பாரதி காவலர் இயற்கை எய்தினார்
*******************************************
பாரதியின் மீது மிகுந்த பற்றும், பாரதி இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவரும் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவருமான பாரதி காவலர் டாக்டர் கே. ராமமூர்த்தி(வயது 90) நேற்று (07.04.2026) இறைவனடி சேர்ந்தார்.
"ஓம் சாந்தி சாந்தி சாந்தி:"
பாரதி இளைஞர் சங்கம், பாரதியார் சங்கம் போன்ற அமைப்புகளின் தலைவராகவும், பாரதி கலைக் கழக உறுப்பினராகவும் பணிசெய்த பாரதி அன்பர்.
வீட்டுக்கு வீடு பாரதி என்ற நிகழ்சியின் மூலம் மகாகவி பாரதியை இல்லம் தோறும் கொண்டு சென்றவர். ஆழ்ந்த தேச பக்தர். ஆன்மிகவாதி. நிறைய இளைஞர்களை பாரதியைப் படிக்க வைத்த பெருமகனார். கதை, கவிதை, கட்டுரை, சொற்பொழிவு என்று பலதுறைகளில் வலம் வந்தவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியவர். பல விருதுகளும், பாராட்டுகளும் பெற்றவர்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களால் பாரதி காவலர் என்று அழைக்கப்பட்டவர்.
9-4-2026 அன்று காலை 9-30 மணிக்கு இறுதிச் சடங்குகள் கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும்.
Ashiana Shubham Villa Viviana,
Govindapuram,
Melrosapuram Road,
Maraimalainagar,
Tamilnadu - 603204.
(கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் தந்த தகவலை அன்பர்களுக்காகப் பகிர்ந்துள்ளேன். - மீ. விசுவநாதன்)