5. | கறங்காழிநாலெட்டிலக்கமியோசனை கட்செவியின் |
பிறங்காகமும்மையிலக்கமியோசனை பேருலகி | |
லிறங்காழிமேகமெனவேயரங்கத்திலெந்தையதி | |
லுறங்காகநீளமைந்தைம்பதினாயிரமோசனையே. |
(இ - ள்.) கறங்கு - ஆரவாரிக்கின்ற, ஆழி - திருப்பாற்கடலினது, (நீளம்) -, நால் எட்டு இலக்கம் யோசனை - முப்பத்திரண்டுலக்ஷம் யோஜனை யளவாம்; கட்செவியின் - (அதனிடையேயுள்ள) திருவனந்தாழ்வானுடைய, பிறங்கு ஆகம் - விளங்குகின்ற திருவுடம்பினது, (நீளம்) -, மும்மை இலக்கம் யோசனை - மூன்றுலக்ஷம் யோஜனையாம்; பேர் உலகில் இறங்கு ஆழி மேகம் எனவே - பெரிய இந்நிலவுலகத்தி லிறங்கிவந்த சக்கராயுதத்தையு டையதொரு மேகம்போல, அரங்கத்தில் எந்தை அதில் உறங்கு - திருவரங்கத்தி லெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் அந்தத்திருவனந்தாழ்வான் மேலே (பள்ளிகொண்டு) யோகநித்திரைசெய்தருள்கின்ற, ஆகம் - திருமேனியினது, நீளம் -நீட்சி, ஐந்து ஐம்பதினாயிரம் ஓசனை - இரண்டரை லக்ஷம் (இரண்டுலக்ஷத்து ஐம்பதினாயிரம்) யோஜனையாகும்; (எ - று.)
இலந்தைஒரு யோசனை என்றால் எவ்வளவு தொலைவு?கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை” என்கிறான் பாரதி.வருவதெத்தனை அத்தனை யோசனை“ மண்டலத்தை அணுவணு வாக்கினால்காதம் என்பதைப் 10 மைல் என்று கொள்வதுதான் பொருத்தம் என நினைக்கிறேன். ஒரு காதத்திற்கு 6.5 கி மீ என்றும் இல்லை அதில் பாதி என்றும் சொல்பவர்கள் உண்டு. பலத்த ஆய்வு நடைபெற்றிருக்கிறது. ஆனால் முடிவுதான் எட்டவில்லை.விநாடியிற் பரவு மீங்கே” என்கிறார். அதாவது கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் என்பது அவரது கணக்கு. அதுவும் சரிதான். சரியான அளவு எட்டு நிமிடங்கள் 20 நொடிகள்.பருதியின் நின்றோர் எட்டுகதிருடை விரைவும் அஃதுசூரியனிடமிருந்து பூமிக்கு ஒளிவரஎன்கிறார். அதாவது ஒரு நொடியில் ஒளி செல்லும் தூரம் 19000 காதம் என்கிறார். அதாவது 1,90,000 மைல். கிட்டத்தட்டச் சரிதான். ஒளியின் வேகம் 1,86,000 மைல்.கருதவும் அரிய தம்மா!கதிரவன் வகுப்பானான்றோர்வருதிற லுடைத்தாஞ் சோதிக்ஒன்பதாயிரமாம் காதம்ஒரு நொடிப்போதில் ஓர் பத்துபாரதியார் 3-4- 1909ல் இந்தியா பத்திரிகையில் எழுதியுள்ள திசைகள் என்ற கவிதையில்சாண் முழம் கணக்குப்படி பார்த்தால் சாண் என்பது 9 அங்குலம்ஒரு முழம் ஒன்றரை அடி. ஒரு கோல் - 6 அடி கூப்பிடு 3000 அடி ஒரு காதம் 12000 அடி . அதாவது 2.273 மைல். . காதம் என்பது கிட்டத்தட்ட 10 மைல் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காலத்தில், நிமிடத்தை விநாடி என்றும் செகண்டை நொடி என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
ஒருநொடிப் பொழுதி லோர்பத்
தொன்பதா யிரமாங் காதம்
வருகிற லுடைத்தாஞ் சோதிக்
கதிரென வகுப்பர் ஆன்றோர்
கருதவும் அரிய தம்ம!
கதிருடை விரைவும் அஃது
பருதியி னின்றோர் எட்டு
விநாடியில் பரவு மீங்கே
உண்டொரு வான்மீன் அஃதை
ஊணர்கள் சிரிய சென்ப
கண்டவம் மீனின் முன்னை
விரைவொடு கதிர்தான் இந்த
மண்டலத் தெய்வ மூவாண்
டாமென மதிப்ப ராயின்
எண்டரற் கெளிதோ அம்மீன்
எத்தனை தொலைய தென்றே
கேட்டிரோ நரர்காள், வானிற்
கிடக் குமெண் ணரிய மீனிற்
காட்டிய அதுதான் பூமிக்
கடுகினுக்கு அணித்தாம் என்பர்
மீட்டுமோர் ஆண்டு மூவா
யிரத்தினில் விரைந்தோர் மீனின்
ஒட்டிய கதிர்தான் இங்ஙன்
உற்றிடுந் தகைத்தும் உண்டோ !
மானுடக் கிருமி கோடி
வருத்தத்தால் பயின்று கண்ட
ஊனுறு கருவி யால்இஃது
உணர்ந்தஎன் றுஉணரு வீரால்
தானுமிக் கருவி காணத்
தகாப் பெருந் தொலைய வாகும்
மீனுள கோடி கோடி
மேற்பல கோடி என்பர்
அறிவெனும் புள்ளும் எய்த்தங்கு
அயர்வொடு மீளும் கண்டீர்
செறியும்இத் திசைதான் எல்லை
யிலதெனச் செப்பு மாற்றம்
பொறிதவிர்ந் துரைத்தல் அன்றிப்
பொருளிதென்று ளத்தின் உள்ளே
குறிதரக் கொள்ள லாமோ ?
கொஞ்சமோ திசையின் வெள்ளம்
----------------------------------------
http://www.navinavirutcham.in/2016/02/blog-post_5.html