--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
அன்பின் ஹரிகி,
பிரஹசரணம் அதுவும் மழநாட்டு பிராஹசரணம் என்று படித்தவுடன் சரணம் என்பது என்ன என்ற கேள்வி எழுகிறது?
சமீபத்தில் படித்த சேரர்கோட்டை நாவலில் காந்தளூர்ச்சாலையில் இருக்கும் பிரிவுகளுக்கு சரணம் என்ற பெயர் உண்டு என படித்தேன். இந்த சரணம் தான் அந்த சரணமா?
சரணம் என்பது நமஹ என்பதன் தமிழ் என்று கொண்டால் இந்த பெயர் எதைக்குறிக்கிறது?
--- On Tue, 4/9/12, Hari Krishnan <hari.har...@gmail.com>
wrote:
2012/9/4 Raja sankar <errajasa...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ப்ரும்மாவை சரணைந்தவர்கள் ப்ரஹச்ரணம் என்று கூறக்கேட்டு இருக்கிறேன்
ஆயிரத்தெண்மரே அஷ்ட ஸஹஸ்ரம்
எங்களூர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள கண்டரமாணிக்கம். கண்டுகொண்ட மாணிக்க நாடு என்று நாட்டார் வழக்கியலில் அறியப்படுகிறது. ஊர் நடுவில் மாணிக்க நாச்சி அம்மன் என்ற அம்மன் கோவில் சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது.
ஜாதி என்பது பிரிவைக் குறிப்பதன்று பிறப்பைக் குறிப்பது.
தமிழகத்தில் ஜாதி என்பது குமுகத்தை ஒரு முக்கோண வடிவில் அமைத்து
குமுகத்தின் சமூக பொருளாதார ஆளுமை சமய செயலாக்கங்களை கட்டுக்குள் வைக்க
உருவாக்கப்பட்ட அமைப்பு
மற்ற மனிதக் குமுக வாழ்க்கை அமைப்புகளில் அரசாளுமை குமுகத்தின் பண்பு
நலனை வடிமைத்ததுதற்கு மாறாகத் தமிழகத்தில் குமுகம் அரசாளுமையின் பண்பு
நலன்களைத் திர்மானித்தது
புத்தருக்குப்பின் பின்னடைவுற்ற குமுகத்தில் குழும வாழ்வின்
தொடக்கநிலையில் உள்ள கிராமங்களில் எஞ்சியிருந்த புத்த பிக்குகள் அடித்து
விரத்தப்பட்டு அவர்கள் தொடர்ந்த கல்வி மருத்துவப் பணிகளைத் தொடர விடாமல்
தடுக்கப்பட்டனர். அவர்களின் இடத்தைப் பிடித்து ஒரு குழு குமுகத்தின்
அவர்களே உயர்ந்தவர்கள் என்ற தகுதியை உருவாக்கிக்கொண்டு தங்களுக்குச்
சரிசமமான நிலையில் இருப்பவர்களைத் தங்களுடன் இணைத்துக்கொண்டு ஒரு
தனிக்குழுவாக குமுகத்தில் இயங்க ஆரம்பித்தனர். கல்வியில் சிறந்த புத்த
பிக்குகளை புத்தமதத்தைவிட்டு வெளியேறித் தங்களுடன் இணைத்துக்கொள்ள
வற்புறுத்தி அவர்களையும் இணைத்துக்கொண்டு குமுகத்தில் அறிவும் ஆற்றலும்
தங்களுக்கு மட்டுமே இருப்பதாகத் தக்கவைத்து அதுவே தங்களைக் குமுகத்தின்
மற்ற குழுக்களிடம் இருந்து தனித்துக்காட்டும் என்ற யுக்தியை உணர்ந்து
செயல் படுத்தினர்
பெளத்த விகாரங்கள் தங்களை மாற்றிக்கொண்டு அந்தணர் மறை வளம் பற்றி அறிந்து
அந்தணர்களாக மாறப் பலருக்கு வாய்ப்புக் கொடுத்து பல புத்தப் பள்ளிகளை
அந்தணர் மரபுவழி அறியும் புதிய பள்ளிகளாக மாற்றி விரைவாகப் பல அறிவார்ந்த
குழுக்களை குமுகத்தில் உருவாக்கி அவ்வாறு உருவான புதிய குழுக்களை
அந்தணர்கள் என்று அழைத்தனர். மானுடவியல் அடிப்படையில் தமிழகத்தில்
உருவான அந்தனர்கள் தமிழ்க் குமுகத்தின் அறிவுத் திறம் வாய்ந்தவர்களை
ஒன்றாக இணைத்து உருவாக்கிக்கொண்ட ஒரு தனிக்குழு. அவ்வாறு தமிழகத்தில்
வாழ்ந்த பெளத்தர் மற்ற அறிஞர்களைத் தமிழ்ப் பிராமணர்கள் என்று கூறலாம்.
12-ஆம் நூற்றாண்டுவரை இடைவிடாமல் வடபுலத்தில் நடந்த பெளத்தத்திலிருந்து
இந்தியமயமாக்கல் பணி வடக்கில் பெஷாவரிலிருந்து பாடலிபுத்திரம் வரை பல
அந்தணர் குழுக்களை உருவாக்கி அவர்களைப் பஞ்சகவுட பிராமாணர்கள் என்ற
பெயரால் குமுகம் ஏற்றுக்கொண்டது. இவர்களில் இருந்து முற்றும் வேறுபட்டு
தென் புலத்தில் வாழ்ந்தவர்கள் பஞ்ச திராவிட பிராமணார்கள். இந்த
பஞ்சதிராவிட பிராமணர்களுடன் இணையாமல் பஞ்சகவுட பிராமணர்களின் வாழ்வு
நெறியைப் பின்பற்றியவர்கள் கேரளாவில் வாழ்ந்தனர். அவர்கள்
பஞ்சதிராவிடர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்படாமல் நம்பி என்ற பெயரில்
அழைக்கப்பட்டனர். அவர்கள் முன்குடுமி உடையவர்களாகவும் கேரளாவில் உள்ள
மற்ற பிரிவினருடனும் திருனமண உறவுகொண்டு வாழ்ந்தனர். அவர்களின் இந்தப்
பலபிரிவில் திருமணம் செய்யும் காரணத்தால் அவர்களைப் பஞ்ச திராவிட
பிராமணர்கள் தங்களுக்குச் சமமாக ஏற்றுக்கொள்ளவில்லை
இந்த வரையற்ற தொடர் குழுமாற்றத்தால் 7-ஆம் நூற்றாண்டில் வேதகால
அந்தணர்கள் என்றழைக்கப்பட்டவர்களைத் தவிர ஏராளமானவர்கள் தங்களை அந்தணர்
என்று அடையாளப்படுத்திக் கொண்டனர்
கொங்கன் பகுதியில் வாழ்ந்த சரஸ்வத பிரானணர்கள் வணிகப் பிரிவில் இருந்து
அந்தணர்களாக மாற்றம் பெற்றவர்கள். இவர்கள் மற்ற அந்தணர் குழுக்களைவிட
உயர்ந்தவர்கள் என்று 200 ஆண்டுகளாக்ப் போரிட்டவர்கள் ஆனால் கேரளாவில்
உள்ள கோவில்களுக்குள் அவர்கள் நுழைய அரசானை தடை செய்தது. (கேரளக்
கோவில்களில் கீழ்ச்சாதியனரும் கோவிலில் நுழைய அனுமதியிருந்த காலம்)
அதுபோன்றே கோவாவில் உருவான பீஹார் சரஸ்வத கெளட பிராமணார்கள் கேரளக்
கோவில்களில் நுழைவது தடை செய்யப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டுவரை பல
பிராமணக்குழுக்களுக்குக் கேரளவில் அந்தணர்களுக்குள்ள உயர்ந்த நிலை
மறுக்கப்பட்டே வந்தது
தமிழகத்தில் பஞ்சதிராவிட அந்தணர்களும் கேரளாவில் பஞ்சகெளட பிராமணர்களும்
வாழ்ந்தனர். கொங்கனி கோவா போன்ற இடங்களில் வணிகர்களும் உழவர்களும்
கைத்தொழில் செய்பவர்களும் தங்களை அந்தணர்களாக உயர்த்திக்கொண்டனர்.
தமிழகத்தில் கல்வியிற் சிறந்த அந்தணர்களைத் தவிர சமஸ்கிரியம் கற்ற
அறிவுசால் பறையர்களும் வாழ்ந்தனர். இவர்கள் தங்களைப் பிராமணர்கள் என்று
அழைக்க முற்பட இவர்களின் குமுக நிலை அடிப்படையில் நடுப்பகல் பறையர்கள்
என்று அவர்கள் அழைக்கப்பட்டனர். 1930 ஆம் ஆண்டுணவரை இவர்கள் நன்னிலம்
பகுதியில் குழுவாக வாழ்ந்ததாகவும் 1861 மக்கள்தொகைக் கண்க்கெடுப்பில்
அவர்கள் ராமாயணத்தைப் படைத்த வால்மீகி வழி வந்தவர்கள் என்ற பொருளில்
தங்களை வால்மீகி பிராமணர்கள் என்ற பெயரில் குறிப்பிடப்படுள்ளனர்
பஞ்ச திராவிட பிராமணார்களும் பஞ்சகெளட பிராமணர்களும் மற்ற பிராமணார்களும்
தமிழகத்தில் அவர்கள் வாழும் இட அடிப்படையில் தங்கள் குழுவுக்கென
அடையாளப்படுத்த பல பெயர்காளைப் பயன்படுத்தினர்
சைவப்பிரிவைச் சார்ந்த ஸ்மார்த்த பிராமணர் தங்களுடைய இறைவழிபாட்டு முறை
வாழ்க்கை நெறி அடிப்படையில் பிரச்சரணம் சோளியர் தீக்ஸிதர்
என்றழைத்துக்கொண்டாலும் அவர்களுடைய உட்பிரிவுகள் பெரும்பாலும் அவர்கள்
வாழ்ந்த இடத்தின் அடிப்படையிலேயே பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது
தீக்ஸிதர்கள் கேரளவில் வாழ்ந்த திய்யர்கள் நாயர்களை ஒத்து இருந்ததாகவும்
வடக்கிலிருந்து மதமாற்றம் வழியாக வந்த பிராமணர்களான வடமாப் பிரிவினர்
மற்ற ஸ்மார்த்தர்களைவிட உயர்ந்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டனர்.
பிரச்சரணத்தின் ஒன்பது உட்பிரிவுகள் கண்டரமாணிக்கம் மிளகனூர் மாங்குடி
புத்தூர் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் வாழ்ந்தவர்கள். தமிழ்நாட்டில்
வாழ்ந்த பிராமணர்கள் தங்களின் பிரிவு தோன்றிய இடங்களை அடையாளப்படுத்தியே
தங்கள் பிரிவுகளை அமைத்துக் கொண்டனர். ஸ்மார்த்தர்களில் மிகவும்
உயர்ந்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் வடமா பிரிவினர்
தமிழகத்தின் வடபகுதியில் இருந்தும் சோழ தேசத்திலிருந்தும் உருவான பிரிவு
என்ற அடிப்படையில் வடமா என்ற பெயர் உருவானது பிரசரனம் மத்தியமன்
அஸ்டசஹஸ்ரம் கனியாளர் என்ற பிரிவுகளும் அவர்கள் உருவான இடத்தின்
அடிப்படையில் பெயர்பெற்றது
ராமானுஜாச்சாரியார் வைணவப் பிரிவைத் தொடங்கியபோது ஸ்மார்த்தர்கள் தமிழ்க்
குமுகத்தில் உள்ள சிலபிரிவுகளை ஒதுக்கியவுடன் (குறிப்பாக வண்ணார்)
அவர்கள் அனைவரும் வைணவப் பிரிவில் இணந்தனர். வைணவப் பிரிவும் வடகலை
என்றும் தென்கலை என்றும் நிலப்பிரிவின் அடிப்படையில் பெயரிடப்பட்டது
இப்பிரிவுகளில் உயர்வு தாழ்வு என்பது ஒருவருக்கொருவர் தங்களை
மற்றவர்களிடமிருந்து உயர்த்திக்கொள்ள கண்டிபிடித்த வாதங்கள் அடிப்படையில்
அமைந்தது. கோத்ரம் என்பது ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவில் திருமண
உறவை ஏற்படுத்திக்கொள்ள வகை செய்தது. பெண் தன்னைவிட உயர்ந்த பிரிவில்
திருமணம் செய்துகொள்ளவும் அதற்காகவே ஆணுக்கு வரதட்சனை கொடுக்கவேண்டும்
என்றும் பொதுவாக மேல் பிரிவினர் கீழ்ப்பிரிவினருடன் திருமண உறவு வைத்துக்
கொள்வதில்லை என்று மானுடவியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன
நாகராசன்
2012/9/4 Karuannam Annam <karu...@gmail.com>:
--
புத்தருக்குப்பின் பின்னடைவுற்ற குமுகத்தில் குழும வாழ்வின்
தொடக்கநிலையில் உள்ள கிராமங்களில் எஞ்சியிருந்த புத்த பிக்குகள் அடித்து விரத்தப்பட்டு அவர்கள் தொடர்ந்த கல்வி மருத்துவப் பணிகளைத் தொடர விடாமல் தடுக்கப்பட்டனர். அவர்களின் இடத்தைப் பிடித்து ஒரு குழு குமுகத்தின் அவர்களே உயர்ந்தவர்கள் என்ற தகுதியை உருவாக்கிக்கொண்டு தங்களுக்குச்சரிசமமான நிலையில் இருப்பவர்களைத் தங்களுடன் இணைத்துக்கொண்டு ஒரு தனிக்குழுவாக குமுகத்தில் இயங்க ஆரம்பித்தனர்.
மற்ற குழுக்களிடம் இருந்து தனித்துக்காட்டும் என்ற யுக்தியை உணர்ந்து
செயல் படுத்தினர்
பெளத்த விகாரங்கள் தங்களை மாற்றிக்கொண்டு அந்தணர் மறை வளம் பற்றி அறிந்து அந்தணர்களாக மாறப் பலருக்கு வாய்ப்புக் கொடுத்து பல புத்தப் பள்ளிகளை அந்தணர் மரபுவழி அறியும் புதிய பள்ளிகளாக மாற்றி
வாழ்ந்த பெளத்தர் மற்ற அறிஞர்களைத் தமிழ்ப் பிராமணர்கள் என்று கூறலாம்.
சைவப்பிரிவைச் சார்ந்த ஸ்மார்த்த பிராமணர் தங்களுடைய இறைவழிபாட்டு முறை
வாழ்க்கை நெறி அடிப்படையில் பிரச்சரணம் சோளியர் தீக்ஸிதர்
பிரச்சரணத்தின் ஒன்பது உட்பிரிவுகள் கண்டரமாணிக்கம் மிளகனூர் மாங்குடி புத்தூர் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் வாழ்ந்தவர்கள்.
ராமானுஜாச்சாரியார் வைணவப் பிரிவைத் தொடங்கியபோது ஸ்மார்த்தர்கள் தமிழ்க்குமுகத்தில் உள்ள சிலபிரிவுகளை ஒதுக்கியவுடன் (குறிப்பாக வண்ணார்)அவர்கள் அனைவரும் வைணவப் பிரிவில் இணந்தனர். வைணவப் பிரிவும் வடகலை என்றும் தென்கலை என்றும் நிலப்பிரிவின் அடிப்படையில் பெயரிடப்பட்டது
கோத்ரம் என்பது ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவில் திருமண
உறவை ஏற்படுத்திக்கொள்ள வகை செய்தது.
Chapter 6
Nagarajan
2012/9/5 Karuannam Annam <karu...@gmail.com>:
>> ராமானுஜாச்சாரியார் வைணவப் பிரிவைத் தொடங்கியபோது ஸ்மார்த்தர்கள்
>> தமிழ்க்குமுகத்தில் உள்ள சிலபிரிவுகளை ஒதுக்கியவுடன் (குறிப்பாக
>> வண்ணார்)அவர்கள் அனைவரும் வைணவப் பிரிவில் இணந்தனர். வைணவப் பிரிவும் வடகலை
>> என்றும் தென்கலை என்றும் நிலப்பிரிவின் அடிப்படையில் பெயரிடப்பட்டது
>
>
> இராமானுஜர் வைணவப்பிரிவைத் தொடங்கினாரா?
>>
பேரா சொல்லும் பிரிவு என்பது ஶ்ரீஷைணவ நெறி (தரிசனம்)
நீங்கள் கேட்பது உட்பிரிவுகள். உடையவர் காலத்தில் ஒன்றேதான் இருந்தது.
வடகலை எனும் பிரிவு ஸ்தாபிதப்பட்டது மிகப்பின்னால்.
அகோபிலமடத்திலிருக்கும் பெருமாளே தென்கலைத்திருமண்தான் இட்டு இருக்கிறார்
என்பதே உண்மை (உ.வே.வேங்கடகிருஷ்ணன் தனிப்படச் சொன்னது). இப்பிரிவுகள்
அதிவேகமாக மறைந்துவருகின்றன. கொடுக்கல், வாங்கல் அதிகரித்துள்ளது.
ஏனெனில் இப்பிரிவுகள் அல்ப காரணங்களுக்காக ருசி பேதத்தில் உருவானவை.
உடையவர் இராமானுஜதாசர்கள்தான் அனைவரும்.
நா.கண்ணன்
அப்புள்ள மின் தமிழினருக்கு
பிரகத் சரணம் எனும் சொல்லுக்கு நீண்ட (கை )கால்களை உடையபிறப்புடைய கோத்திரத்தினர் என்பார் மறைமலை அடிகள் (நினைவு)
காட்டுப்பள்ளி சேர்ந்த குடும்பம் அவர்நல்ல உயரமான வர் கைகளும் நீண்டுஇருக்கும் .*நீண்ட கரத்தார்* என்பார் மணிவாசகர்
(pernThalaivar} uyar thiru.Ku.Kamaraj, hands is also long size type.
நண்பர் திரு ஹரிகி இப்பிரிவுகள் இனக்குழுக்கள் எனக் குறிப்பிடுகிறார்.
ஸ்மார்த்தர்களில் தமிழகத்தின் வடபகுதியில் இருந்தும் சோழ
தேசத்திலிருந்தும் உருவான பிரிவு வடமா பிரிவு. மிகவும் உயர்ந்தவர்கள்
என்று தங்களை அழைத்துக்கொண்டனர்
பிரச்சரணத்தின் உட்பிரிவுகள் ஒன்பது. அவர்கள் கண்டரமாணிக்கம் மிளகனூர்
மாங்குடி புத்தூர் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் முதலில் வாழ்ந்தவர்கள்.
நாகராசன்
2012/9/5 Karuannam Annam <karu...@gmail.com>:
தமிழக வரலாற்றில் பல கால கட்டங்களில் நால்வகைக்குழுவாக (அந்தணர், வேளிர்,
நாகர் பறையர்) இருந்த தமிழர் திணை அடிப்படையில் அமைந்த தொழில் முறையில்
அவர்கள் மேலும் பெருகி குடிகளாக மாறினர்.
ஏழாம் நூற்றாண்டு அளவில் ஸ்ரீவிஜயன் தூதர்கள் இலங்கைக்குப் பாண்டிய
இளவரசியைப் பெண்பார்க்க வந்தபோது வேளிர்களில் 49 உட்பிரிவிகளும் மற்ற
குடிகளின் உட்பிரிவுகளும் அனுப்பிய பிரதிநிதிகள் இலங்கை செனற்தாகவும்
குறிப்புள்ளது
இதுவே தமிழ்க் குமுக அமைப்பு
முதன்மைக் குழுக்கள்
தொழில் அமைப்பில் குடிகள்
குடிகளுக்குள் உட்பிரிவுகள்
என்று வாழ்ந்தனர் என்பது தெளிவு
பிற்காலச் சோழர் காலத்தில் ஆகம வழிபாடு அறிமுகப்படுத கட்டத்தில் பொது
வழிபாட்டுக்காகக் கட்டப்பட்ட பெருங்கோவில்களில் வடபுல நால்வகை வருணம்
என்ற அடிப்படையில் கோவிலின் உள்ளே எந்தக்குழு எங்கே நின்று வணங்கவேண்டும்
என்ற பிரிவும்
அதன் பின்னர் தமிழ்க் குமுகம் மூன்று பெரும் பிரிவாகி மஹாஜனங்கள்
(பிராமணர்கள்) இடங்கை வலங்கை என்று பகுக்கப்பட்டு விரிவான ஜாதிமுறை
நிறுவப்பட்டது
ஆழ்ந்த தீவிர ஆய்வு மட்டுமே குழப்பங்கள் தெளிவுபெற வழிவகுக்கும்
நாகராசன்
2012/9/5 DEV RAJ <rde...@gmail.com>:
மாண்ட் நம்ம ஏ.ஆர்.ரகுமானுக்கும் பிடிக்குமென்று உன்னி கிருஷ்ணன்
சொல்கிறார். இந்த ராகத்தில் அவரும் நிறையப் பாடல்கள்
இசைத்திருக்கிறாராம்!
க.>
2012/9/5 DEV RAJ <rde...@gmail.com>:
> http://www.youtube.com/watch?v=BfePKl8_vaw
>
தூரன் குலத்தார்களுக்கு துவரை குலப்பயிர்.
துவரைக்குறிச்சி, துவரைமங்கலம், ... போன்றா ஊர்களை
நிறுவியவர்கள். குமாரமங்கலம் Dr. ப. சுப்பராயன் தூரன்.
அயர்லாந்து சென்று படித்தவர். விமான விபத்தில் இறந்த்
மோகன் குமாரமங்கலத்தின் தந்தை.
அகத்தியர் தலைமையில் துவராபுரியிலிருந்து வந்த
வேளிரில் ஒருகுடியினர் தூர கோத்திரத்தவர் என்று
பெ. தூரன் போன்றோர் சொல்லியுள்ளனர். கர்நாடகாவிலும்
துவரை என்ற ஊர்களும் உள்ளன.
நா. கணேசன்
https://groups.google.com/forum/#!msg/mintamil/5t2JumQm42A/3b-PxpL6xY0J
காளியணப் புலவர் குமரமங்கலத்தார் மீது
பாடிய பாடல்கள் சுவையூறுவன. அவற்றுள் இரண்டு.
பானையிலே சோறுதின்பான் சட்டியிலே கறிநுகர்வான் பங்கியுண்பான்
ஆனெய் தின்பான் பூனெய் தின்பான் பலகாரமாப் பண்ணி அரிந்தேயுண்பான்
தானமது கட்கஞ்சா வவனிகொள்வான் பரம்பரையாய்ச் சைவனென்பான்
மேன்மைபுகழ் குமரமங்கைப் பரமசிவன் செங்கோட்டு வேலன்தானே (1)
(இருபொருள் உள்ள பாடல் இது, பூநெய் = தேன். பங்கி (bhangi - வடசொல் =
போதைப்பொருள் ஒன்று,
பங்குதல் எனினும் அமையும். அவனி = அபினி, உலகு எனினும் அமையும்.)
தேவடியார் தமைக்காணிற் சாமிபுத்தி எனவணங்கித் தெண்டஞ்செய்வான்
ஆவலுட வர்களிட காற்கழுவிக் குடிப்பா னடியின்மீதே
தூவலர்கொண் டருச்சிப்பான வர்களெச்சிறனை நுகர்வான் தூரகோத்திரன்
மேவுபுகழ்க் குமரமக்கைப் பரமசிவன் செங்கோட்டு வேலன்றானே (2).
பிரகச் சரணம் - பெரிய பயணம் (பெருஞ்செலவு) என்பது பொருள் என்று
படித்துள்ளேன். வடக்கே இருந்து முதலில் கூட்டமாகப் பயணித்தவர் என்ற
பொருளில். சங்க காலத்தில் முதலில் தமிழ்நாட்டை வந்தடைந்த பிராமணர்கள்,
இதன் பின் வந்தவர்கள் வடமர்கள் என்பார்கள். பரிதிமாற் கலைஞரின்
உறவினர் டாக்டர் ந. சுப்பிரமணியன் வரலாற்றுப் பேராசிரியர்.
95 வயதிற்கு மேல் ஆகிவிட்டது. உடுமலைப்பேட்டயில் பல்லாண்டுகள்
பணியாற்றி ஓய்வுபெற்றவர். பல வரலாற்று நூல்கள் எழுதியுள்ளார்,
The brahmin in the Tamil country முக்கியமான புஸ்தகம். பார்க்கவும்.
பாரதியார், சி. வி. ராமன், ... - ப்ரகச்சரணம்.
நா. கணேசன்
காசியில் மிக முக்கியமான வழிபாடு பைரவருக்குண்டு.
வைரவன் சிவபிரான் மகன் என்பது புராணம். அதனால்
அவருக்கு ஆண்டபிள்ளை, வடுகபிள்ளை என்று தமிழ்க்
கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. காளாமுக, காபாலிக
வைரவ வழிபாடுகள் தொடர்புள்ளவை. அண்மையில்
வெளிவந்த புஸ்தகம் இவற்றை விளக்குகின்றன:
http://indologica.blogg.de/2006/09/17/nagaswamy-art-and-religion-of-the-bhairavas/
தமிழ்நாட்டில் நிறைய பைரவர்கள் இருந்தாலும்
மகாபைரவர் எனப்படும் காசிபைரவர் வழிபாடு
கண்டரமாணிக்கத்திலேதான் (பெரிச்சியூர்):
http://bairavarvazhibaadu.blogspot.com/2011/03/150.html
கொங்கில் பிரசித்திபெற்ற பைரவர்கள் பழனி, கரூர், அவினாசி
எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கண்டரமாணிக்கத்தில் ஆண்டபிள்ளை நாயனார் என்ற
பைரவர் சன்னிதி பிரசித்தமாக விளங்குகிறது. பிரகச்சரணம்
அந்தணர்கள் 10-ஆம் நூற்றாண்டு வாக்கில் இவற்றைத்
தோற்றுவித்திருக்கலாம். பாரதியாரின் தந்தை எட்டயபுரத்துக்கு
வேலைக்காக வந்தவர். அவரது ஊர் சீவலப்பேரி (ஆதாரம்:
சக்திதாசன் சுப்பிரமணியன், மகாகவி பாரதியார்.)
வைரவ வழிபாடு கர்நாடகாவிலிருந்து கொங்கின்
வழியாக கண்டரமாணிக்கம் போன்ற ஊர்களுக்குத்
தெற்கில் அடைந்துள்ளது.
ஆண்டபிள்ளை நாயனார் (பைரவமூர்த்தி) திருக்கோயில், கண்டரமாணிக்கம்
http://bairavarvazhibaadu.blogspot.com/2011/03/blog-post_07.html
http://vijayastreasure.blogspot.com/2011/02/blog-post_1730.html
இதேபோல, கொங்கின் குரக்குத்தளியிலும் பைரவர் வழிபாடு
சிறப்பாக இருந்துள்ளதைக் கல்வெட்டு ஆவணப்படுத்தியுளது.
வடுகபிள்ளை நாயனார் (பைரவமூர்த்தி) - குரக்குத்தளி (சர்க்கார்
பெரியபாளையம்).
புலவர் செ. இராசு ஐயா அனுப்பியதை முன்னரே அளித்துள்ளேன்.
பைரவர் வடுகபிள்ளை நாயனார்க்கு ஊரின் மடவிளாகத்துக்கு தெற்குத்
தெருவில் வசிக்கும் உபயதாரர் வைத்த சந்தியாதீபத்தைப் பெற்றுக்
கொண்டு அதற்கு அத்தாட்சியாக கோயில் சிவாச்சாரியார் எழுதிக்
கொடுத்த முக்கியமான கல்வெட்டு இது.
-----------------------------
சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு
(ARE 306 of 1908)
1) ஸ்வஸ்திஸ்ரீ சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு 3வது வீரசோழ
வளநாட்டு முகுந்தனூருடையார் குரக்குத்தளி ஆளுடையார்
2) கோயில் வடுகப்பிள்ளையார்க்கு இந்நாயனார் திருமடை
விளாகத்தில் தெற்கில் தெருவிலிருக்கும் தோயா
வஸ்திரச் செட்டி
3) களில் பாவைநல்லூர் உடையான் வேதநாயகன்
செட்டியாழ்வானான சேரமான் தோழனேன் வைத்த
சந்தியா தீபவிளக்கு
4) ஒன்றுக்கு ஒடுக்கின அச்சு ஒன்றுங் கொண்டேன்
இக்கோயிற் காணியுடைய சிவபிராமணன் வாச்சிய
கோத்திர அப்பன் வீரராசேந்திர
5) சோழச் சக்கரவர்த்தியேன் இது குடங்கொடு கோயில்
புகுவார் சந்திராதித்தவரை செலுத்துவதாக இது
பன்மாஹேஸ்வரர் ரக்ஷை உ
-----------
நா. கணேசன்
நா. கணேசன்
இல்லை ஐயா.
ராஜகம்பீரம், கண்டரமாணிக்கம் இரு
ஊர்களும் ப்ருஹச்சரணப் பிரிவில் உள்ளன.
திருவண்ணாமலை, சத்திய மங்கலம், மாங்குடி, மழநாடு,
பழமார்நேரி, ராஜகம்பீரம், கண்டரமாணிக்கம் என்பவை
ஊர்ப்பெயர்களில் அமைந்த பிரிவுகள். ராஜகம்பீரம்,
கண்டரமாணிக்கம் இரண்டும் சிவகங்கை மாவட்டத்தில்
அமைந்தவையே. மொகலாயர் படையெடுப்பின்போது
பெரும்பாலானோர் அங்கிருந்து அகன்றனர். பாண்டியர்
குடியும் சிதறுண்டது.
க்ருஷ்ணா, கோதாவரி பிரந்தியங்களைச் சேர்ந்தோர்
பெரும்பான்மையான தேசஸ்த பிராமணர்கள்.
கணித மேதை பாஸ்கரரும், பவபூதியும், ஸமர்த்த ராமதாஸரும்
இப்பிரிவில் தோன்றியவர். பிற்காலத்தில் புலப்பெயர்வு.
ஊர்ப்பெயரை ஒட்டிய பிரிவுகள் அவர்களிடமும் உண்டு.
புணேகர்,செம்பூர்கர் என்பன போன்ற பிரிவுகளை
அவர்களிடம் பார்க்கலாம். மராட்டிய மன்னர்கள்
தஞ்சையை ஆண்ட காலத்தில் இங்கு வாழ்ந்தவர்
தஞ்சோர்கர். இதைக் குடிப்பெயராகக் கொண்டோர்
இன்றும் உள்ளனர்.
charaNam - கால்; s'araNam - புகல், அடைக்கலம்.
முன்பு ராஜா சங்கர் கேட்டிருந்தார்.
கணேசர் ஐயா கொடுத்த ‘பெருஞ்செலவு’ சரியான
விளக்கம்
தேவ்
> 2012/9/6 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > கண்டரமாணிக்கம் - பழைய ஊராகத் தெரிகிறது.
> > கண்டன், கண்டி என்று தமிழ்ப்பெயர்கள்.
> > கண்டி - எருமைப்போத்து. வென்ற கொற்றவைக்கும்
> > கண்டியம்மன் என்ற பெயர். கண்டிமுத்து என்று
> > பலருக்கும் கொங்குநாட்டில் பேருண்டு, 2 மாதம் முன்னர்தான்
> > பழனி அருகே உள்ள கீரனூரின் கண்டியம்மன் கும்பாபிடேகம்
> > என் உறவினர்கள் நடத்தினார்கள் (9-ஜூலை-2012).
> > நீல-கண்டன், நீல-காண்டி இப்பெயர்களை விளக்கி
> > ஐராவதம் அழகான கட்டுரை வரைந்துள்ளார்கள்.
> > கண்டர்மாணிக்கம் என்னும் ஊர் கண்டரமாணிக்கம்
> > என வழங்குகிறது எனக் கருதுகிறேன். கண்டி எனப்படும்
> > ஆமாவின் தலை புத்தரின் சின்னமாகக் காட்டப்படும்.
> > சோழமன்னர்களுக்கு கண்டன் என்ற பட்டம் உள்ளது,
> > கண்டருடைய மாணிக்கம் - கண்டரமாணிக்கம்,
> > கல்வெட்டுக்களைப் பார்க்கணும்.
>
> > காசியில் மிக முக்கியமான வழிபாடு பைரவருக்குண்டு.
> > வைரவன் சிவபிரான் மகன் என்பது புராணம். அதனால்
> > அவருக்கு ஆண்டபிள்ளை, வடுகபிள்ளை என்று தமிழ்க்
> > கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. காளாமுக, காபாலிக
> > வைரவ வழிபாடுகள் தொடர்புள்ளவை. அண்மையில்
> > வெளிவந்த புஸ்தகம் இவற்றை விளக்குகின்றன:
>
> >http://indologica.blogg.de/2006/09/17/nagaswamy-art-and-religion-of-t...
> ...
>
> read more »
On Sep 6, 11:07 am, Karuannam Annam <karuan...@gmail.com> wrote:இல்லை ஐயா.
>>>> இக்காரணங்களால் கண்டரமாணிக்கம் பிரஹச்சரணம் என்ற
பிரிவு வேறு ஊரைக்குறிக்க வேண்டும் எனக் கருதுகிறேன். <<<
ராஜகம்பீரம், கண்டரமாணிக்கம் இரு
ஊர்களும் ப்ருஹச்சரணப் பிரிவில் உள்ளன.
திருவண்ணாமலை, சத்திய மங்கலம், மாங்குடி, மழநாடு,
பழமார்நேரி, ராஜகம்பீரம், கண்டரமாணிக்கம் என்பவை
ஊர்ப்பெயர்களில் அமைந்த பிரிவுகள். ராஜகம்பீரம்,
கண்டரமாணிக்கம் இரண்டும் சிவகங்கை மாவட்டத்தில்
அமைந்தவையே.
அன்பின் வினைதீர்த்தான் ஐயா,
இவைற்றையெல்லாம் ஒரு கட்டுரையாக்கி தருவீர்களாயின் நம்மின் மரபுவிக்கியில் சேர்த்து வைக்கலாம். பலருக்கு உபயோகப்படும்.
அன்பின் வினைதீர்த்தான் ஐயா,
இவைற்றையெல்லாம் ஒரு கட்டுரையாக்கி தருவீர்களாயின் நம்மின் மரபுவிக்கியில் சேர்த்து வைக்கலாம். பலருக்கு உபயோகப்படும்.
இதே போல் உங்களுக்கு தெரிந்த ஊர்களைப்பற்றியும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். லோ த சு அவர்கள், உதயன் அவர்கள் சொல்வது போல் கூகுள் மேப்பில் குறித்து வைக்கலாம். தலப்பயணம், கோவில் பயணம் போவோறுக்கு உதவியாக அமையும்.
ராஜசங்கர்
(Rajasankar)
2012/9/6 Karuannam Annam <karu...@gmail.com>மேலும் நகரத்தார் ஊர்களில் பழமையானது. மற்ற நகரத்தார் ஊர்கள் காடுவெட்டிப்போட்டுப் போட்டுக் கடிய நிலந்திருத்தி வீடுகட்டிக்கொண்டதால் ஒழுங்கான நேரானவீதிகள் அமைந்தவையாக இருக்கும். ஆயின் கண்டரமாணிக்கத்தில் வீதிகள் அவ்வளவு நேரானவையல்ல. சிறு கி்ளை வீதிகள் அதிகம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> பழமார்நேரி, ராஜகம்பீரம், கண்டரமாணிக்கம் என்பவை
> நலம். தங்கள் மெயிலில் குறிப்பிட்டுள்ள கண்டரமாணிக்கம் , சிவகங்கை
> மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ளது அல்ல.
எங்க மறவர் நாடு ராஜகம்பீரத்தில் ஐயர்மாரே கிடையாது. ஆயினும் ஒரு
தொல்லியலாளருடன் போன போது சதுர்வேதிகள் நிரம்பிய பகுதி அது, செப்பேடுகள்
நிரப்பச் செப்புகின்றன என்று சொன்னார். எனவே தமிழகத்தில் வேறு
ராஜகம்பீரம் உள்ளதா என அறிய ஆவல்.
நா.கண்ணன்
ஊர்ப்பெயர்களைச் சேர்த்துக்கொள்வது
அடையாளத்துக்கு. இந்தியா முழுவதும்
காணப்படும் பழக்கம். ஊர்ப்பெயர் Surnames
ஆவதும் உண்டு.
சில வைணவர் ஒன்றுக்கு மேற்பட்ட
ஊர்ப்பெயர்களைக்கூடப் பெயருக்கு
முன்னால் இணைத்துக் கொள்வதுண்டு.
சில வைணவ இனக்குழுக்கள் -
எலி, தட்டை, சேட்லூர், மாடபூசி.
கேரளத்தில் மன, இல்லம் எனும்
பெயர்களில் குடும்ப அடையாளங்கள்.
ஆந்திர மனவாடுக்கள் ' இண்டி பேர்லு’
என்று பெயருக்கு முன்னால் இணைத்துக் கொள்வர்.
நம் ரீச் சந்திரசேகரின் ‘மரபூர்’என்பதுகூட
அதைப்போன்றது என நினைக்கிறேன்.
இண்டி பேர்லு - கோடா, ரேலங்கி, கடியாரம், குப்பிலி.
அரச குடும்பத்தினர் உறங்குமுன் கொசுவலை கட்டுவோர்
‘ஈகலா’ எனும் பட்டம் பெற்றனர்; பால் விற்றோருக்கு
’பாலகுண்டா’.
வேளாளரில் ‘கார்காத்த வேளாளர்’ எனும் உள்ளினப்பிரிவு
உயர்ந்தது எனும் கருத்தியல் ஒன்று இருந்தது.
[ யாரும் சண்டைக்கு வந்து விடாதீர்கள்; இலக்கியத்தை ஒட்டிய
சுவையான பேச்சு இது ]
உக்கிர பாண்டியன் பொதியமலைச் சாரலில் வேட்டையாடச் சென்றபோது
மேகங்கள் பாண்டிய நாட்டில் மழை பொழியாமல் வானில் திரியக் கண்டு,
சினங்கொண்டு அவற்றைச் சிறையிலடைத்து விட்டான். இதனை அறிந்த
இந்திரன் பாண்டியனோடு பொருதுவதற்கு வந்து ஆற்றாதவனாகி திரும்பச் சென்று
”பாண்டிய நாட்டில் மாதமொரு முறை மழை பொழியச் செய்கிறேன்.
மேகங்களை விடுவித்து விடவும்” என்று பாண்டியனுக்கு ஓலை வரைந்தான்.
அதைக் கண்ட பாண்டியன், ’இந்திரனின் ஒப்புதலுக்குக்கு யார் பிணை ?’
என வினவ, வேளாளர் ஒருவர் பிணையாக இருந்து மேகங்களை விடுவித்ததாக
இவ்வழகிய திருவிளையாடற் புராணச் செய்யுள் கூறுகிறது -
இட்டவன் சிறையை நீக்கி யெழிலியை விடாது மாறு
பட்டசிந் தையனே யாகப் பாகசா தனனுக் கென்றும்
நட்டவ னொருவே ளாள னான்பிணை யென்று தாழ்ந்தான்
மட்டவிழ்ந் தொழுகு நிம்ப மாலிகை மார்பி னானும்.
[நிம்ப மாலிகை - வேப்பம்பூ மாலை]
கார்காத்த வேளாளர் அவர் வழியினர் என்று கூறுவர்.
மட்டவிழ்ந் தொழுகு நிம்ப மாலிகை மார்பு - என்ன
அழகான தமிழ் ! முனைவர் கண்ணன் முன்பு ஒருமுறை
கேட்டதையே எனக்கும் இப்போது கேட்கத் தோன்றுகிறது -
தமிழனின் அழகுணர்ச்சி எங்கே மறைந்து போயிற்று ?
தொன்மைக்குச் சண்டையிட்டே அழகுணர்வைத்
தொலைத்தானோ ?
தேவ்
வேறெங்கும் கிடையாது, ஐயா
தேவ்
On Sep 7, 11:20 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2012/9/7 Karuannam Annam <karuan...@gmail.com>:
மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ளது அல்ல. கண்டரமாணிக்கம் பிரஹச்சர்ணம் என்பது
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில் உள்ள கிராமம் கண்டிரமாணிக்கம் [ நன்னிலம்
அருகே] உள்ளது. இங்குதான் பிரஹச்சர்ண பிரிவு ஸ்மார்த்த பிராமணர்கள் அதிகம் உண்டு.
அன்புடன்,
சங்கரன் , மதுரை
--
--
On Sep 6, 11:07 am, Karuannam Annam <karuan...@gmail.com> wrote:இல்லை ஐயா.
>>>> இக்காரணங்களால் கண்டரமாணிக்கம் பிரஹச்சரணம் என்ற
பிரிவு வேறு ஊரைக்குறிக்க வேண்டும் எனக் கருதுகிறேன். <<<
கண்டரமாணிக்கம் பிரஹச்சர்ணம் என்பது
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில் உள்ள கிராமம் கண்டிரமாணிக்கம் [ நன்னிலம்
அருகே] உள்ளது. இங்குதான் பிரஹச்சர்ண பிரிவு ஸ்மார்த்த பிராமணர்கள் அதிகம் உண்டு.
அன்புடன்,
சங்கரன் , மதுரை
--