நாத்தி விளக்கு

714 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 15, 2019, 7:05:58 PM5/15/19
to thiruppuvanam, vallamai, Tharakai Editor
பர்மாவில் தமிழர் திருமணத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் தங்கை ஒரு காமாட்சி விளக்கை ஏற்றிக் கையில் பிடித்தபடி மணமக்களின் பின்னால் தாலிகட்டி முடியும் வரை நிற்கிறார்.

இவ்வாறு விளக்குப் பிடிப்பதை "நாத்தி விளக்கு" என்கின்றர்.

அன்பன்
கி. காளைராசன்

செல்வன்

unread,
May 15, 2019, 8:32:29 PM5/15/19
to mintamil, vallamai
நன்றி ஐயா..புதிய தகவல்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAFh3n%3D-wSwmSkeZPY%2Bx004t_DTAnaakODsvqMqQDHUP1-DpJZg%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

Thangar K

unread,
May 15, 2019, 9:29:45 PM5/15/19
to mint...@googlegroups.com, vallamai
ஐயா,  தமிழ்நாட்டில் இந்த வழக்கம் இருக்கும்போது பர்மா தமிழர்கள் திருமணத்திலும் நாத்தி விளக்கு பிடிக்கும் பழக்கம் இருப்பது ஒன்றும் அரிதல்லவே... நன்றி

MUNISAMY MK NATHAN

unread,
May 17, 2019, 5:38:54 AM5/17/19
to மின்தமிழ்
மலேசியாவிலும் இத்தகைய வழக்கு பொதுவானது 


On Thursday, May 16, 2019 at 9:29:45 AM UTC+8, Thangar K wrote:
ஐயா,  தமிழ்நாட்டில் இந்த வழக்கம் இருக்கும்போது பர்மா தமிழர்கள் திருமணத்திலும் நாத்தி விளக்கு பிடிக்கும் பழக்கம் இருப்பது ஒன்றும் அரிதல்லவே... நன்றி

On Thu, May 16, 2019, 1:32 AM செல்வன் <hol...@gmail.com wrote:
நன்றி ஐயா..புதிய தகவல்

On Wed, May 15, 2019 at 6:05 PM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
பர்மாவில் தமிழர் திருமணத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் தங்கை ஒரு காமாட்சி விளக்கை ஏற்றிக் கையில் பிடித்தபடி மணமக்களின் பின்னால் தாலிகட்டி முடியும் வரை நிற்கிறார்.

இவ்வாறு விளக்குப் பிடிப்பதை "நாத்தி விளக்கு" என்கின்றர்.

அன்பன்
கி. காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.


--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

Suba

unread,
May 17, 2019, 6:16:51 AM5/17/19
to மின்தமிழ்
On Thu, May 16, 2019 at 1:05 AM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
பர்மாவில் தமிழர் திருமணத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் தங்கை ஒரு காமாட்சி விளக்கை ஏற்றிக் கையில் பிடித்தபடி மணமக்களின் பின்னால் தாலிகட்டி முடியும் வரை நிற்கிறார்.

மலேசியாவிலும் தமிழர் திருமணத்தில் இது உண்டு. பார்த்துள்ளேன். நாத்தி விளக்கு என்று தான் சொல்வார்கள்.

சுபா

இவ்வாறு விளக்குப் பிடிப்பதை "நாத்தி விளக்கு" என்கின்றர்.

அன்பன்
கி. காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 17, 2019, 9:49:34 AM5/17/19
to mintamil, vallamai
On Thu, 16 May 2019 at 06:59, Thangar K <thang...@gmail.com> wrote:
ஐயா,  தமிழ்நாட்டில் இந்த வழக்கம் இருக்கும்போது பர்மா தமிழர்கள் திருமணத்திலும் நாத்தி விளக்கு பிடிக்கும் பழக்கம் இருப்பது ஒன்றும் அரிதல்லவே... நன்றி

நாத்தி விளக்குப் பிடிக்கும் திருமணச் சடங்குமுறை எனக்குப் புதிய செய்தி அதனால் பதிவு செய்தேன்.  
இப்போது இந்த முறை தமிழகம், மயன்மார் (பர்மா)  , மற்றும் மலேயா ஆகிய நாடுகளில் நடைமுறையில் உள்ளது என அறிந்து கொண்டேன்.
நன்றி.

அன்பன்
கி.காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 17, 2019, 10:06:28 AM5/17/19
to mintamil
On Fri, 17 May 2019 at 15:08, MUNISAMY MK NATHAN <mknp...@gmail.com> wrote:
மலேசியாவிலும் இத்தகைய வழக்கு பொதுவானது 

இந்தத் திருமணச் சடங்குமுறையின் உட்பொருள் என்னவாக இருக்கும்?
இந்தத் சடங்குமுறையைத் தமிழரல்லாத மற்றபிறர் பின்பற்றுகின்றனரா? 
என அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 17, 2019, 11:00:48 AM5/17/19
to mintamil
வணக்கம்.
பர்மாவில் பல்வேறு ஊர்களில் உள்ள எங்களது உறவினர்களை ஒவ்வொரு குடும்பமாகக் கண்டு வந்தோம். அப்போது அங்கு நடைபெற்ற ஒரு திருமணத்தில் இந்த முறையைக் கண்டேன்.  நாத்திவிளக்கு பிடிக்கும்  இந்தத் திருமணச் சடங்கானது தமிழகத்திலும் மயன்மார் (பர்மா) மற்றும் மலேயாவிலும் நடைமுறையில் இருப்பது வியப்பாக உள்ளது.  

ஏன் இவ்வாறு நாத்தியை விளக்குப் பிடிக்கச் சொல்லுகின்றனர்? இதன் உட்பொருள் என்ன?  என்று பர்மாவாழ் உறவினர்களிடம் கேட்டேன்.
அவர்களுக்கு இது பற்றிய விளக்கம் ஏதும் தெரியவில்லை.  உங்களது அத்தையிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள் என்றனர்.  
அத்தையிடம் விளக்கம் கேட்டேன்.  அதெல்லாம் எனக்குத் தெரியாது, ஆனால் உனது பெரியாப்பாவின் திருமணத்தின்போது நாத்திவிளக்குப் பிடித்தேன், அதனால் உனது பெரியப்பாவும் நானும் அண்ணன் தங்கை ஆகிப் போனோம்.  அதனால் உங்க பெரியப்பா திருமணத்திற்குப் பின்னாளில் உங்களது சமூகத்தினரும் எனது சமூகத்தினரும் பெண்எடுத்தும் பெண்கொடுத்தும் உறவுமுறைகளாகி விட்டனர் என்றார்.

உடன்பிறந்த தங்கையில்லாத மணமகனின் திருமணத்தில் நாத்திவிளக்குப் பிடித்தவர் உண்மையிலேயே நாத்தனார் ஆகி, அதனால் இருவேறு சமூகத்தினர் உறவுமுறைகளாக ஒன்றுகூடி வாழ்ந்து வருவதைக் கண்டு மிகவும் வியந்து போய்யுள்ளேன்.

அன்பன்
கி. காளைராசன்


For more options, visit https://groups.google.com/d/optout.


--

தேமொழி

unread,
May 17, 2019, 2:38:51 PM5/17/19
to மின்தமிழ்
///

இந்தத் திருமணச் சடங்குமுறையின் உட்பொருள் என்னவாக இருக்கும்?
இந்தத் சடங்குமுறையைத் தமிழரல்லாத மற்றபிறர் பின்பற்றுகின்றனரா?
என அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன்.

///

நீங்கள் இப்பொழுதுதான் நாத்திவிளக்கு என்பதைக் கேள்விப்படுவதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது.

தமிழர் உறவில் அண்ணன் தங்கை உறவு என்றும் தொன்று தொட்டு தனிச்சிறப்பு வாய்ந்தது. இதனை தமிழ்ப் பழங்குடியினர் வாழ்வில் இருந்தே தேடலாம்.

அதனால் உடன்பிறப்புகளின் வாழ்வில் நடக்கும் விழாக்களில் தாய்மாமன் அத்தை பங்களிப்புகள் காலம் முழுவதும் ஏதோ வகையில் இடம் பெறும், தொடரும், நீடிக்கும்.

திருமணம் என வந்தால் மணமகனின் சார்பில் மணமகனின் சகோதரியே தாலி கட்டி அழைத்தும் வரும் முறை கூட இருந்ததை படித்துள்ளேன்.

தாலி கட்டும்பொழுது சகோதரனுக்கு முடிச்சு போட மணமக்களின் பின் நின்று உதவுவார். பிறகு தனது பரிசாக மணமகளுக்கு நாத்தி பட்டம் காட்டுவார்.அந்த அளவு திருமண விழாவில் மணமகனின் அக்கா தங்கைகளுக்கு தமிழர் திருமணத்தில் முன்னுரிமை.

விளக்கு என்பது ஒளி தருவது என்பதால் ... விழா தெளிவாக தெரிய பின்னே நிற்கும் பெண் கைவிளக்கை ஏந்திய காரிகையாக மாறியிருக்கலாம். மாற்றப்பட்டிருக்கலாம் ...
பின் அதுவே தொடர்ந்திருக்கலாம்.

இப்பொழுது ஒரு பிள்ளை உள்ள நிலையில் உடன் பிறப்புகளும் இல்லை. எங்கும் மின்சார ஒளிவிளக்குகள் வெள்ளெமென ஒளிபாய்ச்ச எண்ணெய் விளக்குகளை தூக்குவதற்கும் தேவையில்லை...உடன்பிறப்பு இருந்தாலும் அவருக்கு வேறு ஏதேனும் வேலை கொடுக்கலாம்.

இவையெல்லாம் ஏன் செய்கிறோம் என தெரியாமல் செய்யும் சடங்கு எச்சங்கள் என்ற நிலையை எட்டிவிட்டது என்பதற்கு இந்த இழையே சான்று.

இது தேவையா.. தேவையா ... என்று ஒவ்வொன்றையும் கேட்டு மறுபரிசீலனை செய்வது தேவை.

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 18, 2019, 4:04:38 AM5/18/19
to mintamil
On Sat, 18 May 2019 at 00:08, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
///

இந்தத் திருமணச் சடங்குமுறையின் உட்பொருள் என்னவாக இருக்கும்?
இந்தத் சடங்குமுறையைத் தமிழரல்லாத மற்றபிறர் பின்பற்றுகின்றனரா?
என அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன்.

///

நீங்கள் இப்பொழுதுதான் நாத்திவிளக்கு என்பதைக் கேள்விப்படுவதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது.
மணமக்கள் படுப்பதற்கான பாய் (இப்போதெல்லாம் மெத்தை) ஒன்றைத் தூக்கிச் செல்வதும், அதற்காக மணமகன் பணம் கொடுப்பதும் பார்த்துள்ளேன். 
ஆனால் விளக்குப் பிடித்தல் பற்றி இப்போதுதான் இவ்வளவு விளக்கமாகக் கேள்விப்படுகிறேன். 
நான் சிறுவனாய் இருந்தபோது, எனது அக்கா (பெரியப்பா மகள்) மற்றொருவருடன் சண்டைபோடும் போது, “நீ யென்ன என் கல்யாணத்தில் விளக்கா பிடித்தாய் ?” என்று கேட்டார்.
மற்றபடி இந்தச் சடங்குமுறை எங்களது திருமணநிகழ்ச்சிகளில் நான் பார்த்தது கிடையாது.



தமிழர் உறவில் அண்ணன் தங்கை உறவு என்றும் தொன்று தொட்டு தனிச்சிறப்பு வாய்ந்தது.  இதனை தமிழ்ப் பழங்குடியினர் வாழ்வில் இருந்தே தேடலாம்.

அதனால் உடன்பிறப்புகளின் வாழ்வில் நடக்கும் விழாக்களில் தாய்மாமன் அத்தை பங்களிப்புகள் காலம் முழுவதும் ஏதோ வகையில் இடம் பெறும், தொடரும், நீடிக்கும்.

திருமணம் என வந்தால் மணமகனின் சார்பில் மணமகனின் சகோதரியே தாலி கட்டி அழைத்தும் வரும் முறை கூட இருந்ததை படித்துள்ளேன்.

தாலி கட்டும்பொழுது சகோதரனுக்கு முடிச்சு போட மணமக்களின் பின் நின்று உதவுவார்.  பிறகு தனது பரிசாக மணமகளுக்கு நாத்தி பட்டம் காட்டுவார்.அந்த அளவு திருமண விழாவில் மணமகனின் அக்கா தங்கைகளுக்கு தமிழர் திருமணத்தில் முன்னுரிமை.

விளக்கு என்பது ஒளி தருவது என்பதால் ...  விழா தெளிவாக தெரிய பின்னே நிற்கும் பெண் கைவிளக்கை ஏந்திய காரிகையாக மாறியிருக்கலாம். மாற்றப்பட்டிருக்கலாம் ...
 பின் அதுவே தொடர்ந்திருக்கலாம்.

இப்பொழுது ஒரு பிள்ளை உள்ள நிலையில் உடன் பிறப்புகளும் இல்லை.  எங்கும் மின்சார ஒளிவிளக்குகள் வெள்ளெமென ஒளிபாய்ச்ச எண்ணெய் விளக்குகளை தூக்குவதற்கும் தேவையில்லை...உடன்பிறப்பு இருந்தாலும் அவருக்கு வேறு ஏதேனும் வேலை கொடுக்கலாம்.

இவையெல்லாம் ஏன் செய்கிறோம் என தெரியாமல் செய்யும் சடங்கு எச்சங்கள் என்ற நிலையை எட்டிவிட்டது என்பதற்கு இந்த இழையே சான்று.

 
இது தேவையா.. தேவையா ... என்று ஒவ்வொன்றையும் கேட்டு மறுபரிசீலனை செய்வது தேவை.
உணவு, காமம் இவை யிரண்டையும் தவிர்த்து மற்றெனவெல்லாம் தேவையா? தேவையா? 

தேமொழி

unread,
May 18, 2019, 4:47:00 AM5/18/19
to மின்தமிழ்
///

உணவு, காமம் இவை யிரண்டையும் தவிர்த்து மற்றெனவெல்லாம் தேவையா? தேவையா?
///

ஆமாம் ..எப்படி வாழவேண்டும் என்று வழி நடத்தும் பகுத்தறிவு தரும் கல்வி தேவை.

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 18, 2019, 7:37:21 AM5/18/19
to mintamil
அப்படியானால், ஒரு திருமணத்தைப் பல சடங்குகளாகப் பகுத்து நடத்தும் சடங்குமுறைகளும் தேவை.

அன்பன்
கி.காளைராசன்
(பகுத்தறிவாளர்கள் தங்களது கல்வியைக்  காட்டுமிராண்டிகள் கற்கவேண்டும் எனக் கவலைப்படுகின்றனர்.
காட்டுமிராண்டிகள் தங்களது முன்னோர்கள் கடைப்பிடித்த சடங்குகளைத் தவறாமல் கடைப்பிடிப்பதைப் பற்றிக் கவலைப் படுகின்றனர்.)

nkantan r

unread,
May 18, 2019, 8:19:50 AM5/18/19
to மின்தமிழ்
படம் உள்ளதா? ஒன்றுக்கு மேல் சகோதரிகள் இருந்தால்??

நாத்தி என்பதன் வேர்??

rnk

N. Ganesan

unread,
May 18, 2019, 8:55:19 AM5/18/19
to மின்தமிழ், vallamai
On Wed, May 15, 2019 at 6:32 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
நன்றி ஐயா..புதிய தகவல்

On Wed, May 15, 2019 at 6:05 PM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
பர்மாவில் தமிழர் திருமணத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் தங்கை ஒரு காமாட்சி விளக்கை ஏற்றிக் கையில் பிடித்தபடி மணமக்களின் பின்னால் தாலிகட்டி முடியும் வரை நிற்கிறார்.

இவ்வாறு விளக்குப் பிடிப்பதை "நாத்தி விளக்கு" என்கின்றர்.

கொங்குநாட்டில் இவ்வழக்கம் கலியாணங்களில் இல்லாதது.

நா. கணேசன்

 

அன்பன்
கி. காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAFh3n%3D-wSwmSkeZPY%2Bx004t_DTAnaakODsvqMqQDHUP1-DpJZg%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 18, 2019, 12:32:54 PM5/18/19
to mintamil

On Sat, 18 May 2019 at 17:49, nkantan r <rnka...@gmail.com> wrote:
படம் உள்ளதா?
விளக்கம் கேட்டு எனது கவனம் வேறுபக்கம் திரும்பிய காரணத்தினால்  படம் ஏதும் நான் எடுக்கவில்லை. 

ஒன்றுக்கு மேல் சகோதரிகள் இருந்தால்??
இந்தத் திருமணச் சடங்குபற்றி அறிந்தோர் யாரேனும் இதுகுறித்துக் கூறிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
 
நாத்தி என்பதன் வேர்??

நாற்று = நாத்து,
நாற்றினாள் என்பதுதான் நாத்தினாள் என்று ஆகியிருக்குமோ?

தேமொழி

unread,
May 18, 2019, 12:44:49 PM5/18/19
to மின்தமிழ்
///

நாற்று = நாத்து,
நாற்றினாள் என்பதுதான் நாத்தினாள் என்று ஆகியிருக்குமோ?
///

https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

பொருள்
கணவனுடைய உடன்பிறந்தாள் (சகோதரி)
நாத்தி
நாத்தூண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்: sister-in-law (hunsband's sister)
பிரான்சியம்: belle-sœur
விளக்கம்
அதாவது கணவனுடைய அக்காள் அல்லது தங்கை அல்லது இரட்டை
பயன்பாடு
உனக்கு எத்தனை நாத்தனார்?
(இலக்கியப் பயன்பாடு)

நாத்தூ ணங்கையொடு ... அடிசி லாக்குதற்கு (சிலப். 16, 19).(சிலப்பதிகாரம் 4, 47).

தேமொழி

unread,
May 18, 2019, 12:52:11 PM5/18/19
to மின்தமிழ்
6. கொலைக்களக் காதை

20

சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்

நெடியா தளிமின் நீரெனக் கூற

18
உரை
21

சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் - அடிகள் சாவக நோன்புடையராகலான், நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம் அடிசில் ஆக்குதற்கு - நாத்தூணாகிய ஐயையொடு பகற்பொழுதே உண்ணும் உணவினைச் சமைப்பதற்கு, அமைந்த நற்கலங்கள் நெடியாது அளிமின் நீர் எனக் கூற - பொருந்திய நல்ல கலங்களை நீட்டியாது நீவிர் அளிமின் என்று சொல்ல ;

சாவகநோன்பி - துறவாது விரதங்காப்போர். அடிகள் என்றது ஈண்டுக் கோவலனை. நாத்தூண் - கணவனுடன் பிறந்தாள். நாத்தூணாகிய நங்கை. இனி, நாத்தூணும் நங்கையும் எனலுமாம் ; ஈண்டு நாத்தூண் - ஐயை ; நங்கை - கண்ணகி, நாள்வழிப்படூஉ மடிசில் - காலத்திலே ஆக்கும் அடிசில் எனலுமமையும். நற்கலம் - புதுக்கலம். அமைந்த நற்கலம் என்றது தாங்கள் ஆளும் கலமன்றி மேன்மக்களாளும் கலத்தினை. நெடித்தல் - நீட்டித்தல்

இடைக்குலமடந்தை ஆய்ச்சியர் தம்மொடு மனைப்படுத்துக் கூடி நீராட்டித் தொழுது (என்று) அளிமின் எனக் கூற என்க.

Source:http://www.tamilvu.org/slet/l3100/l3100uri.jsp?slno=1800&subid=180005

தேமொழி

unread,
May 18, 2019, 1:12:58 PM5/18/19
to மின்தமிழ்
////

ஒரு திருமணத்தைப் பல சடங்குகளாகப் பகுத்து நடத்தும் சடங்குமுறைகளும் தேவை
////

திருமணம் என்றில்லை... எந்த விழாவிற்கும் ஏதோ ஒரு நடைமுறை தேவை.

தமிழ்த்தாய், நாட்டுப்பண் ஆகியன முதல் துவக்கம் என்பது போல...அந்த வாழ்த்துகள் பாடினால் எழுந்து நிற்பதும் போல.

தேர்தல் என்றால் வாக்காளர் பதிவு, அதை சரிபார்ப்பது, வாக்களிப்பது, அதை எண்ணுவது எல்லாமே அந்த வகைதான்.

(இதில் தேவையற்றவை வாக்குக்கு பணம் கொடுப்பது)

அது போல (எந்த வகை) விழாக்களிலும், நிகழ்ச்சியிலும் தேவையற்றவற்றை களை எடுக்கலாம். இல்லாமலே நடத்தலாம் என்றால் தேவையற்றதை நீக்கிவிடலாம்.

இன்றியமையாதவை காலத்திற்கு ஏற்ப மாறுபடும். தற்காலத்தில் திருமணத்தைப் பதிவு செய்வது ஒரு சடங்கு.

தேமொழி

unread,
May 18, 2019, 2:24:42 PM5/18/19
to மின்தமிழ்
///

காட்டுமிராண்டிகள் தங்களது முன்னோர்கள் கடைப்பிடித்த சடங்குகளைத் தவறாமல் கடைப்பிடிப்பதைப் பற்றிக் கவலைப் படுகின்றனர்.
///

அட அப்படியா !!!!

கூடிய விரைவில் கல்திட்டை, முதுமக்கள்தாழி எல்லாம் வழக்கத்தில் வந்துவிடும் என்று சொல்லுங்கள்.

nkantan r

unread,
May 19, 2019, 6:38:08 AM5/19/19
to மின்தமிழ்
@தேமொழி..
தாங்கள் /// .../// quote காட்டுவது இந்த இழையில் இல்லையே. வேறு எங்கு யார் அளித்த பதில்??

---
In Hindi, husband's sister is called nanad ननद (நனத்3). This is 'மொழிகுறுக்கம்' of Sanskrit word nanaandaa ननान्दा (நனாந்தா3).

This is just like wife's brother (relation) name in Hindi and sanakrit. In Hindi it is saala साला (ஸாலா) whereas in Sanskrit it is s'yaalah श्यालः (ஶ்யால:) மற்றொரு மொழி குறுக்கம்!??
rnk

Suba

unread,
May 19, 2019, 7:08:06 AM5/19/19
to மின்தமிழ்
On Fri, May 17, 2019 at 5:00 PM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
வணக்கம்.
பர்மாவில் பல்வேறு ஊர்களில் உள்ள எங்களது உறவினர்களை ஒவ்வொரு குடும்பமாகக் கண்டு வந்தோம். அப்போது அங்கு நடைபெற்ற ஒரு திருமணத்தில் இந்த முறையைக் கண்டேன்.  நாத்திவிளக்கு பிடிக்கும்  இந்தத் திருமணச் சடங்கானது தமிழகத்திலும் மயன்மார் (பர்மா) மற்றும் மலேயாவிலும் நடைமுறையில் இருப்பது வியப்பாக உள்ளது.  

ஏன் இவ்வாறு நாத்தியை விளக்குப் பிடிக்கச் சொல்லுகின்றனர்? இதன் உட்பொருள் என்ன?  என்று பர்மாவாழ் உறவினர்களிடம் கேட்டேன்.
அவர்களுக்கு இது பற்றிய விளக்கம் ஏதும் தெரியவில்லை.  உங்களது அத்தையிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள் என்றனர்.  
அத்தையிடம் விளக்கம் கேட்டேன்.  அதெல்லாம் எனக்குத் தெரியாது, ஆனால் உனது பெரியாப்பாவின் திருமணத்தின்போது நாத்திவிளக்குப் பிடித்தேன், அதனால் உனது பெரியப்பாவும் நானும் அண்ணன் தங்கை ஆகிப் போனோம்.  அதனால் உங்க பெரியப்பா திருமணத்திற்குப் பின்னாளில் உங்களது சமூகத்தினரும் எனது சமூகத்தினரும் பெண்எடுத்தும் பெண்கொடுத்தும் உறவுமுறைகளாகி விட்டனர் என்றார்.

உடன்பிறந்த தங்கையில்லாத மணமகனின் திருமணத்தில் நாத்திவிளக்குப் பிடித்தவர் உண்மையிலேயே நாத்தனார் ஆகி, அதனால் இருவேறு சமூகத்தினர் உறவுமுறைகளாக ஒன்றுகூடி வாழ்ந்து வருவதைக் கண்டு மிகவும் வியந்து போய்யுள்ளேன்.

அன்பன்
கி. காளைராசன்


பர்மாவில் இருக்கும் போது பர்மிய தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமய மற்றும் சடங்குகள் ஆகியவற்றையும் அவர்களில் வயதில் மூத்தோர் இருந்தால் அவர்களது இளம் வயது பர்மிய சூழல் அனுபவங்களையும் செல்போனில் சிறு சிறு பேச்சிகளாகச் செய்து தர இயலுமா? தமிழ் மரபு அறக்கட்டளையில் ஆவணப்படுத்துவோம்.

நன்றி
சுபா

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
May 19, 2019, 8:22:21 AM5/19/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai, Periannan Chandrasekaran, பழமைபேசி, dorai sundaram
On Sat, May 18, 2019 at 6:19 AM nkantan r <rnka...@gmail.com> wrote:
நாத்தி என்பதன் வேர்??
rnk

நாத்தனார்/நாத்தி என்பது வடசொல்லின் தற்பவம் ஆகும். மலையாளத்தில் இன்றும் நாத்தூண் என்னும் வடிவம் ( < nanāndṛ from Skt.) வழங்குகிறது.
நாத்தி கன்னடத்தில் நாதினி என்றாகிறது. நாத்தூண் > நாத்தன் > நாத்தனார் (ஏனெனில், -ன் என்பது ஆண்பாற்பெயர் விகுதி ஆயிற்றே), எனவே -ஆர் சேர்த்தப்பட்டது.
நாத்தூண் > நாத்தன் > நாத்தி என்று பெண்பால்விகுதி சேர்த்தலும் உண்டு. (உ-ம்: நாத்தி விளக்கு - சில தமிழக ஜாதிகளிடையே). நாந்தி என்பதற்கு ஏற்கெனவே பல பொருள்கள்
கொண்ட சொல் தமிழில் இருப்பதால் நாத்தி/நாத்தனார் என தமிழாக்கம் அமைந்துளது.

கொங்குநாட்டு அரண்மனை வளமனைகளில் இன்றும் பெண்கள் அம்மனார் என்று அழைப்பர். இது பழைய வழக்கு.

"தோளிணைமேலும் நன்மார்பின் மேலும் சுடர்முடி மேலும் தாளிணைமேலும் புனைந்த தண்ணற்துழாய் நாண்
 அம்மனார் தேவரீர் திருமகள் மண்மகள் நீலா முதலா எல்லாத்தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்க, "
அம்மனார் போல, நாத்தனார். -ஆர் = மரியாதைப்பன்மை விகுதி.

நாத்தனாருக்கு இணையான செந்தமிழ்ச் சொல் கொங்குநாட்டிலே வழங்குகிறது. நாத்தனார் என்பது கொங்கில் நங்கையாள்.
பழமைபேசி பதிவில்: http://maniyinpakkam.blogspot.com/2008/12/blog-post_1717.html

சிலப்பதிகாரத்தில் நாத்தூண் நங்கை: இலக்கணக் குறிப்பு
------------------------------------------------------------------------------------------------------------
போஸ்ட்கம்பம், டிச்சுக்குழி, ... என்பது போல, நாத்தூண்நங்கை  Pleonastic Compunding எந்னும் திராவிட மொழியியல் மரபுக்கு  ஒரு பண்டை உதாரணம். இளங்கோ அடிகள் பயன்படுத்துகிறார்.
நாத்தூண்நங்கை அவர் வாழ்ந்த சேரநாட்டின் தலைநகர் இருந்த கொங்கு வழக்கை வடசொல்லால் பிறநாட்டாருக்கு விளக்குமுகமாக எழுதியுள்ளார் அடிகள்.

6. கொலைக்களக் காதை

20 

சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்

நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசில் ஆக்குதற்கு அமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூற 

நற்கலம் - புதுக்கலம். அமைந்த நற்கலம் என்றது தாங்கள் ஆளும் கலமன்றி மேன்மக்கள் ஆளும் கலத்தினை...

நங்கை என்பது போலவே நங்கன் என்ற சொல்லும் கொங்குக் கல்வெட்டுகளிலே உள்ளது. தெற்கே, அண்ணாச்சி என்பது போல, கொங்குச்சொல் நங்கன். 

பழைய மடல்:
நங்கள், நங்கை, நங்கன்  - இச்சொற்கள் பற்றிய ஒரு சிந்தனை.

On Saturday, January 2, 2016 at 1:51:16 PM UTC-6, தேமொழி wrote:
தகவல் பகிர்ந்துகொண்ட சேசாத்திரிக்கு நன்றி 
( நங்கநல்லூர்/நங்கைநல்லூர் தெரியும்....நங்கன் = ? )

குழும உறுப்பினர் பொன் வெங்கடேசன் அவர்களுக்குப் பாராட்டுகள்.

....... தேமொழி 



நங்கள், நங்கை சொற்களை இலக்கியங்களில் மிகக் காண்கிறோம்.
நங்கன் சொல் அருகிவழங்கினாலும் கல்வெட்டு, இலக்கியம், ஊர்ப்பெயர்களில்
உண்டு.

கொங்குநாட்டில் அண்ணியை/மதினியை  நங்கை/நங்கையாள் என்போம்.
நம்முடைய அண்ணி எனப் பொருள். சங்ககாலத்தில் சேரர் தலைநகர்
வஞ்சி எனப்படும் இன்றைய கொங்குநாட்டுக் கரூர் தான். முதலில்,
இதனை விளக்கி இரா. இராகவையங்காரவர்கள் ‘சேரர் வஞ்சி’ என்ற
நூலில் எழுதினார்கள். சென்ற 50, 60 ஆண்டுகளாக தொல்லியல்
பொருள்களும், நாணயங்களும், தமிழ் ப்ராமி கல்வெட்டுகளும் அதனை 
நிரூபித்துவிட்டன. ஆக, சிலம்பின் ஆசிரியர் இளங்கோ அடிகள்
கருவூர் வஞ்சியில் வாழ்ந்தவர் எனக் கொள்ள மிகுதியான இடம் உண்டு.
ஸம்மர் பேலஸ் என்பதுபோல, பாலக்காட்டு கணவாய் வழியாக
முசிரிப்பட்டினத்திற்கும் சென்று வந்திருக்கலாம் - சுங்கம் போன்றவை
வசூலிக்க. இளங்கோ அடிகள் கொங்குநாட்டு வழக்காகிய
“நங்கை” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்: 
சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூற

நங்கை = நம் அண்ணியார்; நம்பி = நம் அம்பி (இளைஞன், பூசகன் - நம்பியாண்டார் நம்பி).
நங்கள் - நம்முடைய (இங்கே -கள் அசைநிலை). இவை போல, 
நங்கன் - நம்முடையவன், நம் அண்ணன் (போன்றவன்), அண்ணாச்சி

MTL:
நங்கள் naṅkaḷ , n. < நம்¹. The basic form which nāṅkaḷ

திருவாய்மொழி:
எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியைநான் கண்டபின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனிவாய் ஒன்றி னோடும் செல்கின்றது என்நெஞ்சமே.

        சங்கு சக்கரம், அங்கையில் கொண்டான்
        எங்கும் தானாய, நங்கள் நாதனே.

பெரியபுராணம்:
கொங்கு நாடு கடந்து போய்க் குலவு மலைநாட் டெல்லையுற
“நங்கள் பெருமான் றோழனார் நம்பி தம்பி ரான்றோழர்
அங்க ணுடனே வணையவெழுந் தருளா நின்றா” ரெனும்விருப்பால
எங்கு மந்நாட் டுள்ளவர்க ளெல்லா மெதிர்கொண் டின்புறுவார்;

"நங்கள்....எனும் - இது மலைநாட்டு மக்கள் எண்ணியது; நங்கள் பெருமான் - தோழர் - நமது அரசராகிய சேரமானாரது தோழர்; “சேரமான் றோழர்" என்ற நாமத்தைப் பற்றி உரிமைப்படக் கூறியது; (3813) தம்பிரான்றோழர் என்னும் இறைவரைப் பற்றிய உரிமையினும் இதனை மேம்படக்கொண்டனர் என்பார் இதனை முன்வைத்தார்."

கம்பன்:
‘நங்கள் காரியம் இயற்றுவான் உலகிடை நடந்தீர்;
உங்கள் ஆர் உயிர் எம் உயிர்; உடல் பிறிது உற்றீர்;
செங் கண் நாயகற்காக வெங் களத்து உயிர் தீர்ந்தீர்;
எங்கள் நாயகர் நீங்கள்’ என்று இமையவர் இசைத்தார்.

அதியமான் நடுவில் நங்கன் என்பான் பருத்திப்பள்ளிச் சிவன் கோயிலைப் புதுப்பித்தான். இக்கல்வெட்டு பற்றிப் புலவர் செ. இராசு எழுதியிருக்கிறார்கள். சேசாத்திரி நங்கன்விளை என்ற ஊரைக் குறிப்பிட்டார். அண்மைக் காலம்வரை நங்கன் என்ற சொல் வழக்கில் இருந்திருக்கிறது.

”தண்ணீரில் விளக்கும் எரிந்தது:
கருங்குழியில் வேங்கட ரெட்டியார் வீட்டில் தங்கியிருந்தபோது இராமலிங்கருக்கென்று ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அடிகளார் இரவில் ஒரு மணி நேரமே உறங்குவார். தியானம் செய்வதிலும் அருட்பாக்களைப் பாடுவதிலும் எழுதுவதிலும் மற்றைப் பொழுதைக் கழிப்பார். இரவில் ஒரு மாடத்தில் விளக்கேற்றி வைப்பது வழக்கம். 

ஒருநாள் ரெட்டியாரின் மனைவி வெளியூருக்குப் போக வேண்டியிருந்தது. விளக்கில் எண்ணெய் வேண்டுமளவு ஊற்றி வைத்துவிட்டு, எண்ணெய் வைக்க வேண்டிய கலசம் உடைந்து போனதால், பழகுவதற்குப் புதிதாக ஒரு மண் கலத்தில் தண்ணீரை ஊற்றி மாடத்துக்கு அருகே வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். 

பாடல்கள் எழுதுவதிலேயே கவனமாக இருந்த இராமலிங்கரோ, தண்ணீர்க் கலத்தை எண்ணெய்க் கலம் என்று கருதி நீரையே எடுத்து அவ்வப்போது விளக்கில் இட்டு இரவு முழுவதும் எழுதிக் கொண்டிருந்தார்கள். மறுநாள் அவ்வம்மையார் வந்து பார்த்து வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார். அன்று முதல் அடிகளாரின் தெய்வீகத் தன்மை மற்றவர்களுக்கும் பரவலாகத் தெரியவந்தது. இதுவும் இறைச் செயல்தான் என்பதை வள்ளல் பெருமானே பாடியுள்ளார். 

மெய்விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கு
    இல்லை என்றார் மேலோர் நானும்
பொய்விளக்கே விளக் கெனவும் பொங்கிவழி
    கின்றேனோர் புதுமை யன்றே
செய்விளக்கும் புகழுடைய சென்னை நகர்
     நண்பர்களே செப்பக் கேளீர்
நெய்விளக்கே போன்றொருதண் ணீர்விளக்கும்
     எரிந்தது சந் நிதியின் முன்னே

இந்நிகழ்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில், மதுரைத் திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனம் சிதம்பர சுவாமிகள் அருளிய வெண்பா வருமாறு
தண்ணீர் விளக்கெரிந்த தன்மைபோல் மாந்தர்தம்
உண்ணீர் சிவம்விளங்க ஓங்குவிக்கும் கண்மணியாம்
நங்கன் இராமலிங்கன் நல்லஅருட் பாமுறையைத் 
துங்கமுற மாணா தொழு  “

நங்கை = நம் அண்ணியார் (சிலப்பதிகாரத்தில்); நம்பி = நம் அம்பி (இளைஞன், பூசகன் - நம்பியாண்டார் நம்பி). நங்கள் - நம்முடைய (இங்கே -கள் அசைநிலை). இவை போல, 
நங்கன் - நம்முடையவன், நம் அண்ணன் (போன்றவன்), அண்ணாச்சி.

நா. கணேசன்

 
On Saturday, January 2, 2016 at 11:39:33 AM UTC-8, நங்கன் wrote:



நா.ரா.கி.காளைராசன்

unread,
May 19, 2019, 10:07:21 AM5/19/19
to mintamil
On Sat, 18 May 2019 at 22:14, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
///
நாற்று = நாத்து,
நாற்றினாள் என்பதுதான் நாத்தினாள் என்று ஆகியிருக்குமோ?
///

https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

பொருள்
கணவனுடைய உடன்பிறந்தாள் (சகோதரி)
நாத்தி
நாத்தூண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்: sister-in-law (hunsband's sister)
பிரான்சியம்: belle-sœur
விளக்கம்
அதாவது கணவனுடைய அக்காள் அல்லது தங்கை அல்லது இரட்டை
பயன்பாடு
உனக்கு எத்தனை நாத்தனார்?
(இலக்கியப் பயன்பாடு)
நாத்தி என்பதற்கான பொருள் என்ன என்று அவர் கேட்கவில்லை.

On Sat, 18 May 2019 at 17:49, nkantan r <rnka...@gmail.com> wrote:
நாத்தி என்பதன் வேர்??
rnk
நாத்தி என்பதன் வேர்ச் சொல் என்ன என்று கேட்கிறார்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 19, 2019, 10:10:38 AM5/19/19
to mintamil
அருமையான பாடல்வரிகள். 
நன்றி.
On Sat, 18 May 2019 at 22:22, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
6. கொலைக்களக் காதை



20

சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்

நெடியா தளிமின் நீரெனக் கூற



18
உரை
21

         சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் - அடிகள் சாவக நோன்புடையராகலான், நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம் அடிசில் ஆக்குதற்கு - நாத்தூணாகிய ஐயையொடு
நாத்தூண் என்றால் என்ன பொருள்?
நாத்து(நாற்று)+ஊண் என்று பொருளாகுமா?
அன்பன்
கி. காளைராசன்

பகற்பொழுதே உண்ணும் உணவினைச் சமைப்பதற்கு, அமைந்த நற்கலங்கள் நெடியாது அளிமின் நீர் எனக் கூற - பொருந்திய நல்ல கலங்களை நீட்டியாது நீவிர் அளிமின் என்று சொல்ல ;

      சாவகநோன்பி - துறவாது விரதங்காப்போர். அடிகள் என்றது ஈண்டுக் கோவலனை. நாத்தூண் - கணவனுடன் பிறந்தாள். நாத்தூணாகிய நங்கை. இனி, நாத்தூணும் நங்கையும் எனலுமாம் ; ஈண்டு நாத்தூண் - ஐயை ; நங்கை - கண்ணகி, நாள்வழிப்படூஉ மடிசில் - காலத்திலே ஆக்கும் அடிசில் எனலுமமையும். நற்கலம் - புதுக்கலம். அமைந்த நற்கலம் என்றது தாங்கள் ஆளும் கலமன்றி மேன்மக்களாளும் கலத்தினை. நெடித்தல் - நீட்டித்தல்

       இடைக்குலமடந்தை ஆய்ச்சியர் தம்மொடு மனைப்படுத்துக் கூடி நீராட்டித் தொழுது (என்று) அளிமின் எனக் கூற என்க.

Source:http://www.tamilvu.org/slet/l3100/l3100uri.jsp?slno=1800&subid=180005

-- 

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 19, 2019, 10:13:17 AM5/19/19
to mintamil
On Sat, 18 May 2019 at 22:43, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
////
ஒரு திருமணத்தைப் பல சடங்குகளாகப் பகுத்து நடத்தும் சடங்குமுறைகளும் தேவை
////

திருமணம் என்றில்லை... எந்த விழாவிற்கும் ஏதோ ஒரு நடைமுறை தேவை.

தமிழ்த்தாய், நாட்டுப்பண் ஆகியன முதல் துவக்கம் என்பது போல...அந்த வாழ்த்துகள்  பாடினால் எழுந்து நிற்பதும் போல.

தேர்தல் என்றால் வாக்காளர் பதிவு, அதை சரிபார்ப்பது, வாக்களிப்பது, அதை எண்ணுவது எல்லாமே அந்த வகைதான். 

(இதில் தேவையற்றவை வாக்குக்கு பணம் கொடுப்பது)

அது போல (எந்த வகை) விழாக்களிலும், நிகழ்ச்சியிலும் தேவையற்றவற்றை களை எடுக்கலாம். இல்லாமலே நடத்தலாம் என்றால் தேவையற்றதை நீக்கிவிடலாம்.
தேவையில்லை என்று கருதித்தான் எங்களது குடும்பத்தினர் இந்த நாத்தி விளக்குப் பிடிக்கும் நிகழ்ச்சியைத் தொடராமல் விட்டுவிட்டனர் என்று எண்ணுகிறேன்.
ஆனால் பர்மா வாழ் உறவினர்கள் இதை இன்றும் தங்களது முன்னோர் வகுத்த வழியில் கடைப்பிடித்து நடத்தி வருகின்றனர்.

அன்பன்
கி.காளைராசன்
இன்றியமையாதவை காலத்திற்கு ஏற்ப மாறுபடும். தற்காலத்தில்  திருமணத்தைப் பதிவு செய்வது ஒரு சடங்கு.

-- 

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 19, 2019, 10:15:31 AM5/19/19
to mintamil
On Sun, 19 May 2019 at 16:08, nkantan r <rnka...@gmail.com> wrote:
@தேமொழி..
தாங்கள் /// .../// quote காட்டுவது இந்த இழையில் இல்லையே. வேறு எங்கு யார் அளித்த பதில்??

---


On Sat, 18 May 2019 at 17:06, நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
அப்படியானால், ஒரு திருமணத்தைப் பல சடங்குகளாகப் பகுத்து நடத்தும் சடங்குமுறைகளும் தேவை.

அன்பன்
கி.காளைராசன்
(பகுத்தறிவாளர்கள் தங்களது கல்வியைக்  காட்டுமிராண்டிகள் கற்கவேண்டும் எனக் கவலைப்படுகின்றனர்.
காட்டுமிராண்டிகள் தங்களது முன்னோர்கள் கடைப்பிடித்த சடங்குகளைத் தவறாமல் கடைப்பிடிப்பதைப் பற்றிக் கவலைப் படுகின்றனர்.)

மேலே கண்டவாறு, இந்த இழையில் எனது பெயருக்குக் கீழே நான் எழுதியுள்ளேன் ஐயா.
அன்பன்
கி.காளைரசான் 

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 19, 2019, 10:20:13 AM5/19/19
to mintamil
On Sun, 19 May 2019 at 16:38, Suba <ksuba...@gmail.com> wrote:

பர்மாவில் இருக்கும் போது பர்மிய தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமய மற்றும் சடங்குகள் ஆகியவற்றையும் அவர்களில் வயதில் மூத்தோர் இருந்தால் அவர்களது இளம் வயது பர்மிய சூழல் அனுபவங்களையும் செல்போனில் சிறு சிறு பேச்சிகளாகச் செய்து தர இயலுமா? தமிழ் மரபு அறக்கட்டளையில் ஆவணப்படுத்துவோம்.

நன்றி
சுபா
நான் தற்போது தாயகம் திரும்பி விட்டேன்.
ஆனாலும் WhatsApp viber முதலான செயலிகள் வழியாகப் பேசிக் கொள்கிறோம்.
எனவே, தாங்கள் கூறியுள்ளது போன்று ஒரு ஆவணத்தைத் தயாரிக்க முயற்சிக்கிறேன்.
நன்றி.

தேமொழி

unread,
May 19, 2019, 12:18:13 PM5/19/19
to மின்தமிழ்
///

எங்களது குடும்பத்தினர் இந்த நாத்தி விளக்குப் பிடிக்கும் நிகழ்ச்சியைத் தொடராமல் விட்டுவிட்டனர் என்று எண்ணுகிறேன்.
ஆனால் பர்மா வாழ் உறவினர்கள் இதை இன்றும் தங்களது முன்னோர் வகுத்த வழியில் கடைப்பிடித்து நடத்தி வருகின்றனர்.
///

இலங்கைத் தமிழர் திருமணத்திலும் நாத்தி விளக்கு, உடன்பிறப்பு மணமகனுக்கு தாலி முடிச்சு போட்டு உதவும் சடங்குகள் உள்ளன, அவற்றைப் பார்த்ததுண்டு என்று தனிமடல் வழியாக தகவல் கிடைத்தது.


நாத்தி பட்டம் என்பது இன்றும் வழக்கில் உள்ளது என எண்ணுகிறேன்.நிச்சயம் நகைக்கடையில் போய் கேட்டால் விற்பனைக்கு இவை கிடைக்கலாம்.

RNK அவர்களுக்கு விளக்கம் அளித்தமைக்கு நன்றி.

நாத்தி வேர்ச்சொல் ஆய்வு நண்பர் கணேசன் டிப்பார்ட்மெண்ட்.

மேலும் ஒன்று தோன்றியது. கஜலட்சுமி ('வேழத்திரு' என அழைப்பர் என சமீபத்தில் இரா.கலைக்கோவன் அவர்களின் நூல் ஒன்றின் படத்தில் பார்த்து அறிந்து கொண்டேன்)..கஜலட்சுமி உருவம் எப்படி காமாட்சி என்பவர் விளக்காயிற்று என்று நம் குழுமத்தில் ஒரு விவாதம் வந்தது நினைவிருக்கலாம்.

ஒரு சில தமிழர் பிரிவில் காமாட்சி விளக்கை நாத்தி விளக்காக திருமணத்தில் பிடிக்கும் வழக்கம் உள்ளது என்றால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பின்புலம் கொண்டவர்களாகவும் இருக்கக்கூடும்.

கடந்த இரு நூற்றாண்டுகளில் போக்குவரத்து மாற்றங்கள் காரணமாக தமிழகத்தின் உள்ளேயே பல மூளைகளிலும், அயல் நாடுகளிலும் தமிழர் பரவி வாழும் நிலையில் எந்த வட்டார தமிழரிடம் நாத்தி பட்டம், நாத்தி விளக்கு போன்றவை இன்றும் தொடர்கிறது என்பதை ஆய்வு செய்யலாம்.

Raju Saravanan

unread,
May 19, 2019, 12:30:04 PM5/19/19
to mint...@googlegroups.com
நா(பேச்சு) + துணையார்  = நாத்துணையார் 

திருமணமான பெண்ணிற்கு பேசுவதற்கு துணையாக இருக்கும் உறவு முறை.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
May 20, 2019, 1:24:36 AM5/20/19
to mintamil
///நாத்தனார்/நாத்தி என்பது வடசொல்லின் தற்பவம் ஆகும். மலையாளத்தில் இன்றும் நாத்தூண் என்னும் வடிவம் ( < nanāndṛ from Skt.) வழங்குகிறது.
 < nanāndṛ from Skt       தமிழில் 'நாத்தூண்' என்று மாறி...மருவி வழங்குகிறது என்பதற்கு ஆதாரம் எங்கே ?
இது ஒரு கருதுகோள்....அதாவது hypothesis.....இது அனுமானமாக இருக்கலாம்; அப்படிக் கருதுவதை ஒரு முடிபாகக் கூற வேண்டுமெனின் அக்கருத்தை ஒட்டிச் சொல்லக்கூடிய ஆதாரங்களைக் காட்ட வேண்டும். 1
1), 2), 3) என எண்ணிட்டு ஆதாரங்களைக் கொடுத்த பிறகு தான் மேற்கொண்டு தொடர வேண்டும். இல்லாதவரை ஆசைபற்றிக் கூறுவது  என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.       
நாத்தி கன்னடத்தில் நாதினி என்றாகிறது. நாத்தூண் > நாத்தன் > நாத்தனார் (ஏனெனில், -ன் என்பது ஆண்பாற்பெயர் விகுதி ஆயிற்றே), எனவே -ஆர் சேர்த்தப்பட்டது.
நாத்தூண் > நாத்தன் > நாத்தி என்று பெண்பால்விகுதி சேர்த்தலும் உண்டு. (உ-ம்: நாத்தி விளக்கு - சில தமிழக ஜாதிகளிடையே). நாந்தி என்பதற்கு ஏற்கெனவே பல பொருள்கள் கொண்ட சொல் தமிழில் இருப்பதால் நாத்தி/நாத்தனார் என தமிழாக்கம் அமைந்துளது.

கொங்குநாட்டு அரண்மனை வளமனைகளில் இன்றும் பெண்கள் அம்மனார் என்று அழைப்பர். இது பழைய வழக்கு.
"தோளிணைமேலும் நன்மார்பின் மேலும் சுடர்முடி மேலும் தாளிணைமேலும் புனைந்த தண்ணற்துழாய் நாண்
 அம்மனார் தேவரீர் திருமகள் மண்மகள் நீலா முதலா எல்லாத்தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்க, "
அம்மனார் போல, நாத்தனார். -ஆர் = மரியாதைப்பன்மை விகுதி.
நாத்தனாருக்கு இணையான செந்தமிழ்ச் சொல் கொங்குநாட்டிலே வழங்குகிறது. நாத்தனார் என்பது கொங்கில் நங்கையாள்.
பழமைபேசி பதிவில்: http://maniyinpakkam.blogspot.com/2008/12/blog-post_1717.html
சிலப்பதிகாரத்தில் நாத்தூண் நங்கை: இலக்கணக் குறிப்பு
------------------------------------------------------------------------------------------------------------
போஸ்ட்கம்பம், டிச்சுக்குழி, ... என்பது போல, நாத்தூண்நங்கை  Pleonastic Compunding எந்னும் திராவிட மொழியியல் மரபுக்கு  ஒரு பண்டை உதாரணம். இளங்கோ அடிகள் பயன்படுத்துகிறார்.
http://www.laurasianacademy.com/pleonastic.pdf நாத்தூண்நங்கை அவர் வாழ்ந்த சேரநாட்டின் தலைநகர் இருந்த கொங்கு வழக்கை வடசொல்லால் பிறநாட்டாருக்கு விளக்குமுகமாக எழுதியுள்ளார் அடிகள்.
6. கொலைக்களக் காதை
20 
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்

நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசில் ஆக்குதற்கு அமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூற 
நற்கலம் - புதுக்கலம். அமைந்த நற்கலம் என்றது தாங்கள் ஆளும் கலமன்றி மேன்மக்கள் ஆளும் கலத்தினை...
நங்கை என்பது போலவே நங்கன் என்ற சொல்லும் கொங்குக் கல்வெட்டுகளிலே உள்ளது. தெற்கே, அண்ணாச்சி என்பது போல, கொங்குச்சொல் நங்கன். 
பழைய மடல்:
நங்கள், நங்கை, நங்கன்  - இச்சொற்கள் பற்றிய ஒரு சிந்தனை.
On Saturday, January 2, 2016 at 1:51:16 PM UTC-6, தேமொழி wrote:
தகவல் பகிர்ந்துகொண்ட சேசாத்திரிக்கு நன்றி 
( நங்கநல்லூர்/நங்கைநல்லூர் தெரியும்....நங்கன் = ? )
குழும உறுப்பினர் பொன் வெங்கடேசன் அவர்களுக்குப் பாராட்டுகள்.
....... தேமொழி 
நங்கள், நங்கை சொற்களை இலக்கியங்களில் மிகக் காண்கிறோம்.
நங்கன் சொல் அருகிவழங்கினாலும் கல்வெட்டு, இலக்கியம், ஊர்ப்பெயர்களில்
உண்டு.
கொங்குநாட்டில் அண்ணியை/மதினியை  நங்கை/நங்கையாள் என்போம்.
நம்முடைய அண்ணி எனப் பொருள்.
கொங்கு நாட்டார் வழக்காறுகளைத் தொகுத்துத் தந்தமைக்கு நன்றி 
 
சங்ககாலத்தில் சேரர் தலைநகர்
வஞ்சி எனப்படும் இன்றைய கொங்குநாட்டுக் கரூர் தான். முதலில்,
இதனை விளக்கி இரா. இராகவையங்காரவர்கள் ‘சேரர் வஞ்சி’ என்ற
நூலில் எழுதினார்கள். சென்ற 50, 60 ஆண்டுகளாக தொல்லியல்
பொருள்களும், நாணயங்களும், தமிழ் ப்ராமி கல்வெட்டுகளும் அதனை 
நிரூபித்துவிட்டன. ஆக, சிலம்பின் ஆசிரியர் இளங்கோ அடிகள்
கருவூர் வஞ்சியில் வாழ்ந்தவர் எனக் கொள்ள மிகுதியான இடம் உண்டு.
மிகுதியான இடம் இருந்தால் அங்கு சில சான்று ஆதாரங்களைப் போட்டு நிரப்புவது தானே 

ஸம்மர் பேலஸ் என்பதுபோல, பாலக்காட்டு கணவாய் வழியாக
முசிரிப்பட்டினத்திற்கும் சென்று வந்திருக்கலாம் - சுங்கம் போன்றவை
வசூலிக்க. இளங்கோ அடிகள் கொங்குநாட்டு வழக்காகிய
“நங்கை” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்: 
சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூற
இலக்கிய வழக்குகளைத் தொகுத்துக் கூறியமைக்கு நன்றி .
சக 

 


திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 20, 2019, 2:23:30 AM5/20/19
to mintamil
On Sun, May 19, 2019 at 10:00 PM Raju Saravanan <ras...@gmail.com> wrote:
நா(பேச்சு) + துணையார்  = நாத்துணையார் 

திருமணமான பெண்ணிற்கு பேசுவதற்கு துணையாக இருக்கும் உறவு முறை.

அருமையான சிந்தனை சரவணன்.

வாழ்த்துக்கள். :))
 

For more options, visit https://groups.google.com/d/optout.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

Raju Saravanan

unread,
May 20, 2019, 3:16:13 AM5/20/19
to mint...@googlegroups.com
 நன்றி சரவணன் ,

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி உள்ள விளக்கம் இதோ 


நாத்தனார் nāttaṉār, பெ. (n.) 

   கணவனுடன் பிறந்தாள்; husband's sister. 

க. நாதினி. 

நாற்றுண் → நாத்துண் → நாத்தன்+ஆர்] 

ஒரு குடியிற் பிறந்தபெண், பூப்பெய்தித் தக்கபருவம் வந்தக்கால், புக்ககம் செல்வது பொதுமரபாகும். இஃதே போன்று, ஒருகுடியில் நாற்றாயிருந்து. மறுகுடிக்கு, நடுபயிராகச் செல்லுந்தன்மை யுடையாளாதலின். 

     "நாற்று அன்னார்." என்னும் பொருண்மையிற் கூறுதல் பொருந்துமென்க. 

ஒருகா. நாத்துணையார் → நாத்தனார். 

நா+ துணையார் = பிறந்தகத்திலிருந்து, புகுந்தகத்திற்கு வந்த பெண்ணுடி னுறைந்து, ஆறுதலும் தேறுதலும் தரும், கணவனின் தமக்கை அல்லது தங்கை, 

சிலப்பதிகாரத்தில், இளங்கோ அடிகள், நாத்தூண் நங்கை என்று குறிப்பதால், 

புகுந்த வீட்டார், பிறந்தவீட்டைத் தாழ்த்திப் பேசினால், புதுப்பெண் தன் வீட்டுப் பெருமையைத் தூணாக நின்று காப்பவள் என்று, பொருள்படுதல் காண்க.  

 

kanmani tamil

unread,
May 20, 2019, 3:47:24 AM5/20/19
to mintamil
///ஒரு குடியிற் பிறந்தபெண், பூப்பெய்தித் தக்கபருவம் வந்தக்கால், புக்ககம் செல்வது பொதுமரபாகும். இஃதே போன்று, ஒருகுடியில் நாற்றாயிருந்து. மறுகுடிக்கு, நடுபயிராகச் செல்லுந்தன்மை யுடையாளாதலின். 

     "நாற்று அன்னார்." என்னும் பொருண்மையிற் கூறுதல் பொருந்துமென்க. ///
மிக மிக அருமையான விளக்கம் . பொருத்தமாகவும் உள்ளது.
சக 

 

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 20, 2019, 3:55:16 AM5/20/19
to mintamil
On Sun, 19 May 2019 at 22:00, Raju Saravanan <ras...@gmail.com> wrote:
நா(பேச்சு) + துணையார்  = நாத்துணையார் 

திருமணமான பெண்ணிற்கு பேசுவதற்கு துணையாக இருக்கும் உறவு முறை.
அருமை.
நல்லதொரு விளக்கம்...
ஆனால் பேசுவதற்குத் துணையாக இருப்பவரைப் “பேச்சி” என்றுதானே அழைக்க முடியும்😇
அன்பன்
கி.காளைராசன் 

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 20, 2019, 3:57:52 AM5/20/19
to mintamil
On Mon, 20 May 2019 at 12:46, Raju Saravanan <ras...@gmail.com> wrote:
 நன்றி சரவணன் ,

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி உள்ள விளக்கம் இதோ 


நாத்தனார் nāttaṉār, பெ. (n.) 

   கணவனுடன் பிறந்தாள்; husband's sister. 

க. நாதினி. 

நாற்றுண் → நாத்துண் → நாத்தன்+ஆர்] 

ஒரு குடியிற் பிறந்தபெண், பூப்பெய்தித் தக்கபருவம் வந்தக்கால், புக்ககம் செல்வது பொதுமரபாகும். இஃதே போன்று, ஒருகுடியில் நாற்றாயிருந்து. மறுகுடிக்கு, நடுபயிராகச் செல்லுந்தன்மை யுடையாளாதலின். 

     "நாற்று அன்னார்." என்னும் பொருண்மையிற் கூறுதல் பொருந்துமென்க. 
அருமை.
நல்லதொரு விளக்கம்.

அன்பன்
கி.காளைராசன்

தேமொழி

unread,
May 20, 2019, 4:04:39 AM5/20/19
to மின்தமிழ்
///

நாத்தி என்பதன் வேர்??

நாற்று = நாத்து,


நாற்றினாள் என்பதுதான் நாத்தினாள் என்று ஆகியிருக்குமோ?
///

நீங்கள் முதலிலேயே சரியான கோணத்தில் அணுகியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.

N. Ganesan

unread,
May 20, 2019, 4:44:55 AM5/20/19
to மின்தமிழ், vallamai
On Mon, May 20, 2019 at 1:47 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///ஒரு குடியிற் பிறந்தபெண், பூப்பெய்தித் தக்கபருவம் வந்தக்கால், புக்ககம் செல்வது பொதுமரபாகும். இஃதே போன்று, ஒருகுடியில் நாற்றாயிருந்து. மறுகுடிக்கு, நடுபயிராகச் செல்லுந்தன்மை யுடையாளாதலின். 

     "நாற்று அன்னார்." என்னும் பொருண்மையிற் கூறுதல் பொருந்துமென்க. ///
 
மிக மிக அருமையான விளக்கம் . பொருத்தமாகவும் உள்ளது.
சக 


நாத்தூண் > நாத்தன்(ஆர்) 'நாற்று அன்னார்' என்பதில் இருந்து தோன்றுகிறது என்று கூறுதல் பொருத்தமாக இல்லை.
காரணம்: எல்லாப் பெண்களுமே புக்ககம் வருபவர்கள் தாம். ஏன் தாய்மாரை, கொழுந்திகளை நாற்றனார்/நாத்தனார்
என அழைப்பதில்லை? நாற்றனார்/நாற்றன்னார் என்ற இலக்கிய வழக்கும் மதினிகளுக்கு இல்லை; பெண்களுக்கும் இல்லை.

வடசொல்லை தமிழ்ச் சொல் என்று காட்ட வரும் இவ்விளக்கங்கள் பொருத்தமாக இல்லை.

நா. கணேசன்

 

இ.பு.ஞானப்பிரகாசன் (E.Bhu.GnaanaPragaasan)

unread,
May 20, 2019, 5:03:21 AM5/20/19
to N. Ganesan, மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai, Periannan Chandrasekaran, பழமைபேசி, dorai sundaram
நாத்தனார் எனும் சொல் தமிழில்லை என்பது வியப்பான செய்தி! அதற்குரிய தமிழ்ச் சொல்லான நங்கையையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ஐயா!

ஞாயி., 19 மே, 2019, பிற்பகல் 5:52 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayaku...@googlegroups.com.
To post to this group, send email to karanthai...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/karanthaijayakumar.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUeP7626NuuQ9q%3D5GDOtrYL7FtpiPVDeMyWiDnFB%2BO6UXw%40mail.gmail.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--
அன்புடன்:
~~இ.பு.ஞானப்பிரகாசன்
(
E.Bhu.Gnaanapragaasan)

http://agasivapputhamizh.blogspot.com
http://agasivapputhamizh.blogspot.com

N. Ganesan

unread,
May 20, 2019, 5:03:23 AM5/20/19
to மின்தமிழ், vallamai


On Mon, May 20, 2019 at 1:47 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///ஒரு குடியிற் பிறந்தபெண், பூப்பெய்தித் தக்கபருவம் வந்தக்கால், புக்ககம் செல்வது பொதுமரபாகும். இஃதே போன்று, ஒருகுடியில் நாற்றாயிருந்து. மறுகுடிக்கு, நடுபயிராகச் செல்லுந்தன்மை யுடையாளாதலின். 

     "நாற்று அன்னார்." என்னும் பொருண்மையிற் கூறுதல் பொருந்துமென்க. ///
 
மிக மிக அருமையான விளக்கம் . பொருத்தமாகவும் உள்ளது.
சக 


நாத்தூண் > நாத்தன்(ஆர்) 'நாற்று அன்னார்' என்பதில் இருந்து தோன்றுகிறது என்று கூறுதல் பொருத்தமாக இல்லை.
காரணம்: எல்லாப் பெண்களுமே புக்ககம் வருபவர்கள் தாம். ஏன் தாய்மாரை, கொழுந்திகளை நாற்றனார்/நாத்தனார்
என அழைப்பதில்லை? நாற்றனார்/நாற்றன்னார் என்ற இலக்கிய வழக்கும் மதினிகளுக்கு இல்லை; பெண்களுக்கும் இல்லை.

வடசொல்லை தமிழ்ச் சொல் என்று காட்ட வரும் இவ்விளக்கங்கள் பொருத்தமாக இல்லை.


-அன்னார் என்று உவமித்துக் கூறும் உறவுப்பெயர்கள் உண்டா?

N. Ganesan

unread,
May 20, 2019, 5:23:17 AM5/20/19
to இ.பு.ஞானப்பிரகாசன் (E.Bhu.GnaanaPragaasan), மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai, Periannan Chandrasekaran, பழமைபேசி, dorai sundaram
On Mon, May 20, 2019 at 3:03 AM இ.பு.ஞானப்பிரகாசன் (E.Bhu.GnaanaPragaasan) <e.bhu.gnaa...@gmail.com> wrote:
நாத்தனார் எனும் சொல் தமிழில்லை என்பது வியப்பான செய்தி! அதற்குரிய தமிழ்ச் சொல்லான நங்கையையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ஐயா!


நன்றி, ஞானம்.  நாத்தூண்நங்கை போலவே இன்னொரு Pleonastic Compound உதாரணம்: பசுமாடு.

இ.பு.ஞானப்பிரகாசன் (E.Bhu.GnaanaPragaasan)

unread,
May 20, 2019, 5:46:15 AM5/20/19
to N. Ganesan, மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai, Periannan Chandrasekaran, பழமைபேசி, dorai sundaram
அட! ஆமாம் ஐயா! மிக்க நன்றி இந்தச் சுவையான எடுத்துக்காட்டுக்கு!

சரி ஐயா, இந்த Pleonastic Compound என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்? பழந்தமிழ்ச் சொல் ஏதேனும் உண்டா இதற்கு?

திங்., 20 மே, 2019, பிற்பகல் 2:53 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
May 20, 2019, 6:07:30 AM5/20/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai, Periannan Chandrasekaran
On Mon, May 20, 2019 at 3:46 AM இ.பு.ஞானப்பிரகாசன் (E.Bhu.GnaanaPragaasan) <e.bhu.gnaa...@gmail.com> wrote:
அட! ஆமாம் ஐயா! மிக்க நன்றி இந்தச் சுவையான எடுத்துக்காட்டுக்கு!

சரி ஐயா, இந்த Pleonastic Compound என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்? பழந்தமிழ்ச் சொல் ஏதேனும் உண்டா இதற்கு?

நண்பர் பெரி. சந்திராவின் ஆய்வுக் கட்டுரையைப் படித்துப்பாருங்கள்: http://www.laurasianacademy.com/pleonastic.pdf

பசுமாடு, நாத்தூண்நங்கை, டிச்சுக்குழி, போஸ்ட்கம்பம், .... : இவை Pleonastic Compounds.
தமிழில் "ஒருபொருளிருமொழி" எனலாம் என நினைக்கிறேன். மொழி = சொல், பாஷை

வழித்தடம் = இந்த 'ஒருபொருளிருமொழி'யில் மொழி = சொல். 

பசுமாடு, நாத்தூண்நங்கை = இந்த 'ஒருபொருளிருமொழி'யில் மொழி = பாஷை. பசு, நாத்தூண் வடசொற்கள். மாடு, நங்கை அதற்கான தமிழ்சொ சொற்கள். 
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAPi5Uj%2BHnYEox6eAYKp8SCSX3wvCQ1nqyjBEkArE0C07rBnxVQ%40mail.gmail.com.

kanmani tamil

unread,
May 20, 2019, 8:00:32 AM5/20/19
to mintamil
---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Mon, May 20, 2019 at 3:09 PM
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] நாத்தி விளக்கு
To: vallamai <vall...@googlegroups.com>


நாத்தூண் > நாத்தன்(ஆர்) 'நாற்று அன்னார்' என்பதில் இருந்து தோன்றுகிறது என்று கூறுதல் பொருத்தமாக இல்லை.
காரணம்: எல்லாப் பெண்களுமே புக்ககம் வருபவர்கள் தாம். ஏன் தாய்மாரை, கொழுந்திகளை நாற்றனார்/நாத்தனார்
என அழைப்பதில்லை? நாற்றனார்/நாற்றன்னார் என்ற இலக்கிய வழக்கும் மதினிகளுக்கு இல்லை; பெண்களுக்கும் இல்லை.
வடசொல்லை தமிழ்ச் சொல் என்று காட்ட வரும் இவ்விளக்கங்கள் பொருத்தமாக இல்லை.
நா. கணேசன்///wrote 12mts ago 

ஆமாம் . எல்லாப் பெண்களும் புக்ககம் வருபவர் தாம் .

தாய்மாரை ஏன் நாத்தனார் என்று எல்லோரும் அழைப்பதில்லை என்றால்;....
ஒரு பெண் திருமணமாகிக் கணவனோடு தன் புகுந்த வீட்டிற்குள் நுழையும் போது அங்கே 'எடுத்து ஊன்ற வேண்டிய நாற்று' போல இருப்பவள் அவளது கணவனின் திருமணமாகாத தங்கை / தங்கையர் மட்டுமே. எனவே அவர்கள் மட்டுமே நாத்தூண் நங்கையர் .

                                                    நாத்தூண் <<<நாற்று ஊண் <<<நாற்று ஊன் <<<ஊன்ற வேண்டிய நாற்று.
பேச்சு வழக்கில் 'நாத்து ஊனியாச்சா?' என்றும் கேட்பர்.
கணவனின் தாயோ / மூத்த சகோதரியோ(மதனியாள்/ மைத்துனியாள்) ; எடுத்து ஊன்ற வேண்டிய நாற்று போன்றவரில்லை . அவர்களுக்கெல்லாம் ஏற்கெனவே திருமணம் முடிந்து இருக்கும்.(அக்கா திருமணத்திற்கு முன்னர் தம்பி திருமணம் செய்து கொள்ள மாட்டான் ...அந்தக்காலம் ...) 

கொழுந்திகளை ஏன் நாத்தனார் என்று அழைப்பதில்லை என்றால்;...
கொழுந்தி என்று யாரை அழைப்போம்?
நீண்டகால அயல்நாட்டு வாழ்க்கையில் அது சரியாக நினைவிருக்கிறதா?
யாருக்குக் கொழுந்தி என்று சிந்தித்துப் பாருங்கள் ......ஒரு ஆடவனுக்குத் தன் மனைவியின் தங்கையே கொழுந்தி.
புது மாப்பிள்ளைக்கு .......கொழுநனுக்கு (தலைவனுக்கு)........ தன் மனைவியின் தங்கை கொழுந்தியாகும்(மனைவியாகும்) தகுதி படைத்தவள்.
இதனால் தான் அந்தக்காலம் அக்கா & மச்சான் இருக்கும் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க விடமாட்டார்கள்.(இப்போது எல்லாம் தலைகீழ்...) 

புதிதாகக் குடித்தனம் தொடங்கும் பெண் தன் கணவனின் திருமணமாகாத தங்கையை / திருமணத்திற்குக் காத்திருக்கும் தங்கையை / மணப்பருவம் எய்தாத தங்கையை; நாற்றைப் போற்றுவது போலப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். எவ்வளவு அருமையாக உறவுமுறைப்பெயர் வைத்திருக்கிறார்கள் அந்தக் காலத்தில் ....
கொழுந்தியைப் பற்றி புதுமாப்பிள்ளை கவலைப் படவே கூடாது...... தன்  மனைவியைப் பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். அதனால் தான் கொழுந்தியை நாத்தி என்று சொல்வதில்லை.    

புரிந்து விட்டதா ?
சக 
 



 




 


 

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdiGSY9eE%2BjBkCMG1mBOF39DpC%2BbbePSGFXDxhOfeW%3DSg%40mail.gmail.com.

kanmani tamil

unread,
May 20, 2019, 8:01:58 AM5/20/19
to mintamil
---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Mon, May 20, 2019 at 3:11 PM
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] நாத்தி விளக்கு
To: vallamai <vall...@googlegroups.com>


pleonastic compound என்றால் ஒருபொருட் பன்மொழியா ?
சக 

On Mon, May 20, 2019 at 3:09 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நாத்தூண் > நாத்தன்(ஆர்) 'நாற்று அன்னார்' என்பதில் இருந்து தோன்றுகிறது என்று கூறுதல் பொருத்தமாக இல்லை.
காரணம்: எல்லாப் பெண்களுமே புக்ககம் வருபவர்கள் தாம். ஏன் தாய்மாரை, கொழுந்திகளை நாற்றனார்/நாத்தனார்
என அழைப்பதில்லை? நாற்றனார்/நாற்றன்னார் என்ற இலக்கிய வழக்கும் மதினிகளுக்கு இல்லை; பெண்களுக்கும் இல்லை.
வடசொல்லை தமிழ்ச் சொல் என்று காட்ட வரும் இவ்விளக்கங்கள் பொருத்தமாக இல்லை.
நா. கணேசன்///wrote 12mts ago 

ஆமாம் . எல்லாப் பெண்களும் புக்ககம் வருபவர் தாம் .

தாய்மாரை ஏன் நாத்தனார் என்று எல்லோரும் அழைப்பதில்லை என்றால்;....
ஒரு பெண் திருமணமாகிக் கணவனோடு தன் புகுந்த வீட்டிற்குள் நுழையும் போது அங்கே 'எடுத்து ஊன்ற வேண்டிய நாற்று' போல இருப்பவள் அவளது கணவனின் திருமணமாகாத தங்கை / தங்கையர் மட்டுமே. எனவே அவர்கள் மட்டுமே நாத்தூண் நங்கையர் .

                                                    நாத்தூண் <<<நாற்று ஊண் <<<நாற்று ஊன் <<<ஊன்ற வேண்டிய நாற்று.
பேச்சு வழக்கில் 'நாத்து ஊனியாச்சா?' என்றும் கேட்பர்.
கணவனின் தாயோ / மூத்த சகோதரியோ(மதனியாள்/ மைத்துனியாள்) ; எடுத்து ஊன்ற வேண்டிய நாற்று போன்றவரில்லை . அவர்களுக்கெல்லாம் ஏற்கெனவே திருமணம் முடிந்து இருக்கும்.(அக்கா திருமணத்திற்கு முன்னர் தம்பி திருமணம் செய்து கொள்ள மாட்டான் ...அந்தக்காலம் ...) 

கொழுந்திகளை ஏன் நாத்தனார் என்று அழைப்பதில்லை என்றால்;...
கொழுந்தி என்று யாரை அழைப்போம்?
நீண்டகால அயல்நாட்டு வாழ்க்கையில் அது சரியாக நினைவிருக்கிறதா?
யாருக்குக் கொழுந்தி என்று சிந்தித்துப் பாருங்கள் ......ஒரு ஆடவனுக்குத் தன் மனைவியின் தங்கையே கொழுந்தி.
புது மாப்பிள்ளைக்கு .......கொழுநனுக்கு (தலைவனுக்கு)........ தன் மனைவியின் தங்கை கொழுந்தியாகும்(மனைவியாகும்) தகுதி படைத்தவள்.
இதனால் தான் அந்தக்காலம் அக்கா & மச்சான் இருக்கும் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க விடமாட்டார்கள்.(இப்போது எல்லாம் தலைகீழ்...) 

புதிதாகக் குடித்தனம் தொடங்கும் பெண் தன் கணவனின் திருமணமாகாத தங்கையை / திருமணத்திற்குக் காத்திருக்கும் தங்கையை / மணப்பருவம் எய்தாத தங்கையை; நாற்றைப் போற்றுவது போலப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். எவ்வளவு அருமையாக உறவுமுறைப்பெயர் வைத்திருக்கிறார்கள் அந்தக் காலத்தில் ....
கொழுந்தியைப் பற்றி புதுமாப்பிள்ளை கவலைப் படவே கூடாது...... தன்  மனைவியைப் பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். அதனால் தான் கொழுந்தியை நாத்தி என்று சொல்வதில்லை.    

புரிந்து விட்டதா ?
சக 
 



 




 


 
On Mon, May 20, 2019 at 2:14 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdiGSY9eE%2BjBkCMG1mBOF39DpC%2BbbePSGFXDxhOfeW%3DSg%40mail.gmail.com.

Pandiyaraja Paramasivam

unread,
May 20, 2019, 8:16:48 AM5/20/19
to mint...@googlegroups.com
"வடசொல்லை தமிழ்ச் சொல் என்று காட்ட வரும் இவ்விளக்கங்கள் பொருத்தமாக இல்லை."
எதை எடுத்தாலும் அதனை வடசொல் என்று கூறும் கனேசனாரின் விளக்கம்தான் பொருத்தமாக இல்லை.
ப. பாண்டியராஜா

kanmani tamil

unread,
May 20, 2019, 8:44:47 AM5/20/19
to mintamil
நண்பர் பெரி. சந்திராவின் ஆய்வுக் கட்டுரையைப் படித்துப்பாருங்கள்: http://www.laurasianacademy.com/pleonastic.pdf

பசுமாடு, நாத்தூண்நங்கை, டிச்சுக்குழி, போஸ்ட்கம்பம், .... : இவை Pleonastic Compounds.
தமிழில் "ஒருபொருளிருமொழி" எனலாம் என நினைக்கிறேன். மொழி = சொல், பாஷை
வழித்தடம் = இந்த 'ஒருபொருளிருமொழி'யில் மொழி = சொல். 
பசுமாடு, நாத்தூண்நங்கை = இந்த 'ஒருபொருளிருமொழி'யில் மொழி = பாஷை. பசு, நாத்தூண் வடசொற்கள். மாடு, நங்கை அதற்கான தமிழ்சொ சொற்கள். 


இந்தச் சுட்டியில் உள்ள கட்டுரை பற்றிக் குறை சொல்ல நினைக்கவில்லை .


அதை மேலோட்டமாகப் படித்துவிட்டு எதுவும் சொல்லக்கூடாது.
50 பக்கங்களுக்கும் மேல் உள்ள மொழியியல் கட்டுரை ......ஆய்வு விதிகளின் படி செய்யப்பட்டுள்ளது.
I need a deep study and some more time.
Sk

N. Ganesan

unread,
May 20, 2019, 9:14:09 AM5/20/19
to மின்தமிழ், vallamai


> On Mon, May 20, 2019 at 6:00 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

நாற்று என்பதற்கும் நாத்தூண்/நாத்தனார் என்பதற்கும் என்ன உறவு என விளங்கவில்லை.
பெண்கள் எல்லோரும் இன்னொரு வீடு செல்பவர். ஆனால், எல்லோரும் நாற்றனார் எனப் படுவதில்லை.

மேலும், நாற்று நடுவது வழக்கம். நாற்று நடவு முடிந்ததா? நாற்று நட்டாச்சா? கேட்கிறோம்.
நாற்று ஊன்றியாச்சு என்பதில்லை. மேலும் இளங்கோ அடிகள் குறிப்பிடுவது நாத்தூண். நாத்து + ஊண் (உண்- வினைச்சொல்).
நாற்று + ஊன் என்றால்,  பல எழுத்துப் பிழையுடன் "நாத்தூண்" என இளங்கோ அடிகள் செந்தமிழ்க் காப்பியம் செய்வாரா?

நாத்தூண் = நா+ தூண் என்ற விளக்கமும் பார்த்தேன். அது பொருந்தாது. தூண் தமிழா?
"சிலப்பதிகாரத்தில், இளங்கோ அடிகள், நாத்தூண் நங்கை என்று குறிப்பதால்,  
புகுந்த வீட்டார், பிறந்தவீட்டைத் தாழ்த்திப் பேசினால், புதுப்பெண் தன் வீட்டுப் பெருமையைத் தூணாக நின்று காப்பவள்"

நா. கணேசன்

kanmani tamil

unread,
May 20, 2019, 9:45:59 AM5/20/19
to vallamai, mintamil

N. Ganesan

6:44 PM (1 minute ago)
to vallamaiமின்தமிழ்


> On Mon, May 20, 2019 at 6:00 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

///நாற்று என்பதற்கும் நாத்தூண்/நாத்தனார் என்பதற்கும் என்ன உறவு என விளங்கவில்லை.///

இளங்கோவடிகள் காலத்திலேயே நாற்று >>நாத்து எனும் பேச்சு வழக்கு இருந்தது என்று எண்ணத் தோன்றுகிறது.
கொஞ்ச நேரத்திற்கு முன்னர் அனுப்பினேனே அந்தமடலை  ஓட்டுகிறேன். அது தான் பதில்.

ஆமாம் . எல்லாப் பெண்களும் புக்ககம் வருபவர் தாம் .
தாய்மாரை ஏன் நாத்தனார் என்று எல்லோரும் அழைப்பதில்லை என்றால்;....
ஒரு பெண் திருமணமாகிக் கணவனோடு தன் புகுந்த வீட்டிற்குள் நுழையும் போது அங்கே 'எடுத்து ஊன்ற வேண்டிய நாற்று' போல இருப்பவள் அவளது கணவனின் திருமணமாகாத தங்கை / தங்கையர் மட்டுமே. எனவே அவர்கள் மட்டுமே நாத்தூண் நங்கையர் .
                                                            நாத்தூண் <<<நாற்று ஊண் <<<நாற்று ஊன் <<<ஊன்ற வேண்டிய நாற்று.
பேச்சு வழக்கில் 'நாத்து ஊனியாச்சா?' என்றும் கேட்பர்.
கணவனின் தாயோ / மூத்த சகோதரியோ(மதனியாள்/ மைத்துனியாள்) ; எடுத்து ஊன்ற வேண்டிய நாற்று போன்றவரில்லை . அவர்களுக்கெல்லாம் ஏற்கெனவே திருமணம் முடிந்து இருக்கும்.(அக்கா திருமணத்திற்கு முன்னர் தம்பி திருமணம் செய்து கொள்ள மாட்டான் ...அந்தக்காலம் ...) 

கொழுந்திகளை ஏன் நாத்தனார் என்று அழைப்பதில்லை என்றால்;...
கொழுந்தி என்று யாரை அழைப்போம்?
நீண்டகால அயல்நாட்டு வாழ்க்கையில் அது சரியாக நினைவிருக்கிறதா?
யாருக்குக் கொழுந்தி என்று சிந்தித்துப் பாருங்கள் ......ஒரு ஆடவனுக்குத் தன் மனைவியின் தங்கையே கொழுந்தி.
புது மாப்பிள்ளைக்கு .......கொழுநனுக்கு (தலைவனுக்கு)........ தன் மனைவியின் தங்கை கொழுந்தியாகும்(மனைவியாகும்) தகுதி படைத்தவள்.
இதனால் தான் அந்தக்காலம் அக்கா & மச்சான் இருக்கும் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க விடமாட்டார்கள்.(இப்போது எல்லாம் தலைகீழ்...) 

புதிதாகக் குடித்தனம் தொடங்கும் பெண் தன் கணவனின் திருமணமாகாத தங்கையை / திருமணத்திற்குக் காத்திருக்கும் தங்கையை / மணப்பருவம் எய்தாத தங்கையை; நாற்றைப் போற்றுவது போலப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். எவ்வளவு அருமையாக உறவுமுறைப்பெயர் வைத்திருக்கிறார்கள் அந்தக் காலத்தில் ....
கொழுந்தியைப் பற்றி புதுமாப்பிள்ளை கவலைப் படவே கூடாது...... தன்  மனைவியைப் பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். அதனால் தான் கொழுந்தியை நாத்தி என்று அழைப்பதில்லை.
சக
பெண்கள் எல்லோரும் இன்னொரு வீடு செல்பவர். ஆனால், எல்லோரும் நாற்றனார் எனப் படுவதில்லை. 
ஆம். காரணம் மேலே சொல்லி இருக்கிறேன் . நாற்றனார் இல்லை. நாத்தனார் ....பேச்சு வழக்கில் நாத்*னா (*=உகரம் இல்லை; பின் உயிரொலி)
மேலும், நாற்று நடுவது வழக்கம். நாற்று நடவு முடிந்ததா? நாற்று நட்டாச்சா? கேட்கிறோம்.
நாற்று ஊன்றியாச்சு என்பதில்லை.
எங்கள் வட்டாரத்தில் 'ஊணியாச்சா' என்றும் கேட்பர்.
 மேலும் இளங்கோ அடிகள் குறிப்பிடுவது நாத்தூண். நாத்து + ஊண் (உண்- வினைச்சொல்).
இல்லை 
நாற்று + ஊன் என்றால்,  பல எழுத்துப் பிழையுடன் "நாத்தூண்" என இளங்கோ அடிகள் செந்தமிழ்க் காப்பியம் செய்வாரா?
பேச்சு வழக்கில் /ன்/ , /ண் / ஒலிகள்  மாறி வழங்குவது உண்டு. 
நாத்தூண் = நா+ தூண் என்ற விளக்கமும் பார்த்தேன். அது பொருந்தாது.
ஆம் ,பொருந்தாது .
திருமணமாகிப் போனவுடன் பிறந்த வீட்டுப் பெருமையை நிலைநாட்ட நினைத்தால் சுவரில் அடித்த பந்து மாதிரி திரும்பி வரவேண்டியது தான்  .
 தூண் தமிழா"
ஆம் .அப்படித்தான் தோன்றுகிறது .
சிலப்பதிகாரத்தில், இளங்கோ அடிகள், நாத்தூண் நங்கை என்று குறிப்பதால்,  புகுந்த வீட்டார், பிறந்தவீட்டைத் தாழ்த்திப் பேசினால், புதுப்பெண் தன் வீட்டுப் பெருமையைத் தூணாக நின்று காப்பவள்"
நா. கணேசன்
நான் அந்த மொழியியல் கட்டுரையைப் படிக்கப் போகிறேன். படித்து முடித்த பிறகு கருத்துரைக்கிறேன் .
சக 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
May 20, 2019, 10:24:59 AM5/20/19
to மின்தமிழ், vallamai
On Mon, May 20, 2019 at 7:45 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

கொழுந்தியைப் பற்றி புதுமாப்பிள்ளை கவலைப் படவே கூடாது...... தன்  மனைவியைப் பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். அதனால் தான் கொழுந்தியை நாத்தி என்று அழைப்பதில்லை.


பொதுவாக, நாத்தனார் கணவனின் தமக்கை தான்.  ஆனால், கணவனின் தங்கைக்கும் இப்பெயர் வருதல் உண்டு.

நாட்டுப்பாடல் (மலையருவி, கிவாஜ)
"
      சின்னக்குட்டி நாத்தனாள் - ஏலங்கிடி லேலோ
      சில்லறையை மாத்தினாள் - ஏலங்கிடி லேலோ [4]

    என்பதில் மாத்தினாள் என்பதை மாற்றினாள் என்று திருத்தினாலும் எதுகையழகு இல்லாமற் போய்விடும்."
-----------

நாத்தூண் :: நாத்தனார் - அடிப்படை உறவு கொண்ட சொற்கள். பூணூல் :: பூணல் என வ்ழங்குதற்போல,
இலக்கிய வழக்கு நாத்தூண்நங்கை என்பதில் நாத்தூண் > நாத்தனார் ஆகியுள்ளது. மலையாளத்தில் நாத்தூண் இருக்கிறது.

நாத்தூண் என்று இளங்கோ அடிகள் குறிப்பிடும் சொல்லில் நாற்று என்பது வேர்ச்சொல்லாக ஏற்க முடியவில்லை.
அவ்வாறாயின், நாற்றூன் என்று பாடியிருப்பார். அவர் பாடியிருப்பது நாத்தூண்நங்கை. பசுமாடு, போஸ்ட்கம்பம் போன்றதான ஆட்சி.

இளங்கோ மட்டுமில்லை. நாற்றி, நாற்றனார், நாற்றூன் என்றெல்லாம் எங்கும் தமிழிலேயே இல்லை.
விதையை ஊன்றுவோம். நாற்றை நடுவோம். நாற்றுநடவு.

நா. கணேசன்
 

kanmani tamil

unread,
May 20, 2019, 11:07:43 AM5/20/19
to mintamil
---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Mon, 20 May 2019 8:36 pm
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] நாத்தி விளக்கு
To: vallamai <vall...@googlegroups.com>


இல்லை. நாத்தனார் / நாத்தி கணவனின் தங்கையை மட்டும் தான் குறிக்கும். 
கணவனின் தமக்கை மதனியாள்.(மைத்துனியாள்)
இந்த விஷயத்தில் நிச்சயமாக உங்களைவிட நான் சரியாகத் தான் செல்வேன். ஏனெனில் நான் பெண் என்பதால் எனக்குத் தான் அந்த உறவுகள் இருக்கின்றன. 

ஊனுதல் என்பது வட்டார வழக்கு என்று ஏற்கனவே சொல்லி விட்டேன். வழக்கைப் பயன்படுத்துபவள் மதுரையைச் சேர்ந்த மாதரி. உங்கள் கொங்கு நாட்டுக்காரி இல்லை. 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 20, 2019, 11:57:09 AM5/20/19
to mintamil
On Sat, 18 May 2019 at 23:54, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
///
காட்டுமிராண்டிகள் தங்களது முன்னோர்கள் கடைப்பிடித்த சடங்குகளைத் தவறாமல் கடைப்பிடிப்பதைப் பற்றிக் கவலைப் படுகின்றனர்.
///

அட அப்படியா !!!!

கூடிய விரைவில் கல்திட்டை, முதுமக்கள்தாழி எல்லாம் வழக்கத்தில் வந்துவிடும் என்று சொல்லுங்கள்.

கல்திட்டை, முதுமக்கள்தாழி என்று அப்படியே அச்சு அசலாக இல்லை.  ஆனால்  சிமிண்ட் தொட்டிகட்டி அதனுள் அடக்கம் செய்கின்றனர்.
அதாவது, கல்லும் மண்சட்டியும் இல்லாமல் சிமிண்ட் தொட்டியில் கடைப்பிடிக்கின்றனர்...

அவர்கள் உயிருடன் இருக்கும்போதே, அவர்களை அடக்கம்செய்ய விரும்பும் இடத்தில் ஒரு தொட்டியைக் கட்டிவைத்துக் கொண்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்தத் தொட்டியில் உயிருடன் அமர்ந்து தியானமும் செய்கின்றனர்.  
சிங்கம்புணரி செல்லும் போது வாய்ப்பு கிடைத்தால் படம் எடுத்துப் பதிவு செய்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்.
கிருத்துவர்கள் மரப்பெட்டியில் அடக்கம் செய்வதும் இவ்வகையில் அடங்கும்தானே  

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 20, 2019, 12:28:13 PM5/20/19
to mintamil
எனக்கு ஒரேயொரு ஐயம் மட்டும்.
அறிந்தோர் அன்புடன் கூறி உதவிட வேண்டுகிறேன்..

On Sat, 18 May 2019 at 22:22, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
6. கொலைக்களக் காதை



20

சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்

நெடியா தளிமின் நீரெனக் கூற
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்
நாத்தனாருடன் சமையல் செய்ய வேண்டுமா?
மதுரையில் மச்சானும் மச்சானும் சேர்ந்துதான் தண்ணியடிப்பார்கள், அதுபோல் நாத்தனாரும் நாத்தனாரும் சேர்ந்துதான் சமையல் செய்ய வேண்டுமா?

அன்பன்
கி.காளைராசன் 



18
உரை
21

         சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் - அடிகள் சாவக நோன்புடையராகலான், நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம் அடிசில் ஆக்குதற்கு - நாத்தூணாகிய ஐயையொடு பகற்பொழுதே உண்ணும் உணவினைச் சமைப்பதற்கு, அமைந்த நற்கலங்கள் நெடியாது அளிமின் நீர் எனக் கூற - பொருந்திய நல்ல கலங்களை நீட்டியாது நீவிர் அளிமின் என்று சொல்ல ;

      சாவகநோன்பி - துறவாது விரதங்காப்போர். அடிகள் என்றது ஈண்டுக் கோவலனை. நாத்தூண் - கணவனுடன் பிறந்தாள். நாத்தூணாகிய நங்கை. இனி, நாத்தூணும் நங்கையும் எனலுமாம் ; ஈண்டு நாத்தூண் - ஐயை ; நங்கை - கண்ணகி, நாள்வழிப்படூஉ மடிசில் - காலத்திலே ஆக்கும் அடிசில் எனலுமமையும். நற்கலம் - புதுக்கலம். அமைந்த நற்கலம் என்றது தாங்கள் ஆளும் கலமன்றி மேன்மக்களாளும் கலத்தினை. நெடித்தல் - நீட்டித்தல்

       இடைக்குலமடந்தை ஆய்ச்சியர் தம்மொடு மனைப்படுத்துக் கூடி நீராட்டித் தொழுது (என்று) அளிமின் எனக் கூற என்க.

Source:http://www.tamilvu.org/slet/l3100/l3100uri.jsp?slno=1800&subid=180005

-- 

N. Ganesan

unread,
May 20, 2019, 1:16:19 PM5/20/19
to மின்தமிழ், vallamai
On Mon, May 20, 2019 at 9:07 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Mon, 20 May 2019 8:36 pm
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] நாத்தி விளக்கு
To: vallamai <vall...@googlegroups.com>


இல்லை. நாத்தனார் / நாத்தி கணவனின் தங்கையை மட்டும் தான் குறிக்கும். 
கணவனின் தமக்கை மதனியாள்.(மைத்துனியாள்)
இந்த விஷயத்தில் நிச்சயமாக உங்களைவிட நான் சரியாகத் தான் செல்வேன். ஏனெனில் நான் பெண் என்பதால் எனக்குத் தான் அந்த உறவுகள் இருக்கின்றன. 


நாத்தனார் என்றால் கணவனின் தமக்கையைச் சொல்லுதலும் உண்டு பல சமூகங்களில். எந்த அகராதியிலும் பாருங்கள்:
நாத்தனானார் : கணவனின் உடன்பிறந்தாள் என்றுதான் இருக்கும். நாத்தனார் = கணவனின் தங்கை என்றிராது.
"நாத்தனார் /  நங்கையாள் - நாத்தி என்றால் கணவன் உடைய அக்கா / தங்கை." 



நாத்தனார் என்ற கதையில் வரும் கந்தசாமியின் அக்கா கங்கம்மா, தம்பி மனைவி வஞ்சியைக் காரணமின்றித் தொல்லைப்படுத்துவதாக ஆசிரியர் படைத்துள்ளார்.

நா. கணேசன்


ஊனுதல் என்பது வட்டார வழக்கு என்று ஏற்கனவே சொல்லி விட்டேன். வழக்கைப் பயன்படுத்துபவள் மதுரையைச் சேர்ந்த மாதரி. உங்கள் கொங்கு நாட்டுக்காரி இல்லை. 

சக 

On Mon, 20 May 2019 7:54 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:


On Mon, May 20, 2019 at 7:45 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

கொழுந்தியைப் பற்றி புதுமாப்பிள்ளை கவலைப் படவே கூடாது...... தன்  மனைவியைப் பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். அதனால் தான் கொழுந்தியை நாத்தி என்று அழைப்பதில்லை.


பொதுவாக, நாத்தனார் கணவனின் தமக்கை தான்.  ஆனால், கணவனின் தங்கைக்கும் இப்பெயர் வருதல் உண்டு.

நாட்டுப்பாடல் (மலையருவி, கிவாஜ)
"
      சின்னக்குட்டி நாத்தனாள் - ஏலங்கிடி லேலோ
      சில்லறையை மாத்தினாள் - ஏலங்கிடி லேலோ [4]

    என்பதில் மாத்தினாள் என்பதை மாற்றினாள் என்று திருத்தினாலும் எதுகையழகு இல்லாமற் போய்விடும்."
-----------

நாத்தூண் :: நாத்தனார் - அடிப்படை உறவு கொண்ட சொற்கள். பூணூல் :: பூணல் என வ்ழங்குதற்போல,
இலக்கிய வழக்கு நாத்தூண்நங்கை என்பதில் நாத்தூண் > நாத்தனார் ஆகியுள்ளது. மலையாளத்தில் நாத்தூண் இருக்கிறது.

நாத்தூண் என்று இளங்கோ அடிகள் குறிப்பிடும் சொல்லில் நாற்று என்பது வேர்ச்சொல்லாக ஏற்க முடியவில்லை.
அவ்வாறாயின், நாற்றூன் என்று பாடியிருப்பார். அவர் பாடியிருப்பது நாத்தூண்நங்கை. பசுமாடு, போஸ்ட்கம்பம் போன்றதான ஆட்சி.

இளங்கோ மட்டுமில்லை. நாற்றி, நாற்றனார், நாற்றூன் என்றெல்லாம் எங்கும் தமிழிலேயே இல்லை.
விதையை ஊன்றுவோம். நாற்றை நடுவோம். நாற்றுநடவு.

நா. கணேசன்
 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUe-CkUGtLwFG%2BmRy2%3DnXjrtt1MniDwPBvtwO0swEY9Ghw%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcueM34JfmX8BgmXG_d8%2Bd7hr%2BE0L8Nw7snFHVF7Mi0f3A%40mail.gmail.com.

nkantan r

unread,
May 20, 2019, 3:22:17 PM5/20/19
to மின்தமிழ்
மதனி யார்? கணவனின் தமக்கையா? அண்ணனின் மனைவியா?

தமிழ்-சன்ஸ்க்ரித உறவுமுறை பட்டியல் நாளை.

rnk

தாத்தா எனும் சொல் சங்க இலக்கியத்தில் உண்டா?

பாட்டன்-பாட்டி ...

தேமொழி

unread,
May 20, 2019, 11:48:09 PM5/20/19
to மின்தமிழ்
////

நாத்தனாருடன் சமையல் செய்ய வேண்டுமா?
மதுரையில் மச்சானும் மச்சானும் சேர்ந்துதான் தண்ணியடிப்பார்கள், அதுபோல் நாத்தனாரும் நாத்தனாரும் சேர்ந்துதான் சமையல் செய்ய வேண்டுமா?
////

எக்காலத்திலும் பெண்கள் ஆக்கபூர்வமாக செயல்படுகிறார்கள் என்பது இதன் மூலம் பெறப்படுகிறது.

சமைக்கும் பெண்ணுக்கு கூட மாட ஒத்தாசை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

இது அன்று மட்டுமல்ல. இன்றும் உண்டு.
விருந்தாளியாக குடும்பத்துடன் ஒரு வீட்டிற்குப் போங்கள். ஆண்கள் அரச பரம்பரை போல தொலைக்காட்சி முன் அமர்ந்து செய்தி பார்த்துக் கொண்டு அரசியல் பேசிக் கொண்டிருப்பார்கள்.
வீட்டுக்கு விருந்தாளியாக வந்த பெண்மணி ஐயோ பாவம் வீட்டுப் பெண்மணி தனியாக சமைக்கிறாரே என்ற குற்ற உணர்வு தனது மனத்தை வாட்ட தன்னால் முடியாவிட்டாலும் சமையலறைக்குள் நுழைந்து விடுவார். வேண்டாம் வேண்டாம் என்று எவ்வளவு தடுத்தாலும் காய் வெட்ட உதவியாவது செய்வேன் என அடம் பிடிப்பார்.

அவ்வாறு எந்த ஆணும் அடுத்த ஆணின் வீட்டில் இறங்கி உதவி செய்யமாட்டார். ஒரு அவசரத்துக்கு தெருமுனை கடைக்குப் போய் ஆவின் பால் ஒரு பாக்கெட் வாங்கி வந்து கொடுங்களேன் என்று அனுப்பிப் பாருங்கள். அடுத்தமுறை உங்கள் வீட்டிற்கு வர அவருக்கு வழி மறந்துவிடும்.

ஒரு ஆய்வு நோக்கில் பழைய ... 18..19... ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியா காலத்து தமிழக ... சென்னை நகர... மதுரை நகர மக்கள் இருக்கும் ... படங்களை எடுத்து, அப்படங்களில் பெண்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ... ஆண்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று தொகுத்து ஒரு கட்டுரை வரையவும்.

செல்வன்

unread,
May 21, 2019, 12:41:51 AM5/21/19
to mintamil
-- 


இதே வீட்டை காலி செய்யணும், பர்னிச்சரை அகற்றணும், கார் பிரெக் டவுன் என்றால் ஆண்கள் வந்து உதவுவார்களா, பெண்கள் வந்து உதவுவார்களா?

மதுரையில் கைவண்டி, தள்ளுவண்டி இழுக்கும் ஆண்கள், கூலிக்காரர்கள், விவசாயிகள், உடல் உழைப்பு தொழிலாளர் யாரும் ப்ரிட்டிஷ் ஆட்சியில் இல்லை போல :-)



 

--

செல்வன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 21, 2019, 12:45:49 AM5/21/19
to mintamil
On Tue, 21 May 2019 at 09:18, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
////
நாத்தனாருடன் சமையல் செய்ய வேண்டுமா?
மதுரையில் மச்சானும் மச்சானும் சேர்ந்துதான் தண்ணியடிப்பார்கள், அதுபோல் நாத்தனாரும் நாத்தனாரும் சேர்ந்துதான் சமையல் செய்ய வேண்டுமா?
////

எக்காலத்திலும் பெண்கள் ஆக்கபூர்வமாக செயல்படுகிறார்கள் என்பது இதன் மூலம் பெறப்படுகிறது.

சமைக்கும் பெண்ணுக்கு கூட மாட ஒத்தாசை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

இது அன்று மட்டுமல்ல.  இன்றும் உண்டு.
விருந்தாளியாக குடும்பத்துடன் ஒரு வீட்டிற்குப்  போங்கள்.  ஆண்கள் அரச பரம்பரை போல தொலைக்காட்சி முன் அமர்ந்து செய்தி பார்த்துக் கொண்டு அரசியல் பேசிக் கொண்டிருப்பார்கள்.
வீட்டுக்கு விருந்தாளியாக வந்த பெண்மணி ஐயோ பாவம் வீட்டுப் பெண்மணி தனியாக சமைக்கிறாரே என்ற குற்ற உணர்வு தனது மனத்தை வாட்ட தன்னால் முடியாவிட்டாலும் சமையலறைக்குள் நுழைந்து விடுவார். வேண்டாம் வேண்டாம் என்று எவ்வளவு தடுத்தாலும்  காய் வெட்ட உதவியாவது செய்வேன் என அடம் பிடிப்பார்.

அவ்வாறு எந்த ஆணும் அடுத்த ஆணின் வீட்டில் இறங்கி உதவி செய்யமாட்டார். 
பர்மாவிலும் இப்படித்தான்.
புதிதாக வந்துள்ளார், அவருடன் பேசிக்கொண்டிருப்போம் என்றில்லாமல், விருந்து உபச்சாரத்திற்காக அடுப்படிக்குச் சென்று விடுவார்கள். சிலர் சாப்பாட்டிற்கான சமையல் செய்யத் தொடங்கி விடுவார்கள்.  வாங்க, பேசிக்கொண்டிருப்போம், சாப்பாட்டிற்குக் கடைக்குச் செல்வோம் என்று சொன்னால் கேட்கமாட்டார்கள்.  என் கையால் சமைத்துப் போடுகிறேன், சாப்பிடுங்கள் என்பார்கள். இது எனக்குச் சற்று வருத்தமாகவே இருக்கும்.

ஒரு அவசரத்துக்கு தெருமுனை கடைக்குப் போய் ஆவின் பால் ஒரு பாக்கெட் வாங்கி வந்து கொடுங்களேன் என்று அனுப்பிப் பாருங்கள்.  அடுத்தமுறை உங்கள் வீட்டிற்கு வர அவருக்கு வழி மறந்துவிடும்.
 

ஒரு ஆய்வு நோக்கில் பழைய ... 18..19... ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியா காலத்து தமிழக ... சென்னை நகர... மதுரை நகர மக்கள் இருக்கும் ... படங்களை எடுத்து,  அப்படங்களில் பெண்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ... ஆண்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று தொகுத்து ஒரு கட்டுரை வரையவும்.
பல்கலைக்கழகம்தான் கேள்வி கேட்கும். மாணவர் ஆய்வாளர்கள் கட்டுரை வரைய வேண்டும்.
மாறாக,
மாணவர் ஆய்வாளர்கள் கட்டுரை வரையச் சொல்லிப் பல்கலைக்கழகத்திடம் கேட்க முடியாது, கேட்கவும் கூடாது.

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 21, 2019, 12:52:50 AM5/21/19
to mintamil
உதாரணமாக அறநிலையத்துறை அதிகாரிகளுக்குக் கார் வாங்க அனுமதி கொடுக்கும் போதே, அந்தச் செலவுத்தொகையை கோயில்உண்டியல் பணத்திலிருந்து எடுத்துச் செலவு செய்யலாம் என்று நிதிஒதுக்கீடு விபரத்தையும் சொல்லிவிடுவார்கள்.   அதுபோல்,  
ஒரு ஆய்வு நோக்கில் பழைய ... 18..19... ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியா காலத்து தமிழக ... சென்னை நகர... மதுரை நகர மக்கள் இருக்கும் ... படங்களை எடுத்து,  அப்படங்களில் பெண்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ... ஆண்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று தொகுத்து ஒரு கட்டுரை வரைய வேண்டும் என ஒரு திட்டத்தை அறிவிக்கும் போதே, அந்தத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான செலவுத்தொகை ஒதுக்கீடும்  சொல்லிவிட வேண்டுமல்லவா?
நிதிஒதுக்கீடு செய்யப்படாத திட்டத்தை எப்படிச் செயல்படுத்த முடியும்?

தேமொழி

unread,
May 21, 2019, 12:59:28 AM5/21/19
to மின்தமிழ்
///

பல்கலைக்கழகம்தான் கேள்வி கேட்கும். மாணவர் ஆய்வாளர்கள் கட்டுரை வரைய வேண்டும்.
மாறாக,
மாணவர் ஆய்வாளர்கள் கட்டுரை வரையச் சொல்லிப் பல்கலைக்கழகத்திடம் கேட்க முடியாது, கேட்கவும் கூடாது
///

இல்லை, எனது பட்டறிவு வேறு !!!

உனது ஆய்வுக் கேள்வி என்ன? எப்படி ஆய்வை அணுகி விடை சொல்வாய் என நான் படிக்கும் துறைகளில் வழி நடத்தினார்கள்...இந்தியாவிலும் அமெரிக்காவிலும்.

ஆய்வு செய்யும்பொழுது சீர் செய்து வழி நடத்துவார்கள். ஆய்வின் நோக்கத்தை தெளிவாக்கு. இது மிகப் பெரிய கேள்வி, முதலில் இந்தப் பகுதிக்கு காரணம் கண்டுபிடி. அதுவே பெரிய ஆய்வு.... இப்படி எல்லாம் சிந்திக்க வைப்பார்கள்.

கேள்வியை யாரும் எனக்கு கொடுத்ததில்லை. அதாவது நான் செய்தது போல யாரும் செய்ததில்லை.

N. Ganesan

unread,
May 21, 2019, 1:01:55 AM5/21/19
to மின்தமிழ்
My experience also. The main part of any PhD is defining the topic. ~NG
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 21, 2019, 1:13:25 AM5/21/19
to mintamil
On Sat, 18 May 2019 at 22:22, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
6. கொலைக்களக் காதை



20

சாவக நோன்பிக ளடிக ளாதலின்
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் 
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
நாத்து+ஊன் நங்கையொடு நாள்வழிப் படூஉம் 
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
அடிசில் ஆக்குதற்கு அமைந்த நற்கலங்கள் 

நெடியா தளிமின் நீரெனக் கூற
நெடியாது அளிமின் நீர் எனக் கூற

சாவக நோன்பிகள் அடிகள் ஆவார்.
அவர் உணவு உண்பதற்காக 
1) நாத்து ஊன் நங்கையொடு (சமையல்காரப் பெண்ணோடு)
2) அடிசில் ஆக்குதற்கு அமைந்த நல்கலங்கள் (சமையல் பாத்திரமும்)
விரைந்து கேட்கிறார்.  

இதில் சமையல் செய்யும் நங்கையை “நாத்துஊன் நங்கை“ என்ற அடைமொழியினால் குறிப்பிடுகிறார்.
நாத்து = இளம் பயிர்
ஊண் = உணவு
நங்கை = பெண்
நாத்தூண் நங்கை = இளம்பயிரை உணவாக உண்ணக்கூடிய பெண் 
நாத்தூண் நங்கை = சைவ உணவு உண்ணும் பெண் 

“சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் இளந்தளிர்களை உண்ணுகின்ற நங்கையொடு நாள்வழிப்படும் அடிசில் ஆக்குதற்கு அமைந்த நற்கலங்கள் நெடியாது அளிமின் நீர் எனக் கூற“

அதாவது “அடிகளுக்குச் சமைப்பவர் சைவஉணவு உண்ணும் பெண்ணாக இருக்கவேண்டும்,  அரிசிக்சோறு ஆக்குவதற்கு ஏற்ப நல்ல மண்பானைகளாக இருக்க வேண்டும்.  காலம் தாழ்த்தாமல் விரைவில் இவற்றை அளிக்க வேண்டும்” என்ற பொருள்தான் எனக்குப் புரிகிறது.

நாத்தூண் நங்கை என்றால் சைவஉணவு உண்ணும் சமையல்காரப்பெண் என்றுதான் பொருளாகிறது.  நாத்தனார் என்று பொருள்கொள்ளவது எப்படிச் சரியாகும்?

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 21, 2019, 1:20:46 AM5/21/19
to mintamil
பிழைத்திருத்தம்.  (ஊண் என்பதை ஊன் என்று தட்டச்சு செய்திருந்தேன்.)
6. கொலைக்களக் காதை

சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூற
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்   
நாத்து+ஊண் நங்கையொடு நாள்வழிப் படூஉம் 
அடிசில் ஆக்குதற்கு அமைந்த நற்கலங்கள் 
நெடியாது அளிமின் நீர் எனக் கூற

சாவக நோன்பிகள் அடிகள் ஆவார்.
அவர் உணவு உண்பதற்காக
1) நாத்து ஊண் நங்கையொடு (சமையல்காரப் பெண்ணோடு)

2) அடிசில் ஆக்குதற்கு அமைந்த நல்கலங்கள் (சமையல் பாத்திரமும்)
விரைந்து கேட்கிறார்.  

இதில் சமையல் செய்யும் நங்கையை “நாத்துஊண் நங்கை“ என்ற அடைமொழியினால் குறிப்பிடுகிறார்.

நாத்து = இளம் பயிர்
ஊண் = உணவு
நங்கை = பெண்
நாத்தூண் நங்கை = இளம்பயிரை உணவாக உண்ணக்கூடிய பெண்
நாத்தூண் நங்கை = சைவ உணவு உண்ணும் பெண்

“சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் இளந்தளிர்களை உண்ணுகின்ற நங்கையொடு நாள்வழிப்படும் அடிசில் ஆக்குதற்கு அமைந்த நற்கலங்கள் நெடியாது அளிமின் நீர் எனக் கூற“

அதாவது “அடிகளுக்குச் சமைப்பவர் சைவஉணவு உண்ணும் பெண்ணாக இருக்கவேண்டும்,  அரிசிக்சோறு ஆக்குவதற்கு ஏற்ப நல்ல மண்பானைகளாக இருக்க வேண்டும்.  காலம் தாழ்த்தாமல் விரைவில் இவற்றை அளிக்க வேண்டும்” என்ற பொருள்தான் எனக்குப் புரிகிறது.

நாத்தூண் நங்கை என்றால் சைவஉணவு உண்ணும் சமையல்காரப்பெண் என்றுதான் பொருளாகிறது.  நாத்தனார் என்று பொருள்கொள்ளவது எப்படிச் சரியாகும்?

தேமொழி

unread,
May 21, 2019, 1:41:10 AM5/21/19
to மின்தமிழ்
மைத்துனர் (மனைவி அல்லது கணவனுடன் பிறந்தான் என்பது)  மைத்துனி  போல 
நா தூண்>> நாத்தனார் >> நாதினி என்ற வழக்கும் இருந்து பிறகு வேறு திராவிட மொழி மக்கள் மட்டும் பயன்படும் நிலை இருந்திருக்குமோ என எண்ணி தேடியதில் 
இந்த நூல் கிடைத்தது 

தாயம்மாள் அறவாணன், 1987, உறவுமுறைகள் ஓர் ஆய்வு, பாரிநிலையம், சென்னை. 3.

kanmani tamil

unread,
May 21, 2019, 2:46:55 AM5/21/19
to mintamil, vallamai

///நண்பர் பெரி. சந்திராவின் ஆய்வுக் கட்டுரையைப் படித்துப்பாருங்கள்: http://www.laurasianacademy.com/pleonastic.pdf  ///

நன்றாகவே படித்துப் பார்த்தேன்.
இனநிரை, மாகவிசும்பு, ஊர்கோள், துணங்கறை , வழித்தடம் , சுற்றுச்சூழல் , ஊமக்கோட்டான் , தகப்பன் , வாய்க்கால் , கலமலக்கு போன்ற 
சொற்கள் தமிழில் ஒருபொருட் பன்மொழிகளாகச் சேர்ந்து வழங்குகின்றன. இதை அடியொட்டி நீங்கள் " நாத்தூண் நங்கை " ஒருபொருட் பன்மொழி
 என்கிறீர்கள்.  அவ்வளவு தானே ! அதற்காக  நாத்தூண் <<<   nanāndṛ   என்ற வடசொல்லில் இருந்து பிறந்தது என்று கூறப் புகுந்தால் 
அதற்கான மொழியியல் விதிகளைக் கூறுங்கள். உருபொலியனியல் மாற்றங்களை ஒவ்வொரு படிநிலையாக எடுத்துக் காட்டுங்கள். அப்படிக் கூற 
வழியில்லை என்றால் உங்கள் கருதுகோள் தவறு.

இக்கட்டுரை கூறும் 'சோனமாரி' குறித்தும் ' சார்க்கோட / கார்க்கோட' குறித்தும் எனக்குக் கருத்து  வேறுபாடு உண்டு.
சக 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
May 21, 2019, 8:36:24 AM5/21/19
to மின்தமிழ், vallamai
On Mon, May 20, 2019 at 10:28 AM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
எனக்கு ஒரேயொரு ஐயம் மட்டும்.
அறிந்தோர் அன்புடன் கூறி உதவிட வேண்டுகிறேன்..

On Sat, 18 May 2019 at 22:22, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
6. கொலைக்களக் காதை



20

சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்

நெடியா தளிமின் நீரெனக் கூற
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்
நாத்தனாருடன் சமையல் செய்ய வேண்டுமா?
மதுரையில் மச்சானும் மச்சானும் சேர்ந்துதான் தண்ணியடிப்பார்கள், அதுபோல் நாத்தனாரும் நாத்தனாரும் சேர்ந்துதான் சமையல் செய்ய வேண்டுமா?

கண்ணகிக்கு கலியாணத்தின் போது வயது 12. கோவலன் 16. ஒரு 6,7 வருஷம் கூடி வாழ்ந்தனர் என்றாலும்,
மாதவி எனும் கணிகையுடன் ஒரு வருஷம் தான். அதற்குள் மணிமேகலை பிறப்பு.

எனவே, இடைச்சேரிக்கு வரும்போது (மதுரை) கண்ணகி ஒரு18 (அ) 20 வயது கொண்ட இளம்பெண். எல்லாம் துறந்து, வளமனை வாழ்க்கை இழந்து வருகின்றனர் கோவல-கண்ணகி தம்பதிகள்.
எனவே, அவர்களுக்கு துணையாக, ஐயை என்னும் தன் மகளை நியமிக்கிறாள் மாதரி. ராமாயணத்தில் குகன் என்னும் வேடன் இராமனுக்கு அண்ணன், சீதை அவனுக்குக் கொழுந்தியா
எனப் பாடுகிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர். அது போலே, இளம்பெண் கண்ணகிக்கு வயதில் மூத்த நாத்தனார் ஆக, ஐயையைப் படைக்கிறார் இளங்கோ அடிகள்.
அந்த ஊரோ, இடமோ தெரியாத கண்ணகிக்கு உதவியாக ஐயை இருக்கிறாள். அவள் வயது சுமார் ~40 எனக் கொள்ளலாம். அடுப்படியில் எதெது எங்கே என்றெல்லாம் காட்டவும்,
கைவேலைக்கும் உதவியாக ஐயை கண்ணகிக்கு ஒரு பாத்திரப்படைப்பு. ஐயை என்றாலே துர்க்கையின் பெயர். அவள் மூத்த தாய்த்தெய்வம், பழையோள். எனவே அப்பெயர்
வழங்கியுள்ளார் அடிகள் (ஐ ஐயன் - ஐயை). கணவனின் அக்காள் ஐயை என்பதால் கண்ணகிக்கு மூத்த நாத்தனார். நாத்தூண் என்பது நாத்தனார் என்பதன் பழைய வடிவம். மலையாளத்தில் உள்ளது.
நாத்தனாருக்கும் நாற்றுக்கும் தொடர்பில்லை. நாத்தனார் கணவனுடைய சகோதரி. நாற்றனார் எல்லாப் பெண்களுக்கும் பொருந்துமாறு ஆகிவிடும்.

குகனுக்கு சீதை கொழுந்தியா. கண்ணகிக்கு ஐயை நாத்தூண்நங்கை (= நங்கையாள்).

நா. கணேசன்

"தமிழச்சி ‘ஆருகன்’ என்ற கவிதையில் ஆருகன் என்றால் நண்பன் என்று பொருள் தந்திருப்பதைக் குறிப்பிட வேண்டும். ‘ஒரு பெண் – ஒரு கணவன்’ என்ற கருத்தாக்கம் சிதைவு படாமல் சில பெண் கவிஞர்கள் பரிபாஷையைக்கூடக் கையாள்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். யதார்த்த உலகின் சித்தாந்தங்களைக் கேள்விக்கு உள்ளாக்குவது போல ஆண்-பெண் உறவு பற்றிய சமுதாயக் கட்டுப்பாடுகளைக் கவிதையில் மீறுவதில்லை என்றே தோன்றுகிறது. மனுஷ்யபுத்திரன் கவிதை ஒன்றில் சிநேகிதியை சகோதரி என்று குறிப்பிட வேண்டியதைப் பற்றிய சங்கடம் அழகாகக் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்ச் சமுதாயம் வெளியார்களையும் குடும்ப உறவின் நிழல் மனிதர்களாகவே பார்க்கிறது. அதுதான் அதற்குப் பாதுகாப்பானதாகத் தெரிகிறது. இராமாயணத்தில் குகனுக்கு இலட்சுமணனையும் சீதையையும் இராமன் அறிமுகப்படுத்தியதைப் பற்றி சீதை நினைவுகூர்வதாக ஒரு கலிவிருத்தம் உண்டு. அது:

ஆழநீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு எம்பி நின்தம்பி நீ
தோழன். மங்கை கொழுந்தி எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி மயங்குவாள்.

சீதையைக் கொழுந்தியாளாகக் கருதும்படி இராமன் சொன்னதாக சீதை கூறுகிறாள். இந்தச் செய்யுளில் தோழன் என்ற சொல் சீதையால் சொல்லப்படுகிறது. இன்றும் தமிழகத்தில் அண்ணன், அண்ணி, தம்பி, அக்காள், தங்கச்சி முதலான உறவுப் பெயர் வளையத்திலேயே வெளியார்களும் கொண்டுவரப்படுகிறார்கள். ‘திக்குத் தெரியாத காட்டில்’ என்ற பாடலில் ஓர் அந்நியனை எதிர்கொண்ட நாயகி அவனிடம் பேசத் தொடங்கும்போது ‘அண்ணா’ என்றே கூப்பிடுகிறாள். குடும்பத்துக்கும் குலத்துக்கும் வெளியே ஆண்-பெண் சந்திப்பது இருபதாம் நூற்றாண்டில்தான் தேவைப்பட்டிருக்கிறது. பொது இடங்கள், பணி இடங்கள் இவற்றில் ஆண்-பெண்களிடம் உருவாகும் உறவை குடும்ப உறவாக மாற்றாமல் ஆனால் அந்தப் பெயரிலேயே வருணித்து பாதுகாப்பில் வைக்க சமூகங்கள் முயல்கின்றன. சிநேகிதியைக் கல்யாணத் துணையாக மாற்றாமலேயே ஆண், பெண் தோழமை சாத்தியம்தான். ஆனால் இதைக் கவிதை விவாத நிலையில் வைக்கிறது." - ஞானக்கூத்தன்

 

அன்பன்
கி.காளைராசன் 



18
உரை
21

         சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் - அடிகள் சாவக நோன்புடையராகலான், நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம் அடிசில் ஆக்குதற்கு - நாத்தூணாகிய ஐயையொடு பகற்பொழுதே உண்ணும் உணவினைச் சமைப்பதற்கு, அமைந்த நற்கலங்கள் நெடியாது அளிமின் நீர் எனக் கூற - பொருந்திய நல்ல கலங்களை நீட்டியாது நீவிர் அளிமின் என்று சொல்ல ;

      சாவகநோன்பி - துறவாது விரதங்காப்போர். அடிகள் என்றது ஈண்டுக் கோவலனை. நாத்தூண் - கணவனுடன் பிறந்தாள். நாத்தூணாகிய நங்கை. இனி, நாத்தூணும் நங்கையும் எனலுமாம் ; ஈண்டு நாத்தூண் - ஐயை ; நங்கை - கண்ணகி, நாள்வழிப்படூஉ மடிசில் - காலத்திலே ஆக்கும் அடிசில் எனலுமமையும். நற்கலம் - புதுக்கலம். அமைந்த நற்கலம் என்றது தாங்கள் ஆளும் கலமன்றி மேன்மக்களாளும் கலத்தினை. நெடித்தல் - நீட்டித்தல்

       இடைக்குலமடந்தை ஆய்ச்சியர் தம்மொடு மனைப்படுத்துக் கூடி நீராட்டித் தொழுது (என்று) அளிமின் எனக் கூற என்க.

Source:http://www.tamilvu.org/slet/l3100/l3100uri.jsp?slno=1800&subid=180005

-- 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
May 26, 2019, 9:38:36 AM5/26/19
to மின்தமிழ்
On Mon, May 20, 2019 at 6:16 AM Pandiyaraja Paramasivam <pipi...@gmail.com> wrote:
"வடசொல்லை தமிழ்ச் சொல் என்று காட்ட வரும் இவ்விளக்கங்கள் பொருத்தமாக இல்லை."
எதை எடுத்தாலும் அதனை வடசொல் என்று கூறும் கனேசனாரின் விளக்கம்தான் பொருத்தமாக இல்லை.
ப. பாண்டியராஜா

நாற்று என்பதற்கும், நாத்தனார்/நாத்தூண்நங்கை என்பதற்கும் ஒரு தொடர்பும் காணோம்.
அப்படிப் பார்த்தால் எல்லாப் பெண்களுமே நாற்றனார் என அழைக்கப்பட்டிருப்பர். அவ்வாறு இல்லையே.

உங்கள் உறவினர், திரு. வீ. ப, கா. சுந்தரம் பாவாணரிடம் விளக்கியதை என்னில்லத்தில்
இருந்தபோது விளக்கினார்கள். அவ்வுதாரணத்தை அடுத்த மடலில் தருகிறேன்.

நா. கணேசன்
 

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 27, 2019, 1:49:00 AM5/27/19
to mintamil


On 26-May-2019 7:08 PM, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:


On Mon, May 20, 2019 at 6:16 AM Pandiyaraja Paramasivam <pipi...@gmail.com> wrote:
"வடசொல்லை தமிழ்ச் சொல் என்று காட்ட வரும் இவ்விளக்கங்கள் பொருத்தமாக இல்லை."
எதை எடுத்தாலும் அதனை வடசொல் என்று கூறும் கனேசனாரின் விளக்கம்தான் பொருத்தமாக இல்லை.
ப. பாண்டியராஜா

நாற்று என்பதற்கும், நாத்தனார்/நாத்தூண்நங்கை என்பதற்கும் ஒரு தொடர்பும் காணோம்.

நாத்தனார் என்பதற்கும்,
நாத்தூண்நங்கை என்பதற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதே எனது கருத்து.

நாத்தூண் = நாத்து + ஊண் = சைவ உணவு
நாத்தூண் நங்கை = சைவ உணவு நங்கை
என்று பொருள் கொள்கிறேன்.

அன்பன்
கி. காளைராசன்



அப்படிப் பார்த்தால் எல்லாப் பெண்களுமே நாற்றனார் என அழைக்கப்பட்டிருப்பர். அவ்வாறு இல்லையே.

உங்கள் உறவினர், திரு. வீ. ப, கா. சுந்தரம் பாவாணரிடம் விளக்கியதை என்னில்லத்தில்
இருந்தபோது விளக்கினார்கள். அவ்வுதாரணத்தை அடுத்த மடலில் தருகிறேன்.

நா. கணேசன்
 

On Mon, 20 May, 2019, 17:31 kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:


---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Mon, May 20, 2019 at 3:11 PM
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] நாத்தி விளக்கு
To: vallamai <vall...@googlegroups.com>


pleonastic compound என்றால் ஒருபொருட் பன்மொழியா ?
சக 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUcDv%3DnYb8LLazX9z3Qg05d4te3vOw_ow7ej3ad7fSx_Jw%40mail.gmail.com.

N. Ganesan

unread,
May 27, 2019, 9:16:26 AM5/27/19
to மின்தமிழ், vallamai
On Sun, May 26, 2019 at 11:48 PM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:


On 26-May-2019 7:08 PM, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:


On Mon, May 20, 2019 at 6:16 AM Pandiyaraja Paramasivam <pipi...@gmail.com> wrote:
"வடசொல்லை தமிழ்ச் சொல் என்று காட்ட வரும் இவ்விளக்கங்கள் பொருத்தமாக இல்லை."
எதை எடுத்தாலும் அதனை வடசொல் என்று கூறும் கனேசனாரின் விளக்கம்தான் பொருத்தமாக இல்லை.
ப. பாண்டியராஜா

நாற்று என்பதற்கும், நாத்தனார்/நாத்தூண்நங்கை என்பதற்கும் ஒரு தொடர்பும் காணோம்.

நாத்தனார் என்பதற்கும்,
நாத்தூண்நங்கை என்பதற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதே எனது கருத்து.

அவ்வாறு சிலம்பு படித்தோர் எவரும் கருதுவதில்லை.  


நாத்தூண் = நாத்து + ஊண் = சைவ உணவு
நாத்தூண் நங்கை = சைவ உணவு நங்கை
என்று பொருள் கொள்கிறேன்.


(1) நாத்து (< நாற்று) உண்பார் யாரையும் பார்க்க முடிவதில்லை. மேலும் அசைவ உணவு உண்ணும் நாத்தூண்நங்கையர் (= நாத்தனார்கள்) பலர் இருக்கிறார்கள். கேரளா, தமிழ்நாடுகளில். நாத்தூண், நாத்தனார் எனும் சொற்களில் நாற்று(நாத்து) இல்லை.  

(2) நாத்தூண்நங்கை = நாத்து (cf. நாத-) + ஊண் + நங்கை. அதாவது, கணவனுடைய குடும்பம் சார்ந்த பெண்.
நாத்தூண்நங்கை = நாத்தனார். நாத்தூண் என்றே குறுகி மலையாளத்தில் உள்ளது. நாதினி என்பர் கன்னடத்தில்.
உள்-/உண்-/உடை- : இரண்டாம் எழுத்தில் -ண்-/-ள்-/-ட்- மாறி ஒரேபொருளில் வரும் சொற்கள்
உற்பத்தி ஆகும் விதி திராவிட மொழிகளில் மிக இயங்குகிறது:

-L-/-N-/-T- : as second syllable form words with semantic clustering.
உ-ம்: விள்-/விண்-/விட்டு- (வடமொழியில், விஷ்ணு என்பதன் த்ராவிட தாது இதுதான்.)
https://groups.google.com/forum/#!msg/tiruvalluvar/O4M_q-iTESw/g6ZefggBxrsJ

நா. கணேசன் 

அன்பன்
கி. காளைராசன்



அப்படிப் பார்த்தால் எல்லாப் பெண்களுமே நாற்றனார் என அழைக்கப்பட்டிருப்பர். அவ்வாறு இல்லையே.

உங்கள் உறவினர், திரு. வீ. ப, கா. சுந்தரம் பாவாணரிடம் விளக்கியதை என்னில்லத்தில்
இருந்தபோது விளக்கினார்கள். அவ்வுதாரணத்தை அடுத்த மடலில் தருகிறேன்.

நா. கணேசன்
 

On Mon, 20 May, 2019, 17:31 kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:


---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Mon, May 20, 2019 at 3:11 PM
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] நாத்தி விளக்கு
To: vallamai <vall...@googlegroups.com>


pleonastic compound என்றால் ஒருபொருட் பன்மொழியா ?
சக 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAFh3n%3D_5BLPKxRMjM1fE4x_3fNcgsW8v5LpH52_zszUUTE5yNQ%40mail.gmail.com.

Pandiyaraja Paramasivam

unread,
May 27, 2019, 12:40:06 PM5/27/19
to mint...@googlegroups.com
நாற்று அன்னார் = நாற்ரனார்என்பது ஒரு சுவாரசியமான விளக்கம். அவ்வளவு தான். மற்றபடி சிலப்பதிகாரத்தில் வரும் நாத்தூன் என்பதுதான் இன்றைய நாத்தனார் என்பது என் கருத்து. 

N. Ganesan

unread,
May 27, 2019, 1:03:36 PM5/27/19
to மின்தமிழ்
On Mon, May 27, 2019 at 10:40 AM Pandiyaraja Paramasivam <pipi...@gmail.com> wrote:
நாற்று அன்னார் = நாற்ரனார்என்பது ஒரு சுவாரசியமான விளக்கம். அவ்வளவு தான். மற்றபடி சிலப்பதிகாரத்தில் வரும் நாத்தூன் என்பதுதான் இன்றைய நாத்தனார் என்பது என் கருத்து. 

நாத்தூண்.

ஆமாம். பூணூல் பூணல் ஆவதுபோல, நாத்தூண் > நாத்தனார்
 

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 27, 2019, 1:23:47 PM5/27/19
to mintamil


சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூற
  

எனக்கு ஒரேயோரு ஐயம் மட்டும்.
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்,
நாத்தூண் நங்கையொடு .....

அடிகளாய் இருக்கின்ற காரணத்தினால் நாத்தியோடு .....
என்று பொருள் கொண்டால்,  அடிகளுக்கும் நாத்திக்கும் என்ன தொடர்பு?
இளங்கோவடிகள் ஏன் அடிகளை நாத்தியுடன் தொடர்பு படுத்துகிறார்?

CPL_-wPUEAA96Ck.jpg
அன்பன்
கி.காளைராசன்

தேமொழி

unread,
May 27, 2019, 5:23:53 PM5/27/19
to மின்தமிழ்


On Monday, May 27, 2019 at 10:23:47 AM UTC-7, கி. காளைராசன் wrote:


சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூற
  

எனக்கு ஒரேயோரு ஐயம் மட்டும்.
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்,
நாத்தூண் நங்கையொடு .....

அடிகளாய் இருக்கின்ற காரணத்தினால் நாத்தியோடு .....
என்று பொருள் கொண்டால்,  அடிகளுக்கும் நாத்திக்கும் என்ன தொடர்பு?
இளங்கோவடிகள் ஏன் அடிகளை நாத்தியுடன் தொடர்பு படுத்துகிறார்?



சாவக நோன்பிக ளடிக ளாதலின்
என்பதில் இங்கு கூறப்படுவது,  கண்ணகியும் கோவலனும் இல்லறத்தில் வாழும் பொழுதும் சமண நோன்புகளை மேற்கொள்பவர்கள் என்ற குறிப்பு. 
அதாவது இரவு உணவு உண்ணாத கொள்கை கொண்டவர்கள் என்பது பொருள்.

இரவு உண்ணாதிருத்தல் என்பது சமண இல்லறத்தார் கோட்பாடுகளில் ஒன்று (பார்க்க: http://www.tamilvu.org/courses/diploma/a071/a0713_/html/A0713l21.htm). 

அதனால் காலம் தாழ்த்தினால் மாலை நெருங்கிவிடும், பின்னர் அவர்களால் உண்ண  இயலாது போகும்.  அதனால் ஐயை  தனது அண்ணியுடன் (கோவலனைத் தனது மகள் ஐயை  என்பவளின் அண்ணன் என்ற உறவு குறிப்பிடுகிறாள் மாதரி ... இது இன்றும் வழக்கம்)  விரைந்து சமைத்து முடித்து உணவு பரிமாறும் வேலையைத் துரிதப்படுத்துகிறாள். 
நெடியா தளிமின் =  காலம் தாழ்த்த வேண்டாம் 

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 28, 2019, 11:05:56 AM5/28/19
to mintamil
On Tue, 28 May 2019 at 02:53, தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Monday, May 27, 2019 at 10:23:47 AM UTC-7, கி. காளைராசன் wrote:
மாதவத் தாட்டி வழித்துயர் நீக்கி

ஏத மில்லா இடந்தலைப் படுத்தினள்
நோதக வுண்டோ நும்மக னார்க்கினிச்
நும்மகனார் = உனது மகன் (மதரியின் மகன்), கோவலன்
 

சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூற
  

எனக்கு ஒரேயோரு ஐயம் மட்டும்.
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்,
நாத்தூண் நங்கையொடு .....

அடிகளாய் இருக்கின்ற காரணத்தினால் நாத்தியோடு .....
என்று பொருள் கொண்டால்,  அடிகளுக்கும் நாத்திக்கும் என்ன தொடர்பு?
இளங்கோவடிகள் ஏன் அடிகளை நாத்தியுடன் தொடர்பு படுத்துகிறார்?



சாவக நோன்பிக ளடிக ளாதலின்
என்பதில் இங்கு கூறப்படுவது,  கண்ணகியும் கோவலனும் இல்லறத்தில் வாழும் பொழுதும் சமண நோன்புகளை மேற்கொள்பவர்கள் என்ற குறிப்பு. 
அதாவது இரவு உணவு உண்ணாத கொள்கை கொண்டவர்கள் என்பது பொருள்.

இரவு உண்ணாதிருத்தல் என்பது சமண இல்லறத்தார் கோட்பாடுகளில் ஒன்று (பார்க்க: http://www.tamilvu.org/courses/diploma/a071/a0713_/html/A0713l21.htm). 

அதனால் காலம் தாழ்த்தினால் மாலை நெருங்கிவிடும், பின்னர் அவர்களால் உண்ண  இயலாது போகும்.  அதனால் ஐயை  தனது அண்ணியுடன் (கோவலனைத் தனது மகள் ஐயை  என்பவளின் அண்ணன் என்ற உறவு குறிப்பிடுகிறாள் மாதரி ... இது இன்றும் வழக்கம்)  விரைந்து சமைத்து முடித்து உணவு பரிமாறும் வேலையைத் துரிதப்படுத்துகிறாள். 

அடிகள் = சாவகநோன்பியான கோவலன்  (மாதரியின் மகனார்)
நாத்தூண் = நாத்தனார், கண்ணகி (கோவலன் அண்ணன் போன்றவன், அதனால் கண்ணகி அண்ணி (நாத்தனார்) போன்றவள்)
நீர் = மாதரியின் மகளான ஐயை.

நன்றி, நன்றி.  

N. Ganesan

unread,
May 28, 2019, 3:53:17 PM5/28/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Tue, May 28, 2019 at 9:05 AM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
>
> அடிகள் = சாவகநோன்பியான கோவலன்  (மாதரியின் மகனார்)
> நாத்தூண் = நாத்தனார், கண்ணகி (கோவலன் அண்ணன் போன்றவன், அதனால் கண்ணகி அண்ணி (நாத்தனார்) போன்றவள்)
> நீர் = மாதரியின் மகளான ஐயை.
>
> நன்றி, நன்றி.  
> அன்பன்
> கி.காளைராசன்
>
>  

‘மாதவத்துஆட்டி வழித் துயர் நீக்கி,
ஏதம் இல்லா இடம் தலைப்படுத்தினள்;


கண்ணகியின் வழித்துயர் எல்லாம் நீக்கித்
தங்கவைக்க நல்ல இடம் ஏற்பாடு செய்தாள் மாதரி.
இடைக்குலத்தாள் ஆகிய மாதரிக்கு சமண
சமயத்தவர் உணவு பொழுது வீழ்வதன் முன்னமே உண்பர்
என்பது அறியார். ஆகலின், கண்ணகி கூறுகிறாள்.

நோதகவு உண்டோ, நும் மகனார்க்கு இனி?-

சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்,
நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம்
அடிசில் ஆக்குதற்கு அமைந்த நல் கலங்கள்
நெடியாது அளிமின், நீர்’ எனக் கூற-


கண்ணகியின் மாதரியை நோக்கிய கூற்று ஆதலால்,
நும் மகன் = கோவலன். அதாவது தன் கணவன்.
அவன், சிராவக நோன்பி. Householder. இல்வாழ்வான் என்பார் வள்ளுவர்.

கண்ணகி, கோவலனை மாதரி மகன் என்பதனால், 
ஐயை ஆகிய மாதரியின் மகள் நாத்தனார் ஆகிறாள்.
கணவனின் உடன்பிறந்தாள் நாத்தனார், நாத்துணா.
மலைநாட்டில் இன்றும் கணவனுக்கு மூத்தாளை நங்கை என்பர்.
அவள் கோவலனுக்கு வயதில் மூத்தவள் என்பதால் "நாத்தூண்நங்கை"
என்கிறாள் கண்ணகி. வயதில் இளையாளாயின்
"நாத்தூண்கொழுந்தி" என்றிருப்பார். பொறுப்பாக,
சமையலுக்கு வேண்டிய எல்லாக் கலங்களும், அரிசி,
காய்கறி இன்ன பிறவும் விரைந்து அளிக்க வேண்டுகிறாள்.
நாத்து (cf. nAtha) ஊண் (உடைய) நங்கை = நாத்தூண்நங்கை.
இங்கே, கோவலனின் 'உடன்பிறப்பு' ஆகிய ஐயையை
'நாத்தூண்நங்கை' என்கிறாள் கண்ணகி.
நீர் - பன்மை. மாதரியும், ஐயையும் இதைச் செய்க என்கிறாள் கண்ணகி.

நல்கலம் = புதுக்கலம். இறைச்சி போன்றன சமைக்கும்
வீட்டுக் கலம் அன்று என்பது பொருள். இதை நானே
பல வீடுகளில் தேசாந்திரிகள் வந்து தங்கும் போது (பழனி,
ராமேசுவரம் போவார்) அவர்களுக்கான நன்கலம் அளிப்பதனைப்
பார்த்துள்ளேன். 

நா. கணேசன்

நாத்தூண்நங்கை பற்றிய தற்காலச் சிறுகதை ஒன்று. 
நாத்தனார் என்ற கதையில் வரும் கந்தசாமியின் அக்கா கங்கம்மா, தம்பி மனைவி வஞ்சியைக் காரணமின்றித் தொல்லைப்படுத்துவதாக ஆசிரியர் விந்தன் படைத்துள்ளார்.

நாத்தனார்
 - விந்தன் (சிறுகத)

வஞ்சி எப்பொழுதுமே இப்படித்தான். அவள் வீட்டில் நடக்கும் சண்டை சச்சரவுகளைப் பற்றித் தன் கணவனிடம் ஒன்றுமே சொல்ல மாட்டாள்.

‘அக்கா! நீதான் அந்த மாவைக் கொஞ்சம் அரைச்சுக் கொடுக்கக் கூடாதா?’ என்றான் கந்தசாமி.

‘அரைப்பேண்டா, அரைப்பேன்! ஏன் அவளைக் கூடக் கொஞ்சம் தூக்கி உன் பக்கத்திலே உட்கார வைக்கட்டுமா?’ என்றாள் கங்கம்மா.

கந்தசாமி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டான். அவன் மனத்தை மாற்றுவதற்காக “வெய்யில்லே அலைஞ்சிட்டு வந்தாயே, கொஞ்சம் தயிரைப் போட்டுக் கூழைக் கரைச்சுக்கிட்டு வரட்டுமா?” என்று கேட்டாள் வஞ்சி.

“எடுத்துக்கிட்டு வா!’ என்றான் கந்தசாமி.

உள்ளே போய்ப் பார்த்தால் தயிரைக் காணோம். அதைக் கபாலி காலி செய்துவிட்டிருந்தான். 'கேட்டால் பூனையின் மேல் பழியைப் போடுவார்கள். கேட்காமல் இருப்பதே நல்லது' என்று தீர்மானித்து, வெறும் கூழைக் கரைத்துக் கொண்டு வந்தாள் வஞ்சி.

“என்னா வஞ்சி! தயிரு இல்லையா?”

‘இருந்தது; இப்போது பார்த்தாக் காணோம். பூனை குடிச்சிட்டாப் போல இருக்குது!" என்று தன் நாத்தனார் சொல்லப் போவதைத் தானே சொல்லி வைத்தாள் வஞ்சி.

அப்பொழுது “இல்லை, மாமா! நான்தான் குடிச்சுட்டேன்!’ என்று சமர்த்தாகச் சொல்லிக் கொண்டே வந்தான் கபாலி.

‘அட, என் கண்ணு! குடிச்சிட்டியா? - போ!’ என்று தன் வயிற்றெரிச்சலை வெகு லாவகமாக வெளியிட்டான் கந்தசாமி.
                  * * *

‘சேர்ந்து வாழ்வது தான் சிறந்தது' என்கிறோம். ஆனால், வாழ்க்கையில் பார்க்கப்போனால் அதைப் போன்ற தொல்லை வேறு ஒன்றும் கிடையாது என்று தோன்றுகிறது. நமது சுற்றத்தாருடன் நாம் பிரிந்து வாழும்போதோ, அல்லது பிரிந்து செல்லும்போதோ இருக்கிற ஆசையும் அன்பும் சேர்ந்து வாழும்போதோ, அல்லது சேர வரும் போதோ எங்கே இருக்கிறது?

அன்று வஞ்சியைப் பிரசவத்துக்காக அழைத்துச் செல்ல அவளுடைய அம்மா வந்திருந்தாள். அப்பொழுது “நீங்க என்னாத்துக்கு அழைச்சுக்கிட்டுப் போறீங்க? இங்கேயேதான் இருக்கட்டுமே; எல்லாம் நான் பார்த்துக்கிறேன்!” என்றாள் கங்கம்மா. அவள் போய்விட்டால் வீட்டு வேலைக்கும் சண்டைக்கும் ஆள் கிடைக்காதே என்ற கவலை அவளுக்கு!

இது தெரியாத வஞ்சி, “ஆமாம், அம்மா! எனக்குக் கூட அவரை விட்டுவிட்டு வரத்துக்கு என்னமோ மாதிரியாயிருக்குது! இங்கேயேதான் இருக்கிறேனே, எல்லாம் இந்த அம்மா பார்த்துக்கிறாங்க!’ என்றாள்.

‘என்ன இருந்தாலும் நாலுபேர் நாலு சொல்லுவாங்க!’ என்று சொல்லி வஞ்சியைத் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டாள் அவளுடைய அம்மா.

அவள் வாழ்க!
                   * * *

வஞ்சி பிரசவித்து மூன்றாவது மாதம் நடந்து கொண்டிருந்தது. கந்தசாமி தன் மனைவியை அழைத்துப்போக வந்தான். அவனுடன் செல்ல வஞ்சிக்கு எவ்வளவோ ஆசை. ஆனால் கங்கம்மாவை நினைத்தபோது, அங்கே சென்று அவளுடைய வம்புக்கு ஆளாவதைக் காட்டிலும் இங்கேயே இன்னும் இரண்டு மாதங்களாவது தொல்லையில்லாமல் இருக்கலாமே என்று அவளுக்குத் தோன்றிற்று. இதைக் குறிப்பாகக் கந்தசாமியின் காதிலும் போட்டு வைத்தாள். அவனுக்கும் அவள் சொல்வது ஒரு விதத்தில் நல்லதென்றே பட்டது.

மறுநாள் கந்தசாமி தான் மட்டும் ஊருக்குச் செல்வதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்த போது அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் எழுதியிருந்தது இதுதான்;

சிரஞ்சீவி கந்தசாமிக்கு, ஆசீர்வாதம்.

சண்டைக்குப் போனவர் திரும்பி வந்துவிட்டார். நேரே பட்டனத்திற்கு வந்த அவர், அங்கே தனக்கு வேலை பார்த்துக் கொண்டு, இங்கே என்னை அழைத்துப்போக வந்திருக்கிறார். இந்தக் கடிதம் கண்டவுடன் நீங்கள் உடனே வந்து எங்களை அனுப்பி வைக்கவும்.

கங்கம்மா.

இதைப் படித்ததும், ‘வஞ்சி! இப்பவே நீயும் என்னுடன் புறப்பட வேண்டியதுதான்!” என்று துள்ளிக் குதித்தான் கந்தசாமி. அவனுடைய தோள்களை ஆசையுடன் பிடித்துத் தொங்கிக் கொண்டு, ‘ஏன், அந்தக் கடிதாசியிலே அப்படி என்ன எழுதியிருக்கு?” என்று கேட்டாள் வஞ்சி.

விஷயத்தைச் சொன்னான் கந்தசாமி. அதைக் கேட்ட வஞ்சியின் வதனம், காலதேவனைக் கண்ட கமலம் போல் பூத்தது!

இந்தக் காட்சி எந்த நாத்தனாருக்கும் பிடிக்காத காட்சிதான்; ஆனால் ஏன் பிடிக்கவில்லை என்றுதான் தெரியவில்லை!




S Roy

unread,
May 28, 2019, 5:28:22 PM5/28/19
to mint...@googlegroups.com
மலையாளத்தில் கணவனின் சகோதரியை நாத்தூண் என்றே கூப்பிடுவார்கள. 

நன்றி
சுஜாதா




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages