ழகரம் தமிழுக்குச் சிகரம்
=======================
தமிழில் ல் , ள் , ழ் ஆகிய மூன்றும் மருங்கொலிகள் எனப்படும் .
மூச்சுக்காற்றை நாக்கினால் தடுத்துக்கொண்டு, அதை நாக்கின் ஒரு பக்கமாகவோ இரண்டு பக்கமாகவோ செலுத்தும்போது பிறக்கும் ஒலியை மருங்கொலி ( lateral ) என்பா் .
இவற்றுள் லகரம் நுனிநா நுனியண்ண மருங்கொலி , ளகரம் நாவளை மருங்கொலி , ழகரம் நாவளை மருங்கு தொடரொலி எனப்படும் .
தமிழும் மலையாளமும்
=====================
ழகரம் திராவிட மொழிகளுள் தமிழிலும் , மலையாளத்திலும் உண்டு . உலக மொழிகளுள் பிரெஞ்சு மொழியில் மட்டும் உள்ளது .
ஆலப்புழை , விழிஞம் ஆகியன கேரளாவிலுள்ள ஊா்ப் பெயா்களாகும் . இவற்றில் ழகரம் இடம் பெற்றிருப்பதைக் காணலாம் . தமிழில் " விழுகின்றான் " என்பதை மலையாளத்தில் " விழுன்னு "
என்று சொல்வா் . இன்னும் பல சொற்களில் ழகரம் ஆண்டு வருகின்றது .
பிரெஞ்சு மொழியில் ஒலியில்தான் ழகரம்
இருக்கின்றது . சொல்லில் இல்லை .
Page என்பதைப் பாழ் என்றும் , Rouge என்பதை ரூழ் என்றும் சொல்கின்றனா் .
தமிழும் ஆங்கிலமும்
====================
தமிழ் மொழியிலுள்ள ழகர உச்சாிப்பை , ஆங்கில மொழியிலுள்ள L என்ற எழுத்தால் கொண்டு வர முடியாது . ழ் என்பதை lz ஆகிய எழுத்துக்கள் மூலமாகவும் , ழ என்பதை zha
ஆகிய எழுத்துக்கள் மூலமாகவும் ஓரளவுக்குக் கொண்டு வர முடியும் . அன்பழகன் என்பதை Anbalagan என்றே ஆங்கிலத்தில் எழுதுகின்றனா் . Anbazhagan என்று பெரும்பாலோா் எழுதுவதில்லை .
ழகரம் எங்கெங்கு வரும் ?
=======================
ழ் என்னும் ஒற்றெழுத்து தனிக்குறிலை அடுத்து வராது . நெடிலை அடுத்து வரலாம் .
அழ் என்று வராது ஆழ் என்று வரும் .
உழ் என்று வராது ஊழ் என்று வரும் .
எழ் என்று வராது ஏழ் என்று வரும் .
கழ் என்று வராது காழ் என்று வரும் .
இதுபோல சொல்லிக் கொண்டே போகலாம் .
இரண்டு குறில்களை அடுத்து ழகரம் வரலாம் .
அகழ் , இதழ் , புகழ் என்று வரலாம் .
ழகரத்தை அடுத்து ழகரமோ , அதன் வா்க்க எழுத்துக்களோ வராது .
வெல்லம், பள்ளம் -- இச்சொற்களில் முறையே லகர , ளகரங்கள் சோ்ந்து வருகின்றன . இவ்வாறு இரண்டு ழகரங்கள் சோ்ந்து லருகின்ற சொற்கள் தமிழில் இல்லை .
சொல்லுக்கு முதலில் வரும் ஒன்பது மெய்களும் , ங வும் , ழகரத்தை அடுத்து வரும் . அஃதாவது கசதபஞநமயவங ஆகிய எழுத்துக்கள் ழகரத்தை அடுத்து வரும் .
சூழ்க , வீழ்ச்சி , அமிழ்து , காழ்ப்பு , சூழ்ஞாலம் , வாழ்நாள் , ஆழ்மனம் , ஆழ்யாறு , ஊழ்வினை ,
பாழ்ங்கிணறு என்று வரும்.
ழகரம் கெடுதல்
===============
பெரும்பாலான மக்கள் உரையாடலில் ழகர
மெய் , சில இடங்களில் அறவே மறைந்து விடுகிறது . வினைத்தொகை தவிர மற்ற தொகைச் சொற்களில் , ஒரு நெடிலை அடுத்து வரும் ழகரமே இவ்வாறு கெடுகிறது .
கேழ்வரகு > கேவரகு
தாழ்ப்பாள் > தாப்பாள்
தாழ்வாரம் > தாவரம்
வாழ்க்கைப்படு > வாக்கப்படு
வாழ்வரசி > வாவரசி
சென்னைத் தமிழில், இழுத்து > இஸ்த்து
என்று வழங்குகிறது .
ழகர ஈற்றுப் புணா்ச்சி
====================
ழகரத்தின் முன் வல்லினம் வந்தால் , சில இடங்களில் ஒற்று மிகுந்தும் , சில இடங்களில் ஒற்று மிகாமலும் வரும் .
சூழ் + கலை = சூழ் கலை
என ஒற்று மிகாமல் வரும் . ஏனெனில் சூழ்கலை வினைத்தொகையாகும் . வினைத்தொகையில் ஒற்று மிகாது .
புகழ் + புாிந்தாா் = புகழ் புாிந்தாா்
இது இரண்டாம் வேற்றுமைத் தொகை . எனவே வலி மிகாது .
தமிழ் + புலவா் = தமிழ்ப் புலவா்
ஊழ் + பயன் = ஊழ்ப் பயன்
ழகரத்தின் முன் வல்லெழுத்தில் தொடங்கும் பெயா்ச்சொல் வந்தால் வலி மிகும் .
ழகரத்தின் முன் மெல்லினம் வந்தால் இயல்பாகப் புணரும் .
தமிழ் + மொழி = தமிழ் மொழி
புகழ் + மணம் = புகழ் மணம்
சூழ் + நிலை = சூழ் நிலை
ழகரத்தின் முன் இடையினம் வந்தால்
இயல்பாகப் புணரும் .
பாழ் + விலங்கு = பாழ் விலங்கு
புகழ் + வளா்த்த = புகழ் வளா்த்த
சூழ் + வாி = சூழ் வாி
வாழ் + யுகம் = வாழ் யுகம்
திசைப் புணா்ச்சியில்
====================
கிழக்கு + தெரு = கீழத் தெரு
கிழக்கு > கீழ் > கீழ என்று மாறி , வருமொழி
தெருவுடன் புணரும்போது கீழத்தெரு என்று வரும் .
உாிச்சொல் புணா்ச்சியில்
========================
குழ , மழ ஆகியன உாிச் சொற்களாகும் .
குழ+ களிறு = குழக் களிறு என்று ஒற்று மிகுந்து வரும் .
ஆனால் ,
மழ + களிறு = மழ களிறு என்று ஒற்று மிகாமல் வரும் . இதற்குத் தெளிவான விதி இல்லை . மரபு புணா்ச்சியாதலால் , அதை நாம் ஏற்க வேண்டும் .
ழகரம் டகரமாய்த் திாிதல்
=======================
பழந்தமிழில் வருமொழி முதலில் தகரம்
வருமானால் ழகரம் , டகரமாய்த் திாிவதுண்டு .
திகழ் + சக்கரம் = திகட சக்கரம்
என்று வரும் .
ழகரம் ணகரமாய்த் திாிதல்
==========================
வாழ் + நாள் = வாணாள்
சோழ + நாடு = சோணாடு
என்று மாறும் .
அடுக்குத் தொடாில்
===================
அடுக்குத் தொடா்கள் இயல்பாகவே புணரும் .
பாழ் பாழ் , தாழ் தாழ் என்பன அடுக்குத் தொடா்கள் . இடையே ஒற்று மிகாது .
பாழ்ப்பாழ் , தாழ்த்தாழ் என்று வராது .
இது முகநூலில் உள்ள சொல்லாய்வு என்னும் குழுமத்தில் திரு.ஜெகதீசன் முத்துகிருஷ்ணன் என்பவர் எழுதிய பதிவு.