ஆளுமைகள்

256 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Jun 8, 2025, 2:19:26 AM6/8/25
to vallamai
அருமைநாயகம் சட்டாம்பிள்ளை

/// ... பலருக்கும் இவரைத் தெரியாது....

சுய மரியாதைக்காக போராடிய அருமை நாயகம் சட்டாம்பிள்ளை (1823-1918),  நாசரேத்தை அடுத்த பிரகாசபுரம் மூக்குப்பேரி என்ற ஊரைச் சேர்ந்தவர்.

1642ஆம் ஆண்டில் கொற்கையை அடுத்த வெள்ளக்கோயில் என்ற ஊரில் குடிபடைகளுடன் பெரும் நிலக்கிழாராக வாழ்ந்து வந்தவர்கள். 

திருமலைநாயக்கரின் பிரதானி வடமலையப்ப பிள்ளையின் நடவடிக்கைகள் காரணமாகத் தமது நிலங்களைக் குடிகளுடன் சேர்த்துக் கொற்கைக் காணியாளரான நற்குடி வேளாளர்கள் வசம் விற்றுவிட்டுக் குடிபெயர்ந்து  ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள ராஜாவின் கோயில் என்ற ஊரில் குடியேறினர்.  19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாசரேத் நகரம் உருவாக்கப்பட்டபின்; அவ்வூரை ஒட்டி அமைந்துள்ள பிரகாசபுரம் மூக்குப்பேரியில் குடியேறினர்

 சாயர்புரத்திலிருந்த எஸ்.பி.ஜி. (Society for the Propagation of the Gospel)யைச் சேர்ந்த செமினரியில்  இறையியல் கற்று உபதேசியார் (Catechist) தேர்வில் முதலிடம் பெற்றவர். சம்ஸ்கிருதம், ஹீப்ரு, லத்தின், கிரேக்கம் ஆகிய மொழிகளும் கற்றுத் தேர்ந்தவர்.

1849ஆம் ஆண்டில்  அருமைநாயகம் நாடார் என்கிற சட்டாம்பிள்ளை சென்னைக்கு வந்திருந்தபோது கால்டுவெல்லின் - காலனி ஆதிக்கமும், கால்டுவெல் திருப்பணியும் என்ற நூலைப் படிக்க நேர்ந்ததால் மிகுந்த மனக் கொந்தளிப்பு அடைந்தார்.

 ஐரோப்பாவின்  வாழ்ந்த  கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த மக்களிடையே இந்திய மக்கள் கொடிய காட்டுமிராண்டி நிலையில் வாழ்கிறார்கள் என்பது போன்ற மிகையான தோற்றத்தினை உருவாக்கும் நோக்கிலும், இத்தகைய காட்டுமிராண்டி மக்களிடையே கல்வியறிவையும் ஒழுக்கத்தையும் பரப்புகிற உன்னதமான தியாகம் செறிந்த பணியினைப் பாதிரிமார்களாகிய தாங்கள் மேற்கொண்டிருப்பது போன்ற ஒரு மாயையைத் தோற்றுவிக்கிற வகையிலும் எழுதிப் பணம் வசூலிக்க ஏதுவாகவே அவதூறு நிறைந்த இந்நூலினைக் கால்டுவெல் எழுதியுள்ளார் எனச் சட்டாம்பிள்ளை  உரிய ஆதாரத்துடன் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.

கால்டுவெல்லின் இந்நூலைத் தமிழாக்கம் செய்து அச்சிட்டு, ஆங்கிலம் அறியாத தமிழக நாடார்கள் மற்றும் பர்மா, சிலோன் நாடார் சமூகத்தவர் மத்தியிலும் பரப்பினார். கால்டுவெல் பரப்பும் அவதூறுகளுக்கு பதில் உரைக்க 40 புத்தகங்கள், சில கைப்பிரதிகளும் வெளியிட்டுள்ளார்.

மேலும் பிரிட்டன் பிரதம மந்திரி கிலாட் ஸ்டோனிடம் தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர். அவரோ  உள்ளூர் விடயங்களில் தன்னால் தலையிட இயலாது என்று கூறியதுடன் privy council ல் தங்கள் வேண்டுதலை தெரிவிக்க கூறினார்கள். 

1881ஆம் ஆண்டில் கால்டுவெல்லின் History of Tennevelli என்ற நூல் சென்னை அரசினர் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்நூலிலும் நாடார் குலத்தவர் பற்றிய அவருடைய கருத்து எந்த மாற்றமுமின்றிப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாகச் சான்றோர் சமூகத்தவர்கள் கால்டுவெல்லுக்குக் கொலை மிரட்டல்கள் விடுத்தனர். 

 அந்த ஆண்டிலேயே அவர் திருநெல்வெலிப் பகுதியில் நிம்மதியாக வாழ முடியாத நிலை தோன்றியதால் கோடைக்கானலில் குடியேற நேர்ந்தது. 1891ஆம் ஆண்டில் கோடைக்கானலிலேயே மரணமடைந்த பிறகுதான் அவரது உயிரற்ற உடல் இடையன்குடிக்குத் திரும்ப நேர்ந்தது

பெரும்பாலும் வங்காள மற்றும் மெட்ராஸ் பிரசிடென்சியை மையமாகக் கொண்டு மேற்கத்திய ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமயமாக்கப்பட்ட தேவாலயங்களுக்கு எதிராகப் போராடத் துணிந்தார்

ஒரு மதச்சார்பற்ற மற்றும் சுதந்திரமான இந்து -கிறிஸ்தவ தேவாலயத்தை நிறுவியவர். 

இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றில் முதல் முறையாக மேற்கத்திய மிஷனரிகளின் ஆதிக்கத்தை நிராகரித்தவர்.

பதிவு பேராசிரியர்: J P Josephine Baba 

இந்த கால்டுவெல் எழுதியதை வைத்து தான் குறிப்பிட்ட சமுதாய மக்கள் மீது சில அரசியல் கட்சிகள் தொடர்ந்து இழிவான பரப்புரைகளை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

https://www.facebook.com/share/19UgY6zVmu/

தெரிவு: சக

kanmani tamil

unread,
Jun 11, 2025, 12:44:10 AM6/11/25
to vallamai
ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை வரலாறு:


சக 

kanmani tamil

unread,
Jun 12, 2025, 12:30:04 AM6/12/25
to vallamai
M.சின்னசாமி முதலியார்- பெங்களூருவில் அவரது பெயரால் வழங்கும் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானம் தோன்றிச் சிறப்புறத் திகழும் வரலாறும் அவரது முனைப்பும் முயற்சியும்...!!!


சக 

Raju Rajendran

unread,
Jun 12, 2025, 9:22:27 AM6/12/25
to vall...@googlegroups.com
சிறப்பு

ஞாயி., 8 ஜூன், 2025, 11:49 AM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctgVMuBwsfUvvBoPvXznFVTfvJFNJRAEr%3DYjtd6R6-czg%40mail.gmail.com.


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Jun 14, 2025, 12:25:12 AM6/14/25
to vallamai
துர்காவதி தேவி- சுதந்திரப் போராட்ட வீராங்கனை- சுயநலம் மிகுந்த அரசியல் உலகிற்குள் சிக்காத பெண் சிங்கம் 


/// 19 டிசம்பர், 1928, நள் இரவு... லாகூர்... அந்த   பங்களாவின்   திட்டி வாசல்  போன்ற  ரகசிய கதவு  ,  சங்கேத மொழியில் தட்டப் படுகிறது...

 கதவை திறந்தது ஒரு அழகிய இளம் பெண், இடுப்பில்  குழந்தையுடன்... வந்த நால்வரை  பார்த்த உடன் அவர் முகம் மலர்கிறது.

 உள்ளே அமரச் செய்து உணவளிக்கிறர். வந்தவர்கள் எல்லோரும் இளைஞர்கள். HSRA  (ஹிந்துஸ்தான் ஸோஷியலிஸட் ரிப்பப்ளிக் அஸோசியேஷன்) என்ற தேச விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்கள்.  அவர்கள் தாழ்ந்த குரலில்  பேசிக் கொள்ளுகிறார்கள,

என்ன பிரச்சினை? அவர்களை இன்றைய தேதியில் லாகூரில்  500 போலீசார் வலை வீசித் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

காரணம்? இரண்டு நாட்கள் முன் தான் இந்த நால்வரும்  லாகூரின்  டெபுட்டி  போலீஸ்  சூப்பிரன்டென்டன்ட்  John P Saunders மற்றும் ஒரு கான்ஸடேபிளை சுட்டுக் கொன்று விட்டுத் தப்பியவர்கள்.

 (அவர்கள் குறி வைத்தது என்னமோ பஞ்சாப்   சிங்கம்   லாலா லஜ்பத் ராய் அவர்களின் வீர மரணத்திற்குக்குக் காரணமான போலீஸ்  சூப்பிரன்டென்டன்ட் ஜேம்ஸ் A. ஸ்காட்டுக்கு... குறி தப்பியது... 'Mistaken identity')

நால்வருக்கும் லாகூர்  இப்போது   HOT POT... இங்கிருந்து  தப்பியே ஆக வேண்டும்... இருக்கும் ஒரே எஸ்கேப் ரூட் விடியற் காலை கிளம்பும் லாகூர் via லக்னோ / கான்பூர் டிரைன் தான்.

திட்டம் தயார்...  இளைஞர்களில்  ஒருவரான பகத் சிங் தன் தாடி மீசையை எடுத்து விட்டு  ஒரு பணக்கார  பிரபு  வேஷத்திலும் மற்றொரு வரான  ராஜ்குரு அவருடைய வேலைக்காரன் போலவும்... 

போலீசை ஏமாற்ற அவர்களால் மரியாதையாக  துர்கா Bhabhi என அழைக்கப்பட்ட இளம் பெண் (துர்காவதி தேவி) பகத் சிங்கின் மனைவி போல் கைக் குழந்தை சச்சின் வோரா  உடனும்... 

மற்ற இளைஞர் சந்திரசேகர ஆசாத்  தங்கள் சஹாவான சுக்தேவின்  தாய், மற்றும் தங்கையை காசிக்கு புனித யாத்திரை  அழைத்தப் போகும் சன்யாசி வேஷத்தில்...

 கான்பூருக்குப் போய்; அங்கிருந்து பகத்சிங் போலி தம்பதி குழுவினர் கல்கட்டாவிற்கு... ஆசாத் குழுவினர்  காசிக்கு  ரயில் மாறி  நழுவிவிட வேண்டும்

 இதற்குத் தேவையான மாறுவேட  உடைகள், போதுமான (5000 ரூபாய் ) , பணம், தேவையானால் பயன் படுத்த   துப்பாக்கிகள் (துர்கா Bhabhiக்கு ) எல்லாம் துர்கா Bhabhi  தயாராக வைத்திருந்தார்.

ஏன் கல்கட்டாவிற்கு? அங்குதான் துர்கா Bhabhiயின் 26 வயது கணவர் பகவதிசரண் ஓரா BA... செல்வந்தர்... HSRA இயக்கத்தின் முக்கிய ரகசிய நபர் இயக்கத்தின்  மீட்டிங்கில் கலந்து கொள்ளப் போய் இருக்கிறார்.

துர்கா Bhabhiயே  தன் கைப் பட தயாரித்துக் கொடுத்து அனுப்பியுள்ள ஒரு  வெடி குண்டுடன்... (அதில் அவர் ஒரு நிபுணர்) அடுத்த தாக்குதலுக்கு...

திட்டம் அச்சுப் பிசகாமல் நடந்தேறுகிறது. பறவைகள் லாகூரை  விட்டுச் சிட்டாகப்  பறந்து விடுகின்றன. (இது பற்றிய என் பதிவு ஒன்று உண்டு)... 

கல்கட்டாவில் மனைவியைச் சந்தித்த ஓரா அவருடைய தீரச் செயலைக் கேட்டு மகிழ்ந்து, எல்லோர் முன்பும் கை குலுக்கினாராம். இவர் முகம் சிவக்க...

சில நாட்கள் கழித்து ஒரு ஏழைப் பெண் வேஷத்தில்  அதே டிரைனில் குழந்தையுடன் இரண்டாம் பேர் அறியாமல் லாகூர் திரும்பி விடுகிறார் துர்கா Bhabhi.

வந்து வழக்கம் போல் அவர்கள் நடத்தும் ஹிமாலையன் ஸ்டோரஸ் என்ற கடையின் வியாபரத்தைக் கவனிக்கிறார்.

உண்மையில்... ஹிமாலையன் ஸ்டோரஸ் ஒரு திரை தான், அதன்  திரை மறைவில்  இயங்குவது ஒர் வெடிகுண்டுத் தொழிற்சாலை.  அதன் Chief Technician துர்கா Bhabhi தான்...

1929  டிசம்பரில்  வைசிராய் லார்ட் இர்வின் பிரயாணம் செய்த ரயிலின் அடியில், கணவர் ஓராவினால் வைக்கப்பட்டு வெடித்த குண்டு இவர் கையால் செய்யப்பட்டது தான்.

கல்கட்டாவில் இருந்து திரும்பி வருகிறார் ஓரா. பின்னாலேயே அந்தச் செய்திகளும் வருகின்றன... சுக் தேவ், ராஜ் குரு, பகத் சிங், அசெம்பிளி யில்  குண்டு வீசியது. (Smoke bomb) பின் அவர்கள் பிடிபட்டு  லாகூர்  சிறையில் அடைக்கப்பட்டு லாகூர் சதி வழக்கு என்ற பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது முதலியன...

ஓரா தம்பதியினரும் HSRA இயக்கமும்  சிறைப்பட்ட  புரட்சியாளர்களை சிறை மீட்கச் சிறையை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கத் திட்டம் இடுகின்றனர், மாதிரி வெடி குண்டு ஒன்றை  துர்கா Bhabhi தயாரிக்கிறார் .

 ஆனால் என்ன துரதிஷ்ட்டம் ... மாதிரி  குண்டை  ரவி நதிக் கரையில் பரிசோதிக்க ஓரா  முயலும் போது அது எதிர்பாராமல் சீக்கிரமே வெடித்து ஓரா இறந்து விடுகிறார்... வயது 26 தான்.

துர்கா Bhabhi தன் 23ம் வயதிலேயே கைம்பெண்... மனம் உடைந்தாலும் அவர் தன்னம்பிக்கை, தேசபக்தியை இழக்கவில்லை.

அரசாங்கம் லாகூர் சதி வழக்கு குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறது, குற்றவாளிகள்  24வயது கூட  நிரம்பாதததால் அவர்களின்  இளமை கருதி அதை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் எனச் சட்டவீதிப் போராட்டங்கள் வெடிக்கின்றன.

ஆனால் பஞ்சாப் கவர்னர்  லார்ட் ஹெய்லி தூக்கு தண்டனையை உறுதிசெய்ய கடும் முயற்ச்சி எடுக்கிறார். கூடக்குரல் கொடுப்பது யார்? அட! அது நம் M.K.காந்தீஜீ!! ஹரிஜனில்... அடக்கொடுமையே!!!

துர்கா Bhabhi தன் நகைகளை விற்று (4000 ரூபாய்) குற்றவாளிகளின்  தண்டனை குறைப்பதற்குச் சட்டப் போராட்டம்... பலன்  இல்லை.

 அவர்கள் மூவரும் 23rd மார்ச் 1931 அன்று சிறை வளாகத்தில் தூக்கில் இடப்படுகிறர்கள. 

கொதித்து எழுகிறார் துர்கா Bhabhi. பழிக்குப்பழி... பஞ்சாப் கவர்னர் பழி வாங்கப்பட வேண்டும்... அன்று  கவர்னர் மாளிகை அருகில் மறைந்திருந்து கவர்னர் வெளிவரும் போது துப்பாக்கியால் சுட (நான்கு ரவுண்டு) துரதிஷ்ட வசமாக; அந்த  நேரத்தில் குறுக்கே வந்த வேறு இரு பிரிட்டீஷ் அதிகாரிகள் கொல்லப்பட்டு கவர்னர் தப்பி விடுகிறார்.

துர்கா Bhabhi கைது  செய்யப்பட்டு; ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. ஆனல் பஞ்சாப் மக்களின் வீதி சர்தார் படேலின்  சட்டப்  போராட்டம், அவருடைய இளம் வயது... குழந்தை  என்ற காரணங்களினால், தண்டனை ஐந்தாண்டு காலமாகக் குறைக்கப்பட்டுப் பின் விடுதலை.

விடுதலை ஆன பிறகும் அவருடைய உதவி, பங்களிப்பு தீவிரவாத விடுதலை போராளிகளுக்குத் தொடர்கிறது.

குறிப்பாக, 1926இல் அவர்   HSRA போராளி தியாகி கத்தார் சிங் அவர்களின் நினைவுநாள் அனுசரிப்பில் அவர்  பெரும் கூட்டத்திற்க்கு. லாகூரில் தலைமை தாங்கியது...

மற்றொன்று 
போராளி ஜித்ரேந்ததிர நாத் தாஸ் சிறையில் 65  நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்தபோது; அவருடைய இறுதி உர்வலத்திற்கு லாகூரில் இருந்து கல்கட்டா  வரை ரயிலிலும் நடந்தும்  தலைமை தாங்கியது... பின் தொடர்ந்த மக்கள் கூட்டம் 4 /5 மைல் நீளம் இருந்ததாம்.

 15ஆகஸட் 1947,  இந்தியாவிற்கு சுதந்திரம்...

ஏராளமானவர்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகள் என்று பட்டம், பதவி, பணம், செல்வாக்கு, நிலம் பெற்றனர்.

சரோஜனி நாயுடு, அருணா ஆசப் அலி, விஜயலட்சுமி பண்டிட், ருக்மணி லட்சுமிபதி போன்ற பெண்மணிகள்  உட்பட...

துர்கா Bhabhi போன இடம் தெரியவில்லை... அரசுக்கு எந்த துப்பும் இல்லை; அரசை எந்த விதத்திலும் அவர் நெருங்கவும்  இல்லை.

சில வருடங்கள் கழித்து அவர் கஸியாபாத்தில் இருப்பதாக கேள்விப்பட்டு; சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் அவரை சந்தித்து அரசு உதவி, பதவி  offer  பண்ணிய போது, மறுத்து விட்டாராம். நேரு மாமாவை  அவர் சந்திக்கக் கூட மறுப்பு... 

பிற்காலத்தில் ஒரு நேர்காணலில்  அவர் குறிப்பிட்டது....

"பாரதத்தின் சுதந்திரத்திற்காகத் தன் உடல், பொருள், ஆவி, இளமை,, எல்லாவற்றையும் மனப்பூர்வமாக என் கணவர் போல் தியாகம் செய்த நூற்றுக் கணக்கானவர்களை சந்தித்து உள்ளேன். அவர்கள் தியாகத்தின் முன் என்னுடையது கால் தூசி கூட இல்லை... அதைக் காட்டி எந்த சலுகையும் அடைய என் மனசாட்சி ஒப்பாது...

அந்த வீரர்கள் புகழ் பரப்புவது, நினைவை போற்றுவது  தான்  என் பணி" என்றார்.

தன் சொத்துக்களை  விற்று லக்னோவில் ஒரு பெண்கள்  பள்ளி ஆரம்பித்து; அதே பள்ளியில் ஒரு சதாரண ஆசிரியையாகவே இறுதி வரை பணி ஆற்றுகிறார். 

1907இல் கஸியாபாத்தில் ஒரு வசதியான  பிராமணக் குடும்பத்தில் பிறந்து; சிறு வயதில் பெற்றோரை இழந்து; சித்தியால் வளர்க்கப்பட்டு; படித்து; பகவதி சரண் வோரா என்ற படித்த பணக்கார பிராமண  இளைஞரை 13ம் வயதில் கைப்பிடித்து; அவருடைய சுதந்திரப்  போராட்ட காரியம் யாவிலும் கைகொடுத்து, 18ம் வயதில் ஒரு குழந்தைக்குத்  தாயாகி;  23ம் வயதில் கணவரை  இழந்து; துப்பாக்கி பிடித்து நாட்டு  விடுதலைக்காகப் போராடி; அப்பழுக்கற்ற  வீர தேசபக்தி/தியாக  வாழ்வு வாழ்ந்து; தன் 92ம் வயதில்  1999இல்  கஸியாபாத்தில் மறைந்தார். 

அவர் இறுதி விருப்பப்படி  அவர் மறைவிற்க்குப் பின்  அவர் நிறுவிய  அந்தப்  பள்ளிக்கு  அவர்  பெயரோ; அவரது கணவர் பெயரோ வைக்கப்பட வில்லை. அது வெறும் "பெண்கள் பள்ளி" என்றே அழைக்கப்பட்டது. 
 
அந்தப் பள்ளி இன்றும் உள்ளது.

இதுவல்லவோ வீர தியாக வாழ்வு!!!

வாழ்க அவர் புகழ்! வந்தே மாதரம்///

சக 

kanmani tamil

unread,
Jun 16, 2025, 2:40:55 PM6/16/25
to vallamai
டைரக்டர் மணிரத்னம்  
'தங்கள் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கிறோம்' என்று கூறிப் பல குறிப்புகளைப் பெற்று இயக்கிய  நாயகன் படத்திற்கு மூலமாக இருந்த வரதராஜ முதலியார் எனும் ஆளுமை.


/// மும்பை வரதராஜ முதலியார்...!!!

சுமார் 20 ஆண்டுகாலம் 20 லட்சம் தமிழர்களுக்கு மும்பை மாநகரின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த வரதராஜ முதலியார்...

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எளிய நெசவுக் குடும்பத்தில் பிறந்து; வறுமையின் காரணமாக தூத்துக்குடிக்குக் குடி பெயர்ந்து; அங்கு துறைமுகப் பகுதியில் வேலை செய்து கொண்டு; நட்பு வட்டத்தைப் பெருக்கிப்; பின்னாளில் மும்பை துறைமுகப் பகுதிக்குச் சென்று அங்கு ஒரு மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி;
மும்பை மாநகரில் கவுன்சிலர், மேயர், எம்.எல்.ஏ, எம்.பி. ஆகியோரை நிர்ணயிக்கும் சக்தியாக திகழ்ந்தவர் தான் வரதராஜ முதலியார்.

பாட்ஷா படத்தில் எப்படி ரஜினி கடத்தல் மன்னராக திகழ்ந்தாரோ அதேபோலவே இருந்தவர்.

வேஷ்டி கட்டிய மதராசி வாலாக்களுக்கு பக்கபலமாக நின்று பாதுகாத்தவர்..

தாராவி பகுதியில் தென் தமிழகத்தைச் சேர்ந்த பல குடும்பங்களை குடியமர்த்தி அவர்களுக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுத்து அவர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்...

இவர் மீது வழக்குகள் இருந்தாலும் இவர் மூன்று விஷயங்களைக் கடைப்பிடித்த காரணத்தால் மும்பை போலீசார் இவர் மீது மிகுந்த மரியாதை வைத்து இருந்தனர்.

அந்த மூன்று விஷயங்கள் 

1. தேச விரோதச் செயல்களைச் ... செய்ய மாட்டார். அதாவது குண்டு வைப்பது போன்ற விஷயங்களுக்கு எதிரானவர்.

2. போதைப் பொருட்களைக் கடத்த மாட்டார். குறிப்பாக வெளிநாட்டு ஹெராயின் போன்ற வஸ்துகளை எக்காரணத்தைக் கொண்டும் கடத்த மாட்டார். 

3. பெண்களை யாராவது கடத்தி விட்டால் இவரிடம் சொன்னால் போதும் உடனடியாக பெண்ணை மீட்டுக் கொடுப்பார். 

மது மாது சூது மற்றும் தேச விரோத சக்திகளுக்கு எதிரானவர்.

தமிழர்களுக்காக மராட்டிய முரசு என்னும் பத்திரிகை நடத்தியவர். மும்பை பகுதியில் பள்ளிக் குழந்தைகளுக்காக தனது சொந்த நிலத்தில் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்தவர்.

தமிழ்நாட்டில் இருந்து பம்பாய்க்கு நிறைய ரயில்கள் கொண்டு வந்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்.

அரசு அலுவலகங்களைத் தனது அன்பின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்.

ஒரே நேரத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடனும் கலைஞர் கருணாநிதி அவர்களுடனும் நட்புடன் இருந்தவர்.

ஈழத் தமிழர்களுக்காக 
எம்.ஜி.ஆர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நிறைய உதவிகளைச் செய்து கொடுத்தவர்.

ஈழத் தமிழர்களின் கொடுமைகளைப் போக்குவதற்காக; இந்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக; ஆறு லட்சம் பேர்களைக் கொண்டு ஒரு பிரம்மாண்ட பேரணியை மும்பை மாநகரில் நடத்தி ஒட்டு மொத்த இந்தியாவில் பார்வையையும் தன் பக்கம் திருப்பியவர் வரதராஜ முதலியார்.

வரதா பாய் என்று மும்பை வாலாக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட வரதராஜ முதலியார் அவர்கள் எம்ஜிஆர் மரணித்த ஒரு வார காலத்தில் அதாவது 02.01.1988. அன்று சென்னையில் தனது மகள் இல்லத்தில் மாரடைப்பால் காலமானார்...

இன்றைக்கும் தாராவி பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வரதராஜ முதலியார் திருவுருவப்படத்தின் வாயிலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: கட்டுரை வரைவு
Thirunavukkarasu TR///

தெரிவு: சக

kanmani tamil

unread,
Jun 19, 2025, 6:08:13 PM6/19/25
to vallamai
விருதை பாரதி: திருவாலவாய நாடார் 

/// 1910லேயே
கல்விக்காகத் தன் உடல், பொருள், ஆவி ஈந்த எத்தனையோ கொடை வள்ளல்களில் ஒருவர் எங்கள் “விருதை பாரதி” 
திரு.திருவாலவாய நாடார் அவர்கள்.

வீட்டிற்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்த விந்தை மனிதர்கள் வாழ்ந்த காலம் அது. அடுப்பூதும் பெண்ணிற்கு கல்வி எதற்கு? என்று எகத்தாளம் பேசிய எத்தர்கள் நிரம்பிய காலம் அது. மாட்டுத் தொழுவத்திலும், காட்டு வேலையிலும் பெண்டிரின் பெருமைகளை சிறுமையாக்கிய கொடுங்காலமது.

மனிதருள் மாணிக்கமாம் திரு.திருவாலவாய நாடார் அவர்கள் “பெண்களே நாட்டின் கண்கள்” என்றுணர்ந்து, பெண்கள் கல்வி கற்றால் நாடே வளம் பெறும் என்பதை வலியுறுத்தி, வீடு வீடாகச் சென்று வாதிட்டபோது சாணி உருண்டையால் அடி வாங்க நேர்ந்தது. பெண்கள் படிக்க வேண்டும் என்ற வாசக அட்டையை தன் நெஞ்சிலும், முதுகிலும் தொங்க விட்டுக் கொண்டு வீதியில் நடந்து சென்றார். இதற்கு அவர் பெற்ற பரிசு, கேலியும் ஏளனமும்.

அன்னாரின் கடுமையான முயற்சிக்குப் பின் தன் மனைவி மங்கம்மாள் வாழ்ந்த இடத்திலேயே பள்ளியமைக்க விரும்பி, தன் வீட்டையே கொடுத்த கொடையாளர். மங்காவின் மச்சி வீடு என்ற பெயரே மருவி இப்பொழுது “மாங்கா மச்சி” என்று அழைக்கப்படுகிறது.

பாக்கு வியாபாரத்திலே கிடைத்த பங்கை, பள்ளிக் கட்டிட நிதிக்கு அளித்தார். பள்ளி கட்டிடப் பணிக்கு வீதியில் கிடக்கின்ற கல்லையும், மண்ணையும் தன் தோளில் சுமந்து பணி செய்தார். தன் முயற்சியின் வெற்றியினால் 1910ம் ஆண்டு பெண்களுக்கென தனிப் பள்ளிக்கூடம் அமைத்தார். 1மற்றும்2ம் வகுப்புகள் கொண்ட “இந்து நாடார் பெண் பாடசாலையை” ஆரம்பித்தார்.

அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட பள்ளி ஆல விருட்சமாய், என்றும் அழியாப் புகழ் பெற்று, நூறு ஆண்டுகளைக் கடந்து, விருதைப் பெண்களின் திறமையை உலகிற்குப் பறை சாற்றி வருகிறது. ///

 இணைப்பு கீழே

பள்ளியில் எங்கள் தலைமை ஆசிரியை திருமதி ஜெயலட்சுமி எங்களிடம் சாதிக்கும் ஆர்வத்தைத் தூண்டவும்; எங்களுக்குத் திசை காட்டி வழிப்படுத்துவதற்கும்; இந்த வரலாறைப் பல முறை கூறி இருக்கிறார்.

சக 

சக்திவேலு கந்தசாமி

unread,
Jun 20, 2025, 5:38:51 AM6/20/25
to vall...@googlegroups.com
நம்மிடையே வாழ்ந்த பல நல்லோர்களைப் பற்றி அறிந்து கொண்டோம்.  மிக்க நன்றி.

kanmani tamil

unread,
Jun 20, 2025, 6:59:51 AM6/20/25
to vallamai

N. Ganesan

unread,
Jun 20, 2025, 11:17:42 AM6/20/25
to வல்லமை
திருவாலவாயன் - அரிய தமிழ்ப்பெயர். அரிய கல்வித்தொண்டு ஆற்றிய வள்ளல் திருவாலவாயனார் என்பது அறிய மகிழ்ச்சி.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 20, 2025, 11:28:42 AM6/20/25
to vall...@googlegroups.com
திருவாலவாயன் - அரிய தமிழ்ப்பெயர். அரிய கல்வித்தொண்டு ஆற்றிய வள்ளல் திருவாலவாயனார் என்பது அறிய மகிழ்ச்சி.

கொங்குநாட்டிலே பிஸினஸ் சமூகம் என்ற பெயரை நாட்டப் பொன்னேர் பூட்டியவர் திரு. ப. நாச்சிமுத்துக்கவுண்டர்.
அவரது ஒரே மகன், அருட்செல்வர் நா. மகாலிங்கம். ஹிந்து சமயக் கோயில்கள், கல்விச்சாலைகள், ஞானதானமாக
அரிய நூல்களை அச்சிட்டு ஆயிரக்கணக்கில் இலவசமாய் வழங்குதல், உரைவேந்தர் ஔவையைக் கொண்டு
திருவருட்பா முழுதுக்குமுரை செய்வித்து, அச்சில் என்றும் இருக்கக் காப்புநிதி அண்ணாமலை பல்கலையில் நிறுவியவர்.
கவிஞர் கே சி எஸ் அருணாசலம், கம்யூனிஸ்ட், அவர் பாடல் தந்துள்ளேன். கேசி எஸ்ஸிடம் என்னை NM அறிமுகம் செய்தார்.

உலகமும், தொழிநுட்பும் விரைந்து மாறிவருகிறது. பாரதம் பொருளாதாரச் சந்தையில் முன்னேற, நன்கு கற்போரும்,
ஆய்வாளரும், அதற்குத் துணைசெயும் தொழிலதிபர்களும் தோன்றிக்கொண்டே இருக்கவேணும்.
நா. கணேசன்

kanmani tamil

unread,
Jun 20, 2025, 12:05:57 PM6/20/25
to vallamai
🙏

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Jun 23, 2025, 6:51:58 AM6/23/25
to vallamai
அன்றாட வாழ்வில் ஆங்காங்கு நாம் சந்திக்கக் கூடிய ஆளுமைகளில் ஒரு தந்தையும் இரு மகன்களும்... 


/// போன வருடம் தந்தையர் தினத்தில் எழுதியது...

இன்றைய சிறுவர்கள் நாளைய நிர்வாகிகள்...

வாண்டுகளுக்கு ஸ்கூல் டைரியில் மாணவர் விவரங்கள் கொடுத்து புகைப்படமும் ஒட்ட வேண்டும் என்று தேடினால் எல்லாம் பழைய புகைப்படங்கள்.

சமீபத்தில் எடுத்தது எதுவும் இல்லை என்பதால் புகைப்படம் எடுக்கக் காலையிலேயே கிளம்பினோம்.

ஏரியாவில் இருந்த ஒரு டிஜிட்டல் ஸ்டூடியோவிற்குள் நுழைந்தால், அங்கே ஒரு சிறுவன் தான் அமர்ந்திருந்தான். எப்படியும் ஒரு பதினைந்து வயதிற்கு மேல் இருக்காது.

"பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கணும்..." என்றபடி உள்ளே நுழைய; "பாஸ்போர்ட் சைஸ் போட்டோவா... வாங்க..." என்று உள்ளே புகைப்படம் எடுக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

வாண்டுகள் குஷியாக உள்ளே ஓடிச்செல்ல, அம்மணி தயங்கியபடி நின்றார்.

"பெரியவங்க யாரும் இல்லையாப்பா??" என்று அவர் கேட்க,

"பதினஞ்சு வருசமா இந்த கடை இருக்குது'க்கா" என்றான்.

"உனக்கே பதினஞ்சு வயசு தான் இருக்கும்..." என்று அம்மணி புன்னக்கைக்க;

"இல்ல நான் கடைய தான் சொன்னேன்... நான் எடுப்பேன்..." என்று அந்த பையன் கேமராவை எடுக்க; அம்மணி முகத்தில் அத்தனை திருப்தி இல்லை.

வாண்டுகளுக்கு புகைப்படம் எடுத்துவிட்டு அப்படியே குடும்பமாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்று தான் கிளம்பினார். இப்போது இந்த சிறுவன் ஒழுங்காக எடுப்பானா என்றே அவருக்கு சந்தேகம்.

வாண்டு அந்த பையன் கையில் கேமராவை பார்த்ததும் வேகமாக சென்று இருக்கையில் அமர்ந்து விட்டான். புகைப்படம் ஒழுங்காக வருமா அல்லது நம்மை வைத்து இந்த பையன் ட்ரைனிங் எடுப்பானோ என்று என் மனதிற்குள்ளும் ஓட, வாண்டு சரியாக அமர்வதற்கு உதவி செய்தேன்.

அந்த பையன் ஒரு காலில் முழங்காலிட்டு கேமராவை தூக்கிப் பிடித்தபடி, தலையை எவ்வளவு சாய்க்க வேண்டும், எவ்வளவு நிமிர்ந்து அமர வேண்டுமென்று அழகாய் சொல்ல, வாண்டு சொன்னதுபோலெல்லாம் செய்து புன்னகைக்க; ஒரே கிளிக்... ஒரே போட்டோ... அழகாக எடுத்துவிட்டான்.

"ஓகேவா'ண்ணா?" என்று காண்பிக்க; எனக்கு திருப்தியாக இருந்தது. 

வாண்டுகளுக்கு வருடம் ஒரு முறை புகைப்படம் எடுப்பதால்; பல முறை ஸ்னாப் எடுத்து; எது நன்றாக உள்ளதோ அதைத் தேர்வு செய்வோம்.

ஆனால் இம்முறை வாண்டுகள் இரண்டும் சரியாக ஒத்துழைப்பு தர; இருவருக்குமே ஒரு ஒரு கிளிக் மட்டுமே அந்த சிறுவன் எடுத்தான். அதன் பின் எனக்கும் பாஸ்போர்ட் சைஸ் எடுக்கவேண்டியிருக்க, நானும் எடுத்துக்கொண்டேன்.

அந்த பையனின் திறமை, ஒழுங்கு, நேர்த்தி எல்லாம் பிடித்துப்போக, அம்மணி வேகமாய் வாண்டு இரண்டையும் நிற்க வைத்து ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னார்.

"இல்லக்கா... எனக்கு full frame எடுக்கத் தெரியாது" என்றான்.

"சரி ஓகே" என்று புன்னகையோடு, "வைட் background வேணும்.." என்று சொல்ல, 

"வைட் தான்'க்கா வரும்.." என்று கணினியில் அமர்ந்து கேமராவிலிருந்து புகைப்படங்களை கணினிக்கு மாற்றினான்.

அதாவது இந்த மாதத்தில், இன்றைய தேதிக்கு ஒரு folder புதிதாய் உருவாக்கி, இந்த புகைப்படங்களை அங்கே மாற்றிவிட்டு; அதன் பின்னே எழுந்து எங்களுக்கு விலை சொன்னான். 

அதோடு ஒரு மணி நேரம் ஆகும் என்று சொல்ல, சரி திரும்ப வந்து வாங்கிக்கொள்கிறோம் என்று சாப்பிட சென்றுவிட்டோம்.

வேலையெல்லாம் முடித்துவிட்டு மறுபடியும் ஸ்டூடியோ சென்றால், அந்த பையன் இல்லை. அவனைவிட இன்னும் சின்ன பையன் ஒருவன் தான் வாசல் அருகே இருந்த கணினியில் அமர்ந்து ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான்.

"போட்டோ கொடுத்துட்டு போனோம்... ரெடியா?" என்று உள்ளே நுழைய,

"காலைல கொடுத்தீங்களா?" என்று உள்ளே சென்று பார்த்தவன்; அங்கிருந்தே குரல் கொடுத்தான்.

"ஒரு பைவ் மினிட்ஸ் உட்காருங்க... பிரிண்ட் போடுறேன்" என்று சொல்லிவிட்டு அங்கே பிரிண்டர் அருகே இருந்த கணினியில் அமர; எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

"அடேய்... நீ ஒர்க் பண்ணப்போறியா??" என்று மனதிற்குள்ளேயே யோசித்தபடி அவனைப் பார்க்க, அவன் எதற்கும் அசராமல், கணினியில் தனது வேலையில் இறங்கிவிட்டான்.

அம்மணி உள்ளே சென்று அவன் என்ன செய்கிறான் என்று பார்க்க, அந்த பெரிய பையன் எந்த folder இல் வைத்திருக்கிறான் என்று சரியாக தேடிக் கண்டுபிடித்து வேலையை ஆரம்பித்து விட்டான்.

பிரிண்ட் வேலை மட்டும்போல என்று நாங்கள் நினைத்திருக்க, எங்கள் மூவரின் புகைப்படத்திற்கும் எடிட்டிங் இன்னும் செய்யவே இல்லை.

"என்னப்பா இன்னும் ரெடி பண்ணலையா?? இன்னொரு பெரிய பையன் இருந்தானே??" என்று அம்மணி விசாரிக்க,

"ஆமா... அவன் இன்னும் பண்ணல... இருங்க நான் ரெடி பண்றேன்.." என்று போட்டோஷாப்பில் வேலையை ஆரம்பிக்க, எனக்கு புருவங்கள் மேலேறியது.

"போட்டோஷாப்லாம் இந்த பொடியனுக்கு தெரியுமா..." என்றே எனக்கு ஆச்சர்யம். 

அந்த சிறுவனோ அமைதியாக எங்கள் ஒவ்வொருவர் புகைப்படமாக எடுத்து எடிட் செய்து, கலர் காண்ட்ராஸ்ட் எல்லாம் சரியாக்கி, "ஓகே'வா அங்கிள்..." என்று கேட்க எனக்கு புன்னகை மட்டுமே. 

"ஓகே" என்று சொல்ல அவன் அடுத்த வாண்டின் புகைப்படத்தை எடுத்து ஒர்க் பண்ண ஆரம்பித்துவிட்டான்.

"நீ என்ன படிக்குற?" என்று அம்மணி கேட்க 

"எயித் (எட்டாம் வகுப்பு) படிக்கிறேன் ஆண்ட்டி" என்று பதில் சொன்னாலும் பார்வை கவனம் எல்லாம் கணினியில் இருந்தது.

"அப்போ உன் அண்ணா?" என்று கேட்க; "அவன் டென்த் படிக்கிறான் ஆண்ட்டி..." என்று வேலையைத் தொடர்ந்தான்.

மூன்று புகைப்படங்களையும் ஒர்க் முடித்து, பழைய புகைப்படங்களை அங்கிருந்து தூக்கிவிட்டு அன்றைய நாளில் இந்த புகைப்படங்களை வைத்துவிட்டு பிரிண்ட் கொடுத்தான்.

"எனக்கு மெயில்'ல soft copy ஒன்னு அனுப்பிடுறியாப்பா?" என்று கேட்க; "ஓகே அங்கிள்..." என்றவன் அதே புகைப்படங்களைக் கணினியில் இருந்த shared network folder இல் போட்டுவிட்டு, எண்ட்ரன்ஸில் இருந்த கணினிக்குச் சென்று அங்கிருந்து புகைப்படங்களை எனக்கு அனுப்பிவிட்டவன்; பொறுமையாக பிரிண்ட் எடுத்த புகைப்படங்களைக் கத்தரிக்க எடுத்துச் செல்ல, "இன்னைக்கு உங்க அப்பா லீவா..." என்று சிரித்தபடி கேட்டார் அம்மணி.
"இல்லை... இன்னைக்கு அப்பா கொஞ்சம் லேட்டா வருவாங்க..." என்று சொன்னபடி அவன் கத்தரிக்க ஆரம்பிக்க; அவனது அப்பா வந்தார். அதாவது கடையின் உரிமையாளர் வந்தார். எங்களிடம் எதுவும் விசாரிக்காமல் அவனிடம் மட்டுமே பேசினார். இந்த பொடியனிடம் ஏதோ விசாரிக்க, பதில் சொன்னபடி புகைப்படத்தைக் கத்தரித்தான்.

"அவன் இப்போ தான் டியூஷன் போனான்" என்று சொன்னதை மட்டும் கவனித்தேன். ஏனென்றால் கவனம் புகைப்படம் ஒழுங்காக கத்தரிக்கப் படுகிறதா என்று அதில் தான் என் கவனம் இருந்தது.

அம்மணி அவனைப் பார்த்துக்கொண்டே 'உன் பேர் என்ன?' என்று விசாரித்தார். கிரிஷ் என்று சொல்ல, அவன் அண்ணன் பெயரையும் விசாரித்தார். ஜானேஷ் என்று சொன்னான். 

"குட் ஜாப்" என்று நாங்கள்... அதாவது வாடிக்கையாளர் பேசுவதை எல்லாம் தனியாக அவனே தான் கேட்டுக் கொண்டிருந்தான். அவனது தந்தை உள்ளே ஏதோ வேலையில் இருந்தார்.

'சின்ன பசங்க என்ன ஒழுங்கா எடுத்துறப் போறாங்க' என்று அசட்டை இல்லாமல், 'எப்படி தான் எடுக்குறாங்க பார்ப்போமே; அதிக பட்சம் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ... ஒழுங்காக எடுக்கவில்லை என்றால் கடந்துவிடுவோம்' என்று முன்னேறிச் சென்ற ஒரு முடிவு ஒரு பிரம்மாண்டத்தை தான் எனக்குக் காட்சியளித்தது.

ஒரு போட்டோ எடுத்து; அதை பிரிண்ட் போட்டுக்கொடுத்தது பெரிய பிரம்மாண்டமா என்று கேட்டால் நிச்சயம் பிரம்மாண்டம் தான். ஏனென்றால் அந்த சிறுவர்கள் இருவரும் போட்டோ மட்டும் எடுக்கவில்லை. கிட்டத்தட்ட அந்தத் தொழிலையே தான் சிறப்பாகச் செய்தார்கள் என்று நான் சொல்வேன்.

'போட்டோ தான எடுக்கணும், வாங்க நான் எடுக்கிறேன்' என்ற தன்னம்பிக்கை.
'பதினஞ்சு வருசமா இந்தக் கடை இருக்குது' என்று சொல்லி வாடிக்கையாளரின் நம்பிக்கையைச் சம்பாரித்தல்.
'எனக்கு full frame எடுக்கத் தெரியாது' என்ற தெளிவு.
'gpay பண்ணிடுங்க' என்ற நேர்மை.
அதோடு கூட செய்த வேலையில் இருந்த நேர்த்தி, ஒழுக்கம் என்று பெரியவன் ஒருவாறு கவர்ந்தான்.

'அவன் எதுவும் செய்யலேயே..' என்று குற்றம் கண்டுபிடிக்காமல், சூழ்நிலையைக் கையில் எடுத்த சின்னவன்...
'ஒரு பைவ் மினிட்ஸ் இருங்க' என்று வாடிக்கையாளரின் பொறுமையை சோதிக்காமல் கையாளுதல்...
'இன்னைக்கு அப்பா கொஞ்சம் லேட்டா வருவாங்க' என்று தன் அப்பாவிற்கு ஓய்வு தேவை; அவர் எந்நேரமும் இருக்க முடியாது என்ற புரிதல்; அவனிடமும் இருந்த நேர்த்தி, கவனம் எல்லாம் இன்னும் கவர்ந்தது.

இவர்களுக்கு மேல், வேலையின் நடுவே உள்ளே வந்தாலும்; நான் தான் வந்துட்டேனே; நீ கிளம்பு என்று சிறியவனை விரட்டாமல், ஒதுங்கி நின்ற தந்தை என்று யோசிக்க நிறைய இருந்தது.

கிட்டத்தட்ட அந்த ஸ்டுடியோவில் அவர் இல்லாமலேயே இந்த சிறுவர்கள் இருவரும் சமாளிக்கும் அளவிற்கு பிள்ளைகள் இருவருக்கும் வேலையோடு கூட அதில் ஒழுக்கம், நேர்த்தி, நேர்மை எல்லாம் சேர்த்தே கற்றுக்கொடுத்திருக்கிறார்.

உலக தந்தையர் தினம் இன்று... தந்தையின் பொறுப்பு, இருப்பு, வளர்ப்பு என்பது ஒரு குடும்பத்தில் மிகமிக அவசியம் என்று உணர்ந்து, நம் தந்தையின் இருப்பை, அவரை கொண்டாடவே இந்த நாளை நாம் அனுசரிக்கிறோம்.

அப்படியான இந்த நாளில், இந்த தந்தையின் வளர்ப்பை எழுதி வைப்பது மனதில் ஆகப்பெரும் திருப்தியாக உள்ளது.

அதோடு இன்னொன்றையும் எனக்கு நானே மறுபடியும் சொல்லிக்கொண்டேன். எவரையும் சாதாரணமாக எடைபோடக்கூடாது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதோடு கூட இந்த விஷயம் எங்களுக்கு ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட்டில் உண்டு - அதாவது வாய்ப்பு என்பதை கொடுக்காமல், நாமே ஒரு முடிவிற்கு வரக்கூடாது.

அந்த சிறுவர்கள் இருவருக்கும், 'சின்ன பையன் என்ன செய்வான்' என்று முடிவு செய்து வாய்ப்புக் கொடுக்காமல் போயிருந்தால், அவர்களது இந்த நிர்வாகத் திறமையை என்னால் பார்த்திருக்க முடியாது. கிட்டத்தட்ட ஸ்டியோவை அவர்கள் நடத்தினார்கள் என்றால் அது மிகையல்ல. அப்படி அவர்களை வழி நடத்தும் அந்த தந்தைக்கு வாழ்த்துக்கள். அவரது பெயர் ஜெய்க்குமார் என்று நினைக்கிறேன், ஸ்டியோவில் அந்த பெயரில் ஒரு gmail id பார்த்த ஞாபகம்.

இன்னும் மென்மேலும் இந்த சிறுவர்கள் வளரட்டும்.

இவண் 
கார்த்தி சௌந்தர் 

#karthisounder 
#FathersDay2025 
#FatherhoodJourney///

தெரிவு: சக

kanmani tamil

unread,
Jun 23, 2025, 2:31:43 PM6/23/25
to vallamai
நடிகர் திலகத்தின் நடிப்பில் இடம்பெறும் பல்வேறு பரிமாணங்கள்; வேறுபட்ட சூழலுக்கும் பாத்திரத் தன்மைக்கும் ஏற்ப வெளிப்படும் உன்னதம்,  திறமை பற்றி வழக்கறிஞர் சுமதி ரசிக்கும்படிப் பேசுகிறார்... அருமை 


சக 

kanmani tamil

unread,
Jun 23, 2025, 10:35:08 PM6/23/25
to vallamai
த.பி.சொக்கலால் ராம்சேட்:

/// நீதிபதியால் பீடிச்சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட த.பி.சொக்கலால் ராம்சேட் அவர்கள் நினைவு நாளில் (22/06/2025) அவர்களுக்கு நினைவு அஞ்சலி...

குடிசைத் தொழிலை நேர்மையாகச் செய்த காரணத்தினால் குபேரனாக வாழ்ந்தார் த.பி.சொக்கலால் ராம்சேட் அவர்கள். நாடார்களுக்கு எப்பவுமே தொழில் போட்டியாக இருப்பது உடன் பிறந்தவர்கள் அல்லது உறவினர்கள் அல்லது தாம் பிறந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இப்படித்தான் இருப்பதை நாம் பார்த்து வருகிறோம். இதே போல தான் அந்தக் காலத்திலும்... 

த.பி.சொக்கலால் ராம்சேட் அவருடைய முன்னேற்றத்தில் பொறாமை கொண்டவர்கள் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் அவர் மீது ஒரு வழக்குத் தொடுத்தார்கள்.  என்ன வழக்கு என்றால்; த.பி.சொக்கலால் ராம்சேட் அவர்கள் தயாரிக்கும் பீடி மட்டுமே சிறந்தது என்பது போல அவருடைய விளம்பரங்கள் இருக்கிறது; இதனால் அவருடைய விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என்று சொல்லி; சில நபர்கள் வழக்கு தொடுத்தார்கள். இவருடைய வழக்கு நடந்த காலம் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலம். அந்த ஆங்கிலேய நீதிபதிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. வழக்கு நடந்து கொண்டிருக்கிறது; இறுதியாக நீதிபதி ஒரு முடிவெடுக்கின்றார்.  10கம்பெனிகளில் உள்ள பீடிகளை வாங்கி வரச் சொல்கிறார். ஒவ்வொரு கம்பெனியிலும் உள்ள பீடிகளில் ஒவ்வொன்றை எடுக்கிறார். அதில் உள்ள லேபிள்களைக் கிழிக்கின்றார்.  நீதிபதிக்கு மட்டும் எந்த பீடி எந்த கம்பெனியைச் சேர்ந்தது என்பதைத் தெரிந்து கொள்கிற அளவுக்கு அதில் ஒரு அடையாளத்தை வைத்துக் கொள்கிறார்.  த.பி.சொக்கலால் ராம்சேட் அவர்களைப் பார்த்து இந்தப் 
10பீடிகளில் உங்களுடைய கம்பெனி பீடி எது என்று உங்களால் அடையாளம் காட்ட முடியுமா? என்று கேட்க; 'சரி' என்று சொல்லுகின்றார்.  மேசையின் மீது பத்து பீடிகள் வைக்கப்படுகிறது. த.பி.சொக்கலால் ராம்சேட் ஒரு பீடியை எடுத்து 'இது தான் எங்களுடைய பீடி' என்று சொல்லுகிறார். நீதிபதி அதை வாங்கிப் பார்த்து சரி என்று ஒப்புக் கொள்கிறார். அந்த நீதிபதி தான் த.பி.சொக்கலால் ராம்சேட் அவர்களுக்கு 'பீடிச்  சக்கரவர்த்தி' என்று புகழ் சூட்டியவர்.///

https://www.facebook.com/share/1AkLUeJbrp/

தெரிவு: சக 

kanmani tamil

unread,
Jun 24, 2025, 6:12:28 AM6/24/25
to vallamai
மாவீரர் மயிலப்பன் சேர்வை:

https://www.facebook.com/share/p/1CgCUkYWE2/

/// 1795 முதல் 1802 வரை ஏழு ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து பல இடங்களில் போரிட்டு வென்ற மாவீரர் தியாகி சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைகாரர் ஆவார்.

இவர் இராமநாதபுரத்தின் 
மன்னர் முத்து இராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் ஒரு படைப்பிரிவுக்குத் தலைவராக இருந்தவர்.

1799, ஏப்ரல் 24 ஆம் நாள்  முதுகுளத்தூரில் இருந்த ஆங்கிலேயரின் நிர்வாகத்தை (Court) தாக்கியது, அடுத்து அபிராமத்தில் உள்ள கைத்தறிக் கிட்டங்கியை தாக்கி; துணிகளைச் சூறையிட்டது, கமுதியில் உள்ள வெள்ளையர் மன்றத்தைத் (CLUB) தகர்த்து; பெரிய நெற்களஞ்சியங்களைக் கொள்ளையிட்டது போன்ற தாக்குதல்கள் அவரது தலைமையில் நடந்தன.

 தொடர்ந்து 42 நாட்கள் இத்தகைய போராட்டங்களால் முதுகளத்தூர், கமுதிச் சீமைகள் ஆங்கிலேய பிரிட்டிஷ் நிர்வாகத்திலிருந்து தனித்து சுதந்திரமாக நின்றன.

இப்போராட்டத்தில் தீவிர பங்கு கொண்ட மாவீரர்கள் சிங்கன் செட்டி, ஷேக் இப்ராகிம் சாகிபு போன்ற மயிலப்பன் சேர்வைகாரரின் தோழர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு காரணமாக ஆங்கிலப் படைகளை வழி நடத்தியவர்கள் கலெக்டர் லூஷிங்க்டன் மற்றும் கர்னல் மார்டின்ஸ் ஆவர்.

போராட்டத்தை அடக்கிய பிரிட்டிஷார் மயிலப்பன் சேர்வைகாரரைத் தவிர மற்றப் போராளிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கினர். 

வேறு வழியின்றி சேர்வைகாரர் மாறுவேடத்தில் சோழ நாடு சென்றார். எட்டு மாதங்கள் கழித்து சேது நாட்டிற்குத் திரும்பினார். அதன் பின் சிவகங்கை சீமையின் மருதிருவரின் வேண்டுகோளின்படி மருதிருவர் அணியில் சேர்ந்து பாடுபட்டதுடன் பாஞ்சாலம் குறிச்சிப் பாளையக்காரர், காடல்குடி, நாகலாபுரம், குளத்தூர் ஆகிய பாளையக்காரர்களது ஆங்கிலேயர் எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவாக மயிலப்பன் சேர்வைகாரர் செயல்பட்டார்.

மயிலப்பன் சேர்வைகாரின் நடவடிக்கைகளையும், அவர் தமிழ்நாட்டின் வீரப்புதல்வர்கள் தியாகிகள் மருதிருவர் அணியில் தீவிரமாக ஈடுபட்டதையும் நன்கு அறிந்திருந்த கலெக்டர் லூஷிங்க்டன் என்பவன் சேர்வைகாரரை தம்மிடம் ஒப்படைக்கும்படி மருது சகோதரர்களுக்கு தாக்கீது அனுப்பினான். மாவீரர்கள் தேசபக்தர்கள் மருது பாண்டியர் கலெக்டரின் உத்தரவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

ஆங்கில வியாபாரப் படைகளுக்கு எதிரான மருதிருவரின் இறுதிப் போராட்ட நாள் 1801அக்டோபர் 2. இதில் தோல்வியுற்றதன் காரணமாக 1801, அக்டோபர் 24 இல் திருப்புத்தூரில் மாவீர தியாகிகள் மருதிருவர் தூக்கிலிடப்பட்டனர்.

இம்முடிவிற்குப் பின்னர் மயிலப்பன் சேர்வைகாரர் தன்னந்தனியே முதுகளத்தூர், கமுதி பகுதிகளில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். பின்னர் வஞ்சக ஆங்கிலேயரின் வெகுமதிக்காக சொந்த நாட்டின் துரோகிகள் சிலரால் காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். மூன்று மாத கால கடுமையான சிறை வாழ்க்கையில் சித்ரவதை செய்யப்பட்டு பின்னர் மயிலப்பன் சேர்வைகாரர் 1802, ஆகஸ்ட் 6 ஆம் நாளன்று அபிராமத்தில் வெள்ளையரின் கிழக்கிந்திய கம்பெனியாரால் தூக்கிலிப்பட்டார். 

வாழ்க மயிலப்பன் சேர்வைக்காரர் புகழ் 
வாழ்க பாரதம் 🇮🇳 🙏 

இராம ஸ்ரீநிவாஸன் 
#know_about_freedom_fighters #AmritMahotsav #JaiHind  #know_about_freedom_struggle #ஜெய்ஹிந்த் #வந்தேமாதரம் #AzadiKaAmrutMahotsav
 #MeriMaatiMeraDesh #VandeMataram ///

தெரிவு: சக 

kanmani tamil

unread,
Jun 25, 2025, 2:38:35 PM6/25/25
to vallamai
டாக்டர் நடேசன் முதலியார்:

/// டாக்டர். நடேசன் முதலியார் அவர்களைப் பெருமைப் படுத்தும் விதமாக, அவரின் 150வது பிறந்த ஆண்டான 2024-25ல் அவருக்கு முழு உருவச் சிலை நிறுவி அவரது பங்களிப்பை தமிழ்நாட்டு மக்கள் உணரும்படி செய்தால் நன்றாக இருக்கும்...

இன்று நாம் அனுபவிக்கும் அரசியல் வளர்ச்சி, நீதிக்கட்சியின் நீட்சியே என்று அண்ணா கூறுவார்... 

1909ல் திரு. புருசோத்தமன் திரு. சீனிவாசன் ஆகிய இருவரால் ஆரம்பிக்கப்பட்டுக் கைவிடப்பட்ட பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை, 1912ல் தனது சமூக பொருளாதார பலத்தால் மீண்டும் கட்டமைத்து, விரிவுபடுத்தி பல திராவிட மாணவர்கள் படிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தவர்.

வலதுசாரி சிந்தனையுடன் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்த திரு. தியாகராயர் செட்டியையும் (...), இடதுசாரி சிந்தனையுள்ள டாக்டர். மாதவன் நாயரையும் ஒருங்கிணைத்து தென்னிந்திய நல உரிமைச் சங்கம்- பிறகு நீதிக்கட்சி உருவாகக் காரணமாக இருந்தவர்.

இன்றைய இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் 69% இட உரிமை உருவாக, வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கையை ஏற்படுத்தியவர்.

சமஸ்கிருதம் ஆங்கிலம் மட்டுமே இருந்த சென்னைப் பல்கலைக்கழகத்தில் (Madras University), தான் சிண்டிகேட் உறுப்பினராக இருந்த போது, தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு வந்தவர்.

பனகல் அரசர், பொப்பிலி அரசர் போன்ற நீதிக்கட்சித் தலைவர்களால் உதாசீனப்படுத்தப்பட்ட போதும், மீண்டும் நீதிக்கட்சியை வலுவடையச் செய்து, மீண்டும் ஆட்சியில் அமர்த்தியவர்.

நீதிக்கட்சியின் செயல்பாடுகளை மக்கள் உணராத வகையில், பார்ப்பனரல்லாத காங்கிரஸ் குழுவின் தலைவராக, காங்கிரஸால் உருவாக்கப்பட்டவர் தான் பெரியார் என்றும், பிறகு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காங்கிரசுக்கு எதிராகக் களம் காண ஆரம்பித்தவராகத் தான் பெரியார் மாறியிருக்க வேண்டும் என்பதும்....
அந்தப் பெரியார் உருவாகக் காரணமாக இருந்தவரும், நீதிக்கட்சியின் நிறுவனர் டாக்டர் நடேசன் முதலியார். 

நீதிக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த திமுகவின் நிறுவனர் அண்ணாவின் அரசியல் நமக்கு கிடைத்ததும், நீதிக்கட்சி மூலமாகத்தான்.

பல தலைமுறையாக திராவிட இயக்க அரசியலை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்றால், அதற்கு அடித்தளமிட்டவர் டாக்டர் நடேசன் முதலியார் அவர்கள்.

இன்று பல திராவிட இளைஞர்கள் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியவர் மட்டுமல்லாது பொன்னேரி வட்டத்தில் (தாலுக்கா) தங்களுடைய நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்களுக்கும், அரசுக்கும்...


தெரிவு: சக 

N. Ganesan

unread,
Jun 25, 2025, 9:38:57 PM6/25/25
to vall...@googlegroups.com
எல்லாக் கக்ஷிகளுமே தமிழ் என்று கோஷமிடுகின்றன. ஆனால், தமிழின் நிலை சிறப்பாக இல்லை.
நடேசன் + முதலியார் நடேச முதலியார் என்றல்லவா வரவேணும்.

kanmani tamil

unread,
Jun 25, 2025, 10:38:26 PM6/25/25
to vallamai
நான் பவணந்தியார் காலத் தமிழைப் பின்பற்றவில்லை. இருபத்தோராம் நாற்றாண்டுத் தமிழ் வலையுலகில் நிலவுவதற்கு ஏற்பப் பின்பற்றுகிறேன். 

'கட்சி' என்ற பொதுஜன வழக்கு உங்கள் போக்கில் 'கஷி' ஆவது போல...

சக 

kanmani tamil

unread,
Jun 25, 2025, 11:19:30 PM6/25/25
to vallamai
நடேச முதலியார் என்று துழாவினால் கிடைக்கும் செய்தி அரசியல் மசாலாவில் போட்டுப் புரட்டி எடுத்ததாக உள்ளது. 

நடேசன் முதலியார் என்று துழாவினால் கொஞ்சம் பொதுவெளித் தொடர்புக்கு ஏற்ற மாதிரி கிடைக்கிறது. 

சக 

kanmani tamil

unread,
Jun 28, 2025, 12:13:51 AM6/28/25
to vallamai
மபொசி எனத் தமிழக மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ம.பொ.சிவஞானம்:

/// சென்னையை மீட்டுத் தந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி!

வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றியும், கப்பலோட்டிய தமிழனைப் பற்றியும் முதன்முதலில் வெளி உலகறிய வைத்தவர் ம.பொ.சிவஞானம் நினைவு தினசிறப்புப் பகிர்வு.

சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில், 1906 ம் ஆண்டு பிறந்தார் ம.பொ.சி. மிகவும் வறுமையான சூழலில் பிறந்ததால், 3 ம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திக் கொண்டு நெசவுத் தொழிலில் கூலியாளாக வேலை செய்தார். பின்னர் அச்சுக் கோர்க்கும் பணியில் நீண்ட வருடங்கள் பணிபுரிந்தார். மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே பின்னாளில் ம.பொ.சி. என்று ஆயிற்று.

1968 ம் ஆண்டு அதுவரை 'மெட்ராஸ் ஸ்டேட்' என அழைக்கப்பட்டு வந்த சென்னை மாகாணத்திற்கு, தமிழ்நாடு என அழகான பெயர் சூட்டப்பட்டது. இதற்கான தீர்மானம், அன்றைய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது, முதல்வர் அண்ணாவால் பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டார் அந்தத் தலைவர்.

அதிகாரம் தந்த கவுரவத்தினால், சென்னை மாகாணத்தை 'தமிழ்நாடு' என பெயர் மாற்றும் பெருமையை அண்ணா அடைந்தாலும், அந்தப் பெயர் மாற்றத்திற்குப் பின்னணியாக ஒருவரின் கடந்த காலப் போராட்டங்கள் இருந்தன. அதுதான் அண்ணாவின் வானளாவிய பாராட்டுக்கு காரணம்.
அந்த பாராட்டுக்கும் பெருமைக்கும் உரிய அந்தத் தலைவர், ம.பொ.சி என்கிற மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்.

'தலைநகர் சென்னை' என இன்று நாம் போற்றிக் கொண்டாடும் சென்னை, ஒருநாள் நம்மை விட்டுச் செல்லும் நிலை வந்த போது, பெரும் போராட்டங்களை நடத்தி, அதை நமக்கு மீட்டுக் கொடுத்த பெருந்தகை இவர் தான் என்பது இன்றைய தலைமுறையினர் அறியாத சேதி.

தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்!

வறுமையின் காரணமாக 3-ம் வகுப்பு வரைதான் படித்தார் ம.பொ.சி. 1927-ல் 'தமிழ்நாடு ' நாளிதழில் அச்சுக் கோப்பாளராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கே அவர் அறிய நேர்ந்த விடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகள் அவருக்குள் சுதந்திர வேள்வியை எழுப்பின. பலமுறை சிறை சென்றார். சிறையில் தமிழ் இலக்கியங்களைக் கற்று, தமிழ்ப் புலமையை மேம்படுத்திக் கொண்டார்.

சிலம்புச் செல்வர்

ம.பொ.சி, தான் எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூலைத் தன் நண்பர் அச்சகத்தில் எழுத்து எழுத்தாகக் கோர்த்து அச்சிட்டார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யும், வீரபாண்டிய கட்டபொம்மனும் ம.பொ.சி-யின் எழுத்து மூலமே தமிழ்ச் சமூகத்துக்கு அறிமுகம் ஆனார்கள். 1962-ல் ம.பொ.சி எழுதிய 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூலுக்குச் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இவருடைய 'விடுதலைப் போரில் தமிழகம்' என்னும் நூலே இந்திய விடுதலைப் போரில் தமிழர்கள் ஆற்றிய பங்கை எடுத்துரைத்த முதல் நூல்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் புகழ்பரப்பும் பணியைச் செய்தவர் ம.பொ.சி. அவரது வரலாற்றைப் பற்றி நுால் எழுதி, வ.உ.சி.யின் தியாகங்களை உலகறியச் செய்தவரும் அவர்தான் . ம.பொ.சி. எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூல், வ.உ.சி.யின் பெருமையை உலகிற்கு உணர்த்தியது. இந்த நூலைத் தழுவித் தான் 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் சிறந்த திரைப்படம் உருவானது.

சிலப்பதிகாரத்தை உலகறியச் செய்ய வேண்டும் என்கிற வேட்கையில் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினார். சிலம்பின் மேல் இவர் கொண்டிருந்த காதலை அறிந்த ரா.பி.சேதுப்பிள்ளை, நாகர்கோவிலில் நடந்த எழுத்தாளர் மாநாட்டில் 'சிலம்புச் செல்வர்' என்னும் பட்டத்தை ம.பொ.சிக்கு வழங்கினார்.

தமிழரசுக் கழகம்

1946-ல் 'தமிழரசுக் கழகம்' என்ற இயக்கத்தை ம.பொ.சி. தொடங்கினார்.

சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திராவைப் பிரித்து, தனி ஆந்திர மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தபோது, சென்னை நகரம் தங்களுக்கு வேண்டும் என்று ஆந்திர மக்கள் கோரினார்கள். 'மதராஸ் மனதே' என்று ஆந்திரர்கள் எழுப்பிய இந்தக் குரலுக்கு, 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று வீர முழக்கம் எழுப்பியவர் ம.பொ.சி. ஒரு கட்டத்தில் சென்னையை பொதுத் தலைநகரமாக ஆக்கலாம், அல்லது இரண்டாகப் பிரிக்கலாம் என்று கூட மத்திய அரசு நினைத்தது. சென்னை நகரின் மீது தமிழர்களுக்கு உள்ள உரிமையை வலியுறுத்தி, அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரிக்குத் தந்திகள் அனுப்பும் இயக்கத்தை ம.பொ.சி. நடத்தினார். இதன் தாக்கத்தால் மத்திய அரசின் முடிவினை மறுபரிசீலனை செய்வதாகவும் சாஸ்திரி உறுதி கூறினார்.

ம.பொ.சி.யின் கடும் போராட்டத்தைத் தாங்க முடியாமல் அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜியே அவரைக் கைது பண்ண வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இறுதியாக ம.பொ.சி.யின் எண்ணம் போல் சென்னை தமிழ்நாட்டின் தலைநகரானது.

மாநகராட்சிக் கொடி

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகராட்சியின் கொடி, 'கடல், கப்பல், மூன்று சிங்கங்கள், இரண்டு மீன்கள்' கொண்டதாக இருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பின் மாநகராட்சியின் கொடிச் சின்னம் மாற்றப்பட வேண்டிய அவசியம் வந்தது. இதற்கான குழுவில் இருந்த ம.பொ.சி. தனது தமிழரசுக் கழகத்தின் கொடியில் இருந்த சேர, சோழ, பாண்டியரின் சின்னமான 'வில், புலி, மீன்' சின்னங்களை சென்னை மாநகராட்சிக் கொடியிலும் பொறிக்கப் பரிந்துரைத்தார். இன்றுவரை ம.பொ.சி. பரிந்துரைத்த கொடியே சென்னை மாநகராட்சியின் கொடியாகத் திகழ்கிறது.

ம.பொ.சி.யின் தீவிரமான திருத்தணி எல்லைப் போராட்டத்தின் விளைவாகத்தான், திருப்பதி போன்று திருத்தணியும் ஆந்திரர்களின் ஆளுமைக்குச் சென்றுவிடாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.

'தமிழ்நாடு' பெயர் மாற்றம்

சென்னை மாகாணத்துக்கு, 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்று முதல் குரல் எழுப்பியவர் ம.பொ.சியே. 29.11.1955-ல் தனது தமிழரசுக் கழகச் செயற் குழுக் கூட்டத்தில் முதன் முதலில் ம.பொ.சி. தான், “தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை மெட்ராஸ் ஸ்டேட் என்றழைக்கப்படுவதை எதிர்க்கிறோம். தமிழ்நாடு என்று பெயரிடப் பட வேண்டும்” என்று தீர்மானத்தை நிறை வேற்றினார்.

பொங்கல் திருநாளைத் தமிழினத்தின் தேசியத் திருநாளாகக் கொண்டாட முதன் முதலில் ஏற்பாடு செய்தவர் ம.பொ.சி. 1946-ம் ஆண்டு ஜனவரி 14-ல் சென்னை கோகலே மண்டபத்தில் முதல் தமிழர் திருநாள் கொண்டாடும் பழக்கத்தைத் தொடங்கி வைத்தவரும் இவரே.

1950 ல் சென்னை, ராயப்பேட்டை காங்கிரஸ் திடலில் முதன்முதலாக சிலப்பதிகார மாநாடு நடைபெற்றது. இதற்குப் பெரும் பங்காற்றியவர் ம.பொ.சி. ரா.பி.சேதுப்பிள்ளை, டாக்டர் மு.வரதராசனார், காமராஜர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களையும் மாச்சர்யங்களின்றி அழைத்து விழாவை நடத்தினார். ம.பொ.சி. அனைத்துக்கட்சி பிரபலங்கள், தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்ட தமிழ் கலாச்சார விழாவாக அது நடந்தேறியது. தனது தமிழரசு கழகம் மூலம், சிலப்பதிகார விழாவைத் தொடர்ந்து நடத்தினார். ம.பொ.சியின் தமிழ்க்கொடையைப் பாராட்டி, பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை அவருக்கு 'சிலம்புச்செல்வர் என்னும் பட்டத்தை வழங்கினார். அவரது மறைவிற்குப் பிறகும் மகள் மாதவி அதைத் தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ம.பொ.சி 1967-71 காலகட்டத்தில் சட்டமன்ற மேலவைத் துணைத் தலைவராகப் பணியாற்றிய போது தான் சென்னை மாகாணம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் பெற்றது. அது தொடர்பான தீர்மானம் சட்டமன்றத்தில் அண்ணா தலைமையில் நிறைவேற்றப்பட இருந்த சமயம், ஒரு சிக்கல் எழுந்தது. அதாவது வட இந்தியர்களுக்கு ழகர உச்சரிப்பு வராது என்பதால், தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில் tamilnad அதாவது 'டமில் நாட்' என உச்சரிப்புக்கு வசதியாக மாற்ற ராஜாஜி, திமுக அமைச்சரவைக்கு ஆலோசனை தந்தார்.

இதை ஏற்றுக் கொள்வதாக அண்ணா முடிவெடுத்தபோது ம.பொ.சி. அதை எதிர்த்தார். தமிழின் அழகிய ஓசையை மாற்ற எதிர்ப்புத் தெரிவித்தார். அதேபோல் நாடு என்பது nadu என்றே ஆங்கிலத்தில் இடம்பெறவேண்டும் என வாதிட்டார்.

காங்கிரஸ், திமுகவுக்கு அடுத்தபடியாக திரையுலகப் பிரமுகர்கள் பலர் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் உறுப்பினர்களாகவோ அல்லது ஆதரவாளர்களாகவோ இருந்தனர். பழம்பெரும் இயக்குநர் ஏ.பி.என், அவ்வை டி.கே. சண்முகம் பிரபல தயாரிப்பாளர் ஜி.உமாபதி... இன்னும்பலர்.

சட்டமன்ற மேலவை உறுப்பினராக 1952 முதல் 54 வரையிலும், சட்டமன்ற மேலவைத் தலைவராக 1972முதல் 1978வரையிலும் ம.பொ.சி. பணியாற்றினார். 1986நவம்பர் முதல் மூன்று ஆண்டு காலம் தமிழ் வளர்ச்சி உயர்நிலைக் குழுத் தலைவராகவும் பணியாற்றியவர்.

1966 இல் ம.பொ.சி.யின் ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. 1972ஆம் ஆண்டு மத்திய அரசு அவரது பொதுத்தொண்டைப் பாராட்டி “பத்மஸ்ரீ” விருதினை வழங்கி கவுரவித்தது. இது தவிர சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திடமிருந்து டாக்டர் பட்டம் பெற்றார்.

தமிழக சட்டமன்ற மேலவையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி, 1978 முதல் மேலவை கலைக்கப்பட்ட 86 ஆம் ஆண்டுவரை அதன் தலைவராக இருந்தார். அவர் தலைவர் பொறுப்பு வகித்த காலத்தில் மேலவை சிறப்புப் பெற்று இயங்கியது.

தமிழ், தமிழர், தமிழகம் எனத் தன் இறுதி மூச்சுவரை தமிழ்த்தொண்டுபுரிந்த ம.பொ.சி 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ம் தேதி உடல்நலம் குன்றி தனது 89ம் வயதில் காலமானார்.

இப்படி தமிழ்நாட்டின் வரலாற்றில் முத்திரை பதித்த ம.பொ.சி. தமிழக வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத மாமனிதராக விளங்குகிறார்.

Malaichamy Chinna C///


மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை ம.பொ.சி.யைச் சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவித்த போது நான் முதுகலை பயிலும் மாணவி. ஃபாத்திமா கல்லூரியில் இருந்து தமிழ்த் துறையினர் அனைவரும் பங்கேற்றோம். அவரது உரை தனது போராட்டங்களுக்குப் பெரியாரிஸ்ட்கள் போடும் முட்டுக்கட்டை பற்றியதாக இருந்தது. ஆனால் மிக மிக நயத்தகு நாகரிகத்துடன் அமைந்து இருந்தது. 

என்றும் தமிழினத்தின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பெரிய மனிதர் ம.பொ.சி.

தெரிவு: சக 

N. Ganesan

unread,
Jun 29, 2025, 10:27:24 PM6/29/25
to vall...@googlegroups.com
On Wed, Jun 25, 2025 at 9:38 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நான் பவணந்தியார் காலத் தமிழைப் பின்பற்றவில்லை. இருபத்தோராம் நாற்றாண்டுத் தமிழ் வலையுலகில் நிலவுவதற்கு ஏற்பப் பின்பற்றுகிறேன். 

'கட்சி' என்ற பொதுஜன வழக்கு உங்கள் போக்கில் 'கஷி' ஆவது போல...

கஷி அன்று. கக்‌ஷி (= கக்ஷி) - இவ் வடசொல்லை அவ்வாறே பாரதியார், ஈவேரா எழுதினார்கள்.
நாட்டார் வழக்கில் கச்சி என்று சொல்வர். லக்ஷ்மி > லச்சுமி போல. கக்‌ஷி > கட்சி என எழுதப்படுகிறது.

நடேசன் முதலியார், ஆலவாயன் நாடார், அருணாசலன் ஐயர், ... என எழுதுவது தற்கால ஆங்கிலப்
பள்ளிகளின் தாக்கம். ஆங்கிலத்தில் பார்த்து, தமிழில் எழுதுகின்றனர்.

நா. கணேசன்

 

N. Ganesan

unread,
Jun 29, 2025, 10:30:53 PM6/29/25
to vall...@googlegroups.com
கிண்டி பொறியியல் கல்லூரியில், தமிழ் மன்றத்துக்கு ம. பொ. சிவஞான கிராமணியாரை அழைத்து வந்து பேசச் செய்தேன். சிறந்த தமிழ்த் தேசியவாதி.

கவிஞர் சௌந்தரா கைலாசமும் பங்கேற்றார். மிகச் சிறந்த இலக்கியச் சொற்பொழிவுகள். 

நா. கணேசன்

kanmani tamil

unread,
Jun 30, 2025, 3:41:52 AM6/30/25
to vallamai
/// நடேசன் முதலியார், ஆலவாயன் நாடார், அருணாசலன் ஐயர், ... என எழுதுவது தற்கால ஆங்கிலப்
பள்ளிகளின் தாக்கம்./// Dr.Ganesan wrote at 7.57am

அரசியல் சமூக மாற்றங்களால் ஏற்பட்டு இருக்கும் மாற்றம். இது காலந்தோறும் நிகழ்வது தானே; தவிர்க்க முடியாதது. எந்த மொழியும் இத்தகு மாற்றத்திற்கு விதிவிலக்கு இல்லை. 

சக 



kanmani tamil

unread,
Jul 1, 2025, 4:50:08 AM7/1/25
to vallamai
திருநெல்வேலி மற்றும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இந்தி ஆசிரியராகப் பணியாற்றிய பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார்... 

/// ஜூன் 24, தமிழகத்தின் பிரபல மொழியியல் வல்லுநர்களில் ஒருவரான பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை (Ka.Appadurai) பிறந்த தினம்.

குமரி மாவட்டத்தின் ஆரல்வாய்மொழி என்ற ஊரில் பிறந்தார் (1907). இவரது இயற்பெயர், நல்லசிவம். சொந்த ஊரில் ஆரம்பக்கல்வி கற்றார். திருவனந்தபுரம் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்திலும் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்திலும் முதுகலைப்பட்டம் பெற்றார்.

சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் எல்.டி. பட்டம் பெற்றார். தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் மொழிகளைத் திறம்படக் கற்றார். மேலும் ஆப்பிரிக்க மொழி உள்ளிட்ட 18 மொழிகளை அறிந்திருந்தார்.

திருநெல்வேலி மற்றும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இந்தி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் காரைக்குடியை அடுத்த அமராவதிப் புதூர் குருகுலப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது அங்கு மாணவராக இருந்த கவிஞர் கண்ணதாசன் இவரிடம் கல்வி பயின்றார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த இவர், திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், இலிபரேட்டர், விடுதலை, லோகோபகாரி, தாருல் இஸ்லாம், குமரன், தென்றல் உள்ளிட்ட பல இதழ்களில் எழுதி வந்தார்.

சிறுகதைகள், இலக்கியத் திறனாய்வு நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், நாடகம், பொது அறிவு நூல், அகராதி, உரைநூல், குழந்தை இலக்கிய நூல் என பல்வேறு களங்களிலும் தனி முத்திரைப் பதித்தார். ‘இந்தியாவின் மொழிச்சிக்கல்’ என்ற நூலைப் படைத்தார். சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959 முதல் 1965 வரை அதன் ஆசிரியராகச் செயல்பட்டார்.

தமிழ் இலக்கியம், தமிழக வரலாறு குறித்த ஆராய்ச்சிகளில் கண்டறிந்தவற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆராய்ச்சி நூல்களாக எழுதினார். இவற்றில் ‘குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு’ மற்றும் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ ஆகிய நூல்கள் சிறந்த படைப்புகளாகப் போற்றப்பட்டன.

‘சரித்திரம் பேசுகிறது’, ‘சென்னை வரலாறு’, ‘கொங்குத் தமிழக வரலாறு’, ‘திராவிடப் பண்பு’, ‘திராவிட நாகரிகம்’ உள்ளிட்ட வரலாற்று நூல்கள், ‘கிருஷ்ண தேவராயர்’, ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்’, ‘சங்க காலப் புலவர் வரலாறு’ உள்ளிட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களையும் படைத்தார்.

அலெக்சாண்டர், சந்திரகுப்தர், சாணக்கியர் உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், 6 தொகுதிகளாக வெளிவந்த திருக்குறள் மணி விளக்க உரை உள்ளிட்ட இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை. திருக்குறளுக்கு விரிவுரையும் விளக்க உரையும் பல ஆயிரம் பக்கங்களில் வழங்கியுள்ளார்.

‘உலக இலக்கியங்கள்’ என்ற தனது நூலில் பாரசீகம், உருது, பிரெஞ்சு, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளின் இலக்கியங்களை ஆராய்ந்து பல அரிய செய்திகளை வழங்கியுள்ளார். உலகின் ஆதி மொழி தமிழ் என்றும், உலகின் முன்னோடி இனம் தமிழ் இனம் என்று அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து தனது கருத்தை வெளியிட்டார்.

அறிவுச் சுரங்கம், தென்மொழி தேர்ந்தவர், சிறந்த சிந்தனையாளர், சிறந்த சொற்பொழிவாளர், கனிந்து முதிர்ந்து பழுத்த பேரறிவாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை 1989-ம் ஆண்டு 82-வது வயதில் மறைந்தார்.///


தெரிவு: சக 

kanmani tamil

unread,
Jul 2, 2025, 6:09:28 AM7/2/25
to vallamai
இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டு இருக்கும் ஆளுமைகள்: டாக்டர் கோபி& டாக்டர் ஹேமப்ரியா கோபி

/// இந்தக் காலத்தில் 
இப்படியும் சில டாக்டர்கள் 
இருக்கத்தான் செய்கிறார்கள்.

டாக்டர் கோபி. அவரது மனைவி டாக்டர் ஹேமப்பிரியா. 
மதுரையில் மருத்துவமனை வைத்திருக்கிறார்கள்.

நம்பவே முடியாத ஒரு மாபெரும் மருத்துவ சேவையை இந்த டாக்டர் தம்பதிகள் இருவரும் இணைந்து செய்து வருகிறார்கள்.

இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் ஏழைக் குழந்தைகள் எங்கிருந்தாலும் தேடிப் பிடித்து, 
முழுக்க முழுக்க இலவசமாகவே அவர்களுக்கு சிகிச்சை செய்து குணப்படுத்தி வருகிறார்களாம்.

"இவர்களுக்கு சொந்த ஊர் மதுரைதானா ?"

"டாக்டர் ஹேமப்பிரியாவுக்கு மதுரைதான். ஆனால் டாக்டர் கோபிக்கு சேலத்துக்குப் பக்கத்தில ஒரு சின்ன கிராமம்."

"இதற்குப் பின்னணியில் ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டுமே ! எதனால் ஆரம்பித்தார்கள் இப்படி ஒரு வித்தியாசமான சேவையை ?"

காரணம் இருக்கிறது.
சேலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கோபி, குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சையில் சிறப்பு மருத்துவம் படித்தவர். 

கஷ்டப்பட்ட குடும்பம்தான்.
அரசாங்கம் கொடுத்த கல்வி உதவித் தொகையிலும், அப்பா வாங்கிக் கொடுத்த கடன் தொகையிலும்தான் டாக்டருக்கு படித்து முடித்திருக்கிறார் இந்த கோபி.

மருத்துவக்கல்லூரியில் 
படிக்கும்போதே உடன் படித்த மாணவி ஹேமப்பிரியாவோடு பழக்கமும் நெருக்கமும் ஏற்பட ...
கோபியின் இரக்ககுணம் ஹேமாவை ஈர்த்திருக்கிறது. இருவரையும் கல்யாணத்தில் இணைத்திருக்கிறது.

மருத்துவ படிப்பை முடித்த பின்...
சென்னை பெங்களூர் ஹைதராபாத் எல்லா இடங்களிலும் உள்ள தனியார் மருத்துவ மனைகளில் டாக்டராக பணிபுரிந்து கை நிறைய சம்பாதித்து வந்திருக்கிறார் டாக்டர் கோபி.

ஆனால் அவர் வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டது
சதீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணி புரியும்போதுதான்.

அங்கேதான் ஒரு ஆறு வயது சிறுமியை, தன் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கப் போகும் ஒரு குழந்தையைச் சந்தித்தார் டாக்டர் கோபி.

அந்தச் சிறுமியின் இதயத்தில் ஏதோ ஒரு இனம் தெரியாத கோளாறு. அது முற்றிய நிலையில் மூச்சுத் திணறி
அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்க...
அவசரம் அவசரமாக டாக்டர் கோபியிடம் அவளை அழைத்து வந்தார் அவளது அம்மா.

கோபி கேட்டார்: "எப்போதிலிருந்து அம்மா இந்தப் பிரச்சனை இருக்கிறது?"

அந்த அம்மா அழுதுகொண்டே,
"இவ பிறந்து ஆறு மாதத்திலேயே ஆஸ்பத்திரியில கண்டுபிடிச்சுட்டாங்க டாக்டர். அப்பவே ஆபரேஷன் பண்ணணும்னு சொன்னாங்க."

டாக்டர் கோபி கொஞ்சம் கோபத்துடன்தான் கேட்டார். "அப்புறம் ஏம்மா உடனடியா அறுவை சிகிச்சை பண்ணல ?"

அந்த அம்மாக்காரி கண்ணீர் வடித்தபடி பதில் சொன்னாள்: "ஆபரேஷன் பண்ண நிறைய செலவாகும்னு சொன்னாங்க. அந்த அளவிற்கு பணம் எங்ககிட்ட இல்லை டாக்டர்."

டாக்டர் கோபி எதுவும் பேசாமல் அந்த குழந்தையின் மருத்துவ ரிப்போர்ட்களை திரும்பத்திரும்ப பார்த்தார். அந்த அறிக்கைகளின்படி, நோய் கண்டு பிடிக்கப்பட்ட ஆறாவது மாதத்திலேயே, அவள் குழந்தையாக இருக்கும்போதே தாமதம் செய்யாமல் உடனடியாக அறுவை சிகிச்சை செய்திருந்தால் அவள் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம். 

ஆனால் இப்போது...
பிரச்சினை எல்லை மீறி எல்லாமே கை நழுவிப் போய் விட்ட இந்த நிலையில்...

எந்த ஒரு சிகிச்சையும் கை கொடுக்கப் போவது இல்லை. என்ன முயற்சி செய்தாலும் அந்தச் சிறுமியைக் காப்பாற்ற வழியேதும் இல்லை.

மனமுடைந்து போனார் டாக்டர் கோபி.

அன்றிரவு வெகுநேரம் தூங்காமல் விழித்திருந்தார்.

"என்னங்க ஆச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க ?"என்று மனைவி கேட்க,
"ஒன்றுமில்லை ஹேமா.
எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை.
எந்தப் பாவமும் செய்யாத அந்த ஆறு வயது குழந்தை வெகுவிரைவில் 
நம் கண் முன்னாலேயே
இறந்து போகப் போகிறதே, இதற்கெல்லாம் யார் காரணம் அல்லது எது காரணம் ?"

கணவன் சொன்னதைக் கேட்ட அந்த நொடியே ஹேமாவின் தூக்கமும் தொலைந்து போனது.

அன்று இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய இது பற்றி நிறைய பேசினார்கள்.

உரிய காலத்தில் சிகிச்சை கொடுக்காததால் உயிரை இழக்கப் போகும் அந்த ஆறு வயது சிறுமி மட்டும் அல்ல. ஆண்டுதோறும் நம் நாட்டில் பல குழந்தைகள் இப்படித்தான் பரிதாபமாக உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சரியான நேரத்தில் இதயத்தில் ஏற்பட்டிருக்கும் கோளாறை கண்டுபிடிக்க முடியாதது ஒரு காரணம். அப்படியே கண்டு பிடித்தாலும் சிகிச்சை செய்ய தேவையான மருத்துவ வசதிகளும் பணவசதியும் இல்லாதது இன்னொரு முக்கியமான காரணம்.

இதன் காரணமாக ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பச்சிளம் குழந்தைகளின் பரிதாப மரணம்.

'இதற்கெல்லாம் என்னதான் தீர்வு' என்று கேட்டார் ஹேமா.

கோபி அமைதியாகப் பதில் சொன்னார். "இதற்கான தீர்வுக்கு நாம்தான் முயற்சி எடுக்க வேண்டும்."

"என்ன சொல்கிறீர்கள் கோபி ?"

"ஆமாம் ஹேமா. நாம் தனி ஆளாக நின்று இந்த காரியத்தைச் சாதிக்க முடியாது. இதற்காக ஒரு ஃபவுண்டேஷன் உருவாக்க வேண்டும்."

"இந்த சதீஷ்கர் ஊரிலா ?"

"இல்லை. இது நமக்கு புது இடம். நமக்குத் தேவையான ஒத்துழைப்பு அவ்வளவு சீக்கிரத்தில் இங்கு கிடைத்து விடாது. இதை நமக்கு நன்கு தெரிந்த இடத்தில் ஆரம்பிப்பது தான் நல்லது."

இப்படித்தான் மதுரையில் உதயமானது லிட்டில் மொபெட் ஹார்ட் ஃபவுண்டேஷன்.
( little moppet heart foundation)

எதற்காக சென்னை போன்ற பெருநகரங்களை விட்டுவிட்டு 
மதுரையை தனது சேவைக்கான இடமாக டாக்டர் கோபி தேர்வு செய்தார்?

"அதற்குக் காரணம் இருக்கிறது
மதுரையை சுற்றி நிறைய சின்ன சின்ன கிராமங்கள் இருக்கின்றன.
இங்கே உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை.
இந்த கிராமத்து மக்களுக்கு சிகிச்சைக்கு செலவழிக்க போதுமான பணமும் கையில் இல்லை. 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக
குழந்தைப் பருவத்தில் எளிதாகக் கண்டுபிடித்து குணப்படுத்தக்கூடிய ஒரு நோயை, ஆரம்ப கட்டத்திலேயே எப்படிக் கண்டு பிடிப்பது, அதற்கு என்ன சிகிச்சை செய்வது என்ற அடிப்படை மருத்துவ அறிவு இங்கே கொஞ்சம் கூட இல்லை. அதனால்தான் சென்னையை விட்டு விட்டு மதுரையை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்."

ஆரம்பித்த வேகத்திலேயே அடுத்தடுத்து ஏராளமான இடங்களில் இலவச மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தினார் டாக்டர் கோபி.

மதுரை, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவில்பட்டி, திருநெல்வேலி, ராமநாதபுரம், பரமக்குடி போன்ற தென் மாவட்டங்களில் நடத்திய இந்த முகாம்களில், பிறவி இதயநோய் உள்ள ஏராளமான குழந்தைகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். 

மதுரையில் உள்ள தேவதாஸ் மருத்துவமனை, இந்த குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை செய்ய அத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க...

இதுவரை நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சைகள் செய்து அந்த பச்சிளம் குழந்தைகளின் உயிரை பத்திரமாக காப்பாற்றியிருக்கிறார்கள்.

அனைத்துமே இலவசமாக.

"எல்லாமே இலவசம் என்பது சரி. நீங்கள் உங்கள் குடும்பத்தை எப்படி நடத்துகிறீர்கள் டாக்டர் கோபி ?"

சிரித்தபடி இதற்கு பதில் சொல்கிறார் அவரது மனைவி ஹேமா.
"பண வசதியில்லாத பரிதாப நிலையிலுள்ள குழந்தைகளுக்கு மட்டும்தான் இங்கே நாங்கள் இலவசமாக சிகிச்சை செய்கிறோம். பணம் இருக்கிறவர்கள் வெளியே உள்ள ஹாஸ்பிடல்களில் இருந்து கூப்பிட்டால், என் கணவர் ஆபரேஷன் செய்து விட்டு அதற்குரிய ஃபீஸ் வாங்கி கொண்டு வருவார். 
நானும் என் பங்குக்கு வீட்லயே குழந்தைகளுக்கான பேபி ஃபுட் தயார் செய்து ஆன்லைனில் அதை விற்பனை செய்கிறேன்.
எங்களுக்கும் எங்கள் இரு குழந்தைகளுக்கும் இது தாராளமாகப் போதும்."

சில நொடிகளின் அமைதிக்குப் பிறகு ஹேமா தொடர்ந்து சொல்கிறார்:
"நாங்கள் இருவரும் வெளியிடங்களுக்குச் சென்று பிராக்டீஸ் செய்தால் கண்டிப்பாக இதைவிட பலமடங்கு பணத்தை சம்பாதிக்கலாம். ஆனால் இந்த ஏழைக் குழந்தைகளுக்கு நாங்கள் கொடுக்கும் இலவச சிகிச்சையினால், அந்தக் குழந்தைகளின் முகங்களிலும் அவர்கள் பெற்றோரின் முகங்களிலும் காணப்படும் திருப்தியையும் நிறைவையும் எத்தனை கோடிகள் கொடுத்தாலும் நாம் பார்க்க முடியாது."

டாக்டர் கோபி,
டாக்டர் ஹேமப்பிரியா,
இருவருக்கும் நமது 
நல் வாழ்த்துக்கள்..!

ஏராளமான இணைய தளங்களில் தேடி எடுத்த, டாக்டர் தம்பதியினரின் புகைப்படங்களையும், அவர்களிடம் சிகிச்சை பெற்று நலமுடன் வாழும் குழந்தைகளின் புகைப்படங்களையும் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.

ஆனால் இப்படி ஒரு 
தன்னலமற்ற சேவையை இந்த டாக்டர் தம்பதியினர் ஆரம்பிக்க மூல காரணமாக இருந்த அந்த ஆறு வயதுக் குழந்தை...

அவள் புகைப்படத்தை எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை.

சரி. அதனால் என்ன ? உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு தேவதையின் படத்தை, அந்த குழந்தையின் படத்துக்கு பதிலாக நினைத்துக் கொள்ளுங்கள்.

அந்த தேவதை தான் இந்த டாக்டர் தம்பதிகளின் மனமாற்றத்திற்கும்
மருத்துவ சேவைக்கும் காரணம்.

எங்கிருந்தோ நம்மைப் பார்த்து புன்னகைக்கும் அந்த சின்னஞ்சிறு தேவதையை
இங்கிருந்தே நான் வணங்குகிறேன், 
வாழ்த்துகிறேன்..!

John Durai Asir Chelliah///

இது ஒரு வாட்ஸ்ஆப் பகிர்வு 

சக 

kanmani tamil

unread,
Jul 3, 2025, 1:54:19 AM7/3/25
to vallamai
அதே முகநூல் பதிவு- படங்களுடன்...

https://www.facebook.com/share/195f5wS4kM/

சக 

kanmani tamil

unread,
Jul 5, 2025, 5:53:50 AM7/5/25
to vallamai
இது இப்போது தான் வளர்ந்து வரும் ஆளுமை...

https://www.facebook.com/share/p/17wLGqPqxS/

/// ரஜினி கலையரசன்: யாருடைய ஆதரவும் இல்லை; ஆசிரியர்கள் தயவில் படித்தார். ஆசிரியர் ஆக வேண்டும் என்பது ஆசை; ஆனால் டாக்டராக்கி விட்டார்கள். இன்று மருத்துவமும் பார்த்தபடி படித்தபள்ளியில் மாணவர்களுக்கு வகுப்பும் எடுக்கிறார்!

பள்ளியில் படித்து முடித்து, டாக்டர் ஆன பிறகும் நன்றி மறக்காமல், தான் படித்த தொடக்கப்பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்குத் தமிழ் மற்றும் அறிவியல் பாடம் நடத்தி, நன்றிக் கடனை திருப்பிச் செலுத்திக் கொண்டிருக்கிறார் ரஜினி கலையரசன் என்ற மருத்துவர்!
கண்களைக் குளமாக்கும் மனதைச் சுடும் அவரது வாழ்க்கை.

"ஆறு வயதில் தந்தையையும், தாயையும் இழந்து, நடுத்தெருவுக்கு வந்து நின்றேன் எனக்கு உறவுகள் இருந்தனர்; ஆனால் அவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால், இரவில் படுத்துறங்க மட்டும் சித்தப்பா முனியப்பா வீட்டுத் திண்ணையில் இடம் கிடைத்தது. அதுவும் பாட்டி லட்சுமியம்மாளின் தயவால். இந்த நிலைக்குக் காரணம், என் தந்தை லட்சுமணனும், தாய் ஜம்புவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டது தான். அப்பா, அம்மாவின் காதல் திருமணத்தை, தாத்தா-பாட்டி மற்றும் சித்தப்பா உள்ளிட்ட உறவினர்கள் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்குப் பிடிக்கவும் இல்லை. இதனால் எப்போதும் வீட்டில் சண்டை சச்சரவு தான்." 

"ஒரு கட்டத்தில் அப்பா லட்சுமணன் மர்மமாகவே இறந்து போனார். அப்பா இறந்தவுடன் அம்மா ஜம்புவை அடித்தே வீட்டைவிட்டு விரட்டி விட்டார்கள். ஆறு வயதான என்னை அப்படியே விட்டு விட்டுக் கிளம்பி எங்கோ போய் விட்டாள் அம்மா."

"அன்றுமுதல் எனக்கு உறவுகள் இருந்தும், ஒரு அநாதையாகத் தான் வளர்ந்தேன். சித்தப்பாவின் வீட்டில் தோட்ட வேலையும், மாட்டைப் பிடித்துக் கட்டுவதும், அவைகளுக்கு தீனி வைப்பதுமாக நாட்கள் கடந்தன. பிறகு மனமிரங்கி உத்தனப்பள்ளியில் இருக்கும் தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் பாட்டி லட்சுமியம்மாள் சேர்த்து விட்டார்.

அப்போது முதல் எனக்கு வீட்டில் கிடைக்காத அன்பும், அரவணைப்பும் பள்ளியில் ஆசிரியர்களிடமிருந்து கிடைத்து வந்தது. அதற்காகவே நான் நாள் தவறாமல் பள்ளிக்குச் சென்று விடுவேன். என்னுடைய பல ஆசிரியர்களை இன்றுவரை அப்பா, அம்மா என்று தான் அழைக்கின்றேன்

அவர்களும் மறுக்காமல் 'வாடா செல்லம்' என்று தான் அழைக்கிறார்கள்."

"அதுதவிர, அப்போது எனக்குப் பள்ளியில் முக்கியமாக மதிய உணவு கிடைத்தது. ஆம்...சரியான உணவுகூட இல்லாமல் பள்ளிக்குச் செல்லும் வழியிலும், பள்ளியிலும் மயக்கம் போட்டு விழுந்த நாட்களும் பல உண்டு. அப்போதெல்லாம் ஆசிரியர்களுக்குத் தெரியாது, நான் எந்தச் சூழ்நிலையில் பள்ளிக்கு வருகின்றேன்

 என்று... காரணம், எனக்குள் ஆயிரம் துயர் கரை புரண்டு ஓடிக்கொண்டு இருந்தாலும் பள்ளியில் அனைவருடனும் அதைக் காட்டிக் கொள்ளாமல் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனால் நாளடைவில் என்னுடைய மயக்கத்துக்கான காரணத்தைக் கண்டுபிடித்த ஆசிரியர்கள், என் பின்னணியை அறிந்து கொண்டனர்; அதன் பின் உதவத் தொடங்கினர்." 

"எனக்கு மட்டும் காலை 10 மணிக்கு சத்துணவு கூடத்தில் சாதம் வடித்ததும், சாதமும் வேகவைத்த பருப்பும் போட்டுத் தருவார்கள். இதுதான் எனது காலை உணவு. பிறகு மதிய உணவைப் பள்ளியிலேயே சாப்பிட்டு விடுவேன். அதையே இரவில் சாப்பிடவும் கொடுத்து அனுப்புவார்கள். அதை வீட்டுக்குக் கொண்டுபோய் இரவு சாப்பிட முடியாது. வீட்டில் உள்ளவர்கள் திட்டுவார்கள் என்று பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் எங்காவது வைத்து சாப்பிட்ட பின்னரே வீட்டுக்குச் செல்வேன். இப்படியாக 5-ஆம் வகுப்பு வரை படித்து முடித்தேன்." 

"படிப்பின் மீது எனக்கு இருக்கும் ஆர்வத்தைக் கண்டு, ஆசிரியர்களே என்னை 6-ஆம் வகுப்பில் சேர்த்து விட்டனர். 8-ஆம் வகுப்பு முடித்தவுடன், மே மாத விடுமுறையில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் சேர்ந்து, ஏரி சீரமைக்கும் வேலைக்குச் சென்றேன். அதில் கிடைத்த பணத்தைச் சேமித்து வைத்து 9-ஆம் வகுப்பில் சேர்ந்தேன். மீண்டும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் வேலைக்குச் சென்றேன். அப்போது, 'நீ படித்தது போதும்; தோட்டத்தில் வந்து வேலை பாரு' என்று சித்தப்பாவும், சித்தியும் தொந்தரவு தந்தார்கள். ஆனால் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்று தீர்மானித்து இருந்தேன் நான்.இதனால், என்னை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார்கள். பாட்டி லட்சுமியம்மாளும் 'மகன் (சித்தப்பா) சொல்வதுதான் சரி' என்று என்னைக் கைவிட்டு விட்டார்."

"அப்போது, எனக்கு ஆதரவு கொடுத்தது என்னோடு படித்த சக மாணவி பிரேமா. நான் வாழ்நாள் முழுவதும் தோழி பிரேமாவுக்குக் கடமைப்பட்டுள்ளேன். ஆம். நான் 9 மற்றும் 10-ஆம் வகுப்புவரை படித்து முடிக்க, எனக்காக அவரது அப்பாவிடம் பேசி இரண்டு வருடம் அவரது வீட்டில் தங்கிப் படிக்க இடம் கொடுத்தார்."

"பத்தாம் வகுப்பில் 468 மதிப்பெண் எடுத்தேன். மீண்டும் ஆசிரியர்கள் உதவினார்கள். ஓசூரில் உள்ள விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பேசி இலவசமாக தங்கிப் படிக்க ஏற்பாடு செய்து கொடுத்தனர். பள்ளி நிர்வாகமும் என் சூழ்நிலையை உணர்ந்து கொண்டு இரண்டு வருடங்கள் இலவசமாக விடுதியில் தங்கிப் படிக்க உதவி செய்தது. முக்கியமாகப் பள்ளியின் முதல்வர் சம்பத்குமார் சாருக்கு நன்றி சொல்லவேண்டும்."

"தனியார் பள்ளி என்பதால் மாதந்தோறும் பள்ளியில் பெற்றோர் கூட்டம் நடக்கும். என் சார்பாக, என் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர் கூட்டத்துக்கு மாதம் ஒரு ஆசிரியர் என முறை வைத்துக் கலந்துகொள்வார்கள். அது மட்டுமல்ல. அவர்கள் கடைக்குச் செல்லும்போது பேப்பர், பேனா, பென்சில் தீர்ந்து இருக்கும் என்று வாங்கி வந்தும் தருவார்கள். என்னுடைய ஆசிரியர்கள் அனைவரின் உதவியால் அவர்கள் எதிர்பார்த்தது போலவே ப்ளஸ்-டூ தேர்வில் 1,166 மதிப்பெண் எடுத்தேன். மெடிக்கல் கட்-ஆப் 198.25 எடுத்தேன். ஆனால், எனக்கோ பள்ளி ஆசிரியர் ஆக வேண்டும் என்பதுதான் விருப்பம். அப்போது தான் அன்பு காட்டும் ஆசிரியர்களுடனேயே இருக்க முடியும் என்று முடிவு செய்திருந்தேன்". 

"'மருத்துவம் வேண்டாம்' என்றும் 'முடியாது' என்றும் எவ்வளவோ போராடிப் பார்த்தேன்; ஆனால், என்னுடைய ஆசிரியர்கள் விடவில்லை. 'மருத்துவப் படிப்பு படித்தே ஆக வேண்டும்' என்று என்னை முதல்முறையாக அடிக்கவும் செய்தனர். அன்பின் மிகுதியால் அவர்களே விண்ணப்பம் வாங்கி வந்து என்னை மருத்துவப் படிப்பில் சேர்த்து விட்டனர். ஆனால் மருத்துவம் படிக்கவும்; கட்டணம் செலுத்தவும் வசதி இல்லை.

அப்போது நெல்லை கலெக்டராக இருந்த கருணாகரன் சார் உதவி செய்தார். கலெக்டர் கொடுத்த உதவித் தொகையை என்னுடைய பேராசிரியர் சுனிதா, எனக்குத் தேவையான போது கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்ததுடன், அவருடைய காசையும் சேர்த்து என்னை மருத்துவர் ஆக்குவதற்கு உதவி செய்தார்."

"2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்தேன். 'எங்கே போவது...?' என்று தெரியாமல் பிறந்த ஊரான கோவிந்தாபுரம் வந்தேன். ஆனால், சித்தப்பாவின் மகன்களோ, 'சொத்து, கித்துன்னு வந்தா ஒரே வெட்டு... உயிரோடு இருக்க மாட்டே' என்று மிரட்டி அனுப்பினார்கள். அதனால், நண்பர்கள் உதவியுடன் அலேசிபம் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினேன்." 

"நான் படித்த உத்தனப்பள்ளியில் சிவபிரகாஷ் என்ற பெயரில் கிளினிக் வைத்தேன். என்னைத் தேடி வரும் ஏழை மக்களுக்கு என்னால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்குக் குறைவான கட்டணத்தில் இப்போது மருத்துவம் பார்த்து வருகிறேன். அதில் கிடைக்கும் வருமானத்தில் எனக்குத் தேவையான உடைகளை உள்ளூர் கடைகளில் வாங்கினேன். பிறகு சமைக்கத் தேவையான பாத்திரங்கள், துணிகளை வைக்கப் பீரோ, ஒரு ஆண்ட்ராய்டு செல்போன் போன்றவற்றை வாங்கியுள்ளேன்".

"மருத்துவத்தில் எம்.டி படிக்க வேண்டும் என்று ஆசை. அதற்காக, நுழைவுத் தேர்வு எழுத இரவு நேரத்தில் இப்போது படித்து வருகின்றேன். இந்தச் சமயத்தில்தான் கடந்த ஜூன் மாதம் பள்ளிக்கூடம் திறந்த உடன்; என்னுடைய ஆசிரியர் கனவை நிறைவேற்றிக் கொள்ள விரும்பினேன். நான் படித்த தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் இது பற்றிப் பேசினேன். 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் மற்றும் அறிவியல் பாடம் நடத்தச் சொல்ல, நடத்தி வருகின்றேன். மருத்துவத்தில் கிடைக்காத நிம்மதி ஆசிரியராக மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது எனக்குக் கிடைக்கிறது."

"இதற்காகத் தினமும் காலை 9 மணிக்கெல்லாம் பள்ளிக்குச் சென்று, மாணவர்களுக்குத் தமிழ் அல்லது அறிவியல் வகுப்புப் பாடம் நடத்தி முடித்துவிட்டு, பிறகு எனது கிளினிக் வந்து மருத்துவம் பார்க்கிறேன்" 

"தாய், தந்தை வைத்த பெயர் கலையரசன். பிறகு எனக்குப் பிடித்த நடிகரான ரஜினி பெயரை முன்னால் சேர்த்துக்கொண்டு ரஜினி கலையரசன் என்று ஆக்கிக்கொண்டேன். ஆனால் எனக்கு என்று முகவரி கிடையாது. நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் உதவியால் கல்லூரி விடுதி முகவரியை வைத்து, ஆதார் கார்டு பெற்றுள்ளேன். இனி தான் எனக்கான முகவரியை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்படுத்தி, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை வாங்க வேண்டும். நான் படித்த மருத்துவப் படிப்பைப் பதிவுசெய்ய வேண்டும்" 

போராட்டமே வாழ்க்கையாய் வாழ்க்கையே போராட்டமாய் வாழும் ரஜினி கலையரசன் பேசப் பேச நமக்கு நம்பிக்கை வெளிச்சங்கள் தெரியத் துவங்கின. கூடவே கண்ணீரும்...

எப்போதும் முயற்சி வெற்றியைக் கொடுக்கும். 
பலரின் அன்பும் பாசமும் அவரை உன்னத நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.

வாழ்க வளர்க அவரின் தொண்டு///

தெரிவு: சக 

kanmani tamil

unread,
Jul 5, 2025, 3:19:41 PM7/5/25
to vallamai
கோபாலபுரம் ஹீரோ… பேப்பர் தாத்தா: 

/// கோபாலபுரம் ஹீரோ… பேப்பர் தாத்தாவின் சுவாரஸ்ய கதை!

கோபாலபுரத்தைச் சேர்ந்த 94 வயது தாத்தா தினந்தோறும் சைக்கிளில் வீடு வீடாகச் சென்று பேப்பர் போடுவதையும்; பால் பாக்கெட்டுகள் போடுவதையும்; வழக்கமாக கொண்டுள்ளார். இந்த வயதில் நேரம் தவறாமல், ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் அவர் செய்யும் பணி அந்தப் பகுதி மக்களை ஆச்சர்யமடைய வைத்துள்ளது. 

கோபாலபுரத்தில் வசிக்கும் மக்களால் பேப்பர் தாத்தா என்று அன்போடு அழைப்படுபவர் சண்முகசுந்தரம். ராயப்பேட்டையச் சேர்ந்தவர். தினந்தோறும் அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். முதலில் அந்தப் பகுதியில் ஒரு மொத்த விற்பனைக் கடையில் இருந்து 50 பால் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு அதை வீடு வீடாகச் சென்று விநியோகித்து விடுவார்.

அடுத்தது மூச்சு விடுவதற்குக் கூட இடைவெளி கொடுக்காமல், உடனடியாக நியூஸ் பேப்பர்களை வாங்கித் தனது சைக்கிளின் முன் கூடையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று போட்டு விடுவார்.

பத்மாவதி சாலையில் தொடங்கி கோபாலபுரத்தில் உள்ள 8 தெருக்களில் சுமார் 60 வீடுகளில் செய்தித்தாள்களை விநியோகிக்கிறார். மழை, வெயில் என எது வந்தாலும் தவறாமல் இந்தப் பணியைச் செய்து விடுவார். பேப்பர் தாத்தா என்கிறார்கள் கோபாலபுரம் மக்கள்.

இந்த வழக்கத்தைக் கடந்த 25 ஆண்டுகளாகத் தனது வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளார் பேப்பர் தாத்தா.

கோபாலபுரத்தில் நீண்ட காலமாக வசிக்கும் மோகன் பேப்பர் தாத்தா குறித்துக் கூறுகையில், “அவர் எனக்கு ஒரு ஹீரோ மாதிரி... தினமும் அவரைப் பார்க்கும் போது எனக்கு ஒரு உத்வேகம் கிடைக்கும். அவர் சைக்கிளை ஓட்டி வருவதைப் பார்த்தால் எனது சோம்பேறித்தனமெல்லாம் காணாமல் போய்விடும்.

முன்னதாக அவர் வீடு வீடாகத் தண்ணீர் கேன்களைப் போடுவார். அதனால் பேப்பர் தாத்தா இந்தப் பகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்” என்கிறார்.

பேப்பர் தாத்தா கூறுகையில், “நான் ஒருநாளும் இந்த வேலையைத் தவறியதில்லை. இந்தப் பகுதியில் செய்தித் தாள்களை விநியோகிப்பதால் தான் முன்னாள் முதல்வர் கலைஞர் உட்பட; குறிப்பிடத்தக்க முக்கிய நபர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

தினமும் பேப்பரைப் போட்டு விட்டு, அங்குள்ள திருமண மண்டபத்தைப் பார்த்துக் கொள்ளும் வேலைக்கும் செல்கிறார் பேப்பர் தாத்தா. அவருக்கு 10 பேரப் பிள்ளைகள் இருக்கிறார்கள். வேலைக்குப் போக வேண்டாம் என்று பேரப் பிள்ளைகள் வலியுறுத்தியும், பேப்பர் தாத்தா அதைக் கேட்பதில்லை.

கோவிட் சமயத்தில் செய்தித் தாள்கள் வாங்குவது குறைந்ததாகக் கூறும் பேப்பர் தாத்தா, “முன்னதாக 100 வீடுகளில் பேப்பர் வாங்கினார்கள். இப்போது 60 ஆகக் குறைந்துள்ளது. எனது பேரக் குழந்தைகள் என்னை வற்புறுத்திய போதும்; என்னால் ஓய்வெடுத்துக் கொண்டு வீட்டில் இருக்க முடியவில்லை. அவர்கள் எல்லாம் நன்கு படித்தவர்கள். எனக்குப் போதுமான ஓய்வு கிடைக்கவில்லை என்று கவலைப் படுகிறார்கள்.

ஆனால் எனது மகிழ்ச்சிக்கு ரகசியமே; நான் மக்களைச் சுற்றிச் சுற்றி வருவது தான். அதனால் நான் ஒருநாள் கூட வீட்டில் இருந்ததில்லை. என்னையும் எனது சைக்கிளையும் பிரிக்க முடியாது” என்று கூறுகிறார்.

94 வயதிலும் தனது மனைவியையும் பேப்பர் தாத்தா தான் பார்த்துக் கொள்கிறார். பல்வேறு வேலைகளைச் செய்து ஐந்து மகள்களையும் ஒரு மகனையும் படிக்க வைத்துள்ளார். செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்ந்து வருகிறார் பேப்பர் தாத்தா.

1930ல் பிறந்த இவர், ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார். சமீபத்தில் அந்தப் பள்ளியால் பேப்பர் தாத்தா கவுரவிக்கப் பட்டுள்ளார்.

செய்தித்தாள்களை விநியோகிப்பது மட்டுமல்ல; கோபாலபுரம் மக்களின் மனதில் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் விதைத்திருக்கிறார் பேப்பர் தாத்தா. 

நன்றி: மின்னம்பலம்///

https://www.facebook.com/share/p/1C9QD5it7n/

தெரிவு: சக 

kanmani tamil

unread,
Jul 11, 2025, 12:16:40 AM7/11/25
to vallamai
ரமாபாய் - ஒரு பெண் வீராங்கனை 

/// 1858 ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்து,
பிராமணீயத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து, சூத்திரன் என்று சொல்லப்பட்ட ஓர் இளைஞனைக் கைப்பிடித்து, வடநாடு முழுவதும் சுற்றித் திரிந்து, பெண் கல்வி, பெண் விடுதலை எனத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டவர் ரமா பாய்.

20 ஆவது வயதில் தன் பெற்றோரையும், 25 ஆவது வயதில் தன் கணவரையும் இழந்த பின்னும், நெஞ்சில் துணிவை இழக்காமல், அதற்குப் பிறகு 40 ஆண்டுகள் தன் இலட்சியத்திற்காகப் போராடி மறைந்தவர் அவர்.

ரிப்பன் பிரபுவுக்கு முன்பே பெண் கல்வி குறித்து அவர் ஆற்றிய உரையால் ஈர்க்கப்பட்டு, இங்கிலாந்தும் அமெரிக்காவும் அவரை அரவணைத்தன. ஆனால் அவர் இந்தியாவில் கணவனை இழந்து வாழும் இளம் பெண்களுக்காக ஓர் இல்லம் நிறுவி, அவர்களுக்குக் கல்வி கொடுத்து, ஊக்கம் கொடுத்து, அவர்கள் சுயமரியாதையோடு வாழ வழி செய்தார். ஆனால் இவையெல்லாம் இந்து மதத்திற்கு எதிரானவை என்ற...

நன்றி : பேராசிரியர் சுபவீ///

அரசியல் தில்லாலங்கடி வேலைகளால் அவரது வேகமும் முனைப்பும் குறைந்த பாடில்லை. 


தெரிவு: சக 


kanmani tamil

unread,
Jul 11, 2025, 11:48:57 AM7/11/25
to vallamai
குட்டியம்மாள் - 110வயது 
பழங்குடி மக்கள் இடையே தனித்து வாழும் ஆளுமை!!!

/// பொதிகை மலையில் வன விலங்குகள் இருக்கும் காட்டில் தனியாக வாழும் 110 வயது மூதாட்டி - காணி பழங்குடி மக்கள்…

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகை மலையின் உச்சியில் பூங்குளம் பகுதியில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகிறது.
மலையில் பாய்ந்தோடும் நீரோடைகள் பாபநாசம் காரையாறு அணையை வந்தடைகின்றன.

காரையாறு அணை அருகில் அகஸ்தியர் காலனி, சின்ன மைலார், பெரிய மைலார், சேர்வலாறு, இஞ்சிக்குழி உள்ளிட்ட இடங்களில் காணி இனப் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.

காரையார் அணைக்கு மேலே சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுக்குள் பொதிகை மலை உச்சியின் அடிப்பகுதியில் இஞ்சிக்குழி கிராமம் உள்ளது.

முன்பு இங்கு 40 குடும்பத்தினர் வசித்த நிலையில் தற்போது 3 குடும்பத்தினர் மட்டுமே வசிக்கின்றனர்.

அதில் குட்டியம்மாள் (வயது 110) என்ற மூதாட்டி மட்டும் தார்ப்பாயாலான வீட்டில் தனியாக வசிக்கிறார். மற்ற குடும்பத்தினர் வேலைக்காக காரையாறு அணை அடிவாரத்துக்கு சென்று விட்டு, அவ்வப்போது இஞ்சிக்குழி வருகின்றனர்.

அடர்ந்த வனப்பகுதியான இங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலை, தொலைத்தொடர்பு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் கிடையாது.

இஞ்சிக்குழியில் அடர்ந்த காட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டி குட்டியம்மாளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு நெல்லை மாவட்ட கலெக்டர் முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார். மேலும் அவரது வீட்டுக்கு சோலார் மின்வசதி அமைத்து கொடுத்தார்.

காரையார் தபால் அலுவலகத்தில் இருந்து தபால் அலுவலர் மாதந்தோறும் இஞ்சிக்குழிக்கு நடந்து சென்று உதவித்தொகை வழங்கி வருகிறார்.

தற்போது குட்டியம்மாள் வயது முதிர்வு காரணமாக சரிவர நடக்க முடியாததால் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினார். மேலும் காரையாறில் உள்ள ரேஷன் கடைக்கும் சென்று உணவுப்பொருட்களை வாங்க முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து மூதாட்டி குட்டியம்மாள் கூறுகையில், ''இஞ்சிக்குழியில் 40 குடும்பத்தினர் வசித்த நிலையில் தற்போது நான் மட்டுமே வசிக்கின்றேன். இங்கு எந்த வசதியும் இல்லாததால் பலரும் மலையடிவாரத்துக்கு சென்று விட்டனர். 2 குடும்பத்தினர் மட்டும் தங்களது குடியிருப்புகளுக்கு அவ்வப்போது வந்து செல்வார்கள்.

யானைகளின் பிளிறல் சத்தத்தைக் கேட்டுதான் காலையில் கண்விழிப்பேன். சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் இயல்பாக சுற்றித் திரியும்.

வனப்பகுதியில் கிடைக்கும் பழங்கள், கிழங்குகளை சாப்பிடுகிறேன். ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்தால் பயனுள்ளதாக இருக்கும்'' என்கிறார்.

இணைய பகிர்வு…


சக 

kanmani tamil

unread,
Jul 19, 2025, 2:27:39 PM7/19/25
to vallamai
திருவாளர் கீழப்புலியூர் கருப்பையா: 

/// கருப்பையா: பெரம்பலூர் அருகே பொட்டல் காட்டை பறவைகள் வந்து செல்லும் நந்தவனமாக மாற்றிய தனி ஒருவன்

கட்டுரை தகவல்
எழுதியவர், மாயகிருஷ்ணன்.க
பிபிசி தமிழுக்காக...

தனி மரம் தோப்பாகாது, ஆனால் தனி மனிதனால் தோப்புகளை உருவாக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் 76 வயது கருப்பையா.

தன்னுடைய தொடர் உழைப்பால் பல்வகை பறவைகள் வந்து செல்லும் சரணாலயம் போன்ற சூழலை தன்னுடைய பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் இவர் உருவாக்கியிருக்கிறார்.

சுட்டெரிக்கும் வெயிலுக்கு குளிர்ந்த போர்வை அளித்தது போன்ற உணர்வைத் தருகிறது கீழப்புலியூர் கிராமம்.

அங்கிருந்த ஒவ்வொரு மரத்திலும் பல உயிரிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. பறவைகள், விலங்குகள் மட்டுமல்லாது பல்வேறு வகை பூச்சி இனங்களும் உள்ளன. தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த கருப்பையா நம்மைப் பார்த்தவுடன் சற்று இருங்கள்; வேலையை முடித்து விட்டு வருகிறேன் என்று கூறினார்.

கருப்பையா பணியினை முடித்துவிட்டு நம்மிடம் பேசத் தொடங்கினார்.

''நான் ஒரு சாதாரணமான மனிதன்; என்னால் ஆயிரம் பேருக்கு தினமும் சோறு போட முடியாது. ஆனால் என் வாழ்நாள் முடிவதற்குள் ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டு; அதை மரமாக்கிப் பறவைகள் வந்து தங்கும் வீடுகளாக அழகு பார்க்க முடியும். இந்த நம்பிக்கை 25 வயதில் ஏற்பட்டது. அக்கால அரசர்களான சேர, சோழ, பாண்டியர்கள் வழி நெடுகிலும் மரங்களை நட்டு அழகு பார்த்தார்கள். அவர்கள் குதிரைகளிலும் ரதங்களிலும் வரும்பொழுது மர நிழலில் தங்கி இளைப்பாறியே சென்றனர். மேலும் அவர்கள் இயற்கையோடு இணைந்தே வாழ்ந்து வந்தனர். ஆனால் காலமாற்றத்தில் இயற்கையை மனிதன் அபகரிக்க தொடங்கியதன் விளைவாக பல்வேறு இன்னல்களைத் தொடர்ந்து நாம் சந்தித்து வருகின்றோம்.

இந் நிலையிலிருந்து மாறி நாம் வாழும் இந்த பூமியை மாசற்ற பகுதியாக மாற்றி, வருங்காலத் தலைமுறைக்கு ஒப்படைக்க வேண்டும் என்பது எனது சிறிய லட்சியம். அதன் ஒரு பகுதியாக என்னால் இயன்றவரை பல்வகை மரங்களை- குறிப்பாக ஆலமரம், அரசமரம், அத்தி மரம் என்று பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் பலன் தரும் மரங்களை அதிகமாக நட்டுப் பாதுகாத்து வருகின்றேன். 25வயதில் தொடங்கிய இந்தப் பணி 76 வயதிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று கூறினார்.

அன்று பொட்டல் காடு; இன்று பறவைகள் வந்து செல்லும் வனம்! வாலி கண்டபுரத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டரில் உள்ளது கீழப்புலியூர் பச்சையம்மன் கோவில். இதைச் சுற்றி 30 ஏக்கர் பரப்பளவு பொட்டல் காடாகப் பல ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்டது. ஆனால் தற்பொழுது எங்கு பார்த்தாலும் மரங்கள் உயர்ந்து நிற்கின்றன. இந்த மரங்களை வைத்துப் பாதுகாத்து வளர்த்து மரமாக்கிய பெருமை கருப்பையாவைச் சாரும் என்கின்றனர் இந்த ஊர் மக்கள்.

ஆலமரம், அரசமரம், நாவல் மரம், வில்வமரம், பூவரசு புளியமரம் எனப் பல்வகை மரங்களை நட்டு; அதைப் பாதுகாத்து; தினமும் தண்ணீர் ஊற்றி வருவதே எனது முதல் பணி என்ற அளவில் இன்றளவிலும் தொடர்ந்து செய்து வருகின்றார்.

கோவில் பகுதி மட்டுமல்லாமல் ஊரின் ஏரிக்கரை பகுதி முழுவதும் இவர் நட்ட பல்வகை மரச் செடிகள், ஊர் மக்களை மட்டுமல்ல; கோவிலுக்கு வருபவர்களையும் ஆடு மாடு மேய்ப்பவர்களையும் நிழலும் பழமும் தந்து வரவேற்கிறது.

அக்காலத்தில் வாலிகண்டபுரத்தில் இருந்து கீழப்புலியூர் வரும்பொழுது அடர்ந்த வனக்காடுகளைக் கடந்து தான் வர வேண்டும் என்று எனது முன்னோர்கள் கூறியதைக் கேட்டு இருக்கின்றேன். இடைப்பட்ட காலத்தில் இப்பகுதியில் இருந்த மரங்கள் அழிக்கப்பட்டன. அந்த இடத்தில் மீண்டும் மரங்களை உருவாக்கும் முயற்சியின் முதல் படியாக ஆரம்பித்த இந்த இவரின் செயல் தற்பொழுது ஆயிரக்கணக்கான மரங்களை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் ஊரையே பசுமையாக்கி உள்ளது.

பறவை ஆர்வலரும், ஆசிரியரருமான கலைச்செல்வன் பிபிசியிடம் பேசிய போது, ’’கீழப்புலியூரில் ஆல மரம், அத்தி, இலுப்பை, வன்னி, பூவரசு, வேம்பு என பல்வகை மரங்கள் காணப்படுகிறது. இதைக் காண்பதற்கு ரம்யமாக உள்ளது. ஏனென்றால் கால்நடைகள் மேய்ப்பவர்களுக்கு நிழல் மட்டும் தரவில்லை; இங்கு காணப்படும் மரங்களில் மிக அதிக அளவில் பறவைகள் வசிக்கின்றன. சில வந்து செல்கின்றன. கீச்சீட்டு...கத்தும் அந்த குரல்கள் கேட்பதற்கே இனிமையாக இருக்கின்றது. இப்பகுதி மரங்களில் காகம், மைனா, செம்மார்பு குக்குறுவான், மஞ்சள் நிறத்தில் காணப்படும் மாங்குயில், வால் காக்கை, கரிச்சான் குருவிகள், பனங்காடை, கீச்சான், வெண் மார்பு மீன் கொத்தி, புள்ளி ஆந்தை, வல்லூறு, மரங்கொத்தி எனப் பல்வகை பறவைகள் நிறைந்து காணப்படும் பகுதியாக இது உள்ளது. என்னைப் போன்ற பறவை ஆர்வலர்களுக்கு மட்டுமல்லாமல் மாணவ மாணவியர்கள் வந்து பார்த்து செல்லும் இடமாகவும் இது மாறி வருகிறது’’ என்றார்.

நாங்கள் விளையாட நிழல் இருக்காது. ஆனால் தற்பொழுது அப்படியல்ல; ஏறக்குறைய 300 முதல் 400 மரங்கள் வரை வளர்ந்து நிற்கின்றது. இதற்கு காரணம் எங்கள் ஊர் கருப்பையா தான். மிகச் சிறந்த மனிதரான இவர் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கின்றார். இவர் மரங்கள் நட்டுப் பாதுகாப்பதை ஒரு காலத்தில் கேலி செய்த இளைஞர்களும் தற்போது ஆர்வமுடன் இணைந்து மரங்களை நடுவதற்கு உதவி செய்து வருகின்றார்கள். இவர் தனி மனிதர் தான்.

இவர் மனைவி இறந்து விட்டார். குழந்தைகளும் இல்லை என்ற போதிலும் இவர் இந்தப் பணியைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை; ஆனாலும் மிகச்சிறந்த வனப்பகுதியை உருவாக்குவதே எனது பணி என்று எங்களிடம் கூறுவார்’’ என்கிறார் அருள்குமார்.

தொடர்ந்து பேசிய அருள் குமார், ‘’நமக்கு ஆறறிவு உள்ளது; நாம் எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பறவைகள், விலங்குகள் அப்படியல்ல. அவைகளுக்கு யார் தினமும் உணவளிப்பது என்று சிந்திக்கும் வகையில் எங்களிடம் பேசுவார். அத்தோடு நில்லாது அவர் அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்தும் காட்டினார். எங்கள் ஊர் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிலப்பகுதிக்கு சரியான விலை இல்லை; யாரும் விலைக்குக் கேட்க மாட்டார்கள். ஆனால் இப்பொழுது நிலைமை மாறிவிட்டது; போட்டி போட்டுக் கொண்டு நிலங்கள் வேண்டும் என்று கேட்கின்றார்கள். இதற்கு காரணம் எங்கள் ஊர் பகுதியில் மரங்கள் அதிகமாக உள்ளதால் மழை வளமும் பெருகி விவசாய நிலப்பரப்பும் கூடியதுதான்.’’ என்றார்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக பேசிய கீழப்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் தனிஷ்க் குமார், ‘’கீழப்புலியூர் கிராமம் பசுமை நிறைந்த கிராமம் என்பதில் மிகை இல்லை. இங்கு 1800 ஏக்கர் நிலப்பரப்பு விவசாய நிலப்பரப்பாகவே உள்ளது. மேலும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகப்படியான மரங்கள் இருப்பதால் இங்கு இரண்டு போக விவசாயம் பெரும்பான்மையான நிலங்களில் நடைபெறுகிறது என்றார்.

நன்றி: பிபிசி தமிழ்
- பகிர்வு///


தெரிவு: சக 

சக்திவேலு கந்தசாமி

unread,
Jul 19, 2025, 5:39:29 PM7/19/25
to vall...@googlegroups.com
பகிர்வுக்கு நன்றி.

kanmani tamil

unread,
Jul 19, 2025, 10:35:16 PM7/19/25
to vallamai

kanmani tamil

unread,
Jul 31, 2025, 4:54:59 AM7/31/25
to vallamai
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி:

... பெண்களின் தனி அடையாளம் அவர். இன்றும் அவரே தமிழகப் பெண்களுக்கு மாபெரும் உத்வேகமும் வழிகாட்டியுமானவர்.

முத்துலெட்சுமி பிராமணப் பிறப்பு... அக்காலத்திலே; அதாவது பெண்கள் பெரிதளவில் கல்வி பெறாத காலங்களிலே படிக்க விரும்பிப் போராடியவர். தனக்கேற்ற துணையாகத் தன்னைப் புரிந்து கொண்ட சுந்தர ரெட்டி என்பவரை மணந்து முத்துலெட்சுமி ரெட்டியானார்.

1900களில் பெண்களுக்கு கல்வி பிரதானமாக‌ இல்லை, அன்றைய காலகட்டத்தில் பள்ளி கல்லூரிகள் குறைவு. அதுவும் அக்காலத்தில் இன்றுள்ள வகை வகையான கல்விகள் என எதுவுமில்லை

எனினும் சட்டம், மருத்துவம், பொறியியல் என ஒரு சில துறைகள் வளர்ந்து கொண்டிருந்தன‌

அன்றைய மருத்துவக் கல்வி வித்தியாசமானது சம்ஸ்கிருதமும் லத்தீனும் படிக்க வேண்டும் இன்னும் என்னவெல்லாமோ உண்டு. சிரமப்பட்டுக் கற்கவேண்டி இருந்ததால் அக்காலப் பெண்களுக்கு அது சாத்தியமில்லை.

ஆனால் முத்துலெட்சுமி போராடினார்; தனியாகப் போராடினார்.  அவரின் உறுதியினைக் கண்ட புதுக்கோட்டை... மன்னரே அவர் படிக்க வழி செய்தார்.

ஆம், இந்து பெண்ணை படிக்க வைத்தவர் இந்து மன்னர்தான். அது அல்லாது அவள் படிக்க விரும்பியிருந்தால் மதமாற்றமே வழி. ஆனால் முத்துலட்சுமி அதைச் செய்யவில்லை. ஒரு இந்துவாகவே நின்றாள், கற்றாள், மருத்துவரானார்.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமியே. தனி ஒருத்தியாக ஆண்களுக்கு நிகராக நின்று அவர் மருத்துவம் படித்ததெல்லாம் மன உறுதியின் உச்சம்.

மருத்துவர் ஆயிடினும் மணவாழ்வில் விருப்பமில்லை; ஒரு மெழுகின் வாழ்வு பலன் ஆயிரம் மெழுகினை ஏற்றிவைப்பதே என பெண்களுக்காகப் போராடினார்.

பாரீசில் நடந்த மாநாட்டில் உலகப் பெண்களின் அடிமை நிலையினை 1926ல் முழங்கிய முதல் பெண் அவரே; உலகப் பெண்களுக்கான உரிமைகளை அவர்தான் பேசினார்

1925 வாக்கில் வெள்ளை அரசுக்குட்பட்ட உள்ளாட்சி அமைப்பு சென்னை ராஜ்தானியின் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினருமானார்

சென்னைக் கோட்டையில் மக்கள் பிரதிநிதியாய் கால்வைத்த முதல் பெண் அவரே. அவரின் கல்வி அவரை அங்கு அமர்த்தியது

அப்பொழுது தான் திசைமாறித் திரிந்த தேவதாசி ஒழிப்புச் சட்டம் அவரால் கொண்டு வரப்பட்டது. பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்ற தீர்மானம் அவராலே கொண்டு வரப்பட்டது.

அவர்களின் முயற்சியில் தொடங்கியது தான் அடையாறு மருத்துவமனை. இன்று புற்றுநோய் சிகிச்சைக்குத் தனி அடையாளமாகத் திகழும் அந்த மருத்துவாலயம்

அனாதைப் பெண் குழந்தைகளை அரவணைக்கும் அவ்வையார் இல்லமும் அவர் ஏற்படுத்தியதே. 

ஒரு வகையில் சொன்னால் பாரதப் பெண்களின் வழிகாட்டி முத்துலட்சுமி. 

அந்த மருத்துவ மாமணிக்கு; தமிழகப் பெண்களின் விடுதலை முன்னோடிக்கு; என்றுமே தமிழக மகளிரின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழும் அந்தக் காரிகைக்கு இன்று நினைவுநாள்

காலமுள்ள காலம் அவரின் பெயரும் சாதனையும் இங்கு நிலைக்கும்

... பெண்ணுரிமை பேசும் முன்பே; பெண் உரிமையினைப் பெற்றுக் கொண்டவர் அவர்

யார் சொல்லியும் பெண் விடுதலை நடக்காது. பெண்களே தானாக விலங்கை உடைத்தால் தான் உண்டு எனக் கிளம்பித் தன்னை நிரூபித்த சமூகப் போராளி...

இன்னொரு வகையில் அந்த பெண்ணுக்குக் கல்வி கிடைக்க முழு பலமுமாய் நின்ற புதுக்கோட்டை மன்னரும் நினைவுக்கு வருவார்

இந்தியாவின் முதல் பெண்மருத்துவரைக் கொடுத்தது இந்து சமூகம். இந்தியாவிலே முதல் முறையாக பெண்களுக்குக் கல்வியும், சொத்துரிமையும் கொடுத்த இடம் தமிழகம் 

அனாதைப் பெண் குழந்தைகளை ஆதரிக்கும் அவ்வையார் மையங்களை திறந்தது தமிழக இந்து சமூகம். 

இப்படி இந்தியாவுக்கே பெண்விடுதலைக்கு வழிகாட்டிய தமிழச்சி முத்துலெட்சுமி ரெட்டி.

இந்நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு இந்தியரின்... குறிப்பாகத் தமழரின் கடமையுமாகும்

தமிழக மங்கையருக்குப் பெரும் நன்றிக்கடன் உண்டு

அவர் பாதை காட்டினார்; நீங்கள் நடக்கின்றீர்கள்; அவர் விளக்கேற்றினார்; நீங்கள் பார்க்கின்றீர்கள்.

அவர் கைகாட்டியாய் நின்றார்; நீவிர் சரியான பாதை கண்டீர்கள்.

அவர் அஸ்திவாரமாய் நின்றார்; நீவிர் கோபுரமாய் உயர்ந்தீர்கள்.

ஒவ்வொரு தமிழகப் பெண்ணின் நன்றிக்குரிய அந்த முத்துலெட்சுமி ரெட்டிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

அவ்வையார், வேலுநாச்சியார் போன்ற வீரத் தமிழச்சிகள் வரிசையில் வந்த அறிவுத் தமிழச்சி அவர். அடிமை விலங்கை உடைக்க வந்த போராளித் தமிழச்சி அவர்

அவர் ஏற்றி வைத்த தீபமே இப்பொழுது பிரகாசமாய் எரிகின்றது. 

ஆம்; கவனிக்க வேண்டிய விஷயம் இந்தியாவின் முதல் நவீன பெண் மருத்துவர் ஒரு இந்து பிராமணப் பெண், தடைகளிடையே போராடி முதல் பெண் மருத்துவராக வந்தவர்.

அவளும் பெரும் வசதியானவள் அல்ல; வறுமைதான்; அதனால் புதுக்கோட்டை மன்னரால் படிக்க வைக்கப் பட்டவர் அவர்.

ஆக... திராவிடக் கும்பலுக்கு முன்பே இங்கு பெண்கள் படிக்க கிளம்பியிருந்தார்கள் மிகப் பெரும் சாதனையெல்லாம் செய்தார்கள் என்பது தெரிகின்றது.

திராவிடம் பெண் விடுதலையினை கொடுத்தது என்பதெல்லாம்...  
தனியாகப் போராடி மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் மாபெரும் சாதனை; அக் கோஷ்டியின் பிரச்சாரத்தை எக்காலமும் பொய் என நிரூபித்துக் கொண்டே இருக்கின்றது.

இங்கு பெண்களும் எல்லாத் துறையிலும் சாதிக்கலாம் என நிரூபித்தவள் ஒரு வறுமையான இந்து பிராமணப் பெண். பெண்களுக்கு இந்தியா முழுக்க பெரும் எடுத்துகாட்டாக இருந்தவள்...

https://www.facebook.com/share/p/1CKrkEEZ2k/

போற்றுவோம். 
சக 

kanmani tamil

unread,
Aug 12, 2025, 4:23:40 AM8/12/25
to vallamai
இப்படியும் ஒரு ஆளுமை!!!
 
/// நேற்று ஒரு நிகழ்வு. காலை சுமார் 9.30 மணி.. தெரு ஓரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு, Stationary பொருட்கள் வாங்கிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெரியவரும் ரோடை Cross செய்து கொண்டிருந்தார். அவரை பார்த்திருக்கிறேன். தர்பூசணியை வண்டியில் வைத்து கூறுபோட்டு விற்பவர். சில சமயம் பலாப்பழமும். வண்டி அருகில் அவர் மனைவி அமர்ந்திருந்தார். மனைவிக்கும் தனக்கும் காலை டிபன் எதிரிலிருக்கும் சிறு ஹோட்டலில் வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அவர் நடுரோட்டில் வந்து கொண்டிருந்த போது, ஒரு ஸ்கூட்டர் வேகமாக வந்து அவரருகில் சடாரென்று பிரேக் போட்டு நின்றது.
ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு வந்தது இளம்பெண். கோபத்தோடு முகம் சிவக்க, அந்த பெரியவரை கடுமையான சொற்களால் திட்டிவிட்டு, வேகமாக சென்று விட்டார். என்ன தான் தவறு அந்தப் பெரியவர் மீது இருந்தாலும், அவ்வளவு மரியாதை குறைவாக அந்த பெண் திட்டி இருக்க வேண்டியதில்லை. ஸ்கூட்டர், அருகில் வந்து சட்டென்று நின்ற அதிர்ச்சியில், அவர் வாங்கி வந்த உணவுப் பொட்டலமும் கீழே விழுந்துவிட்டது. முகத்தில் வருத்தத்துடன், உணவு பொட்டலங்களை குனிந்து எடுத்துக் கொண்டு தன் கடையை நோக்கி சென்றார். இன்று அதே நேரத்தில், அங்கு எனக்கு இருக்கும் சூழ்நிலை. அவரிடம் பலாச்சுளைகளை வாங்கிக் கொண்டிருந்தேன். எனக்கு சுளைகளை கவரில் வைத்து கொடுக்கும் போது கூட, தெருவையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார், யாரையோ எதிர்பார்த்துக் கொண்டு.
அதே பெண் தூரத்தில் ஸ்கூட்டரில் வருவதை பார்த்ததும், "ஒரு நிமிஷம் சார்" என்று என்னிடம் கூறிவிட்டு வந்து கொண்டிருந்த பெண்ணை நிறுத்தச் சொல்லி கையசைத்தார்.

அந்த இளம் பெண்ணும் முகத்தில் சற்று கலவரத்தோடு, நேற்று திட்டியதற்கு சண்டை போடப் போகிறாரே? என்று வண்டியை நிறுத்திவிட்டு, "என்ன?" என்று கோபமாக கேட்டாள். நான் கூட நேற்று நடந்ததற்கு ஒரு சத்தம் போடப் போகிறார் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் நடந்தது மனதை நெகிழ வைத்தது.

"தாயி, நேற்று போன அவசரத்தில் இதை தவற விட்டு விட்டு போய் விட்டாய்" என்று விலையுயர்ந்த செல்போனை தன் மடியில் இருந்து எடுத்துக் கொடுத்தார். அந்த இளம்பெண்ணுக்கு பேச்சே வரவில்லை. வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு "ஐயா இந்த போனை தொலைத்தில் இருந்து நிம்மதியே இல்லை. நான் பேங்கில் பணிபுரிபவள். முக்கியமான நெம்பர்ஸ் எல்லாம் இதில்தான் இருக்கிறது. மிக்க நன்றி" என்று கூறிவிட்டு கண் கலங்கினார். நேற்று அவ்வளவு அவமரியாதையாக பேசி இருக்க கூடாது. Work tension. என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிவிட்டேன்" என்று கைகூப்பினாள்".

"அட விடு தாயி. எல்லாருக்கும் கோபம் வர்றதுதான். இதை போய் பெரிசுபடுத்திக் கொண்டு. ஜாக்கிரதையாக போ தாயி" என்று அன்போடு அனுப்பி வைத்தார்.

"நேற்று அப்படி திட்டிய பெண்ணை, நாலு வார்த்தை கேட்டிருக்கலாமே" என்றேன்.

"சின்ன பொண்ணு சார்... இன்னும் கல்யாணம், காட்சி, குழந்தைன்னு ஆலவிருட்சமா வாழ வேண்டிய பொண்ணு சார். வயசாயி பக்குவம் வந்தா எல்லாம் சரியாயிடும். எனக்கு பேத்தி வயசு. என் பேத்தியா இருந்தா சண்டை போடுவேனா? நல்லா இருக்கட்டும் சார். நம்மை சுத்தி எல்லோரும் மனுஷங்கதான் சார். இருக்கிற வரைக்கும் அன்பா பாசமா இருந்துட்டு போவேமே." என்றார்.
என்னால் பேசவே முடியவில்லை. அசந்து விட்டேன்.

நம்மை சுற்றி எத்தனை நடமாடும் ஞானகுருக்கள்.....

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்....///


தெரிவு: சக

kanmani tamil

unread,
Aug 13, 2025, 3:26:29 PM8/13/25
to vallamai
விஞ்ஞானி டாக்டர் விக்ரம் சாராபாய்: 

/// இன்றைய இந்தியா விண்வெளியில் எவ்வளவோ சாதிக்கின்றது. வல்லரசு நாடுகளுக்கு இணையாக அதனால் வான்வெளியில் பாய முடிகின்றது. செயற்கைக் கோளை நிறுத்துதல், ஏவுகனை மூலம் அதைத் தகர்த்தல்,  கிரகம் விட்டு கிரகம் பாய்தல் என எந்த நாட்டுக்கும் இந்நாடு போட்டியாய் நிற்கின்றது.

இதற்கெல்லாம் அடித்தளமிட்டவன்... அந்த இயற்பியல் மனிதன்... அந்ந மாபெரும் விஞ்ஞானியின் பிறந்த நாள் இன்று...
டாக்டர் விக்ரம் சாராபாய், இந்திய அறிவியலின் தந்தை!!!

அகமதாபாத்தின் பிறப்பு ... அவர் குடும்பம் செல்வந்தமாயும் அதே நேரம் நாட்டுப்பற்று உள்ளதாகவும் திகழ்ந்தது. பல தலைவர்கள் அடிக்கடி வந்து சென்ற வீடு அது. 

அந்தப் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தார் விக்ரம். தன் ஆலைகளை நிர்வகிக்க லண்டன் சென்று படித்தும் வந்தார். ஆனால் மனம் அறிவியல் பால் திரும்பிற்று.

அந்நேரம் சர் சி.வி. ராமன் புகழ்பெற்ற விஞ்ஞானியாயிருந்தார் காஸ்மிக் கதிர்களை ஆய்வு செய்ய அவருடன் பணியாற்றினார். இமயமலை முதல் பல இடங்களில் ஆய்வுகளை அன்றே செய்தார்.

இயற்பியலுக்காக மறுபடியும் லண்டன் சென்று பட்டம் பெற்றார். மறுபடியும் அதே ஆய்வு... அகமதாபத்தில் அவரால் திறக்கபட்டது 'இயற்பியல் மையம்'.

அந்த மையம் பின்னர் சுதந்திரம் அடைந்தபின் காஷ்மீர், கொடைக்கானல், திருவனந்தபுரம் என பல இடங்களில் திறக்கபட்டது.

பின்னாளில் ராக்கெட் மையங்களாக மாறின... தும்பா முதலானவை அப்படித்தான்

முதலில் சாராபாய் தன் இயற்பியல் ஆய்வினை நூற்பாலை வகைக்கும் காஸ்மிக் கதி போன்ற வகைக்கும் இன்னும் சிலவற்றுக்கும் செய்து கொண்டிருந்தார். முதலில் வான்வெளி பக்கம் வரவில்லை.

விண்வெளிப் புரட்சி 1957களில் உலகில் தொடங்கிற்று. பல நாடுகள் விண்வெளி ஆய்வுக்குக் களமிறங்கின‌. 

இந்தியா விண்வெளி யுகத்துக்கு வந்தது. அமைதிப் புறாவான நேரு 1962 யுத்தத்துக்குப் பின்புதான் ராணுவம் பக்கம் திரும்பினார். அவருக்கு பின்பு இந்திரா யுகம் வந்தது.

இந்திரா விண்வெளித் திட்டங்களை முதலில் ஹோமி ஜஹாங்கீர் பாபா என்பவரிடம் ஒப்படைத்திருந்தார். பாபா அடிப்படையில் ஒரு அணுவிஞ்ஞானி.  ஆனால் ISRO என்ற அமைப்பின் தலைவராக அவர்தான் இருந்தார்.

பாபா திடீரென இறந்தார், அந்த மர்மம் இன்றுவரை தீரவில்லை. இந்தியாவின் அணுசக்தி தந்தையும் மிகப் பெரும் விஞ்ஞானியுமான அவரின் திடீர் இறப்பு அறிவியல் ரீதியாக பெரும் பின்னடைவு...

அந்த இடத்தை நிரப்ப பணிக்கப்பட்டார் சாராபாய். பாபாவின் இடத்தை மிக நுட்பமாக நிரப்பினார் அவர்.

ஆரியபட்டா எனும் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் அவராலே வெற்றிகரமாக ஏவப்பட்டது. அந்நாளில் அது பெரும் சாதனை!

வெறும் சாமியார் தேசம், பாம்பாட்டி நாடு என கருதப்பட்ட தேசம் தன் செயற்கைக் கோளை அனுப்பிய பொழுது உலகம் திரும்பிப் பார்க்கத்தான் செய்தது

மாபெரும் அத்தியாயத்தை தொடக்கி வைத்தார் சாரபாய். நடக்கவே நடக்காது என்ற விஷயங்கள் அவராலே சாத்தியமாயின‌.

இவரின் சீட கோடிகள்தான் சதீஷ் தவானும், அப்துல் கலாமும்...

நல்ல விஞ்ஞானி அற்புதமான தேசபக்தியும் அறிவும் தரமும் நிறைந்த் விஞ்ஞானிகளை உருவாக்க முடியும் என்பதற்கு அவர் தான் எடுத்துக்காட்டு. 

இன்று அந்த மாமனிதனின் 103ம் பிறந்த நாள்

இந்தியாவில் ஏகப்பட்ட பல்கலைகழகமும் கல்வி நிலையங்களும் அவரால் உருவாயின. இந்திய மேலாண்மைக் கழகம் அவரால் உருவாக்கபட்டது. 

ஏகப்பட்ட கிராமங்களில் பெரும் கல்விப்புரட்சி அவரால் உருவானது.

அவர்வழி வந்த கலாமும் அவர்வழியிலே கல்வி போதித்தார். போதித்துக் கொண்டே இறந்தார்.

இந்தியாவினை அறிவியலில் உயரச் செய்து, அந்த தேசத்தை விண்வெளிக்கும் அழைத்துச் சென்ற அந்த மாமனிதனின் பிறந்தநாளில் தேசம் அவருக்கு ஒன்றுபட்ட மனதுடன் அஞ்சலி செலுத்துகின்றது. 

அம்மனிதன் தொடங்கிவைத்த யுகமே இன்று வான்வெளி முழுக்க இந்திய செயற்கைக் கோள்களும், ராணுவம் முழுக்க பலமான ஏவுகனைகளுமாய் நிற்கின்றது. 

சந்திராயனும் நிலாவினை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. சந்திரனின் ஒரு பகுதிக்கு ஏற்கனவே உலக நாடுகளால் விக்ரம் சாராபாயின் பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது.

விக்ரம் சாராபாய்க்கு அஞ்சலி செலுத்தியபடியே அடுத்த தலைமுறைக்கான வான்வெளி ஆய்வில் களமிறங்கி இருகின்றது இந்தியா.

சாராபாய், சதீஷ் தவான், கலாம் வரிசையில் பலர் வந்தார்கள் இன்னும் வருவார்கள் தேசம் அவர்களால் நலமும் வளமும் பெறும்.

இன்றைய மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேணடிய பெரும் விஞ்ஞானி சாராபாய். இம்மாதிரி பெரும் விஞ்ஞானிகளும் தேசாபிமானிகளும் மாணவர்களுக்கு வழிகாட்டியாய் இருத்தல் வேண்டும். அவர்களை மாணவ சமூகம் படித்தல் வேண்டும்.

வெற்று அரசியல் கும்பலும், வெறுப்பு அரசியலும், சினிமாவும் இதர டிவி குப்பைகளும் மாணவ சமூகத்துக்கு ஒருநாளும் நல்ல விளைவுகளை கொடுக்காது, அதனால் தேசத்துக்கும் நல்ல முத்துக்கள் கிடைக்காது.

விக்ரம் சாரபாயின் பிறந்த நாளை ஒவ்வொரு பள்ளியும் கல்லூரியும் பல நாட்கள் கொண்டாடி; அப்பெருமகனை மாணவர் மனதில் பதியச் செய்தல் வேண்டும். 

ஆனால் மொத்த தமிழகத்தையும் தேடிப் பார்க்கின்றேன், அப்படி ஒரு மனிதன் இருந்தான் என்றோ அவன் பல கல்விப் புரட்சியினையும் விஞ்ஞான புரட்சியினையும் செய்தான் என்றோ யாருக்கும் நினைவில்லை.

மாநில கல்வி அமைச்சுக்கும் அப்படி ஒருவன் இருந்ததாகத் தெரியவில்லை...
அவர்கள் அப்படித்தான்...

கல்விக் கூடங்களும் பொறுப்பான ஆசிரியர்களும் அந்தப் பெருமகனை தேசப் பற்றோடு மாணவர்கள் மத்தியில் பதியச் செய்தலே அவருக்கான உண்மையான அஞ்சலி.

அதில் ஒரு மாணவனாவது கலாம் போல் வருவான், கோடி பேர் செய்ய வேண்டிய விஷயத்தை அவன் ஒருவன் செய்வான்

விக்ரம் சாராபாய் என்பது இந்தியாவினை விண்வெளிக்கு இழுத்துச் சென்ற சக்தியின் பெயர். அம்மானிதனின் ஆன்மா எக்காலமும் இத்தேசத்துடன் இருந்து வழிநடத்திக் கொண்டே இருக்கும்.

https://www.facebook.com/share/p/1BRyCrsDGe/


///இன்று ஆகஸ்ட் 12, "இந்திய விண்வெளி ஆய்வின் தந்தை" விக்ரம் சாராபாய் பிறந்த தினம்.

விக்ரம் சாராபாய் 1919, ஆகஸ்ட் 12 அன்று அகமதாபாத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் அம்பாலால் சாராபாய், சரளா தேவி. மிகப் பெரிய செல்வந்தர் குடும்பம் இவர்களுடையது. உயர் படிப்பை லண்டனில் முடித்தவர், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் சர் சி.வி. ராமனிடம் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார். காஸ்மிக் கதிர்களை ஆராய்வதற்காக நாடு முழுவதும் கண்காணிப்பு மையங்களை அமைத்தார். பெங்களூரு, புனே, இமயமலைப் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஆய்வு மையங்களில் தாமே உருவாக்கிய கருவிகளைப் பொருத்தினார்.

1957-ம் ஆண்டு சோவியத் யூனியன் ஸ்புட்னிக் 1 செயற்கைக்கோளை முதல் முறையாக பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. செயற்கைக்கோள்கள் மூலம் தகவல் தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, இயற்கை வளங்களை ஆராய்வது போன்றவற்றில் மிகப் பெரிய சமூக, பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதை உணர்ந்தார். இவரது அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி மையம் விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் முன்னோடியாகத் திகழ்ந்தது.

ராக்கெட் தொழில்நுட்பத்துக்கு விக்ரம் சாராபாய் தலைமை வகித்தார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா விண்ணில் செலுத்தப்படுவதற்கு முழுமையான காரணமாக இருந்தார்.

இந்தியாவின் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் வளர்ச்சியில் முன்னோடியாக சாராபாய் இருந்தார். இதன் மூலம் 24 ஆயிரம் கிராமங்களில் 50 லட்சம் பேருக்குக் கல்வியை எடுத்துச் செல்ல உதவினார். இந்திய அணுக்கரு இயலின் தந்தை ஹோமி ஜஹாங்கிர் பாபா மறைந்த பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைவராக இருந்து, அதை மேலும் விரிவுபடுத்தினார். அறிவியல் கல்வி குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார். அதனால் நாடு முழுவதும் சமூக அறிவியல் மையங்களைத் தோற்றுவித்தார்.

இந்தியர்கள் உயர் கல்வி பெறுவதற்காக அகமதாபாத்தில் இந்திய மேலாண்மைக் கழகத்தை (IIM) உருவாக்கினார். கடினமான உழைப்பாளி. மிக உயரிய பதவிகளில் இருந்தாலும் எளிதில் அணுகக்கூடியவராக இருந்தார். எல்லோரையும் புன்னகையுடன் வரவேற்பார்.

1971-ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று தூக்கத்தில் உயிர் துறந்தார். 1974-ம் ஆண்டு சிட்னியில் உள்ள சர்வதேச வானியல் ஒன்றியம், சந்திரனில் உள்ள ஒரு பள்ளத்துக்கு விக்ரம் சாராபாயின் பெயரைச் சூட்டியது. 1966-ல் பத்மபூஷண் விருதும், 1972-ல் பத்ம விபூஷண் விருதும் அவரைச் சிறப்பித்தன.///

kanmani tamil

unread,
Aug 21, 2025, 1:37:13 AM8/21/25
to vallamai
நடத்திரங்களின் விஞ்ஞானி சுப்பிரமணிய சந்திரசேகர்:

///அவர் கடந்த நூற்றாண்டின் மிகப் பெரும் வானியல் விஞ்ஞானி. அதுவும் தமிழ் வம்சாவளி... தமிழ் விஞ்ஞானி. நோபல் பரிசுபெற்ற பெரும் விஞ்ஞானி. ஆனால் அப்படி ஒரு விஞ்ஞானி இருந்தான் எனத் தமிழகத்தில் யாருக்கும் தெரியாது. 

அந்த விஞ்ஞானியின் பெயர் சுப்பிரமணிய சந்திரசேகர்

அவர் தமிழக பிராமண குடும்பத்து பிறப்பு.. 1910ம் ஆண்டு பிறந்தார். பிரபல அறிவியல் மேதை சர் சி.வி. ராமன் இவரின் சித்தப்பா. இவரின் குடும்பம் பிரிட்டிஷ் இந்தியாவின் லாகூரில் பணியாற்றியதால் அங்கு பிறந்தார் பின் இளம் வயதில் சென்னை திரும்பி சென்னை திருவல்லிக்கேணியில் தான் வளர்ந்தார்.

அவர் பட்டப்படிப்பு வரை சென்னையில் தான் படித்தார். சித்தப்பா சர் சி.வி.ராமன் நோபல் வாங்கும்பொழுது அவருக்கு வயது 18.

1920ல் ஆர்னோல்ட் சம்மர்ஃபெல்ட் எனும் விஞ்ஞானி சென்னை வந்தபொழுது அவரின் உரையால் கவரபட்டு இவரும் இயற்பியல் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். அது உலகளவில் கவனம் பெற; 1930ம் ஆண்டு லண்டன் கேம்பிரிட்ஜ் கழகம் இவரை உபகாரச் சம்பளத்துடன் சேர்த்துக் கொண்டது. 

சீனிவாச ராமானுஜம் போல அங்கு பிரகாசித்தார் சந்திரசேகரன். சீனிவாச ராமானுஜனுக்குப் பின் ராயல் சொசைட்டி அங்கீகாரம் பெற்ற இரண்டாம் தமிழர் அவர்தான். 

அவரின் ஆய்வு முடிவுகள் அவரை விஞ்ஞானி என ஒப்புகொள்ள வைத்தன. வானியல், நட்சத்திரங்களின் அமைப்பு, அவற்றின் உட்பொருள், அது எப்படி எரிகின்றது?, சக்தி என்ன? எனப் பெரும் ஆய்வுகளைச் செய்து நட்சத்திரங்களுக்கு இடையேயான தூரத்தை அளப்பது உள்ளிட்ட முடிவுகளைச் சொன்னார். 

முதன் முதலில் நட்சத்திரங்களின் எல்லை, தூரம் போன்றவற்றை வரையறுத்தவர் அவர்தான். இன்றுவரை அது Chandrasekhar Limit என்றே தான் அழைக்கபடுகின்றது.

நட்சத்திர எடை, நட்சத்திரங்களின் பருமன், அவை எப்படித் தோன்றி மறையும் என்பதையெல்லாம் தன் ஆய்வில் சொன்னார். 

உலகப் பெரும் போர்களால் தடைபட்ட அவரின் ஆய்வு 1950க்குப் பின் பெரும் வேகம் எடுத்தது. 1983ல் அவர் நோபல் பரிசும் பெற்றார்.

இதுவரை நோபல் பரிசு வாங்கிய இரு தமிழர்களில் அவரும் ஒருவர். சித்தப்பா சர் சி.வி.ராமனை போல் இவரும் வாங்கினார்.

தன் ஆய்வுகளைத் தன் அந்திமக் காலமான 1995 வரை செய்து கொண்டே இருந்தார். 1930களில் அவர் ஆய்வினைத் தொடங்கிய பொழுது இப்போதிருக்கும் செயற்கைக்கோள், செயற்கைக்கோள் டெலஸ்கோப் இன்னும் பல விஷயம் கிடையாது. ஆனால் இன்று அதன் மூலம் நிரூபிக்கபடும் முடிவுகள் சந்திரசேகரின் ஆய்வின் துல்லியத்தைச் சொல்கின்றன‌. 

இன்று வானியலின் நட்சத்திரம், சூப்பர் நோவா, கரும்புள்ளி, டார்க் எனர்ஜி என எவ்வளவோ விஷயங்கள் விவாதிக்கபடுகின்றன. அதையெல்லாம் தொடங்கி வைத்தவரும் அந்த ஆய்வுக்கு அடித்தளமிட்டவரும் ஒரு இந்திய தமிழர் என்பது எல்லோருக்கும் பெருமையான விஷயம். 

"நடத்திரங்களின் விஞ்ஞானி" "கடவுளின் விஞ்ஞானி" என்றெல்லாம் கொண்டாபடும் அளவு எவ்வளவோ வானியல் ரகசியங்களை அவர் திறந்து வைத்தார்.

அவர் காட்டிய அடித்தளத்தில் இன்று மாபெரும் வானியல் ஆய்வுகள் நடக்கின்றன. அந்த அளவு மிக மிகத் துல்லியமான ஆராய்ச்சி அவருடையது. 

வானலோகத்தை மானிடருக்குத் திறந்து வைத்தவர் என அவர் கொண்டாடபடுகின்றார். 

எப்படி சாதித்தார் சந்திரசேகரன்?

சர் சி.வி.ராமன் வானமும் கடலும் நீல நிறமாக இருப்பதன் ரகசியத்தை தன் ஆய்வு மூலம் சொன்னார். சூரியக் கதிரில் இருந்து வரும் 7 நிறங்கள் உண்டு என்றும் அதில் நீல நிறம் அதிக தூரம் சிதறடிக்கபடுவதையும் சொல்லி நிரூபித்து நோபல் வாங்கினார். 

இதனை அவர் இந்துக்களின் புராணச் செய்தியான சூரிய பகவான் 7 குதிரை பூட்டிய தேரில் வருவதையும்; ராமனும் கண்ணனும் நீலநிறம்; அன்னை தேவியும் நீலவேணி என சொல்லபட்டதில் இருந்து எடுத்துக் கொண்டார். 

இந்துமதம் அவருக்கு வழிகாட்டிற்று. புராணம் சொன்னதை அவர் விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தார்.

அப்படியே இந்துக்கள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களை துருவன், அருந்ததி என பெயரிட்டுக் காட்டியதையும் இன்னும் பல வகையான நட்சத்திரங்கள் இந்திய வானவியலிலும் ஜோதிடத்திலும் இருப்பதையும் சிறுவயதில் இருந்தே கவனித்து வளர்ந்தவர் சந்திரசேகரன். 

இந்து ஜோதிட அறிவும் புராணங்களுமே அவருக்குள் விதையினை வளர்த்தன. அது கனவாக எழுந்தது

நட்சத்திரம் தோன்றும், நிலைக்கும், மறையும் என்பதை இந்துக்களின் புராணங்கள் சொல்லும். அதைத்தான் விஞ்ஞான ஆய்வாக செய்து நிருபித்து நோபல் பரிசும் பெற்றார் சந்திரசேகர்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடைபட்ட தூரம், சந்திரனுக்கும் பூமிக்கும் இடைபட்ட தூரம் என மிகத் துல்லியமாகக் கணித்து பாடலிலும் மந்திரங்களிலும் வைத்திருந்த இந்துமத அறிவியல் அவருக்குள் விருட்சமானது.

அந்த தூரத் தொடர்பு தான் நட்சத்திரங்களுக்கு இடையிலும் வரும் என்பதை துல்லியமாக அவரால் உணரமுடிந்தது

கருந்துளை என்பது இந்துமதத்தில் சொல்லபட்ட விஷயம் என்பதால் அவரால் எளிதில் அதனை கணிக்க முடிந்தது, கீதையின் 11ம் அத்தியாயமே அதுதான். 

உலகம் கோள வடிவ பிம்பத்தில் தோன்றியது. இங்கு எல்லாமே கோள் வடிவம் என்பதை ஹிரண்ய கர்பம் எனும் தங்கமுட்டையின் தத்துவத்தை சொல்லியது இந்துமதமே. இப்பொழுது விஞ்ஞானம் அதனை ஒப்புகொள்கின்றது.

இதுவரை தமிழர் பெற்ற இரு நோபல் பரிசுகளும் இந்து நம்பிக்கைகளை ஆதாரமாய்க் கொண்டவை என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம், அப்படிப்பட்ட தமிழகம் இது

இந்துமதம் என்பது வெறும் மூடநம்பிக்கை கொண்டதல்ல, அது கட்டுகதையுமல்ல‌

இந்துமதம் விஞ்ஞானத்தை முழுக்கப் புரிந்து அதனை அக்கால மக்களுக்காகப் பல லவுகீக விஷயங்களோடு கலந்து சொல்லி புரியவைக்க முயன்ற முழு ஞானமதம். 

அதன் தாத்பரியம் முழுக்க பிரபஞ்ச ரகசியமும் அதன் சூட்சுமமுமே...

அதனைப் புரிந்த ரிஷிகளும் ஞானிகளும் மக்களுக்கு புரியும்படி போதித்து சில வாழ்வியல் முறைகளைச் சொன்னார்கள் அதுதான் இந்துமதம் ஆயிற்று. 

அதனாலே எல்லா விஞ்ஞான முடிவும் இந்துமதத்திலே சங்கமமாகின்றன. இன்று விஞ்ஞானம் சொல்வதை எல்லாம் என்றோ சொன்னது இந்துமதம். 

இன்று ஐன்ஸ்டீன் முதல் டெஸ்லா, ராமன் என எல்லா விஞ்ஞானிகளும் சொன்னதைத் தான் இந்துமதமும் என்றோ சொன்னது. அதனை சந்திரசேகரன் ஆதாரத்தோடு நிருபித்தார்.

இன்று அந்த சுப்பிரமணிய சந்திரசேகருக்கு நினைவுநாள்

சென்னையில் பிறந்த அந்த வானியல் மேதைக்கு சென்னையில் அடையாளமோ சிலையோ சிறப்போ ஏதுமில்லை....

ஒருகாலம் வரும் அப்பொழுது உண்மையான இந்தியருக்கும், இந்நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்களுக்கும் அழியா அடையாளம் செய்யபடும்.

அன்று சுப்பிரமணிய சந்திரசேகருக்கு சென்னையில் பெரும் அடையாளம் நிறுவப்படும். அதுவரை அயல்நாட்டினர் மட்டும் அவர் பெருமை பேசட்டும்.

இப்படி சொந்த மண்ணில் அந்தப் பெரும் விஞ்ஞானி புறக்கணிக்கபடவும், மாகாணப் பாடத் திட்டத்தில் அவன் சாதனையும் கண்டுபிடிப்பும் இடம்பெறாமலே போகவும் காரணம் என்னவென்றால் விஷயம் எளிது.....

இங்கு அந்த சாதியில் இந்துவாய் பிறந்ததுதான் அவன் பெற்ற சாபம் என்றாலும் உலகளவில் சாதிக்க‌ அவன் பெற்ற வரமும் அதுதான். அது ஒன்றுதான்.///


தெரிவு: சக 

kanmani tamil

unread,
Aug 28, 2025, 11:48:45 PM8/28/25
to vallamai
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை:

///சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் அறிஞருமான நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை (V.Ramalingam Pillai) நினைவு தினம் இன்று.

நாமக்கல் அடுத்த மோகனூரில் (1888) பிறந்தார். தாய் கூறிய இதிகாச, புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். பொய் பேசக்கூடாது, நல்லவனாக விளங்க வேண்டும் என்ற தாயின் அறிவுரை அவர் மனதில் ஆழமாக பதிந்தது.

நாமக்கல்லில் தொடக்கக் கல்வி, கோவை மெட்ரிக் பள்ளியில் உயர்நிலைக் கல்வி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றார். எழுதுவது, ஓவியம் வரைவதில் சிறந்து விளங்கினார். விடுதலைப் போராட்ட இயக்கத்தில் 1906இல் இணைந்தார்.

தலைமைக் காவலரான தந்தை வெங்கடராமன், இவரையும் காவல் துறையிலேயே சேர்த்துவிட பெருமுயற்சி எடுத்தார். இவருக்கு விருப்பம் இல்லாததால் வீட்டைவிட்டு வெளியேறினார். 15 நாட்கள் வெளியே சுற்றித் திரிந்து வீடு திரும்பினார்.

அவரை மேலும் வற்புறுத்தாமல் நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணி வாங்கித் தந்தார் தந்தை. அதிலும் மனம் செல்லவில்லை. பணியை உதறினார். தந்தை முயற்சி எடுத்து, ஒரு பள்ளியில் ஆசிரியர் வேலை பெற்றுத் தந்தார். இவர் அடிக்கடி அரசியல் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியதால், வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

திலகர் போன்றவர்களின் தீவிரப்போக்கால் ஈர்க்கப்பட்டவர், முழு மூச்சாக அரசியலில் இறங்கினார். பின்னர் காந்தியின் அகிம்சை, அறவழிக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டார். அறப்போராட்டத்தால் மட்டுமே நாடு விடுதலை அடையும் என்ற முடிவுக்கு வந்தார். காங்கிரஸில் இணைந்தார்.

எளிய சொற்களால் கவிதை பாடி, தேசிய, காந்தியக் கொள்கைகளைப் பரப்பினார். தேசபக்திப் பாடல்கள் பாடியும், ஆவேச உரைகள் நிகழ்த்தியும் இளைஞர்கள் மனதில் எழுச்சியை ஏற்படுத்தினார். ஏராளமான கவிதைகள் எழுதிக் குவித்தார். ‘தேசியக் கவி’ என்று போற்றப்பட்டார்.

திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயலாளர், கரூர் வட்டார காங்கிரஸ் தலைவர், நாமக்கல் வட்டார காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார். 1932இல் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். உப்பு சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலுக்காக இவர் இயற்றித் தந்ததுதான் ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்ற பாடல்.

 மலைக்கள்ளன், மரகதவல்லி, கற்பகவல்லி, காதல் திருமணம் உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ளார். இவரது ‘மலைக்கள்ளன்’ நாவல், எம்ஜிஆர் நடிப்பில் திரைப்படமாக வந்தது. இசை நாவல், கட்டுரை, சுயசரிதம், புதினம், திறனாய்வு, நாடகம், கவிதைத் தொகுப்பு, சிறு காப்பியம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்தவர். மொத்தம் 66 நூல்களை எழுதியுள்ளார்.

நாடு விடுதலை அடைந்த பிறகு தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். பத்மபூஷண் விருது பெற்றார். சாகித்ய அகாடமியின் தமிழ்ப் பிரதிநிதியாக பொறுப்பு வகித்தார்.

தேசியக் கவிஞர், காந்தியக் கவிஞர், காங்கிரஸ் புலவர், அரசவைக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை 84ஆவது வயதில் (1972) காலமானார்.///


தெரிவு:சக



kanmani tamil

unread,
Oct 28, 2025, 1:24:05 AM10/28/25
to vallamai
#ராணி_அபாக்கா_கவ்டா வீர வரலாறு

///16ஆம் நூற்றாண்டின் மத்தியில் போர்ச்சுகிய காலனியாதிக்கம் உச்சத்திலிருந்த சமயம், 1555 கேரள ஜமோரின் வம்ச மன்னர்களை வென்று, பின்பு சென்னை மைலாப்பூரை கைப்பற்றி கபாலீஸ்வரர் கோவிலை தரைமட்டமாக்கினார்கள், வடக்கு நோக்கி நகர்ந்தவர்கள் பீஜப்பூர் சுல்தானையும் தோற்கடித்து பம்பாயைக் கைப்பற்றினார்கள், பின்பு கோவாவைத்
தலைமையிடமாக மாற்றினார்கள்.

இப்பொழுது அவர்களின் குறி அதிக வருமானம் ஈட்டக்கூடிய மங்களூர் துறைமுகம்.  அதைக் கைப்பற்ற வேண்டும் என்றால் 14 மைல் தொலைவில் அமைந்துள்ள உள்ளாள் என்ற துளு நாட்டைக் கைப்பற்ற வேண்டும், அந்த நாட்டை ஆண்ட அரசி ராணி அபாக்கா கவ்டாவைக் குறைத்து மதிப்பிட்டு ஒரு சிறிய படையை அனுப்பி அவரைக் கைது செய்து கோவா வர ஆணையிட்டார்கள். உள்ளாள் ராஜ்யத்திற்கு சென்ற போர்ச்சுகீசியப் படை உயிருடன் திரும்பவே இல்லை. 

அதிர்ச்சியில் உறைந்த போர்ச்சுகீசிய ராணுவம் இம்முறை பெரும் கப்பற்படையை Admiral Dom Álvaro da Silveira தலைமையில் அனுப்பிவைத்தது. இம்முறையும் படுதோல்வி... படையைத் தலைமை தாங்கிய அட்மிரல் உயிருக்குப் போராடிய நிலையில் வெறும் கையுடன் திரும்பினார்.

இப்பொழுது போர்ச்சுகீசிய ராணுவம் தங்களது திட்டத்தை மாற்றியது. முதலில் மங்களூர் துறைமுகத்தைக் கைப்பற்றி விட்டுப் பின்பு உள்ளாள் ராஜ்யத்தைக் கைப்பற்றி அழிக்க முடிவு செய்தது. அவர்களின் திட்டப்படி போர்ச்சுகீசிய மிகவும் அனுபவம் வாய்ந்த தளபதி João Peixoto என்பவருடன் ஒரு பெரும் படை மங்களூர் துறைமுகத்தை முற்றுகையிட்டுத் துறைமுகத்தை தரைமட்டமாக்கினார்கள், பின்பு உள்ளாள் நோக்கிப் பெரும்படை நகர்ந்தது.  அவர்களது எண்ணம் ஒரு சிறிய நாட்டின் ராணி தங்களது பெரும்படை மற்றும் நவீன ஆயுதங்களுக்கு முன்னாள் ஒன்றுமேயில்லை என அசால்ட்டாக நினைத்து விட்டார்கள். பெரும்படை உள்ளாலை நோக்கிச் சென்றது. ஆனால் ஆச்சரியம்! இம்முறை எந்த எதிர்ப்புமில்லாமல் உள்ளாள் ராஜ்ஜியம் வீழ்ந்தது, போர்ச்சுகீசியர்கள் கொண்டாட்டம் களைகட்டியது. உள்ளாள் ராஜ்யத்தை தரைமட்டமாக்க வேண்டும் என்று அதன் தளபதி உத்தரவிட்டான். அதன் ராணி அபாக்கா கவுடாவைத் தேடினார்கள்.

ராணி அபாக்கா கவ்டா பதுங்கியது பாயத்தான் என்று தெரியாத போர்ச்சுகீசிய ராணுவம் கொண்டாடிக் கொண்டிருந்தது. தனது ராணுவத்தின் கைதேர்ந்த 200 வீரர்களைத் தேர்ந்தெடுத்த 30வயது ராணி அபாக்கா கவ்டா அந்தப் படைக்குத் தான் தலைமையேற்றார்.  போர்ச்சுகீசிய பெரும்படையை சுற்றி வளைத்துத் தாக்கினார்.. போர்ச்சுகீசிய தளபதி கொல்லப்பட்டார், 70 போர்ச்சுகீசியர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான போர்ச்சுகீசிய வீரர்கள் கொல்லப்பட்டார்கள், மிச்சம் மீதி இருந்தவர்கள் துண்டைக் காணோம்; துணியைக் காணோம் என்று ஓட்டம் பிடித்தார்கள். 'நாம் ராஜ்யத்தைக் கைப்பற்றி விட்டோம்; அது போதும்' என்று ராணி அபாக்கா கவ்டா நினைத்து போரை நிறுத்தியிருப்பார் என்று தானே நினைக்கிறீர்கள் அது தான் இல்லை.

அன்று இரவே தனது அனைத்துப் படைகளையும் ஒருங்கிணைத்து மங்களூர் துறைமுகத்தைத் தாக்கினார், தன் பெரும்படைகளுடன் துறைமுகத்திற்குச் சென்ற ராணி அபாக்கா கவ்டா அங்கிருந்த போர்ச்சுகீசிய தலைமைத் தளபதி Admiral Mascarenhas என்பவரைக் கொன்று தனது வெற்றிக்கொடியை அங்கே பறக்கவிட்டார். அதோடு விடவில்லை; மங்களூர் துறைமுகத்திற்கு வடக்கே 100 மைல் தொலைவிலிருந்து போர்ச்சுகீசிய பெரும் ராணுவத்தலத்தை தாக்கி ஒரு வாரத்தில் தரைமட்டமாக்கினார்.

போர்ச்சுகீசிய ராணுவத்தை எதிர்த்து ஒருவருடம் இரண்டு வருடமல்ல நாற்பது வருடம் போரிட்டார், வீரத்தால் ராணியை வெல்லமுடியாது என்று தீர்மானித்த போர்ச்சுகீசியர்கள் துரோகத்தால் வெல்ல நினைத்தார்கள், அந்த துரோகத்திற்கு மகாராணியின் கணவரே துணை போய் விட்டார். ஆம்; மகாராணியை அவளது கணவன் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வரும் போது போர்ச்சுகீசிய ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது, இருந்தும் அவரது படை சிறையைத் தாக்கி மஹாராணியை மீட்டனர், தப்பிச்செல்லும் வழியில் போர்ச்சுகீசிய பீரங்கி குண்டிற்கு இரையானார் இந்த வீர மங்கை.

இந்திய அரசாங்கம் அவருக்கு ஒரு தபால் தலை வெளியிட்டது. இந்தியக் கடலோர காவல்படை கப்பலுக்கு அவரது பெயரையும் சூட்டியது. 

இந்த வீரவரலாற்றை நாமும் படித்து நம்முடைய குழந்தைகளுக்கும் சொல்லித்தருவோம்

ஜெய்ஹிந்த்///


தெரிவு: சக

seshadri sridharan

unread,
Oct 28, 2025, 8:55:15 AM10/28/25
to வல்லமை


On Tue, 28 Oct, 2025, 10:54 am kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
#ராணி_அபாக்கா_கவ்டா வீர வரலாறு

///16ஆம் நூற்றாண்டின் மத்தியில் போர்ச்சுகிய காலனியாதிக்கம் உச்சத்திலிருந்த சமயம், 1555 கேரள ஜமோரின் வம்ச மன்னர்களை வென்று, பின்பு சென்னை மைலாப்பூரை கைப்பற்றி கபாலீஸ்வரர் கோவிலை தரைமட்டமாக்கினார்கள், வடக்கு நோக்கி நகர்ந்தவர்கள் பீஜப்பூர் சுல்தானையும் தோற்கடித்து பம்பாயைக் கைப்பற்றினார்கள், பின்பு கோவாவைத்
தலைமையிடமாக மாற்றினார்கள்.

இப்பொழுது அவர்களின் குறி அதிக வருமானம் ஈட்டக்கூடிய மங்களூர் துறைமுகம்.  அதைக் கைப்பற்ற வேண்டும் என்றால் 14 மைல் தொலைவில் அமைந்துள்ள உள்ளாள் என்ற துளு நாட்டைக் கைப்பற்ற வேண்டும், அந்த நாட்டை ஆண்ட அரசி ராணி அபாக்கா கவ்டாவைக் குறைத்து மதிப்பிட்டு ஒரு சிறிய படையை அனுப்பி அவரைக் கைது செய்து கோவா வர ஆணையிட்டார்கள். உள்ளாள் ராஜ்யத்திற்கு சென்ற போர்ச்சுகீசியப் படை உயிருடன் திரும்பவே இல்லை. 

அதிர்ச்சியில் உறைந்த போர்ச்சுகீசிய ராணுவம் இம்முறை பெரும் கப்பற்படையை Admiral Dom Álvaro da Silveira தலைமையில் அனுப்பிவைத்தது. இம்முறையும் படுதோல்வி... படையைத் தலைமை தாங்கிய அட்மிரல் உயிருக்குப் போராடிய நிலையில் வெறும் கையுடன் திரும்பினார்.

இப்பொழுது போர்ச்சுகீசிய ராணுவம் தங்களது திட்டத்தை மாற்றியது. முதலில் மங்களூர் துறைமுகத்தைக் கைப்பற்றி விட்டுப் பின்பு உள்ளாள் ராஜ்யத்தைக் கைப்பற்றி அழிக்க முடிவு செய்தது. அவர்களின் திட்டப்படி போர்ச்சுகீசிய மிகவும் அனுபவம் வாய்ந்த தளபதி João Peixoto என்பவருடன் ஒரு பெரும் படை மங்களூர் துறைமுகத்தை முற்றுகையிட்டுத் துறைமுகத்தை தரைமட்டமாக்கினார்கள், பின்பு உள்ளாள் நோக்கிப் பெரும்படை நகர்ந்தது.  அவர்களது எண்ணம் ஒரு சிறிய நாட்டின் ராணி தங்களது பெரும்படை மற்றும் நவீன ஆயுதங்களுக்கு முன்னாள் ஒன்றுமேயில்லை என அசால்ட்டாக நினைத்து விட்டார்கள். பெரும்படை உள்ளாலை நோக்கிச் சென்றது. ஆனால் ஆச்சரியம்! இம்முறை எந்த எதிர்ப்புமில்லாமல் உள்ளாள் ராஜ்ஜியம் வீழ்ந்தது, போர்ச்சுகீசியர்கள் கொண்டாட்டம் களைகட்டியது. உள்ளாள் ராஜ்யத்தை தரைமட்டமாக்க வேண்டும் என்று அதன் தளபதி உத்தரவிட்டான். அதன் ராணி அபாக்கா கவுடாவைத் தேடினார்கள்.

ராணி அபாக்கா கவ்டா பதுங்கியது பாயத்தான் என்று தெரியாத போர்ச்சுகீசிய ராணுவம் கொண்டாடிக் கொண்டிருந்தது. தனது ராணுவத்தின் கைதேர்ந்த 200 வீரர்களைத் தேர்ந்தெடுத்த 30வயது ராணி அபாக்கா கவ்டா அந்தப் படைக்குத் தான் தலைமையேற்றார்.  போர்ச்சுகீசிய பெரும்படையை சுற்றி வளைத்துத் தாக்கினார்.. போர்ச்சுகீசிய தளபதி கொல்லப்பட்டார், 70 போர்ச்சுகீசியர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான போர்ச்சுகீசிய வீரர்கள் கொல்லப்பட்டார்கள், மிச்சம் மீதி இருந்தவர்கள் துண்டைக் காணோம்; துணியைக் காணோம் என்று ஓட்டம் பிடித்தார்கள். 'நாம் ராஜ்யத்தைக் கைப்பற்றி விட்டோம்; அது போதும்' என்று ராணி அபாக்கா கவ்டா நினைத்து போரை நிறுத்தியிருப்பார் என்று தானே நினைக்கிறீர்கள் அது தான் இல்லை.

அன்று இரவே தனது அனைத்துப் படைகளையும் ஒருங்கிணைத்து மங்களூர் துறைமுகத்தைத் தாக்கினார், தன் பெரும்படைகளுடன் துறைமுகத்திற்குச் சென்ற ராணி அபாக்கா கவ்டா அங்கிருந்த போர்ச்சுகீசிய தலைமைத் தளபதி Admiral Mascarenhas என்பவரைக் கொன்று தனது வெற்றிக்கொடியை அங்கே பறக்கவிட்டார். அதோடு விடவில்லை; மங்களூர் துறைமுகத்திற்கு வடக்கே 100 மைல் தொலைவிலிருந்து போர்ச்சுகீசிய பெரும் ராணுவத்தலத்தை தாக்கி ஒரு வாரத்தில் தரைமட்டமாக்கினார்.

போர்ச்சுகீசிய ராணுவத்தை எதிர்த்து ஒருவருடம் இரண்டு வருடமல்ல நாற்பது வருடம் போரிட்டார், வீரத்தால் ராணியை வெல்லமுடியாது என்று தீர்மானித்த போர்ச்சுகீசியர்கள் துரோகத்தால் வெல்ல நினைத்தார்கள், அந்த துரோகத்திற்கு மகாராணியின் கணவரே துணை போய் விட்டார். ஆம்; மகாராணியை அவளது கணவன் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வரும் போது போர்ச்சுகீசிய ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது, இருந்தும் அவரது படை சிறையைத் தாக்கி மஹாராணியை மீட்டனர், தப்பிச்செல்லும் வழியில் போர்ச்சுகீசிய பீரங்கி குண்டிற்கு இரையானார் இந்த வீர மங்கை.

இந்திய அரசாங்கம் அவருக்கு ஒரு தபால் தலை வெளியிட்டது. இந்தியக் கடலோர காவல்படை கப்பலுக்கு அவரது பெயரையும் சூட்டியது. 

இந்த வீரவரலாற்றை நாமும் படித்து நம்முடைய குழந்தைகளுக்கும் சொல்லித்தருவோம்

ஜெய்ஹிந்த்///


தெரிவு: சக

இன்னும் சொல்வதென்றால் போர்த்துகீசியர் ஆட்சி தென்னகத்தில் பரவாமல் இருக்க இந்த அரசியின் துணிந்த போரே காரணம் எனலாம்.

kanmani tamil

unread,
Oct 29, 2025, 12:25:10 AM10/29/25
to vallamai

ராணி அபாக்கா கௌடாவின் வாழ்க்கை இறுதியைப் பார்க்கும் போது; பொது வாழ்வில் மட்டும் இன்றிக் குடும்ப வாழ்க்கையிலும் மிகுந்த சவால்களைச் சந்தித்து இருக்க வாய்ப்பு உள்ளது எனத் தோன்றுகிறது. அவர் வாழ்ந்த சமூகத்தில் பரவிப் பொதிந்து கிடக்கும் அவரைப் பற்றிய வழக்காறுகளைப் பெண்ணிய நோக்கில் ஆராய்வது நல்ல முயற்சியாக அமையும். 

விஞ்ஞானி சதீஷ் தவான் 

///இந்தியாவின் விண்வெளி பலம் இன்று உலகை மிரட்டிக் கொண்டிருக்கின்றது. மாபெரும் வான்வெளி பலம் பெற்றிருக்கின்றோம். உலகின் எந்த இடத்தையும் தாக்கமுடியும்; நிலவுக்கும் நம்மால் செல்லமுடியும்.

வானில் சுற்றும் செயற்கைக் கோள்களைக் கூட நம்மால் தகர்க்க முடியும். அசையும் இலக்கு, அசையா இலக்கு என நிலத்திலும் நீரிலும் வானிலும் உள்ள இலக்கை நம்மால் அடிக்க முடியும்.

அவ்வளவு பெரும் வான்பலம், ஏவுகனை பலம் இந்தியா பெற்றிருக்க அவர் மகத்தான காரணம். அவராலேதான் தேசம் இந்த அளவு பெரும் வல்லமை பெற்றிருக்கின்றது

ஒவ்வொரு இந்தியனும் நன்றியோடு வணங்க வேண்டியவர் அவர். ஒவ்வொரு இந்திய அறிவியல் மாணவனனுக்கும் அவரே வழிகாட்டி.

அப்துல்கலாம் எனும் மாமனிதன் தன் குருவாகக் கொண்டாடியது அவரைத்தான். தான் சாதிக்க அவரே காரணம்; அவர் வழிகாட்டுதலே காரணம் என வணங்கிச் சொன்னது அவரைத்தான். 

சதீஷ் தவான்

1920ல் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிறந்தவர், லாகூரில் கற்றுவிட்டு எந்திரவியல் சம்பந்தமாக அமெரிக்காவுக்குப் படிக்கச் சென்றார். உலகம் அப்போதுதான் விமான யுகம், வான்வெளியுகத்தில் கால் வைத்திருந்தது

அது சம்பந்தமாகக் கற்றுவிட்டுப் பேராசியருமாகி அங்கே அவர் பெரும் ஆய்வுகளைச் செய்த போது தான் தாய்நாட்டின் பணிக்காக 1962ல் திரும்பினார்.

அது சீனாவோடு இந்தியா யுத்தம் புரிந்து அடி வாங்கி இருந்த நேரம். மிக மோசமான அந்தத் தோல்வி ஒவ்வொரு இந்தியனையும் பாதித்தது.  இனி அப்படி ஒரு தோல்வி கூடாது என ஒவ்வொரு இந்தியனும் தேசப்பற்றால் பொங்கிய நேரத்தில்தான் 42 வயது தவான் இந்தியா வந்தார். 
வந்து தேசிய அறிவியல் கழகத்தில் பணியாற்றத் தொடங்கினார்

1971 வரை சதீஷ் தவான் அதிகம் அறியப்படவில்லை, ஒரு அறிவியல் பேராசிரியராக இந்திய அறிவியல் முகமாக அறியப்பட்டார். தேசத்தின் அறிவியல் யுகத்திற்கு வலுவான அடித்தளமிட்டுக் கொண்டிருந்தாலும் பெரிதும் அவர் கவனம் பெறவில்லை.

1971ல் நடந்த விக்ரம் சாராபாயின் மரணமே அவர்மேல் பொறுப்புக்களைத் திணித்தது. 

1972 வங்க யுத்தத்தில் இந்தியா வென்றாலும் அடுத்தடுத்து பெரும் யுத்தம் வரலாமென யோசித்துப் பெரும் காரியங்களைச் செய்யத் தொடங்கிற்று. 
வான்வெளி பலம், அணுசக்தி பலம் அவசியம் என தேசம் உணர்ந்து; அதற்கான காரியங்களைச் செய்ய முனைந்தது அப்போது தான்.

அந்நிலையில்தான் சதீஷ் தவானிடம் பொறுப்பு ஒப்படைக்கபட்டது. பெரும் சீர்திருத்தங்களையும் பெரும் பாய்ச்சல்களையும் தவான் காட்டினார்.

விண்வெளித் தலமையகம் தெற்கே அமைதல் வேண்டும், முப்பக்கம் கடல் கொண்ட அந்த பிராந்தியமே பல வான்வெளி ஆய்வுக்கு நல்லது எனச் சொல்லி தெற்கே பல விண்வெளிக் கேந்திரங்களை உருவாக்கினார். 

விண்வெளி மையத் தலமையகம் பெங்களூர் வர அவர்தான் காரணம். 

இஸ்ரோ எனும் இந்திய விண்வெளி அமைப்பு அவர் தலைமையில் தான் உருவாகிப் பெரும் பாய்ச்சல் காட்டிற்று. 
1975ல் ஆரியபட்டா, பின் பாஸ்கரா, ரோகிணி என அவர் தலைமையில் தான் சாதித்தது.

அவர் செய்த மிகப் பெரிய விஷயம் திறமையானவர்களை முன்னே கொண்டு வந்தது... அப்துல் கலாமினை அவர் தான் அடையாளம் கண்டு முன்னே கொண்டு வந்தார்.

கலாமின் ராக்கெட்டுகள் பல தோற்ற நேரம்; தோல்விக்கான பொறுப்பைத் தானே வாங்கித், தானே பதிலளித்துக் கலாமினைத் தற்காத்தார். 

ஆனால் ராக்கெட்டுகள் பெரும் வெற்றி பெற்ற நேரம் கலாமினைப் பேசச் சொல்லி விட்டு அவர் பின்னால் அமர்ந்து கொள்வார்.

கலாம் எனும் மாபெரும் விஞ்ஞானியினை நாட்டுக்குத் தந்தவர் அவர் தான்.

தவானின் இன்னொரு முக்கிய சாதனை, சாராபாய் மரணத்துக்குப் பின் சரியான நபர்களை அணுசக்தித் துறைக்குக் கொண்டு வந்தது.

பிரம்ம பிரகாஷ், ஆர்.சிதம்பரம் போன்றோரை அவர்தான் முன்னிறுத்தினார், அதில்தான் முதல் அணுகுண்டை தேசம் பெற்றது.

இப்படிப் பெரும் சாதனைகளை அவர் செய்தார். அணுசக்தி, செயற்கைக் கோள் பலத்தினைப் பெற அவரே அடிப்படை. 

இன்சாட், பி.எஸ்.எல்.வி., ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக் கோள் திட்டங்களின் வெற்றிகளுக்கு வழிவகுத்தவர் தவான்.

இந்த அனுபவம்தான் பின்னர் அக்னி, பிரித்வி ரக ஏவுகணைகளாக மாறின‌.

இது தான் பின்னாளில் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் நுட்பமாக மாறி; இன்று சக்திமிக்க ஏவுசாதனமாக மாறி நிற்கின்றது.

வலுவான இந்தியாவுக்கு அவரே அடிதளமிட்டார். இன்று காணும் எல்லா ஏவுகணை, ஏவுவாகனம், செயற்கைக் கோள், அணுசக்தி என எல்லாமே அவரால் வந்தது.

அவர் கனவுப்படி தான் இன்று இந்தியா வளர்ந்து நிற்கின்றது.

பெரும் எடைமிக்க செயற்கைக் கோளை நம்மால் ஏவ முடிகின்றது. நிலவினைத் தொட முடிகின்றது, சக்திமிக்க ஏவுகணைகளை அணுகுண்டொடு பொருத்தி உலகை மிரட்ட முடிகின்றது. 

இவை எல்லாம் அவர் தேசத்துக்குச் செய்த மாபெரும் சாதனைகள்.  

ஒன்றுமே இல்லாத காலத்தில், உருப்படியாக நாலு துப்பாக்கி கூடச் செய்யத் தெரியாத காலத்தில் நாமும் சாதிப்போம் என அவர் நம்பிக்கை ஊட்டிச் செய்த சாதனைகள். 

அக்காலங்கள் கடுமையானவை. 1970களில் சதீஷ் தவானின் ராக்கெட் சோதனைகள் பல தோல்வியைத் தழுவின. உருப்படியான ஏவுதளமோ, ஏவுசாதனங்களோ; அவற்றைக் கொண்டு செல்ல சரியான போக்குவரத்துக் கருவிகளோ கிடையாது. ஆலையில் இருந்து சைக்கிளில் ராக்கெட் பாகங்களை கொண்டு சென்ற காலம் உண்டு.

அந்நிலையிலும் எவ்வளவோ தோல்விகளுக்கு இடையிலும் அவர் போராடினார்; இடைவிடாமல் போராடினார்.

பெரும் அவமானம், பரிகாசங்கள், இந்தியாவால் இதெல்லாம் ஒருகாலமும் முடியாது எனும் நகையாடல்கள் என எல்லா வசைகளையும் தாண்டி நின்றார்.

எல்லா வலிகளையும் தனிமனிதனாகத் தாங்கி அந்த வலி தன் சக விஞ்ஞானிகளான கலாம் போன்றோருக்கு அழுத்தமோ கவலையோ வராமல் பார்த்துக் கொண்டார். 

பெரும் விஞ்ஞானி என்பதை விட அவரின் இடைவிடா போராட்ட குணமும், மிகச் சரியான தலைமைப் பண்பும், கொஞ்சமும் அகங்காரம், கர்வம் இல்லாத கடும் அர்ப்பணிப்பும் போற்றத் தக்கவை. 

அப்துல்கலாம் எனும் மாபெரும் விஞ்ஞானி உருவாகி வர சதீஷ் தவான் எனும் அவரின் விஞ்ஞான குருநாதரே பெரும் காரணம். 

இன்று அந்த பீஷ்மருக்கு (செப்டம்பர்-25) 103ம் ஆண்டு பிறந்த நாள்.

42 வயதில் தேசத்துக்காக உழைக்க ஆரம்பித்த அவரின் பணி சுமார் 40 வருடங்கள் வரை நீண்டது, தன் இறுதிநாள் வரை, 2002 வரை நாட்டின் விண்வெளித் திட்டங்களில் அவரின் ஆலோசனை இருந்தது. 

தேசத்தின் விஞ்ஞானக் கோவில் அஸ்திவாரத்துக்கு; பலமான இந்தியாவினை உருவாக்க அடிகல்லாய் புகுந்து தாங்கியவருக்கு; வான்வெளி வேலியிட்ட மாபெரும் விஞ்ஞானிக்கு; அப்துல்கலாம் எனும் அரும் பெரும் விஞ்ஞானியினை அடையாளம் கண்டு ஜொலிக்கச் செய்த மேதைக்கு தேசம் தன் அஞ்சலியினைச் செலுத்துகின்றது. 

அவருக்கு ஏனோ பாரத ரத்னா கொடுக்கப் படவில்லை; கொடுக்கப் பட்டிருக்க வேண்டும்.

எனினும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்கலம் ஏவும் மையத்துக்கு அவர் பெயர்தான் இடப்பட்டுள்ளது. அதிலிருந்து வானுக்குச் சென்று சாதிக்கும் ஒவ்வொரு இந்திய செயற்கைக் கோளிலும் அவரின் முகம் புன்னகைக்கும். அவரின் கரம் தழுவி நிற்கும்.

அந்த மாமனிதன் வரலாற்றில் இருந்து ஏராளமான இளைய தலைமுறையினர் உருவாகி வந்து தேசத்தை இன்னும் இன்னும் வலுப்படுத்த வேண்டும். 

அமெரிக்காவில் பெரும் விஞ்ஞானியாக வர வாய்ப்பிருந்தும் இந்தியா வந்து இந்தியாவினை தலைநிமிர வைக்கப் போராடி, தான் பெரும் தோல்வியுற்ற நேரத்தில் எல்லாம் பறவைகளைக் கவனித்து; பறவைகளின் பறத்தலை ஆய்ந்து; அதனிடம் இருந்து அறிவியலைக் கற்று; அதனைக் கொண்டே தேசத்தின் விஞ்ஞானத்தை பலமாக்கியவர் அவர். 

பறவைகளை கவனித்து அவர் எழுதிய "Bird Flight" நூல் எப்போதும் பிரசித்தி பெறத் தக்கது.

இப்படியான மாபெரும் மேதைகள் வரலாறெல்லாம் அவர்கள் போராட்டமெல்லாம் ஒவ்வொரு இந்திய மாணவனும் படிக்கவேண்டிய விஷயம். அரசுகள் அதற்கு வழிசெய்தல் வேண்டும்

சதீஷ் தவான் என்பது இந்தியாவினை புது யுகத்துக்கு அழைத்து சென்ற விஞ்ஞான தேவனின் பெயர். அந்த நாமத்தைச் சொல்லி நன்றிக் கண்ணீரோடு வணங்குவோம். 

வானில் சுற்றும் இந்திய செயற்கைக் கோளும், நிலவில் சுற்றும் கலனும் அந்த இந்தியனின் புகழை இந்தியப் பெருமையாக வானில் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன‌. 

தன்னலமற்ற சேவையால் என்றும் தேசத்தை காத்துகொண்டிருக்கின்றார் அந்த தவான்.///

தெரிவு: சக





kanmani tamil

unread,
Oct 29, 2025, 1:13:15 AM10/29/25
to vallamai

kanmani tamil

unread,
Oct 29, 2025, 11:56:07 PM10/29/25
to vallamai
அய்யல சோமாயஜுல லலிதா:
இந்தியாவின் முதல் பெண் என்ஜினியர்!!

https://www.facebook.com/share/p/17NtwTnqHR/

///1930- அப்போதைய மெட்ராஸ். 15 வயசு சிறுமிக்கும்,
18 வயது சிறுவனுக்கும் கல்யாணம். 

மூணே வருஷம்... பையன் செத்துப் போனான்... விதவை ஆன அவள் ஆறு மாச கர்ப்பம். பிறகு அந்த குழந்தைப் பெண்ணிற்குக் குழந்தை பிறந்தது.

அந்தக் குடும்பத்தில் எந்தக் கேள்வியும் இல்லை. எந்த பதிலும் இல்லை; ஆழ்ந்த மவுனம் மட்டுமே. கையில் குழந்தையுடன் விட்டத்தை பார்த்து உட்காருவதே அவள் வாழ்க்கை ஆயிற்று. 

போதும் இந்தத் தனிமை, வெறுமை என அவள் அப்போது எடுத்த முடிவை சந்திக்க அப்போதைய இந்தியா தயாராக வில்லை. அது அதிர்ந்து போனது. 

அவள் அப்பா பாப்பு சுப்பாராவ், ஒரு பொறியியல் கல்லூரியில் எலக்டிரிக்கல் என்ஜினியரிங் பேராசிரியர். அவரைப் பார்த்து இந்தப் பெண் தலையில் சுரீர் என ஒரு பல்பு எரிந்தது. அது அவளது வாழ்க்கையை மட்டுமல்ல; லட்சக்கணக்கான இந்தியப் பெண்களின் எதிர்காலத்தையே மாற்றியது.

சென்னை கிண்டி என்ஜினியரிங் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் பட்டதாரி வகுப்பில் சேர்ந்தாள். ஆனால் அது அவ்வளவு சுலபம் ஆக இருக்க வில்லை. முழுக்க முழுக்க ஆண்கள் நிறைந்த கல்லூரியில் இவள் ஒருத்தி மட்டுமே பெண். அது வரை முறை வாசல் வேலைக்காகக் கூட எந்த ஒரு பெண்ணையும் பார்த்திராத காலேஜ். தன்னந்தனியே வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும்; தன் காலில் நின்று; தன் குழந்தையை வளர்த்துப் பெரிய ஆளாக்க வேண்டும் என்கிற ஒற்றை வேள்வித் தீ அவள் மனதில் பற்றி எரிய; 1943 ஆம் ஆண்டு அவள் என்ஜினியர் ஆனாள். 

இந்தியாவின் முதல் பெண் என்ஜினியர் இவள்தான் 

மற்றவர்கள் எல்லாம் இந்த இளம் விதவை மீது மாறுபட்ட பார்வைகளை வீசினாலும், கல்லூரிப் பரிந்துரையால், 
இந்தியாவின் மிகப்பெரிய 
பக்ரா நங்கல் அணையின் டிரான்ஸ்மிஷன் லைன்களை வரையும் வேலை கிடைத்தது. கட்டுமானங்களை, நாடுகள் எழுப்பிக் கொண்டு இருந்த போது; இவள் அவற்றை ஒளிமயமாக்கிக் கொண்டு இருந்தாள். 

கொல்கத்தாவின் அசோசிடியேட்டட் எலக்ட்ரிக்கல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. 
சிஸ்டம் டிசைனிங், பழுதுகளை சரி செய்தல் என 30ஆண்டுகள் அவள் அங்கு உழைத்தாள். 

அந்தக் காலத்தில் விதவைகள் எங்கும் பயணம் செய்யக் கூடாது என்பதால்; சைட்டுக்கு விசிட் செய்யும் வாய்ப்பு மட்டும் இவளுக்கு மறுக்கப்பட்டது. அவள் இதை எதிர்த்துக் கலகம் செய்யவில்லை. அதையும் ஒரு வாய்ப்பாக்கித் துல்லிய எலக்ட்ரிக்கல் டிசைன்களை வடிவமைத்துத் தருவதில் கவனம் செலுத்தி சாதனை படைத்தாள். கிரிட்டுகளுக்கு மின் சக்தி அளித்தாள். 

1964- நியூ யார்க்...
முதல் சர்வதேச மகளிர் இன்ஜினியர்கள் மற்றும் சயின்டிஸ்ட்டுகளின் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட பெண் இவள் தான். சேலை உடுத்திக் கொண்டு; கம்பீரமாக நடந்து; அந்த மாநாட்டில் ஒரு கலக்கு கலக்கினார். ஆனால் இந்த தேசத்துக்கு இவள் பெயர் கூடத் தெரியாது. 

1966- லண்டனின் இன்ஸ்டிட்யூட் ஆப் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்கில், முழு நேர உறுப்பினர் ஆனாள். 

நமது பாட நூல்கள், எஞ்சினியரிங் கல்லூரிகள், நாட்டின் அணைகள், கிரிட்டுகள் எல்லாவற்றிலும் எத்தனை வோல்டேஜ் என குறிப்பிடப் பட்டிருக்கும். ஆனால், ஒன்றில் கூட அவற்றை மின்மயமாக்கிய இவள் பெயர் இருக்காது. 

அப்பேர்ப்பட்ட அவள் பெயர்:
அய்யல சோமாயஜுல லலிதா. 
இந்தியா மதிக்கத் தவறிய... இந்தியா மறந்து போன... இந்தியாவின் முதல் பெண் என்ஜினியர்!!///

தெரிவு:சக



kanmani tamil

unread,
Oct 31, 2025, 3:50:13 AM10/31/25
to vallamai
மதுரைப்பிள்ளை


பறையரில் பிள்ளை என்கிற பட்டம் தற்போது பயன்படுத்துவது இல்லை. பிள்ளையா வாழும் பறையர்களும் உண்டு.

மதுரைப்பிள்ளை 1885-ம் ஆண்டு ரங்கூன் நகரக் கௌரவ நீதிபதியாக ஆனார். 

அதே ஆண்டில் டவுன் பாடசாலை என்ற (மிகுதியும் தமிழ்க் குழந்தைகள் பயில) ஒரு பள்ளியைப் பெரும்பொருட் செலவில் தொடங்கினார். 

1886ம் ஆண்டு முதல் மாநகர கமிஷனராகவும் ஆனார்.. 

வணிகத்தேவைக்காக அவர் கப்பல் ஒன்றை வாங்கி; அதற்குத் தன் மகளான மீனாட்சியின் பெயரைச் சூட்டினார் (1912).

மதுரைப் பிள்ளை 1890-ம் ஆண்டு வணிக மேம்பாடு தொடர்பாக அயல்நாட்டுப் பயணம் மேற்கொண்டார். இரங்கூனிலிருந்து கல்கத்தா, அலகாபாத், பம்பாய், பரோடாவரை பயணம் செய்தார். இந்த இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜூன் 26-ம் தேதி பரோடா மன்னர் கெய்க்வாட்டுடன் இணைந்து கப்பலில் பயணமானார். லண்டன் சென்ற அவர் ஏடன், வெனிஸ், பெல்ஜியம், ஜெர்மன், பெர்லின், பாரீஸ், ரோம் போன்ற இடங்களுக்குச் சென்று திரும்பினார். ரோம் நகரத்தில் போப்பாண்டவரைச் சந்தித்தார். இது இரண்டுமாதப் பயணமாக அமைந்தது. இப்பயணம் குறித்து அவர் ஒரு நூல் எழுதி வெளியிட்டார் என்று 'மதுரை பிரபந்தம்’ நூல் மூலம் அறியமுடிகிறது.

மதுரைப்பிள்ளையின் ஒரே மகளான மீனாட்சியை 1900-ம் ஆண்டு வி.ஜி. வாசுதேவ பிள்ளைக்கு மணம் முடித்துவைத்தார். 'பகவத் தியாக கீர்த்தனம்’ என்ற இசை நூலையும் 'சக்குபாய் சரித்திரம்’ என்ற நாடக நூலையும் எழுதிய புலவரான வேலூர் கோவிந்தராஜதாசரின் மகன் வாசுதேவப் பிள்ளை. சென்னை கிறித்தவக் கல்லூரியில் பயின்றவர். வாசுதேவபிள்ளை 1919-ம் ஆண்டு நகர்மன்ற உறுப்பினரானார். 1931-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். இத்தம்பதியரின் மகள் மீனாம்பாள் சிவராஜ். அவர் பின்னாளில் தமிழகத்தில் முக்கியத் தலைவராக ஆனார். அவர் கணவர் என். சிவராஜூம் முக்கியமான அரசியல் தலைவர்.

மதுரைப் பிள்ளை முதலில் 63 நாயன்மார்கள் வரலாற்றை லட்சம் பிரதிகள் அச்சிட்டு ரங்கூனிலும் தமிழகத்திலும் வழங்கும்படிச் செய்தார். அதற்காக டிசம்பர் 23, 1881ம் ஆண்டு ரங்கூனில் பெரியதொரு வெளியீட்டு விழா நடந்தது. தொடர்ந்து வேறுசில தமிழ் நூல்களையும் வெளிநாட்டுக் கதைகளையும் கவிதைகளையும் மொழியாக்கம் செய்து வெளியிட விரும்பினார். சென்னையில் அச்சிட்டுக் கொணரும் செலவினத்தைக் குறைக்கும் பொருட்டு தந்தையின் பெயரில் 'மார்க்கண்டெய்ல் பிரஸ்’ என்ற அச்சகத்தைத் தொடங்கினார். தமிழில் வெளியிடப்படும் நூல்களுக்கும் பொருளுதவி புரிபவராக மாறினார். இதற்குப் பிறகே 'வள்ளல் மதுரைப்பிள்ளை’ என்று புலவர்களால் அவர் குறிப்பிடப்பட்டார்.

மதுரைப்பிள்ளை ரங்கூனில் இருந்து வெளிவந்த ரஞ்சித்போதினி, நாகை நீலலோசனி, சுதேசி பரிபாலினி, பாண்டியன், ஸைபுல் இஸ்லாம் போன்ற இதழ்களின் புரவலராக இருந்தார். அயோத்திதாச பண்டிதர் நடத்திவந்த தமிழன் இதழுக்கும் பொருளுதவி செய்தார்.

மதுரைப்பிள்ளை தமிழ் நாடகங்களை வளர்க்கவும் உதவினார். ரங்கூனில் கலை நிகழ்ச்சிகள் நடத்த 'மதுரைப்பிள்ளை அரங்கு’ என்ற பெயரில் ஒரு கலையரங்கு கட்டினார். கலை நிகழ்ச்சிகள் நடக்காத நாட்களின் இரவில் சிறுவர்கள் படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மதுரைப்பிள்ளை தமிழகத்திலிருந்து ரங்கூனுக்குக் கூலிகளாகச் சென்ற மக்கள் தங்குவதற்காக பார்க் தெருவில் ஒரு சத்திரம் கட்டினார். அதற்கு 'ரெஸ்ட் ஹவுஸ்' என்று பெயரிட்டார். இந்திய அல்லது தமிழக ஏழைகள் எவரும் இலவசமாகத் தங்கிக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. மதுரைப்பிள்ளை ரங்கூன் டம்ரின் மருத்துவமனையை விரிவுபடுத்தினார். அந்தக் கட்டடத்தின் பெயர் மதுரைப் பிள்ளை ப்ளாக். ரங்கூன் முக்கிய வீதிகளில் ஒன்றான ஸ்ட்ரான்ட் தெருவில் குடிநீர்க் குழாயை ஏற்படுத்தினார். மதுரைப்பிள்ளை ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்தினார். அது ராயபகதூர் பா.மா.மதுரைப்பிள்ளை ஹைஸ்கூல் என்றழைக்கப்பட்டதாகத் தமிழன் இதழ் கூறுகிறது (டிசம்பர் 20, 1911). இப்பள்ளி ரங்கூன் மாண்கமரி தெருவிலிருந்ததாக சுதேசமித்திரன் கூறுகிறது. இதை ரங்கூன் கவர்னர் திறந்துவைத்தார். தொடர்ந்து மதுரைப்பிள்ளை பிற பள்ளிகளுக்கும் உதவினார்

பிரிட்டிஷ் வேல்ஸ் இளவரசர் தம்பதிகள் ரங்கூன் சென்றபோதும் (1905) இந்திய வைஸ்ராய் சென்றபோதும் (1908) விரிவான வரவேற்பினை அளித்தார். 1911ம் ஆண்டு இந்தியா வந்த பிரிட்டிஷ் இளவரசர் கலந்துகொண்டபோது அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் மதுரைப் பிள்ளையும் ஒருவர்.

பறையர்களில் பிள்ளையும் உண்டு.///

தெரிவு:சக


 kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:

kanmani tamil

unread,
Oct 31, 2025, 10:53:53 PM10/31/25
to vallamai
ஒரு ஒப்பற்ற கடமைவீரர்:
போபால் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் தஸ்தகீர்

///நினைவிருக்கிறதா..
1984-டிசம்பர் 3-ம் தேதி...??

போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'தஸ்தகிர்'என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி.

போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோவில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார்.

அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார்.

எப்படியாவது லக்னோ To மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது.

ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய
பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள்.

கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக் காட்சி நிலைகுலைய வைத்தது.

பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார்.

அவரை ஓரமாக நகர்த்திப் போட்டுவிட்டு, எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கினார்.

அதையும் மீறி வரும் ரயில்கள் ஜன்னலை மூடிக் கொண்டு போபால் ஸ்டேஷனில் நிற்காமல் வேகமாகப் போய் விடுமாறு அறிவுறுத்தினார்.

மூக்கிலும் வாயிலும் வழிந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டு; இரவு முழுவதும்
விழித்திருந்து வேலை பார்த்தார். அந்த இரவு விடிந்தது.

அடுத்த நாள் சிக்னல் அறையைத் திறந்தபோது, ஸ்டேஷன் மாஸ்டர் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் சிக்னல் அனுப்பும் கருவியை ஒரு கையால் பிடித்தபடி கிடந்தார்.

அவர் மட்டும் இல்லை எனில், போபால் விஷ வாயுக் கசிவின் மரண எண்ணிக்கை இன்னும் சில ஆயிரங்கள் கூடியிருக்கும்.

தஸ்தகிர் போன்ற தேச வீரர்களின் தியாகம் ஏனோ அங்கீகரிக்கப்படுவதும் இல்லை. மக்களுக்கு ஞாபகம் இருப்பதும் இல்லை.///


தெரிவு:சக

On Thu, 30 Oct 2025, 9:25 am

kanmani tamil

unread,
Nov 1, 2025, 10:20:39 PM11/1/25
to vallamai
மதுரை குஞ்சரத்தம்மாள்: 

தாய்மைக்கு உன்னதமான எடுத்துக்காட்டு...

///தெரியுமா?

தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம்...

1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது.

கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது.

பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது.

அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம்மாவினுடையது.

குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி. மதுரையில் கொடிகட்டிப் பறந்த தாசி..

பெரும் செல்வச் செழிப்பு - மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது.

வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இருந்த இரண்டு பெரும் வீடுகளும் அவளுடையவை தான்.

தாது வருடம் துவங்கிய இரண்டாவது வாரத்தில் அந்த முடிவினை எடுத்தாள்.

கொடும் பஞ்சத்தில் மக்கள் கஞ்சிக்கு வழியின்றி, கணக்கின்றிச் சாவதைப் பார்த்து - வேதனையால் துடித்து தினமும் கஞ்சி காய்ச்சி ஊற்றத் துவங்கினாள்.

பெரும் வட்டையில் காய்ச்சிய கஞ்சியை விசாலமான தனது வீட்டுத் திண்ணையில் வைத்து அவள் ஊற்றும் செய்தி ஊரெங்கும் காட்டுத் தீ போல் பரவியது..

வடக்கு ஆவணி வீதியை நோக்கி மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தனர்.

இவளுக்கு எதற்கு இந்த வேலை? சொத்தையெல்லாம் விட்டுட்டு தெருவுக்கு வரப்போறா என்று பெருந்தனக்காரர்கள் பேசிக் கொண்டனர்.

அவளின் செய்கை அவர்களை கூசச் செய்தது - ஆனால், கஞ்சி ஊத்தும் செய்தி கேட்டு மக்கள் வந்து கொண்டேயிருந்தனர்.

அந்தக் கூட்டத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

பரட்டைத் தலையும் எலும்பும் தோலுமாக துணியென்று சொல்ல முடியாத ஒன்று இடுப்பிலே சுற்றியிருக்க குழந்தைகளைத் தூக்கியபடி வரிசை, வரிசையாக வந்து கொண்டிருந்தனர்.

ஒரு வட்டையில் துவங்கியது, மூன்று வட்டையானது, அதற்கு மேல் அதிகப்படுத்த முடியவில்லை.

தினமும் ஒரு வேளைக் கஞ்சி ஊற்றப்பட்டது - அந்தக் கஞ்சியை வாங்க, காலையிலிருந்தே கால்கடுக்க நின்றனர்.

தேவையின் பயங்கரம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதபடி இருந்தது - ஆனாலும், அவள் அடுப்பிலே விறகுகளைத் தள்ளி தன்னம்பிக்கையோடு எரித்துக் கொண்டிருந்தாள்.

தாது வருடத்தின் ஆறாவது வாரத்தில் தான் கலெக்டர் கஞ்சித்தொட்டியைத் திறக்க முன் வந்தார்.

ஒரு வகையில் அதற்கு குஞ்சரத்தின் செயல்தான் காரணம்..

நகரில் மூன்று இடங்களில் அரசு கஞ்சித்தொட்டியைத் திறந்தது.

நகரின் மொத்தப் பசிக்கு குஞ்சரத்தின் அடுப்பே கதி என இருந்த நிலைமை கொஞ்சம் மாறியது.

ஆனாலும், தாது வருடம் முழுவதும் குஞ்சரத்தின் அடுப்பு எரிந்தது.

பதிமூன்று மாத காலம் எரிந்த அடுப்பு, எல்லாவற்றையும் எரித்தது.

அவள் தனது வாழ்க்கை முழுவதும் சேமித்த சொத்துக்களை உலையிலே போட்டாள்.

கல் பதித்த தங்க நகைகள் - வெள்ளி நகைகள் - முத்துக்கள் - காசு மாலை -மோதிரம் - ஒட்டியாணம், தோடு-ஜிமிக்கி எல்லாம் கஞ்சியாய் மாறி தட்டேந்தி நின்ற நீண்ட வரிசைக்குப் பசிப்பிணி தீர்த்தது.

தொடர்ந்து எரிந்த அடுப்பின் புகையடித்து கரி படிந்திருந்த இரண்டு பெரிய வீடுகளும் விற்கப்பட்டு கஞ்சியாய் மாறியது.

தாது கழிந்த இரண்டாவது மாதத்தில் அவள் அடுப்பு அணைந்தது.

அவள் ஓட்டு வீட்டிற்குள் படுத்த படுக்கையானான்.

யாரைப் பற்றிப் பேச - யாரிடமும் எதுவும் இல்லாத கொடும் பஞ்சத்தில் கூட குஞ்சரத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசினார்கள்.

அவள் முகம் மலர்ந்திருந்தது - தாய்மையின் பூரிப்போடு அவள் படுத்துக்கிடந்தாள்.

ஒரு நாள் மலர்ந்த முகத்தோடு - விடைபெற்றாள் அந்தத் தெய்வத்தாய் - தங்கள் வீட்டில் நடந்த சாவாகத்தான் நகரவாசிகள் பலரும் பார்த்தார்கள் அவர் இறப்பை.

சின்ன ஓட்டு வீட்டிலிருந்து குஞ்சரத்தாயை வெளியில் தூக்கிய பொழுது வடக்கு ஆவணி வீதி - கொள்ள முடியாத அளவு கூட்டம் நின்றது.

கோவில் திருவிழாக்களைத் தவிர மதுரையில் மனிதர்கள் கூடிய மிகப்பெரிய கூட்டம் இது தான் - என்று கலெக்டர் தனது குறிப்பிலே எழுதி வைத்தார்.

நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் அவளின் ரத்தமென நினைத்து நினைவுகளின் வழியே கட்டிப் புரண்டு கதறியழுதனர்.

அவள், நாதியற்றவர்களின் பெரும் தெய்வமானாள் - எண்ணிலடங்கா மனிதக் கூட்டம் அந்தத் தெய்வத்தை நாள்தோறும் வணங்கிச் செல்ல வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள உள்சந்துக்கு அலையலையாய் வந்து கொண்டிருந்தது.

அவளுக்கு எதைப் படையலிட்டு வணங்குவது எனத் தெரியாமல் தவித்த பொழுது..

சலங்கையைப் படையிலிட்டு வணங்கி தெய்வமாக்கிக் கொண்டனர். மாமதுரை மக்கள்.///


தெரிவு:சக

kanmani tamil

unread,
Nov 3, 2025, 1:31:12 AM11/3/25
to vallamai
வேலூர் CMCமருத்துவ மனையை நிறுவிய பெண் மருத்துவர் ஐடா ஸ்கடர்:

1884 ஆண்டு நம் நாட்டில் கடுமையான பஞ்சம். பட்டினி சாவு சுமார் 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத நிலைமை..!!

அதனால், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் நமக்கு மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக கப்பலில் இந்தியா வந்தன. அப்படி நம்முடைய ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான். இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர்..!

ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது. ஐடா கதவை திறக்கிறார். ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்... உதவி வேணும் உடனே வாங்க" என்று பதறுகிறார்..!

ஐடாவோ, "நான் டாக்டர் இல்ல என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம் இருங்க அவரை எழுப்பறேன்" என்கிறார்.

"இல்லம்மா. என் மனைவிக்கு 14 வயசு தான் ஆகுது. நாங்க பிராமணாளுங்க பெண்ணை ஒரு ஆம்பள தொட அனுமதி இல்லை" என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

கொஞ்ச நேரத்தில் ஒரு முஸ்லிம் நபர் கதவை தட்டுகிறார். மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார். ஐடா தன் தந்தையை பற்றிக்கூற, "வேண்டாம்மா... நாங்கள் இஸ்லாமியர்கள்... எங்க வீட்டு பொண்ணை ஆண்கள் பார்க்கவே கூடாது" என்று அவரும் சோகத்துடனே திரும்பிவிடுகிறார்.

அந்த பெண்களுக்கு என்ன ஆச்சோ என்று இரவெல்லாம் பதட்டத்துடன் துடித்து பதறுகிறாள் ஐடா... மறுநாள் காலை அந்த கர்ப்பிணிகளின் சடலங்கள், தன் வீட்டை கடந்து கொண்டு செல்லப்படுவதை பார்த்து அதிர்ந்து போய், தேம்பி தேம்பி அழுகிறாள் ஐடா.

"என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்க மாட்டாங்களாம், ஆனால் பெண்ணுக்கு பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்? இந்த நாட்டில் பெண்களைப் படிக்க விடவில்லை என்றால் என்ன, நான் படித்துவிட்டு வந்து இந்த பெண்களைக் காப்பாற்றுவேன்" என சபதமேற்று அமெரிக்கா சென்று படிக்கிறார். டாக்டராகிறார்..!

இதனிடையே, சக நண்பர் ஒருவர் ஐடாவை காதலிக்கிறார். ஆனால் ஐடா அந்தக் காதலை நிராகரிக்கிறார். மருத்துவம் படித்து முடித்ததுமே அமெரிக்காவிலேயே நல்ல வேலை வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஐடா அதையும் நிராகரிக்கிறார். தமிழகத்தில் இறந்து போன அந்த கர்ப்பிணிகளின் சடலங்கள் மட்டுமே அவர் கண்முன் வந்து வந்து போயின..!!

ஆனால், வெறும் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு பேரை தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியும் என்று நினைத்து, ஒரு ஆஸ்பத்திரி தேவை என்பதை உணர்கிறார். பல நாடுகளில் இந்தியாவின் அவலத்தை சொல்லி பிச்சை எடுக்காத குறையாக, நிதி உதவி கேட்கிறார். ஓரளவு நிதியும் சேர்கிறது...!

இனி ஒரு கர்ப்பிணியைக் கூட சாக விடமாட்டேன் என்ற உறுதியுடன் 1900-ம் ஆண்டு, ஜனவரி மாதம், தமிழகத்தில் மீண்டும் கால் பதிக்கிறார் ஐடா.

ஆஸ்பத்திரி கட்டும் பணியை ஆரம்பிக்கிறார். படாதபாடு பட்டு, இறுதியில் 40 படுக்கை வசதியுடன் அந்த மருத்துவ மனை ஒருவழியாய்க் கட்டி முடிக்கப்பட்டு விட்டது.

பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடமில்லாத நேரத்தில், பெண்களுக்காகவே ஒரு மருத்துவமனையைக் கட்டி முடித்தார் இளம்பெண் ஐடா!

அதுதான் ஆசியாவிலேயே தனிப்பெருமை வாய்ந்து; நூற்றாண்டையும் கடந்து இன்றும் பிரம்மாண்டமாய் நிற்கும் வேலூர் "சிஎம்சி" ஆஸ்பத்திரி! 

ஐடாவின் பணி இத்துடன் முடியவில்லை. அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி, உங்கள் வீட்டு இளம்பெண் பிள்ளைகளை படிக்க அனுப்புங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடினார். இறுதியில் 5 இளம்பெண்களை மட்டுமே அவரால் திரட்ட முடிந்தது. அவர்களுக்கு மருத்துவ பயிற்சி தந்து, முறைப்படி தேர்வு எழுதி, தேர்ச்சியும் பெற வைத்தார் ஐடா..!

இவர்கள் தான் நம் தமிழகத்தின் முதல் 5 நர்ஸ்கள்..!

நம்முடைய பெண்கள் மருத்துவம் படிக்க விதை போட்டதே, இந்த ஐடா தான் என்பதை எத்தனை பேர் நன்றியுடன் இன்று நினைத்துப் பார்க்கிறார்களோ தெரியவில்லை......

ஆனால், ஒரு பெண் தனி ஆளாக நின்று ஏற்றிய மெழுகுவர்த்தி, இன்று பிரகாசமாக, உலகத் தரத்தோடு, வேலூரில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு உயிர் தந்து கொண்டுமிருக்கிறது..!


தெரிவு: சக 

Raju Rajendran

unread,
Nov 3, 2025, 2:23:15 AM11/3/25
to vall...@googlegroups.com
காமத்தை ஆற்றி பசியையும் ஆற்றிய பெருந்தகை.


"மதுரையில் கொடிகட்டிப் பறந்த தாசி."
2000 ஆண்டுகளுக்கு முன் புதையுண்ட பாம்ப்பே நகரில் தாசிகள் வீட்டுக்குமுன் தெருவில்  'இலிங்க' உருவம் வரைந்திருந்துவைத்துள்ளனர் என்பதை இன்றும் காணலாம்

ஞாயி., 2 நவ., 2025, 7:50 AM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Nov 6, 2025, 5:31:55 AM11/6/25
to vallamai
சாந்தி கியர்ஸ் நிறுவனர் சுப்பிரமணியம்:

///ததும்பாத நிறைகுடம்: பத்மஸ்ரீ விருது சூட்டிய மகுடம்!

ஒருவர் செய்த சமூக சேவைக்காக, அவர் இறந்த பிறகு அவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. காரணம் வேறில்லை. இருக்கும் போது கொடுத்திருந்தால் அவர் ஏற்றிருக்கமாட்டார் என்பது தான். பெருமிதத்துக்குரிய இந்த அறிமுகத்துக்குச் சொந்தக்காரர்; சாந்தி கியர்ஸ் நிறுவனர் சுப்பிரமணியம். கடந்த டிச.,11 அன்று அவர் மறைந்த பின்புதான், அவர் செய்த சமூகசேவை, ஊர், உலகமெல்லாம் பேசப்பட்டது.

பொறியியல் தொழில்நுட்பத்தில்... சுப்பிரமணியம் வித்தகர். பி.எஸ்.ஜி.,தொழில் நுட்பக் கல்லுாரியில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டே, சிறிய அளவில் லேத் அமைத்து, படிப்படியாக முன்னேறி, சாந்தி கியர்ஸ் என்ற கியர் நிறுவனத்தை உருவாக்கி, உலகின் முதல் தரமான கியர் நிறுவனமாக உச்சம் தொட வைத்தவர். கோவையின் 'கியர்மேன்' என்று தொழிலாளர்களால் கொண்டாடப்பட்டவர்.

பல கோடி ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த நிலையில், தனக்குக் கிடைத்த செல்வத்தைப் பகிர்ந்து வாழ நினைத்து சமூகசேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்  சுப்ரமணியம். சாந்தி கியர்ஸ் பங்க்கில் பெட்ரோல், டீசல் போட்டால், வண்டிக்கு எந்தப் பிரச்சினையும் வராது; ஒரு துளி அளவு குறையாது என்பது கோவை மக்களின் நம்பிக்கை மட்டுமில்லை; என்றும் மாறாத உண்மை. பத்து ரூபாய் இருந்தால் காலையில் பசியாறிவிடலாம்.

ஒரு ரூபாய்தான் ஒரு இட்லி. மதியம் வயிற்றையும் மனதையும் நிறைக்கும் சாப்பாடு- வெறும் 18 ரூபாய்தான். ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வந்தபோது, எல்லோரும் விலையை ஏற்றியபோது; அந்த வரியையும் தன் பங்கில் ஏற்று; சாப்பாட்டின் விலையைக் குறைத்தவர். வாங்கிச் சாப்பிடும் வசதியே இல்லாதவர்கள் பல நுாறு பேருக்கும் தினமும் இரண்டு வேளை அன்னமிட்ட அண்ணல்.

அதிகாலையில் சாய்பாபா காலனியில் மகனிடம் 20 ரூபாய் வாங்கிக்கொண்டு அங்கிருந்து பஸ் ஏறி சாந்தி கியர்ஸ் வந்து; காலையும், மதியமும் இலவச உணவை வாங்கிச் சாப்பிட்டு விட்டு, இரவில் தங்குவதற்கு மட்டும் வீட்டுக்குப் போகும் ஒரு மூதாட்டி அவர். கடந்த ஆண்டில் சுப்பிரமணியம் இறந்தபோது, அவர் கதறிய கதறல் தான் சுப்பிரமணியம் வாழ்ந்த வாழ்க்கைக்கான அடையாளம்.

மருந்துகளுக்கு 20 சதவீதம் சலுகை, மூன்றில் ஒரு பங்கு கட்டணத்தில் ஸ்கேன், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா என்று வெளியுலகிற்குத் தெரிந்து அவர் செய்த சேவைகளை விட, பறவைகளுக்கான பழத்தோட்டம், கிராமங்களுக்குத் தரமான தார்ச்சாலை என்று யாருமறியாத சேவைகளின் பட்டியல் வெகுநீளம். அதனால் சுப்ரமணியத்துக்கு விருது கொடுத்ததைக் கொண்டாடுகிறது கோவை.

பத்மஸ்ரீ விருது சுப்பிரமணியம் போன்ற மாமனிதர்களுக்குத் தரப்படுவதன் மூலமாக; மேலும் கவுரவம் பெற்றிருக்கிறது. இப்போதும் கூட இந்த விருதை அவரது குடும்பத்தினர் வாங்கியிருந்தாலும் அதைப் பற்றிப் பெருமையாக ஒரு வார்த்தை சொல்லவும் தயாராக இல்லை. சாந்தி கியர்ஸ் குடும்பம்... என்றைக்கும் ததும்பாத நிறைகுடம்!

தினமலரில் வந்த பதிவு///


தெரிவு:சக

kanmani tamil

unread,
Nov 6, 2025, 11:20:19 PM11/6/25
to vallamai
பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய IAS அதிகாரி:

பின்வரும் உரையாடல்கள் பதிவரின் கற்பனை தான்; ஆனாலும் அந்த ஆட்சியரின் ஆளுமை பெரிது என்பதை மறுக்க முடியாது. 

/// "இந்த ரேணுராஜ் IAS இருக்காளே, சரியான இம்சை தலைவரே...!"

"இன்னாவாம்...?" என்கிறார்... முதல்வர்... 

"இன்னான்னு கேக்கறீங்க? மூணாறு டிஸ்ட்ரிக்ட்ல அவ என்னென்ன பண்ணி வெச்சுருக்கா தெரியுமா...?"

"ஏன்...ஏதாச்சும் லஞ்சம் வாங்கினாளா..?"

"அப்படி இருந்தாத்தான் பரவால்லயே..?"

"அப்புறம் என்னதான்யா பண்ணுனா..?"

"மூணாறுல விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் யாரோடதா இருந்தாலும் சரி, எந்தக் கட்சியோட ஆதரவு இருந்தாலும் சரி, ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்காரனுங்களா இருந்தாலும் சரி... எவனுக்கும் பயப்படாம எல்லாத்தையும் இடிச்சுத் தள்ளிருக்கா.!"

"என்னய்யா சொல்றீங்க...?"

"அட ஆமா தலீவரே,... வேலைக்கு சேர்ந்த 9 மாசத்துல 90 ஆக்கிரமிப்புகள அகற்றி க்ளீன் பண்ணிருக்கா..! இதுமட்டுமா? முறைகேடாக நிலம் வாங்கினவங்க எல்லார் மேலயும் நடவடிக்கை எடுத்துட்டிருக்கா..!"

"விடு...எதிர்க்கட்சி காரனுங்க எவ்ளோ இடம் வளைச்சுப் போட்டுருப்பானுங்க..?"

"ஐயோ தலீவரே பாதி இடம் நம்ம கட்சிக்காரனுங்க வாங்கிப்போட்டது..!"

"அய்யயோ..!"

"கேட்டாக்க, இயற்கை எழில் கொஞ்சும் மூணாறு பகுதியில் நான் சப் கலெக்டராக இருக்கும் வரை அதன் அழகைப் பாதுகாக்க வேண்டியது என் கடமை..!ன்னு சொல்லிட்டு திரியுறா..!"

"இவள என்ன பன்னலாம்..? பிரைவேட் ப்ராப்பர்டி ஒன்னு விட மாட்டா போலயே..?"

"அய்யோ நீங்க வேற..பிரைவேட் மட்டுமில்ல, 'மூணாறில் ஓடும் முத்திரா ஆற்றின் கரையில் கட்டப்பட்டு வரும் பஞ்சாயத்து அலுவலகம் கட்டிடம் நதிக்கரை பாதுகாப்பு விதிகளை மீறி உள்ளது..' அப்படின்னு சொல்லி கவர்ன்மென்ட் பில்டிங்கையும் இடிச்சுத்தள்றா...!"

"கவர்ன்மென்ட் பில்டிங்க இடிக்குறான்னு...கேஸ் போட வேண்டியதுதானே..?"

"போட்டோமே...ஏன்டா அந்த பொண்ணு இயற்கைக்கு நல்லதுதானே பண்றா போங்கடா...ன்னு கோர்ட் நம்ம அரசு மேல காறி துப்பிருச்சு..!"

"பெரிய இயற்கை ஆர்வலரா இருப்பா போலயே...!"

"என்னவா வேணா இருந்துட்டு போவட்டும்..! மொதல்ல அவளை அங்க இருந்து தூக்குங்க..!"

"உடனேவா..?"

"ஆமா தலீவரே...விஷயம் சீரியஸ்..."

"ஏன்...?"

"நம்ம இடுக்கி தொகுதி முன்னாள் எம்.பி... அங்க மூணாறுல ஒரு 20 ஏக்கர் பட்டா போட்ருந்தாரு..."

"அடப்பாவி... அவன் அங்கேயும் போயிட்டானா..?"

"ஆமாமா... அந்த பட்டா முறைகேடானது ரத்து பண்ணிட்டா இந்த ..!"

"அடங்கோவ்....நம்மாளுங்க அவளை ஏதும் பண்ணலியா..?"

"பண்ணானுங்களே..! ஏன் நம்ம... CPM எம்எல்ஏ... பொதுக்கூட்ட மேடையிலேயே அவளை அசிங்க அசிங்கமா வெச்சு செஞ்சாருல்ல...?"

"ஆமாமா நா கூட அந்த வைரல் வீடியோ பார்த்தேன்...' IAS படிச்சா பெரிய அறிவாளின்னு நெனைப்பா...? நாட்டை இவதான் காப்பாத்த போறாளா..அறிவுகெட்டவ...'ன்னு இஷ்டத்துக்கு பப்ளிக் முன்னாடியே திட்டி விட்ருக்கான்... அந்த வீடியோ தான் செம்ம வைரல்..."

"தூக்கிருங்க தலைவரே..!"

அடுத்தநாள் ட்ரான்ஸ்ஃபர் அறிவிப்பு வருகிறது.

"தேவிகுளம் சப் கலெக்டர் ரேணு ராஜ் நிர்வாகத் துறையின் செயலாளராக மாற்றம் செய்யப்படுகிறார்... உடனடியாக அவர் தேவிகுளம் விட்டு வெளியேற வேண்டும்..!"

தேவிக்குளத்தில் இதுவரை இயற்கை வளத்தைப் பாதுகாக்க எண்ணிய 16 IAS அதிகாரிகள் அங்கே தாக்குப்பிடிக்க முடியாமல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்... ஆட்சியில் மட்டும் 5 IAS அதிகாரிகள். ரேணுராஜ் ஆறாவது.

தேவிகுளத்தின் சப் கலெக்டராக கடைசி நாள் பணி.

டிரான்ஸ்பர் செய்யப்பட்டு வேறு பணிக்குச் செல்லும் அந்தக் கடைசி நாளில் கூட அதிரடியாக எவரும் செய்யாத சம்பவத்தை செய்கிறார் ரேணு.

"1999 ஆம் ஆண்டு முறைகேடாக வழங்கப்பட்ட 2.5 ஏக்கர் கொண்ட 4 நிலங்களின் பட்டாக்களை ரத்து செய்கிறேன்..!" என்று உத்தரவிட்டு கையெழுத்து இட்டு, மூணாறின் கடைசி ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு வெளியேறுகிறார் ரேணு. அது நான்கும், ஆளும்கட்சியின் முக்கிய வருவாய்க்குரிய இடங்கள்.

She Fighted till her last day of Duty.

மூணாறு... மாற்றப்பட்ட  அதிகாரிகள் பதினாறு...
ரேணுராஜ் அதில் ஆறு...
இருந்தாலும் காலம் சொல்லும் 
அவள் பேரு...
---------------
குறிப்பு:
நம் குழந்தைகளிடம் இதுபோல் சொல்லி வளர்க்க வேண்டிய லிஸ்ட்கள் நிறைய உண்டு. 

"நா ஏன் reels போடணும் மம்மி..?"

"அப்பதான்டா கண்ணு நிறைய்ய லைக்ஸ் வரும், பாலோவர்ஸ் வரும்..பேமஸ் ஆயிடுவ...பணம் கிடைக்கும்..."

இது எப்படி இருக்கிறது...?

"நா ஏன் மம்மி IAS ஆகணும்...?"

"இந்த நாட்டுக்காக நாம ஏதாவது செய்யணுமில்லையா..? அப்பதான் ரேணுராஜ் மாதிரி காலம் உன்னோட பேரைச் சொல்லும்டா கண்ணு..!"

இதுவும் எப்படி இருக்கிறது....?!!!
----------------------
Writer Charithraa's///

https://www.facebook.com/share/p/14QVM2sptRh/ 

தெரிவு: சக

🙏

சக 


</div

kanmani tamil

unread,
Nov 8, 2025, 9:55:10 PM11/8/25
to vallamai
பெண் உரிமைக்குப் போராடி; இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியாகப் பணியில் அமர்ந்து; ஆணாதிக்க விதியை உடைத்த முதல் பெண்மணி சி.பி.முத்தம்மா


/// ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் என்ற சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுத ஆசைப்படும் பல இளம் பெண்கள் இந்தப் பெயரை கேள்விப்பட்டிருக்கக் கூடுமா என்பது டவுட் தான். ஆனால் மூடத்தனத்தினால் எழுப்பப்பட்ட ஒரு மதில் சுவரைத் தனி ஒருவராக உடைத்து; அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கும் தலைமுறைக்கு வழி அமைத்தவர் அவர்.👀

நம்ம மெட்ராஸ் விமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜிலும், மாநிலக் கல்லூரியிலும் படித்த சி.பி.முத்தம்மா (கொனெரி பெல்லியப்பா முத்தம்மா), கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில்தான் பிறந்தார். இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி அடைந்த முதல் பெண்.

இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949-இல் பணியில் சேர்ந்தவர்.

இவர் டூட்டியில் சேரும்போது வெளியுறவுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான பணி விதிகளின் படி, அந்தத் துறையில் பணிபுரியும் பெண் மேரேஜ் செய்றதுக்கு முன்னாடி கவர்மெண்டிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று சொல்லின. அது மட்டுமல்ல; திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்மணியின் குடும்பப் பொறுப்புகள் வெளியுறவுத் துறையில் அவரது பணிக்குத் தடையாக இருக்கிறதென்று அரசு கருதினால்; அந்தப் பெண் ராஜினாமா செய்ய வேண்டுமென அரசு நிர்பந்திக்கும் என்றும் அந்த விதிகள் சொல்லின.

இதைப் போன்ற விதி ஆண்களுக்குக் கிடையாது. இந்தத் துறையின் இன்னொரு விதி; திருமணமான எந்தப் பெண்ணும் இந்தப் பணியில் சேரும் உரிமை தனக்கு உண்டென உரிமை கோர முடியாது என்றது. சுருக்கமாகச் சொன்னால்; இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றும் வாய்ப்பும் உரிமையும் ஆண்களுக்கு மாத்திரமே உரியது. 

25 வயதில் முத்தம்மா பணியில் சேரும்போது பணி நியமனக் குழுவின் தலைவர், ‘இந்த விதிகளை எடுத்துச் சொல்லி, வெளியுறவுத் துறையில்தான் நீ சேர வேண்டுமா?’ எனக் கேட்டபோது, ‘ஆமாம்’ எனப் பிடிவாதமாகச் சொல்லி விட்டார். அவரை அந்தப் பணியில் சேர இயலாமல் செய்யும் நோக்கத்துடன்; அந்த அதிகாரி அவருக்கு நேர்முகத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் அளித்தார். ஆனாலும் அவரது மற்ற மதிப்பெண்கள்; அவர் நினைத்த வண்ணமே வெளியுறவுத் துறையில் சேர வாய்ப்பளித்தன. 

ஆனால் அவரது பிரச்சினை அத்துடன் ஓய்ந்துவிடவில்லை. இன்னும் சொல்லப் போனால் அதற்குப் பின்னர்தான் ஆரம்பம் ஆயிற்று. ஏனெனில் அதன் பின் ஒவ்வொரு கட்டத்திலும் பலவிதமான பாலியல் பாகுபாடுகளுக்கு அவர் ஆளாக நேர்ந்தது. தொடர்ந்து முப்பது வருஷமா இத்தகைய பாகுபாட்டை எதிர்கொண்ட அவர் 1979-ம் வருஷம் பணி ஓய்வு பெறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னாடி அரசின் இந்த விதியே பெண்ணுரிமை மற்றும் சமத்துவம் ஆகியவற்றிற்கு எதிராக இருக்கிறதென்றும் பெண் என்பதாலேயே பணியில் அமர்வதற்கான உரிமை பாதிக்கப்படுவதென்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானதென்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த வி.ஆர்.கிருஷ்ணயரிடம் அரசு இந்த விதிகள் நீக்கப்படும் என உறுதி அளித்தது.

ஆக அரசு விதிகளில் இருந்த ஆணாதிக்கக் கருத்துக்களைத் தனது மன உறுதியாலும், விடாமுயற்சியாலும் உடைத்தெறிந்த முத்தம்மா. இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த அவர் டெல்லியில் தனக்கு இருந்த 15 ஏக்கர் நிலத்தை அன்னை 
தெரசாவின் அறப்பணி அமைப்பிற்கு அளித்தார். இப்போது அங்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது.❤

அப்பேர்பட்ட ரியல் அம்மணி தனது 85 வது வயதில் 2009ம் ஆண்டு காலமானார்.///

தெரிவு:சக 


Raju Rajendran

unread,
Nov 13, 2025, 11:25:51 AM11/13/25
to vall...@googlegroups.com
சிறப்பு

ஞாயி., 9 நவ., 2025, 8:25 AM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Nov 22, 2025, 11:42:42 PM11/22/25
to vallamai
பூக்கடை துரைப்பாண்டி:

எளிய வாழ்விலும் உயர்ந்த பரோபகார மனம்...
இப்படிப்பட்ட ஆளுமைகள் நம் கண் முன்னே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். 

/// விருதுநகரில் ஒரு வித்தியாசமான பூ வியாபாரி...
  
விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பூக்கடை வைத்து நடத்தி வரும் துரைப்பாண்டி, தினமும் வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டி விட்டு செல்லும்போது, மறக்காமல் கடைக்கு வெளியே 4 மாலைகளை கட்டி தொங்க விட்டுச் செல்கிறார். கிட்டத்தட்ட 15 வருடங்களாக இந்தப் பழக்கம் தொடர்கிறது. ஏன்..? 

இரவு நேரங்களில் அப்பகுதிகளில் ஏதேனும் மரணங்கள் நிகழ்ந்தால், அந்நேரத்தில் இறந்தவர் உடலுக்கு மரியாதை செலுத்த மாலைகள் கிடைப்பது பெரும் சிரமம். மாலைகளுக்காக இறந்தவரின் உறவினர்கள் நடு இரவில் அலைந்து திரிவதை தவிர்க்கவே இந்த ஏற்பாடாம். எந்த பிஸியான நாட்களானாலும், வியாபாரத்திற்காக தொடுக்கும் மாலைகளில் கண்டிப்பாக 4 மாலைகளை இரவில் விட்டுச் செல்வதற்காக முன் கூட்டியே எடுத்து வைத்துவிடுகிறார் துரைப்பாண்டி. தகவல் அறிந்து துரைப்பாண்டியனிடம் பேசினோம்.

“தினமும் பூ வியாபாரத்தில் ஒரு நாளைக்கு 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை கிடைக்கும். இதை வைத்துதான் குடும்பத்தை கவனித்து வருகிறேன். திருமணம் போன்ற முகூர்த்த நாட்களில் கொஞ்சம் கூடுதலாக பணம் கிடைக்கும். விருதுநகர் ரொம்ப சின்ன ஊர். எந்த பொருள் வாங்கனும்னாலும் பக்கத்தில் இருக்கும் மதுரைக்கு போய்தான் வாங்கணும்.

ராத்திரி 10 மணிக்கு மேல் எந்த கடையும் திறந்திருக்காது. ரொம்ப அவசரம்னா இரவில் மதுரை போய்தான் அந்த சாமான்கள் வாங்கிட்டு வரணும். விருதுநகரில் ராத்திரி 10 மணிக்கு மேல் யாராவது இறந்துவிட்டால் அவர்களது உடலுக்கு போடுவதற்கு மாலை கிடைக்காது. உயிர் போன பிறகு உடலுக்கு மாலை போட்டு விளக்கு ஏற்றி வைப்பதுதான் அந்த உயிருக்கு செய்யும் முதல் மரியாதை. ஆனால் மாலை கூட இல்லாமல் மறு நாள் காலை பூக்கடை திறக்கும் வரை வெத்து உடம்போடு காத்திருப்பது பெரிய கொடுமை. ஒருமுறை பேருந்தில் பயணத்தில் எனது நண்பர்கள் இதைச் சொல்லி வருத்தப்பட்டனர். அது என் மனதில் வருத்தத்தை தந்தது. கூடவே ஒரு யோசனை தோணுச்சு. அதுதான் இப்படி 15 வருடமா செய்து வர்றேன். தினமும் பூ வியாபாரம் முடிந்து வீட்டுக்கு கிளம்பும்போது தனியாக 4 மாலைகளை கடைக்கு வெளியே தொங்க விட்டுட்டு போவேன். ராத்திரி நேரத்தில யாராவது இறந்து போயிட்டா மாலை வாங்குவதற்கு பூக்கடைகளை தேடறவங்க என் கடையில் தொங்குற மாலைகளில் தேவையானதை எடுத்துப் போய் பிரேதத்துக்கு போடுவாங்க.

ஆரம்பத்தில இந்த விஷயம் தெரியாததால் காலையில பார்க்கும்போது மாலைகள் அப்படியே இருந்தது. பிறகு பலருக்கும் இது தெரிஞ்சதால் இப்ப பெரும்பாலும் மாலைகள் இருக்காது. முகம் தெரியாத ஒரு மனிதரின் உடலுக்கு நாம தொடுத்த மாலையால மரியாதை கிடைச்சதே என்ற திருப்தி அன்னிக்கு முழுக்க மனசில இருக்கும். ராத்திரி மாலையை எடுத்துட்டு போன சில பேர் காலையில் வந்து மாலைக்கு காசு கொடுப்பாங்க. வாங்க மறுத்துடுவேன்.

தொங்கவிட்டுப் போன மாலைகளில் ஏதாவது மிச்சம் இருந்தா அதை மறுநாள் வியாபாரத்துக்கு வச்சுக்க மாட்டேன். முதல் காரியமாக அதை குப்பை தொட்டியில் தூக்கிப்போட்டுட்டு புதுசா மாலை கட்ட ஆரம்பிச்சுருவேன். என்னோட ஆத்ம திருப்திக்காக இதை 15 வருசமாக செஞ்சுக்கிட்டு வர்றேன். ஒரு மாலை 50 ரூபாய் வீதம் 200 ரூபாய் வரை ஒரு நாளைக்கு செலவாகும். காசு, பணமா சார் முக்கியம். மாட மாளிகையில பொறந்தாலும் குடிசையில் பிறந்தாலும் இறப்புங்கறது எல்லாருக்கும் பொதுவானது.

கஷ்ட நஷ்டங்களை பார்த்து கண் மூடுற மனுஷன், அவனுக்கான மரியாதை இந்த மாலை. அதை முகம் தெரியாத யாருக்கோ என்னால செய்ய முடியுது என்பதே எனக்கு ஆத்ம திருப்தி தர்ற விஷயம்” என்கிறார் சிறு புன்னகையுடன் பூ வியாபாரி துரைப்பாண்டி.

பழகியவர்களுக்கே உதவி செய்ய பர்ஸை திறக்காத மனிதர்களுக்கு மத்தியில், வருமானத்தை புறந்தள்ளி முகம் தெரியாத மனிதர்களின் மேல் அன்பை செலுத்தும் துரைப்பாண்டி பாராட்டத்தகுந்த மனிதர்தான்.

(As on 2021 November)///


தெரிவு:சக

kanmani tamil

unread,
Nov 29, 2025, 8:54:11 PM11/29/25
to vallamai
வளரும் பிஞ்சுப் பருவக் குழந்தைகளின் போற்றத்தக்க ஆளுமை...

/// வீட்டு பால்கனியிலிருந்து இந்த குழந்தைகளைப் பார்த்தேன்... கீழே அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்தார்கள்... இருபது நிமிடம் கழித்து; வீட்டை விட்டு வெளியே வந்த போதும்; அப்படியே அமர்ந்திருக்க... 'ஹோய்....school போகலயா' என பேச்சுக் கொடுத்த படியே; தள்ளி நின்று; என்ன செய்கிறார்கள் என்று பார்த்தேன்... 'நாளைக்கு தான் school' என்ற படியே மீண்டும் அவர்கள் செய்த வேலையைத் தொடர்ந்தார்கள். அருகில் சென்று; 'என்ன பண்றீங்க?' எனக் கேட்டேன்.

'ரெண்டு தெரு தள்ளி இருக்கோம்... அம்மா சாமி கும்பிட பூ பறிச்சுட்டு வரச் சொன்னாங்க. அப்ப இங்க உடைஞ்சு கொட்டிக் கிடக்குற கண்ணாடி கால்ல குத்திடுச்சு... வேற யார் கால்'லயும் குத்திடக் கூடாதுல்ல... அது தான் கண்ணாடி எல்லாம் எடுத்து ஓரமா போட்டுக்கிட்டிருக்கோம்' என்றார்கள் ❤️ ❤️ ❤️...

வெறும் கையோடு எடுக்காதீர்கள் என பதறினேன். 'பெரிய பெரிய துண்டா இருக்குறதை எல்லாம் எடுத்துட்டோம்... இந்த சின்ன தூளா இருக்குறதை கல் வச்சுடுவோம்' என பதில் வந்தது...

ஒரு நொடி மட்டும் நிமிர்ந்து பார்த்து பதில் சொல்லி விட்டு; வெறும் காலோடு வெயிலில் அமர்ந்து; கண்ணாடித் துண்டுகளை அப்புறப் படுத்துவதிலேயே மும்முரமாக இருந்தவர்களுக்கு கொஞ்சம் உதவி செய்து விட்டு; புகைப்படம் எடுத்தேன்.

'லேட் ஆ பூ பறிச்சுட்டு; வீட்டுக்குப் போனா; உங்கம்மா திட்ட மாட்டாங்களா?' என வம்பிழுத்தேன். 'திட்டுவாங்க தான்; ஆனா இந்தக் கண்ணாடி 'லாம் யார் கால்லயாவது குத்தினா; எனக்கு வலிச்ச மாதிரி வலிக்கும்ல; அதான் ஓரமா எடுத்துப் போட்டு லேட் ஆ போறோம். அம்மா திட்டுனா பரவாயில்லை' என சிரித்தார்கள் ❤️... 

தமிழச்சி (இந்தப் பதிவு)

#படித்ததில்_பகிர்ந்தது

https://www.facebook.com/share/p/16gtNHhoZ5/

இவர்கள் எதிர்கால சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள். 

தெரிவு:சக

kanmani tamil

unread,
Dec 8, 2025, 11:05:20 PM12/8/25
to vallamai
எதிர்வரும் தலைமுறையினர்க்கு நல்ல வழிகாட்டி ஆகும் ஆளுமை...

மும்பையில் DCPஆகப் பணியாற்றும் சாதனைப் பெண்... திண்டுக்கல் அம்பிகா 

https://youtube.com/shorts/ZawRQRXWIRQ?si=C70fkWyyC-zbgQLM

தெரிவு:சக

Raju Rajendran

unread,
Dec 9, 2025, 7:32:39 PM12/9/25
to vall...@googlegroups.com


செவ்., 9 டிச., 2025, 9:35 AM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
எதிர்வரும் தலைமுறையினர்க்கு நல்ல வழிகாட்டி ஆகும் ஆளுமை...

மும்பையில் DCPஆகப் பணியாற்றும் சாதனைப் பெண்... திண்டுக்கல் அம்பிகா 

பணியாற்றுவது மும்பை சரி. எங்கு பயின்றார்?
 

kanmani tamil

unread,
Dec 12, 2025, 8:21:21 PM12/12/25
to vallamai
மாற்றி யோசித்து; நவீன உலகம் உருவாக ஏதுவாய் அறிவுப் பசி தீர்க்க அச்சு இயந்திரம் தந்த ஜெர்மானியர் குட்டன்பர்க்:


திராட்சை உற்பத்தியும் அதன் சாறெடுக்கும் இயந்திரமும் அவர் மனதைப் புது முயற்சிக்கு ஊக்கிய உண்மையை இப் பதிவு கூறுகிறது. 

அச்சு இயந்திரம் எப்படி உருவானது என்ற வரலாறு அவரை வியப்பூட்டும் சாதனையாளராகக் காட்டுகிறது. 

தெரிவு: சக

kanmani tamil

unread,
Dec 13, 2025, 6:42:44 PM12/13/25
to vallamai
இந்திய மண்ணில் பிறந்து வளர்ந்து... இந்திய மண்ணைத் தாய்நாடாக நேசித்த... யூதர்குல இந்தியத் தளபதி  Jack Farj Rafael Jacob

/// அந்த முன்னாள் இந்திய தளபதி 1971ல் இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தின் பொழுது மாபெரும் சாகசத்தைச் செய்தார். 

அவர் பெயர் Jack Farj Rafael Jacob. ரபேல் என்றால் பாதுகாக்கும் தூதன் எனப் பொருள், அந்த ரபேல் ஜேக்கப் இந்நாட்டினைக் காக்க வந்த தூதனாய் இருந்தார். அவர் புகழ் எக்காலமும் இங்கு வாழும்.

லெப்டினென்ட் ஜெனரல் தரத்தில் இருந்த அவர் அன்று காட்டிய வீரம் சிலாகிப்புக்குரியது. ரபேல் ஜேக்கப் ஒரு பாக்தாத் யூதர். ஆம் அவர் ஈராக் பக்கம் வாழ்ந்த யூத குடும்பம். 17ம்நூடு- வியாபாரத்துக்காக கல்கத்தா வந்த குடும்பத்து வாரிசு. யூதர்கள் எங்கிருந்தாலும் யூதரே; எக்காலமும் யூதரே என்பதால்; அவரும் யூத இந்தியராகவே வளர்ந்தார்.

எக்காலமும் இந்தியாவே தங்களுக்குப் பாதுகாப்பான நாடு என்பதை பார்சிக்களும் யூதர்களும் மனமார உணர்ந்திருந்தனர்.

மிகத் தேர்ந்த வீரரான அவரை அரேபியாவில் ஊடுருவ முயன்ற எதிரிப் படைகளுக்கு எதிரான படையில் களமிறக்கியது பிரிட்டன். 
ஜேக்கப் அட்டகாசமாகப் போரிட்டார். அந்த வெற்றி அவரை துனிசியாவுக்கு அனுப்பியது. 

இஸ்ரேல் வரலாற்றில் பிரிட்டிஷ் இந்திய உறவு குறிப்பிடதக்கது. காரணம் முதல் உலகப் போரிலே பிரிட்டனுடன் மைசூர், ஐதரபாத், ஜோத்பூர் படைகள் அன்றைய பாலஸ்தீனம் சென்று ஹைபா நகரை மீட்டது வரலாறு. சில ஆண்டுகளுக்கு முன் பெஞ்சமின் நேதன்யாகு அதை நினைவு கூர்ந்தார். அந்த வீரர்களின் நினைவால் அமைக்கபட்டது தான் டெல்லி தீன்மூர்த்தி பவன்.

அந்த வகையில் பாலஸ்தீனத்தைச் சுற்றி பிரிட்டிஷ் இந்தியப் படைகள் 1940களில் நின்றன‌.  அதில் தான் ஜேக்கப் இருந்தார்.
போர் முடிந்ததும் உலகின் சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுத்தது பிரிட்டன். லெப்டினென்ட் ஜெனரல் என தரம் உயர்த்தபட்ட ஜேக்கபும் அமெரிக்கா சென்றார். அன்றே பலதரப்பட்ட சிறப்புப் பயிற்சிகள் அவருக்கு வழங்கபட்டன‌. 

அப்பொழுது இஸ்ரேல் உதயமாயிற்று. உலகெல்லாம் இருந்து யூதர்கள் இஸ்ரேலுக்குச் சென்றனர். மிகச் சிறந்த தளபதியான ஜேக்கப் இஸ்ரேல் வருமாறும்; தளபதி பொறுப்பை ஏற்குமாறும் வேண்டுகொள் விடுக்கபட்டது. பென் குரியனே அழைத்தார் என்கின்றது வரலாறு. ஆனால் நான் இந்தியன் என வரமறுத்து இந்தியாவிலே இருந்தார் ஜேக்கப்.

இந்தியப் பிரிவினையும் இன்னும் பலவும் வந்த காலங்களில் ராணுவத்தின் தலைமகனாக அவர் இருந்தார். 1948 மற்றும் 1965 யுத்தங்களில் அவரின் பங்களிப்பு பிரமாதமாய் இருந்தது.

இந்நிலையில்தான் 1971 யுத்தம் வெடித்தது. அது மார்ச்சில் வெடித்தாலும் டிசம்பர் வரை நீண்டது. இரு விஷயங்கள் அதை நீட்டித்தன. முதலாவது பாகிஸ்தானின் நீர்மூழ்கிகள்... அமெரிக்க ஆதரவில் அவை பலமாய் இருந்தன. ஹாஜியினை (நீர்மூழ்கிக் கப்பல்) டிசம்பர் முதல்வாரத்தில் சோலி முடிக்கும் வரை இந்தியா கவனமாய் ஆடியது.

ஹாஜி மூழ்கடிக்கப்பட்டது என்றவுடன் அமெரிக்கா களமிறங்க முனைந்தது. அதாவது கிழக்கு பாகிஸ்தானில் இருந்த பாகிஸ்தான் படைகளுக்குத் தொழில்நுட்பத் தகவல்களை மறைமுகமாகக் கொடுக்கும் எண்ணம் இருந்தது. 

அதே நேரம் மாவோவுக்குச் சீனப் படைகளை அனுப்பி; அப்படியே நாலந்துலா கணவாயினை வெட்டிக்; கிழக்கு மாநிலங்களை இந்தியாவில் இருந்து பிரிக்கும் திட்டம் இருந்தது.

இந்தியா எப்படிப் போனால் என்ன... தன்னை மீறக் கூடாது எனும் மனப்பான்மை சோவியத்துக்கு இருந்தது. 

ஒருவகையில் போரின் போக்கு சில நாட்கள் நீண்டாலே... 1965ல் (லால் பஹதூர்) சாஸ்திரி சிக்கலானது போல் (ஒப்பந்தத்தில் கையெழுத்து இடச் சென்று மர்மமான முறையில் உயிர்விட்டது போல...);  பேச்சுவார்த்தை என இந்தியாவினை அழைத்து துரோகம் இழைத்தது போல்... வல்லரசுகளால் திட்டமிடப்பட்டது.

ஒரு வெற்றியினை விரைவாகப் பெற்றுவிட்டால்; 1965 போல் அல்லாமல்; நம்மால் பேச்சுவார்த்தைக்குச் செல்ல முடியும். வெற்றிக்குப் பிறகு... ராணுவ மேலாதிக்கத்தில் நின்று பேசினால்தான் பேச்சுவார்த்தைக்கு மதிப்பு என இந்தியா வெற்றி பெற முனைந்தது.

இப்படி உலக நெருக்குதல் அதிகமாக; மிக சில நாட்களில் போரை முடிக்க வேண்டிய நிலைக்கு வந்தது இந்தியா.
ஆனால் நிலமை சாதகமாக இல்லை.
கிழக்கு பாகிஸ்தானில் சில லட்சம் வீரர்களோடு இருந்தார் பாகிஸ்தான் ஜெனரல் நியாசி. ஆசாமி சாதரணமானவர் அல்ல; வெகு திறமையானவர்; அதே நேரம் கடுமையானவர்.
அவரை நேருக்கு நேர் எதிர்கொள்ள இந்தியாவின் படைகள் நிரம்ப யோசித்தன. அது வெற்றியினை சில மாதம் தாமதமாக்கும்; பாகிஸ்தானின் திட்டமும் அதுதான்.

ஜெனரல் மானெக்ஷா பொறுப்பை ஜேக்கபிடம் கொடுத்தார்- “ஜேக்கப் உங்களிடம் இருப்பது இந்தியாவின் பாதுகாப்பும் எதிர்காலமும்... சிறிய சொதப்பல் நிகழ்ந்தாலும் கிழக்கு பாகிஸ்தான் இந்தியாவின் பெரும் தலைவலி ஆகி விடும். நீங்கள் இதை வெற்றிகரமாக செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு”

ஜேக்கப் பொறுப்பேற்றார். அந்த வியூகம் இன்றளவும் பாராட்டதக்கது; மிக மிகத் தேர்ந்த திட்டம் அது. ஆம்; போர் நடத்தி அவகாசம் கொடுப்பதை விட; துரித கதியில் அந்த நியாசி கழுத்திலே கத்தி வைத்து விட்டால்?... சிரமம் தான்; வாய்ப்பு இல்லை தான்; ஆனால் அதைத் தவிர வேறு வழியில்லை; கால அவகாசமும் இல்லை.

டாக்காவில் நியாசி இருந்த பகுதியில் விமானப்படையால் துரித தாக்குதலை நடத்தினார். பாகிஸ்தான் ராணுவத்தை இந்தியக் கடற்படை குழப்பியது. சப்ளை இல்லாமல் பார்த்துக் கொண்டது. விமானப் படை மூலம் தாக்குதல் நடத்தியபடியே தன் அடுத்த திட்டத்தை அரங்கேற்றினார் ஜேக்கப். 

ஆம்; வங்கதேசத்தின் ஆறுகள் வழியே இந்திய கப்பலில் இருந்த வீரர்கள் டாக்காவுக்குள் புகுந்தனர். ரப்பர் படகுகளில் வங்க ஆறுகள் வழியே ஊருக்குள் புகுந்து அசத்தியது இந்திய ராணுவம்.

இந்திய சேனை எல்லை தாண்டி நிலம் வழியாக வரும் அல்லது; கப்பலில் துறைமுகம் வந்து தான் இந்திய ராணுவம் வரும் என எதிர்பார்த்த நியாசிக்கு இப்படி ஆறுகள் மூலம் வந்தது பெரும் அதிர்ச்சி.
யாருமே எதிர்பாரா அதிர்ச்சி; விடாக்கண்டன் நியாசி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஒரே நாளில் டாக்காவினைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் ஜேக்கப். பாகிஸ்தான் அரண்டது. ஆறுகள் மூலம் ஊடுருவுவது பலனளிக்காது; இதனால் நம் படை நியாசியிடம் சிக்கும் எனப் பல தளபதிகள் பின்வாங்கிய பொழுது அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் ஜேக்கப்.

நியாசி சாகசம் நிகழ்த்துவார் என எதிர்ப்பார்ப்பு இருந்தது. பதைபதைப்பான நேரம் அது. அந்நேரம் ஜேக்கப் காட்டிய வீரமே அவரின் துணிச்சலை உலகுக்குச் சொன்னது. 
1லட்சம் பாகிஸ்தான் வீரர்கள் நடுவில் இருந்த நியாசியினை தனி மனிதனாக ஆயுதம் ஏதும் இன்றிக் காணச் சென்றார் ஜேக்கப். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்... தோல்வியின் விளிம்பில் இருக்கும் எதிரிப்படையிடம் தனியாக ஆயுதமின்றிச் செல்ல எவ்வளவு தைரியம் வேண்டும்?!
'தில்'லாகச் சென்று; நியாசியினைச் சந்தித்து; அவர்கள் சிக்கியிருக்கும் நிலமையினை விளக்கினார். இனி பாகிஸ்தான் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாதபடி அவர்கள் சிக்கியிருப்பதைச் சொல்லி சாகின்றீர்களா? சரணடைகின்றீர்களா? என அவர் கேட்டபொழுது நியாசி ஆடிப் போய் இருந்தான். தனி மனிதனாக பாகிஸ்தான் ராணுவத் தலைமையகத்தில் புகுந்து அவர்களை எச்சரித்த ஜேக்கபின் வீரத்திற்கு முன்னால் நிற்க முடியாத பாகிஸ்தான் சரணடைந்தது.

சம்பிரதாயத்துக்கு டிசம்பர் 16ல் போர் முடிந்ததாகச் சொன்னாலும் 12ம் தேதியே முடித்து வைத்தார் ஜேக்கப். 
மாபெரும் வெற்றியினை அவரால் தேசம் பெற்றது. அந்நியப் படைகள் புகமுடியாமல் சட்டெனப் போரை முடித்த அவரின் வீரமும் விவேகமும் மெச்சப்பட்டது. 
மிகப்பெரும் விருதுகளும் பதவிகளும் வந்தன‌. 
கோவா மற்றும் பஞ்சாப் ஆளுநராகவும் பதவி வகித்தார்.

இந்திய இஸ்ரேல் உறவு அவரால் ஆரம்பிக்கபட்டது. மொரார்ஜி தேசாய் காலத்தில் இஸ்ரேலின் மோஷே தயானுடன் சேர்ந்து பாகிஸ்தான் அணுவுலைகளை நொறுக்கத் துடியாய்த் துடித்தார் ஜேக்கப். ஆனால் மொரார்ஜி மறுத்தார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் ஜேக்கப். 
எமர்ஜென்ஸிக்குப் பின்பு இந்திராவுக்கும் அவருக்கும் பொருந்தவில்லை. 
வாஜ்பாய் காலத்தில் மறுபடியும் இஸ்ரேல் இந்திய உறவுக்குப் பாடுபட்டார். கார்கில் சண்டையின் பொழுது முடியா வயதிலும் பல நுணுக்கங்களைச் சொன்னார். 
எதிர்ப்பு ஏவுகணைகள் இந்தியாவுக்கு வருவதில் மிகுந்த கவனமாய் இருந்தார். ஏவுகணை ராணுவவியலில் அவருக்குத் தனித் திறமை இருந்தது. கலாமுக்கும் அவருக்கும் இடையே அலுவலகத்துக்கு அப்பாலும் நட்பு இருந்தது. 
மோடி பிரதமரான பொழுது இந்நாட்டின் ஏவுகணை மற்றும் பாதுகாப்பில் கருத்துக்களை அவரிடம் கேட்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார். ...
(இடையில் சில அரசியல் தலைவர்கள் இந்த ஜேக்கப்பினை ஒதுக்கி வைத்த நிலையில்)...

 1941ல் தொடங்கிய அவரின் சேவை 2016 வரை இருந்தது. 
காந்தி காலம் தொடங்கி மோடி காலம் வரை இங்கு பெரும் சேவையாற்றியவர் அந்த ஜேக்கப். அந்த சாதனை சாமானியம் அல்ல; வரம்.
யூதனாய் இருந்தும் கடைசி வரை 92 வயதில் இறக்கும் வரை இந்தியனாய் இருந்தார். இஸ்ரேல் எவ்வளவோ கேட்டும் அங்கு செல்ல மறுத்துவிட்டார். நல்ல இந்தியனுக்கு எக்காலமும் அவர் சான்று.

இங்கு இருந்து கொண்டு... ஈழப் (பிரச்னையில் அரசியல் ஆதாயம் தேடும்) சில ஜென்மங்கள் வாழும் நாட்டில்... இங்கு இருந்துகொண்டு... வங்க தேசத்தவனுக்கும் பாகிஸ்தானிக்கும் வக்காலத்து வாங்குபவன் இருக்கும் நாட்டில்... “வா உன்னைத் தலமைத்தளபதி ஆக்குகிறேன்” எனத் தன் சொந்த இனம் அழைத்தபொழுதும்; மறுத்த அந்த உத்தமன் ஜேக்கப் மாபெரும் அதிசயமே!!!
நாட்டுப்பற்று என்பது அதுதான். 
டிசம்பர் 12 அவன் தனி மனிதனாய் லட்சம் பாகிஸ்தானியர் ராணுவத்துக்குள் புகுந்து அவர்களின் தலைவன் நியாசியினை எச்சரித்த தினம்.
அப்படி ஒரு காட்சி உலக அரங்கில் முன்பு என்றுமே நடந்ததில்லை; நடக்க வாய்ப்பே இல்லை. இன்றளவும் அந்த டாக்கா முற்றுகை எல்லா ராணுவப் பள்ளிகளிலும் பாலபாடம்... எப்படி எல்லாம் வழிகளைக் கண்டறிந்து புகவேண்டும்? முற்றுகையிட்டு நெருக்கடி கொடுத்து எதிரியினை இழுத்துவர வேண்டும் எனபதற்கான பாடம்.

இஸ்ரேலின் புகழ்பெற்ற தளபதி மோசே தயானுக்கு அடுத்து பிரசித்தியானவர் அந்த ஜேக்கப். ஆம்; இந்தியாவின் மோஷே தயான் அந்த சுத்தமான இந்தியன்.

ஆழக் கவனியுங்கள்.  அந்நிய மதமும் அந்நிய வம்சாளியும் ஆன பார்சி ஜெனரல் மனேக்ஷாவுக்கும் யூதன் ஜேக்கபுக்கும் இந்நாட்டின் அருமை தெரிந்தது. மிகச் சிறுபான்மையான தங்கள் சமூகம் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ ஒரே அடைக்கலம் இந்தியா எனும் உண்மை தெரிந்து இந்தியராக நின்றார்கள். 

இன்று இந்த தேசத்தின் அரசியல்வாதிகள் சிலர்...
சில மாயவலைகளை வீசித் தாமும் குழம்பி; தேசத்தையும் குழப்புகின்றனர்.


தெரிவு:சக

kanmani tamil

unread,
Dec 14, 2025, 6:51:46 PM12/14/25
to vallamai
தந்தைமை மிளிரும் நடமாடும் ஆளுமைகள்: 
அந்தோணி ராஜ்&
முத்துராமலிங்கம்

/// மனிதநேயம் சாகவில்லை. மாறாக ஆலமரம் போல் வளர்கிறது.
   
நேற்று மதுரையில் இருந்து ராமேஸ்வரம் பேருந்தில் (TN63 N1875) நமது அத்தனூர்டெக்ஸ் குடும்பஉறவு ஒருவர் பயணம் செய்துகொண்டிருந்தார். 

அப்போது நேரம் இரவு 10:30 மணி. ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை அடுத்து அப்துல்கலாம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றது. 

அப்போது முன்னாடி அமர்ந்திருந்த வழக்கறிஞர் படிப்பு படிக்கும் மாணவி ஒருவர் இறங்கத் தயாரானார். 

அந்த நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் யாரும் இல்லாமல் அமைதியாக இருந்தது. 

ஏதோ ஒருசில ஆண்கள் மட்டும் அங்கும் இங்கும் மதுபோதையில் நடந்தபடி இருந்தார்கள். 

இதை கவனித்த நடத்துனர் அந்த மாணவியிடம் "உன் பெற்றோர்கள் யாராவது அழைத்துச் செல்ல வந்துள்ளார்களா?" என்று கேட்டார். 

அதற்கு அந்த மாணவி "வந்துவிடுவார்கள். நான் நின்று சென்றுவிடுவேன்" என்று கூறினார். 

அதற்கு அந்த நடத்துனரோ 'அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விரைவில் வரசொல்லுங்கள்' 
என்று கூறினார். 
மாணவியும் அவ்வாறே செய்தார். 

இதை கவனித்த டிரைவர் அண்ணன் அவர்கள் பஸ்ஸை ஓரமாக நிறுத்தினார். 

'வீட்டிலிருந்து ஒருவர் வரும்வரை பஸ்ஸிலிருந்து இறங்க வேண்டாம்' என்று டிரைவர் அன்பாகவும் உறுதியாகவும் சொல்லிவிட்டார். 

பின் பயணிகளிடம் "யாருக்கேனும் அவசரம் என்றால்... இந்த மகளை ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இறக்கி விடலாம். குடும்பத்தினர் அங்கு வந்து அழைத்து செல்லட்டும். உங்கள் யாருக்கேனும் அவசரமா?" என்று கேட்டார். 
 
பேருந்தில் இருந்த அனைவரும் ஒருமொத்த குரலாக "இல்லை; இந்த பெண்ணின் குடும்பத்தினர் வந்தவுடனே செல்லலாம்" என்று சொன்னார்கள்.
  
ஒரு 10 நிமிடம் காத்திருப்புக்குப் பிறகு அந்தப் பெண்ணின் சித்தப்பா வந்தார்.

நடத்துனர் அண்ணா முத்துராமலிங்கம் அவர்கள் கோபமின்றி சிரித்த முகத்துடன்  சொன்னது; "காலம் ரொம்ப கெட்டு கிடக்குதுங்க. மத்தவங்கள குறை சொல்றத விட்டுட்டு நாம சரியா நடந்துக்கணும். பொண்ணு வருதுன்னு தெரிஞ்சு பத்து நிமிஷம் முன்னாடியே வந்து நிக்க வேண்டாங்களா? உங்க ஒருத்தர் லேட்டுனால இங்க எத்தனைபேர் காத்திருக்க வேண்டியதா போயிருச்சு பாருங்க. இங்கே இருக்கிற யாராவது ஒருத்தர் எனக்கு நேரமாச்சு அவசரமா போயாகணும்னு சொல்லி இருந்தாக் கூட; பொண்ணத் தனியா இறக்கி விட்டுட்டு நாங்க வண்டி எடுத்துக்கிட்டு போயிதாங்க இருக்கணும். 
தப்பு நடந்துச்சின்னு சொல்றதவிட தப்பு நடக்கிறதுக்கு நாமளே வழி பண்ணிக் கொடுக்கக் கூடாதுங்க". என்று கூறிவிட்டு அந்தப் பெண்ணிடமும்.
"ஒரு பத்து கிலோ மீட்டருக்கு முன்னாடியே வீட்டுக்கு தகவல் சொல்ல வேண்டாமா? நான் வர்றதுக்கு முன்னாடி வந்து நில்லுங்க அப்படின்னு... 
இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் உங்களுடைய தைரியம் மனஉறுதி எல்லாம் எதுக்கு உதவாதுமா" என்று சொல்லிவிட்டு; அந்தப்பெண் சென்றவுடன் பேருந்தில் ஏறிப் பயணிகள் அனைவருக்கும் நன்றி சொன்னார். 

பேருந்து கிளம்பியது... அந்த நடத்துனர் அவர்கள் கேமரா வைத்துக் கொண்டோ; அல்லது பிரதிபலனை எதிர்பார்த்தோ; இந்த மனிதநேய செயலைச் செய்யவில்லை. அவரின் கடமையை சரிவர செய்தார் என்பதே இங்கு நிதர்சனமான உண்மை. 

'கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே' என்பது கீதையின் பொன்மொழி. 

'நல்ல மனிதர்களைக் காலம் ஒருபோதும் அடையாளம் காட்டத் தவறாது' என்பதே இந்தப் பதிவின் பாடம். 
  
இந்த நடத்துனருக்கும் ஓட்டுனருக்கும் கொடுக்க வேண்டும் அல்லவா அரசின் உயரிய விருதுகள்!    
இவர்களைப் போன்றவருக்கு கொடுக்க வேண்டும் அல்லவா! உயர் பதவிகள்.. 
நாம் எல்லோருமே இவர்களைப்போல் இருந்துவிட்டால் நடுஇரவில்கூட பெண்கள் தனியாக சுதந்திரமாக நடந்துவரலாம்.. 
இவரின் குணங்களையும், முகங்களையும், அனைவரும் அறியட்டும் பகிருங்கள்.. 
யாரேனும் மறுபடியும் இவர்களைப் பார்த்தால் பாராட்டுங்கள். இவர்களின் செயல்களுக்கு ஊக்கம் அளியுங்கள்.

ஓட்டுனரின் பெயர் : அந்தோணி ராஜ்
நடத்துனரின் பெயர்: முத்துராமலிங்கம்..

 நம்மிடம் பகிர்ந்தவர் அத்தனூர்டெக்ஸ் குடும்பஉறுப்பினர், ராமேஸ்வரம். அந்தப்பேருந்தில் பயணித்தவர்; பெயர் வெளியிட விரும்பாதவர்)... மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்..
நன்றியுடன்..
(Aththanoortex)



தெரிவு:சக

kanmani tamil

unread,
Dec 15, 2025, 7:01:04 PM12/15/25
to vallamai
இந்தியக் கப்பற்படையின் வைஸ் அட்மிரல் நாகர்கோவில் கிருஷ்ணன்:

/// விவேகத்தோடு கூடிய வீரம் இந்தியாவுக்கு எக்காலமும் இருந்தது... உண்மையான இந்திய வீரம் என்றால் என்ன என்பதை அடிக்கடி பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் காட்டியிருக்கும் எழுச்சி மிக்க இந்தியாவின் மிகப் பெரும் வெற்றி வங்கப்போர் வெற்றி. 

1971- வங்கப்போர் என்பது ஏதோ கல்கத்தா பக்கமோ டாக்கா பக்கமோ மட்டும் அச்சுறுத்தலைக் கொடுக்கவில்லை. பாகிஸ்தானிய நீர்மூழ்கிகள் விசாகப்பட்டினம், சென்னை எனக் கடலோரங்களை மிரட்டியது. எந்நேரமும் சென்னை தாக்கப்படலாம் எனும் அச்சுறுத்தல் இருந்தது.

அந்தப் போரில் இந்தியா வென்ற பின்பே அச்சுறுத்தல் நீங்கிற்று. மானெக்ஷா எனும் இந்தியத் தளபதி அந்த மாபெரும் வெற்றியினைப் பெற்றுக் கொடுத்தார். அவருக்குக் கீழ் ஏகப்பட்ட தளபதிகள் தீரம் காட்டினார்கள். அவர்களில் ஒருவரே தமிழரான கிருஷ்ணன்.

அந்த மாவீரனின் பெயர் நீலகண்ட கிருஷ்ணன். நாகர்கோவில் அவன் பிறந்த 1919ம் ஆண்டு கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. அங்கிருந்து படித்து பிரிட்டிஷ் இந்தியாவின் கடற்படையில் சேர்ந்தார் கிருஷ்ணன். 50வயதில் இந்தியக் கடற்படையின் வைஸ் அட்மிரலாக இருந்த அவரிடம்தான் 1971ல் இந்தியாவைக் காக்கும் மிகப்பெரிய பொறுப்பைத் தளபதி மனேக்ஷா கொடுத்திருந்தார்.

அது சாதாரணப் பொறுப்பல்ல ஒரு மிகக் கொடிய நகரும் நீர்மூழ்கிக் கப்பலைக் (பாகிஸ்தானின் ஹாஜி)  கடலில் தேடி அழித்து தேசத்தைக் காப்பது... 
அதை முறியடித்ததில் நாகர்கோவில் தமிழனுக்குப் பெரும் இடம் உண்டு. அதில் கிருஷ்ணன் வென்ற வரலாறு மிக மிக சுவாரஸ்யமும் திகிலும் நிறைந்தது. அதை நினைத்துப் பார்க்காமல் இந்தியக் கடற்படை தினத்தைக் கொண்டாடுவதில் அர்த்தமில்லை. 

நிலம் வழியாக பாகிஸ்தான் புகமுடியாமல் இரு எல்லையிலும் தடுத்தது முதல் சாகசம். அந்த யுத்தத்தில் இந்தியாவின் பெரும் பலம் ஐ.என்.எஸ் விக்ராந்த்- இங்கிலாந்திடம் வாங்கிய விமானம்தாங்கிக் கப்பல். அதன் பலம் அக்காலத்தில் பெரிது. கிழக்குக் கடற்கரை முழுக்க அது கட்டுப்படுத்தியது.
இது இந்தியாவின் பலம் என்றால்; பலவீனம் எது என்று பார்ப்பது தானே எதிரிகளின் பழக்கம். அமெரிக்கா மிகச் சரியாகக் கணித்தது. 

இந்தியாவிடம் கப்பல் உண்டே தவிர; நீர்மூழ்கிக் கப்பல் இல்லை எனக் கண்டுகொண்டது. அவ்வளவு தான்; ஒரு பெரும் நீர்மூழ்கியினை பாகிஸ்தானுக்குக் கொடுத்தார்கள். 1965 யுத்தத்தில் அது பாகிஸ்தானிடம் இருந்தது. அப்போதைய யுத்தம் நிலத்தில் என்றாலும்; அது இந்தியாவின் பிரம்மபுத்திரா கப்பலை உடைத்ததாகவும்; பல இந்திய கப்பல்களை மூழ்கடித்ததாகவும் பாகிஸ்தான் அறிவித்து; கமாண்டருக்கு மெடல் எல்லாம் கொடுத்தது. அப்படி சம்பவம் நடக்கவே இல்லை எனினும்; எங்களிடம் பலம் வாய்ந்த நீர்மூழ்கிக் கப்பல் உண்டு என இந்தியாவிற்கு விடுத்த மறைமுக மிரட்டல் அது.
அந்தச் செய்தியை இந்தியத் தளபதி பிரம்மபுத்திரா கப்பலில் இருந்தே படித்துக் கொண்டிருந்தார் என்பது வேறு விஷயம். 

1965ல் பேட்டர்ன் டாங்க் எனப்படும் நவீன டாங்கிகளை அமெரிக்கா கொடுத்தும்; பாகிஸ்தான் மரணஅடி வாங்கி இருந்தது. அது தன் அவமானமாக அமெரிக்கா கருதிற்று. விளைவு இம்முறை பல நவீன வசதிகளை மேம்படுத்தி அந்த நீர்மூழ்கிக் கப்பலைக் களத்தில் இறக்கிற்று.

நவீனம் என்றால் டார்பிடோ எனும் நீர்மூழ்கி ஏவுகணைகளை ஏவும் வசதி, கடல் கண்ணிவெடிகளை விதைக்கும் வசதி... சுருக்கமாகச் சொன்னால் கடலின் அடியிலிருந்தே இந்தியாவின் எந்த நகரத்தையும் கப்பலையும் அழிக்கும் எமன் அது.

நீர்மூழ்கிக் கப்பல்களின் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவின் திறன் தனித்துவமானது.  இன்றும் ஓசை எழுப்பாமல் செல்லும் மிகச்சிறந்த நுட்பம் அவர்களுடையது.  சீனாவினை இப்பொழுது அச்சுறுத்திக் கொண்டிருப்பதும் அந்தத் தொழில்நுட்பம் தான். 

கடல்மேல் மிதக்கும் விக்ராந்தினை, கடலுக்குள் அலையும் ஹாஜியிடம் இருந்து காப்பாற்றுவது எப்படி என்று மனேக்ஷாவும் கிருஷ்ணனும் சிந்தித்தார்கள். பொறுப்பினை ஏற்றார் கிருஷ்ணன்.

மிகத் தந்திரமான திட்டத்தால் தான் பாகிஸ்தானின் ஹாஜி சிக்கியது. இஸ்ரேலின் புகழ்பெற்ற 6 நாள் போருக்குச் சற்றும் குறைந்ததல்ல இந்த இந்தியாவின் 13 நாள் போர்.
இன்றளவும் உலக ராணுவத் திட்டங்களில் பாராட்டத்தக்கதும்; மனேக்ஷா மங்காப் புகழ் அடைவதற்கும் அதுதான் காரணம். வங்கதேசம் சுதந்திரமடையவும் அதுதான் காரணம்.

யுத்தம் தீவிரமாக ஹாஜி கிளம்பிற்று. கப்பலில் 100 ராணுவத்தார், 50 ஏவுகணைகள், மிக ஆபத்தான கடல்கண்ணி வெடிகள் ஏராளம். மிகப் பெரும் ஆயுதமாக ஹாஜி களத்திற்கு வந்து அச்சுறுத்திற்று.
கடல்கண்ணி வெடி சாதுவாக மிதக்கும்; ஆனால் அருகில் கப்பல் வந்தால் ஓடிச்சென்று வெடிக்கும்.

ஹாஜியைச் சிக்கவைக்க இந்தியத் திட்டம் உருவானது. பாகிஸ்தானோ இந்தியாவின் பெருமை ஐ.என்.எஸ் விக்ராந்தை அழித்து; செய்தியை உலகிற்கு விரைவில் சொல்வோம் எனக் கொக்கரித்தது.

இந்தியக் கடற்படை மிகப் பரபரப்பாகவும்; கொஞ்சம் அச்சத்துடனும் ஆனால்; விவேகத்துடனும் செயல்பட்ட நேரமது. துப்பாக்கி படத்தின் வில்லனும் ஹீரோவும் ஒருவரை ஒருவர் தேடிக் கொண்டிருப்பது போல; இரண்டும் ஒன்றையொன்று தேடிக் கொண்டிருந்தன.

ஆனால் இந்தியா முந்திக் கொள்ளும் பெரும் கட்டாயம் இருந்தது. காரணம் ஹாஜியிடம் இருந்து தப்புவது சுலபமல்ல. அன்று இந்தியாவிடம் செயற்கைக் கோள் கிடையாது. நீர்மூழ்கிகளைக் கண்காணிக்கும் நுட்பம் கிடையாது. ராணுவ பலத்தில் பெரும் நுட்பம் என ஏதுமில்லை. ஆனாலும் வீரத்தையும் விவேகத்தையும் நம்பி நின்றது தேசம்.

இந்தியாவின் விக்ராந்த் எந்தத் துறைமுகத்தில் நிறுத்தப் பட்டிருந்தாலும்; யுத்த தர்மத்தை மீறி அந்த ஊரே அழிந்தாலும் (அதனால் அழிக்கமுடியும்); விக்ராந்தை விடக்கூடாது என்ற வெறியோடு ஹாஜி வங்கக்கடல் பக்கம் வந்தது.

ஹாஜி விக்ராந்தைத் தேடிக் கொண்டிருக்க; இந்தியப் படைக்கோ அவகாசமில்லை. காரணம்- அந்த நீர்மூழ்கியைப் பரந்த கடலில் எங்கு சென்று தேடுவது?

அதனால் தளபதி கிருஷ்ணன் அட்டகாசமாகத் திட்டமிட்டார்.
திட்டம் என்னவென்றால்; எங்கோ சுற்றிக் கொண்டிருக்கும் ஹாஜி நீர்மூழ்கியினைக் குறிப்பிட்ட இடத்திற்குத் தந்திரமாக வர வைப்பது; வந்ததும் போட்டுத் தள்ளுவது. அது மிக குறிப்பிடத்தக்க தகுதி வாய்ந்த இடமாக இருக்கவேண்டும், இல்லாவிட்டால் ஹாஜி காலத்திற்கும் சிக்காது.

அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் விசாகப்பட்டினம். இயற்கைத் துறைமுகம். ஆழமான கடல். அப்படியே அங்கு பரபரப்பினைக் கிளப்பி விட்டார்கள். பரபரப்பு என்றால் '500 மூட்டை அரிசி, 200 கிலோ ஆடு, 2000 லிட்டர் டீசல் எல்லாம் 2 நாளுக்குள் வேண்டும்; மிக அவசரம்' எனப் பெரும் கொள்முதல் செய்வதாக இந்திய உளவுத்துறையினர் சத்தம் போட்டு வியாபாரம் பேசினர்.

அதே நேரம் ரகசியமாக மீனவர்களுக்கு எல்லாம் பயிற்சி அளித்தது கடற்படை. விநோத நீர்க்குமிழி 
கண்டாலோ; அசாதாரண அலைகளைக் கண்டாலோ; உடனே தகவல் தெரிவிக்கச் சொல்லி இருந்தார்கள். மீனவர் வேடத்திலும் வியாபாரி வேடத்திலும் உளவாளிகளும் உயிரைக் கொடுத்துத் தகவல் திரட்டினார்கள்.

விசாகப்பட்டினத்தில்  இருந்த பாகிஸ்தான் உளவாளிகள் இதனை வழக்கம் போல பாகிஸ்தானுக்கு அனுப்பினர். இந்திய உளவுத்துறையினர் மிக அவசரம் என துரிதப்படுத்தியதையும்; பெரும் பொருள் வாங்குவதையும் மறக்காமல் அனுப்பினர்.
அவ்வளவுதான் துள்ளிக்குதித்து பாகிஸ்தான் கடற்படை 'சிக்கியது விக்ராந்த்' என மகிழ்ந்தார்கள்.

*(அந்நேரம் ஹாஜி இலங்கை ராணுவத்தின் துணையோடு அப்பக்கம் பாதுகாப்பாய் இருந்தது, பின்னாளில் இலங்கை எரிய இம்மாதிரி சம்பவங்கள்தான் காரணம்)*

இலங்கை அருகே சுற்றிக் கொண்டிருந்த கொடூர ஹாஜிக்குத் தகவல் அனுப்பினார்கள். பட்சி விசாகப்பட்டினத்தில் இருக்கின்றது இன்றே சென்று உடையுங்கள்; மறக்காமல் பின்குறிப்பினையும் எழுதினார்கள். அதாவது 'ஏதும் சண்டை நடந்தால் அந்த நகரமே அழிந்தாலும் பரவாயில்லை; கப்பல் தப்பக் கூடாது'.

உற்சாகமாய் வந்த ஹாஜி டாக்காவுக்கு (கிழக்கு பாகிஸ்தான்) சில தகவல்களை அனுப்பியது. அதனை வழிமறித்துப் படித்து நிலமையினைப் புரிந்து கொண்டது இந்தியப்படை.

அதாவது 'நாங்கள் விசாகப்பட்டினத்தில் இருக்கின்றோம். இந்த விக்ராந்தை கடலுக்குள் மூழ்கடித்துவிட்டு; அது மூழ்குவதை ஆசைதீரப் பார்த்துவிட்டு; சிட்டகாங் (வங்கத் துறைமுகம்) வந்து; மேல் எழுவோம்; எம்மை வரவேற்கத் தயாராகுங்கள்' என்ற செய்தி அது.

உற்சாகமான இந்தியத் தரப்பு மேலும் தகவல்களைப் பாகிஸ்தான் ராணுவம் படிக்குமாறு பேசி அவர்களை நம்ப வைத்தது. அதாவது கப்பலின் விமானங்களில் ஒன்று பழுது; பாதுகாப்பு கப்பல்களில் பிரச்சினை' என ஏதோதோ அனுப்பி விக்ராந்த் அங்கே தான் இருக்கின்றது என பிம்பத்தை உருவாக்கியது.

அது டிசம்பர் 3 நள்ளிரவு. விசாகப்பட்டினத்தை அடைந்தது ஹாஜி. வந்த இடம், தாக்கு, ஆயுதம் எல்லாம் உறுதி செய்யப்பட்ட பின் மெதுவாக வெளிவந்து கப்பலைக் குறிபார்க்கத் தேடியது. அதன் கண்களில் பட்டது ராஜ்புத் எனப்படும் இன்னொரு கப்பல்.

அதனைக் கண்டதும் நீருக்குள் படக்கென்று மூழ்கியது ஹாஜி.  எனினும் ராஜ்புத் கப்பல் அந்த அசாதாரணக் கடல் அலைகளை இனங்கண்டது. ஆனாலும் அது ஹாஜி என அதற்குத் தெரியாது.

பொதுவாக பெரும் விமானம் தாங்கிக் கப்பல்கள் பல கப்பல்கள் துணையோடு தான் பயணிக்கும். அப்படி ராஜ்புத் கப்பலை விக்ராந்தின் துணைக் கப்பலாக எண்ணி விட்டுவிட்டது ஹாஜி. அதன் முதல் தவறு இது. தவறு எனச் சொல்ல முடியா விட்டாலும். புலிவேட்டைக்குச் செல்லும் பொழுது எலியினைக் கொல்வது யார்? அப்படித்தான் அது புலியினைத் தேடியது.

ஆனால் ராஜ்புத் கப்பல் கேப்டனுக்குப் பொறி தட்டியது. எதற்கும் இருக்கட்டும் என கடல் கண்ணி வெடிகளை வீசிவிட்டு; அவர் கப்பலைக் கிளப்பினார்.

அடுத்த 30ம் நிமிடத்தில் முடிந்தது பாகிஸ்தான் கனவு.

பெரும் வெடிச்சத்தம், விசாகப்பட்டின மக்கள் பூகம்பத்தை உணர்ந்தனர். ஜன்னல் கண்ணாடிகள் கூட உடைந்தன. பெரும் வெடிப்பு சம்பவம் நடந்திருப்பதை உணர்ந்தாலும்; படு ஜாக்கிரதையான இந்திய ராணுவம் முதலில் அதனை நம்பவில்லை.

காரணம் ஹாஜியின் திசை திருப்பும் விளையாட்டாக இருக்கலாம். நாம் முந்திக் கொண்டு என்ன சத்தம் எனச் சென்றால்; தொலைத்து விடுவார்கள்.

நிதானித்து டிசம்பர் 5ம் தேதி, இந்தியக் கடற்படை கடலடி வீரர்கள் சென்று பார்த்த பொழுது பிரமாண்ட ஹாஜி முன்பக்கம் வெடித்து மூழ்கிக் கிடப்பதையும், 95 பாகிஸ்தானிய வீரர்களின் உடல்களையும் கண்டார்கள். உறுதிப்படுத்தினார்கள்; ஹாஜி தொலைந்தது.

இந்தக் களேபரங்கள் நடக்கும் பொழுது அந்தமானுக்கு அப்பக்கம் பத்திரமாக நின்று கொண்டிருந்தது ஐ.என்.எஸ்.விக்ராந்த். அதாவது 10 நாளைக்கு முன்பே அதனை அந்தமானுக்குக் கடத்திவிட்டு விசாகப்பட்டினத்தில்  கண்ணாமூச்சி ஆடியது இந்தியக் கடற்படை.

பின் பெரும் ஆபத்து நீங்கிய இந்தியக் கடற்படை தூள் பறத்தியது. ஐ.என்.எஸ்.விக்ராந்தை மீறி எந்த பாகிஸ்தானிய கப்பலும் வங்கக் கடலுக்குள் வர முடியவில்லை. அதாவது கிழக்கு பாகிஸ்தானுக்கான சப்ளை ரூட்களை முடக்கியது விக்ராந்த்.

போதாக் குறைக்கு பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை அகதளம் செய்தது இந்தியப்படை. ஹாஜி மூழ்கடிக்கபட்ட பின் இந்தியக் கடற்படை எதற்கும் காத்திருக்கவில்லை. 

தன் நீர்மூழ்கி இந்தியாவால் மூழ்கடிக்கப் பட்டதை ஜீரணிக்கமுடியாத அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்குவதாக அறிவித்தது. பதிலுக்கு சோவியத் யூனியன் மிரட்ட; பின்வாங்கிய அமெரிக்கா பாகிஸ்தானை முறைத்துவிட்டு அமைதியானது.

பலமிழந்த பாகிஸ்தானியப் படைகள்; சப்ளை இல்லாததால் சோர்ந்தன. கிட்டதட்ட 1லட்சம் பாகிஸ்தான் வீரர்களை சிறைப்பிடித்துக் காட்டினார் மனேக்ஷா. அதோடு பாகிஸ்தான் தளபதி நியாசி சரணடைந்தார்.

இவை எல்லாம் இந்தியக் கடற்படையின் பெரும் சாகசங்கள். இந்திய ராணுவத்தின் தந்திரமான நகர்வுக்குக் கிடைத்த வெற்றி, உலகமே வியந்து பார்த்த சம்பவம் இது. 

இந்திராவும், மனேக்ஷாவும் உலகப் பிரபலம் ஆனார்கள். மனேக்ஷா மங்காப் புகழ்பெற; அவரை அரசியலுக்கு அழைத்தார்கள். ஆனால் அவர் வரவில்லை; மாறாக ஊட்டிப் பக்கம் வந்து ஓய்வெடுத்தார்.

இந்திய வரலாற்றில் இந்த டிசம்பர் 4 மறக்க முடியாமல் ஆனது. இந்த சாகசத்தில் ஒவ்வொரு இந்தியனும் மறக்காமல் படிக்க வேண்டிய விஷயங்கள் இவை.

வாய்ப்பு கிடைத்தால்  விக்ராந்த் கப்பலை தகர்த்த பின் ஹாஜியின் இலக்கு சென்னையும் போகும் வழியில் மும்பையும் ஆகவே இருந்த
பெரும் ஆபத்து நீங்கியது.

உலகமே அதிசயமாகப் பார்த்த இந்தியாவின் வெற்றி இந்திராவின் பெயரை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. 

சீனப் போரின் தோல்விக்கு பின் பாகிஸ்தானை இரண்டாகப் பிளந்து சீறி நின்ற இந்திய ராணுவத்தின் பலம் பெரிதாக சிலாகிக்கப்பட்டது.  மனேக்ஷா அடுத்த பிரதமராகும் வாய்ப்பும் இருந்தது. அதையும் தாண்டி அந்த மனேக்ஷா ஊட்டியில்தான் வாழ்ந்து இறந்தார்,

நிச்சயம் அந்தப் போரில் தளபதி கிருஷ்ணனின் சாகசம் மிகப்பெரியது. ஹாஜி கப்பலை ஒழித்து; போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர் அவர்தான். 

ஆனால் அவரைத் தமிழருக்குத் தெரியாது. அவர் பிறந்த நாகர்கோவிலில் அவருக்கு ஒரு சிலை கூட கிடையாது , ஒரு நினைவுச்சின்னமும் இல்லை.
கடற்படை நாளான டிசம்பர் 4ம் தேதி அந்த வீரத் திருமகனுக்கு அஞ்சலி செலுத்தப்பட வேண்டும்.


தெரிவு:சக

kanmani tamil

unread,
Dec 17, 2025, 6:01:54 PM12/17/25
to vallamai
ஆறாட்டுப்புழா வேலாயுதம் பணிக்கர்: 

/// ( 7.1.1825 - 3.1.1874 ) 

கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள மங்கலம் என்னும் ஒரு சிறிய சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்ட கல்லிச்சேரி என்னும் பகுதியில் செல்வச் செழிப்பும் செல்வாக்கும் மிக்க ஈழவர் குடும்பத்தில் பிறந்தவர் வேலாயுதம் பணிக்கர். 

இவருடைய முன்னோர்கள் கட்ச், அரபு, சிங்கள வணிகர்களோடு தொடர்பு கொண்டு ஏற்றுமதி வணிகத்தில் சிறந்து விளங்கினார்கள். அவர்களுக்கென்று சொந்தமாகக் கப்பல்கள் இருந்தன. 

தவிரவும் ஏக்கர் கணக்கில் தென்னந்தோப்புகளும் நெல் வயல்களும் கல்லிச்சேரி தரவாட்டுக்குச் சொந்தமாய் இருந்தன. 

வேலாயுதம் பணிக்கர் தன் வீட்டிலேயே கல்வி பயின்றது மட்டுமல்லாமல், தங்கள் குடும்பப் பாரம்பரியத் தற்காப்புக் கலைகளான களரி, மல்யுத்தம் போன்றவற்றிலும், குதிரையேற்றத்திலும் மிகச் சிறப்பான முறையில் தன்னுடைய தாத்தா பெருமாளச்சனிடம் கற்றுத் தேர்ந்தார். 

தாய்மொழியான மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றார்.
வேலும்பி என்பவரை மணந்த வேலாயுதம் பணிக்கருக்கு ஏழு குழந்தைகள் பிறந்தனர். 
தாத்தா இறந்த பிறகு எல்லாவற்றையும் நிர்வகிக்கும் பொறுப்பை வேலாயுதம் பணிக்கர் ஏற்றார். 
மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகமான ஈழவா சமூகத்தைச் சார்ந்த ஒரு குடும்பம் இந்த அளவுக்கு செல்வாக்குப் பெற வேண்டுமானால் அவர்கள் நடத்தி வந்த வணிகமும் களரி போன்ற வித்தைகளில் இருந்த தேர்ச்சியும் ஒரு காரணம்! 

இவை இரண்டிற்காக மட்டும் வேலாயுதம் பணிக்கரை வரலாறு நினைவு கூர்வதில்லை! நம்பூதிரிகள், மேனன், நாயர் போன்ற மேட்டுக் குடியினர் ஈழவர், நாடார் மற்றும் தாழ்ந்த சாதியினருக்கு சாஸ்திரங்களின் பெயரால் இழைத்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமில்லை! 

கடவுளின் சொந்த பூமி என்றும், கல்வியறிவில் நாட்டில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் என்றும் மார்தட்டிக் கொள்ளும் மலையாள மண்ணில் நடந்தவற்றை இளகிய மனம் படைத்த மனிதர்கள் அறிய நேர்ந்தால் அவர்கள் இதயத்தில் இரத்தம் கசியும்! 

எதையும் தாங்கும் உறுதியான மனங்கொண்டவர்கள்கூட கலங்கிப் போவார்கள்! 
இப்படியெல்லாமா நடந்தது என்று நம்ப முடியாமல் திகைப்பார்கள்! 
ஜெயமோகன் எழுதிய ரப்பர் நாவல் வாசித்திருக்கிறீர்களா? 
இந்தக் கொடுமையை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்திய முதல் வீரன் ஆறாட்டுப்புழா வேலாயுதம் பணிக்கர்!

அன்று தாழ்ந்த சாதிப் பெண்கள் மேல் சாதியினர் அணியும் நீண்ட சேலைகளை அணிய முடியாது! 
முழங்கால் வரையிலும் மறைக்கும் ஒரு துணியைத்தான் இடுப்பில் சுற்றிக் கொண்டு வெளியே நடமாட வேண்டும். 
மேலே மார்பகங்களை மறைத்துக் கொள்ளக்கூடாது! 
ஆண்கள் இடுப்பைச் சுற்றிய துண்டுத்துணி மட்டும்தான்! 
மேலே எதுவும் கிடையாது! 

இதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய முதல் மனிதன் தான் மாவீரன் ஆறாட்டுப்புழா வேலாயுதம் செகாவார்! 

தாரணநெல்லூர் நம்பூதிரி என்பவர் பத்மநாபசுவாமி திருக்கோயிலை நோக்கி வேதங்கள் ஓதிய படி வந்து கொண்டிருந்த போது அவர் அணிந்திருந்த சாளக்கிரம மாலையைக் கொள்ளையர்கள் பறித்துச் சென்று விட்டனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து மன்னரிடம் ஒப்படைத்த தீரச் செயலைப் பாராட்டித்  திருவாங்கூர் மகாராஜா அளித்த கௌரவம் தான் பணிக்கர் பட்டம்! 

உடுத்தும் உடையிலேயே இத்தனை நீசத்தனமான கட்டுப்பாடுகள் இருக்கும் போது கோயில்களுக்குள் போக முடியுமா? இந்தப் பாவப்பட்ட ஜனங்கள் வழிபடுவதற்காகவென்றே வேலாயுதம் பணிக்கர் ஆறாட்டுப்புழாவில் ஒரு சிவன் கோயிலைக் கட்டுவித்து எல்லா சாதியினருக்கும் திறந்து வைத்தார்! (1852) 

1854 ஆம் ஆண்டு செருவரணம் என்ற ஊரில் மற்றொரு சிவன் கோயிலையும் கட்டினார் வேலாயுதம்! 

சும்மா விடுவார்களா மேல் ஜாதிக்காரர்கள்?
பலவிதமான இடையூறுகள்! 
1858 ல் வேலாயுதம் பணிக்கர் பெண்கள் நீளமான கீழாடை அணிவதற்கான உரிமையைப் பெறுவதற்குப் போராட்டத்தைத் தொடங்கினார். 

'அச்சிப்புடவை சமரம்!'
(சமரம் = போர்) 

தாழ்ந்த சாதியினர் அனைவரும் மேல் சாதியினருடைய விவசாயக் கூலிகளாக வேலை செய்து வந்தனர். அவர்களை ஒன்று திரட்டி வேலை நிறுத்தம் ( பணி முடக்கம் ) செய்தார் இரண்டாம் முறையாக. 

'எதாப்பு சமரம் ' 

அந்தப் போராட்டம் பெண்கள் தங்கள் மார்பை மறைத்துக் கொள்ள துணியை அணிவதற்காக! (1859) 

ரவிக்கை யெல்லாம் அப்போது கிடையாது! 
இதைத் தொடர்ந்து 1860 ஆம் ஆண்டு பணிக்கர் முன்னெடுத்த போராட்டம் 

'மூக்குத்தி சமரம்'

அதாவது பெண்கள் மூக்குத்தியும் கழுத்தில் மற்ற ஆபரணங்களையும் அணிந்து கொள்ளும் உரிமை கோரிய போராட்டம்! 

1861ல் கேரள பாரம்பரிய நடனக் கலையான கதகளியைக் காணவோ பயிலவோ முடியாதிருந்த தடையைத் தகர்க்க பணிக்கர் கதகளி யோகம் என்ற அமைப்பைத் தோற்றுவித்து வெற்றி கண்டார்!

அதன் மூலமாகவே ஈழவ சாதியினர் கதகளியைக் காணவும் நடனத்தைக் கற்றுக் கொள்ளவும் முடிந்தது! 

இப்படிப்பட்ட சீர்திருத்தவாதியை அவ்வளவு எளிதில் யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை! அதனால் மேல் சாதியினர் 1874 ஆம் ஆண்டு, இரவு நேரத்தில், ஒரு படகில் பயணம் செய்து ( தூங்கிக்) கொண்டிருந்த ஆறாட்டுப்புழா வேலாயுதம் பணிக்கரை வஞ்சகமாகக் கொலை செய்தனர்! 

நேருக்கு நேர் நெருங்க முடியாத மாவீரனை வேறு எப்படியும் சாய்த்து விட முடியாது! 

எளிய மக்களின் கடவுளாக விளங்கிய அந்த மாவீரன் உயிர் துறக்கும் போது வயது 48 தான்! 

இவர் காலத்துக்குப் பிறகு தான் நாராயண குரு அவதரித்து அதன் பிறகே இந்த சீர்திருத்தங்கள் எல்லாம் முழுமையாக நடைமுறைக்கு வந்தன. 

மா. பாரதிமுத்துநாயகம்///


தெரிவு:சக

seshadri sridharan

unread,
Dec 19, 2025, 5:27:48 AM12/19/25
to vall...@googlegroups.com
 இத்தகு உரிமை மறுப்பு போர்க் குடிகளிடம் வேற்றுமை உண்டாக்க ஏற்படுத்தப்பட்டது. பின்பு சமூக வழக்கம் ஆகிவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் மதவீர விநாயகர் கோவில் முகப்பு மண்டப நடு உத்திரத்தில் உள்ள 6 வரிக் கல்வெட்டு. 

விகுறுதி வருஷம் பங்குனி மாதம் 6 ஆம் தேதி கானனாட்டுப் படை பத்து இலம்பங்குடியில் பள்ளற்கும் பறையற்கும் விருது சண்டையாக காஞ்சிபுரத்துக்குப்  போய் கல்வெட்டுப் பாத்து வந்தபடி காஞ்சிபுர சுவாமி யேகாம்பரரைய்யன்  காமாட்சியம்மன் கோவில் தானம் மாயேசுரர் சகல / குண சம்பன்னரான பல்லவராயன் பண்டாரத்தின் மனிசர் வேங்கடம் நாயக்கர் இலம்பங்குடி ஊரவற்கும் சகல பாக்கியமும் உண்டாக வேனுமென்று ஆதரித்து வரவிட வேண்டின ஆசிறு பாகம். கானனாட்டு படைப்பற்று இலம்பங்குடியில் பறையற்கும் பள்ளற்கும் சண்டை வளக்குத்தாரமாக  முத்திரை மனுசன் திருவம் / பலய்யனையும் கூட்டி பறையன் உலகங்காத்த சாம்பானும் பள்ளன் ஞானிகாத்தானும் வராக்காட்டினா(ர்)கள். அப்படியே சாதனப்படி பறையர் வலங்கையா இருக்கும் பள்ளர் இடங்கையா யிருக்கும். அவடத்திலே / பறையர் வலங்கைக்கு செல்லுகிறதெல்லாம் நடத்தவும் பள்ளர் இடங்கைக்கு செல்லுகிறதெல்லாம் நடத்தவும் . பள்ளனுக்கு தவுலும் சேமக் / கலம் அஞ்சு பந்தக்காலும், பறையற்கு  கொட்டு மேழதாழம்  பறையருட்டுன கோயில் கிடாத்தரம் பறையருட்டுன மொந்தைக் கள்ளு பறையருட்டுன பன்னிரண்டு பந்தகால் பறையருட்டுனே _ _ _ தங்களை ஏகாம்பரய்யன் காமாட்சியம்மன் ஆதரித்துக் கொண்டருளவும் வேணும், ஆசிறுபாகம். / இப்படிக்கு பாண்டிதிராயர்  பச்சைப் பெருமா எளுத்து. இந்தக் கல்வெட்டு விசுவ முத்திக்காத்தவன் எழுத்து.  சதா சேர்வை  

படைப்பற்று - படை வீரர்களின் ஊர் அல்லது நிலம், cantonment; விருது - பட்டம், சிறப்பு சலுகை, உரிமை; தானம் - பொறுப்பு அதிகாரி,  ஸ்தானம்; மாகேசுரர் - அறங்காவலர்; பண்டாரம் -கருவூலக் கணக்கு; (ஆசு + இறு) ஆசிறு பாகம் - குற்றம் நீங்கி பக்குவமடைக;  சதானப்படி/சாசனப்படி - எழுத்துச் சான்றுபடி; சேமக்கலம் - ஒரு தட்டை கட்டையால் அடித்து ஒளி எழுப்புதல்; கிடாத்தரம் - ஆட்டின் தலையாக இருக்கலாம்; சதா சேர்வை - எப்போதும் வணங்கி நிற்கும். 

விளக்கம்:  இது 16 ஆம் நூற்றாண்டில் 1530 அல்லது 1590 இல் விக்ருதி ஆண்டு பங்குனி மாதம் 6 ஆம் தேதி வெட்டப்பட்ட  கல்வெட்டு. கானநாட்டுப் படை ஊரில் வாழும் பறையருக்கும் பள்ளருக்கும் சிறப்பு சலுகை, உரிமை (விருது) காரணமாக பிணக்கு ஏற்பட்டு சண்டை எழுந்தது. அதை தீர்க்க காஞ்சிபுரம் சென்று கல்வெட்டு பார்த்து தெளிந்து வந்தனர். அதை விவரிப்பதே இக்கல்வெட்டு. காஞ்சிபுரம் ஏகாம்பர ஈசுவரன், காமாட்சியம்மன் கோவில்களின் பொறுப்பு அதிகாரி எல்லா குணமும் நிரம்பிய பல்லவராயன் ஆவணக் கருவூல கணக்கர் வேங்கடம் நாயக்கர் இளம்பங்குடி ஊராருக்கு எல்லா நலமும் உண்டாக வேண்டும் என்று ஆசீர்வாத மொழி பேசி வரவழைத்து உமது குற்றம் நீங்கி பக்குவமடைவதாக என வாழ்த்தினார். கானநாட்டுப்  படை ஊர் பறையருக்கும் பள்ளருக்கும் ஏற்பட்ட சண்டை வழக்கு தொடர்பாக முத்திரை மனிதர் திருவம்பலய்யனையும் உடன் அழைத்து வந்து பறையன் உலகங்காத்த சாம்பனையும் பள்ளன் ஞானிகாத்தானையும் ஒருசேர வரவழைத்தார்கள். ஆவண எழுத்தின்படி பறையர் வலங்கையாய் இருப்பர்; பள்ளர் இடங்கையாய் இருப்பர். அப்படியான நிலையில் பறையர் வலங்கைக்கு உண்டானதெல்லாம் நடத்திக் கொள்ளலாம், பள்ளர் இடங்கைக்கு உண்டானதெல்லாம் நடத்திக் கொள்ளலாம். பள்ளர் தவிலும், சேமக்கலனும் முழக்கலாம், ஐந்து பந்தக்கால் நடலாம். பறையருக்கு கொட்டு மேளதாளம், பறையருக்கு உண்டான கோவிலில் பலியிடப்படும் ஆட்டின் தலை, மொந்தைக் கள், 12 பந்தக்கால் நடுதல் ஆகிய உரிமைகளை சலுகைகளை (விருது) அனுபவிக்கலாம் என்று சொல்லி உங்களை ஏகாம்பர ஈசனும் காமாட்சி அம்மனும் ஆசீர்வதித்து அருளவேண்டும், குற்றம் நீங்கி பக்குவமடைக என்று வாழ்த்தி அனுப்பினர். இப்படியாக நடந்து கொள்க என்று பாண்டித்திராயர் பச்சைப் பெருமாள் ஆணை ஓலை தந்தார். இதை விசுவ முத்திகாத்தவன் என்ற ஆசாரி கல்வெட்டாக வடித்தான். எப்போதும் வணங்கி நிற்கும் என முடிகிறது. 

பள்ளரும் பறையரும் போரில் ஈடுபட்டதால் தான் அவருக்கென்று தனிப் படைஊர் ஏற்படுத்தி அதில் குடியேற்றும் நடைமுறை இருந்துள்ளது என்பது இக்கல்வெட்டால் உறுதி ஆகிறது. பள்ளரைவிட பறையருக்கு அதிக சலுகையும் உரிமையும் இருந்ததால் அது பிடிக்காத பள்ளர் அதை எதிர்த்தனர், தடுத்தனர். இவ்வாறான பிணக்கு மன்னராட்சியில் அரசர்களின் ஒரு தலைச் சார்பான உரிமை வழங்கல் காரணமாகவே எழுந்தது என்று தெளிவாகிறது. ஆனால் எல்லா சமூக வேற்றுமைக்கும் ஏற்றத் தாழ்விற்கும் இந்து மதம் தான் காரணம், பிராமணர் தான் காரணம் என்று பொய் உரைக்கின்றனரே அறியா மூடர்? உண்மையில் இன்றைய சமூக வேற்றுமை, ஏற்றத் தாழ்விற்கு இந்த ஆட்சியாளர்கள் தான் பொறுப்பு எனில் அவர் வழிவந்த ஆண்ட பரம்பரை, அடக்கி ஆண்டவர், பார் ஆண்டவர், மண் ஆண்டவர் என மார்தட்டிக் கொள்ளும் நிலவுடைமைச் சாதிகளை தானே இன்றைய வேற்றுமைக்கு ஏற்றத் தாழ்விற்கு பொறுப்பாக்க வேண்டும்? 

பார்வை நூல்: ஆவணம் இதழ் 15, 2004  பக். 32

kanmani tamil

unread,
Dec 30, 2025, 6:26:05 PM (13 days ago) 12/30/25
to vallamai
பரம்வீர்சக்ர அருண்கேதர்பால்:

/// 21 வயதில் சிங்கத்தின் கர்ஜனை: தனது பீரங்கி தீப்பிடித்தபோதும் கைவிடாத பரம வீர சக்கர அருண் கேதர்பாலின் வீரக்கதை!

சிலர் வரலாற்றில் தங்கள் ஆண்டுகளால் அல்ல, அவர்களின் செயல்களால் வாழ்கிறார்கள். வெறும் 21 வயதில், முழு நாடும் பார்த்துக்கொண்டிருந்த போர்க்களத்தில் 10 பெரிய எதிரி டாங்கிகளை அழித்த ஒரு இளைஞன் இருந்தான் - இரண்டாம் லெப்டினன்ட் அருண் கேதர்பால்.

இந்திய இராணுவ வரலாற்றில் 'துணிச்சலானவர்களில் துணிச்சலானவர்' என்று அழைக்கப்படும் அந்த துணிச்சலான மனிதனின் கதையை மீண்டும் படிப்போம். 🛡️🔥

டிசம்பர் 16, 1971. பாகிஸ்தானில் அதிநவீன 'பாட்டன்' டாங்கிகள் உள்ளன. ஷகர்கர் பிரிவு வழியாக இந்தியாவுக்குள் பாய்வது அவர்களின் திட்டம். ஆனால் அங்கு அவர்கள் 17வது பூனா குதிரையின் இளம் அதிகாரியான அருண் கேதர்பாலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

'ஃபமகுஸ்டா' என்ற தனது தொட்டியில் அமர்ந்தபடி, அருண் எதிரியைத் தாக்கினார். ஒன்றன் பின் ஒன்றாக, எதிரி டாங்கிகள் சரிந்தன. இதற்கிடையில், அருணின் டாங்கி தீப்பிடித்து, அவர் படுகாயமடைந்தார். தளபதி பின்வாங்க உத்தரவிட்டபோது, ​​வயர்லெஸ் செட்டில் இந்திய சிப்பாயின் அழுகை கேட்டது:

"ஐயா, என் டாங்கி எரிகிறது, ஆனால் துப்பாக்கி ஏந்தியவர் இன்னும் வேலை செய்கிறார். எதிரியை அழிக்காமல் பின்வாங்க மாட்டேன்!" 

அந்த உறுதியான முடிவு பாகிஸ்தானிய முன்னேற்றத்தைத் தடுத்தது. 10 டாங்கிகளை அழித்த பிறகு, துணிச்சலான மகன் போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தார். இந்தியா அவருக்கு அதன் மிக உயர்ந்த கௌரவமான பரம் வீர் சக்ராவை வழங்கி கௌரவித்தது.

'ஃபமகுஸ்டா' என்பது அருண் கேதர்பால் தனது கடைசி மூச்சு வரை போராடிய செஞ்சுரியன் டாங்கின் பெயர்.

போருக்குப் பிறகு இந்த டாங்கியை இந்திய ராணுவம் மீட்டது. தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டால் சேதமடைந்த இந்த டாங்கி, ராணுவத்தால் பழுதுபார்க்கப்பட்டு அதன் அசல் வடிவத்திற்கு மீட்டெடுக்கப்பட்டது.

இன்று, இந்த டாங்கி மகாராஷ்டிராவின் அகமதுநகரில் உள்ள கவசப் படை மையம் மற்றும் பள்ளியில் பெருமையுடன் வைக்கப்பட்டுள்ளது. அருணின் துணிச்சலுக்கு ஒரு மௌன சாட்சியாக அது அங்கே நிற்கிறது.

எதிரி கூட மதிக்கும் துணிச்சல்
இந்தக் கதையின் மிகவும் உணர்ச்சிபூர்வமான பகுதி 2001 இல் நடைபெறுகிறது. அருணின் தந்தை பிரிகேடியர் எம்.எல். கேதர்பால் பாகிஸ்தானுக்குச் சென்றபோது, ​​அப்போதைய பாகிஸ்தான் பிரிகேடியர் நசீர் அவரை வரவேற்றார். கண்களில் கண்ணீருடன், நசீர் ஒரு உண்மையை வெளிப்படுத்தினார்: "அன்று அருணின் டாங்கியை அழித்தது நான்தான். ஆனால் அந்த 21 வயது இளைஞன் காட்டிய துணிச்சலுக்கு முன்னால் நான் இன்னும் தலை வணங்குகிறேன்." எதிரி நாட்டாலும் மதிக்கப்பட்ட மற்றொரு ஹீரோ. 💪

NDA-வில் ஒரு பிரகாசமான நட்சத்திரம்
அருண் தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) வெறும் ஒரு கேடட் மட்டுமல்ல.

படை மனப்பான்மை: அவர் 'ஃபாக்ஸ்ட்ராட்' படைப்பிரிவின் ஒரு பகுதியாக இருந்தார். இன்றும் கூட, அதன் கேடட்கள் அருணின் துணிச்சலைப் பின்பற்றுகிறார்கள்.

கேதர்பால் அணிவகுப்பு மைதானம்: NDA இல் உள்ள அணிவகுப்பு மைதானம் அவரது நினைவாக பெயரிடப்பட்டது, ஒரு அஞ்சலியாக மட்டுமல்லாமல், வரும் தலைமுறையில் உள்ள ஒவ்வொரு அதிகாரிக்கும் தேவையான மன உறுதியை ஊட்டுவதற்காகவும்.

அருண் தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) ஒரு தடகள வீரராகவும், சிறந்த நீச்சல் வீரராகவும் இருந்தார். ஒவ்வொரு புதிய கேடட்டும் உணவகத்திலும் அரங்குகளிலும் அருணின் படங்களைப் பார்த்து உற்சாகமடைகிறார்கள்.

மறந்துவிடக் கூடாது...

அருண் எங்களைப் போன்ற ஒரு சாதாரண இளைஞன், அவர் கோல்ஃப் விளையாடவும் சினிமாவுக்குச் செல்லவும் விரும்பினார். ஆனால் நாட்டிற்கு ஆபத்து வந்தபோது, ​​அவர் தனது உயிரையே தியாகம் செய்தார்.

இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தின் ஒவ்வொரு தருணமும் அருண் கேதர்பால் போன்ற துணிச்சலான மனிதர்களின் தியாகங்களின் விளைவாகும். 🇮🇳❤️

இந்த துணிச்சலான வீரனின் கதையை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு.

#newyearevent
#texas
#monopolygoca
#northcarolina
#trader
#tv
#Tennessee
#prizemoney
#localcommunity
#socialmedia///


தெரிவு:சக


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Jan 1, 2026, 7:43:48 PM (11 days ago) Jan 1
to vallamai
Bibha Choudhuri - a physicist

/// She discovered a particle before the world…
but the world forgot her name.

Bibha Choudhuri — one of India’s earliest women physicists — should have been taught in classrooms, celebrated in science museums, and remembered among the pioneers of modern physics. Instead, history quietly erased her from the spotlight.

In 1939, while working with D. M. Bose, Bibha Choudhuri used a cloud chamber to study cosmic rays. What she observed was remarkable: clear experimental evidence of a new subatomic particle. It was the kind of breakthrough that, with proper backing and recognition, could have placed her on the road to a Nobel Prize.

But she lived in an era when women in science were rarely celebrated — often sidelined, overlooked, or written out altogether. When similar findings were later reported by researchers abroad, they were welcomed with global acclaim. Bibha’s work was not.

Yet, she never stopped.

She moved to England and worked with Nobel laureate Patrick Blackett, contributing data that quietly shaped the foundations of early particle physics. Even there, recognition remained limited, her role largely understated.

Bibha eventually returned to India, continued her research for decades, published significant scientific work — and still remained largely invisible in her own country.

What makes her story unforgettable is not just the brilliance of her discovery, but the grace with which she carried herself.
No bitterness.
No demands for credit.
Only a lifelong devotion to science.

Today, as India slowly begins to remember her, one truth becomes undeniable:
Bibha Choudhuri wasn’t forgotten because she lacked greatness —
she was forgotten because the world wasn’t ready to acknowledge a woman who was far ahead of her time.

Her legacy is no longer silent.
Her name is rising again — exactly where it always belonged. 🌟///


தெரிவு:சக 

kanmani tamil

unread,
Jan 7, 2026, 7:47:27 PM (5 days ago) Jan 7
to vallamai
மதுரையைச் சேர்ந்த விண்வெளித் தமிழன் பால்ராஜ் ஞான.சொக்கப்பா!

/// நிலவில் முதலில் மனிதன் காலடி வைக்கக் காரணமாக இருந்த அப்பல்லோ விண்கலத்தின் தலைமைப் பகுதியை வடிவமைத்தவர், ராக்கெட் இயக்கிய விமானிகளுக்கு பயிற்சி அளித்தவர் ஒரு தமிழர்!

டிசம்பர் 23- தமிழகத்தைச் சேர்ந்த பி.கக்கன், கே.பாலச்சந்தர் முதலியோரின் நினைவு நாள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் வெளியுலகு அறியாத ஆனால் உலகமே போற்றப்பட வேண்டிய ஒருவரும் இந்த நாளில் மறைந்து போயிருக்கிறார். அவர்தான் மதுரையைச் சேர்ந்த விண்வெளித் தமிழன் பால்ராஜ் ஞான.சொக்கப்பா!

நிலவில் முதன்முதலில் சென்றவர்கள் யார் என்றால் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த அப்பல்லோ விண்கலத்தை இயக்கியவர் மைக்கேல் காலின்ஸ் என்றும் நிலவில் இறங்கியவர்கள் நீல் ஆர்ம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் என்றும் மிகச் சுலபமாக எல்லோரும் சொல்லி விடுவார்கள். அவர்கள் சென்ற ராக்கெட்டில் அதன் தலைமையகமாக விளங்கும் கட்டுப்பாட்டுப் பகுதியை வடிவமைத்தவரும், ராக்கெட்டை இயக்கிய விமானிகளுக்குப் பயிற்சி அளித்தவரும்  இவர் தான்!

பால்ராஜ் சொக்கப்பா 1930 செப்டம்பர் 20 அன்று மதுரையில் பிறந்தார். அவரின் தந்தை அமெரிக்க மிஷனின் பொருளாளராக இருந்ததால் குடும்பம் அவர்கள் வழங்கிய வீட்டில் வசித்தது. அவருடைய தாயார் பெண்கள் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். எனவே, அவர் தன் தாயாரின் பள்ளியிலேயே தொடக்கக் கல்வி பயின்றார்.பின் இடைநிலைக் கல்வியைப் புகழ்வாய்ந்த சேசுசபையினர் நடத்தும் தூயமரியன்னை பள்ளியில் பயின்றார்.

அக்காலத்தில் அது பி.யூ.சி. அதாவது புகுமுக வகுப்பு என அழைக்கப்பட்டது. இடைநிலைக் கல்வியை முடித்தபிறகு சென்னைப் பல்கலைக்கழகத்தில் மின்பொறியியல் துறையில் இளநிலைக் கல்வி பயின்று முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றாலும் அவருக்கு அக்காலத்தில் அவர் படித்த பொறியியல் துறை சார்ந்த வேலை கிடைப்பது அரிதாக இருந்தது. 

பின் அவர்... அரசின் உதவித்தொகையோடு கூடிய பயிற்சியை வழங்கும் பிரிட்டிஷ் நூற்பாலை நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கினார்.

சுமார் ஏழு மாதங்கள் அங்கு பணியாற்றிய அவர் கல்லூரி ஆசிரியராக வேண்டும் என்கிற எண்ணத்தில் சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் ஆசிரியராகச் சேர்ந்தார். இருப்பினும் அவரது பணி தற்காலிகமாக இருந்ததால் உதவித்தொகையுடன் உயர்கல்வி கற்கும் பொருட்டு பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்திருந்தார் (அக்காலத்தில் உயர்கல்வி பெற இந்திய மாணவர்கள் இங்கிலாந்து அல்லது அமெரிக்கா செல்வது வழக்கம்). 

இறுதியில் அமெரிக்காவில் உள்ள ஓகியோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் பயில 1954-இல் அழைப்பு வந்தது. அக்காலத்தில் கப்பல் பயணமாகவே அமெரிக்கா செல்ல வேண்டும். எனவே, தன் தந்தை பணியாற்றும் அமெரிக்க மிஷனின் உதவியோடு கப்பலில் போஸ்டன் வந்து அங்கிருந்து கொலம்பஸ் ஓகியோ ரயிலில் ஓகியோ வந்து சேர்ந்தார்.

மூன்று மாதங்கள் அங்கே பயின்றவர், ஒரு நாள் வகுப்புத் தோழர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்தபோது, அவருக்கு மூத்த மாணவர் பெர்க்லி பல்கலைக்கழகத்திற்குச் செல்லாமல் ஏன் இங்கே சேர்ந்தீர்கள் என்றார். ஏனெனில் ஓகியோ மைனஸ் ஐந்து டிகிரிக்கும் குறைவாக குளிர் மிகக் கொண்டதாக  இருந்தது. 

அதைக் கருத்தில் கொண்டு பெர்க்லி பல்கலைக் கழகத்தைத் தொடர்பு கொண்டார். அங்கிருந்து அழைப்பு வர அங்கே தன் படிப்பைத் தொடர்ந்தார். அங்கே மின் பொறியியலில் முதுநிலைக் கல்வி பயின்று கொண்டே வாஷிங்டனில் உள்ள சேசுசபையினர் நடத்தும் சியாட்டில் பல்கலைக் கழகத்தில் ஆசிரியப் பணியும் செய்தார்.

அவர் பெர்க்லியில் படித்தபோது விருப்ப ஆய்வாக மின் பொறியியலில் மின்னாற்றல் குறித்து ஆராய்ச்சி செய்தார். அவற்றுள் மின்உற்பத்தி, மின்கடத்தல், மின்பகிர்மானம் போன்றவற்றை நுட்பமாக ஆராய்ந்தார். 

படிப்பை முடித்த பின் இந்தியாவுக்குச் சென்று பணியாற்ற வேண்டும் என்பது அவரது ஆவலாக இருந்தது. ஆனால், அவருடைய துறைத் தலைவர் அவரைக் கணினித் துறையில் ஆய்வு செய்து டாக்டர் பட்டத்தை நிறைவு செய்யச் சொன்னார். அக்காலகட்டம் கணினியின் தொடக்கக் காலம். பெரிய பெரிய அறைகளில் ஒரு கம்ப்யூட்டரின் பாகங்கள் பிரமாண்டமாக இணைக்கப்பட்டிருக்கும்.

அந்தப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையிலும், வேதியியல் துறையிலும் மிகச்சிறந்த பேராசிரியர்களும், அவர்களுள் நோபல் பரிசு பெற்றவர்களும் இருந்தனர். டாக்டர் பவுலின் 1954ஆம் ஆண்டு வேதியியல் துறையில் நோபல் பரிசும், டாக்டர் லாரன்ஸ் இயற்பியல் துறையில் சைக்ளோட்ரோன் எனும் துகள் இயக்கத்தைக் கண்டுபிடித்தமைக்காக 1939இல் நோபல் பரிசும் பெற்றவர்கள். 

டாக்டர் ஓபன்ஹெய்மர் இரண்டாம் உலகப்போரில் அணு ஆயுதங்களைத் தயாரித்துக் கொடுத்தவர். அவரை அணுகுண்டின் தந்தை என்று அழைத்தனர். டாக்டர் எட்வர்டு டெல்லரை ஹைட்ரஜன் அணு குண்டின் தந்தை என்று அழைப்பர். இவர்கள் அனைவரும் லாரன்ஸ் ஆய்வகத்தில் அணுஆற்றல் இயக்கம் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். சொக்கப்பாவிற்கு அந்த ஆராய்ச்சியில் ஈடுபட ஆர்வமிருந்தது. ஆனால், வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதாலும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் அவர் அங்கே பணியாற்ற முடியவில்லை.

அவர் சியாட்டில் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றியபோது சியாட்டில் சிட்டிலைட் எனும் அணைக்கட்டிற்குத் தானியங்கி முறையில் அணைக்கட்டு செயல்படும் வகையில் அதற்கான கம்ப்யூட்டரை உருவாக்க வேண்டியது அவரின் பணியாக இருந்தது. அப்பணி அவரின் முனைவர்பட்ட ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகவும் இருந்தது. அந்த அணைக்கட்டில் நீர்ப்பாசனம், மின் உற்பத்தி, வெள்ளத் தடுப்பு போன்ற அனைத்துச் செயல்களையும் தானியங்கி முறையில் செயல்படுத்த வேண்டும். அப்போது தான் கம்ப்யூட்டர் வரத்தொடங்கிய காலம் என்பதால் அதற்கான பிரத்தியேக கம்ப்யூட்டர் மொழி (Machine code) உருவாக்குவதில் சிக்கல் இருந்தது. ஒவ்வொரு முறை சிக்கல் ஏற்படும்போதும் புதிய வகையில் கம்ப்யூட்டர் மொழியை உருவாக்க வேண்டும். அது அவருக்குக் கடினமாக இருந்தது.

அந்த நேரத்தில் விமானங்களைத் தயாரிக்கும் போயிங் எனும் பன்னாட்டு நிறுவனத்திலிருந்து கல்லூரிக்கு உரையாற்ற வந்த ஒரு வல்லுநர் போர்ட்டான் எனும் கம்ப்யூட்டர் மொழி குறித்து விளக்கினார். அம்மொழி இயற்கணிதத் தொகுப்பி மொழி (algebraic compiler language). அம் மொழியை அறிந்துகொண்ட அவர் மிக விரைவில் கம்ப்யூட்டர் மொழியை உருவாக்கவும் அதோடு தனது முனைவர் பட்டத்தையும் நிறைவு செய்தார். பின்பு மைட்டர் என்னும் ராணுவம் மற்றும் பாதுகாப்புக்காக செயல்படும் தொண்டு நிறுவனத்தில் அமைப்புப் பொறியியல் துறையில் ஒரு வேலைவாய்ப்பு வந்தது. அவர் மின் பொறியியல் படித்திருந்தாலும் அவருக்குப் பணி வழங்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்திருந்த சமயம் அமெரிக்கா ரஷ்யா மீது அச்சம் கொண்டிருந்தது. குறிப்பாக ரஷ்யாவின் பலிஸ்டிக்ஸ் ஏவுகணைக்குப் பயந்தது. எனவே, பாதுகாப்பு கருதி ஏவுகணைகள் எல்லைப் பகுதியில் வந்தால் முன்னெச்சரிக்கை கொடுக்கும் ரேடார்கள் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு கனடா முழுவதும் பொருத்தும் பணியை மைட்டர் நிறுவனமும் விமானப்படையும் சேர்ந்து செய்தன. 

அதில் சொக்கப்பா விமானப் போக்குவரத்துப் பிரிவில் பணி செய்தார். அக்காலத்தில் அனைத்து வகை விமானங்களும் ராணுவக் கட்டுப்பாட்டில் இயங்கின. எனவே ஆயிரக்கணக்கில் பறக்கும் அனைத்து வகை விமானங்களையும் கட்டுப்படுத்தி எந்த விமானம் எப்போது செல்ல வேண்டும்; எப்போது இறங்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை உருவாக்க வேண்டியிருந்தது.

அதோடு வானில் பறந்தபடியே எரிபொருள் நிரப்ப வேண்டும். ஏனெனில் அட்லாண்டிக் கடலைப் போர்விமானங்கள் கடக்கும்போது எரிபொருள் தீர்ந்துவிடும். எனவே வானில் பறந்தபடியே எரிபொருள் நிரப்பப்பட வேண்டும். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துத் தானியங்கிக் கட்டுப்பாட்டு அமைப்பை கம்ப்யூட்டர் மூலம் உருவாக்குவது அவர் வேலையாக இருந்தது.

அங்கே 4ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு மீண்டும் மைட்டர் நிறுவனத்தில் டாக்டர் ட்ராப்பர் எனும் விமானப் பொறியியல் பேராசிரியர் பொறுப்பு வகித்தார்.

அப்போது அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி முதன் முதலில் நிலவிற்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை அறிவித்தார். எனவே, அந்நிறுவனம் அப்பலோ ராக்கெட்டை வடிவமைக்க நிபுணர்களை அழைத்தது. அதில் சொக்கப்பா கலந்துகொண்டார். அவரிடம் பாயிண்ட் பிளாங்க் (துப்பாக்கியிலிருந்து புறப்படும் தோட்டாவிற்கும் தாக்கும் இலக்கிற்கும் இடையில் உள்ள தொலைவு) பற்றிக் கேள்வி கேட்கப்பட்டது.

அவர் அதற்கு பதிலுரைத்ததும் அப்பலோ ராக்கெட் உருவாக்கும் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் ராக்கெட்டின் கட்டுப்பாட்டுப் பகுதியின் (command module) இயக்கச் சமன்பாடுகளை (steering equation) உருவாக்கினார். அப்பலோ பெரிய ராக்கெட். ஏற்கெனவே அலபாமா ராக்கெட்டின் பொறுப்பாளராக இருந்த வெர்னர் வான் பிரவுன் எனும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அறிஞர் சனிக் கோளின் வட்டப்பாதையில் ராக்கெட்டை நிறுத்திக் காட்டினார். அதோடு அப்பலோவை ஒப்பிடுகையில் அமெரிக்காவின் சொந்தத் தயாரிப்பாகவும் அளவில் மிகப் பெரியதாயும் இருந்தது.

அப்பலோ சரியான திசைவேகத்தில் சரியான கோணத்தில் சென்று நிலவின் எந்த வட்டப்பாதையில் எப்போது அடைய வேண்டும் என்ற முழுக் கட்டுப்பாட்டையும் சொக்கப்பா உருவாக்கினார். அதோடு விமானிகளுக்குப் பயிற்சியும் அளித்தார். 

அப்பலோ 1969இல் நிலவில் இறங்கியதிலிருந்து இரண்டாண்டுகள் அங்கு பணியாற்றினார். பிறகு அமெரிக்க ஐக்கிய சபை அவரை இலங்கைக்கு விமானப் பொறியியல் கல்லூரி தொடங்க அனுப்பியது. 

இலங்கை அரசு அதை முன்னெடுக்காததால் மீண்டும் அமெரிக்காவிற்குத் திரும்பி 2000ஆம் ஆண்டில் அனைத்துப் பணிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார். இரண்டாண்டுகளுக்கு முன்னால் இயற்கை எய்தினார் சொக்கப்பா.

சொக்கப்பாவிடம் வாழ்க்கையில் உங்களுக்கு மிகவும் வேதனை தரும் நிகழ்வு எது எனக் கேட்டபோது, “பல ஆண்டுகளுக்குப் பின் என் சொந்த நாட்டுக்கு வந்தபோது என்னால் என் மொழியில் பேச முடியவில்லை. மனத்துக்குப் புரிவதை வார்த்தையாக வெளிப்படுத்த முடியவில்லை. என் தாய்மொழியைப் பேச முடியாததால் என் சொந்த மண்ணில் அந்நியனாக நின்றேன்” என்றார்!

பாண்டியன் சுந்தரம் ///


தெரிவு:சக 

kanmani tamil

unread,
Jan 10, 2026, 8:01:34 PM (2 days ago) Jan 10
to vallamai
An icon for courage & wisdom: Major Mohit Sharma

/// Among the fearless warriors of the Indian Army, one name continues to echo across borders and generations — Major Mohit Sharma, a hero whose courage remained unshaken even in the face of death itself. 💪🇮🇳 Born on January 13, 1978, the 6-foot-2-inch officer stood tall not just in stature, but in character — defined by discipline, sharp intellect, and absolute devotion to the nation. He represented the finest traditions of the Indian Army, where leadership is earned in action and sacrifice is a matter of honour.

On March 21, 2009, during a fierce encounter in Kupwara, Major Mohit Sharma displayed extraordinary bravery. Surrounded by intense gunfire, he eliminated four terrorists and, even while gravely wounded, ensured the safety of two of his comrades. That day, he laid down his life for the nation, but in doing so, he secured a place in history that will never fade. His sacrifice was not just an act of valor — it was a defining moment of selflessness and duty. 💔🔥

A master of covert operations, Major Mohit was also known for his exceptional intelligence work. Operating deep behind enemy lines under the alias “Iftikhar Bhatt”, he infiltrated terrorist networks, gained their trust, and secretly relayed crucial intelligence back to Indian forces. These daring missions helped dismantle terror modules and exposed hostile plots, striking at the very foundations of insurgent networks. 🎯 Such operations demanded not only courage, but patience, psychological strength, and unwavering commitment.

His story is not just one of battlefield bravery, but of wisdom, strategy, and an unbreakable love for Bharat Mata. 🇮🇳 Major Mohit Sharma did not fight for recognition — he fought for duty. His legacy reminds us that true heroes are those who quietly give everything so that the nation may live in peace. Some names are not merely remembered; they are saluted forever. 🌟

#MajorMohitSharma #IndianArmy #RealHero #BraveryBeyondFear #IndianSoldier #Patriotism #NationFirst #JaiHind #Inspiration///


தெரிவு: சக 
Reply all
Reply to author
Forward
0 new messages