Fwd: பிரதோஷப் பாடல் (கோபால்)

18 views
Skip to first unread message

GOPAL Vis

unread,
Jan 16, 2026, 3:59:21 AM (yesterday) Jan 16
to santhav...@googlegroups.com
பிரதோஷப் பாடல் (கோபால்)
[16 ஜனவரி 2026]

[எழுசீர் சந்த விருத்தம். அடிக்கு 30 மாத்திரைகள்.
முதல் 3 அடிகள்: தனதனx6 + தானதனா; 4ஆம் பொது அடி: தனதன தந்தன தானன தந்தன தத்தன தத்தன தானதனா]

அடியவர் திருவடி தொழும் வரம்

கலைகளி னுதயமு னடியிடு சதிநடை கனகச பையினர சானவனே!
……கடையிடை முதலென உயர்தமி ழறிவவை களியொடு நிறுவிய கூடலனே
சிலையொடு மழுவொடு தழலொடு பனிமிகு சிகரமி சையமரு மோதவசீ!
……சிவசிவ சம்புச டாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(1)

நவையறு மடியவ ருனதடி அனுதின(ம்) நனிபர விசைதனி லாழ்பவனே!
……நகையுதி ருனமுக மலரென மலரவு(ம்) நலவள மளவற ஈபவனே!
சிவையொடு மகவொடு கவினொடு கனிவொடு திமிலெழு பரியம ரீச்சுரனே!
……சிவசிவ சம்புச டாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(2)

கழுதொடு நடமிட வுடலெரி சுடுபொடி தடவிய கவினுறு மேனியனே!
……களமதி லலைதரு கொடுவிட முணவரு கறைதனை அணியென ஏற்றவனே!
செழுமடர் சடைதனி லொருநதி யரைமதி செறிபனி யொடுதண னாயவனே!
……சிவசிவ சம்புச டாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(3)

புரமெரி சுடுநகை புரிபவ சுரரடை புரவல எளியவர் காவலனே!
……புலியுரி அரையணி குழையிரு செவியணி புயமதி லரவணி யோகியனே!
சிரமுன தடிமல ரினிலிட நினைபவர் சிரமமு நிழலற ஓடிடுமே!
……சிவசிவ சம்புச டாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(4)

உடலிது மடிவரை உனைநினை இதயமு முனதொளி யுணரவு(ம்) நீயருளாய்!
……உலகிதி லறநெறி நிலைபெற வெளியவ ருயரிய வளமுற ஆணையிடாய்!
திடமன மளிகுண முனதரு மடியவர் திருவடி தொழுவர(ம்) நீதருவாய்!
……சிவசிவ சம்புச டாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(5)
•~•~•~•~•~•~•~•~
சொற்பிரிவு; பொருள்:

கலைகளின் உதயம் உன் அடி இடு சதி நடை! கனக சபையின் அரசானவனே!
……கடை இடை முதல் என உயர் தமிழ் அறிவு அவை களியொடு நிறுவிய கூடலனே!
சிலையொடு மழுவொடு தழலொடு பனிமிகு சிகரமிசை அமரும் ஓ தவசீ!
……சிவசிவ சம்பு சடாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(1)

[சதி நடை = நடனச் சதியும் நடையும்; கூடலன் = மதுரைக்கு உரியவன்; சிலை = வில் (பினாகம்); மழு = கோடரி; தழல் = தீ; தவசீ = தபஸ்வீ]

நவை அறும் அடியவர் உனது அடி அனுதினம் நனி பரவு இசைதனில் ஆழ்பவனே!
……நகை உதிர் உன முகம் அலரென மலரவும், நலவளம் அளவு அற ஈபவனே!
சிவையொடு மகவொடு கவினொடு கனிவொடு திமில் எழு பரி அமர் ஈச்சுரனே!
……சிவசிவ சம்பு சடாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(2)

[நவை அறும் = குற்றமற்ற; நனி பரவு = நன்றாகப் புகழ்கின்ற; அலர் என = மலர் போல; கவின் = அழகு; திமில் எழு பரி = காளை மாடு]

கழுதொடு நடமிட உடல் எரி சுடு பொடி தடவிய கவின் உறு மேனியனே!
……களம் அதில் அலை தரு கொடு விடம் உண வரு கறைதனை அணி என ஏற்றவனே!
செழும் அடர் சடைதனில். ஒரு நதி அரை மதி செறி பனியொடு தணன் ஆயவனே!
……சிவசிவ சம்பு சடாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(3)

[கழுது = பேய்; களம் = கழுத்து; அலை = கடல்; செறி = மிகுந்த: தணன் = தண்ணன்/குளிர்ந்தவன்]

புரம் எரி சுடு நகை புரிபவ! சுரர் அடை புரவல! எளியவர் காவலனே!
……புலி உரி அரை அணி, குழை இரு செவி அணி, புயமதில்்அரவு அணி யோகியனே!
சிரம் உனது அடி மலரினில் இட நினைபவர் சிரமமும் நிழல் அற ஓடிடுமே!
……சிவசிவ சம்பு சடாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(4)

உடல் இது மடி வரை உனை நினை இதயம், உனது ஒளி உணரவும் நீ அருளாய்!
……உலகு இதில் அறநெறி நிலை பெற, எளியவர் உயரிய வளம் உற ஆணையிடாய்!
திடமனம், அளி குணம், உனது அரும் அடியவர் திருவடி தொழு வரம் நீ தருவாய்!
……சிவசிவ சம்பு சடாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(5)

[மடி வரை = அழியும் வரை; அளி குணம் = அள்ளிக் கொடுக்கும் குணம்]

நல்வாழ்த்துகள்
கோபால்
[16/01/2026]
सर्वे जना: सुखिनो भवन्तु ।

Siva Siva

unread,
Jan 16, 2026, 5:19:12 AM (yesterday) Jan 16
to santhav...@googlegroups.com
Nice.

/அரும் அடியவர் /
You may want to double check such usage.
Usually, ஆர் before words starting in vowels.

V. Subramanian

On Fri, Jan 16, 2026 at 3:59 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
பிரதோஷப் பாடல் (கோபால்)
[16 ஜனவரி 2026]

[எழுசீர் சந்த விருத்தம். அடிக்கு 30 மாத்திரைகள்.
முதல் 3 அடிகள்: தனதனx6 + தானதனா; 4ஆம் பொது அடி: தனதன தந்தன தானன தந்தன தத்தன தத்தன தானதனா]

அடியவர் திருவடி தொழும் வரம்



GOPAL Vis

unread,
Jan 16, 2026, 10:11:45 AM (yesterday) Jan 16
to santhav...@googlegroups.com
Nice.
Thanks. 

/அரும் அடியவர் /
You may want to double check such usage.
Usually, ஆர் before words starting in vowels.
Oh, I am learning it only now. Thank you.  
Gopal. 

Swaminathan Sankaran

unread,
Jan 16, 2026, 3:32:38 PM (yesterday) Jan 16
to santhav...@googlegroups.com
கடினமான (எனக்கு) சந்தத்தில் அருமையான படைப்பு.



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCttWcT1VdT1ePEPOAuTuRRvVWGQitBF4Wb3iGspc2BhphA%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran

GOPAL Vis

unread,
Jan 16, 2026, 7:42:36 PM (yesterday) Jan 16
to santhav...@googlegroups.com
பக்க நன்றி. 
கோபால்

On Sat, Jan 17, 2026 at 2:02 AM Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
கடினமான (எனக்கு) சந்தத்தில் அருமையான படைப்பு.



On Fri, Jan 16, 2026 at 1:59 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
பிரதோஷப் பாடல் (கோபால்)
[16 ஜனவரி 2026]

[எழுசீர் சந்த விருத்தம். அடிக்கு 30 மாத்திரைகள்.
முதல் 3 அடிகள்: தனதனx6 + தானதனா; 4ஆம் பொது அடி: தனதன தந்தன தானன தந்தன தத்தன தத்தன தானதனா]

அடியவர் திருவடி தொழும் வரம்

கலைகளி னுதயமு னடியிடு சதிநடை கனகச பையினர சானவனே!
……கடையிடை முதலென உயர்தமி ழறிவவை களியொடு நிறுவிய கூடலனே
சிலையொடு மழுவொடு தழலொடு பனிமிகு சிகரமி சையமரு மோதவசீ!
……சிவசிவ சம்புச டாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(1)

...........................

Ram Ramakrishnan

unread,
Jan 16, 2026, 8:20:23 PM (yesterday) Jan 16
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு கோபால்.

சிறு சந்தேகம். கண்ணிகளில் நான்கடிகளிலும் ஓர் எதுகை வராமல் ஏழுசீர் விருத்தம் அமையுமா?

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jan 16, 2026, at 19:42, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:



GOPAL Vis

unread,
Jan 16, 2026, 11:59:13 PM (21 hours ago) Jan 16
to santhav...@googlegroups.com
நீங்கள் சொல்வது சரியே. 14 சீர் விருத்தமெனில் இரண்டடி விருத்தமாகி விடும். 
இதற்குத் தக்க பெயர் அறிஞர்கள் சொல்வார்கள். காத்திருப்பேன். நன்றி 
கோபால். 

--

Siva Siva

unread,
6:15 AM (15 hours ago) 6:15 AM
to santhav...@googlegroups.com
14 சீர் ஈரடிப் பாடல்களாகக் கருதுவதில் தடை உண்டா?


V. Subramanian

GOPAL Vis

unread,
6:39 AM (14 hours ago) 6:39 AM
to santhav...@googlegroups.com
14 சீர் ஈரடிப் பாடல்களாகக் கருதுவதில் தடை உண்டா?
இதற்காகவே காத்திருந்தேன். தங்கள் வினா அதைப் 14 சீர் ஈரடிப் பாடல் என்று உறுதி செய்கிறது. மிக்க நன்றி.
திரு ராம்கிராம் பார்த்திருப்பார் என்று நம்புகிறேன்
கோபால்.

இமயவரம்பன்

unread,
7:35 AM (13 hours ago) 7:35 AM
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
தாளமிட்டுப் பாடவைக்கும் சந்தப் பாக்கள் சாலவும் அருமை!

Siva Siva

unread,
7:46 AM (13 hours ago) 7:46 AM
to santhav...@googlegroups.com
The rhythm of this set of Gopal's songs is somewhat similar to mahisasura mardhini sthothram.


V. Subramanian

GOPAL Vis

unread,
8:49 AM (12 hours ago) 8:49 AM
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி. 
கோபால். 

--

GOPAL Vis

unread,
8:57 AM (12 hours ago) 8:57 AM
to santhav...@googlegroups.com
Yes. In fact, I had the rhythm of ayigiri nandini .. in mind while writing the common (4th) line,
which was written before the others. 
gopal

--

Reply all
Reply to author
Forward
0 new messages