காடி, நெய் - சங்க இலக்கியத்தில் விளக்கெண்ணெய் (Castor Oil) பெயர்கள்
------------------------------------------------------------------------------------------------------------
பேரா. ச. கண்மணி கேட்டிருந்தார்:
> ஆமணக்கு என்ற புன்செய்ப் பயிர் பண்டை இலக்கியத்தில் இடம் பெற்று உள்ளதா?
> அதற்கு வேறு பெயர்கள் உள்ளனவா? தாய்த் தெய்வ வழிபாட்டில் முக்கிய இடம் பெறும்
> இத்தாவரத்தைப் பண்டை தமிழ் இலக்கியத்தில் காண... முயல்கிறேன்; முடியவில்லை. சக
நல்ல கேள்வி. யாரும் எழுதியதாய்த் தெரியவில்லை. சில ஆராய்ச்சிக் குறிப்புகள்.
தாய்த் தெய்வ வழிபாட்டில் விளக்கெண்ணெய் பற்றி எழுதவும். தொல்காப்பியத்தில்
விளக்கெண்ணெய் (Castor Oil) பற்றிச் சொல்கிறேன். அதனால், தாய்த்தெய்வ வழிபாட்டுக்கு
விளக்கெண்ணெய் (= ஆமணக்கு/கொட்டைமுத்து/முத்து எண்ணெய்) சங்க காலத்தில் பயன்படத்
தொடங்கியுள்ளனர்.
ஆமணக்கு - நிகண்டுகள் பதிவு செய்துள்ளன. எனவே, கி.பி. 5-ம் நூற்றாண்டு வாக்கில்
இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். ’ஆமணக்கு நட்டு ஆச்சாவாக்கல் ஆகாது' என்ற
பழமொழியை நச்சர்
சிந்தாமணி ( 2613) உரையிலே சொல்லியுள்ளார். ஆதளை, ஆமண்டம், ஏரண்டம் (< ஹேரண்டம் என
வடமொழி). மூலிகை அகராதிகளில் சுமார் 90+ பெயர்கள் கொட்டைக்கு உள்ளது.
இந்தியா முழுதும்
வழங்கும் சொற்கள் இறக்குமதி.
கொட்டைபரப்பு-தல் koṭṭai-parappu- , v. tr. < id. +. Lit., to sow
castor-oil seeds. To destroy completely, rase to the ground, as an
enemy's town; [கொட்டைமுத்து விதைத்தல்] பகைவரதுநாட்டை அழித்துத்
தரைமட்டமாக்குதல். திரிபுரஞ் சுட்டுக் கொட்டைபரப்புங் குரிசில்
(திருப்பு.).
https://www.kaumaram.com/thiru/nnt1198_u.html வட்ட முலைக்கச்சு - திருப்புகழ்
கொட்ட(ம்) மிகுத்திட்ட அரக்கர் பட்டணம் இட்டு நெருப்புக்
கொளுத்தி அத் தலை கொட்டை பரப்பச் செருக் களத்து
இடை அசுரோரைக் குத்தி முறித்துக்
https://www.kaumaram.com/thiru/nnt0319_u.html தசைதுறுந் தொக்கு ...
காஞ்சிபுரத் திருப்புகழ்
ஒற்றைக் கணை இட்டு எண் திரிபுரம் சுட்டுக் கொட்டை பரப்பும் குரிசில்
வந்திக்கக் கச்சியில் நிற்கும் கதிர் வேலா
தமிழ், மலையாளம் இரண்டிலும் சங்க காலப் பெயர்: *கொட்டை* (Castor Nut).
கொட்டைச் செடியின் கீழே
இலிங்கம் உள்ள ஊர்: கொட்டையூர். வடமொழியில்: ஹேரண்டபுரி. தேவாரம் உள்ள
தலம் இது. இலிங்கம்
கொட்டைமுத்தால் இயன்றது போல உள்ளது. பந்தாடுநாயகி, எங்கு இல்லாதவாறு
காலில் பந்தை ”உந்தீ! பற” என
உதைக்கிறாள். கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் பெரும்புலவர். அவரது
பிரபந்தங்களை உவேசா அச்சிட்டார்.
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடக, கொட்டையூர் சி. தேசிகர் பாடியது.
கொட்டைச் செடிக்கு உள்ள பெயர்களில் ஒன்று: ஆதளை. ஆதளை மாதுளைக்கும்,
ஆமணக்குக்கும் பெயர்.
இப்பெயர் பற்றி மட்டும் சொல்கிறேன். துவளை : துவளுவது. அடர்த்தியான
புதர்களாக உள்ள தாவரங்களுக்குத்
தமிழில் -துவளை என்று பெயரிட்டுள்ளனர். தூதுவளை, மாதுவளை, ...
தூதுவளை > தூதுளை/தூதுளம் என்று மூலச்சொல்லில் வகரம் மறைந்து வழங்குகிறது. அதுபோல்,
மாதுவளை - மாங்காய் போலக் காய்ப்பது. தொங்கிக்கொண்டிருக்கும் (துவளு-) வாதுகளில்
மாதுளங்காய் காய்க்கும். இது, ஸம்ஸ்கிருதத்திலே, மாதுளங்க- < மாதுளங்காய்
என்றாகிறது.
மாதுளையும், குலாம் காதிறு நாவலரும்:
https://abedheen.wordpress.com/2007/07/28/குலாம்-காதிறு-நாவலர்/
https://nagoori.wordpress.com/2014/08/03/துலுக்கச்சி-வயிற்றில்-மக/
Typically pomegranates are grown as a tree, but they can be grown as a
large bush by allowing suckers to grow, and keeping it pruned for
size.
கச்சபம்/கச்சவம் என்பது ஒரு வகை ஆமை. கச்சவ + ஆலயம் = கச்சாலயம். ராமநாதபுரம்
சேதுபதிகளின் கச்சவத்தீவு > கச்சத்தீவு ஆகிவிட்டது. காரைக்குடி மணி
நேற்று மறைந்துவிட்டார். அவர் முழவக்குன்று (> முழக்குன்னு) என்னும் கேரள
துர்க்கை கோவிலை பிரபலப்படுத்தியவர். (1) கச்சவத்தீவு > கச்சத்தீவு (2)
முழவக்குன்று > முழக்குன்னு (3) தூதுவளை > தூதுளை (4) மாதுவளை > மாதுளை
... சொன்முதல் ம் மறைந்து ஆதளை என்ற பெயர் உருவாகியுள்ளது. மாதுளைச் செடி
போல் இருப்பதலால், ஆதளை என்ற பெயர் கொட்டைச் செடிக்கும் வந்துள்ளது.
துவளு-தல் பொருளில், ஆதளைமாதளை - n. Redupl. of ஆதளை. Bewilderment;
மயக்கம். (W.). துவண்டுவிடுதல்.
மாதுளை > ஆதுளை/ஆதளை. சொன்முதல் ம்- மறையும் உதாரணங்கள்:
https://groups.google.com/g/santhavasantham/c/34ebzqoFK64/m/ZfjCNyGKCgAJ
காடி, நெய் - சங்க இலக்கியத்தில் விளக்கெண்ணெய் (Castor Oil) பெயர்கள்
------------------------------------------------------------------------------------------------------------
மனிதன் உட்பட எல்லா விலங்கு, பறவைகளின் தசையில் பரவியிருப்பது: நெய்.
நெய்யுடன் அரத்தம் (ரத்தம்) இருப்பதால், நெய்த்தோர் என ரத்தத்தை
பாகிஸ்தான் பிராகுவி பாஷையில் இருந்து தமிழ் (நற்றிணை; DEDR 3748) வரை
அழைப்பதுண்டு. வேட்டையாடிய ஊனை முரியடுப்பு (skewer-oven, முரி - skewer)
போன்றவற்றில் அடும்போது மனிதன் கண்டறிந்தான். “பைம் நிணம் ஒழுகிய நெய்ம்
மலி அடிசில்” (குறி.). பின்னர், பாவு, ஊடு கொண்டு சீலை நெய்தான். நெய்-
பரப்புதல். எனவே, நெய்தல் தொழில் நெசவு ஆயிற்று. இயைவது இசை, நெய்வது
நெசவு.
(a) *காடி*: விளக்கெண்ணெய் அமிலத்தன்மை நிறையக் கொண்டது. Castor oil, a
mixture of triglycerides in which about 90% of fatty acids are
ricinoleates.இன்றும், அமிலத்தன்மை அதிகம் கொண்ட வார்னிஷ் “காடிநெய்” என
மொழிபெயர்க்கின்றனர்.
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0006231_கலைச்சொற்பட்டி-க.pdf
(பக். 65, 1972).
அமிலத்தன்மை மிக்க விளக்கெண்ணெயைக் காடி எனச் சங்க காலத்தில்
வழங்கியுள்ளனர். இன்றும், வடு மாங்காய் ஊறுகாய் போடுபோது
விளக்கெண்ணெய்தான் பயனாகிறது. பெரும்பாணாற்றுப்படை வரியை விளக்கும்போது
நச்சினார்க்கினியர் இதனை விளக்கியுள்ளார்.
ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் 50
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப
கோழி சேக்கும் கூடு உடை புதவின்
முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரை சீறுரல் தூங்க தூக்கி
நாடக மகளிர் ஆடு_களத்து எடுத்த 55
விசி வீங்கு இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து
*காடி வைத்த கலன்* உடை மூக்கின் - பெரும்பாண்.
(தாளிப்பனையோலையால் செய்த)பாய் வேய்ந்த, (வழியை)அறைக்கும் விளிம்புகள்
கொண்ட வண்டி- 50
யானை(புனத்தில் தின்னாமல்) காக்கின்றோர் (இதண் மேல் கட்டின)குடிலைப் போன்ற,
கோழிகள் தங்கும் கூட்டை உடைய (குடிலின்)வாயிலில்,
(மூங்கில்)முளை(போன்ற) கொம்பினையுடைய கரிய பிடியின் முழந்தாளை ஒக்கும்,
துளையைத் தன்னிடத்தேயுடைய சிறிய உரலைத் தொங்கும்படி தூக்கி,
நாடக மகளிர் (தாம்)ஆடும் களத்தில் கொண்டுவந்த 55
வார்ப்பிணிப்பு இறுகின இனிய இசைக்கருவி(யான முழவை) ஒப்பக் கயிற்றால்
(சுற்றிக்)கட்டி,
காடி வைத்த மிடாவினுடைய மூக்கணை மீதிருந்து, ~ ப. பாண்டியராஜா, மதுரை.
இங்கே, காடி - நெய் (அதாவது விளக்கெண்ணய்.) ஏனெனில், எருமை/மாட்டு
வெண்ணெய் உருக்கும் நெய் அமிலம் இல்லாதது: “Ghee is lactose and
casein-free, and it contains butyrate, which makes it an alkaline food
by default.” இந்த மிடாவிலே நெய்யை, அதாவது விளக்கெண்ணெயைக் கொண்டு
செல்வது வழக்கம் என்பதை மேலும் வரும் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
“யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள் என்று ஊர் பெண்டிர்
மாங்காய் நறும் காடி கூட்டுவேம் யாங்கும்” - கலித்தொகை.
“ஆடவர் எவருக்கும் இவள் அணங்கான வருத்தும் தெய்வமாக அமைவாள் என்று
ஊர்ப்பெண்கள் மோர் வேண்டாம், புளிப்புக்கு விளக்கெண்ணெய் (காடி) ஊறும்
வடு மாங்காய் ஊறுகாய் ஒன்று போதும். அதையே வைத்துக்கொள்வோம்”
காடி வெள் உலை கொளீஇ நீழல்
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி
மோட்டு இரு வராஅல் கோட்டு_மீன் கொழும் குறை - புறம் 399.
விரால் மீன் குழம்பு செய்யும் போது, விளக்கெண்ணெய் (காடி) விட்டுத்
தாளித்து, புளிப்புக்கு மாங்காய்ப் புளியைச் சேர்த்துச் சமைத்தனர்.
”பரல் வறை கருனை காடியின் மிதப்ப” - பொருநராற்றுப்படை
பருக்கைக் கற்களைப் போன்ற கருனைக் கிழங்கின் துண்டங்களை விளக்கெண்ணெயில்
(காடியில்) வறுத்து எடுத்து.
நெடு மர கொக்கின் நறு வடி விதிர்த்த
தகை மாண் காடியின் வகைபட பெறுகுவிர் - பெரும்பாண்
இங்கே வடுமாங்காய் ஊறுகாய் - விளக்கெண்ணய் (காடியில்) ஊறிக்கொண்டிருப்பது
- சேர்த்துப் பாணர்க்கு அளிப்பது பேசப்படுகிறது.
(b) நெய் = விளக்கெண்ணெய், மருத்துவத்தில்.
--------------------------------------------------------------------
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர் அணி -நற்றிணை
ஈன்றணிமையின் மணம் மணக்க, செவிலி துயில்விக்க, புதல்வன் தூங்க,
வெண்சிறுகடுகை அரைத்து அப்பி, விளக்கெண்ணெய் பூசிக் குளித்த, ஈர உடை தரித்த,
கடும்பு உடை கடும் சூல் நம் குடிக்கு உதவி
நெய்யோடு இமைக்கும் ஐயவி திரள் காழ்
விளங்கு நகர் விளங்க கிடந்தோள் குறுகி
புதல்வன் ஈன்று என பெயர் பெயர்த்து அம் வரி 5
திதலை அல்குல் முது பெண்டு ஆகி - நற்றிணை
வருக! பாணனே! சிறிது சிரிப்போம்! நேரிய இழை அணிந்த நம் தலைவி
தன் சுற்றத்தைச் சூழ உடைய முதிர்ந்த சூல் கொண்டு நம் குடிக்கு ஒரு
புதல்வனை ஈன்று உதவினாள்;
நெய்யோடு பளிச்சிடும் வெண்சிறுகடுகின் திரண்ட விதைகள்
பளிச்சென்ற நம் மாளிகையில் பேய்க்காப்பாக எங்கும் சிதறிக்கிடக்கப்
படுத்திருந்தோளின் அருகில் சென்று
புதல்வனை ஈன்றதனால் தாய் என்னும் வேறொரு பெயரைப் பெற்று, அழகிய வரிகளும்
அழகுத்தேமலும் உடைய அல்குலுடன் முதும்பெண் ஆகித்
பேய்க்காப்பாக, விளக்கெண்ணெயும், சிறுகடுகும் சேர்ந்து, மகப்பேறு
உற்றவளைக் குளிப்பாட்டி,
விளக்கெண்ணெய், கடுகு இரண்டையும் கலந்து மனை எங்கும் வீசினர். அணங்குகள்
அண்டாது இருக்கச்
செய்வதாகும்.
சில்- > தில்- திலம் ‘எண்/எள்’ > தைலம் (தத்திதாந்தப் பெயர்). இது
எள்நெய். இறப்போடும், பேயோடும் தொடர்புடையது. பேய்க்காப்பாக,
பயனாவது விளக்கெண்ணெய் தான். எள்ளில் வரும் எண்ணெய் அன்று என்பது
குறிப்பிடத்தக்கது. கம்பன் மண்டோதரி இராவணன் மாய்ந்தபின் அழுது அரற்றும்
போது “எள்ளை’ பயன்படுத்துவான். கள்ளிருக்கும் கூந்தல் சானகியை ....
உழுந்து மங்களகரமானது என்பது தமிழர் கொள்கை. எனவே சீதாகலியாணப் பாட்டில்
உழுந்து பற்றிச் சொல்வான் கம்பன்.
நெய் என்ற சொல்லைத் தொல்காப்பியர் இரண்டே இடங்களில் தான் ஆளுகிறார்.
இரண்டும் இந்த மகப்பேற்று மங்கல நிகழ்ச்சியின் போது தான். எனவே,
தொல்காப்பியத்தில், நெய் = விளக்கெண்ணெய் என்பது தெளிவு.
புதல்வன் பயந்த புனிறு தீர் பொழுதின்
நெய் அணி மயக்கம் புரிந்தோள் நோக்கி
ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும்
செய் பெரும் சிறப்பொடு சேர்தல்-கண்ணும் - தொல். கற்பியல். 5
“அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்
இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும்
கயந்தலை தோன்றிய காமர் நெய் அணி
நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ” -தொல். கற்பியல். 6
கயந்தலை - புதல்வன். புதல்வன் தோன்றிய நெய்யணி நயந்த கிழவனை
தாய்த்தெய்வ வழிபாட்டில் கொட்டை நெய் மிக முக்கியமாக விளங்குகிறது. இது,
குழந்தை பிறக்கும் மகப்பேறு காலத்தில் மருத்துவர்களுக்கு மிகப் பயன்படும்
நெய்யாக இருப்பதால் ஆகும்.
சனி நீராடு - ஔவை. இது விளக்கெண்ணெய் தலை, உடலில் தேய்த்துக் குளிப்பதாகும்.
https://elephantbeans.wordpress.com/2009/10/22/pamper-yourself-diy-castor-oil-bath/
https://tamil.asianetnews.com/health/uses-of-the-castor-castor
https://www.yogachikitsa.net/tag/castor-oil-bath/
மகப்பேறு மருத்துவத்தில் நெய் (தொல்காப்பியம்; விளக்கெண்ணெய்)
https://pubmed.ncbi.nlm.nih.gov/23881775/
Castor oil, bath and/or enema for cervical priming and induction of labour
Background: Castor oil, a potent cathartic, is derived from the bean
of the castor plant. Anecdotal reports, which date back to ancient
Egypt have suggested the use of castor oil to stimulate labour. Castor
oil has been widely used as a traditional method of initiating labour
in midwifery practice. Its role in the initiation of labour is poorly
understood and data examining its efficacy within a clinical trial are
limited. This is one of a series of reviews of methods of cervical
ripening and labour induction using standardised methodology.
நெய் எனத் தொல்காப்பியர் அழைக்கும் ஆமணக்கு எண்ணெய், பிள்ளைப்பேற்றில்
எவ்வாறு பயனாகிறது என்னும் ஆய்வுக் கட்டுரை:
https://www.aranejournal.com/article/6036
எண்ணெய் (தைலம்) என்றால் எள் நெய். பெருவழக்காக, Oil என்பதற்கு எண்ணெய்
பயன்படுத்துகிறோம். இது இறப்பு, அணங்கு போன்றவற்றோடு தொடர்புடையது. எனவே,
திருவரங்கம் போன்ற ஊர்களில், தன்வந்திரி மருத்துவர் கோவிலில், எள்ளின்
எண்ணெய் விளக்குக்கு ஆகாது. கொட்டைமுத்து நெய் தான் அங்கே.
https://temple.dinamalar.com/news_detail.php?id=46822
நா. கணேசன்
மட்டக்களப்பு மக்களின் மகப்பேற்று நம்பிக்கையுடன் தொடர்புடைய பெண் தெய்வ வழிபாடுகள்
https://www.aranejournal.com/article/6036
மருத்துவிச்சியும் மகப்பேற்றுச் சடங்குகளும்
மேகலா சிவகுமாரன், விரிவுரையாளர், இந்து நாகரிகத்துறை, கிழக்குப்
பல்கலைக்கழகம், இலங்கை
பண்டைக்காலங்களில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் என்பது வீடுகளிலே
இடம்பெற்றது. இதனால் மகப்பேறுடன் தொடர்புடைய மருத்துவிச்சி முறைமையும்;
அவ்வவ் பிரதேச மக்களின் வழிபாட்டு பாரம்பரியங்களோடு பிணைப்புற்றிருந்தது.
தமிழர் பண்பாட்டில் வாட்டு கங்காணி, குடும்பநல உத்தியோகத்தர் பதவிகள்
அறிமுகமாகும் வரை ஒவ்வொரு கிராமங்களிலும் மருத்துவிச்சிகளே
மருத்துவர்களுக்கான இடத்தினை வகித்தனர்.
மருத்துவிச்சி முறைமை என்பது ஒரு வகையான வைத்திய முறை என்பதனையும்
கடந்து, உறவு முறையாக அமைகிறது. கர்ப்ப பாலத்தில் தாய் சேய்க்கான
பயத்தைப் போக்கி மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலிமையோடு இருப்பதற்கு
வழிசெய்கிறது. மருத்துவிச்சிமாரை பொறுத்தவரை அனுபவமும், தீர்க்கதரிசன
பார்வையும், மனவலிமையும், கர்ப்பிணியை ஆற்றுப்படுத்தும் விதமும், பிரசவ
வலியால் துடிக்கும் பெண்களை கையாளும் விதமும் முக்கியமானது. கர்ப்பிணி
பெண்ணுக்கு வலியெடுத்ததும் ஊரிலுள்ள மருத்துவிச்சி அழைத்துவரப்படுவாள்.
தனது அனுபவத்தாலும் தன்னம்பிக்கையாலும், உடல் உள பலத்தாலும்
சுகப்பிரசவங்களைப் பெற்றுத்தருபவள். இத்தகைய மருத்துவிச்சி முறைமையிலும்
வழிபாட்டு மரபுகள் கலந்துள்ளன. மருத்துவிச்சி கர்ப்பிணித் தாயின்
அடிவயிற்றில் ஆமணக்கு எண்ணெய் தடவுதல் ஒரு மருத்துவமுறையாகும்.
மட்டக்களப்பு பகுதிகளில் மந்திரம் கூறி சுழுக்கு பார்த்தல் இடம்பெறுவது
போல் பிரசவவலி ஏற்பட்ட பெண்ணுக்குக்கு மருத்துவிச்சிமார் மந்திரம் கூறியே
எண்ணெய் தடவியுள்ளனர். அத்தோடு தண்ணீரும் ஓதிக்கொடுத்துள்ளனர்.
எடுத்துக்காட்டாக
“ஓம் தெட்சண பஞ்சாட்சரி ஆதி மூர்த்தி அலங்கார மோகினி
இருட்டறையிலிருக்கின்ற இந்திர மோகினி வயிற்றில் கெற்பம்
தரித்து ஒரு படி கடந்து இருபடி கடந்து முற்படி கடந்து
நாற்படி கடந்து ஐம்படி கடந்து அறுபடி கடந்து ஆறாம்படிக்குள்ளே
ஆத்தனைத் தொழுது வாறாள் மோகினி வயிற்றில்
மறிபட்ட மாவும் பிள்ளையும் வழுகி விழவே சுவாஹா” (சர்வேஸ்வரன்., ஆரையம்பதி
வடபத்திரகாளி கோயில்:மந்திரஏடு) எனும் மந்திரம் உச்சரித்து தண்ணீர்
ஓதிக்கொடுக்கப்பட்டது. இன்னும் சிக்கலாகி பிரசவம் தாமதிக்கும் போது
பூசாரியை அழைத்து கடப்பில் தேங்காய் வெட்டுதலும் இடம்பெற்றது. அத்தோடு
பத்திரகாளிக்கும் அனுமருக்கும் மடை வைத்து தண்ணீர் ஓதிச் சொரிவர்.
இவ்வாறு மருத்துவிச்சியுடனும் மந்திர வழிபாட்டு முறைகள் பிணைப்புற்று
விளங்கியுள்ளன.
வழிபாடுகளுடன் வழக்காறுகளும் ஒன்றியிருந்தமையை மருத்துவிச்சி முறைமையில்
காணமுடிகின்றது. பிரசவமானதும் பிரசவித்த தாய் அணியும் சேலைக்கு மாத்துச்
சேலை என்று பெயர். இம்மாத்தினை ஊர்க்குடிமகனிடமிருந்து பெற்று அணிவர்.
இன்றும் இவ்வழக்கினை மட்டக்களப்பின் சில கிராமங்களில் கட்டாயம்
கடைப்பிடிக்க வேண்டிய வழமையாக மேற்கொண்டுவருகின்றனர்.
மருத்துவிச்சியானவள் பிறந்த குழந்தை ஆணாக இருந்தால் உலக்கையையும்,
பெண்ணாக இருந்தால் விளக்குமாற்றையும் கூரைக்கு மேல் எறிவாள். இவ்வாறான பல
வழமைகளும் இடத்திற்கிடம் சில மாறுபாடுகளுடன் இடம்பெற்றுள்ளன.