சமீபகாலமாக நான் அடிக்கடி பார்க்கும் மனப்பான்மை "எல்லாம் அவரவர் தேர்வு, சுதந்திரம்" எனும் மனபோக்கே.
"நீ குடிக்கிறாயா, குடி. அது சுதந்திரம்"
இப்படி ஆரம்பித்து "அடுத்தவனை தொல்லை செய்யாமல் எக்கேடோ கெட்டு ஒழி" அது உன் சுதந்திரம் என எல்லாரும் சொல்லிவருகிறார்கள்.
இப்படி சுதந்திரம் எது என சொல்லிகொடுப்பவர்கள் பொறுப்பு (responsibility) என்பதை சொல்லித்தர மறந்துவிடுகிறார்கள்.
Freedom comes with responsibility.
யாருக்கு பொறுப்பு இருக்கிறதோ அவர்களுக்கே சுதந்திரம் கொடுக்கபடவேன்டும்
பொறுப்பு இல்லாதவர்களுக்கு சுதந்திரமும் கொடுக்க கூடாது
குடிப்பது அவரவர் சுதந்திரம். ரைட்டு
ஆனால் குடித்துவிட்டு தெருவில் வேட்டிகழண்டது கூட தெரியாமல் உருண்டு புரண்டு, குடியால் கொலை, கொள்லை, வீட்டில் குடும்பவன்முறை எல்லம அதிகரித்த நிலையில் இனியும் "குடியை தடுக்காதே, குடியால் வரும் குற்றங்களை தடு" எனும் வேதாந்தம் சாத்தியமா?
குடியால் வரும் குற்றங்களை தடுக்க குடியை தடுப்பதே ஒரே வழி.
இன்றைய சூழலில் தமிழகமெங்கும் இருக்கும் 1 கோடி மொடாகுடியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை காக்க குடியை அடியோடு ஒழிப்பதை தவிர வேறு வழியேதும் கிடையாது
வீடுகள், பள்ளிகளில், கல்லூரிகளில் உரிமைகளை கற்றுதருகையில் இனி பொறுப்பையும் சேர்த்தே கற்றுத்தரவேண்டும்.
--