முற்குறிப்புகள்:
* இலந்தையார் கொடுத்த ஈற்றடிகளில் பலவற்றுக்குப் பாடல் எழுதினேன்.
* 11 + 3 பாடல்கள்
2026-06-22 to 24
பொது - ஈற்றடிக்கு வெண்பா
---------------
1) -- கண்ணெல்லாம் ஆகுமோ கண் --
தின்றும் உறங்கியும் செல்வாழ்வில் தா(ம்)மயங்கி
என்றுமிடுக் கண்பட் டிவணுழல்வார் - அன்றந்தக்
கண்ணப்பன் கண்பெற்ற அண்ணல்கோ யில்காணாக்
கண்ணெல்லாம் ஆகுமோ கண்.
2) -- நேசமாய் வந்த நெருப்பு --
வஞ்சச் சமணர்கள் மந்திரத்தீப் பற்றாமை
அஞ்சிவைத்த தீயில் அழியாத - செஞ்சொற்சேய்
ஈசனார் இன்னருளால் ஏவியதே பாண்டியன்பால்
நேசமாய் வந்த நெருப்பு.
3) -- நெருப்பை அணையாத நீர் --
மயலில் பகீரதன் வார்கழலை வாழ்த்தப்
புயலார் மிடற்றன் புரந்தான் - கயிலைப்
பொருப்பன் சடையணைந்த போதுமவ் வேணி
நெருப்பை அணையாத நீர்.
4) -- புன்னகை யார்க்கும் பொது --
பிணங்களெரி காடேபல் பேரி முழக்கும்
கணங்கட்கும் ஆடு கழலை - வணங்குசுரர்
இன்னலற மேருவில் ஏந்திமதில் மூன்றெரி
புன்னகை யார்க்கும் பொது.
5) -- வானம் இறங்கி வரும் --
ஐந்தறிவார் ஆனிரைமேய் ஆனாயர் ஆவினில்
ஐந்துகந்தான் தாள்போற்றி அன்பொடிசை - ஐந்தெழுத்துக்
கானம் மகிழ்நெற்றிக் கண்ணன் அருள்செய்ய
வானம் இறங்கி வரும்.
6) -- நீயென்றேன் நீயென்றாய் நீ --
மாலைவான் வண்ணாநான் வாழ்த்திநினை வேன்முன்னம்
சூலைதந்து நீயாட்கொள் தொண்டர்சொல் - வேலைநஞ்சுண்
நீயென்கோன் நீயெந்தை நீங்கா அருந்துணை
நீயென்றேன் நீயென்றாய் நீ.
7) -- கட்டினுள் மாட்டாத கட்டு --
ஒட்டார்தம் முப்புரங்கள் ஒள்ளழலார் ஓர்கணையால்
சுட்டானைப் பற்றித் தொழுதுதினம் - மட்டார்பூக்
கட்டலும் இன்சொற்கள் கட்டலும் என்றுமிக்
கட்டினுள் மாட்டாத கட்டு.
8)
அருமலைபேர்த் தானை அடர்த்தழ வைத்த
மருமலர்ப் பாதத்தை வாழ்த்தி - அருளது
கிட்டித் துயர்வினை கெட்டார்காண் பார்பவ
நட்டத்தில் உச்ச நடம்.
9) -- கண்ணைமூ டிக்கொண்டு காண் --
பாம்பணை மீது படுத்திருப்பான் வேதனிவர்
தாம்பன்றி அன்னமாய்ச் சாரவொண்ணார் - ஓம்பியடி
எண்ணுமடி யார்க்கெளியான் எம்பெருமான் பேரோதிக்
கண்ணைமூ டிக்கொண்டு காண்.
10) -- பார்ப்பாரே பார்ப்பாரே பார் --
இல்லையென்று கத்துகின்ற எத்தர்கட் கில்லாதான்
முல்லைநகைப் பார்ப்பதிகோன் முக்கண்ணன் - எல்லையிலான்
ஆர்ப்பார் நதிச்சடை அண்ணலருள் கண்ணாகப்
பார்ப்பாரே பார்ப்பாரே பார்.
11) -- பொந்தினுள் இன்னொரு பொந்து --
அந்தமிலான் ஆதியிலான் ஆரணங்கோர் பாதியினான்
சந்திரனைத் தாங்கிய தாழ்சடையன் - கந்தமென
வெந்தபொடி பூசு விகிர்தனிடம் அன்பருள்ளப்
பொந்தினுள் இன்னொரு பொந்து.
***
12) -- காதுக்கு வேண்டாம் கதவு --
எண்டிசையும் பார்க்கும் இருகண் களுக்கிமை
கண்டதையும் உண்டு கடுநோயும் - விண்டசொலால்
மாதுக்க மும்தரு வாய்க்குதடு நற்கதவு
காதுக்கு வேண்டாம் கதவு.
13) -- மறதியும் கூட வரம் --
மருந்தை அருந்துங்கால் வானரத்தை எண்ணில்
மருந்துபலன் இல்லையெனும் வார்த்தை - இருந்தும்
இறையு(ம்)மறக் கொண்ணோம் இறைவன் படைப்பில்
மறதியும் கூட வரம்.
14) -- குறுக்குத் தெருவில் குடி --
தா(ம்)மகிழ எண்ணித் தருமம்கை விட்டார்க்கோ
மாமழை சேர்மாட மாளிகை - தீமை
வெறுக்கும் அறவோர்க்கோ மேதினியில் என்றும்
குறுக்குத் தெருவில் குடி.
V. Subramanian
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCN9YWB7fDjqHFd4tgoH7fHEOsmRsAc3uPjfV4bAxUdRrA%40mail.gmail.com.
--
With some notes now.
முற்குறிப்புகள்:
* இலந்தையார் கொடுத்த ஈற்றடிகளில் பலவற்றுக்குப் பாடல் எழுதினேன்.
* 11 + 3 பாடல்கள்
2026-06-22 to 24
பொது - ஈற்றடிக்கு வெண்பா
---------------
(11 பாடல்கள்) (வெண்பா)
1) -- கண்ணெல்லாம் ஆகுமோ கண் --
தின்றும் உறங்கியும் செல்வாழ்வில் தா(ம்)மயங்கி
என்றுமிடுக் கண்பட் டிவணுழல்வார் - அன்றந்தக்
கண்ணப்பன் கண்பெற்ற அண்ணல்கோ யில்காணாக்
கண்ணெல்லாம் ஆகுமோ கண்.
தின்றும் உறங்கியும் செல்-வாழ்வில் தா(ம்) மயங்கி, என்றும் இடுக்கண்பட்டு இவண் உழல்வார் - (இடுக்கண் - துன்பம்); (இவண் - இவ்விடம்);
அன்று அந்தக் கண்ணப்பன் கண் பெற்ற அண்ணல் கோயில் காணாக் கண்ணெல்லாம் ஆகுமோ கண் -
2) -- நேசமாய் வந்த நெருப்பு --
வஞ்சச் சமணர்கள் மந்திரத்தீப் பற்றாமை
அஞ்சிவைத்த தீயில் அழியாத - செஞ்சொற்சேய்
ஈசனார் இன்னருளால் ஏவியதே பாண்டியன்பால்
நேசமாய் வந்த நெருப்பு.
வஞ்சச் சமணர்கள் மந்திரத்தீப் பற்றாமை அஞ்சி வைத்த தீயில் அழியாத செஞ்சொற்சேய் - (சேய் - மகன்);
ஈசனார் இன்னருளால் ஏவியதே, பாண்டியன்பால் நேசமாய் வந்த நெருப்பு - (நேசம் - அன்பு); (சம்பந்தர் தேவாரம் - 3.51.1 - "பொய்யர்-ஆம் அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று பாண்டியற்கு ஆகவே");
3) -- நெருப்பை அணையாத நீர் --
மயலில் பகீரதன் வார்கழலை வாழ்த்தப்
புயலார் மிடற்றன் புரந்தான் - கயிலைப்
பொருப்பன் சடையணைந்த போதுமவ் வேணி
நெருப்பை அணையாத நீர்.
மயல்-இல் பகீரதன் வார்கழலை வாழ்த்தப், புயல் ஆர் மிடற்றன் புரந்தான் - (மயல் - மயக்கம்); (புயல் - மேகம்); (ஆர்தல் - ஒத்தல்); (புரத்தல் - அருள்தல்);
கயிலைப் பொருப்பன் சடை அணைந்த போதும் அவ்-வேணி நெருப்பை அணையாத நீர் - (அணைதல் - சார்தல்; பொருந்துதல்); (அணைத்தல் - அவித்தல் - extinguish); (வேணி - சடை; நதி);
4) -- புன்னகை யார்க்கும் பொது --
பிணங்களெரி காடேபல் பேரி முழக்கும்
கணங்கட்கும் ஆடு கழலை - வணங்குசுரர்
இன்னலற மேருவில் ஏந்திமதில் மூன்றெரி
புன்னகை யார்க்கும் பொது.
பிணங்கள் எரி காடே -
பல்பேரி முழக்கும் கணங்கட்கும் - (பேரி - முரசு);
ஆடு கழலை வணங்கு சுரர் இன்னல் அற மேருவில் ஏந்தி -
மதில் மூன்று எரி புன்னகையார்க்கும் பொது - (பொது - மன்று; அம்பலம்);
5) -- வானம் இறங்கி வரும் --
ஐந்தறிவார் ஆனிரைமேய் ஆனாயர் ஆவினில்
ஐந்துகந்தான் தாள்போற்றி அன்பொடிசை - ஐந்தெழுத்துக்
கானம் மகிழ்நெற்றிக் கண்ணன் அருள்செய்ய
வானம் இறங்கி வரும்.
ஐந்தறிவு ஆர் ஆனிரை மேய் ஆனாயர் -
ஆவினில்-ஐந்து உகந்தான் தாள் போற்றி - (ஆவினில் ஐந்து - பஞ்சகவ்வியம்);
அன்பொடு இசை ஐந்தெழுத்துக் கானம் மகிழ் நெற்றிக்கண்ணன் அருள்செய்ய வானம் இறங்கி வரும் - (வரும் - வருவான்; வந்தான் என்ற பொருளில்; காலமயக்கம்);
6) -- நீயென்றேன் நீயென்றாய் நீ --
மாலைவான் வண்ணாநான் வாழ்த்திநினை வேன்முன்னம்
சூலைதந்து நீயாட்கொள் தொண்டர்சொல் - வேலைநஞ்சுண்
நீயென்கோன் நீயெந்தை நீங்கா அருந்துணை
நீயென்றேன் நீயென்றாய் நீ.
மாலை-வான் வண்ணா, நான் வாழ்த்தி நினைவேன், முன்னம் சூலை தந்து நீ ஆட்கொள் தொண்டர்-சொல் -
வேலைநஞ்சு உண் நீ என் கோன் - (வேலை - கடல்);
நீ எந்தை -
நீங்கா அருந்துணை நீ -
என் தேன் நீ -
என் தாய் நீ -
(இவையெல்லாம் அப்பர் வாக்கு);
7) -- கட்டினுள் மாட்டாத கட்டு --
ஒட்டார்தம் முப்புரங்கள் ஒள்ளழலார் ஓர்கணையால்
சுட்டானைப் பற்றித் தொழுதுதினம் - மட்டார்பூக்
கட்டலும் இன்சொற்கள் கட்டலும் என்றுமிக்
கட்டினுள் மாட்டாத கட்டு.
ஒட்டார்தம் முப்புரங்கள் ஒள்-அழல் ஆர் ஓர் கணையால் சுட்டானைப் பற்றித் தொழுது தினம் - (ஒட்டார் - பகைவர்);
(தினம்) மட்டு ஆர் பூக் கட்டலும் இன்சொற்கள் கட்டலும் - (மட்டு - தேன்; வாசனை); (கட்டுதல் - பிணித்தல்; செய்யுளியற்றுதல்);
என்றும் இக்கட்டினுள் மாட்டாத கட்டு - (இக்கட்டு - இடுக்கண்; கஷ்டம்); (கட்டு - பந்தம்);
8)
அருமலைபேர்த் தானை அடர்த்தழ வைத்த
மருமலர்ப் பாதத்தை வாழ்த்தி - அருளது
கிட்டித் துயர்வினை கெட்டார்காண் பார்பவ
நட்டத்தில் உச்ச நடம்.
அருமலை பேர்த்தானை அடர்த்து அழவைத்த மருமலர்ப்பாதத்தை வாழ்த்தி - (அடர்த்தல் - நசுக்குதல்); (மரு - வாசனை);
அருளது கிட்டித், துயர்வினை கெட்டார் -
காண்பார் பவநட்டத்தில் உச்ச-நடம் - (பவம் - பிறவி); (நட்டம் - நஷ்டம் - அழிவு);
9) -- கண்ணைமூ டிக்கொண்டு காண் --
பாம்பணை மீது படுத்திருப்பான் வேதனிவர்
தாம்பன்றி அன்னமாய்ச் சாரவொண்ணார் - ஓம்பியடி
எண்ணுமடி யார்க்கெளியான் எம்பெருமான் பேரோதிக்
கண்ணைமூ டிக்கொண்டு காண்.
பாம்பணை மீது படுத்திருப்பான் வேதன் இவர் தாம் பன்றி அன்னமாய்ச் சார ஒண்ணார் - (சார்தல் - கிட்டுதல்);
ஓம்பி அடி எண்ணும் அடியார்க்கு எளியான் எம்பெருமான் -
பேர் ஓதிக், கண்ணை மூடிக்கொண்டு காண் - (காண்டல் - பார்த்தல்; அனுபத்தில் அறிதல்);
10) -- பார்ப்பாரே பார்ப்பாரே பார் --
இல்லையென்று கத்துகின்ற எத்தர்கட் கில்லாதான்
முல்லைநகைப் பார்ப்பதிகோன் முக்கண்ணன் - எல்லையிலான்
ஆர்ப்பார் நதிச்சடை அண்ணலருள் கண்ணாகப்
பார்ப்பாரே பார்ப்பாரே பார்.
"இல்லை" என்று கத்துகின்ற எத்தர்கட்கு இல்லாதான் - (எத்தன் - வஞ்சகன்);
முல்லைநகைப் பார்ப்பதிகோன் - (பார்ப்பதி - பார்வதி);
முக்கண்ணன் -
எல்லையிலான் -
ஆர்ப்பு ஆர் நதிச்சடை அண்ணல் அருள் கண்ணாகப் பார்ப்பாரே பார்ப்பாரே பார் - (ஆர்ப்பு - ஒலி; பேரொலி); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்); (அருள் - அருளே; ஏகாரம் தொக்கது); (பார்த்தல் - கண்ணால் நோக்குதல்; அறிதல்);
11) -- பொந்தினுள் இன்னொரு பொந்து --
அந்தமிலான் ஆதியிலான் ஆரணங்கோர் பாதியினான்
சந்திரனைத் தாங்கிய தாழ்சடையன் - கந்தமென
வெந்தபொடி பூசு விகிர்தனிடம் அன்பருள்ளப்
பொந்தினுள் இன்னொரு பொந்து.
அந்தமிலான் ஆதியிலான் -
ஆரணங்கு ஓர் பாதியினான் -
சந்திரனைத் தாங்கிய தாழ்சடையன் -
கந்தமென வெந்தபொடி பூசு விகிர்தன் இடம் - (விகிர்தன் - சிவன் திருநாமம் - மாறுபட்ட செயலினன்);
அன்பர் உள்ளப்பொந்தினுள் இன்னொரு பொந்து -
***
2026-06-22 to 24
ஈற்றடிக்கு வெண்பா (மேலுள்ள பதிகத்தில் பயன்படுத்தாத மற்ற ஈற்றடிப் பாடல்கள்)
---------------
12) -- காதுக்கு வேண்டாம் கதவு --
எண்டிசையும் பார்க்கும் இருகண் களுக்கிமை
கண்டதையும் உண்டு கடுநோயும் - விண்டசொலால்
மாதுக்க மும்தரு வாய்க்குதடு நற்கதவு
காதுக்கு வேண்டாம் கதவு.
எண்திசையும் பார்க்கும் இருகண்களுக்கு இமை -
கண்டதையும் உண்டு கடுநோயும், விண்ட சொலால் மாதுக்கமும் தரு வாய்க்கு உதடு நற்கதவு - (விள்தல் - சொல்தல்); (சொலால் - சொல்லால்);
காதுக்கு வேண்டாம் கதவு -
13) -- மறதியும் கூட வரம் --
மருந்தை அருந்துங்கால் வானரத்தை எண்ணில்
மருந்துபலன் இல்லையெனும் வார்த்தை - இருந்தும்
இறையு(ம்)மறக் கொண்ணோம் இறைவன் படைப்பில்
மறதியும் கூட வரம்.
"மருந்தை அருந்துங்கால் வானரத்தை எண்ணில் மருந்து பலன் இல்லை" எனும் வார்த்தை இருந்தும் இறையு(ம்) மறக்கொண்ணோம் - (இறை - கொஞ்சம்); (மறக்கொண்ணோம் - மறக்க ஒண்ணோம்; தொகுத்தல் விகாரம்);
இறைவன் படைப்பில் மறதியும் கூட வரம் -
14) -- குறுக்குத் தெருவில் குடி --
தா(ம்)மகிழ எண்ணித் தருமம்கை விட்டார்க்கோ
மாமழை சேர்மாட மாளிகை - தீமை
வெறுக்கும் அறவோர்க்கோ மேதினியில் என்றும்
குறுக்குத் தெருவில் குடி.
தா(ம்) மகிழ எண்ணித் தருமம் கைவிட்டார்க்கோ மா-மழை சேர் மாடமாளிகை -
தீமை வெறுக்கும் அறவோர்க்கோ மேதினியில் என்றும் குறுக்குத் தெருவில் குடி - (அறவோன் - தர்மிஷ்டன்); (மேதினி - பூமி);
======================
V. Subramanian
--
சிவசிவா அவர்களின் பதிவுக்குப் பின்னூட்டம்
விழிகள் பிதுங்கும் வண்ணத்தில்
விளங்கும் சிக்கல் ஈற்றடிக்கு
வழிகள் பலவாய் உண்டென்று
வடித்தார் நல்ல வெண்பாக்கள்
வழியும் பத்திச் சுவையோடு
வரைந்தார் கவிகள் வாகாக
கழியும் சுற்றிப் போட்டால்தான்
கவிமேல் பட்ட கண்ணேறு!
-கருவூர் இனியன்.
3) -- நெருப்பை அணையாத நீர் --
மயலில் பகீரதன் வார்கழலை வாழ்த்தப்
புயலார் மிடற்றன் புரந்தான் - கயிலைப்
பொருப்பன் சடையணைந்த போதுமவ் வேணி
நெருப்பை அணையாத நீர்.
சிவபெருமான் சடை நெருப்பா?
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCO_GskevucQotFJdQ8usx6mP3tFMuY4SS97buFJN31ptQ%40mail.gmail.com.