வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை: சித்திரை முதல்நாள் <-> தொல்காப்பியர் திருநாள், 2021 தொல்காப்பியர் திருநாள் சிறப்பிதழ் வெளியீடு

274 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 29, 2021, 10:40:51 AM3/29/21
to Santhavasantham
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America, FETNA) என்பது வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் ஒரு குடையமைப்பு ஆகும். இவ் அமைப்பில் 57-இற்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்கள் அங்கம்
வகிக்கின்றன. https://fetna.org/member-tamil-sangams/  தமிழ் மொழி, பண்பாடு, சமூகம் ஆகியவற்றைப் பேணி வளர்ப்பதே இச்சங்கத்தின் முக்கிய நோக்காகும். இச்சங்கம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 4-ல் மாநாடு மற்றும் ஒன்றுகூடல் நடாத்துகின்றது. 2008 இல் தனது ஆண்டு விழாவை பெரியசாமி தூரன் நூற்றாண்டு விழாவாக இச்சங்கம் கொண்டாடியது. 2019-ல் சிகாகோவில் 10-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைப் பேரவைக்குழு சிகாகோ மாநகரில் நிகழ்த்தியது.

தமிழர் சென்று கடல் வாணிகம் செலுத்திய நாடுகளில் எல்லாம் “ஆடு தலையாக” என்று சங்க இலக்கியங்கள் வர்ணிக்கும் சூரியன் மேட இராசியில் அரங்கேறும் சித்திரையை வருடப்பிறப்பு நாளாக இந்தியாவில் எல்லா சமயங்களைப் பின்பற்றுவோரால் கொண்டாடப்பெறுவது சங்ககாலத் தமிழர்களின் பழைய வானியல் இது. ஆடு கோட்பாட்டுச் சேரல் ஆதன் என்பது இக்கோட்பாட்டைத் தமிழகத்தில் கொணர்ந்த (அ) நிலைநிறுத்திய சேர மன்னனின் பெயர். இந்தியா முழுமையும் வாழ்வாங்கு வாழ்ந்த தொல்தமிழ் மொழியினரின் 4700 ஆண்டுக்கு முந்தைய வானியல் பற்றி இக் கட்டுரையில் அறியலாம்:  http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html  . பௌத்தர்கள், சமணர்கள், இந்துக்கள் என மூன்று சமயத்தவர்க்கும் தமிழ் ஆண்டின் 12 மாதங்களில் முதல் திங்கள் சித்திரை என இலங்குகிறது. இதனை இலங்கை, கம்போடியா, லாவோஸ், ... போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கூடக் காணலாம்.

தமிழர்க்குத் திருவள்ளுவர் தொடராண்டு தைப் பொங்கல் (தை 1) தினத்தில் அமைந்துள்ளது. கலி அப்தம், சக அப்தம் எனப் பழைய முறைகள் தொடராண்டாகக் தமிழ்க் கல்வெட்டுகளில் இருந்தாலும், அரசாங்க ஆணைக மூலமாக, திருவள்ளுவர் ஆண்டு கணக்குமுறையே தமிழக அரசால் பின்பற்றப்படுகிறது. திருவள்ளுவர் திருநாள் தைப்பொங்கலில் அமைந்துள்ளது போல, தொல்காப்பியர் திருநாள் சித்திரை முதல்நாள் எனக் கொண்டாட வேண்டும் என வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ( FETNA) முன்னெடுக்கிறது. முப்பெரும்விழாவாக தொல்காப்பியர் திருநாள் (ஏப்ரல் 14, 2021 = சித்திரை 1), மற்றும் ஹூஸ்டன், டொராண்டோ பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பேராசிரியர் பீடம் நிறுவ நிதிசேர் பெருவிழா வரும் ஏப்ரல் 10-தேதியில் பேரவை கொண்டாடத் தீர்மானம் நிறைவேற்றி. பேரவைக் குழுவினர் ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர். விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அனைவரையும் பேரவை அழைக்கிறது. ஜேம்ஸ் வசந்தன் (பல தொலக்காட்சி அமைப்பாளர்) இசையமைப்பு, நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆக விளங்குவார்.

தொல்காப்பியத்தை வாழ்நாள் முழுதும் கற்பித்துவரும், பல ஆய்வு மாணவர்களுக்கு நெறியாளராக விளங்கும் பேராசிரியர்கள் செ. வை. சண்முகம், கி. நாச்சிமுத்து, கு. சிவமணி, ஈரோடு தமிழன்பன், கவிஞர் சிற்பி, முனைவர் ப. பாண்டியராஜா, ... கட்டுரைகள், கவிதைகள் தொல்காப்பியர் திருநாள் (சித்திரை 1)  அமெரிக்கப் பேரவைச் சிறப்பிதழுக்கு (அருவி இதழிகை) அனுப்பியுள்ளனர். கவிஞர் இனியன் தொல்காப்பியர் திருநாள் பதிகம் பாடியுள்ளார். திருச்சிப் புலவர் இராமமூர்த்தியின் தொல்காப்பியர் திருப்புகழ், மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து வண்ணம் (கவிமாமணி இலந்தை) இவ் இரண்டு பாடல்களும் யாழ். தவசஜிதரன் இசையமைப்பில் வெளிவர உள்ளது. மணியம் செல்வன் அவர்கள் பெட்னா பேரவையின் தொல்காப்பியர் திருநாள் சிறப்பிதழ் (2021) மலருக்கு அட்டைப்பட ஓவியம் வரைகிறார். இம்மலருக்கு உங்கள் கவிதை, கட்டுரை வெளியாக விரும்பினால், naa.g...@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். தொல்காப்பிய இலக்கணம் பற்றியதாகப் பொருண்மை இருக்கவேண்டும். யூனிக்கோட் என்னும் ஒருங்கு குறியீட்டு எழுதுருவில் வேண்டும். தமிழண்ணல், கு. சிவமணி போன்ற தமிழறிஞர்கள் பரிந்துரையின் பேரில் தொல்காப்பியர் திருநாள் சித்திரை முதல்நாள் என அறிவிக்க தமிழ்நாட்டு அரசாங்கத்தினை அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் அணுகியுள்ளன. நன்றி.

தமிழக முதல் அமைச்சருக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America, FETNA) தலைவர், செயலர் தொல்காப்பியர் திருநாள் (சித்திரை 1) பற்றிய கடிதம்.

உலகத் தாய்மொழி நாள், 2021-ல் தினமணி பத்திரிகையில் வெளியான தொல்காப்பியர் திருநாள் கட்டுரை:
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2021/feb/21/சித்திரை-முதல்-நாள்-தொல்காப்பியர்-திருநாள்-3567698.html

நா. கணேசன்
பொருளாளர், ஹூஸ்டன் தமிழ் இருக்கை


TT_Day_2021-min.png
dinamani_article.png







Subbaier Ramasami

unread,
Mar 29, 2021, 1:35:00 PM3/29/21
to santhavasantham
தொல்காப்பியத்தில் ஆழங்கால் பட்டவர் புலவர் வெற்றியழகன் அவர்கள். தொல்காப்பிய வகுப்புகள் நடத்துபவர். தொல்காப்பியன் என்றே புனைபெயர் கொண்டவர். தொல்காப்பியம் பற்றிக் கட்டுரைகள் எழுதியவர். அவருடைய தொலைபேசி எண்- 9789043139.   

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUekSvQDZxRcfzoSU%2BftkC9iNYPmrsMMZJXtB-X1JuLyOg%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Mar 29, 2021, 8:40:17 PM3/29/21
to Santhavasantham
On Mon, Mar 29, 2021 at 12:35 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
தொல்காப்பியத்தில் ஆழங்கால் பட்டவர் புலவர் வெற்றியழகன் அவர்கள். தொல்காப்பிய வகுப்புகள் நடத்துபவர். தொல்காப்பியன் என்றே புனைபெயர் கொண்டவர். தொல்காப்பியம் பற்றிக் கட்டுரைகள் எழுதியவர். அவருடைய தொலைபேசி எண்- 9789043139.   

நிச்சயமாக, புலவர் வெற்றியழகனைக் கட்டுரை கேட்கிறேன். நன்றி.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Mar 30, 2021, 8:35:03 AM3/30/21
to Santhavasantham
On Mon, Mar 29, 2021 at 12:35 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
தொல்காப்பியத்தில் ஆழங்கால் பட்டவர் புலவர் வெற்றியழகன் அவர்கள். தொல்காப்பிய வகுப்புகள் நடத்துபவர். தொல்காப்பியன் என்றே புனைபெயர் கொண்டவர். தொல்காப்பியம் பற்றிக் கட்டுரைகள் எழுதியவர். அவருடைய தொலைபேசி எண்- 9789043139.   

இலந்தை

யாப்பிலக்கணம் பற்றி நூல் யாத்துள்ள பேரா. சு. பசுபதி அவர்களைக் கட்டுரை கேட்டுள்ளேன். தர இசைவு தெரிவித்துள்ளார்.
பேரா. ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களின் 1925-ம் ஆண்டுக் கட்டுரை, தொல்காப்பியம் வெளிவர உள்ளது.
https://s-pasupathy.blogspot.com/2018/07/1120-2.html

மேலும், பேரா. சு. பசுபதியின் தொல்காப்பியம் மீதான செய்யுளையும் வெளியிடலாம்.
http://s-pasupathy.blogspot.com/2016/06/blog-post.html

நா. கணேசன்
http://s-pasupathy.blogspot.com/2016/06/blog-post.html
 பயன்மிகு தொல்காப்பியம்

======

தொல்காப்பியம் சொல்லும்
  சொன்னத்தமிழ்ப் பெருமை;
சொல்லோவியம் அதனில்
   சொற்பம்வனை வேனே  

மனித மனத்தின் ஒளிவீச்சு --மொழி
  மக்கள் வாழ்வின் உயிர்மூச்சு
இனத்தின் வளத்தை ஒலிபரப்பும் -- மொழி
   எண்ணெ ழுத்தின் பலம்பெருக்கும்
தொனியின் அதிர்வை இசையாக்கும் -- மொழி
   சொல்லின் பொருளைச் சுவையாக்கும்
கனிந்த உணர்வுக் குருக்கொடுக்கும் -- மொழி
   காலக் குரலைச் செவிமடுக்கும்            

தமிழ்
=====
தொன்மை நூல்தொல் காப்பியமாம் - அது
  சொல்லும் தமிழின் பெருமைகளை.  
அன்னை மொழியின் அருமைகளை -- ஓர்
  ஆய்வுக் கண்ணால் பார்த்திடுவோம்                   (1)

மும்மை என்னும் குணமுண்டு -- தமிழ்
   மொழிக்குத் தனியோர் பண்புண்டு
செம்மை என்னும் நிறைவுண்டு -- சங்கத்
   திணைகள் கொடுக்கும் சிறப்புண்டு                    (2)

இயலும் இசையும் கூத்துமென -- வே(று)
   எங்கும் இல்லா முப்பிரிவால்
பயனும் வியனும் விளைந்தனவே -- இப்
   பகுப்பால் மொழியும் உயர்ந்ததுவே !                    (3)

யவனம் லத்தீன் அறிந்தோர்கள் - தமிழ்
   யாப்பு, முழுமை  சிறப்பென்றார்.
புவனப் பேச்சு மொழிசிலவே -  சீர்,
   பொலிவு, திருத்தம், உளதமிழ்போல்                   (4)

பொருளைத் தொல்லி லக்கணத்தில் -- சேர்த்த
   புதுமை தண்ட மிழ்க்குண்டு !
தரமாம் மரபி லக்கியங்கள் -- பல
   தந்த பெருமை அதற்குண்டு !                                         ( 5)

அகமும் புறமும் வழியமைக்கும் - மிக
   அழகாய் நூலை வரையறுக்கும்
சகமே போற்றும் தத்வங்கள் -- செந்
   தமிழை வளர்த்த சமயங்கள் .                                         (6)

 இசையில் பிறந்த இலக்கணத்தால் -- தமிழ்
   இனிமை என்றான் பாரதியும்
வசியம் செய்யும் தொடையழகில் -- மிக
   மனம கிழ்ந்தான் கூத்தனுமே !                                  (7)

அகவல் வெண்பா கலிப்பாக்கள் -- போல்
   யாப்புச் சிறப்புத் தமிழ்மொழிக்கே
சிகரக் கவிதை வண்ணம்போல் --ஒரு
   சீர்த்தி உண்டோ பிறமொழியில் ?                                (8)

இழைய றாமல் வாழுமொழி -- பெரும்
  இலக்கி யங்கள் இலங்குமொழி
பழமைக் காலத் தொடர்ச்சியிலே -- புதுப்
  படைப்புத் துடிப்பு வெடிக்குமொழி                                 (9)

 தொல்காப் பியரின் தோள்மேலே – நாம்
    தொலைநோக் குடனே நின்றிடுவோம்
 நல்லோர் நம்மைப் புகழ்பாடப் – புதுமை
    ஞாலம் தமிழில் சமைத்திடுவோம்                 (10)

  நிறைவுக் கவிதை:

எல்லோனென இன்றுஞ்சுடர் வீசுந்தனித் தன்மை;
சொல்லைத்தமிழ் எழுத்தைக்கவின் பொருளைத்தரும் தொன்மை;
வல்லார்பலர் கெல்லப்புதுப் புரிதல்தரும் பன்மை;
ஒல்காப்புகழ் பயன்கள்மிகு தொல்காப்பியம் வாழ்க!

பசுபதி
5-06-16

 

N. Ganesan

unread,
Mar 30, 2021, 2:03:01 PM3/30/21
to Santhavasantham
யாடு (Aries - ram, Zodiac sign) என்னும் சொல் யாட்டை, யாண்டு என்ற ஆண்டுக்கான தமிழ்ச்சொற்கள் இரண்டையும் தந்தது. யாடு ஐ விகுதி ஏற்று யாட்டை என வந்தது. கச்சிப் பேடு --> பேடு+ஐ = பேட்டை போல. ‘யாறு, யாண்டு, யாடு, யாமை, யானை (< யால்), யாளி, யார், யாப்பு, யாக்கை, யா, யால்’ என்பன யகாரத்தில் தொடங்கும் பழந்தமிழ்ச் சொற்கள் ஆகும். இவை இடைக்காலத்தில் மொழிக்கு முதலில் வரும் யகர மெய்யை இழந்து, முறையே, ‘ஆறு, ஆண்டு, ஆடு, ஆமை, ஆனை, ஆளி, ஆர், ஆப்பு, ஆக்கை, ஆ (மரம்), ஆல் (மரம்)’ என ஆகாரத்தில் தொடங்கும் சொற்களாக மாறி அமைந்தன.  காடு : காண்டா (மிருகம்), கீடு-கீண்டு (கீடம் = புழு), கூடு-கூண்டு, தாடு-தாண்டு (மேகெ தாடு - ஆடுதாண்டு காவேரி), நீடு-நீண்டு, வேடு-வேண்டு, சூடு-சூண்டு(சுண்டு), ... போல யாடு (சித்திரை மாத ராசி) தொடக்கம் ஆதலால் யாண்டு, யாட்டை எனச் சங்க காலத்தில் ஆண்டுக்குப் பெயர்.

யாடு >> யாட்டு, யாண்டு (சங்க நூல்களில்).
யாட்டுக்கோட்பாடு கொணர்ந்த சேரலாதன் - பதிற்றுப்பத்து
கனலிவட்டம் - தமிழில் Zodiac என்பதன் கலைச்சொல் (சிந்தாமணியில்) இழையில் சொல்லியுள்ளேன். எங்குமே, தொல்காப்பியர் ஆவணியை எப்பொழுதும் ஆண்டு (< யாண்டு/யாடு) பிறப்பாகக் கொள்ளவில்லை. முந்நான்கு பருவமாக சித்திரையில் தொடங்கும் 12 பருவங்களைப் பகுத்து, க்ரீஷ்ம பர்வத்தில் தொடங்கும் வட இந்திய முறையைத் தமிழகத் தட்பவெப்ப நிலைக்கு மாற்றுகிறார் காப்பியர். பிராமி எழுத்து தமிழகம் வந்தபோது, சில மாற்றங்களை - உ-ம்: புள்ளிக் கோட்பாடு - செய்தவர் தொல்காப்பியர். மேலும், வல்லமை எழுத்துக்களை வல்லெழுத்து இனமாக வைத்தார். அதே போலத்தான் வேளாண்மைக்காக கார்ப்பருவத்தை முதலில் சொல்வதும் ஆகும். சமணர்கள் பலரும் வேளாண்மைத் தொழிலர். வேளாண்மைக்கு அடிப்படை கார்காலம், எனவே 6 பருவச் சுழற்சியை வேளாண்மையை முதன்மையாக வைத்துத் தருகிறார். சமணர்கள் செய்த நிகண்டுகளும் அவ்வாறே. கனலிவட்டம் - தமிழில் Zodiac என்பதன் கலைச்சொல் (சிந்தாமணியில்) இழையில் விரிவாக விளக்கியுள்ளேன். நச்சினார்க்கினியர் திருநாளாக சிங்க மாசத்தை (ஆவணி 1) வைக்கலாம். வேளாண் சுழற்சி துவங்கும் மாதம் கார்ப்பருவம். அதற்காக, யாண்டு/யாட்டு < யாடு தமிழ் ஆண்டுப் பிறப்பு மாறுவதில்லை.

திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக,
ரோகிணி நட்சத்திரம் பற்றிய கதை நெடுநல்வாடையில்
இருக்கிறது. அது என்ன? டெக்ஸாஸ் ஆஸ்டின் பெருவளர்ச்சி பெற்றுவருகிறது. அங்கே சுமார் 20 நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானிகள்
பணியற்றுகின்றனர். ஆஸ்டின் பல்கலையில் ஹூஸ்டன் விஞ்ஞானி, முனைவர் ராஜ் வேதம் பேசுகிறார்:
https://www.youtube.com/watch?v=Jq__DXtfeXw
நெடுநல்வாடை வரிகள்,
http://www.diamondtamil.com/education/sangam_literature/pattuppattu/nedunalvaadai5.html#.XqN-8GhKjIU

தொல்காப்பியர் தமிழ் வருஷத்தில் உள்ள மாதங்களுக்கும், திங்கள்வட்டத்தின் (27 Lunar Mansions) நட்சத்திரங்களுக்கும் ஈற்றுவிதி கூறினார். எல்லா மாதங்களும், நக்ஷத்ரங்களும் முடியும்வகையை நன்கு ஆய்ந்து சூத்திரங்கள் செய்துள்ளார் என வியக்காமல் இருக்க இயலாது.  Cf. கனலிவட்டம் 12 Solar Mansions. I've written extensively on how Tiruttakka Tevar in his Chintamani epic translates Zodiac as "Kanali VaTTam".

அவர் ஆட்டின் பழைய பெயர் யாடு என்றும் கூறினார்:
யாடுங் குதிரையும் நவ்வியும் உழையும்
ஓடும் புல்வாய் உளப்பட மறியே
இளம்பூரணம் : (இ - ள்) : என்றது யாடு முதலாகச் சொல்லப்பட்ட
 ஐந்துயிரும் மறி என்னும் இளமைப்பெயர் பெறும் என்றவாறு.

யாறு, யாண்டு, யாடு, யாமை, யானை, யாளி, யார், யாங்கு, யாக்கை ...
இப் பழம்பெயர்களில் சொன்முதல் யகர அட்சரம் நீங்கிவிட்டது.
திருவள்ளுவர் யாண்டு (< யாடு) தைப்பொங்கல். திருவள்ளுவர் திருநாள்!
அது போல், தொல்காப்பியர் திருநாள் சித்திரை வருஷப் பிறப்பு
வேண்டும் என்று கேட்டவர் நாடு நன்கறிந்த தமிழ்ப் பேரா. தமிழண்ணல்.

ஓர் யாட்டு ஒரு கால் வரவு (கலி.71)
யாண்டுப லவாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதி ராயின் - பிசிராந்தியார்

http://www.languageinindia.com/july2019/profrajendrantamilnounscontentscomplete.pdf
“உடையார் ஸ்ரீ ராஜேந்திரசோழ தேவர்க்கு யாண்டு இருபதாவது” – திருவாரூர்க் கல்வெட்டு.
“இவ்வாட்டை மேஷ நாயற்று ஞாயிற்றுக்கிழமை” – உடையார்குடிக் கல்வெட்டு ...
“வருடையைப் படிமகன் வாய்ப்ப’ – பரிபாடல் 11:5 (வருடை – மேழம்; படிமகன் – செவ்வாய்)

2008-ல் தை 1 வருஷப் பிறப்பு என அந்நாள் முதல்வர் மு.க. மாற்றியபோது, பேரா. தமிழண்ணல் எழுதிய கட்டுரை.
யாடு - யாட்டுக் கோட்பாடு தந்த சேரலாதன் (பதிற்றுப்பத்து) - பிறப்பிப்பது யாட்டு, யாண்டு.
http://kilvaanam.blogspot.com/2008/01/blog-post_3433.html
http://viduthalaidaily.blogspot.com/2011/09/blog-post_8010.html
”இனி, ஞாயிற்றின் செலவை வைத்துத் தமிழர்கள் ஆண்டு தொடக்கத்தைக் கணக்கிட்டனர் என்பதைப் பற்றி, முன்னே சுட்டியபடி சான்று காண்போம். சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் - தை முதல் நாளாகும். இன்று தட்சிணாயனம், உத்தராயனம் என்பர். இது மேஷராசி யில் நடப்பதை அனைவரும் அறிவர். மேஷம் என்பது - ஆடு எனும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகும். ஆடு - முன்பு யாடு என்றே வழங்கியது. இதனால் தமிழர்கள் யாட்டை என முதலில் அழைத்து, பிறகு அது மூக்கொலி பெற்று யாண்டு- ஆண்டு என ஆயிற்று. கண்ணகி ஈராறு ஆண்டு அகவையாள் கோவலன் ஈரெட்டாண்டு அகவையான் என மங்கல வாழ்த்துப் பாடலில் குறிக்கப் பெறுகின்றனர். பதிற்றுப் பத்தில் யாண்டு தலைப் பெயர (15) யாண்டு ஓர் அனைய ஆக (90) என வருகிறது. கணவன் மனைவியைப் பார்க்க, ஓராண்டிற்கு ஒரு முறைதான் வருகின்றான். இதைத் தலைவி கூற்றாக, ஓர் யாட்டு ஒரு கால் வரவு (கலி.71) என்று கலித்தொகை குறிப்பிடுகிறது. யாடு (மேடம்) இராசியில் மாறுவதால், யாட்டு என ஆண்டு குறிக்கப்படுவதே முதல் வழக்கு. இன்றும் சனி கிரகம், ஏழரையாண்டு என்பதை ஏழரையாட்டைச் சனி என்றனர். அது மருவி ஏழரை நாட்டுச் சனி எனப் பிழைபட வழங்குகின்றது திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக, விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலம் என (நெடுநல். 160, 161) ஞாயிறு குறிக்கப் படுகிறது. ஆடு - மேட ராசியே முதலாவதாகும். ஆடுதலையாக என்பதற்கு மேடராசி முதலாக ஏனை இராசிகளில் சென்று திரியும் என நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார்” யாடு என்பதில் இருந்து தான் யாட்டு, யாண்டு என்ற சங்க இலக்கியச் சொற்கள் பிறக்கின்றன
எனத் தெளிவாக விளக்கும் தமிழண்ணல், யாடு என்பது மேட இராசி என்கிறார் (2008).

N. Ganesan


N. Ganesan

unread,
Mar 30, 2021, 8:17:10 PM3/30/21
to Santhavasantham
தொல்காப்பியர் எனும் வல்லுநர்

ச.கண்மணி கணேசன் M.A.,Ph.D.(ப.நி.),
முன்னாள் முதல்வர்; தமிழ்த்துறைத் தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.


தொல்காப்பியர் காப்பியக்குடியில் தோன்றித் தன் குடியால்
அடையாளப் பெயர் பெற்ற சிறப்பு மிகுந்த நூலின் ஆசிரியர்.

மொழிக்கு ஒலியே அடிப்படை அலகு என உணர்ந்து
உணர்த்திய அறிவியலாளர்.

எழுத்து ஒரு குறியீடு என்ற புரிதலுடன் ஒலிப்புமுறையும்
பிறப்பிடமும் கூறிச் சென்ற மொழியியலாளர்.

சொல்லும் சொற்புணர்ப்பும் பற்றித் தன் முன்னோர்
சொல்லியவாறு செய்த மரபாளர்.

இலக்கியக் கொள்கைகளைப் பொருள் இலக்கணமாக
வரையறுத்துத் தமிழனை இன்று வரை நெஞ்சு நிமிர்த்தச் செய்த
நெறியாளர்.

சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாத நிலை தேவை என்னும்
நியதியை அறிந்து வலியறுத்திய பண்பாளர்.

ஒவ்வொரு உணர்வையும் புலப்படுத்தத் தேவையான
மெய்யுறுப்புகளின் நுட்பமிகு செயல்பாட்டைத் துல்லியமாக
வரையறுத்த நாடக இயக்குநர்.

உவமையே அனைத்து அணிகட்கும் அடிப்படை என்ற
ஆழத்தைத் தொட்டுக்காட்டிய கலைப்புல முதன்மையாளர்.

கவிச்சுவை ஊட்டும் களவு, கற்பு என்ற பாகுபாட்டைப் பன்னிப்
பன்னிப் பேசி, அதை வாழ்க்கை இலக்கணம் என்று
தமிழ்மக்களை மனதார நம்பவைத்துக் கட்டிப்போட்ட திறனாளர்.

பெண்ணின் உளவியலை நன்குணர்ந்து, அவள் பேசும் சூழலையும்
செய்தியையும் வரையறுத்த மேன்மையாளர்.

பாட்டில் எதைச் சொல்லலாம்? எப்படிச் சொல்லலாம்? யார்
பேசலாம்? என்ற விதிகட்கு  - அவரது சமகாலக் கொள்கைகள்
ஒன்றுக்கு மேற்பட்டு இருந்தபோதும் - தான் ஏற்றுக் கொண்டதை
எடுத்துச் சொல்லத் தயங்காத துணிவாளர்.

கலிப்பா பரிபாக்களால் அகப்பொருள் பாடப்படும் என்று
வரன்முறை கூறியும், பாவகைகளை விதந்து ஓதியும், மொழி
ஆளுமையை வெளிப்படுத்திய வித்தகர்.

அவர் சொன்ன துணைப் பாத்திரங்களுள் பார்ப்பானும்
இருக்கிறான்; பேசும் தகுதி பெறுகிறான். ஆனால் பார்ப்பான்
கூற்றில் அமைந்த பாடல் ஏதும் இன்று நமக்குக்
கிடைக்கவில்லை. அகப்பாடல்களைத் தொகுத்தவரது கொள்கை
தொல்காப்பியர் கொள்கையிலிருந்து மாறுபட்டுள்ளது; அவர்கள்
தம் கொள்கைக்கு ஏற்பப் பார்ப்பார் கூற்றில் அமைந்த
பாடல்களை ஒதுக்கி விட்டனரோ! ~ என்று தான் நினைக்க
வேண்டியுள்ளது.

தொல்காப்பியர்க்கு உரிய மரியாதையை அளிப்பது தமிழனின்
முதற்கடமை. முன் நிற்போம்; முடிவெடுப்போம்; முனைவோம்;
வெற்றி பெறுவோம்.

பேரா. ச. கண்மணி கணேசன்

On Tue, Mar 30, 2021 at 1:10 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
யாடு (Aries - ram, Zodiac sign) என்னும் சொல் யாட்டை, யாண்டு என்ற ஆண்டுக்கான தமிழ்ச்சொற்கள் இரண்டையும் தந்தது. யாடு ஐ விகுதி ஏற்று யாட்டை என வந்தது. கச்சிப் பேடு --> பேடு+ஐ = பேட்டை போல. ‘யாறு, யாண்டு, யாடு, யாமை, யானை (< யால்), யாளி, யார், யாப்பு, யாக்கை, யா, யால்’ என்பன யகாரத்தில் தொடங்கும் பழந்தமிழ்ச் சொற்கள் ஆகும். இவை இடைக்காலத்தில் மொழிக்கு முதலில் வரும் யகர மெய்யை இழந்து, முறையே, ‘ஆறு, ஆண்டு, ஆடு, ஆமை, ஆனை, ஆளி, ஆர், ஆப்பு, ஆக்கை, ஆ (மரம்), ஆல் (மரம்)’ என ஆகாரத்தில் தொடங்கும் சொற்களாக மாறி அமைந்தன.  காடு : காண்டா (மிருகம்), கீடு-கீண்டு (கீடம் = புழு), கூடு-கூண்டு, தாடு-தாண்டு (மேகெ தாடு - ஆடுதாண்டு காவேரி), நீடு-நீண்டு, வேடு-வேண்டு, சூடு-சூண்டு(சுண்டு), ... போல யாடு (சித்திரை மாத ராசி) தொடக்கம் ஆதலால் யாண்டு, யாட்டை எனச் சங்க காலத்தில் ஆண்டுக்குப் பெயர்.

யாடு >> யாட்டு, யாண்டு (சங்க நூல்களில்).
யாட்டுக்கோட்பாடு கொணர்ந்த சேரலாதன் - பதிற்றுப்பத்து
கனலிவட்டம் - தமிழில் Zodiac என்பதன் கலைச்சொல் (சிந்தாமணியில்) இழையில் சொல்லியுள்ளேன். எங்குமே, தொல்காப்பியர் ஆவணியை எப்பொழுதும் ஆண்டு (< யாண்டு/யாடு) பிறப்பாகக் கொள்ளவில்லை. முந்நான்கு பருவமாக சித்திரையில் தொடங்கும் 12 மாதங்களைப் பகுத்து, க்ரீஷ்ம பர்வத்தில் தொடங்கும் வட இந்திய முறையைத் தமிழகத் தட்பவெப்ப நிலைக்கு மாற்றுகிறார் காப்பியர். பிராமி எழுத்து தமிழகம் வந்தபோது, சில மாற்றங்களை - உ-ம்: புள்ளிக் கோட்பாடு - செய்தவர் தொல்காப்பியர். மேலும், வல்லமை எழுத்துக்களை வல்லெழுத்து இனமாக வைத்தார். அதே போலத்தான் வேளாண்மைக்காக கார்ப்பருவத்தை முதலில் சொல்வதும் ஆகும். சமணர்கள் பலரும் வேளாண்மைத் தொழிலர். வேளாண்மைக்கு அடிப்படை கார்காலம், எனவே 6 பருவச் சுழற்சியை வேளாண்மையை முதன்மையாக வைத்துத் தருகிறார். சமணர்கள் செய்த நிகண்டுகளும் அவ்வாறே. கனலிவட்டம் - தமிழில் Zodiac என்பதன் கலைச்சொல் (சிந்தாமணியில்) இழையில் விரிவாக விளக்கியுள்ளேன். நச்சினார்க்கினியர் திருநாளாக சிங்க மாசத்தை (ஆவணி 1) வைக்கலாம். வேளாண் சுழற்சி துவங்கும் மாதம் கார்ப்பருவம். அதற்காக, யாண்டு/யாட்டு < யாடு தமிழ் ஆண்டுப் பிறப்பு மாறுவதில்லை.

N. Ganesan

unread,
Apr 1, 2021, 10:28:58 AM4/1/21
to Santhavasantham, Erode Tamilanban Erode Tamilanban, sivamani K, sivasub...@sivasubramanian.in, George Hart, sirpi balasubramaniam, Dr. Y. Manikandan, maniam...@gmail.com, pandiya raja, Pandiyaraja

தொல்காப்பியம், ந. மு. வேங்கடசாமி நாட்டார், தமிழ்ப்பொழில், 1925

கரந்தைத் தமிழ்ச் சங்கத்து திரு. ஜெயக்குமார் அவர்களிடம் பெற்று, ஐந்து ஆண்டு முன்னர், தமிழ்ப்பொழில் இதழ்களின் பிடிஎப் கோப்புகளைத் தமிழ்மரபு அறக்கட்டளைக்கு அனுப்பினேன். தமிழ்ப்பொழில் இதழ்கள் இணையத்தில் இன்று இலங்குகின்றன. சிற்சில செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி இதழ்கள் தமிழ் எண்ம நூலகத்தில் (http://tamildigitallibrary.in ) கிட்டுகின்றன. இன்னும் 3 இலட்சம் நூல்களாவது இணையம் ஏறினால், தமிழ் ஆழம் பெறும். ஆறாம் திணைத் தெய்வதம் கூகுளாண்டவர் துழாவும் தமிழ்மாணவர்க்கு அருளுவார். பல எம்.ஏ, பிஎச்டி தீஸிஸ்கள் அழியும் தறுவாயில் உள்ளன. இடைக்கால இலக்கியம் வாசிப்போரோ, அவற்றில் புலமையோ இலா ஒரு தலைமுறை உருவாகி வருதலான் வாடுகிற தமிழ்ச்சூழலைக் காண்கிறோம். பேரா. சு. பசுபதி வலைப்பதிவில் , நாட்டார் ஐயா 1925-ஆம் ஆண்டு தமிழ்ப்பொழிலில் எழுதிய கட்டுரை ஒருங்கு குறியீட்டில் வெளியாகிறது. அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை தொல்காப்பியர் திருநாள் என சித்திரை முதல் நாளைக் (14 - 4 - 2021) கொண்டாடும் தருணம் இது. வாசித்துப் பயன்கொள்க.  ~ நா. கணேசன்

தொல்காப்பியம்

மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி 

யிறைவர்தம் பெயரை நாட்டி யிலக்கணஞ் செய்யப் பெற்றே 

அறைகடல் வரைப்பிற் பாடை யனைத்தும்வென் றாரி யத்தோ 

டுறழ்தரு தமிழ்த்தெய் வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம்.'


உலகத்திலுள்ள மொழிகள் எல்லாவற்றையும் வென்று ஆரிய
மொழியுடன் உறழ்வது தமிழ் என்று சில நூற்றாண்டுகளின் முன் விளங்கிய ஒரு பேரறிஞர்  இப்பாட்டிலே கூறி வைத்தனர்.   இப்பொழுது தமிழ்மொழியுடன் வேறு  மொழிகளையும் ஒருங்கு நன்காராய்ந்த ஆராய்ச்சி வல்ல புலமையாளர்கள் இம் முடிவுக்கே வருகின்றனர். தமிழ் மொழி எவ்வளவு பழமையுடையது என்பதனையும், பண்டை நாளில் எவ்வளவு பரவியிருந்தது என்பதனையும் ஆராய்ந்தறிந்த மதிவல்லராகிய ஆசிரியர் சுந்தரம்பிள்ளை யவர்கள்அதனை

    ‘சதுமறையா ரியம்வருமுன் சகமுழுதும் நினதாயின்

    முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே.

என்று மொழிந்தருளினர். இங்னம் பழமையால் மாத்திரமன்றிஇயல்வம்பாகிய திருந்திய நிலையாலும், இனிமை முதலியவற்றாலும் தமிழ்மொழி தலைசிறந்து விளங்குதலின், புலமையும் , தெய்வத்தன்மையும் வாய்ந்துளோர் என நம்மாற் போற்றப் பெறும் நம் பெரு மக்கள் பலரும் தமிழைக் குறிக்குமிடத்தெல்லாம் செந்தமிழ்பைந்தமிழ்இன்றமிழ் , மென்றமிழ் , வண்டமிழ் , ஒண்டமிழ் , நற்றமிழ் , சொற்றமிழ் என்றிங்கனம் அடையடுத்து வழங்குவாராயினர் . இந் நாட்டிற்குரிய தொன்முது மக்களாகிய தமிழருடன் ஆரியர் விரவி ஒரு நாட்டினராக வாழலுற்ற காலத்தில் தமிழருடைய தத்துவ ஞானங்கள் வடமொழி நூல்களாகப் பரிணமித்தன. ஆரியருடைய கலை ஞானங்களும் , கோட்பாடுகளும் தமிழிலும் ஏறின . இரு மொழியும் ம்முடைய பெருமொழிகளென இந்நாட்டு முன்னையோர் போற்றி வந்தனர். எனினும் சிற்சில துறைகளில் ஒரு மொழி மற்றொரு மொழியினும் ஒவ்வொரு காலத்திற் சிறந்து விளங்குதல் இயற்கையே. தமிழ் மொழியானது ஆரியத்தை வெல்லுதற்கு மாறு கொண்டு நிற்கின்றது என்பது தலைப்பிற் காட்டிய பாட்டிலே குறிக்கப் பெற்றுளது. உறழ்தல் என்பதற்கு ஒத்தல் என்றும் பொருள் கூறப்படினும், வெல்லுதற்கு மாறுகொள்ளல் என்பதே சிறந்த பொருளாகும் . நம் இருமொழிகளில் வடமொழி வழக்கற்று வீழ்ந்ததனையும்  தமிழ்மொழி இளமைச் செவ்வியுடன் என்றும் வழங்குதற்குரியதாய் மிளிர்வதனையும்  நோக்குழி தமிழ் ஆரியத்தை ஒருவாற்றால் வென்று விட்டதென்றே இப்பொழுது கூறுதலும் ஏற்புடைத்தாகும்.

தமிழ் தன் மொழியமைதியாற் பிறமொழிகளை வென்று விளங்குதலேயன்றி , தன்னிடத்துள்ள சில நூல்களாலும் வாகை சூடித் திகழ்தல் கண்கூடாம் . திருக்குறள் , திருவாசகம் , திருவாய் மொழி என்னும் நூல்களுக்கு இணையான நூல்களை வேறெம் மொழியிற் காணக்கூடும்தொல்காப்பியம் என்னும் இயல் நூலும் அத்தன்மையதே. இயல், இசை , நாடகம் என்னும் முத்துறையிலும் முச்சங்க நாளிலே இயற்றப் பெற்றுப் பரந்து கிடந்த இலக்கண நூல்களெல்லாம் கரந்துபடவும், தொல்காப்பிய மென்னும் இவ்வியற் மிழிலக்கணம் இன்று காறும் நின்று நிலவுவது , பல்லாயிரம் ஆண்டுகளாக நம் முன்னையோர் இதனை எங்கனம் மதித்துப் போற்றி வந்தனரென்பதற்கு உறு சான்றாகும் .

கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து

 பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை

 மண்ணி டைச்சில விலக்கண வம்பிலா மொழிபோ

 லெண்ணி டைப்படக் கிடந்ததா வெண்ணவும் படுமோ.” 

என்றிவ்வாறாக , இலக்கண வரம்புடைமையால் நம் தமிழ்மொழி நிகரற்றதென வைத்துப் போற்றப்பெறுவது புனைந்துரையாமென ஏதிலார் புறங்கூறுதற் கிடனின்றி , எய்ப்பினில் வைப்பாக இந்நூல் கிடைத்திருப்பது நாம் புரிந்த தவத்தின் பயனேயாம். தமிழின் வரலாறனைத்தும்  ஒருங்குணர்ந்து கோடற்குச் சிறந்த கருவியாகவுள்ள இந்நூல் இனி எக்காலத்தும் நிலவுதலுறும் என்பதிற் சிறிதும் ஐயமில்லை . இந்நூலானது தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆராய்ந்து முந்து நூல்கண்டு முறைப்படத் தொகுத்தியற்றப்பட்டதென்பது வடவேங்கடம் என்னும் இதன் சிறப்புப் பாயிரத்தால் அறியலாவது. இந்நூலை ஆராய்ச்சி செய்யுமிடத்து இது நன்கு தெளிவாம். இந்நூலின் எழுத்ததிகாரத்து மொழி மரபின் கண்ணே மொழிக்கீறாம் எழுத்துக்கள் கூறிவருமிடத்தே , சகமெய்யூர்ந்த முற்றுகரமும் , நவொற்றும் இவ்விரண்டு மொழிகட்கே ஈறாகு மென்றும், பகமெய்யூர்ந்த முற்றுகமும் ஞக வொற்றும் ஒவ்வொரு மொழிக்கே ஈறாகு மென்றும் , பக மெய்யூர்ந்த வுகர வீற்றுச்சொல் ஒன்றே தன்வினைப் பொருளும் பிறவினைப் பொருளும் பயப்ப தாமென்றும் உணர்த்துவார்

'உச்ச காரம் இருமொழிக் குரித்தே.

'உப்ப காரம் ஒன்றென மொழிப.

'இருவயி னிலையும் பொருட்டா கும்மே.

'உச்ச காரமொடு நகாரம் சிவணும்.

'உப்ப காரமொடு ஞகாரையும் அற்றே

   அப்பொரு ளிரட்டா திவணையான.

என ஆசிரியர் கூறி வைத்திருப்பன சிலவற்றிலிருந்தே, தமிழின் இரு வகை வழக்கினு முள்ள சொற்பரப் பெல்லாம் ஒருங்கு தொகுத்து வைத்துக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டதென உணரலாகும் . மற்றும், தொகைமரபின் கண்ணே

             'அளவிற்கும் நிறையிற்கும் மொழி முதலாகி 

               உளவெனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தே 

               அவைதாம்,

   கசதப என்றா நமவ என்றா

               அகர உகரமோ டவையென மொழிப.’

என்னுஞ் சூத்திரத்தால் , தமிழக முழுதும் வழங்கிய அளவுப்பெயர்நிறைப்பெயர்களை அவற்றின் முதலெழுத் தெடுத்தோதிக் குறித்து வைத்ததும்பொருளதிகாரத்து மபியலில், இளமைப் பெயர் , ஆண்மைப் பெயர் , பெண்மைப் பெயர் எல்லாம் எடுத்தோதி , இன்னின்வற்றிற்கு இன்னின்ன பெயர்கள் உரியவெனக் கூறி வைத்திருப்பதும் போல்வன இவ்வுண்மையை நன்கு விளக்குவனவாகும் . தமிழுக்கே உரிய சிறப்புவாய்ந்த பொருளதிகாரத்தில் மக்களுடைய ஒழுகலாறெல்லாம் தொகுத்துணர்த்தி யிருக்கும் மாட்சி அளவிடற் பாலதன்று . இவ்வாறாக இந்நூலின் கண் அமைந்து கிடக்கும் எழுத்துச் சொற்பொருட்டிறங்களையும் , அவற்றை ஆசிரியர் கூறிச் செல்லும் நெறிமுறைகளையும் நூற்பாக்களின் திட்ப நுட்ப அகுகளையும்இன்னோரன்ன பிற சிறப்புக்களையும் ஒரு கட்டுரையில் எழுதிக் காட்டுவதென்பது இயலாத தொன்றாம்.

இனி , இத்தகைய சீருஞ்சிறப்பும் வாய்ந்த இவ்வியல் நூலையருளிய ஆசிரியராகும் ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனாது வரலாறு னைப்பல ஆசிரியர்களின் வரலாறு போன்றே நாம் செவ்விதின் அறிய வொண்ணாத்தாயிற்று , இவ்வாசிரியரின் வரலாற்றுக் குறிப்புக்களாக மக்குக் கிடைத்திருப்பன மிகச்சிலவே . இவை கொண்டு சிற்சிலர் தாம் தாம் கருதியவாது இவ்வாசிரியரைப் பற்றி எழுதியிருக்கின்றனர். யாமும் தொல்காப்பியர் வரலாறாக அறிவனவற்றைத் தொல்காப்பிய ஆராய்ச்சி முடிவிற் கூறுவேம் . இனித் தொல்காப்பிய ஆராய்ச்சியைப் பல பகுதிளாகப் பகுத்துக் கொண்டு , அவற்றை முறையே ஒவ்வொன்றாக எழுதிவக் கருதியுள்ளேம் . இயல்பிலே சுருங்கிய அறிவினேமாகிய யாம் பலவினை  லிவுகட்கு இடையே இப்பேராராய்ச்சியை எடுத்துக் கொண்டது தமிழன்னையின் சிறுமகார் ஆற்றும் இச்சிறு திருத்தொண்டுக்கு அன்பர்களின் அன்பு முன்னின்று ஊக்கமளிப்பது போன்று  இறைவன்றிருவருள் உண்ணின்று ஊக்கமளிக்கும் என்னும் துணிபு கொண்டேயாம்.

            வாழி கரந்தை வளருந் தமிழ்ச்சங்கம் 

            வாழி தமிழ்ப்பொழில் மாண்புடனே - வாழியரோ 

            மன்னுமதன் காவலராய் வண்மைபுரி வோரெவரும் 

            உன்னுபுக ழின்பலம் உற்று.

 

          நாவலர் பண்டித. நடுக்காவேரி மு. வேங்கடசாமி நாட்டார்.




Virus-free. www.avg.com

N. Ganesan

unread,
Apr 2, 2021, 9:30:34 PM4/2/21
to Santhavasantham
அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை (http://fetna.org) வெளியிடும் “தொல்காப்பியர் திருநாள் சிறப்பிதழ்” (ஏப்ரல் 14, 2021) கட்டுரையாக, ”தொல்காப்பியத்தில் செய்யுளியல் : ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் பேரா. சு. பசுபதி எழுதியுள்ளார். யாப்பமைதியுடன் கூடிய தமிழ் மரபுக்கவிதை இயற்றும் முறைகளுக்கு வித்தாக அமைந்தது தொல்காப்பியம். பேரவையின் முன்னெடுப்புக்கு கவிஞர் பசுபதியின் வாழ்த்து.

               வாழ்த்து

   வெல்லத்தமிழ் வானந்தனில் ஒளிர்நூல்களின் நடுவே
   எல்லோனெனச் சுடர்பொக்கிடம் தொல்காப்பியம் வாழ்க!
   வல்லோர்பலர் புகழ்சித்திரை முதல்நாளினி மேலே
   தொல்காப்பியர் திருநாளென அரசாணையில் மலர்க!

                     - பேரா. சு. பசுபதி, கனடா


http://s-pasupathy.blogspot.com/
https://www.facebook.com/pas.pasupathy  
http://groups.google.ca/group/yAppulagam

------------

நன்றி,
நா. கணேசன்



N. Ganesan

unread,
Apr 3, 2021, 7:25:28 AM4/3/21
to Santhavasantham, Udayabaskar Nachimuthu, santh...@gmail.com, Santhalingam Chockaiah, rajan...@gmail.com
               வாழ்த்து

   வெல்லத்தமிழ் வானந்தனில் ஒளிர்நூல்களின் நடுவே
   எல்லோனெனச் சுடர்பொக்கிடம் தொல்காப்பியம் வாழ்க!
   வல்லோர்பலர் புகழ்சித்திரை முதல்நாளினி மேலே
   தொல்காப்பியர் திருநாளென அரசாணையில் மலர்க!

                     - பேரா. சு. பசுபதி, கனடா




அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (http://fetna.org ) தொல்காப்பியர் திருநாள் (ஏப்ரல் 14, 2021) அறிமுக விழா.
 https://youtu.be/WMagwHgGJ94
(Please watch this short video.)

https://www.hindutamil.in/news/opinion/columns/128816--10.html

தொல்காப்பியன்: ஆதி அறிவன்

                - கவிஞர் வைரமுத்து
[கவிஞரின் கட்டுரையின் முற்பகுதி ஆய்வுக்குரியவை. உ-ம்: தொல்காப்பியர் காலம். தொல்காப்பியரின் மிகப் பெரும் கொடை என்பது பிராமி லிபிக் குடும்பத்தில் தமிழுக்கு மாத்திரம் அவர் தந்த புள்ளிக் கோட்பாடு. மெய்யெழுத்தை உருவாக்குவது. இதனைத் தொல்லியலாளர் துல்லியமாகக் கணித்துளர். ஐராவதம் மகாதேவனின் சங்க காலக் கல்வெட்டுக்கள் - ஐராவதம் சங்கத் தமிழ்க் கல்வெட்டுக்களைப் படித்தறியும் முறைகண்டவர். - நூலில், புள்ளி ஏற்படும் காலம் எனக் காசுகளை வைத்து ஆராய்ந்து தொல்காப்பியர் காலம் கி.பி. 2-ம் நூற்றாண்டு என நிறுவியுள்ளார். இப்பொழுது கிண்ணிமங்கலம் சிவாலயத்தில் உள்ள லிங்கத்தில், தமிழ் பிராமி உள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மையில் தொல்லியல் அறிஞர் சொ. சாந்தலிங்கம் கிண்ணிமங்கலம் பிராமி, வட்டெழுத்து ஒரு சில ஆண்டு முன்னர் தான் எழுதப்பட்டவை என அறிவித்துள்ளார். பழைய முக லிங்கத்தில் அண்மையில் எழுதிய தமிழ் பிராமியா, அன்றி 1800 ஆண்டு பழைய தமிழ் ப்ராமியா என உறுதிசெயப்படல் வேண்டும். என் வலைப்பதிவில் கிண்ணிமங்கலத்தில் ஐந்து புள்ளிகள் இருப்பதால், இந்த லிங்கச் சிற்பம் உருவானது கி.பி. 2-ம் நூற்றாண்டாக இருக்கலாம் என எழுதியுள்ளேன். திரு. ராஜவேலு கூறும் கி.மு. 3-ம் நூற்றாண்டாக இருக்க வாய்ப்பில்லை.  ~NG]
தொல்காப்பியப் பெருமை
                - கவிஞர் வைரமுத்து

எழுத்து - சொல் - பொருள் என்ற மூன்று அதிகாரங் களையும் ஓர் அதிகாரத்திற்கு ஒன்பது வீதம் 27 இயல்களை யும் இளம்பூரணர் கணக்குப்படி 1,595 நூற்பாக்களையும், நச்சினார்க்கினியர் பேராசிரியர் கணக்குப்படி 1,611 நூற்பாக் களையும் உறுப்புகளாக உடையது தொல்காப்பியம்.

தமிழை ஆளும் மூன்றதிகாரங்கள்

மூன்றதிகாரங்களுள் எழுத்தையே தொல்காப்பியம் முன்வைக்கிறது. ஒலிப்பதிவு கண்டறியாத காலம் வரைக்கும் பேச்சுமொழி என்பது தன்மை முன்னிலைக்கு மட்டுமே உரியது. ஆனால், எழுத்து என்பதோ தன்மை - முன்னிலை - படர்க்கை என முக்காலத்திற்குமானது. எழுத்து என்பது ஒலியை ஊற்றிவைக்கும் கொள்கலன். அது அறிவின் சேமிப்புக் கிடங்கு. தலைமுறைகளுக்கான ஞானத்தைக் கடத்தி ஏகும் கருவி. மொழியின் எழுத்துகளைப் பகுப்பதென்பதே ஒரு கணிதம் மற்றும் அஃதோர் ஒலி விஞ்ஞானம். தொல்காப்பியர் ஓர் ஒலி விஞ்ஞானி.

தமிழ் எழுத்திலக்கணத்தை “நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல், குற்றியலுகரப் புணரியல்” என்று 9 இயல்களில் வகைப்படுத்துகிறார் தொல்காப்பியர். “எழுத்தெனப் படுவ / அகர முதல னகர இறுவாய் / முப்பஃது என்ப / சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே” என்று தமிழ் எழுத்துகள் மொத்தம் 33 என்று வரையறுக்கிறார். அகர முதல் ‘ன’கர ஈறாகவுள்ள முப்பதோடு, குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்னும் மூன்றையும் கூட்டித் தமிழ் எழுத்து கள் 33 என்று முடிவுசெய்கிறார்.

தனித்தியங்கவல்ல 12 எழுத்துகளை உயிர் எழுத்துகள் என்றார், தனித்தியங்கவல்லாத 18 எழுத்துகளை மெய் யெழுத்துகள் என்றார். உயிரைச் சார்ந்து இயங்குவதே மெய் என்ற பேரறிவை மொழியின் மீது சாற்றிய முன்னோர்களின் மூதறிவைக் கருதும்போதெல்லாம் உள்ளம் களிகூர்கிறது. குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் இம்மூன்றும் ஒரு சொல்லைச் சார்ந்தன்றி தனித்தியங்கும் இயல்பற்றன வாதலின் சார்பெழுத்துகள் எனப்பட்டன.

எழுத்ததிகாரத்தின் பெருமை பேசப் பிறப்பியல் ஒன்றே போதும். எழுத்துகள் பிறப்பதெங்ஙனம், அவற்றின் பிறப்பிடம் யாது என்று சிந்தித்த தொல்காப்பியர் உடல் - உயிர் - காற்று என்ற மூன்று மூலங்களோடு முடிச்சுப் போடுகிறார். “உந்தி வழியா முந்துவளி தோன்றித் / தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப் / பல்லும் இதழும் நாவும் மூக்கும் / அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்… / …பிறப்பின் ஆக்கம் வேறு வேறியல” - என்பது நுட்பமான நூற்பா.

உந்தி வழியே முந்தி எழுகின்ற காற்று தலை - மிடறு - நெஞ்சு ஆகிய மூவிடங்களில் தவழ்ந்து, பல் - உதடு - நாக்கு - மூக்கு - அண்ணம் ஆகிய ஐவகை உறுப்புகளோடு உறழ்ந்து, வெவ்வேறு உருவாய்த் தோற்றுவதே எழுத்துகளின் பிறப்பு முறையாகும் என்று அறிவியல் தளத்தில் நின்று அறுதியிட்டு அறிவிக்கிறார்.

மொழிக்கு முதலெழுத்தாக வரக்கூடியவை எவை? வாராதவை எவை என்று தொல்காப்பியர் இட்டுக்கொடுத்த சட்டம் 3000 ஆண்டுகளாய் நின்று நிலவுகிறது. உயிர் எழுத்து பன்னிரண்டும் மொழி முதலாகும். மெய்யெழுத்துகள் மொழி முதலாகா. வடநாட்டுப் பண்பாட்டுத் தாக்கத்தால் கிரந்த எழுத்துகள் தமிழுக்குள் புகத் தலைப்பட்ட காலத்தில், தொலைநோக்குப் பார்வையோடு தொல்காப்பியர் செய்த ஒரு நூற்பாதான் இன்றுவரை தமிழின் தனித்தன்மையைக் காக்கிறது; அதுதான் அந்நிய மொழியை வெளியே நிறுத்தித் தூய்மையுறுத்தித் தமிழுக்குள் அனுப்புகிறது.

காலப்போக்கில் கிரந்த எழுத்துகளின் சொற்களைத் தவிர்க்க முடியாது; ஆனால், அந்த கிரந்த எழுத்துகளைத் தவிர்க்கலாம் என்று முடிவெடுத்தான் அந்த மொழியறிஞன். “வடசொற்கிளவி வடவெழுத் தொரீஇ / எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” என்றான். அதாவது, வடசொற்களின் வடவெழுத்துகளைத் தமிழ் எழுத்துகளாக்கித் தமிழோடு புழங்கலாம் என்று இலக்கணச் சட்டம் இயற்றினான். லஷ்மன் - இலக்குவன் ஆனதும், ஜானகி - சானகியானதும், மஹாராஷ்டிரம் - மராட்டியம் ஆனதும், ஹைகோர்ட் - ஐகோர்ட் என்று எழுதப்படுவதும் தொல்காப்பியன் வகுத்த மொழிமரபின் தொடர்ச்சியே ஆகும். இன்று வடசொற்களையும், திசைச் சொற்களையும் அந்தந்த ஒலிவடிவில் எழுதுவது ஊடகக் கலாச்சாரமாய் இருப்பினும், தொல்காப்பியரின் செல்வாக்கு தமிழ்ப்பரப்பில் முற்றிலும் அற்றுப்போகவில்லை என்பதே மொழியின் தனித்தன்மையாகும்.

காலப்பெருவெளியில் எத்தனையோ அரசர்களின் எத்துணையோ அதிகாரங்கள் மாண்டழிந்துபோயின. ஆனால், தொல்காப்பியன் இயற்றிய மூன்று அதிகாரங்களும் இன்றுவரை ஒரு மொழியில் ஆட்சி செலுத்துகின்றன.

இரு திணைகளில் அடங்கும் உலகு

வைப்பு முறையில் எழுத்ததிகாரத்தைத் தொடர்கிறது சொல்லதிகாரம். எழுத்துக்கு முன்பே பிறந்தது சொல். சொல்லை முன்னிலைப்படுத்திப் பொருள் உண்டாவதில்லை. பொருளை முன்னிலைப்படுத்தியே சொல் உண்டாகிறது. பின்னர் அந்தப் பொருளைச் சுட்டும் சொல் தானும் ஒரு பொருளாகிறது. பொருளே சொல்லுக்கு மூலம் என்பதனால் “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று அறைந்து சொல்கிறது தொல்காப்பியம். இன்னும் ஆழ்ந்து பார்த்தால் எந்த ஒலி எழுத்துக்குள் அடங்குகிறதோ அதுவே சொல்லாகிறது.

கடலோசை - காற்றோசை - இடியோசை - மழையோசை - பறவையோசை - விலங்கோசை - ஆற்றோசை - அருவியோசை - இசைக் கருவிகளின் இன்னோசை - முத்தம் - சிரிப்பு - முனகல் - இருமல் இவையெல்லாம் எழுத்துகளில் அடங்குவதில்லை. அதனால், இவை யாவும் ஒலிக்குறிப்பு களாகுமே அன்றிச் சொற்களாகா. எழுத்துக்குள் அடங்கும் ஒலியே சொல்லாகிறது.

இந்தப் பேரண்டத்தை அளக்கும் அத்தனை சொற்களை யும் இரண்டே இரண்டு செப்புக்குள் அடைக்கிறார் தொல்காப்பியர். ஒன்று உயர்திணை; மற்றொன்று அஃறிணை.

மனிதர் உயர்திணை; மனிதக் கூட்டம் அல்லாதவை எல்லாம் அஃறிணை. அந்த உயர்திணையை ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற மூன்றுக்குள் அடக்கிய தொல்காப்பியர், அஃறிணையை ஒன்றன்பால், பலவின்பால் என்ற இரண்டுக்குள் அடக்குகிறார். இந்தச் சொற்பகுப்பைத் தமிழ் ஞானத்தின் உச்சம் என்றே கொண்டாடலாம். “இந்தோ ஐரோப்பிய மொழிகள் பல உயிருள்ளன, உயிரல்லன அனைத்தையும் உயர்திணையாகவே கொண்டு ஆண் - பெண் என்ற இரு பிரிவுக்குள் அடக்கிவிட்டன.

சித்திய மொழிக் குழுவினுள் பல எல்லாவற்றையும் அஃறிணை யாகவே கொண்டு ஒன்று - பல என்ற இரு பிரிவுக்குள் அடக்கிவிட்டன. தமிழ் ஒன்றுதான் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுத்து, அதனையுடைய மக்களை உயர்திணை எனக் கூறியுள்ளது” என்று தமது தொல்காப்பிய ஆராய்ச்சியுள் அறிஞர் சி.இலக்குவனார் சுட்டுவது அறிவுலகத்தின் ஆழ்ந்த பார்வைக்கு உள்ளாகிறது.

அந்தச் சொற்களைப் பெயர் - வினை - இடை - உரி என்று நான்காகப் பகுத்தபோது மொழியின் மொத்தக் கட்டமைப் பும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. “பொருளை உணர்த்துவது பெயர்ச்சொல். அப்பொருளின் தொழிலைச் சொல்வது வினைச்சொல். பெயருக்கும் வினைக்கும் இடையே மையமாய் இயங்குவது இடைச்சொல். பொருளின் பண்பு கூறுவது உரிச்சொல்” என்ற சிவஞான முனிவரின் தெள்ளுரையும் உள்வாங்கி உணரத்தக்கது.

சொல்லதிகாரத்தில் சொல்லப்பட்ட கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்ற ஒன்பது இயல்களிலும் சொல்லும், சொல் இயங்கும் அறிவியலும், மொழியின் இயக்கத்தால் பெறப்படும் விகாரங்களும், விகாரங்களால் பெறப்படும் புதுவடிவங்களும், தமிழ் மொழியின் ஒரு சொல் இப்படித்தான் இயங்கும் அல்லது இயங்க வேண்டும் என்ற ஒலிச் சட்டங்களும் வரையறுத்து வழங்கப்பட்டுள்ளன. தொல்காப்பியரின் சொல்லதிகாரத்தை இற்றைநாள் மொழியில் சொல்லறிவியல் என்றும் சொல்லலாம்.

பொருள் எனும் பேரதிகாரம்

மூன்றாம் அதிகாரத்திற்குப் பொருளதிகாரம் என்று தலைப்பிட்ட தொல்காப்பியரின் சொற்றேர்வு சுட்டுகிறது அவர் பெற்ற பேரறிவை. மனிதன் பொருள்களால் ஆக்கப்பட்டவன் மற்றும் பொருள்களை இயக்குகிறவன்; பொருள்களால் இயக்கப்படுகிறவன். பொருள்களைக் கண்டறிகிறவன்; பொருள்களை உண்டாக்குகிறவன். இறுதியில் தானும் ஒரு பொருளாகி, பின்னர் பொருளற்ற பொருளாகிக் காலப்பொருளுக்குள் மூலப்பொருளாய்க் கலக்கிறவன் அல்லது கரைகிறவன். இந்த உலகப் பொருள்கள் கட்படு பொருளென்றும் கருது பொருளென்றும் இருவகைப்படும். அவற்றை மூவகைப்படுத்தி முதற்பொருள் - கருப்பொருள் - உரிப்பொருள் என்று பகுத்தறிவால் பகுத்துப் பகுத்து வகைப்படுத்துகிறார் தொல்காப்பியர்.

முதற்பொருள் எதுவென்று முன்மொழிந்தது தொல்காப் பியரின் மூளைப்பழம் பிழிந்த சாறாகும். உயிர்த்தோற்றத் தின் மூலமாகிய இந்த நிலமென்ற உருவமும், இந்த நிலவியல் வாழ்வை இயக்குகின்ற காலம் என்ற அருவமும் முதற்பொருள் என்பது தொல்காப்பியரின் அசைக்க முடியாத அறிவின் ஆணையாகும். “முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின் / இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே” என்பது எங்கள் முன்னோன் எழுதிய முன்னறிவியல்.

ஐன்ஸ்டைன் முதலாக ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் ஈறாக விளங்கிய விஞ்ஞானிகளும் ‘காலமும் வெளியும்’ (Time and Space) என்று தேடிக் கண்டறிந்த திரவியத்தை அன்றே சுட்டிய பேரறிவு பெருமைக்குரியது.

முதற்பொருள்களில் கருக்கொள்வனவெல்லாம் கருப்பொருள்கள். அந்தக் கருப்பொருள்களின் ஒழுகலாறுகள் உரிப்பொருள்கள் என்று வகைப்படுத்தியதில் மொத்த உலகத்தையும் இந்த மூன்று பகுப்புக்குள் அடக்கி முடிக்கிறார் அறிஞர் பெருமான்.

அகத்திணையியல் - புறத்திணையியல் - களவியல் - கற்பியல் - பொருளியல் - மெய்ப்பாட்டியல் - உவமவியல் - செய்யுளியல் - மரபியல் என்ற பொருளதிகாரத்தின் 9 இயல் களிலும் தமிழர்களின் காதலும் வீரமும், நிலமும் பொழுதும், வாழ்வும் தொழிலும், உணவும் உணர்வும், கலையும் கல்வியும், வழக்கமும் ஒழுக்கமும், உறவும் பிரிவும், அறமும் மறமும், மரபும் மாற்றமும், யாப்பும் அணியுமென எல்லாப் பொருளையும் இலக்கணப்படுத்தியிருக்கிறார் தொல்காப்பியப் பேராசான்.

விஞ்ஞானத்தோடு முன்னின்றவன்

உலகத் தோற்றம் குறித்து இதுவரை இரண்டு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று மதக் கருத்து; இன்னொன்று அறிவியல் கருத்து. இந்த அண்டமே கடவுளின் கைவினை என்ற கருத்தையே எல்லா மதங்களும் எழுதிப்போகின்றன. ஆனால், கரிமக்கொள்கை என்ற விஞ்ஞானம் இந்த பூமியின் தோற்றம் குறித்து அதுவரையில் இருந்த எல்லா நம்பிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிவியல் எல்லைக்குள் அண்டத்தை அளந்தது தொல்காப்பியம்.

“நிலம் தீ நீர் வளி விசும்பொடு / ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” (பொருளதிகாரம் மரபியல் 86) என்று வரையறுக்கிறது தொல்காப்பியம். நிலம் - நீர் - தீ - வளி - வெளியென்ற ஐந்தின் கலவைதான் இந்த மண்கோள் என்று முரண்பாடில்லாத கருத்தை முன்மொழிகிறது. இந்த பூமி எப்படிப் படைக்கப்பட்டது என்ற மதம்சார் கருத்தியலில் தோயாமல், எதனால் படைக்கப்பட்டது என்ற மெய்ம்மையோடு மட்டும் நின்றுகொண்டதால் தொல்காப்பியத்தை எந்த நூற்றாண்டு அறிவியலும் இடறித்தள்ளவியலாது.

தொல்காப்பியர் எந்த மதத்துக்குள்ளும் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை. ஐவகை நிலம் காக்கத் தங்க ளைக் களப்பலியிட்டுக்கொண்ட முன்னோர்களுக்கு நட்ட நடுகல்லையே தமிழர்கள் தெய்வமென்று போற்றி வழி பட்டார்கள் என்பதையே தொல்காப்பிய நூற்பா நுதலிப் போகிறது. “காட்சி, கால்கோள் நீர்ப்படை நடுகல் / சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல் என்று இருமூன்று மரபில் கல்லொடு புணர” (பொருளதிகாரம் : புறத்திணையியல் 5) என்னும் தொல்காப்பியம் நடுகல் வழிபாடுதான் தமிழர்களின் ஆதிவழிபாடு என்று சான்றளிக்கிறது. அதுவே, குலதெய்வ வழிபாடாகி இன்றுவரை நாட்டார் சமயமாய் விளங்குகிறது.

தொல்காப்பியத்தை எப்படி மதிப்பிடுவது?

மொழி, இலக்கணக் கோட்டுக்குள் இயங்கவும், அதன் ஒலி தடம் புரளாமல் பயணிக்கவும், தமிழன் ஆதிகுடி என்பதற்கு அடையாளம் காட்டவும், மொழிக்கு அறிவியலையும் வாழ்வுக்கு அறவியலையும் அடிப்படையாகக் கொண்டது தமிழ்ப் பழங்குடி என்பதற்குச் சான்று சொல்லவும், தமிழர்க்கு உச்சமாகவும் எச்சமாகவும் உள்ள தொல்லாவணமே தொல்காப்பியம் என்று மதிப்பிடலாம். தொல்காப்பியத்தைக் கட்டிக்காப்பது அரசாங்கத்தின் - அறிவுலகத்தின் கடமை மட்டுமன்று; தமிழ் மொழி பேசும் - எழுதும் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

- வைரமுத்து, கவிஞர்.

மகத்தான தமிழ் ஆளுமைகளை இளைய சமூகத்திடம் கொண்டுசேர்க்கும் விதமாக கவிஞர் வைரமுத்து அரங்கேற்றிவரும் ‘தமிழாற்றுப்படை’ கட்டுரைத் தொடரில் மே 2 அன்று அவர் வாசித்த கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்.

N. Ganesan

unread,
Apr 6, 2021, 4:29:43 PM4/6/21
to Santhavasantham, maniam...@gmail.com, Kuppu Ramasamy
    
http://fetna.org ஐம்பத்தேழு பெரு நகரங்களின் - அமெரிக்கா, கனடா - தமிழ்ச் சங்கங்கள்
தொல்காப்பியர் திருநாள் (ஏப்ரல் 14, 2021) என முதல் முறையாகக் கொண்டாடுகின்றன.
திருவள்ளுவர் வடிவம் அமைந்த வரலாற்றை வேணுகோபால சர்மா, பாரதிதாசன் போன்றோர்
சொல்லியுள்ளனர். திருவள்ளுவர் திருநாள் பொங்கல் திருவிழாவின்பொழுது அமைந்துள்ளது.
அதற்கு இணையாக, தொல்காப்பியர் திருநாள் விழாவினை அமெரிக்க தமிழ் சங்கங்கள் பேரவை
கொண்டாடுகிறது. தொல்காப்பியம் பற்றிய நல்ல கவிதைகள், கட்டுரைகள் கொண்ட “தொல்காப்பியர்
திருநாள் சிறப்பிதழ்” (அருவி இதழிகை) பெட்னா ஆசிரியர்குழு வெளியிடுகிறது.

இந்த நல்ல தருணத்தில், தொல்காப்பியர் வடிவம் அமைந்த வரலாற்றைச் சுருக்கமாகக் காண்போம்.

தொல்காப்பியர் திருநாள் - சித்திரை 1
-------------------------------------------------------------------------
http://nganesan.blogspot.com/2021/02/chithirai-1st-tolkappiyar-tirunaal.html

(i) In the MGR govt., during World Tamil Conference (1981) at Madurai, an exquisite Tolkappiyar icon was installed:
https://www.youtube.com/watch?v=yolEPJcolRA

(ii) In the Jayalalitha govt., during World Tamil Conference (1995) at Thanjavur,
Tolkappiyar Cathukkam with a 7-storey tower was constructed. But there is Tol. statue here,

(iii) In 2016, a beautiful Tolkappiyar statue in bronze was unveiled at Kappikkadu village, Kanyakumari district.

(iv) In 2019, CM Edappadi Palanisamy opened a nice Tolkappiyar icon in Madras University, Marina campus.
https://en.paperblog.com/cm-mr-edappadi-palaniswami-unveils-statue-of-tholkappiyar-2030039/

All Tolkappiyar statues, paintings are modeled after Sri. Vai, Ganapathy Sthapathi's
design and carving at Madurai, 1981.
காப்பிக்காடு. கப்பிய காடு எனப் பொருள். காமிண்டன் வகையாரில் காப்பிலியர் உண்டு. காப்பிக்காடுகளை
வேளாண்மை செய்யும் நிலமாகத் திருத்தினோர். கொங்கிலும் காப்பிக்காடு (பந்தலூர் வட்டம், சுல்தான் பேட்டரி அருகே,
சேரம்பாடி பகுதி) உண்டு, காப்பிக்காடு = அடவி.

கபி கோத்திரத்தார் காப்பியர் என்பது கல்வெட்டுகளில் காணும் செய்தி. காப்பியக்குடி தென் தமிழகத்தில் ஒன்று
இருந்திருக்கலாம். பிற காப்பியக்குடி என்னும் ஊர்களும் தமிழகத்தில் உள்ளன. தொல்காப்பியரின் ஊர், வாழ்ந்த
ஆண்டு, இயற்பெயர், .... எதுவும் துல்லியமாகக் கிடைப்பதில்லை.

N. Ganesan
 
       வாழ்த்து

   வெல்லத்தமிழ் வானந்தனில் ஒளிர்நூல்களின் நடுவே
   எல்லோனெனச் சுடர்பொக்கிடம் தொல்காப்பியம் வாழ்க!
   வல்லோர்பலர் புகழ்சித்திரை முதல்நாளினி மேலே
   தொல்காப்பியர் திருநாளென அரசாணையில் மலர்க!

                     - பேரா. சு. பசுபதி, கனடா



தொல்காப்பியன்: ஆதி அறிவன்

tolkappiyar2.jpg

https://www.hindutamil.in/news/opinion/columns/128816--10.html

tholkapiyar.PNG

 

N. Ganesan

unread,
Apr 7, 2021, 7:15:40 AM4/7/21
to Santhavasantham, Jean-Luc Chevillard, Eva Wilden, George Hart, Sascha Ebeling, Nikolay Гордийчук, Indira Peterson, Kučera Jan, R Cheran, David Shulman, s.r...@utoronto.ca, Ulrike Niklas, Srinivas Reddy, Whitney Cox, Vasu Narayanan
வையாபுரிப்பிள்ளை பேரன் வாழ்த்துக்கு என் மறுமொழி.
நா. கணேசன்

Thanks, your grandfather, Sri. S. Vaiyapuri Pillai, a pioneer Tamil scholar, did yeoman services to understand Tolkappiyam, other grammars and NighaNTu lexicographic traditions. One of the most important sources to know about Tolkappiyar is the Paayiram by his colleague Panamparanar in this First tamil grammar. Prof. P. Pandiyaraja (American College, Madurai) sent me an important article on the line, "mayangaa marabin ezuttunilai kaaTTi". This contains important clues on the date of Tolkappiyam. Or, at least for the layers when puLLi principle is applied on the Brahmi script to inscribe Tamil on coins and in caves. Prof. S. V. Shanmukam sent a long article on "muntu nuul". Artur Coke Burnell, who also was one of the authors of Hobson-Jobson dictionary, an important source for Indic words in English, studied about Aindra grammar (mentioned in the TK paayiram) and its connection with Tolkappiyam in the mid-19th century. You can see ACB's photograph and bio here,
https://en.wikipedia.org/wiki/File:Arthur_Coke_Burnell.jpg
https://en.wikipedia.org/wiki/Arthur_Coke_Burnell
https://archive.org/details/b30094288
1874 signature of A. C. Burnell from Tanjore,
https://commons.wikimedia.org/wiki/File:Brief_von_Burnell_an_Rost_3.2.1874_Unterschrift_solo.jpg

Tiru. S. Vaiyapuri Pillai wrote papers in Centamizh, the jounal of Madurai Tamil Sangam, establishing that Tolkappiyar's religion was Jainism. The very last word in the all important paayiram has paDimai, "tava ozukkam" - a word used only in Jaina religion's canonical texts. Also, categorizing different forms of Life starting with one thru six senses comes from Jaina religion. I have the original Tamil papers. will upload them, and give a plain-text version in Unicode. Here is a discussion on Vaiayapuri Pillai's mentioned papers.

Studies in South Indian Jainism
by M. S. Ramaswami Ayyangar, B. Seshagiri Rao
https://archive.org/details/studiesinsouthin00ramarich/page/n5/mode/2up
https://www.forgottenbooks.com/en/books/StudiesinSouthIndianJainism_10051609

tolkappiyar3.jpg

Tolkappiyar4.jpeg

N. Ganesan

unread,
Apr 7, 2021, 10:53:13 AM4/7/21
to Santhavasantham
தவ. சசிதரன், யாழ்ப்பாணம் (/லண்டன் ) இரு சந்தவசந்தக் கவிகள் பாடிய மரபுக்கவிதைகளை
இசையமைத்து வருகிறார். விரைவில் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (http://fetna.org)
வலைத்தளத்தில் வெளிவர உள்ளன.

தொல்காப்பியர் திருநாள் (திருவள்ளுவர் ஆண்டு 2052, சித்திரை முதல்நாள்)
  சிறப்பு வெளியீடு: தமிழ்த்தாய் வாழ்த்து, தொல்காப்பியர் திருநாள் திருப்புகழ்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (http://fetna.org), ஏப்ரல் 14, 2021.

தமிழ்த்தாய் வாழ்த்து  (வண்ணப்பாடல்)
  கவிமாமணி இலந்தை சு. இராமசாமி
   அசைகள் பண்டே இருவகை வந்து  (first line)

தொல்காப்பியர் திருநாள் வாழ்த்து  (திருப்புகழ்)
 புலவர் இராம. இராமமூர்த்தி, திருச்சி
     என்றும்  தமிழ்மொழி   நின்றும்   நிலவிட (first line)

-------------------------------

தொல்காப்பியர் திருநாள் :: சித்திரை முதல் நாள்!

 

என்றும்  தமிழ்மொழி   நின்றும்   நிலவிட

இன்றும்  நமதுளம்  வென்றும்   வளர்பல            துறைநூல்கள்

மன்றில்  நடமிட  அன்பர்  உளமதில்

அன்றே  முதலுல   கெங்கும்   புகழ்பெறப்               பலவாகித்

 

தங்கு   மகவலும்    வஞ்சி   வெளிவகை

துங்கக்  கலிதுறை      வ்ருத்தம்    தாழிசை              வடிவாகிச்                     

சங்கத்   தமிழுடன்  துங்கம்  முறவளந்

தங்கு     மியலிசை  பொங்கு  நடமிவை                வளர்ஆலாய்

 

எங்கும்  பலப்பல    வென்னும்      பாவணி 

ஏயும்     மொழியுட   னெழுத்தின்     புணர்ப்பிய   லவையோடே      

கங்குக்    கரையில  தாகு   மிலக்கணங்

கண்ட  புலவர்தொல்  காப்பி  யர்பனு                    வலையீந்தார்,

 

என்றும்   நானில  மொன்றும் இறையுடன்

நன்றாம் இசைதொழில் நாடும் மரமிவை              விலங்கோடே

ஒன்றும்  புள்பறை  உறைவோர் இனத்துடன்

நின்ற  முதல்கரு  நிலம்சேர்   உரிப்பொருள்               வகைநாடி


சொல்லின்  பெயர்வினை  இடை உரி   வகையிவை

அன்றி    எச்சமும்  அகத்திணை புறத்திணை             அவைகூறி

சாருங்   களவியல்  கற்பியல்  மெய்ப்பா

டோருஞ்     செய்யுள்   யாப்பியல்  அணியியல்          உரைத்தோராய்

 

சீரும்    வண்ணமும்   அணிவகை  மரபுகள்

தேர்ந்தவன் பிறந்தது     சித்திரை முதல்நாள்          எனக்கூற

நேர்மைத்   தமிழராய்  நெஞ்சினில் பொலிவுற

ஆர்கலி  மேதினி   அதனை    ஏற்றகம்                          மகிழ்வோமே                        

 

(தந்தத்    தனதன  தந்தத்   தனதன

         தந்தத்    தனதன  தந்தத்   தனதன           தனதானா)

 

தமிழ்த்தாய் வாழ்த்து

--------------------------------------

அசைகள் பண்டே இருவகை வந்து
விசைகொள் செங்காய் கனியென முந்தி
அரிய தண்பூ நிழலென மந்திர ஒலிகூடி

அடரும் அஞ்சீர் அடிதொடை சிந்த
தளைவ ரும்பா தகவொடு விஞ்ச
அகவல் வெண்பா கலியொடு வஞ்சிகொள்  கவியாகி

 

இசைகொள் சிந்தோ டெழிலுற உந்தி
வணமு வந்தே அடைவுறு சந்தம்
இனிய கண்டோ எனவுறு விந்தைகொள் இசைநாதம்

இலகு பந்தா டிடவரு பண்கள்
எழிலோ டுஞ்சீர் படமிளிர் பந்தம்
இயலொ டும்பா இசையொடும் வந்தெழில் நடமாட

 

விசைகொள் தெம்போ டுலவிடு  கின்ற
பரணி அந்தா திபெருவி ருந்து
மிளிரு பண்போ டிலகிடு செந்தமிழ் எனலாமே

விதவி தந்தேர் கவியினம் முந்தி
விரியு மன்றே புகழ்பெற விஞ்சி
மிகுவி ருந்தோ வெனவரு செந்தமி  ழிதிகாசம்

 

திசைக ளெங்கா கினுமவை சென்று
திரைக டந்தே  தெளிவுற நின்று
செயம டைந்தே அடைவுறு  செந்தமிழ்  பெரிதாமே

தின முவந்தே  திகழ்தமிழ்  என்றன்
இதயம் என் தாய்  எனதிறை என்று
திட மு ணர்ந்தே  திருவடி நின் தலை பணிவாயே!

 

(தனன  தந்தா  தன தன தந்த

தனன  தந்தா  தன தன தந்த

தனன  தந்தா  தன தன தந்தன  தனதான)

 



N. Ganesan

unread,
Apr 15, 2021, 7:49:45 AM4/15/21
to Santhavasantham, George Hart
 (1) தமிழ்த்தாய் வாழ்த்து
https://youtu.be/PW5NVBX-MnU

(2) தொல்காப்பியர் திருநாள் வாழ்த்து

தொல்காப்பியர் திருநாள் :: சித்திரை முதல் நாள்!
----------------------------------------------------------------------------------------------------- என்றும் தமிழ்மொழி நின்றும் நிலவிட இன்றும் நமதுளம் வென்றும் வளர்பல துறைநூல்கள் மன்றில் நடமிட அன்பர் உளமதில் அன்றே முதலுல கெங்கும் புகழ்பெறப் பலவாகித் தங்கு மகவலும் வஞ்சி வெளிவகை துங்கக் கலிதுறை வ்ருத்தம் தாழிசை வடிவாகிச் சங்கத் தமிழுடன் துங்கம் முறவளந் தங்கு மியலிசை பொங்கு நடமிவை வளர்ஆலாய் எங்கும் பலப்பல வென்னும் பாவணி ஏயும் மொழியுட னெழுத்தின் புணர்ப்பிய லவையோடே கங்குக் கரையில தாகு மிலக்கணங் கண்ட புலவர்தொல் காப்பி யர்பனு வலையீந்தார், என்றும் நானில மொன்றும் இறையுடன் நன்றாம் இசைதொழில் நாடும் மரமிவை விலங்கோடே ஒன்றும் புள்பறை உறைவோர் இனத்துடன் நின்ற முதல்கரு நிலம்சேர் உரிப்பொருள் வகைநாடி சொல்லின் பெயர்வினை இடை உரி வகையிவை அன்றி எச்சமும் அகத்திணை புறத்திணை அவைகூறி சாருங் களவியல் கற்பியல் மெய்ப்பா டோருஞ் செய்யுள் யாப்பியல் அணியியல் உரைத்தோராய் சீரும் வண்ணமும் அணிவகை மரபுகள் தேர்ந்தவன் பிறந்தது “சித்திரை முதல்நாள்” எனக்கூற நேர்மைத் தமிழராய் நெஞ்சினில் பொலிவுற ஆர்கலி மேதினி அதனை ஏற்றகம் மகிழ்வோமே (தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தனதானா)

தமிழ்த்தாய் வாழ்த்து -------------------------------------- அசைகள் பண்டே இருவகை வந்து விசைகொள் செங்காய் கனியென முந்தி அரிய தண்பூ நிழலென மந்திர ஒலிகூடி அடரும் அஞ்சீர் அடிதொடை சிந்த தளைவ ரும்பா தகவொடு விஞ்ச அகவல் வெண்பா கலியொடு வஞ்சிகொள் கவியாகி இசைகொள் சிந்தோ டெழிலுற உந்தி வணமு வந்தே அடைவுறு சந்தம் இனிய கண்டோ எனவுறு விந்தைகொள் இசைநாதம் இலகு பந்தா டிடவரு பண்கள் எழிலொ டுஞ்சீர் படமிளிர் பந்தம் இயலொ டும்பா இசையொடும் வந்தெழில் நடமாட விசைகொள் தெம்போ டுலவிடு கின்ற பரணி அந்தா திபெருவி ருந்து மிளிரு பண்போ டிலகிடு செந்தமிழ் எனலாமே விதவி தந்தேர் கவியினம் முந்தி விரியு மன்றே புகழ்பெற விஞ்சி மிகுவி ருந்தோ வெனவரு செந்தமி ழிதிகாசம் திசைக ளெங்கா கினுமவை சென்று திரைக டந்தே தெளிவுற நின்று செயம டைந்தே அடைவுறு செந்தமிழ் பெரிதாமே தினமு வந்தே திகழ்தமிழ் “என்றன் இதயம் என்தாய் எனதிறை என்று திட மு ணர்ந்தே திருவடி நின் தலை பணிவாயே! (தனன தந்தா தன தன தந்த தனன தந்தா தன தன தந்த தனன தந்தா தன தன தந்தன தனதான)

Subbaier Ramasami

unread,
Apr 15, 2021, 10:45:19 AM4/15/21
to santhav...@googlegroups.com
வண்ணப்பாடல் எப்படிப் பாடக்கூடாதோ அப்படிப் பாடியிருக்கிறார்கள். வார்த்தைகள் கடித்துக் குதறப்பட்டிருக்கின்றன. கேட்பதற்கு நன்றாக இருந்தால் மட்டுமே போதுமா?

On Thu, Apr 15, 2021 at 6:49 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

தினமு வந்தே திகழ்தமிழ் “என்றன் இதயம் என்தாய் எனதிறை என்று திட மு ணர்ந்தே திருவடி நின் தலை பணிவாயே! (தனன தந்தா தன தன தந்த தனன தந்தா தன தன தந்த தனன தந்தா தன தன தந்தன தனதான)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 15, 2021, 10:51:31 AM4/15/21
to Santhavasantham
On Thu, Apr 15, 2021 at 9:45 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
வண்ணப்பாடல் எப்படிப் பாடக்கூடாதோ அப்படிப் பாடியிருக்கிறார்கள். வார்த்தைகள் கடித்துக் குதறப்பட்டிருக்கின்றன. கேட்பதற்கு நன்றாக இருந்தால் மட்டுமே போதுமா?

There is also another version of singing - Carnatic music by Rajasekar.
N. Ganesan

On Thu, Apr 15, 2021 at 6:49 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

தினமு வந்தே திகழ்தமிழ் “என்றன் இதயம் என்தாய் எனதிறை என்று திட மு ணர்ந்தே திருவடி நின் தலை பணிவாயே! (தனன தந்தா தன தன தந்த தனன தந்தா தன தன தந்த தனன தந்தா தன தன தந்தன தனதான)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUdtJZv7Y%2BcfJATEG1nRA07UGD0bibS2GxVQad7__c2XhQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 15, 2021, 2:44:22 PM4/15/21
to Santhavasantham
வணக்கம், இது என் மாணவர் இராஜசேகர் பாடி அனுப்பிய தொல்காப்பியர் திருப்புகழ். - புலவர் இராமமூர்த்தி.

Ragamalikai:
1. Naattai
2. Hamsadhwani
3. Hindolam
4.Hamsaanandi
5. Mohanam
6. Surutti

WhatsApp Audio 2021-04-13 at 6.49.17 AM.m4a

N. Ganesan

unread,
Apr 15, 2021, 3:05:56 PM4/15/21
to Santhavasantham
Reply all
Reply to author
Forward
0 new messages