வாராகி வீட்டுள் வா அம்மா
வாராகி வீட்டுள் வா அம்மா
எம்மம்மா தேவி வாராகி வீட்டுள் வா அம்மா!
சரணம்
கரத்தினில் முத்திரை அபயமும் காட்டி
புரக்கிற தேவியே புன்னகை நாட்டி
சிரித்தும கிழ்ந்திட நல்லருள் கூட்டி
கிரிச்சக்ரம் விட்டிறங்கி சிலம்புகள் பாட
-- வாராகி
உன்னடி வீட்டில் பதிந்திட வேண்டும்
பின்னெது வேண்டும்? புகழ்வரும் யாண்டும்
உன்னத ஞான உயர்நிலை தருவாய்
அன்னையே என்கவி உன்னையே பாட வாராகி
வாஞ்சையு டன்னுனை
வரவேற்கின்றோம்
தீஞ்சுவைக் கனிவகை கிழங்குகள் படைப்போம்
காஞ்சன நல்லணி மேனியில் அணிந்து
ஊஞ்சலில் ஆடிட உனையழைக் கின்றோம் – வாராகி
அண்ட முடிவுவரை சென்றிடும்
ஊஞ்சல்
பண்டுக் காலமுதல் ஆடுகின்றாய் நீ
கொண்டவென் ஊஞ்சலோ சின்னது தாயே
பிண்டமும் அண்டமாய்க் கொண்டு நீ ஆட - வாராகி
இலந்தை
1-12-2021
நேற்று பக்யாத லக்ஷ்மி பாடலை மொழியாக்கம் செய்தேன். இன்று அதே அமைப்பில் வாரகி அன்னைக்கு எழுதவேண்டும் என்று தோன்றியது.
வாராகி வீட்டுள் வா அம்மா
--[...]
இலந்தை
1-12-2021
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBC3Jye%2B0CFvw1eF4dDSDxJU7dTKxutJ_VQrNwE4tCeBwg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB2a4BU5nkEM14w-rdYq-1By2jiWzN6dYFYRotsT69ZjRUK7Sg%40mail.gmail.com.
--
நேற்று பக்யாத லக்ஷ்மி பாடலை மொழியாக்கம் செய்தேன். இன்று அதே அமைப்பில் வாரகி அன்னைக்கு எழுதவேண்டும் என்று தோன்றியது.வாராகி வீட்டுள் வா அம்மா
வாராகி வீட்டுள் வா அம்மா
எம்மம்மா தேவி வாராகி வீட்டுள் வா அம்மா!
சரணம்
கரத்தினில் முத்திரை அபயமும் காட்டி
புரக்கிற தேவியே புன்னகை நாட்டி
சிரித்தும கிழ்ந்திட நல்லருள் கூட்டி
கிரிச்சக்ரம் விட்டிறங்கி சிலம்புகள் பாட -- வாராகி
உன்னடி வீட்டில் பதிந்திட வேண்டும்
பின்னெது வேண்டும்? புகழ்வரும் யாண்டும்
உன்னத ஞான உயர்நிலை தருவாய்
அன்னையே என்கவி உன்னையே பாட வாராகிவாஞ்சையு டன்னுனை வரவேற்கின்றோம்
தீஞ்சுவைக் கனிவகை கிழங்குகள் படைப்போம்
காஞ்சன நல்லணி மேனியில் அணிந்து
ஊஞ்சலில் ஆடிட உனையழைக் கின்றோம் – வாராகி
அண்ட முடிவுவரை சென்றிடும் ஊஞ்சல்
பண்டுக் காலமுதல் ஆடுகின்றாய் நீ
கொண்டவென் ஊஞ்சலோ சின்னது தாயே
பிண்டமும் அண்டமாய்க் கொண்டு நீ ஆட - வாராகி
இலந்தை
1-12-2021
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPCKmwr1%3Dyk%2BcLgz3U5LYVYHaYxVStvFTJ62NAV52HeNQ%40mail.gmail.com.