ஙகர வெல்கொடி - அப்பர்

45 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 2, 2019, 9:52:45 PM9/2/19
to Santhavasantham
On Sun, Sep 1, 2019 at 2:45 AM nkantan r <rnka...@gmail.com> wrote:
அவ்வைக் காலத்திலும், அப்பர் காலத்திலும் 'ங' எழுத்தின் உருவம் எப்படி இருந்தது? பழம் தமிழெழுத்தின் உருவ மாற்றம் அறிந்த்தோர் விடை தந்தால் நன்று.

இப்பாடல், நெடுங்கணக்கு வரிசை பற்றி CTamil லிஸ்ட்டில் பேசினோம். றகரத்தை எங்கு வைப்பது என விட்டுவிட்டார் அப்பர்.

அப்பொழுது இருந்தது வட்டெழுத்து. அதில் ஙகரம் ரிஷபம் போல் இருக்கும். 
திமிலுக்கு அடுத்துள்ள முதுகில் கம்பளம் விரித்துள்ளதைக் காட்ட ஙகரத்தின் குழிவு என்று கொண்டார் போலும்.
பழக்கிய யானையின் மேல் கம்பளம் சிந்து முத்திரையிலே கூட உண்டு. அதனால் தான் யானையை
படிமானமான விலங்கு எனச் செய்தது சிந்து சமவெளியில் என்பர். திமில் உள்ள ஆக்களைப்
வேளாண்மைக்குக் கொணர்ந்தோரும் சிந்துசமவெளியாரே. ஙகரம் ரிஷப ஓவியத்தில்
திமிலுக்கு அடுத்த முதுகைப் புள்ளிக்கோட்டுடன் காட்டவேண்டும்.

சோழர்கள் - முதலில் முத்தரையர்கள் - வட்டெழுத்தைத் தூக்கிவிட்டு, கிரந்த
எழுத்தைத் தமிழ் எழுத்தாக்கினர். முக்கியமாக, ராஜராஜ சோழன். பின்னர் வட்டெழுத்து தமிழகத்தில் மறைந்துவிட்டது.
ஆனால், கேரளாவில் வளர்ச்சியுற்று வாழ்ந்தது.

வட்டெழுத்து இடம்புரியாகவும், கிரந்த எழுத்து வலம்புரியாகவும் எழுதப்படும்.

நா. கணேசன்

அப்பர் கால வட்டெழுத்தில் ஙகர எழுத்தின் உருவில் ரிஷபம் இருந்ததாகச் சொல்கிறார்.
இது பற்றிய நல்ல பதிவு ஒன்று. குடவாயில் பாலசுப்பிரமணியன் விளக்கம்.

ஙப் போல வருமா ? வியக்கத்தக்க ஆய்வு

ங என்ற எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு தமிழ் பாடல்கள் உள்ளதா என்று ஆராயும் போது அவ்வையின் ஆத்திச்சூடி தவிர்த்து திருநாவுக்கரசர் தம் பாடலில் பாடலின் முதல் எழுத்தாக பயன் படுத்தி உள்ளார்.

ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே
நுகர நீ உனைக்கொண்டு உயப்போக்கு உறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகர்இல் சேவடியே புகல் ஆகுமே.

(சித்தத் தொகை திருக்குறுந்தொகை திருநாவுக்கரசர்)

இந்த பாட்டை ரொம்பப் பேர் ஆராய்ச்சி செய்தாங்க. தமிழில் ” ங “ என்ற எழுத்தை பாட்டின் முதல் எழுத்தாக பயன்படுத்தப் பட்டிருக்கு. இந்த எழுத்தை வழுவில் வார்த்தையின் முதல் எழுத்தாக பயன் படுத்தப் பட்டு இருக்கலாம் என்பது முதல் முடிவு.  பொருள் இல்லாமல் இந்த வார்த்தையை எழுதி இருக்க முடியாது. இங்கு “ஙகர வெல் கொடியானொடு” என்பது சிவபெருமானுடைய இடபக் கொடியை குறிக்கிறது. (இடபம் = காளை) 

இதை எப்படி விளக்க முடியும் என்பது தமிழ் ஆராய்சியாளர்களுக்கு பிடிபட வில்லை. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் லிங்குஷ்டிக் டிபார்மெண்டில் பேராசிரியர் நெகமத்தை சேர்ந்தவர்.  (பெயர் தெரியவில்லை) ஏறத்தால 20 ஆண்டு காலம் முயற்சித்தும் விடை காண முடியவில்லை.

தஞ்சையில் ஒரு பெரிய புராண வகுப்பில் ஒரு நாள் டி.என்.ராமசந்திரன் சேக்கிழார் என்ற பெரியவர் இப்பாடலில் சிவபெருமானின் இடபக் கொடியை யே குறிப்பிடப் பட்டிருக்கிறது ஆனால் எப்படி விளக்குவது என்பது தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார். கல்வெட்டு துறை பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் இது பற்றிய சிந்தனையில் ஈடு பட்டார்.   அவருக்கு ஒரு பொறி தட்டியது.   இன்றைக்கு நாம் எழுதும் “ங” என்ற எழுத்தை வைத்து விடை தேட முற்பட்டால் இதற்கு விடை கிடைக்காது  அந்தக் காலத்தில் இந்த எழுத்தை எப்படி பயன் படுத்தி இருப்பார்களோ அந்த கோணத்தில் ஆராய வேண்டும்.  அதுமட்டுமல்ல தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொரு நூற்றாண்டும் மாறிக் கொண்டே வந்திருக்கிறது.  ரொம்ப பேர் கல்வெட்டுக்காக ஒரு எழுத்து ஒலைக்காக ஒரு எழுத்து என்று தவறாக நினைத்து கொள்கிறார்கள், அப்படி அல்ல. காலந்தோரும் தமிழ் எழுத்துக்கள் மாறிக் கொண்டே வந்திருக்கிறது.  மகேந்திர பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் அப்பர் அதனால் அந்த காலத்தை சேர்ந்த கல்வெட்டை வைத்து இந்த எழுத்துக்கான ஆய்வில் ஈடுபட்டார் (குடவாயில்). பல்லவர்களின் கொடி ”இடபக் கொடி” ஒரு இடபத்தின் உருவத்தை அவுட் லைன் போட்டு பார்த்தால் ”ங” என்ற எழுத்தின் வடிவம் தோற்றம் தருகிறது.  இடபத்தை பார்த்த அப்பர் பெருமான் இந்த எழுத்தோடு இடபத்தை பொருத்தி தமது பாடலில் ”ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே” என சமயோசிதமாக பயன் படுத்தியுள்ளார். அப்பரின் கலை ஈடுபாடு வியக்க வைக்கிறது.
20140104_170004.jpg

இந்த தகவல் கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழாவில் "தேவாரமும் சிற்பங்களும்" என்ற தலைப்பில் உரையாற்றிய டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களால் தெரிவிக்கப் பட்டது. ஐயாவை அந்த விழாவில் சந்தித்து இரண்டொரு வார்த்தை அவரோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் அமைந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.

இவ்விழாவிற்கு அழைப்பு விடுத்த ஓவியர் ஜீவா அவர்களுக்கு நன்றி.

Labels : தமிழ், தமிழாய்வு, குடவாயில், ஙப் போல் வளை


On Tue, Jul 23, 2019 at 7:40 AM Rathinam Chandramohan <rathinam.c...@gmail.com> wrote:

’சேக்கிழார் அடிப்பொடி’ தி. ந. இராமச்சந்திரன் கூறும் பொருள் அருமையானது.
திருவரங்கத்தில் ’அடையவளைஞ்சான் தெரு’ - எல்லோரையும் உள்ளடக்கிக் காப்பாற்றுவது எனப் பொருள்.
அதுபோல், ஙகரம் அதன் வருக்க எழுத்துக்கள் எல்லாவற்றையும் அடையவளைந்து காப்பாற்றுவது
என அவ்வை பாடியிருக்கிறாள் என்பார்.

தமிழில் பயிலா இவ்வெழுத்துக்கள் யாவும் மலையாளத்தில் பயன்கொள்கின்றனர். அவர்களுக்கு
அண்டை நாடான கொங்கில் இதற்கு ஒரு ஜோக் சொல்வர், மலையாள நாட்டில் ஒரே மழை.
சளிப்பிடித்துப் பேசும்போது  ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ எல்லாம் பேச்சாகிவிட்டது. :)

நா. கணேசன்
 

Kaviyogi Vedham

unread,
Sep 3, 2019, 12:36:03 AM9/3/19
to santhavasantham
மந்தைவெளியில்(சென்னை) ஒரு அடஞ்சாமுதலித்தெரு உள்ளது. சுமார் 1 வருடம் யான் அங்கு வசித்தேன். அதன் முழுக்காரனம் இப்போதுதான் புரிந்தது கணேசனாரே! எல்லோரையும் அரவணைத்து வளைந்துகொடுத்த நகரம்.. சரியா?
 யோகியார்

On Tue, Sep 3, 2019 at 7:22 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Sun, Sep 1, 2019 at 2:45 AM nkantan r <rnka...@gmail.com> wrote:
அவ்வைக் காலத்திலும், அப்பர் காலத்திலும் 'ங' எழுத்தின் உருவம் எப்படி இருந்தது? பழம் தமிழெழுத்தின் உருவ மாற்றம் அறிந்த்தோர் விடை தந்தால் நன்று.

இப்பாடல், நெடுங்கணக்கு வரிசை பற்றி CTamil லிஸ்ட்டில் பேசினோம். றகரத்தை எங்கு வைப்பது என விட்டுவிட்டார் அப்பர்.

அப்பொழுது இருந்தது வட்டெழுத்து. அதில் ஙகரம் ரிஷபம் போல் இருக்கும். 
திமிலுக்கு அடுத்துள்ள முதுகில் கம்பளம் விரித்துள்ளதைக் காட்ட ஙகரத்தின் குழிவு என்று கொண்டார் போலும்.

20140104_170004.jpg

இந்த தகவல் கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழாவில் "தேவாரமும் சிற்பங்களும்" என்ற தலைப்பில் உரையாற்றிய டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களால் தெரிவிக்கப் பட்டது. ஐயாவை அந்த விழாவில் சந்தித்து இரண்டொரு வார்த்தை அவரோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் அமைந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.

இவ்விழாவிற்கு அழைப்பு விடுத்த ஓவியர் ஜீவா அவர்களுக்கு நன்றி.

Labels : தமிழ், தமிழாய்வு, குடவாயில், ஙப் போல் வளை


On Tue, Jul 23, 2019 at 7:40 AM Rathinam Chandramohan <rathinam.c...@gmail.com> wrote:

ccc
அதுபோல், ஙகரம் அதன் வருக்க எழுத்துக்கள் எல்லாவற்றையும் அடையவளைந்து காப்பாற்றுவது
என அவ்வை பாடியிருக்கிறாள் என்பார்.

தமிழில் பயிலா இவ்வெழுத்துக்கள் யாவும் மலையாளத்தில் பயன்கொள்கின்றனர். அவர்களுக்கு
அண்டை நாடான கொங்கில் இதற்கு ஒரு ஜோக் சொல்வர், மலையாள நாட்டில் ஒரே மழை.
சளிப்பிடித்துப் பேசும்போது  ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ எல்லாம் பேச்சாகிவிட்டது. :)

நா. கணேசன்
 

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUd0R%2BYWZx-XPTYhfcxZLYqT20Jhs-zWzs%3DQidMqPoMU_g%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Sep 3, 2019, 6:01:14 AM9/3/19
to Santhavasantham
On Mon, Sep 2, 2019 at 11:36 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
மந்தைவெளியில்(சென்னை) ஒரு அடஞ்சாமுதலித்தெரு உள்ளது. சுமார் 1 வருடம் யான் அங்கு வசித்தேன். அதன் முழுக்காரனம் இப்போதுதான் புரிந்தது கணேசனாரே! எல்லோரையும் அரவணைத்து வளைந்துகொடுத்த நகரம்.. சரியா?
 யோகியார்


சரிதான் ஐயா.

இடபத்தின் முதுகில் கம்பளம்: ஙகர எழுத்தின் கிண்ணக்குழிக்கு ஒப்பு.
 
நா. கணேசன்
 

Ramamoorthy Ramachandran

unread,
Sep 3, 2019, 10:25:15 AM9/3/19
to santhav...@googlegroups.com
இப்போது புரிகிறது " ஙப்போல் வளை " என்ற தொடர், ஆத்திசூடியின் அடையாளத்தைக் குறிக்கிறது என்பது!
- புலவர் இராமமூர்த்தி .

Siva Siva

unread,
Sep 3, 2019, 10:43:25 AM9/3/19
to santhavasantham
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=5&Song_idField=50970&padhi=097&startLimit=16&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC 
5.97.16
ஙகர வெல்கொடி யானொடு நன்னெஞ்சே
நுகர நீயுனைக் கொண்டுயப் போக்குறில்

மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகரில் சேவடி யேபுக லாகுமே. 
 
தருமை ஆதீன உரைநூலில் உள்ள குறிப்பு:
ஙகரவெல் கொடியான் - இடபக்கொடியான். படுத்திருக்கும் வடிவில் இடபம் ங போன்றிருத்தலின் ஙகரவெல்கொடியான் என்றார். 

ஆகவே, நீங்கள் தந்த செய்தி புதிது அன்றுபோல் தோன்றுகின்றது.

 

 

On Mon, Sep 2, 2019 at 9:52 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

அப்பர் கால வட்டெழுத்தில் ஙகர எழுத்தின் உருவில் ரிஷபம் இருந்ததாகச் சொல்கிறார்.
இது பற்றிய நல்ல பதிவு ஒன்று. குடவாயில் பாலசுப்பிரமணியன் விளக்கம்.

ஙப் போல வருமா ? வியக்கத்தக்க ஆய்வு

ங என்ற எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு தமிழ் பாடல்கள் உள்ளதா என்று ஆராயும் போது அவ்வையின் ஆத்திச்சூடி தவிர்த்து திருநாவுக்கரசர் தம் பாடலில் பாடலின் முதல் எழுத்தாக பயன் படுத்தி உள்ளார்.

ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே
நுகர நீ உனைக்கொண்டு உயப்போக்கு உறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகர்இல் சேவடியே புகல் ஆகுமே.

(சித்தத் தொகை திருக்குறுந்தொகை திருநாவுக்கரசர்)

இந்த பாட்டை ரொம்பப் பேர் ஆராய்ச்சி செய்தாங்க. தமிழில் ” ங “ என்ற எழுத்தை பாட்டின் முதல் எழுத்தாக பயன்படுத்தப் பட்டிருக்கு. இந்த எழுத்தை வழுவில் வார்த்தையின் முதல் எழுத்தாக பயன் படுத்தப் பட்டு இருக்கலாம் என்பது முதல் முடிவு.  பொருள் இல்லாமல் இந்த வார்த்தையை எழுதி இருக்க முடியாது. இங்கு “ஙகர வெல் கொடியானொடு” என்பது சிவபெருமானுடைய இடபக் கொடியை குறிக்கிறது. (இடபம் = காளை) 

இதை எப்படி விளக்க முடியும் என்பது தமிழ் ஆராய்சியாளர்களுக்கு பிடிபட வில்லை. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் லிங்குஷ்டிக் டிபார்மெண்டில் பேராசிரியர் நெகமத்தை சேர்ந்தவர்.  (பெயர் தெரியவில்லை) ஏறத்தால 20 ஆண்டு காலம் முயற்சித்தும் விடை காண முடியவில்லை.

தஞ்சையில் ஒரு பெரிய புராண வகுப்பில் ஒரு நாள் டி.என்.ராமசந்திரன் சேக்கிழார் என்ற பெரியவர் இப்பாடலில் சிவபெருமானின் இடபக் கொடியை யே குறிப்பிடப் பட்டிருக்கிறது ஆனால் எப்படி விளக்குவது என்பது தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார். கல்வெட்டு துறை பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் இது பற்றிய சிந்தனையில் ஈடு பட்டார்.   அவருக்கு ஒரு பொறி தட்டியது.   இன்றைக்கு நாம் எழுதும் “ங” என்ற எழுத்தை வைத்து விடை தேட முற்பட்டால் இதற்கு விடை கிடைக்காது  அந்தக் காலத்தில் இந்த எழுத்தை எப்படி பயன் படுத்தி இருப்பார்களோ அந்த கோணத்தில் ஆராய வேண்டும்.  அதுமட்டுமல்ல தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொரு நூற்றாண்டும் மாறிக் கொண்டே வந்திருக்கிறது.  ரொம்ப பேர் கல்வெட்டுக்காக ஒரு எழுத்து ஒலைக்காக ஒரு எழுத்து என்று தவறாக நினைத்து கொள்கிறார்கள், அப்படி அல்ல. காலந்தோரும் தமிழ் எழுத்துக்கள் மாறிக் கொண்டே வந்திருக்கிறது.  மகேந்திர பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் அப்பர் அதனால் அந்த காலத்தை சேர்ந்த கல்வெட்டை வைத்து இந்த எழுத்துக்கான ஆய்வில் ஈடுபட்டார் (குடவாயில்). பல்லவர்களின் கொடி ”இடபக் கொடி” ஒரு இடபத்தின் உருவத்தை அவுட் லைன் போட்டு பார்த்தால் ”ங” என்ற எழுத்தின் வடிவம் தோற்றம் தருகிறது.  இடபத்தை பார்த்த அப்பர் பெருமான் இந்த எழுத்தோடு இடபத்தை பொருத்தி தமது பாடலில் ”ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே” என சமயோசிதமாக பயன் படுத்தியுள்ளார். அப்பரின் கலை ஈடுபாடு வியக்க வைக்கிறது.
20140104_170004.jpg

இந்த தகவல் கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழாவில் "தேவாரமும் சிற்பங்களும்" என்ற தலைப்பில் உரையாற்றிய டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களால் தெரிவிக்கப் பட்டது. ஐயாவை அந்த விழாவில் சந்தித்து இரண்டொரு வார்த்தை அவரோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் அமைந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.



--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

N. Ganesan

unread,
Sep 3, 2019, 10:54:07 AM9/3/19
to Santhavasantham
On Tue, Sep 3, 2019 at 5:00 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Mon, Sep 2, 2019 at 11:36 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
மந்தைவெளியில்(சென்னை) ஒரு அடஞ்சாமுதலித்தெரு உள்ளது. சுமார் 1 வருடம் யான் அங்கு வசித்தேன். அதன் முழுக்காரனம் இப்போதுதான் புரிந்தது கணேசனாரே! எல்லோரையும் அரவணைத்து வளைந்துகொடுத்த நகரம்.. சரியா?
 யோகியார்



அடைந்தமுதலி - தஞ்சம் என மற்றவர் அடைந்தமுதலி. அடைக்கலம் காத்தான் என்ற பெயர் உண்டு.

பிஸ்மில்லாகானி ஷெனாய் வாசிப்பில் தேர்ந்தவர். ஒருவகையில் அவரும் “அடஞ்சமுதலி” தான்.
நாஞ்சில் நாடனின் 2005 தினமணி தீபாவளிமலர்க் கட்டுரை வாசிக்கவும்:

N. Ganesan

unread,
Sep 3, 2019, 2:13:31 PM9/3/19
to Santhavasantham
On Tue, Sep 3, 2019 at 9:43 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=5&Song_idField=50970&padhi=097&startLimit=16&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC 
5.97.16
ஙகர வெல்கொடி யானொடு நன்னெஞ்சே
நுகர நீயுனைக் கொண்டுயப் போக்குறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகரில் சேவடி யேபுக லாகுமே. 
 
தருமை ஆதீன உரைநூலில் உள்ள குறிப்பு:
ஙகரவெல் கொடியான் - இடபக்கொடியான். படுத்திருக்கும் வடிவில் இடபம் ங போன்றிருத்தலின் ஙகரவெல்கொடியான் என்றார். 

ஆகவே, நீங்கள் தந்த செய்தி புதிது அன்றுபோல் தோன்றுகின்றது.

 



"ஙகர வெல்கொடி” என்னும் தொடரைப் புரிந்துகொள்வதில் மூன்று வளர்ச்சிப் படிகளைக் காணலாம். வருக்கக்கோவையாகப் பாடிய சித்தத்தொகை. தொல்காப்பியத்திற்கு அப்புறம் தமிழ் நெடுங்கணக்கை
வைத்து வரும் முதல் வருக்கக்கோவை இதுதான். https://shaivam.org/thirumurai/fifth-thirumurai/203/thirunavukkarasar-thevaram-sitthathokai-thirukkurunthokai-sindhip-paarmanth
பாம்பன் சுவாமிகள் அப்பர் அடிகளின் அடிதொடர்ந்து சண்முக கவசம் அருளினார்:
https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2018/04/18121935/1157664/shanmuga-kavasam.vpf

(1) நாஞ்சில்நாடன் (தினமணி, 2005) எழுதுகிறார்: “மொழி ஆராய்ச்சி அறிஞர் ரா. ராகவையங்கார், ஙகர வெல்கொடி என்பது சிவனது கொடி என்பது விளக்கமாகிறது என்றாலும் அதன் சரியான பொருளைப் பிவரும் ஆய்வாளர்கள் கண்டு சொல்வார்கள் என்று விட்டுவிடுகிறார்.” இது முதல் நிலை. ஆத்திச்சூடி உரையில் என்ன ரா. ரா. சுவாமி எழுதியுள்ளார்
எனப் பார்க்கணும்.

(2) இரண்டாம் நிலையாக, தருமபுர ஆதீன உரை. இடபக் கொடியுடன் தொடர்புபடுத்தியுள்ளனர். அதில் விடை கிடப்பது போல என்கிறார். ஓவியத்தைப் பார்த்தால் வெள்விடை நின்றாலும், கிடந்தாலும் அப்பர் வாக்கு பொருந்துவதை
அறியலாம். ஆனாலும், விளங்க வேண்டிய பகுதி oன்று உண்டு.

(3) ஙகரம் ṅa-karam , n. < ங² +. A measure of capacity = 8 nāḻi = 1 kuṟuṇi; குறுணியளவு. (தைலவ. தைல. 6.). Symbol for a marakkāl or eight measures; குறுணியைக் குறிக்குங் குறி. மரக்கால்/குறுணி போலக்
குழியாக இருக்கும் பழைய ங எழுத்தில் மரக்கால் போன்ற குழியை எவ்வாறு விளக்குவது என்பது வினா. அதற்குத்தான்
வெள்விடை ஊர்தியில் போர்த்தியுள்ள கம்பளத்தின் ப வடிவத்தை, திமிலுடன் சேர்த்து நோக்கவேண்டும் என்று
கூறியிருந்தேன்.

அப்பொழுது இருந்தது வட்டெழுத்து. அதில் ஙகரம் ரிஷபம் போல் இருக்கும்.
திமிலுக்கு அடுத்துள்ள முதுகில் கம்பளம் விரித்துள்ளதைக் காட்ட ஙகரத்தின் குழிவு என்று கொண்டார் போலும்.
பழக்கிய யானையின் மேல் கம்பளம் சிந்து முத்திரையிலே கூட உண்டு. அதனால் தான் யானையை
படிமானமான விலங்கு எனச் செய்தது சிந்து சமவெளியில் என்பர். திமில் உள்ள ஆக்களைப்
வேளாண்மைக்குக் கொணர்ந்தோரும் சிந்துசமவெளியாரே. ஙகரம் ரிஷப ஓவியத்தில்
திமிலுக்கு அடுத்த முதுகைப் புள்ளிக்கோட்டுடன் காட்டவேண்டும். We can see this in Indus seals: domesticated elephants are indiacted by the carpets shown on them, and potentially used in village processions. Appar's "nga-kara velkoTi" especially the grain-measure's pit shape in ங of VaTTezuttu script indicates this carpet "kambalam" outline on the Rishabha vahanam of Sivan.

 
 

On Mon, Sep 2, 2019 at 9:52 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

அப்பர் கால வட்டெழுத்தில் ஙகர எழுத்தின் உருவில் ரிஷபம் இருந்ததாகச் சொல்கிறார்.
இது பற்றிய நல்ல பதிவு ஒன்று. குடவாயில் பாலசுப்பிரமணியன் விளக்கம்.

ஙப் போல வருமா ? வியக்கத்தக்க ஆய்வு

ங என்ற எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு தமிழ் பாடல்கள் உள்ளதா என்று ஆராயும் போது அவ்வையின் ஆத்திச்சூடி தவிர்த்து திருநாவுக்கரசர் தம் பாடலில் பாடலின் முதல் எழுத்தாக பயன் படுத்தி உள்ளார்.

ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே
நுகர நீ உனைக்கொண்டு உயப்போக்கு உறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகர்இல் சேவடியே புகல் ஆகுமே.

(சித்தத் தொகை திருக்குறுந்தொகை திருநாவுக்கரசர்)

இந்த பாட்டை ரொம்பப் பேர் ஆராய்ச்சி செய்தாங்க. தமிழில் ” ங “ என்ற எழுத்தை பாட்டின் முதல் எழுத்தாக பயன்படுத்தப் பட்டிருக்கு. இந்த எழுத்தை வழுவில் வார்த்தையின் முதல் எழுத்தாக பயன் படுத்தப் பட்டு இருக்கலாம் என்பது முதல் முடிவு.  பொருள் இல்லாமல் இந்த வார்த்தையை எழுதி இருக்க முடியாது. இங்கு “ஙகர வெல் கொடியானொடு” என்பது சிவபெருமானுடைய இடபக் கொடியை குறிக்கிறது. (இடபம் = காளை) 

இதை எப்படி விளக்க முடியும் என்பது தமிழ் ஆராய்சியாளர்களுக்கு பிடிபட வில்லை. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் லிங்குஷ்டிக் டிபார்மெண்டில் பேராசிரியர் நெகமத்தை சேர்ந்தவர்.  (பெயர் தெரியவில்லை) ஏறத்தால 20 ஆண்டு காலம் முயற்சித்தும் விடை காண முடியவில்லை.

தஞ்சையில் ஒரு பெரிய புராண வகுப்பில் ஒரு நாள் டி.என்.ராமசந்திரன் சேக்கிழார் என்ற பெரியவர் இப்பாடலில் சிவபெருமானின் இடபக் கொடியை யே குறிப்பிடப் பட்டிருக்கிறது ஆனால் எப்படி விளக்குவது என்பது தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார். கல்வெட்டு துறை பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் இது பற்றிய சிந்தனையில் ஈடு பட்டார்.   அவருக்கு ஒரு பொறி தட்டியது.   இன்றைக்கு நாம் எழுதும் “ங” என்ற எழுத்தை வைத்து விடை தேட முற்பட்டால் இதற்கு விடை கிடைக்காது  அந்தக் காலத்தில் இந்த எழுத்தை எப்படி பயன் படுத்தி இருப்பார்களோ அந்த கோணத்தில் ஆராய வேண்டும்.  அதுமட்டுமல்ல தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொரு நூற்றாண்டும் மாறிக் கொண்டே வந்திருக்கிறது.  ரொம்ப பேர் கல்வெட்டுக்காக ஒரு எழுத்து ஒலைக்காக ஒரு எழுத்து என்று தவறாக நினைத்து கொள்கிறார்கள், அப்படி அல்ல. காலந்தோரும் தமிழ் எழுத்துக்கள் மாறிக் கொண்டே வந்திருக்கிறது.  மகேந்திர பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் அப்பர் அதனால் அந்த காலத்தை சேர்ந்த கல்வெட்டை வைத்து இந்த எழுத்துக்கான ஆய்வில் ஈடுபட்டார் (குடவாயில்). பல்லவர்களின் கொடி ”இடபக் கொடி” ஒரு இடபத்தின் உருவத்தை அவுட் லைன் போட்டு பார்த்தால் ”ங” என்ற எழுத்தின் வடிவம் தோற்றம் தருகிறது.  இடபத்தை பார்த்த அப்பர் பெருமான் இந்த எழுத்தோடு இடபத்தை பொருத்தி தமது பாடலில் ”ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே” என சமயோசிதமாக பயன் படுத்தியுள்ளார். அப்பரின் கலை ஈடுபாடு வியக்க வைக்கிறது.
20140104_170004.jpg

இந்த தகவல் கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழாவில் "தேவாரமும் சிற்பங்களும்" என்ற தலைப்பில் உரையாற்றிய டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களால் தெரிவிக்கப் பட்டது. ஐயாவை அந்த விழாவில் சந்தித்து இரண்டொரு வார்த்தை அவரோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் அமைந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.



--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 3, 2019, 6:17:26 PM9/3/19
to Santhavasantham
On Tue, Sep 3, 2019 at 9:25 AM Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:
இப்போது புரிகிறது " ஙப்போல் வளை " என்ற தொடர், ஆத்திசூடியின் அடையாளத்தைக் குறிக்கிறது என்பது!
- புலவர் இராமமூர்த்தி .

நன்றி. எப்போதும் ஓர் ஐயம் இருந்தது. குறுணி (மரக்கால்) போல ஏன் ஒரு குழி ஙகரத்தில் என்று.
அது எருதின் மேல் விரிக்கும் கம்பளத்தின் அவுட்லைன் என்பது தெளிவு.
யாழ்ப்பாண அரசரின் நந்திக் கொடி

ரா. ராகவையங்கார், ஆத்திசூடியுரை, (பதிப்பாசிரியர்: வித்வான் மு. சண்முகம்பிள்ளை, தமிழ்ப் பல்கலை)
ஙப்போல் வளை
 ”
  கண்டொன்று சொல்லாது ஈட்டும் பொருட்டு ஏதுவும் அறனும் பயனுமாகிய சுற்றத்தைத் தழுவிக்கொள்ளுதல் கூறுகின்றது இஃதென்க.

சுற்றத்தாற் சுற்றப்பட வொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன் (குறள் 524)
என்றார் திருவள்ளுவனாரும்.

இதன் பொருள்: ஙகாரந்தான் மொழிக்குபகாரப்பட்டுநின்று மொழிக்குபகாரப்படாத தன்வருக்க மனைத்தையும் உபகாரப்படுமாறு தழீஇ நிற்றல்போல, நீ உலகுக்கு உபகாரப்படாதார் ஆயினும் உன் சுற்ற மனைத்தையும் உபகாரப்படுமாறு தழீஇக் கொள்க என்றவாறு.”
[...]

 ‘ஙகர வெல்கொடியான்’ எனத் திருப்பாட்டின் வருதலான் ஙகரம் ஏறு எனக்கொண்டு அது மடுத்தவாயெல்லாம் சகடீர்த்தற்குச் சலியாது நுகம் பூண்டற்குத் தலைவளைத்தல் போல நீயும் இல்வாழ்க்கையென்னும் இரும்பெரிய வான்சகடத்தை எல்லாக் காலத்தும் இடத்தும் தளராமல் நடைபெறச் செய்தற்குச் சலியாமற் பூண்டுகொள்க என்றாரென்றலும் ஒன்று. “மடுத்தவா யெல்லாம் பகடன்னான்” என்றார் தேவரும்.

’மன்னவரை யமிழ்தூட்டி வானவரை வாழ்விக்கும்
எண்ணருஞ் சீர்ப்பெருக்கார் எருதுசுவ லிடுங்கறையே’

என்று கம்பநாடரும் இவ்வேற்றைப் பாராட்டுதல் காண்க.”

N. Ganesan

unread,
Sep 4, 2019, 11:32:03 AM9/4/19
to Santhavasantham, Dr.Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam, George Hart
On Sun, Jul 21, 2019 at 7:29 PM நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com> wrote:

100 ஆண்டுகளுக்கு முந்தைய நூல்களில் ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ கொண்ட வார்த்தைகள்
இல்லை. ங மாத்திரம் பயன்பட்டிருக்கிறது. ஙகரம் போல வளைக என்று ஆத்திசூடியில் காண்கிறோம். குறுணி (அ) 
மரக்கால் தானிய அளவையின் குறியீடாக ங உள்ளது. ஙகர வெல்கொடி என்று அப்பர் சித்தத் திருத்தொகையில்
கூறுவது குறுணி போல நந்தி வாஹனத்தின் ‘கார்ப்பெட்’ என்று கொள்ளவேண்டும். யானை மீது இதுபோன்ற 
கார்ப்பெட் சிந்து சமவெளி முத்திரைகளில் உண்டு.

20-ஆம் நூற்றாண்டு வெகுஜன வணிகப்பத்திரிகை எழுத்துகளில் நீங்கள் குறிப்பிடும் எழுத்துக்களை ஒலிக்குறிப்பாகப்
பயன்படுத்தியுள்ளார்கள். ஙீ, ஙே, ஙை, ஙோ எழுத்துக்களை கமெர்சியல் இதழ்களில் காண முடிகிறது. அவற்றில்
சில காட்டுகள் காண்போம். இந்த எழுத்துக்கள் முன்பு ஒலிக்குறிப்பாக இல்லையெனினும், இவ்வகை எழுத்துக்களை
ஊசிமுறி என்றும், அதற்கான உதாரணங்கள் என்றும் ஒலிகளை தமிழ் இலக்கண நூல்களில் வகைப்படுத்தியுள்ளனர்.

மொழியியலில் இந்த அனுகரணவோசைச்சொற்கள் புதுச் சொற்களை உருவாக்குவதில் பெரும்பங்கு
வகிக்கின்றன. Ideophones (aka Ideographs) abound in Dravidian, Africa's Bantu languages, Japanese etc.,
ஒலிக்குறிப்புச் சொற்கள், அவற்றின் தாதுத்தொடர்கள், ... இவற்றையெல்லாம்
தொகுத்து - சுமார் 2000 சொற்களுக்குத் தமிழில் அகராதியை மொழியியலாளர்கள் உருவாக்க வேண்டும்.
ஜப்பானிய மொழிக்கு, அதில் உள்ள ஒலிக்குறிப்புச் சொற்களைத் தொகுத்துத் தனி அகராதி தயாரித்துள்ளனர்.
ஒலிக்குறிப்புத் தொடர்களால் உருவாகும் 20+ சொற்கள் பற்றிப் பல்வேறு காலங்களில் எழுதியிருக்கிறேன்.

உலகத்திலேயே, அனுகரணவோசைச் சொற்களைப் பற்றிப் பேசும் இலக்கண நூல்கள் தமிழில்தான்
இருக்கின்றன. அதன் வாசகங்கள் சில காண்போம். தமிழ் இலக்கணக்கடல், தி. வே. கோபாலையர்
எழுதியுள்ள தமிழ் இலக்கணப் பேரகராதியில் இருந்து பார்க்கலாம்.

எழுத்தாகா ஒலிகள் -

{Entry: A01__448}

முற்கு வீளை இலதை - முதலியன ஒரோவழிப் பொரு ளுணர்த்தினவேனும், எழுத்து ஆகா ஒலிகளாம். கடலொலி சங்கொலி முதலியன பொருள் உணர்த்தாத, எழுத்தாகா ஒலிகளாம். முற்கு - வீரர் போர்க்கு அழைக்கும் அறைகூவல் கர்ச்சனை; வீளை - சீழ்க்கையிடும் ஒலி; இலதை - அடிநா அடியில் தோன்றுவதோர் ஒலிக்குறிப்பு; ஆடுமாடுகளை ஓட்டும் ஒலி. (தொ.பாயிரம், நச்.)

தன்னையே உணர்த்தும் கடலொலி இடியொலி முதலாயின வும், தன்னொடு மணவினையும் மகிழ்வும் முதலாய பிற பொருளையும் உணர்த்தும் சங்கொலி நகையொலி முதலா யினவும், சொல்லாதல் தன்மையொடு கூடியாயினும் தனித் தாயினும் உறுப்பாதல் தன்மை எய்தாமையின் எழுத்து எனப்படாத ஆயின. (பா. வி. பக். 170) http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/sup/TIPA_2l/A01.html

எழுத்தல் இசை -

{Entry: N14__427}

எழுத்து ஓசையல்லாத ஏனைய ஓசைகளாகிய முற்கும் வீளையும் இலதையும் அநுகரணமும் முதலியன. அவை செய்யுட்கண் வந்தால் அவற்றையும் செய்யுள்நடை அழியா மல் அசையும் சீரும் தளையும் அடியும் தொடையும் பிழையாமைக் கொண்டு வழங்கப்படும்.

முற்கு - முக்குதல்; வீளை - சீழ்க்கை அடித்தல்;

இலதை - கோழையை வெளிப்படுத்தல் : அநுகரணம் - போலச் செய்வது; அஃதாவது வேறொன்று செய்வது போலச் செய்யும் ஒலிக்குறிப்பு; பறவை கத்துவது போலவும், விலங்கு ஒலிப்பது போலவும் ஒலித்தல் முதலியன.

எ-டு : ‘மன்றலங் கொன்றை மலர்மிலைந் துஃகுவஃ
கென்று திரியும் இடைமகனே - சென்று
மறியாட்டை உண்ணாமல் வண்கையால் வல்லே
அறியாயோ அண்ணாக்கு மாறு’

என ‘ உஃகுவஃகு ’ என்று வருதல் போல்வன. இவை இடைக் காடர் பாடிய ஊசிமுறியுள் காணப்படும். ‘ஊசிமுறி’ எழுத்தாணியால் முறையாக எழுதமுடியாத எழுத்தல்லாத ஒலிகள் எழுதப்பட இயலாமல் ஓராற்றான் குறிப்பிடப்பட வேண்டுதலின் பெற்ற பெயர். ஊசி - எழுத்தாணி; முறி - தடுமாறச் செய்தல். (யா. வி. பக். 395, 396)

http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/sup/TIPA_2l/N14.html

On Ideophones from PiGkalantai NikaNTu.

பிங்கலந்தை (பதிப்பாசிரியர்: பொள்ளாச்சிச் சிவன்பிள்ளையவர்கள்)

(CAT) அனுகரண ஓசை (Sūtra 2116) ((Section 7_7)) [Category: "QS_list"]

[****** ]

  1. இம்மெனல் கல்லென லிழுமெனல் வல்லெனல்
  2. பொம்மென லொல்லெனல் பொள்ளெனல் ஞெரேலெனல்
  3. கொம்மெனல் சரேலெனல் ஞொள்ளெனல் கொல்லென
  4. லம்மெனல் பிறவு மனுகரண வோசை.

அனுகரண உபய ஓசை (Sūtra 2117) ((Section 7_7)) [Category: "QS_list"]

[****** ]

  1. வெடுவெடென றிடுதிடெனல் களகளெனல் கொளகொளென
  2. னெடுநெடெனன் மொகமொகென னெறுநெறெனல் படபடெனன்
  3. மொடுமொடெனல் சடசடெனல் சளசளெனல் கலகலெனல்
  4. சலசலெனல் கிடுகிடென லாமன்ன பிறவு
  5. மனுகரண வுபய வோசைப் பெயரே.

கலப்புக் கட்டோசை (Sūtra 2118) ((Section 7_7)) [Category: "QS_list"]

[****** ]

  1. உளற றெழித்த லுலப்ப லலப்பல்
  2. பூசல் குமுற றுவைவர றுவைத்த
  3. லாகுலங் கோடணை கோலா கலமே
  4. யார்ப்புத் தமரங் கலப்புக்கட் டோசை.
நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 5, 2019, 9:36:56 AM9/5/19
to Santhavasantham, George Hart, kuda...@yahoo.com, sirpi balasubramaniam
ஙகரம் என்னும் எழுத்தின் உருவத்தால் குறுணி (மரக்கால்) குறியாகவும், நந்தி (அப்பர்) என்றும் பொருள் பெறுவதைப் பார்த்தோம் [1]. இன்னும் ஒரு சொல், ஙனம் பற்றி இலக்கண உரையாசிரியர் விவரித்துள்ளனர். ஙனம் தனியாக இயங்காது. சுட்டெழுத்து, வினாவெழுத்துடன் சேர்ந்து விகுதியாகவே செயல்படும்.

 ஙனம் ṅaṉaம் , part. Affix in the sense of place, manner, room, mode, way, used after the demonstrative particles அ, இ, உ, எ, யா, as அங்ஙனம், etc.; சுட்டெழுத்து வினாவெழுத்துக்களை ஒட்டித் தன்மை, இடம் முதலிய பொருள்களைத் தரும் இடைச்சொல். (நன். 106, உரை.)

அங்கு நப்பிரத்தியம் பெற்று அங்கனம் என்று வரும். அங்கனம் > அங்ஙனம். மலையாள மொழியில் -ங்க- எல்லாம்
-ங்ங- என்று திரிந்துவிடும். ஆனால், தமிழில் ஙனம் என அ, இ, உ, எ, யா-வுக்குப் பின்னால் வரும் இடைச்சொல்
மட்டும் மாறுகிறது. எனவே தான், தனியாக நன்னூல் உரைகாரர் குறித்துள்ளார்.

நா. கணேசன்
[1] குறுணி போல உள்ள ஙகர எழுத்தின் குழிவு நந்தியின் மேல் போர்த்தப்பெறும் கம்பளத்தை அப்பர் பெருமானுக்கு நினைவூட்டுகிறது. ரிஷபம் இருந்தாலும், நின்றாலும் ஙகர வடிவம் உண்டு.  We can see this in Indus seals: domesticated elephants are indiacted by the carpets shown on them, and potentially used in village processions. Appar's "nga-kara velkoTi" especially the grain-measure's pit shape in ங of VaTTezuttu script indicates this carpet "kambalam" outline on the Rishabha vahanam of Sivan. Look at the nga letter shape in 5-9th centuries in,
https://en.wikipedia.org/wiki/Tamil_script#/media/File:History_of_Tamil_script.jpg

rishabha-vahana.jpg

20140104_170004.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages