எவ்வுள் இறைவன் கழல்கண்டேன்
(அறுசீர் ஆசிரிய விருத்தம் - மா மா காய்)
திண்ணார் மலைபோல் உருக்கண்டேன்
… சீரார் மார்வில் திருக்கண்டேன்
விண்ணோர் புகழும் கழல்கண்டேன்
… வீறார் அரவின் அணைகண்டேன்
புண்ணார் பிணிகள் கெடக்கண்டேன்
… பொல்லா வினையும் விழக்கண்டேன்
எண்ணில் பிறப்பும் அறக்கண்டேன்
… எவ்வுள் இறைவன் அருள்கொண்டே. 1
சுழலும் திருச்சக் கரம்கண்டேன்
… சுரிவெண் சங்கின் திறம்கண்டேன்
முழுவான் மதிபோல் முகம்கண்டேன்
… முனிவர்க் கருளும் கரம்கண்டேன்
அழல்போல் துயராம் பகைவென்றேன்
… அழியா மகிழ்வால் நிறைகின்றேன்
எழிலார் தமிழால் பணிகின்றேன்
… எவ்வுள் இறைவன் அருள்கொண்டே. 2
(முனிவர் = சாலிஹோத்ர மஹரிஷி)
குறிப்பு : எவ்வுள் எம்பெருமான் மீது அடியேன் இயற்றுகின்ற பாடல்களையெல்லாம் “எவ்வுள் இசைமாலை” என்னும் தனிநூலாகத் தொகுத்து வருகிறேன். இந்தப் பணியைச் செவ்வனே முடிக்கத் தமிழ் அன்பர்களான உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன்.
On Feb 13, 2026, at 08:47, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/12FB0368-BEAD-4B79-863A-BB35ED1E4983%40gmail.com.
--