கவியரங்கம் 61 -தோரண வாயில்
வஞ்சத்தில்
ஒன்றானை நெஞ்சத்தில் நின்றானை மாசற்றானை
வலம்வந்து
கனியொன்றைப் பெற்றானை வயிற்றானை துதிக்கை யானை
விஞ்சித்தான் நின்றிட்ட கஜமுகனை வென்றானை மாற்றிட்டானை
வித்தானை மறையானை குறையானை
வள்ளியினை வெருட்டி னானை
கஞ்சத்தாள் பதத்தானை கதித்தோடும் மதத்தானை கருணையானை
கமண்டலத்தைக் கவிழ்த்தானை
காவிரியை விரித்தானை கவிதையானை
தஞ்சந்தான் என்றவரைத் தள்ளானை புரப்பானை தாங்கு வானை
தமிழ் கேட்கும் இருபெரிய செவியானைப் பாடுகிறேன் காக்க நன்றே
இரண்டாயி
ரத் தொன்று நவம்பரே ழாம்நாளில் என்றன் நெஞ்சில்
திரண்டோடிப் பெருகியதோர் ஆர்வத்தால் தினவெடுக்க இணையந் தன்னில்
மரபுப்பா வுக்கென்றரிய தளமொன்றை வடிவமைத்தே
தொடங்கி வைத்தேன்
இருபத்தைந் தாமாண்டைத் தொடும் சந்த வசந்தத்தின்
ஏற்றம் வாழ்க!
சாதனைகள்
ஒன்றிரண்டா சாற்றுதற்கு? மரபுப்பாத் தளங்கள்
தம்மில்
ஏதிதனைத் தொன்மையிலே வெலக்கூடும்? தொடர்ந்துவரும் இயக்கந்தன்னில்
ஆதிமுதல் இன்றுவரை ஆற்றிவரும் தொண்டுகளை அளக்கப் போமோ?
போதனையா, பயிற்சிதரும் புதுமைகளும் ஒன்றிரண்டா புகலுதற்கே!
கவியரங்கம்,
கவிப்பட்டி மண்டபங்கள் ஆய்வரங்கம் கருத்தாக் கங்கள்
எவருமிங்கே பயின்றி டலாம் குறைசுட்டிக் காட்டிடலாம், இகலே இன்றி
சுவைதரலாம், சுவைபெறலாம், தொடரிடுகை எழுதிடலாம்
துலக்கலாமே!
கவிதையினை மதிக்கின்றோம், கண்ணியத்தைக் கடமையெனக் காக்கின்றோமே!
பாவகைகள்
பாவினங்கள் சித்ரகவி, சிந்துப்பா, பழமைச் செய்யுள்
தேவைகளுக் கேற்பயிங்கே செப்புகிறோம், எழுதுகிறோம், சிந்த னைக்கு
மேவுகிற விவாதங்கள், வினாவிடைகள், வித்தகங்கள், மேலும் மேலும்
ஆவலுடன் வேற்றுமொழி இலக்கணங்கள் நமக்கேற்ப ஆக்கி யுள்ளோம்
இத்தனைநாம்
செய்திருக்கும் போதினிலும் திருப்தி இல்லை
, இன்னும் கொஞ்சம்
வித்தகமாய்ச் சிந்தித்தே இவ்வாண்டு முதலாக விளக்க மாக
புத்தமுத மாகவினும் எதுதரலாம் எனவெண்ணிப் புகல
லாமே!
வித்தையினுக் கேதெல்லை விருப்பமட்டும் இருந்துவிட்டால் மேலும் வெற்றி
சிறந்தவழி
இன்னும்கொஞ் சம்சிந்தித் தேநாமும் தேடுவோமே
கறந்துகொண் டேயிருந்தால் போதாது, மேன்மேலும் கறக்க நல்ல
கறவையொடு
கறவைக்குத் தீவனமும் காட்டுவது கடமை யாகும்
திறமைமட்டும் போதாது திறமையினைப் பயன்படுத்தித் சேவை செய்வோம்.
சந்த வசந்தப்
பிறந்த தினம்
சரித்தி ரத்தில் பதிவாகும்
எந்தத் தடையும் இல்லாமல்
இருபத் தைந்தைத் தொடுகிறது
இந்த வண்ணம் மேன்மேலும்
இன்னும் இன்னும் சிறந்திடுக
கந்தன் அருளால் தொண்டாற்றிக்
காரி யத்தில் மிளிரட்டும்!
என்ன தொண்டு
செய்தாலும்
இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்
என்னும் எண்ணம் மேன்மேலும்
ஏற்றம் கொள்ளச் சிறந்திடுவோம்
உன்ன தங்கள் இலக்கியத்தில்
ஊன்றி நிலைக்க வென்றிடுவோம்!
பின்னும்
பின்னும் முனைந்திடுவோம்
பேறென் றெண்ணி உழைத்திடுவோம்.
இன்னும்
கொஞ்சம் சிந்திப்போம்
என்னும் தலைப்பில் கவியரங்கம்
இன்னும் ஒருநாள் தள்ளியிங்கே
இறங்கி வரத்தான் போகிறது
கன்னல் கவிஞர் ராம்கிராம்
கருத்து மிக்க தலைமையிலே
தின்னற் கேற்ற சுவையமுதத்
தீனி கிட்டப் போகிறது
ஆர்வம்
மிக்கார் ராம்கிராம்
யாப்பில் வல்லார் ராம்கிராம்
பார்வை பட்ட காட்சிகளைப்
படம்போல் கவிதை யாக்கிறவர்
தேர்ச்சி மிக்க வார்த்தைகளைத்
தேர்ந்தெடுத்துக் கவிசெய்வார்
வார்த்தைத் தேடல் வேண்டாமல்
வந்து சேரும் வரமுடையார்
இன்னும்
கொஞ்சம் எனும் தலைப்பில்
எத்த னையோ
ஆண்டுகளின்
முன்னர்க் கல்கி மலரினிலே
முனைப்பாய் இட்ட கவிதையினை
இன்றிவ் வரங்கில் இடுகின்றேன்
இன்னும் கொஞ்சம் அதனோடே
பின்னும் சேர்த்தே இடுகின்றேன்
பிறங்கும், சிறக்கும் பெரிதாக!
இன்னும் கொஞ்சம் ஏன் முடியாது?
இந்திய இளஞனே , என்ன படிக்கிறாய்
எழுதி எழுதி எதனைப் பிடிக்கிறாய்
சிந்தனை வண்டியைத் தூக்கி நிறுத்து
சீக்கிரம் சீக்கிரம் அச்சைப் பொருத்து
உன்றனை விட்டால் கதிவேறில்லை
உறங்கு கின்றாயே அதுதான் தொல்லை
சென்ற கணங்கள் திரும்புவதில்லை
சிங்கமடா நீ அகற்றிடு கல்லை
ஒருகணத் துடிப்பில் உச்சியைப் பிடிப்பாய்
உதவிய மகிழ்ச்சியில் மீண்டும் கிடப்பாய்
இருகணத் தொடர்ச்சி ஏன் கிடையாது?
இன்னும் கொஞ்சம் ஏன் முடியாது?
ஒருநாள் போட்டியில் உலகை வெல்லுவாய்
ஒருசில நாட்களா உறுதி கொல்லுவாய்
சரிவினில் ஏறுதல் சாத்திய மாகும்
சாதனை செய்யச் சங்கடம் தீரும்
இராவணன் தம்பியாய் உறங்கிட வேண்டாம்
இலக்குவனாகவும் இருந்திடவேண்டாம்
சராசரி அல்ல நீ, சாதனை வீரன்
சவால்கள் எதனையும் சந்திக்கும் தீரன்
ஒருகணம் விட்டால் ஒருபடி பிந்துவாய்
ஒருகணம் தொட்டால் இருபடி முந்துவாய்
வருகணம் கனம்பெறும் வகையில் வருக நீ
வாலிப வெற்றி மலைகளைத் தருகநீ!
சோம்பிக்
கிடந்திடும் சோம்பேறியாநீ
தூங்கி வழிந்திடும் தேவாங்கு தானா
தேம்பிக் கிடந்து சிதைந்து போகாமல்
தெம்பாய் நடக்கநீ இன்னும் கொஞ்சம்
இலந்தை
6-11-2025
… துங்கமிகு அறிஞர்பலர்க் கண்டவிந்த மன்றம்
வேர்முளைத்துப் பெரிதான விருட்சமிந்தக் கூட்டம்
… வேழத்தின் தலைமையிலே வெற்றிக்கொடி நாட்டும்
ஈர்க்கின்ற சொல்வன்மை ஈட்டத்தின் வரமே
… எச்செல்வ மென்றாலு மிதன்பின்னே வருமே
வேர்ப்பலவாம் கவிஞர்தம் விருப்பமிகு வாய்ச்சொல்
… வெள்ளிவிழா ஆண்டிதனில் வீறுகொளும் பாய்ச்சல்.
தேர்ந்தென்னை அழைத்திட்டார் செந்தமிழில் வல்லார்
… திறம்படவிக் கவியரங்கம் நடத்திடென்று சொல்வார்
யார்கொடுத்த தலைப்பெனினு மிடங்கொடுத்துக் கேட்டார்
…. “இன்னமுமே சிந்திப்போம்” இத்தலைப்பு வேட்டார்
கார்பூட்டும் மழைபோலே களங்கூட்டின் பொழிவு
… காத்திருப்போர் கேட்பதற்குக் களிப்பதனின் திறவு
சீர்தூக்கிச் சொற்கோத்துச் சிறப்பாக்க வாரீர்
,,, செவ்வனேயிங் கமர்ந்தோரின் செவிக்கின்பம் தாரீர்
கவிஞர்களே, அறிஞர்களே ஒன்று கூடி வாருங்கள். துவக்க நாள் நாளை, நவம்பர் திங்கள் 7 ம் திகதி.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBBqY5FeM-y4vJzEdFdofPATHh9MU%3DBjCvy0LjSx5guVfA%40mail.gmail.com.
கவிவேழம் இலந்தை அவர்களின் ‘தோரண வாயில்’ கவிதைக்குப் பின்னூட்டப் பா.
குறள் வெண்செந்துறை யாப்பில் அமைந்தது
வாய்பாடு: மா மா காய்.
இலந்தை தந்த இனிக்கும்பா
இனிய தேனில் ஆவின்பால்
கலந்து வைத்த கவியமுதம்
காணும் போதே இனிக்கிறது!
வித்தைக் கெல்லை இல்லையென
விளம்பக் கேட்டோம் இதுபற்றிச்
சித்தம் குவித்துச் சிந்திப்போம்
சிறப்பாய்த் தளத்தில் செயல்படுவோம்!
-கருவூர் இனியன்
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtjQDbuy46sCRnFhaT59WdRRRAhMxJ8srBo08TS-oTT9PA%40mail.gmail.com.
கவியரங்கம் 61 -தோரண வாயில்
..
இரண்டாயி ரத் தொன்று நவம்பரே ழாம்நாளில் என்றன் நெஞ்சில்
திரண்டோடிப் பெருகியதோர் ஆர்வத்தால் தினவெடுக்க இணையந் தன்னில்
மரபுப்பா வுக்கென்றரிய தளமொன்றை வடிவமைத்தே தொடங்கி வைத்தேன்
இருபத்தைந் தாமாண்டைத் தொடும் சந்த வசந்தத்தின் ஏற்றம் வாழ்க!
..
என்ன தொண்டு செய்தாலும்
இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்
என்னும் எண்ணம் மேன்மேலும்
ஏற்றம் கொள்ளச் சிறந்திடுவோம்
உன்ன தங்கள் இலக்கியத்தில்
ஊன்றி நிலைக்க வென்றிடுவோம்!பின்னும் பின்னும் முனைந்திடுவோம்
பேறென் றெண்ணி உழைத்திடுவோம்.
..
--
இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்
தொடக்கநாள் 7- 11- 2025
கவியரங்கத் தலைமைக் கவிதை:
இறைவணக்கம்
வந்தவினை தீர்த்தருளும் தொந்தி கணநாதா
சிந்தை நிறைத்தவென் சிங்காரா - சந்த
வசந்தக் கவியரங்கம் மாண்புறச்செய் தற்கே
இசைந்தருளி வந்திடுவா யிங்கு.
வெள்ளிவிழா ஆண்டில் கவியரங்க முதற்செய்தியும் சந்த வசந்தக் குழுமத் தலைவர்க்குப் பாராட்டும்
வெள்ளிவிழா வாண்டில் விளக்கொளிபோற் சிந்தனைகள்
அள்ளித் தரவந்த ஆன்றோரே – எள்ளுரையைத்
தள்ளிடுவோம் முள்ளைப்போல் தைத்தல் தவிர்த்திடின்
உள்ள முவக்கு முயர்வு.
எள்ளுரை : இகழ்ச்சியுரை
கவிவேழம் தோற்றிய கண்கவருஞ் சோலை
புவிபோற்றி நிற்கின்ற பொற்பு., – தவமாய்த்
தமிழ்ப்பணி செய்தாரின் தாளாண்மை ஏத்து(ம்)
இமிழ்சந்த மீடில்லா வின்பு
தாளாண்மை - ஊக்கம்
இமிழ் – இனிமை, இசை
அவையடக்கம்
பொருளார்ந்த பாப்புனையப் புஞ்சும் கவிகாள்
சிரந்தாழ வந்தடைந்தேன் தேடி – சரமதனில்
நாராகி நல்கிய நற்கவிப் பூக்களைச்
சீராகக் கோத்தளிப்பேன் தேர்ந்து.
புஞ்சும் – ஒன்று கூடும்
இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்
நேரிசைக் கலிவெண்பா
எந்தையும் தாயு மிருந்து சிறந்ததந்நாள்
வந்துதித்த நாள்தொடங்கி வாழ்வினிக்கச் – சிந்தைமகிழ்
தெள்ளிய செய்கையில் சீருற்றோம். அந்நாளில்
அள்ளித் கொடுத்த அறிவுரைகள் – உள்ளத்தி(ல்)
ஊன்றி யியல்புட னொட்டிக் கலந்தன.
சான்றொன்று கண்டோம் சமத்துவத்தில். – தோன்றிய
வள்ளுவர் சாற்றினார் "உள்ளவருள் ஒண்பொருளே"
ஒள்ளிய பாரதி ஓதியதே., – விள்ளா
அறிவின் விரிவதனி லார்வ முடனாய்ச்
செறிவை யடைந்துலக ணைத்தார் – உறவும் 10
செழித்தது., செய்திறனில் சேவை மனத்தில்
விழிப்புணர்வு மேவ விரிந்து – பழுத்தநற்
பண்பில் பகிர்ந்துண்ணும் பாசம் வளர்ந்தது.,
மண்ணில் மனிதநேயம் மாண்பினில் – விண்ணுறும்.,
ஈதலின் உண்டோ இனிதென்றார்., இத்துடன்
யாதுமெம் ஊரே யெனச்சொன்னார்., – ஓதிய
முன்னோரின் காலம் முடிந்த துணருங்கால்
சின்னேரம் நின்றிங்குச் சிந்திப்போம்., – பொன்னான
அக்காலம் இன்றுளதோ? அன்பே உலகணைக்கும்.,
தக்காத பேச்சுத் தகவொழிக்கும்., – எக்காளம் 20
அன்பொழிக்கும்., சிந்தனையின் ஆழத்தில் செல்வோமா?
முன்பிருந்த நிம்மதி சென்றதெங்கு? – நன்றெனவாய்
நெஞ்சில் நினைவலைகள் நீந்திடும்., நீரோடை
கொஞ்சிக் குலவிடும் வாடையுடன்., – பஞ்சாய்ப்
பறந்திடும் புள்ளினங்கள்., பச்சைநிறக் காடு.,
உறவில் களித்தநல் லுள்ளம்., – அறமோங்க
ஓமச் சடங்குகள்., ஊர்கூடித் தேரிழுத்தல்.,
பூமியில் சீரான தட்பவெப்பம்., – சேமமுற
மெய்ஞ்ஞானம் போற்றிய மேன்மை., அறிவிற்கு
விஞ்ஞான மஃதளித்த வேட்கையின் – விஞ்சுதல்., 30
எத்துணை நற்பயனும் என்றோர்நாள் முற்றுமன்றோ?
அத்தனின் சித்தத்தை ஆரறிவார்? – இத்தலத்தில்
மூண்டவிருள் காரணத்தை மீண்டொருகால் சிந்திப்போம்,
காண்கின்ற நாச விளைவுகளின் – பூண்டொழிக்க.,
நீர்நிலைகள் காய்ந்தவிடம் நீண்ட தொழிற்கூடம்.,
ஆர்த்திடு முற்பத்தி யச்சுறுத்தல்., – ஊரழித்துக்
கோடிகளைச் சேர்த்துக் குவிக்கச் சதித்திட்டம்.,
மூடிம றைத்தவூழல் வித்திட – வாடிடும்
மக்கள்., வளர்ச்சியென வான்முட்டும் கட்டடங்கள்.,
பக்கத்தில் குப்பைசூழ்க் கோலங்கள்., – சிக்கலுறச் 40
சூழ்நிலையின் சீர்கேட்டால் சோதனை., வானிலையால்
ஆழ்கடலின் பேரலைகள் மூழ்கடித்தல்., – வீழ்துயரில்
அண்டத்தில் வெப்பமயம்., மண்டும் சுழற்காற்று.,
தண்மைசூழ்க் கோடு பனியவிழ்க்க – மண்மூழ்கல்.,
சீற்றத்தில் பூமித்தாய் செய்தவற்றைச் சிந்திப்போம்.
ஆற்றொணாத் தீச்செயலில் ஆயுதங்கள்., – தூற்றுவகை
வாணிகத்தில் தீராத வாஞ்சை வளர்த்தது..
நாணமற்று வீசும் நெகிழிகள்., – பூணும்
சுயநலன்., சூழழிவுச் சித்தாந்த நோக்கம்..
முயற்சியின்மை.. செல்வத்தில் மோகம்.. – துயரிதாம்., 50
கார்மேகம் போலாம் கரும்புகையில் வான்விரியும்.
யார்தந்தார் ஈங்கிதற் காதரவு – ஓர்க.,
கமழிப் படலம் கணிசமாய் நீங்க
இமைப்பொழுதில் தோல்நோயு மிங்காம் – அமிழ்த்திட்டு
நம்மவரோ டன்னியர்க்கும் நஞ்சளிக்கும்., காசீட்ட
வம்பான மாசை வரவழைத்தல் - தெம்பாமோ?
இத்தனையும் சிந்தனையில் முந்திவரச் சீரமைக்கும்
வித்தகத்தைச் சாற்றுவகைப் பற்றுவமேல் – சித்தி.,
இயற்கையன்னை தந்ததெலாம் எல்லோர்க்கும் சொந்தம்
தயக்கமின்றி ஏற்றிடுதல் சால்பு – முயற்சி 60
திருவினை யாக்கும்., ஒருபக்கம் சாராக்
கருமங்கள் தாமாக்கும் பாதை., – வெருவுதல்
வேண்டாம்., முனைந்து வினையில் விழைதலே
தூண்டிலின் மீனெனும் சோகத்தைத் – தாண்டும்.,
அரசமரஞ் சுற்றி அடிவயிற்றைப் பார்த்தால்
விரைவில் பயனொன்றும் மேவா., – தருணத்தைக்
கச்சிதமாய்க் கண்டறிந்து காரியம் செய்வோமேல்
நிச்சியமாய் பூமித்தாய் நேர்படுவள் – இச்சையுடன்
பூமிக்காய் நாசவினைப் போரின் புடைசாரோம்
சேமமுறச் செய்வோம் சமரசம்., – நாமெல்லாம் 70
வேண்டுவம் ஓரினமாய் யாண்டு மொருமித்து
ஆண்டவ னாக்கிய அண்டத்தில் – மீண்டும்
இயற்கையைப் போற்று மியல்புற்று வாழ
நயந்தேன் நடக்குமென நம்பு. 74
முடிவுரை
கட்டளைக் கலித்துறை
இன்னமும் கொள்ளணும் இன்மனச் சிந்தனை ஏற்றமுற
சொன்னமும் சொர்க்கமும் கூடு மிதாலெனச் சூளுரைப்பேன்
இன்மையைத் தீர்க்க வியற்கையைப் போற்றணும் இன்முகத்தே
வன்தொழில் நீங்கிட வண்மையும் சேர்ந்திடும் வாழ்நிலத்தே
பெற்ற சுதந்திரம் பேணப் பகையதன் பேரொழித்து
கற்றவர் சூழ்ந்திடக் கல்வி யெனுமொளி காத்திடணும்
சுற்றுப் புறமதன் சூழலும் மேம்படத் துப்புரவைச்
சற்றுநம் சிந்தனை சாரணும் பின்வரும் சந்ததிக்கே.
அருஞ்சொற்பொருள்:
வள்ளுவர் சாற்றினார் "உள்ளவருள் ஒண்பொருளே":
“அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்
பொருட்செல்வம்
பூரியார்
கண்ணும் உள” (திருக்குறள் – 241)
ஒண்பொருள் – சிறந்த பொருள்
ஒள்ளிய – அறிவு மிகுந்த
“பகைவனுக் கருள்வாய் நன்நெஞ்சே” – பாரதி
தக்காத – தகாத என்பதன் நீட்டல் விகாரம்
தகவு – பெருமை, மதிப்பு, ஒழுக்கம்
எக்காளம் – இறுமாப்பு, கேலி
ஓமச் சடங்கு – வேள்வி
வாடை – வடக்கிலிருந்து வீசும் காற்று
விஞ்சுதல் – மேன்மையுறல்
அத்தன் – மேலோன், இறைவன்
மண்டும் – நெருங்கும்
ஆர்த்திடும் – ஓங்கி முழங்கிடும்
கோடு – மலை, மலைத்தொடர்
வாஞ்சை – ஆசை, விருப்பம்
நெகிழி - இளகிய நிலையிலிருந்து இறுகிய நிலைத்தாம் பொருள் – plastic items
கமழிப் படலம் – ozone layer., இது அண்டத்தில் குறைவதனால் தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.
சித்தி – வெற்றி
வெருவுதல் - அஞ்சுதல்
யாண்டும் - எப்போதும்
சொன்னம் – சுவர்ணம், தங்கம்
வன்தொழில் – வஞ்சகமான செயல்., வண்மை - வளமை
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/AD97E91C-9A1E-4CF1-8331-71C438E9C3FD%40gmail.com.
சோம்பிக் கிடந்திடும் சோம்பேறியாநீ
தூங்கி வழிந்திடும் தேவாங்கு தானா
தேம்பிக் கிடந்து சிதைந்து போகாமல்
தெம்பாய் நடக்கநீ இன்னும் கொஞ்சம்
இலந்தை
6-11-2025
--
ராம்கிராம் கவிதைக்குப் பின்னூட்டம்
நண்பர் ராம்கிராம் கவிதையிலே
நல்ல செய்திகள் நிறைந்திருக்கும்
கண்ணின் மணியென இயற்கையினைக்
கருதிப் போற்றிட வேண்டுகின்றார்!
சுற்றுச் சூழலை மேம்படுத்திச்
சுகமாய் வாழ்ந்திட அழைக்கின்றார்
சற்றே சிந்தனை செய்திடுவோம்
சாலப் பணிகளைச் செய்திடுவோம்!
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtiz5GrJY%3DgnAi5dQF8ykrHWzPdhsOCh-esWz%2BWiupc49g%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
கவியரங்கம் - 61
இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்
தொடக்கநாள் 7- 11- 2025
கவியரங்கத் தலைமைக் கவிதை:
...
இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்
நேரிசைக் கலிவெண்பா
எந்தையும் தாயு மிருந்து சிறந்ததந்நாள்
வந்துதித்த நாள்தொடங்கி வாழ்வினிக்கச் – சிந்தைமகிழ்
தெள்ளிய செய்கையில் சீருற்றோம். அந்நாளில்
அள்ளித் கொடுத்த அறிவுரைகள் – உள்ளத்தி(ல்)
ஊன்றி யியல்புட னொட்டிக் கலந்தன.
....
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCP7RdSrc25VPrGHnWJJiM-9musedFGaFdj8bcASMZU7TQ%40mail.gmail.com.
மாசில் இயற்கை வனப்பை விதந்துரைத்துக்
காசு விரும்பும் கயவரின் - ஆசையால்
உண்டாகும் பேரழிவை ஓர்ந்துரைத்த சிந்தனையில்
கண்டேன்நான் நற்றேன் கவி!
—தில்லைவேந்தன்.
….
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBBqY5FeM-y4vJzEdFdofPATHh9MU%3DBjCvy0LjSx5guVfA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtiz5GrJY%3DgnAi5dQF8ykrHWzPdhsOCh-esWz%2BWiupc49g%40mail.gmail.com.
கவிமாமணி சந்தவசந்தக் குழுமத்தின் தலைவர் இலந்தையாருக்கு அழைப்பு:
சந்தக் கலிவிருத்தம்
துதிபோலிவர் விளையாட்டென வினிதாங்கவி பொழிவார்
சதிராடிடு மொழியாற்பல கவிநூற்பவர் அறிவோம்
கதியாகிடு *லகுவாரஹி* யருளேமிக விழைவார்
எதிலாலென வியல்பாமிவர் நிலைமாறிட லரிதே
தொலைபேசியின் துறைசார்ப்பணி மிகவாற்றிய செயலார்
பலமேடையி லொருவாயிர மரிதாங்கவி புனைவார்
கலைமேவிடும் மொழியார்வலர் இணையாயுள ரிலரே
உலையாதவர் கவிமாமணி யுடனாய்க்கவி தருவார்
On 9 Nov 2025, at 2:35 PM, KKSR <aur...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAG%2BHessT9z5YvoPTXt6wcO%2BdTi-4SDOPHY261FD%3DYdMXNB0Pew%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNO12AphbZ9OKkv8wDhGtb3iK7DLOBeLAzxdFijbMaKEdQ%40mail.gmail.com.
On 9 Nov 2025, at 5:59 PM, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
குழுமத் தலைவருக்குக் கவியரங்கத் தலைவர் விடுத்த அழைப்பு மிகச் சிறப்பாக உள்ளது.—தில்லைவேந்தன்..
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hjUNAAf0fDCm7BtnOR2tb4Pm2gyPR68noG9MzZDFf-kPA%40mail.gmail.com.
கவியரங்கத் தலைவரின் அழைப்புப் பா வண்ணம் குறித்து:
குதிபோட்டிடும் களிகூர்கவி கரும்பாகவே உளதே
நதிபோலவே நடைபோடவே நகையாகுமே அழகே
மதிகாட்டிடும் ஒளிபோலிது; மணம்வீசிடும் மலரே
இதுபோலவே எழுத்தோவியம் இனிதாக்கிட இலரே!
-கருவூர் இனியன்
On 9 Nov 2025, at 9:39 PM, Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4Gsp2-225EncxcFf5gtrFyxkZNv1g_xFj66afuTXKAKzJw%40mail.gmail.com.
கவியரங்கம்- 61
நாள் 8-11-2025
தலைப்பு: இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்
தலைவர்: கவிஞர் ராம் ராமகிருஷ்ணன்
ஒரு தந்தம் இருதிணை மும்மதம் நால்வாயோ(டு)
ஓங்கைந்து கரங்கொண்டவன்
ஒப்பரிய ஆறுதலை ஏழுதலை முறையெட்டும்
ஒய்யாரம் தருகின்றவன்
தெருவெங்கும் நவமாக அருள்பொங்கும் பதியாகத்
தேடியே வருகின்றவன்
செழித்தோங்கும் இன்பத்தைக் கொழித்தோங்கச் செய்பவன்
சித்தாந்தம் ஆகின்றவன்
தெருள்கூடும் ஞாயிறு திங்கள் அக்கினியெனத்
திகழ் மூன்று கண்கொண்டவன்
தேடரும் மறைச் செவ்வாய் அற்புதன் ஞானமெனும்
தேனருவியாழ நதியான்
அருள்வெள்ளியங்கிரி சிறுபிள்ளை சனியினால்
அற்றதலை மற்றுடையவன்
ஆனைமுகன் கணபதி ஞானவிழி நாயகன்
ஆதாரமாய்க் காக்கவே
அவையோர்
இன்னும் கொஞ்சம் இன்னும்
கொஞ்சம் என்றே சிந்தித்து
மின்னல்
வீச்சில் வீறு கொள்ளும் விந்தைப் பாவாணர்
கன்னல் பாடல் இங்கே நித்தம் காட்டும்
பேறாளர்
அன்னார் கட்கென் அன்பின்
வாழ்த்தை ஆகா கூறேனோ?
கவியரங்கத் தலைவர்
எந்தத் தலைப்பிலும் எண்ணம் சிறந்திடச்
சந்தம் குழைத்துத் தருபவராம்- சிந்தித்தே
பல்வித மாகப் படைத்துச் சிறப்போடு
நல்குகிறார் நம்ராம்கி ராம்
இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்
சந்த வசந்தத் தளத்தில்
புதுமையாய்
சிந்தை கவரும் சிறப்பாக- விந்தையென
என்னவிது என்னவிது வென்றே பலர்புகழ
இன்னும்கொஞ் சம்சிந்திப் போம்
இன்னும் கொஞ்சம்
இரட்டைக் கத்தி
நன்மை செய்யும் நறுக்கவும் செய்யும்
என்பத னாலே எச்ச ரிக்கையாய்
உன்ன தத்தில் உயர்த்தி வைப்போமே!
இன்னும் கொஞ்சம்...
என்றன் மதத்தில் ஆறுதலை
எய்த முடியாக் காரணத்தால்
இன்னோர் மதத்தைத் தழுவுகிறேன்
இந்த வண்ணம் மூன்றுமதம்
சென்று பார்த்தும் அமைதியிலை
காக்க, என்றவன்பால்
இன்றோர் கதைகேள் எனச்சொன்னார்
இராம கிருஷ்ண
பரமஹம்சர்.
தனது வீட்டுத் தோட்டத்தில்
தண்ணீர்க் காகக் கிணறெடுக்க
முனைந்தான் ஒருவன், ஓரிடத்தில்
முப்ப தடிகள் எடுத்தபினும்
நனைந்த தரையைக் காணவிலை
நாற்ப தடிகள் வேறிடத்தில்
தனியே எடுத்தான், நீரில்லை
தளரா தின்னோர்
இடம்பார்த்தான்
வெட்டி வெட்டித் தரையெல்லாம்
வீணாய்ப் போன தன்றியொரு
சொட்டுத் தண்ணீர் கூட்யெங்குத்
தோண்டிப் பார்த்தும் பெறவில்லை
எட்டே அடிகள் முதலிடத்தில்
இன்னும் தோண்டிப் பார்த்திருந்தால்
கிட்டி யிருக்கும், அவ்விடந்தான்
கிளர்ந்த
ஊற்றுப் பொங்குமிடம்.
இன்னும் கொஞ்சம் பார்ப்பமெனும்
எண்ணம் இல்லாக் காரணத்தால்
என்ன செய்தும் நீரில்லை
எங்கெங் கெங்கோ தேடுகிறான்
இன்னுங் கொஞ்சம் என்பதுதான்
ஏற்றம் நல்கும் மந்திரமாம்
இன்னும் கொஞ்சம் ஓரிடம்நில்
என்றார் அந்தப் பெருஞானி
இன்னுங்கொஞ்சம்...
ஊற்றுத் திறந்தே ஒடுங்கா(து) இன்னுங்கொஞ்சம்
ஊற்றிக்கொண் டேயிருந்தால் ஓடுகிற ஆறுவரும்
இன்றைக் கிதுபோதும் என்றே முடிவெடுத்து
இன்னுங்கொஞ் சம்வேண்டாம் என்றெண்ணி எங்கெங்கும்
வீசுகிற காற்று விடைபெற்றுக் கொண்டுவிட்டால்
ஓசைகள் உண்டா, உயிருண்டா, மண்ணுலகில்
இன்னுங்கொஞ் சம்என்றே ஏறும் முயற்சியின்கை
மின்னுகிற மந்திரவாள், மேவும் தடைகளை
வெட்டிப் புறங்கண்டு வெற்றி பெறச்செய்யும்
அட்டியின்றி வாழ்க்கையிலே ஆக்கம் வரவாக்கும்
காடுகளை வெட்டிக் கவின் நகரம் ஆக்கியே
ஈடிலா நாகரிகம் இவ்வுலகில் தாம்கொணர
நம்முன்னோர் மட்டும் நலிவடைந்து போயிருந்தால்
இம்மண்ணில் நாமெல்லாம் எங்கிருப்போம் யாரறிவார்?
ஒற்றடுக்குக் கட்டியவன் ஒவ்வொன்றாய் மேலேபோய்
மற்றொன்று மற்றொன்றாய் மாடி யெழுப்புதற்கு
ஆன முயற்சிகள் அளவின்றிக் கொண்டதனால்
வானைத் தொடமுயலும் மாளிகைகள் காண்கின்றோம்
இன்னுங்கொஞ் சம்கொஞ்சம் என்றே பயணத்தை
அன்று கொலம்பஸ் அடம்பிடித்து நீட்டியதால்
புத்தம் புதுக்கண்டம் பூத்திருக்கக் காணுகிறோம்
எத்தனை இன்னல்கள் எய்திடினும் வாடாமல்
கண்டு பிடித்தல் ஒன்றே கச்சிதமாய் நெஞ்சத்தில்
கொண்டு செலுத்திக் குலையாது பாடுபட்டுத்
துஞ்சாது, என்றும் துவளாது தான்முயன்ற
விஞ்ஞான மேதைகளின் வெற்றி சொலப் போமா?
மேற்கிருந் தேகிழக்காய் வேண்டி நடக்கிறவன்
ஏற்பாய் இன்னுங்கொஞ்சம் என்றே தொடர்வானேல்
மேற்குத் திசைக்குத்தான் மீண்டுமவன் வந்திடுவான்
ஏற்கும் அனுபவம்தான் இங்கே பெருஞ்சொத்து
எண்ணித் தொடர்கின்ற இவ்வாழ்க்கை ஓட்டத்தில்
மண்ணில் பிறப்பும் வருமிறப்பும் இப்படித்தான்.
இன்னுங் கொஞ்சந்தான் எனுமந்திரத்தாலே
உச்சியைப் பார்க்கும் உயர்வு கிடைக்கிறது
நிச்சயமாய்ச் சோம்பல் நெருங்காதிருக்கிறது
இன்னுங்கொஞ்சம் என்பது
நெஞ்சின் உறுதி, நினைவுக ளின் இளமை
ஓடுகிற காலத்தின் ஒவ்வோர் கணத்திற்கும்
கூடு நிறையக் கொடுக்கும் பெருவள்ளல்
எய்திய வெற்றி இழந்துபோ காதிருக்கச்
செய்யும் முயற்சித் திருமாளிகை வாசல்
ஓடாத மாட்டினையும் ஓடவைக்கும் தார்க்குச்சி
காடா, மலையா, கடலா, பெருவெளியா
நீரா, நெருப்பா, நெருக்கி உயிர்குடிக்கும்
போரா, புயலா, பொடிக்கும் எரிமலையா
ஏதாயிருந்தாலும், எள்ளளவும் அஞ்சாமல்
தோதாக நம்பிக்கை சொல்லித் தரும் ஆசான்
இன்னும்கொஞ்சம் பற்றி என்னதான் சொன்னாலும்
இன்னும்கொஞ்சம் சொல்லும் எண்ணம் வருகிறது
இன்னுங்கொஞ்சம் சற்றே ஏறுமாறாய்ப் போய்விட்டால்
என்னாகும் எல்லாம் எதிர்மறையாய் மாறிவிடும்
இன்னுங்கொஞ்சம் தூரம் இந்நிலத்தில் செல்லுகிறேன்
என்றே கடலும் எகிறிக் குதிதுவிட்டால்
நீருள் நிலமடங்கும், நேராகப் பாரொடுங்கும்
யாரும் உயிர்வாழ்ந்திங் கல்லல் படமாட்டார்
இன்னுங்கொஞ்சம் வேகம் ஏற்பேன் எனக் காற்றும்
தன்னுள் உயிர்த்தால், தரைமட்டம் அத்தனையும்
இன்னும்கொஞ்சம் நான் எரிவேன் எனத் தீயும்
முன்னி எழுந்தால் முழுவதும் சாம்பல்தான்
இன்னுங்கொஞ்சம் நான் இறங்கி வருகின்றேன்
என்றிந்த வானம் இறங்கிவரின் என்னாகும்?
இன்னுங்கொஞ்ச நேரம் இப்படியே தூங்குகிறேன்
என்றே உறங்கிவிடில் எல்லாமே பாழாகும்
இன்னுங்கொஞ்சம் கொஞ்சம் இன்பம் அனுபவித்தால்
பின்னர் துவண்டு பிணியில் விழுந்திடுவார்
கத்தியிதை நல்லபடி கையாளத் தேர்ந்துவிடின்
இத்தரையில் எல்லாம் இனிது.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAnpeL4FfNKrZNhjK7BXJVJvo1ZZMkwE-bvq50kFOWyEA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAnpeL4FfNKrZNhjK7BXJVJvo1ZZMkwE-bvq50kFOWyEA%40mail.gmail.com.
மிக அருமை, இலந்தையாரே!
என்னெஞ் சுருக்கும் இலந்தையார் இன்கவிதை
இன்னுங்கொஞ் சம்வேண்டும் இன்று.
கவியரங்கம்- 61
நாள் 8-11-2025
தலைப்பு: இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்
தலைவர்: கவிஞர் ராம் ராமகிருஷ்ணன்
ஒரு தந்தம் இருதிணை மும்மதம் நால்வாயோ(டு)
ஓங்கைந்து கரங்கொண்டவன்
ஒப்பரிய ஆறுதலை ஏழுதலை முறையெட்டும்
ஒய்யாரம் தருகின்றவன்
தெருவெங்கும் நவமாக அருள்பொங்கும் பதியாகத்
தேடியே வருகின்றவன்
செழித்தோங்கும் இன்பத்தைக் கொழித்தோங்கச் செய்பவன்
சித்தாந்தம் ஆகின்றவன்
.....
இன்னும் கொஞ்சம் இரட்டைக் கத்தி
நன்மை செய்யும் நறுக்கவும் செய்யும்
என்பத னாலே எச்ச ரிக்கையாய்
உன்ன தத்தில் உயர்த்தி வைப்போமே!இன்னும் கொஞ்சம்...
...
இன்னும் கொஞ்சம் பார்ப்பமெனும்
எண்ணம் இல்லாக் காரணத்தால்
என்ன செய்தும் நீரில்லை
எங்கெங் கெங்கோ தேடுகிறான்
இன்னுங் கொஞ்சம் என்பதுதான்
ஏற்றம் நல்கும் மந்திரமாம்
இன்னும் கொஞ்சம் ஓரிடம்நில்
என்றார் அந்தப் பெருஞானி
இன்னுங்கொஞ்சம்...
...
இன்னுங்கொஞ் சம்கொஞ்சம் என்றே பயணத்தை
அன்று கொலம்பஸ் அடம்பிடித்து நீட்டியதால்
புத்தம் புதுக்கண்டம் பூத்திருக்கக் காணுகிறோம்
...
இன்னுங்கொஞ்சம் என்பது
...
இன்னும்கொஞ்சம் பற்றி என்னதான் சொன்னாலும்
இன்னும்கொஞ்சம் சொல்லும் எண்ணம் வருகிறது
இன்னுங்கொஞ்சம் சற்றே ஏறுமாறாய்ப் போய்விட்டால்
என்னாகும் எல்லாம் எதிர்மறையாய் மாறிவிடும்
...
On 10 Nov 2025, at 1:37 AM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
மிக அருமையான அழைப்புக் கவிதை, திரு. இராம்கிராம்!
On Nov 9, 2025, at 4:32 AM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:துதிபோலிவர் விளையாட்டென வினிதாங்கவி பொழிவார்
சதிராடிடு மொழியாற்பல கவிநூற்பவர் அறிவோம்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/7951F53A-F699-4858-93B1-46A4C68DC4ED%40gmail.com.
On 10 Nov 2025, at 10:29 AM, Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNPJH7Kac5NnbASxhKPZoUkLK1OMv9FCdqzMATrYQieryQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNPWHjpV-Tc6cdWh0EZzLAQ2xqOhcHMNoymf0b%3DU_nkjEA%40mail.gmail.com.
கவியரங்கம்- 61
நாள் 8-11-2025
தலைப்பு: இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்
தலைவர்: கவிஞர் ராம் ராமகிருஷ்ணன்
ஒரு தந்தம் இருதிணை மும்மதம் நால்வாயோ(டு)
ஓங்கைந்து கரங்கொண்டவன்
ஒப்பரிய ஆறுதலை ஏழுதலை முறையெட்டும்
ஒய்யாரம் தருகின்றவன்
இலந்தையாரின் கவிதைக்கு என் பின்னூட்டம்
இன்னும் கொஞ்சம் எனச்சொல்லி
இலந்தை சொன்ன கருத்தெல்லாம்
இன்னும் மனத்தில் பல்விதமாய்
எண்ணிப் பார்க்க வைக்கிறதே
இன்னும் சொல்ல இல்லையென
இயம்பத் தோன்றும் வகையினிலே
இன்னும் கொஞ்சம் சிந்திக்க
எல்லாம் சொன்னார் வாழியவே!
-கருவூர் இனியன்
ஆழமான கருத்துள்ள பரமஹம்சரின் கதையைச் சொன்ன விதம் அருமை!
இன்னும் கொஞ்சம் சிந்திக்கச் செய்வதற்கு, எத்தனை அழகான, ஆணித்தரமான எடுத்துக்காட்டுகள்!
தம் கவிதைப் பெருக்கால் களிப்பெய்தச் செய்து விட்டார் நம்தலைவர் இலந்தையார்!
— தில்லைவேந்தன்.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXbj7%3DNuWrqLB7o%2Bhrx-1TzV8aYLXFaf0J6syAG2q8rsVw%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAZX9eaj%2BAX5QSVZ0OyrX%3D-Ck2YucPqxqZJKCZeH3XrHw%40mail.gmail.com.
கவிவேழம் இலந்தையாரின் கவிதைக்குப் பின்னூட்டம்
வெண்கலிப்பா
இருமுனைவாள் என்றழைத்தார் “இன்னுங்கொஞ் சமெ”ன்பதையே
வெருவுதலாம் நிலையதனை வேண்டற்க வென்றுரைத்து
இன்னமுமே கொஞ்சமென்ப தற்கிரண்டாம் காரணத்தைக்
கன்னலதாம் மொழியதனால் கவினுறவே உரைத்தாரே
முயற்சியினை யடிப்படையாய் முனைந்திட்டு ழைத்தலிலே
தயக்கத்தை விடுதிவென வுரைத்தலதில் முத்தாய்ப்பு.
கடல்பொங்கி நீரதனால் நிலமுழுக லென்றாலும்
மடைதிறந்து விடவூற்றுப் பெருகுநிலை உலகணைத்தும்
இன்னமுமே முயன்றிடுவ மெனுங்கூற்றை நாமேற்கோம்
இன்னலினைக் களைந்திட்டு இன்னமும் செய்தற்கே
அன்னவரும் உரைத்தனவா மத்தனையும் முன்னேற.,
விஞ்ஞானம் வளர்தலுடன் மேன்மையுறும் வாழ்க்கைநலன்
அஞ்சலிலாச் சீர்முயற்சி அனுதினமும் செய்திடுக.,
மலைத்தலும் நீங்கிட மந்திரமே இருமுனைவாள்
இலந்தையவர் தந்தமொழி யேற்பு.
கவிஞர் சிவசூரி
எட்டடித் தரவு கொச்சகக் கலிப்பா
மயிலாடு துறைபிறப்பு மயிலையிலே இருப்பிடம்
அயராத உழைப்பினிலே அரவிந்தர் நாடகத்தோ(டு)
உயர்வான மொழிபெயர்ப்பை யொண்டமிழில் தந்திடுவர்
வியக்குவகைக் கீர்த்தனைகள் விதவிதமாய்ச் சிறுகதைகள்
பயனளித்த பொதுமேலர் பதவியிலே மேன்மைறும்
நயக்கின்ற சிறப்புடைத்தார் நாமறிந்த சிவசூரி
அயக்காந்த மெனவிழுக்கு மருமைத்தா மிவர்கவிதை
இயல்பான சந்தநடை இவையனைத்து முடன்கொண்ட
எயிறிலியாம் சிவசூரி இவண்வந்து கவிதருக.
அயக்காந்தம் - ஊசிக்காந்தம்., பொருள்களைத் தன்பால் இழுக்க வல்லது.
எயிறிலி- சூரியன் ., இங்குச் சூரியநாராயணன் என்ற சிவசூரியைக் குறித்தது.
On 11 Nov 2025, at 9:30 AM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
On 11 Nov 2025, at 10:06 AM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
சிறு திருத்தம், இலந்தையார் கவிதைக்குப் பின்னூட்டக் கவிதையில்:
கவிஞர் சிவசூரி
எட்டடித் தரவு கொச்சகக் கலிப்பா
மயிலாடு துறைபிறப்பு மயிலையிலே இருப்பிடம்
அயராத உழைப்பினிலே அரவிந்தர் நாடகத்தோ(டு)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNPKbUY8HfVwdkVAU9Rjgk6BeP4KQd7WdAY9HGsFwCMc%2Bg%40mail.gmail.com.
கவிஞர் சிவசூரி அவர்களின் கவிதைக்குப் பின்னூட்டம்
தன்னே ரிலாத தகைசால் கவிவேழம்
முன்னே ரெனவே முறையாகச் செல்வதைப்
பன்னி உரைத்தாரே பாட்டில் சிவசூரி
உன்னி உணர்ந்தேன் உவந்து.
-கருவூர் இனியன்
கவியரங்கத்தில் இரண்டாவது அழைப்புகவிஞர் சிவசூரி
...
( எழு சீர் விருத்தம் மேல் ஓரடி வைப்பு )கவியரங்கத் தலைவர் வணக்கம்.
...
On 11 Nov 2025, at 8:07 PM, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDmbWwCnRjFGA16uHm8SvH7WJOig0%2B%2B7uAT1SHnGjzzag%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDmbWwCnRjFGA16uHm8SvH7WJOig0%2B%2B7uAT1SHnGjzzag%40mail.gmail.com.
அருமை, தலைவரே.தான தான தான தான தான தான தானனா
அல்லதுகம்பன் முன்பு தந்த சந்தப் பாவி லிங்கோர் அற்புதம்(உறங்கு கின்ற கும்ப கர்ண)
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/95BEC14D-6EB1-4698-9419-9C05DC25C3CD%40gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBABoGPRd4XFwqjYfzd8x5z8h3aEHYLh-kYQoEa%2B_ikOwA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/25B0CD7F-9216-40AE-A182-8E08F2682F88%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNN5pyWg6Eq1Yi1FYAAy2hDbDOVQD9WA16Ca-kEmtebfng%40mail.gmail.com.
On Nov 11, 2025, at 7:40 PM, Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:
எழுசீர்ச் சந்த விருத்தம்
தென்னி லந்தை முந்தி வந்து பக்தி வாகை சூடினார்
அன்று தித்த விந்தை மேவ நின்ற சூரி யாமிவர்
மன்ற லுற்ற மாலை யாக வன்று தொட்டு நோக்கினார்
கன்று கண்ட தாயி னுள்ள மென்று சாரும் பாங்கினார்
சந்த வண்ண மின்ப மாயென் சிந்தை யேறும் போகமே
பந்த மாயி லந்தை தந்த பாவி னால்க ரைந்திடு
முந்து கின்ற வெண்ண வோட்டம் சூரி யைக்க வர்ந்திட
அந்தி வான வர்ண ஜாலம் சூரி தூரி கைவணம்.
மன்றல்- வாசனை
கரைந்திடு- கரைந்திட்டு என்பதன் இடைக்குறை
வணம்- வண்ணம் என்பதன் இடைக்குறை
கவிஞர் தங்கவேல் காஞ்சிபுரம்
எண்சீர் விருத்தம்
எங்குநிறை ஆண்டவன்பா லென்றும் சித்தம்
…. ஏற்றமுறும் கவிதைகளோ விதமாய் நித்தம்
துங்கமுகன் வாரணனின் துதியின் ஆர்ப்பு
…. துணைகொள்ளும் இசைவல்லார் கேண்மை யேற்பு
வெங்கடவன் சீருரைக்க விருத்தப் பாட்டு
….. வெண்மதிகொள் விரிசடையோன் புகழில் நாட்டம்
மங்கையர்கள் சூழவரும் மயிலோன் மாட்சி
….. மனமயங்க இவர்தருவார் கவிதைக் காட்சி
சந்தத்தில் மலர்கின்ற தமிழால் கவிதை
…. சன்மார்க்கக் குறள்வெண்பா துதிக்கச் சுவையே
விந்தைமிகு விற்பாட்டு பண்ணில் பெறவே
…. வேண்டுவகை அருள்பெற்றார் மயிலன் தரவே
வந்துவிழும் ஆராரோ வள்ளிப் பாட்டு
….. வாயாரப் பாடுவமேல் வினையின் ஓட்டம்
சிந்தனையில் வந்தவற்றைச் செப்பு தற்கே
…. சிங்காரக் கச்சிநகர் வேலன் வருவார்
On 12 Nov 2025, at 8:14 AM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/20106449-457B-4907-9737-2041F28E8520%40gmail.com.
கவியரங்கத்தில் மூன்றாம் அழைப்பு:கவிஞர் தங்கவேல் காஞ்சிபுரம்
எண்சீர் விருத்தம்
எங்குநிறை ஆண்டவன்பா லென்றும் சித்தம்
…. ஏற்றமுறும் கவிதைகளோ விதமாய் நித்தம்
துங்கமுகன் வாரணனின் துதியின் ஆர்ப்பு
…. துணைகொள்ளும் இசைவல்லார் கேண்மை யேற்பு
வெங்கடவன் சீருரைக்க விருத்தப் பாட்டு
….. வெண்மதிகொள் விரிசடையோன் புகழில் நாட்டம்
மங்கையர்கள் சூழவரும் மயிலோன் மாட்சி
….. மனமயங்க இவர்தருவார் கவிதைக் காட்சி
சந்தத்தில் மலர்கின்ற தமிழால் கவிதை
…. சன்மார்க்கக் குறள்வெண்பா துதிக்கச் சுவையே
விந்தைமிகு விற்பாட்டு பண்ணில் பெறவே
…. வேண்டுவகை அருள்பெற்றார் மயிலன் தரவே
வந்துவிழும் ஆராரோ வள்ளிப் பாட்டு
….. வாயாரப் பாடுவமேல் வினையின் ஓட்டம்
சிந்தனையில் வந்தவற்றைச் செப்பு தற்கே
…. சிங்காரக் கச்சிநகர் வேலன் வருவார்
அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/79da25e4-c675-4663-8c5b-f79de7c4bcb9n%40googlegroups.com.
தங்கம் நிகர்த்த தனிப்பா விழைவார்க்குத்
தங்கவேலர் பாடல் தகும்.
-கருவூர் இனியன
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqthZT%3DKUWf149tpXxrRFOGYHKSjWNTszPBX6WrBhyd1%3DiA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/79da25e4-c675-4663-8c5b-f79de7c4bcb9n%40googlegroups.com.
“வள்ளல் பெருமான் வழியில் செல்லும்தருணம் இதுவே தருணம்”அருமையான வரிகள். வள்ளல் பெருமானுடைய இந்த வார்த்தைகளை நினைவுறுத்துகிறது.“தருவகைஇத் தருணம்நல்ல தருணம்இதில் எனக்கேதனித்தஅருட் பெருஞ்சோதி தந்தருள்க”————சிறு குறிப்பு: தங்கள் ஐந்தாம் பாட்டில் “கற்று மறக்கா கல்வி கற்று” என்னும் இடத்தில், “மறக்கா” என்பது “மறவா” என்று வந்தால் மேலும் சிறக்கும் என்று நினைக்கிறேன்.- இமயவரம்பன்
On Nov 13, 2025, at 2:02 AM, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
நெற்றிக் கண்ணைத் திறக்கும் சாவிநெஞ்சில் கருணை வந்தால் கிட்டும்
கற்று மறவா கல்வி கற்று
இன்னும்கொஞ் சம்சிந்திப் போமென் தலிப்பினிலே
மன்னுகிற வள்ளலார் மாட்சியினை - நன்னயமாய்
இங்கெடுத்து நல்ல இனிய வகைசொன்ன
தங்கவேல் பாடல் தரம்.இலந்தை
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBBGi9Bkao%3DAVH-xWFoWwqnx6WEApo0Tsci7msUZhpQUfQ%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtiV0iV7%2BTj7E_L8rtR6vTC2X3icahHsSYXaaC7TH4KqKA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXbffSAVQ1GwGJ7sE4OBZ4YghVMdVGW%2BDxFTjswjRKaizg%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtj5QRQ6WaqsqS34ifycRECvnXRx9RoQmpeaUfAvOSdDTQ%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXYxNW0%3DCyNTzv9kUMzz9HPtFUhy8uBW9Xur300tMy-DqA%40mail.gmail.com.
கலிவெண்பா
எல்லையற்ற பேரொளியா யெங்குநிறை ஆண்டவனின்
வல்ல பெரும்புகழை வாயார வாழ்த்திடும்
வள்ளலார் தந்த திருவருட்பா மந்திரம்.,
அள்ளிக் கொடுத்த வமுதத் திரட்டினில்
கிள்ளிக் கொடுத்திடு கேண்மையர் தங்கவேல்
இன்னும்நாம் சிந்தித்த லின்றியமை யாதென்றே
நன்மைகளின் பட்டியலை நம்சபையோர்க் கீந்தார்
சமரச சன்மார்க்கப் பாதையைச் சார்ந்து
பிமரங் கெடமெய்ப் பொருளை யுணர்த்திட்டால்
உள்ளத்தி னொண்பொருளே ஞானத் தெளிவாக்கும்
கொல்லா விரதக் குணமாம் மனங்கொண்டு
நல்லபல மூலிகைகள் நாள்தவறா துட்கொண்டு
கற்று மறவாத கல்வியதில் வாழ்வமைத்துப்
பற்றும் பயமும் பணத்தினில் மோகமும்
நீங்கு வகைக்காக நீங்காது சிந்திக்க
ஈங்கிட்ட பாட லினிது.
பிமரம் - மாயை, பொய்யான தோற்றம்,
கவியரங்கத்தில் நான்காம் அழைப்பு:
கவிஞர் இமயவரம்பன்
நேரிசை ஆசிரியப்பா
கற்றது விடுவன் முற்றெனக் கழன்றார்,
பற்பல விதமாய்ப் பாக்களைக் கொடுப்பவர்
“இமயச் சாரல்” இன்சுவைக் கவிதைகள்
சமயம திலார்வம் தண்டமிழ்த் தெளிவுடன்
உமையவள் பதியோ டுத்தமன் புகழினை
விளக்கிடு முரைகள் வேல்மணிச் சரமென
அளப்பறு தமிழ்கொ டாத்த நூற்பல.
அமைதியி னுருவம் ஆழ்ந்தநற் கவிவலர்
உணர்வுடன் கவிதைக் கோவிய மளிப்பவர்,
அருமை நண்பர்., ஆன்மிக மனத்தவர்.,
பணியென முனைப்பில் பைந்தமிழ்க் கவிதைகள்
குணமுளர் கொடுத்தல் நாம்செய் நற்றவம்
இமயமாம் சிந்தனை வளமுடன்
தமதாம் பாட்டினைத் தருபவர் வரம்பரே.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-%2BOhF_43QrT%2BGk7pthQXY0pRWtzCVs4DrUPX5tMNQxfbA%40mail.gmail.com.
On Nov 14, 2025, at 9:46 PM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:கவியரங்கத்தில் நான்காம் அழைப்பு:
On Nov 15, 2025, at 09:07, Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNMtSOMMT16SwMrtzeDWBn5MvTAz-2YjOaLfHUCFWiJn7w%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/04C91795-409F-4C4C-BD35-9DDF6743D975%40gmail.com.
On 15 Nov 2025, at 3:47 PM, Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNNEpLoLfW_Vk_qVPExvPZHcSVFuTe%3DHveGAW3OKHp-mhQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDyqQbqNQcq%3D4R9ghyXUT6TDarrT%2BwxtMQG8yYJWAMhuQ%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-LqcXKEfi4q3i_D%2B8nXaKdgWKMkqBThcUoDtj-Nvx%2BrMw%40mail.gmail.com.
கவியரங்கத்தில் இரண்டாவது அழைப்புகவிஞர் சிவசூரி
எட்டடித் தரவு கொச்சகக் கலிப்பா
மயிலாடு துறைபிறப்பு மயிலையிலே இருப்பிடம்
அயராத உழைப்பினிலே அரவிந்தர் நாடகத்தோ(டு)
கவியரங்கத் தலைவரின் அன்பான அழைப்புக்கு நன்றி.கவியரங்கம் : இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்
தலைவர் : கவிஞர் ராம் ராமகிருஷ்ணன்
( எழு சீர் விருத்தம் மேல் ஓரடி வைப்பு )கவியரங்கத் தலைவர் வணக்கம்.(இலந்தையார் முன்பொரு சமயம் அன்னை புவனேஸ்வரி மேல் யாத்த " குரல் தா பஞ்சகம்" , வேறொரு சமயம் அட்டமத்துச் சனியும் இன்னருள் பொழிய எழுதிய " சனி பகவான் விருத்தம்" மற்றும் பின்னர் பல சமயங்களில் அன்னை வாராஹி தேவி மேல் செய்த பல நூல்கள் ஆகியவற்றை மேலே சில பாடல்களில் சுட்டியுள்ளேன்.அப்படிப் பட்ட அருட்கவிதைகள் நாமும் இயற்ற இன்னும் இன்னும் சிந்திப்போம், வந்திப்போம். )On Tue, Nov 11, 2025 at 10:09 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:மற்றொரு சிறுதிருத்தம்“விடுதிவென” -> “விடுதியென” என்க.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNPKbUY8HfVwdkVAU9Rjgk6BeP4KQd7WdAY9HGsFwCMc%2Bg%40mail.gmail.com.
எழில்நி றைந்த இன்பக் கவிதை
… என்னை வாழ்த்தும் தீங்கவிதை - திரு
பழனி யப்பக் கவிஞர் இன்று
…. பரிவின் யாத்த பூங்கவிதை
அனைவரும் வணக்கம்
சிந்தனை அமுதப் பத்து(அறுசீர் விருத்தம்)மன்னும் உலகில் மனிதர் வாழவள்ளல் பெருமான் வழியில் சென்றால்துன்பம் நிறைந்த வாழ்வும் மாறும்துணையாய் வருவார் அருளைத் தருவார்இன்பம் பெற்று நலமாய் வாழஇனிக்கும் அருட்பா அமுதை நாளும்இன்னும் கொஞ்சம் சிந்திப் போமே
அழகிய கவிதையால் அடியேனை வாழ்த்தி அழைத்த அவைத்தலைவர் திரு.ராம்கிராம் அவர்களுக்கு மிக்க நன்றி!கவியரங்கம்- 61நாள் 15-நவம்பர்-2025தலைப்பு: இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்தலைவர்: கவிஞர் ராம் ராமகிருஷ்ணன்
...
1. என்றன் மனமே(பாவகை : சிந்துக் கண்ணிகள்)(பல்லவி)என்றன் மனமே என்றன் மனமே… இன்னும் கொஞ்சம் சிந்திப்பாய்! - இனிஎன்றும் இதுபோல் உன்னை வினவி… இருளை ஒழிக்க முந்திப்பாய்!(முந்திப்பாய் = முந்திப் பாய்வாயாக)(சரணம்)இனத்தால் மதத்தால் நிறத்தால் பிரிப்பார்… இழைக்கும் கொடுமை எதிர்ப்பாயோ - அன்றிஇனப்போர் மதப்போர் எனப்-பார் அழிய… எனக்கேன் எனப்பார்த்(து) இருப்பாயோ? (1) (என்றன் மனமே)
....
அனைவரும் வணக்கம்
சந்த வசந்த சபைக்கோர் வணக்கம்சான்றோர் நிறைந்த சபைக்கோர் வணக்கம்கந்தம் கமழும் தமிழ்க்கோர் வணக்கம்
கவிதை படிக்கும் கவிக்கோர் வணக்கம்
தலைப்பு : இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்தலைவர் : கவிஞர் ராம் ராமகிருஷ்ணன்
சிந்தனை அமுதப் பத்து(அறுசீர் விருத்தம்)மன்னும் உலகில் மனிதர் வாழவள்ளல் பெருமான் வழியில் சென்றால்துன்பம் நிறைந்த வாழ்வும் மாறும்துணையாய் வருவார் அருளைத் தருவார்இன்பம் பெற்று நலமாய் வாழஇனிக்கும் அருட்பா அமுதை நாளும்இன்னும் கொஞ்சம் சிந்திப் போமே
இறப்பைத் தவிர்த்து வாழ்வோம் இனிதே (1)
எண்சீர் விருத்தம் சிறப்பாக உள்ளது.மிக்க நன்றி ஐயா
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/79da25e4-c675-4663-8c5b-f79de7c4bcb9n%40googlegroups.com.