சுத்தசன்மார்க்க வேண்டுகோள் பாடல் :8...விளக்கம்

322 views
Skip to first unread message

Vallalar Groups

unread,
May 27, 2019, 7:51:07 PM5/27/19
to Vallalar Groups
🙏🔥💧🔥💧🔥💧🔥💧🔥💧🔥💧🔥💧🙏
அருட்பெருஞ்ஜோதி 
அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை 
அருட்பெருஞ்ஜோதி 

🙏🌺🌻 *சுத்தசன்மார்க்க                                வேண்டுகோள் பாடல் :8* 🌻🌺🙏
🙏🔥💧🔥💧🔥💧🔥💧🔥💧🔥💧🔥💧

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு இவ்வெளியவனின் பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 👏

இதற்கு முந்தையப் பதிவுகளில் திருவருட்பா முழுப்பாடல்களின் விளக்கம் காணும் வரிசையில் அருட்பெருஞ்ஜோதி ஆறாம்திருமுறை சுத்தசன்மார்க்க வேண்டுகோள் என்ற தலைப்பில் உள்ள பத்துபாடல்களில் முதல் ஏழு பாடல்களின் பொருள்களை

சிரங்கு நெஞ்சக குரங்கொடு உழலும் சிறுமை குணமுடையவனாகிய நான் எனது அசுத்த அற்ப அறிவினால் திருவருளிடம் விசாரித்து அறிந்தவகையில் ,

துரிசு நிறைந்த எனது அறிவின் தரத்திற்கு தக்கவாறு திருவருளும் கருணையுடன் உணர்த்தியருளவும், 

அதுகொண்டு கடையேன் உணர்ந்து கொண்ட பொருளை, 
நம்மைச் சார்ந்த நமது அருமை சகோதர சகோதரிகளும் அறிந்து உணர்தல் வேண்டும் என்ற ஆவலிலே,
இங்கு 
தங்கள் அனைவருடனும் தயவுடன் பகிர்ந்துகொள்ள முற்படுகின்றேன் 🔥 

கற்றறிந்த சுத்தசன்மார்க்கச் சான்றோர்கள் இச்சிறியேன் சொல்லாலும் பொருளாலும் செய்துள்ள குற்றங்களை, 

அகங்காரத்தின் வெளிப்பாடாகக் கருதாமலும், எனது தனிப்பட்டக் கருத்தை மற்றவர்களுக்கு திணிக்க முயல்கின்றதாய் எண்ணாமலும், 

உலகமெல்லாம் நமது சுத்தசன்மார்க்கம் பரவி ,அதன் பொருட்டு புலைகொலை தவிர்த்த ஒளிநெறியால் இவ்வுலகில் ஜீவகாருண்ய ஒழுக்கம் பெருகி , 
பொருள்நிறை ஒங்கவும்,
தெருள்நிலை விளங்கவும்,
புண்ணியம்  பொற்புற வயங்கி சுத்தசன்மார்க்கம் விருத்தியடையவும் வேண்டுமென்று,

எனக்கெழுந்த பேராவலில் இவையெல்லாம் பதிவுசெய்து வெளிப்படுத்த நேர்ந்தது என்பதை ,
தயவுடன் கருத்தில்கொண்டு, சிறியேன் செய்துள்ள பிழைகள் அனைத்தையும் குணமாகக்கொண்டு பொறுத்தருளுமாறு பணிவுடனும் தயவுடனும் வேண்டிக்கொள்கின்றேன்👏

 பாடல்;🌹 
  *_அச்சா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் .          ஆறந்த நிலைகளெல்லாம் அறிந்தடைதல் வேண்டும்._* 
  
 *பொருள்* ;🌻 
முன்னைய பதிவில் கூறியதுபோன்று சுத்தசன்மார்க்க வேண்டுகோள் என்ற இத்தொடரில் வருகின்ற பத்துப்பாடல்களிலும் நமது வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை  அப்பா , ஐயா ,அண்ணா,அத்தா ,அரசே முதலாக  பத்து விதமான உறவு பெயர்களை முன்வைத்து,

அனைத்துப் பெயர்களும் கடவுள் என்ற ஓர்பொருளையே குறிக்கும் வகையில்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை போற்றித் துதிப்பார்கள் 🔥🙏

அந்த வரிசையில்,
முதல் பாடலில் அப்பா என்றும்
இரண்டாவது பாடலில் ஐயா என்றும் மூன்றாவது பாடலில் அண்ணா என்றும் நான்காவது பாடலில் அத்தா என்றும்,ஐந்தாவது பாடலில் அரைசே என்றும் , ஆறாவது பாடலில் அடிகேள் என்றும் ,ஏழாவது பாடலில் அம்மா என்றும் அழைத்து துதித்த நமது பெருமான் ,

எட்டாவது பாடலாகிய மேற்கண்ட பாடலில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அச்சா என்று அழைக்கின்றார்கள்.
அச்சன் என்றால் தந்தையே என்பது பொருளாக உள்ளது.

அந்தவகையில்,
எனது ஆன்ம சிற்றம்பலத்தில் இருந்து  எனையாளுகின்ற , அருட்பெருஞ்ஜோதி எனது தந்தையே ;

பிள்ளை நான் வேண்டுவதை கேட்டு தயவுடன் எனக்கு அருள்பாலித்திடல் வேண்டும் .

ஆறு அந்தங்களாகிய சுத்த கலாந்தம்,
சுத்த யோகாந்தம்,
சுத்த போதாந்தம்,
சுத்த நாதாந்தம்,
சுத்த சித்தாந்தம்,
சுத்த வேதாந்தம் என்னும் ஆறு அந்தங்களின் நிலைகளிலும் உள்ள அற்புதங்களை எல்லாம் நான் கண்டுகொண்டு ,
அந்த நிலைகளையெல்லாம் நான் அடைந்திடும் வண்ணம் அருள்பாலித்தல் வேண்டும்.🔥🙏

 *பாடல்:* 🌹
 *_எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும் எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்._* 

 *பொருள்* ;
எல்லாவிதத்திலும் உயிர்களுக்கு  ஆதரவாக இருந்து அவைகளின் துன்பத்தைப் போக்கி அவைகளுக்கு சுகத்தை அளித்திடல் வேண்டும்.

என்னைச் சார்ந்து இருக்கின்றவர்கள் அனைவருக்கும் இன்பம் அளித்திடல் வேண்டும்.
🔥👏 

 *பாடல் :🌹* 
 *_இச்சாதி சமயவிகற் பங்களெல்லாம் தவிர்ந்தே_* 
 *_எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்_* 

 *பொருள்;* 
இந்த சாதி சமயம் மதம் என்ற பெயரில் ஜீவர்கள் மனத்தினாலும் கொள்கையினாலும் வேறுபட்டு ஒற்றுமை இழந்து பிரிந்துகிடக்கின்ற நிலைகள் எல்லாம் தவிர்ந்து ,

சாதி சமய பேதம் இல்லாத ,
உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ,
அன்பு கருணை இரக்கமே நிறைந்து விளங்கும் சுத்தசன்மார்க்கம் ஒன்றே எங்கும் தழைந்து ஓங்கி,
எல்லா மார்க்கங்களையும் தன்னுள் அடக்கி நிற்கும் புலைகொலை தவிர்த்த திருவருள்நெறியாம் சுத்தசன்மார்க்க பொதுநெறியில் எல்லா உலகத்தவர்களும் வந்தடைந்து சுத்தசன்மார்க்கத்தையே பற்றி வாழ்ந்திடுதல் வேண்டும்🔥🙏

 *பாடல்;🌹* 
 *_உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும் உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும் வேண்டுவனே_ ;* 

எனது திருச்சிற்றம்பலத்தில் இருந்து ஆடுகின்ற ஆதி அந்தமிலாத் திருவடிவில் நானும் எனது தலைவனுமாகிய நீயும் கலந்து ஒன்றாகி ஓங்குகின்ற ஒருமைநிலையையும் இங்கு வேண்டுகின்றேனே .
என்று பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை சுத்தசன்மார்க்க வேண்டுதல் விண்ணப்பத்தின் மூலம் வேண்டி துதிக்கின்றார்கள் 🔥🙏

இப்படி வேண்டிய பெருமான் , திருவருள் கருணையால் தான் பெற்றுக்கொண்ட நிலைகளையெல்லாம்திருவருட்பாவில் பலப்பாடல்களின் வாயிலாக பதிவுசெய்கின்றார்கள் .
அந்தவகையில் ஆறந்த நிலைகளில் தான் பெற்றுக்கொண்ட அனுபவங்களையும் அதனால் அடைந்த நிலைகளையும் திருவருட்பா ஆறாம் திருமுறையில் *அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர்* என்ற தலைப்பில் உள்ள பத்து பாடல்களில் தெளிவாக விளக்குகின்றார்கள் .
அன்பர்கள் பாடல்களை திருவருட்பாவில் கண்டு தெரிந்துகொள்ளும்படி தயவுடன் வேண்டிக்கொகொள்கின்றேன் 🔥👏
...தயவான நன்றிகள்🙏
....வள்ளல் மலரடிப் போற்றி போற்றி 🙏
...பெருமான் துணையில் 🙏
...தயவுடன் வள்ளல் அடிமை 🙏
...வடலூர் இரமேஷ் ;
IMG-20190528-WA0000.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages