Fwd: [செம்மலர்] நமது குழந்தைகள் மீது மருத்துவ சோதனை வரலாம்

4 views
Skip to first unread message

தியாகு

unread,
Jun 27, 2015, 1:13:47 AM6/27/15
to பண்புடன்



உலகமயமாக்கல் என்றால் வேலை கிடைக்கிறது எனவே உலகமயமாக்கலை தடுக்காதீர்கள் என்கிற கோசம் ஒருபக்கம் ஒலிக்க , நாம் உலகமயமாக்கலின் ஒரே ஒரு விளைவை மட்டும் பரிசீலிப்போம்.

மேகி நூடுல்ஸ் வந்து காரியம் அதில அதிகமாக இருந்து அதை சாப்பிட்டு குழந்தைகளுக்கு என்னவிதமான நோய்கள் வந்தது , இந்த முதலாளித்துவ வியாபார நோக்கால் எத்தனையோ குழந்தைகள் இறந்திருக்கலாம் அல்லது நோய்வாய் பட்டிருக்கலாம் என்பது மட்டும் உறுதி.

அடுத்து உலகமயமாக்கலின் படி நான் உமி கொண்டு வருகிறேன் , நீ அரிசி கொண்டு வா ரெண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடுவோம் என்கிற கதையேதான்.

//குழந்தைகளுக்கான புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது மருந்துப் பரிசோதனைகள் நடத்த அனுமதி அளித்திருக்கிறது அமெரிக்க அரசு. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக நவீனமயமாக்கல் சட்டத்தின் ஒரு பகுதியாக இயற்றப்பட்ட குழந்தைகள் மருத்துவச் சட்டத்தின் கீழ் இந்த அனுமதி அண்மையில் வழங்கப்பட்டது.//

ஏன் அமெரிக்கா ஐரோப்பா நாடுகளில் இருக்கும் குழந்தைகள் மீது இந்த clinical trail நடத்த வேண்டியதுதானே. அதான் உங்க கிட்ட அரிசி வாங்கிட்டு அவங்க உமி கொண்டு வருகிறார்களே .

ஆகா சோதனை காடாக இந்தியாவை மாற்ற இந்த உலகமயம் உதவி புரிகிறது ஏன் ?

ஏனெனில் இங்கே உள்ள சட்டங்கள் அதில் உள்ள பெரிய ஓட்டை , காசை வாங்கி கொண்டு கவுந்துடச்சி படுக்கும் அதிகாரிகள், காசு வாங்கி கொண்டு எழுதும் ஊடகங்கள் இப்படி பல சவுகரியம் இருக்கு.

//தொலைத்தொடர்பு, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், அரசியல், பண்பாடு, ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் உந்தப்பட்டு உலக சமூகங்களுக்கிடையேயான அதிகரிக்கும் தொடர்பையும் அதனால் ஏற்படுத்தப்பட்டுவரும் ஒருவரில் ஒருவர் தங்கிவாழ் நிலையையும் உலகமயமாதல் எனலாம். உலகமய சூழலில் ஒரு சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைமைகளும் நிகழ்வுகளும் மற்றைய சமூகங்களில் கூடிய விகித தாக்கத்தை ஏதுவாக்குகின்றது. உலகமயமாதல் வரலாற்றில் ஒரு தொடர் நிகழ்வுதான், ஆனால் இன்றைய சூழல் உலகமயமாதலை கோடிட்டு காட்டுவதாக அமைகின்றது.//

என விக்கியில் எழுத படுகிறது நல்லாத்தானே இருக்கு தொலை தொடர்பில் நமக்கு செல்போன் கொடுத்திருக்காக, லேப்டாப் வந்திருக்கு இதெல்லாம்
உலகமயம் இல்லாமல் நடக்குமா ?

எல்லாம் சரி ஆனால் இந்தியாவில் இந்த சோதனைகள் மேற்கொள்வதில் அவர்களுக்கு பெருத்த பண லாபம் இருக்கிறது .

ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனமும் ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய்கள்
clinical trial க்கு செலவு செய்கிறார்களாம் அதில் முக்கிய கட்டம் கண்டு பிடித்த மருந்தை மனிதர்கள் மேல் பிரயோகித்து பார்க்க ஆகும் செலவு

இதில் என்ன கொடுமை என்றால்.

இந்தியாவில் இதுவரை 2644 பேர் இந்த சோதனையினால் இறந்துள்ளார்கள்

NEW DELHI: As many as 2,644 people, called subjects, died during the clinical trials of 475 new drugs on human beings in last seven years and only 17 of the medicines were approved for marketing in India, the Centre has informed the Supreme Court. Responding to allegations by NGO, Swasthya Adhikar Manch, in its PIL that Indians were used as guinea pigs by foreign pharmaceutical majors for human trial of their new drugs, the Union health and family welfare ministry said of the 57,303 enrolled subjects, 39,022 completed the clinical trials. "Serious adverse events of deaths during the clinical trials during the said period were 2,644, out of which 80 deaths were found to be attributable to the clinical trials," health secretary Keshav Desiraju said in an affidavit on behalf of the ministry of health and family welfare

அதாவது அதெல்லாம் சப்ஜெட்டுன்னு பேர் வைச்சிருக்கானுக , சரி ஒரு மருந்தை இந்தியாவில் சோதனைக்காக கொடுக்கிறாங்கன்னே வச்சிக்குவோம்
அதற்கென்று விதிமுறை ஏதும் இல்லையா

1.Bayer’s Rivaroxaban and
2.Novartis’s Aliskiren vs. Enalapril are the two drugs responsible for maximum deaths in clinical trial.

 என்கிற இரண்டு மருந்துகளை கொடுத்து நெம்ப பேரு செத்து போயிருக்காங்க ஆனால் மறுபடியும் இதை கொடுத்திருக்காங்க .

இந்தியாவின் சட்டம் என்ன சொல்லுது அவ்வாறு இறந்தவர்களுக்கு காம்பன்சேசன் கொடுக்கனும்னு ஆனால் ஒரு சிலர் தவிர யாருக்கும் கொடுக்கப்படவில்லை

/Recent amendment to Schedule Y of Drugs and CosmeticsRules, 1945: Recently on 30th January20134, Government of India came out with certainamendments to Schedule Y of the Rules with a view to tighten thenorms relating to the conduct of clinical trials especially interms of taking informed consents from the trial subjects andproviding them or their legal representatives (as the case may be)compensation in case of any trial related injury or death. Theamendment has imposed complete and ultimate liability on thesponsor of the clinical trial to reimburse any cost incurred by thetrial subjects for the medical treatment of "anyinjury" suffered by the trial subjects as well asfinancial compensation for such injury or death. Further in casethe sponsor fails to provide the proper medical treatment and/ orthe financial compensation as per the orders of the licensingauthority to the trial subjects (or their representatives as thecase may be), then the authority may cancel or suspend the licenseof the sponsor to carry out the clinical trials and may even debarit from carrying any clinical trial in future in India. Theamendment also mandates GCP compliance and adverse event reporting.The amendment has certainly acted as a deterrent on themulti-national corporations and is a negative catalytic agent tothe prospects of clinical trials in India.//

நமது கேள்விகள் இதான்

ஏன் மூன்றாம் உலக நாடுகளில் மட்டும் இந்த சோதனை
அடுத்து சட்டத்தில் மட்டுமே இருக்கும் இந்த பாதுகாப்பு மற்றும் இழப்பீடுகள் உண்மையில் கிடைப்பதில்லை

Bayer's Rivaroxaban was first used for human trials in 2008 resulting in death of 21 of which it claimed that only five were related to clinical trial but it has till date paid compensation to kin of only two. Two years later, the same drug was again put on human trial and this time 125 deaths were reported, of which it was stated that five were related to clinical trial

2008 பரிசோதனைக்காக கொடுத்த மருந்தின் விளைவாய் 21 பேர் இறந்திருக்கிறார்கள் ஆனால் மறுபடியும் இந்த மருந்து சோதனைக்காக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

// பொருளியல், சமூக மற்றும் சூழலியல் அடிப்படையில் உலகமயமாதலை எதிர்மறையான, விரும்பத்தகாத ஒரு விடயமாகக் கருதுகின்றது. இதன்படி, உலகமயமாதல், வளர்ந்து வருகின்ற சமுதாயங்களின் மனித உரிமைகளை நசுக்குகிறது என்றும், வளத்தைக் கொண்டுவருவதாகக் கூறிக்கொண்டு கொள்ளை இலாபமீட்டுவதை அனுமதிக்கிறது என்றும் சுட்டிக் காட்டப்படுகின்றது. இவை தவிரப் பண்பாட்டுப் பேரரசுவாத (cultural imperialism) நடவடிக்கைகளினூடாகப் பண்பாட்டுக் கலப்புக்கு வழி வகுப்பதும், செயற்கைத் தேவைகளை ஏற்றுமது செய்வதும், பல சிறிய சமுதாயங்கள், சூழல்கள் மற்றும் பண்பாடுகளைச் சிதைத்து விடுவதும் இதன் எதிர்மறை விளைவுகளாக எடுத்துக் காட்டப்படுகின்றன. //

நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் உலகமயமாக்கலை நாம் தடுக்க முடியாது ஆனால் நமது விழிப்புணர்வின் மூலம் நம்மை சுரண்டுவதை தடுக்கலாம் போராடலாம்.

யாருக்கு தெரியும் உங்கள் மருத்துவர் அல்லது மருத்துவமனை கூட மிக பெரிய அளவு பணத்தை உங்களிடம் கறந்து கொண்டே உங்கள் மீது சோதனை மருந்துகளை கொடுக்கலாம் நீங்கள் ஒரு சப்ஜெட் ஆக இருக்கும்  நிலையில் இருக்கலாம் ஆனால் இது உங்களுக்கு  தெரியாது.

எனவே அரசியல்  வேண்டாம் என்றும் சமூகம் எக்கேடு கெட்டு போனால் என்னவென்றும் சொல்லி ஒரு ஓரமாக உக்கார முடியாது மை லார்ட்

//இந்தப் பரிசோதனைகள் நம் நாட்டில் பெரும்பாலும் நோயாளிகளின் ஏழ்மையையும் அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை ஏமாற்றியே மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டின் மிக உயர்ந்த மருத்துவ நிறுவனமாகக் கருதப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் இப்படி நடத்தப்பட்ட மருந்துப் பரிசோதனைகளில் குறைந்தபட்சம் 49 குழந்தைகள் உயிரிழந்தது 2008}ம் ஆண்டு தெரியவந்தது. எத்தகைய அற உணர்வு நம்முடைய ஆராய்ச்சியாளர்களையும் ஆட்சியாளர்களையும் வழிநடத்துகிறது என்பதை விளக்க வேண்டியதில்லை.//

என்ன கொடுமை என்றால் இந்த மருந்து உங்கள் குழந்தைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது ஆனால் யாரும் அதை செய்வதில்லை

வீட்டை விட்டு வெளியில் வந்து சமூகத்தை நோக்குங்கள் .

பாரடா உனது மானிட பரப்பை , பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம் என்கிற பாரதி தாசன் கவிதை பொருத்தமானது

உலக மயம் நன்மையை செய்யாது ஆனால் அது தீமை செய்யவிடாமல் எப்படி தடுக்க போகிறோம்





--
Posted By Blogger to செம்மலர் at 6/27/2015 10:42:00 AM



--
தியாகு

-
Reply all
Reply to author
Forward
0 new messages