Hot off the keyboard!
2026-01-31
நாகூர்
-------------
(வண்ணவிருத்தம்;
தானா தான தானா தான
தானா தான .. தனதான)
வீடா வாதை ஆர்பூ வாழ்வில்
.. .. வீணே நாள்கள் .. கழியாது
.. வேறோர் யோனி மீளா வாறு
.. .. வீறார் வீடும் .. அருளாயே
நேடா ஓடு பூமே லானு(ம்)
.. .. நீர்மே லானு(ம்) .. மிகவாட
.. நீள்மா தேவ நூலோ டாமை
.. .. நீறார் மார்பில் .. அணிவோனே
வாடா மாலை நாவார் மாணி
.. .. மாளா வாறு .. தருவோனே
.. வாலார் ஏற தேறீ கோல
.. .. மாதோர் பாக(ம்) .. மகிழ்வோனே
நாடா மூடர் சேரா ஈச
.. .. நாணா நாகம் .. உடையானே
.. நாதா ஓசை ஓவா வேலை
.. .. நாகூர் மேய .. பெருமானே.
பதம் பிரித்து:
வீடா வாதை ஆர்-பூ வாழ்வில்
.. .. வீணே நாள்கள் .. கழியாது,
.. வேறு ஓர் யோனி மீளாவாறு
.. .. வீறு ஆர் வீடும் .. அருளாயே;
நேடா ஓடு பூமேலானு(ம்)
.. .. நீர்மேலானு(ம்) .. மிக வாட
.. நீள்-மாதேவ; நூலோடு ஆமை
.. .. நீறு ஆர் மார்பில் .. அணிவோனே;
வாடா மாலை நாவார் மாணி
.. .. மாளாவாறு .. தருவோனே;
.. வால் ஆர் ஏறது ஏறீ; கோல
.. .. மாது ஓர் பாக(ம்) .. மகிழ்வோனே;
நாடா மூடர் சேரா ஈச;
.. .. நாணா நாகம் .. உடையானே;
.. நாதா; ஓசை ஓவா வேலை
.. .. நாகூர் மேய .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
(வீடுதல் - ஒழிதல்; நீங்குதல்); (வாதை - துன்பம்); (ஆர்தல் - நிறைதல்); (பூ - பூமி);
(வீறு - தனிப்பட்ட சிறப்பு);
(நேடா - நேடி - தேடி; செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம் செய்து என்று பொருள்படும்);
(ஆமை - இங்கே, ஆமையோடு);
(மாணி - மார்க்கண்டேயர்);
(வால் - வெண்மை);
(நாணா - நாணாக);
(ஓவுதல் - ஒழிதல்); (வேலை - கடல்);
வி. சுப்பிரமணியன்
Hot off the keyboard!
2026-01-31
நாகூர்
-------------
(வண்ணவிருத்தம்;
தானா தான தானா தான
தானா தான .. தனதான)
வீடா வாதை ஆர்பூ வாழ்வில்
.. .. வீணே நாள்கள் .. கழியாது
.. வேறோர் யோனி மீளா வாறு
.. .. வீறார் வீடும் .. அருளாயே
நேடா ஓடு பூமே லானு(ம்)
.. .. நீர்மே லானு(ம்) .. மிகவாட
.. நீள்மா தேவ நூலோ டாமை
.. .. நீறார் மார்பில் .. அணிவோனே
வாடா மாலை நாவார் மாணி
.. .. மாளா வாறு .. தருவோனே
.. வாலார் ஏற தேறீ கோல
.. .. மாதோர் பாக(ம்) .. மகிழ்வோனே
நாடா மூடர் சேரா ஈச
.. .. நாணா நாகம் .. உடையானே
.. நாதா ஓசை ஓவா வேலை
.. .. நாகூர் மேய .. பெருமானே.
. . . . . . .
Another fresh song.
2026-02-02
தருமபுரம்
-------------
(வண்ணவிருத்தம்;
தனதனன தான தனதனன தான
தனதனன தான .. தனதான)
(எழுகுநிறை நாபி - திருப்புகழ் - திருக்கழுக்குன்றம்)
குயிலின்நிற ஓதி மனைவிபெரு வீடு
.. .. குவிநிதிய(ம்) நாடி .. வினைமேவிக்
.. குழியில்விழ ஓடும் அவலமறு மாறு
.. .. குரைகழலில் வாச .. மலர்தூவி
எயில்களவை வேவ மலையைவளை வீர
.. .. எனமொழியின் மாலை .. இடுவேனே
.. இமையவர்கள் வாழ அரியமணி போல
.. .. எரிவிடம தாரு(ம்) .. மிடறானே
கயிலைமலை வீசு தசமுகனின் வாய்கள்
.. .. கதறியழு மாறு .. நெரிபாதா
.. கமலமலர் போல நயனமது தூவு
.. .. கரியன்விழை ஆழி .. அருள்வோனே
சயிலமட மாது முலையமுது வாயர்
.. .. தவமுதல்வர் யாழின் .. வலிதான
.. தமிழ்மறையை ஓது கவுணியர்ப ராவு
.. .. தருமபுர(ம்) மேய .. பெருமானே.
பதம் பிரித்து:
குயிலின்-நிற ஓதி மனைவி, பெருவீடு,
.. .. குவி-நிதிய(ம்) நாடி .. வினை மேவிக்,
.. குழியில் விழ ஓடும் அவலம் அறுமாறு
.. .. குரைகழலில் வாச .. மலர் தூவி,
"எயில்களவை வேவ மலையை வளை- வீர"
.. .. என மொழியின் மாலை .. இடுவேனே;
.. இமையவர்கள் வாழ அரிய மணி போல
.. .. எரி-விடமது ஆரு(ம்) .. மிடறானே;
கயிலைமலை வீசு தசமுகனின் வாய்கள்
.. .. கதறி அழுமாறு .. நெரி-பாதா;
.. கமலமலர் போல நயனமது தூவு
.. .. கரியன் விழை- ஆழி .. அருள்வோனே;
சயில-மடமாது முலை-அமுது வாயர்,
.. .. தவமுதல்வர், யாழின் .. வலிது ஆன
.. தமிழ்மறையை ஓது கவுணியர் பராவு
.. .. தருமபுர(ம்) மேய .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
(ஓதி - கூந்தல்);
(எயில் - மதில்; அவை - பகுதிப்பொருள்விகுதி);
(ஆர்தல் - பொருந்துதல்; உண்தல்; அணிதல்); (மிடறு - கண்டம்);
(நெரித்தல் - நசுக்குதல்);
(கரியன் - கரியநிறம் உடையவன் - திருமால்; கரியான் என்பதன் குறுக்கல் விகாரம் என்றும் கொள்ளல் ஆம்); (ஆழி - சக்கரம்);
(சயிலம் - சைலம் - மலை); (மடம் - அழகு; மென்மை);
(யாழின் - யாழைவிட; இன் - ஐந்தாம்வேற்றுமை உருபு);
வி. சுப்பிரமணியன்
.. .. .. .. .. .. ..
வி. சுப்பிரமணியன்-
இனிய சந்தம், சொல்லாட்சி.கோபால்.
On Mon, Feb 2, 2026 at 10:03 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
Another fresh song.
2026-02-02
தருமபுரம்
-------------
(வண்ணவிருத்தம்;
தனதனன தான தனதனன தான
தனதனன தான .. தனதான)
(எழுகுநிறை நாபி - திருப்புகழ் - திருக்கழுக்குன்றம்)
...
On Feb 2, 2026, at 19:52, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtuMLzAk7mUpcpQVQdqKjFvD0u_3a1x6EKSCLvkVuTL5OA%40mail.gmail.com.
Latest!
2026-02-03
இராமனதீச்சரம்
-------------
(வண்ணவிருத்தம்;
தனாதன தாத்தன .. தனதான)
பராவிடு வோர்க்குயர் .. நலனீவாய்
.. பராபர பார்ப்பதி .. ஒருபாகா
அராவினை வீக்கிய .. அரையானே
.. அறாவினை தீர்த்தருள் .. புரியாயே
மராமரம் ஏக்கொடு .. தொளைதோளன்
.. வழாதற(ம்) மேற்கொள .. வலவீரன்
இராமன தீச்சரம் .. உறைவோனே
.. எலாவிமை யோர்க்கொரு .. பெருமானே.
பதம் பிரித்து:
பராவிடுவோர்க்கு உயர்- நலன் ஈவாய்;
.. பராபர; பார்ப்பதி ஒருபாகா;
அராவினை வீக்கிய அரையானே;
.. அறா-வினை தீர்த்தருள் புரியாயே;
மராமரம் ஏக்-கொடு தொளை-தோளன்,
.. வழாது அற(ம்) மேற்கொள-வல வீரன்,
இராமனதீச்சரம் உறைவோனே;
.. எலா-இமையோர்க்கு ஒரு பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
(மராமரம் - ஆச்சாமரம்); (ஏ - அம்பு);
வி. சுப்பிரமணியன்
On 3 Feb 2026, at 9:30 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOLnX9SM_nXRZ5dzgZaAz0kNJcgaB2R_DJAShFibqMZCQ%40mail.gmail.com.
A slight variation of the earlier pattern - with one more strong consonant.
2026-02-03
இராமனதீச்சரம்
-------------
(வண்ணவிருத்தம்;
தனாதன தாத்தனத் .. தனதான)
பொலாவினை யாற்பிறப் .. பினில்மூழ்கிப்
.. பொறாவிடர் ஆர்த்திடத் .. தவியாமல்
சொலார்தமி ழாற்கழற் .. புணையோதித்
.. தொழாவுயு(ம்) நேர்த்தியைப் .. பெறுவேனோ
நிலாநதி தேக்குபொற் .. சடைமீது
.. நிலாமதி ஏற்றிவைத் .. தருள்வோனே
எலாமறை ஏத்துமெய்ப் .. பொருளானாய்
.. இராமன தீச்சரப் .. பெருமானே.
பதம் பிரித்து:
பொலா-வினையாற் பிறப்பினில் மூழ்கிப்,
.. பொறா-இடர் ஆர்த்திடத் தவியாமல்,
சொலார்-தமிழாற் கழற்புணை ஓதித்
.. தொழா உயு(ம்) நேர்த்தியைப் பெறுவேனோ?
நிலா-நதி தேக்கு-பொற்சடைமீது
.. நிலா-மதி ஏற்றிவைத்து அருள்வோனே;
எலாமறை ஏத்து-மெய்ப்பொருள் ஆனாய்;
.. இராமனதீச்சரப் பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
(ஆர்த்தல் - பிணித்தல்);
(சொலார் - சொல் ஆர்; தொகுத்தல் விகாரம்); (கழற்புணை - திருவடித்தெப்பம்); (தொழா - தொழுது; செய்யா என்னும்வாய்பாட்டு வினையெச்சம் செய்து என்று பொருள்படும்); (உயும் - உய்யும்; இடைக்குறை விகாரம்);
(நிலா - 1. நில்லா (=பாய்ந்தோடும்); 2. சந்திரிகை; சந்திரனின் ஒளி);
(எலா - எல்லா); (மறை - வேதம்; உம் தொக்கது);
வி. சுப்பிரமணியன்
2026-02-06
கச்சி ஏகம்பம்
-------------
(வண்ணவிருத்தம்;
தத்தனா தந்தத் .. தனதான)
அச்ச(ம்)மா துன்பத் .. தளைமாய
.. அத்தனே வந்தித் .. திடுவேனே
கச்சதார் கொங்கைப் .. பரைபாகா
.. கைத்தவால் உண்பித் .. துடையானே
உச்சிமேல் இண்டைப் .. பிறைநாகம்
.. ஒட்டிவா ழும்பொற் .. சடையானே
கச்சியே கம்பத் .. துறைவோனே
.. கட்டிலா இன்பப் .. பெருமானே.
பதம் பிரித்து:
அச்ச(ம்) மா-துன்பத்-தளை மாய,
.. அத்தனே, வந்தித்திடுவேனே;
கச்சது ஆர் கொங்கைப்-பரை-பாகா;
.. கைத்த ஆல் உண்-பித்து உடையானே;
உச்சிமேல் இண்டைப்-பிறை நாகம்
.. ஒட்டி வாழும் பொற்சடையானே;
கச்சி-ஏகம்பத்து உறைவோனே;
.. கட்டு இலா இன்பப்-பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
(தளை - பந்தம்); (அத்தன் - தந்தை); (வந்தித்தல் - வணங்குதல்);
(பரை - உமாதேவி);
(கைத்தல் - கசத்தல்); (ஆல் - ஆலகாலம்);
(இண்டை - தலையில் அணியும் மாலைவகை);
(கட்டு - மும்மலக்கட்டு);
வி. சுப்பிரமணியன்
2026-02-03