முதன்முதலாக இந்த விளக்கம் தந்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான் என்று படித்த நினைவு.
கனடா தமிழர் பேரா செல்வா கல் என்பதற்கு கருமைப் பொருள் தான் உண்டு வெண்மைப் பொருள் இல்லை என்று தருக்கம் செய்தார். அப்போது நான் கல் வேருக்கு வெண்மைப் பொருள் உண்டு என்று சில சொற்களை தேடி இட்டேன். ஆனால் அவரிடம் இருந்து எந்த விடையும் வரவில்லை. இப்போது வெள்ளொளி என்ற பொருளில் இப்பாடல் வரியில் சொல்லாட்சி உள்ளது சிறப்பு.
மூத்த குடி என்பது போரில் தேர்ந்த தலைமுறை தலைமுறையாக போர் செய்கின்ற போர்க்குடியை பட்டடைகுடியை குறிக்கும்.
வல் / வய் > வள் > வளவள என்றால் இரைசலிட்டு பேசுவது. வயங்கொலி நீர் என்றால் ஓயாமல் இரைச்சலிடும் கடல் என்று தான் பொருள். ஆனால் சொற்பிறப்பியல் பேரகர முதலியில் தெளிந்த என்று தவறாக சுட்டியுள்ளனர்.