Re: [MinTamil] Hibiscus

20 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 19, 2019, 11:07:01 AM8/19/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Tue, Aug 6, 2019 at 10:11 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
செம்பருத்தி என்று பொதுமக்கள் அழைக்கும் இப்பூவிற்கும் பருத்திக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. 
இப்பெயரைப் பாமரர் செம்பரத்தம்பூ என்று சொல்வது தான் சரியான வடிவம் என்று தோன்றுகிறது. 
அரத்தம் என்ற வடமொழிச் சொல்லும்; செம் - என்னும் தமிழ்ப் பண்புப் பெயர்க் கூறும் சிவப்பு என்ற  ஒரே பொருளைத் தருபவை.  
ஆங்கிலக் கலப்பில் கேட்டுவாசல், நடுசென்டர் உருவானது போல;  வடசொற்கலப்பில் செம்பரத்தம்பூ என உருவாகியுள்ளது எனத் தெரிகிறது. 
சக 
கைபேசியிலிருந்து. ...


அரத்தை என்று சிவப்பான கிழங்கு, பூ கொண்ட தாவரம் உள்ளது. அதில் இருந்து வேறுபடுத்த செம்பு+அரத்தை
செம்பரத்தை (பிங்கலந்தை) பெயர் சூட்டியுள்ளனர்.

அரக்குதல் (பிறவினை)/அரங்குதல் (தன்வினை) அடிப்படையான தமிழ்ச்சொல். அரிதல் என்பதுடன் தொடர்புடயது.
அரக்குதல் > அரம் என்னும் அரிகருவி.  “அரம் போலும் கூர்மையரேனும் ...” (குறள்). விலங்குகளின் உறுப்புகளை அரக்கும்போது வடிவது அரத்தம். அரத்தம் வடக்கே ரத்தம் > ரக்தம் என்றானது. மீள்கடனாய் தமிழ் ரத்தம் எனும் சொல்லைப்பெற்று இரத்தம் என்கிறோம். அரங்கேசனை இரங்கேச வெண்பா என்று நூல் இயற்றுவதுபோல்.
அரை என்றால் (போதி) அரசமரம். அரைச்சல் இரைச்சல். அதுபோலவே, சிவப்பான பழம் கொண்டது அரத்தி/அலந்தை இரத்தி/இலந்தை என்று ஆகியிருக்க வேண்டும். அரங்கம் >> ரங்கம் (ரங்கராஜ்) >> லங்கா என்பதும் ர/ல நாறுபாடு.

அரக்கு > லக்கு (lac) என்றாவது ர/ல மாறுபாடு. நீர்/நீல், .... ஆறரை ஆண்டு முன் எழுதிய மடல்:

அரதனம் (ரத்னம்) - சிவப்புக்கல் என்னும் தமிழ்ச்சொல்
கல்வெட்டுக்களில் -த்த- என்பதை -த- என்று குறிப்பிடுவதைப் பிராமி எழுத்துக்களில் காணலாம்.
இது ஏனெனில், இந்திய மொழிகளின் எழுத்துக்கள் எல்லாம் ஃபோனடிக் எழுத்தாக,
ஒரு எழுத்துக்கு ஒரே உச்சரிப்பு என்னும்போது, தமிழ் மாத்திரம் ஃபோனிமிக் எழுத்தாக விளங்குவது
காரணம். தமிழில் இரு உயிர் எழுத்துக்கு நடுவே உள்ள வல்லெழுத்து -த்- -dh- என ஒலிக்கும்.
ஆனால், வடக்கே அதுவும் -th- தான். இந்த அடிப்படையில் -க்க-, -ச்ச-, -ட்ட-, -ப்ப- இவைஎல்லாம்
முறையே -க-, -ச-, -ட-, -ப- என பல லிபிகளில் பிராமியின்ஆரம்ப காலத்தில் எழுதலாயினர்.
இரட்டித்து வரும் வல்லெழுத்துக்கள் வல்லொலியாகவே முதலில் இருந்துள்ளது. இதனைத்
தமிழ் பிராமி கல்வெட்டுகளில் பல இடங்களில் பார்க்கலாம். அந்தக் காலகட்டத்தில், இலங்கை
போன்ற ஊர்களில் ஏற்பட்ட பெயர் அரதனம், அதாவது அரதனம்(அரத்தனம்) என்னும் சொல்
அரத்தம் (சிகப்பு) என்னும் தமிழ் வேரில் பிறந்த சொல் ஆகும். சந்து/சாந்து என்னும் மணமுள்ள
மரத்தைத் தமிழர்கள் தென்கீழ் ஆசியாவில் இருந்து கொண்டுவந்து தமிழகத்தில் மலைகளில்
பயிரிட்டனர். வடமொழி இலக்கியங்களில் அதனால்தான் பொதியில் (மலய) மலை வருணனைகளில்
தென்றல், பாம்புகள் சூழ்ந்த சந்தனம் மிகுதியாய் இருக்கும். சந்து/சாந்து (மாரில், நெற்றியில், ...
சாத்துதலால் சாந்து/சந்து சந்தனம் ஆனது. மகரம் கங்கைக்குச் சின்னம், யாமை சின்னம் கொண்ட
ஆற்றை யமுனை என்பதுபோல், தமிழர் சாத்தும் குழம்பைக் கொண்ட மரத்தைச் சந்து/சந்தனம் எனலாயினர்.
இதுபோலவே, அரத்த நிறத்தின் குழம்பை அரத்தகம/அலத்தகம் என்றனர். அரத்த- (சிவப்பு)
வேர்தரும் முக்கியச் சொல் அரதனம் (cf. சந்தனம் என்னும் தமிழ்ச் சொல்போல).
அரத்தனம் - இத் தமிழ்ச் சொல் வடவிந்திய லிபிகளில் அரதனம் என்றெழுதினால் 
அரத்தனம் என்றொலிக்கப்படுகிறது. சொல்முதல் அ- ஒலி
பட்டு ரத்தனம்/ரத்தினம் என்கிறோம். இதுவே, இரத்தினம் எனவும் எழுதுகிறோம்
அரதனம் என்னும் தமிழ்ச்சொல் வடக்கே இன்றும் பெயர்களில் வழங்குகிறது:
உ-ம்: ரத்தன் டாட்டா. 
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் (உ-ம்: மலாயா, இந்தோனேசியா, ...) குரிச்சி போன்றவை
செய்யப்பயன்படும் சிவந்த காய்களைக் கொண்ட பிரப்பஞ்செடிகளுக்குத் தமிழர்
இட்ட பெயரே இன்றும் அரத்தனம் இன்றும் ரத்தன் என விளங்கிவருதலும் அறியவேண்டிய செய்தி.



அரத்தம் (ரத்தம்) = தமிழின் அடிப்படையான சொல் எனத் தேவநேயப்பாவாணர் விரிவாக நிறுவியுள்ளார்கள் (1).
அத் தொகுதியுடன் சேர்த்த வேண்டிய முக்கியமான சொல் அரதனம். இது serendipity தீவு
எனப்படும் ஈழத்தீவில் உருவாகியிருக்கலாம். சமண இலக்கியங்களில் ரத்தம்/இரத்தம் என்னும் இந்திய மொழிகளில்
வழங்கும் சொல்லின் வேர் தமிழ் என்பற்கான சான்றுகள் காட்டப்பட்டுள்ளன. ஆயிரம் கண்ணான் என வள்ளுவர்
சொல்லும் இந்திரனுக்கு ஏற்பட்ட கண்கள் பற்றி சிந்தாமணிக் காப்பியத்தில் விளக்கவுரை தந்துள்ள பாடல் முன்னர்க்
காட்டி ஆராய்ந்தோம்.

“அரத்தக மருளச் செய்த சீறடி”        (சீவக. 2459) 
“அரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇ”      (சிலப். 14 86)

வேர்ச்சொற் கட்டுரைகள், பக், 56-57, தேவநேயப் பாவாணர் எழுதியது.
”வடமொழியிலுள்ள சொற்களெல்லாம் வடசொல்லேயென்று இடைக்காலத்தில் ஒரு தவறான கருத்து மக்கள் மனத்தில் வேரூன்றி யிருந்ததினால், அரத்தம் என்னும் தென்சொல்லின் வடசொல் வடிவான ரக்த என்பதையே மூலமாகக் கொண்டு, அதைத் தமிழ் முறைக்கேற்ப இகரம் முன்னிட்டு இரத்தம் எனச் சொல்லவும் எழுதவும் தலைப்பட்டனர். இது, அரங்கன் என்னும் தென்சொல்லை ரங்கன் என்னும் வடசொல் வடிவின் திரிபாகக் கொண்டு, இரங்கன் என்று தமிழில் தவறாக எழுதுவ தொத்ததே. திவாகரம் (8 ஆம் நூற்றாண்டு), பிங்கலம் (10ஆம் நூற்றாண்டு?), சூடாமணி (16ஆம் நூற்றாண்டு) முதலிய சொற்றொகுதிகள் (நிகண்டுகள்) இடைக் காலத்தனவாதலின், அவற்றுள்ளும் இரத்தம் என்னும் வடிவு இடம்பெற்றுள்ளது. இது பிற்கால இலக்கியங்கள் அவ் வடிவை யாள இடந்தந்துவிட்டது. ஆயினும், இது மொழிநூலறிவாராய்ச்சி மிக்க காலமாதலாலும், இலக்கிய வழுவைக் களைதற்கு ஒரு கால வரம்பின்மையானும், இனி, தனிச்சொல்லாயினும் தொடர்ச் சொல்லாயினும் இரத்தம் என்னும் வடிவை அரத்தம் என்றே சொல்லாகக் கொண்டு இருவகை வழக்கிலும் பெரும்பான்மையாக வரும் தொடர்ச்சொற்கள் ” [...]

அர- என்றால் சிவப்பு என்ற பொருளில் தமிழில் தோன்றும் சொற்கள் பல. 
அரத்தம் (blood), அரக்கு (lac), அரக்காம்பல் (செவ்வாம்பல்), காலைச் செஞ்சூரியன் - அருணன் (அருணாசலம்),
அரத்தகம்/அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு, அரத்தன் - செவ்வாய்க் கோள் (பிங்கலந்தை) ...

”அரத்த நோக்கினர், அல் திரள் மேனியர்,
பரித்த காவினர். பப்பரர் ஏகினார்” - கம்பர்


சிவந்த கண்களையுடைவர் - அரத்த நோக்கினர்.
---------------------------------------------------------------------------------------------

சிகப்பு என்னும் பொருளில்லாமலும் அர்- எனத் தொடங்கும் பல முக்கியமான சொற்கள் த்ராவிட பாஷைகளில் உள:

(1) அரக்குதல்/அரங்குதல் - வெட்டுதல், வரையறுத்தல் என்னும் பொருள் கொண்ட அரங்கு. உ-ம்: 
திரு அரங்கம் இரு ஆறுகள் மண்ணை அறுத்து அமைக்கும் தீவு. பால்க் ஜலசந்தி அறுத்து
அமையும் தீவு அரங்கம். இதுவே ரங்க/லங்க என்று பாலி மொழியில் பதிவாகியுள்ளது.
இலங்கை என்னும் சொல் தமிழின் அரங்கம் என்பதன் திரிபே. அரங்கு என்னும் இச் சொல்லுக்கும்
சிவப்பு வண்ணத்துக்கும் தொடர்பு யாதுமில்லை.  அரைத்துறைக்கும் சிவப்பு என்பதற்கும்
எத்தொடர்புமில்லை. அரைப்பு/அரப்புப் பொடி பச்சை நிறம் அல்லவா?

(2) உசிலை மரத் தளிர்கள் அம்மியில் அரைத்துச் செய்யும் பொடி: அரைப்பு:அரப்பு. இது சிவப்பாக இல்லாமல், நல்ல பச்சை நிறமாக இருக்கும். ஈரப்பசை காய்ந்தபின்னரும் பச்சைதாம். அரைத்தல் என்னும் வினையடிப் பிறந்த அரப்புக்கு சிவப்பு நிறமில்லை என்பதும் ஓர்க.

(3) அரை = அச்சு (axle). அரை என்னும் தண்டில் இதழ்கள் விரிவது அரைவிரிந்த - அரவிர்ந்த - அரவிந்தம் எனத்  தாமரைக்கு வடசொல் ஆன தமிழ்ச்சொல். அரை எனப்படும் அச்சாரத்தில் சேரும் ’ஸ்போக்ஸ்’ ஆர்/ஆரம் என வழங்குகிறது. ’ஸ்போக்ட் வீல்’ = ஆரச்சக்கரம். ஆரம், ஆணி (லிஞ்ச் பின்) என்னும் தமிழ்ச்சொற்கள் வேதத்திலே வழங்குகின்ற பழைமை உடையன,  அரை, ஆரம் - மரத்தால் ஆனவை. சிவப்பாய் இரா.

(4) சி-/செ- என்னும் வேர் சிவப்பு/சிகப்பு என்பதுபோல், நி- என்னும் வேரில் தோன்றும் நிவத்தல்/நிகத்தல்
நீண்ட மரங்களைக் கொண்ட ஆற்றுக்குப் பெயர் வைத்தனர். நிவா/நிகா ஆறு தில்லை போன்ற
தலங்களில் ஓடுகிறது. அவ்வாற்றங்கரைகளில் மரங்களால் அமைந்த துறைகள் பல:
ஆலந்துறை, அரைத்துறை (அரத்துறை), மாந்துறை ... அரைத்துறை/அரத்துறை போதி
மரத்தின் தொல்தமிழ்ப் பெயர். அடர்ந்த அடவிகளில் தனிமரமாக உயர்ந்து இலைகள் சலசலத்துக்
கொண்டிருக்கும் மரம் அரசமரமே. அரைமரம் அரையால் என்றும் வழங்கும். ஆலும், அரையும் ஒரே இனம் - fig trees.
ஆலினத்தின் மரங்களில் முக்கியமானது அரசமரம். அரை என்னும் மரத்தை
அச்சு என்னும் பொருளை எடுத்து உலகத்தின் அச்சாரம் (axis mundi) என ஹிந்து சமய நூல்கள்
புகழ்வதும் இதனாலே. ஆல், அரச மரங்களுக்கு திருமணம் செய்து ஊராரை அழைத்து விழாக்
கொண்டாடுதல் இந்தியா முழுமையும் உண்டு. அரை (அரசு) மரத்தின் பெயரோ,
ஆலந்துறை, அரைத்துறை (அரத்துறை), மாந்துறை, பனந்துறை, வேப்பந்துறை, ... போன்ற
மரத்தால் அமைந்த இடப்பெயர்களோ சிவப்பு என்னும் பொருள் கொண்டன அல்ல.

(5) அரதனம் (ரத்னம்) என்னும் தமிழ்ச் சொல்லின் வேரையும், அதனால் அமையும்
ரத்தன் (டாட்டா), ரத்தன் பிரம்பு, ... போன்ற சொற்களின் செந்நிறத்தையும் ஆராய
முனைவர் பாவாணர் கட்டுரை ஆதாரம். இணையப் பல்கலை தளத்தில் உள்ளது.

நா. கணேசன்


இல் - இலந்தை = செம்பழமுள்ள முட்செடி. இலந்தை இரந்தை (இலந்தை)

“இரந்தையின் கனி” (சேதுபு. காசிப. 46)

இல் - இர் - இரத்தி = இலந்தை.

“இரத்தி நீடிய வகன்றலை மன்றத்து” (புறம். 34 62)

இர் - இராகி = சிவந்த கேழ்வரகு,

M., T., K., Tu. ragi.

உல் - அல் - அலத்தம் = 1. செம்பருத்தி. 2. செம்பஞ்சுக் குழம்பு.

அலத்தம் - அலத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு.

அலத்தம் - அலத்தை = செம்பஞ்சு.

அல் - அலந்தல் = செங்கத்ரி.

அலந்தல் - அலந்தலி = செங்கத்தரி

அலத்தம், அலத்தகம் என்னும் தென்சொற்களை ஆரியப் படுத்துவான் வேண்டி முறையே, அ - லக்த, அ - லக்தக என உடலை இரு துண்டாய் வெட்டுவதுபோல், இரு கூறாய்ச் சிதைத்துப் பொருள் கூறுவர் வடமொழியாளர்.

அல் - அர் - அரக்கு = 1. சிவப்பு. Skt. rakta. 2. சாதிலிங்கம். 3. செம்மெழுகு. Skt. raksha. அரக்காம்பல் = செவ்வாம்பல் (பிங்.).

அரக்குக் காந்தம் = செங்காந்தக் கல்.

அரக்குச் சாயம் = செஞ்சாயம்.

அரக்கு நீர் = 1. அரத்தம். “புண்ணிடை யரக்குநீர் பொழிய” (சூத. முத்தி. 7, 25). 2. சாதிலிங்கம் கலந்த நீர். “அரக்குநீர்ச் சிவிறி யேந்தி” (சீவக. 2657). 3. சிவந்த ஆலத்தி நீர். “அரக்குநீர் சுழற்றி” (விநாயகபு. 80 277).

அரக்குமஞ்சள் = செம்மஞ்சள்.

அரக்கு (செம்மெழுகு) - M. arakku. K., Tu. aragu. Hindi, lakh; Skt, laksha, raksha; E. lac.

அரக்கு - அரக்கம் = 1. அரத்தம். 2. அரக்கு. (பதிற். 30 27) அர் - அருணம் = 1. சிவப்பு. 2. சிந்தூரம். 3. செம்மறியாடு.

அருணமலை = நெருப்புப் பிழம்பாய் நின்றதாகக் கூறப்பெறும் செம்மலை.

அருணமலை - அண்ணாமலை (திருவண்ணாமலை).

அருணம் - அருணன் = புறப்படும்போது சிவந்து தோன்றும் கதிரவன்.

அர் - அரத்தம் = 1. சிவப்பு. “அரத்த வேணியர்” (கந்தபு. முதனா. 82). 2. குருதி. “அரத்தமுன் டொளிரும் வாளவுணர்” (நைடத. நளன்தூ. 14). 3. பவழம் (திவா.) 4. செம்பருத்தி. 5. செம்பரத்தை. 6. செங்கழுநீர். 7. செவ்வாடை வகை. 8. அரக்கு (திவா.)

அரத்தம் - அரத்தன் = செவ்வாய்க்கோள் (பிங்.)

அரத்தம் - அரத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு.

“அரத்தக மருளச் செய்த சீறடி”        (சீவக. 2459)

இனி, அலத்தகம் - அரத்தகம் என்றுமாம்.

அரத்தம் (குருதி) - Skt. rakta.

அரத்தம் (சிவப்பு) - OE, read, OS. rod, E. red, OHG. rot, ON. rauthr, Coth. rauths, L. rufus, rubeus.

ஓவிய வேலைப்பாடமைந்த செந்நிறப் பட்டாடை பண்டை நாளில் அரத்தப் பூம்பட்டாடை யெனப்பட்டது.

“அரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇ”      (சிலப். 14 86)

வடமொழியிலுள்ள சொற்களெல்லாம் வடசொல்லேயென்று இடைக்காலத்தில் ஒரு தவறான கருத்து மக்கள் மனத்தில் வேரூன்றி யிருந்ததினால், அரத்தம் என்னும் தென்சொல்லின் வடசொல் வடிவான ரக்த என்பதையே மூலமாகக் கொண்டு, அதைத் தமிழ் முறைக்கேற்ப இகரம் முன்னிட்டு இரத்தம் எனச் சொல்லவும் எழுதவும் தலைப்பட்டனர். இது, அரங்கன் என்னும் தென்சொல்லை ரங்கன் என்னும் வடசொல் வடிவின் திரிபாகக் கொண்டு, இரங்கன் என்று தமிழில் தவறாக எழுதுவ தொத்ததே. திவாகரம் (8 ஆம் நூற்றாண்டு), பிங்கலம் (10ஆம் நூற்றாண்டு?), சூடாமணி (16ஆம் நூற்றாண்டு) முதலிய சொற்றொகுதிகள் (நிகண்டுகள்) இடைக் காலத்தனவாதலின், அவற்றுள்ளும் இரத்தம் என்னும் வடிவு இடம்பெற்றுள்ளது. இது பிற்கால இலக்கியங்கள் அவ் வடிவை யாள இடந்தந்துவிட்டது. ஆயினும், இது மொழிநூலறிவாராய்ச்சி மிக்க

காலமாதலாலும், இலக்கிய வழுவைக் களைதற்கு ஒரு கால வரம்பின்மையானும், இனி, தனிச்சொல்லாயினும் தொடர்ச் சொல்லாயினும் இரத்தம் என்னும் வடிவை அரத்தம் என்றே சொல்லாகக் கொண்டு இருவகை வழக்கிலும் பெரும்பான்மையாக வரும் தொடர்ச்சொற்கள் அரத்தக்கட்டி, அரத்தக்கட்டு, அரத்தக் கண்ணன், அரத்தக் கலப்பு, அரத்தக் கவிச்சு, அரத்தக் கழிச்சல், அரத்தக் கறை, அரத்தக் கனப்பு, அரத்தக் காட்டேறி, அரத்தக் காணிக்கை, அரத்தக் குழல், அரத்தக் குழாய், அரத்தக் குறைச்சல், அரத்தக் கொதிப்பு, அரத்தக் கொழுப்பு, அரத்தக் கோமாரி, அரத்தக் குமுதம், அரத்தக் குன்மம், அரத்தச் சிவப்பு, அரத்தச் சுரப்பு, அரத்தச் சுருட்டை, அரத்தச் சூறை, அரத்தப் பலி, அரத்தப் பழி, அரத்தப் பிண்டம், அரத்தப் பித்தம், அரத்தப் புடையன், அரத்தப் பெருக்கு, அரத்தப் போளம், அரத்த மடக்கி, அரத்த மண்டலம், அரத்த மண்டலி, அரத்த மாடன், அரத்த மானியம், அரத்த முடி, அரத்த மூத்திரம், அரத்த மூலம், அரத்த வடி, அரத்த வலிப்பு, அரத்த வழலை, அரத்த வள்ளி, அரத்த விந்து, அரத்த விரியன், அரத்த வுறவு, அரத்த வெட்டை, அரத்த வெறி, அரத்த வேர்வை, அரத்த வோட்டம் என்பன.

அர் - அரளி = செம்பருத்தி. 

 


On Tue, 6 Aug 2019 7:00 pm S Roy, <suji...@gmail.com> wrote:
Is Hibiscus of Indian origin? What is the origin of the word செம்பருத்தி (hibiscus)

Thanks,
Best,
Sujata

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/b4933d36-d3b9-4d28-b039-bd2c86889a3c%40googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcthc8vR61EDfzwmzerpSZcDReGMFR8-%3DB06Gk0WdM7nPQ%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Aug 19, 2019, 11:08:06 AM8/19/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
https://groups.google.com/forum/#!msg/tiruvalluvar/blFomdvdlag/tMhBsf67SeEJ 
On Friday, July 5, 2013 10:27:06 AM UTC-5, சொ.வினைதீர்த்தான் wrote:
தங்கள் விளக்கமும் பகிர்வும் பல செய்திகளை  உள்ளடக்கியுள்ளன. நன்றி திரு கணேசன்
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்



சிவப்பு நிறத்தைக் குறிக்கும் தொல்திராவிட மொழியின் அடிப்படையான ஓர் சொல்: அரத்தம் என்பதாகும்.
அரத்தம் என்றால் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே பவழம், செம்பருத்தி, செங்கிழங்குச் செடி, ...
போன்றவற்றுக்குப் பெயரிட்டு அழைத்தனர்.  பழைய பெயர் செம்பரத்தை இன்று செம்பருத்தி என்கிறோம்
(பருத்திக்கும் செம்பரத்தைக்கும் எத்தொடர்பும் இல்லை!!)

அ- என்று தொடங்கும் திராவிட வேர்ச்சொற்களை சமற்கிருதம் என மயங்குதல் உண்டு. உதாரணம்,
சிவப்புக் கற்களை அரத்தம் என்பது திராவிட மொழி பேசும மக்கள் தந்த பெயர். வெளிறு என்ற
பெயர் Beryl என ஐரோப்பாவில் ஆகியது. அரத்தம் என்ற பெயர் பிரமியில் எழுதும்போது அரதம் என்றெழுதினால்
போதும். இதனைத் தமிழ் பிராமி கல்வெட்டுக்களில் மிகப்பல இடங்களில் அறிந்துகொள்ளலாம்.
பல்வேறு வண்ண மணிகளை எடுத்து அணிவகைகளாக ஆக்குவதில் திராவிட மக்கள் தேர்ந்தவர்களாக
இருந்தனர். உதாரணமாக, அரத்த மணிகள் சிந்துசமவெளியில் மிக அதிகம அணியப்பெற்றதை
ஆர்க்கியாலஜி காட்டுகிறது. இவ்வகை மணிகள் கொடுமணல், பொருந்தலிலும் ஏராளமாக கிடைக்கின்றன.

சாந்து/சந்து சந்தனம் என்பது போல, அரத்த (> ரக்த in Sanskrit) வண்ண மணிகள் அரத்தனம்/அரதனம் என்றாகிறது.
அரத்தம் என்ற தமிழ்ச்சொல் ரக்தம் என்று வடமொழி தமிழிலிருந்து பெறும் கடன்சொல் (loan word) ஆகும்.
இது எவ்வாறெனில், முத்து ‘pearl, பரல்’, வடமொழியில் முக்த என்றாகத் திரிபு ஆவது போலாகும்.
அரங்கு என்னும் தமிழ்ச் சொல் ரங்க என்று வடமொழி கடன்பெறுதல்போல, அரத்தம் என்னும் தமிழ்ச்சொல்லை
ரக்தம் எனக் கடன் வாங்கி வளர்ந்த வரலாற்றை மொழியாய்வு முனைவர் பாவாணர் தெளிவாக விளக்கியுள்ளதை
இவ்விழையில் முதலிலேயே பார்த்தோம்.

பல ஆயிரம் ஆண்டுகளாய் செம்பரத்தை (செம்பு + அரத்தை) என்னும் பூவை அரத்தம் (blood) போன்ற
நிறத்தால் தமிழர்கள் இந்தியா முழுமையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெயரிட்டனர். 
முத்து > முக்த, அரத்த > ரக்த - இந்தத் திராவிடச் சொற்கள் வேறு இந்தோ-ஐரோப்பிய மொழிகளில்
cognates இணைச்சொற்கள் அற்றவை என்பதும் திராவிடமொழிகளின் கொடை முக்த, ரக்த என்பதை
ஆய்வுமுனைவர்களுக்குக் காட்டவல்லவை. ரத்தன் டாட்டா பற்றிப் பல செய்ட்திகள் படித்தோம்.
http://www.vinavu.com தளத்தில் ரத்தன் டாட்டா பற்றி அலசியுள்ள கட்டுரைகள் உள்ளன.
நீரா ராடியா - ரத்தன் டாட்டா என்று 2ஜி கேஸில் வெளியிட்ட கேட்பொலிகள் இணையத்தில் இந்தியாவின்
தற்கால அரசியலின் புதுக்கிழார்கள் பற்றி அறிந்தோம். 

இளங்கோ அடிகள் தமிழில் முதலில் குறிக்கும் அரத்த (ரத்த வண்ணம்) தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாய்
இந்தியாவில் புழங்கிய சொல். இன்று வடக்கே தமிழ் வேறு மொழியாக மாறினாலும், அரத்தம் ‘blood' வண்ணம்
வாழ்ந்துகொண்டுள்ளது. சம்ஸ்கிருதத்துக்குப் போகுமுன்னரே, பாலி பிராகிருதம் மொழிகளில்
ரத்தம் என்ற சொல் வழங்கிவருகிறது. அரத்தம் என்ற தமிழின் வண்ணப் பெயரை அடிப்படையாகக் கொண்டு
ரக்த, ரத்தனம் (ரத்தினம்) என்பவை இன்றளவும் வடமொழி கையாள்கிறது அல்லவா? ரத்தப் பழம் கொண்ட
பிரம்புப் புதரை இன்றும் ரத்தன் (Rattan) என்று மலாயா, இந்தோனேசியா அழைப்பதும் தமிழ், த்ராவிட
மக்கள் கடல்வாணிகத் தொடர்பால் எனக் காட்டியிருக்கிறேன்.

அரத்தை என்னும் செடியின் பெயர் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னரே தந்த பெயர் ஆகும்.
தாவரவியலாளர் ALPINIA GALANGA என்று விஞ்ஞானப் பெயர் கொடுத்துள்ளனர்.  Prospero Alpino
என்னும் இத்தாலிய நாட்டுத் தாவரவியல் அறிஞர் பெயர அரத்தைச் செடிக்கு இன்று தாவரவியலில்
அமைந்துளது. அரத்தக் கிழங்கு அரத்த நிறத்தில் உள்ளது:
அரத்தையை செவ்விஞ்சி எனலாம். இஞ்சிக் கிழங்கு போன்றது அரத்தக்கிழங்கு. 
அரத்தம் வண்ணம் தந்த பேர்: அரத்தை. அரத்தவரி யோடும் அரத்தக்கிழங்கின் பூ:

அரத்த இஞ்சியால் யாவக தீவு சிக்கன் உணவு ரெசிப்பி:

சித்த வைத்தியத்தில் அரத்தை:

In sum,
As Sanskrit borrows Dravidian/Tamil muttu 'pearl' into mukta,
Dravidian word for red color, aratta is first borrowed into Prakirt and Pali
as 'ratta'. This Dravidian word (a)ratta is changed into rakta in Sanskrit later.
red colored gemstones are called arattana from this Drav. root, aratta 'red'.
In early Brahmi, the unvoiced sound of -t- is produced without even writing
a doubled -tt-. Hence, arattana got written by Prakrit writers as aratana, ratana.
Even now words like Rattan (Tata) are popular Indian names which uses the
Dravidian root, aratta 'red, blood-colored gem'. The Dravidian loans in Sanskrit
usually lose the word-first a in Sanskrit: Ranga, as in Sri Ranga, is borrowed from
Tamil's "araGku" which is from the verb, araGku-tal.
In South East Asia, South India sea trade gave the name of the rattan plant because of its fruit's color.
Ginger-like root if Alpinia Galanga & other parts of the plant are
'aratta' (red) colored. Hence its ancient Dravidian name, arattai.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 19, 2019, 12:52:54 PM8/19/19
to மின்தமிழ், vallamai
On Tue, Aug 6, 2019 at 10:11 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
செம்பருத்தி என்று பொதுமக்கள் அழைக்கும் இப்பூவிற்கும் பருத்திக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. 
இப்பெயரைப் பாமரர் செம்பரத்தம்பூ என்று சொல்வது தான் சரியான வடிவம் என்று தோன்றுகிறது. 
அரத்தம் என்ற வடமொழிச் சொல்லும்; செம் - என்னும் தமிழ்ப் பண்புப் பெயர்க் கூறும் சிவப்பு என்ற  ஒரே பொருளைத் தருபவை.  
ஆங்கிலக் கலப்பில் கேட்டுவாசல், நடுசென்டர் உருவானது போல;  வடசொற்கலப்பில் செம்பரத்தம்பூ என உருவாகியுள்ளது எனத் தெரிகிறது. 
சக 
கைபேசியிலிருந்து. ...


நெல்லம்பயிர், தென்னங்கன்று, பனம்பழம், அரசங்கொம்பு, ஆலங்கோடு, ... போல, அம் சாரியை பெறுகிறது செம்பரத்தம்பூ.

இளம்பூரணர் , தம் உரையில் ,  ‘தூதுணை’ , ‘வழுதுணை’ , ‘தில்லை’ , ‘ஓலை’ 
ஆகிய சில ‘ஐ’ ஈற்றுப் பெயர்ச்சொற்களைத் தந்து இவையும் மேலனபோன்றே புணரும்  என்றார் ! –

13. தூதுணை + காய் = தூதுணைக் காய் ×
  தூதுணை + காய் = தூதுணங் காய் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூதுணங் காய் – தூதுவளைச் செடியின் காய்)

14. தூதுணை + செதிள் = தூதுணைச் செதிள் ×
  தூதுணை + செதிள் = தூதுணஞ் செதிள் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூதுணஞ் செதிள் – தூதுவளைச் செடியின் வெட்டுத் துண்டு)

15. தூதுணை + தோல் = தூதுணைத் தோல் ×
  தூதுணை + தோல் = தூதுணந் தோல் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூதுணந் தோல் – தூதுவளைச் செடியின் பட்டை)

16. தூதுணை + பூ = தூதுணைப் பூ ×
   தூதுணை + பூ = தூதுணம் பூ √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூதுணம் பூ – தூதுவளைச் செடியின் பூ)  


நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 20, 2019, 5:40:30 AM8/20/19
to மின்தமிழ், vallamai
தமிழில் செம்பரத்தை என்பது  Hibiscus . ஆனால் செம்பருத்தி சிவப்பான பருத்தி. இரண்டும் வெவ்வேறு தாவரங்கள். மலை அகராதி தரும் பெயர், அரத்தை.  உரிச்சொல் நிகண்டு தரும் பெயர், செவ்வரத்தை = செம்பரத்தை என்கிறது.

கிரேக்க நூல்களில் இந்தியர்கள் பருத்தியை மரங்களில் இருந்து எடுக்கிறார்கள் என்ர குறிப்பும், அதன் ஓவியங்களும் பார்க்கலாம். அது Tree cotton = செம்பருத்தி.
செம்பருத்தி  cem-parutti செம்பருத்தி cem-parutti , n. < செம்-மை +. [K. kembatti, M. cembarutti.] 1. A kind of superior cotton used in making sacred thread; பூணூல் நூற்க உதவும் பருத்திவகை. (G. Sm. D. I, i, 227.) திலக முலோத்திரஞ் செம்பருத்திப்பூ (சிலப். 14, 187, உரை). 2. Brazil cotton. See செம்பஞ்சு. (L.) 3. A variety of cotton, s. tr., Gossypium arboreumபருத்திவகை. (L.)  

Hibiscus = செம்பரத்தை மலையாளத்தில் செம்பரத்தி என்கின்றனர். பிங்கலந்தை நிகண்டில் இப்பெயர்தான்.  அரத்தை, செவ்வரத்தை என்றும் தமிழ் நூல்களில் இதற்குப் பெயர்.

. On Mon, Aug 19, 2019 at 11:58 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
முனைவர்  கணேசன்,   
///அரத்தை என்று சிவப்பான கிழங்கு, பூ கொண்ட தாவரம் உள்ளது. அதில் இருந்து வேறுபடுத்த செம்பு+அரத்தை
செம்பரத்தை (பிங்கலந்தை) பெயர் சூட்டியுள்ளனர்.////

இந்த விளக்கம் சிவப்பு  +  சிவப்பு என ஒரு மலருக்கு இருமுறை நிறம் குறித்த பெயர் சூட்ட வேண்டிய காரணத்தை விளக்கவில்லை.


கண்மணி கூறும் மக்கள் வழக்காற்றில் இருப்பதைக்  கவனத்தில்  கொள்ள வேண்டும்.  

அவர் தொடர்பு தெரியவில்லை என்கிறார்.

ஆனால்,  தொடர்பு இருக்கிறது.



ஆமாம். ஆனால், செம்பரத்தை, செம்பருத்தி இரண்டும் வெவ்வேறு பூக்கள் என்று தமிழ் இலக்கியங்கள்
தெளிவாகக் கூறுகின்றன.

நா. கணேசன்

 
பருத்தியும் செம்பருத்தியும் ஒரே குடும்பம் ... பேமிலி மல்வேசியே 

Mallow Family (or Malvaceae) (family  Malvaceae)

இரண்டிற்கும் உருவ ஒற்றுமையும் உள்ளது.

பருத்திப்பூ மஞ்சள் நிறம்.

அதே உருவ ஒற்றுமையில் உள்ள சிவப்பு நிறப் பூவை செம்பருத்தி என மக்கள் வேறுபடுத்திக் காட்ட நினைத்திருக்க வாய்ப்புண்டு.


"Malvaceae examples" (google search) தேடிப்பாருங்கள், கீழே சுட்டி.  


பருத்தியும் (காட்டன் மஞ்சள் பூ)  செம்பருத்தியும் (ஹைபிஸ்கஸ் சிவப்பு பூ)  ஒரே நேரத்தில் பேமிலி மல்வேசியே  மலர்களாகத் தோன்றும்.

நிறத்தைத் தவிர முதற்பார்வைக்கு ஒன்றாக இருப்பதாகவும் தோன்றும்.


மேலும் கபிலரின் (குறிஞ்சி - 99 சங்க கால மலர்கள்)  பருத்தியை  "பாரம்"  எனக் குறிக்கும் 

மஞ்சள் நிற பாரம் என்பது  பாரம் >> பரத்தம் >> பருத்தி என ஆகியிருக்க வேண்டும்.

சிவப்பு நிற செம்பாரம் என்பது செம்பாரம் >> செம்பரத்தம்  >> செம்பருத்தி என  மாறியிருக்க வேண்டும். 

இப்பொழுது கண்மணி சொன்னதை கவனியுங்கள் 

/// இப்பெயரைப் பாமரர் செம்பரத்தம்பூ என்று சொல்வது தான் சரியான வடிவம் என்று தோன்றுகிறது. ///



பருத்தி - 

பருத்திப்பூ
பாரம் என்பது வேலிப்பருத்திப் பூ


cotton and hibiscus.jpg

Hibiscus (Rosemallows)

Hibiscus rosa-sinensis

Scientific name: Hibiscus

Family: Malvaceae

Genus: Hibiscus

Order: Malvales

Kingdom: Plantae

Rank: Genus

__________


Cotton 

Gossypium herbaceum

Scientific name: Gossypium

Family: Malvaceae

Genus: Gossypium

Order: Malvales

Kingdom: Plantae

Rank: Genus


Family: MalvaceaeOrder: Malvales   இரு மலர்களுக்கும் ஒன்றே 
__________________________________

N. Ganesan

unread,
Aug 20, 2019, 6:31:42 AM8/20/19
to மின்தமிழ், vallamai
On Tue, Aug 20, 2019 at 4:59 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

கண்மணி கூறும் மக்கள் வழக்காற்றில் இருப்பதைக்  கவனத்தில்  கொள்ள வேண்டும்.  

அவர் தொடர்பு தெரியவில்லை என்கிறார்.

ஆனால்,  தொடர்பு இருக்கிறது.



ஆமாம். ஆனால், செம்பரத்தை, செம்பருத்தி இரண்டும் வெவ்வேறு பூக்கள் என்று தமிழ் இலக்கியங்கள்
தெளிவாகக் கூறுகின்றன.

///செம்பரத்தை, செம்பருத்தி இரண்டும் வெவ்வேறு பூக்கள் என்று தமிழ் இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன.///

மேற்கோள் ?


Many examples from Tamil across centuries given in my mail.
Both in Tamil and Malayalam, red cotton is called செம்பருத்தி.
but Hibiscus is different, it has the names, செம்பரத்தை, அரத்தை, செவ்வரத்தை.

Kovai Ilanjeran confuses between the two different plants and their names.
Tamil literature distinguishes quite well the names. I have explained the differences in this thread.

N. Ganesan
 
 

N D Logasundaram

unread,
Aug 20, 2019, 11:19:00 AM8/20/19
to mintamil, vallamai

நூ த லோ சு
மயிலை
hibiscus எனும் ஆங்கிலச் சொல் செம்பருத்திக்கு மட்டும் பொருந்தாது
                           ஆங்கிலத்தில் பல வகை பயிரனத்தினைக் காட்ட பயனில் உள்ள
 
கீழே வருபவை இணைய ஆவண ங்களிலிருந்து பெறப்பட்டவை அல்ல 
செம்பருத்தி
என் வீட்டில் , மற்றும் பலரது வீட்டில், பற்பல கோயில்களில் உள்ள
சிவந்த நிறமான மிக நீண்டு நடுவில் வளரும் பயனற்ற பாலின உறுப்பு கொண்ட
பூக்கள் தொடர்புடையது  பற்றியது  
செம்பருத்தி பூக்களுக்ககவே வளர்க்கப்படு ம் பூவானது பெரிதும் சிவந்த நிறம் கொண்டதுதான்
ஆனால் பூவில் வேறு எந்த மாற்றம் இல்லாமல் மஞ்சள் வெண்மை நிறப்பூக்கள்
பூப்பனவும் உண்டாக்கப்பட்டுள்ளன  

 இது ஒரு மலட்டுப்பூ அதாவது காய்க்காது
செயற்கையாகுறிப்பிட்ட பண்புகளுக்காக மரபு மாற்றம் செய்யப்பெற்றவை 
 விதையிலிருந்து வளர்க்கமுடியாது தண்டு நட்டுத்தான் வளர்க்கமுடியும் 
கொத்தாக வாரும் 10 அடி  உயரம் வரை கூட வளரும் தன்மைத்து மரம் அல்ல
எங்கள் வீட்டில் ஓர் நாளில் வியப்பு நிலையில்  ஒரேஒரு செடியில்மட்டும் 88 பூக்கள் பூத்தது 
இதன் பூக்களை அக்கம் பக்கத்தினர் விரும்பி வந்து (விலையில்லாமல்தான்) வாங்கிச் செல்கின்றனர்  
தலை மயிர்வளர எண்ணையில் இட்டு  ஊறவிட்டு பயன்கொள்ள அப்படி ஓர்  நினைப்பு வளர்க்கப்பட்டுள்ளது 
வீட்டில் சமையலில் காய்கறியாக கொள்ளும் வெண்டை யும் இந்த இனம் சார்ந்ததுதான்
பூவின் அமைப்பு கொண்டு சொல்லமுடியும் 
 இப்போது வேறு
ஓர் ஆங்கில அகராதியில் கண்டசிலமட்டும் 
            Hibiscus    Any plant of the genus Hibiscus
 
Hibiscus moscheutos  =  Showy shrub of salt marshes of the eastern United States having
                                             large rose-coloured flowers

கீழ்ஃஎ காணும் பெயர்களும் இதனுக்கு உண்டு எனத்தெரிகின்றது 

common rose mallow  =  Showy shrub of salt marshes of the eastern United States having
                                              large rose-coloured flowers

rose mallow                     =  1. Showy shrub of salt marshes of the eastern United States having
                                              large rose-coloured flowers
                                                 2. Plant with terminal racemes of showy white to pink or purple 
                                                    flowers; the English cottage garden hollyhock

swamp mallow            =   Showy shrub of salt marshes of the eastern United States having
                                              large rose-coloured flowers

swamp rose mallow     =   Showy shrub of salt marshes of the eastern United States having 
                                             large rose-coloured flowers 


  Hibiscus cannabinus  = Valuable fibre plant of East Indies now widespread in cultivation

Bimli  / Bimli-hemp / deccan -emp  / Indian-hemp / 

                 KENEF            =      Fibre from an East Indian plant Hibiscus cannabinus 
                                    -------------------
Abelmoschus moschatus  = Bushy herb of tropical Asia grown for its 
             yellow or pink to scarlet blooms that resemble the hibiscus

     


On Tue, Aug 20, 2019 at 10:28 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
முனைவர்  கணேசன்,   
///அரத்தை என்று சிவப்பான கிழங்கு, பூ கொண்ட தாவரம் உள்ளது. அதில் இருந்து வேறுபடுத்த செம்பு+அரத்தை
செம்பரத்தை (பிங்கலந்தை) பெயர் சூட்டியுள்ளனர்.////

இந்த விளக்கம் சிவப்பு  +  சிவப்பு என ஒரு மலருக்கு இருமுறை நிறம் குறித்த பெயர் சூட்ட வேண்டிய காரணத்தை விளக்கவில்லை.


கண்மணி கூறும் மக்கள் வழக்காற்றில் இருப்பதைக்  கவனத்தில்  கொள்ள வேண்டும்.  

அவர் தொடர்பு தெரியவில்லை என்கிறார்.

ஆனால்,  தொடர்பு இருக்கிறது.


kanmani tamil

unread,
Aug 20, 2019, 11:41:20 AM8/20/19
to vallamai

///பருத்தியும் செம்பருத்தியும் ஒரே குடும்பம் ... பேமிலி மல்வேசியே 
Mallow Family (or Malvaceae) (family  Malvaceae)
இரண்டிற்கும் உருவ ஒற்றுமையும் உள்ளது.
பருத்திப்பூ மஞ்சள் நிறம்///Themozhi wrote 10hrs.ago.

நன்றி , தேமொழி 
புகுமுக வகுப்பில் படித்தது. மால்வேசி குடும்பத்தின் வகைக்குறிச் சான்று (typical example) Hibiscus Rosasynensis .
அப்போது அது பருத்திக் சக குடும்பம் என்று தெரிந்து கொள்ளவில்லை; இன்று தெரிந்து கொண்டேன்.
  

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAPzN85hEHhAHnu6HxV%3DzQ7JH97T1YzBDUeUEpyRcppO53o8aXA%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Aug 20, 2019, 12:08:57 PM8/20/19
to vallamai
///அரத்தை என்று சிவப்பான கிழங்கு, பூ கொண்ட தாவரம் உள்ளது. அதில் இருந்து வேறுபடுத்த செம்பு+அரத்தை
செம்பரத்தை (பிங்கலந்தை) பெயர் சூட்டியுள்ளனர்.
அரக்குதல் (பிறவினை)/அரங்குதல் (தன்வினை) அடிப்படையான தமிழ்ச்சொல். அரிதல் என்பதுடன் தொடர்புடயது.
அரக்குதல் > அரம் என்னும் அரிகருவி.  “அரம் போலும் கூர்மையரேனும் ...” (குறள்). விலங்குகளின் உறுப்புகளை அரக்கும்போது வடிவது அரத்தம். அரத்தம் வடக்கே ரத்தம் > ரக்தம் என்றானது. மீள்கடனாய் தமிழ் ரத்தம் எனும் சொல்லைப்பெற்று இரத்தம் என்கிறோம். அரங்கேசனை இரங்கேச வெண்பா என்று நூல் இயற்றுவதுபோல்.
அரை என்றால் (போதி) அரசமரம். அரைச்சல் இரைச்சல். அதுபோலவே, சிவப்பான பழம் கொண்டது அரத்தி/அலந்தை இரத்தி/இலந்தை என்று ஆகியிருக்க வேண்டும். அரங்கம் >> ரங்கம் (ரங்கராஜ்) >> லங்கா என்பதும் ர/ல நாறுபாடு./// Dr .Ganesan wrote one day ago 

அரம் என்ற சொல் முதல் இலங்கை, இலந்தை போன்ற சொற்கள் வரை அடைந்த மாறுபாடுகளை விளக்கியமைக்கு நன்றி.
சிவந்த இஞ்சி புதுச் செய்தி .
சித்தரத்தை வீட்டில் எப்போதும் இருப்பு வைத்திருக்கும் மருந்து . இவ்வளவு காலமும் அச்சொல்லுக்குள் அரத்தை இருப்பதாக நினைத்தது இல்லை . சித்தர் + அத்தை என்று பிரித்து காரணம் என்னவோ என்று யோசித்து இருக்கிறேன்.
சக  

kanmani tamil

unread,
Aug 20, 2019, 12:19:01 PM8/20/19
to vallamai, mintamil

திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

Aug 19, 2019, 10:29 PM (23 hours ago)
to mintamil

///சிவப்பு மலர் என்ற பொருளைத் தரும் அர + இதழ் = அரவிதழ் =) அரவிந்த  என்று மாறும்.///

எப்படி சரவணன் மாறும்?

அரவிந்த் = அர + இந்த் ; அர = சிவப்பு ; ஆனால் இந்த் = இதழ் என்று சொல்ல முடியாது.

தமிழில் அரவிந்தம் ; வகர உடம்படுமெய்யோடு புணர்ந்துள்ளது.

எனக்கு ' இந்த்' பொருள்  புரியவில்லை. 

இந்த் >>>இதழ்--- மாற்றம் ?

சக 


N D Logasundaram

unread,
Aug 20, 2019, 7:06:54 PM8/20/19
to vallamai, mintamil
நூ த லோ சு
மயிலை
 அரவிந்த அட்சன் எனும் பெயர் திருமாலுக்கு உள்ளது 
அதன் பொருளிலிருந்து பெறப்படுவது தாமரை போன்ற கண்களை உடையவன் 
 இது (நிறமற்ற)  உருவ ஒற்றுமை 
அதாவது கண் தான் = மொக்குளின்  வடிவம் 
நிறத்தை பண்பாகக் கொள்வது பொருந்தாது
 இதழின் நிறமல்ல
 இங்கு அகரம் வடமொழி முன்னொட்டு ஆகலாம் 
எனவே ரவி என்பதை வேராகக்கொள்ளலாம்
 ரவி = ஞாயிறு  


N. Ganesan

unread,
Aug 20, 2019, 7:07:23 PM8/20/19
to மின்தமிழ், vallamai


On Tue, Aug 20, 2019 at 11:19 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
>
> திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>
>
> Aug 19, 2019, 10:29 PM (23 hours ago)
> to mintamil

>
> ///சிவப்பு மலர் என்ற பொருளைத் தரும் அர + இதழ் = அரவிதழ் =) அரவிந்த  என்று மாறும்.///
>
> எப்படி சரவணன் மாறும்?
>
> அரவிந்த் = அர + இந்த் ; அர = சிவப்பு ; ஆனால் இந்த் = இதழ் என்று சொல்ல முடியாது.
>
> தமிழில் அரவிந்தம் ; வகர உடம்படுமெய்யோடு புணர்ந்துள்ளது.
>
> எனக்கு ' இந்த்' பொருள்  புரியவில்லை.
>
> இந்த் >>>இதழ்--- மாற்றம் ?
>
> சக
>
>

அரவிந்த- என்னும் சொல் பற்றி விரிவாக எழுதியுள்ளேன். டீக்கன் என்பதாக நினைவு.
அவரது கட்டுரைக்குச் செய்த மறுமொழியில். அர < ஆர. (கூர்ம > கும்மம், ...) விந்த < விரிந்த.
தெருமந்து, அருமந்த, ... போல.

செம்பருத்தி வேறு, செம்பரத்தை வேறு. அரத்தை என்னும் செவ்விஞ்சிக்கு வேறுபடுத்த
செவ்வரத்தை/செம்பரத்தை என்ற பெயர்கள் ஏற்பட்டுள்ளன போலும். A case of Pleonasm for which Tamil is famous.

N. Ganesan

unread,
Aug 20, 2019, 8:00:23 PM8/20/19
to மின்தமிழ், vallamai
On Mon, Aug 19, 2019 at 11:58 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

கண்மணி கூறும் மக்கள் வழக்காற்றில் இருப்பதைக்  கவனத்தில்  கொள்ள வேண்டும்.  
அவர் தொடர்பு தெரியவில்லை என்கிறார்.
ஆனால்,  தொடர்பு இருக்கிறது.


பருத்தி என்று செம்பரத்தைக்குப் பெயரைத் தமிழ்நூல்களில் காணோம்.
காரணம்: செம்பரத்தையில் பருத்தி விளைவதில்லை.
 
 
பருத்தியும் செம்பருத்தியும் ஒரே குடும்பம் ... பேமிலி மல்வேசியே 

Mallow Family (or Malvaceae) (family  Malvaceae)

இரண்டிற்கும் உருவ ஒற்றுமையும் உள்ளது.

பருத்திப்பூ மஞ்சள் நிறம்.

அதே உருவ ஒற்றுமையில் உள்ள சிவப்பு நிறப் பூவை செம்பருத்தி என மக்கள் வேறுபடுத்திக் காட்ட நினைத்திருக்க வாய்ப்புண்டு.



தமிழர்கள் பெயர்களைச் சிந்தித்தே வைத்துள்ளனர். தமிழ், மலையாளம் இரண்டிலும் பருத்தி
என்ற பெயர் செம்பரத்தைக்கு வைக்கவில்லை.

பருத்தி, பன்னல் < பருநல் - இவை பருத்த நிலையில் உள்ள பருத்தியால் ஏற்பட்ட சினையாகுபெயர்.
அரத்தை/செவ்வரத்தை/செம்பரத்தை - இச் செடியில் பருத்தி விளைவதில்லை.

 
"Malvaceae examples" (google search) தேடிப்பாருங்கள், கீழே சுட்டி.  


பருத்தியும் (காட்டன் மஞ்சள் பூ)  செம்பருத்தியும் (ஹைபிஸ்கஸ் சிவப்பு பூ)  ஒரே நேரத்தில் பேமிலி மல்வேசியே  மலர்களாகத் தோன்றும்.

நிறத்தைத் தவிர முதற்பார்வைக்கு ஒன்றாக இருப்பதாகவும் தோன்றும்.


மேலும் கபிலரின் (குறிஞ்சி - 99 சங்க கால மலர்கள்)  பருத்தியை  "பாரம்"  எனக் குறிக்கும் 

மஞ்சள் நிற பாரம் என்பது  பாரம் >> பரத்தம் >> பருத்தி என ஆகியிருக்க வேண்டும்.

சிவப்பு நிற செம்பாரம் என்பது செம்பாரம் >> செம்பரத்தம்  >> செம்பருத்தி என  மாறியிருக்க வேண்டும். 


?? 
 

இப்பொழுது கண்மணி சொன்னதை கவனியுங்கள் 

/// இப்பெயரைப் பாமரர் செம்பரத்தம்பூ என்று சொல்வது தான் சரியான வடிவம் என்று தோன்றுகிறது. ///

இது சரியே. செம்பு + அரத்தம் + பூ என்பது புணர்ச்சி. செம்பரத்தை என்னும் சொல்லில் பருத்தி என்ற தாது இல்லை. 

பாரம் என்னும் செடியில் பருத்தி காய்க்கிரது. ஆனால், செம்பரத்தையில் பருத்தி காய்க்காது.
இதனை நன்கு அறிந்து தமிழர்கள் பெயர் சூட்டியுள்ளனர். அரத்தம், பருத்தி/பருநல்(பன்னல்)
- பொருள் வேறுபாடு மிகுதி. அரத்தை என்னும் கிழங்கு சிவப்பால் பெயர் பெறுவதை விரிவாக
விளக்கியுள்ளேன். செவ்வரத்தை என்பது ஹைபிஸ்கஸ். செவ்வரத்தை = செ + அரத்தை.

நா. கணேசன்



kanmani tamil

unread,
Aug 22, 2019, 1:13:37 PM8/22/19
to mintamil, vallamai
///கிரேக்க நூல்களில் இந்தியர்கள் பருத்தியை மரங்களில் இருந்து எடுக்கிறார்கள் என்ர குறிப்பும், அதன் ஓவியங்களும் பார்க்கலாம். அது Tree cotton = செம்பருத்தி. /// Dr.Ganesan wrote 2days ago.

இது இலவ மரத்தைக் குறிக்கிறது என்று எண்ணுகிறேன். முற்றிய இலவு பிறகு சிவந்தே காணப்படும்.
'இலவு காத்த கிளி ' என்று பழமொழி கூட உண்டு.
சக 

On Wed, Aug 21, 2019 at 9:44 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

///அரவிதழ் என்னும் தமிழ்ச் சொல்லே பேச்சு வழக்கில் அரவிந்த என்று மாறியிருக்கலாம். /// saravanan wrote 4hrs.ago 

அதைத்தானே சொல்கிறேன்.
அப்படி மாறி வழங்கியது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் அதேபோல் மாறிய(இதழ் >>>இந்த்) பிற சொற்கள் சிலவேனும் எடுத்துக் காட்டப்பட வேண்டும்.
சக 
 

N. Ganesan

unread,
Aug 23, 2019, 6:41:06 AM8/23/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
  On Thursday, August 22, 2019 at 10:13:39 AM UTC-7, kanmanitamilskc wrote:
///கிரேக்க நூல்களில் இந்தியர்கள் பருத்தியை மரங்களில் இருந்து எடுக்கிறார்கள் என்ர குறிப்பும், அதன் ஓவியங்களும் பார்க்கலாம். அது Tree cotton = செம்பருத்தி. /// Dr.Ganesan wrote 2days ago.

இது இலவ மரத்தைக் குறிக்கிறது என்று எண்ணுகிறேன். முற்றிய இலவு பிறகு சிவந்தே காணப்படும்.
'இலவு காத்த கிளி ' என்று பழமொழி கூட உண்டு.

மூன்று முற்றிலும் வேறுபட்ட தாவரங்களும், அவற்றின் தமிழ்ப் பெயர்களையும் குறிப்பிட்டு, அவற்றின் பாகங்கள்,
 பூக்கள் ஒளிப்படங்களும் கொடுத்துள்ளேன்.

(1) Hibiscus = செம்பரத்தை. (=செம்பு + அரத்தை). அரத்தை என்றால் சிவப்பு.
செம்பரத்தை, அரத்தை, செவ்வரத்தை என்பதும் தமிழ் நூல்களில் காண்கிறோம்.

(2) Tree Cotton = செம்பருத்தி என்பது இதன் பழைய தமிழ்ப்பெயர். மரவகை.

(3) இலவம் = முள்ளிலவு எனவும் பழைய நூல்களில் கூறப்படுவது. 2018 IJDL ஆய்வுக் 
கட்டுரையில் சல்மலி என்ற வடமொழிப்பெயர் இதன் முட்களால் உருவான பெயர் 
என்று விரிவாக எழுதியுள்ளேன்.  இலவு அல்லது சல்மலீ = https://en.wikipedia.org/wiki/Bombax_ceiba
Salmalia malabarica,  Bombax malabarica, Bombax ceiba என்ற பெயர்களைத் தாவரவியல் நூல்களில் 
இலவுக்குக் காண்கிறோம். 

அரத்தம் அலத்தகம் என்று ர்/ல் மாறுபாட்டால் வருகிறது.அரக்குதல் > அரம் என்னும் அரிகருவி.  “அரம் போலும் கூர்மையரேனும் ...” (குறள்). விலங்குகளின் உறுப்புகளை அரக்கும்போது வடிவது அரத்தம். அரத்தம் வடக்கே ரத்தம் > ரக்தம் என்றானது. மீள்கடனாய் தமிழ் ரத்தம் எனும் சொல்லைப்பெற்று இரத்தம் என்கிறோம். அரங்கேசனை இரங்கேச வெண்பா என்று நூல் இயற்றுவதுபோல்.
அரை என்றால் (போதி) அரசமரம். அரைச்சல் இரைச்சல். அதுபோலவே, சிவப்பான பழம் கொண்டது அரத்தி/அலந்தை இரத்தி/இலந்தை என்று ஆகியிருக்க வேண்டும். அரங்கம் >> ரங்கம் (ரங்கராஜ்) >> லங்கா என்பதும் ர/ல மாறுபாடு.

அர- ‘சிவப்பு’ அலவு :: இலவு (இலவம்) என்ற பெயர் ஆகியுள்ளது. அரைச்சல்:இரைச்சல், கடா:கிடா, களைதல்:கிளைதல், ...
போல அ-/இ- மாற்றம். இலவு/இலவம் பெரிய மரம் முழுதும் சிவப்பான பூக்கள் பூப்பது. இலவு < அலவு < அர- ‘சிவப்பு’.
துளு பாஷை இன்னமும் அல-/அர- மூலம் எனக் காட்டுகிறது: Tu. āla silk-cotton tree.

ஹிந்து காஸ்மாலஜியில் இலவத் தீவு (= சல்மலி த்வீபம்) உள்ளது. அப்பெயர் வடமொழியில் வரும் காரணம் பற்றி 2018 IJDL 
paper-ல் எழுதியுள்ளேன்.பாரதம் நாவலந்தீவு என்று சங்க இலக்கியம், மணிமேகலை போன்ற பழைய நூல்களில் வருவது இந்த 
சப்த த்வீபம் கோட்பாட்டில் தான்: https://en.wikipedia.org/wiki/Jambudv%C4%ABpa

 
On Tue, Aug 6, 2019 at 10:11 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
செம்பருத்தி என்று பொதுமக்கள் அழைக்கும் இப்பூவிற்கும் பருத்திக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. 
இப்பெயரைப் பாமரர் செம்பரத்தம்பூ என்று சொல்வது தான் சரியான வடிவம் என்று தோன்றுகிறது. 
அரத்தம் என்ற வடமொழிச் சொல்லும்; செம் - என்னும் தமிழ்ப் பண்புப் பெயர்க் கூறும் சிவப்பு என்ற  ஒரே பொருளைத் தருபவை.  
ஆங்கிலக் கலப்பில் கேட்டுவாசல், நடுசென்டர் உருவானது போல;  வடசொற்கலப்பில் செம்பரத்தம்பூ என உருவாகியுள்ளது எனத் தெரிகிறது. 
சக 
கைபேசியிலிருந்து. ...


On Mon, Aug 19, 2019 at 10:06 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
அரத்தை என்று சிவப்பான கிழங்கு, பூ கொண்ட தாவரம் உள்ளது. அதில் இருந்து வேறுபடுத்த செம்பு+அரத்தை
செம்பரத்தை (பிங்கலந்தை) பெயர் சூட்டியுள்ளனர்.

அரக்குதல் (பிறவினை)/அரங்குதல் (தன்வினை) அடிப்படையான தமிழ்ச்சொல். அரிதல் என்பதுடன் தொடர்புடயது.
அரக்குதல் > அரம் என்னும் அரிகருவி.  “அரம் போலும் கூர்மையரேனும் ...” (குறள்). விலங்குகளின் உறுப்புகளை அரக்கும்போது வடிவது அரத்தம். அரத்தம் வடக்கே ரத்தம் > ரக்தம் என்றானது. மீள்கடனாய் தமிழ் ரத்தம் எனும் சொல்லைப்பெற்று இரத்தம் என்கிறோம். அரங்கேசனை இரங்கேச வெண்பா என்று நூல் இயற்றுவதுபோல்.
அரை என்றால் (போதி) அரசமரம். அரைச்சல் இரைச்சல். அதுபோலவே, சிவப்பான பழம் கொண்டது அரத்தி/அலந்தை இரத்தி/இலந்தை என்று ஆகியிருக்க வேண்டும். அரங்கம் >> ரங்கம் (ரங்கராஜ்) >> லங்கா என்பதும் ர/ல மாறுபாடு.

N. Ganesan

unread,
Sep 7, 2019, 6:04:13 PM9/7/19
to மின்தமிழ், vallamai


On Sat, Sep 7, 2019 at 4:43 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

பருத்தியும் செம்பருத்தியும் - உயிரின வகைப்படுத்துதல் குறித்து டாக்டர் ஷாலினி உரையில் ஒரு பகுதி 


சுட்டி கொடுக்கும் 9:40 >>  12:00  வரை மட்டும் பார்க்கவும்.


பழந்தமிழர்கள் அரத்தம் என்ற பெயரைச் செம்பரத்தைக்கும்,
பருத்தி விளைதலால் பருத்தி/பருநல்/பன்னல் என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.
சான்றுகள் கொடுத்துள்ளேன்.

முந்தைய காலங்களில் செம்பருத்தி என்பது மரப் பருத்தி வகை.

நா. கணேசன் 

seshadri sridharan

unread,
Sep 7, 2019, 10:41:18 PM9/7/19
to வல்லமை
மணித்தக்காளி > மணி என்றால் சிறிய. தக்காளி தென்னமெரிக்கா செடி. இரண்டும் அதிக விதைகள் உள்ள வட்ட வடிவ காய்கள். ஆனால் மணித்தக்காளி தமிழகத்தில் பன்னெ டுங்காலமாக உள்ளது.   அப்படியானால் தக்காளி என்று வேறு ஒரு காய்  இருந்திருக்க வேண்டும். அல்லது தக்கு என்றால் சிறிய அளவினது என்ற பொருளில் தெலுங்கில் இன்னமும் வழங்கும் சொல்லை ஒப்பிட்டால் பின்னாளில் மணி என்ற அதே பொருள் தரும் சொல்லை முன்னொட்டாக சேர்த்து கூட்டி தக்காளியை வேறுபடுத்தி உள்ளனர். ஆனால் இங்கு ஷாலினி தரும் விளக்கம் வேறாக உள்ளது.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcyLAqpZoki11vOZXNdwD5JuhyKyvK4xmFggewBWxr0Pw%40mail.gmail.com.

N D Logasundaram

unread,
Sep 8, 2019, 4:30:21 AM9/8/19
to vallamai, தமிழ் மன்றம், mintamil, thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, SivaKumar, muthum...@gmail.com, ara...@gmail.com, Seshadri Sridharan

நூ த லோ சு
மயிலை

திரு சேசாத்திரி

மணிவண்ணன் என்றல் கரியவண்னன் என்றுதான் பொருள்  
கண்னின் கருமணி என்றல் கரிய நிறம் 
 தான் காட்டும் 
மணிச் சிறகு சிட்டு  என்றால் கரிய (நீல) நிறச் சிறகினை உடைய மீன்கொத்தியாகும் 
கீழே காட்டிய சங்கநூல் பாடல் களில் பலவ்ற்றில் கரிய என்று கொள்ளுதல் தகும் 
மற்ற சிலவும் வரும் ஆனால் எங்கும் சிறிய என ஆகாது அதற்கு வேறு  பல சொற்கள் உள்ளன 

மணித்தக்காளியில் கரிய நிறமாக் அணிகலன்களில் காணும் மணியினைப் போல் பழுப்பதால் அப்பொருள் வழங்கியது 

 மணி எனும் சொல்லிற்கு கருமை அல்லது நிகரானநீலம் போன்ற ஆழ்ந்த பச்சை பழுப்பு என இருள் நிறம்  பற்றி வரும்
மேலும் ஒலி எழுப்பும் மணியும் ஆகும் அதன் வழி பிறந்த கடிகார மணியும் பயிலும்  

நீங்கள் ஒரு இடத்தில் பொருந்தும் பலவற்றில் ஒன்றினை மட்டும் தனித்து சரி என நினைத்து பொருள் கண்டீர் அதனில் நேர்ந்த பிழை
அந்த இடத்தில் வேறு ஒன்றும் (கரிய்) இருக்கக் கூcடும் அதுவும் பொருந்துவதுடன் மேலும்  பற்பல இடங்களிலும் அதுமட்டும் பொருந்த
வருவைத்தால் அதனைக்கொள்ளுதலே சிறப்பு  

நளிபடு சிலம்பிற் பாயம் பாடிப்
பொன்னெறி மணியிற் சிறுபுறந் தாழ்ந்தவெம்            59 குறிஞ்சிப்பாட்டு      ஒலிக்கும் மணி 

செங்கொடு வேரி தேமா மணிச்சிகை                            65 குறிஞ்சிப்பாட்டு         கரிய நிறம் (= ஆழ்ந்த நீலம் பச்சை பழுப்பு)

எருவை செருவிளை மணிப்பூங் கருவிளை                      68 குறிஞ்சிப்பாட்டு      கரிய நிறம்

காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்                       84 குறிஞ்சிப்பாட்டு         கரிய நிறம்

மணிநிறங் கொண்ட மாயிருங் குஞ்சியின்                       112 குறிஞ்சிப்பாட்டு    கரிய நிறம்

பாம்புமணி யுமிழப் பல்வயிற் கோவல                              221 குறிஞ்சிப்பாட்டு  கரிய நிறம்

துகளறத் துணிந்த மணிமருள் தெண்ணீர்                        250 மலைபடுகடாம்   பளீரென ஒளிரும் 

பரூஉப்பளிங் குதிர்த்த பலவுறு திருமணி                        516 மலைபடுகடாம்   பளீரென ஒளிரும் 

கறங்குமணி துவைக்கும் ஏறுடைப் பெருநிரை                 573 மலைபடுகடாம்  ஒலிக்கும் மணி

அதரி கொள்பவர் பகடுபூண் தெண்மணி                                                          ஒலிக்கும் மணி
இரும்புள் ஒப்பும் இசையே என்றும்                              95
மணிப்பூ முண்டகத்து மணல்மலி கானல்                         மதுரைக்காஞ்சி         கரிய நிறம் 


மேலும் நூற்றுக்கணக்கில் காட்ட இயலும் திகட்டல் கருதி விடுத்தனம்


seshadri sridharan

unread,
Sep 9, 2019, 1:32:49 AM9/9/19
to வல்லமை
நல்ல விளக்கம் 
Reply all
Reply to author
Forward
0 new messages