சிகாகோ சமணர் ஆலயம் சென்றிருந்தோம். பளிங்கில் மிக நேர்த்தியாக கட்டியிருந்தார்கள். சமணம் இந்து சமயம் இரண்டுக்கும் பொதுவாக இந்திரன் , அம்பிகா போன்ற தெய்வங்கள் உண்டு. சமணர் மரபிலும் நாட்டார் வழிபாடு உண்டு என்பதை அறிய முடிந்தது
ஆலய முகப்பு
ஆலய்த்தில் உள்ள ஓவியம். மகாவீரர் பிறந்ததும் அவரை பூசிக்கும் இந்திரன்.
அம்பிகா தேவி. பிள்ளையுடன் நிற்கும் பெண் தெய்வம் சிந்து நாகரிக கால தொன்மம் கொண்டது. எகிப்திய ஐஸிஸ் தெய்வம், குழந்தை ஏசுவுடன் இருக்கும் மேரி, யசோதா கிருஷ்ணன், தமிழக இசக்கி அம்மன் வரிசையில் சமண அம்பிகா தேவி.
காந்தகர்ண மகாவீர் என்பவரின் சிலை. சமணத்தில் வீரர் வழிபாடு உண்டு. இவர் சமண ஆலய பக்தர்களை கொள்ளையரிடமிருந்து காத்து வந்த மன்னர்.
மணிபத்திர வீரர்....இவர் சமண பயணிகளை காக்க போரிட்டு உயிரிழந்தவர். தலை, உடல் எல்லாம் துண்டானதால் பன்றி தலையை பொருத்தி காட்சியளிக்கிறார். எப்படியோ சமணத்திலும் வராகத்திற்கு உயர்ந்த இடமிருப்பதை அறிவதில் மகிழ்ச்சி :-)
--