வரலாற்றில் தடம் பதித்த கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி

909 views
Skip to first unread message

தேமொழி

unread,
Feb 13, 2021, 6:30:30 AM2/13/21
to தமிழ் மன்றம்



Feb 13, 2021

kan-sastri.JPG

கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி தமிழகத்தின் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் மற்றும் ஆய்வு அறிஞர். தென்னிந்திய வரலாறு குறித்த அவரது நூல்கள் அவரின் சிறப்பான ஆய்வுப் பங்களிப்பாக இன்றும் பேசப்படுகிறது. தமிழக வரலாற்று ஆய்வாளர்களுக்கு இன்றும் வழிகாட்டியாகக் கருதப்படுவது கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் எழுதிய வரலாற்று நூல்கள்தாம்.

கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி என்பது ‘கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாஸ்திரி’ (K. A. Nilakanta Sastri) என்பதன் சுருக்கம். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி என்ற ஊரில், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு எளிய நியோகி பிராமணர் குலத்தில் ஆகஸ்ட் 12, 1892 அன்று பிறந்துவரலாற்றாளர், ஆய்வாளர், பேராசிரியர், எழுத்தாளர் என்று பலவகையில் வரலாற்றுத்துறைக்குப் பங்காற்றி, ஜூன் 15, 1975 அன்று தமது 82 ஆம் வயதில் மறைந்தார். இவர் பள்ளிப் படிப்பையும், அதைத் தொடர்ந்து இளங்கலை படிப்பை நெல்லை ம.தி.தா. இந்து கல்லூரியிலும் முடித்தார். பின்னர் அவரது அண்ணன் நல்கிய பொருளாதார உதவியுடனும், மாணவர் உதவித் தொகை வழங்கிய ஆதரவிலும் மேற்படிப்பை சென்னை தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியில் முடித்து சென்னை மாநில அளவில் முதன்மை மாணவராகத் தேர்வு பெற்று முதுநிலை படிப்பை முடித்தார்.

இவர் தம் ஆசிரியப் பணியை 1913 இல் துவங்கி, திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் விரிவுரையாளராக 5 ஆண்டுகள், வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக 2 ஆண்டுகள் எனப் பணிபுரிந்தார். சீனிவாச சாஸ்திரியின் பரிந்துரையினை ஏற்று பண்டிதர் மதன் மோகன் மாளவியா அவரை வாரணாசி இந்து பல்கலைக்கழகப் பேராசிரியராக ஏற்றக் கொண்டார் (ஸ்ரீராம், 2009). இரு ஆண்டுகளுக்குப் பிறகு அப்பொழுது புதிதாகத் துவக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கலைக்கல்லூரியின் (சிதம்பரம் மீனாட்சிக் கல்லூரி) முதல்வராகப் பொறுப்பேற்று மாணவர்களின் எண்ணிக்கை 70 இல் இருந்து 700 வரை வளர்ச்சியுறும் வகையில் எட்டு ஆண்டுகள் கலைக்கல்லூரியின் வளர்ச்சிக்காகச் சிறப்பாகப் பங்களித்தார். பிறகு 1929ல் திருச்சி நேஷனல் கல்லூரியில் ஓராண்டு வரலாற்றுப் பேராசிரியர் பணி, தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தொல்லியல் பேராசிரியராகப் பொறுப்பேற்று 1947 வரையிலும், அதன் பிறகு தொடர்ந்து மைசூர் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் பேராசிரியராக 1956ஆம் ஆண்டுவரை என இவரது பேராசிரியர் பணி தொடர்ந்தது. மைசூர் மாநிலத்தின் தொல்லியல் துறையின் கெளரவ இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். 1971 ஆம் ஆண்டு வரை இவர் யுனெஸ்கோவின் தென்னிந்தியப் பாரம்பரிய கலாச்சார நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தார். இந்தியப் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருதை 1957ல் இவருக்கு அளித்து இந்திய அரசு இவருக்குச் சிறப்பு செய்தது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராக 1959 ல் தென்னிந்திய வரலாறு பற்றிப் பல சொற்பொழிவுகள் வழங்கினார்.

இவரது வரலாற்று நூல்களும் ஆய்வுகளும் வரலாற்றுத் துறை ஆய்வாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அவரது நூல்கள் வரலாற்றைச் சான்றுகள் அடிப்படையில் வழங்குவது அவற்றின் சிறப்பு என்று வரலாற்றுத் துறை அறிஞர்கள் பாராட்டுகள் வழங்கினர். அவ்வாறே இவரது அணுகுமுறை குறித்த விமர்சனங்களும் உண்டு. இவரது இந்து சமயச் சார்பும், சமஸ்கிருத ஆதரவும், இந்தியாதான் உலகிலேயே சிறந்த நாடு போன்ற கருத்தாக்கமும் இவரது எழுத்தில் வெளிப்படுவதாக விமர்சனங்களும் உள்ளன (சங்கர் கோயல் – 2005) .

பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியை 20 ஆம் நூற்றாண்டு தமிழகத்தின் தலைசிறந்த வரலாற்று எழுத்தாளர் என்று பாராட்டுவார். கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி பற்றி அவர் குறிப்பிடும் மற்றொரு செய்தியும் உண்டு. ‘கன்ஃபஷன்ஸ் ஆஃப் அ ஹிஸ்டரி டீச்சர்’ என்ற கட்டுரையை வங்காள வரலாற்றாளர் ஜாதுநாத் சர்க்கார் (Jadunath Sarkar) 1915ல் மாடர்ன் ரிவ்யூ இதழில் வெளியிட்டார். அக்கட்டுரையில், வரலாறு குறித்த படைப்புகள் வட்டார மொழிகளில் குறைவாக உள்ளன. அக்குறை நீக்க வட்டார மொழிகளில் வரலாற்று நூல்கள் எழுதி வெளியிடப்பட வேண்டும், வட்டார மொழியில் வரலாற்றுப் பாடம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். அப்பொழுது நெல்லை கல்லூரியில் ஆசிரியப் பணியிலிருந்த கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் தமிழைவிட ஆங்கிலம்தான் தனது கருத்துக்களை வெளிப்படுத்த வசதியாக இருப்பதாகவும், வட்டார மொழிகள் அந்த வளமையான மொழிகளாக இல்லாமையே அதற்குக் காரணம் என்று ஜாதுநாத் சர்க்காரின் கருத்துக்கு மறுப்புக் கருத்து தெரிவித்து செய்தித்தாளில் எழுதினார். இக்கருத்துக்கு சுப்பிரமணிய பாரதியார் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்தார் எனப் பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி (A.R.Venkatachalapathy) தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதற்குக் காரணம் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி அந்த அளவு தமிழறியாதவர் என்பதுவும், தமிழ் இலக்கியங்களை ச. வையாபுரிப்பிள்ளையின் விளக்கங்களோடுதான் அவரால் புரிந்து கொள்ள முடிந்தது என்றும், அதனால் காலமாற்றத்துக்கு ஏற்ப கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்களால் தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் கொள்ள இயலவில்லை என்பதும் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களின் கருத்து.

ஜப்பானிய வரலாற்றாசிரியரும், எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆன நொபொரு காராசிமா (Noboru Karashima) அவரது “தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு” (A Concise History of South India, 2014), என்ற நூலில் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்திய வரலாற்று நூலின் சிறப்பை முழுமையான மற்றும் துல்லியமான ஆய்வு எனப் பாராட்டுகிறார். அத்துடன், கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஒரு பிராமணராக இருந்த காரணத்தால் அவர் “தென்னிந்தியச் சமுதாயத்தின் வளர்ச்சியில் வட இந்திய மற்றும் சமஸ்கிருத கலாச்சாரத்தின்” பங்கை வலியுறுத்த விரும்பி அவ்வப்போது வரலாற்றை எழுதுவதில் சார்பு நிலையை மேற்கொள்கிறார் என்றும் சுட்டிக் காட்டினார்.

இவரது சமஸ்கிருத சார்பு மற்றவர்களாலும் சுட்டிக் காட்டப்பட்டதுண்டு. அவர் இளவயது ஆய்வாளராக இருக்கையில், தமிழருக்கென்று நன்கு முதிர்ச்சியடைந்த நிலையில் தனிப்பண்பாடு இருந்தது என்றும் அது அயலார் தாக்கத்தால் பின்னர் மாறியது என்றும் கூறியவர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி. இருப்பினும் பிற்காலத்தில் சங்க காலத்தின் பண்பாடு என்பது இரண்டு தனித்துவமான திராவிட-ஆரியப் பண்பாட்டின் கலவை என்றும் கூறத் துவங்கினார். இறுதியில் இந்தியாவின் பண்பாட்டின் அடிப்படை சமஸ்கிருதம்தான், தமிழகப் பண்பாடும் அதற்கு விதிவிலக்கல்ல என்ற கருத்தை முன்வைக்கத் துவங்கினார் என்கிறார் கணபதி சுப்பையா (2007). இவரது இந்த கருத்தாக்கம் மட்டும் மலேசியாவில் சென்ற நூற்றாண்டில் வெற்றி பெற்றிருந்தால் இன்று சிங்கப்பூரின் சட்டமன்ற மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ தமிழ் இல்லாது போயிருந்திருக்கலாம்.

19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்த நாடுகளில் பொதுமக்கள் அனைவரின் உயர்கல்விக்காகப் பல கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் உருவாகின. இந்த நிலை இந்தியாவிலும், ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்த பிற பிரிட்டிஷ் காலனி நாடுகளிலும் நிகழ்ந்தன. உயர்கல்வி பயிற்று மொழியாக ஆங்கிலமும், இரண்டாவது மொழியாக அந்நாட்டின் மொழியாகவும் தெரிவு செய்யப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் மொழியாகப் பரிந்துரைக்கப் பட்ட சமஸ்கிருதம் நாட்டின் செம்மொழி எனக் கூறப்பட்டது. சமஸ்கிருதம் என்பது ஒரு சமயத்தின் மொழி என்ற பரவலான கருத்து தாக்கத்தால் ஆங்கிலேயர் இதை ஏற்காமல் முடிவெடுக்கும் பொறுப்பை கல்வி நிலையங்களிடமே ஒப்படைத்தனர். செம்மொழித் தகுதி சமஸ்கிருதத்திற்கு மட்டுமல்ல தமிழுக்கும் அத்தகைய தகுதி உண்டு என்று முதன் முதல் எதிர்க்குரல் எழுப்பியவர் கிறிஸ்துவக் கல்லூரியின் பேராசிரியரான பரிதிமாற் கலைஞர். முடிவில் அந்தந்த வட்டாரங்களில் எது மக்களின் மொழியாக வழக்கத்தில் உள்ளதோ அதுவே உயர்கல்வி திட்டத்திற்கான இரண்டாம் மொழி என்ற தீர்மானம் செய்யப்பட்டது (விஸ்வநாதன், 2004).

இதே நிலை ஒருங்கிணைந்த நாடுகளாக இருந்த மலேசிய-சிங்கப்பூர் நாடுகளிலும் இருந்தது. இன்று இந்தியப் பின்புலம் கொண்ட அந்நாட்டு மக்களில் தமிழரே அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர், 60% கக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தமிழரே (சிங்கப்பூர் மக்கட் தொகையில் சீனர் – 75%, மலாய் – 13%, தமிழர் – 5%, பிற இந்தியர் – 4%, மற்றவர் – 3%); சென்ற நூற்றாண்டிலும் இதே நிலைதான் இருந்தது. 1819 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் தமிழர் பெருவாரியாகக் குடியேறி இருந்தனர். ஆங்கிலம், சீனம் (மாண்டரின்), மலாய், தமிழ் மொழிகள் துவக்கத்திலிருந்து நாட்டின் புழக்கத்திலிருந்தது. அதிக இந்தியர் பேசியது தமிழே. மலேயா பல்கலைக் கழகம் துவங்கப்பட்ட பொழுது குடிபெயர்ந்த இந்தியப் பின்புலம் கொண்டவருக்கான மொழியாக என்ன மொழியை பல்கலையில் துவக்கலாம் என்ற கேள்வி எழுந்தது. இந்திய நாட்டின் சார்பில் பேராளராக கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஆங்கிலேய அரசால் மலேயா பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி இந்தியா மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என்று கூறி சமஸ்கிருத மொழியைப் பரிந்துரைத்தார். இதைக் கண்டு வெகுண்டு, 10000 தமிழர்களை ஒருங்கிணைத்து போராட்டத்தில் இறங்கினார் தமிழர்களின் தலைவராக விளங்கிய கோ. சாரங்கபாணி. தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களால் “தமிழவேள்” எனும் சிறப்புப் பட்டமளிக்கப்பட்டு சிங்கப்பூர் தமிழர்களின் தலைவராகப் பாராட்டப்பட்டவர் தமிழவேள் கோ. சாரங்கபாணி. இவர் தமது எதிர்ப்பு முயற்சியால் போராடி வெற்றி பெற்றதால் இந்திய மக்களுக்கான மொழியாக (Department of Indian Studies at the University of Malaya in Singapore) பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று குறிப்பிடுகிறார் சிங்கப்பூர் கவிஞர். நா. ஆண்டியப்பன் (2020). தமிழவேள் கோ. சாரங்கபாணி முன்னெடுப்பில்தான் சிங்கப்பூர் நாட்டின் ஆட்சி மொழியாகவும் தமிழ் இருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி வரலாற்றை எழுதுகையில் கிடைக்கும் இலக்கியச் சான்றுகள், தொல்பொருள், கல்வெட்டு, நாணயவியல் மற்றும் வெளிநாட்டுப் பயணியர் பதிவு செய்த செய்திகள் ஆகிய ஐந்து சான்றுகளையும் கண்டறிந்து அவற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்து வரலாற்றை எழுதும் முறையைக் கையாண்டார். மேலும், கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியைப் பொருத்தவரை வரலாறு குறித்து அவர் கருதியது, வரலாறு என்பது அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே வரலாறு கற்கும் மாணவர் அவர்களுக்குக் கிடைக்கும் சான்றுகள் எங்கு எடுத்துச் சென்றாலும் அதன் வழியில் செல்லத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் வரலாற்றின் முடிவுகள் ஒவ்வொரு தலைமுறையினராலும் அவர்களது காலத்தின் சூழலுக்கு ஏற்ப பார்க்கப்பட்டுப் புரிந்து கொள்ளப்படும்.

இவர் சற்றொப்ப 40 நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் பல தென்னிந்திய வரலாற்று நூல்கள், குறிப்பாகத் தமிழக வரலாறு குறித்த நூல்கள். கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்களின் நூல்களை (1) அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அவரது முக்கியமான வரலாற்றுப் படைப்புகள், (2) பண்பாடு மற்றும் சமூக வரலாறு குறித்த அவரது படைப்புகள், (3) அவர் பதிப்பித்த வரலாற்று நூல்கள், (4) வரலாற்று ஆய்வுமுறைகள் குறித்து அவர் எழுதிய நூல்கள், மற்றும் (5) குறிப்பிடத்தக்க அவரது சிறிய கட்டுரைகளும் இன்னபிற படைப்புகளும் எனப் பகுக்கலாம் என்று சங்கர் கோயல் (2005) வகைப்படுத்துகிறார். 1929ஆம் ஆண்டு முதல் 1975ஆண்டுக்கும் இடைப்பட்ட சுமார் ஒரு அரை நூற்றாண்டு கால இடைவெளியில் 30 வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் தென்னிந்திய வரலாறுபற்றி 25 நூல்களும் அடங்கும். பாண்டிய வரலாறு, சோழர் வரலாறு, நாயக்கர் வரலாறு, பண்டைய தமிழகம் முதல் நாயக்கர் காலம் வரையிலான தமிழக வரலாறு, தென்னிந்தியப் பேரரசுகள், தென்கிழக்காசிய நாடுகளில் தென்னிந்தியத் தாக்கம், தென்னிந்தியாவில் சமய வளர்ச்சி, சங்கப்பாடல்கள் மூலம் அறியும் தமிழக வரலாறு, தமிழர்களின் வரலாறும் பண்பாடும், ஆரிய-திராவிட பண்பாட்டுத் தொடர்பு போன்ற தலைப்புகள் கொண்ட இவரது நூல்கள் தமிழக வரலாறு கற்பவருக்கு இன்றியமையாத வரலாற்று நூல்கள்.



References:
(1) “Historiography of Professor K.A. Nilakanta Sastri”, Dr. Shankar Goyal, Page: 36-50; September 2005, Journal of Indian History and Culture.

(2) “Historiographical analysis of K A Nilakanta Sastri writings on history”, Chinnapan, S; 1991, http://hdl.handle.net/10603/103875

(3) “In Those Days There was No Coffee: Writings in Cultural Histor”; Venkatasalapati, A. Ira (2006). Yoda Press. Page: 2-5; ISBN 81-902272-7-0, ISBN 978-81-902272-7-8.

(4) “Thamizhukku Magudam Sootiya Singapore”, Kavingar Na. Andiappan, Singapore, September 11, 2020. Tamil Heritage Foundation International – Internet Speech Series.

(5) Historic Residences in Chennai – 30, Sriram V., Madras Musings, Vol. XIX NO. 15, November 16-30, 2009.


(7) “Recognising a classic”, S. Viswanathan, The Hindu-Frontline Print edition, November 05, 2004 https://frontline.thehindu.com/social-issues/article30225244.ece

(8) “Sectional President’s Address – Dakṣināpatha: Where does the path lead us?”; Ganapathy Subbiah (2007). Proceedings of the Indian History Congress. 67: 49–81. JSTOR 44147923


C.R. Selvakumar

unread,
Feb 13, 2021, 10:31:58 AM2/13/21
to தமிழ் மன்றம்

அன்புள்ள தேமொழி அவர்களே,


மாபெரும் பங்களிப்பாளரும், ஆளுமையும் கொண்ட, பேராசிரியர் நீலகண்ட சாத்திரியாரைப் பற்றிய

அருமையாக கட்டுரை. மிக்க நன்றி. 


உங்கள் கட்டுரையில் “மற்றும்” என்னும் சொல்லைப்

பல இடங்களில் இருந்து நீக்கியும், கிரந்த எழுத்துகளைக் களைந்தும் (இரண்டோர் இடங்களில

விட்டிருக்கின்றேன்).  ஒருமை-பன்மை, ஓர்-ஒரு ஆகிய திருத்தங்களையும் செய்து

கீழே இட்டுள்ளேன். படித்துப்பாருங்கள் ஏதும் பெரிதாக மாற்றம் இருப்பதாக பெரும்பாலானோர்

உணரமாட்டார்கள்.  எளிய ஒழுக்கமான நடை உரம் சேர்க்கும். என் “திருத்தங்கள்” மிக மிகச் சிறியவை.

இவற்றை நீங்களோ பிறரோ ஏற்கவேண்டுமென்பதற்காகச் செய்யவில்லை. இப்படிச் செய்தால்

பெரிதாக ஏதும் மாற்றமோ, கருத்தோட்டத்தில்  தடையோ  இருக்காது என்று காட்டவே செய்தேன்.

கடைசியாக க.அ. நீலகண்ட சாத்திரி என்றெழுதுவதே நல்லது. முதலிலோ முதலில் வரும் ஒன்றிரண்டு

இடங்களிலோ கே.ஏ. நீலகண்ட சாத்திரி என்று பிறைக்குறிகளுக்குள் எழுதிக்காட்டிவிட்டு

மற்ற இடங்களில் க. அ. நீலகண்ட சாத்திரி என்றெழுதுவ்து நல்ல முறை. 



அன்புடன்

செல்வா



கே. ஏ. நீலகண்ட சாத்திரி தமிழகத்தின் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியராகவும்  ஆய்வு அறிஞராகவும் இருந்தார். தென்னிந்திய வரலாறு குறித்த அவரது நூல்கள் அவரின் சிறப்பான ஆய்வுப் பங்களிப்பாக இன்றும் பேசப்படுகிறது. தமிழக வரலாற்று ஆய்வாளர்களுக்கு இன்றும் வழிகாட்டியாகக் கருதப்படுவது கே. ஏ. நீலகண்ட சாத்திரி அவர்கள் எழுதிய வரலாற்று நூல்கள்தாம்.

 

கே. ஏ. நீலகண்ட சாத்திரி என்பது கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாத்திரி’ (K. A. Nilakanta Sastri) என்பதன் சுருக்கம். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி என்ற ஊரில், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஓர் எளிய நியோகி பிராமணர் குலத்தில் ஆகத்து 12, 1892 அன்று பிறந்துவரலாற்றாளர், ஆய்வாளர், பேராசிரியர், எழுத்தாளர் என்று பலவகையில் வரலாற்றுத்துறைக்குப் பங்காற்றி, சூன் 15, 1975 அன்று தமது 82 ஆம் வயதில் மறைந்தார். இவர் பள்ளிப் படிப்பையும், அதைத் தொடர்ந்து இளங்கலை படிப்பை நெல்லை ம.தி.தா. இந்து கல்லூரியிலும் முடித்தார். பின்னர் அவரது அண்ணன் நல்கிய பொருளாதார உதவியுடனும், மாணவர் உதவித் தொகை வழங்கிய ஆதரவிலும் மேற்படிப்பை சென்னை தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் முடித்து சென்னை மாநில அளவில் முதன்மை மாணவராகத் தேர்வு பெற்று முதுநிலை படிப்பை முடித்தார்.

 

இவர் தம் ஆசிரியப் பணியை 1913 இல் துவங்கி, திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் விரிவுரையாளராக 5 ஆண்டுகள், வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக 2 ஆண்டுகள் எனப் பணிபுரிந்தார். சீனிவாச சாத்திரியின் பரிந்துரையினை ஏற்று பண்டிதர் மதன் மோகன் மாளவியா அவரை வாரணாசி இந்து பல்கலைக்கழகப் பேராசிரியராக ஏற்றக் கொண்டார் (சிரீராம், 2009). இரு ஆண்டுகளுக்குப் பிறகு அப்பொழுது புதிதாகத் துவக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கலைக்கல்லூரியின் (சிதம்பரம் மீனாட்சிக் கல்லூரி) முதல்வராகப் பொறுப்பேற்று மாணவர்களின் எண்ணிக்கை 70 இல் இருந்து 700 வரை வளர்ச்சியுறும் வகையில் எட்டு ஆண்டுகள் கலைக்கல்லூரியின் வளர்ச்சிக்காகச் சிறப்பாகப் பங்களித்தார். பிறகு 1929ல் திருச்சி நேசனல் கல்லூரியில் ஓராண்டு வரலாற்றுப் பேராசிரியர் பணி, தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தொல்லியல் பேராசிரியராகப் பொறுப்பேற்று 1947 வரையிலும், அதன் பிறகு தொடர்ந்து மைசூர் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் பேராசிரியராக 1956ஆம் ஆண்டுவரை என இவரது பேராசிரியர் பணி தொடர்ந்தது. மைசூர் மாநிலத்தின் தொல்லியல் துறையின் கெளரவ இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். 1971 ஆம் ஆண்டு வரை இவர் யுனெசுக்கோவின் தென்னிந்தியப் பாரம்பரிய கலாச்சார நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தார். இந்தியப் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருதை 1957ல் இவருக்கு அளித்து இந்திய அரசு இவருக்குச் சிறப்பு செய்தது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராக 1959 ல் தென்னிந்திய வரலாறு பற்றிப் பல சொற்பொழிவுகள் வழங்கினார்.

 

இவரது வரலாற்று நூல்களும் ஆய்வுகளும் வரலாற்றுத் துறை ஆய்வாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன. அவரது நூல்கள் வரலாற்றைச் சான்றுகள் அடிப்படையில் வழங்குவது அவற்றின் சிறப்பு என்று வரலாற்றுத் துறை அறிஞர்கள் பாராட்டுகள் வழங்கினர். அவ்வாறே இவரது அணுகுமுறை குறித்த விமர்சனங்களும் உண்டு. இவரது இந்து சமயச் சார்பும், சமற்கிருத ஆதரவும், இந்தியாதான் உலகிலேயே சிறந்த நாடு போன்ற கருத்தாக்கமும் இவரது எழுத்தில் வெளிப்படுவதாக விமர்சனங்களும் உள்ளன (சங்கர் கோயல் – 2005) .

 

பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் கே. ஏ. நீலகண்ட சாத்திரியை 20 ஆம் நூற்றாண்டு தமிழகத்தின் தலைசிறந்த வரலாற்று எழுத்தாளர் என்று பாராட்டுவார். கே. ஏ. நீலகண்ட சாத்திரி பற்றி அவர் குறிப்பிடும் மற்றொரு செய்தியும் உண்டு. கன்ஃபஷன்ஸ் ஆஃப் அ ஹிஸ்டரி டீச்சர்என்ற கட்டுரையை வங்காள வரலாற்றாளர் சாதுநாத்து சருக்கார் (Jadunath Sarkar) 1915ல் மாடர்ன் ரிவ்யூ இதழில் வெளியிட்டார். அக்கட்டுரையில், வரலாறு குறித்த படைப்புகள் வட்டார மொழிகளில் குறைவாக உள்ளன. அக்குறை நீக்க வட்டார மொழிகளில் வரலாற்று நூல்கள் எழுதி வெளியிடப்பட வேண்டும், வட்டார மொழியில் வரலாற்றுப் பாடம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். அப்பொழுது நெல்லை கல்லூரியில் ஆசிரியப் பணியிலிருந்த கே. ஏ. நீலகண்ட சாத்திரி அவர்கள் தமிழைவிட ஆங்கிலம்தான் தனது கருத்துக்களை வெளிப்படுத்த வசதியாக இருப்பதாகவும், வட்டார மொழிகள் அந்த வளமையான மொழிகளாக இல்லாமையே அதற்குக் காரணம் என்று சாதுநாத்து சருக்காரின் கருத்துக்கு மறுப்புக் கருத்து தெரிவித்து செய்தித்தாளில் எழுதினார். இக்கருத்துக்கு சுப்பிரமணிய பாரதியார் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்தார் எனப் பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி (A.R.Venkatachalapathy) தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதற்குக் காரணம் கே. ஏ. நீலகண்ட சாத்திரி அந்த அளவு தமிழறியாதவர் என்பதுவும், தமிழ் இலக்கியங்களை ச. வையாபுரிப்பிள்ளையின் விளக்கங்களோடுதான் அவரால் புரிந்து கொள்ள முடிந்தது என்றும், அதனால் காலமாற்றத்துக்கு ஏற்ப கே. ஏ. நீலகண்ட சாத்திரி அவர்களால் தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் கொள்ள இயலவில்லை என்பதும் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களின் கருத்து.

 

சப்பானிய வரலாற்றாசிரியரும், எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆன நொபொரு காராசிமா (Noboru Karashima) அவரது தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு” (A Concise History of South India, 2014), என்ற நூலில் கே. ஏ. நீலகண்ட சாத்திரியின் தென்னிந்திய வரலாற்று நூலின் சிறப்பை முழுமையான, துல்லியமான ஆய்வு எனப் பாராட்டுகிறார். அத்துடன், கே. ஏ. நீலகண்ட சாத்திரி ஒரு பிராமணராக இருந்த காரணத்தால் அவர் தென்னிந்தியச் சமுதாயத்தின் வளர்ச்சியில் வட இந்திய மற்றும் சமற்கிருத கலாச்சாரத்தின்பங்கை வலியுறுத்த விரும்பி அவ்வப்போது வரலாற்றை எழுதுவதில் சார்பு நிலையை மேற்கொள்கிறார் என்றும் சுட்டிக் காட்டினார்.

 

இவரது சமற்கிருத சார்பு மற்றவர்களாலும் சுட்டிக் காட்டப்பட்டதுண்டு. அவர் இளவயது ஆய்வாளராக இருக்கையில், தமிழருக்கென்று நன்கு முதிர்ச்சியடைந்த நிலையில் தனிப்பண்பாடு இருந்தது என்றும் அது அயலார் தாக்கத்தால் பின்னர் மாறியது என்றும் கூறியவர் கே. ஏ. நீலகண்ட சாத்திரி. இருப்பினும் பிற்காலத்தில் சங்க காலத்தின் பண்பாடு என்பது இரண்டு தனித்துவமான திராவிட-ஆரியப் பண்பாட்டின் கலவை என்றும் கூறத் துவங்கினார். இறுதியில் இந்தியாவின் பண்பாட்டின் அடிப்படை சமற்கிருதம்தான், தமிழகப் பண்பாடும் அதற்கு விதிவிலக்கல்ல என்ற கருத்தை முன்வைக்கத் துவங்கினார் என்கிறார் கணபதி சுப்பையா (2007). இவரது இந்த கருத்தாக்கம் மட்டும் மலேசியாவில் சென்ற நூற்றாண்டில் வெற்றி பெற்றிருந்தால் இன்று சிங்கப்பூரின் சட்டமன்ற மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ தமிழ் இல்லாது போயிருந்திருக்கலாம்.

 

19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்த நாடுகளில் பொதுமக்கள் அனைவரின் உயர்கல்விக்காகப் பல கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் உருவாகின. இந்த நிலை இந்தியாவிலும், ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்த பிற பிரித்தானிய காலனி நாடுகளிலும் நிகழ்ந்தன. உயர்கல்வி பயிற்று மொழியாக ஆங்கிலமும், இரண்டாவது மொழியாக அந்நாட்டின் மொழியாகவும் தெரிவு செய்யப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் மொழியாகப் பரிந்துரைக்கப் பட்ட சமற்கிருதம் நாட்டின் செம்மொழி எனக் கூறப்பட்டது. சமற்கிருதம் என்பது ஒரு சமயத்தின் மொழி என்ற பரவலான கருத்து தாக்கத்தால் ஆங்கிலேயர் இதை ஏற்காமல் முடிவெடுக்கும் பொறுப்பை கல்வி நிலையங்களிடமே ஒப்படைத்தனர். செம்மொழித் தகுதி சமற்கிருதத்திற்கு மட்டுமல்ல தமிழுக்கும் அத்தகைய தகுதி உண்டு என்று முதன் முதல் எதிர்க்குரல் எழுப்பியவர் கிறித்துவக் கல்லூரியின் பேராசிரியரான பரிதிமாற் கலைஞர். முடிவில் அந்தந்த வட்டாரங்களில் எது மக்களின் மொழியாக வழக்கத்தில் உள்ளதோ அதுவே உயர்கல்வி திட்டத்திற்கான இரண்டாம் மொழி என்ற தீர்மானம் செய்யப்பட்டது (விசுவநாதன், 2004).

 

இதே நிலை ஒருங்கிணைந்த நாடுகளாக இருந்த மலேசிய-சிங்கப்பூர் நாடுகளிலும் இருந்தது. இன்று இந்தியப் பின்புலம் கொண்ட அந்நாட்டு மக்களில் தமிழரே அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர், 60% கக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தமிழரே (சிங்கப்பூர் மக்கட் தொகையில் சீனர் – 75%, மலாய் – 13%, தமிழர் – 5%, பிற இந்தியர் – 4%, மற்றவர் – 3%); சென்ற நூற்றாண்டிலும் இதே நிலைதான் இருந்தது. 1819 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் தமிழர் பெருவாரியாகக் குடியேறி இருந்தனர். ஆங்கிலம், சீனம் (மாண்டரின்), மலாய், தமிழ் மொழிகள் துவக்கத்திலிருந்து நாட்டின் புழக்கத்திலிருந்தது. அதிக இந்தியர் பேசியது தமிழே. மலேயா பல்கலைக் கழகம் துவங்கப்பட்ட பொழுது குடிபெயர்ந்த இந்தியப் பின்புலம் கொண்டவருக்கான மொழியாக என்ன மொழியை பல்கலையில் துவக்கலாம் என்ற கேள்வி எழுந்தது. இந்திய நாட்டின் சார்பில் பேராளராக கே. ஏ. நீலகண்ட சாத்திரி ஆங்கிலேய அரசால் மலேயா பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். கே. ஏ. நீலகண்ட சாத்திரி இந்தியா மொழியாக சமற்கிருதம் இருக்க வேண்டும் என்று கூறி சமற்கிருத மொழியைப் பரிந்துரைத்தார். இதைக் கண்டு வெகுண்டு, 10000 தமிழர்களை ஒருங்கிணைத்து போராட்டத்தில் இறங்கினார் தமிழர்களின் தலைவராக விளங்கிய கோ. சாரங்கபாணி. தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களால் தமிழவேள்எனும் சிறப்புப் பட்டமளிக்கப்பட்டு சிங்கப்பூர் தமிழர்களின் தலைவராகப் பாராட்டப்பட்டவர் தமிழவேள் கோ. சாரங்கபாணி. இவர் தமது எதிர்ப்பு முயற்சியால் போராடி வெற்றி பெற்றதால் இந்திய மக்களுக்கான மொழியாக (Department of Indian Studies at the University of Malaya in Singapore) பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று குறிப்பிடுகிறார் சிங்கப்பூர் கவிஞர். நா. ஆண்டியப்பன் (2020). தமிழவேள் கோ. சாரங்கபாணி முன்னெடுப்பில்தான் சிங்கப்பூர் நாட்டின் ஆட்சி மொழியாகவும் தமிழ் இருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

 

கே. ஏ. நீலகண்ட சாத்திரி வரலாற்றை எழுதுகையில் கிடைக்கும் இலக்கியச் சான்றுகள், தொல்பொருள், கல்வெட்டு, நாணயவியல், வெளிநாட்டுப் பயணியர் பதிவு செய்த செய்திகள் ஆகிய ஐந்து சான்றுகளையும் கண்டறிந்து அவற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்து வரலாற்றை எழுதும் முறையைக் கையாண்டார். மேலும், கே. ஏ. நீலகண்ட சாத்திரியைப் பொருத்தவரை வரலாறு குறித்து அவர் கருதியது, வரலாறு என்பது அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே வரலாறு கற்கும் மாணவர் அவர்களுக்குக் கிடைக்கும் சான்றுகள் எங்கு எடுத்துச் சென்றாலும் அதன் வழியில் செல்லத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் வரலாற்றின் முடிவுகள் ஒவ்வொரு தலைமுறையினராலும் அவர்களது காலத்தின் சூழலுக்கு ஏற்ப பார்க்கப்பட்டுப் புரிந்து கொள்ளப்படும்.

 

இவர் சற்றொப்ப 40 நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் பல தென்னிந்திய வரலாற்று நூல்கள், குறிப்பாகத் தமிழக வரலாறு குறித்த நூல்கள். கே. ஏ. நீலகண்ட சாத்திரி அவர்களின் நூல்களை (1) அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அவரது முக்கியமான வரலாற்றுப் படைப்புகள், (2) பண்பாடு மற்றும் சமூக வரலாறு குறித்த அவரது படைப்புகள், (3) அவர் பதிப்பித்த வரலாற்று நூல்கள், (4) வரலாற்று ஆய்வுமுறைகள் குறித்து அவர் எழுதிய நூல்கள், (5) குறிப்பிடத்தக்க அவரது சிறிய கட்டுரைகளும் இன்னபிற படைப்புகளும் எனப் பகுக்கலாம் என்று சங்கர் கோயல் (2005) வகைப்படுத்துகிறார். 1929ஆம் ஆண்டு முதல் 1975ஆண்டுக்கும் இடைப்பட்ட சுமார் ஒரு அரை நூற்றாண்டு கால இடைவெளியில் 30 வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் தென்னிந்திய வரலாறுபற்றி 25 நூல்களும் அடங்கும். பாண்டிய வரலாறு, சோழர் வரலாறு, நாயக்கர் வரலாறு, பண்டைய தமிழகம் முதல் நாயக்கர் காலம் வரையிலான தமிழக வரலாறு, தென்னிந்தியப் பேரரசுகள், தென்கிழக்காசிய நாடுகளில் தென்னிந்தியத் தாக்கம், தென்னிந்தியாவில் சமய வளர்ச்சி, சங்கப்பாடல்கள் மூலம் அறியும் தமிழக வரலாறு, தமிழர்களின் வரலாறும் பண்பாடும், ஆரிய-திராவிட பண்பாட்டுத் தொடர்பு போன்ற தலைப்புகள் கொண்ட இவரது நூல்கள் தமிழக வரலாறு கற்பவருக்கு இன்றியமையாத வரலாற்று நூல்கள்.

 

 


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/d036ffb4-2d62-4be3-9fa5-18424a32fbd4n%40googlegroups.com.


--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

S. Jayabarathan

unread,
Feb 13, 2021, 1:07:21 PM2/13/21
to tamilmantram, vallamai, Suvai Selvi, vanna...@gmail.com, vaiyavan mspm, N. Ganesan, C.R. Selvakumar, rajam, kanmani tamil

இப்படிச் சொல்லிச் செய்வது, தூய்மைப் படுத்துவதாய்ச் சொல்லி, வரலாற்று மூலப் படைப்பையே திரிப்பது, இது  மாபெரும் தவறு, இடைச்சொருகல் கள்ளத்துவம்.  ஒருவர் எழுத்து நடை வரலாறு, காலம், கலாச்சாரம், கல்வி, திறமை காட்டுவது.  இது தூய தமிழர் தமிழைக்
காப்பதாய் வேடம் போட்டு கட்டுப்பாடு செய்யும் கயமைத்தனம்.

முடிவில் ஆசிரியர் மூலப்படைப்பு காணாமல் போகும்.

பேரா செல்வா, நீங்கள் உமது தூய தமிழ்க்காப்புப் பணியைத் தொடராதீர் !!! 

சி. ஜெயபாரதன்


rajam

unread,
Feb 13, 2021, 2:41:01 PM2/13/21
to S. Jayabarathan, tamilmantram, vallamai, Suvai Selvi, vanna...@gmail.com, vaiyavan mspm, N. Ganesan, C.R. Selvakumar, kanmani tamil
தேமொழியின் கட்டுரை அருமையான கட்டுரை. அதற்குச் செல்வா இட்ட ‘திருத்தப்பதிவு’ கண்டு நானும் அதிர்ந்தேன்! 

ஒரு கட்டுரை எழுத்தாளரின் படைப்பை அவருடைய ஒத்திசைவின்றித் தமக்கேற்றவாறு திருத்திப் பொதுமன்றத்தில் வெளியிடுவது தவறு என்றுதான் நானும் நினைக்கிறேன். கல்வியுலகில் (in academia) அவ்வாறு நடப்பதில்லை.

கல்லூரித் தமிழாசிரியர் செய்யும் திருத்தங்கள்-கூட வகுப்பிலேயே, மாணவரின் கட்டுரை ஏட்டிலேயே அமையும்; வகுப்பில் பொதுப்படையாக … தவறுகளும் திருத்தமும் என்று விளக்கப்படும்; கல்லூரிப் பொதுமன்றத்துக்குப் போகாது. 


rajam

unread,
Feb 13, 2021, 2:59:08 PM2/13/21
to S. Jayabarathan, tamilmantram, vallamai, Suvai Selvi, vanna...@gmail.com, vaiyavan mspm, N. Ganesan, C.R. Selvakumar, kanmani tamil
இன்னொன்று சொல்ல மறந்தேன் — இந்த நாட்டில் தமிழில் கட்டுரை எழுதி வெளியிட விரும்பும் நண்பர்களின் கட்டுரைகளைத் திருத்தியனுப்பிக்கொண்டிருக்கிறேன்; 
யாரும் நான் செய்த திருத்தங்களைப் பற்றிச் சிறிது-கூட நகைச்சுவையாகப் பொதுமன்றத்தில் சொல்லுவதை விரும்பியதில்லை. 

Praise in Public; criticize in Private … என்று இந்த நாட்டுக்கு வந்தபோது நான் கற்றுக்கொண்ட நல்வழி. 

rajam

unread,
Feb 13, 2021, 3:15:34 PM2/13/21
to tamil...@googlegroups.com
சிறப்பான கட்டுரை, தேமொழி! நன்றியும் பாராட்டும். 
 
இவரும் என் அப்பாவழிப் பாட்டி + பிற உறவினர் எல்லாரும் ஒரே ஊர்க்காரர்கள். அந்தக்காலத்தில் அந்தச் சிற்றூரில்  ஒரே ‘அக்ரகாரத்தில்’ வாழ்ந்திருக்கலாம்! 

முதுகலை வகுப்பில் பேராசிரியர் இலக்குவனார் எங்கள் வகுப்புக்காகப் பயன்படுத்திய நூல் இவரது நூலே! 

பழமை நினைவுகள் (nostalgia)! 


On Feb 13, 2021, at 3:30 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/d036ffb4-2d62-4be3-9fa5-18424a32fbd4n%40googlegroups.com.
<kan-sastri.JPG>

C.R. Selvakumar

unread,
Feb 13, 2021, 3:23:09 PM2/13/21
to S. Jayabarathan, tamilmantram, vallamai, Suvai Selvi, vannan vannan, vaiyavan mspm, N. Ganesan, rajam, kanmani tamil

அடடாவோ!

என்ன ஒரு குமுறல்! சிரிப்புத்தான் வருகின்றது!

நான் சொன்னதைப் பாருங்கள் (கீழே). பொதுவில் இட்ட கட்டுரை, அது பற்றி

என் கருத்தை பொதுவில் வைத்துள்ளேன். இதில் எதுவும் ஒளிவுமறைவு

இல்லை. இது ஒரு கருத்தினை எடுத்துக்காட்ட செய்துகாட்டப்பட்டது.

இது இன்னொரு பதிப்பன்று. கருத்துகளைப் பகிர இட்டிருக்கின்றேன். 



இவற்றை நீங்களோ பிறரோ ஏற்கவேண்டுமென்பதற்காகச் செய்யவில்லை. இப்படிச் செய்தால்

பெரிதாக ஏதும் மாற்றமோ, கருத்தோட்டத்தில்  தடையோ  இருக்காது என்று காட்டவே செய்தேன்.

செல்வா

S. Jayabarathan

unread,
Feb 13, 2021, 3:36:31 PM2/13/21
to C.R. Selvakumar, tamilmantram, vallamai, Suvai Selvi, vannan vannan, vaiyavan mspm, N. Ganesan, rajam, kanmani tamil
பேரா செல்வா,

அனுமதி இன்றி மூல வரலாற்று ஆசிரியர் மூலப் படைப்பைத்
திருத்துவது, திருத்திக் காட்டுது, திருத்துவதை நியாயப் படுத்துவது,
எழுத்து நெறியில்லை.   எழுதப்படா படைப்பு விதி அது [Unwritten Law].

சி. ஜெயபாரதன்

S. Jayabarathan

unread,
Feb 13, 2021, 3:39:48 PM2/13/21
to C.R. Selvakumar, tamilmantram, vallamai, Suvai Selvi, vannan vannan, vaiyavan mspm, N. Ganesan, rajam, kanmani tamil
ஒரு பிழை திருத்தம்

On Sat, Feb 13, 2021 at 3:35 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
பேரா செல்வா,

அனுமதி இன்றி மூல வரலாற்று ஆசிரியர் மூலப் படைப்பைத்
திருத்துவது, திருத்திக் காட்டுது, திருத்துவதை நியாயப் 

தேமொழி

unread,
Feb 13, 2021, 3:59:08 PM2/13/21
to தமிழ் மன்றம்
மிக்க நன்றி பேரா. செல்வா.  
பள்ளியில் ஏற்பட்ட பழக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 
இன்னமும் நான் கையால் எழுதினால் பழைய ளை, லை, றா, ணா, னா போன்றவைதான் வருகிறது. 
அதனால்தான் இலங்கைத் தமிழர்கள் இளமையிலேயே  தமிழ் பயிற்றுவிக்கும் முறை போல நாம் பள்ளியில்  தமிழ் கற்பிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.   
தேவை:  ஒரு தலைமுறைக்கான மாற்றம் போதும்.  

அப்பொழுது பழைய அச்சு நூல்களையும், அதில் இருக்கும்   தாள முடியாத அளவு சமற்கிருதக் கலப்பையும்  நாம் படித்தால் புரிந்து கொண்டு கடந்துவிடுவது போல என்தலைமுறை கிரந்த எழுத்து   கலப்பையும் எதிர்காலத் தமிழர்கள் கையாளத் தொடங்கிவிடுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். 

திருத்தம் செய்து அளித்தமைக்கு நன்றி.  
திருத்தம் செய்து தரும் நுணுக்கமான பார்வை கொண்டவர் உதவியும் நமக்குத் தேவை. 
தமிழர்களின் எழுத்துமுறை மாற்றம் பெற்று வளர்ச்சி அடைந்து காலத்திற்கேற்ப , எழுதும்  முறைகளுக்கு ஏற்ப தெளிவை  நோக்கிச் செல்வதாகவே நாம் எண்ணுகிறேன். 
மீண்டும்.. உங்கள் கருத்துரைக்கும், அறிவுரைக்கும், திருத்தங்களுக்கும் நன்றி.. நன்றி.. 

தேமொழி

unread,
Feb 13, 2021, 4:01:49 PM2/13/21
to தமிழ் மன்றம்
கருத்துரைக்கும், மேலதிக கருத்துப் பகிர்வுக்கும் நன்றி அம்மா.   

தேமொழி

unread,
Feb 13, 2021, 4:16:20 PM2/13/21
to தமிழ் மன்றம்
///அனுமதி இன்றி மூல வரலாற்று ஆசிரியர் மூலப் படைப்பைத்
திருத்துவது, திருத்திக் காட்டுது, திருத்துவதை நியாயப் படுத்துவது,
எழுத்து நெறியில்லை.   எழுதப்படா படைப்பு விதி அது [Unwritten Law]./////


நன்றி ஐயா, 

ராஜம் அம்மா கவனத்திற்குக் கொண்டு வந்தது போல நீங்கள் நகைச்சுவை எழுத்தாளராக மாறி வருகிறீர்கள் போல. 

நான்தான் கவனிக்கத் தவறி விட்டிருக்கிறேன் 😞😔😔.  

இப்பொழுது சொல்லிவிடுங்கள்  .. 

தெளிவாக .. இறுதியாக...  ஒரு சொல்... ஒரே ஒரு சொல்..   

செய்யலாம் அல்லது கூடாது. 

இரண்டில் ஒன்று..    

மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய்  வாழ்த்தில் 
"தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" வரியில் 
திராவிடம் என்பதை மாற்றலாமா கூடாதா? 

C.R. Selvakumar

unread,
Feb 13, 2021, 4:56:47 PM2/13/21
to தமிழ் மன்றம்

அன்புள்ள தேமொழி அவர்களே,


உங்கள் மடலுக்கு மிக்க நன்றி. மீண்டும்

சொல்லிக்கொண்கின்றேன். உங்கள் கட்டுரையைத்

திருத்துவது என் நோக்கம் அன்று. கிரந்தத்தைக் களைந்து

எழுதினால், ஏதும் பெரிதாக கருத்தோட்டம் தடைபடாது

என்பதை உணரலாம் என்பதற்காகவே செய்துகாட்டியது. 

நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளாததற்கு நன்றி. 

உங்களுடையதாவது புதினமல்லா கட்டுரை.

முன்னர் புதுமைப்பித்தன் கதை ஒன்றையும் 

இப்படி கிரந்தம் நீக்கி எழுதிக்காட்டினேன்.

கதையோட்டத்திலோ சுவையிலோ ஏதும்

குறைவு பட்டதாக யாரும் சொல்லவில்லை.

இவை வெறும் செய்துகாட்டல்தானே அன்றி

‘திருத்திய பதிப்பு’ அன்று. 

ஆங்கிலத்தில் Tamil என்றெழுதுவதை ஏற்கின்றோம்.

சமற்கிருதம் அல்லது சமசுகிருதம் என்றெழுவதை ஏன்

தனித்தமிழ் என்று கருதுகின்றனர். தனி ஆங்கிலம் என்று

யாரும் சொல்கின்றர்களா? 


அன்புடன்

செல்வா

தேமொழி

unread,
Feb 13, 2021, 5:34:59 PM2/13/21
to தமிழ் மன்றம்
பிறமொழியில் குறைபாடு இருக்கலாம், அது ஏற்கத்தக்கதே; 
அது அந்த மொழியின் தனித்தன்மை என்ற பரந்த நோக்கம் கொண்டவர்களாக நம் மக்கள்  இருக்கிறார்கள். 
அத்தகைய மொழி  மாறவேண்டும்,  புது எழுத்துக்களைச் சேர்த்துக்   குறைகளை நீக்க  வேண்டும் என்று யாருமே  நினைப்பதில்லை. 

ஆனால் தமிழ் என்றால் எல்லோருக்கும் அந்த  மனப்பான்மை மாறிவிடுகிறது. 
தமிழில் அது இல்லை இது இல்லை என்று குறை கூறும் வழக்கம் வருகிறது.  
பேரா.  செல்வா நீங்கள் திருத்தம் செய்து காட்டியதை நான்  தவறாகவே கொள்ளவில்லை. நன்றி. 
உங்கள் தமிழ் ஆர்வமும் பங்களிப்பையும் என்றும் மதிப்பவர்களில் நானும் ஒருத்தி. 

S. Jayabarathan

unread,
Feb 13, 2021, 5:40:44 PM2/13/21
to tamilmantram

////ஆங்கிலத்தில் Tamil என்றெழுதுவதை ஏற்கின்றோம்.

சமற்கிருதம் அல்லது சமசுகிருதம் என்றெழுவதை ஏன்

தனித்தமிழ் என்று கருதுகின்றனர். தனி ஆங்கிலம் என்று

யாரும் சொல்கின்றர்களா? 


அன்புடன்

செல்வா////


பேரா செல்வா,


Tamil  என்பதை ஏற்பதாய் ஏற்றுக் கொள்ளும் செல்வா Thamizh என்று தானாக முன்னோடியாக ஏன் எழுதத் தயங்குகிறார் ??? 


பிறரும் ஏற்றுக் கொள்ளலாம் என்று சொல்லாமல் சொல்கிறார்.


சி. ஜெயபாரதன்

S. Jayabarathan

unread,
Feb 13, 2021, 6:10:10 PM2/13/21
to tamilmantram, vallamai, mintamil, C.R. Selvakumar, tsj...@gmail.com, vanna...@gmail.com, N. Ganesan, kanmani tamil, rajam
தேமொழி,

////பேரா.  செல்வா நீங்கள் திருத்தம் செய்து காட்டியதை நான்  தவறாகவே கொள்ளவில்லை. நன்றி. 
உங்கள் தமிழ் ஆர்வமும் பங்களிப்பையும் என்றும் மதிப்பவர்களில் நானும் ஒருத்தி.////


தங்க ஊசி குத்தினால் 
வலிக்காது !
பேரா செல்வா கைவிரல் 
உடனே
தேராமல், கேளாமல்
திருத்தியது
உங்கள் படைப்பா ?
யாரோ ஓர்
அந்தண மேதை
செய்த
செந்தமிழ் ஆக்கம்.
படைப்பு நெறி தவறிய
துணிச்சல் இது !
துருவேறிய
ஊசி குத்தின்
பாயும் வேங்கை,
பணிந்து
வணங்கி நன்றி நவிலும்
அணங்கு இப்போ !
எல்லாம்
ஓர் நாடகம் !


சி. ஜெயபாரதன்
============


rajam

unread,
Feb 13, 2021, 9:13:45 PM2/13/21
to tamil...@googlegroups.com
தேமொழி! நீங்களும் நகைச்சுவையில் தேர்ந்துவருவதாகத் தெரிகிறது! செல்வாவின் தமிழ்மன்றம் சிறந்த கலகலப்போடு வீரநடை போடுகிறது! ;-) 

வாழ்க வளமுடன்!



S. Jayabarathan

unread,
Feb 14, 2021, 2:43:16 PM2/14/21
to tamilmantram, vallamai, mintamil, tsj...@gmail.com, C.R. Selvakumar, rajam, vanna...@gmail.com, N. Ganesan, kanmani tamil, Oru Arizonan

////அன்புள்ள தேமொழி அவர்களே,


உங்கள் மடலுக்கு மிக்க நன்றி. மீண்டும்

சொல்லிக்கொண்கின்றேன். உங்கள் கட்டுரையைத்

திருத்துவது என் நோக்கம் அன்று. கிரந்தத்தைக் களைந்து

எழுதினால், ஏதும் பெரிதாக கருத்தோட்டம் தடைபடாது

என்பதை உணரலாம் என்பதற்காகவே செய்துகாட்டியது. 

நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளாததற்கு நன்றி. 

உங்களுடையதாவது புதினமல்லா கட்டுரை.


முன்னர் புதுமைப்பித்தன் கதை ஒன்றையும் 

இப்படி கிரந்தம் நீக்கி எழுதிக்காட்டினேன்.

கதையோட்டத்திலோ சுவையிலோ ஏதும்

குறைவு பட்டதாக யாரும் சொல்லவில்லை.

இவை வெறும் செய்துகாட்டல்தானே அன்றி

‘திருத்திய பதிப்பு’ அன்று. /////


பேரா செல்வா,  இப்படி வாடிக்கையாக மூலத்தை மாற்றும்

கள்ளத் தனத்தை பல்லாண்டு செய்து வருவதை, செய்ததை

நியாயப் படுத்தி மூலபடைப்புகளில், தன் கயமைத்தனத்தை

நிலைநாட்டி, தூய தமிழருக்குத் தலைவராய் கீரீடம் அணிந்துள்ளார்.


இந்த கள்ளப் பணிக்கு முன்பே திட்டமிட்டு, அந்தண மேதை நீல கண்ட சாஸ்திரிக்கு பொட்டு வைத்து, ஒரு பலி ஆடாய்

வெட்டுவதற்கு முனைவர் தேமொழி [பெரியார் சீடர், பிராமண வெறுப்பாளர் ]  ஏன் வலையில் ஏற்றினார் என்று

தெரிய வில்லை எனக்கு.  அந்தணர் சாஸ்திரி மூலத்தை அனுமதி

யின்றி மாற்றிய பேரா செல்வாவை, கைதட்டிப் பாராட்டுகிறார் 

தேமொழி.


=======================

தேமொழி பதில் கீழே

////பேரா.  செல்வா நீங்கள் திருத்தம் செய்து காட்டியதை நான்  தவறாகவே கொள்ளவில்லை. நன்றி. 
உங்கள் தமிழ் ஆர்வமும் பங்களிப்பையும் என்றும் மதிப்பவர்களில் நானும் ஒருத்தி.////


இப்போ
என் பாடல் கீழே

தங்க ஊசி குத்தினால் 
வலிக்காது !
பேரா செல்வா கைவிரல் 
உடனே
தேராமல், கேளாமல், 
திருட்டுத் தனமாய் செல்வா
திருத்தியது
தேமொழி படைப்பில்லை !
யாரோ ஓர்
அந்தண மேதை,
நீல கண்ட சாஸ்திரி யார்
செந்தமிழ் ஆக்கம்.
சாஸ்திரியை 
சாத்திரி யாக்கி அவரைக்
கேலி செய்து,
போலி ஆக்குவது
பேரா செல்வா, துணைக்கு
தேமொழி.
படைப்பு நெறி தவறிய
துணிச்சல் இது !
துருவேறிய 
குத்தூசி குத்தினால்
பாயும் வேங்கை,
பணிந்து
வணங்கி நன்றி நவிலும்
அணங்கு இப்போ !
எல்லாம்
நகைப்பு நாடகமா ?
நிழல்
நிஜமாகுது !


சி. ஜெயபாரதன்
============

rajam


  




S. Jayabarathan

unread,
Feb 14, 2021, 2:57:57 PM2/14/21
to tamilmantram, vallamai, mintamil, tsj...@gmail.com, C.R. Selvakumar, rajam, vanna...@gmail.com, N. Ganesan, kanmani tamil, Oru Arizonan
//////நன்றி ஐயா, 

ராஜம் அம்மா கவனத்திற்குக் கொண்டு வந்தது போல நீங்கள் நகைச்சுவை எழுத்தாளராக மாறி வருகிறீர்கள் போல. 

நான்தான் கவனிக்கத் தவறி விட்டிருக்கிறேன் 😞😔😔.  

இப்பொழுது சொல்லிவிடுங்கள்  .. 

தெளிவாக .. இறுதியாக...  ஒரு சொல்... ஒரே ஒரு சொல்..   

செய்யலாம் அல்லது கூடாது. 

இரண்டில் ஒன்று..    

மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய்  வாழ்த்தில் 
"தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" வரியில் 
திராவிடம் என்பதை மாற்றலாமா கூடாதா? ///////

இது திசைமாற்றம்.

பழைய குப்பையைக் கிளறி, நகைச்சுவை கருத்தாளி நான் என்று
என்னைப் பலர் புறக்கணிக்க முனைவர் தேமொழி பெரும்பாடு
படுகிறார்.

சி. ஜெயபாரதன்

===================================

rajam

unread,
Feb 14, 2021, 3:13:46 PM2/14/21
to S. Jayabarathan, tamilmantram
வணக்கம் ஜெயபாரதன் ஐயா. 

யார் என்ன/எப்படி எழுதினாலும் உங்களையும் உங்கள் படைப்புகளையும் யாராலும் புறக்கணிக்க முடியாது ஐயா. கவலற்க. 

[தற்குறிப்பு: தங்கள் அண்டை வீட்டில் நான் வாழமுடியவில்லையே என்று அடிக்கடி நினைப்பேன். மதுரையில் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறோம், படித்திருக்கிறோம். என் நெருங்கிய தோழிகள் சிலர் நீங்கள் படித்த அதே கல்லூரியில் அதே துறையில் முதுகலை வகுப்பில் படித்திருக்கிறார்கள். எந்த ஆண்டு என்று கேட்டுப் பார்க்கிறேன். இப்போது இங்கே எழுதினால் அது திசைதிருப்புதலாய் அமையும்.]

அன்புடன்,
ராஜம் 

S. Jayabarathan

unread,
Feb 14, 2021, 4:04:06 PM2/14/21
to rajam, tamilmantram, tsj...@gmail.com, kanmani tamil, N. Ganesan, C.R. Selvakumar, vallamai, mintamil
வணக்கம் ராஜம் அம்மா,

தேமொழி ஒரு திறமுள்ள கூரிய ஆயுதம் ஏந்திய கருப்பணிப் போராளி.  பாருங்க, உங்க பெயரைச் சொல்லி நகைப்பாளி 
நானென்று நெஞ்சைக் கீறுவது எத்தகைய சாணக்கியம் ? அந்தண வெறுப்பாளி, நீல கண்ட சாஸ்திரியைப் பலி ஆடாய்
இழுத்து வந்து, பேரா செல்வாவின் வீட்டு வாசல் தூணில் கட்டிப்
போட்டிருக்கிறார்.  நீல கண்ட சாஸ்திரி மூல வரலாற்றை மாற்ற இதுபோல் ஒரு வாய்ப்புக்கு ஏங்கி முனைவர் தேமொழி காத்திருந்தது போல் தெரியுது எனக்கு.

இது திசை திருப்புதான்

நான் மதுரைக் கல்லூரியில் 1950 - 1952 ஆண்டுகளில் பியூசி. நான் படித்த உயர்நிலைக் கல்விக்கூடம் திருமங்கலம் பாண்டிய
குல சத்திரிய நாடார் உயர்நிலை பள்ளி.  நான் ஐந்து வயதில் தமிழ் கற்றது பாரதியாரிடம்.  பள்ளித் தமிழ், கல்லூரித் தமிழ் கற்பித்தவர் அனைவரும் பிராமணர்.  பாரதி பித்தன் என்னும் புனை பெயரில்
தந்தையார் வீட்டிலும், நாட்டிலும் பாரதியார் தேசீய /இறைமைப்
பாடல்களைப் பாடுவார்.  என்னைப் பாட வைப்பார்.

அன்புடன்
சி. ஜெயபாரதன்

==================

தேமொழி

unread,
Feb 14, 2021, 5:28:29 PM2/14/21
to தமிழ் மன்றம்
////நான் மதுரைக் கல்லூரியில் 1950 - 1952 ஆண்டுகளில் பியூசி. ////

1950 - 1952 ஆண்டுகளில் பியூசி படித்திருக்க வாய்ப்பே இல்லை.  
இண்ட்டர்மீடியட்   என்ற இரு ஆண்டு கல்வி முறை இருந்த காலம் அது.  
ஐயா, நீங்கள் அப்பொழுது பிறந்து, படித்திருந்தாலும் மறந்துவிட்டீர்கள். 
நான் அப்பொழுது பிறக்கவே இல்லை என்றாலும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 

என் அப்பாவுடன்தான்;  அவர் கும்பகோணம் கல்லூரியில் படித்த பொழுதுதான்  இண்ட்டர்மீடியட் முடிவுக்கு வந்தது. 
அவர் இரு ஆண்டு கல்வி முறை இண்ட்டர்மீடியட் என்பதை முடித்து வைத்தார். (அவருக்கு அடுத்து வந்த மாணவர்கள் பியூசி படிக்கத் துவங்கினார்கள்)  
நான் என் பங்குக்கு பியூசி என்பதை  முடித்து வைத்தேன் (1978-1979). 
இவை எல்லாம் முடிவல்ல மற்றொரு தொடக்கம். 

------
1950 களின் மத்தியில்  இண்ட்டர்மீடியட்   கல்வி முறை மாற்றி அமைக்கப் பட்டது. 
1955-57 காலத்துக்  கல்வியாண்டில் படித்தவர்களே கல்லூரிகளில் இறுதிப் பிரிவு இண்ட்டர்மீடியட் வகுப்பு  மாணாக்கர்கள். 
இண்ட்டர்மீடியட்   வகுப்புகளுக்குப் பதிலாக ஓராண்டு பயிலும் புகுமுகவகுப்புகள் (Pre University Course, popularly known as PUC) கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. 
கல்வியாண்டு 1956-57 புகுமுகவகுப்பில் படித்தவர்களே முதல் பிரிவினர்.  

///தேமொழி ஒரு திறமுள்ள கூரிய ஆயுதம் ஏந்திய கருப்பணிப் போராளி.  பாருங்க, உங்க பெயரைச் சொல்லி நகைப்பாளி 
நானென்று நெஞ்சைக் கீறுவது எத்தகைய சாணக்கியம் ? /////

ஐயா என்னிடம் சாட்டை, தடி போன்ற ஆயுதங்கள்  இல்லை. 
அத்துடன் ராஜம் அம்மா என்னையும்  நகைச்சுவை  எழுத்தாளர்  என்று பாராட்டியுள்ளார்கள். 

------
திசை திருப்புவது  பற்றி கவலை வேண்டாம் ஐயா - தொடருங்கள் 

S. Jayabarathan

unread,
Feb 14, 2021, 6:04:07 PM2/14/21
to tamilmantram, vallamai, mintamil, rajam, C.R. Selvakumar, N. Ganesan, kanmani tamil
On Sun, Feb 14, 2021 at 5:28 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
////நான் மதுரைக் கல்லூரியில் 1950 - 1952 ஆண்டுகளில் பியூசி. ////

///1950 - 1952 ஆண்டுகளில் பியூசி படித்திருக்க வாய்ப்பே இல்லை.  
இண்ட்டர்மீடியட்   என்ற இரு ஆண்டு கல்வி முறை இருந்த காலம் அது.  
ஐயா, நீங்கள் அப்பொழுது பிறந்து, படித்திருந்தாலும் மறந்துவிட்டீர்கள். 
நான் அப்பொழுது பிறக்கவே இல்லை என்றாலும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ///

இந்த பியூசி பதில் இப்போ உள்ளவர் புரிய எழுதியது.



என் அப்பாவுடன்தான்;  அவர் கும்பகோணம் கல்லூரியில் படித்த பொழுதுதான்  இண்ட்டர்மீடியட் முடிவுக்கு வந்தது. 
அவர் இரு ஆண்டு கல்வி முறை இண்ட்டர்மீடியட் என்பதை முடித்து வைத்தார். (அவருக்கு அடுத்து வந்த மாணவர்கள் பியூசி படிக்கத் துவங்கினார்கள்)  
நான் என் பங்குக்கு பியூசி என்பதை  முடித்து வைத்தேன் (1978-1979). 
இவை எல்லாம் முடிவல்ல மற்றொரு தொடக்கம். 

------
1950 களின் மத்தியில்  இண்ட்டர்மீடியட்   கல்வி முறை மாற்றி அமைக்கப் பட்டது. 
1955-57 காலத்துக்  கல்வியாண்டில் படித்தவர்களே கல்லூரிகளில் இறுதிப் பிரிவு இண்ட்டர்மீடியட் வகுப்பு  மாணாக்கர்கள். 
இண்ட்டர்மீடியட்   வகுப்புகளுக்குப் பதிலாக ஓராண்டு பயிலும் புகுமுகவகுப்புகள் (Pre University Course, popularly known as PUC) கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. 
கல்வியாண்டு 1956-57 புகுமுகவகுப்பில் படித்தவர்களே முதல் பிரிவினர்.  

///தேமொழி ஒரு திறமுள்ள கூரிய ஆயுதம் ஏந்திய கருப்பணிப் போராளி.  பாருங்க, உங்க பெயரைச் சொல்லி நகைப்பாளி 
நானென்று நெஞ்சைக் கீறுவது எத்தகைய சாணக்கியம் ? /////

 இந்த இழையில் << திராவிடம் >> பற்றிக் கேட்ட கிண்டல் வினா எதற்கு ?

சி. ஜெ.


////ஐயா என்னிடம் சாட்டை, தடி போன்ற ஆயுதங்கள்  இல்லை. ///

திரிக்கும், புரட்டும் சொல்லாயுதம் உள்ளதே
////அத்துடன் ராஜம் அம்மா என்னையும்  நகைச்சுவை  எழுத்தாளர்  என்று பாராட்டியுள்ளார்கள். ////

உடனே << திராவிடம் >> நகச்சுவை வந்ததா ?

S. Jayabarathan

unread,
Feb 14, 2021, 6:18:05 PM2/14/21
to tamilmantram, vallamai, mintamil, tsj...@gmail.com, rajam, N. Ganesan, C.R. Selvakumar, kanmani tamil, Oru Arizonan
தேமொழி

நீல கண்ட சாஸ்திரியை இழுத்து வந்து, மூல வரலாற்றைப்
பேரா செல்வா நாசமாக்க, ஊக்குவித்த முதல் காரணியாக, துணையாக இருந்தது ஏன் ? ஏன் ? ஏன் ?  யார் அனுமதியில் 
செய்தீர் ???

மூல நூலைச் சிதைத்தாக சட்ட நடவடிக்கை உங்கள் மீதும், பேரா
செல்வா மீதும் யாராவது தொடரலாம் ! 

சி. ஜெ.

On Sat, Feb 13, 2021 at 6:30 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

தேமொழி

unread,
Feb 14, 2021, 6:19:27 PM2/14/21
to தமிழ் மன்றம்
///இந்த இழையில் << திராவிடம் >> பற்றிக் கேட்ட கிண்டல் வினா எதற்கு ?////

அது கிண்டல் வினா அன்று ஐயா. 
ஒருவர் எழுத்தை மாற்றலாமா கூடாதா என்பது குறித்த உங்கள் கொள்கை ஒரு நிலையற்ற வகையில்  இடத்திற்குத் தகுந்தாற்போல மாறுவதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு. 

கிண்டல் வினா ???  இது கொளல் வினா என்ற பிரிவில் வரும் என நினைக்கிறேன் 

தேமொழி

unread,
Feb 14, 2021, 6:28:51 PM2/14/21
to தமிழ் மன்றம்
On Sunday, February 14, 2021 at 3:18:05 PM UTC-8 Jay wrote:
தேமொழி

நீல கண்ட சாஸ்திரியை இழுத்து வந்து, மூல வரலாற்றைப்
பேரா செல்வா நாசமாக்க, ஊக்குவித்த முதல் காரணியாக, துணையாக இருந்தது ஏன் ? ஏன் ? ஏன் ?  யார் அனுமதியில் 
செய்தீர் ???


ஐயா அது நான் எழுதிய கட்டுரை 

என் கட்டுரையை  - demonstration purpose - என்ற வகையில் பேரா. செல்வா திருத்தம் செய்து விளக்கம் அளித்ததை நான் நல்ல வழிகாட்டல் முறையாகவே மதிக்கிறேன்.

அப்படித்தான் வகுப்பில் பாடங்கள் நடத்தப்படும்.  

அந்தவகையில் தமிழ் எழுத்தாளர்கள்  பயன்பெறும் வகையில்  - என் கட்டுரையையும்,  பேரா. செல்வா அதில்  வழங்கிய மாற்றங்களையும் பாட அடிப்படையிலேயே இணையத்தில் எங்காவது போட்டும் வைக்கலாம்.  

மேலும், நான் ஒரு கட்டுரை எழுத வேண்டுமானால் யாருடைய அனுமதியையும் பெறத் தேவையே இல்லை.  அது எனது எழுத்துரிமை. 

S. Jayabarathan

unread,
Feb 14, 2021, 6:31:14 PM2/14/21
to tamilmantram, vallamai, mintamil, rajam, N. Ganesan, C.R. Selvakumar, kanmani tamil
உங்கள் கருணா நிதிதான் தன் விருப்பத்துக்கு ஏற்ப பாடலை  அறுத்தவர் முதலில்.  திரவிட நற்றிரு நாடு இந்திய வரைபடத்தில் இல்லை. 

செத்துப் புதைந்த திராவிட நாட்டுக்கு ஒப்பாரி வைக்கிறார் தமிழ் மாணவர் இப்போது !!!

சி.ஜெ. 

S. Jayabarathan

unread,
Feb 14, 2021, 6:39:51 PM2/14/21
to tamilmantram, rajam, C.R. Selvakumar, N. Ganesan
கட்டுரையில் ஏன் உங்கள் பெயரைக் குறிப்பிட வில்லை ??? 
தான் எழுதியாகச் சொல்ல ஏன் இத்தனை நாள் தயக்கம், தாமதம் செய்தீர் ???  எப்போது எழுதியது ???  ஏன் எழுதியது ??? இப்போது ஏன் வெளியானது ??? 

சி. ஜெ.

தேமொழி

unread,
Feb 14, 2021, 6:44:20 PM2/14/21
to தமிழ் மன்றம்

கருணாநிதி  - பிறமொழியைத்  தாழ்த்திப் பேசும் வரிகள் தமிழ்த்தாய் பாடலில் ஏன் இடப் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் மதி நுட்பட்டதுடன் அவற்றை தக்க வகையில் நீக்கினார். சுருக்கிய வடிவம் கொடுத்தார். 

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்.. 


இன்றும் இந்திய  நாட்டுப் பண்ணிலும் குறுகிய வடிவம் உண்டு 
அது இந்திய அரசின் தளத்திலேயே உண்டு. 


A short version consisting of the first and last lines of the National
Anthem is also played on certain occasions. It reads as follows:
 Jana-gana-mana-adhinayaka jaya he
 Bharata-bhagya-vidhata.
 Jaya he, jaya he, jaya he,
 Jaya jaya jaya jaya he. 



S. Jayabarathan

unread,
Feb 14, 2021, 6:45:04 PM2/14/21
to tamilmantram, rajam, C.R. Selvakumar, N. Ganesan
மன்னிக்கவும். உங்கள் பெயர் கட்டுரையில் உள்ளது.

சி. ஜெ.

தேமொழி

unread,
Feb 14, 2021, 6:47:15 PM2/14/21
to தமிழ் மன்றம்
On Sunday, February 14, 2021 at 3:39:51 PM UTC-8 Jay wrote:
கட்டுரையில் ஏன் உங்கள் பெயரைக் குறிப்பிட வில்லை ??? 


நீங்கள் பார்க்கவில்லை என்று சொல்லுங்கள் ஐயா !!!!!
இதுதான் முதல் பதிவு - என் பெயர் இருக்கிறதா ? இல்லையா?  


நான் வேண்டுமானால்  என் படைப்பைத்  திருட்டு என்று சொன்னதற்கு உங்கள் மீது  வழக்கு அவதூறு  போடலாம் 

தேமொழி

unread,
Feb 14, 2021, 7:25:26 PM2/14/21
to தமிழ் மன்றம்

/////மூல நூலைச் சிதைத்தாக சட்ட நடவடிக்கை உங்கள் மீதும், பேரா
செல்வா மீதும் யாராவது தொடரலாம் ! ////

இவ்வாறு ஓர் அவதூறு  குற்றச்சாட்டு - இத்தனை பேருக்குச் சென்றுள்ளது 
tamilmantram, vallamai, mintamil, tsj...@gmail.com, rajam, N. Ganesan, செல்வா, kanmani tamil, oruarizonan

ஆனால் .. அது என்னுடைய கட்டுரை என்று நான் அளித்த விளக்கம் 
tamilmantram, rajam, செல்வா, N. Ganesan
இவர்களுக்கு மட்டுமே சென்றுள்ளது 

மற்றவர் பிற குழுமங்களில்  இருப்பவர்களுக்கு என் மீது குற்றம் இல்லை என்ற செய்தி ஏன் போகவில்லை ?
அக்குழுமங்களில் இருப்பவர்களுக்கு (ஆனால் இங்கு இல்லாதவர்களுக்கு)   எனது செயல்பாடு பிழையானதாகாக்  காட்டப்பட்டால் மட்டும் போதுமா ?
கவனக் குறைவால் பிழை நேர்ந்துவிட்டது என்ற விளக்கம் ஏன் போகவில்லை?

S. Jayabarathan

unread,
Feb 14, 2021, 8:21:47 PM2/14/21
to tamilmantram
நீங்கள் திருடிய இழைகள் ஈதோ :

References:
(1) “Historiography of Professor K.A. Nilakanta Sastri”, Dr. Shankar Goyal, Page: 36-50; September 2005, Journal of Indian History and Culture.

(2) “Historiographical analysis of K A Nilakanta Sastri writings on history”, Chinnapan, S; 1991, http://hdl.handle.net/10603/103875

(3) “In Those Days There was No Coffee: Writings in Cultural Histor”; Venkatasalapati, A. Ira (2006). Yoda Press. Page: 2-5; ISBN 81-902272-7-0, ISBN 978-81-902272-7-8.

(4) “Thamizhukku Magudam Sootiya Singapore”, Kavingar Na. Andiappan, Singapore, September 11, 2020. Tamil Heritage Foundation International – Internet Speech Series.

(5) Historic Residences in Chennai – 30, Sriram V., Madras Musings, Vol. XIX NO. 15, November 16-30, 2009.


(7) “Recognising a classic”, S. Viswanathan, The Hindu-Frontline Print edition, November 05, 2004 https://frontline.thehindu.com/social-issues/article30225244.ece

(8) “Sectional President’s Address – Dakṣināpatha: Where does the path lead us?”; Ganapathy Subbiah (2007). Proceedings of the Indian History Congress. 67: 49–81. JSTOR 44147923

இவற்றை திருடி எழுதியது உங்களுரிமை.  சரி   ஆனால் புதுமைப் பித்தன் மூலத்தை மாற்றிய வாடிக்கையாளி, பேரா செல்வா அதை ஆசிரியர் அனுமதியின்றி திரித்து, சாத்திரி என்றெல்லாம் எழுதினார். அதை ஆதரித்தது, ஆதரிப்பது உங்கள் தவறு.

சி.ஜெ.

S. Jayabarathan

unread,
Feb 14, 2021, 8:55:32 PM2/14/21
to tamilmantram, vallamai, mintamil, tsj...@gmail.com, C.R. Selvakumar, rajam, N. Ganesan, kanmani tamil
தேமொழி,

சாஸ்திரி என்பதை நீங்களே சாத்திரி எழுதக் கூசிய
போது, தீரர் பேரா செல்வா இன்னும் சில் நாட்களில்
விக்கிபீடியால் தான் திரித்த மூல நீல கண்ட
சாத்திரி எழுதப்படுவார்.  உங்கள் மூலம் சிறகு
வலையில் தெரியாமல் இருக்கும்.

நீல கண்ட சாஸ்திரி தன்னை சாத்திரி என்று எழுதப் படுவதை ஒருபொழுதும் விரும்பார்.  அதற்கு மூல காரணி நீவீர் என்பதை அறிய மாட்டார். அது ஏற்புடமையா  எழுத்து நெறியில் ?

சி. ஜெயபாரதன்

தேமொழி

unread,
Feb 14, 2021, 9:36:42 PM2/14/21
to தமிழ் மன்றம்
On Sunday, February 14, 2021 at 5:55:32 PM UTC-8 Jay wrote:
தேமொழி,

சாஸ்திரி என்பதை நீங்களே சாத்திரி எழுதக் கூசிய
போது, தீரர் பேரா செல்வா இன்னும் சில் நாட்களில்
விக்கிபீடியால் தான் திரித்த மூல நீல கண்ட
சாத்திரி எழுதப்படுவார். 


///விக்கிபீடியால் தான் திரித்த மூல நீல கண்ட
சாத்திரி எழுதப்படுவார். ////

தகவலுக்கு:
27 அக்டோபர் 2010‎  முதலே 
க. அ. நீலகண்ட சாத்திரி (கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி)
என்ற தலைப்பின் கீழ் ஒரு கட்டுரை விக்கியில் இருந்து வருகிறது 

தேமொழி

unread,
Feb 14, 2021, 9:38:52 PM2/14/21
to தமிழ் மன்றம்
On Sunday, February 14, 2021 at 5:21:47 PM UTC-8 Jay wrote:
நீங்கள் திருடிய இழைகள் ஈதோ :

////நீங்கள் திருடிய இழைகள் ஈதோ :////

References = திருடிய இடம் 
என்று எந்த அகராதியில் பொருள் விளக்கம் கொடுக்கப் படுகிறது ஐயா 

C.R. Selvakumar

unread,
Feb 14, 2021, 10:15:08 PM2/14/21
to தமிழ் மன்றம்

திரு. செயபாரதன்,

உங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டதா?

கள்ளத்துவம், திருடு, கயமை போன்ற சொற்களின்

பொருள்கள்தாம மறந்துவிட்டனவா?


பாரதியார் சாத்திரம் என்று பல இடங்களிலே எழுதியுள்ளாரே.

திரைப்பட பாடல் ஒன்றில் கூட சாத்திரி என்று வருகின்றதே


Screen Shot 2021-02-14 at 10.05.08 PM.png


Screen Shot 2021-02-14 at 7.52.58 PM.png


தமிழில் தமிழெழுத்துகளில் எழுதுவது கண்டு இவ்வளவும்

கொதிப்பா? வியப்பில்லை, வியப்பில்லை. உங்களின் போக்குகளை

அறிவேன்தானே. அறிவுநாணயம் இல்லாமையை அறிவேன்தானே. 

பல குழுமங்களுக்கு தில்லுமுல்லுத்தனமாக அனுப்பி 

திருகுவேலை செய்பவர்தானே. ஏன் இப்படி?

அன்புகொள்ளுங்கள், நல்லது செய்யுங்கள். கருத்துமாறுபாடு

இருந்தால் மாறுபடுங்கள். பண்புடன் பகிருங்கள். 

காலமும் வாய்ப்பும் பொன்னானவை. 


செல்வா


S. Jayabarathan

unread,
Feb 14, 2021, 10:45:48 PM2/14/21
to tamilmantram, vallamai, mintamil, C.R. Selvakumar, tsj...@gmail.com, vanna...@gmail.com, N. Ganesan, rajam, kanmani tamil
பேரா செல்வா,

புதுமைப் பித்தன் படைப்பு மூலங்களை மாற்றிய மாபெரும் தவறுக்குப் பாரதியாரை உதவிக்கு அழைக்காதீர்.  அவர் எழுதிய
உன்னதத் தமிழ் பகவத் கீதையில் உமது தூய கரங்களை வைப்பீரா ?

தவளை தன் வாயால் கெட்ட கதை.

சி. ஜெயபாரதன்.

C.R. Selvakumar

unread,
Feb 14, 2021, 11:14:54 PM2/14/21
to S. Jayabarathan, tamilmantram, vallamai, tsj...@gmail.com, vannan vannan, N. Ganesan, rajam, kanmani tamil

Graham Bell என்பவரின் பெயரில் வரும் முதல் சொல் கிராம் என்று வரும், கிரஹாம் என்றன்று

என்று எடுத்துச் சொன்னாலும், இல்லை இல்லை நான் கிரஹாம் என்றுதான் எழுதுவேன் என்று

கிரந்தப்பற்றால் கூறினீர்கள். ஆபிரகாம் என்றெழுதினால் “தூய தமிழ்” ஆகிவிடுமே

என்று ஆப்ரஹாம் என்றெழுதுவீர். 


புதுமைப்பித்தனின் படைப்பு மூலத்தை மாற்றவில்லை.

ஓர் உண்மையை விளக்க ஒரு செய்துகாட்டல். 


செல்வா

rajam

unread,
Feb 14, 2021, 11:31:12 PM2/14/21
to tamil...@googlegroups.com
/// கல்வியாண்டு 1956-57 புகுமுகவகுப்பில் படித்தவர்களே முதல் பிரிவினர்./// 

ஆம், தேமொழி. நான் புகுமுகவகுப்பில் படித்தது 1957-1958 கல்வியாண்டில். Second Set of PUC என்று அடையாளப்படுத்திக்கொள்வோம். என் நாத்தனார் படித்த Intermediate என்ற இடைநிலைப் படிப்புக்கால இறுதியில் புகுமுக வகுப்பின் தொடக்கம். 

நான் புகுமுக வகுப்பில் படித்த அதே பாத்திமாக் கல்லூரியில் 1958-1961 கல்வியாண்டுகளில் இளங்கலை வகுப்பில் கணிதப்படிப்பு. பிறகு தியாகராசர் கல்லூரியில் 1961-1963 கல்வியாண்டில் தமிழ் முதுகலை வகுப்பு.

ஜெயபாரதன் ஐயா ஏதோ மறதியில் சொல்லுகிறார் என்று நினைக்கிறேன். இதுக்காக நான் வாதாடப் போவதில்லை. 

வாழும் நாள் சில; மெல்ல நினைக்கின் பிணி பல. அவற்றைச் சண்டையில் கழிக்கவேண்டாம் என்று நினைக்கிறேன். 

வாழ்க வளமுடன்! 

S. Jayabarathan

unread,
Feb 15, 2021, 10:49:53 AM2/15/21
to tamilmantram, vallamai, mintamil, rajam, tsj...@gmail.com, C.R. Selvakumar, N. Ganesan, kanmani tamil

வணக்கம் ராஜம் அம்மா.

சண்டை மூட்டுவது, கருப்பணித் தொண்டர். சும்மா இருடா
என்று அம்மா சொல்வது சரியே.

இப்போ வந்துள்ள இரண்டாம் வளவன் செய்யும் வடமொழித்
தொண்டு, ஆயிரங் காலத்துப் பயிர்.

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

அபூ பென் ஆதாம், [அவன் குலம் செழிக்க]
அமைதி யான ஓரிரா ஆழ்க்கனா விழிப்பு

ஓயாது,
ஓயாது நமது 
குழாய்ச் சண்டை. 
குடிநீரில்லா
நீர்க் கோளில் தான்
போர்க் கொடி
பாதி உயரத்தில் என்றும்
பறக்குது 
பைபிள் உலகில் !
வெள்ளை மாளிகை
வாசல்
கோலமாய் !
ஃபினிக்ஸ் பூதப் பறவை
காமிக்ஸ் பண்ண
உயிர்த்து
வருகுது மீண்டும் !
பகவத் கீதை
தேவை
இப்போது !

சி. ஜெயபாரதன்.




ஓயாது,
ஓயாது நமது 
குழாய்ச் சண்டை. 
குடிநீரில்லா
நீர்க் கோளில் தான்
போர்க் கொடி
பாதி உயரத்தில் என்றும்
பறக்குது 
பைபிள் உலகில் !
வெள்ளை மாளிகை
வாசல்
கோலமாய் !
ஃபினிக்ஸ் பூதப் பறவை
காமிக்ஸ் பண்ண
உயிர்த்து
வருகுது மீண்டும் !
பகவத் கீதை
தேவை
இப்போது !

சி. ஜெயபாரதன்.


ஓயாது,
ஓயாது நமது 
குழாய்ச் சண்டை. 
குடிநீரில்லா
நீர்க் கோளில் தான்
போர்க் கொடி
பாதி உயரத்தில் என்றும்
பறக்குது 
பைபிள் உலகில் !
வெள்ளை மாளிகை
வாசல்
கோலமாய் !
ஃபினிக்ஸ் பூதப் பறவை
காமிக்ஸ் பண்ண
உயிர்த்து
வருகுது மீண்டும் !
பகவத் கீதை
தேவை
இப்போது !

சி. ஜெயபாரதன்.


Reply all
Reply to author
Forward
0 new messages