2020-05-11
வழுவூர்
-----------------
(எழுசீர்ச் சந்த விருத்தம் - தனதான தான தனதான தான தனதான தான தனனா)
(சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி யுண்டு")
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
1)
வானோர்க்கி ரங்கி மலைவில்லை ஏந்தி மதில்மூன்றெ ரித்த ஒருவன்
தேனார்க்கும் வாச மலரோடு பாம்பு திரையாரும் ஆறு புனைவான்
தானோக்கும் அன்பர் வினைதீரு மாறு தயைசெய்யு(ம்) நல்ல தலைவன்
மானோக்கி அஞ்ச மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.
(தேன் - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);
2)
மதனாகம் வேவ நுதலால்வி ழித்த மணிகண்டன் ஆறு முகமார்
சுதனாரை நல்கி இமையோர்கள் உற்ற துயர்தீர்த்த நல்ல துணைவன்
கதநாகம் ஆறு தரிசென்னி மீது கடிநாறு கொன்றை புனைவான்
மதவார ணத்தை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.
(சுதன் - மகன்);
(கதம் - கோபம்); (கடி - வாசனை);
(வாரணம் - யானை);
V. Subramanian
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMvLQrf1F_fS2oLCxkMFqTZRpoLezYbPzFWyrnmiO4Bxw%40mail.gmail.com.
3)
நலியாத வண்ணம் அடியார்க்கு நாளு(ம்) நல(ம்)நல்கு கின்ற பெருமான்
பொலியார மாக அரவம்பு னைந்த புரிநூலன் இண்டை மதியம்
ஒலியார்த ரங்கம் உடையாறு சூடி ஒளிநீறு பூசும் ஒருவன்
வலியார்க ளிற்றை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.
(ஆரம் - மாலை);
(இண்டை - முடிமாலை); (தரங்கம் - அலை);
4)
பாதங்கள் ஏத்தி வழிபாடு செய்து பலதேவர் வேண்ட அவர்தம்
ஏதங்கள் தீர வடிவேலை ஏந்தும் இளையோனை நல்கும் இறைவன்
வாதங்கள் செய்த அமண்மாய வைகை நதியேடு நீந்த வருவான்
மாதங்கம் ஒன்றை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.
(ஏதம் - துன்பம்);
(மாதங்கம் - யானை);
5)
கல்லானை முன்பு பலர்முன்க ரும்பு களியோடு தின்ன வருவான்
கொல்லானை முன்னர் உழவார அன்பர் தமைநீங்கி ஓட அருள்வான்
நல்லானை ஏத்து விசயற்கு நாடு படையீந்த நாதன் உமைகோன்
வல்லானை தன்னை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.
(படை - ஆயுதம்);
6)
இனவீயெ டுத்து மணமாலை கட்டி இருதாளில் இட்டு மகிழ்வார்
இன(ம்)மாநி லத்தில் இடரார்பி றப்பில் இளையாத வண்ணம் அருள்வான்
முனமோர்பொ ருப்பை வளைவித்து மூன்று புரம்வேவ நக்க முதல்வன்
வனவார ணத்தை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.
(வீ - பூ);
(இனம் - இன்னம் - இன்னும் - மறுபடியும்; மேலும்);
(பொருப்பு - மலை);
V. Subramanian
2)