பண்ட மாற்று அனியாயம்

4 views
Skip to first unread message

Thamizth Thenee

unread,
Jul 25, 2007, 1:31:14 AM7/25/07
to இல்லம் (your HOME), தள்ளுபடி
அன்பர்களே பல காலமாக ஒரு அனியாயம் நடந்து கொண்டிருக்கிறது
பொது மக்களை எல்லோருமே சுரண்டுகிறார்கள்
சமீபத்தில் என் மனைவி அரிசி வேகும் குக்கர் பண்ட மாற்று முறையில்
தள்ளுபடி விற்பனை நட்க்கிறது ,நாமும் அதில் பழைய குக்கரை
போட்டுவிட்டு புதியது வாங்குவோம் எனறாள்
நாங்களும் அந்த ப்ரபலமான அரிசி வேகவைக்கும் பாத்திரக் கடைக்கு சென்றோம்
அஙகே எங்களுடைய பழைய அரிசி வேகவைக்கும் பாத்திரத்தை
அடிமாடு விலைக்கு எடுத்துக் கொண்டு அவர்களுடைய புதிய
அரிசி வேகவைக்கும் பாத்திரத்தை அநியாயமான விலைக்கு எங்களிடம்
விற்றார்கள்
இது போல ஒவ்வொரு கடைக் காரர்களும் அவர்கள் விற்க்கும் பொருளுக்கு
உத்திரவாதம் கொடுக்கிறார்கள் ஆனால் கெட்டுப் போனால் அந்த யந்திரத்தின்
எந்த்த எந்த பாகங்கள் அடிக்கடி உடையுமோ கெட்டுப் போகுமோ அவையெல்லாம்
தவிர்த்து மற்ற பாகங்களுக்குதான் உத்திரவாதம் என்று சொல்லி மீண்டும்
நம்ம்மிடம்
அதிகப் பணம் வசூலிக்கிறார்கள்ு
நாம் பல வகையிலும் நட்டப் படுகிறோம்
வருடாந்திர உத்திரவாதம் கொடுக்கும் அத்தனை உற்பத்தியாளர்களும்
அவை கெட்டுப் போனால் அவைகளுக்கு எந்த பரிகாரமும் செய்வதில்லை
பணம் வாங்காமல்
அப்படியே நகை ,பொன் நகை அவைகளை நேற்று வாங்கி
இன்று அவர்களிடம் போய் திருப்பிக் கொடுத்தாலும்
நாம் கொடுக்கும் போதும் , வாங்கும் போதும் செய் கூலி சேதாரம் என்று
எல்லா செலவுகளையும் நம் தலையிலே கட்டி நம்மைக் கொள்ளை அடிக்கிறார்கள்
ஒரு சவரன் மோதிரம் வாங்கி ஒரு மாதம் தான் ஆகிறது
அதை மாற்ற வேண்டி கடைக்குப் போனோம்
அதே ஒரு சவரன் மோதிரம் புதியது அந்தப் பழைய மோதிரத்தின்
விலையை விட இரண்டாயிராம் ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கி வந்தோம்
மக்கள் பணம் கொள்ளை அடிக்கப் படுகிறதே ,அனியாயமாய் மக்கள் ஏமாற்றப்
படுகிறார்களே இவற்றை எப்படித் தடுப்பது மிகவும் கொடுமை
அன்புடன்
தமிழ்த் தேனீ
www.thamizthenee.blogspot.com
Reply all
Reply to author
Forward
0 new messages