், பா.ஜ., அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, மேலப்பாளையத்தைச் சேர்ந்த கிச்சான் புகாரி, உட்பட ஐவரை, பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், பயங்கரவாதி, "போலீஸ்' பக்ருதீனுக்கு தொடர்பிருக்கலாம் என, பெங்களூரு போலீசார் நம்பியதால், இணை கமிஷனர் ஹேமந்த் தலைமையில், சி.பி.சி.ஐ.டி., காவலில், தனி இடத்தில் உள்ள, "போலீஸ்' பக்ருதீனிடம், ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கொடுத்த சுட்டிகளை ஒரு முறை படிச்சுட்டு வந்து கேள்வி கேட்டாலும் விளக்கம் சொன்னாலும் நல்லா இருக்கும்...எனக்கு ரெண்டு செய்தியிலும் இருக்கும் முரண்பாடு தெரியவில்லை கொஞ்சம் விளக்க இயலுமா?கொஞ்சநாளைக்கு முன்னாடி பணம் பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையால் தங்கள் கூட்டணியிலிருந்து சித்திக் பிரிந்து சென்று விட்டதாக இரண்டாவது செய்திக்கு அர்த்தம். அதாவது இப்ப கைதாகி உள்ளவர்கள் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தங்களுக்குள் பங்கு தகராறு நடந்ததாக கூறியுள்ளார்கள்.
கொடுத்த சுட்டிகளை ஒரு முறை படிச்சுட்டு வந்து கேள்வி கேட்டாலும் விளக்கம் சொன்னாலும் நல்லா இருக்கும்...
அதாவது பங்கு போடுவதில் சண்டை போட்டு பிரிந்த ஒருவர் இப்போ கூட்டாளிகளுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளார்...
இதுக்கு மேலேயும் திரும்பி என்ன முரண்பாடுன்னு கேட்டீங்கன்னா...முரண்பாடு இல்லைதான் நான்தான் தெரியாதனமா உளறிகிட்டு இருக்கேன்...சாரி...
பொதுவாக இது போன்ற உள்முரண்கள் உண்மையாகவும் இருக்கும், காவல்துறையை குழப்பவும் நடக்கும் அல்லது சம்பந்த பட்ட நபரிடமிருந்து விலகியுள்ளதாக காட்டி கொள்வதன் மூலம் வேறு சில பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணமும் இருக்கும். மீச்ச குற்றமெல்லாம் அவர் தான் செய்தாருன்னு கணக்கு காட்டி விட உதவியாக இருக்கும்.
பெங்களூர் குண்டு வெடிப்பின் பின் பங்கு பிரிப்பதில் சண்டை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக தினமலர் செய்தி சொல்லுது...
அன்புடையீர்,
வணக்கம்.
வருகிற 4-12-2013 அன்று நடைபெறவுள்ள ஏற்காடு (எஸ்.டி.) சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்
சார்பில் போட்டியிடுவதென முடிவெடுத்துள்ளோம். ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தொடர்ந்து தமிழகத்தில் நடத்தி வரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை செடீநுகின்ற வகையில், இந்த இடைத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நல்கிடும் உறுதியான ஆதரவோடு போட்டியிடுவது ஆக்க பூர்வமானதென்று நினைத்து இந்த முடிவினை
எடுத்துள்ளோம். தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காத்திடவும், சர்வாதிகார எண்ணத்தை வீடிநத்திடவும் மேற்கொள்ளப்பட்டுள்ள கழகத்தின் இந்த முடிவிற்கு
உதவிடும்வகையில், இந்த இடைத் தேர்தலில் கழக வேட்பாளருக்குக் தங்கள் கட்சியின் ஆதரவினை வழங்கிட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்
கொள்கிறேன்.
என்ற நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமைக்க நூல் விட்டு பார்க்கிறார் அவ்வளவே...
பிடிபட்ட 3 தீவிரவாதிகளின் தளபதியாக செயல்பட்ட அபுபக்கர் சித்திக் சென்னையில் பதுங்கியிருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.- தினதந்தி (09-10-2013)இதில், கடந்த சனிக்கிழமை சிக்கிய பிலால் மாலிக்கிடம் விசாரித்ததில், அவன் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:எங்கள் கும்பலில் இருந்த, நாகூரைச் சேர்ந்த, அபுபக்கர் சித்திக், பெங்களூரு குண்டு வெடிப்புக்குப் பின், சண்டை போட்டு, தனியாக பிரிந்து சென்று விட்டார்.தினமலர் - 10-10-2013
இதில் யார் சொல்லுவது பொய் ...?!
--
---
Sent via Epic Browser
நரேஷ் ஜி எங்க இருக்கீரு ? நான் சொன்னேன்ல 200 டெஸ்டுன்னு ஒன்ன இந்தியால நடத்த அவசர அவசரமா கிரிக்கெட் வாரியம் முயல்வதே சச்சினை மரியாதையோடு வழியனுப்பதான்னு :-)ஸ்பெ,அண்ணாச்சி எல்லாரும் ஓடிவாங்கோ சச்சின் ஓய்வை அறிவிச்சிட்டாராம்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
யூ டூ மோர் ...:((