தினமொரு பாரதி சிந்தனை தொடர் பகுதி 3

137 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Feb 19, 2022, 9:39:53 AM2/19/22
to santhavasantham
158

 

இந்த வெடிகுண்டு வீச்சு நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசின் அடக்குமுறை அதிகமானது. வெடிகுண்டுக் கலாச்சாரத்தைச் சிறிதும் ஆதரிக்காத பாரதியை அந்தச் சம்பவம் அதிர்ச்சியுறச் செய்தது.. சுதேசிய வாதிகள்தான் இதற்குக் காரணம் என ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகள் குற்றம் சாட்டின. பழிக்குப் பழிவாங்க ஆங்கில அதிகாரிகள் துடித்தனர்.

அந்தச் செயலை ஒரு பாடமாகக் கொண்டு நீதிபதிகளும் அரசும் நிதானமாகச் செயல்படவேண்டும் என்று சுதேச மித்திரன் அறிவுறுத்தியது புதிய கட்சியின் தலைவரான திலகர் அந்த வெடிகுண்டுச் சம்பவம் அநாகரிகமானதென்றும் அது தமக்கு உடன்பாடற்றது என்றும் அரசுக்குத் தெரிவித்தார். எனினும் பிரிட்டிஷ் கவர்மெண்டாரின் ஆட்சி முறையும் சில அதிகாரிகளின் அக்கிரமச் செயல்களும் தான் இந்த வெடிகுண்டு முயற்சிகளுக்கு மூலகாரணம் என்பதைத் தெளிவு படுத்தினார். ஜனங்களின் அதிருப்திக்கு மூல காரணாமாயிருக்கும் குறைகளை நிவர்த்திப்பதே ராஜதந்திரமும் ராஜலக்ஷணமும் ஆகும் என்று எழுதினர்.

 

பாரதியும் தனது கருத்தை மிகவும் அழுத்தமாகமாக  எழுதினார்வங்க  மாநிலத்தில் இருக்கும் மக்களில் சிலர் வெடிகுண்டுப் புரட்சியில் ஈடுபட்டிருப்பது தமக்கு வருத்தம்தான் என்றும் வெளிநாட்டுப்பொருள்களை விலக்குவது என்ற புதிய கட்சிக்கொள்கையின்  விளைவு இதுவாகும் என்று சொல்வது வடிகட்டின முட்டாள் தனமாகும் என்றும் குண்டு எறிந்தவர் அளித்த வாக்குமூலத்தின் படி அதிகாரிகள் செய்த அட்டூழியத்தா லும் சித்திரவதையாலும் நிகழ்ந்தவை அவையென்றும் தெளிவாகிறது என்று எழுதினார். இந்த நாட்டிலே உயிர்ச்சேதம் விளைவிக்கும் கருவிகளை உபயோகிக்கக் கூடாது என்ற கருத்துக்கு நாம் முழுதும் உடன்படுகிறோம் என்றும் தெரிவித்ததோடு அரசாங்கத்தின் அமைப்பு முழுவதையும் மாற்றி அமைக்கும் வலிமை இந்த அரசிற்கு இருக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பினார்

Siva Siva

unread,
Feb 19, 2022, 10:28:08 AM2/19/22
to santhavasantham
/ கலாச்சாரத்தைச்   /
Should it not be written as கலாசாரத்தைச் ?

Subbaier Ramasami

unread,
Feb 20, 2022, 6:42:16 PM2/20/22
to santhavasantham
வடசொல் அடுத்து வந்தால் வலி மிகாமல் விட்டால் தவறில்லை அவ்வளவுதான். இன்னொரு செய்தி. கலாச்சாரம்,ப்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMM%3Db8_2R1cYLPP%3DHHGg40ZGD%3DZrMTi%3DoWLNZ2SiDR-SQ%40mail.gmail.com.

Siva Siva

unread,
Feb 20, 2022, 7:30:52 PM2/20/22
to santhavasantham
கலா + ஆசாரம் = கலாசாரம் (as per Sanskrit sandhi).

ஆசாரம் - This is the spelling I am used to. ( https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?page=210 )


आचारः ācāraḥ [आचार-भावे घञ्1 Conduct, behaviour, manner of action or of conducting oneself; सदाचारः good conduct; नीच˚ &c.; लोकाचारविवर्जिताः Pt.5.40 ignorant of the ways of the world. -2 Good conduct or behaviour; न शौचं नापि चाचारो न सत्यं तेषु विद्यते Bg.16.7; Ms.1.109,5.4,3.165. -3 A custom, usage, practice; तस्मिन्देशे य आचारः पारंपर्यक्रमागतः Ms.2.18; Y.1.343. -4 An established usage, fixed rule of conduct in life, customary law, institute or precept (opp. व्यवहार in law); आचार्य आचाराणाम् K.56; Ms.1.109; oft. as the first member of comp. in the sense of 'customary', 'usual', 'as is the custom', 'according to form', 'as a formality'; ˚पुष्पग्रहणार्थम् M.4; see ˚धूम, ˚लाज below; परिकर्मन् Ś.2. -5 (a) Any customary observance or duty; ˚प्रयतः V.3.2; गृहाचारव्यपदेशेन U.3. (b) A form, formality; आचार इत्यवहितेन मया गृहीता Ś.5.3; Mv.3.26. (c) The customary salutation or bow, usual formality; आचारं प्रतिपद्यस्व Ś.4; V.2; अविषयस्तावदाचारस्य Mv.2. -6 Diet. -7 A rule (of conduct). -

I think another potential word that may be similar in intended meaning could be சம்பிரதாயம்.

சம்பிரதாயம் campiratāyam , n. < sam-pradāya. 1. Tradition, traditional doctrine or knowledge transmitted from teacher to disciple; குரும்பரம்பரையாக வந்த உபதேசம். 2. Time-honoured custom, established usage; தொன்று தொட்ட வழக்கம். சாசுவத சம்பிரதாய மோராமல் (தாயு. சின்மயா. 9). 

संप्रदायः sampradāyaḥ 1 Tradition, traditional doctrine or knowledge, traditional handing down of instruction; चन्द्रकेतुरवाप्तदिव्यास्त्रसंप्रदायः U.2.7/8; अथ तत् संप्रदायेन रामभद्रे स्थिता अपि 5.15. -2 A peculiar system of religious teaching, a religious doctrine inculcating the worship of one peculiar deity. -3 An established custom, usage. -4 Gift (संप्रदान); दिव्यास्त्रसंप्रदायोऽयं लक्ष्मणेन सहास्तु मे Mv.1.47. (Also cf. U.2.7/8.) 

Subbaier Ramasami

unread,
Feb 21, 2022, 11:03:10 AM2/21/22
to santhavasantham
ஆசாரமான விளக்கத்துக்கு நன்றி

On Sun, Feb 20, 2022 at 6:30 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
கலா + ஆசாரம் = கலாசாரம் (as per Sanskrit sandhi).

Subbaier Ramasami

unread,
Feb 21, 2022, 11:03:47 AM2/21/22
to santhavasantham
#தினமொருபாரதிசிந்தனை
159

புதிய கட்சியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவுதான் மறுத்து எழுதினாலும் அரசு அதற்குச் செவி கொடுக்கவில்லை. தீவிரவாதிகளையும் அவர்கள் நடத்தும் பத்திரிகைகளையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் வற்புறுத்தல் அரசு சார்புடைய அமைப்புகளிலிருந்து வந்தது. அரசுக்கும் வெறியேறிப்போனது.

 

அதிகாரிகளின் கொடுமைகளை ஆராயாமல் அடக்குமுறையை இன்னும் எப்படித் தீவிரப்படுத்துவது என்று சிந்தித்தது.  முதலில்  தீவிரவாதப் பத்திரிகைகளை ஒடுக்கி அவற்றின் ஆசிரியர்களைச் செயலிழக்கச்செய்வது எனத் திட்டமிட்டது. புதிதிதாகச் சட்டங்கள் இயற்றப்பட்டன. அரசு உத்திரவுகள் பிறப்பிக்கப்பட்டன. கீழ்மட்ட அதிகாரிகளுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டது. மாஜிஸ்ட்ரேட்டுக்குக் கேள்வி முறையே இன்றித் தண்டணை கொடுக்கும் அதிகாரம்  கொடுக்கப்பட்டது. இதுவரை தமக்கில்லாத அதிகாரம் புதிதாகக் கொடுக்கப்பட்டதால் அதை முழும் பயன்படுத்திப் பார்த்துவிடுவது என்று  அதிகாரிகள் முனைந்தனர்.

 

 

அடக்குமுறையின் முதற்படியாக தீவிரவாதிகளைக் காவு கொடுப்பதற்கு அவர்களை வேவு பார்த்தனர். பாரதி வீட்டு வாயிலிலும் மாற்றுடைக் காவலர்கள் காத்துக் கிடந்தார்கள். செல்லுமிடமெல்லாம்  அவர்களின் தொல்லை இருந்தது. பேச்சுக் கொடுத்தவர்கள் ஏச்சுப் பெற்றதுமுண்டு. வேடமிட்டவர்கள் சாடப்பட்டதும் உண்டு.   ஒற்றர்கள் மூலம் கண்காணிக்கப்படுவது பாரதிக்கு எரிச்சல் கொடுத்தது.

என்றாலும் அவர் பயந்துவிடவில்லை.  சாடவும் தயங்கவில்லை. ஜனசங்கத்தின் கூட்டமொன்றில் இதைக் கண்டித்துப் பேசினார்.

“அரசின் அப்பட்டமான ஈனத்தனமான உளவு பார்க்கும் செயலைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன். .. நல்லோர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் நிழல்போலத் தொடர்ந்து வேவு பார்க்கிற அரசாங்கம் காட்டுமிராண்டி அரசாங்கம் தானே!” இப்படிப் பேசியதோடு விட்டாரா?

“நம்முடைய நோக்கம் தற்போதைய பிரிட்டிஷ்  சர்க்காரை அடியோடு நீக்குவதேயாகும்” என்று ஆணித்தரமாக அஞ்சாது கூறினார்.

Subbaier Ramasami

unread,
Feb 22, 2022, 8:16:23 PM2/22/22
to santhavasantham

ஒற்றர்கள் சுதேசிகள் பேசுவதைக் குறிப்பெடுப்பதை அவர் கண்டிக்கவில்லை. “செய்தியை உள்ளது உள்ளபடி எழுதுங்கள். திரித்து எழுதாதீர்கள்என்றார்.

 

தேசிய அளவில் நடைபெறும் கொடுமைகளைத் தட்டிக்கேட்பதோடு தங்கள் துயர்களுக்கு எந்தவிதமான வடிகாலும் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஊர்ப்புற மக்களின் குறைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டுமென்று பாரதி நினைத்தார். அது மட்டுமன்றி ஊர்ப்புறங்களில் நடைபெறும் சில வினோதமான நிகழ்ச்சிகளயும் வெளியிட விரும்பினார்.சின்னச் சின்ன இடங்களிலெல்லாம் நிருபர்களை நியமிப்பதென்பது இயலாத காரியம்..

எனவே பொதுமக்களையே வர்த்தமானங்களை எழுதி அனுப்பும் படி வேண்டுகோள் விடுத்தார். எந்த விதமான ஊக்கமும் இல்லாமல் யார் செய்தி அனுப்புவார்கள்?. எனவே அனுப்பப்படும் வர்த்தமானங்களுக்குச் சன்மானம் தரப்படும் என்று எழுதினார்..

 

1908 ஏப்ரல் மாதம் 18ந்தேதி இதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வர்த்தமானம் எழுதியனுப்புவோருக்குப் பணம் தருகிறோம்.

 

நீங்கள் எழுதி ஏன் பணம் சம்பாதிக்கக்கூடாது.?

 

வர்த்தமானங்களில் 4 வரிக்கு ஒரு அணா வீதம் கைமாறு உதவப்படும்.(1908ம் ஆண்டில் ஒரு அணாவுக்கு ஒருவன் ஒரு முழுச் சாப்பாடு சாப்பிடமுடியும்)

 

ஜனங்களுடைய குறையைப் பற்றிய வர்த்தமானங்களுக்கும், வெளிநாட்டு வர்த்தமானங்களுக்கும் 4 வரிக்கு 2 அணா வீதம் கொடுக்கப்படும்.

 

அத்தகைய வர்த்தமானத் துண்டுகள் ஒவ்வொன்றும் 8 வரிக்குமேல் ஓடக்கூடாது. அந்த அளவுக்கு மேலேயுள்ளவைகளைக் குறிப்புகளாகக் கொண்டு ஒரு பத்திக்கு 6 அணா வீதம் கணக்கிடப்படும். குறைந்த வர்த்தமானங்களே அகப்படும் பட்சத்தில் அதை மறுவாரத்திற்கு நிறுத்திவைக்கவேண்டாம் ஒரு கார்டில் எழுதியனுப்பிவிடலாம். அது மறுவாரத்திற்கு உபயோகமற்றதாகிவிடும். நீங்கள் இவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்டு எழுதுவதற்குப் பணம் கொடுப்பது ஒரு வியப்பாக மாட்டாது.”

Subbaier Ramasami

unread,
Feb 23, 2022, 9:00:18 AM2/23/22
to santhavasantham
161

“பாரதி, சுதேசியம் சுதேசியம் என்கிறீர்களே! ஆனால் இரயிலில் போகிறீர்களே? அது சுதேசியமா?” என்று கேட்டார் பாரதியின் நண்பர்

.

“. இந்தியாவில் கிடைக்கவில்லை என்றால் விதேசிப் பொருள்களைப் பயன்படுத்த மறுப்பில்லை. ஆனால் இங்கே மாற்றுப்பொருள் கிடைக்கும் போது அன்னியப் பொருளைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் எங்கள் வாதம், “ என்றார் பாரதி

“இரயில் போன்ற சேவைகளால் ஆங்கிலேயர் நமக்குப் பேருதவி புரிந்திருக்கிறார்கள்” என்றார் நண்பர்.

 

பாரதிக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. என்றாலும் நண்பருக்குப் பொறுமையாகப் பதில் சொன்னார். இரயில்வேயால் ஆங்கிலேயருக்கு எவ்வளவு லாபம் என்பதை மிக விவரமாக எடுத்துச் சொன்னார், அதுவே பின்னர் கட்டுரையாக வெளிவந்தது. பாரதியின் பரந்துபட்ட அறிவு அதனால் வெளிப்பட்டது

 

அதன் சாராம்சம் இதுதான்:

"கொள்ளை கொள்ளையாய் வசதிகள்  கொட்டிக்கொடுத்திருக்கிறான் வெள்ளையன் என்று சில அப்பாவிகள் அளக்கிறார்கள். தந்தியைப் பார், தபாலைப் பார், தண்டவாள ரயிலைப் பார். கப்பலைப் பார், கண்ணாடி பார், " என்று உளறுகிறார்கள் உண்மை அறியாத பேர்வழிகள்.

நமக்கு நன்மையாம் ஆதாயமாம். சரி ஒன்றே ஒன்றைப் பார்ப்போம். இரயிலை எடுத்துக்கொள்வோம்.

இரயிலே வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை, சொல்லவும் மாட்டோம்.

நம்முடைய செல்வங்களைத் தன் நாட்டுக்கு வெள்ளையன் எடுத்துச் செல்ல உருவாக்கிய ஊடகம் தான் இந்த ரயில்........இருப்புப்பாதை அமைத்தது நமது நட்டின் நன்மைக்காகவா அல்லது அவர்கள் நாட்டின் நன்மைக்காகவா என்று பார்ப்போம்.

அரசாங்கம் வெள்ளைக்காரக் கம்பெனிகளின் பெரும்பான்மையான முதலீட்டிற்காக மூன்றரை முதல் பத்து சதவிகிதம் ஆண்டு தோறும் வட்டி கொடுக்கிறது. அந்த வகையில் நம் நாட்டுப்பணம் பதினைந்து கோடி ரூபாய் வெள்ளையருக்குப் போய்விடுகிறது. நம்மவர்களுக்குச் சல்லிக்காசு கூடக் கிடையாது.

2 தண்டவாளம் முதல் தந்திக்கம்பிகள் வரை எல்லாத் தளவாடங்களும் இங்கிலாந்திலிருந்து இறக்குமதியாகின்றன. எனவே அங்கே இரும்புத்தொழிற்சாலைகள் அமோக லாபம் அடைகின்றன. அங்கே தொழில் வளர்ச்சி. நமக்கோ அதுவே தளர்ச்சி.
.3 இருப்புப்பாதை அமைப்பதில் ஆங்கில அதிகாரிகளுக்குச் சம்பள ஒதுக்கீட்டில் பெரும்பகுதி போய்விடுகிறது. நம்மவர்கள் உடலுழைப்பால் வேலைசெய்யும் கூலியாட்கள். 20க்கும் 30க்கும் உழைப்பவர்கள்.

 4.இரயிலை இயக்க எஞ்சின் டிரைவரிலிருந்து எல்லோரும் அவர்கள். நூறு ரூபாய்க்கு மேல் ஊதியம் அவர்களுக்கு. ஐந்தோ பத்தோ நம்மவருக்கு. அவர்கள் சம்பாதிக்கும் பணம் முழுதும் இங்கிலாந்திற்குப் போய்விடுகிறது. ஓய்வூதியம் கூட அங்கே கொடுக்கப்படுகிறது.
5 இருப்புப்பாதை வசதியால் வெளிநாட்டுப்பொருள்கள் இங்கு கொண்டுவந்து கொட்டப்படுகின்றன. ஆனால் அதனோடு போட்டியிட முடியாமல் சுதேசியப் பொருட்கள் உற்பத்தி நலிந்துபோகிறது.

6 நம்மவருக்கு உழைப்பும் வறுமையும் , அவர்களுக்குப் பிழைப்பும் செழிப்பு.ம்

7.மூலப்பொருட்கள் இங்கிருந்து அங்குப்போய் உற்பத்திப் பொருட்களாக நமக்கே கொள்ளைவிலைக்கு விற்கப்படுகின்றன.

8 மக்களை அடக்கியாள குறைந்த அவகாசத்தில் படைகளயும் காவலர்களயும் கலவரப் பகுதிகளுக்கு அனுப்பமுடியும்.

ஒரே ஒரு லாபம். இனம் மொழி  மலைகள் பாலைவனங்கள், தொலைவு இவற்றால் பிரிந்து கிடக்கும் மக்கள் சந்தித்துக்கொள்வதற்கு வாய்ப்புக் கிடைக்கிறது. இந்த ஒரு நன்மைக்காக நாம் கொடுக்கும் விலை மிகவும் பெரியது.

சுதந்திரம் உள்ள நாடுகளில் அங்கு பெறப்படும் பணம் அங்கேயே பயன்படுத்தப்படும். சுரண்ட முடியாது எனவே சுய்ராஜ்யம் ஒன்றுதான் நம்மைக் காப்பாற்றும் அடிமைத்தனம் நம்மை அழித்துவிடும்"

Siva Siva

unread,
Feb 23, 2022, 9:40:22 AM2/23/22
to santhavasantham
Nice write up.

/ நம்முடைய செல்வங்களைத் தன் நாட்டுக்கு வெள்ளையன் எடுத்துச் செல்ல உருவாக்கிய ஊடகம் தான் இந்த ரயில்  /
Is this an anachronism?
Had the word "ஊடகம்" been invented in Bharathiyar's time?

/பணம் முழுதும் இங்கிலாந்திற்குப் போய்விடுகிறது. ஓய்வூதியம் கூட அங்கே கொடுக்கப்படுகிறது./
Similarly, did Bharathiyar use the term "ஓய்வூதியம்" ?

V. Subramanian

M. Viswanathan

unread,
Feb 23, 2022, 11:27:37 AM2/23/22
to Santhavasantham

நல்ல பதிவு.
 

Subbaier Ramasami

unread,
Feb 23, 2022, 9:19:07 PM2/23/22
to santhavasantham
பாரதியின் மூலக் கட்டுரை தற்போது என் கைவசம் இல்லை. நான் கொடுத்திருப்பது சாராம்சம்தான் என்பதால் பென்ஷன் என்பதை நான் ஓய்வூதியம் என்று மொழிபெயர்த்திருக்க வாய்ப்புண்டு. ஹரிகிரிஷ்ணன் இந்த இரயில் கட்டுரை பற்ரி விரிவாக எழுதியிருப்பதாக நினைவு. அதைப் படித்துவிட்டுத்தான் என் புத்தகத்தில் இதை எழுதினேன். 

என் பழைய கோப்புகளில் தேடினால் கிடைக்கலாம். 

On Wed, Feb 23, 2022 at 10:27 AM M. Viswanathan <meev...@gmail.com> wrote:

நல்ல பதிவு.
 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Feb 23, 2022, 10:52:56 PM2/23/22
to santhavasantham
Thanks.

I missed to see the phrase "அதன் சாராம்சம் இதுதான்:"

As I read the statements - and they appeared to me like direct quotes from Bharathiyar's writings - I was wondering about the language style.


Subbaier Ramasami

unread,
Feb 24, 2022, 7:29:01 AM2/24/22
to santhavasantham
162

சென்ற இடுகையில் கூறியுள்ளவை பாரதியின் நீண்ட கட்டுரையின் சாராம்சம்தான். பாரதியின் சொற்களல்ல. கருத்துச் சுருக்கம்தான்.

 

பாரதியின் எழுத்துகள் மொழியாக்கம் செய்யப்பட்டு அரசு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டன. அவரது பேச்சுகள் குறிப்பெடுக்கப்பட்டனஎப்படியாவது அவரை மடக்கிவிடவேண்டும் என்று போலீஸ் தீவிரம் காட்டியது.

 

 கடற்கரையிலோ மூர்மார்க்கட்டின் பின்புறம் கூட்டம் நடக்கப்போகிறது, பாரதி பேசுவார் என்று போலீஸாரே துண்டுப் பிரசுரம் அச்சடித்து மக்களிடையே விநியோகித்தனர். மக்கள் திரளாக வந்து ஏமாந்து போவார்களல்லவா? அடுத்தமுறை உண்மையிலேயே கூட்ட அறிவிப்புச் செய்தால் அதுவும் பொய்யாக இருக்குமோ என்றெண்ணி மக்கள் வரமாட்டார்களல்லவா? அது மட்டுமல்ல நெல்லையைப் போலவே சென்னையிலும் கலவரத்தைத் தூண்டிவிடலாம் என்பதற்காக அவர்கள் செய்த சூழ்ச்சியே அதுஇப்படிப் பொய்யாகப் போலீசார் நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம் செய்தி அறிந்து குழுமியுள்ள மக்களை ஜனசங்கக் கட்டிடத்திற்கு வரச்சொல்லிப் பாரதியும் மற்றவர்களும் பேசுவார்கள்கடற்கரையிலும் மூர்மார்க்கட் பின்புறமும் கூட்டம் நடத்தக்கூடாது என்று போலீஸ் தடையுத்தரவு பிறப்பித்தது அவ்விடங்களில் ஆற்றப்பட்ட இன்ன இன்ன சொற்பொழிவுகளின் காரணமாகத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளோம் என்று சொல்லவேண்டுமல்லவா? அப்படி எந்தக் காரணமும் சொல்லப்படவில்லை.

 இந்தப்   போக்கைச்  சுதேசமித்த்ரன் பத்திரிகை வன்மையாகக் கண்டித்தது.

 

அவ்விரண்டிடங்களிலும் சிலமாதங்களாகவே சுதேசியப்பிரசங்கங்கள் நடந்து வந்தனவே , அச்சந்தர்ப்பங்களில் ஏதாவது கலகங்கள் நடைபெற்றதா? அமைதிக்கு என்ன பங்கம் வந்தது? மாநகராட்சித் தலைவரும் காவல்துறைக் கண்காணிப்பாளரும் இன்ன பிரசங்கத்தால் வீண்தொல்லை ஏற்பட்டது என்று சொல்லி விரலை மடக்க முடியுமா? ஜனங்கள் பிரசங்கங்களை விருப்பாய் ஏற்றார்களே ஒழிய வெறுப்பாக அல்லஎன்று சுதேசமித்திரன் எழுதியது


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Feb 24, 2022, 9:46:12 PM2/24/22
to santhavasantham

163


தும்பைவிட்டு வாலைப் பிடிப்பது போல எப்பொழுதோ பேசிய பேச்சுக்கு இப்பொழுது நடவடைக்கை எடுக்க காவல்துறை விரும்பியதுசுயராஜ்ய தினத்தன்று பாரதியின் பேச்சு அபாயகரமாக இருந்தது என்று குற்றஞ்சாட்டி அவரைக் கைது செய்யத் திட்டமிட்டதுஅப்பொழுது எங்கும் கொந்தளிப்பாக இருந்த நிலையில் இன்னொரு பிரச்சினையையும் உருவாக்கவேண்டாமே என்ற எண்ணத்தால் பாரதியின் மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டது அரசுஎன்றாலும் கண்காணிப்புக்குக் குறைவில்லை.

 இந்தியா பத்திரிகையில் வெளிவரும் கட்டுரைகள் பல மொழிபெயர்க்கப்பட்டுச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டன. எந்த நேரத்திலும் இந்தியா பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற நிலை இருந்தது, இருக்கிற சட்டம் போதாதென்று இரண்டு புதிய சட்டங்கள அரசு ஒரேநாளில் இயற்றியதுமிக ஆங்காரமாக எழுதும் யுகாந்தர் போன்ற பத்திரிகைகளை ஒடுக்குவதற்காகத்தான் புதிய சட்டங்களைக் கொண்டுவந்ததாக அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எவர் மீதும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை

மாஜிஸ்ட்ரேட்டுகளுக்கு வழங்கியதால்  அதிகாரத்தைக் காட்டுவதற்காகவாவது தவறாகப் பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை என்று பாரதி கருதினார்.

வெடிகுண்டுப் பொருள்கள்  தடைச் சட்டமும் பத்திரிக்கைச் சுதந்திரத்தைக் கட்டுப் படுத்தும் சட்டமும்தாம் அவை.

அச்சட்டங்களின்படி அரசுக்கு எதிராகப் பேசுபவர்களையும் எழுதுபவர்களையும் கடுமையாகத் தண்டிக்கலாம். பத்திரிகைகள் கடுமையாக எழுதுவதாகக் கருதினால் அபராதம் விதிக்கலாம். பத்திரிகைகளைப் பறிமுதல் செய்யலாம். சம்பத்தப்பட்டவர்களைக் கைது செய்யலாம்ஜில்லா மாஜிஸ்ட்ரேட் நினைத்தால் பத்திரிகைகள் வெளிவராமல் தடுக்கலாம். அச்சகத்தைப் பறிமுதல் செய்யலாம். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றுக்குக் காரணம் கட்டாமல் தடைவிதிக்கலாம்.

மஜிஸ்ட்ரேட்டின் தீர்ப்பே இறுதியானது.  “ இந்துப்பத்திரிகை அந்தச் சட்டத்தைப் பற்றி எழுதியது: “இந்தத் தேசப் பத்திரிகைகளின் கழுத்தை நெறிக்க ஒரு வழியை அரசு உருவாக்கிவிட்டது  . வேண்டப்படாத ஒரு பத்திரிகையை ஒரு மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவு மீண்டும் உயிர்க்க முடியாத படி கொன்றுவிடமுடியும்.அதன் அச்சுக்கூடம். இயந்திரங்கள். அச்சுப்பொருட்கள் சாதனங்கள் அனைத்தையும் கைப்பற்ற முடியும்.அந்தச்செய்தித் தாளின் பெயரே இல்லாத படி செய்துவிடமுடியும்வன்முறையத் தூண்டும் எழுத்து அதில் பிரசுரமானது என்று அறிந்தால் போதும். பாவம் அந்தப்பத்திரிகையை அச்சடித்தவரும் தொலைந்தார். வன்முறை என்றால் என்ன என்று வரையறுத்திருக்க வேண்டுமல்லவா? அதை மட்டும் செய்யாமல் வசதியாக விடப்பட்டுள்ளது. எது வேண்டுமானாலும் வன்முறையைத் தூண்டுவதாகக் கற்பிக்கப்படலாம்

Subbaier Ramasami

unread,
Feb 26, 2022, 10:04:06 AM2/26/22
to santhavasantham
164

அந்தக் காலகட்டத்தில் இந்து பத்திரிகை  மிதத்திலும் மிதமான மறுப்பை எழுதிவிட்டு அப்படி எழுதியிருக்கக்கூடாது என்று வருத்தம் தெரிவித்ததும் உண்டு.  ஒரு தேசியப் பத்திரிகைக்கே அந்த நிலையென்றால் மற்றப்பத்திரிகைகளைப் பற்றிக்கேட்க வேண்டுமா?

 

-*இவை அனைத்தும் பெரும்பாலும் மாநிலப்பத்திரிகைகளைக் குறிவைத்து செய்யப்பட்டவை ஆகும். சட்டத்தை அநாவசியமாகப் பிரயோகிக்க மாட்டோம் என்று அரசு சொன்னாலும் சட்டம் வெளியாகிய சில நாட்களிலேயெ மாஜிஸ்ட்ரேட்டுகள் தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கினர்.

பம்பாய், வங்காளம் ஆகிய பகுதியில் வெளிவந்த பத்திரிகைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

வந்தே மாதரம் , யுகாந்தர் பத்திரிகைகள் ஒடுக்கப்பட்டன. மத்திய மாநிலங்களில் ‘ஹைகிஷோர்’ என்ற ஆசிரியருக்கு ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது. அந்தப் பத்திரிகையின் அச்சு இயந்திரம் கைப்பற்றப்பட்டது. எகிப்தில் ஆங்கில அரசின் கல்விக் கொளகையைத் தாக்கி எழுதியதற்காக ‘உர்து இ மோல்லா’’ என்ற பத்திரிகையின் ஆசிரியருக்கு 500 ரூபாய் அபராதமும் இரண்டாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டன , வந்தே மாதரம் பத்திரிகைக்கு ஒரு கட்டுரை எழுதியதற்காக அலிகாரைச் சேர்ந்த ஹோதிலால் வர்மா என்பவருக்கு ஏழாண்டுகள் தீவாந்திரத் தண்டனை வழங்கப்பட்டது.  பம்பாயில் ஹிந்து ஸ்வராஜ் , விஹாரி, அருணோதயா, கல்  ஆகிய பத்திரிகையின் ஆசிரியர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.பாரதி தனது கருத்தைக் கட்டுரையாகவும்  கார்ட்டூனாகவும் இந்தியாவில் வெளியிட்டார். அரசின் செயல் அரசுக்கே ஆபத்தாக விளையும் எனச் சுட்டிக்காட்டினார்.

 

யாருடைய வழிகாட்டுதலில் புதிய கட்சியினர் எழுச்சி பெற்று நாட்டுத் தொண்டு செய்தார்களோ யாரைத் தெய்வத்தைத் தொழுவதுபோல் தேசபக்தர்கள் தொழவேண்டும் என்று பாரதி எழுதினாரோ அந்தத் திலகரை 1908 ஜூன் மாதம் 24ந்தேதி கைது செய்தனர். ஒரு மாதத்திற்கு முன் கேசரி’ப்பத்திர்கையில் எழுதிய ஒரு கட்டுரை இராஜத்துவேஷமானது என்பதே அவர்கள் கூறிய காரணம்.

பூனா நகரமே அடைபட்டுக் கிடந்தது. பம்பாயிலும் பூனாவிலும் கலவரம் வெடித்தது. பலவந்தமாகவாவது திலகரை விடுவித்துவிட வேண்டும் என்று அவரது தொண்டர்கள் திட்டமிட்டனர். 25ந்தேதி பாரதிக்குச் செய்தி கிட்டியது. பதறிப்போனார். 

Subbaier Ramasami

unread,
Feb 26, 2022, 7:29:07 PM2/26/22
to santhavasantham
165

அன்றிரவே திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலிலிருந்து பஜனைப் பாடல்கள் பாடிக்கொண்டு செல்வது போல் திலகர் கைதான செய்தியை அறிவித்துக் கொண்டே சென்றார். திலகரின் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடுவதாகச் செய்திகள் வந்தபோது கலங்கினார். திலகர் மகரிஷி. அவர் தமது தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடுவதை விரும்பமாட்டார்.  எனவே  பாரதி ‘இந்தியா’ பத்திரிகையில் திலகரின் உதாரணத்தைப் பின்பற்ற வேண்டும் என்று எழுதினார். அஹிம்ஸை மூலம் எதிர்ப்பைக் காட்டவேண்டும் என்பதுதான் திலகரின் குறிக்கோள் என்றும் நாம் எல்லாத் துன்பங்களையும் தொந்தரவுகளையும் சகித்துக்கொண்டு திலகர் வழியையே பின்பற்றவேண்டும் என்றும் எழுதினார்.

 

 

திலகர் கைது செய்ததற்கு அனுதாபம் தெரிவுக்கும் கூட்டம் சென்னை ஜனசங்கக் கட்டடத்தில் 1908 ஜூலை 5ம்தேதி நடைபெற்றது. அன்று பேசியவர்களில் முக்கியமானவர்கள் வெங்கட்ரமண ராவ், சுரேந்த்ரநாத் ஆர்யா, பாரதி ஆகியோர். முன்னிருவரும் மிக ஆவேசமாகப் பேசினார். பாரதி உள்ளூர உணர்ச்சிவயப்பட்டாலும் அதை வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல் அந்தக் கூட்டம் கண்டனக் கூட்டம் அல்ல என்றும் மனவருத்தத்தை வெளிப்படுத்தும் கூட்டம் என்று மிகத் தந்திரமாகவும் அதே சமயம் தாம் சொல்லவந்த கருத்துக்களை மிகத் தெளிவாகவும் எடுத்துச் சொன்னார்.

இலந்தை

Subbaier Ramasami

unread,
Feb 27, 2022, 9:17:56 AM2/27/22
to santhavasantham
166

இந்தியா பத்திரிகையை நோக்கிப் போலீஸின்  பார்வை தீர்க்கமாக விழுந்தது. எங்கெல்லாம் பத்திரிகை அச்சடிக்கப்படுகிறது என்பதைத் தூண்டித் துருவி ஆராய்ந்தனர். பத்திரிகை அச்சடித்தவரை மிரட்டினர். ஜூன் மாத இதழின் சில பகுதிகளை அச்சடித்த அச்சக உரிமையாளர் பயந்துபோய் அதுவரை அச்சடித்திருந்த பிரதிகளை அழித்தார். மேற்கொண்டு இந்தியா பத்திரிகையின் அச்சு வேலையை எடுப்பதில்லை என்று கூறிவிட்டார்.  1908ம் ஆண்டு ஜூலை மாதம் 8ந்தேதி ஏற்கனவே குறிப்பிட்டபடி வ.உ.சிக்கும் சுப்ரமணிய சிவாவுக்கும் தண்டனை அளிக்கப்பட்டது.

 

பாரதி மனம் பதைத்தார்.  வ. உ.சி அத்தகு கடும்தண்டனை பெறுமளவுக்குக் குற்றம் செய்யவில்லை என்று எழுதினார். . அவ்வழக்கை ஆரம்ப முதல் தொடர்ந்து கவனித்து வந்ததாகவும் அது முழுக்க முழுக்கப் பொய்யும் புரட்டும் நிறைந்த கேலிக்கூத்து என்றும் போலீஸாரின் தவறான குறிப்புகளைக் கொண்டு நீதிபதி பின்ஹே தீர்ப்பளித்துவிட்டார் என்றும் அவர்  தீர்ப்பில் சொன்ன கருத்துகளும் விசித்திரமானவை  என்றும் எழுதினார்.. அதுமட்டுமல்ல. பின்ஹேயின் தீர்ப்பை விமரிசனம் செய்தார். சட்டத்தை மீறுகிற நோக்கமே இல்லாத சிதம்பரம்பிள்ளைக்குக் கடும் தண்டனை கொடுத்த பின்ஹே மக்கள் சட்டத்தை மீறத்தான் வேண்டுமென எதிர்பார்க்கிறாரோ என்னவோ, குதிராம் போஸ் சென்ற வழியிலேயே செல்லுங்கள் என்று விரும்புகிறாரோ என்னவோ என்று எழுதியதாகக் காவலர் அறிக்கை கூறுகிறது. பொறுப்பார்களா அதிகாரிகள்.?

வெளிமாநிலங்களில் பத்திரிகைகள் மேல்  எடுத்த நடவடிக்கைகளைக் கண்டு ‘இந்தியா’ப்பத்திரிகை அதிபர்கள் அடுத்துத் தங்கள் பத்திரிகைமேல் நடவடிக்கை எடுக்கும் நாள் விரைவில் இல்லை என்பதை அறிந்து கொண்டனர்.  

rathnam

unread,
Feb 27, 2022, 10:57:17 AM2/27/22
to santhav...@googlegroups.com
கவியரங்கத்தை நடத்தும்போதே இதையும் தொடர்வது...அபாரம். உண்மையில் உங்கள் சிரத்தை ....போற்றத்தக்கது.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Feb 27, 2022, 9:18:57 PM2/27/22
to santhavasantham
நன்றி

On Sun, Feb 27, 2022 at 9:57 AM rathnam <irathin...@gmail.com> wrote:
கவியரங்கத்தை நடத்தும்போதே இதையும் தொடர்வது...அபாரம். உண்மையில் உங்கள் சிரத்தை ....போற்றத்தக்கது.

Subbaier Ramasami

unread,
Feb 28, 2022, 10:04:10 AM2/28/22
to santhavasantham

167


பத்திரிகையில் ஊழியம் செய்வதற்குச் சேர்ந்தவரானாலும் பத்திரிகைக்குத் தானும் முதலீடு செய்து ஒரு காலகட்டத்தில் ஆசிரியராகவும் உரிமையாளராகவும் பதிவுபெற்றுப் பெருமை பெற்ற(இது பின்னாளில் அவர் கொடுத்த வாக்குமூலத்தால் அறிகிறோம்)சீனிவாச அய்யங்கார் அப்பொழுது ஆசிரியராக இருந்தார். அவர் மேலும் ஆசிரியராக நீடித்தால் அநாவசியமாக அவர் கைது செய்யப்படுவார் என்பதை அறிந்த பத்திரிகை நிர்வாகம் அவரை ஆசிரியர், மற்றும் உரிமையாளர் பொறுப்பினின்றும் நீக்கி விட்டுத் துணிச்சல் மிக்க எம்.பி.டி ஆசாரியாரை ஆசிரியராகவும் உரிமையாளராகவும் பதிவு செய்தது. அதில் பாரதி பாலபாரதா பத்திரிகையின் ஆசிரியராகக் கையெழுத்திட்டார்..   சீனிவாசன் மாதம் 35 ரூபாய்ச் சம்பளத்துக்கு அலுவலக எழுத்தராக நியமிக்கப்பட்டார்.  இந்த மாற்றங்கள் எல்லாம் காவல்துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பெற்றாலும் ஏதோ நடைமுறை மாற்றங்கள் என்று எண்ணிய காவல்துறை என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதைக் கூடக் கவனிக்கவில்லை. அவர்கள் சுப்ரமணிய பாரதிதான் இந்தியா பத்திரிகையின் ஆசிரியர் என்று கருதினர். சில வாரங்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட போலீஸ் அறிக்கையில் கூட இந்தியாப் பத்திரிகையின் ஆசிரியர் பாரதி என்று கண்டிருந்தது

 

இந்தச் சமயத்தில் எப்படியெல்லாம் ஒற்றர்கள் செயல்பட்டார்கள் என்பதைப்பற்றி பாரதி தமது ஞானரதம் நூலில் எழுதியிருக்கிறார். திருவல்லிக்கேணி வீரராகவ முதலித் தெருவில் வீடு. பாரதியுடன் அவரது தம்பி விஸ்வநாதனும் தங்கிப் படித்துவந்தான்.  தம்பியை எப்படியாவது தாஜாப்பண்ணி அண்ணனனைப் பற்றி விவரங்கள் அறிய ஒற்றர்கள் எவ்வளவோ முயன்றனர். ஒருநாள் அவரது தம்பி அவரிடம் வந்து

“அண்ணா, போலீஸார் உங்களுடைய நண்பரைப் பிடிப்பக்கப்போவதாக என்னிடம் சொன்னார்கள். “ என்றான்.

“ஒன்றும் நடக்காது. பயப்படாதே” என்றார் பாரதியார்.

 

அப்பொழுது இந்திய மக்கள் நிலைமை எப்படி இருந்தது என்பதையும் அழகாகப் படம் பிடிக்கிறார்.

“”ஒழியாத ஏமாற்று, ஒழியாத வஞ்சனை , ஒழியாத கவலை, ஸாரமில்லை, ஸத்துக்கிடையாது. உள்ளூரப்பூச்சியரித்துக் குழலாயிருக்கும் வாழ்க்கை. ஒவ்வொருவனும் மற்றவன் மீது பழி கூறுகிறான். ஒவ்வொருவனும் தன்னிஷ்டப்படி விட்டுவிட்டால் எல்லாம் நேராக நடக்குமென்ற நம்பிக்கையுடனேதான் இருக்கிறான். ஆனால்”ஒருவன் சரியாக இருந்தால் போதுமா? மற்றவர்களை நம்புவதற்கிடமில்லை. என்று நினைக்கிறான். பிறரை நம்புவதற்கிடமில்லை யென்றெண்ணி  ஏமாற்றுகிறான்.  ஐயோ, மூடா, நீ ஏமாற்றுவதனால் , முன்னைக் காட்டிலும் பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து விடுமென்றா நினைக்கிறாய்? மனித ஜாதிக்குத் தீராத நோய் ஒன்று பிடித்திருக்கிறது . மாறாத சாபம். இறங்காத விஷம்! இதன் பெயர் பணம்!”

Subbaier Ramasami

unread,
Mar 2, 2022, 8:36:50 AM3/2/22
to santhavasantham
169
இந்தியா செல்வங்கொழிக்கும் நாடாக இருக்கும் காரணத்தால்தானே வெள்ளையன் இந்தியாவைச் சுரண்டிக்கொண்டிருந்தான். ஒன்றுமில்லாத நாடாக இருந்தால் அடிமைப்படுத்தியிருப்பானா? அதை நேராக்கத்தான் சுதேசியம் என்ற தீப்பந்தத்தை ஏந்தினார்கள் தேசபக்தர். அவர்களை அடக்குவதற்குக் கங்கணம் கட்டிச் செயல்பட்டான் வெள்ளையன். அதன் முதல் அடி பத்திரிகைகளின் மேல் விழுந்தது.
இந்தியா பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்க அரசிடமிருந்து அனுமதி கிடைத்த பிறகு பாரதியாரைக் கைது செய்வதற்கான அடிப்படை ஆதாரங்களைத் தேடிப்பிடிக்கும் பொறுப்பைக் காவல்துறை அதிகாரி பவானந்தம் பிள்ளை என்பவரிடம் ஒப்படைக்க அவர் பல இராஜத்துரோக எழுத்துகளைக் கண்டுபிடித்துப் பட்டியலிட்டார். அதைச் சாக்கிட்டு ‘இந்தியா’பத்திரிகை ஆசிரியரைக் கைது செய்ய குற்றப்பத்திரிகை தயாரிக்கும் போது அவர்கள் கண்ட அதிர்ச்சிச் செய்தி பாரதி அப்பத்திரிகையின் ஆசிரியரில்லை என்பதுதான். அப்பத்திரிகை ஆசிரியர் எம்.கே. திருமலாச்சாரி. ஆனால் இராஜத்துவேஷ எழுத்துக்களாகக் கருதப்பட்ட பாரதியின் எழுத்துகள் வெளியான காலகட்டத்தில் சீனிவாச அய்யங்கார் ஆசிரியராகவும் உரிமையாளராகவும் இருந்தார்.

On Mon, Feb 28, 2022 at 9:03 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

167



.

 


Subbaier Ramasami

unread,
Mar 2, 2022, 8:37:35 AM3/2/22
to santhavasantham

எனவே இந்தியாப் பத்திரிகை ஆசிரியரைக் கைது செய்ய  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  1908 ஆகஸ்டு மாதம் 21ந்தேதியன்று இந்தியாப் பத்திரிகையின் ஒப்புக்குச் சப்பாணி ஆசிரியர் எம். சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.  சீனிவாசனைக் கைது செய்யப் போலீஸ் இந்தியா அலுவகத்துக்கு வந்த போது மாடிப்படியில் நின்றுகொண்டிருந்த பாரதியிடம் நீங்கள் இந்தியாப்பத்திரிகை ஆசிரியரா என்று கேட்டதாகவும் அவர் நான் ஆசிரியர் இல்லை என்று சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.  

‘இந்தியா’ பத்திரிகை பதிவின் படி அவ்வப்போது அதன் ஆசிரியர்களும் உரிமையாளர்களும் விவரங்கள்

1 உரிமையாளர்- எஸ்.என் திருமலாச்சாரியார்

ஆசியர்- அவரே

பதிவு நாள்- மே 4 1906

2 உரிமையாளர் எம். ஸ்ரீனிவாசன்

   ஆசிரியர்:   சி.சுப்ரமண்ய பாரதி

பதிவு நாள்: மே 31 1907

3 உரிமையாளர் : எம்.பி. திருமலாச்சார்யார்

  ஆசிரியர்: அவரே

 பதிவு நாள் ஆகஸ்ட் 7 1907

4 உரிமையாளர்  எம்.ஸ்ரீனிவாசன்

  ஆசிரியர்  : அவரே

   பதிவுநாள்: நவம்பர் 18  1907

5 உரிமையாளர்  எம்.பி திருமலாச்சார்யார்

   ஆசிரியர்-    அவரே

   பதிவுநாள்:    ஆகஸ்ட் 15 1908

பாரதி ஆசிரியராகப் பணியாற்றிய நாள்கள்- 31-5-1907 - 6-8-1907

மேற்கொடுத்துள்ள குறிப்புகளிலிருந்து தெரிவது என்ன?  இந்தியா பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதை அறிந்த உரிமையாளர்கள் ஸ்ரீனிவாசனைக் கைதிலிருந்து தப்புவிக்க வேண்டும் என்பதற்காக அவரை ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலக்கித் தைரியசாலியான எம்.பி. திருமலாச்சசரியாரை உரிமையாளராகவும் ஆசிரியராகவும் பதிவு செய்தனர் என்று அனுமானிக்கலாம்.  சீனிவாசன் கைதானால் கூட அவர் 15-8-1908க்குப் பிறகு ஆசிரியர் இல்லை என்பதால் விடுவிக்கப்படவும் வாய்ப்புள்ளது

தன் பேரில் இன்னும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படவில்லை என்பதைப் பாரதியார் அறிந்தார்.  அடுத்த கத்தி தன் தலைக்குத்தான் என்பதும் அவருக்குத் தெரியும். ஆசிரியப் பணிக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத சீனிவாசன் கைது செய்யப்பட்டதை அறிந்து பாரதி வருந்தினார். இப்படியொரு நிலை வரும் என்று எதிர்பார்த்துத்தான் தன் மேலே பேரன்பும் அக்கறையும் கொண்ட ‘இந்தியா’ பத்திரிகையின் அதிபர்கள் தம்மைப் பதிவு பெற்ற ஆசிரியராக அறிவிக்கவில்லை என்பதும் அவருக்குத்தெரியும். எனவே அடுத்துச் செய்வது என்ன என்ற யோசனையில் ஆழ்ந்தார். . அப்பொழுது பத்திரிகை அதிபர்களும் மற்ற நண்பர்களும் பாரதியிடம் அவர் உடனே பாண்டிச்சேரி கிளம்பிப் போகவேண்டும் என்று தெரிவித்தனர். ஒரு கோழையைப் போல் ஓடிப்போவதில் பாரதிக்கு விருப்பமில்லை. முதலில் மறுத்துவிட்டார்

“பாரதி, தனி மனிதர்கள் கைதாவதைப் பற்றி நாங்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால்..” என்று இழுத்தார் மண்டையம் ஆச்சார்யார்

“ஆனால் என்ன , நானும் தனி மனிதன்தானே” என்றார் பாரதி

“இல்லை, நீ ஒரு ஸ்தாபனம். எங்களில் யாராவது ஒருவர் கைதானால் இன்னொருவர் பத்திரிகையை எடுத்து நடத்துவோம். ஆனால் நீ கைதானால்  பத்திரிகையைக் கொண்டு செலுத்துவது கடினம்”

“நான் புதுச்சேரியிலிருந்து  இங்கேயுள்ள பத்திரிகையை நடத்த முடியுமா?”

“முடியாது..இராமன் இருக்குமிடம் அயோத்தி என்பதுபோல பாரதி இருக்குமிடம்தான் ‘இந்தியா’”

உன்னுடைய எழுத்துக்கள் இப்பொழுதான் இன்னும் அதிகத்தேவை. புதிய கட்சித் தலைவர் திலகர் கைதாகிவிட்டார்.  தமிழ் நாட்டுத் தலைவர் சிதம்பரம் பிள்ளையும் கைதாகிவிட்டார். சுரேந்த்ரநாத் ஆர்யா என்ற சிங்கமும் கைதாகிவிட்டது. இந்த நிலையில் நீயும் கைதாகிவிட்டால் இந்தப்பகுதியில் சுதேசிய இயக்கத்துக்கு வழிகாட்ட யாரிருக்கிறார்கள்?”

Subbaier Ramasami

unread,
Mar 2, 2022, 9:53:01 PM3/2/22
to santhavasantham
171

பாரதி சிந்தித்தார் . அவர்கள் சொல்வதிலும் உணமையிருக்கிறது. புலி பதுங்குவது கூட  ராஜ தந்திரம் தான். என்றாலும் நண்பர்கள் அனைவரையும் விட்டுச் செல்ல அவருக்கு மனமில்லை.

பாரதி, எனக்குத் தெரிந்தவர் பாண்டிச்சேரியில் இருக்கிறார். அவருக்குச் சீட்டுத் தருகிறேன். அங்கே சில நாட்கள் நீ தங்கிக் கொள்ளலாம்என்றார் அவர்களுடன் இருந்த நண்பர் ஒருவர்..

பாரதியின் மற்ற நண்பர்களும் அதுதான் சரி என்றனர்.

பாரதி, சிறையிலிருந்து . .சி கூடச் சொல்லி அனுப்பியிருக்கிறார். அவரும் நீ புதுச்சேரி செல்வதைத்ததன் விரும்புகிறார். நீ அங்கே போய்ச் சில நாள்களில் நாங்களும் அங்கு வந்துவிடுகிறோம். புதுச்சேரியிலிருந்துஇந்தியாமீண்டும் வெளிவரும்” ” என்றார் திருமலச்சாரி.

சிறையில் கைதியாக அவதிப்படும் நிலையினிலும் தன்னைப் பற்றி நினைத்திருக்கிறாரே ,.சி என்று பாரதி கண்கலங்கினார்.

இந்தியா ஆசிரியரைக் கைது செய்து இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. பாரதி இன்னும் சென்னையில்தான் இருந்தார். ஒற்றர்களின் கண்காணிப்பு அதிகமிருந்தது.

இந்தியா புதுச்சேரிக்கு வருமென்றால் தானும் அங்கு போவதுதான் நல்லது என்று பாரதி நினைத்தார்

கைதாவதற்கு அஞ்சுபவராக இருந்திருந்தால் பத்திரிகைச் சட்டம் அமலில் இருந்த நிலையில் பின்ஹேயின் தீர்ப்பைப் பற்றிக் கடுமையாக விமரிசனம் செய்திருக்கமாட்டார். எனவே எதற்கும் துணிந்த நிலையில்தான் அவர் இருந்தார்.

பாரதியைப் புதுச்சேரிக்குச் செல்லும் படி தான் வற்புறுத்தியதைப் பற்றி

 ..சி    அவர் எழுதியுள்ள ..சி கண்ட பாரதியில் சொல்லியிருக்கிறர்

“”   மாமா பேரிலும் ஸ்ரீனிவாசாச்சாரியார்  பேரிலும் ராஜத் துவேஷ வழக்குத் தொடரப் போவதாகவும் , அவர்கள் ஜெயில் செல்ல விரும்பவில்லையானால் , புதுச்சேரிக்குச் சென்றுவிடும்படியாகவும் பாரதியாரின் தேசிய கீதங்களில் மயங்கிக் கிடந்த கவர்மெண்ட் எக்ஸெக்யூடிவ் ஆஃபீஸர் ஒருவர் பாரதியாரிடம் தகவல் தெரிவித்துவிட்டார். சில காரணங்களால் அவர் பெயரை இங்குச் சொல்ல விரும்பவில்லை. சிறையில் கிடந்து தேச சேவை செய்யாதிருப்பதினும் வேறு தேசம் சென்று தேச சேவை செய்துகொண்டிருப்பதே மேல் என நாங்கள் அவருக்குத் தகவல் சொல்லி அனுப்பினோம். .முதலில் மாமா இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.  பின்னர் மாமா புதுச்சேரி செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டதனால் சென்றுவிட்டார் போலும்(..சி.கண்ட பாரதிபக்கம் 42-43)


On Wed, Mar 2, 2022 at 7:37 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Subbaier Ramasami

unread,
Mar 4, 2022, 12:33:14 PM3/4/22
to santhavasantham
172

பாரதியின்   மனம் ஊசலாடிக்கொண்டிருந்தது. வீட்டிற்குச் சென்று செல்லம்மாளிடம் அவள் பதறாத வாறு மிகவும் அமைதியாக நிலைமையை எடுத்துச் சொன்னார். . கணவர் சிறைச்சாலையில் கிடந்து அவதிப்படுவதைவிட கைது செய்ய முடியா இடத்துக்குப் போவதுதான் நல்லது என்று செல்லம்மா நினைத்தாள்.. கைதானால் சிதம்பரம் பிள்ளைக்குத் தீவாந்தர சிக்ஷை கொடுத்ததைப்போல அவரையும் நாடு கடத்திவிடுவார்களோ என்று பயந்தாள்.

நீங்கள் கைதானாலும் நாடுகடத்தப்படுவீர்கள். அதைவிடச் சுதந்திரமாக உங்களுக்கு நீங்களே நாடுகடத்திக்கொள்ளும் தண்டனை கொடுத்துக்கொள்வது நல்லதல்லவா?” என்றாள்.

நீ சொல்லுவதும் சரிதான்என்றார் பாரதி.

ஜெயில்லே எழுதுவதற்குப் பேப்பரும் பென்சிலும் தரமாட்டாளாமே?. நீங்கள் கைதானால் உங்களால் எழுதாமல் இருக்க முடியுமா?”

அப்படியொரு நிலையை விட சாவது மேலானது

அதனால்தான் சொல்லுகிறேன். நாம் புதுச்சேரிக்குப்போகலாம்என்றாள் செல்லம்மா.

சரி  இன்னும் இரண்டு நாளில் கிளம்பலாம். நீ எல்லாத்தையும் மூட்டைகட்டி வை. ‘ என்றார் பாரதி

இந்தியா பத்திரிகை அலுவலகத்தில் போலீஸ்காரர்கள்  சோதனை இட்டபோது பாரதியின் அறையிலிருந்து காயலிக் அமெரிக்கன் என்ற பத்திரிகையின் பிரதி கிடைத்தது. அது தடை செய்யப்பட்ட பத்திரிகை .அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பத்திரிகை. அயர்லாந்து விடுதலைக்காகப் போராடும் பத்திரிகை. அயர்லாந்தின் நிலையும் இந்தியாவின் நிலையும் கிட்டத்தட்ட ஒன்றுதான்ஒத்த கருத்துடைய அந்தப்பத்திரிகையப் படிப்பதில் பாரதி ஆர்வம் காட்டினார். அதற்காக அதற்குச் சந்தாக் கட்டி வரவழைத்தார்அது ஒன்றுபோதாதா பாரதியைக் கைது செய்ய? எனவே அதையும்  குற்றப்பத்திரிகையில் இணைத்துப் பாரதியைக் கைது செய்ய விரும்பினர். காயலிக் அமெரிக்கன் பத்திரிகை போலீஸ் கைக்குப் போய்விட்டது என்று தெரிந்த உடனே இனியும் தாமதம் செய்யக்கூடாது

என எண்ணி மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு திருநெல்வேலிக்கு 28-8-1908 அன்று இரயில் ஏறினார்.

அவர் இரயில் ஏறியதைக் கண்காணித்த போலீஸ் அதைப்பற்றிக் குறிப்பு எழுதி அதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கிறதுபோலீஸ் குறிப்பிலிருந்து அவர் மனைவியைத் தனியே சென்னையில் விட்டுவிட்டுச் செல்லவில்லை என்பதும் இந்தியாப்பத்திரிகை ஆசிரியர் சீனிவான் கைதானபிறகு ஒரு வாரம் பாரதி சென்னையில் இருந்திருக்கிறார் என்பதும் தெளிவாகிறதுபாரதி சென்னையிலிருந்து கிளம்பிய பிறகு தனது மனைவியைச் சென்னைக்கு அனுப்பிவிட்டு அவரும் சென்னை வந்திருக்கிறார்அங்கே சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் அருகில் உள்ள தனது உறவினர் லக்ஷ்மண அய்யர் வீட்டில் ஒரு இரவுப்போது தங்கிவிட்டு மறுநாள்  மாறுவேடத்தில்(மாறுவேடத்தில் சென்றதாக நீலகண்டபிரம்மச்சாரி எழுதியுள்ளார் சைதாப்பேட்டை இரயில்வே ஸ்டஷனில் வண்டியேறி புதுச்சேரிக்குச் சென்றிருக்கிறார். அவருடன் ஒரு நண்பரும் சென்றதாகத் தெரிகிறது. பாரதியைப் புதுச்சேரியில் விட்டுவிட்டுச் செல்லம்மாளின் தமையனிடம்  அவர் தகவல் சொல்ல அப்பாத்துரை செல்லம்மாமளைக் கடையம் கூட்டிச் சென்றிருக்கிறார். பலர் பலவிதமாகக் கூறியுள்ளவற்றை அலசி ஆராய்ந்து இந்த முடிவுக்கு வரவேண்டியதிருக்கிறது.

                                            

Subbaier Ramasami

unread,
Mar 5, 2022, 11:48:44 AM3/5/22
to santhavasantham
173
அவர் மனைவி செல்லம்மா சொல்லியிருப்பது:
"கூடுமான வரையில் சர்க்கார் கையில் அகப்படாமல் தேச வி
டுதலைக்கு வேலை செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலா¡ன
தேசபக்தர்களின் நோக்கமாக இருந்தது. புதுச்சேரிக்குச்
சென்றால் பிரிட்டிஷ் சர்க்காரின் சட்டத்துக்குள் அகப்படாமல்
வேலை செய்யலாம் என்று அவருடைய நண்பர்கள் யோசனை
சொன்னார்கள். அதற்கு ஒப்பி, குவளை கிருஷ்ணமாச்சாரியாரி
ன் ஷட்டகர் சிட்டி குப்புசாமி அய்யங்காருக்கத் தமது சினேகிதர்
கொடுத்த கடிதத்தை எடுத்துக் கொண்டு பாரதியார் புதுவைக்குப்
புறப்பட்டார். சைதாப்பேட்டையிலிருந்து புறப்பட்டு, ரயிலேறி,
இரவு முழுவதும் துயிலின்றிக் கண்விழித்துச் சோர்ந்து புதுவை
வந்து சேர்ந்தார்."
> --பாரதியார் சரித்திரம், செல்லம்மா பாரதி
--Police Archives Volume XXI, 1908.
எப்படிப் புதுச்சேரி சென்றார் என்பதைப் பற்றி பாரதியின் நண்பர் நீலகண்ட பிரமச்சாரி கூறியுள்ளதாவது: “வழக்கமான தனது கிராப்புத் தலையை வைதீகக் குடுமித் தலையாக மாற்றிக் கொண்டு, எழும்பூரில் ரயிலேறினால் தெரிந்து விடுமென்று, சைதாப்பேட்டையில் ரயிலேறிப் புதுவை போய்ச் சேர்ந்தார். அவரது குடும்பம் சென்னையிலேயே இருந்தது.”
பாரதியார் புதுவை சென்றபோது இரயிலில் அவர் மனம் என்ன பாடுபட்டது என்பதைப் பாரதியின் மனைவி செல்லம்மா கூறுகிறார். “பாரதியாருக்கு மனதில் ஏதேனும் ஒன்று தோன்ற ஆரம்பித்து விட்டால், அது கொஞ்ச நேரத்தில் போகாது. இரயில் ஏறிய பிறகும் போலீசாரிடம் அகப்படாமல் புதுவை போய்ச் சேர வேண்டுமே என்று கவலைப்பட்டாராம். இரயிலில் யார் வந்து ஏறினாலும், டிக்கெட் பரிசோதகர் வந்தாலும், ஸ்டேஷன் மாஸ்டர் வந்தாலும், போலீசாரால் அனுப்பப்பட்டுத் தம்மைக் கவனிக்க வந்த நபர்களாகவே தோன்றுமாம். பின்பு அச்சமுற்றோன் அழிவான் என்ற மொழிகளை ஞாபகப்படுத்தி மனத்தைத் தேற்றிக் கொள்வாராம்.”
பாரதி சென்னையை விட்டுச் சென்றது 26 ஆகஸ்ட் 1908 அன்று. பாரதியைக் கண்காணித்த சிஐடி எழுதி
வைத்திருக்கும் குறிப்பு இது:
"CID. Madras city. 28.9.1908. This individual left Madras with his family for
his native place in Tinnevely on the 26.8.1908."
சென்னையிலிருந்து, மனைவியை அழைத்துக் கொண்டு திருநெல்வேலிக்குத்தான் முதலில் இரயிலேறியிருக்கிறார்.
பிறகு 5.9.1908 அன்று போலிஸ் டிஐஜி-யின் Personal Assistant அரசின் தலைமைச் செயலாளருக்கு
(Chief Secretary to Government, Oothacamund( ரகசியக் குறிப்பு ஒன்று எழுதியுள்ளார்
(Advance copy of a Paragraph of Political Abstract. P G Confidential,
Supplement No.36. dated 12th September 1908)
CID. An Officer of this Department report that this individual* who is the proprietor of Indian Printing Agency, Broadway and who is
believed to be the real owner of Tamil paper India, and C. Subramania Bharathy have left Madras for Pondicherry fearing arrest and prosecution and that they do not propose to
return for some time."

Subbaier Ramasami

unread,
Mar 6, 2022, 8:24:15 AM3/6/22
to santhavasantham

174

மற்றவர்கள் சிறைக்குச் செல்வதற்கும் ஒரு பத்திரிகையாளன் சிறைக்குச் செல்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. பின்னாளில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பத்திரிகையாளர்கள் பங்கு பெறவேண்டியதில்லை என்று மஹாத்மா காந்தி சொன்னார்.  “ஏன் அப்படி விதிவிலக்குக் கொடுக்கிறீர்கள். நாங்கள் தியாகம் செய்ய மாட்டோம் என்பது உங்கள் எண்ணமா?” ?” என்று ஒருநிருபர் காந்திஜியைக் கேட்டார். அப்படியில்லை. பத்திரிகையில் நீங்கள்  பணிபுரிவதே தியாக வாழ்க்கைதான். அதனால் தான் விதிவிலக்கு

(கனகரத்னம் ஸ்ரீதரன் மின்வலையில் எழுதிய கட்டுரையிலிருந்து)


பாரதி திருநெல்வேலி செல்வதாகப் போக்குக் காட்டிவிட்டு மீண்டும் சென்னைவந்து புதுச்சேரிக்குச் சென்றதாக அனுமானிக்க வாய்ப்புகள் அதிகம்.

இனி பாரதியைப் புதுச்சேரியில் சந்திக்கலாம்.

 

 

Ramamoorthy Ramachandran

unread,
Mar 6, 2022, 8:33:51 AM3/6/22
to Santhavasantham
பாரதியாரைப்  புதுச்சேரியில் சந்திக்க  ஆசை!
தொடருங்கள். தொடர்கிறோம்!
அன்புடன்  புலவர் இராமமூர்த்தி 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

M. Viswanathan

unread,
Mar 6, 2022, 11:45:25 AM3/6/22
to Santhavasantham
மஹாகவி பாரதியின் வாழ்க்கையைப் படிக்கப் படிக்க இன்பம்தான். 
உங்களது இந்தத் தொடர் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது.
அன்பன்,
மீ.விசுவநாதன் 

Subbaier Ramasami

unread,
Mar 8, 2022, 10:33:39 AM3/8/22
to santhavasantham

176

வந்தார் வழிகாட்டி


அன்று இரவும் பாரதிக்குச் சரியாகத் தூங்க முடியவில்லை. மறுநாள் முழுதும் வீட்டிலேயே அடைந்து கிடந்தார். மாலையில் கடற்கரைக்குச் சென்றார். இதற்குள் அவர் தப்பிப் புதுச்சேரிக்கு வந்த செய்தி      தமிழகப் போலீஸுக்குத் தெரிந்துவிட்டது. அவர்கள் மூலம் புதுச்சேரிப் போலீஸுக்கும் தகவல் வந்தது.

என்றாலும் தமிழகப் போலீஸ் பாரதி பாண்டிச்சேரிக்குத் தப்பிச் சென்ற செய்தியை வெளியில் சொல்லவில்லை. பாரதியைப் பின்பற்றி மற்றச் சுதேசிகளும் புதுச்சேரிக்குச் சென்றுவிடுவார்கள் என்ற பயம்தான் காரணம்.

பாண்டிச்சேரியில் தங்கியிருக்கும் தமிழ்நாட்டுப்போலீஸ் படையின் தலைமைக்காவலர், குப்புசாமி அய்யங்காரிடம் விசாரித்திருக்கிறார். பாரதியைப் பற்றித் தமக்கு முன்பு தெரியாதென்றும் நண்பர் ஒருவர் சீட்டுக்கொடுத்துக் கேட்டுக்கொண்டதால் அவரைத் தன் வீட்டில் வைத்திருப்பதாகவும் அய்யங்கார் சொன்னார். அவரை வீட்டை விட்டு அனுப்பும் படியும் இல்லையென்றால் அவர்மேல் நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும் என்றும் காவலர் மிரட்டினார். பயந்த சுவாபம் உள்ள அய்யங்கார் நடுங்கி விட்டார். மறுநாள் காலை பாரதியைச் சந்தித்து,

“சுவாமி. நான் ஒரு சின்ன வியாபாரி.. நீங்கள் இங்கே இருந்தால் எனக்கு ஆபத்து வரும் போலத் தெரிகிறது. நீங்கள் வேறு இடம் பார்த்துக்கறது நல்லது” என்றார்

“நான் யாருக்கும் இடைஞ்சல் கொடுக்க விரும்ப மாட்டேன். இன்னும் இரண்டு நாள்கள் பொறுத்துக்கொள்ளுங்கள் நான் வேறிடம் பார்த்துக்கொள்கிறேன்; ‘இந்தியா’ பத்திரிகை சந்தாதார் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார் பாரதி

“எனக்கு யாரையும் தெரியாது. என்னுடைய ஷட்டகன் கிருஷ்ணமாச்சாரிக்குத் தெரியலாம்.. அடிக்கடி வந்துண்டு போயிண்டு இருப்பான். ரெண்டுநாளா இந்தப்பக்கமே காணலே “ என்றார் அய்யங்கார். மேலும் இரண்டு நாட்கள் ஓடின.  அவ்வூரில் உள்ள ‘இந்தியா’ சந்தாதார் பட்டியலை எடுத்து வந்திருந்தால் ஒருவேளை அவர்களில் யாராவது உதவியிருக்கக்கூடும். . அய்யங்காரின் மனவேறுபாடு அவர்கள் கொடுக்கிற உணவிலும் தெரியத் தொடங்கியது. இனி அங்கே தங்கியிருந்து அவருக்கு  மனக்கஷ்டத்தைக் கொடுக்கப் பாரதி விரும்பவில்லை. எனவே உடனே அந்த இடத்தைக் காலி செய்யவேண்டுமென நினைத்தார். ‘பராசக்தி இது என்ன சோதனை?’ என அவர் மனம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தது. அந்த நேரம், அந்த மாலைப் போதில் அங்கொருவர் தோன்றினார். 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Mar 10, 2022, 12:16:05 AM3/10/22
to santhavasantham
177
நம்பிக்கை நக்ஷத்திரம்
குட்டையான உருவம். உருண்டையான முகம். பெரிய நாமம். அன்பான விழிகள் கொண்ட குவளைக் கிருஷ்ணமாச்சாரி அங்கே தோன்றினார். தன்னுடைய ஷட்டகர் வீட்டு வாயிலில் ஒருவர் நின்றுகொண்டிருக்கிறாரே. ஊருக்குப் புதியவர் போலும் என்று நினைத்துக்கொண்டே பாரதியின் அருகில் வந்து”சுவாமி, குப்புவாமி அய்யங்காருக்கு நீங்கள் சொந்தமா?” என்று கேட்டார்
“இல்லை. நான் ஊருக்குப் புதியவன். அய்யங்காருடைய நண்பர் எனக்கு நண்பர்”
“ஓகோ, அப்படியா, நான் அவருடைய ஷட்டகன். . இதே தெருவில் கடைசியில்தான் அடியேன் வாசம். என் பேர் குவளைக் கிருஷ்ணமாச்சாரி” என்றார் வந்தவர்
“உங்களைப் பற்றி உங்கள் ஷட்டகர் சொன்னார். எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்யவேண்டுமே”
“சொல்லுங்கள். என்ன வேண்டும்?”
“இந்தியா’ பத்திரிகை சந்தாதார் யாராவது இங்கே இருக்கிறாரா? அவரைப் பார்க்கவேண்டுமே!”
“பேஷாகப் பார்க்கலாம். சுந்தரேச அய்யர் என்று பெயர், மணிலாக்கொட்டை கிடங்கில் வேலை. இப்பொழுதே பார்க்க வேண்டுமா?
“”உங்களுக்குச் சௌகரியப்படுமா?
“அதைவிட எனக்கு வேறு என்ன வேலை” என்றார் கிருஷ்ணமாச்சாரியார்.
அந்த நேரம் வீட்டிற்குள்ளிருந்து குப்புசாமி அய்யங்கார் வந்தார்,
“கிருஷ்ணா, உன்னத்தான் நெனைச்சேன் நீயே வந்துட்டே. இவர்..” என்று அவர் இழுக்கும் போதே கிருஷ்ணமாச்சார்யார் குறுக்கிட்டு,
“எல்லாம் தெரியும். நான் இவரை மணிலாக்கொட்டை சுந்தரேசய்யரிடம் கூட்டிண்டு போறேன். அப்புறம் பார்க்கலாம். “ என்று சொல்லிக் கொண்டே வீதியில் நடக்கத்தொடங்கினார்.. பாரதியார் அவரைப் பின்தொடர்ந்தார். கிருஷ்ணமாச்சாரியாரைப் பார்த்த உடனேயே பாரதியார் உள்ளத்தில் அவரை அறியாமல் ஒரு தெம்பு வந்துவிட்டது. கடைசி காலம் வரை அவருடன் தொடர்பு கொண்டிருக்கப்போகும் ஒரு உறவு அன்று அவருக்கு வழிகாட்டியாக முன்னே நடந்து கொண்டிருந்தது,
அவரைப் பார்க்கும் போதே யாருக்கேனும் உதவும் ஒருவாய்ப்பு இன்று தனக்குக் கிடைக்காதா என்று ஏங்குபவரைப் போலத் தெரிந்தது. எளிய மனிதர்களுள் உயர்ந்தவராக அவர் தெரிந்தார். அன்றைக்கு அவர்தான் பாரதியின் நம்பிக்கை நக்ஷத்திரம்.

On Tue, Mar 8, 2022 at 9:33 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

176

வந்தார் வழிகாட்டி


அன்று இரவும் பாரதிக்குச் சரியாகத் தூங்க முடியவில்லை. மறுநாள் முழுதும் வீட்டிலேயே அடைந்து கிடந்தார். மாலையில் it https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-tLdbOGFQsjGzK_qdziNQhTYthmJhp01rZpHcjpn-Lj-g%40mail.gmail.com.

rathnam

unread,
Mar 10, 2022, 12:29:29 AM3/10/22
to santhav...@googlegroups.com
...அவரைப் பார்க்கும் போதே யாருக்கேனும் உதவும் ஒருவாய்ப்பு இன்று தனக்குக் கிடைக்காதா என்று ஏங்குபவரைப் போலத் தெரிந்தது.....

இத்தகையோரை நானும் பார்த்திருக்கிறேன். இவர்களிடம் ஆணவம் பலவீனப்பட்டு இருப்பதையும் கண்டு வியந்திருக்கிறேன். தெய்வப் பிறவிகள்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Mar 10, 2022, 1:43:04 PM3/10/22
to santhavasantham
178

பாரதி வாழ்க்கையிலே மிகுந்த இன்னலை எதிர்கொண்டு என்ன செய்யலாம் என்று அலமுறும் நிலை வரும் போதெல்லாம் யாராவது ஒரு நண்பர் சமய சஞ்சீவியாகத் தோன்றி ஒத்தாசை செய்வது சாதாரணமாக நடந்து வந்ததென்றும்  பாரதியார் மேற்கண்ட விதம் பெரிய சங்கடத்துக்கு உள்ளாகி இருந்த போது அகஸ்மாத்தாகக் குவளைக் கிருஷ்ணமாச்சார்யார் எப்ங்கிருந்தோ வந்து தோன்றினார் என்றும் பாரதியின் மனைவி செல்லம்மா பாரதி எழுதியிருக்கிறார்.

 

     . எங்கிருந்தோ வந்து குவளைக் கிருஷ்ணமாச்சர்யார் தோன்றிய பிறகு அங்கு என்ன நடந்தது?. குவளைக் கிருஷ்ணமாச்சார்யார் சொல்லுவதைப் பார்க்கலாம்.

“சுந்தரேசய்யர் வீட்டில் இருக்கிறாரா என்று பார்க்கப்போனேன். சுந்தரேசய்யர் ஆபீஸிலிருந்து வீட்டிற்கு இன்னும் வரவில்லை என்று அவருடைய வீட்டில் சொல்லக் கேட்டேன். புதுச்சேரியில் மணிலாக்கொட்டை வியாபரிகளில் ஒருவரானஸ்ரீ எஸ் குப்புசாமி அய்யர் கிடங்கில் இந்தச் சுந்தரேசய்யருக்கு கணக்கு வேலை. நான் சந்தித்த அந்தப் புதியவரும் நானுமாக மேற்படிக் கிடங்குக்கு போனோம். கிடங்குக்கு அருகில் வீதியில் அவரை நிறுத்திவிட்டு நான் தனியாகச் சுந்தரேசய்யரிடம் போய் “ஐயா, தங்களைச் சென்னையிலிருந்து ஒருவர் பார்க்க வந்திருக்கிறார். “ என்று சொன்னேன். சுந்தரேசய்யர் “அவர் எங்கே இருக்கிறார் ?” என்று என்னைக் கேட்டார்.

“தாங்கள் என்னுடன் வெளியே வந்தால் அவரைப் பார்க்கலாம் “ என்று சொன்னேன்  .உடனே அவர் ஆபீஸை விட்டு என் பின்னால் வந்தார்.

 

நான் சுந்தரேசய்யருக்கு என்னுடன் வந்தவரைக் காட்டினதும் இருவரும் தனியாகத் தூரத்தில் போய் ஏதோ ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அன்று இரவு நான் அவர்களிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு வீட்டிற்குச் சென்றேன்.  பிறகு இரண்டு மூன்று தினங்கள் கழித்து சுந்தரேசய்யரை நான் பார்த்தபோது, ‘எங்கே ஐயா, நான் தங்களிடம் அழைத்து வந்த கனவான்?” என்று கேட்டதற்குத் தன்னுடைய ஆதரவில் ஒரு வீட்டில் அவர் இருப்பதாகச் சுந்தரேசய்யர் சொன்னார்

 

சுந்தரேசய்யர் குவளைக் கிருஷணமாச்சாரியாரிடம் கூட அவர் அழைத்து வந்தவர் பாரதியார் என்ற உண்மையைச் சொல்லவில்லை. அவர் அந்த ரகசியத்தை யாரிடமாவது சொல்லிவிடுவாரோ என்ற சந்தேகந்தான் காரணம். ஆனால் ஓரிரு தினங்களில் அவரது ஷட்டகர் மூலமாக அவருக்கு அந்த உண்மை தெரிய வந்த போது தான் எந்த மகானைச் சந்திக்க வேண்டுமென்று ஆசை கொண்டிருந்தாரோ அந்த மகானைத் தான் சுந்தரேசய்யரிடம் அழைத்துச் சென்றோம் என்பதை எண்ணி மகிழ்ந்தார். உடனே ஓடிச் சென்று பாரதியாரைக் கண்டார். அன்றிலிருந்து அவர்கள் நட்புத் தொடர்ந்தது.. பழியாய்க் கிடந்தார்’ என்று சொல்வார்களே அந்த மாதிரி அவர் பாரதியார் வீட்டிலேயே பழியாய்க் கிடந்தார்.



Siva Siva

unread,
Mar 10, 2022, 6:01:18 PM3/10/22
to santhavasantham
/ அலமுறும்  /
I am familiar with அலமரும்.
Are both forms correct?


V. Subramanian

rathnam

unread,
Mar 10, 2022, 11:14:30 PM3/10/22
to santhav...@googlegroups.com
உனைதினந் தொழுதிலன்...  என்னும் திருப்புகழில் 'அலமுறு' வருமே!  

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 11, 2022, 8:04:11 AM3/11/22
to santhavasantham
Yes. Thanks.
It so happens that I was talking about that thiruppugazh with someone last night (a few hours after my mail) and heard that song's clip this morning before I saw your mail.

V. Subramanian

Subbaier Ramasami

unread,
Mar 11, 2022, 12:07:24 PM3/11/22
to santhavasantham
179

சுந்தரேசய்யர் ஒரு தேசபக்தர். லோகமான்ய பாலகங்காதர திலகரிடம் ஈடுபாடுகொண்டவர். பாரதியின் எழுத்துகளை’ இந்தியா’ வில் படித்ததன் பின் அவர் மேல் அபார மரியாதை கொண்டிருந்தார். அவர் எழுத்துகளைப் படித்ததாலே தானும் இயன்ற அளவில் ஏதேனும் தொண்டு செய்யவேண்டும் என்று நினைத்துச் சிறுசிறு தொண்டுகள் செய்துவந்தார்,

 

பாரதியாரை நேரில் கண்டதும் அவர் பேச்சைக் கேட்டதும் அவர்மேல் கொண்டிருந்த மதிப்புப் பெருகியது. அவரும் பாரதியாரும் அடிக்கடி சந்தித்து அளவளாவினர். மிக உயர்ந்த தத்துவங்களையும் மிக மிக எளிமையாக , சொன்ன உடனே புரிந்து கொள்ளும் வகையிலே பாரதி எடுத்துச் சொல்லும் ஆற்றலையும் உடனே அவற்றைக் கவிதையாக்கிப் பாடும் பாங்கினையும் கண்டு பிரமித்தார். அவருக்கு ஆதரவாக இருப்பது தமது கடமையென்று கருதினார். சுந்தரேசய்யர் சம்பளத்துக்கு வேலை செய்கின்ற ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால் தேவைப்பட்டபோது கடன் வாங்கியும் பொருள்களை அடமானம் வைத்தும் அவர் பாரதிக்கு உதவியிருக்கிறார். அதற்கெல்லாம் காரணம் பாரதியின் உண்மையான தேசபக்தியும் சொல்லாற்றலும் கவிதாசக்தியும் தான். ஈஸ்வரன் தர்மராஜா கோவில் தெருவில்  ஒரு வீட்டில் அவர் பாரதியைத் தங்க வைத்து அவரது தேவைகளைக் கவனித்துக் கொண்டார்.                                                                                                                                                         அதை எந்தப் பிரதிபிரயோஜனமும் எதிர்பார்க்காமல் ஒரு தெய்வீகக் கடமையாகவே செய்துவந்தார் சுந்தரேச அய்யர்.

 

குப்புசாமி அய்யங்காரைப்போல் இல்லாமல் சுந்தேரய்யர் பாரதியிடம் மிக அன்போடு நடந்துகொண்டார். அவர் கொடுக்கும் சாப்பாடு தரத்தில் குறையவில்லை. மாறாக அதிகரித்தது. 

On Fri, Mar 11, 2022 at 7:04 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
Yes. Thanks.

Subbaier Ramasami

unread,
Mar 13, 2022, 12:01:03 PM3/13/22
to santhavasantham
180

தினமும் இரவுப்போதில் பாரதியின் வீட்டிற்கு வந்து அவரோடுதான் சுந்தரேசய்யரும் சாப்பிட்டார்

 ஒருவருக்குப் பாரமாக இருக்கிறோமே என்ற குற்ற உணர்வு பாரதியை அரித்துக்கொண்டிருந்தது. கையிலும் காசில்லை.

“என்ன பாரதி, ஒரு மாதிரி இருக்கிறீர்கள்?” என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தார் சுந்தரேச அய்யர்.

.“ஒன்றுமில்லை. திருமலாச்சாரி விரைவில் வந்து விடுவதாகச் சொன்னார். இன்னும் வரவில்லை” என்றார் பாரதி

“பாரதி, அவர்கள் மெதுவாக வரட்டும். இப்பொழுதுதான் உங்களுக்கு ஓய்வு. உங்களுக்கு எழுதுவதற்குப் பேப்பரும் பென்சிலும் கொண்டுவந்திருக்கிறேன். இப்பொழுதுதான் நீங்கள் நிம்மதியாக எழுத முடியும். நீங்கள் ஏதோ கட்டுரையைப் பாதியில் விட்டிருப்பதாய்ச் சொன்னீர்களே அதை முடியுங்கள்”

பாரதி சிரித்தார்

“ஏன் சிரிக்கிறீர்கள் பாரதி?”

“அது கட்டுரையில்லை. கதை. அதிலும் கதாநாயகன் ஊர் சுற்றுகிறான்.. அவன் கந்தர்வலோகத்திலிருந்து மண்ணுலகத்துக்கு வந்துவிட்டான். அந்தக் கதை நான் தங்கியிருந்த திருவல்லிக்கேணி வீரராகவ முதலித் தெரு வீட்டிலிருந்து தொடங்குகிறது.  அந்த வீடு ஒண்டிக் குடித்தனம்தான். சித்தி, தம்பி, மச்சினி மனைவி குழந்தை என்று என்னுடைய சிறிய வீட்டுக்குள் பெரிய குடித்தனம். எனக்கோ வெளியிலேதான் வேலை. ஆனாலும் எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம் தெரியுமா? அந்தக்கதையிலும் நான்தான் கதாநாயகன். இதோ இப்பவும் தேசாந்திரம் செய்கிறேன். இது என்ன உலகம் என்று தெரியவில்லை.”

 

“கவலைப்படவேண்டாம். இதுவும் கந்தர்வ லோகம் தான். கொஞ்ச நாள்லே பத்திரிகை ஆரம்பிச்சிட்டா உங்க குடும்பத்தைக் கூட்டிண்டு வந்திடலாம்” என்றார் அய்யர்.

அய்யரின் அன்பைக்கண்டு பாரதியின் கண்கள் பனித்தன.

“பாரதி கிடைத்திருக்கிற இந்த ஓய்வைப் பயன்படுத்திக்கொண்டு அந்தக்கதையை எழுதி முடியுங்கள். சாயங்கால நேரத்திலே இந்த ஊர்க் கடற்கரை நொம்ப நன்னாயிருக்கும். அங்கே போய்க் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வாருங்கள். மனத்துக்கு நிம்மதி கிடைக்கும்” என்றார் அய்யர்.

 

அய்யர் சொன்னபடி, பாரதி தன் மனத்தை எழுத்தில் திருப்பினார். ஆனாலும் மனம் கவலைப்பட்டது. தேசத்தின் மேல் உண்மையான பக்தி கொண்டவன் எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் முன்பு எழுதியிருந்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. தன் எழுத்தாலே தான் நிம்மதியடைந்தார். ஞானரதம் உருவாகிக் கொண்டுவந்தது. ‘இந்தியா’ பத்திரிகை தொடங்கப்பட்டதும் ஞானரதத்தையும் தொடர்ந்து உலாவர விடவேண்டியதுதான் என்று எண்ணினார்.

 


On Fri, Mar 11, 2022 at 11:07 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
179


rathnam

unread,
Mar 14, 2022, 2:32:49 AM3/14/22
to santhav...@googlegroups.com
....அந்த வீடு ஒண்டிக் குடித்தனம்தான். சித்தி, தம்பி, மச்சினி மனைவி குழந்தை என்று என்னுடைய சிறிய வீட்டுக்குள் பெரிய குடித்தனம். எனக்கோ வெளியிலேதான் வேலை. ஆனாலும் எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம் தெரியுமா? அந்தக்கதையிலும் நான்தான் கதாநாயகன். இதோ இப்பவும் தேசாந்திரம் செய்கிறேன். இது என்ன உலகம் என்று தெரியவில்லை.....


கூட்டில் உலகத்தைக் கண்டார் உலகில்கூட்டைத் தொலைத்தார். 
உண்மை எப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Mar 14, 2022, 9:45:23 AM3/14/22
to santhavasantham
182

“கவலைப்படவேண்டாம். இதுவும் கந்தர்வ லோகம் தான். கொஞ்ச நாள்லே பத்திரிகை ஆரம்பிச்சிட்டா உங்க குடும்பத்தைக் கூட்டிண்டு வந்திடலாம்” என்றார் அய்யர்.

அய்யரின் அன்பைக்கண்டு பாரதியின் கண்கள் பனித்தன.

“பாரதி கிடைத்திருக்கிற இந்த ஓய்வைப் பயன்படுத்திக்கொண்டு அந்தக்கதையை எழுதி முடியுங்கள். சாயங்கால நேரத்திலே இந்த ஊர்க் கடற்கரை நொம்ப நன்னாயிருக்கும். அங்கே போய்க் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வாருங்கள். மனத்துக்கு நிம்மதி கிடைக்கும்” என்றார் அய்யர்.

 

அய்யர் சொன்னபடி, பாரதி தன் மனத்தை எழுத்தில் திருப்பினார். ஆனாலும் மனம் கவலைப்பட்டது. தேசத்தின் மேல் உண்மையான பக்தி கொண்டவன் எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் முன்பு எழுதியிருந்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. தன் எழுத்தாலே தான் நிம்மதியடைந்தார். ஞானரதம் உருவாகிக் கொண்டுவந்தது. ‘இந்தியா’ பத்திரிகை தொடங்கப்பட்டதும் ஞானரதத்தையும் தொடர்ந்து உலாவர விடவேண்டியதுதான் என்று எண்ணினார்.

 

மறுநாள் காலை சூரியன் உதயமாவதற்கு முன்னமே கடற்கரைக்குப் போனார். சென்னையில்  மணற்பரப்பின் தொடக்கத்திலிருந்து சற்றுத்தொலைவில் கடல் அலைபுரளும் ஆனால் பாண்டிச்சேரியில் அலைகள் பக்கத்திலேயே புரண்டன. காதருகே கடல் பேசியது. தொலைவிலே கதிரவன் வெளிவருதற்கு நீர்விளிம்பைக் கிழித்துக்கொண்டிருந்தான்.  நீலக்கடல் அதன் ஒளியில் நிறம் மாறிக்கொண்டிருந்தது

“தங்கம் உருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமாக” அது அவர்க்குத் தோன்றியது. எத்தனை பரவசம்!. எவ்வளவு ஆனந்தம்!. இருள் இருள் என்று கவலைக்குள்ளே முடங்கிக்கிடக்கும் மனிதனுக்கு விடியலும் உண்டு என்று காட்டுகிற விந்தைக் காட்சியல்லவா அது!,. காலைக் கதிரழகின் அந்த அற்புதக் கவர்ச்சி அவரது மனநிலைக்கும் பொருந்திவந்தது.  மனைவியையும் குழந்தையையும் பிரிந்து பாண்டிச்சேரிக்கு வந்தது ஒரு இருள் தோற்றந்தான். ஆனால் அது புலர்கின்ற காலத்துக்குச் சற்று முன்னுள்ள இருள் தான். இதோ விடியல் வந்தது போல அவர் வாழ்க்கையிலும் விடியல் வந்துவிடும், விரைவிலேயே வந்துவிடும் என்ற தெம்பைக் கொடுத்தது. அந்த மன அமைதியோடு வீட்டுக்குப் போனார். வீட்டு வசலில் குவளைக் கிருஷ்ணமாச்சாரி அவருடைய வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்.  


Subbaier Ramasami

unread,
Mar 15, 2022, 1:45:56 PM3/15/22
to santhavasantham
183

“பாரதியார்வாள், சந்தோஷமான சமாச்சாரம். திருமலாச்சார்யார் வந்துவிட்டார். நேத்து ராத்திரித்தான் வந்தார். “ என்றார் குவளைக் கிருஷ்ணமாச்சார்யார்

. கீழைவானின் கதிரவனை நோக்கிக் கைகுவித்தார் பாரதி.

“அவர் எங்கே தங்கியிருக்கார்?” என்று கேட்டார்

“அவாள்ளாம் இங்கே முன்னாலே இருந்தவாதானே, வாங்கோ நான் கூட்டிண்டு போறேன்” என்றார் குவளை.

 

எஸ் என் திருமலாச்சாரியைப் பார்த்தவுடன் பாரதிக்குத் தெம்பு வந்தது. .

“பாரதி, நீ மெட்ராஸிலிருந்து  கிளம்பினது நல்லதாப் போச்சு. . உன்னைப் போலீஸ்காரா  ரெயில்வே ஸ்டேஷனிலே பார்த்துட்டாளாமே. நீ திருநெல்வேலிக்குக் கிளம்பிட்டதாத் தான் நெனெச்சாளாம்”

 

பாரதி சிரித்தார்.

“அப்படியொரு போக்குக் காட்டிட்டு வந்தேன். இப்போ அவாளுக்குத் தெரிஞ்சிருக்குமே”

“தெரியும். நன்னாத் தெரியும். என்னையும் தேடிண்டிருக்கா. .எஸ்.என் திருமலாச்சாரியா அல்லது எம் பி திருமலாச்சாரியா உரிமையாளர்னு அவாளுக்குத் தெரியாது. . அது போகட்டும்  பிரிண்டிங் மெஷினரில்லாம் இன்னும் ஒருவாரத்தில் வந்துடும். அப்புறம் இங்கிருந்து “இந்தியா’ வைத் தொடங்கலாம்”

“”இயந்திரஙங்களைக் கொண்டு வருவதிலே பிரச்சினை இருக்காதா?” என்று கேட்டார் பாரதி

“அதெல்லாம் ஒண்ணும் வராது/. அதற்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் பண்ணியாச்சு. இங்கே ஒரு இடம் பார்க்கணும். காலதாமதப் படுத்தக்கூடாது. “இங்கே மூடினான் அங்கே தொறக்கிறானேன்னு இங்கிலீஸ்காரன் ஆச்சர்யப்படணும். பாரதி, வேறெதைப் பத்தியும் கவலைப் படாமே முதல் இதழுக்கு வேண்டிய எழுத்துவேலைகளைத் தயார்செய்து வைத்துவிடு. “என்றார் திருமலாச்சாரியார் .

 

அவர் சொன்னதுபோலவே அச்சு இயந்திரங்கள் இந்தியாவிலிருந்து வந்து சேர்ந்தன,. அவற்றோடு மண்டடயம் சீனிவசாச்சாரியாரும் வந்து சேர்ந்தார்.

 

சென்னையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த இந்தியா பத்திரிகையும் 1908 செப்டம்பர் ஐந்தாந்தேதி இதழோடு நின்றுவிட்டது.

 

பத்திரிகை ஆரம்பிக்க முதலில் இடம்வேண்டுமே! ஸ்ரீஸ்ரீ ஆசார்யார் ஏற்கனவே புதுச்சேரியில் இருந்தவர் என்பதால் அவருடைய நண்பர்கள் மூலம் ஓர் இடத்தைப் பிடித்தார். பிரஞ்ச் சட்டத்தின் படி பிரஞ்ச் குடிமகன்  ஒருவர்தான் தொழில் தொடங்க முடியும் என்ற நிலையிருந்தததால்.ஸ்ரீ ஆச்சாரியார் தனது நண்பர் வில்வநல்லூர் லக்ஷ்மி நாராயணய்யரிடம் சொல்லி அவரது சம்மதத்தின் பேரில் அவரது பெயரில் பத்திரிகையைத் தொடங்கினார்..  58, எத்ரான் வீதி  வீட்டு மேல்மாடியில் “இந்தியா” அலுவலகம் அமைக்கப்பட்டது. அங்கே சரஸ்வதி அச்சகத்தில் ‘இந்தியா’வை அச்சடிக்க வேண்டிய ஏற்பாடுகள் நடைபெற்றன. 

Subbaier Ramasami

unread,
Mar 16, 2022, 11:36:01 AM3/16/22
to santhavasantham
184

சென்னையிலிருந்து வெளிவந்த மாதிரியே அமைப்பு. 15க்குப் 10 அளவில் 16 பக்கங்கள் கொண்டதாக அச்சிடப்பட்டது.   கார்ட்டூன் என்று சொல்லப்படும் கோட்டுச் சித்திரமும் உண்டு. இந்தியாவிலிருந்து வெளிவரும் போதே அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கோட்டுச் சித்திரங்களுக்குப் பெரிய வரவேற்பிருந்தது. ஓரிரு பக்கங்கள் தேவைப்படும் ஒரு செய்தியை மிகவும் அழுத்தமாகக் கோட்டுச் சித்திரத்தில் காட்டிவிட முடியும் . அதிலும் பாரதி வடிவமைத்த கோட்டுச் சித்திரங்களும் சித்திரத்தின் விளக்கமாக அவர் கொடுத்த  குறிப்புகளும் மக்களைப் பெரிதும் கவர்ந்தன.  இந்தியாவில் பத்திரிகை நின்று போனதற்கு என்ன காரணம் என்பதை நன்கு அறிந்த பாரதி உடனடியாகக் கடுமையான தாக்குதலைத் தொடங்காமல் சற்று அடக்கி வாசிக்க வேண்டுமென்று நினைத்தார். பாரதியை விடத் தீவிர வாதியான திருமலாச்ச்சாரி  இன்னும் கொஞ்சம் கடுமையாக எழுத வேண்டும் என்று விரும்பினாலும் பாரதியின் கூற்றில் உள்ள உண்மையை உணர்ந்து அவர் போக்கில் விட்டு விட்டார். பாரதி, திருமலாச்சாரி ஸ்ரீநிவசாச்சாரியார் மூவரும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று அங்கு பத்திரிகைகள் நடத்தப்படும் முறையையும் அரசியல் போக்கையும் ஆராய்ந்து வரலாம் என எண்ணினர். பத்திரிகைக் பொறுப்பை எம் கே டி ஆச்சார்யார் வசம் ஒப்படைத்துவிட்டுச் செல்லலாம் என்று முடிவு செய்தனர். பிள்ளைத்தாய்ச்சியான மனைவியை விட்டுவிட்டுச் செல்லப் பாரதிக்கு விருப்பமில்லை.என்றாலும் மற்ற இருவரும் வற்புறுத்தும் போது மறுக்கவும் இயலவில்லை.  அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க ஸ்ரீ ஆச்சார்யார் முனைந்தார். ஆனால் சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு வந்த எம்.கே.டி ஆச்சார்யார் தான் ஆயுதப்பயிற்சி பெற இலண்டன் செல்லப்போவதாகச் சொல்லிவிட்டார். எனவே ஐரோப்பா செல்லும் திட்டம் கைவிடப்பட்டது. .

 


On Tue, Mar 15, 2022 at 12:45 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
183

“பாரதியார்வாள், சந்தோஷமான சமாச்சாரம். திருமலாச்சார்யார் வந்துவிட்டார். நேத்து ராத்திரித்தான் வந்தார். “ என்றார் குவளைக் கிருஷ்ணமாச்சார்யார்

Subbaier Ramasami

unread,
Mar 17, 2022, 10:28:01 AM3/17/22
to santhavasantham
184

ஒரே பத்திரிகைக்கு வெவ்வேறு சந்தா விதிப்பு எங்கேனும் கேள்விப்பட்டதுண்டா? பாரதியார் அதிலும் புதுமை செய்தார்.

 

இந்தியா சந்தா

 

இந்தியா பத்திரிகையின் லக்ஷியம்_ சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்.

 

தனிப்பிரதி விலை அணா ஒன்று. ஆனால் அதற்கு ஆண்டுச்சந்தா புது முறையில் நிணயிக்கப்பட்டது.

 

 பத்திரிகையின் சந்தா விவரம்

                                        ரூ       பை

 

Subbaier Ramasami

unread,
Mar 18, 2022, 10:13:36 AM3/18/22
to santhavasantham

“  இந்தச் சந்தர்ப்பத்திலே விபின சந்திர பாலர்  ஐரோப்பாவிற்குப் புறப்பட்டுப் போனது சமயோஜிதம் இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள். கவர்மெண்டார் ஜனாதிபர்களை எல்லாம் கண்ட கண்ட முகாந்திரங்களின் பேரில் பிடித்துக் கொடூரமான தண்டனைகளுக்கு உட்படுத்துகிறார்கள். விபின பாபு சட்ட விரோதமான முயற்சிகள் செய்யாவிட்டாலும் அவர் சாத்துவிக உபாயங்களைக் கொண்டே ஸ்வராஜ்ய சித்திபெற வேண்டுமென்று தமது போதனைகளில் ஐயந்திரிபறக் கூறிய போதிலும் சர்க்கார் அதிகாரிகள் ஏதேனும் ஒரு வீண்காரணத்தை வைத்துக் கொண்டு அவரைப் பிடித்துத் தீபாந்தரம் ஏற்றுவதற்கு வழிதேடிக்கொண்டேதான் இருப்பார்கள். ஆதலால் விபின் பாபு இத்தருணத்தில் இந்தியாவில் இருப்பது எப்படியேனும் தமக்கு அபாயம் விளைவிக்கும் என்பது கருதி த் தமது சொந்தப் பாதுகப்பின் பொருட்டே புறப்பட்டுப் போய்விட்டார்.

சேனைத் தலைவன் போர்முகத்தில் படைகளைவிட்டு ஓடிப்போன தளபதிபோல பாலர் ஓடிப்போய்விட்டதாகப் பலர் குற்றஞ்சாட்டியதற்குப் பதிலாகப் பாரதி எழுதினார்

 

இவ்விஷயத்தில் சைநிய திருஷ்டாந்தம் சரியானதன்று. சைநியத்தை எதிரிகள் வந்து தாக்கும் போது தன்னுயிரைக் கருதித் தப்பியோடும் சேனைத்தலைவன் இகழ்வதற்குரியவனாவான் என்பது மெய்யே. ஆனால் தன் சைநியம் ஆயத்தமாகு முன்பாக எதிரிகள் சைநியத்தின் முன்னேபோய்த் தலைநீட்டிக் கொண்டிருக்கும் சேனாதிபதியைப் புத்திமான் என்று சொல்லலாமா?

 

ஆகா, எண்ணும் பொழுது மனம் துடிக்கின்றது! விரல்கள் மரத்துப்போகின்றன. ஒன்றா, இரண்டா, எத்தனை எத்தனை வீரர்களை இழந்துவிட்டோம். ! எத்தனை மகான்களைப் பறிகொடுத்துவிட்டோம். ஒரு காரணமுமுண்டா சட்டம் , நீதி, ஒழுங்கு ஏதேனும் உண்டா?,  பெயர் பெயராக எடுத்துச் சொல்லவேண்டுமோ.? பாரத ஜனங்களே மறந்தா போய்விட்டீர்கள்? கல்லைப் போன்ற நெஞ்சமா வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? திலகர், சிதம்பரம், ரவீந்தர் என்ற மனிதர்களைப் பற்றி நீங்கள் கேள்வியுற்றதாகவே இன்னும் ஞாபகமில்லையா? இவர்களோடு விபின பாபுவையும் கிளியை வளர்த்துப் பூனை கையில் ஒப்புவிப்பதுபோல வீண்பறிகொடுக்க வேண்டுமென்றா சிந்திக்கிறீர்கள்?” என்று எழுதித் தான் பாண்டிச்சேரிக்கு வந்ததற்கும் ஒரு காரணத்தை மறைமுகமாக முன்நிறுத்தினார்

Subbaier Ramasami

unread,
Mar 19, 2022, 5:09:42 PM3/19/22
to santhavasantham
186

ஜி. சுப்ரமணிய அய்யரைக் கைது செய்து அவரிடம் உடன்படிக்கை ஒன்று எழுதிவாங்கிக் கொண்டு அவரை விடுதலை செய்தார்கள் .அய்யர் அப்பழுக்கற்ற தேசியவாதி. ஆனால் அவ்வப்போது ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக எழுதிவிடுவார். பிரிடிஷ்காரர்கள் கூட இருந்தே குழிபறிப்பார்கள் என்பதை அவர் அறியவில்லை. ஆனால் பாரதி அறிந்திருந்தார். அய்யர் விடுதலை பெற்றதற்காக பிரிட்டிஷ் அரசுக்கு நன்றி தெரிவித்துப் பல பத்திரிகைகள் எழுதின

 

சுப்பிரமணிய அய்யர் விடுதலை பெற்ற பிறகு அவரைச் சந்தித்த ஹிந்துப்பத்திரிகை நிருபரிடம் அவர் சொன்னார்” “ஸ்ரீ ஆர்தர் லாலியின் அரசு தூக்கில் தொங்குவதுதான் தண்டனை என்று சொல்லியிருந்தால் வழக்கை மகிழ்ச்சியோடும் மன அமைதியோடும் சந்தித்திருப்பேன். இந்த வயதில் எனது இந்தப் பூஞ்சை உடம்பு சிறைச்சாலையின் கடின உழைப்பை எப்படித்தாங்கும்?” சுப்பிரமணிய அய்யருக்காகப் பாரதி வருந்தினார். என்றாலும் அவர் எழுத்துக்கள் மூலம் பிரிட்டிஷாருக்கு அவ்வப்போது ஆதரவாக இருந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த நிலையை ஒரு சிறு கதை மூலம் விளக்கினார்

“”ஸர்க்கார் என்ற ஓநாயின் தொண்டையிலே ராஜ துரோகம் என்ற எலும்பு சிக்கிக் கொண்டது. அப்போது ஸ்ரீ சுப்பிரமணிய அய்யர் என்ற நாரை பத்திரிகை வியாசம் என்ற மூக்கைக் கொண்டு அந்த எலும்பை எடுத்துவிட்டது. ஆனால் இந்த ஓநாய் அய்யர் நாரையின் மூக்கையே ஒடித்துவிட்டது. ஆனால் மூக்கை மட்டிலும் ஒடித்துக் கழுத்தைக் கடித்துக் கொல்லாமல் விட்டுவிட்டதற்காக மற்ற நாரைகள் கூடி நன்றி சொல்லுகின்றன”(இந்தியா 10-10-1908- கா.வ.பா.ப- 3 பக்கம் 360)

 


On Fri, Mar 18, 2022 at 9:13 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

“  இந்தச் சந்தர்ப்பத்திலே விபின சந்திர பாலர்  ஐரோப்பாவிற்குப் புறப்பட்டுப் போனது சமயோஜிதம் இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள். கவர்மெண்டார் ஜனாதிபர்களை எல்லாம் கண்ட கண்ட முகாந்திரங்களின் பேரில் பிடித்துக் கொடூரமான தண்டனைகளுக்கு உட்படுத்துகிறார்கள். விபின பாபு சட்ட விரோதமான முயற்சிகள் செய்யாவிட்டாலும் அவர் சாத்துவிக உபாயங்களைக் கொண்டே ஸ்வராஜ்ய சித்திபெற வேண்டுமென்று தமது போதனைகளில் ஐயந்திரிபறக் கூறிய போதிலும் சர்க்கார் அதிகாரிகள் ஏதேனும் ஒரு .

Siva Siva

unread,
Mar 19, 2022, 8:43:35 PM3/19/22
to santhavasantham
அழகிய உருவகம்!

Subbaier Ramasami

unread,
Mar 20, 2022, 10:55:07 AM3/20/22
to santhavasantham
187

பாரதி எளிமையான சிந்து முதலிய பாடல் வகைகளுக்கு மாறிய போதும்  சக்தி முதலிய பிற தெய்வங்களுக்குப்ம் பாடியதுபோல பாரத மாதாவையும் சக்தியாகக் கண்டு அவளுக்குப் பழைய மரபிலும் பாமாலை பாட விழைந்தார். அதன் வெளிப்பாடாக முதலில் பூத்தது பாரத தேவியின் திருத்தசாங்கம். பாரத தேவியின் பத்துச் சின்னங்கள் எவை எவை என்பதைப் பத்து வெண்பாக்களாகப் பாடும் பாடல் இது.  பொதுவாகப் பாட்டுடைத்தலைவனது மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, குதிரை, யானை, கொடி , முரசம், செங்கோல் என்பனவற்றைக் குறித்து நேரிசை வெண்பாவால் பாடப்படும் பிரபந்தம் திருத்தசாங்கம்.  அடிமைப் பட்டுக் கிடக்கிற நாட்டுக்குச் செங்கோலைப் போய் எப்படிப்பாடுவது என்று எண்ணினாரோ என்னவோ, செங்கோலை விட்டுவிட்டார்.  மாணிக்கவாசகரின் வழியைப் பின்பற்றி நாமம், நாடு, நகர்,ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார் கொடி  என்னும் சின்னங்களைப் பாடியிருக்கிறார். ஊர்தியைப் பற்றிப் பாடும் போது

 

“சீரும் சிறப்புமுயர் செல்வமுமோர் எண்ணற்றாள்

ஊரும் புரவி உரைதத்தாய்- தேரிற்

பரிமிசையூர் வாளல்லள் பாரனைத்தும் அஞ்சும்

அரிமிசையே ஊர்வாள் அவள். “

 

 என்று எழுதினார். அவளை மஹாசக்தியாகவே பாவித்தார் என்பதற்கு அடையாளமாய் பாரத மாதாவின் ஊர்தியைச் சிங்கமாகக் காட்டி அதன் மேலே ஊர்பவள்  என்றார்.

 

இந்தப் பாடல் புதுச்சேரியிலிருந்து வந்த முதல் இதழிலேயே வெளியானது.

 

புதிய “இந்தியா  பத்திரிகையில் பாரதியின் எழுத்துகள் புதிய கம்பீரத்தோடும் பழைய பொலிவோடும் விளங்கின.  இந்தியா பத்திரிகையின் முக்கிய கொள்கையாக சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை பத்திரிகையின் முகப்பில் கொடுக்கப்பட்டன. முதல் இதழை வெளியிட்ட பிறகு 24ந்தேதி இதழில் தம்து பத்திரிகையின் கொள்கைகளை மிகவும் அழுத்தமாகப் புதுவையை ஆளும் பிரஞ்ச் அரசுக்கும் இந்தியாவை ஆளும் பிரிட்டிஷ் அரசுக்கும் சொல்லிவிடுகிறார். கலகம் செய்வதோ கலகத்தைத் தூண்டிவிடுவதோ இந்தியா பத்திரிகையின் வேலையில்லை என்பதையும் தவறு கண்டவிடத்துச் சுட்டிக்காட்டும் பணியை ‘இந்தியா’ செய்யும் என்பதையும் தெளிவாகச் சொன்னார்..

பிரஞ்சு அரசு நடைபெறும் மாநிலத்தில் தாம் இருப்பதால் முதலில் அதன் அதிகாரிகளுக்கு இந்தியாவின் கொள்கைகளைத் தெரிவித்தார்

முதலில் சுதந்திர தேவியின் பிறப்பிடமாக பிரான்ஸைப் புகழ்ந்துவிட்டு இந்தியாவிலே பிரஞ்க் குடியேற்றம் ஒரு மாதிரிப் பூந்தோட்டம் என்றும் அதன் பிரதிநிதித்துவ ஆட்சி இந்திய தேசத்தருக்குத் தெரிவிக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட தர்மப் பாடசாலை என்றும் எழுதினார் இந்தக் குடியேற்றத்தில் ஏதேனும் சீர்திருத்தங்கள் அவசியம் என்று நாங்கள் கருதினால் நியாயமாக அதைப்பற்றிப் பேசுவோம் என்றும் உட்கட்சிப்பூசலில் தலையிட மாட்டோம் என்றும் எல்லாக் கட்சியாரும் கூடியவரை ஒத்து வாழவேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றும் எழுதினார்.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Mar 23, 2022, 11:53:12 AM3/23/22
to santhavasantham
188

அங்கதமாகக் கட்டுரைகள் எழுதுவதில் பாரதி வல்லவர். புதுச்சேரியிலிருந்து வெளிவரத் தொடங்கிய ‘இந்தியா’ இரண்டாவது இதழிலேயே ஒரு அங்கதக் கட்டுரை எழுதியிருக்கிறார். அந்த அங்கதத்தில் மாட்டிக் கொண்டவர்கள் பாரதியின் கவிதைகள் வெளிவர உதவிய ஜி ஏ நடேசனும் வக்கீல் கிருஷ்ணசாமி அய்யரும் ஆவர்.

 

சென்னையிலே காங்கிரஷ் கன்வென்ஷன் நடத்த வேண்டும் என்று கிருஷ்ணசாமி அய்யர் தீவிரமாக இருந்தார். புதிய கட்சியார் அதை எதிர்த்தார்கள். எந்த ஒரு நல்ல காரியம் செய்வதென்றாலும் முதலில் தெய்வங்களுக்குப் பிரீதியாக நாந்தி என்றொரு சடங்கு செய்வது வழக்கம். இதோ கன்வென்ஷனுக்கு முன் கிருஷ்ண சாமிஅய்யார் செய்யும் நாந்தி ஒரு நாடகமாக்கிக் காட்டப்படுகிறது. அதில் சில பகுதிகள்

 

‘ நாடகத்திலேசபையோர் இரைச்சலிடும் போது நாடகக் காரன் ஒருவன் வந்து “ஸத்து’ என்பான். அதாவது ‘எவரும் சத்தமிடக்கூடாது ‘ என்று அர்த்தம். அதுபோல நாமும் சொல்லுகிறோம். “ஸத்து”!”ஸத்து” ! மிஸ்டர் வி. கிருஷ்ணசாமி அய்யர் பேசுகிறார்

“கன்வென்ஷன் நாடகம்

 முதல் அங்கம்

களம் : கூடலூர்

சூத்திரதாரர்: வி. கிருஷ்ணசாமி அய்யர்

 

சூத்திரதாரர் உபந்யாசம்

 

நமது நாடகம் ஸாமானியமாகப் ‘பார்ஸ்’ என்று சொல்லப்படும் விகடக் கூத்தாகும்.

ஆனாலும் இதற்குத் தெய்வத்தின் அருளை வேண்டி நாந்தி கூறவேண்டியது அவசியமென்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இப்போது எந்தத் தெய்வத்தை ஆராதனை செய்வோம்?”

 

..  ------------------  சபையோர்களே , உங்களுக்கும் எனக்கும் கண்கண்ட தெய்வம் யார்? ஆங்கிலேய கவர்மெண்டார். அவர்களுக்குத் தான் நாந்தி சொல்லப் போகிறேன்

 

கோயில்களில் விக்கிரகங்கள் வைத்திருக்கிறீர்கள். அவைகள் கண்ணிருந்தும் பார்க்க மாட்டா. வாயிருந்தும் பேச மாட்டா. மூக்கிருந்தும் முகரமாட்டா. அவைகளைக் கும்பிடுவதில் என்ன உபயோகம்? ஆகையால் ஆங்கிலேய கவர்மெண்டாகிய தெய்வத்துக்கு   நாந்தி சொல்லப் போகிறேன். எல்லோரும் கவனத்தோடு கேளுங்கள்!

 

(நாந்தி ஆரம்பம்)

 

ஓ! ஸிம்லா மலையிலும், மவுண்ட் ரோட்டிலும் இருக்கும் ரக்ஷகர்களே, உங்களுக்கு வணக்கம் கூறுகிறேன். நீங்கள் இந்தத் தேசத்தையும் முக்கியமாக எங்கள் நாடகக் கம்பெனியாரயும் அதிலும் முக்கியமாக என்னையும் சூரிய சந்திரர் உள்ளமட்டும் வைத்து ரக்ஷணை செய்வீர்களாக!

உங்களுடைய நாமம் பரிசுத்தமடைவதாக! உங்களுடைய ராஜ்யம் நிலைத்திருப்பதாக! உங்களுடைய சித்தம் பெங்காளத்தில் நிறைவேறுவது போல இங்கும் நிறைவேறுவதாக! எங்களுடைய அன்றாட அப்பத்தை நீங்கள் தின்றுவிட்டுப் பொறுக்குகளை எங்களிடம் முக்கியமாக என்னிடம்- கொடுத்துவிடுங்கள். நாங்கள் செய்யும் அபவாதங்களையெல்லாம் பொறுத்துப்  புதிய கட்சியாரைத் தண்டனை செய்யுங்கள். எங்களைச் சுதேசிய வழியிலே செலுத்தாமல் வந்தேமாதரத்திலிருந்து காப்பாற்றுவீர்களாக!  ஏனென்றால் ராஜ்யமும் சக்தியும் புகழும் எக்காலத்திலும் உங்களுடையதே ஆகும்!  ஆமேன்!”----------------- இந்த நாந்திப் பிரசங்கத்தைக் கேட்டடுச்சபையோர் திகைத்துப்போய்த் தலைகவிழ்ந்துவிட்டார்கள். பக்கப்பாட்டு நடேசன், ஒத்துக்குழல் கோவிந்தன் முதலியவர்களெல்லாம் ‘சபாஷ்’ சபாஷ்’ என்றார்கள்”

 

 என்ன அருமையான அங்கதம்!

Subbaier Ramasami

unread,
Mar 23, 2022, 11:54:21 AM3/23/22
to santhavasantham
190

இக்காலத்தில் பத்திரிகை வளர்ச்சிக்கு நியாயமான உத்திகளாக எவையெல்லாம் செய்யப்படுகின்றனவோ அவை அனைத்துக்கும் பாரதி முன்னோடியாக இருந்திருக்கிறார்.

 

1 செய்தி எழுதி அனுப்புவோருக்குச் சன்மானம் அறிவித்தார்

 

2 விவாதத்திற்குரிய ஒரு தலைப்பைக் கொடுத்து அதைப்பற்றிச் சிறந்த கட்டுரை எழுதுவோருக்குப் பரிசு அறிவித்தார்

7-11-1908  ‘,இந்தியாவில் இப்படி ஒரு அறிவிப்பு வந்தது

 

  பரிசு வியாசம்

 

20 ரூபாய் ஸன்மானம்

நமது பத்திரிகையின் சந்தாதார்களில் இஷ்டமுள்ளவர்களெல்லாம்

இந்தியாவுக்கு மிகவும் அனுகூலமான அரசாட்சி முறைமை யாது?” என்ற வியாசம் எழுதியனுப்பவேண்டும்

 

அவ்வியாசங்களில் முதல் தரமானதிற்கு பரிசு ரூபாய் 20 கொடுக்கப்படும். ..நமது சந்தாதாரல்லாத ஒருவர் வியாசமெழுதியனுப்ப விரும்பினால் அவர் தமது வியாசத்துடன் ஒரு வருஷப் பத்திரிகைக்கு முன்பணமாக 3 ரூபாய் அனுப்பித் தம்மைச் சந்தாதாராக்கிக் கொள்ளலாம்.

 

ஒரு கல்லில் மூன்று மாங்காய்

 

1 பத்திரிகைக்கு விஷயம்

2 சந்தாதார்களை அதிகரித்தல்

3 இம்மாதிரியான தலைப்பில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்துக் கட்டுரைகள் வரும். போட்டியில் வெளியிடப்படும் கட்டுரை விஷயங்களுக்குக் கட்டுரையாளரே பொறுப்பு எனச் சொல்லி அக்கட்டுரைகளை வெளியிட முடியும்.

 

இன்னொரு சமயம் இந்தியன் மையில் சித்திரங்கள் எழுதி அனுப்பும் படியும் சன்மானம் கொடுக்கப்படும் என்றும் எழுதினார்.

 

நிருபர்களுக்கு இந்தியா பத்திரிகை எந்த மாதிரிச் செய்திகளை எதிர்பார்க்கிறது என்பதை விளக்கமாகத் தெரிவித்தார்

 

நிருபர்களுக்கு முக்கியமான அறிக்கை

 

நிருப விஷயங்கள்

 

1 சர்க்காரின் அக்கிரம அதிகார முறைகள்

2 ஜனங்களிடத்தில் பொதுவாயுள்ள தீய வழக்கங்கள்

4 கிருஷித் தொழில், கைத்தொழில், வர்த்தகம் முதலிய முயற்சிகளின் குறைவுகள், அபிவிருத்திகள், செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள், எவ்வெந்தப் பொருள்களில் மேற்படி முயற்சிகள் நடைபெற்றுவருகின்றனவென்ற விவரங்கள்.

4 ஜனாசரங்களில் உள்ள குற்றங்குறைகள்; அவற்றைச் சீர்திருத்த வழிகள்.

5 ராஜ்ய நிர்வாகத்திலும் , யுத்தத்திலும் சாஸ்த்திரங்களிலும் கலைகளிலும் அவ்விடங்களில் முற்காலத்தில் நம் முன்னோர்களால் செய்யப்பட்ட பிரதாபச் செயல்கள்

6 இடிந்த கோட்டை கொத்தளங்களின் சரித்திரங்கள், மங்கிப் போன ராஜகுலங்கள், யுத்தவீரர்களின் குலங்கள், வித்வாம்சகரின் குலங்கள் இவற்றின் முற்கால நிலைமைகள்

7 ஜனங்களுக்குள் வழங்கிவரும் பழமொழிகளின் தாத்பர்யங்கள், கர்ணபரம்பரையாய்ச் சொல்லப்பட்டு வரும் சரித்திரங்கள், கதைகள், பாட்டுகள்.

8 அப்போதைக்கப்போது நடந்துவரும் முக்கியமான சம்பவங்கள், கொலை, களவு, அதிகாரிகளின் கொடுமைகள்., திருவிழாக்கள், சந்தைகள், பெரிய உத்தியோகஸ்தர்களின் சுற்றுப் பிரயாணங்கள், அவர்கள் செய்யும் அமுல்கள். மடாதிபதிகளின் விஜயங்கள்., அவர்கள் செய்யும் நல்ல, தீய செய்கைகள்

9 பொது ஜன சுகாதாரங்கள், ஜலக்கஷ்டம், அசுத்தமான வழக்கங்கள், கொள்ளை நோய்கள்(வைசூரி, காய்ச்சல், வாந்தி பேதி, பிளேக், பஞ்சம் இவற்றின் நடமாட்டங்கள்)

10 தமிழ்ப்பாஷையல்லாத வேறு பாஷைகளில் எழுதப்பட்டுள்ள கிரந்தங்கள், பத்திரங்கள், பத்திரிகைகள் சிலாசாசனங்கள் ஆகிய இவற்றின் மொழிபெயர்ப்புகள், அச்சிட்டல்லாத அதாவது ஏட்டுப்பிரதிகளாயுள்ள கிரந்தங்களின் முக்கிய பாகங்களை அப்படியே எழுதி அனுப்புதல்.

11 நவீன நிலைமைகளுக் கேற்றபடி இயற்றிய நாடகங்கள், கவிகள்,விநோதக் கதைகள்(novels)

 

 

மேற்கண்ட விஷயங்களின் சார்பாக யார் யார் எங்கேயிருந்து நிருபங்களையனுப்புகிறார்களோ அவரவர்களுக்குத் தக்கபடி கைம்மாறு அளிப்போம். எங்கள் பத்திரிகையின் வாயிலாய் வெளிப்படுத்தின விஷயங்களுக்கே பொருள் உதவப்படும்

 

குறிப்பு: அனாவசியமாகவும், அகாரணமாகவும் முன்பின் ஜனங்களறிவதற்கில்லாமல் மூலையில் வசிக்கும் மனிதர்களைப் பர்றி நிந்தித்தோ புகழ்ந்தோ ஒன்றும் எழுதக்கூடாது

 

பொதுஜன நன்மையே முழு நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டுவரும் நமது பத்திரிகைக்கு அனுப்பப்படும் நிருபங்கள் இதரவிதமான பத்திரிகைகளுக்கு அனுப்புகிற மாதிரியாய் இருக்கக்கூடாது.

நிருபம் எழுதுவோர்  ஒவ்வொரு விஷயத்தையும் சிரமப்பட்டு ஆராய்ந்தறிந்து எழுத வேண்டும். அது பொது நன்மைக் கேற்றதாயும், சாதாரண ஜனங்களின் அறிவை விருத்தி செய்யத் தக்கதாயும் இருக்க வேண்டும்.(இந்தியா 14-11-1908 பக்கம் 2)

Subbaier Ramasami

unread,
Mar 23, 2022, 11:56:43 AM3/23/22
to santhavasantham
191

‘இந்தியா’ பத்திரிகை யாருக்குச் சொந்தம். பாரதி சொல்கிறார்:

“ இப்பத்திரிகை தமிழ் நாட்டுப் பொது ஜனங்களுக்குச் சொந்தமானது. யாரேனும் ஒரு தனிமனிதனுடைய உடைமையன்று. இதைத் தமிழர்களில் ஒவ்வொருவரும் தத்தம் சொந்த உடைமையாகக் கருதி , இதைக் கூடிய விதங்களிலெல்லாம் விருத்தி செய்து ஆதரிக்கக் கடமைப் பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய பொருள் , அவர்கள் நன்மையின் பொருட்டுச் செலவிடப்படுகிறது. நமக்கு இது விஷயத்தில் ஊழியத்திற்குள்ள உரிமையே அன்றி உடமைக்குள்ள உரிமை கிடையாது”

 

இந்தச் சமயத்தில் ‘இந்தியா’ பத்திரிகை அதிபர் சீனிவாசன் மீது வழக்கு நடைபெற்றுவந்தது. அந்த வழக்கின் விவரங்களைப் பாரதியார் உன்னிப்பாகக் கவனித்து தன் பத்திரிகையில் வெளியிட்டுவந்தார்.

குற்றஞ்சாட்டப்பட்ட  சீனிவாச அய்யங்கார் கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்தார்.

“நான் ஏழை. எனக்குச் சர்க்காருக்கு விரோதமாக ஏழுத எண்ணமே கிடையாது. எனக்கு ஒரு பத்திரிகை வைத்து நடத்துவதற்கான பணமும் சாமர்த்தியமும் கிடையாது.---இந்தப் பத்திரிகைக்கு எப்பொழுதும் ஸி.சுப்ரமணிய பாரதிதான் பத்திராசிரியராக இருந்தார். நானாவது திருமலாச்சாரியாராவதுதான்  அச்சிட்டு வெளிப்படுத்திவந்தோம். -------1907ம் வருஷம் நவம்பர் மாதம் எம்.பி. திருமலாச்சாரியார் பம்பாய்க்குச் செல்ல எண்ணம் கொண்டிருப்பதாகவும் ஆகையால் பத்திரிகையை என்னிடத்திலேயே ஒப்புவித்துப்போவதாகவும் ஸி.சுப்ரமணிய பாரதி பத்திரிகாசிரியராக இருப்பாரென்றும் என்னிடம் சொன்னார். பம்பாயிலிருந்து எம்.பி. திருமலாச்சாரி நான் பத்திரிகைச் சட்டத்தின் படி போலீஸ் கமிஷனரிடம் “டிக்லரேஷன்’ எழுதிக் கையெழுத்து ச் செய்யவேண்டுமென்று எழுதினார்.. நானும் எழுதிவைத்தேன்.-----நான் பேப்பர் நடத்துவதற்காகப் பணம் கடன் வாங்கி இருப்பதையும் பத்திரிகை நடத்துவதில் உள்ள மற்றக் கஷ்டங்களையும் எடுத்துச் சொல்லிப் பேப்பரை என்னுடைய மானேஜ்மெண்டைவிட்டு நீக்கிவிட வேண்டுமென்று எஸ்.என். திருமலாச்சாரியைக் கேட்டுக் கொண்டேன்

நான் பேப்பர் நடத்துவதற்காக வாங்கின கடனைக் கொடுத்து என்னைக் கடன் ஹிம்ஸையையை விட்டு நீக்க வேண்டுமென்று எஸ் என். திருமலாச்சார்யைக் கேட்டுக் கொண்டேன். எம். பி. திருமலாச்சாரி தான் பிந்தித் தருவதாகச் சொன்னார். நான் கொடுத்த டிக்லரேஷனைத் தள்ளிவிடும்படியாகக் கேட்டு அதைத் தள்ளுபடி பண்ணிக்கொண்டேன். பிறகு அவர் பணம் கொடுத்துக் கடனைத் தீர்த்தாலும் தீர்க்காவிட்டாலும் பத்திரிகையை எம்.பி. திருமலாச்சாரி பேருக்கு மாற்றிவைக்கச் சம்மதித்தேன்.”

பத்திரிகை ஆசிரியராகவும் முதலாளியாகவும் இருக்கும் ஆசை சீனிவாசய்யங்காருக்கு ஆரம்பத்தில் இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. அதற்காக அவர் பணம் கடன் வாங்கிக் கொடுத்திருக்கலாம்.

 

சீனிவாசய்யங்காருக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது. 

 

பாரதி இந்த வழக்கில் சீனிவாசன் கொடுத்த வாக்குமூலத்தைப் பற்றி எழுதினார்:

 

“எந்த ராஜனுக்கும் துரோகம் செய்ய வேண்டுமென்பது நம்முடைய நோக்கமல்ல. --நமது ஒரே தீர்மானமான முடிவான நோக்கம் ‘சுதேச சேவகம்’. --‘-கொக்குக்கு ஒன்றே மதி’ பிறர் என்ன சொன்னாலும் சரி, என்ன செய்தாலும் சரி. அதைக் கவனியோம். நம்முடைய தேசபக்தியை அவர்கள் ராஜத்துரோகம்(இ.பி.கோ 124A செக்க்ஷன்) என்று சொல்கிறார்கள். நம்முடைய சுதேசாபிமானத்தை அவர்கள் “அன்னியரைப் பகைத்தல்’(153 செக்க்ஷன்) என்கிறார்கள். நாம் அதற்குச் செய்வதென்ன? நாம் எது செய்யினும் தேசத் துரோகம் செய்யோம். தேசத் துரோகிக்கு என்றும் மீளாத நரகமே பிராப்தம்.

 

ராஜத்துரோகக் கேசிலகப்பட்டுக் கொள்ளும் ஒவ்வொரு பத்திரிகாசிரியரும் சொல்ல வேண்டியதும் அதுவே. அப்படியே பிரம்மஸ்ரீ திலகர் சொன்னார். அப்படியே பூபேந்திரநாதர் சொன்னார். அப்படியே பிரம்மபாந்தவ உபாத்யாயர் சொன்னார்.மற்றவிதமான வாக்குமூலம் இந்தியன் என்ற அந்தஸ்துக்குத் தகாது”( (இந்தியா 21-10-1908)

 

Subbaier Ramasami

unread,
Mar 24, 2022, 9:41:54 AM3/24/22
to santhavasantham
192

தமிழ்நாட்டில் இயங்கிவந்த இந்தியாவில் பத்திராதிபர்கள் அடிக்கடி மாற்றப்பட்டிருக்கிறார்கள். சீனிவாசன் ஆசிரியப் பொறுப்பைக் கேட்டுப் பெற்றாரா என்பது தெரியவில்லை. பாரதியின் எழுத்தைப் பார்த்தால் அப்படியும் இருந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 

பாரதி பல சமயங்களில் பல கட்டுரைகளை மொழியாக்கம் செய்து பதிப்பிப்பது உண்டு. பாரதியின் மொழியாக்கத்தைப் படிக்கிற போது தமிழிலேயே எழுதப்பட்டதைப் போலிருக்கும்.  மொழியாக்கம் செய்வதில் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும் என்பதைப் பற்றிப் பின்னாளில் மிகச் சுவையான கட்டுரை ஒன்று எழுதினார்.

 

“எனக்கு முக்கியமான நாலைந்து தமிழ்ப்பத்திரிகைகள் வருகின்றன. அதில் ஒன்று வாரப்பத்திரிகை.

அது பழுத்த சுதேசியக் கட்சியைச் சேர்ந்தது  ஆனால் தக்க பயிற்சியில்லாதவர்களால் நடத்தப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு அந்தப் பத்திரிகையில் யுத்த சம்பந்தமான தலையங்கம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதில் ருஷ்யாவில் ‘போல்ஷெவிக்’ என்ற ஒரு மனுஷன் இருப்பதாகவும் அவன் ஒரு கக்ஷி ஏற்படுத்தி தம் தேசக் கக்ஷிக்கு விரோதம் செய்வதாகவும் சொல்லியிருந்தது. அஃது அந்நாட்டில் ராஜ்யப் புரட்சிக் கூட்டங்களில் ஒன்றாகிய ‘மாக்ஸ்விஸ்த்’ கட்சிக்கு மற்றொரு பெயரென்றும் ஒரு மனுஷ்யனுடைய பெயரல்லவென்றும் அந்தப் பத்திராதிபர் தெரிந்து கொள்ளவில்லை”

 

மேலும் தமிழ்நாட்டிலே மொழிபெயர்ப்பின் அவல நிலையைப் பற்றி எழுதினார்

“..  ..  ..  தமிழ்நாட்டிலோ முழுதும் தமிழ் நடையைவிட்டு இங்கிலீஷ் நடையில் தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நமது பத்திராதிபர்களிடம் காணப்படுகிறது. முதலாவது, நீ, எழுதப்படுகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக்காட்டு. அவனுக்கு நன்றாக அர்த்தம் விளங்குகிறதா என்று பார்த்துக் கொண்டு பிறகு எழுது. அப்போதுதான் நீ எழுதுகிற எழுத்து தமிழ்நாட்டிற்குப் பயன்படும். உனக்கு இகபர க்ஷேமங்களுக்கு இடமுண்டாகும். இல்லாது போனால் நீயும் சிரமப்பட்டு மற்றவர்களுக்கும் பயனில்லாமல் போகிறது.  சில சமயங்களில் சில பத்திரிகைகளை வாசித்துவிட்டு நான்  “ ஐயோ , இவ்வளவு காயிதத்தில் எத்தனையோ ஆச்சர்யங்களும் எத்தனையோ சந்தோஷங்களும் எழுதலாமே “ என்று எண்ணி வருத்தப்படுவதுண்டு.”.

இந்தியா பத்திரிகையில் பாரதியோடு பணியாற்றிய என். நாகசாமி பாரதியாரின் மொழிபெயர்ப்புத் திறனைப் பற்றி கூறியிருப்பது

“ஆங்கிலத்தில் இருக்கும் கட்டுரையைத் தமிழ்ப்படுத்த முற்படும் பொழுது முதலில் கட்டுரையைப் படித்துவிடுவார் பாரதியார்.  பிறகு அந்த ஆங்கிலப் பிரதியை அப்பால் வைத்துவிடுவார்.  கிராமபோன் ரிக்கார்டு போல இக்கட்டுரை அவர் மனத்தில் பதிந்துவிடும் . உடனே தமிழ் மொழியில் அதைத் திருப்பி எழுதிவிடுவார்.

சிறிதும் விட்டுப்போகாது. எல்லாம் அப்படியே இருக்கும். எளிதில் யாவரும் அறிந்துகொள்ளக் கூடியதாகவும் ஜீவனோடும் இனிமையாகவும் இருக்கும். பிறமொழியிலிருந்து தமிழ்ப்படுத்தினது என்று சொல்லவே இயலாது . பாரதியாருக்கு மொழிபெயர்க்க எந்த அகராதியும் தேவையில்லை. அதேபோல் அவர் நூல்களைப் படிப்போருக்கும் எந்த அகராதியும் தேவைப்படாது. எளிய தமிழில் இனிய கவிதை பாடியவர் அவர்.”   (மகாகவி பாரதியாரின் மொழிபெயர்ப்புக்கொடை- இரா. சுப்பராயலு- 26)

Subbaier Ramasami

unread,
Mar 25, 2022, 10:23:16 AM3/25/22
to santhavasantham
193

நின்றுபோன இந்தியா மீண்டும் தலைதூக்கியதில் அதன் சந்தாதார்களுக்கும் பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி. சந்தாதார்களின் எண்ணிக்கை கூடியது..புதுச்சேரி சிறிய மாநிலம் என்பதால் அங்கே சந்தாதார் அதிகமில்லை. இந்தியாவிற்குப் பத்திரிகையை அனுப்பியே ஆகவேண்டிய நிலை..

 

பாரதி பாண்டிச்சேரிக்கு வந்த புதிதில்  நிதானக் கட்சியார் அரசை மகிழ்விப்பதற்காகவும் தமது இராஜ விஸ்வாசத்தை நிலைநாட்டுவதற்காகவும் ஒரு காரியம் செய்தார்கள். 1858ம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனியாரிடமிருந்து நிர்வாகத்தைத் தாமே ஏற்ற நிலையில் இந்தியருக்கு என்னென்ன நன்மைகள் செய்யப்போகிறோம் என்று ஒரு சாசனம் வெளியிட்டார் விக்டோரியா மஹாராணி.  வெறும் தாளில் உட்கார்ந்து கொண்ட அந்த சாசனத்தை எழுந்து நிற்க முடியாத படி அவ்வரசியின் அதிகாரிகள் செய்துவிட்டனர். குறிப்பாக கர்ஸான் அதை மதிக்கவே இல்லை. அந்த நிலையில் 1908ம் ஆண்டு அந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தியாவதை(ஆங்கிலேயர்களே மறந்துவிட்ட நிலையில்) நிதானக்கட்சித் தலைவர்கள் “ஜூபிளி’ கொண்டாட்டம் என்ற பெயரில் நாடு முழுக்கச் சிறப்பாகக் கொண்டாட முடிவெடுத்தனர். சென்னையில் அரிசி என்று சொல்லுமுன்னே சோறாக்கிக் கொடுக்கிற சென்னை மிதவாதிகள் தேசத்தில் வேறெங்கும் கொண்டாடப்படாத அளவு சென்னையில் அதைக் கொண்டாட விழைந்தனர். ஏற்பாடுகள் பெரிய அளவில் செய்யப் பட்டன.காங்கிரஸ் கூட அந்தக் கொண்டாடத்தை ஆதரிக்கத் தயங்கியது.  பாண்டிச்சேரியில் ‘இந்தியா’ தொடங்கி ஒருவாரம் தான் ஆகியிருந்தது.  ஆரம்பத்திலேயே பாரதியின் எழுத்துக்குத் தீனி கிடைத்துவிட்டது. விடுவாரா?  

 

 “ மஹாராணியின் சாசனத்தின் ஒரு சிறு பகுதி கூட இந்தியர்களுக்குச் சாதகமாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் போது இராஜ பக்தியினாலோ இராஜபயத்தினாலோ மஹாராணியின் சாசனத்திற்குப் பூசை செய்யப்போகிறார்கள்” என்று கிண்டலடித்தார் பாரதி.   மஹாராணி விளம்பரத்தைப் பூஜை செய்யப்போகிற அவர்கள் அதைக் கவர்மெண்டார் அனுசரித்து நடக்கவில்லையென்ற உண்மையையேனும் வெளிப்படையாகச் சொல்வார்கள் என்று தாம் நம்பியதாகவும்,.வைஸ்ராய் லார்ட் கர்ஸான் அவ்விளம்பரத்தைப் பகிரங்கமாக இகழ்ச்சிக்குக் கொண்டு வந்ததை அதற்குள் மறந்திருக்க மாட்டார்கள் என்று எண்ணுவதாகவும் எழுதினார். அவர்களுக்குத் தெளிவாக விளங்கும் படியாக அன்னிய ராஜ்யம் என்பதே இயற்கைக்கு மாறுபட்டதென்றும் அநீதியானதென்றும், ஸ்வராஜ்யமே தெய்வச் சித்தத்திற்கும் மனித இயற்கைக்கும் இணங்கியதாகுமென்றும் அதை அடைய முயல்பவர்களே உத்தமர்கள், மற்றையோர் மக்கட் பதடி என்றும் எழுதினார். காகிதக் கப்பல் ஓடாது, கடிதம் எழுதித்தீராது என்பதை அழுத்தமாக எடுத்துரைத்தார்.

சென்னையில் நவம்பர் இரண்டாம் தேதியன்று  வாணவேடிக்கைகளுக்கும், சிலம்பாட்டம் , குஸ்தி போன்ற வீர விளையாட்டுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களுடைய அந்த ஏற்பாடு ஆண்டவனுக்கே பொறுக்கவில்லை போலும். . அடாத மழைபெய்து விழா நடைபெறாமல் தடை செய்துவிட்டது . அடுத்தவர் வேண்டாதன செய்தபோதும் அவர் இன்னல் படுவதை விரும்பாத பாரதி, இதனாலே இது நடந்தது என்று சொல்லி அடுத்தவரின் இன்னலில் மகிழ்வதை விரும்பாத பாரதி எந்த அளவுக்கு மன வேதனைப் பட்டிருந்தால்

“ மனிதர்கள் செய்ய முயன்ற கபட காரியங்களில் தெய்வத்துக்கு மனம் இணங்கவில்லை போலும்"என்று எழுதியிருப்பார்!


On Thu, Mar 24, 2022 at 8:41 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
192

தமிழ்நாட்டில் இயங்கிவந்த இந்தியாவில் பத்திராதிபர்கள் அடிக்கடி மாற்றப்பட்டிருக்கிறார்கள். சீனிவாசன் ஆசிரியப் பொறுப்பைக் கேட்டுப் பெற்றாரா என்பது தெரியவில்லை. பாரதியின் எழுத்தைப் பார்த்தால் அப்படியும் இருந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 

டைய உடைமையன்று. இதைத் தமிழர்களில் ஒவ்வொருவரும் தத்தம் 

Siva Siva

unread,
Mar 25, 2022, 10:51:35 AM3/25/22
to santhavasantham
சந்தாதார்? சந்தாதாரர்?


Subbaier Ramasami

unread,
Mar 26, 2022, 9:33:35 AM3/26/22
to santhavasantham

194

பாண்டிச்சேரியிலிருந்து இந்தியா வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில் வ.வே சு ஐயர் இலண்டனில் பாரிஸ்டருக்குப் படித்துக்கொண்டிருந்தார். அங்கே இந்திய சுதந்திரக்கழகம் என்னும் அமைப்பு இயங்கிவந்தது . அதன் முக்கியப் பொறுப்பில் ஐயர் இருந்தார். அந்த அமைப்பின் கொள்கையின் படி  எழுதத் தெரிந்தவர்கள் இந்தியாவிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் சுதந்திரப்போராட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் எழுதவேண்டும்.  வ.வே. சு ஐயர் எழுதி அனுப்பிய கடிதங்கள் லண்டன் நிருபர் கடிதங்கள் எனும் தலைப்பில் வெளியாயின.

“ஐயருடைய எல்லாக் கடிதங்களின் முகப்பிலும் “ஸ்வதந்திர லக்ஷ்மிப் பிரஸன்னம்” என்று எழுதப்பட்டிருக்கும். இந்தியா பத்திரிகை தற்காலிகமாக நின்று போய் மீண்டும் பாண்டிச்சேரியில் உதய மானதைப் பற்றி வ.வே. சு ஐயர் மிகவும் நெகிழ்ந்து எழுதினார்

“”சீதாப்பிராட்டியின் மாயா உருவம் சிதைக்கப்படுவதைப் பார்த்த சிறிய திருவடி

“முடிந்தது நந்தம் எண்ண மூவுலகிற்கும் கங்குல்

விடிந்ததென்றிருந்தேன். மீள வெந்துயிர் இருளின் வெள்ளம்

படிந்தது வினையின் செய்கை, பரந்தது பாவி வாளால்

தடிந்தன திருவை, , அந்தோ தவிர்ந்தது தருமம் அம்மா!”

என்று புலம்பினது போல என்னுடைய மனத்திலே மிகுந்த துன்பம் உண்டாகி விட்டது.

இந்தியா நின்று போகவே இதர பத்திரிகைகள் புகட்டிவருகிற கிலேப்பியமும் பாராதீனதையில் திருப்தியும் , சுயாதீனம் என்கின்ற வார்த்தையைக் கூடப் பிரயோகிப்பதில் பயமுமாகிற விஷயம் நம்முடைய தென்னாட்டவருடைய இதயத்தில் புகுந்து அவர்களைப் பேடிமைக்குக் கொண்டுவந்துவிடுமேயென்று பயமடைந்திருந்தேன். “ என்று ஐயர் எழுதினார்.

 

இத்தாலிய வீரர் கரிபால்டியின் வாழ்க்கை வரலாற்றை எழுதி ஐயர் பாரதியாருக்கு அனுப்பிவைத்தார். அதைப் படித்த பாரதி மிகவும் பாராட்டினார். அக்கட்டுரைகளை இந்தியாவில் வெளியிடுமுன் பாரதி அதற்கு ஒரு முன்னுரையாக

,’”இதிகாசம் (சரித்திரம்) எழுதும் தொழில் நம்மவர்களுக்குள்ளே மிக துர்லபமாகிவிட்டது. உலக சரித்திரம் அறியாமையால் நம்மவர்கள் விழிகள் குருடர்களாய் , லௌகீக விஷயங்கள் ஒன்றுக்குரிய தகுதியில்லாமல் போய்விட்டார்கள். இந்த நிலைமையில் யாரேனும் ஒரு பண்டிதர் கல்வித் திறனும் , அறிவு விலாசமும் ஹிருதயத் தூய்மையும் பெரிதுடையராய் ஒரு சரித்திர நூல் எழுத முற்படும் போது, நமக்குச் சொல்லுதற்கரிய குதூகலமுண்டாகிறது, இப்பெருந்தொழில் செய்யப் பாரத்வாஜ குலோத்பவராகிய ஸ்ரீசுப்ரமணிய அய்யர்(இவர் இப்போது லண்டனில் பாரிஸ்டர் பரீக்ஷைக்குப் படித்து வருகின்றார் ) என்ற வித்வான் தலைப்பட்டு, நமது பத்திரிகைக்குக் கரிபால்டியின் சரித்திரம் என்னும் இனிய நூலினை எழுதியனுப்பியிருக்கிறார். இவர் ஆரம்பத்திலேயே பக்குவ நிலை                          காண்பிக்கிறாரென்பது அதைப் படிப்பவர்களுக்கு விளங்கும்” என்று எழுதினார். பாரதியினுடைய கணிப்பு எப்பொழுதும் வீண்போவதில்லை. ஆரம்பத்திலேயே பக்குவநிலை காண்பிக்கிறார் என்று அவரால் கணிக்கப்பட்ட வ.வே.சு ஐயர் பின்னாளில் மிகச்சிறந்த இலக்கியவாதியாகத் திகழ்ந்தார்.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

rathnam

unread,
Mar 26, 2022, 9:40:40 AM3/26/22
to santhav...@googlegroups.com
மிகவும் உபயோகமான பதிவு (தொடர்).  

Subbaier Ramasami

unread,
Mar 27, 2022, 9:29:36 AM3/27/22
to santhavasantham
195

கரிபால்டியின் சரித்திரம் 1909 ஜூலை3ந்தேதிவரை ஆறு அத்தியாயங்களாக‘ இந்தியாவில்’வெளிவந்துள்ளது

 

இலண்டனில் இருந்து ஐயரின் கடிதங்கள் அடிக்கடி வெளியாயின.  அய்யருடைய கடிதங்களில் சில சற்றுக் காட்டமாக இருந்தாலும் பாரதியார் அவற்றை வெளியிட்டார். தாம் ஒத்துக்கொள்ள இயலாத கருத்துகள் அவற்றில் இருந்தால் உடனே வெளிப்படையாக அவற்றை மறுத்திருக்கிறார்.  இந்தியாவில்

 வெளிவந்த செய்திகள் மக்களுக்கு முன்னெச்சரிக்கையாக அமைந்ததும் உண்டு

 

தமிழ்நாடு ஒருகாலத்திலே பாரதத்திலேயே வீரமிக்க மாநிலமாக இருந்திருக்கிறது. ஆனால் சுதந்திரப்போராட்ட காலத்தின் தமிழ்நாட்டை வங்காளிகளும் மற்றவர்களும் பினைட்டட் பிரஸிடென்ஸி(நித்திய தாமஸ ராஜதானி) என்று அழைத்தார்கள். அந்த நிலையை நீக்கிய வ.உ.சியும் சிவாவும் சிறை சென்றுவிட்டார்கள். பாரதியும் மண்டையம் சீனிவாசாச்சாரியாரும் புதுச்சேரிக்கு வந்துவிட்டார்கள். சுதேச மித்திரன் ஜி. சுப்ரமணிய அய்யரையும் கைது செய்துவிட்டார்கள். இந்துப் பத்திரிகை கஸ்தூரிரங்க அய்யங்காரைக் கைது செய்யப்போவதாகப் பேச்சு அடிபட்டது. அதனாலே தான்

 

“‘இந்தியா’ பத்திரிகையிலே சற்றே காட்டமாக தமிழ்நாட்டிலே ஒரு தலைவன் உண்டா, தலைவனாக இருப்பதற்கு வேண்டிய தகுதியுடையவன் யாராவது இருக்கிறானா, மக்களைச் சுதந்திர மார்க்கத்தில் நடத்திச் செல்ல ஒரு தலைவன் பிறக்கவில்லையா, பயத்தை விட்டுவிட்டு பாரதக்கண்டத்தின் சுதந்திர தினத்தை நெருங்கச் செய்ய இடைவிடாமல் உழைப்போமாக”  என்று  ஐயர் எழுதியது 1909 ஆகஸ்டு 21ம் தேதி வெளிவந்தது. ஐயர் எழுதிய கருத்து பாரதிக்கும் உடன்பாடே.

 

 

1909ம் ஆண்டு ஜூலை மாதம் 1ந்தேதி இலண்டனில் இம்பீரியல் இன்ஸ்டிடூட் என்னுமிடத்தில் ஸர். கர்ஸான் வைலியை திங்க்ரா என்ற பஞ்சாபி இளைஞன் சுட்டுக்கொன்றான். அவரைக் காப்பாற்ற வந்த காவல்ஜி லால்லா எனும் பார்ஸி இனத்தவரும் அவனுடைய குண்டுக்குப் பலியானார்.  இந்தியாவில் கர்ஸான் செய்த பல கொடுமைகளுக்கு வைலி காரணமாக இருந்திருக்கிறார். அவரே தனிப்பட்ட முறையிலும் பல கொடுமைகள் செய்திருக்கிறார்.  திங்க்ரா தூக்கிலிடப்பட்ட செய்தியை விவரமாக வ.வே.சு அய்யர் ‘இந்தியா’வில் எழுதினார். வெடிகுண்டு கலாச்சாரத்தில் கொஞ்சமும் ஈடுபாடு இல்லாத பாரதி

“தேசத்தில் நடக்கும் அநியாயத்தில் சிலர் மனம்  வெறுப்புண்டு பைத்தியக்காரன்களைப் போல் செய்யும் செயல்களுக்கு முக்கிய காரணம் அநீதிதானே.” என்று எழுதினார்..

திங்க்ராவின் செயல் பைத்தியக்காரனின் செயல் என்று எழுதிய பாரதி அதேசமயம் அதன் மூக்கியகாரணம் அரசு செய்யும் அநீதிதானே என்று அரசையும் குற்றம் சாட்டினார்..   பாரதி திங்ராவைப் பைத்தியக்காரன் என்று எழுதியது அய்யருக்குப் பிடிக்கவில்லை. காரண காரியங்களோடு மிகவும் உக்கிரமாகவே மறுப்புக் கடிதம் எழுதினார் ஐயர்.   மிக நீண்ட அந்தக் கடிதத்தின் முடிவில்

“நியாயாதிபதி மரணதண்டனையை உச்சரித்ததும் ‘வந்தனம் அய்யா, என்னுடைய தேசத்திற்காக என்னுடைய அற்பமான பிராணனைக் கொடுக்கிறேன் என்கிற எண்ணம் கூட எனக்கு உண்டாகிறது’ என்றான். இவ்விதம் பேசுகிறவனும், இந்தப்பேச்சுக்கு உகந்தபடி ஜெயிலிலும் இயற்கையான கௌரவத்துடன்  நடந்துகொள்கிறவனும் பைத்தியமா?” என்று எழுதினார் ஐயர். அதையும்  நியாய உணர்வோடு வெளியிடும் நேர்மை பாரதியிடம் இருந்தது.


On Sat, Mar 26, 2022 at 8:40 AM rathnam <irathin...@gmail.com> wrote:
மிகவும் உபயோகமான பதிவு (தொடர்).  
On Sat, 26 Mar 2022 at 7:03 PM, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

194

பாண்டிச்சேரியிலிருந்து இந்தியா வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில் வ.வே சு ஐயர் இலண்டனில் பாரிஸ்டருக்குப் படித்துக்கொண்டிருந்தார். அங்கே இந்திய சுதந்திரக்கழகம் என்னும் அமைப்பு இயங்கிவந்தது . அதன் முக்கியப் பொறுப்பில் ஐயர் இருந்தார். அந்த அமைப்பின் கொள்கையின் படி  எழுதத் தெரிந்தவர்கள் இந்தியாவிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் சுதந்திரப்போராட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் எழுதவேண்டும்.  வ.வே. சு ஐயர் எழுதி அனுப்பிய கடிதங்கள் லண்டன் நிருபர் கடிதங்கள் எனும் தலைப்பில் வெளியாயின.

“ஐயருடைய எல்லாக் கடிதங்களின் முகப்பிலும் “ஸ்வதந்திர லக்ஷ்மிப் பிரஸன்னம்” என்று எழுதப்பட்டிருக்கும். இந்தியா பத்திரிகை தற்காலிகமாக நின்று போய் மீண்டும் பாண்டிச்சேரியில் உதய மானதைப் பற்றி வ.வே. சு ஐயர் மிகவும் நெகிழ்ந்து எழுதினார்

Subbaier Ramasami

unread,
Mar 28, 2022, 12:49:49 PM3/28/22
to santhavasantham

196


விபின சந்திர பாலர் இலண்டனுக்குப் போனதை பாரதி நியாயப்படுத்திக் கட்டுரை எழுதியிருந்ததை முன்பு பார்த்தோம். அவர் அங்கே இந்தியா ஹவுஸில் 1908 டிசம்பர் மாதம் 18,19,21 தேதிகளில் இந்திய தேசியம் என்னும் தலைப்பில் பேசினார். பேச்சுக்கு ஏற்பாடு செய்திருந்தவர் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா. அவர்  தனிமனித பயங்கரவாதத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். ஆனால் விபின சந்த்ர பால் அதை எதிர்ப்பவர். அவர் பேசியபோது வன்முறை வாதத்தை எதிர்த்துப்பேசியதால் கிருஷ்ண வர்மா அவர் பேச்சுக்குத் தான் அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டார். திங்க்ராவைத் தூக்கில் போட்ட பின்னர் நடந்த கூட்டத்தில் விபன சந்த்ரபால் திங்க்ராவின் செயலை மிகவும் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.  எனவே இலண்டனிலிருந்த தீவிரவாதிகளின் வெறுப்புக்கு ஆளானார்.

மற்ற மிதவாதத் தலைவர்கள் இந்தியா மந்திரி மிண்டோ பிரபு அறிவிப்பதாகச் சொல்லிக் காலம் கடத்திக் கொண்டிருக்கும் தீர்மானங்கள் என்று வெளிவரும் என்று ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் இலண்டனில் ஆங்கில அரசின் தயவை வேண்டுவதிலே காலத்தைச் செலவழித்துக்கொண்டிருந்த  சுரேந்திரநாத் பானர்ஜி போன்ற தலைவர்கள் ஆங்கில அரசின்  மக்கள் விரோதக் கொள்கைகளைத் தாக்குவதற்குப் பதிலாக இலண்டனில் இருந்துகொண்டு தீவிரவாதப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த வீர் சாவர்க்கர், வ.வே  சு ஐயர் மேடம் காமா, ஷியாமாஜி கிருஷ்ணவர்மா ஆகியோர்களின் செயல்களைத் தாக்கிக் கூட்டங்கள் போடுவதிலே காலம் கழித்தனர்.  எந்த விபின சந்த்ர பாலரின் விடுதலைக்காக மகிழ்ந்து  வ.உ.சி போன்றோர்  ஊர்வலங்கள் நடத்திக் கைதாகி சிறைதண்டனை அனுபவித்துக்கொண்டிருந்தார்களோ அவரால் இலண்டன் மாநகரில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

 

Subbaier Ramasami

unread,
Mar 29, 2022, 8:22:41 PM3/29/22
to santhavasantham

பாரதி சென்னையை விட்டு வேறு தேசத்தைச் சேர்ந்த புதுச்சேரிக்கு வந்தாலும் தன்னுடைய ஆவேசத்தை இழந்து விடவில்லை.  அரசின் கொள்கைகளைக் கண்டித்து எழுதினால் இந்தியா பத்திரிகை இந்தியாவிற்குள் நுழையாமல் தடுக்கப்பட்டுவிடலாம். ஆகக் கடுமையாக எழுதாவிட்டாலும் கூட ஏற்கனவே அவருடைய எழுத்தைப்பற்றி அறிந்த இந்திய அரசு சும்மா இருக்கப்போவதில்லை. எனவே பாரதி தனக்கு மனத்துக்குச் சரியென்று பட்டதை மிகவும் தைர்யத்தோடு எழுதினார். மார்லிப் பிரபு சீர்திருத்தத்தை அறிவிக்க இதோ அதோ என்று இழுத்துக்கொண்டு ஏதேதோ சாக்குச் சொல்லிகொண்டிருந்தார். 1908 டிசம்பர் மாதம் 14ந் தேதி அறிவிக்கப்போவதாகச் செய்திவந்தது. மிதவாதத் தலைவர்களை நோக்கிப் பாரதி சொன்னார்:

“ லார்ட் மார்லி மூட்டையை அவிழ்க்கப் போகிறார்.ஐயோ என்ன பரிதாபம். நிதானச் சகோதரர்களே, மார்லி-மிண்டோ என்ற இந்த இரண்டு கிழக்கொக்குகளும் மாறி மாறி இந்தியச் சீர்திருத்தங்களைப் பற்றி இதுநாள் வரை தஸ்தா கணக்காக எழுதின ஆட்சேபணை- சமாதானக் கடுதாசி மூட்டையை ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் வருகிற டிசம்பர் மாதம் 14ந்தேதி அவிழ்க்கப்போகிறாராம் உங்கள் லார்ட் மார்லி” என்று அதற்கு முந்தின வார “இந்தியா’ வில் எழுதினார். ஆனால் 14ந்தேதியன்று மார்லிக்குச் ஜலதோஷம் பிடித்துக்கொண்டதாகச் சொல்லி அறிவிப்பை இன்னும் ஒரு வாரம் தள்ளிப்போட்டார்கள்.

 

சீர்திருத்தங்களில் அப்படி ஒன்றும் பெரிதான சலுகைகள் ஏதும் அறிவித்துவிடப்போவதில்லை என்று பாரதி கருதினார். அதை அறிவிப்பதற்கு அத்தனை ஆர்ப்பாட்டமா? கழுதைக்கு முன்னே கேரட்டைக் காட்டி இழுத்துக்கொண்டு போய் அது கடைசியில் பார்த்தால் கேரட்டாக இல்லாமல் கட்டைக்  கேரட்டாக இருந்தால் எப்படி இருக்கும்!. அந்த விளையாட்டைத்தான் மிண்டோவும் மார்லியும் விளையாடிக்கொண்டிருந்தனர். ஆகா கேரட் என்ன அழகாக இருக்கிறது என்று மிதவாதத்தலைவர்களும் நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டிருந்தனர். . அவர்களது சந்தோஷத்தை மார்லியின் ஜலதோஷம் ஒரு வாரத்திற்கு ஒத்திப்போட்டது.

 

Subbaier Ramasami

unread,
Apr 1, 2022, 10:29:06 AM4/1/22
to santhavasantham

பாரதி இந்தியாவில் எப்படி வேதனையோடும், அதே சமயம் அங்கதத்தோடும் எழுதியிருக்கிறார் பாருங்கள்

“”சபாஷ், லார்டு மார்லிக்கு ஜலதோஷமாம். ஆகவே முப்பது கோடி ஜனக்களுடைய ஒரு தேசத்தார் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த விஷயத்தை இன்னும் ஏழுநாள் தள்ளி வைத்துக் கொள்வோம் என்று சொல்லிவிட்டார். அடுத்த வாரம் அந்தப் பாட்டுக் கச்சேரி நடக்குமோ அல்லது அதற்கும் ஏதாவது விக்கினம் வந்துவிடுமோ தெரியவில்லை.

கல்கத்தா சட்டசபையில் அதர்மச்சட்டம் ஏற்படுத்த வேண்டுமானல் ஒரேயடியாக உட்கார்ந்து 36 மணி நேரத்துக்குள் முடித்துவிடுகிறார்கள். எவருக்கும் தொண்டைக்கட்டு முதலிய யாதொரு தொந்திரவும் கிடையாது. இந்தியாவுக்குப் போலிச் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டுமென்றாலும் கூட அதற்கு ஆயிரத்தெட்டு விக்கினங்கள் வந்து சம்பவிக்கின்றன”(இந்தியா 19-12 1908)மார்லி சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றை வரவேற்று மிதவாதிகள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதைப் பற்றி வ.வே.சு ஐயர் இலண்டன் கடிதங்களில் எழுதினார். எதிர்பார்த்ததற்கும் மேலே சீர்திருத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்று கோகலே என்ற குயில் கூவியது..

 

பாரதி ஆனந்தக் கூத்தாடும் அந்தத் தலைவர்களை நையாண்டி செய்து எழுதினார். எதிர்பார்க்காத அளவுக்கு சுமக்க முடியாத சீர்திருத்தங்களை மார்லி கொடுத்துவிட்டாரே இந்த இன்பச் சுமையை எப்படித் தாங்கப்போகிறோம் என்று மேத்தா பாதி சீர்திருத்தங்களை எங்களுக்கு வேண்டாம், எங்களால் தாங்கமுடியாது என்று சொல்லி மார்லிக்கே திரும்பவும் பார்ஸல் செய்துவிடுவார் போலத் தெரிகிறது என்று எழுதினார்.

சீர்திருத்தங்களை ஆழ்ந்து கவனிக்கிறபோது அவை நம்மை ஏமாற்றுபவையாக உள்ளன என்று எழுதினார்.. இந்தியா பத்திரிகையில் கார்ட்டூன் தீட்டித் தன் கருத்துக்கு வலுவேற்றுவது பாரதியின் பாணி. எனவே மார்லி சீர்திருத்தத்திற்கும் ஒரு அருமையான கார்ட்டூன் சித்திரம் தீட்டியிருந்தார்.  மிகவும் தாகத்தோடு இருக்கும் பாரதத்தாய் நெருங்க முடியாத பாடி ஆங்கிலச் சிப்பாய்கள் இனிய நீர்ச்சுனையைக் காவல் காத்துக்கொண்டிருக்க மார்லி ஒரு சிறு குவளையில் உப்பு நீரைக் கொண்டுவந்து  தாகந் தணித்துக்கொள்ளச் சொல்வதுபோலவும் பாரதமாதா விலகி நில் என்று சொல்லுவது போலவும் அமைந்த அந்தக் கோட்டுச் சித்திரம் உண்மை நிலையைப் படம் பிடித்துக் காட்டியது.

 

மார்லி சீர்திருத்தத்தினால் மாகாண சபைகளில் இந்தியருக்கு அதிகப் பிரதிநிதிதுவம் இருக்கும் என்றார் மார்லி. ஆனால் அவர்களுக்கு   அதிகாரமும் கிடையாது. அவர்கள் தீர்மானித்ததை கவர்னர் ஒரே ஒரு கையெழுத்தில் தூக்கி எறிந்து விடமுடியும். இதைப் பற்றி விரிவாக ‘இந்தியாவில்” எழுதிய இலண்டன் நிருபர் வேடிக்கையாக எழுதினார்

“அந்தக் கவுன்சிலில் பேசக்கூடியது பாக்கி என்ன இருக்கிறதோ தெரியவில்லை.ஸ்ரீரங்கம் கோயிலை இடித்துவிடலாமாஅல்லது செலவைக் குறைக்கலாமா, அல்லது மடாதிபதிகளை அடித்து விரட்டி அவர்கள் அதிகாரத்தை அடக்கலாமா என்பதைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம் போலிருக்கிறது . என்ன சீர்திருத்தம்! மிகவும் ஆச்சரியமான அதிகாரம் ஜனங்களுக்குக் கிடைத்துவிட்டதே!”

 

பாரதியும் அங்கதமாக இதைப் பற்றி எழுதினார்

“”மதுரை மொட்டைக் கோபுரத்துக்கு எப்போது குடுமி வைத்தார்கள்?  ஏன் குடுமி வைத்தார்கள் ? என்பது போன்ற விஷயங்களைப் பற்றிப் பேசத்தான் நமது ஆனரபிள் மெம்பர்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள்”

(இந்தியா : 26-12-1908)

 

உரைநடையில் எழுதியதோடு நில்லாமல் பாரதி  மார்லியைப் போற்றிப் புகழ்ந்த நிதானக்கட்சியாரின் போக்கைக் கவிதையிலும் வடித்துவிட்டார்

 

களக்கமுறும் மார்லி நடம் கண்டுகொண்ட  தருணம்

        கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்

விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பி யதிர்ந்திடுமோ

      வெம்பாது விழினுமென்ரன் கரத்திலகப்படுமோ?

வளர்த்தபழங் கர்சனென்ற குரங்குகவர்ந்த் திடுமோ?

      மற்றிங்ஙன் ஆட்சிசெயும் அணில்கடித்துவிடுமோ?

துளக்கமற யான்பெர்றிங் குண்ணுவனோ வல்லால்

       தொண்டைவிக் குமோஏதும் சொல்லல ரிதாமே!

 

 

கோகலே சாமியார் படல் என்ற தலைப்பில் இந்தக் கவிதை

  2-1-1909 இந்தியா இதழில் வெளிவந்துள்ளது

 

பாரதியின் முத்திரைப் பாடல்களில் ஒன்றான

“தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு

     சூழ்கலை வாணர்களும் - அவள்

  என்று பிறந்தவள் என்றுணராத

இயல்பினளாம் எங்கள் தாய்

இந்தப் பாடல்7-11-1908 ‘இந்தியாவில்’ வெளியானது. இந்தப்பாடலில் பாரதமதாவைத் துர்க்கையாகக் காட்டுகிறார் ஆங்கிலேயனுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுவதைப்போல

“ எங்கள் பாரத மாதா பூமியை விடச் சகிப்புத் தன்மை கொண்டவள் தான்.  ஆனால் அதை அவளுடைய பலவீனமாக எண்ணிவிடாதே. குற்றம் புரிபவன் முன்  நின்றுவிட்டால் அவள் துர்க்கையாக மாறி அழித்துவிடுவாள் என்றும் தீங்கு செய்பவரை விழுங்கிப்பின் ஆனந்தக் கூத்திடுவாள்” என்றும் கூறுகிறார்.

 


Tue, Mar 29, 2022 at 7:22 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Subbaier Ramasami

unread,
Apr 1, 2022, 10:02:08 PM4/1/22
to santhavasantham
201

“என்ன பாரதி, என்ன ஆயிற்று உனக்கு.? ஏனிப்படி ஒரு பதட்டம்?” என்று கேட்டார் மண்டையம் ஆச்சார்யார்

“பதட்டம் மட்டும் இல்லை. வேதனை. இந்தக்கட்டுரையைப் பாருங்கள். சிதம்பரம் பிள்ளையை எப்படியெல்லாம் சிறையில் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று நெல்லையப்ப பிள்ளை எழுதியிருக்கிறார்.. அதைப் படித்ததிலிருந்து என்னால் துக்கத்தைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை.” என்றார் பாரதி.

மண்டையம் ஆச்சார்யார் அதை வாங்கிப் படித்தார். இந்தக்  கட்டுரையை இந்தியாவில் வெளியிடுவோம்” என்றார் ஆச்சார்யார்.. பாரதியின் கவிதை சூடேறத்தொடங்கியது

. அந்தக் கட்டுரையின் முடிவில் நெல்லையப்ப பிள்ளை ”தேசபக்தருக்கு இத்தகைய கொடுமை இழைக்கும் சிறைக்கோட்டத் தலைவருக்கு ஆண்டவன் திருவருள் வீங்குவதாக!” என எழுதியிருந்தார். அந்தக்கட்டுரையை ‘இந்தியா’வில் வெளியிட்டார். அந்தக் கட்டுரையில் கண்டிருந்த செய்தி பாரதியை வெகுவாகப் பாதித்தது . தனது உற்ற நண்பர் தாய்நாட்டை அன்னியன் பிடியிலிருந்து விடுவிப்பதற்காகப் படும் அவதியைக் கண்டு அவரால் தாளமுடியவில்லை

.

 

சிதம்பரனாரைச் செக்கிழுக்கச் செய்தார்கள் என்ற கொடுமைச் சொல் கேட்டதிலிருந்து பாரதி உறக்கமின்றித் தவித்தார். நாட்டுக்கு உழைப்பவருக்கு இதுதானா கதி? தேசபக்தர்களின் தியாகத்தின் உயர்வை அறியாமல் ஆட்டுமந்தைகளாக மக்கள் இருக்கின்றனரே என்ற வருத்தம் வேறு வாட்டியது.

கண்ணீர் சிந்தும் படி கசையடி பெற்றும் செக்கிழுத்தும், கற்ற பெரியோர்கள் எத்தனை இன்னல் படுகிறார்கள் என்பதை எண்ண நெஞ்சம் சூடேறியது. பாரதியின் கண்களிலும் நீர் திரண்டது. சர்வேசனிடத்தில் முறையிட்டுப் பாடல் பிறந்தது. அந்தப் பாடல்தான்

“தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா” என்ற பாடல்

 

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்

நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?

..

..

மாதரையும் மக்களையும் வன்கண்மையாற்பிரிந்து

காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ”

என்று கதறினார்.

கண்ணிகளாக வெளிப்போந்த அப்பாடல்கள் அச்சடிக்கப்பட்ட காகிதத்துக்கும் சூடேற்றின.  புரட்சி இளைஞர்களுக்கு தேவ கீதமாகப் பாரதியின் வந்தேமாதரமென்போம் பாடலும், என்று தணியும் இந்தச் சுதந்திரதாகம் என்ற பாடலும் , தண்ணீர் விட்டோ வளர்த்தோம் என்ற பாடலும் ஒலித்தன. வீடுகள் தோறும் இப்பாடல்கள் மனனம் செய்யப்பட்டன. போலீஸ்காரன் தொப்பியைக் கண்டால் வந்தே மாதரமென்போம் என்று பாடிவிட்டுச் சின்னஞ்சிறுவர்கள் வீட்டுக்குள் போய் ஒளிந்துகொண்டார்கள்.

தாயைவணங்குவோம் என்று சொல்வதிலே என்ன குற்றமிருக்கிறது? ஆனால் வந்தே மாதரம் என்ற அந்த இரண்டு சொற்கள் சிறியவைதான் .ஆனால் சிறப்புமிக்கவை. அச்சொற்றொடர்தான் பாரதியின் அக்கினிக்குஞ்சு.  வந்தே மாதரம் என்பதைப் பாரத மாதாவின் விலங்கொடிக்கும்  சாதனமாகப் பார்த்தான் தேசபக்தன். அதையே தம்மை வீழ்த்தப்போகும் ஆயுதமாகப் பார்த்தான் ஆங்கிலேயன். எனவே வந்தே மாதரம் எங்கே கேட்டாலும் நடுங்கினான். அதை நசுக்கத் தலைப்பட்டான்.

 

Subbaier Ramasami

unread,
Apr 2, 2022, 9:57:16 AM4/2/22
to santhavasantham
202

புதுச்சேரி வீதிகளிலே இளைஞர்களும் சிறுவர்களும்  ‘படை நடைப் பாட்டுபாடிக்கொண்டு கம்பீரமாக நடந்துசெல்வதைப் பார்த்த பாரதி இந்திய தமிழக இளைஞர்களும் படைநடைப் பாட்டு வீதிகளில் உலாவர வேண்டும் என்று நினைத்தார். ஆங்கிலப் படையிலே பணிபுரிந்த இந்தியப் போர்வீரர்கள்

ஆங்கிலச் சக்கரவர்த்தியைப் போற்றியல்லவா பாடினார்கள். எனவே பாரதி ஒரு அற்புதமான பாடல் எழுதினார்.

 

கம்பரமாயணத்திலே உறங்கிக் கொண்டிருந்த கும்பகர்ணனை எழுப்புவதைச் சொல்லும் பாடலை ஒரு கம்பீரமான சந்தத்தில் கம்பன் பாடியிருப்பான். “உறங்குகின்ற கும்பகர்ண உங்கள் மாய வாழ்வெலாம்என்ற பாடல்தான் அது.

 

அதே சந்தத்தில் பாரதியும் ஒருமார்ச்சிங்பாடல் எழுதினார்.

 

தன்ன னன்ன தன்ன னன்ன தன்ன தன்ன தானனாஎன நடக்கும் பாடல் அது.

 

சிறந்து நின்ற சிந்தை யோடு தேயம் நூறு வென்றிவள்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     

மறந்த விர்ந்தந் நாடர் வந்து வாழி சொன்ன போதினும்

இறந்து மாண்பு தீர மிக்க  ஏழ்மை கொண்ட போழ்தினும்

அறந்த விகிர்லாது நிற்கும் அன்னை வெற்றி கொள்கவே

 

அந்தப்பாடலை முடிக்கும் போது


விதம்பெ ரும்பன் னாட்டி னர்க்கு வேறொருண்மை தோற்றவே

சுதந்திரத்தில் ஆசையின்று தோற்றினாள்மன் வாழ்கவே

என்று எழுதியிருந்தார்

 

புதுச்சேரிக்கு வந்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் இன்னும் மக்களிடையே சுதேசிகளைப் பற்றிய நல்லெண்ணம் உருவாகவில்லை.  இந்தியாவிலிருந்து கடன்காரர்களும் குற்றம் புரிந்தவர்களும்தான் ஆங்கில அரசின் பிடியிலிருந்து புதுச்சேரிக்கு வருவது வழக்கம். பாரதியார்தான் முதன் முதல் வந்த சுதேசி. எனவே இந்தியாவிலிருந்து புதுச்சேரிக்கு வந்து தங்குபவர்மேல் பொது மக்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை வரவில்லை. பாரதியின் பாட்டைக்கேட்டுப் பலர் சிறிது சிறிதாக அவர் வயப்பட்டாலும் இன்னும் முழுமையான ஆதரவு கிட்டியதாகச் சொல்ல முடியாது. இந்தியா பத்திரிக்கையைப் படித்த கற்றவர்களிடமும் புஷ் வண்டிக்காரர்கள் போன்ற கீழ்த்தட்டு மக்களிடையேயும் அவர் செல்வாக்குப் பெற்றிருந்தார். பிரிட்டிஷ் போலீஸ்காரர்கள் சுதேசிகளைக் கண்காணிப்பதற்காக வந்து வட்டமிட்டுக்கொண்டிருந்த சூழ்நிலையும் அவர்களைப் பயப்படவைத்தது. புதுச்சேரியில் அப்படியென்றால் இந்தியாவில் புதிதாக முளைத்த பத்திரிகைச் சட்டத்தையும் பொதுக்கூட்டம் போடுவதைச் தடுக்கும் சட்டத்தையும் கண்டு மக்கள் பயந்தனர். கேள்வி முறையின்றி மக்கள் கைது செய்யப்பட்டனர். சிவப்புத் தொப்பிக் காரனைக் கண்டாலே ஓடி ஒளிக்கும் நிலை இருந்தது. எதற்கெடுத்தாலும் அச்சம். எதைக் கண்டாலும் அச்சம். இது ஒருவகை. சின்னச் சின்னச் சச்சரவுகளைப் பெரிதாக்கி சண்டையிட்டது வேறோர் பக்கம்.  ஆங்கிலேயன் தம்மை அடக்கியாண்டு கொண்டிருக்கிறானே என்னும் நினைவின்றி, நாமிருக்கும் நாடு நமது எண்ணம் எண்ணமின்றி சைவ வைணவர்களுக்கிடையே சண்டை வைணவர்களுக்கிடைய கோயில் யானைக்கு என்ன நாமம் போடுவது என்ற சண்டை. இதையெல்லாம் பார்த்தும் , படித்தும் கேள்விப்பட்டும் அறிந்த பாரதியின் நெஞ்சு கொதித்தது. அதன் விளைவாகப் பிறந்ததுதான் நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் என்னும் பாடல் . இந்தப்பாடல் 1909 மார்ச்சு 13ந்தேதி ‘இந்தியா’இதழில் வெளிவந்தது.  அதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் அந்தப் பாடலை எழுதினார். 

Subbaier Ramasami

unread,
Apr 5, 2022, 7:31:31 PM4/5/22
to santhavasantham
204

பாரதியுடன் பணி புரிவதற்காக நீலகண்ட பிரம்மச்சாரி என்னும் புரட்சி வீரர் புதுச்சேரி வந்தார். அவரின் அழைப்பின் பேரில் சில மாதங்கள் கழித்து நெல்லையப்பர் வந்தார். நெல்லையப்பரைப் பார்த்ததும் பாரதிக்கு அடையாளம் தெரியவில்லை.  நெல்லையப்பர் சைகோன் சின்னையாவின் சூரியோதயம் பத்திரிகையில் உதவி ஆசிரியரரகச் சேர்ந்தார். அதே பத்திரிகையில் நீலகண்டனும் உதவி ஆசிரியராக இருந்தார். பாரதியாருக்கு மாதம் 35 ரூபாய்ச் சம்பளம். நீலகண்டனுக்கு 25 ரூபாய். நெல்லையப்பர் அப்பொழுதுதான் புதிதாக சேர்ந்ததால் 15 ருபாய்ச் சம்பளம். பத்திரிகைப் பணிகள் செய்வதற்காக வந்திருந்த இளைஞர்கள் பாரதி இருந்த தெருவிலேயே சற்றுத் தள்ளிக் கலவை பங்களாவில்  குடியிருந்தனர். சில நாட்கள் கழித்துப் பாரதியார் வீட்டு மாடிக்கு நெல்லையப்பர் குடிவந்துவிட்டார்..

பாரதியார் நெல்லையப்பரைத் தன் சொந்தத் தம்பியாகவே கருதத் தொடங்கினார். அன்போடு வாய்நிறையத் ‘தம்பி’ என்றுதான் அழைப்பார்.  நெல்லையப்பரின் சட்டைப்பையிலிருந்து உரிமையோடு பணம் எடுத்துக்கொண்டு செல்வார் பாரதி.  யாராவது பணம் இரக்கப்பட்டுக் கொடுத்தால் கூடத் தன் கை மேலாக இருக்கும் படி பார்த்துக்கொள்வார்.   அவரை இளப்பமாகக் கருதிப் பணம் கொடுக்கிறார் என்று தெரிந்தால் பாரதிக்குக் கடும் கோபம் வந்துவிடும். பாரதியார் வீட்டு மாடியில் பாரதியின் ஊரைச் சேர்ந்த எட்டையபுரம் குருசாமி, கடையம் கிருஷ்ணன் ஆகியோர் தங்கியிருந்தனர்.

 

கிருஷ்ணன் கஸரத் எடுத்தல் கர்லாக் கட்டை சுற்றுதல் போன்ற பயிற்சிகளைத் தினமும் காலையில் செய்வார். பாரதியும் ஆர்வ மிகுதியால் சில சமயங்களில் கர்லாக்கட்டை சுற்ற வருவதுண்டு. இரவெல்லாம் வெகு நேரம் கண்விழித்துக் கவிதை  எழுதுவார் பாரதி.

“முன்னும் பின்னும் கிழிந்த சீவக சிந்தாமணிப் புத்தகந்தான் பெரும்பாலும் பாரதிக்குத் தலையணை” என்று நெல்லையப்பர் கூறியுள்ளார். 

Subbaier Ramasami

unread,
Apr 7, 2022, 10:46:28 AM4/7/22
to santhavasantham
205
இந்தியாப் பத்திரிகையில் பாரதி பணி புரிந்துகொண்டிருந்ததால் வாழ்க்கை ஓரளவுக்கு வசதியாகவே இருந்தது. சிலசமயங்களில் வீட்டில் சாமான்கள் இருக்கின்றனவா இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப் படாமல் கையிலிருக்கிற பணத்தைத் தானம் செய்துவிடுவார். புதுச்சேரியில் வாழ்ந்த ஆரம்ப காலத்தில் பாரதியாரின் தாராள குணத்தால் வரவழைத்துக்கொண்ட வறுமையிருந்ததே தவிர அவர் பட்டினியால் திண்டாடினார் என்றெல்லாம் சொல்ல முடியாது.
பாரதியின் மனைவி செல்லம்மா குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்தாள். செல்லம்மாளின் தமக்கை பார்வதி தனக்குக் குழந்தை இல்லாததால் தங்கம்மாளைத் தான் காசிக்குக் கூட்டிக்கொண்டுபோய் வளர்ப்பதாகச் சொன்னாள். பாரதி வேறு வழியின்றிச் சம்மதித்தார். தங்கம்மாளைக் காசிக்குக் கூட்டிச் சென்றனர்.
பாரதியாருக்கு நண்பர் கூட்டங்கள் பெருகின. அவர் சிறந்த கல்விமான், கவிஞன், எந்தப்பொருளையும் தீர்க்கமாக ஆராய்ந்து பேசக்கூடியவர் என்ற காரணத்தாலே அவருக்குப் பல நண்பர்கள் சேர்ந்தார்கள்.
பாரதி வீடு எப்பொழுதும் கலகலவென்று இருக்கும். குவளைக் கிருஷ்ணமாச்சாரியார் பெரும்பாலும் பாரதி வீட்டிலேயே இருப்பார். அவர் அன்புமிக்கவர் என்றாலும் குடும்ப இங்கிதம் அவ்வளவாக அறியாதவர். வீட்டிலே எல்லோரும் சாப்பிட்டுவிட்டுச் செல்லம்மா மட்டும் சாப்பிடவேண்டிய பாக்கியிருக்கும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் “மன்னி பசிக்கிறது” என்று சொல்லிச் சாப்பிட உட்கார்ந்துவிடுவார். அன்று செல்லம்மா பட்டினி கிடக்க வேண்டியதுதான்.
குவளைக் கண்ணன் பாரதியின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டார். பின்னாளில் ஒரு பேட்டியில் அவர் சொன்னது இங்கே நினைவுகூரத்தக்கது
பாரதியைப் பற்றிச் சொன்னார்
“நான் ஒரு ஸ்ரீவைஷ்ணவன். வைதிக ஆசாரங்களில் தவறாத குடும்பத்தில் பிறந்தவன். ஜாதியென்றும் மதமென்றும் பிரிவு செய்யும் கொடுமையிலே கொக்கரிக்கும் சமூகக் காற்றைச் சுவாசித்தவன். பாரதியாருக்குச் சாதியில்லை. சமயமில்லை, வரம்பில்லை. அவர் வைத்தது சட்டம். : போனது வழி. குடும்பத்திலே அவர் ராஜா. அவர் உருட்டலும் , மிரட்டலும் குடும்பத்தைக் கதிகலங்கச் செய்யும். அடுத்த நிமிஷத்தில் நாய்க்குட்டி போல் பணிந்துவிடுவார். அவரோடு என் வாழ்க்கை இணைந்து நின்றது எனக்கே ஆச்சர்யத்தை உண்டாக்குகிறது.”
“கிருஷ்ணா” என்று அன்புடன் ஒருமையிலே கூப்பிடுவாராம்.பாரதியார்
கிருஷ்ணமாச்சார்யார் ஆங்கிலம் , பிரஞ்சு இரண்டிலும் அறிவு வாய்ந்தவர். 1912ம் வருஷம் அவருக்கு”ராலி’ கம்பெனியிலிருந்து உத்தியோகம் தருவவதாகக் கடிதம் வந்ததாம். அதைக் கிருஷ்ணமாச்சார்யார் பாரதியாரிடம் கொண்டுபோய்க் காட்டினார். அந்த மனுஷ்யர் சிறிதேனும் தயா தாட்சண்யமின்றி அதைக் கிழித்துப்போட்டுவிட்டாராம். திருவண்ணாமலையில் அந்தக் கம்பெனியார் சில வேலைகள் நடத்தி வந்தபடியால் அங்கு வரும்படி கிருஷ்ணமாச்சார்யாருக்கு உத்தரவு வந்திருந்தது.
“பாரதியார் உத்தரவைக் கிழித்துப்போட்டவுடன் கிருஷ்ணமாச்சார்யார் “என்ன இப்படிச் செய்துவிட்டீர்களே?” என்றார்
“கிருஷ்ணா நீ திருவண்ணாமலைக்குப் போய்விட்டால் , எனக்கு இங்கே யார் துணை?” என்று பாரதியார் கேட்டார்.
“வாஸ்தவம். நமக்கு இவர் துணை: இவர்க்கு நாம் துணை” என்ற திருப்தியோடு அவர் இருந்துவிட்டார்.

Subbaier Ramasami

unread,
Apr 8, 2022, 8:48:38 AM4/8/22
to santhavasantham
206

பாரதியார் வற்புறுத்தலால் குவளைக் கண்ணன் மற்றவர்கள் வீட்டில் சாப்பிட்டிருக்கிறார்.  முதலில் குவளைக் கண்ணன் தயங்கிய போது

“ வேளாளன் கொடுக்கிற அரிசி உதவும், சோறு உதவாதா?” என்று பாரதி கேட்டாராம். அதன் பிறகு சாப்பிட்டிருக்கிறார்.  அவரை அவரது வீட்டில் தத்தாரி என்று நினைத்துவிட்டார்கள்.

 

‘பாரதியாரையே அப்படி நினைத்தவர்கள் எவ்வளவு பேர்?. அவருடைய தோழனுக்கு  மாத்திரம் அந்தக் கௌரவம் வரக்கூடாதா?” என்றார் குவளை

 

“புதுச்சேரியிலே வீராசாமிப் பிள்ளை தோப்பு என்று ஒரு பெரிய தோப்பு இருக்கிறது. நாலு ஏக்கரா பூமி விஸ்தீரணமுள்ளது. அங்கே ஒரு குளமும் பங்களாவும் உண்டு. பாரதியார் அடிக்கடி அந்த இடத்திற்குப் போய் உல்லாஸமாய் இருந்துவிட்டு வருவார். ஒரு நாள் சில நண்பர்களுடன் சேர்ந்து அங்கே காலையில் போனார். நானும் போயிருந்தேன். அந்தக் குளத்திலே ஸ்நாநம் செய்தோம். சாப்பாட்டையும் முதலியார் வீட்டிலிருந்து அங்கே வருவித்து விட்டார். எங்கள் எல்லோருக்கும் சேர்த்து வருவித்தார்”

 

அன்று அவர் யோக சித்தியைப் பாடினார்.. (ஒரு சாண் வயிறு- கலைமகள் காரியாலயம் என்ற நூலிலிருந்து0

 

காளி பராசக்தியே அங்கு பிரஸன்னமாகிவிட்டது போல இருந்தது. அங்கே அவர்கள் பாரதியைக் காணவில்லை. ஒரு சித்த புருஷனைக் கண்டார்கள். ஒருகணம் அந்தத்தோப்பே விண்ணுலகமாக மாறிவிட்டதைப் போலிருந்தது. வெறும் வேடிக்கை மனிதர்கள் என்ற நிலையிலிருந்து அங்கிருந்தோரையும் மனதளவு உயர்த்தினார். அவருடைய வேண்டுதல் , அவரது  ஆசை எல்லாம் வேத காலத்து மஹரிஷிகள் நாதத்தைப் பிடித்து நமக்கு வழங்கியதைப் போலிருந்தது.  வான வெளியில் கவலையற்ற பறவைகள் போல்திரிந்தார்கள். பாட்டு நின்றது. பரவசம் நிற்கவில்லை

அன்று அதைக் கேட்டவர்களுக்கு அந்த ஆனந்த உணர்வு அடங்கச் சில தினங்களாயின

Subbaier Ramasami

unread,
Apr 11, 2022, 9:51:22 PM4/11/22
to santhavasantham
207
பாரதி உடலளவில் அவ்வளவு வீரராக இல்லாவிட்டாலும் உள்ளத்தளவில் பெரு வீரராகத் திகழ்ந்தார். எனவே வீரர்களது வாழக்கை வரலாறுகளைப் படித்தார். அவற்றைப் பத்திரிகைகளில் எழுதினார். பிறர் எழுதியவற்றையும் பதிப்பித்தார். அவர் மனத்தை அதிகம் ஈர்த்த வீரர்களுள் ஒருவர் குரு கோவிந்த சிங். அவர் தனது மதத்தை வீரத்தியாகங்களின் அடிப்படையில் வளர்த்தார். அவருடைய வரலாற்றைக் கவிதையாக்கினார். இந்தியாப்பத்திரிகையில் “குருகோவிந்த சிம்ஹ விஜயம் ‘ என்ற தலைப்பில் எழுதி வெளியிட்டார். அது பெரும் வரவேற்பைப்பெற்றது. 1909ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ந்தேதி தொடங்கி மூன்று இதழ்களில் அப்பாடல் வெளிவந்தது
1909ம் ஆண்டு ஜன்ம பூமி எனும் தலைப்பில் பாரதியின் இரண்டாவது கவிதைத் தொகுதி வெளிவந்தது. இந்தத் தொகுதியில் ஏற்கனவே வெளியான ஸ்வேதச கீதங்களிலிருந்து இரண்டு பாடல்கள் மீண்டும் பிரசுரிக்கப்பட்டன. அவற்றில் இடம்பெற்ற பாடல்கள்
1-ஜாதீய கீதம்(வந்தே மாதரம் மொழியாக்கம்)
2 ஜய பாரத
3- பாரத தேவியின் திருத்தசாங்கம்
4 மாதாவின் துவஜம்
5 எங்கள் தாய்
6 தொண்டு செய்யும் அடிமை
7 நிதானக் கட்சியார் சுதேசியத்தைப் பழித்தல்
8 ஆங்கிலேயன் ஒரு தேசபக்தனுக்குக் கூறுவது
9தேசபக்தன் ஆங்கிலேயனுக்குக் கூறும் மொழி
10 பாரத தேவியின் அடிமை
11 அபேதானந்த ஸ்வாமிகளின் மீது ஸ்தோத்ரக் கவிகள்
12 சுதந்திரப் பெருமை
13 சுதந்திர தாகம்
14 சுதந்திரப் பள்ளு
15 சுதந்திர தேவியின் துதி
16 ஸ்ரீகிருஷ்ண ஸ்தோத்ரம்( பாரதி தமிழ்- பெ. தூரன்)
17 ஸ்ரீரவிவர்மா
பாரதியின் வாழ்க்கையில் 1909-10 ம் ஆண்டுகள் மிக மிக முக்கியமானவை.ஒரே சமயத்தில் நான்கு பத்திரிகைகளில் எழுதினார்.

Subbaier Ramasami

unread,
Apr 11, 2022, 9:52:35 PM4/11/22
to santhavasantham
209
1909 டிசம்பரிலிருந்து சித்ராவளி என்னும் சித்திரங்கள் நிரம்பிய ஒரு பத்திரிகையத் தொடங்கவேண்டுமென்று பாரதி விரும்பினார். அதற்கான அறிவிப்பும் வெளியானது. ஆனால் அப்பத்திரிகை வெளிவந்ததாகத் தெரியவில்லை. என்னென்ன வகையெல்லாம் அவர் தமிழுக்குப் புதுமை சேர்க்க நினைத்தார்.!
எட்டையாபுரத்திலிருந்து வந்த பின் அவர் பல கவிதைகள் எழுதியிருந்தாலும் பாரதிக்கு மன நிறைவில்லை. பிள்ளைப் பிராயத்திலே தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் கன்னிக் கவிதை பெற்ற அந்த நாள் தொடங்கி அவருடைய உள்ளத்திலே அமுதப் பிரவாகமாய்ப் பொங்கிப் பாய்ந்துகொண்டிருந்த கலைமகளின் அருள் எட்டையபுரம் அரசிடம் பணிக்குச் சேர்ந்தபிறகு மங்கிவிட்டதாக உணர்ந்தார். அந்த அருள் முழு வேகத்துடன் இன்னும் பொங்கிப் பாயவில்லை என நினைத்தார். இந்த ஒரு மன நிலை பொதுவாக எல்லாக் கவிஞர்களுக்குமே எப்பொழுதாவது ஏற்படக்கூடியதுதான். ஆனால் பாரதியிடம் அந்த உத்வேகம் இன்னும் மறைந்துவிடவில்லை. என்றாலும் அது எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராது தன் நாவினிலே வெள்ளமெனப் பொழிய வேண்டும் எனவிழைந்தார். அதனால் தன்னை விட்டு விலகி நிற்கும் கவிதையாம் மணிப்பெயர்க் காதலியை “வாராய் கவிதையாம் மணிப்பெயர்க் காதலி” என வேண்டுகிறார். இந்தப் பாடல் எட்டைய புரம் ஜமீந்தாரிடம் பணிபுரிந்த போது அவரிருந்த நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது.எட்டைய புரம் ஜமீந்தார் அவருக்கு ஆதரவு கொடுத்தவர் தான். ஆனால் அங்கேதான் தனது கவிதை தொலைந்து போனது என்று வேதனைப்பட்டதன் விளைவாக எழுந்த கவிதைதான் அது.
கவிதை என்ற ஒன்று தன்னிடம் இல்லாது போனால் ‘நிலமிசை வேறோர் பற்றுமிலாது பாவியேன் மடிவேன்” என்கிறார்.
அவர் அதிகம் வேண்டவில்லை
“மெல்லியல் உன் கனிச் சொல்லொன்றருள்வையேல் தொழுகுவல், போதும்”
‘அம்மா உன்னுடைய மலர்விரலினால் என்னுடைய தலையைச் சற்றே தடவிக்கொடுத்தால், அதுபோதும், நான் வாழ்வேன்’ என்கிறார்.கவிதை ஆவிர்ப்பு அவரிடம் பூரணமாகக் குடிகொள்ளத் தொடங்கியது
. அடுத்து வரும் மூன்றாண்டுகளுக்குள் அவருடைய மிகப்பெரும் சாதனைகளாகக் கருதப்படும் முப்பெரும் பாடல்களையும், உரைநடைக் காவியமான ஞானரதத்தையும் எழுதி முடித்தார், இறவாத பெரு நூல்கள் தமிழ்மொழிக்கு இயற்றிக் கொடுத்தார். (



Subbaier Ramasami

unread,
Apr 11, 2022, 9:54:25 PM4/11/22
to santhavasantham
210
வ.உ.சி கோயம்புத்தூர் சிறையில் கடுங்காவல் தண்டனையில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தபோது பாரதி நெல்லையப்பர் மூலம் அவருக்குச் செய்திகள் சொல்லி அனுப்பினார். எவ்வளவோ இன்னல்களை எதிர்கொண்டு அவர் கப்பல்களை வாங்கிவந்ததைப் பாரதி அறிவாராதலால் அப்படித் தியாகங்கள் செய்து உருவாக்கிய கம்பனி செயலிழந்து போகக்கூடாது எனத் துடித்தார். கப்பல் கம்பெனி பற்றிய செய்திகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெளியிட்டு மக்கள் மனத்தில் சுதேசியக் கப்பல் கம்பெனியைப் பற்றிய ஒரு நல்லெண்ணத்தை உருவாக்கினார்
லாவோ என்ற கப்பல் வேலை செய்யாமல் நின்றிருந்ததைப் பற்றிப் பத்திரிகையில் எழுதினார். பழுதினால்தான் அது நின்றிருக்கிறது என்று மக்கள் நினைத்துவிடுவார்களோ என்ற எண்ணத்தால் அதன் உண்மை நிலவரத்தைத் தெளிவாக்கி எழுதினார்
“இரண்டொரு வாரத்திற்கு முன்பாக தூத்துக்குடி ஸ்வதேசி கப்பல் கம்பெனியைச் சேர்ந்த “லாவோ” என்னும் கப்பலானது இன்னும் ஒரு வாரத்தில் வேலை செய்ய ஆரம்பித்து விடும் என்று வரைந்திருந்தோம்
கப்பலானது ஒரு இடையூறினாலும் வேலை செய்யாமல் நின்றுகொண்டிருக்கவில்லை. சரியான ஸர்ட்டிபிகேட் பெற்ற உத்தியோகஸ்தர்கள் இன்னும் அகப்படாததால் தான் தாமதம்.
வெகு சீக்கிரத்தில் கம்பெனி வேலை செய்ய ஆரம்பித்துவிடுமென்பதற்கு ஐயமேயில்லை. இனியொருவரும் அதைக் குறித்துப் பயப்பட வேண்டியதில்லை.” (இந்தியா புதுவை 10-7-1909)
என எழுதினார்.
மடாதிபதிகள் எவ்வளவோ தான தருமங்களில் செலவு செய்வதைக் கவனித்த பாரதி அவர்கள் சுதேசிக் கப்பல் கம்பனியில் பங்கு வாங்க வேண்டும் என்று எழுதினார்
தூத்துக்குடியில் கப்பற்சங்கம் ஒன்று ஏற்படுத்தி வர்த்தகத்தை விருத்தி செய்ய முன்வருகிறார்கள். அதற்குத் தக்க பொருளுதவி மடாதிபகள் செய்யலாகாதா? ஒவ்வொரு மடாதிபதியும் பதினாயிரம் ரூபாய் அல்லது இருபதினாயிரம் ரூபாய் கொடுத்து அதில் பங்குகளை வாங்கிக்கொண்டு அந்தக் கப்பல் கம்பனியை நடத்தினால் மடங்களுக்கும் ஜனங்களுக்கும் அதிக லாபத்தைத் தருமே! கப்பல் வியாபாரம் மிகுந்த லாபத்தைக் கொடுக்கிற விஷயத்தை , தூத்துக்குடி ஸ்வதேசிக் கப்பல் கம்பனியார் ருஜுப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். தென்னாட்டிலுள்ள மடாதிபதிகளும் ஜமீந்தார்களும் தாமாகவே முன்வந்து அந்தக் கம்பெனியை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம். அதைவிட மேலான தருமம் ஒன்றுமில்லை.யெண்று அவர்களே அறிவார்கள். அன்னதானம் அல்லது சுவர்ணதானத்தில் செலவேயில்லாது வரவில்லை. ஆனால் மேற்சொன்ன வர்த்தக சங்கத்தைப் போன்றவற்றற ஏற்றுக்கொண்டு நடத்தினால் செலவிற்குத் தகுந்த வரவும் ஜனங்களுக்கு லாபமும் உண்டாகும். தரித்திரமும் ஜனக்களை விட்டு நீங்கும். கொடிய வறுமை நீங்கின பொழுதே ஜனங்கள் ஆத்ம ஞானத்தில் நாட்டம் கொள்வார்கள். . இந்தப் புண்ணியத்தை எந்த மடாதிபதியான ஞானசிரேஷ்டர் கட்டிக்கொள்வாரோ?
-இந்தியா புதுவை
தலையங்கம் 2-10-1909

Subbaier Ramasami

unread,
Apr 12, 2022, 1:01:09 PM4/12/22
to santhavasantham
211

 மண்டையம் சீநிவாசாச்சாரியரும் கப்பல் கம்பெனிக்காக நிதி வசூல் செய்வதில் தீவிரமாக இறங்கினார். பாரதியின் மைத்துனர் அப்பாத்துரையும்  ஆந்திரப்பிரதேசத்திற்குச் சென்று பணம் திரட்ட  முயன்றார்.

 

மண்டையம் சீனிவாசாச்சாரியார் கப்பல்கம்பெனிக்காக நிதி திரட்டச் சென்னை சென்றார். அந்தச் சமயத்தில் இந்தியா அலுவலகத்தின் நிர்வாகப் பொறுப்பை அவரது உறவினர் ரங்காச்சாரி என்பவரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். ரங்காச்சாரி தன்னை ஒரு முதலாளியாகவே பாவித்துக்கொண்டார். பாரதியை இந்தியாப் பத்திரிகையின் ஒரு வேலையாளாகக் கருதினார்.  அலுவலகத்துக்குக் குறிப்பிட்ட நேரத்துக்கு வரவேண்டும் என்பது போன்ற கட்டுத்திட்டங்களை விதித்தார். கவிஞனைக் கட்டிப்போட முடியுமா?  இந்தியா பத்திரிகையை விட்டு விலகிவிடலாமா என்று பாரதி எண்ணுமளவுக்குத் தொந்தரவு கொடுத்தார்.  மண்டையம் ஆச்சார்யார் அங்கில்லாத நிலையில் ‘இந்தியா’ வை விட்டு விலகுவது இயலாது. ஆனால் அதில் பணி செய்வது சிரமமாக இருந்தது. அந்தச் சமயத்தில் சைகோன் சின்னய்யா என்பவர் “சூரியோதயம்’ என்ற பத்திரிகையை நடத்தி வந்தார்.  அவர் பாரதியைத் தன் பத்திரிகைக்கு வந்துவிடும் படி எத்தனையோ முறை அழைத்திருக்கிறார்.  எனவே பாரதி சூரியோதயம் பத்திரிகைக்கும் எழுதத் தொடங்கினார்.   சில கட்டுரைகள் சூரியோதத்திலும் இந்தியாவிலும் பிரசுரமாயின.

 

.

சென்னை ஆளுநர் 1908 நவம்பர் 7,14,21,28  டிசம்பர் 5,12 ஆகிய இதழ்களை பிரஞ்ச் கவர்னருக்கு அனுப்பி அதைத் தடை செய்யச் சொன்னார். ஆனால் தங்கள் நாட்டுச் சட்டத்தை மீறவில்லை என்று சொல்லி ஆளுநர் மறுத்துவிட்டார், இதை ஒரு கார்ட்டூன் மூலம் ஓர் சம்பாஷணை' எனும் தலைப்பில் பாரதி 1909 ஜனவரி 2ம்தேதி இதழில் வெளியிட்டார்.

Subbaier Ramasami

unread,
Apr 13, 2022, 10:13:25 AM4/13/22
to santhavasantham
மண்டையம் ஆச்சார்யார் சென்னையிலிருந்து திரும்பி வந்தார். சென்னையில் நடத்தப்பட்டு நின்று போயிருந்த பாலபாரதா மாதப் பத்திரிகையாகத் தொடங்கப்பட்டது. உடனுக்குடன் மக்களுக்குச் செய்தி சொல்வதற்காகத் தினசரிப் பத்திரிகை ஒன்று தொடங்கவேண்டும் என்று விரும்பினார் ஆச்சார்யார்.
பாரதி நடந்ததெற்கெல்லாம் நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். ரங்காச்சாரி உன்னிடம் அப்படி நடந்திருக்கக்கூடாது.” என்றார் மண்டையம்.
“அது போகட்டும் இப்பொழுதுதான் நீங்கள் வந்துவிட்டீர்களே!. இனிமேல் சங்கடமில்லை” என்றார் பாரதி.
“ திருமலாச்சார் விஜயா பத்திரிகையைச் சென்னையில் நடத்திவந்தாரே தெரியுமல்லவா? அது நின்றுவிட்டது. அது தினசரிப் பத்திரிகை. அதை இங்கே தொடங்கப்போகிறேன். நீதான் ஆசிரியர்” என்றார் மண்டையம்.
“இப்பொழுது நான் சூரியோதத்திலும்..” என்று இழுத்தார் பாரதி.
“தெரியும். நீதான் அதற்கு ஆசிரியராக இருக்கவேண்டும். இரண்டு மூன்று பத்திரிகைகள் இருந்தால் ஒன்று தடைப்பட்டாலும் இன்னொன்றை நடத்தலாம்” என்றார் ஆச்சார்யார்
பாரதி சென்னையிலிருந்து புதுச்சேரி வந்த இரண்டு மாதங்களுக்குள் சென்னையில்’விஜயா’ என்ற நாளேடு தொடங்கப்பட்டது. ஆர்.ஏ .ரங்கராஜம் ஆசிரியர். 83, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை என்னும் முகவரியிலிருந்து வெளியானது. புதுச்சேரியிலிருந்து வெளிவந்த ‘இந்தியா’ பத்திரிகையில் சென்னை ‘விஜயா’வின் விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்தியா’ ‘ சென்னையில் நின்றதும் அது இல்லாத குறையைப் போக்குவதற்காக விஜயா என்னும் தினசரி மண்டையம் குடும்பத்தைச் சேர்ந்த எஸ். திருமலாச்சாரியாரியால் தொடங்கப்பட்டதாகத் தெரிகிறது. அதுவும் அரசுக்கு எதிரான எழுத்துக்களைத் தாங்கி வெளிவரும் கடுமையான பத்திரிகை என்று அரசாங்கக் குறிப்புகள் கூறுகின்றன.அப்பத்திரிகை 1909 மே 12ந்தேதியோடு நின்றுவிட்டது. அரசினர் தலையீட்டால் அந்தப்பத்திரிகை நின்றுபோயிருக்கவேண்டும். அந்தப் பத்திரிகையை மீண்டும் புதுவையில் தொடங்க வேண்டும் என்று மண்டையம் சீனிவாசாச்சாரியார் விரும்பினார். தாம் ஊரில் இல்லாத போது நடந்த குளறுபடிகளினால் பாரதியின் மனம் புண்பட்டிருப்பதையும் அவர் அறிவார். பாரதிக்கு எழுத்து சம்பந்தமாக எவ்வளவு பணி கொடுத்தாலும் அதை ஒரு சுமையாகக் கருதாமல் செய்வார் என்பது ஆச்சார்யாருக்குத் தெரியும். எனவே ‘விஜயா’ பத்திரிகையின் முழுப்பொறுப்பையும் பாரதியிடம் ஒப்படைத்தார். . .
புதுவையில் விஜயா வெளிவரப்போகும் விளம்பரம் இந்தியா பத்திரிகையில் வெளிவந்தது

Subbaier Ramasami

unread,
Apr 18, 2022, 10:11:34 AM4/18/22
to santhavasantham
217

பாரதி  நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது நமக்கு நன்கு தெரியும். அந்த மாவட்டத்தில் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயில் மிகவும் பிரசித்தம். 1910ம் வருடம் ஜனவரி மாதம் 13ந்தேதி தைப்பூசத் திருவிழாவில் சிந்துபூந்துறையில் நெல்லையப்பருக்குத் தீர்த்தவாரி நடந்தது. மறுநாள் வழக்கப்படி தெப்போத்சவம் பல விதமான வாண வேடிக்கைகளுடன் விஷேஷமாய் நடந்தது.

மறுநாள் தெப்பத்தை அவிழ்ப்பது வழக்கம். ஆனால் அந்த ஆண்டு தெப்பத்தை அவிழ்க்கவில்லை.

தெப்பத்தை அவிழ்க்க வேண்டாதபடி அப்படி என்னதான் நடந்தது? பாரதி மனம் நொந்து கோபப்படும் அளவுக்கு என்னதான் நடந்தது?

 

பாரதி விஜயாவிலும் இந்தியாவிலும் அதைப்பற்றி “நெல்லையப்பரும் வெள்ளையப்பரும்” என்ற தலைப்பில் எழுதினார்

“அவ்வூர் முனிசிபல் செக்ரட்டரி, கோவில் தர்மகர்த்தா , போலீஸ் இன்ஸ்பெக்டர் இவர்கள் மூவரும் சேர்ந்து , அதே இடத்தில் அதே தெப்பத்தில் மறுநாள் சாயங்காலம் முதல் நாளைவிட அதிக அலங்காரங்கள் செய்து தீவட்டி , மத்தாப்பு , தாஸிகள், சாமரைகள், நாகஸுரம் முதலான

ஸங்கீத மேள வாத்தியங்கள் முதலானவைகளுடன் வெகு அட்டகாசமாய் ஜில்லா ஜட்ஜி, போலீஸ் சூப்ரிண்டெண்டு, ஜில்லா ஸர்ஜன், ஜில்லா எஞ்சினீயர்  ஆகிய நான்கு துரைகளையும்  இவர்களின் துரைசானிகளுடன் தெப்பத்தில் ஏற்றி ஏழு சுற்று இழுத்து ஆங்கில உத்ஸவத்தைப் பூர்த்தி செய்தார்கள். இத்துடன் போதாமல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹேட்டுகள், துரைகளின் பட்லர்கள். ஆயாமார்கள், வண்டிக்காரக் குசினிகள் இவற்களுக்குப் பிற்பாடு தெப்ப உத்ஸவம் நடந்ததாம். அந்தக் கடிதத்தை நாம் நாளைக்குப் பதிப்பிக்கிறோம். ராஜவிஸ்வாசிகளின் லக்ஷணம் இதுதான் போலும். நமது தெய்வங்களின் ஸ்தானத்தில் பரங்கிகளை உட்காரவைத்துத் தெய்வங்களுக்குச் செய்யும் உபசாரங்களைச் செய்ய அந்தத் தர்மகர்த்தாவுக்கும் மற்ற இரண்டு இந்தியக் கனவான்களுக்கும் எப்படி மனம் ஒப்பியதோ தெரியவில்லை. இனி இவர்கள் கோயிலின் விக்கிரகங்களை உடைத்து, ஆங்கில அதிகாரிகளை அவ்விடம் வைத்து, தெய்வங்களின் நகைகளை அவர்களுக்குச் சாற்றி, அவர்கள் காலில் விழுவார்கள் போலும்! சபாஷ்! இதுவன்றோ ராஜபக்தி!. நாட்டில் கேட்பாரில்லாமல் போய்விட்டது. “ பாரதி உள்ளம் எவ்வளவு நொந்திருக்கவேண்டும்!

 

Subbaier Ramasami

unread,
Apr 19, 2022, 7:03:40 AM4/19/22
to santhavasantham

தமிழைப் பற்றி யாராவது குறைகூறினால் பாரதிக்குக் கோபம் வந்துவிடும். கட்டுரையிலும் கவிதையிலும்பல இடங்களில் தமக்குத் தமிழ் மொழியைத் தவிர நாலைந்து பாஷைகள் தெரியும் என்றும் தமிழுக்கு நிகர் எதுவும் இல்லை என்றும் கூறினார்.. பாப்பாப் பாட்டில் கூட

“சொல்லிலுயர்வு தமிழ்ச் சொல்லே- அதைத்

தொழுது படித்திடடி பாப்பா”

என்கிறார். அப்படிப் பட்ட தமிழ் மொழியைக் குற்றம் சொல்ல அனுமதிப்பாரா? .   அறிவியல் படிப்புக்குத் தமிழ் உகந்ததில்லை எனச் சிலர் கூறியபொழுது  அதற்கு மறுமொழி பகரும் வககயில் பிஎ பட்டப்படிப்பில் தேர்வு பெற்ற ஒரு மாணவனும் தமிழ்ப்புலவர் ஒருவரும் பேசிக்கொள்வதாக ஒரு உரையாடலை அமைத்துத் தனது கருத்தைப் புலவர் வாயிலாக இந்தியா பத்திரிகையில் வெளியிட்டார்..

 

அறிவியல் படிப்புக்குத் தமிழில் வார்த்தைகள் கிடையா என்று மாணவன் சொல்லப் புலவர் சொல்லுகிறார்

“... .. .. நீராவியினால் ஓட்டப்படும் ரெயில் வண்டி இந்நாட்டிலே வழக்கமாய் இருக்கிறது. இப்பொழுது பொது ஜனங்கள் அதற்கு வார்த்தை ஏற்படுத்திக்கொள்ளாமலா இருக்கிறார்கள்? மின்சார சக்தியால் தந்தி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு நம்மக்கள் வார்த்தை உண்டாக்கி கொள்ளவில்லையா?கோவணம் இல்laaத நிர்வாண தேசத்தாரின் பாஷையிலே பட்டு அங்கவஸ்திரத்துக்குப் பெயர் கிடையாதென்றால் அதற்கு அந்தப் பாஷையின் மேல் என்ன குற்றம் இருக்கிறது?துணியைக் கொண்டுக் கொடுத்து வழக்கப்படுத்தினால் முறையே வார்த்தைகளும் உண்டாக்கிக் கொள்வார்கள்.  தமிழ் நாட்டிலே தொழில் வகைப்பாடும் ஆலோசனை மிகுதியும் ஏற்பட்டால் தமிழ் பாஷை அன்றைக்கே வளர்ந்துவிடும். இப்படிக்கின்றி இந்தப் பாஷையையே ஒழித்துவிட வேண்டும் என்று சொல்லுவது மிக மூடத்தனம் அல்லவா?  கண்ணிலே வியாதி கொண்டிருக்கும் ஒருவன் அதன் மூல காரணங்களைத் தெரிந்து கொண்டு ஔஷதப் பிரயோகம் செய்யாமல் , இந்தக் கண்களை ஒழித்துவிட்டு நல்ல பிரகாசமுள்ள இரண்டு பிரான்ஸ் தேசத்துக்கு  கண்கள் வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும் என்று யோசிப்பது நல்ல அறிவாகுமா? உன் கண்களை நீக்கிவிட்டுப் பிரான்ஸ் தேசத்துக் கண்களை வைத்துக்கொள்வது சாத்தியமா/”

 

 மாறி வரும் காலத்திற்கேற்ப தமிழில் உள்ள சில எழுத்துக் குறைகளைச் சீர் செய்தால் தமிழால் எல்லாம் முடியும் என்று எண்ணினார் பாரதி.

 

Subbaier Ramasami

unread,
Apr 19, 2022, 10:26:41 PM4/19/22
to santhavasantham
219

. பாரதி  குறுகிய மனம் கொண்டவரல்ல. உலகத்தின் எந்த மூலையில் எந்த மக்களுக்கேனும் இன்னல் நேரிட்டாலும் பாரதியின் மனம் கலங்கியது. இயற்கை உத்பாவங்கள் நிகழ்ந்து பெருத்த சேதமேற்பட்டால் அதைப்பற்றிப் பத்திரிகையில் எழுதியதோடு மட்டுமின்றி பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு நிதி திரட்டிக் கொடுக்கவும் முயன்றிருக்கிறார். 1910ம் வருட ஆரம்பத்தில்  சேன் நதி பெருக்கெடுத்ததால் பாரிஸ் மாநகரில் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. சில இடங்களில் இருபத்திரெண்டடி ஆழம் வரை தண்ணீர் தேங்கியிருந்தது. கால்நடைகள் பல இறந்து போனதனால் அவற்றின் பிணங்கள் நீரில் மிதந்தன. நீர் கெட்டுப்போனதால் வியாதி பரவத் தொடங்கியது. இந்நிலையில் “அபாஷ்: என்னும் அயோக்கியத் திருடர்கள் மக்களைக் கொள்ளையடித்தார்கள். அவர்களை அந்தச் சூழ்நிலையில் கட்டுப்படுத்த இயலாதாகையில் அவர்களைக் கண்ட இடங்களில் சுட்டுத்தள்ளும் படி காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.  வெள்ளச் சேதத்தைப்பற்றி மிக விரிவாக பாரதி எழுதினார். அவ்வளவு கண்டிப்பான உத்தரவில்லாவிட்டால் அச்சமயத்தில் பந்தோபஸ்து செய்வது கஷ்டம் என்பதனால் சீரழிவு செய்யும் ‘அபாஷ்’ திருடர்களைச் சுட்டுக் கொல்லும் உத்தரவையும் ஆதரித்து எழுதினார்

 

இத்தோடு விட்டிருந்தால் ஒரு பத்திரிகை ஆசிரியரின் செய்தி வெளியீடாக இருந்திருக்கும். ஆனால் கஷ்டப்படும் மக்களுக்காக நிதியுதவி அளிக்கும் படி வேண்டுகோள் விடுத்ததோடு ஜனவரி 28ந்தேதி வரை பத்திராதிபர்கள் மூலமாக 1036302 பிராங்குகள் சேர்த்து அனுப்பபட்டுள்ளது எனக் கணக்கும் கொடுத்தார். அத்தோடு நிறுத்தவில்லை. நன்கொடை அனுப்ப வேண்டிய முகவரியையும் கொடுத்தார்.  Le Syndicat, 37, Rue Chateaudun, Paris
பாரதி உண்மையிலேயே உலக மகாகவிதான்

Subbaier Ramasami

unread,
Apr 20, 2022, 8:32:03 PM4/20/22
to santhavasantham
220

ஒரு குண்டூசியைக் கொண்டுவந்து காட்டினால் எப்படி ஒரு சிறு கம்பியில் குண்டுத்தலையை வைத்தான் எம்றுவியந்துகொண்டிருந்த மக்களுக்கு அதைவிடப் பெரிய சாதனைகளையெல்லாம் நம்மவர்கள் செய்திருக்கிறார்கள் என்று எடுத்துக்காட்டினார். நாட்டுமக்களைச் சுதந்திரத்திற்குத் தயார்ப்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சமுதாய மாற்றங்களுக்கும் , அறிவியல் எழுச்சிகளுக்கும் தயார்ப்படுத்துவது என்று எண்ணினார். அவரது கவிதைகளும் உரைநடையும் அம்முயற்சிக்குச் சாதனங்களாயின.


On Tue, Apr 19, 2022 at 9:26 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
219

Subbaier Ramasami

unread,
Apr 21, 2022, 9:19:57 AM4/21/22
to santhavasantham
221
#தினமொருபாரதிசிந்தனை
221 கல்கத்தாவைச் சேர்ந்த ஜகதீச சந்திர வசு, மார்க்கோனி கம்பியில்லாத் தந்தியைக் கண்டுபிடிக்கும் முன்னமேயே கண்டுபிடித்துவிட்டார். ஆனால் கம்பியில்லாத் தந்தியைக் கண்டுபிடித்த பெருமை மார்க்கோனிக்குப் போய்விட்டது. அதற்குக் காரணம் இங்கே ஆண்டு வந்த பிரிட்டிஷ் அரசு என்பதை பாரதி அறிந்தார். கல்கத்தாவில் சகோதரி நிவேதிதாவைச் சந்தித்த போது ஜகதீச சந்த்ரவசுவுக்கு ஆராய்ச்சிக்கு வேண்டிய வசதிகள் செய்துகொடுக்காமலும், அதிக வேலைகொடுத்து ஆராய்ச்சி செய்ய விடாமல் தடைசெய்ததையும்பாரதியிடம் சொன்னார். சகோதரி நிவேதிதை வசுவுக்கு ஆங்கில நிர்வாகம் செய்யும் கொடுமைகளை எதிர்த்துப் போராடினார். இவையெல்லாம் பாரதிக்குத் தெரியும். எனவே “தந்தியில்லாத தூர பாஷைக் கருவியை மார்க்கோனி பண்டிதர் உலகத்துக்கு வழக்கப்படுவதற்கு முன்பே ஜகதீச சந்திரர் அந்த விஷயத்தைப் பற்றித் துல்லியமான ஆராய்ச்சிகள் செய்து முடித்திருந்தார்” என எழுதினார். பின்னாளில் ‘உயிரின் ஓலி” என்ற கட்டுரையில் ஜகதீச சந்திரவசுவின் “தாவரங்களுக்கும் உயிருண்டு” என நிரூபித்த ஆராய்ச்சியைப் பற்றி மிக அற்புதமாக எழுதினார்.. “பராசக்தி நல்ல வேளையில் நமக்கு உயர்ந்த வைத்தியர் பலரை அனுப்பினாள். அவளுக்கு நம் மீது கிருபை வந்துவிட்டது. எனவே பிழைத்தோம். இதுவரை ஐரோப்பிய பண்டிதர்கள் இயற்கை நூல் (பிரகிருதி சாஸ்திரம்) தமது விசேஷ உடைமை என்று கருதிவந்தார்கள். இப்போது நமது ஜகதீச சந்த்ர வசு அந்த வழியில் நிகரற்ற திறமை பெற்றவர் என்பதை மேல்நாட்டு வித்வான்களில் ஒப்புக்கொள்ளாதவர்கள் யாருமில்லை. ஒரு இந்திய விஞ்ஞானியின் வெற்றியைக் கண்டு பெருமிதம் கொண்ட பாரதி தமிழ் நாட்டுத் தொழிலாளர்களின் செயல்திறனைக் கண்டு விம்மிதம் அடைந்தார். சென்னையில் உள்ள சிம்சன் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ்த் தொழிலாளர்கள் செய்த ஒரு சாதனைதான் பாரதியைப் பெருமிதம் கொள்ளச் செய்தது. ரைட் சகோதரர்கள் ஆகாய விமானத்தைக் கண்டு பிடித்த பிறகு ஒவ்வொரு நாடும் ஆகாயவிமானம் செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கின. இந்தியாவில் யாரும் அப்படி முயலவில்லையே என்று பாரதி வருந்தினார். அதற்குக் காரணம் என்ன என்பது தெரிந்ததுதானே! “எப்போதும் சோறு சோறு என்று கூக்குரல் இடும்படி ஒரு ஜன சமூகத்தை வைத்திருந்தால் அவர்களுக்கு விமானங்களைக் குறித்து யோசிக்க மனம் வருமா? சென்ற ஐம்பது வருஷ காலமாகக் கஷ்டமாம் கஷ்டம் என்னும் கவலை பரவி வரும் இராஜ்ஜியத்தில் ஆகாய சலனத்தைக் குறித்துச் செலவு செய்ய யார் துணிவார்கள்.? கொஞ்சம் வயிற்றுப்பாட்டுகுக் கஷ்டமில்லாத தம் சிற்றரசர்களுக்குக் கூட இதில் மனம் செல்லவில்லை. அவர்களும் இந்தியர்கள்தானே? நம் ஜாதிக்கு நேர்ந்த விபத்து இவர்களையும் விடவில்லை.” பாரதியின் இந்த ஏக்கத்தைப் போக்குவது போல ஒரு நிகழ்ச்சி சிம்சன் கம்பனியில் நிகழ்ந்தது. டி ஆஞ்சலிஸ் என்னும் பிரஞ்ச்காரர் வடிவமைத்த ஒரு விமானத்தைச் சிம்சன் நிறுவனத்தில் பணி புரிந்த தமிழ் வேலைக்காரர்கள் உருவாக்கிச் சென்னைப் பல்லாவரத்தில் வெள்ளோட்டம் விட்டனர். அதை அறிந்த பாரதியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதைப் பற்றிய முழுவிவரத்தையும் திரட்டினார் அந்த விமானம் இரண்டு குதிரை சக்தியில் செய்யப்பட்டதென்றும் வெற்றிகரகமாக வெள்ளோட்டம் விட்டபிறகு அதில் 25 குதிரைசக்தி கொண்ட எஞ்சினைப் பொருத்தி வேலைசெய்து வருகிறார்கள் என்றும் அதன் எடை எஞ்சின் ஆளோடு சேர்த்து 700 ராத்தல் இருக்கும் என்றும் அது முடிந்தபிறகு அது எல்லா ஜனக்களுக்கும் காட்டப்படும் என்றும் எழுதினார். .

Subbaier Ramasami

unread,
Apr 21, 2022, 9:22:43 AM4/21/22
to santhavasantham
image.png

Subbaier Ramasami

unread,
Apr 23, 2022, 9:11:53 AM4/23/22
to santhavasantham
222

1910ம் வருடத்தில் மார்ச்சு மாதத்தில் 75 வருடத்துக்கு ஒருமுறை தோன்றும் ஹேலிஸ் காமட் என்னும் வால்நட்சத்திரம் தோன்றியது. வால்நட்சத்திரம் தோன்றினால் அரசர்கள் யாராவது சாவார்கள் என்பது ஒரு நம்பிக்கை.  ஆனால் பாரதி அந்த வால்நட்சத்திரைப் பற்றிய அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் அனனத்தையும் திரட்டினார். வால்நட்சத்திரம் பனிக்கட்டியால் ஆன ஒரு அமைப்பு  அதன் தலையின் மையப்பகுதி பனி, தூசி வாயு முதலியவற்றால் ஆனது. இதன் வால் 250 மில்லியன் கிலோமீட்டர் நீளம் வரை இருக்கும். வால்பகுதி சூரியனை நோக்கி வரும் போது வளர்ந்து விட்டு விலகிச் செல்லும் போது குறைந்து மறைந்துவிடும்.  75 ஆண்டுகட்கு ஒரு முறை.வரும்

 

இந்தச் செய்திக்களையெல்லாம்  உள்ளடக்கிச் “சாதாரண வருடத்துத் தூமகேது” எனும் தலைப்பில் கவிதை எழுதினார் பாரதி

“”.. ..

எண்ணிலாப் பல கோடி யோசனை எல்லை

எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்

புனைந்த நின்னொடு வால் போவதென்கிறார் .”

என்று அறிவியல் கருத்துகளைக் கூறுகிறார்.

 

பாரதி தான் எழுதிய புதிய ஆத்திசூடியில்

‘வான நூற் பயிற்சிகொள்”

என்கிறார்

பிறிதோர் இடத்தில்

“உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்

ஓர்ந்தறிந்ததோர் பஸ்கரன் மாட்சியும்” என்கிறார். அவருக்கு வான நூலிலே அதிகம் ஈடு பாடு உண்டு.

 

பூமிக்கு மிகவும் அருகில் இருக்கும் நட்சத்திரத்தின் பெயர் ப்ராக்ஸிமா செண்டாரை. ஆனால் பாரதி வாழ்ந்த காலத்தில் இந்த நட்சத்திரம் கண்டு பிடிக்கப்படவில்லை. வானத்திலேயே மிகவும் பிரகாசமான நட்சத்திரம் சிரியஸ்தான் மிக அருகாமையில் இருக்கும் நட்சத்திரம் என்று நம்பினார்கள்.

ஒளி ஒரு வினாடிக்கு 1 லட்சத்து எண்பத்தாறாயிரம் மைல் தொலைவு செல்லக்கூடியது

 

வானத்தில் நடசத்திரங்கள் எண்ணற்றவை. இவற்றையெல்லாம் உள்ளடக்கி பாரதியார் கவிதை எழுதியிருக்கிறார். அந்தக் கவிதையில் டெலெஸ்கோப்பைப் பற்றியும் குறிப்பிடுகிறார். நட்சத்திரங்கள் இத்தனை என்று கணக்கிட முடியுமா? அதற்கும் ஒரு கணக்குச் சொல்கிறார்.

“மீனுள கோடி கோடி மேற்பல கோடி கோடி. அதாவது கோடி கோடி டு தெ பவர் ஆஃப் பலகோடி கோடி என்று பொருள். இதை எப்படிக் கணக்கிடுவது.?

 

3-4-1909 இந்தியாவில் திசை என்ற தலைப்பில் வெளியான கவிதையில்தான் இவ்வளவு செய்திகளும் உள்ளன.

“ஒரு நொடிப் பொழுதில் ஓர் பத்து

ஒன்பதாயிரம்மாங் காதம்

வருதிறலுடைத்தாஞ் சோதிக்

     கதிரென வகுப்பாரோன்றோர்” என்கிறார். ஓர்பத்து ஒன்பதாயிரம் காதம் என்பது 19000 காதம். அதாவது ஒரு லட்சத்துத் தொன்னூறாயிரம் மைல்(1,86000க்குப் பக்கம்)

 

 

“ஆண்டு மூவாயிரத்தினில்  விரைந்தோர் மீனின்

ஓட்டிய கதிர்தான் இங்ஙன் உற்றிடும் தகைத்தும் உண்டே”

 

மூவாயிரம் லைட் இயர்  உள்ள நடசத்திரத்தை இங்குக் குறிப்பிடுகிறார். மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பு ஓட்டிய கதிர்தான் இப்பொழுது வந்துள்ளது என்பதைச் சொல்லுகிறார்.

 

இதே போல அண்ட கோளங்களுக்கு இடையே உள்ள தூரத்தைக் கணிப்பதற்கும் ஒரு கணக்குச் சொல்லுகிறார் பாரதி

“மண்டலத்தை அணுவணு வாக்கினால் வருவதெத்தனை

அத்தனை யோசனை

கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை” என்கிறது அவர் கவிதை

 

இப்படி விஞ்ஞானக் கருத்துக்களைப் பாரதி. உரைநடையிலும் கவிதையிலும் அள்ளி வீசியிருக்கிறார். 

Siva Siva

unread,
Apr 23, 2022, 9:17:46 AM4/23/22
to santhavasantham
Nice.

Minor typo. Should be தொண்ணூறு....

V. Subramanian

On Sat, Apr 23, 2022 at 9:11 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
222

....பூமிக்கு மிகவும் அருகில் இருக்கும் நட்சத்திரத்தின் பெயர் ப்ராக்ஸிமா செண்டாரை. ஆனால் பாரதி வாழ்ந்த காலத்தில் இந்த நட்சத்திரம் கண்டு பிடிக்கப்படவில்லை. வானத்திலேயே மிகவும் பிரகாசமான நட்சத்திரம் சிரியஸ்தான் மிக அருகாமையில் இருக்கும் நட்சத்திரம் என்று நம்பினார்கள்.

Subbaier Ramasami

unread,
Apr 23, 2022, 6:58:40 PM4/23/22
to santhavasantham
நன்றி.

On Sat, Apr 23, 2022 at 8:17 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
Nice.



Subbaier Ramasami

unread,
Apr 24, 2022, 11:22:46 AM4/24/22
to santhavasantham
223

தான் மிகவும் மதித்த விபின் சந்தர் பாலர் இங்கிலாந்துக்குப் போனதன்பின் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் லிபெரல் கட்சியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். லிபெரல் கட்சி ஆட்சிக்குவந்தால்தான் இந்தியாவுக்கு நல்லது என்று பேசினார்.  அவரது செய்கை பாரதிக்குப் பிடிக்கவில்லை. தான் மிகவும் மதிக்கும் தலைவர்தான் என்றாலும் ஒவ்வாதன செய்தால் தாங்கிக்கொள்வாரா பரதியார்?. விஜயா வில் அவரது செய்கையைத் தாக்கி எழுதினார்.

“விபின் சந்த்ர பால் இதுவரை இந்திய அரசியலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். இப்பொழுது ஆங்கில அரசியலைப் பற்றிப் பேசுகிறார். .. லிபெரல் கட்சி ஆட்சிக்கு வந்தால்தான் இந்தியாவுக்கு நல்லதென்று பேசியுள்ளார். என்ன நன்மையென்று கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           பொதுக்கூட்டத் தடை, கொடிய பத்திரிகைச் சட்டம், இராஜத்துரோகச் சட்டம், நாடுகடத்தும் சட்டம் எல்லாமே லிபெரல் கட்சியில் ஆட்சியில்தான்- லார்ட் மிண்டோ லார்ட் மார்லியின் அதிகாரத்தில் நடந்தது. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி? .எந்தக்கட்சி பதவிக்கு வந்தாலும் இரண்டும் ஒன்றுதான். இந்தியாவின் ஆட்சியைப் பொறுத்த மட்டில் இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்” என்று எழுதினார்.

 

 நாட்டில் எந்த மூலையில் அநியாயம் நடந்தாலும் அந்த அநியாயத்தைச் சம்பந்தப்பட்டவர்கள் தட்டிக்கேட்கா விட்டாலும்  அந்தப் பகுதியில் உள்ளவர் கண்டு கொள்ளாமல் விட்டாலும் பாரதி மனத்துக்கு அது அநியாயம் என்று பட்டால் அதனால் தனக்குத் தீங்கு வருமாயினும் தட்டிக்கேட்காமல் விடமாட்டார்.. அரவிந்தரின் நாசிக் பேச்சை வெளியிட்டதற்காக தேசசேவக் என்ற பத்திரிகையின் ஆசிரியர் ஏ.பி. கோல்ஹாட்கர் மீது பத்திரிகைச் சட்டம் பாய்ந்தது. அவருக்கு நாக்பூர் நீதிபதி கடுங்காவல் தண்டனை வழங்கினார். அதுமட்டுமல்ல . சிறைச்சாலையில் பயங்கரமாகக் கொடுமைப்படுத்தப்பட்டார்.  அந்தக் கட்டுரை எழுதிய அரவிந்தர் மேல் வழக்குத் தொடுக்கப்பட்டது.

அதை விசாரித்த கல்கத்தா நீதிபதி அரவிந்தர் பேச்சில் எந்தக் குற்றமும் இல்லை என்று அவரை விடுவித்தார். ஆனால் அவர் பேச்சை வெளியிட்ட கோல்ஹட்கரை விடுதலை செய்யவில்லை. நீதிபதிகளுக்கிடையே கௌரவப்பிரச்சினை. இதைப் பாரதி தட்டிக் கேட்டார். தண்டனையை ரத்து செய்யாவிட்டலும் அவரைச் சிறையில் கொடுமைப்படுத்தாமலாவது இருக்கக்கூடாதா? இது என்ன நியாயம்?” என்று விஜயா பத்திரிகையில் எழுதினார் பாரதி.

Subbaier Ramasami

unread,
Apr 25, 2022, 9:29:54 AM4/25/22
to santhavasantham
224

சுதந்திரானந்தா என்னும் பெயரில் பாரதி விஜயா பத்திரிகையில் “அரசுக்கு எதிரான எழுச்சியை அடக்குவது எப்படி?” என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார் . அந்தக் கட்டுரையை இன்று படித்தாலும் கண்ணில் நீர்சுரக்கும். ஆங்கில அரசின் ஆதரவாளர்களும் அரசுச் சார்புடைய பத்திரிகைகளும் அராஜகத்தை அடக்க என்னென்ன செய்யவேண்டும் என்று சொன்னார்கள் என்பதைப் பட்டியலிட்டுவிட்டுப் பாரதி அன்று நாடிருந்த நிலையை அலசினார். வெள்ளைக்காரன் கொலை செய்தாலும் குற்றமில்லை. ஆனால் அதை எதிர்த்துக் கேட்டால் இராஜதுரோகம் என்ற நிலை.

அதற்கு அரசில் பணி புரியும் இந்திய அதிகாரிகளும் ஒத்துப்பாடினார்கள்

சில அநியாயமான நிகழ்ச்சிகளைப் பற்றிப் பாரதி எழுதினார்.

“காபித் தோட்ட முதளாளியாகிய ஒரு வெள்ளையன் ஒருகூலியை ஆணி பொறுத்திய பூட்ஸ் அணிந்த காலால் எட்டி உதைக்க அவன் இறந்து போனான்.. கூலியாள் மாரடைப்பால் இறந்தான் என்று வெள்ளையன் விடுவிக்கப்பட்டான்.  வெள்ளையர்கள் கிராமங்களில் புகுந்து ஆடு கோழி திருடும் போது கிராம மக்கள் தடுத்துக்கேட்க அவர்களைச் சுட்டுக்கொன்றனர். ஆனால் அவர்கள் குறி தவறி அவர்களைக் கொன்றுவிட்டதாகக் கூறி. இரண்டு ரூபாயோ மூன்று ரூபாயோ அபராதம் விதித்து விடுவித்தனர்

எதிர்ப்பு அதிகமானால் குற்றஞ்சாட்டப் பட்டவன் பைத்தியம் என்று சொல்லி மருத்துவ மனைக்கு அனுப்பி அங்கே அவனுக்கு வேண்டிய எல்லா வசதிகளும் செய்து கொடுத்துப் பின்னர் விடுவித்தனர்.

...  ..  ..  .. இந்தியாவிலிருந்து ஏகப்பட்ட செல்வம் சுரண்டப்படுகிறது, கொள்ளையடிக்கப்பட்டு இந்கிலாந்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது என்று எழுதினால் அது ராஜத்துரோகம்.மக்கள் பட்டினியால் சாகிறார்கள் என்று எழுதினால் இராஜ துரோகம்.. யாராவது உடற்பயிற்சி செய்தால், அது இராஜத்துரோகம். அரசுக்கு எதிராகப் போராட உடலை வலிமைப் படுத்திக்கொள்கிறானே என்பதுதான் கற்பனையான காரணம். உள்நாட்டு ஆடை வாங்கினால் இராஜதுரோகம். “ இன்று என் தந்தையின் திதி. எலும்பு பயன்படுத்திச் சுத்தப்படுத்தாத சர்க்கரை கொடு’ என்று கடைக்காரனிடம் கேட்டால் இராஜதுரோகம்.. கோயிலில் நின்று அம்மா தாயே  கும்பிடுகிறேன் காப்பாற்று என்று சொன்னால் இராஜ துரோகம். ஏனென்றால் அது வந்தேமாதரம் சொல்லுவதற்குச் சமம். மனைவி சுதேசிய வேட்கை கொண்டிருந்தால் கணவன் அரசிடம் தெரிவிக்காமல் இருந்தால் இராஜ துரோகம். யாரும் சன்னியாசி ஆகக்கூடாது. அப்படிச் சன்னியாசி ஆனால் அது இராஜத்துரோகம். ஏனென்றால் சன்னியாசிகள்தானே வாரன் ஹேஸ்டிங்கின் ஆட்சியின் போது கலவரம் செய்தார்கள்!   . தேசியப்பள்ளிகளில் ஹரி ஓம் நமசிவாய சொல்லக்கூடாது. பகவத் கீதை படிக்கக்கூடாது ஹரிகதா காலக்ஷேபங்கள் நடத்தக்கூடாது   இவையெல்லாம் இராஜத்துரோகம். “ இது வெறும் சாராம்சம்தான் பிறகு அராஜகத்தை ஒழிக்க அரசு செய்யவேண்டிய நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார்.  பாரதி கொடுத்த பட்டியலின் படி அரசு செயற்படாது என்பது அவருக்குத் தெரியும். என்றாலும் ஊதுகிற சங்கை ஊதிவைப்போம் என எண்ணி எழுதினார். அதன் முத்தாய்ப்பாக

“நியாயமான உரிமைகளை வழங்கவேண்டும்.பிரித்தாளும் சூழ்ச்சியைக் கைவிடவேண்டும். அழுகிற குழந்தைக்கு வாழைப்பழத்தைக் காட்டிச் சமாதானம் செய்ய முயல்வது போல ஒன்றுக்கும் உதவாத சீர்திருத்தங்களைக் காட்டி மக்களை ஏய்க்ககூடாது.இதையெல்லாம் செய்யவில்லையென்றால் அரசுக்கு எதிராக மக்கள் எழுவதைத் தடுக்க முடியாது”என்று எழுதினார்    அரசு இந்தியா பத்திரிகையைத் .தடை செய்யச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தது




Subbaier Ramasami

unread,
Apr 26, 2022, 9:26:27 AM4/26/22
to santhavasantham
225

இப்படியெல்லாம் துணிவான எழுத்துக்கள் வெளிவரும் பத்திரிகைகளை அரசு சும்மா விட்டுவிடுமா? இந்தியாவையும் விஜயாவையும் கடுமையாகக் கண்காணித்தனர்.பாரதியாரின் எழுத்துக்களெல்லாம் மொழி பெயர்க்கப்பட்டு ஆங்கில அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டன.

 

இந்தியாவில் தொடங்கி நடத்தப்பட்டு நின்று போன பால பாரதா ஆங்கிலப் பத்திரிகை

மீண்டும் தொடங்கப்பட்டது. ஆசிரியர். சி.சுப்பிரமணிய பாரதி.   வருடச் சந்தா மூன்று ரூபாய்

மாணவர்களுக்கு இரண்டு ரூபாய். சந்தாதார்களுக்கு அரவிந்தரின் பிரசங்கங்கள் அடங்கிய புத்தகம் இலவசமாகக் கொடுக்கப்பட்டது

 

‘இந்தியா’ பத்திரிகை அலுவலகத்துக்குள் வெவ்வேறான வேடங்களில் ஒற்றர்கள் வந்து சென்றனர்.

 

“இந்தியா’ இதழ் அலுவலகத்திற்கு வந்து சென்ற சிலரைப் பற்றிக் கடுமையான முறையில் பாரதி எழுதினார்:

 

“”நமது இந்தியா ஆபீஸிற்கு அநேக கனவான்கள் விஜயம் செய்தனர் . ஆனால் சில சமயங்களில் வயிறு பிழைக்க மனத்தையும் மானத்தையும் ஞானத்தையும் பைசாவுக்கு விற்றுவிட்ட அயோக்கிய நாய்களும்  பன்றிகளும் கழுதைகளும் கூட எமது ஆபீஸ்ச் உள்ளே வந்தும் வெளியே யிருந்து போய்விட்டதாகத் தெரிகிறது”

 

1909 ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாள் வெளிவந்த இந்தியா இதழில் வெளியிடப்பட்டுள்ள கருத்துப் படம் மார்லி சீர்திருத்தத்தைக் கேலி செய்கிறது. இது விளைவிக்கும் தாக்கத்தை 40 பக்கக் கட்டுரை கூட விளைக்க முடியாது

 

“ மார்லி என்ற யானை சென்ற மூன்று வருடமாய்க் கர்ப்பமாய் இருப்பதுபோல் வயிறு பெருத்துக் காணப்பட்டது. நல்ல குட்டி போடும் என்று மித வாதிகள் அதனை வழிபட்டு வந்தனர். இப்போது அந்த யானையின் வயிற்றிலிருந்து வெளியே வந்து விழுந்து விட்டது. என்ன குட்டியா? இல்லை, இல்லை. ஏழு லத்தைகள். அதில் இரண்டொரு விளாங்கனிகளும் இருந்தன. . மிதவாதிகளும் ராஜ விசுவாஸிகளும் ஆசையாய் ஓடிப் வந்து பார்த்தார்கள். எல்லாமே லத்தைதான். இதையெல்லாம் கண்ட இந்துக்களும் முகம்மதியர்களும் ஏமாந்து போய் மிரள மிரள விழிக்கிறார்கள்.”

 

Subbaier Ramasami

unread,
Apr 27, 2022, 9:24:53 AM4/27/22
to santhavasantham
226

ஞானரதம் போலொரு நூல் நானிலத்தில் இல்லையடி!

 

 

“சென்னையிலே வீரராகவ முதலித் தெருவிலே ஒரு ஒண்டுக்குடித்தனத்திலே இருந்தோமே, அப்போ ரொம்ப சந்தோஷமா இருந்தேன்னு நெனக்கிறேன் செல்லம்மா” என்றார் பாரதி

 

“அதிலே என்ன சந்தேகம்! ஒண்டுக்குடித்தனம்தான். இடம் சின்னதுதான். இதிலே சின்னம்மா சித்தி, நீங்க, நான், குழந்தை தங்கம்மா  தம்பி விஸ்வநாதன் என  நெறையப்பேர் இருந்தாலும் அங்கே இருந்தவாள் மனசு விசாலமா இருந்ததாலே ரொம்பச் சந்தோஷமாத் தான் இருந்தோம்” என்றாள் செல்லம்மா

“ செல்லம்மா, அந்த ராயரையும் ராயர் மாமியையும் நெனைச்சா இன்னைக்கும் சிரிப்புத்தான் வருது. குஞ்சும்  குளுவானுமா எத்தனை குழந்தைகள்.  கொஞ்சமும் கல்மிஷமில்லாமல் எதையாவது பேசிண்டு, எப்பவும் கல கலன்னு இருக்கும்”

“கஷ்டமா இருந்தாக் கூடா நம்ம சொந்த நாட்டிலே இருந்தால் அந்தச் சுகமே தனிதான். இங்கே வீடு பெரிசா இருக்கு. இருந்தாலும் ராயர் வீடுதான் மனசுலே தங்குது. இதையெல்லாம் ஏன் என்கிட்டே சொல்றேள்?”

 

“செல்லம்மா அந்த ராயர் குடும்பத்தையும், அந்த வீரராகவ முதலித் தெருவையும் நான் எழுதின ஞானரதத்திலே சாசுவத மாக்கிட்டேன். பாரேன். அவாளைப் பத்திப் பின்னாலே நெறையப்பேர் பேசப்போறா. உனக்கு நான் அதைப் படிச்சுக் காட்டட்டுமா?” என்றார் பாரதி

 

“நான் ஏற்கனவே படிச்சுட்டேன். சிரிச்சுச் சிரிச்சு வயிறு புண்ணாப் போச்சு.ஆனாலும் நான் உங்களோடு சண்டை போட்டதை யெல்லாம் எழுதியிருக்கக்கூடாது”

 “நான் ஒண்ணும் தப்பா எழுதலையே”

 

“இப்படியெல்லாம் எப்படியப்பா எழுதறேள்” என்று ஆச்சர்யப்பட்டாள் செல்லம்மா!

 

வசன இலக்கியக்கியத்தில் ஞானரதம் ஒரு காவியம். அதன் நடை தமிழ் எழுத்து அதுவரை கண்டிராத ஒரு அற்புதம். இப்படியும் தமிழ் எழுத முடியுமா என்று அந்தக் காலத்தில் பலரையும் நிமிர்ந்து பார்க்கவைத்த ஒரு உன்னதம். அது திருவல்லிக்கேணி வீரராகவ முதலித் தெருவில் தொடங்குகிறது.

`

அதிலிருந்து சிறு துளிகள்

 

நூற்றிலே தொண்ணூரு ஜனங்கள் அ(ஆனா) எழுதச் சொன்னால் தும்பிக்கை ஒன்று வரைந்து ஆனை எழுதக்கூடிய நிலையிலிருக்கிறார்கள்.

இந்த அடிமை நாட்டிலே உங்களுக்குப் பிரகிருதி தேவியின் சௌந்தர்யங்களைப் பார்த்துப் பார்த்துப் பரவசமடையச் சாவகாசம் அடிக்கடி ஏற்பட்டிருக்காது

---

.தின்பதற்கல்லாது தின்னப் படுவதற்கமைந்தன போன்ற பற்கள்.

----

தர்மலோகம்

தர்மராஜாவின் முகத்தைப்பார்த்தேன். பாலகங்காதர திலகரின் முகத்துச் சாயல் கொஞ்சம் தென்பட்டது. இலேசான சாயல்

----

முன்பகுதியில் ஒரு ராயர் பெரிய குடும்பத்தோடிருந்தார். அவருக்குப் பகல் முழுதும் உழைத்துக்கொண்டிருக்கும் படியாகத் தபால் கச்சேரியிலோ, எங்கேயோ , ஓர் உத்தியோகம். உடம்பிலே கோபிமண் முத்திரைகள் எத்தனையோ அத்தனை குழந்தைகள். அவர் மனைவி மறுபடியும் கர்ப்பம்.. ராயருக்குக் காச நோயாதலால் அவர் இருமிக் கொண்டேயிருக்கிற சப்தம் ஓயாமல் கேட்கும். அவருடைய குழந்தைகள் ஒன்று மாற்றி மற்றொன்று அழுதுகொண்டே இருக்கும். கர்ப்பிணியாகிய அவர் மனைவி இடையிடையே விழித்துக் குழந்தைகளையோ அல்லது கடவுளையோ அல்லது ராயரைத் தானோ , யாரையோ கன்னட பாக்ஷையில் திட்டிவிட்டு மறுபடியும் உறங்கிவிடுவாள்.

 

1909ம் ஆஆண்டு மேமாதம் ஞானரதம் நூலை வெளியிடும் முயற்சியைப் பாரதி மேற்கொண்டார். அதைப் பற்றிய அறிக்கை இந்தியா பத்திரிகையில் வெளிவந்தது

“ஞானரதம்- சில நண்பர்களின் வேண்டுகோளின்படி இந்நுலைத் தனிப் புத்தகமாக அச்சிட்டுப் பிரசுரிக்கத் தீர்மானம் செய்திருக்கிறது.

 

இது வரை “இந்தியா’ பத்திரிகையில் வெளிப்பட்ட உபசாந்தி லோகம், கந்தர்வ லோகம் என்ற பகுதிகளைத் தவிர ஸத்யலோகம் , தர்ம லோகம், இந்திர லோகம், உபசாந்திலோகம் (மறுபடி)முதலிய பகுதிகள் பிரசுரிக்கப்படும்.

ஸ்ரீமான் ஸி. சுப்பிரமணிய பாரதி அவர்களது இந்நூலின் சொல்லுதற்கரிய பெருமைகளைக் கண்டுகளித்தவர்களெல்லாம் உடனே பின்வரும் விலாசத்திற்குத் தமது பெயர்களை எழுதி ரிஜிஸ்டர் செய்துகொள்ள வேண்டும் . சொற்பப் பிரதிகளே அச்சிடப்படுகின்றன. இதன் விலை அணா எட்டு.

 

                              விலாசம்,:

                         பா.கி.அய்யர்

                         ‘பால பாரத மந்திரம்”

                         22, ஈசுவரன் தர்மராஜா கோயில் வீதி,

                         புதுவை

-        இந்தியா

-        29-5-1909





 

Subbaier Ramasami

unread,
Apr 28, 2022, 10:15:03 AM4/28/22
to santhavasantham
227

சௌம்ய ஆண்டு தை மாதம்(1910 ஜனவரி) பாரதி ஞானரதம் நூலை வெளியிட்டிருக்கிறார். அந்நூலின் முன்னுரையில்  பாரதியின் மகிழ்ச்சி வருத்தம் இரண்டும் வெளிப்பட்டிருக்கின்றன

புஸ்தமெழுதினால் அதற்கு முகவுரை எழுதித் தீர வேண்டுமென்ற சம்பிரதாயம் ஒன்றிருக்கிறது. உலகத்தில் எந்த வேலை செய்யப்போனாலும் சம்பிரதாயம் என்ற தொல்லையொன்று வந்து முன்னே நிற்கிறது..ஆனால் , நான் இதை அதிகமாக் நீட்டிப் படிப்பவர்களை ஆயாஸப்படுத்த உத்தேசமில்லை. ஒரே வார்த்தை மட்டிலும் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

 

அதாவது இந்த நூலை நானாக எழுதினதில்லை. எல்லாம் நடத்தும் பரமாத்மா ஞானதீரமில்லாத ஏழையேனைக் கொண்டு ஞானரததில் ஏற்றினான். எத்தனையோ வினோதங்களில் இதுவுமொன்று .எனவே இதிலுள்ள குற்றங்குறைகளுக்கு நான் பொறுப்பாளியில்லை.” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டார்.  ஞானரதம் தொடராக வெளியிடப்பட்டபொழுது ஊக்கமளித்த மகேஷ் குமார் ர்மாவைப்பற்றி எழுதி இப்படிப்பட்ட பண்டிதர்களைத் தமிழ்நாட்டார் போதியபடி ஆதரவு செய்து அவர்களை வேறு ஸாதாரணப் பிரவிருத்திகளில் மனம் செலுத்தாதபடி காத்துக்கொள்ளவில்லை என்குறை என் மனத்தில் இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வெளிப்படையாகச் சொல்லித் தீர்த்துவிட்டேன். வந்தே மாதரம்என்று தன் மனக்குறையையும் வெளிப்படுத்தினார். பாரதியின் நிலையும் மஹேஷ்குமார் நிலைதானே!.

Subbaier Ramasami

unread,
Apr 28, 2022, 11:48:14 PM4/28/22
to santhavasantham
228

பாரதியின் ஞானரதம் என்ற நூல் இன்றளவும் நடையழகிலும் கருத்தழகிலும் வேறெந்த நூலாலும் விஞ்சப்படாத பெருமை கொண்டது. பாரதிகு பெருமையைக் காட்ட   இராஜாஜி எவ்வளவோ செய்திருந்தாலும் அவர் பாரதியைக் காந்தியிடம் சரியாக அறிமுகப்படுத்த வில்லையென்றும், பாரதி இறந்த பின்னர் சென்னைக்கு வந்த காந்தியிடம் அவரைப் பற்றி எடுத்துச் சொல்லிப் பேசச்செய்யவில்லையென்றும் குற்றச்சாட்டுகள் இருந்தாலும்  அக்குற்றச் சாட்டுகள் எல்லாம் பாரதியின் ஞானரத நூல் இரண்டாம் பதிப்பிற்கு இராஜாஜி கொடுத்த ஒரு சிறந்த முன்னுரையின் முன் ஒன்றுமில்லாமல் போய்விடுகின்றன. அவருடைய முன்னுரை இதோ:

இப்புத்தஸ்கத்தில் பாரதியார் எடுத்த விஷயங்கள் மிகப் பெரியவை. கவுரவம் ஒருபுறமிருக்க தற்காலத்தில் தமிழ் வசன நடை எவ்வாறிருக்க வேண்டுமென்பதை பாரதியார் எழுதிய இச்சிறு புஸ்தகத்தில் கண்டு களிக்கலாம். அர்த்தபுஷ்டியில்லாத அரற்றலின்றி, சொன்னதையே சொல்லிப் பாக்கள் நிறைப்பதுமின்றி, ஸ்படிகம் போன்ற தெளிவும், வைரம் போன்ற உறுதியும் பெற்று இலக்கணப் பிழைகள் ஒழிந்த பேச்சுத் தமிழையே எவ்வாறு ஆழ்ந்த கருத்துக்களை எழுதவும் சித்தரிக்கவும் உபயோகப்படுத்தலாம் என்பதைப் பாரதியார்  வசன நடையில் நாம் பார்க்கலாம். தமிழுக்குள் கிடக்கும் எல்லையற்ற சக்தியையும் லாகவத்தையும் பாரதியார் எழுத்துகளில் தமிழ் மக்கள் பார்த்து அறிந்து கொள்ள வேண்டும். பயன்கொண்ட கற்பனா சக்தியும் கொழுந்துவிட்டெரியும் நாட்டன்பும் , விசாலமான தரும ஞானமும் , நோவாத ஹாஸ்ய ரஸமும் தமிழ்த் தாயின் செல்வக் குழந்தை , வரப்பிரசாதர், பாரதியார் எழுதிய இந்த நூலில் ஜ்வலிப்பதைக் காணலாம்

 

இராஜாஜி பாரதியின் புகழ் பரப்ப எவ்வளவோ செய்திருக்கிறார்.  .இராஜாஜியும் பாரதியும் என்ற தலைப்பில் அமரர் பெ.சு மணி அவர்கள் நூலைப் படித்தால் உண்மை விளங்கும்.. சிறையிலிருந்து விடுதலையாகிக் கடயம் சென்று மீண்டும் அவர் சென்னைக்குத் திரும்பிய போது இரயில் நிலையம் சென்று வரவேற்ரிருக்கிறார். எவ்வளவு தேஜஸோடு இருந்தவர் இப்படி மாறிவிட்டாரே என்று வருந்தியிருக்கிறார். பாரதியின் பாடல்களை மொழியாக்கம் செய்து காந்திஜியின் பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார். இன்னும் பலப்பல.

Rajja Gopalan

unread,
Apr 29, 2022, 4:14:45 AM4/29/22
to santhav...@googlegroups.com
எனது தந்தையார் இதனைச் சொல்லி இருக்கிறார். ராஜாஜி அவர்கள் பாரதியை நல்லதோர் வீணை வீணாகிறதே என வருந்திய நிகழ்வுகள் உண்டு. 

தங்களின் கட்டுரை வரும் தலைமுறைக்கு நல்ல பாடம். 

நலமுடன் விளங்கி நிறைக்க இறைவன் தங்களுக்கு அருளட்டும். 

மீ. ரா 

Sent from my iPhone

On 29 Apr 2022, at 04:48, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDnpTfzVmk%3DPPJT-ReKA8-_5XnnDG0viZfRL6vT1zGd9Q%40mail.gmail.com.

Subbaier Ramasami

unread,
Apr 29, 2022, 7:54:43 PM4/29/22
to santhavasantham
நன்றி.

On Fri, Apr 29, 2022 at 3:14 AM Rajja Gopalan <raj...@gmail.com> wrote:
எனது தந்தையார் இதனைச் சொல்லி இருக்கிறார். ராஜாஜி அவர்கள் பாரதியை நல்லதோர் வீணை வீணாகிறதே என வருந்திய நிகழ்வுகள் உண்டு. 

தங்களின் கட்டுரை வரும் தலைமுறைக்கு நல்ல பாடம். 

நலமுடன் விளங்கி நிறைக்க இறைவன் தங்களுக்கு அருளட்டும். 

Subbaier Ramasami

unread,
Apr 29, 2022, 7:55:48 PM4/29/22
to santhavasantham
229

பாரதி, விஷயம் தெரியுமா? சுரேந்திரநாத் ஆர்யா ஜெயிலில் தற்கொலை செய்ய முயற்சி செய்தானாம்?” என்று சொன்னார் மண்டையம் ஆச்சார்யார்.

“கேள்விப்பட்டேன். அவன் எவ்வளவு பெரிய வீரன். அவன் மக்களைப் பார்த்து விரால் மீனுக்கும் தான் மீசையிருக்கிறது. உங்களுக்கு மீசையிருந்து என்ன பயன்? செயல்படுங்கள்” என்று வீராவேசமாகப் பேசியவனாயிற்றே?”என்றார் பாரதி

“ஜெயில் அதிகாரிகள் செய்யும் கொடுமை தாங்காமல்தான் தற்கொலை செய்யபோனானாம். “ என்றார் ஆச்சார்யார்

“நான் இன்னொன்றும் கேள்விப்பட்டேன். அவன் தற்கொலை செய்ய முயன்றான் என்று வேறொரு வழக்குப் பதிவு செய்து அவனை மாஜிஸ்ட்ரேட் முன் நிறுத்தியிருக்கிறார்கள். சிறைக்கொடுமை தாங்காமல்தான் தற்கொலை செய்ய முயன்றேன் என்று சொன்னானாம். அதை மாஜிஸ்ட்ரேட் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. தற்கொலை செய்து கொள்ள முயன்றதற்காகத் தனியாகத் தண்டனை கொடுத்தாராம். என்ன அநியாயம் இது?”

 

“அநியாயம்தான். வ.உ.சி கூட சில மாதங்களுக்கு முன் ஜெயிலில் நடக்கும் அநியாயங்களைப் பற்றிக் கோர்ட்டில் தெரிவித்தாரே?”

“அவர் எந்த அதிகாரிக்கும் பயப்படாமல் துணிவோடு கூறினார். பலர் பயத்தினால் வெளியிலே சொல்வதில்லை.”

“”அநியாயமாகத் தண்டித்ததோடல்லாமல் கோட்கரை நாக்பூரில்  மிகவும் மோசமாகக் கொடுமைப்படுத்துகிறார்களாம். நானும் விஜயாவில் எழுதிவிட்டேன்.”

“இங்கே புதுச்சேரியில் பிரஞ்ச் அரசு அந்த வகையில் எவ்வளவோ தேவலை. இராஜதுரோகக் கைதிகளை மிகவும் கண்ணியமக நடத்துகிறார்கள். மூன்று மாதங்களுக்கு மேல் அவர்களைச் சிறையில் வைத்திருப்பதில்லை.  மற்றக் கைதிகளையும் அவர்களையும் ஒன்றாகக் கருதுவதில்லை. ஆனால் பிரிட்டிஷ் இந்தியாவில் எல்லாம் நேர்மாறு. திலகர், சிதம்பரம் பிள்ளை, சிவா. ஆர்யா எல்லோரையும் அரசியல் கைதிகளாக நடத்தாமல் கொலைக் கைதிகளைப்போல நடத்துகிறார்கள்” என்றார்.

“ஆமாம். இதைப்பற்றி நாளையே விஜயாவில் எழுதுகிறேன்” என்றார் பாரதி.

 

 மறுநாள் விஜயா பத்திரிகையில் சிறைச்சாலைக் கொடுமைகளைப்பற்றி விரிவாக எழுதினார்.

 

வ.உ.சி சிறையில் அடைபட்டிருப்பதால் சுதேசி ஸ்டீம் நெவிகேஷன் கம்பனியில் பலத்த குழப்பம் நிலவியது. கம்பனி நஷ்டத்தில் ஓடியது. சரியான பண முதலீடு கிடைக்கவில்லை. இந்த நிலையைக் கண்டு பாரதி வருந்தினார். இந்தியாவிலும் விஜயாவிலும் நிலைமையை விளக்கி எழுதினார். 1910 ஏப்ரில் 10ந்தேதி ‘விஜயாவில் அவர் எழுதியதைப் படித்தால் அவர் எவ்வளவு வேதனைப் பட்டார் என்பது புரியும்

.

“”இந்தக் கம்பனி தோல்வியுற்றால் தென்னிந்தியர்களுக்கு இதைவிடப் பெரிய அவமானம் தேவையில்லை.

ஆங்கிலேயரும், பிற அன்னியரும் நம்மைக் கீழ்த்தரமாகக் கருதுவார்கள். ஏற்கனவே இந்தியர்கள் என்றால் அவர்களுக்குக் கிள்ளுக் கீரை. அதிலும் தென்னியந்தியர்கள் என்றால் இன்னும் கேவலம். பாம்பே மக்களை நண்பர்களாகவும், பெங்காளிகளைப் புலிகளாகவும் மதராஸிகளை அடிமைகளாகவும் பிரிட்டிஷ்காரர்கள் கருதுகிறார்கள். நம்மூடைய மிக மிக முக்கியமான சுதேசியத் தொழில் வணிகமும் விழுந்துவிட்டால் அவர்கள் மதிப்பில் நாம் எந்த அளவுக்கு இறங்கிவிடுவோம் என்று சொல்லவும் வேண்டுமா? (ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம்- விஜயா ஏப்ரல்15 1910)

Subbaier Ramasami

unread,
Apr 30, 2022, 9:43:09 AM4/30/22
to santhavasantham
230

 புதிய பத்திரிகைச் சட்டத்தால் சுதேசியம் அழிந்துவிடும் என்று ஆங்கிலேயர் நம்பினர். அதனால் கடுமையான சட்டத்தை அதில் சொல்லப்பட்டிருப்பதினும் அதிகமாகச் செயல்படுத்தினர். இதனால் சுதேசியம் அழிந்துவிடுமே என்று சில தலைவர்களும் பொதுமக்களும் கவலைப்பட்டனர். பத்திரிகைகள் நிறுத்தப்பட்டால் சுதேசியத்தின் கதி என்னாவது என்று வேதனைப் பட்டனர். ஆனால் பாரதி அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. ‘விளக்கில் எண்ணெய் விட்டுத் திரிபோட்டுத் தீபத்தை ஏற்றுகிற வேலையைப் பத்திரிகைகள் செய்துவிட்டன.  அந்தத் தீபம் அணையாமல் இது வரை பாதுகாத்தும் விட்டன. இனி அந்தத் தீபம் அணையாது. ஏனென்றால் அதைப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனங்களில் போய் அமர்ந்து கொண்டுவிட்டது. எரிகி.ற தீபத்தை மேலும் மேலும் தூண்டினால் அது அணைந்துவிடலாம்.இனி பத்திரிகைகளை எதிர்பார்க்காமல் பொதுமக்களே இதைத் தன் மனப்பீடத்தில் ஏற்றித் தியானம் செய்யவேண்டும்..வங்காளத்தில் தேசிய வணிக மையம் தோன்றிவிட்டது. தென்னாப்பிரிக்க மக்கள் நெஸ்லே பால்பவுடரை வாங்குவதில்லை என்று சபதம் மேற்கொண்டுள்ளனர்.. நாமும் அதை ஒதுக்கவேண்டும். முடிந்தால் நாமே பால்பவுடர் தயாரித்து அவர்களுக்கு அனுப்பவேண்டும். நாம் இப்பொழுது துணிந்தால்தான் நமது சந்ததியினரும் துணிவுடையவர்களாக இருப்பார்கள். சுதேசியத்தை எந்தச் சட்டமும் எந்த அடக்குமுறையும் அழிக்கமுடியாது” என்றார் பாரதி((விஜயா 22 ஏப்ரில் 1910- தொகுப்பு)

 

“ பாரதி, வெள்ளைக்காரன்ன வெளியே போய்ட்டா  இந்தியர்களாலே ஆள முடியாதுன்னு அவா சொல்றாளே! இதுக்கு நீர் என்ன சொல்றீர்?” என்று கேட்டார் குவளைக் கண்ணன்

 

“ பைத்தியக் காரத்தனம். வெளியிலே போகாமலிருப்பதற்கு இது ஒரு சாக்கு. அந்தப் பசங்க ஒரு கிராமப் பஞ்சாயத்து இவர்களுடைய நீதிஸ்தலத்துக்கே வராமல் எப்படி நடைபெறுகிறது என்று போய்ப் பார்க்கட்டும் ஜனாதிகாரம் அந்தக்காலத்திலேருந்து நம்முடைய நாட்டிலே உள்ளதுதான். வேண்டுமானால் இவங்க ஒரு வருஷம் அதிகாரத்தையெல்லாம் நம்மட்டே ஒப்படைச்சுட்டு வெளியேறிப் போகட்டும். ஏற்கனவே சுதேசியத்திலே மக்களுக்கு ஈடுபாடு அதிகம் வந்திருக்கிறது. ஆளும் திறமையும் தானாக அமைந்துவிடும்” என்றார் பாரதியார்.

 

“வாலிபர் சமிதிகளையெல்லாம் கலைக்கசொல்லி உத்தரவு போட்டுட்டாளாமே!”

“ஆமாம். அவங்களுக்குப் பயம். இந்திய வாலிபர்கள் கஸரத் செய்தும் தேகப்பயிற்சி செய்தும் பலம் பெற்றுவிடக்கூடதாம். அப்படிபலம் பெற்றால் அவர்களுக்கு ஆபத்தாம். எந்த வாலிப சமிதியாவது வன்முறையில் இறங்கியிருக்கா? விழாக்களின் போது மக்களுக்கு உதவியும், குளங்களில் படிக்கட்டு அமைத்தும் பொது ஜன சேவைதானே செய்திருக்கிறார்கள்?” என்றார் பாரதி

 


On Fri, Apr 29, 2022 at 6:55 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
229


Subbaier Ramasami

unread,
May 4, 2022, 11:31:12 PM5/4/22
to santhavasantham
233

ராமதாஸன் என்ற பெயரில் சூரியோதயம் பத்திரிகையில் 1910 பிப்ரவரி 13 இதழில் மஹாசக்திக்கு விண்ணப்பம் எனும் தலைப்பில் ‘மோகத்தைக் கொன்று விடு) எனத்தொடங்கௌம் பாடலை எழுதினார் பாரதி

 

சந்திரன் ஒளியில் அவளைக் கண்டேன் எனும் பாடல் சூரியோதயத்தில் பிப்ரவரி 27 1910 இதழில் வந்திருக்கிறது.

 

 

1909 நவம்பர் 20ந்தேதி இதழிலிருந்து  அதாவது புதுச்சேரியிலிருந்து வெளியாகும் இந்தியாவின் இரண்டாந்தொகுதி 5ம் இதழிலிலிருந்து தினசரிப் பத்திரிகை அளவிலும் அதிகப்பக்கங்களுடனும் வெளிவரத் தொடங்கியது.  . இந்நாளில் பத்திரிகைக் காகிதத்தின் விலை உயர்ந்தால் உடனே பத்திரிகைகளின் விலையை உயர்த்துவதைப் பார்க்கிறோம். அது தவறில்லை.  

 ஆனால் இந்தியா பத்திரிகை  பெரிதாகியும் சந்தா மாறவில்லை.  சந்தாவை உயர்த்துவது நியாயமென்றும், பத்ராதிபர் தமது தேச பக்தியியால் சந்தாவை ஏற்றாத போதிலும் பத்திரிகைக்குச் சந்தா கட்டிய பலர்  சந்தாவை உயர்த்தச் சொல்லிக் கடிதம் எழுதினார்கள். இது ஒரு புதுமைதானே! 'இந்தியா' வை வாரம் இருமுறை வெளியிடவேண்டும் என்றும் வேண்டினார்கள். குறைந்தது 1500 பேர்

சம்மதம் தெரிவித்தால் 'இந்தியா'வை வாரம் இருமுறைப் பத்திரிகையாக மாற்றலாம் என்று பாரதியார் எழுதினார். இஸ்லாமியரிடம் பாரதிக்குத் தனியான ஈடுபாடு உண்டு. இந்துக்களும் இஸ்லாமியர்களும் எப்பொழுதும் ஒற்றுமையாக செயல்பட்டால் இந்தியாவை எவராலும் அசைக்க முடியாது என்பது அவரது நம்பிக்கை. எனவே இந்தியாவை வாரம் இருமுறை வெளியிட அன்பர்களிடம் வேண்டுகோள் வைத்த செய்தியின் அடியில் வந்தே மாதரம், அல்லா ஹோ அக்பர் என்று முடித்திருந்தார்(இந்தியா 8-1-1910+--+-

 

 பாரதி குறிப்பிட்ட எண்ணிக்கைக்கும் மேலே அன்பர்கள் இந்தியா வாரம் இருமுறை வருவதை ஆதரித்தனர். அதன் விளைவாக 1910ம் வருடம் ஜனவரி மாதம் 24ந்தேதி இதழில் "அடுத்த யுகாதியிலிருந்து வாரம் இருமுறை வரும் என்று அறிவிப்பு வெளியானது. . ஆனால் அந்தக் கனவு நனவாகாமலே போய்விட்டது. இந்தியா பத்திரிகை இந்தியாவுக்குள் நுழைவது தடுக்கப்பட்டதால் பத்திரிகை நிறுத்தப்பட்டது.

Subbaier Ramasami

unread,
May 6, 2022, 9:41:57 AM5/6/22
to santhavasantham
235

 பாரதி குறிப்பிட்ட எண்ணிக்கைக்கும் மேலே அன்பர்கள் இந்தியா வாரம் இருமுறை வருவதை ஆதரித்தனர். அதன் விளைவாக 1910ம் வருடம் ஜனவரி மாதம் 24ந்தேதி இதழில் "அடுத்த யுகாதியிலிருந்து வாரம் இருமுறை வரும் என்று அறிவிப்பு வெளியானது. . ஆனால் அந்தக் கனவு நனவாகமலே போய்விட்டது. இந்தியா பத்திரிகை இந்தியாவுக்குள் நுழைவது தடுக்கப்பட்டதால் பத்திரிகை நிறுத்தப்பட்டது.

 

 

“இனி இந்தியாவுக்குள் வரும்”இந்தியா’ பத்திரிகை இதழ்களைச் சென்னை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பிவிடும் படி அரசு ஆணை பிறப்பித்திருப்பதாகத் தெரிகிறது. போலீஸ் கமிஷனர் அந்த இதழ்களை வைத்துக்கொண்டு என்ன செய்வார் என்று தெரியவில்லை. ஒரு மொழிபெயர்ப்பாளன் மூலமே அவர் அதின் உள்ளடக்கங்களை அவர் அறியக்கூடுமாகையால் மொழிபெயர்ப்பாளன் என்ன சொல்கிறானோ அதன் படி அவர் நடவடிக்கை எடுப்பார். உண்மை பேசுபவன் சங்கடத்தில் மாட்டிக்கொள்வது இவ்வுலக நியதியாகவே ஆகிவிட்டது. அதுவும் இந்தியாவில் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக துன்பமே வெகுமதி ஆகிவிட்டது.’இந்தியாவைப் பொறுத்த மட்டில் தென்னிந்தியாவில் அதை ஆர்வமின்றிப் படிப்பவர் எவருமில்லை.இந்திய அரசுக்கு யோசனை சொல்வதில் சற்று உறுதியாயிருந்தாலும்  மக்களின் நலமும் முன்னேற்றமுமே அதன் குறிக்கோளாய் இருந்து வந்திருக்கிறது.ஆங்கில அரசும் மக்களின் நலமே கருதுவதாகச் சொல்லிக்கொள்கிறது. அப்படியிருக்கையில் மக்களின் நலம் கருதும் இந்தியா பத்திரிகையின் பேரில் அவர்கள் கோபம் கொள்ள என்ன முகாந்திரம் இருக்கிறது? “இந்தியா’ ஆரம்பிக்கப் பட்ட நாளிலிருந்து ஆங்கில அரசு அதன் அதிகாரிகள் மூலமாக இந்தியாவின் சந்தாதாரர்களிடம் அவர்கள் சந்தாக் கட்டுவதை அரசு விரும்பாது என்று சொல்லிவந்திருக்கிறது.  ஆனால் மக்களுக்கு அப்பத்திரிகையின் பேரில் உள்ள மதிப்பும் ஆர்வமும் கிஞ்சித்தேனும் குறையவில்லை. அதில் எழுதப்படுபவை உண்மையில்லாமல் வெறும் வெற்றாக இருந்தால் மக்கள் அதை விரும்பிப் படிப்பார்களா? அரசுக்கு எதிரானதென்றால்               ஆதரவு தருவார்களா?”

இப்பொழுது நாம் ‘இந்தியா சந்தாதாரரகளுக்குச் சொல்லிக்கொள்வ தென்னவென்றால்’நமது’ விஜயா ‘பத்திரிகையை வாராந்தரியாக மாற்றி ஆங்கில அரசின் சம்பந்தமாக எதையும் கூறாமல் மக்களின்

முன்னேறங்களுக்குரிய விஷயங்கள எழுதுவோம்” எனப் பாரதி எழுதினார்.


On Wed, May 4, 2022 at 10:30 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
233


Subbaier Ramasami

unread,
May 9, 2022, 11:46:43 AM5/9/22
to santhavasantham

சூர்யோதயமும் நிறுத்தப்படும் என்ற நிலை. இனி சுதந்திரம் பற்றியும் சுதேசியம் பர்றியும் தம்மால் பத்திரிகைகளில் எழுத முடியுமா என்று தெரியாத நிலையில் பாரதி மிகவும் மனம் நொந்து ‘சூரியோதயம்’

பத்திரிகையில் பாரதி எழுதியுள்ள கட்டுரையை இன்றும் தமிழர்கள் அனைவரும் கண்டிப்பாகப் படிக்கவேண்டும்.

“சகோதரர்களே கதை நெருங்குகிறது. சமாதானமான நியாய வழிகளிலே உங்களுக்கு ஸ்வதந்த்ர மார்க்கங்காட்டி வந்ததைக் கூட அதிகாரிகள் நிறுத்தக் கங்கணங் கட்டிவிட்டார்கள். உங்களுக்கோ மறதி அதிகம். ஒருவன் அருகே இருந்து ஓயாமல் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தால்தான் ஞாபகமிருக்கிறது. மூன்று மாதம் படிப்பதை நிறுத்தி வைத்திருந்தால் கதை முழுவதையும் மறந்து போய்விடுகிறீர்கள்.மறுபடியும் அடியைப் பிடித்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.

 

நாம் கூறிவந்த மார்க்கஞ் சனங்களுக்கு ஹிதமானதுடன் ராஜாங்கத்தாருக்கும் அபாயமில்லாதது. ஆனால் ஆங்கிலேய அதிகாரிகள் அறிவை முழுதும் இழந்துவிட்டார்கள்.. வெடிகுண் டெறிபவர்களுக்கஞ்சி நமது சுதேசிய முயற்சியைக் கழுத்தை நெறிக்கத் தொடங்குகிரார்கள். நமது முயற்சிக்கு வயிரக் கழுத்து. எழுபது கோடி மந்திர வாள் கொண்டு வெட்டினாலும் ஒடிக்க முடியாத கழுத்து- உண்டென்பதை அவர்களறியவில்லை. அவர்கள் எப்படியும் போகட்டும். அவர்களைப் பர்றி எனக்கு விசாரமில்லை. “

 

வீரர்கள் வாழ்ந்த நாடு, பேரழகிகள் வாழ்ந்த  தமிழ்நாடு,, அச்சமில்லாத மக்கள் வாழ்ந்த நாடு, நீதியும் நேர்மையும் விளங்கிய நாடு, மன வலிமை மிக்கவர்கள் மிகுந்த நாடு, உரிமையோடு வாழ்ந்த நாடு, சங்கீதமும் சிற்பமும் கவிதையும் ஓங்கித்திகழ்ந்த நாடு  அது அடிமைப்பட்டூ அன்னியர் ஆட்சியில் எதெல்லாம் பெருமையாக இருந்தனவோ அதையெல்லாம் இழந்திருக்கும் நிலையைக் கண்டு பாரதி எழுதியிருப்பதைப் படித்தால் உண்மை உணர்வுடையோருக்கு இரத்தக் கண்ணீர் வரும்

Subbaier Ramasami

unread,
May 12, 2022, 9:01:10 AM5/12/22
to santhavasantham
237

மக்களின் அவல நிலையைக் கண்டு எழுதுவதைப் பாருங்கள்:

“ ஐயோ நெஞ்சு கொதிக்கிறதே, என்னுடைய இரத்தமல்லவா நீங்களெல்லோரும். ? உங்களை இந்த நிலையில் பார்க்க என் மனம் எப்படிப்பொறுக்கும்? ஒரு நாளா இரண்டு நாளா? ஒருவரா. இரண்டு பேரா? சகோதரர்களே, நமது முன்னோர்கள் இருந்த நிலையை மறந்துவிட்டீர்களோ? அடடா, இன்னமும் சோம்பரா? இன்னமும் உள் விரோதங்களா? இன்னும் அயர்வா? எப்படிப் பிழைக்கப்போகிறீர்கள்?...... சகோதரர்களே, ஒரு வார்த்தை மட்டும் சொல்லுகிறேன், இன்னொரு முறை சொல்ல எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்குமோ கிடையாதோ? அதுவே சந்தேகத்திலிருக்கிறது. ஆகையால் தயவு செய்து இந்த ஒரு வார்த்தையை மனத்தில் பதிய வைக்கும் படி உங்கள் பாதங்களில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன்.

 

அதாவது , ஏது வந்தாலும் அதைரியப் படாதேயுங்கள்.  மாதாவை மறந்துவிட வேண்டாம். நியாயத் தவறான செய்கைகள் செய்யவேண்டாம். தைரியம் , உறுதி, , இந்த இரண்டுமே நம்மைக் காக்கப் போகிறது. தேசத்தை உத்தாரணம் செய்வதற்கு ஒவ்வொருவரும் இயன்றதெல்லாம் செய்க! நாம் செய்யக்கூடியது சிறியதுதானே என்று கருதி அதனைச் செய்யாதிருந்துவிடலாகாது. நியாயமான சட்டங்களையெடுத்து விடுவதற்கு இயன்ற முயற்சிகளெல்லாம் செய்யவேண்டும். சுதேசிய விரதத்தை உயிருள்ளவரை கைவிடாமல் ஆதரித்து வரவேண்டும். மானத்தைப் பெரிதாக நினைக்க வேண்டும். ஸ்வதந்திரத்தை எப்போதும் தியானஞ்செய்து வரவேண்டும். வந்தே மாதரம்!”(சூரியோதயம் 13. பிப்ரவரி 1910- பாரதி விஜயா கட்டுரைகள் ஆர். வேங்கடாசலபதி பக்கம் 416-417)

! 30-4-1910 உடன் இந்தியா இதழ் நிறுத்தப்பட்டாலும் அவ்வப்போது இடைவிட்டு செப்டெம்பர் வரை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது

(பாரதி இந்தியா- சிலம்பு நா செல்வராசு)

Subbaier Ramasami

unread,
May 13, 2022, 7:49:53 AM5/13/22
to santhavasantham
238

24 புதுச்சேரிக்குப் புதிய வரவுகள்

 

 “”பாரதி , அரவிந்தர் புதுச்சேரிக்கு வரப்போகிறாராம்?” என்றார் ஸ்ரீஸ்ரீ ஆச்சார்யார்.

“உண்மையாகவா, மகான் அரவிந்தர் வரப்போகிறாரா?” என்று வியப்போடு கேட்டர் பாரதி

“ஆமாம் பாரதி, அவர் இங்கே வருவதற்கு எனது தம்பி பார்த்தசாரதியும் ஒரு காரணம்.. உனக்கு நினைவிருக்கிறதா? நான், உன் மைத்துனன் அப்பாதுரை, என் தம்பி பார்த்தசாரதி எல்லோரும் சுதேசிக் கப்பல் கம்பெனிக்கு நிதி கலெக்ட் பண்ண வட நாட்டூக்குப் போனோமே?’

‘ஆமாம். அப்பாதுரை ஆந்திராவுக்குப் போனதாகவன்றோ சொன்னான்?”

“ஆமாம் , அப்பாத்துரை ஆந்திராவுக்குப் போனான். நானும் பார்த்தசாரதியும் வடநாட்டுக்குப் போனோம். பார்த்தசாரதி கல்கத்தா போனான். அப்போது அரவிந்தரைச் சந்தித்திருக்கிறான். “

“அது எனக்குத் தெரியும். அரவிந்தர் பேட்டியைக்கூட இந்தியாவில் வெளியிட்டோமே!”

“கல்கத்தாவில் போலீஸ் தொல்லை அதிகமிருப்பதாகவும் அங்கு வெகுநாள் தங்க முடியாது என்றும் அரவிந்தர் சொன்னாராம். பார்த்தசாரதி நம்மைப் பற்றி அரவிந்தரிடம் சொல்லி “இந்தியா’ பத்திரிகையைப் பற்றியும் சொல்லியிருக்கிறான். அவரைப் பாண்டிச்சேரிக்கு வந்துவிடும் படி அழைத்திருக்கிறான்”

“நல்லதாகப் போயிற்று”

“அரவிந்தர் கல்கத்தாவிலிருந்து சந்த்ரநாகூர் போயிருக்கிறார். அவருக்குப் பாண்டிச்சேரிக்குப் போகும் படி உத்தரவு கிடைத்துவிட்டதாம். “

“அவர் மகான். கிருஷ்ணனை நேரில் பார்த்தவராயிற்றே”

 

“இன்று என்னைத்தேடிக்கொண்டு சுரேஷ் சந்த்ர சக்ரவர்த்தி என்ற பெயரில் ஒருவர் வந்தார். அவர்தான் அரவிந்தரின் கடிதத்தைக் கொண்டுவந்தார். அதில் பார்த்தசாரதி, இந்தியா பத்திரிகை என்று விலாசம் எழுதப்பட்டிருக்கிறது.. பார்த்த்சாரதி சென்னையில் இருப்பதாகச் சொன்னேன். இந்தியா பத்திரிகையைச்

சேர்ந்த நீங்கள் திறந்து பார்க்கலாம்” என்றார்.

 

“ஏப்ரல் மாதம் 4ந்தேதி மாலை 4 மணிக்குக் கப்பலில் வருகிறாராம். அவர் தங்குவதற்கு உடனே வீடு பார்த்தாக வேண்டும்’

 

“வந்தவர் உண்மையான ஆள்தானா என்று  எப்படித் தெரிந்து கொள்வது?. யாராவது ஒர்றனாக இருக்கலலமல்லவா?”

“”பார்த்தால் உண்மையான ஆளாகத்தான் தெரிகிறது.”

 

 

அவர்கள் உடனே கலவை சங்கரஞ் செட்டியாரைச் சந்தித்து அரவிந்தர் இரகசியமாகப் பாண்டிச்சேரிக்கு வரப்போவதாகவும் அவர் தங்க வீடு வேண்டும் என்றும் சொன்னார்கள். கலவை பங்களாவை அவர் தருவதாகச் சொன்னார். அது தனி வீடானாலும் எல்லா வசதிகள் கொண்டதானாலும் அதன் எதிரே மஃடி போலீஸ்காரர்கள் குடியிருந்தனர்.  அதை ஒட்டி நிறையப்பேர் குடியிருந்தனர். எனவே சங்கரஞ் செட்டியார் தன் வீட்டு மாடியிலேயே அரவிந்தர் தங்கிக்கொள்ளலாம். யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்றார். ஆனால் அங்கே சமையல் செய்யக்கூடாது என்றார். சாப்பாடு தங்கள் வீட்டிலிருந்து கொண்டுக் கொடுப்பதாக ஆச்சார்யாரும் பாரதியும் சொல்லவே சங்கரஞ்செட்டியார் ஒத்துக்கொண்டார். . மறுநாள் மோனி என்ற சுரேஷ் சந்த்ர சக்ரவர்த்தி அவர்களைச் சந்தித்த போது அவருக்குச் சாதாரணமான ஒரு வீட்டைக் காட்டினார்கள்.  அரவிந்தருக்கு அது ஏற்றதல்ல என்றார் மோனி. மேலும் பல சோதனைகளுக்குப் பின் மோனி அரவிந்தரின் ஆள்தான் என்று சந்தேகத்திற்கு இடமின்றித் தெரிந்தது. அதன் பின் அவருக்குச் சங்கரன் செட்டியாரின் வீடு காட்டப்பட்டது.

Subbaier Ramasami

unread,
May 14, 2022, 3:55:25 PM5/14/22
to santhavasantham

குறிப்பிட்டப்டி 1910 ஏப்ரல் 4ந்தேதி மாலை 4 மணிக்குப் பாரதியும் ஆச்சாரியாரும் கடற்கரைக்குச் சென்று அங்கிருந்து ஒரு சிறு படகில் கடலுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலுக்குச் சென்று அரவிந்தரைச் சந்தித்து அழைத்துவந்தனர் .  கடற்கரைக்கு வந்தவர்களை வரவேற்கச் சிலர் வந்திருந்தனர்.  பரலி சு நெல்லையப்ப பிள்ளை அரவிந்தருக்குக் குடைபிடித்தார்.  ஒருவர் வீட்டு மாடியில் தங்குவதை அரவிந்தர் விரும்பவில்லை   தனியான வீடு இருந்தால் நல்லது என்றார்.  அன்று இரவு அங்குத் தங்கும் படியும் , இடம் பிடிக்கவில்லையென்றால் மறுநாள் வேறு இடம் பார்க்கலாம் என்றும் பாரதி சொன்னார். மறுநாள் காலை அரவிந்தரைச் சந்திக்கச்சென்றபோது அரவிந்தருக்கு அந்த இடம் பிடித்துப் போய்விட்டதாகவும் பாதுகாப்பாக யாருக்கும் தெரியாமல் அங்கே தங்க முடியும் என்றும் சொன்னார்கள். பாரதி, ஆச்சார்யார், வேறு ஒரு சில நண்பர்களைத் தவிரா வேறு எவரையும் சந்திக்க அரவிந்தர் விரும்பவில்லை. பாரதியும் ஆச்சார்யாரும் அடிக்கடி சங்கரன் செட்டியார் வீட்டுக்குப் போவது வழக்கமான காரணத்தாலே  அவர்களை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள். தினமும் இரவு 7 மாணிக்கு மேல் அரவிதரை சந்திக்கப் பாரதி போய்விடுவார். மஹாகவியும் மஹாயோகியும் மிகவும் வேடிக்கையாகப் பேசிக்கொள்வார்களாம். மிகவும்  நகைச்சுவையாகவும்  ஒருவரை ஒருவர் சீண்டியும் அவர்கள் விவாதித்துக் கொள்வதைப்பார்த்தவர்கள் சம்பாஷணை என்றால் அரவிந்தர் பாரதி சம்பாஷணைபோல் இருக்கவேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்..    பாரதிக்கு அரவிந்தர் ரிக் வேதம் போதித்தாராம். பாரதி அரவிந்தருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்ததோடு நம்மாழ்வார் மற்றும் பல  ஆழ்வார் பாசுரங்களையும்  மொழியாக்கம் செய்து கற்ருருக்கொடுத்திருக்கிறார். , அரவிந்தருடைய கர்மயோகின் பத்திரிகையைப் போல அவரும் கர்மயோகி என்ற மாதாந்திரப்பத்திர்கை நடத்தினார்.  அரவிந்தர் பின்னாளில் தொடங்கிய ஆர்யா பத்திரிர்கையிலும் பாரதி எழுதினார். பகவத் கீதை மொழியாக்கம், பதஞ்சலி யோக சூத்திரமொழியாக்கம், வேத ரிஷிகளின் கவிதைகள் தமிழாக்கம்  எல்லாம் அரவிந்தருடன் பழகிய தாக்கத்தால் விளைந்தவை.. பாரதியின் பாஞ்சாலி சபதத்திற்கும் அரவிந்தரின் சாவித்திரி காவியத்திற்கும் தொடர்பிருப்பதாக ஒருவர் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்.

 


On Fri, May 13, 2022 at 6:49 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
238

24 புதுச்சேரிக்குப் புதிய வரவுகள்

 

 “”பாரதி , அரவிந்தர் புதுச்சேரிக்கு வரப்போகிறாராம்?” என்றார் ஸ்ரீஸ்ரீ ஆச்சார்யார்.

“உண்மையாகவா, மகான் அரவிந்தர் வரப்போகிறாரா?” என்று வியப்போடு கேட்டர் பாரதி

“ஆமாம் பாரதி, அவர் இங்கே வருவதற்கு எனது தம்பி பார்த்தசாரதியும் ஒரு காரணம்.. உனக்கு நினைவிருக்கிறதா? நான், உன் மைத்துனன் அப்பாதுரை, என் தம்பி பார்த்தசாரதி எல்லோரும் சுதேசிக் கப்பல் கம்பெனிக்கு நிதி கலெக்ட் பண்ண வட நாட்டூக்குப் போனோமே?’

‘ஆமாம். அப்பாதுரை ஆந்திராவுக்குப் போனதாகவன்றோ சொன்னான்?”

“ஆமாம் , அப்பாத்துரை ஆந்திராவுக்குப் போனான். நானும் பார்த்தசாரதியும் வடநாட்டுக்குப் போனோம். பார்த்தசாரதி கல்கத்தா போனான். அப்போது அரவிந்தரைச் சந்தித்திருக்கிறான். “

“அது எனக்குத் தெரியும். அரவிந்தர் பேட்டியைக்கூட இந்தியாவில் வெளியிட்டோமே!”

“கல்கத்தாவில் போலீஸ் தொல்லை அதிகமிருப்பதாகவும் அங்கு வெகுநாள் தங்க முடியாது என்றும் அரவிந்தர் சொன்னாராம். பார்த்தசாரதி நம்மைப் பற்றி அரவிந்தரிடம் சொல்லி “இந்தியா’ பத்திரிகையைப் பற்றியும் சொல்லியிருக்கிறான். அவரைப் பாண்டிச்சேரிக்கு வந்துவிடும் படி அழைத்திருக்கிறான்”

“நல்லதாகப் போயிற்று”

“அரவிந்தர் கல்கத்தாவிலிருந்து சந்த்ரநாகூர் போயிருக்கிறார். அவருக்குப் பாண்டிச்சேரிக்குப் போகும் படி உத்தரவு கிடைத்துவிட்டதாம். “

“அவர் மகான். கிருஷ்ணனை நேரில் பார்த்தவராயிற்றே”

 

“இன்று என்னைத்தேடிக்கொண்டு சுரேஷ் சந்த்ர சக்ரவர்த்தி என்ற பெயரில் ஒருவர் வந்தார். அவர்தான் அரவிந்தரின் கடிதத்தைக் கொண்டுவந்தார். அதில் பார்த்தசாரதி, இந்தியா பத்திரிகை என்று விலாசம் எழுதப்பட்டிருக்கிறது.. பார்த்த்சாரதி சென்னையில் இருப்பதாகச் சொன்னேன். இந்தியா பத்திரிகையைச்

சேர்ந்த நீங்கள் திறந்து பார்க்கலாம்” என்றார்.

 

“ஏப்ரல் மாதம் 4ந்தேதி மாலை 4 மணிக்குக் கப்பலில் வருகிறாராம். அவர் தங்குவதற்கு உடனே வீடு பார்த்தாக வேண்டும்’

 

“வந்தவர் உண்மையான ஆள்தானா என்று  எப்படித் தெரிந்து கொள்வது?. யாராவது ஒர்றனாக இருக்கலலமல்லவா?”

“”பார்த்தால் உண்மையான ஆளாகத்தான் தெரிகிறது.”

 

 

கள்.  மாதாவை மறந்துவிட வேண்டாம். நியாயத் தவறான செய்கைகள் செய்யவேண்டாம். தைரியம் , உறுதி, , இந்த இரண்டுமே நம்மைக் காக்கப் போகிறது. தேசத்தை உத்தாரணம் செய்வதற்கு ஒவ்வொருவரும் இயன்றதெல்லாம் செய்க! நாம் செய்யக்கூடியது சிறியதுதானே என்று கருதி அதனைச் செய்யாதிருந்துவிடலாகாது. நியாயமான சட்டங்களையெடுத்து 

On Mon, May 9, 2022 at 10:46 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


Reply all
Reply to author
Forward
0 new messages