Re: என்ன கொடுமை சார் இது.

1,240 views
Skip to first unread message

வில்லன்

unread,
Aug 23, 2011, 12:32:31 PM8/23/11
to nadp...@googlegroups.com, பண்புடன்

சுவிஷேச பேயோட்டி காமெடி கும்மி - பார்ட் 2

உன்னோடே கூட இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாய் இருக்கும் - யாத் - 34;10 -

இப்படி நிஜமாவே பைபிள்ளல போட்டிருக்கா?

*

அதென்ன கிறிஸ்தவ பிராமண சேவா சமிதி?

*

பில்லிசூனியத்துக்கும் கிறிஸ்தவத்துக்கும் என்னய்யா சம்பந்தம்! இயேசு பில்லிசூனியமெல்லாம் எடுக்க ஆரம்பிச்சிட்டாரா?

*

அமாவாசைக்கும் அல்லேலுயாவுக்கும் பூர்வாசிரமத்தில் என்ன தொடர்பு!

**

கிறிஸ்தவமதத்துலயும் வர்ணாசிரமமா?

லாஸ்ட்டா - சுசிலா மாமி! ஹிஹி

ஒரே படத்துல எவ்ளோ காமெடி கலாட்டா - தாங்க்யூ லூர்து ஜேம்ஸ்

படம் பிடித்த இடம் - பம்மல்.

அதிஷாவின் பஸ்ல இருந்து............................................

suseela maami.JPG
suseela maami.JPG

ஸ் பெ

unread,
Aug 23, 2011, 12:44:18 PM8/23/11
to panb...@googlegroups.com
;)))

2011/8/23 வில்லன் <vom...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்

"பூர்வ நாட்களை நினை; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களை கவனித்துப் பார்;
உன் தகப்பனை கேள், அவன் உனக்கு அறிவிப்பான்;
உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குக் சொல்வார்கள்"

-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

suseela maami.JPG

Ramesh Murugan

unread,
Aug 23, 2011, 5:59:36 PM8/23/11
to panb...@googlegroups.com, nadp...@googlegroups.com, thanthaiperiyar
:)

உங்களுக்கு மட்டும் எங்கயா இந்த மாதிரி விசயமெல்லாம் கண்ணுல மாட்டுது :)

2011/8/23 வில்லன் <vom...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
என்றும் அன்புடன்,
ரமேஷ்
suseela maami.JPG

Raja sankar

unread,
Aug 23, 2011, 7:42:45 PM8/23/11
to panb...@googlegroups.com
வில்லன்,

எக்ஸ்சார்ஸ்ட் படம் பாத்ததில்லையா? அது பேயோட்டுதல் தான். அதிகார பூர்வ பேயோட்டிகளும் உண்டு.

http://en.wikipedia.org/wiki/Exorcist

Since the Council of Trent in 16th century, "Exorcist" was one of the four minor orders in the Roman Catholic Church, received after the tonsure. At the time this order was formally defined and confined exclusively to exorcism of the catechumen in the rite of Baptism, leaving exorcisms of demons to priests; but its role was later expanded. By the twentieth century, the order had become purely ceremonial. As a minor order, Exorcists wore the surplice.

மொட்டையடித்துக்கொண்டபின் இப்படி பேயோட்டிகளாக சேர்க்கப்படுவார்கள்.


ராஜசங்கர்

2011/8/23 வில்லன் <vom...@gmail.com>
சுவிஷேச பேயோட்டி காமெடி கும்மி - பார்ட் 2

ஜோ (Joseph P.K.)

unread,
Aug 23, 2011, 11:56:55 PM8/23/11
to panb...@googlegroups.com, nadp...@googlegroups.com
இது கடவுளின் பெயரில் ஊரை ஏமாற்றுபவர்கள் செய்யும் வேலை இது.

கடவுள்,  மோசேயிடம் பத்து கட்டளைகள் கொடுத்த போது சொன்ன வாக்கியம்

அப்பொழுது ஆண்டவர் கூறியது: ″ நான் ஓர் உடன்படிக்கை செய்கிறேன். எந்த நாட்டிலும் எந்த மக்களினத்திற்கும் செய்யாத அரும்பெரும் செயல்களை நான் உன் மக்கள் அனைவர் முன்னிலையிலும் செய்வேன். உன்னைச் சூழ்ந்துள்ள மக்களினத்தவர் அனைவரும் ஆண்டவரின் செயல்களைக் காண்பர். ஏனெனில், நான் உன்னோடிருந்து திகிலூட்டும் செயல்களைச் செய்வேன்.

இதைதான் இவங்க இப்படி மொழிமாற்றம் செய்து போட்டு இருக்காங்க.




2011/8/23 வில்லன் <vom...@gmail.com>
சுவிஷேச பேயோட்டி காமெடி கும்மி - பார்ட் 2

உன்னோடே கூட இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாய் இருக்கும் - யாத் - 34;10 -

இப்படி நிஜமாவே பைபிள்ளல போட்டிருக்கா?



--
அன்புடன்  ஜோ
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாக்குவாதம் செய்யாதே. உனது மதத்தினிடத்தும் கொள்கையினிடத்தும் உனக்கு எப்படிப் பற்று இருக்கிறதோ அப்படியே மற்றவர்களுடைய மதங்களிலும் கொள்கைகளிலும் அவரவர்களும் பற்று வைக்கும்படியான உரிமையை அவர்களுக்குக் கொடு. வாக்குவாதத்தினால் மட்டும் மற்றொருவனுடைய பிழையை எடுத்துக் காட்ட முடியாது. - பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்






பிரசாத் வேணுகோபால்

unread,
Aug 24, 2011, 1:18:25 AM8/24/11
to panb...@googlegroups.com, nadp...@googlegroups.com
चलता है...


2011/8/23 வில்லன் <vom...@gmail.com>
--
பிரசாத் வேணுகோபால்

எண்ணம் போல் வாழ்வு



Asif Meeran AJ

unread,
Aug 24, 2011, 3:37:25 AM8/24/11
to panb...@googlegroups.com
அது அதிஷா பஸ்ல இருந்து சுட்டதுன்னு வில்லன் போட்டிருக்கானே பார்க்கலியா?

வில்லன்

unread,
Aug 24, 2011, 11:32:21 AM8/24/11
to panb...@googlegroups.com
எனது ரசிகர்கள் என்னை பாராட்டினால் உங்களுக்கு பொறுக்காதே

2011/8/24 Asif Meeran AJ <asifm...@gmail.com>
அது அதிஷா பஸ்ல இருந்து சுட்டதுன்னு வில்லன் போட்டிருக்கானே பார்க்கலியா?


உங்களுக்கு மட்டும் எங்கயா இந்த மாதிரி விசயமெல்லாம் கண்ணுல மாட்டுது :)

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
இப்படிக்கு

     "ஸ்ரீ" 

தட்டுக்கெட்டு ஓடும் தள்ளாடும் எந்நாளூம் உன் உள்ளக்குரங்கு
கட்டு படக்கூடும் எப்போதும் நீ போடு மெய்ஞான விலங்கு
மனம் ஆடாமல் வாடாமல் மெய்ஞானம் உண்டாக
அஞ்ஞானம் அற்றுவிழும்!

VJagadeesh

unread,
Aug 25, 2011, 12:21:32 AM8/25/11
to panb...@googlegroups.com

நல்லதொரு குடும்பம்! பல்கலை கழகம்!

 

Proud British granddad Shem Davies is not even 30 yet and his 14-year-old daughter Tia already has a child! Shem had Tia when he was only 15, setting the stage for his daughter to follow in his footsteps. When Shemp, who happens to be unemployed at the moment, showed up to the hospital, the staff thought he was the father instead of the grandfather. It's hard to believe in it. See the photos of quit possibly the youngest family in the UK.

 

1 Fun & Info @ Keralites.net

2 Fun & Info @ Keralites.net

The father is actually 15-year-old Jordan, making for a disturbingly immature family.  Both parents are still in school and plan on finishing, with Tia seeing herself as a hairdresser in the future.

3 Fun & Info @ Keralites.net

These young parents are part of the more than 35,000 kids under 18 who get pregnant in the UK each year. However, at least half of those kids get an abortion.

4 Fun & Info @ Keralites.net

Amazingly, Tia and Jordan have been dating for 18 months, meaning they were around 13 when they started going out.

5 Fun & Info @ Keralites.net

The baby, Gracie, only weighed 2 lbs when she was born and was immediately put in an incubator.

6 Fun & Info @ Keralites.net

7 Fun & Info @ Keralites.net

8 Fun & Info @ Keralites.net

Fun & Info @ Keralites.net

*********************************************

 

 

image001.jpg
image002.jpg
image003.jpg
image004.jpg
image005.jpg
image006.jpg
image007.jpg
image008.jpg
image009.jpg

அச்சு !!!

unread,
Aug 25, 2011, 8:42:23 AM8/25/11
to panb...@googlegroups.com, தென்றல், nadp...@googlegroups.com

60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர்



தர்மபுரி: 60 வயது பாட்டியை முகம் தெரியாமல் தொலைபேசி பேச்சு மூலம் காதலித்து வந்த நபர், தான் காதலித்தது ஒரு பாட்டியை என்று தெரிய வந்ததால் அதிர்ச்சியில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்.

ஒகனேக்கல், சின்னாறு பகுதியில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. அப்பகுதியில் போலீஸார் சிலர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சின்னாற்றின் கரையில், ஒருவர் மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்ததைப் பார்த்து திடுக்கிட்டு விரைந்து சென்று அவரைக் காப்பாற்றினர்.

பின்னர் அவரை ஒகனேக்கல் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீஸாருக்கு வியப்பளிக்கும் தகவலை வெளியிட்டார் அந்த நபர்.

தற்கொலைக்கு முயன்ற நபரின் பெயர் திருப்பதி. 35 வயதாகிறது. இவருக்கு சொந்த ஊர் பாப்பாரப்பட்டியை அடுத்துள்ள பட்டிமரத்தள்ளி கிராமம்.

பெங்களூரில் இரும்புக் கடை நடத்தி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக இவருக்கு விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த லூர்து மேரி என்பவர் பழக்கமானார்.

தொலைபேசி மூலம் கிடைத்த இந்த நட்பு பின்னர் காதலாக மாறியது. இந்தக் காதலை தொடர்ந்து வந்த அதே வேளையில், செல்வி என்ற பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு மணந்துள்ளார் திருப்பதி. மேலும் தொலைபேசிக் காதலையும் தொடர்ந்துள்ளார்.

இப்படியே போனால் எப்படி என்று சமீபத்தில் லூர்து மேரியை திருப்பதி சந்தித்தார். அப்போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தான் போன் மூலம் காதலித்து வந்த பெண் லூர்து மேரி இளம் பெண் அல்ல, மாறாக 60 வயதான பேரிளம்பெண் என்பதை அறிந்து திடுக்கிட்டார்.

இந்த ஏடா கூட காதலை அவரால் சகிக்க முடியவில்லை. மன உளைச்சலுக்குள்ளானார். இதனால்தான் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

திருப்பதியின் சோகக் கதையைக் கேட்டு நொந்து போன போலீஸார் அவரது குடும்பத்தினரை வரவழைத்து, திருப்பதிக்கு நிறைய புத்திமதிகளைச் சொல்லி ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

என்ன கொடும சார் இது!!!

http://thatstamil.oneindia.in/news/2011/06/23/youth-loves-60-yr-old-woman-attempts-for-suicide-aid0091.html


--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
-------------------------------------------
கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு


ஸ் பெ

unread,
Aug 25, 2011, 1:55:07 PM8/25/11
to panb...@googlegroups.com
ஏர்ஹோஸ்டஸ் வேலைக்கு விண்ணப்பித்த பெண்களுக்கு இயற்கையான மார்புகள் இருக்கிறதா அல்லது 'அறுவைச் சிகிச்சை' செய்து செயற்கை மார்பகத்துடன் வந்திருக்கிறார்களா என்பதை, அறிய, அவர்களை உடைகளை கழற்றச் சொல்லி மார்புகளில் கை வைத்து அழுத்திப் பரிசோதித்த கொடுமை இந்தோனேசியாவில் நடந்துள்ளது.

இந்தோனேசியாவின் கருடா விமான நிறுவனம்தான் இந்த சோதனையைச் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஏர்ஹோஸ்டஸ் பணிக்கு விண்ணப்பித்த 12 பெண்களிடம் இவ்வாறு சோதனை செய்துள்ளது கருடா நிறுவனம்.

இதுகுறித்து பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட ஒரு பெண் கூறுகையில், ஏர்ஹோஸ்ட்ஸ் பணிக்கு விண்ணப்பித்த நான் உள்ளிட்ட 12 பெண்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்தனர். அப்போது சோதனைக்கு வந்த டாக்டர்கள் எங்களுக்கு இயற்கையான மார்புகள் இருக்கிறதா அல்லது சர்ஜரி செய்தோ அல்லது பேட் வைத்தோ வந்துள்ளனரா என்பதை பரிசோதிக்க நிர்வாணப்படுத்தினர். மேலும் கைகளால் எங்களது மார்புகளை அழுத்தியும் பரிசோதித்தனர். எங்களது வெறும் பேன்ட் மட்டும் அணிந்தபடி மேலாடையை முழுவதுமாக கழற்றி உட்கார வைத்தனர் என்றார் அந்தப் பெண்.

தென் கொரியாவின் சியோல் நகரில் உள்ள கருடா விமான நிறுவனத்தின் அலுவலகத்தில்தான் இந்தக் கொடுமை அரங்கேறியுள்ளது.

இந்த சர்ச்சை குறித்து கருடா நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், செயற்கை மார்பகங்களுடன் விமானங்களில் பயணிப்பது ஆரோக்கியக் கேடாகும். விமானம் மேலே பறக்கும்போது காற்றழுத்தம் குறையும். அப்போது செயற்கை மார்பகங்களுடன் வருவோருக்குப் பிரச்சினை ஏற்படும். ஆரோக்கியக் கேடும் ஏற்படும். இதனால்தான் மார்பகங்கள் சோதிக்கப்பட்டன என்று விளக்கம் தந்துள்ளனர். மேலும் மார்பகங்களில் டட்டூஸ் பொறித்தவர்களுக்கும் இந்த நிறுவனம் வேலை தர முடியாது என அனுமதி மறுத்துள்ளது.

கருடா நிறுவனத்தின் இந்த மார்பக பரிசோதனை விவகாரம் பெரிதாகியுள்ளது. பல்வேறு மகளிர் நல அமைப்புகள், மகளிர் உரிமை அமைப்புகள் இந்த செயலைக் கண்டித்துள்ளன. இது தேவையற்ற சோதனை, பெண்களின் கெளரவத்தை சீர்குலைத்துள்ளது கருடா நிறுவனம் என்று அவர்கள் சாடியுள்ளனர்.

இதுகுறித்து சியோலைச் சேர்ந்த செக்ஸ் வன்முறை நிவாரண மையத்தின் கிம் டா மி கூறுகையில், இதுபோன்ற செயல்களை இந்தோனேசியாவில், அந்த நாட்டுப் பெண்களுக்கு செய்வார்களா என்பது தெரியவில்லை. தென் கொரியப் பெண்களுக்கு நிகழ்ந்துள்ள இந்தக் கொடுமை மிகவும் மோசமான செயல் என்றார்.

இதேபோல கொரியன் ஏர் நிறுவனமும் கருடா நிறுவன செயலைக் கண்டித்துள்ளது. இது மோசமான செயல் என்று அது வர்ணித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இப்படி ஒரு பரிசோதனை உலகில் எங்குமே நடந்திருக்க வாய்ப்பில்லை. இப்போதுதான் இப்படிக் கேள்விப்படுகிறோம். செயற்கை மார்பகம் பொருத்தியவர்களும், மார்பக பெருக்க அறுவைச் சிகிச்சை செய்தவர்களும் விமானத்தில் பறக்க முடியாது என்பது கேலிக்குரிய, அபத்தமான வாதமாகும் என்றார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்படும் என்று கருடா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. மார்பகத்தை சோதிக்க வேண்டும் என்று எங்களது மருத்துவப் பரிசோதனைப் பட்டியலில் இல்லை.எனவே எப்படி இப்படி நடந்தது என்பது குறித்து விசாரிப்போம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதற்கிடையே, மார்பக பரிசோதனையை செய்த டாக்டர் ஆணா, பெண்ணா என்பது குறித்து தகவல் தெரியவில்லை.

தென் கொரியாவில் விமானப் பணிப்பெண் வேலையில் சேர பெண்களிடையே அதிக ஆர்வம் உள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கானோர் படிப்புகளில் சேருகின்றனர். கடுமையாக பயிற்சி எடுக்கின்றனர். அவர்களுக்கு கருடா நிறுவனத்தின் செய்கை கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

சென்ஷி .

unread,
Aug 25, 2011, 2:54:18 PM8/25/11
to panb...@googlegroups.com
கேவலமான செயல்... :((

2011/8/25 ஸ் பெ <stalinf...@gmail.com>

ஸ் பெ

unread,
Sep 27, 2011, 8:24:28 AM9/27/11
to panb...@googlegroups.com
குடிக்கும் கணவனை அடிக்கும் மனைவிக்கு 10 ஆயிரம் பரிசா.. அமைச்சரவை அதிரடி....

"மது குடிக்கும் பழக்கம் உள்ள கணவரை, பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து, அவரை அவமானப்படுத்தும் விதத்தில் அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்'' என, ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார்.

ஆந்திரா கர்னூல் நகரில், நேற்று முன்தினம் (வெள்ளியன்று) நடந்த விவசாயப் பெண்கள் கருத்தரங்கில், கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: 

பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை, மது குடிக்கும் பழக்கமுள்ள, அவர்கள் கணவர்கள் வீணாகச் செலவிடுகின்றனர். கணவர்கள் மது அருந்துவதால், பெண்களின் வருமானம் எல்லாம், சாராயத்திற்குச் சென்று விடுகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை, அவர்களது மனைவியர், இதுபோன்ற பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வந்து, மக்கள் மத்தியில் நிற்க வைத்து, அடிக்க வேண்டும். 
 
கணவரை அவமானப்படுத்தும் விதத்தில், இப்படி அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு 1,000 ரூபாய்க்கு குறையாமல், 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசாக, அந்த இடத்தில் வழங்கப்படும். கணவரை 10 அடி அடிக்கும் பெண்கள், 10 ஆயிரம் ரூபாயை பம்பர் பரிசாக பெற்றுக் கொள்ளலாம். தெலுங்கானா பகுதியில், போராட்டங்கள் தொடர்ந்தாலும், மதுக்கடைகள் மட்டும், முழுவீச்சில் செயல்படுகின்றன. இவ்வாறு, வெங்கடேஷ் கூறினார். (தினமலர்)

சில மாநிலங்களில் அரசே குடிப்பதற்க்கு தூண்டிவிடு இந்த சூழலில் இதுப்போன்று மதுவுக்கு எதிரான பிரச்சாரம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. தொடரட்டு இந்த பணி...

இதை தமிழகத்தில் அறிவித்தால் எல்லா கணவரும் வடிவாங்குவாங்க போல...



--

தோழமையுடன்




ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
தமிழன்றி வேறில்லை...!
எந்த சாதியையும் தாழ்வில்லை...!
தமிழா நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை..!
-------------------------------------------------------------------------------------------------------------------------

Asif Meeran AJ

unread,
Sep 27, 2011, 8:54:11 AM9/27/11
to panb...@googlegroups.com
குடிக்காமலேயே அடி வாங்கும் கண்வர்களுக்கு ஆறுதல் பரிசாக ஏதும் தரக்கூடாதா?

இப்படிக்கு
நரேஷ்
ஸ்டாலின்

ramesh vaidya

unread,
Sep 27, 2011, 8:55:40 AM9/27/11
to panb...@googlegroups.com
ஆந்திராவுக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சு. 

27 செப்டெம்ப்ர், 2011 6:24 pm அன்று, Asif Meeran AJ <asifm...@gmail.com> எழுதியது:

--

அச்சு !!!

unread,
Sep 30, 2011, 3:16:39 AM9/30/11
to panb...@googlegroups.com
கம்பி வாங்கித் தருவதாகக் கூறி "கம்பி' நீட்டினார் போலி அதிகாரி

கோவை : இப்படியும் கூட ஏமாறுவரா...' என்பது தான், நடந்ததை கேள்விப்பட்ட அனைவரும், தனக்குத்தானே கேட்டுக்கொண்ட முதல் கேள்வியாக இருந்தது. அப்படியொரு சம்பவம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு நடந்தது.

திருப்பூர், வீரபாண்டி பிரிவில் வசிப்பவர் தண்டபாணி, 35; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அதே பகுதியில், அபார்ட்மென்ட் கட்டும் பணி நடந்து வருகிறது. இரு நாட்களுக்கு முன், அங்கு சென்ற ஒருவர், தண்டபாணி தாயார் நல்லம்மாளிடம், தன் பெயர் பார்த்தசாரதி என்றும், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் என்றும், அறிமுகம் செய்து கொண்டார்.

"கோவை கலெக்டர் அலுவலகத்தில், குறைந்த விலையில் இரும்புக் கம்பி, சிமென்ட் உங்களுக்கு தேவையான அளவு வாங்கித் தருகிறேன்' எனக் கூறினார். தண்டபாணியின் மொபைல் எண்ணைப் பெற்று, ஒரே நாளில் பலமுறை தொடர்பு கொண்டு பேசினார். அவர் சொல்வதை நம்பிய தண்டபாணி, தாயார் மற்றும் மூவருடன், காரில் கோவை புறப்பட்டார்.

வரும் வழியிலேயே, இரண்டு முறை போன் அழைப்பு வந்தது. "சீக்கிரம் வந்தால் பரவாயில்லை... கலெக்டர் மீட்டிங் இருக்கிறது; அதிகாரிகள் போய் விடுவர்' என்றார், கம்பிக்கு ஏற்பாடு செய்த, "அதிகாரி!' காரை வேகப்படுத்தி, கோவை கலெக்டர் அலுவலகம் வந்து சேர்ந்தனர், தண்டபாணி தரப்பினர்.

அவர்களிடம், "நேரமாகி விட்டது. சீக்கிரம் வாங்க, பில் போடணும்' என, அவசரம் காட்டிய, "அதிகாரி,' அருகில் இருந்த உதவியாளரிடம், "உடனே பில் போட்டு வா' என்று உத்தரவு போட்டார். "பணம் கொடுத்தால் தான், பில் போடுவர்' என்று, தலையை சொறிந்தார் உதவியாளர். பணப்பை வைத்திருந்த நல்லம்மாள் தயங்கியதும், "நேரமாகிறதே...' எனக் கூறினார், "அதிகாரி!'

தண்டபாணி, தாயிடம் இருந்த பணப்பையை வாங்கி, "ஆறு லட்சம் இருக்கிறது. அத்தனைக்கும் கம்பி, சிமென்ட் வேண்டும்' என்று கூறி, "அதிகாரி'யிடம் கொடுத்தார். அதை அப்படியே, உதவியாளரிடம் கொடுத்தவர், "தண்டபாணி என்ற பெயரில் பில் போடணும்; சீக்கீரம்...' என்று கூறி, அனுப்பி வைத்தார்.

பணப்பையை வாங்கிய உதவியாளர், கலெக்டர் அலுவலகத்தில், "பிரஸ் ரூம்' அருகேயுள்ள வழியே, மாடிக்குப் போனார்.

அப்போது தண்டபாணியிடம் பேச்சு கொடுத்த அவர், ""குடோன் இங்கே தான் இருக்கிறது. கம்பி, நல்லதாக பார்த்து நீங்களே எடுத்துக் கொள்ளலாம். எனக்கு தர வேண்டியதை கொடுத்து விடுங்கள். அசிஸ்டென்டுக்கும் ஏதாவது பார்த்து கொடுங்கள்' என்று கூற, "கட்டாயம் செய்கிறோம்' என்றனர், தாயும், மகனும்.

அதற்குள் இரண்டு நிமிடங்கள் கடந்து விட்டன. "நேரம் ஆகிறதே... நான் போய் பார்க்கிறேன்' என்று கூறிய "அதிகாரி,' உதவியாளர் சென்ற வழியாகவே, மாடிக்கு சென்றார். தாயும், மகனும், அதே இடத்தில் காத்திருந்தனர். பத்து நிமிடங்களுக்கு மேலாகியும், மாடிக்கு போன இருவரும் வரவில்லை; இருவருக்கும் பயம் தொற்றிக் கொண்டது.

அவசரம் அவசரமாக, மாடிப்படிகளை கடந்து மேல் தளங்களுக்கு சென்றனர். "கம்பி, சிமென்டுக்கு, எங்கே பில் போடுவர்?' என, வழியில் தென்பட்ட அனைவரிடமும் விசாரித்தனர். நேரம் செல்லச் செல்ல, தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பது புரிந்த வினாடி, நல்லம்மாள் கதறியழ ஆரம்பித்தார். அங்குமிங்கும் ஓடிய மகன் தண்டபாணி, எதிர்ப்பட்ட சிலரிடம் விஷயத்தை கூறினார்.

கலெக்டர் அலுவலகமே அதிர்ந்தது. கலெக்டர் அலுவலக நுழைவாயில் கதவை அடைத்து, வெளியில் செல்லும் அனைவரையும் சோதனை செய்யத் தொடங்கினர், போலீசார். ஒவ்வொரு அலுவலகமாக தேடியும், பணம் வாங்கிச் சென்ற "அதிகாரி'யும் கிடைக்கவில்லை; உதவியாளரும் பிடிபடவில்லை.

தாய், மகனை, போலீஸ் கமிஷனர் அலுவலகம் அழைத்துச் சென்ற ரேஸ்கோர்ஸ் போலீசார், குற்ற ஆவணக் காப்பகத்தில் இருக்கும் பழைய குற்றவாளிகளின் படங்களை காட்டியும், மாநகர சாலைகளில் வைக்கப்பட்டுள்ள கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை காட்டியும், விசாரித்து வருகின்றனர். அதிகாரியாக நடித்து ஏமாற்றிய மோசடிப் பேர்வழி பேசிய மொபைல் எண் மூலம் துப்பு துலக்கும் முயற்சியையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=322876

Jayaprakash N

unread,
Sep 30, 2011, 4:20:02 AM9/30/11
to panb...@googlegroups.com
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் புதிது புதிதாய் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்.. அத்தனைக்கும் அடிப்படை...பேராசை...

ஆமா..இந்த 'கம்பி நீட்டறதுங்குறது இதுதானா..?' 

With Lots OF Love,
JP



2011/9/30 அச்சு !!! <achusu...@gmail.com>

Jayaprakash N

unread,
Sep 30, 2011, 4:25:21 AM9/30/11
to panb...@googlegroups.com
இந்த இடத்தில் அந்த திருடர்களின் சாமர்த்தியத்தை(!!!?) வியக்காமல் இருக்க முடியவில்லை..இந்த நாடகத்தை அரங்கேற்ற அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி, சிரத்தை வியக்க வைக்கிறது.. பட்டபகலில், ஜன நெருக்கடி அதிகமுள்ள கலெக்டர் அலுவலகத்தில், இத்தனை சாமர்த்தியமாக..'ஜென்டில்மேன்' அர்ஜுன் போல..

பல வருடங்களுக்கு முன், கோவைக்கு தனியாய் சென்று  இதேபோல் மோசடி பேர்வழியிடம் பணத்தை இழந்தது நியாபகம் வருகிறது.. (அதிகமில்லை ஜென்டில்மேன்..முன்னூறு ரூபாய் மட்டுமே..)..

ஸ் பெ

unread,
Oct 13, 2011, 3:24:49 PM10/13/11
to panb...@googlegroups.com

பலருடன் தொடர்பு வைத்து உறவு கொண்டதால் ஷமீலாவைக் கொன்றேன்- கணவர் பரபரப்பு கடிதம்

வியாழக்கிழமை, அக்டோபர் 13, 2011, 8:22 [IST]
Save This Page
Print This Page
Comment on This Article
A A A
Newsletter
Free Newsletter
Its Free!
உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
Ads by Google
Download Google Chrome  www.google.com/chrome
A free browser that lets you do more of what you like on the web
Mageshkumar and Shameela
Ads by Google
Get Your Business Online 
Event by Google in Hartford 10/26 Get Your Free Websites, Get Online!
www.connecticutgetonline.com
கோபிசெட்டிபாளையம் என்னைக் காதலித்து மணம் புரிந்த ஷமீலா, என்னைத் தவிர மேலும் பல ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, நேரம் காலம் இல்லாமல் உல்லாசமாக இருந்து வந்ததால்தான் அவளைக் கொன்றேன். மேலும் டிவியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் நடிகனும் நேரம் காலம் இல்லாமல் தொடர்ந்து அவளுடன் தொடர்பு வைத்திருந்தான். இந்த ஆத்திரத்தையெல்லாம் அவளிடம் காட்டிக் கொலை செய்தேன் என்று தற்கொலை செய்து கொண்ட கணவர் மகேஷ் குமார் பரபரப்பு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

மூணாறில் சென்னையைச் சேர்ந்த பெண் ஷமீலா கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பெண்ணைக் கொன்றதாக கருதப்பட்ட மகேஷ் குமார் அவரது கணவர் என்பது பின்னர் தெரிய வந்தது. ஆனால் மகேஷும் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் பட்டிமணியக்காரன் பாளையத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதால் வழக்கில் பெரும் திருப்பு முனை ஏற்பட்டது.

தற்கொலை செய்வதற்கு முன்பு மகேஷ் குமார் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்ட கடிதங்களை எழுதி வைத்திருந்தார். அதில் போலீஸாருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் பல பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில் மகேஷ் குமார் கூறியிருப்பதாவது:

மதிப்புக்குரிய போலீசாருக்கு, எனக்கு தெரியும், என்னை நீங்கள் குறிவைத்து தேடி வருகிறீர்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆம் நான்தான் இதை செய்தேன். வேறு நான் என்ன செய்ய?...

படித்த பெண்கள் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள் முழுமையாக வெளிநாட்டு கலாசாரத்துக்கு தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். வெளிநாட்டுக்காக உழைக்கும் அவர்கள், எதையும் தவறாக நினைப்பது இல்லை. எல்லாமே வெறும் இன்பத்துக்கானது தான் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு நெருக்கமான, உண்மையான, உணர்வுப்பூர்வமான உறவுகள் தேவையில்லை. அவர்களுக்கு கலாசாரம், கணவர், சமூகம், குடும்பம் பற்றிய கவலையே கிடையாது.

படிப்பும், பணமும், கொஞ்சம் அழகும் இருந்தால் போதும், எதுவும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது. அப்படி அவர்கள் செல்லும் பாதையில் ஏதேனும் பிரச்சினைகள் வந்து விட்டால் ஸாரி என்கிற ஒற்றை வரியில் பிரச்சினைக்குரிய நபரை சரி செய்துகொள்கிறார்கள். அப்படி அவர்கள் சமாதானம் அடையவில்லை என்றால், கவலைப்படாமல் ஆட்களை மாற்றிக் கொள்கிறார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப நடிப்பது எப்படி என்பது அவர்களுக்கு தெரியும்.

எல்லா வாக்குறுதிகளையும் மறந்துவிட்டு காதல், நிகழ்வுகள், மறக்க முடியாத நினைவுகள், கவனிப்பு இவை எதுவுமே அவர்களின் மனதில் நிலைப்பதில்லை. எதையும் மிக சுலபமாக மறந்து விட்டு புது வாழ்வை எளிதாக, குறுகிய காலத்திலேயே தொடங்கி விடுவார்கள். அவர்களால் முடியும். அவள் செய்தாள்...

சரி... மீண்டும் அவளை நான் அடைந்த பிறகு, அவளை எச்சரித்தேன். அழுது, கெஞ்சி அவளிடம் வேண்டிப்பார்த்தேன். எந்த பிரயோசனமும் இல்லை. நான் அவளுக்கு 2 முறை வாய்ப்பு கொடுத்தேன். நான் அவளை மன்னித்து என்னோடு வாழ மீண்டும் அனுமதித்தேன். அவளுடைய மாமா மற்றும் வீட்டு உரிமையாளருக்கு இது தெரியும். (ஏனென்றால் அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் அவளுக்காக மட்டுமே வாழ்ந்தேன்).

ஆனால் அவள் மீண்டும் என்னுடைய மன்னிப்பை தவறாக பயன்படுத்த தொடங்கினாள். ஆகவே நான் விவாகரத்து பெற விரும்பி மனு செய்தேன். அவள் அதை புரிந்து கொண்டு தெளிவான மனநிலையில் என்னோடு திரும்பி வருவாள் என்று நினைத்தேன்.

எப்படி இருந்தாலும் இந்த காதல் கதையின் கடைசி கட்டத்துக்கு வந்தாகி விட்டது. என்னுடைய வாழ்க்கை பயணம் கடைசி கட்டத்துக்கு பயணித்தது (அது ஏற்கனவே முடிந்து விட்டது. எப்போது அவள் வழி தவறினாளோ அப்போதே வாழ்க்கை முடிந்து விட்டது).

தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவளுக்கு எந்த குறையும் வைக்காமல் சந்தோஷமாக இருக்க விரும்பினேன். அந்த காரணத்தால்தான் மீண்டும் ஒருமுறை தேனிலவுக்காக அழைத்துச்சென்றேன். நான் அனைத்து வகையிலும் மகிழ்ச்சியை கொடுத்தேன்.

என்னுடைய திட்டம் நான் தற்கொலை செய்து கொள்வது மட்டும்தான். அவள் அவளுடைய வாழ்க்கையை நன்றாக வாழ்ந்து அனுபவிக்கட்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால்...

இறுதியாக நான் அவளிடம் பிச்சைக்காரனை போல மண்டியிட்டு வேண்டினேன். அவள் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

ஒரு தாய் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கும்போது, அவளுடைய குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொள்வது போல... நானும் என் குழந்தையாக கருதிய அவளை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தேன்.

ஆனால், அதையும் ஒருநாள் தள்ளிப்போட்டேன். ஏனென்றால் அவளுடன் தொடர்பு வைத்து இருந்த 3 வாலிபர்களை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டேன். முயற்சியும் செய்தேன்.

ஷாமுக்காக நான் எதையும் செய்ய துணிந்தேன். நான் எடுத்த இந்த முடிவுக்காக கடவுளாலோ, அரசாங்கத்தாலோ பழிக்குப்பழி தீர்க்கப்படும்.

இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அல்லது நான் தவறான தகவல்கள் தருகிறேன் என்றால், தயவுசெய்து கடந்த 6 மாதங்களாக ஷமிலாவின் மொபைல் பில்லை சரிபார்த்துக் கொள்ளுங்கள். திருமணமான ஒரு பெண், அதிகாலை 3 மணி வரை எப்படி பேசியிருக்கிறாள், `சாட்டிங்' செய்து இருக்கிறாள் என்று...

தயை கூர்ந்து சமூகத்துக்கு தொல்லை கொடுக்கும் இது போன்றவர்களையும் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். (இந்திய சட்டப்படி யார் கொலை செய்ய காரணமாக இருக்கிறார்களோ அவர்களையும் கைது செய்ய வேண்டும்...)

எங்கள் வாழ்வில் நுழைந்த முக்கிய குற்றவாளி தினமும் காலை 9.10 மணி முதல் நான் திரும்பி வரும் வரை அவன்தான் அவளுடன் வசித்து வந்தான்.

2-வது ஒருவன். அவனுடன் கடந்த ஜுலை 20 மற்றும் 21-ந் தேதிகளில் தங்கி இருந்தாள். அவனுடன் ஒரே அறையில் தங்கி இருக்கும் மேலும் ஒருவனும் அவளை பங்கிட்டுகொண்டார்கள்.

4-வதாக பேஸ் புக் இணையதளம் மூலம் அறிமுகமானவன், எந்த நேரம் என்று பார்க்காமல் மெசேஜ் அனுப்புவது, பேசுவது என்று தொடர்ந்து வந்தான். குறிப்பாக அதிக அளவில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்தான்.

இதுபோல் பேஸ் புக் இணையதளம் மூலம் அறிமுகமான மற்றொருவனும் நள்ளிரவு நேரங்களில் தொடர்ந்து பேசுவதும், மெசேஜ் அனுப்புவதுமாக இருந்தான்.

6-வது முக்கிய நபர் மதுரையை சேர்ந்தவன். இவன்தான் மனதை மயக்கி அவளை, அவனுடைய மற்ற மீடியா நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ள அறிமுகப்படுத்திவைத்தான்.

கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதி பகல் 12.45 மணிக்கு 3 பேர் அவளை ஒரு காரில் அழைத்துச்சென்று ஓட்டலில் 6 மணி நேரத்துக்கும் மேலாக தங்கி இருந்தார்கள்.

(அவர்கள் காரில் அழைத்துச்சென்ற நேரம் நான் குறுக்கே புகுந்து காரை தடுத்தேன். அவர்கள் 3 பேரும் என்னை பிடித்து வீதியில் தள்ளினார்கள். அப்போது ஷமிலா என்னிடம் நீ போ, என்னுடன் வராதே என்று விரட்டினாள். அவள் சென்ற 6 மணி நேரமும், அவளுடைய மொபைல் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது).

டிவியில் காமெடி நிகழ்ச்சி நடத்துபவன்

டி.வி. நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடிகராக இருப்பவன் தினமும் இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை போனில் பேசுவதும், மெசேஜ் அனுப்புவதுமாக இருப்பான். இவனுடைய தொடர்பு கடந்த 30-ந் தேதிவரை ஷமிலாவுடன் இருந்தது. (ஷமிலா என்னிடம் திருந்தி விட்டதாக கூறினாள். அவளுடைய வாழ்க்கையையும், என்னுடைய ஆழமான நம்பிக்கையையும் புரிந்துகொண்டதாக கூறினாள். நான் குறிப்பிட்ட இந்த நபர்களிடம் பேசமாட்டேன்... இனிமேல் இதுபோன்ற செயலை செய்ய மாட்டேன் என்று என்னிடம் கூறி இருந்தாள்). அவை எல்லாம் நாடகம் என்பதும், என்னை முட்டாளாக்க அவள் நடத்திய நாடகம் என்பதையும் செப்டம்பர் 18-ந் தேதி அவள் அவர்களுடன் தங்கியபோது புரிந்துகொண்டேன்.

8-வதாக ஒருவன். இவன் அந்த டி.வி. நடிகரின் நண்பன். இவனும் அந்த செப்டம்பர் 18-ந் தேதி பார்ட்டியில் அவளை பகிர்ந்து கொண்டவன். இவனும் ஷமிலாவை மிகவும் கவர்ந்து, நள்ளிரவில் போன் பேசியும், மெசேஜ் அனுப்பியும் வந்தான்.

9-வதாக ஒருவன் ஒரு பகுதிநேர வேலை தொடர்பாக அவளை அணுகி, அந்த நாள் முதல் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி குறுகிய காலத்தில் நட்பை வளர்த்துக்கொண்டவன். இதுபோலவே 10-வதாக ஒருவனும் ஷமிலாவுடன் தொடர்பு வைத்திருந்தான். இவர்கள் தவிர ஏராளமான எண்களில் இருந்து நள்ளிரவு மெசேஜ் மற்றும் போன் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும். (இந்த எண்களை குறிப்பிட்டு கடிதத்தை முடித்து உள்ளார்).

என்று அதில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தை 11ம் தேதி அவர் எழுதியுள்ளார். ஷமீலாவுடன் தொடர்பு வைத்திருந்த 10 பேரின் பெயர்களையும் தெளிவாக குறிப்பிட்டு அவர்களது முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றையும் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஈரோடு போலீஸார் தீவிர விசாரணயை முடுக்கி விட்டுள்ளனர்.




தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
எமது மொழியும்,கலையும்,பண்பாடும்
எமது நீண்டவரலாற்றின் விழுதுகளாக
எமது மண்ணில்ஆழமாக வேரூன்றி நிற்பவை .
எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை....
-------------------------------------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
Oct 13, 2011, 3:25:03 PM10/13/11
to panb...@googlegroups.com

மகேஷ்குமார் வாழ்க்கையைக் கெடுத்த அத்தனை பேரையும் கைது செய்ய ஈரோடு போலீஸ் முடிவு

வியாழக்கிழமை, அக்டோபர் 13, 2011, 18:55 [IST]
Save This Page
Print This Page
Comment on This Article
A A A
Newsletter
Free Newsletter
Its Free!
உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
Ads by Google
Download Google Chrome  www.google.com/chrome
A free browser that lets you do more of what you like on the web
Magesh Kumar and Shameela
Ads by Google
Full MBA Scholarships 
Rutgers Pharmaceutical Mgmt MBA Open House Saturday, October 29
Business.rutgers.edu/OpenHouse
ஈரோடு : ஈரோடு மாவட்டம் பட்டிமணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்த மகேஷ் குமார், தனது மனைவி ஷமீலா குறித்தும், அவருடன், அவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தவர்கள் குறித்தும், இவர்களால் தனது காதல் வாழ்க்கை வீணாகிப் போனதைக் குறித்தும் எழுதி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை நபர்களையும் கைது செய்ய ஈரோடு போலீஸார் அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.

மகேஷ் குமார் தற்கொலையும், அதற்கு முன்பு அவரது மனைவி ஷமீலாவை அவர் கொலை செய்ததும் தமிழகத்தையும் கேரளாவையும் உலுக்கியுள்ளது. ஒரு காதல் வாழ்க்கை எப்படி கள்ளத் தொடர்புகளால் சிக்கி சீரழிந்து சின்னபின்னமாகிப் போனது என்பதை தனது கடிதங்கள் மூலம் உலகுக்கே அறிவித்து விட்டு செத்துள்ளார் மகேஷ்குமார்.

மூணாறு விடுதியில் தனது மனைவியைக் கொலை செய்து விட்டு சொந்த ஊருக்கு வந்த மகேஷ்குமார் அங்கு தனது காதல் மனைவியின் நினைவை மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாவதற்கு முன்பு போலீஸாருக்கு மகேஷ் குமார் எழுதி வைத்த விரிவான கடிதம் இப்போது மிகப் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் தனது மனைவியின் லீலைகள், அவரது கள்ளத் தொடர்புகள், அதனால் தான் பட்ட வேதனைகள், அவமானங்கள், தனது வாழ்க்கையை சீரழித்த அயோக்கியர்கள் குறித்து விரிவாக குறிப்பிட்டுள்ளார் மகேஷ் குமார்.

மேலும் தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தவர்கள் குறித்த விவரங்களையும், அவர்களது தொலைபேசி எண்களையும் கூட அவர் குறித்து வைத்துள்ளார்.

இந்தக் கடிதம் ஈரோடு போலீஸாரையே அதிர்ச்சி அடைய வைத்து உலுக்கி விட்டதாம். அழகான காதல் வாழ்க்கை இப்படி அகோரமாக சிதைந்து போக காரணமாக இருந்த யாரையும் விடாமல் அத்தனை பேரையும் கைது செய்து சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்க காவல்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மகேஷ் குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள 10 பேரையும் பிடித்துக் கைது செய்து வழக்குத் தொடர போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மகேஷ் குமார் கடிதத்தில் உள்ள ஒருவரையும் விடாமல் கைது செய்ய வேண்டும் என்பதற்காகவும், இந்த வழக்கில் எந்த அளவும் பிசகு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காவும், திருமணமானவர்களின் வாழ்க்கையில் புகுந்து சீரழிக்கும் கயவர்களுக்கு இது சரியான பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் போலீஸார் இந்த வழக்கை மிகவும் கவனத்துடன் கையாள முடிவு செய்துள்ளனராம்.

மதுரையைச் சேர்ந்த ஒருவன்தான் ஷமீலாவை மிகப் பெரிய அளவில் தன் பக்கம் இழுத்து சீரழித்ததாக கூறப்படுகிறது. இவனைத்தான் மகேஷ்குமாரும் மிக முக்கியமாக குறிப்பிட்டுள்ளார். எனவே இவனை முதலில் பிடிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

மகேஷ்குமாருக்குத் தெரிந்து 10 பேர்தான் உள்ளனரா அல்லது அதற்கு மேலும் ஷமீலாவுடன் வேறு யாரேனும் தொடர்பு வைத்திருந்தனரா என்பதை அறியவும் போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இவர்கள் பத்து பேரையும் பிடித்து விசாரிக்கும்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என்றும் தெரிகிறது.

இதனால் ஈரோடு மகேஷ்குமார், ஷமீலா மரண வழக்கு மிகப் பெரிய பரபரப்பான விஷயமாகியுள்ளது.



--

Ahamed Zubair A

unread,
Oct 13, 2011, 3:32:09 PM10/13/11
to panb...@googlegroups.com
இதெல்லாம் க்ரூப்ல ஏன்யா பகிர்ந்துக்கறீங்க??

மகா கொடுமையா இருக்கு... :(

2011/10/13 ஸ் பெ <stalinf...@gmail.com>

செல்வன்

unread,
Oct 13, 2011, 3:58:18 PM10/13/11
to panb...@googlegroups.com
விவாகரத்து செய்துவிட்டு போயிருக்கலாம்.அதை விட்டுவிட்டு ஹான்ர் கில்லிங்கில் இவன் இறங்கியது சகிக்க முடியாத செயல்.போதாகுறைக்கு போலிஸ் வேறு கள்ளகாதலர்களை கைது செய்யபோகிறதாம்.இந்த கடிதத்தில் இருப்பதை படித்தால் அந்த பெண் இதை எல்லாம் விரும்பி செய்ததாக தான் தெரிகிறது.அப்புறம் இம்மாதிரி நடவடிக்கைகளை போலிஸ் ஏன் எடுக்கவேண்டும் என புரியவில்லை.


--
செல்வன்

"ஒட்டுமொத்தத்தில் கம்யூனிசம் என்பதை பின்வருமாறு விளக்கலாம்."நீ சம்பாதிக்கும் காசு முழுவதையும் ஸ்டாலினிடம் கொடுத்துவிடு.அதை எப்படி செலவு செய்வதுன்னு உன்னைவிட அவருக்கு நல்லா தெரியும்.நீ சம்பாதி.அவர் செலவு செய்வார்.உனக்கு மூணுவேளை சோறு போட்டு, துணிமணி கொடுப்பார்.." இதான் கம்யூனிசம்" ~ செல்வன்


Ahamed Zubair A

unread,
Oct 13, 2011, 4:00:18 PM10/13/11
to panb...@googlegroups.com
டைவர்ஸ் மனு கூட கொடுத்திருக்கான்... அதை அம்மணி சட்டையே செய்யல போல....

2011/10/13 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Oct 13, 2011, 4:05:10 PM10/13/11
to panb...@googlegroups.com


2011/10/13 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

டைவர்ஸ் மனு கூட கொடுத்திருக்கான்... அதை அம்மணி சட்டையே செய்யல போல....


சட்டை செய்தால் என்ன,செய்யாட்டி என்ன? கோர்ட்டுக்கு போய் டைவர்ஸ் வாங்கிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதானே? கடைசிக்கு மனைவியை வீட்டை விட்டாவது அனுப்பி வைத்திருக்கலாம்.

Asif Meeran AJ

unread,
Oct 13, 2011, 4:26:50 PM10/13/11
to panb...@googlegroups.com
சொல்லுதல் யார்க்கும் எளிய - அப்படின்னு வள்ளுவர் சும்மாவா சொன்னாரு?

செல்வன்

unread,
Oct 13, 2011, 5:23:00 PM10/13/11
to panb...@googlegroups.com


2011/10/13 Asif Meeran AJ <asifm...@gmail.com>

சொல்லுதல் யார்க்கும் எளிய - அப்படின்னு வள்ளுவர் சும்மாவா சொன்னாரு?


இதையும் வள்ளுவர் தான் சொன்னாரு
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
கலைஞர் உரை:
தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
கலைஞர் உரை:
எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.

Jayaprakash N

unread,
Oct 14, 2011, 2:00:53 AM10/14/11
to panb...@googlegroups.com
கொல்லாமல் விட்டிருக்கலாம்தான்.. அவன் கடிதத்தை படித்து பார்த்தால், அவன் தன் மனைவியின் மேல் அளவுக்கதிகமான அன்பு வைத்திருப்பது தெரிகிறது..அவளுக்கு நான்தான், தகப்பன், காதலன், கணவன் எல்லாமே என்கிறான்.. இவ்வளவு தவறு செய்த பிறகும் கூட, அத்தனையும் மன்னித்து அவளை ஏற்று கொள்ளவும் தயாராக இருந்திருக்கிறான். அவளின் உதாசீனம்தான் அவனை வெறிகொள்ள வைத்திருக்கிறது..
அவனை பாருங்கள்..அவளைவிட அழகாகவே இருக்கிறான்..அவள் இல்லாத உலகத்தில் தன்னால் வாழவே முடியாது என்றுதான் தற்கொலை முடிவுக்கு போயிருக்கிறான்.(அவன் சைக்கோவும் அல்ல..மிக தெளிவாக இருக்கிறான்)

அவன் செய்த காரியம் மிக மிக தவறானதுதான்..மன்னிக்க முடியாதது..(அவன் உயிரோடு இருந்திருந்தால், இந்த கதையே வேறு மாதிரி இருந்திருக்கலாம்..)..உணர்வுபூர்வமாக பார்த்தால், தர்க்க நியாயங்கள் தாண்டி அவன்மேல் அனுதாபமே தோன்றுகிறது..


With Lots OF Love,
JP



2011/10/14 செல்வன் <hol...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Oct 14, 2011, 2:31:00 AM10/14/11
to panb...@googlegroups.com
+1

2011/10/14 Jayaprakash N <naa...@gmail.com>

மோரு@மோர்சுப்ரா .

unread,
Oct 14, 2011, 6:20:18 AM10/14/11
to panb...@googlegroups.com
எனக்கென்னமோ யாரும் அவரை கொலைசெய்துவிட்டு கணவனையும் கொன்று இப்படி நாடகமாடலாம் இல்லையா.ஒருவேளை பலம் மிக்க கை யேதும் இதுக்கு பின்னாடி இருந்திருந்தால்......

இப்படித்தான் என் போலிஸ் மூளை சிந்திக்க சொல்லுது:)....சிவனேன்னு போலிஸாவே ஆயிருக்கலாம் எங்க அப்பா ஆசைப்படி.அம்மாவுக்குத்தான் போலிசுன்னாலே பிடிக்காது......

2011/10/14 Jayaprakash N <naa...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--


அன்போடு

மோர்சுப்ரா


Jayaprakash N

unread,
Oct 14, 2011, 6:23:50 AM10/14/11
to panb...@googlegroups.com
:-).......


With Lots OF Love,
JP



2011/10/14 மோரு@மோர்சுப்ரா . <mors...@gmail.com>

அச்சு !!!

unread,
Oct 14, 2011, 6:24:11 AM10/14/11
to panb...@googlegroups.com
2011/10/14 மோரு@மோர்சுப்ரா . <mors...@gmail.com>
இப்படித்தான் என் போலிஸ் மூளை சிந்திக்க சொல்லுது:)....சிவனேன்னு போலிஸாவே ஆயிருக்கலாம் எங்க அப்பா ஆசைப்படி.அம்மாவுக்குத்தான் போலிசுன்னாலே பிடிக்காது......

நாங்களாவது தப்பிச்சிருப்போம்...
 

செல்வன்

unread,
Oct 14, 2011, 8:17:47 AM10/14/11
to panb...@googlegroups.com


2011/10/14 Jayaprakash N <naa...@gmail.com>

கொல்லாமல் விட்டிருக்கலாம்தான்.. அவன் கடிதத்தை படித்து பார்த்தால், அவன் தன் மனைவியின் மேல் அளவுக்கதிகமான அன்பு வைத்திருப்பது தெரிகிறது..அவளுக்கு நான்தான், தகப்பன், காதலன், கணவன் எல்லாமே என்கிறான்.. இவ்வளவு தவறு செய்த பிறகும் கூட, அத்தனையும் மன்னித்து அவளை ஏற்று கொள்ளவும் தயாராக இருந்திருக்கிறான். அவளின் உதாசீனம்தான் அவனை வெறிகொள்ள வைத்திருக்கிறது..
அவனை பாருங்கள்..அவளைவிட அழகாகவே இருக்கிறான்..அவள் இல்லாத உலகத்தில் தன்னால் வாழவே முடியாது என்றுதான் தற்கொலை முடிவுக்கு போயிருக்கிறான்.(அவன் சைக்கோவும் அல்ல..மிக தெளிவாக இருக்கிறான்)

அவன் செய்த காரியம் மிக மிக தவறானதுதான்..மன்னிக்க முடியாதது..(அவன் உயிரோடு இருந்திருந்தால், இந்த கதையே வேறு மாதிரி இருந்திருக்கலாம்..)..உணர்வுபூர்வமாக பார்த்தால், தர்க்க நியாயங்கள் தாண்டி அவன்மேல் அனுதாபமே தோன்றுகிறது..


தற்போது வந்த செய்தியின்படி அவனது கடிதத்தில் உள்ள தகவல்கள் தவறு என போலிஸ் சந்தேகிப்பதாக தெரிகிறது.அவன் மனைவியை பற்றி விசாரித்தவரை அவர் இம்மாதிரி பெண் அல்ல என்றும் மிகவும் நல்லவர் என்றும் ஊரில் சொல்லி இருக்கிறார்கள்.கணவனால் அவர் மிக துன்புறுத்தபட்டதாகவும் தெரிகிறது.

கொடுமைக்கார கணவன் மனைவியை அடித்து கொன்றுவிட்டு அதன்பின் தூக்கில் தொங்குவதற்கு முன் தனக்கு ஆகாதவர்களை பழிவாங்க தன் மனைவியுடன் அவர்களுக்கு கள்ளதொடர்பு இருந்ததாக கூட நாடகமாடி இருக்கலாம்.11 பேருடன் ஒரு குடும்பபெண்ணுக்கு கள்ளதொடர்பு இருந்தது,அதையும் சகித்துகொண்டு ஒரு கணவன் அவளை திருந்த சொல்லி கேட்டு மன்றாடினான் என்பதெல்லாம் நம்ப முடிகிறதா?


http://thatstamil.oneindia.in/news/2011/10/14/relatives-friends-shameela-not-ready-to-take-aid0091.html

சென்னை: நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர் ஷமீலா. அவரது குடும்பத்தினர் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்கள். ஆனால் ஷமீலாவின் செய்கைகள் குறித்து மகேஷ் குமார் எழுதியுள்ள கடிதம் எங்களுக்கு வியப்பளிக்கிறது. இதை நம்ப முடியவில்லை என்று ஷமீலாவின் உறவினர்கள், சிறு வயது முதல் ஷமீலாவை அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக மகேஷ் குமார் தரப்பு கடிதங்களை மட்டும் முழுமையாக நம்பாமல், ஷமீலா தரப்பு உண்மைகளையும் அறிய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஷமீலா மூணாறு விடுதியில் வைத்துக் கொலை செய்யப்பட்டார். அவரது காதல் கணவர் மகேஷ்குமார் தனது சொந்த ஊருக்கு வந்து தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு அவர் சில கடிதங்களை எழுதி வைத்திருந்தார்.

அதில் ஷமீலா குறித்து அவர் போலீஸாருக்கு எழுதி வைத்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷமீலாவின் நடத்தை குறித்து விளக்கியுள்ள அவர், ஷமீலாவுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் 11 ஆண்கள் குறித்தும், அவர்களது முகவரிகள், தொலைபேசி எண்கள், என்னவெல்லாம் செய்தார்கள் என்பதையும் விளக்கியுள்ளார்.

ஆனால் ஷமீலா தரப்பில் வேறு மாதிரியாக பேசப்படுகிறது. ஷமீலாவின் பூர்வீகம் மதுரை ஆகும். அவரது தந்தை பெயர் சுந்தரம். தாயார் பெயர் ராணி. இவர்கள் பல காலத்திற்கு முன்பே ஈரோடு வந்து செட்டிலானார்கள்.

அங்குள்ள திருநகர் காலனி, சாமியப்பா தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்த சுந்தரம் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஷமீலாவும், அவரது தங்கை ஷாலினியும் அங்குதான் பள்ளிப் படிப்பை முடித்தனர்.

பள்ளிப்படிப்பை முடித்த ஷமீலா, 2004ம் ஆண்டு மதுரை வந்து உறவினர் வீட்டில் தங்கி கல்லூரிப் படிப்பை முடித்தார். ஷாலினி தனது பிளஸ்டூவை முடித்ததும் சுந்தரம் மறுபடியும் மதுரைக்கே இடம் பெயர்ந்தார். அங்கு திருமங்கலத்தில் குடியேறினார். சில மாதங்களில் அவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

ஷமீலாவுக்குப் பின்னர் பெங்களூரில் கால் சென்டரில் வேலை கிடைத்து அங்கு போனார். அப்போதுதான் மகேஷ்குமாருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு ராணி ஒப்புதல் தரவில்லை. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் திருமணம் செய்து கொண்டார் ஷமீலா.

திருமணம் செய்து கொண்டு போனாலும் கூட தனது வீட்டினருடன் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருந்துள்ளார் ஷமீலா.

ஷமீலாவின் தற்போதைய நடத்தை குறித்த மகேஷ்குமாரின் கடிதம் அவர் சிறு வயதில் வசித்து வந்த ஈரோடு திருநகர் காலனி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதேபோல ஷமீலாவின் உறவினர்களும் கூட இதை நம்ப மறுக்கின்றனர்.

தான் செய்த தவறுகளை மறைக்க மகேஷ்குமார் இதுபோல ஷமீலா குறித்து தவறாக கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

சிறு வயது முதலே ஷமீலாவையும் அவரது தங்கையையும் எங்களுக்குத் தெரியும். அவர்கள் அப்படிப்பட்டவர்களே கிடையாது. நல்ல குடும்பத்துப் பெண்கள். ஷமீலா நிச்சயம் அப்படிப்பட்ட பெண்ணாக இருக்க முடியாது. அவர் காதலித்துத் திருமணம் செய்தது மட்டுமே உண்மை. மற்றபடி இதுபோல தவறாகப் போகக் கூடிய பெண்ணாக நாங்கள் நம்பவில்லை.

உண்மையில் கல்யாணத்திற்குப் பின்னர் சில காலம் அவர்களது குடும்ப வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. ஆனால் பின்னர்தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஷமீலாவை, ஷாலினி சந்தித்தபோது தனது கணவர் சித்திரவதை செய்வதாக கூறி அழுதுள்ளார் ஷமீலா.

அதன் பிறகு அவர் ஷாலினியுடன் தங்கியிருந்தார். பின்னர் திருமங்கலம் போய் தாயாருடன் தங்கியிருந்தார். அப்போதுதான் மகேஷ்குமார் வந்து அழைத்துச் சென்றார். கோவிலுக்குக் கூட்டிப் போவதாகக் கூறிய அவர் மூணாறுக்குக் கூட்டிச் சென்று கொலை செய்து விட்டார். இதைத் திட்டமிட்டு அவர் செய்துள்ளார். அவர் பக்கம்தான் ஏதோ தவறு இருப்பதாக தெரிகிறது. தனது தவறுகளை மறைக்க ஷமீலா மீது பழியைப் போட்டு விட்டதாக கருதுகிறோம் என்கிறார்கள்.

மகேஷ்குமாரின் கடிதங்கள் மூலம் ஷமீலா குறித்த ஒரு மாதிரியான இமேஜ் பரவியுள்ள நிலையில் தற்போது ஷமீலா தரப்பில் மகேஷ் குமார் குறித்து கூறப்படும் கருத்துக்களும், ஷமீலா அப்படிப்பட்டவர் இல்லை என்று கூறப்படும் தகவலும், ஈரோடு போலீஸாரை சிந்திக்க வைத்திருப்பதாக தெரிகிறது. எனவே மகேஷ் குமார் கடிதங்களை மட்டும் அப்படியே எடுத்துக்கொள்ளாமல், ஷமீலா தரப்பிலும் முழுமையாக விசாரிக்க அவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

11 பேரையும் பிடிக்க தனிப்படை

அதேசமயம், மகேஷ் குமார் கடிதத்தில் கூறப்பட்டுள்ள 11 பேரையும் முதல் கட்டமாக தொடர்பு கொண்டு தீவிரமாக விசாரித்து, அவர்களுக்கும் ஷமீலாவுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து தெளிவுபடுத்திக் கொள்ளவும், தேவைப்பட்டால் கைது நடவடிக்கையை எடுப்பதற்கும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்த வழக்கை விசாரித்து வரும் வரப்பாளையம் காவல் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் இளங்கோவன் கூறுகையில், மகேஷ்குமார் கடிதத்தில் கூறியுள்ள 11 பேரையும் விசாரிக்க முடிவு செய்து சப் இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையில் தனிப்படை அமைத்துள்ளோம்.

11 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்படும். கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை உண்மைதானா என்பதை முழுமையாக பரிசோதித்துக் கொண்ட பின்னர், உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.
--
செல்வன்

மரவண்டு

unread,
Oct 14, 2011, 8:30:31 AM10/14/11
to பண்புடன்
> கொடுமைக்கார கணவன் மனைவியை அடித்து கொன்றுவிட்டு அதன்பின் தூக்கில்
> தொங்குவதற்கு முன் தனக்கு ஆகாதவர்களை பழிவாங்க தன் மனைவியுடன் அவர்களுக்கு
> கள்ளதொடர்பு இருந்ததாக கூட நாடகமாடி இருக்கலாம்.11 பேருடன் ஒரு
> குடும்பபெண்ணுக்கு கள்ளதொடர்பு இருந்தது,அதையும் சகித்துகொண்டு ஒரு கணவன் அவளை
> திருந்த சொல்லி கேட்டு மன்றாடினான் என்பதெல்லாம் நம்ப முடிகிறதா?


மோகத்தைக் கொன்றுவிடு - அல்லா லென்றன்
மூச்சை நிறுத்திவிடு

Omprakash

unread,
Oct 14, 2011, 12:43:44 PM10/14/11
to panb...@googlegroups.com
எனக்கும் சுத்தமாக நம்ப்ப முடியவில்லை... ஆனால் சென்னையில் இருக்கும் என் நண்பர்கள் சொல்லி சில கதைகள் கேட்டு இருக்கிறேன்... நம்பாமலும் இருக்க முடியவில்லை...

செக்ஸ் என்பது எல்லாம் உணர்ச்சி என்ற அடைப்புகுறியில் இடமுடியாதுங்க..அது ஒரு வியாதி... சிலரை கட்டி போட்டுவிடும்... 

2011/10/14 மரவண்டு <mara...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.
கடலினைத் தாவும் குரவும்-வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்,
சூத்திர னுக்கொரு நீதி-தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;
சாத்திரம் சொல்லிடு மாயின்-அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்.

வில்லன்

unread,
Oct 14, 2011, 1:28:00 PM10/14/11
to panb...@googlegroups.com
வாழ்க்கை முழுக்க ரிஸ்க்காவே இருக்கு


(ரிஸ்க் வார்த்தை உபயம் மனுசபுத்திரன்)

Imsai Arasi

unread,
Oct 14, 2011, 2:51:59 PM10/14/11
to panb...@googlegroups.com
ஏதோ ஒரு ஆன்னுடன் கள்ள தொடர்ப்பு என்றால்லும் நம்பும் படிய இருக்கலாம்... இவன் சந்தேக புத்தி உள்ளவன் போல் இருக்கு ... ஒரு விதமான சாடிஸ்ட், போச்செச்சிவ் ஆளாக இருக்கலாம். 

அரசி...



2011/10/14 Jayaprakash N <naa...@gmail.com>

Omprakash

unread,
Oct 15, 2011, 12:37:36 AM10/15/11
to panb...@googlegroups.com

தன் மனைவியின் மொபைல் நம்பரை செக் பண்ண சொல்லியிருக்காரே..

Jayaprakash N

unread,
Oct 15, 2011, 2:06:38 AM10/15/11
to panb...@googlegroups.com
நான் அவனுக்கு வக்காலத்து வாங்கவில்லை.. அவன் தரப்பு நியாயங்கள் சரியாகவே படுகிறது.. அவன் தவறு செய்திருந்தால் இவ்வளவு விலாவாரியாக 21 பக்கத்துக்கு கடிதம் எழுதி இருக்க மாட்டான்..அதுவும் சாகும் தருவாயில் . ..
அதுசரி..இதுமாதிரியான பெண்கள் இருக்க (அட்லீஸ்ட் ௦0.00001%) நூறு சதவீதம் வாய்ப்பே இல்லை  என்கிறீர்களா?.. 
குற்றங்கள்  விதிவிலக்கானவர்களிடமிருந்தே அதிகம்  நிகழ்த்த  படுகிறது..


With Lots OF Love,
JP



2011/10/15 Imsai Arasi <imsaia...@gmail.com>

Jayaprakash N

unread,
Oct 15, 2011, 2:10:18 AM10/15/11
to panb...@googlegroups.com
அடுத்த எலெக்ஷன் நேரத்து கொடுமை.. 
எங்கே, எப்போ நடந்தது என தெரியவில்ல..
meeting.jpg

lucky shajahan

unread,
Oct 15, 2011, 2:19:20 AM10/15/11
to panb...@googlegroups.com
இதப்பார்த்தோன்ன விகடன்ல வந்த ஒரு காமெடி ..
 
"தலைவர் இன்னும் 5 நிமிடத்தில் மேடைக்கு வர இருப்பதால் தயவு செய்து
ஒரு பத்து பேராவது வந்து திடலில் அமரும்படி தயவு செய்து கேட்டுக் கொள்கிறோம் "

2011/10/15 Jayaprakash N <naa...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
ஷாஜஹான்.

Srimoorthy.S

unread,
Oct 15, 2011, 5:12:59 AM10/15/11
to panb...@googlegroups.com
கொலை, தற்கொலைக்கு முன்னர் என்றால் சட்டமும், காவலும் ஷமீலாவுக்கு ஆதரவாக இருந்திருக்க கூடும்.
 
பெண் பொய்ப்புகார் கொடுத்தால் கூட இரக்கப்படும் காவல்,  ஆண் இறந்தால்தான் இரக்கப்படுமோ எனவோ????

2011/10/14 செல்வன் <hol...@gmail.com>
விவாகரத்து செய்துவிட்டு போயிருக்கலாம்.அதை விட்டுவிட்டு ஹான்ர் கில்லிங்கில் இவன் இறங்கியது சகிக்க முடியாத செயல்.போதாகுறைக்கு போலிஸ் வேறு கள்ளகாதலர்களை கைது செய்யபோகிறதாம்.இந்த கடிதத்தில் இருப்பதை படித்தால் அந்த பெண் இதை எல்லாம் விரும்பி செய்ததாக தான் தெரிகிறது.அப்புறம் இம்மாதிரி நடவடிக்கைகளை போலிஸ் ஏன் எடுக்கவேண்டும் என புரியவில்லை.

John durai

unread,
Oct 14, 2011, 8:50:46 AM10/14/11
to panb...@googlegroups.com
அவர் தான் அந்த பொண்ணுடைய மொபைல் பில்லை பார்க்க சொல்லி இருக்காரே போலீஸ் அதையும் கொஞ்சம் சோதித்து பார்க்கலாமே. அதுல அந்த பொண்ணு யார் கூடலாம் பேசி இருக்கானு தெரிஞ்சுடுமே

2011/10/14 மோரு@மோர்சுப்ரா . <mors...@gmail.com>
எனக்கென்னமோ யாரும் அவரை கொலைசெய்துவிட்டு கணவனையும் கொன்று இப்படி நாடகமாடலாம் இல்லையா.ஒருவேளை பலம் மிக்க கை யேதும் இதுக்கு பின்னாடி இருந்திருந்தால்......



--
ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட ஏதாவது செய்வது மேல்



வில்லன்

unread,
Oct 15, 2011, 9:46:02 AM10/15/11
to panb...@googlegroups.com
பலமிக்க கை என்றால் க்ரேட் காளியாக இருக்கலாமோ?

--
இப்படிக்கு

"ஸ்ரீ"

"சில அயோக்கியர்கள் முட்டாள்களிடம் அயோக்கியத்தனம் செய்கிறார்கள்.
முட்டாள்கள் அறிவாளிகளானதும் அவர்களும் அயோக்கியத்தனம் செய்கிறார்கள்.
ஆக அயோக்கியத்தனத்தால் பாதிக்கப்படுவோர் முட்டாள்களே. அப்பாவிகள் அல்ல....
விதிவிலகுக்குகள் குழந்தைகள்"

Omprakash

unread,
Oct 15, 2011, 1:20:56 PM10/15/11
to panb...@googlegroups.com
அடிமாலி@ ஆவ்சம் கேரளா.... : )


2011/10/15 Jayaprakash N <naa...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--

செல்வன்

unread,
Oct 16, 2011, 2:41:37 AM10/16/11
to panb...@googlegroups.com


2011/10/14 Omprakash <vi.omp...@gmail.com>

தன் மனைவியின் மொபைல் நம்பரை செக் பண்ண சொல்லியிருக்காரே..


செக் பண்ணினால் என்ன பேசினார் என்பதெல்லாமா தெரியும்?எ.கொடுமை சார் இது?

செல்வன்

unread,
Oct 16, 2011, 2:49:32 AM10/16/11
to panb...@googlegroups.com


2011/10/15 Jayaprakash N <naa...@gmail.com>

நான் அவனுக்கு வக்காலத்து வாங்கவில்லை.. அவன் தரப்பு நியாயங்கள் சரியாகவே படுகிறது.. அவன் தவறு செய்திருந்தால் இவ்வளவு விலாவாரியாக 21 பக்கத்துக்கு கடிதம் எழுதி இருக்க மாட்டான்..அதுவும் சாகும் தருவாயில் . ..

21 பக்கத்துக்கு கடிதம் எழுதி வெச்சால் நல்லவனாயிடுவானா?


அதுசரி..இதுமாதிரியான பெண்கள் இருக்க (அட்லீஸ்ட் ௦0.00001%) நூறு சதவீதம் வாய்ப்பே இல்லை  என்கிறீர்களா?.. 
குற்றங்கள்  விதிவிலக்கானவர்களிடமிருந்தே அதிகம்  நிகழ்த்த  படுகிறது..

அந்த பெண் நடத்தை கெட்டவரா இல்லையா என்பது என்னை பொறுத்தவரை பிரச்சனை இல்லை.

11 பேருடன் படுத்தவர்களை எல்லாம் வெட்டுவது என பெண்கள் கிளம்பினால் எத்தனை ஆண்கள் மிஞ்சுவார்கள்?குறிப்பாக தலைவர்கள்,நடிகர்கள்??எனக்கு கணக்கு தெரியலை.

இன்றூ வந்த செய்தியில் பிரபுதேவா என்ற மகானுபாவனுக்கும்,நயந்தாராவுக்கும் நடக்காத கல்யாணம் நின்றுவிட்டது என செய்தி வந்திருக்கு.அவர் மனைவிக்கு கையில் ஒரு ஆயிரம் குயர் பேப்பரை கொடுங்கள்.முழுக்க எழுதி நிரப்புவார்.....கமலகாசன் என்ற இன்னொரு புண்ணீயவான்..அவரது முதல் மனைவி வாணி முந்தி குமுதத்துக்கு கொடுத்த பேட்டியில் "ஆயிரம் பெண்களுடன் நிர்வாணமாக என் கணவர் நடித்தாலும் அவர் மேல் சந்தேகபடமாட்டேன்" என பூரிச்சு சொல்லி இருந்ததை நான் படிச்சு இருக்கேன்.அவரிடம் ஒரு இரண்டாயிரம் குயர் பேப்பரை கொடுங்கள்..அவரும் ஒரு கண்ணீர் காவியத்தை படைப்பார்.

இவர்களை எல்லாம் நாம் என்ன செய்துவிட்டோம்?தலைவர்களாக ஏற்றுகொள்ளவுஇல்லையா?ரசிகர் மன்றம் வைக்கலையா?அந்த பெண் நடத்தை கெட்டவர் என வாய் கூசாமல் சொல்லும் நாம் இவர்களை எல்லாம் அப்படி ஒரு நாளும் சொல்லியிருப்போமா?

Omprakash

unread,
Oct 16, 2011, 6:47:24 AM10/16/11
to panb...@googlegroups.com
///
நான் அவனுக்கு வக்காலத்து வாங்கவில்லை.. அவன் தரப்பு நியாயங்கள் சரியாகவே படுகிறது.. அவன் தவறு செய்திருந்தால் இவ்வளவு விலாவாரியாக 21 பக்கத்துக்கு கடிதம் எழுதி இருக்க மாட்டான்..அதுவும் சாகும் தருவாயில் . ..

21 பக்கத்துக்கு கடிதம் எழுதி வெச்சால் நல்லவனாயிடுவானா?//

ஒரு சாடிஸ்ட்டா இருந்தா இப்படி மன உளைச்சல் ஆகி தற்கொலை செய்யயெல்லாம் தோனாது...பக்கம் பக்கா எழுதவும் முடியாது...

வில்லன்

unread,
Oct 16, 2011, 7:02:31 AM10/16/11
to panb...@googlegroups.com
இப்படிலாம் பண்ண மாட்டான்னு டிபைன் பண்ண முடியாதவன் தான் சாடிஸ்ட்,

2011/10/16 Omprakash <vi.omp...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Omprakash

unread,
Oct 16, 2011, 7:21:35 AM10/16/11
to panb...@googlegroups.com
சாடிஸ்ட், சைக்கோ ரெண்டு பேரின் நிலையை பற்றி சொல்ல முடியும், அவர்களால் சில அசாதாரண காரியங்களை செய்ய முடியும். பாசம், உணர்ச்சி போன்ற விஷயங்களை பற்றி பேசும் அளவுக்கு அவர்களால் எழுதி எல்லாம் காட்ட முடியாது. முக்கியமாக இவர்களுக்கு சுயபச்சாதாம் அரவே இருக்காது. கொலை கூட செய்வார்கள் ஆனா தற்கொலை எல்லாம் செய்ய மாட்டார்கள்.

2011/10/16 வில்லன் <vom...@gmail.com>



--

வில்லன்

unread,
Oct 16, 2011, 7:26:48 AM10/16/11
to panb...@googlegroups.com
சைக்கோ டைப் வேற சாடிசம் மிக்கவர்கள் என்பது வேற.

ஆனாலும் சைக்கோ சாடிஸ்ட் இருவருக்கும் சுயபச்சாதாபம்தான் மூல காரணமே...

2011/10/16 Omprakash <vi.omp...@gmail.com>

துரை.ந.உ

unread,
Oct 16, 2011, 10:45:33 AM10/16/11
to panb...@googlegroups.com


2011/10/16 செல்வன் <hol...@gmail.com>



2011/10/15 Jayaprakash N <naa...@gmail.com>
நான் அவனுக்கு வக்காலத்து வாங்கவில்லை.. அவன் தரப்பு நியாயங்கள் சரியாகவே படுகிறது.. அவன் தவறு செய்திருந்தால் இவ்வளவு விலாவாரியாக 21 பக்கத்துக்கு கடிதம் எழுதி இருக்க மாட்டான்..அதுவும் சாகும் தருவாயில் . ..

21 பக்கத்துக்கு கடிதம் எழுதி வெச்சால் நல்லவனாயிடுவானா?


அதுசரி..இதுமாதிரியான பெண்கள் இருக்க (அட்லீஸ்ட் ௦0.00001%) நூறு சதவீதம் வாய்ப்பே இல்லை  என்கிறீர்களா?.. 
குற்றங்கள்  விதிவிலக்கானவர்களிடமிருந்தே அதிகம்  நிகழ்த்த  படுகிறது..

அந்த பெண் நடத்தை கெட்டவரா இல்லையா என்பது என்னை பொறுத்தவரை பிரச்சனை இல்லை.

11 பேருடன் படுத்தவர்களை எல்லாம் வெட்டுவது என பெண்கள் கிளம்பினால் எத்தனை ஆண்கள் மிஞ்சுவார்கள்?குறிப்பாக தலைவர்கள்,நடிகர்கள்??எனக்கு கணக்கு தெரியலை.

இன்றூ வந்த செய்தியில் பிரபுதேவா என்ற மகானுபாவனுக்கும்,நயந்தாராவுக்கும் நடக்காத கல்யாணம் நின்றுவிட்டது என செய்தி வந்திருக்கு.அவர் மனைவிக்கு கையில் ஒரு ஆயிரம் குயர் பேப்பரை கொடுங்கள்.முழுக்க எழுதி நிரப்புவார்.....கமலகாசன் என்ற இன்னொரு புண்ணீயவான்..அவரது முதல் மனைவி வாணி முந்தி குமுதத்துக்கு கொடுத்த பேட்டியில் "ஆயிரம் பெண்களுடன் நிர்வாணமாக என் கணவர் நடித்தாலும் அவர் மேல் சந்தேகபடமாட்டேன்" என பூரிச்சு சொல்லி இருந்ததை நான் படிச்சு இருக்கேன்.அவரிடம் ஒரு இரண்டாயிரம் குயர் பேப்பரை கொடுங்கள்..அவரும் ஒரு கண்ணீர் காவியத்தை படைப்பார்.

இவர்களை எல்லாம் நாம் என்ன செய்துவிட்டோம்?தலைவர்களாக ஏற்றுகொள்ளவுஇல்லையா?ரசிகர் மன்றம் வைக்கலையா?அந்த பெண் நடத்தை கெட்டவர் என வாய் கூசாமல் சொல்லும் நாம் இவர்களை எல்லாம் அப்படி ஒரு நாளும் சொல்லியிருப்போமா?

பொதுவுல சொல்லாதீங்க செல்வன் ஜீ

ஆண்கள் செய்வதை நீயும் செய்யுன்னு பெண்களுக்கு சொல்லவாரீங்களா  ..
தப்பான வழியை திருத்தத்தான் வழி காட்டணும் 

இதென்ன உரிமைப் போராட்டமா .. நீயும் போகிறாய்.. நானும் போவேன்னு !



--
செல்வன்

"ஒட்டுமொத்தத்தில் கம்யூனிசம் என்பதை பின்வருமாறு விளக்கலாம்."நீ சம்பாதிக்கும் காசு முழுவதையும் ஸ்டாலினிடம் கொடுத்துவிடு.அதை எப்படி செலவு செய்வதுன்னு உன்னைவிட அவருக்கு நல்லா தெரியும்.நீ சம்பாதி.அவர் செலவு செய்வார்.உனக்கு மூணுவேளை சோறு போட்டு, துணிமணி கொடுப்பார்.." இதான் கம்யூனிசம்" ~ செல்வன்


--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
        
       துரை.ந.உ .............. .................            
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blodspot.com
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

செல்வன்

unread,
Oct 16, 2011, 11:44:04 AM10/16/11
to panb...@googlegroups.com


2011/10/16 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

பொதுவுல சொல்லாதீங்க செல்வன் ஜீ

ஆண்கள் செய்வதை நீயும் செய்யுன்னு பெண்களுக்கு சொல்லவாரீங்களா  ..
தப்பான வழியை திருத்தத்தான் வழி காட்டணும் 

இதென்ன உரிமைப் போராட்டமா .. நீயும் போகிறாய்.. நானும் போவேன்னு !


துரை ஐயா,

நாப்பது பொண்டாட்டி, வைப்பாட்டி வைத்துகொண்டவர்களை நாம் மன்னர்,மந்திரி,தளபதி என எல்லா பதவியிலும் வைத்து அழகுபார்த்துவிட்டோம்.

அதே சமயம் அது சரி என நாம் ஏற்றுகொள்ளவில்லை."அது தவறு" என ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுவிட்டு அவர்கள் கட்சிக்கு ஓட்டு போடுகிறோம்.அவர்களை தலைவர்களாக ஏற்றுகொண்டு சிலை வைத்து உள்ளோம். அதேபோல் இதையும் பார்ப்பதுதான் முறை.வெட்டுவதும், கொல்வதும் முறையல்ல.

--
செல்வன்

நேற்றென் அரங்கிலே நிழல்களில் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்களம்

Jayaprakash N

unread,
Oct 16, 2011, 2:40:24 PM10/16/11
to panb...@googlegroups.com
செல்வன் ஜி,
இங்கே யாரும் வெட்டுவதும், கொல்வதும் முறை என்று சொல்ல வில்லை. நீங்கள் சொல்லும், பிரபுதேவாவாலும், கமலாலும் யாருக்கும் எந்த கெடுதலும் நிகழ வில்லை.. தவிர பிரபுதேவா ஒரு பெருந்தொகையை விட்டு கொடுத்து (மனைவியின் சம்மதத்துடன்) விவாகரத்து வாங்கினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி... கமல் கதை வேறு.. "நான் ஒரு நடிகன்..நீ கொடுக்கும் ஐம்பது ரூபாய்க்கு என் படம் தரம்   இல்லை என்றால்.. நார் நாராக கிழித்து தோரணம் கட்டி தொங்க விடு..பணம் கொடுத்த வகையில் உனக்கு அந்த உரிமை இருக்கிறது..ஆனால் என் பாத்ரூமை எட்டி பார்த்துவிட்டு 'அயயையோ அசிங்கம்' என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல..ஏனெனில் எல்லார் பாத்ரூமுமே அசிங்கம் தான்" என பகிரங்கமாக் ஒத்துகொண்டவர்..அவர் ரசிகர்கள் அவரை கொண்டாடுவது நிறைய்ய பொண்டாட்டி வைத்திருந்தார் என்பதற்க்காக அல்ல..அவரது கலைக்காகவே..
நாப்பது, ஐம்பது பொண்டாட்டி வைத்திருந்தவர்கள் யாரும் குடும்பத்துக்குள்   பிரச்சினை வந்து கத்தி தூக்க வில்லை.
இங்கே ஒரு கொலையும் தற்கொலையும் நிகழ்ந்திருக்கின்றன..

செக் பண்ணினால் என்ன பேசினார் என்பதெல்லாமா தெரியும்?எ.கொடுமை சார் இது?
நீங்கள் சொல்வது போல் என்ன பேசினார் என கண்டுபிடிக்க முடியாதுதான்.. ஆனால் ஒரு திருமணமான பெண்,  அலுவல்  நேரம் தாண்டி, அனாவசிய அரட்டை, யார் யாருடன் கொண்டிருந்தாள் என்பதையாவது கண்டுபிடிக்க முடியும் அல்லவா?

எனக்கு தெரிந்து எந்த குடும்பத்திலும், எந்த கணவனும் , மனைவியும் அலுவல் தாண்டி வெட்டி அரட்டை அடிப்பதை விரும்ப மாட்டார்கள் என உறுதியாக நம்புகிறேன்..(அவர்கள் இருவருக்கும் தெரிந்த போது நண்பர்களாக இருந்தால் தவிர ).


With Lots OF Love,
JP



2011/10/16 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Oct 16, 2011, 2:49:25 PM10/16/11
to panb...@googlegroups.com


2011/10/16 Jayaprakash N <naa...@gmail.com>

நீங்கள் சொல்லும், பிரபுதேவாவாலும், கமலாலும் யாருக்கும் எந்த கெடுதலும் நிகழ வில்லை..

இந்த பெண்ணால் மட்டும் என்ன கொடுமை நிகழ்ந்தது?


தவிர பிரபுதேவா ஒரு பெருந்தொகையை விட்டு கொடுத்து (மனைவியின் சம்மதத்துடன்) விவாகரத்து வாங்கினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி.

அதேபோல் இவர் கணவனும் இவரை ஒரு பைசா கூட கொடுக்காமலாவது விவாகரத்து செய்திருக்கலாம் அல்லவா?


கமல் கதை வேறு.. "நான் ஒரு நடிகன்..நீ கொடுக்கும் ஐம்பது ரூபாய்க்கு என் படம் தரம்   இல்லை என்றால்.. நார் நாராக கிழித்து தோரணம் கட்டி தொங்க விடு..பணம் கொடுத்த வகையில் உனக்கு அந்த உரிமை இருக்கிறது..ஆனால் என் பாத்ரூமை எட்டி பார்த்துவிட்டு 'அயயையோ அசிங்கம்' என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல..ஏனெனில் எல்லார் பாத்ரூமுமே அசிங்கம் தான்" என பகிரங்கமாக் ஒத்துகொண்டவர்..அவர் ரசிகர்கள் அவரை கொண்டாடுவது நிறைய்ய பொண்டாட்டி வைத்திருந்தார் என்பதற்க்காக அல்ல..அவரது கலைக்காகவே..

அப்படி வாங்க வழிக்கு.

ஆக ஒரு ரியல் லைஃப் காதல் இளவரசனை அவன் கலைக்காக கொண்டாடுவீர்கள்.அவன் தனிப்பட்ட லைஃபை பற்றி பேச மாட்டீர்கள்.அதே நியாயத்தை அப்புறம் இந்த பெண்ணுக்கும் கொடுங்க சார்.இவள் தனிப்பட்ட லைஃபை பற்றி மட்டும் ஏன் இப்படி கிளறுகிறீர்கள்?அவள் பத்தினி,பரத்தை என சர்ட்டிபிகேட் கொடுக்கிறீர்கள்?ஆண் பலருடன் படுத்தால் அவன் பெயர் காதல் மன்னன்.ஒரு பெண் அதை செய்தால் அவள் பெயர் பரத்தை.


நீங்கள் சொல்வது போல் என்ன பேசினார் என கண்டுபிடிக்க முடியாதுதான்.. ஆனால் ஒரு திருமணமான பெண்,  அலுவல்  நேரம் தாண்டி, அனாவசிய அரட்டை, யார் யாருடன் கொண்டிருந்தாள் என்பதையாவது கண்டுபிடிக்க முடியும் அல்லவா?

செல்போனில் பேசுவது/வழிவது குற்றம் என்றால் ஆண்களில் பலர் மிஞ்ச மாட்டார்கள்...ஆண்களில் பலர் வழிசல் பேர்வழிகள்.

ஒரு பெண்ணை பார்த்தாவது இவள் மோசம்,நடத்தை கெட்டவள் என சொல்லும் தகுதி ஆண்வர்க்கத்துக்கு இல்லை.அந்த அளவுக்கு நம்மில் தவறிழைத்த நபர்கள் உண்டு.கற்பு,மானம் என்பதை எல்லாம் காற்றில் பறக்கவிட்ட பல ஆண்களை "அதெல்லாம் அவர்கள் தனிப்பட்ட மேட்டர்" என சொல்லி கண்டுக்காமல் விட்டுவிட்டு ஏதோ ஒரு பெண் அதையே செய்தால் அவளை குறைகூறும் தகுதி நமக்கு இல்லை.

கற்பு என்பதை முடிந்தால் பொதுவில் வையுங்கள்.வழிதவறும் ஆண்களை கண்டித்து திருத்துங்கள்.முடியாது என்ரால் யாரையும் குறை சொல்லாதீர்கள்.



--
செல்வன்

Asif Meeran AJ

unread,
Oct 16, 2011, 3:53:08 PM10/16/11
to panb...@googlegroups.com
ஹிஹி
செல்வகன் கிட்டயா சொல்றீங்க?

அவரு அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாரு :-)

செல்வன்

unread,
Oct 16, 2011, 4:06:08 PM10/16/11
to panb...@googlegroups.com


2011/10/16 Asif Meeran AJ <asifm...@gmail.com>

ஹிஹி
செல்வகன் கிட்டயா சொல்றீங்க?

அவரு அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாரு :-)


நான் அரட்டை அடிக்க காரனமே இங்கே நீங்கள் ஆரம்பிச்ச குழுமம்தான்:-)

இங்கே நைட்டு ஒரு மணிக்கு,ரெண்டு மணிக்கு எல்லாம் தினமும் மொக்கை போட்டிருக்கேன் என்ற அடிப்படையில் அரட்டை பற்றி பேசும் தகுதி எனக்கு கண்டிப்பா இல்லை:-))

--
செல்வன்

வில்லன்

unread,
Oct 16, 2011, 5:50:53 PM10/16/11
to panb...@googlegroups.com

உங்க கூற்றை மறுக்க முடியாத பாவியாகிட்டேனே நான்

2011/10/17 செல்வன் <hol...@gmail.com>


ஆண்களில் பலர் வழிசல் பேர்வழிகள்.

செல்வன்

unread,
Oct 16, 2011, 6:05:16 PM10/16/11
to panb...@googlegroups.com
2011/10/16 வில்லன் <vom...@gmail.com>
உங்க கூற்றை மறுக்க முடியாத பாவியாகிட்டேனே நான்

:-))

மனித இயல்பு பாவம் அல்ல.

கதை,கட்டுரை,இலக்கியம்,பொதுவாழ்க்கையில் ஆண்களின் காமம்,வழிசல் எல்லாம் ஆறாக பெருகி ஓடி நாட்டையே நிரப்பியிருக்கிறது. பெண்களின் மார்பை மட்டும் பார்த்து பேசும் ஆண்கள் பலர்.பலர் ஒழுக்கமாக இருக்க காரணம் இவர்களுடன் படுக்க எந்த பெண்ணும் தயாராக இல்லாததே ஒழிய சொந்த கட்டுபாட்டால் அல்ல.

இப்பேர்ப்பட்ட இனத்துக்கு பெண்களை ரெகுலேட் செய்யவோ,விதிகளை விதிக்கவோ எந்த அருகதையும் இல்லை.

சென்ஷி .

unread,
Oct 16, 2011, 11:38:25 PM10/16/11
to panb...@googlegroups.com
செல்வன் ஜி சூப்பர்! :))

2011/10/17 செல்வன் <hol...@gmail.com>
கதை,கட்டுரை,இலக்கியம்,பொதுவாழ்க்கையில் ஆண்களின் காமம்,வழிசல் எல்லாம் ஆறாக பெருகி ஓடி நாட்டையே நிரப்பியிருக்கிறது. பெண்களின் மார்பை மட்டும் பார்த்து பேசும் ஆண்கள் பலர்.பலர் ஒழுக்கமாக இருக்க காரணம் இவர்களுடன் படுக்க எந்த பெண்ணும் தயாராக இல்லாததே ஒழிய சொந்த கட்டுபாட்டால் அல்ல.

துரை.ந.உ

unread,
Oct 16, 2011, 11:52:56 PM10/16/11
to panb...@googlegroups.com
2011/10/17 செல்வன் <hol...@gmail.com>
2011/10/16 Jayaprakash N <naa...@gmail.com>
நீங்கள் சொல்லும், பிரபுதேவாவாலும், கமலாலும் யாருக்கும் எந்த கெடுதலும் நிகழ வில்லை..

இந்த பெண்ணால் மட்டும் என்ன கொடுமை நிகழ்ந்தது?

என்ன செல்வன் ஜீ ...இப்படி கேட்டுட்டீங்க ....
ஒரு உண்மையான பொசசிவ்நஸ் உள்ள கணவனுக்கு மனைவி இன்னொருவனுடன் தொடர்பு இருப்பதையே ஒத்துக்கொள்ள முடியாது .... இங்கே 1,2,3,4,5,6,7,8,9,10 அப்புறமா குழு செயல்பாடுகள் என வகைவகையா நடந்திருக்குது .. 1 தெரியும்போதே எல்லாத்தையும் முடிச்சிருக்கணும் ... இவன் உக்காந்து கணக்கு போட்டுக் கொண்டு இருந்ததைப் பாக்கும்போது இவனது ஆண்மையின் மேலேயா சந்தேகம் வருகிறது ....இயலாமையையே காட்டுகிறது ....

ஆனால் இப்படி இருப்பதுதான் பெண்மையின் சுதந்திரம் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்றால்...so sad :(((
 
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

சென்ஷி .

unread,
Oct 16, 2011, 11:58:25 PM10/16/11
to panb...@googlegroups.com
துரை அய்யா,

பொசசிவ்நெஸ் இல்லாத புருசனா இருந்தாலும் தம் பொண்டாட்டி இன்னொருத்தன் கூட இருக்கறதை விரும்ப மாட்டான் :))

துரை.ந.உ

unread,
Oct 17, 2011, 12:01:35 AM10/17/11
to panb...@googlegroups.com


2011/10/17 Asif Meeran AJ <asifm...@gmail.com>

ஹிஹி
செல்வகன் கிட்டயா சொல்றீங்க?

அவரு அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாரு :-)


vv n s kaamedi keemedi.gif :)))


எனக்கு தெரிந்து எந்த குடும்பத்திலும், எந்த கணவனும் , மனைவியும் அலுவல் தாண்டி வெட்டி அரட்டை அடிப்பதை விரும்ப மாட்டார்கள் என உறுதியாக நம்புகிறேன்..(அவர்கள் இருவருக்கும் தெரிந்த போது நண்பர்களாக இருந்தால் தவிர ).

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
vv n s kaamedi keemedi.gif

துரை.ந.உ

unread,
Oct 17, 2011, 12:03:43 AM10/17/11
to panb...@googlegroups.com


2011/10/17 சென்ஷி . <me.s...@gmail.com>

துரை அய்யா,

பொசசிவ்நெஸ் இல்லாத புருசனா இருந்தாலும் தம் பொண்டாட்டி இன்னொருத்தன் கூட இருக்கறதை விரும்ப மாட்டான் :))

//////////செல்வன் ஜி சூப்பர்! :))////////////////////

 நீங்க ரெண்டுபக்கமும் கோல் போடுறீங்க மைலார்ட் :))

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

செல்வன்

unread,
Oct 17, 2011, 12:10:57 AM10/17/11
to panb...@googlegroups.com
2011/10/16 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
என்ன செல்வன் ஜீ ...இப்படி கேட்டுட்டீங்க ....
ஒரு உண்மையான பொசசிவ்நஸ் உள்ள கணவனுக்கு மனைவி இன்னொருவனுடன் தொடர்பு இருப்பதையே ஒத்துக்கொள்ள முடியாது .... இங்கே 1,2,3,4,5,6,7,8,9,10 அப்புறமா குழு செயல்பாடுகள் என வகைவகையா நடந்திருக்குது .. 1 தெரியும்போதே எல்லாத்தையும் முடிச்சிருக்கணும் ... இவன் உக்காந்து கணக்கு போட்டுக் கொண்டு இருந்ததைப் பாக்கும்போது இவனது ஆண்மையின் மேலேயா சந்தேகம் வருகிறது ....இயலாமையையே காட்டுகிறது ....


துரை ஐயா,

வாணி கமலுக்கும், ரமலத்துக்கும்,கண்ணதாசனின் மனைவியருக்கும் பொசசிவ்னஸ் இல்லை என்கிறீர்களா?

படிதாண்டிய கணவனை போட்டுதள்ளுவது என இந்திய பெண்கள் முடிவெடுத்தால் நம் ஜனத்தொகை மிகவும் குறைந்துவிடும்.அது தான் இனி விதி என்றால் சொல்லுங்கள்.,ரெண்டு பெண்டாட்டி கட்டிய நடிகர்கள்,அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள் எல்லோரையும் கண்டிப்போம்.அவர்கள் படங்கள்,கட்சிகளை புறக்கணிப்போம்.அவர்கள் கடைகளைல் பொருள்கள் வாங்குவதை தவிர்ப்போம்.இத்தனையையும் செய்துவிட்டு இத்தவறை இழைக்கும் பெண்களை குறை சொல்வோம்.தவறை செய்வது கமல் என்றால் "அது பர்சனல் விஷயம்" என ஜல்லி அடிக்கபட்டது.இதையே பெண் செய்தால் வெட்டுவோம்,குத்துவோம் என்கிறார்கள்....இது எனக்கு சமநீதியாக படவில்லை.

கள்ளதொடர்பு என்னை பொறுத்தவரை மிகபெரிய தவறு.ஆனால் அதற்கான உச்சகட்ட தண்டனை விவாகரத்து மட்டுமே.

செல்வன்

unread,
Oct 17, 2011, 12:11:41 AM10/17/11
to panb...@googlegroups.com


2011/10/16 சென்ஷி . <me.s...@gmail.com>

செல்வன் ஜி சூப்பர்! :))


நன்றி சென்ஷி:-)

துரை.ந.உ

unread,
Oct 17, 2011, 1:10:32 AM10/17/11
to panb...@googlegroups.com


துரை ஐயா,

வாணி கமலுக்கும், ரமலத்துக்கும்,கண்ணதாசனின் மனைவியருக்கும் பொசசிவ்னஸ் இல்லை என்கிறீர்களா?

படிதாண்டிய கணவனை போட்டுதள்ளுவது என இந்திய பெண்கள் முடிவெடுத்தால் நம் ஜனத்தொகை மிகவும் குறைந்துவிடும்.

நாம இந்த கேசைத் தாண்டிப் போக வேண்டாமே .... இதிலுள்ள நியாயம் , அநியாயம் பேசுவோம் ..அப்புறமா பொது :))
 

கள்ளதொடர்பு என்னை பொறுத்தவரை மிகபெரிய தவறு.ஆனால் அதற்கான உச்சகட்ட தண்டனை விவாகரத்து மட்டுமே.

உணர்ச்சிவசப்படாமல் எல்லாரும் எப்போதும் கேஸ்கட்டை / லாபுக்கை கையில் வைத்துக் கொண்டே இருக்க முடியுமா ஜீ 

கொன்னுபோட்டு அவன் ஜாலியா இருந்தாத்தான் தப்பு .... அவனும் போய்ட்டான் ..... உண்மையிலேயே பாதிப்பில்லாமல் இது நிகழாது 

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

செல்வன்

unread,
Oct 17, 2011, 1:19:55 AM10/17/11
to panb...@googlegroups.com


2011/10/17 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

நாம இந்த கேசைத் தாண்டிப் போக வேண்டாமே .... இதிலுள்ள நியாயம் , அநியாயம் பேசுவோம் ..அப்புறமா பொது :))


இதை மட்டுமே பார்த்தாலும் நியாயம்/அநியாயம் என்ன துரை ஐயா? ஹானர் கில்லிங்கை நியாயம் என நாம் என்று ஏற்றுகொள்ள துவங்கினோம்?இது பெண்களுக்கு எதிரான மிகபெரும் வன்முறை அல்லவா?



உணர்ச்சிவசப்படாமல் எல்லாரும் எப்போதும் கேஸ்கட்டை / லாபுக்கை கையில் வைத்துக் கொண்டே இருக்க முடியுமா ஜீ 

கொன்னுபோட்டு அவன் ஜாலியா இருந்தாத்தான் தப்பு .... அவனும் போய்ட்டான் ..... உண்மையிலேயே பாதிப்பில்லாமல் இது நிகழாது


கொலை செய்வது,அதுவும் திட்டமிட்டு கொல்வது தவறு என தெரிய லாபுக்கை கையில் வைத்துகொண்Bடு இருக்கவேண்டும் என்பது இல்லை துரை ஐயா.

பாதிப்பு யாரால் யாருக்கு இல்லை?அதுக்கேல்லாம் கத்தியை எடுத்தால் அதை நாம் எப்படி நியாயம் என கூறமுடியும்?அவனுக்கு பரிந்து பேச முடியும்?

துரை.ந.உ

unread,
Oct 17, 2011, 1:32:48 AM10/17/11
to panb...@googlegroups.com
2011/10/17 செல்வன் <hol...@gmail.com>
2011/10/17 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

நாம இந்த கேசைத் தாண்டிப் போக வேண்டாமே .... இதிலுள்ள நியாயம் , அநியாயம் பேசுவோம் ..அப்புறமா பொது :))


இதை மட்டுமே பார்த்தாலும் நியாயம்/அநியாயம் என்ன துரை ஐயா? ஹானர் கில்லிங்கை நியாயம் என நாம் என்று ஏற்றுகொள்ள துவங்கினோம்?இது பெண்களுக்கு எதிரான மிகபெரும் வன்முறை அல்லவா?

திரும்பவும் பொதுவாச் சொல்றீங்க ஜீ ...
இங்கே சந்தேகத்தின் பேரில் இது நடக்கவில்லை ...சாட்சிகள் உறுதியான அடிப்படையில் நிகழ்ந்திருக்கிறது .... 
தவறுதான் ..ஆனால் இது வன்முறையல்ல ........

அவள் நடந்துகொண்டுதான் ஒரு ஆணின் மீதான வன்முறை.... அதன் எதிர்வினைதான் இந்த ‘கொலை’
 



உணர்ச்சிவசப்படாமல் எல்லாரும் எப்போதும் கேஸ்கட்டை / லாபுக்கை கையில் வைத்துக் கொண்டே இருக்க முடியுமா ஜீ 

கொன்னுபோட்டு அவன் ஜாலியா இருந்தாத்தான் தப்பு .... அவனும் போய்ட்டான் ..... உண்மையிலேயே பாதிப்பில்லாமல் இது நிகழாது


கொலை செய்வது,அதுவும் திட்டமிட்டு கொல்வது தவறு என தெரிய லாபுக்கை கையில் வைத்துகொண்Bடு இருக்கவேண்டும் என்பது இல்லை துரை ஐயா.

பாதிப்பு யாரால் யாருக்கு இல்லை?அதுக்கேல்லாம் கத்தியை எடுத்தால் அதை நாம் எப்படி நியாயம் என கூறமுடியும்?அவனுக்கு பரிந்து பேச முடியும்?

திட்டமிட்டு பலனுக்காக நடத்தப்படும் கொலைக்கும் , சூழ்நிலைக் கைதியாகி நிகழும் கொலைக்கும் மிகப் பெரிய வித்தியாசமுண்டு ஜீ 
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Jayaprakash N

unread,
Oct 17, 2011, 1:42:19 AM10/17/11
to panb...@googlegroups.com
வெட்டுவோம் குத்துவோம் என யார் சொன்னது..?
இந்த சம்பவத்தில் உள்ள நியாய அநியாயங்களை விவாதிக்கும்போது என் பொத்தாம்பொதுவாக 'ஆண்கள் சபல பேர்வழிகள்' என பழி சுமத்துகிறீர்கள்? இந்த கேசில் சம்பத்தப்பட்ட ஆண் சபல பேர்வழியா?
நான்கைந்து கல்யாணம் செய்த நடிகர்களை விமர்சிக்கும் நீங்கள், பல திருமணங்கள்  செய்து கொண்ட நடிகைகளைகூட நாம் கொண்டாடுவதை ஏன் மறந்துவிட்டீர்கள்..? உதாரணம் தரவா?

நான் ஏற்கனபே சொன்னது போல், இது போன்ற சம்பவங்கள் விதிவிலக்குகள்..உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சுய சிந்தனை இல்லாமல் நடந்த குற்றம்.. இந்த சம்பவத்துக்கு அவனை வழி நடத்தியது யார்,,அல்லது எது..? இதுபோன்ற எத்தனையோ சம்பவங்கள் தினம் தினம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன..ஆனால் இந்த சம்பவம் எல்லோருடைய கவனத்தை கவர்ந்ததற்கு காரணம்..
1.மீடியா. 
2.இந்த பெண்ணின் அழகு..(அவலட்சணமான பெண்ணுக்கு மீடியா இந்த அளவுக்கு வெளிச்சம் கொடுத்திருக்குமா என சந்தேகம்..இந்த செய்தி வந்த தினத்தன்று தினத்தந்தியில் ஒன்றரை பக்கத்துக்கு செய்தி வெளியானது..இந்த வார்த்தைக்காக யாரும் பொங்க வேண்டாம். நிதர்சன நிலையை எடுத்து சொல்கிறேன்..) 
3.சென்னையிலிருந்து வெளியூருக்கு கொண்டுபோய் கொலை செய்திருப்பது..இது போன்ற செய்திகளுக்கு கேமராவை தூக்கிக்கொண்டு வரிந்து கட்டி விமர்சித்து சுட சுட செய்தியாக்கி காசாக்கிய சம்பவங்கள்  நிறைய உண்டு..

இன்றைய செய்திகளில்  கிட்டத்தட்ட இதே போன்ற சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்திருக்கிறது..காதலன் தன் காதலி தன்னை விட்டு வேறொருவனுடன் தொடப்று வைத்திருந்தது பொறுக்காமல் கொலை செய்து விட்டு, தற்கொலைக்கு முயற்சித்து மாட்டிகொண்டான்..தற்போது மருத்துவமனியில்..இது எத்தனை செய்தி தாள்களில் வந்தது,,?



கள்ளதொடர்பு என்னை பொறுத்தவரை மிகபெரிய தவறு.ஆனால் அதற்கான உச்சகட்ட தண்டனை விவாகரத்து மட்டுமே.

-- 
செல்வன்

-- 

கள்ளதொடர்பு என்னை பொறுத்தவரை மிகபெரிய தவறு.ஆனால் அதற்கான உச்சகட்ட தண்டனை விவாகரத்து மட்டுமே.



2011/10/17 செல்வன் <hol...@gmail.com>
 சொல்வோம்.தவறை செய்வது கமல் என்றால் "அது பர்சனல் விஷயம்" என ஜல்லி அடிக்கபட்டது.இதையே பெண் செய்தால் வெட்டுவோம்,குத்துவோம் என்கிறார்கள்....இது எனக்கு சமநீதியாக படவில்லை.

செல்வன்

unread,
Oct 17, 2011, 1:47:54 AM10/17/11
to panb...@googlegroups.com
2011/10/17 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
திரும்பவும் பொதுவாச் சொல்றீங்க ஜீ ...
இங்கே சந்தேகத்தின் பேரில் இது நடக்கவில்லை ...சாட்சிகள் உறுதியான அடிப்படையில் நிகழ்ந்திருக்கிறது .... 
தவறுதான் ..ஆனால் இது வன்முறையல்ல ........


ஐயா..கொலை வன்முறையில்லை என்றால் அப்புறம் எதுதான் வன்முரை?:-)


அவள் நடந்துகொண்டுதான் ஒரு ஆணின் மீதான வன்முறை.... அதன் எதிர்வினைதான் இந்த ‘கொலை’

அதனால் தான் நானும் முன்பு கேட்டேன்..இப்படி வழிதவறும் ஆண்களை பெண்கள் கொல்ல ஆரம்பித்தால் ஆண்கள் எண்ணிக்கை என்ன ஆகும் என?


திட்டமிட்டு பலனுக்காக நடத்தப்படும் கொலைக்கும் , சூழ்நிலைக் கைதியாகி நிகழும் கொலைக்கும் மிகப் பெரிய வித்தியாசமுண்டு ஜீ

கொலை செய்துவிட்டு சூழ்நிலைகைதி என சொல்லி எஸ்கேப் ஆகமுடியாது.

சென்ஷி .

unread,
Oct 17, 2011, 1:49:06 AM10/17/11
to panb...@googlegroups.com
நாமெல்லாம் ஆணாதிக்க சண்முகத்தில் ச்சீ சமூகத்தில் வாழ்வதையும் மனதில் கொள்ளுதல் நலம்..

துரை.ந.உ

unread,
Oct 17, 2011, 1:53:32 AM10/17/11
to panb...@googlegroups.com
2011/10/17 செல்வன் <hol...@gmail.com>
2011/10/17 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
திரும்பவும் பொதுவாச் சொல்றீங்க ஜீ ...
இங்கே சந்தேகத்தின் பேரில் இது நடக்கவில்லை ...சாட்சிகள் உறுதியான அடிப்படையில் நிகழ்ந்திருக்கிறது .... 
தவறுதான் ..ஆனால் இது வன்முறையல்ல ........


ஐயா..கொலை வன்முறையில்லை என்றால் அப்புறம் எதுதான் வன்முரை?:-)

இடம் பொருள் பார்க்காமல் வார்த்தைக்கு மட்டும் அர்த்தம் பார்க்கிரீங்க மைலார்ட்:))  


அவள் நடந்துகொண்டுதான் ஒரு ஆணின் மீதான வன்முறை.... அதன் எதிர்வினைதான் இந்த ‘கொலை’

அதனால் தான் நானும் முன்பு கேட்டேன்..இப்படி வழிதவறும் ஆண்களை பெண்கள் கொல்ல ஆரம்பித்தால் ஆண்கள் எண்ணிக்கை என்ன ஆகும் என?

மினிமம் 2 பேர் உயிரோட இருக்க மாட்டோமா ?

 


திட்டமிட்டு பலனுக்காக நடத்தப்படும் கொலைக்கும் , சூழ்நிலைக் கைதியாகி நிகழும் கொலைக்கும் மிகப் பெரிய வித்தியாசமுண்டு ஜீ

கொலை செய்துவிட்டு சூழ்நிலைகைதி என சொல்லி எஸ்கேப் ஆகமுடியாது.


எஸ்க்கேப் ??????????????????????????????????????

அவன் தற்கொலை செய்திருக்கிறான் ...... இதை நீங்கள் கணக்கிலேயே கொள்ளவில்லை 
 
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

செல்வன்

unread,
Oct 17, 2011, 1:53:40 AM10/17/11
to panb...@googlegroups.com


2011/10/17 Jayaprakash N <naa...@gmail.com>

இந்த சம்பவத்தில் உள்ள நியாய அநியாயங்களை விவாதிக்கும்போது என் பொத்தாம்பொதுவாக 'ஆண்கள் சபல பேர்வழிகள்' என பழி சுமத்துகிறீர்கள்?


பெரும்பாலான ஆண்கள் சபலபேர்வழிகள் என்பதால்



நான்கைந்து கல்யாணம் செய்த நடிகர்களை விமர்சிக்கும் நீங்கள், பல திருமணங்கள்  செய்து கொண்ட நடிகைகளைகூட நாம் கொண்டாடுவதை ஏன் மறந்துவிட்டீர்கள்..? உதாரணம் தரவா?

அவர்களில் பலர் கள்ளதொடர்பு வைத்துகொண்டதால் விவாகரத்து பெற்றவர்கள் இல்லை.கணவனுடன் ஒத்துவராமல் பிரிந்தவர்கள்.சிலரை அவர்கள் கணவர்களே பிரிந்துவிட்டார்கள்.மனைவியை பிரிந்த அந்த கணவர்களும் வேறு மனைவிகளுடன் மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்கள்.

விவாகரத்து,கள்ளதொடர்பு போன்றவை பெண்களை பாதிக்கும் அளவு ஆண்களை பாதிப்பதில்லை. பிரபுதேவாவுக்கு இந்த வயதில் நயந்தாரா கிடைக்கிறார்.ரமலத்துக்கு யார் கிடைப்பார்கள்?நாற்பது வயதான மூன்று குழந்தைகளை பெற்று உடல் ஊதிய பெண்ணை காசை கொடுத்து வெட்டிவிடுவதும், லட்சுமி ரவியை விட்டுவிட்டு சிவச்சந்திரனை மணப்பதும் ஒன்றல்ல.

செல்வன்

unread,
Oct 17, 2011, 1:57:02 AM10/17/11
to panb...@googlegroups.com
2011/10/17 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
இடம் பொருள் பார்க்காமல் வார்த்தைக்கு மட்டும் அர்த்தம் பார்க்கிரீங்க மைலார்ட்:))  


எதிலும் பொருந்தலைங்க மைலார்ட்.கொலை  வன்முறை என்பது என் கருத்து.:-)



மினிமம் 2 பேர் உயிரோட இருக்க மாட்டோமா ?

அப்ப மற்றவர்கள் செத்தால் பரவாயில்லையா?:-)



எஸ்க்கேப் ??????????????????????????????????????

அவன் தற்கொலை செய்திருக்கிறான் ...... இதை நீங்கள் கணக்கிலேயே கொள்ளவில்லை


கோழைதனமாக தற்கொலை செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான்.

தற்கொலையை கோழைகள் தானே செய்வார்கள்?

துரை.ந.உ

unread,
Oct 17, 2011, 2:06:13 AM10/17/11
to panb...@googlegroups.com
2011/10/17 செல்வன் <hol...@gmail.com>
2011/10/17 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
இடம் பொருள் பார்க்காமல் வார்த்தைக்கு மட்டும் அர்த்தம் பார்க்கிரீங்க மைலார்ட்:))  


எதிலும் பொருந்தலைங்க மைலார்ட்.கொலை  வன்முறை என்பது என் கருத்து.:-)
ஒரே அளவுகோல்ன்னா 
அப்புறம் எதுக்கு  கோர்ட்டு , தீர்ப்பெல்லாம் 
ஊரில் நடக்கும் கொலைக்கெல்லாம் ஒரே தண்டனையா தாரீங்க ....
மாங்கு மாங்குன்னு கேஸ் நடத்தி  ஒருகேஸ்ல தூக்கு தாரீங்க , இன்னொன்னுல ஆயுள்ல போடுறீங்க ... இன்னொன்னுல வெளியே போகச் சொல்லுரீங்க ....

தவறுக்கான சூழல் அறியாமல் பொதுவில் எல்லா விடயங்களும் பேச முடியாது ஜீ
 



மினிமம் 2 பேர் உயிரோட இருக்க மாட்டோமா ?

அப்ப மற்றவர்கள் செத்தால் பரவாயில்லையா?:-)

 நான் செல்வனும் , துரையும் தப்பிச்சிருவாங்கனு சொல்றேன் ( ஒரு நம்பிக்கைலதான்னு வச்சுக்குவோம்)
நீங்க மத்தவங்களுக்காக கவலைப் படுறீங்க .....

ஆனா இங்கே கொஞ்சம் சருக்கி இருக்கீங்க :)
தப்பு செஞ்சா சாகப்போறாங்க ... அவங்களுக்காக நீங்க கவலைபடுர டோன் தெறியுது :)) 



எஸ்க்கேப் ??????????????????????????????????????

அவன் தற்கொலை செய்திருக்கிறான் ...... இதை நீங்கள் கணக்கிலேயே கொள்ளவில்லை


கோழைதனமாக தற்கொலை செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான்.

தற்கொலையை கோழைகள் தானே செய்வார்கள்?

இங்கேயும் ..:))

 
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

செல்வன்

unread,
Oct 17, 2011, 2:17:53 AM10/17/11
to panb...@googlegroups.com
2011/10/17 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
ஒரே அளவுகோல்ன்னா 
அப்புறம் எதுக்கு  கோர்ட்டு , தீர்ப்பெல்லாம் 
ஊரில் நடக்கும் கொலைக்கெல்லாம் ஒரே தண்டனையா தாரீங்க ....
மாங்கு மாங்குன்னு கேஸ் நடத்தி  ஒருகேஸ்ல தூக்கு தாரீங்க , இன்னொன்னுல ஆயுள்ல போடுறீங்க ... இன்னொன்னுல வெளியே போகச் சொல்லுரீங்க ....

தவறுக்கான சூழல் அறியாமல் பொதுவில் எல்லா விடயங்களும் பேச முடியாது ஜீ


இந்த கொலையை செஞ்சுட்டு அவன் போலிஸில் சரணடைந்திருந்தால் வழக்கு நடந்து ஆயுள் தண்டனை அல்லது தூக்கு கிடைத்திருக்கும் என்பது என் கருத்தே ஒழிய நடத்தை கெட்டவளை கொன்ற அப்பாவிகணவன் என சொல்லி விடுதலை எல்லாம் தரமாட்டார்கள் என்பது என் கணிப்பு ஐயா.காரணம் நடத்தை கெட்ட கணவர்களை எல்லாம் மனைவிகள் கொல்ல ஆரம்பித்தால் அப்புறம் பூமி தாங்காது என்பதால்:-)



 நான் செல்வனும் , துரையும் தப்பிச்சிருவாங்கனு சொல்றேன் ( ஒரு நம்பிக்கைலதான்னு வச்சுக்குவோம்)
நீங்க மத்தவங்களுக்காக கவலைப் படுறீங்க .....ஆனா இங்கே கொஞ்சம் சருக்கி இருக்கீங்க :)
தப்பு செஞ்சா சாகப்போறாங்க ... அவங்களுக்காக நீங்க கவலைபடுர டோன் தெறியுது :))

ஆம் ஐயா..கவலைதான் படுகிறேன். வழிதவறும் ஆண்களை நடத்தை கெட்டவர்கள், கொல்லபடவேண்டியவர்கள் என நான் கருதவில்லை.நான் முன்பே சொன்னதுபோல அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உச்சகட்ட தண்டனை விவாகரத்தே ஒழிய கொலை அல்ல.

Jayaprakash N

unread,
Oct 17, 2011, 2:22:08 AM10/17/11
to panb...@googlegroups.com


With Lots OF Love,
JP



2011/10/17 செல்வன் <hol...@gmail.com>
2011/10/17 Jayaprakash N <naa...@gmail.com>
இந்த சம்பவத்தில் உள்ள நியாய அநியாயங்களை விவாதிக்கும்போது என் பொத்தாம்பொதுவாக 'ஆண்கள் சபல பேர்வழிகள்' என பழி சுமத்துகிறீர்கள்?


பெரும்பாலான ஆண்கள் சபலபேர்வழிகள் என்பதால்

ஆண்கள் பெருந்தன்மையானவர்கள்.. ஆண் ஒரு சிறு தவறு செய்தாலும் ஊரைக்கூட்டி ஆர்பாட்டம் செய்வது போல், ஆண் காட்டி கொள்வதில்லை..(உங்களை போல நானும் பொதுவாகத்தான் சொல்கிறேன்). வனிதா விஜயகுமார், ஏன் ஆகாஷை கழற்றி விட்டார்.. ஆகாஷின் பொறுமை ஊருக்கே தெரியும்..இப்போ திரும்ப வந்து இரண்டாவது கணவனை விவாகரத்து செய்துவிட்டு திரும்பவும் ஆகாஷுடன் வாழ விரும்புவதாக சொல்லிகொண்டிருப்பது தெரியுமா? (உங்கள் கமல், பிரபு தேவா உதாரணங்களுக்காக  சொல்கிறேன்).

பார்த்திபன்-சீதா ..
நாம் திரும்ப திரும்ப பிரபலங்களை பற்றியே பேசி கொண்டிருக்கிறோம்..இது போன்ற விவாதங்கள் மூலநோக்கத்தை திசை திருப்புகின்றன.. 

விவாகரத்து,கள்ளதொடர்பு போன்றவை பெண்களை பாதிக்கும் அளவு ஆண்களை பாதிப்பதில்லை

எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்..ஆண்கள் உணவே இல்லாத ஜென்மங்களா? ஆண்கள்மீது ஏன் இந்த வன்மம்..?
ஆண்கள் பாவம் சார்.. :-)))))

திரும்பவும்  சொல்கிறேன்..கொலையையோ, தற்கொலையையோ இங்கு யாருமே ஆதரிக்க வில்லை..ஆதரிக்கவும் மாட்டார்கள்.. ஆனால் எந்த அடிப்படையில் நீங்கள் அந்த பெண்ணிற்கு சப்போர்ட் பண்ணுகிறீர்கள் என தெரியவில்லை..அந்த பெண்ணை சேர்ந்தவர்கள் மறுநாள் "அவள் அப்படி பட்டவள் இல்லை" என்று சொன்னதை வைத்தா? 
தவிர, அந்த பையனுக்கு சப்போர்ட் பண்ணுவதால் நான் ஆணாதிக்கவாதியாகி விடுவேனா.. எனில் நான் பெண்களுக்கு எதிரானவனா? இல்லை சார்..
இந்த வாதம் அவன் எழுதிய கடிதத்தில் உள்ள உணர்வுகளுக்கு ஆதரவானதே..அதோடு, அவன் உண்மையிலேயே குற்றவாளியாக இருந்தால், அவளின் பேஸ்புக், மொபைல் எங்களை செக் பண்ண சொல்ல மாட்டான்..
தவிர, அவன் அதே கடிதத்தில் தான் தந்தையிடமும், தாயிடமும், அகோதரியிடமும் மன்னிப்பு கேட்டிருகிரானே..படித்தீர்களா?

இவனை பொய் சைக்கோ என்கிறீர்கள்..

துரை.ந.உ

unread,
Oct 17, 2011, 2:24:20 AM10/17/11
to panb...@googlegroups.com
2011/10/17 செல்வன் <hol...@gmail.com>
2011/10/17 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
ஒரே அளவுகோல்ன்னா 
அப்புறம் எதுக்கு  கோர்ட்டு , தீர்ப்பெல்லாம் 
ஊரில் நடக்கும் கொலைக்கெல்லாம் ஒரே தண்டனையா தாரீங்க ....
மாங்கு மாங்குன்னு கேஸ் நடத்தி  ஒருகேஸ்ல தூக்கு தாரீங்க , இன்னொன்னுல ஆயுள்ல போடுறீங்க ... இன்னொன்னுல வெளியே போகச் சொல்லுரீங்க ....

தவறுக்கான சூழல் அறியாமல் பொதுவில் எல்லா விடயங்களும் பேச முடியாது ஜீ


இந்த கொலையை செஞ்சுட்டு அவன் போலிஸில் சரணடைந்திருந்தால் வழக்கு நடந்து ஆயுள் தண்டனை அல்லது தூக்கு கிடைத்திருக்கும் என்பது என் கருத்தே ஒழிய

இந்த அளவுக்கு உங்களைக் கறைத்ததே எனக்கு வெற்றிதான் :))

 
நடத்தை கெட்டவளை கொன்ற அப்பாவிகணவன் என சொல்லி விடுதலை எல்லாம் தரமாட்டார்கள் என்பது என் கணிப்பு ஐயா.காரணம் நடத்தை கெட்ட கணவர்களை எல்லாம் மனைவிகள் கொல்ல ஆரம்பித்தால் அப்புறம் பூமி தாங்காது என்பதால்:-)

என்ன இப்போ 
உங்களுக்கு அமெரிக்கா ....எனக்கு ஆசியா :))
நிலையான ஆட்சி கொடுப்போம் 

 



 நான் செல்வனும் , துரையும் தப்பிச்சிருவாங்கனு சொல்றேன் ( ஒரு நம்பிக்கைலதான்னு வச்சுக்குவோம்)
நீங்க மத்தவங்களுக்காக கவலைப் படுறீங்க .....ஆனா இங்கே கொஞ்சம் சருக்கி இருக்கீங்க :)
தப்பு செஞ்சா சாகப்போறாங்க ... அவங்களுக்காக நீங்க கவலைபடுர டோன் தெறியுது :))

ஆம் ஐயா..கவலைதான் படுகிறேன். வழிதவறும் ஆண்களை நடத்தை கெட்டவர்கள், கொல்லபடவேண்டியவர்கள் என நான் கருதவில்லை.நான் முன்பே சொன்னதுபோல அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உச்சகட்ட தண்டனை விவாகரத்தே ஒழிய கொலை அல்ல.


உங்க புரிதலில் இருந்து விலகியே இருக்கிறேன்
ஏற்கனவே தறிகெட்டு ஆடுபவர்களுக்கு விவாகரத்து எப்படி தண்டனையாக இருக்கும் ... இன்னும் கூடுதல் சுதந்திரம் அல்லவா தந்ததாகிவிடும் !!!!!!!!!!!1

எனக்கு புரியவில்லை போல :((( 

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Asif Meeran AJ

unread,
Oct 17, 2011, 2:31:55 AM10/17/11
to panb...@googlegroups.com
இவரு அதுக்கு சரிப்ப்டமாட்டாருன்னு நடுசாமத்துல பதில் எழுதியும் விடாம கேள்வி கேக்குற உங்கள் மனவலிமையைப் பாராட்டுகிறேன். சரவெடி செம்மல் செல்வன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாரு

சென்ஷி .

unread,
Oct 17, 2011, 2:35:17 AM10/17/11
to panb...@googlegroups.com
அண்ணாச்சி, மனவலிமையைப் பாராட்டி ஆலயமணி படத்துல கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி யூஸ் பண்ண சோப்பு டப்பா பிரைஸ் தரப்போறீங்களா??

குறைந்த பட்சம் எதிரணியில என்ன எழுதுறாங்கன்னு படிச்சிட்டு செல்வனைப் பத்தி கமெண்டுங்க. ஆணாதிக்கம் எதிர்ப்பதில் நான் எப்பொழுதும் செல்வன் ஜைடுதான்..

2011/10/17 Asif Meeran AJ <asifm...@gmail.com>
இவரு அதுக்கு சரிப்ப்டமாட்டாருன்னு நடுசாமத்துல பதில் எழுதியும் விடாம கேள்வி கேக்குற உங்கள் மனவலிமையைப் பாராட்டுகிறேன். சரவெடி செம்மல் செல்வன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாரு

Asif Meeran AJ

unread,
Oct 17, 2011, 2:35:39 AM10/17/11
to panb...@googlegroups.com
வாணி கமலுக்கும், ரமலத்துக்கும்,கண்ணதாசனின் மனைவியருக்கும் பொசசிவ்னஸ் இல்லை என்கிறீர்களா?

ரொம்ப சரியாச் சொன்னீங்க சசெசெ :-)

வயசான காலத்துல பரிசோதனை பண்றேன்னு தன்னை விட பல வயசு சின்ன பொண்ணுங்களோட நிர்வாணமா தன் கண்வன் படுத்திருந்து பரிசோதனை செய்வதறிந்த கஸ்தூரிபாய் காந்தி எவ்வளவு குதூகலமடைஞ்சிருப்பாங்க. அதப்பத்தி என்னைக்காவது பேசுறோமா? கஸ்தூரிபாயை மாஹாத்மியா கொண்டாடாம காந்தியைத்தானே மகாத்மாவா கொண்டாடுறோம். இது முழுக்க ஆணாதிக்க சண்முகம்தான்.

Asif Meeran AJ

unread,
Oct 17, 2011, 2:38:18 AM10/17/11
to panb...@googlegroups.com
அப்ப நீ ஏன் காந்தியை எதிர்க்கலை?

குறைந்த பட்சம் எதிரணியில என்ன எழுதுறாங்கன்னு படிச்சிட்டு செல்வனைப் பத்தி கமெண்டுங்க. ஆணாதிக்கம் எதிர்ப்பதில் நான் எப்பொழுதும் செல்வன் ஜைடுதான்..

ஆணாதிக்கம்ன்ன்னா என்னன்னு மொதல்ல சொல்லுய்யா

துரை.ந.உ

unread,
Oct 17, 2011, 2:39:45 AM10/17/11
to panb...@googlegroups.com
2011/10/17 Asif Meeran AJ <asifm...@gmail.com>
வாணி கமலுக்கும், ரமலத்துக்கும்,கண்ணதாசனின் மனைவியருக்கும் பொசசிவ்னஸ் இல்லை என்கிறீர்களா?

ரொம்ப சரியாச் சொன்னீங்க சசெசெ :-)

வயசான காலத்துல பரிசோதனை பண்றேன்னு தன்னை விட பல வயசு சின்ன பொண்ணுங்களோட நிர்வாணமா தன் கண்வன் படுத்திருந்து பரிசோதனை செய்வதறிந்த கஸ்தூரிபாய் காந்தி எவ்வளவு குதூகலமடைஞ்சிருப்பாங்க. அதப்பத்தி என்னைக்காவது பேசுறோமா? கஸ்தூரிபாயை மாஹாத்மியா கொண்டாடாம காந்தியைத்தானே மகாத்மாவா கொண்டாடுறோம். இது முழுக்க ஆணாதிக்க சண்முகம்தான்.

--

யாரு இவரு 

 
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

சென்ஷி .

unread,
Oct 17, 2011, 2:40:01 AM10/17/11
to panb...@googlegroups.com
நீங்க பேசுறது  பூராவுமே ஆணாதிக்கம்தான்

ஆணாதிக்கம்ன்ன்னா என்னன்னு மொதல்ல சொல்லுய்யா

--

செல்வன்

unread,
Oct 17, 2011, 2:49:06 AM10/17/11
to panb...@googlegroups.com


2011/10/17 Jayaprakash N <naa...@gmail.com>


ஆண்கள் பெருந்தன்மையானவர்கள்.. ஆண் ஒரு சிறு தவறு செய்தாலும் ஊரைக்கூட்டி ஆர்பாட்டம் செய்வது போல், ஆண் காட்டி கொள்வதில்லை..(உங்களை போல நானும் பொதுவாகத்தான் சொல்கிறேன்). வனிதா விஜயகுமார், ஏன் ஆகாஷை கழற்றி விட்டார்.. ஆகாஷின் பொறுமை ஊருக்கே தெரியும்..இப்போ திரும்ப வந்து இரண்டாவது கணவனை விவாகரத்து செய்துவிட்டு திரும்பவும் ஆகாஷுடன் வாழ விரும்புவதாக சொல்லிகொண்டிருப்பது தெரியுமா? (உங்கள் கமல், பிரபு தேவா உதாரணங்களுக்காக  சொல்கிறேன்).


அவர் தன் கணவனுடன் சண்டை வந்து பிரிந்து அதன்பின் தான் இரண்டாம் கல்யாணம் செய்ததாக தகவலே ஒழிய சண்டை வந்தது யாரால்,பிரிய என்ன காரணம் என்பது எல்லாம் நமக்கு தெரியாது.அவர்கள் மணமுறிவுக்கு காரணம் கள்ளகாதல் அல்ல என்பதும் என் புரிதல். மற்றபடி பிரபலங்களை பற்றி பேசுவதில் எனக்கும் விருப்பம் இல்லை.ஆனால் பிரபலங்கள் தவறு செய்யும்போது "அது அவர்கள் தனிப்பட்ட வாழ்வு" என எளிதில் கடந்து செல்கிறோம்.பிரபலம் அல்லாத ஆண் செய்தாலும் அதையே சொல்கிறோம்.(பொதுவாக சொல்கிறேன்...ரெண்டு பெண்களை படுக்கையில் வீழ்த்தும் ஒரு பையனை அவன் நண்பர்கள் ஹீரோவாக பார்ப்பார்களா,நடத்தை கெட்டவனாக பார்ப்பார்களா?அதையே ஒரு பெண் செய்தால்?)



திரும்பவும்  சொல்கிறேன்..கொலையையோ, தற்கொலையையோ இங்கு யாருமே ஆதரிக்க வில்லை..ஆதரிக்கவும் மாட்டார்கள்.. ஆனால் எந்த அடிப்படையில் நீங்கள் அந்த பெண்ணிற்கு சப்போர்ட் பண்ணுகிறீர்கள் என தெரியவில்லை..

சப்போர்ட் என்ன செய்தேன்?அந்த பெண் நடத்தை கெட்டவராக இருந்தாலும் அவருக்கு தண்டனை மரணம் என்பது மிக தவறு எனதான் கூறுகிறேன்.மற்றபடி கள்ளகாதலை எல்லாம் நான் ஆதரிக்கவில்லை,.ஊக்குவிக்கவும் இல்லை.அதற்கான தண்டனையான விவாகரத்து அவர்களுக்கு கிடைக்கவேண்டும்.அவ்ளோதான்

செல்வன்

unread,
Oct 17, 2011, 2:55:04 AM10/17/11
to panb...@googlegroups.com
2011/10/17 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
இந்த அளவுக்கு உங்களைக் கறைத்ததே எனக்கு வெற்றிதான் :))

என்னை கரைக்க என்ன இருக்கு ஐயா?கொலைக்கு கிடைக்கும் பொதுவான தண்டனையை தான் சொன்னேன்:-)


என்ன இப்போ 
உங்களுக்கு அமெரிக்கா ....எனக்கு ஆசியா :))
நிலையான ஆட்சி கொடுப்போம்

தனியா இந்த ஊரில் ஆண்டால் எனக்கு பைத்தியம் பிடிச்சுடுங்க (இப்ப மட்டும் பைத்தியம் பிடிக்கலையான்னு அண்னாச்சி கேக்கறது காதில் விழுது:-)


உங்க புரிதலில் இருந்து விலகியே இருக்கிறேன்
ஏற்கனவே தறிகெட்டு ஆடுபவர்களுக்கு விவாகரத்து எப்படி தண்டனையாக இருக்கும் ... இன்னும் கூடுதல் சுதந்திரம் அல்லவா தந்ததாகிவிடும் !!!!!!!!!!!1

எனக்கு புரியவில்லை போல :(((

விவாகரத்துடன் குழந்தைகளை பிரிதல்,நஷ்ட ஈடு,ஜீவனாம்சம் என பல தண்டனைகள் வரும் அல்லவா?

அதற்கு மேலான தண்டனை கள்ளகாதலுக்கு தேவை இல்லை.அது ஒரு சிவில் குற்ரமே.கிரினல் குற்றம் அல்ல.விவகாரத்து செய்துவிட்டு மனம் விரும்பிய வாழ்க்கையை ஆடி அனுபவித்துகொள்ள வேண்டியது..அதை யாரும் தடுக்க முடியாது.காதல்,செக்ஸ் எல்லாம் தனிமனித உரிமை.ஆனால் கல்யாணம் செய்துவிட்டு அந்த வாழ்க்கையை தொடரமுடியாது.அதனால் ஒன்று விவகாரத்து அல்லது ஒழுக்கமான வாழ்க்கை இரண்டில் எது வேண்டும் என தேர்வு செய்துகொள்ள வேண்டும்

Asif Meeran AJ

unread,
Oct 17, 2011, 2:57:41 AM10/17/11
to panb...@googlegroups.com

யாரு இவரு 

என்னங்க இப்படி கேட்டுட்டீங்க?
உங்களுக்கு காந்தியை தெரியலை அல்லது அவரது மனைவி க\ச்தூரி பாயை தெரியலைன்னு சொல்லுங்க
சரி அதனால பிரச்னையில்லன்னு சொல்லிடுவேன் சசெசெவைத் தெரியலியா? அவருதாங்க சரவெடி செம்மல் செல்வன்.

Asif Meeran AJ

unread,
Oct 17, 2011, 2:57:45 AM10/17/11
to panb...@googlegroups.com


17 அக்டோபர், 2011 10:57 am அன்று, Asif Meeran AJ <asifm...@gmail.com> எழுதியது:

துரை.ந.உ

unread,
Oct 17, 2011, 2:57:39 AM10/17/11
to panb...@googlegroups.com
2011/10/17 செல்வன் <hol...@gmail.com>
2011/10/17 Jayaprakash N <naa...@gmail.com>

ஆண்கள் பெருந்தன்மையானவர்கள்.. ஆண் ஒரு சிறு தவறு செய்தாலும் ஊரைக்கூட்டி ஆர்பாட்டம் செய்வது போல், ஆண் காட்டி கொள்வதில்லை..(உங்களை போல நானும் பொதுவாகத்தான் சொல்கிறேன்). வனிதா விஜயகுமார், ஏன் ஆகாஷை கழற்றி விட்டார்.. ஆகாஷின் பொறுமை ஊருக்கே தெரியும்..இப்போ திரும்ப வந்து இரண்டாவது கணவனை விவாகரத்து செய்துவிட்டு திரும்பவும் ஆகாஷுடன் வாழ விரும்புவதாக சொல்லிகொண்டிருப்பது தெரியுமா? (உங்கள் கமல், பிரபு தேவா உதாரணங்களுக்காக  சொல்கிறேன்).


அவர் தன் கணவனுடன் சண்டை வந்து பிரிந்து அதன்பின் தான் இரண்டாம் கல்யாணம் செய்ததாக தகவலே ஒழிய சண்டை வந்தது யாரால்,பிரிய என்ன காரணம் என்பது எல்லாம் நமக்கு தெரியாது.அவர்கள் மணமுறிவுக்கு காரணம் கள்ளகாதல் அல்ல என்பதும் என் புரிதல். மற்றபடி பிரபலங்களை பற்றி பேசுவதில் எனக்கும் விருப்பம் இல்லை.ஆனால் பிரபலங்கள் தவறு செய்யும்போது "அது அவர்கள் தனிப்பட்ட வாழ்வு" என எளிதில் கடந்து செல்கிறோம்.பிரபலம் அல்லாத ஆண் செய்தாலும் அதையே சொல்கிறோம்.(பொதுவாக சொல்கிறேன்...ரெண்டு பெண்களை படுக்கையில் வீழ்த்தும் ஒரு பையனை அவன் நண்பர்கள் ஹீரோவாக பார்ப்பார்களா,நடத்தை கெட்டவனாக பார்ப்பார்களா?அதையே ஒரு பெண் செய்தால்?)

பெண்களை வீழ்த்தும் ஆணின் நண்பர்கள் எப்படி பார்ப்பார்களோ அதேபோலத்தான் 
ஆண்களை வீழ்த்தும் பெண்ணின் நண்பிகளும் பார்ப்பார்கள் 

பெண்களைப் பற்றியும்ஆண்கள் தான் கருத்து சொல்லவேண்டும் என்பது என்ன வகை நியாயம் 
இதுதான் ஆணாதிக்கம் 




திரும்பவும்  சொல்கிறேன்..கொலையையோ, தற்கொலையையோ இங்கு யாருமே ஆதரிக்க வில்லை..ஆதரிக்கவும் மாட்டார்கள்.. ஆனால் எந்த அடிப்படையில் நீங்கள் அந்த பெண்ணிற்கு சப்போர்ட் பண்ணுகிறீர்கள் என தெரியவில்லை..

சப்போர்ட் என்ன செய்தேன்?அந்த பெண் நடத்தை கெட்டவராக இருந்தாலும் அவருக்கு தண்டனை மரணம் என்பது மிக தவறு எனதான் கூறுகிறேன்.மற்றபடி கள்ளகாதலை எல்லாம் நான் ஆதரிக்கவில்லை,.ஊக்குவிக்கவும் இல்லை.அதற்கான தண்டனையான விவாகரத்து அவர்களுக்கு கிடைக்கவேண்டும்.அவ்ளோதான்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Asif Meeran AJ

unread,
Oct 17, 2011, 2:58:42 AM10/17/11
to panb...@googlegroups.com
பெண்கள் நல்லவங்கன்னு நான் அடிக்கடி சொல்றேனே??
அப்ப அதுதான் ஆணாதிக்கமா?

செல்வன்

unread,
Oct 17, 2011, 3:02:51 AM10/17/11
to panb...@googlegroups.com
2011/10/17 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
பெண்களை வீழ்த்தும் ஆணின் நண்பர்கள் எப்படி பார்ப்பார்களோ அதேபோலத்தான் 
ஆண்களை வீழ்த்தும் பெண்ணின் நண்பிகளும் பார்ப்பார்கள் 




பெண்களை வீழ்த்தும் ஆணின் நண்பர்கள் அவனை ஹீரோவாக பார்ப்பார்கள்.

ஆண்களை பெண்கள் வீழ்த்த எல்லாம் வேண்டாம்.விழ ஆண்கள் ரெடி..அப்படி ஒரு ரெண்டுபேருடன் ஒரு பெண் போய் வந்தால் அவள் நண்பிகள் அவளை பரத்தையகா தான் பார்ப்பார்கள்.
 

பெண்களைப் பற்றியும்ஆண்கள் தான் கருத்து சொல்லவேண்டும் என்பது என்ன வகை நியாயம் 
இதுதான் ஆணாதிக்கம் 

நான் எங்கே அப்படி சொன்னேன்?

Asif Meeran AJ

unread,
Oct 17, 2011, 3:18:15 AM10/17/11
to panb...@googlegroups.com
சசெ செல்வன்

கஸ்தூரி பாய் மேட்டரைப் பத்திப் பேசவே மாட்டேங்குரீங்க?\
கமல் செஞ்சா தப்பு காந்தி செஞ்சா சரின்னு ஸ்பெஷல் அமெரிக்க பெண்னுரிமை பொங்கல் ஏதும் வச்சிருக்கீங்களா?

பெண்னுரிமை ஸ்பெஷல் பொங்கலாளி ஜென்ஷி கூட அன்னா ஹசாரே மாதிரி மௌன சாமியாரனதேனோ??

செல்வன்

unread,
Oct 17, 2011, 3:33:43 AM10/17/11
to panb...@googlegroups.com
2011/10/17 Asif Meeran AJ <asifm...@gmail.com>
கஸ்தூரி பாய் மேட்டரைப் பத்திப் பேசவே மாட்டேங்குரீங்க?\

கமல் செஞ்சா தப்பு காந்தி செஞ்சா சரின்னு ஸ்பெஷல் அமெரிக்க பெண்னுரிமை பொங்கல் ஏதும் வச்சிருக்கீங்களா?


இந்த விஷயத்தில் காந்தி செய்தது மகா தவறு.

Asif Meeran AJ

unread,
Oct 17, 2011, 3:38:53 AM10/17/11
to panb...@googlegroups.com
இந்த விஷயத்தில் காந்தி செய்தது மகா தவறு.

சபாஷ் அதனால இனிமேல் உதாரணத்துக்குக் கமலைச் சொல்லி பேசாமல் காந்தியை மட்டும் ஏண்டா கொன்டாடுறீங்கன்னு பேசும்அடி தாழ்மையுடன் வேன்டுகிறேன்
ஏன்னா கமல் வெறும் தொழில்முறை நடிகன் காந்தி தேசப் பிதா
உங்க கூற்றுப்படி மகா தவறு செய்தவங்கதான் இந்த தேசத்துல மஹாத்மாவா?

சென்ஷி .

unread,
Oct 17, 2011, 3:38:11 AM10/17/11
to panb...@googlegroups.com
இதை சொல்லலைன்னுதான் இம்புட்டு பொங்கல் பொங்கறாரா அண்ணாச்சி. காந்தி செஞ்சது தப்புதான் அண்ணாச்சி..

2011/10/17 செல்வன் <hol...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
- senshe

Asif Meeran AJ

unread,
Oct 17, 2011, 6:55:53 AM10/17/11
to panb...@googlegroups.com
பாருங்கய்யா அநியாய்த்தை
காந்தினா ஆமா தப்புதான் செஞ்சாரு அதுக்கென்னங்குர தொனியில் பேசுவீங்க
கமல்ன்னா அவன் ஒரு ----- ந்க்குற மாதிரி பேசுறீங்க
ரெண்டு பேரு எழுத்தும் க வில் தொடங்குது ரெண்டு பேருக்கும் மூணு எழுத்துங்குற
ஒற்றுமையைக் கணக்கிலெடுத்தாவது இனி ஏதாவது உதாரணம் சொல்லும்போது உதாரண
புருஷரான காந்தியையும் சேர்த்துக்கோங்க என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்

கஸ்தூரிபாய்ங்குற பெண்ணுக்காக இவ்வளவு உரக்கக் குரல் கொடுக்குற என்னப் போய்
ஆணாதிக்கவாதின்னு சொல்ராங்கய்யா இவங்க

17 அக்டோபர், 2011 11:38 am அன்று, சென்ஷி . <me.s...@gmail.com> எழுதியது:

Jayaprakash N

unread,
Oct 17, 2011, 6:58:08 AM10/17/11
to panb...@googlegroups.com


With Lots OF Love,
JP

360.gif

அச்சு !!!

unread,
Oct 17, 2011, 11:12:49 AM10/17/11
to panb...@googlegroups.com
EVKS Elangovanஈரோடு: உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு பெரியார் வீதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளி அமைக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குசாவடியில், முன்னாள மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை வாக்களித்தார்.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இளங்கோவன், ஈரோட்டில் மக்கள் அதிக உற்சாகத்துடன் வாக்களித்து உள்ளனர். தமிழகம் முழுவதும் இதே நிலையில் தான் இருந்திருக்கும் என நினைக்கிறேன். தமிழக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், நல்லவர்களுக்கு வாக்களிப்பார்கள்.

இந்த தேர்தலுக்கு பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாங்கள் நினைத்ததை விட, காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறேன், என்றார்.

இவனுங்க காமெடிக்கு அளவே இல்லையா.


--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
-------------------------------------------
கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு


ஸ் பெ

unread,
Oct 17, 2011, 11:17:19 AM10/17/11
to panb...@googlegroups.com
இப்படி ஒரு பாதகத்தை செய்ய துணிஞ்ச இந்த நாயோட பிறப்பையும் சேர்த்து தான் திட்டினேன். ;((

Image.jpg


--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
எமது மொழியும்,கலையும்,பண்பாடும்
எமது நீண்டவரலாற்றின் விழுதுகளாக
எமது மண்ணில்ஆழமாக வேரூன்றி நிற்பவை .
எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை....
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Image.jpg
Image.jpg

mor .subra

unread,
Oct 17, 2011, 12:29:45 PM10/17/11
to panb...@googlegroups.com
பாலிமர் டிவி மேல இருந்த மரியாதையே சுத்தமா போச்சு....இதுல ஒரு ப்ரோகிராம் வருது...சக்திகொடுன்னு அதாவது கதையல்ல நிஜம் மாதிரி....இதுல வர அந்த பெண்மணி வரவங்க குடும்ப பிரச்சினைகளை கேட்டு தீர்த்து வச்சு ஊருக்கு நல்லது பண்றாங்க அட இந்த ப்ரோகிராம்ல அந்த நாட்டாமை யார் தெரியுமா கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடு ரோட்டுல கார் மேல உக்காந்துக்கிட்டு வாய் கிழிய சத்தம் போட்டு தன் குடும்ப அந்தரங்கங்களையே நடு ரோட்டுக்கு கொண்டு வந்து பிரகாசமா வெட்டவெளிச்சம் போட்டு காட்டுன அதே வனிதா விஜயகுமார் தான்.

உடனே பெண்ணுரிமை பொங்கல் வியாதிகள்லாம் வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்தா கொன்னேபுடுவேன்......




2011/10/17 அச்சு !!! <achusu...@gmail.com>
 அன்போடு 

மோர்சுப்ரா


It is loading more messages.
0 new messages