On Monday, November 14, 2016 at 8:49:25 PM UTC-8, N. Ganesan wrote:
On Monday, November 14, 2016 at 8:34:53 PM UTC-8, கவிமாமணி wrote:நேற்றுக் கீழைவானில் வெண்ணிலவின் நெருக்கத்தை இரசித்த அதேவேளையில் மேலை வானில் ஒரே வண்ணத்தில் விந்தை செய்துகொண்டிருந்தது அந்தி. அப்படி ஒரு செக்கர் அழகு. செம்பை உருக்கி மெழுகியது போல!வாகாக இந்தச் செக்கர் நிறத்தில் இருப்பதால் “செக்கரவாகம்” என்று இந்தியாவிலே உள்ள அழகான வாத்துக்குப் பெயர் (வாத்து = போர்ச்சுகீயம்). வடமொழியில் எ, ஒ இல்லை: அகரமாகிவிடும்.எப்பொழுதும் துணையுடன் இருக்கும் சக்கரவாகம்சக்கரவாகம் என்பது பாளி மொழிச் சொல்(விஷ்ணுவைக் குறிக்கும் சக்கரபாணி கூட ஒரு பாளி மொழிசொல் என்பதையும் அதே பக்கத்தில் பார்க்கலாம்)cakkavako - ruddy gooseஉங்களைக் கவர்ந்த ஹம்சாவும் ஒரு பாளி மொழிச் சொல்லே ;-))Hamso - swanஇனிமேல் இந்த அகராதியையும் உங்கள் ஆய்வுக்கான வரிசையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.பல அரிய உண்மைகளை அறியும் வாய்ப்பு கிடைக்கலாம்...... தேமொழிஎன்று செக்கரவாகம் செம்மொழி இலக்கியங்களிலே, இந்திய சித்திரங்களிலே ஏராளம் பாடல்கள்.நா. கணேசன்நீலக் கடலில் நிறஜால மாயங்கள்
வாலைக் குமரி வசியத்தை ஒத்திருக்க
தென்னையிளங் கீற்றினிலே தென்றல் அசைவினிலே
மின்னும் ஒளிக்கதிரோன் மேகத் திரைகிழிய
பொன்வண்ணம் மாறிப் புதுவண்ணம் தானடைந்து
தன்வண்ண மாகித் தவழுவதை என்சொல்ல!
என்முன்னே சென்றநிழல் என்னுள் அடங்கிவிட
மின்னும் கதிரோனும் மேற்திசையில் சாய்கின்றான்
சாய்கிறவன் தூரிகைகள் சாதித்த ஓவியத்தை
வாய்த்த வடிவழகின் மாறுதலை, கோலக்
கருவுற்ற மேகம் கரைகட்டும் தங்கச்
சரிகை விளிம்பை, தங்க வயல்வெளியை
செம்பை உருக்கியதில் செம்பவளம் சேர்த்தரைத்து
அம்பொன் விசும்பினிடை அள்ளித் தெளித்ததுபோல்
செக்கர் வனைந்திட்ட சித்திரத்தை, அந்திமகள்
வெட்கம் கலந்த விழிச்சிரிப்பை, மங்கல்
வடிய எழுந்தகரும் மாபூதம் வீழ்ந்து
மடிய உதிக்கின்ற மாமதியை, வாழ்வை
விதிக்கின்ற கோளிருக்கும் விந்தையினை, எம்பிக்
குதிக்கின்ற தண்கதிரின் கொள்ளை அறியாமல்
கற்பனையில் விண்மீன்கள் கண்சிமிட்டும் காட்சியதன்
அற்புதத்தை, ஆண்டவனின் ஆணை தவறாமல்
அண்டங்கள் ஏதோஓர் யாப்பின் அமைதியிலே
சண்டை பிடிக்காமல் தன்னுள் இயங்குகிற
விந்தையினை, வானத்தில் மேகம் கவிந்திருக்க
முந்துகிற வானவில்லின் மோனத் தனிவளைவின்
வண்ணத் தொகுதியினை, மாறா வடிவழகைக்
கண்ணுற்றால் தெய்வக் கவிதை தெரியாதோ?
வானத்து நீலம் மறையச் செழுஞ்செக்கர்
மேனி முழுதும் மெழுகிவிட - ஆனவரை
அந்த ஒருவண்ணம் ஆச்சரியம் காட்டுகிற
அந்தி அழகே அழகு!
vaanaththu