அன்று....அருமையான பொருள் பொதிந்து உலவிவந்த பழமொழிகள்.... இன்று மறுவி... தவறான பொருள் தரும் பழிமொழிகளாக மாறி, நடைமுறையில் புழக்கத்திலும் உள்ளன .. அவற்றின் உண்மைப் பொருளை வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சியின் முதல்படி இது ...
என்குறள்:931 - 935
மண்குதிர்-ஐ நம்பி, நடு
ஆற்றில், தங்கிய
தண்ணீரில்
கால்வைத்தால் தப்பு(மண்குதிர் – மண் மேடு)
[அ]
மங்குதிரை மேல்முழு
நம்பிக்கை வைத்து,
ஆற்றில்
கால்வைத்தால் ஆகிவிடும்
தப்பு(மங்குதிரை – கலங்கிய நீர்பரப்பு)
[
பழிமொழி - மண்குதிரையை நம்பி.... ]
ஆயிரம் பேருக்கு
போய்ச்சொன்னால் ஆகிவிடும்
நின்ற
திருமணமும் நன்று
[
பழிமொழி - ஆயிரம் பொய்சொல்லி.....]
ஆயிரம் வேரை அறிந்து
கொண்டால் தானொருவன்
ஆவான்
அரைமருத்து வன்[
பழிமொழி - ஆயிரை பேரைக் கொன்றவன்....]
நல்லமாடு என்றால் நிலையாய் வலுவாய்
தெளிவாய் பதிக்கும்
சுவடு[
பழிமொழி - நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ]
ஆதானம் செய்யாத செட்டியார் தன்கடமை
ஆற்றாமல் போனவர் ஆம்
[
பழிமொழி - ஆதாயம் இல்லாமல் செட்டியார்.....]