--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
இன்வஸ்ட்மண்டோட நடிக்கவும் வாய்ப்பு கிடைக்குமுங்களா?
--
இன்வஸ்ட்மண்டோட நடிக்கவும் வாய்ப்பு கிடைக்குமுங்களா?
முனீஸ்காந்த் யாரு மாமு?
--
பாக்ஸ் ஆபீஸில் பட்டைய கிளப்பும் 'முண்டாசுப்பட்டி’ படத்தில், 'முனிஸ்காந்த்’ கேரக்டரில் துவம்சம் செய்திருக்கிறார் ராம்தாஸ். கொங்கு வட்டாரத்துப் பாஷையில், ஒவ்வொரு வசனத்தை யும் காமெடி பன்ச்களாக ராம்தாஸ் விசிறும்போது, தீப்பிடிக்கிறது தியேட்டர்.
''என் சொந்த ஊரு, திண்டுக்கல் பக்கத்துல இருக்கிற நிலக்கோட்டை. 2002-ல மெட்ராஸுக்கு வந்தேன். லோடு தூக்குறது, தண்ணி கேன் போடுறதுனு பார்ட் டைம் வேலைகள் பார்த்துக்கிட்டே, ஃபுல் டைமா சினிமா வாய்ப்பு தேடிட்டு இருந்தேன். கும்பல்ல நிக்கிறது, கூட்டத்துல கோஷம் போடுறதுனு சின்னதும், ரொம்ப ரொம்பச் சின்னதுமா பல படங்கள்ல தலை, கை, கால் காட்டியிருக்கேன்.
அப்போ 'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்காக 'முண்டாசுப்பட்டி’ குறும்பட ஷூட்டிங் முடிச்சிருந்தார் ராம் சார். அதுல முனிஸ்காந்த் கேரக்டர்ல நடிச்சிருந்தவரால், டப்பிங் பேச சென்னைக்கு வர முடியலை. அந்த கேரக்டருக்கு டப்பிங் பேச என்னை அழைச்சிட்டுப் போயிருந்தார் காளி வெங்கட். போன உடனே, 'இந்த டயலாக்கைப் பேசுங்க’னு ராம் சார் கொடுத்த வசனம்தான், 'தைக்கப்புறம் தமிழ் சினிமாவுலமூணு பேர்தான் டாப்பாமாம். ஒண்ணு ரசினிகாந்து; இன்னொண்ணு கமலஹாசன்; மூணாவதா முனிஸ்காந்து’! அதை, கோயம்புத்தூர் ஸ்லாங்ல நான் பேசினதைக் கேட்டுட்டு விழுந்து விழுந்து சிரிச்சவர், 'இவரே பேசட்டும். நேரா டப்பிங் போயிடலாம்’னு சொல்லிட்டார். அப்படி குறும்படத்துக்கு டப்பிங் பண்ண வாய்ப்புதான், 'முண்டாசுப்பட்டி’ சினிமாவில் என்னை நடிக்கவெச்சது.
சினிமாவுல ஒரு வெற்றி, எப்படி ஒரே நாள்ல வாழ்க்கையை மாத்தும்னு போன வாரம்தான் அனுபவிச்சேன். ஊருக்குள்ள யார் சொல் பேச்சையும் கேட்காம, சினிமா ஆசையில சென்னையில சுத்திட்டு இருந்த பய நான். படத்துலயும் கிட்டத்தட்ட எனக்கு அதே மாதிரி கேரக்டர்தான். 'முண்டாசுப்பட்டி’ ரிலீஸுக்கு முன்னாடி வரை எங்க வீட்ல என்னை மதிக்கவே மாட்டாங்க. ஆனா, படம் ரிலீஸான ரெண்டாவது நாள், ஒரு புது நம்பர்ல இருந்து போன். 'ஹலோ’ சொன்னா, 'அப்பா பேரைக் காப்பாத்திட்டடா... காப்பாத்திட்ட’னு ஒரே அழுகாச்சி. 'யோவ் யாருய்யா பேசுறது?’னு அதட்டிக் கேட்டா, 'நான்தாப்பா... உன் அண்ணன். உன்னை சினிமால பார்க்க ரொம்பச் சந்தோஷமா இருக்குப்பா’னு பொங்கிப் பூரிக்கிறாப்ல. 'டேய் பாவி... மூணு நாளைக்கு முன்னாலதான் உங்கிட்ட 500 ரூபாய் கேட்டேன். கழுவிக் கழுவி ஊத்தினேயடா’னு எனக்குள்ள மைண்ட் வாய்ஸ் ஓடுது. அப்பா இறந்த பிறகு என் அடம், அழும்புகளைச் சகிச்சுக்கிட்டு வளர்த்த அம்மா, 'தம்பி... உன்னை என்னமோ நினைச்சேன்டா. இனி நீ நல்லா இருப்படா. இனி எனக்குக் கவலை இல்லைடா’னு அழுவுது. நமக்கே ஃபீலிங்ஸ் ஆகிடுச்சுனா, பார்த்துக்கங்களேன்!
நடுவுல மணிரத்னம் சாரோட 'கடல்’ல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. பிரமாதமா நடிச்சு மணி சாரை அசத்திடணும்னு போனேன். ஆனா, ஸ்பாட்ல மணி சாரைப் பார்த்ததும் நடுக்கம் வந்திருச்சு. சீன், வசனம் எல்லாம் மறந்து கை, கால் உதற ஆரம்பிச்சிடுச்சு. ஏகப்பட்ட டேக். அவ்வளவு சாந்தமான மணி சாரே கொஞ்சம் டென்ஷனாகிட்டார். 'ஏன் ஒழுங்கா நடிக்க மாட்டேங்கிற..? நடிக்கத் தெரியும்ல. சிம்பிளா நடி’னு கொஞ்சம் கோபமாவே சொன்னார். பயத்தோடவே ஏதோ ஒப்பேத்தி நடிச்சேன். 'அவர் படத்துல நடிக்க எவ்வளவு பேர் காத்திருக்காங்க. கிடைச்ச வாய்ப்பைச் சொதப்பிட்டேனே... தவிர, அவர் எவ்வளவு சாஃப்ட்டான மனுஷன். அவரையே டென்ஷன் ஆக்கிட்டோமே’னு வருத்தம். ஸாரி மணி சார்!'' என்று ஃபீல் செய்தவரிடம் கல்யாணம் பற்றி கேட்டதும் குஷியாகிவிட்டார்.
''வீட்ல பல மாமாங்கமா பொண்ணு தேடிட்டு இருக்காங்க. பொண்ணு வீட்டுக்காரங்க, 'தம்பி எங்க வேலை பார்க்கிறார்?’னு கேட்டதும், 'சினிமாவுல’னு எங்க வீட்ல சொல்வாங்க. கேட்டுட்டுப் போறவங்கதான், மழைக்குக்கூட எங்க வீடு உள்ள தெருப் பக்கம் ஒதுங்க மாட்டாங்களாம். அப்பல்லாம், 'டேய்... சினிமால இருக்கேன்னு ஏன்டா சொல்றீங்க? வாட்டர் கம்பெனி வெச்சிருக்கார்; லோடு வண்டி ஓட்டுறார் அது இதுனு ஏதாவது சொல்ல வேண்டியதுதானே’ம்பேன். 'அப்படிச் சொன்னா, சம்பளம் எவ்வளவுனு கேட்கிறானுங்க. அதுக்கு என்ன பதில் சொல்றது?’னு கேட்பான் என் அண்ணன். 'அதுவும் ரைட்டுதான்’னு நான் சைலன்ட் ஆகிடுவேன்.
அதே அண்ணன் இப்ப, 'கவலைப்படாதடா... எகிடுதகிடா பவுன் கேட்டு பொண்ணு கட்டுவோம்’னு சொல்றான். 'என் வாழ்க்கையில விளக்கேத்தி வெக்கிற எண்ணமே உனக்குக் கிடையாதா? பவுன்லாம் கேட்டு, வர்ற வரன்களையும் கெடுத்துப்புடாதீங்கடா. ஏழைக் குடும்பமாவே பார்த்து முடிங்க’னு சொல்லியிருக்கேன். காஷ்மீர், சுவிட்சர்லாந்து, ஆப்பிரிக்கா... எங்க சார் சீஸன் நல்லா இருக்கும்? ஹனிமூனுக்குப் போகணும்!'' ஆவலாகச் சிரிக்கிறார் ராம்தாஸ்.
நல்லபடியாத்தான் சொல்லியிருக்கீங்களா...
நான் சாம் ஆண்டர்சனுக்கோ இல்ல பவர்ஸ்டார் ரேஞ்சுக்கோதானே கற்ப்னை பண்ணீட்டு இருந்தேன்.
கொஞ்ச வருசம் முன்னாடிவரைக்கும் ஜாக்கிசான் மாதிரி உருண்டு புரண்டு குதிச்சி தாவி அதிரடி சண்டைக் காட்சிகளிலெல்லாம் நடிச்சி அசத்தணும்னு திட்டம் போட்டிருந்தேன். இப்ப இருக்கற நிலைமைக்கு ஒரு தடவை விழுந்தா இன்னொருத்தர் உதவி இல்லாம எந்திரிக்க முடியாது போல இருக்கு.
--
ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ குலோத்துங்க வினையூக்கி சார்ரேசார்,
யூட்யூப்ல தேடியும் எனக்கு அந்த காட்சி நினைவுக்கு வரலையே.
நானும் ஒரு நாள் ஹீரோவாகி உங்க கொட்டத்தையெல்லாம் அடக்கறேனா இல்லையான்னு பாருங்க.
ஏற்கனவே இசைப்புலமை, பாடல் புலமையெல்லாம் வளத்து வெச்சிருக்கேன். ரொம்ப ஸ்பீடா போறேன்னு கொஞ்சம் ப்ரேக் விட்டிருக்கேன். மீண்டும் உசுப்பிடாதீங்க
உங்களுக்கு நான் நடிக்கிற படத்தில் சான்ஸ் வேணுமா வேணாமா?
ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ குலோத்துங்க வினையூக்கி சார்ரேசார்,
கண்டிப்பாக, நிச்சயமாக.
அதுவும் ஹீரோவாத்தான் நடிப்பேன். நாலு ஃபைட் போடுவேன், ரெண்டு டூயட், ஒரு குத்துப் பாட்டு, ஒரு சோகப் பாடல், ஃபாரின் சாங் ஒன்னு, ஃபாரின் புலன்விசாரனை ஒன்னு.
இதெல்லாம் இருக்குற மாதிரி ஒரு படத்துல ஹீரோவாக நடிக்கப் போறேன்.
ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ குலோத்துங்க வினையூக்கி செல்வா சார்ரேசார்,
நானே மொக்கை போட ஆளில்லாம அல்லாடிட்டு கிடைக்கிற இழையிலெல்லாம் தராதரமில்லாம மொக்கை போட்டு வெறியாத்திட்டு இருக்கேன். இதுல அப்ரைசல் வேறயா. டிஸ்கவரி ஓனர் வந்துடப் போறார் ;)
ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ குலோத்துங்க வினையூக்கி செல்வா சார்ரேசார்,
ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராஜ குலோத்துங்க வினையூக்கி செல்வா சார்ரேசார்,
யாரு வந்தா எனக்கென்ன?
பத்து ரூபா கொடுத்து இவருதாங்க இப்படியெல்லாம் பேசச் சொன்னார்னு சொல்லிட்டுப் போயிட்டே இருப்பேன் ;)
நானு ரொம்ப ராசியான ஆளுவே,
ஓய் எங்க பக்கத்திலே ஒரு சொலவடை , விடியாமூஞ்சி வேலைக்குப் போயி வேலை கெடைச்சாலும் கூலி கெடைக்காதென
--
நானு ரொம்ப ராசியான ஆளுவே,
ஓய் எங்க பக்கத்திலே ஒரு சொலவடை , விடியாமூஞ்சி வேலைக்குப் போயி வேலை கெடைச்சாலும் கூலி கெடைக்காதென
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
ஆசாத் அய்யா, ஜீவ்ஸ் அண்ணன், உமாநாத் அண்ணன், பாலபாரதி தல, சுபைர் இவர்களின் பெயர்கள் இல்லாததால் இந்த இழையில் இருந்து வெளியேறுகிறென்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
பண்புடனின் கொள்கையை விடாமல் பற்றிப்பிடித்திருக்கும் அண்ணாச்சிக்கு ஏன் நாமே ஒரு பண்பாளர் பட்டம் தரக்கூடாது??#பற்றிப்பிடித்த பண்பாளர் ;))
உங்களுக்கு சமையலும் ஒரு கலை அதை செய்யவும் அறிவு தேவை .
உங்களுக்கு சமையலும் ஒரு கலை அதை செய்யவும் அறிவு தேவை .
ஹோட்டலிலேயெ மூணூ வேளையும் மொக்கும் எனக்குத் தெரியாதா சமையல் ஒரு கலை என்று :-)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
படத்துக்கு முதலீடு கேட்டது ஒரு குத்தமாய்யா?? :-)பிரசாத்து இருந்தா இது வஞ்சகப்புகழ்ச்சி அணி என அழகா இலக்கணம் சொல்லி இருப்பான் :):)
--
முதலீடு கேட்டது குத்தமில்லே. முதலீடு செய்ய விருப்பமிருந்திருந்தா செய்திருக்கணும். அதெ விட்டுப்போட்டு மத்த பாவப்பட்ட மனுசங்களெ இழுத்து விடுவது சரியா என்பதை யோசிக்கவும் பண்புடன் முதலாளியாரே!