பரம்பை என்ற தூயதமிழ்ப் பெயர் இருக்க, ஏன் சங்கத் தமிழில் இருமுறை போர், பிண்டம், இறப்பு தொடர்பாக
“வன்னி” (< வஹ்னி) என்று பரம்பை மரத்திற்கு 2000 ஆண்டு முன்னர் பயன்படுத்தியுள்ளனர் எனப் பார்ப்போம்.
(1)
‘மன்னர் மறைத்த தாழி வன்னி மன்றத்து விளங்கிய காடே.” - - பதிற்று : 44 : 22-23.
(2) பொருந்தாத் தெவ்வர் அரிந்த தலை அடுப்பின்,
கூவிள விறகின் ஆக்கு வரி துடுப்பின்,
ஆனா மண்டை வன்னிஅம் துடுப்பின்,
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த, (புறம் 372)
பிணங்களின் தலைகள் அடுப்பாகக் கூவிளம் விறகு கொண்டு பேய்கள் பற்ற வைக்கும். அதில் வரிக்குடல்கள் மிதக்கும் மண்டை ஒட்டை அகப்பையாகவும், வன்னி மரத்தின் கொம்பு அதில் செருகப் பட்ட காம்பாகவும் பேய் மகள் துழந்து அட்ட இறைச்சி உணவினைப் பேய் மடையன் கொற்றவைக்குப் படைக்கிறான். வன்னி = நெருப்பு. அக்கினி ரூபமானது வன்னி மரம். போர் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும்,
கொற்றவையின் பிண்ட வேள்விக்கும் ஆன சிலேடைப் பாட்டு இது.
பிண்டம் கொடுத்தல், முதுமக்கள் தாழி இடும் காடு - இந்த வர்ணனைகளில் “வன்னி” என்ற
வடசொல் பயனாவது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது. வருணனின் இடம் வன்னி மன்றம் ஆகிய இடுகாடு,
வருணன் மனையாள் என்றிருந்த கௌரிக்கான களவேள்வி என இரு சங்கப் பாடல்களில் மட்டும்
வன்னி என்னும் பரம்பை மரம் வருதல் காண்க. இவ்விரு பெருந்தெய்வங்களுக்கு மட்டும்தான்
அவர்களின் அடையாளங்களாக சுறா, பெண்ணெருமை கோடுகள் நட்டு வழிபாட்டைப்
பொதுமக்கள் நடாத்தியுளர் என்பதும் சங்க இலக்கியங்கள் தரும் செய்தி.
வட நாடு, தென்னாடு தொடர்பான நீண்ட வரலாறு இது. வடக்கே இருந்து கண்ணபிரான் தலைமையில்
பதிணென் வேளிர் குடிகளும் மக்களும் தமிழகம் வந்தடைந்தனர் என்னும் சங்க கால மரபுச் செய்திகளும்,
அகத்தியன் வந்தடைந்ததும் ஆன மரபு வரலாற்றை விளக்குவதான செய்திகள் “வன்னி” என்ற பெயரிலும்
இருக்கிறது. தமிழ் இலக்கியங்களிலே விடங்கர்/இடங்கர் என்ற அரிய சொல் வழங்கிவருகிறது.
இடங்கர் என்ற சொல்லே சங்க இலக்கியத்தில் இருப்பினும், பிற்கால தமிழ் இலக்கியங்களில் உள்ள
விடங்கர் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகவே கொள்ள வேண்டும். விடங்கர்/இடங்கர் - லிங்க வழிபாடு
அமையக் காரணமான கங்கை முதலை. நகர் என்று வடநாட்டிலே வழங்குவது. சம்ஸ்கிருதத்தில் மொழியறிஞர்கள்
இவ்வாறு பல சொற்களைக் காட்டுவர் (உ-ம்: சுலோகம்). வன்னி என்று பரம்பை மரத்தின் பெயரால்
அமைந்தது வன்னியூர் என்னும் தேவார ஸ்தலம். அழகிய சிறுகோவில். இன்று வன்னியூர் > அன்னியூர்
ஆகிவிட்டது. அதேபோல, விடங்கர் (Proto-Dravidian) > இடங்கர். விடங்கர் = முதலை, பின்னர் இலிங்கம்.
இது பற்றி மேலும் அறிய, பக்கம் 11, 12 (பிடிஎப் கோப்பு எண்கள்) ஆய்வுக் கட்டுரை படிக்கவும்:
https://archive.org/details/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/page/n9 நெடியோன் என்று 3 இடங்களில் குறிப்பிடப்படும் வருணன்:நெடியோன் என்று மால், முருகன் போன்ற தேவதைகளுக்குத் தமிழிலே வழங்கினாலும்,
சங்கப் பாடல்கள் மூன்றிலே அப்போது பெருந்தெய்வமாக விளங்கிய வருணன்
நெடியோன் என வணங்கப்பட்டுள்ளான். தெளிவு கருதி, வருணன் என்ற சொல்லையே
தொல்காப்பியர் ஆள்கிறார். நெடியோன் என்று குறிப்பிட்டால் அவர் காலத்திலே (கி.பி. 2-ம் நூற்றாண்டு,
ஐராவதம் மகாதேவன்) கூட மறைந்துவரும் வருணன் எனத் தெளிவாக்கிவிடுகிறார்.
தொல்காப்பியருக்கும் 1000 ஆண்டுகள் முன்னரே வருணன் என்னும் பெருந்தெய்வம்
தமிழ்நாட்டுக்கு வட நாட்டில் இருந்து வேளிர் வருகையால் அறிமுகம் ஆகிவிடுகிறது.
http://www.tamilvu.org/slet/lA100/lA100pd2.jsp?bookid=249&pno=43 ஐந்திணைத் தெய்வம்
“மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”
(அகத். 5)
என்பது தொல்காப்பியம். வருணன் என்று வரும் ஒரே இடம் தொல்காப்பியம் தான்.
சங்க இலக்கியத்து ஏனை இடங்களில் “நெடியோன்” என்றே தமிழ்ப்பெயர் சூட்டி வருணனைத்
தமிழ்ச் சான்றோர் பாடியுள்ளனர்:
(1) மதுரைக் காஞ்சி வருணனை ஐம்பூதங்களுக்கும்
அதிதேவதையாகப் பாடும்போது, “மழுவாள் நெடியோன்” என்று குறிப்பிடுகிறது.
இந்த மழுவாள் நெடியோனுக்கு முக்கிய தொல்லியற் சான்று வட இந்தியாவின்
கங்கை-யமுனை நதிக்கரையில் இருந்து வருகிற ‘Anthropomorphic Axe" எனத்
தொல்லியலில் சுட்டப்பெறும் தென்னிந்தியாவின் மெகாலித்திக் காலப்
பெருஞ்சிற்பங்கள். உடையார்நத்தம், மோட்டூர், சித்தன்னவாசல், ... உள்ளவை.
இன்று தொல்லியல் நிபுணர்கள், வடக்கே வெண்கலத்திலும், தமிழ்நாட்டில்
கல்லில் பெரிதாகவும் உள்ளவற்றை
‘Anthropomorphic Axe" என்பர். இதற்கான
இந்திய மொழிகளிலே உள்ள பெயர் “மழுவாள் நெடியோன்” என்று தமிழ்ச்
சங்க இலக்கியங்களிலே தான் இருக்கிறது என்பதனை அவர்கள் அறிந்து
வடநாட்டு ‘மழுவாள் நெடியோன்’ செப்புப் படிமங்களிலே ப்ராஹ்மி எழுத்தின் தோற்றங்கள்
இருக்கின்றன. பொருந்தல், கொடுமணல், கீழடி போன்றவற்றில் உள்ள வட இந்திய பெயர்களுக்கு
(ஸாதன், திஸன், குவிரன், அவதி, ....) உண்டான ப்ராமிக்கு 5 (அ) 6 நூற்றாண்டுகள்
முந்தையவை இந்த எழுத்துகள் என்பதையும் ஆய்வில் கொள்ளவேண்டும்.
(2) பரன்குன்று - இப்போது பரங்குன்று (வன்சிரம் > வஞ்சிரம் போல) - பரன் = இறைவன் என்பதற்கான வடசொல்.
இங்கே மிக அழகிய தமிழ் பிராமி கல்வெட்டு குளக்கரையில் கிடைத்துள்ளது
“மூ நாகரா, மூ சக்தி” என்று தமிழும், வடசொற்களும் கலந்த கல்வெட்டு.
பாண்டியர்கள் இங்கே யாகங்கள் வேட்டபோது எழுந்த கல்வெட்டு ஆதல் வேண்டும்.
பாண்டியர் என்ற சொல்பிறப்பை பாணிநீயத்தின் உரைகாரர் பதஞ்சலி (கி.மு. 150)
என்ன சொல்கிறார் என்று பார்த்தால், பேரா. கண்மணி துவராபதி - பாண்டியர்
பற்றிய கேள்விக்கு விடைகிட்டும். கலைக்களஞ்சியம் ஆசிரியர் ம. பெ. தூரன்
அவர்கள் குலப்பெயர், வேளிர் வருகை பற்றிக் குறிப்பிடும் செய்திகளைப் பின்னர் பார்ப்போம்.
தூரன் பற்றி இளைஞர்கள் அறிய:
”வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளஇ,
அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய, 15
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. 19
- எருக்காட்டூர் தாயங்கண்ணனார் (அகம்-149)
திருப்பங்குன்றத்து மிகப் பழைய தமிழ் பிராமிக் கல்வெட்டால்
நெடியோன் குன்றம் என்பது வருணனுக்காக இட்ட பெயர் என்பது வெளிச்சம் அடைகிறது.
சில நூற்றாண்டுகள் சென்ற பின்னர், வருணனுக்கான பொருள்கள், அடையாளங்கள்
சிவனுக்கு மாறிவிட்டன. உ-ம்: இந்தியாவில் முதல் லிங்கம் குடிமல்லத்தில்
வருண விடங்கராக உள்ளது. பின்னர் இந்த விடங்கர் சிவன் என்றபெயரில்
வணங்கப்படுகிறார். இறப்பின் அதிதெய்வம் வருணன் எனக் காட்ட வன்னி (< வஹ்னி = அக்கினி)
என்னும் பரம்பை மலரைச் சிவன் சூடுகிறார். கையில் மழு - வருணனின் சின்னம் -
இல்லாத சிவ வடிவங்களைத் தென்னாட்டில் காணவியலாது.
முருகன்/கார்த்திகேயன் வானவியல் புராணங்கள் வட நாட்டில் இருந்து வந்து, கந்தன் மகனாக
சிவபெருமானோடு இயைக்கப்படுகின்றன.
அப்போது பழைய பெயர் “நெடியோன் குன்றம்” . அதிலே முருக வழிபாடு நடந்ததைப்
பாடும் பாடலைத் தாயங்கண்ணனார் எழுதியுள்ளார். இன்றும் பழைய முருகன் தலங்கள்
பல சிவஸ்தலங்களே. வன்னி சூடும் நெடியோன் வருணன். அவனுக்கிருந்த நெடியோன்குன்றம்.
வன்னி கர்ப்பன் (அக்கினி குமரன்) - என முருகனுக்கு முக்கியமான பெயர் அமைந்துள்ளது ஓர்க.
(3) இதே நெடியோனுக்கு முதுகுடுமிப் பெருவழுதி அசுவமேத யாகங்கள் எடுத்தமை
தமிழ் ப்ராமியில் தன் பெயர் பொறித்து வெளியிட்ட நாணயங்களாலும்,
புறப்பாடலில் குமரி முனையில் இந்த நெடியோனுக்கு விழாச் செய்துள்ளான்
என்று கூறுவதாலும் தெரிகிறது. முதுகுடுமிப்பெருவழுதி பாடலில் இடம்பெறுவது "முந்நீர் விழவின் நெடியோன்"
= கடலுக்குரிய தலைவன் = வருணன்; அவனுக்குரிய விழா; தெய்வம் பராவல் .
சங்க இலக்கிய காலத்தை நிர்ணயிக்கும் முக்கியமான காசுகள் முனைவர் ரா. கிருஷ்ணமூர்த்தியால்
கண்டறியப்பட்டன. முக்கியமான அவரது கண்டுபிடிப்பு: விடங்கர் வழிபாடு நிகழ்த்தி,
அசுவமேத யாகஞ்செய்து, “பெருவழுதி” என்று தன் குலப்பெயரை பிராமியில் பொறித்து வெளியிட்ட
நாணயங்கள். முனைவர் ரா. கிருஷ்ணமூர்த்தி Fellow, Royal Numismatics Society. (FRNS, England)
- தமிழர்களில் இம் மாண்பை அடைந்தவர் இவர் ஒருவரே. சென்னைப் பல்கலையில்
விடங்கர் (வருணன்) வழிபாடு பற்றி நான் ஆற்றிய ஆய்வுரையில் கலந்துகொண்டு
அரிய செய்திகளை வழங்கினார்கள். அதுபோது எடுத்த ஒளிப்படங்கள் பகிரலாம்.
கீழடி என்பது மதுரை அன்று. இதற்கு முக்கிய ஆதாரம் கூடல் என்ற பெயர் என்றும்,
கூடல் அழகரைப் பற்றிய சங்கப் பாடல் (பரிபாட்டு)ம், ஆழ்வார் பாசுரங்களும்
தந்து எழுதினேன். கூடல் இழைத்தல் என்பது சிறுபெண்கள் விளையாட்டு.
கிருதமாலை ஆறும், வையை ஆறும் கூடல் இழைக்கிற இடம் ஆதலின்
கூடல் என்றே பழந்தமிழர் அழைத்தனர். பின்னர் பெருநகரம் ஆகி,
நான்மாடக் கூடல் ஆனது. வடநாட்டுப் பெயரான மதுரை இன்று நிலைபெற்றுவிட்டது.
மதில்/மதிர் > மதிரை > மதுரை. வட மதுரை, கூடற் தென் மதுரை - இரண்டுக்கும்
தாதுவேர் மதிர் ‘wall' என்பதாகலாம். கூடல் அழகர் கோவில் பெரியாழ்வாரோடு
மிகுந்த தொடர்புகொண்டது. கூடல் புராணத்திலே, நம்மாழ்வார் சங்கம்
வென்ற செய்தி இருக்கிறது. ஸ்ரீவைஷ்ணவர்களால் மறக்கப்பட்ட அகவல் இது.
காரணம் சங்க கால சமயமான வருணன் பற்றிய செய்திகள் பொதிந்த அகவல்.
பாண்டிய ராசா முன்னிலையில் மதுரை நான்மாடக் கூடலில் சங்கப் புலவரை
நம்மாழ்வார் வெற்றிகொண்ட அகவல் கிடைத்துள்ளது. பல ஆண்டு முன்னர்
இரா. இராகவையங்கார் எழுதிய உரையுடன் இந்த அரிய அகவலை
மின்தமிழ் இ-புக்ஸ் தொகுப்பிற்கு அளித்தேன். ஸ்ரீ நாராயணையங்கார் எழுதின
தமிழ் உரையும் இருக்கிறது.
10 ஆண்டு முன்னே,
நம்மாழ்வார் அகவல் இது தான்:
”அண்ட கோளத்து ஆரணு வாகிப்
பிண்டம் பூத்த பேரெழில் ஒருமை
ஈருயிர் மருங்கில் ஆருயிர் தொகுத்து
நித்திலத்து அன்ன வெண்மணல் பரப்பில்
வேரும் வித்தும் இன்றித் தானே
தன்னிலை அறியாத் தொல்மிகு பெருமரம்
மூவழி முப்பழம் முறைமுறை தருதலின் இன்னே
என்றுண்டு ஒண்சுவை தருவது மற்றது
கல்லின் எழுந்து கடலின் அழுந்தி
அறுகால் குறவன் நீரற விளைக்கும்
செறிபொழில் குப்பை தருகண் பொன்றுவித்து
அறுகோட்டு ஆமா விளைக்கும் நாடன்
அவனே தலையிலி; அவன்மகள் முலையிலி;
தானும் ஈனாள் ஈனவும் படாஅள்
எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள்
அவள் இவள் உவள் என அறிதல்
துவளறு காட்சிப் புலவரது கடனே.”
இந்த அகவலில் வேத காலத்தில் அசுரர்களில் பெரிய அசுரன் ஆகிய
வருணன் என்னும் பெருந்தெய்வ வர்ணனை இருக்கிறது. கீழடி போன்ற
தொல்லியல் ஆய்வுகளைக் கொண்டு இவ்வகவலை விளக்க முடியும்.
வேத காலத்து யக்ஞங்கள் யாருக்காக நடந்தன என
நம்மாழ்வார் என்னும் வேளிர் பாடியிருக்கிறார் எனலாம். அது பின்னர்.
------------------
எருமைக்கு வேதத்தில் வழங்கும் கௌர- என்ற பெயரே கோடு என்ற சொல்லுடன் தொடர்புடையது. கவரி மாவின் பெயர்: கவரி < கவடி << கோடு.
http://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.htmlஇவ்வாறு, கோடு மாட்டுக்கும், எருமைக்கும் தொடர்புடையது எனினும், கோவினம் என்று ஸம்ஸ்கிருதச் சொல்லால் மாடுகளையும், கோட்டினம் என்று தமிழ்ப் பெயரால் எருமைகளையும் கலித்தொகை குறிப்பிடுகிறது. இந்தியாவின் பழைய சமய் நெறிகளில் எத்தனையோ கடவுளர் உண்டு. எனினும், திணைமாந்தர்கள் கோடுகளை வைத்து, வணங்கும் பெருந்தெய்வங்கள் இரண்டு தான். (1) சுறாக் கோடு கொண்டு பூசிக்கும் வருணன் (2) அவன் மனை கௌரி/கொற்றவை எருமைக்கோட்டை வைத்து புதுமணல் பரப்பி, மணவறை சோடித்து நிகழும் கலியாணச் சீர்களில் வழிபடுவதை முல்லைக்கலிப் பாட்டு அறிவிக்கிறது. முதலாகுபெயருக்குச் சிறந்த உதாரணம் இச்செய்யுள். இந்தப் பாவை வழிபாடு பற்றி ஏனை விவரங்கள் திருமணத்தை விவரிக்கும் இரண்டு அகநானூற்றுப் பாடல்களால் விளங்குகிறது. சைவர், வைணவர், சமணர் பாடிய பாவைப்பாடல்களுக்கு இக் காத்யாயனி வழிபாடே அடிப்படை. திருப்பரங்குன்றில் கிடைத்துள்ள தமிழ் ப்ராமிக் கல்வெட்டு வருணன் - கௌரி ஜோடியைக் குறிப்பிடும் முதல் கல்வெட்டாகும். பிற்கால வருணனுக்கான சிந்துவெளி எழுத்து (மகர விடங்கர்) இப்போது கீழடி இரண்டு பானையோடுகளில் கிடைத்துள்ளது. ஏற்கெனவே, செம்பியன் கண்டியூர் (கல் கோடரி), சாணூர், சூலூர், தாய்லாந்து தேசம் - எனத் தமிழர் செய்த கலங்களில் குறியீடாக சங்க காலத்தில் எழுதியுள்ளனர்.
வன்னி மலரை விரும்பிச் சூடுபவர் சிவபெருமான்.
கோடலர் வன்னி தும்பை கொக்கிற கலர்ந்த கொன்றை
ஏடமர் சடையர் போலும் இன்னம்ப ரீச னாரே. (அப்பர்)
அலர்ந்த வன்னி இண்டை கொண்ட சிவன் (சம்பந்தர்)
Anthropomorphic Axe என்று தொல்லியலாளர் அழைக்கும் ‘மழுவாள் நெடியோன்’ சிற்பத்தை தெற்குப் பார்த்து
மெகாலித்திக் கால இடுகாடுகளில் நிறுத்தியுள்ளனர். இது வட இந்தியாவில் இருந்து வந்த விடங்கர் (வருணன்)
வழிபாட்டின் கால்கோள். தென்னிந்தியாவின் முதல் சிற்பம் இதுவே. பிணங்கள் வடக்கே பார்த்து நிறுவியுள்ளனர்.
வடக்கு இருத்தல் - சமண துறவியர் இறக்கும் முறை. சிந்துவெளியிலும் வடக்கே பார்த்து சவங்கள் வைக்கப்பட்டுள்ளன.
தென்புலத்தார் என திருக்குறள் குறிப்பிடும். தெற்கு இறப்பின் திசை எனப் பல சமயங்களில் கொள்கை.
அந்த மெகாலித்திக் இடுகாடுகளில் வன்னி/பரம்பை மரங்கள் சங்க இலக்கியத்தில் பதிவாகிறது.
எனவே, வருணன் (விடங்கருக்கு) சிறப்பாக இருந்த பரம்பை மலர், வருணன் சிவபெருமானாக பரிணாம
வளர்ச்சி ஹிந்து சமயத்தில் அடைகிறபோது, வருணனின் வேதகால மழு/பரசு, இலிங்கம் (குடிமல்லம்),
வன்னி (இடுகாட்டின் பரம்பை தாவர்ம்) எல்லாம் சிவனுக்கு ஏற்புடையதாக ஆகிறது. இன்று பார்த்தால்,
சிவன் லிங்கமாகவும், தேவாரத்தில் ஏராளமாக வன்னியும், அதே போல் உள்ள கொன்றை சூடுவதும்,
தவறாமல் மழு ஏந்தி இருப்பதும் சிவன் கி. மு. 800 - கி.பி. 200 வரை வருணன் என்னும் நெடியோன் ஆக
இருந்த நிலைமையைக் காட்டி நிற்கும் அடையாளங்கள் ஆகும்.
ஒழுகை உய்த்த கொழு இல் பைந்துணி
வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை
கவலை கவற்றும் குராலம் பறந்தலை
முரசுடைத் தாயத்து அரசு பல ஓட்டித், 20
துளங்கு நீர் வியல் அகம் ஆண்டு இனிது கழிந்த
மன்னர் மறைத்த தாழி,
வன்னி மன்றத்து விளங்கிய காடே.
Pathitruppathu 44, Poet: Paranar, King: Kadal Pirakōttiya Chenguttuvan,
துய்த்தலைக் கூகை – soft headed owl, a fuzzy headed owl, கவலை கவற்றும் – cries out sadly, குராலம் – female owl, பறந்தலை – cremation grounds, முரசுடை – having drums, தாயத்து – with rights, அரசு பல ஓட்டி – vanquished a few kings, துளங்கு நீர் வியல் அகம் – moving waters surrounded world, ஆண்டு – rule, இனிது கழிந்த – sweetly passed, மன்னர் மறைத்த தாழி – huge burial urns (clay pots) in which kings are buried, வன்னி மன்றத்து – in the common areas with vanni trees, Prosopis spicigera, Indian mesquite, விளங்கிய காடே – bright forest (காடே – ஏகாரம் அசை நிலை, an expletive)
In your country, which has flourished in this earth surrounded by
the swaying oceans, your victorious ancestors, who vanquished
many kings owning drums and lived sweet lives, are buried in the
cremation grounds with vanni trees, where a female owl with a
fuzzy crown hoots pitifully, since her mate forgot where he hid
the fatless meat pieces he had picked.
17-23. கொழுவில்..........காடே.
உரை: கொழுவில் பைந்துணி-கொழுமை யில்லாத பசிய இறைச்சித் துண்டத்தை; வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை- வைத்த இடத்தை மறந்தொழிந்த உச்சிக் கொண்டையை யுடைய கூகையை; கவலை கவற்றும்-கவலையுறுவித்து வருத்தும்; குரால் அம் பறந்தலை-கூகைப் பெடைகளையுடைய சுடுகா.ட்டிலே; முரசு டைத் தாயத்து அரசு பல ஓட்டி-முரசினையுடைய வழிவழியாக உரிமையுற்று வரும் அரசர் பலரை வென்று; துளங்கு நீர் விய லகம் ஆண்டு-அசைகின்ற கடல் சூழ்ந்த பரந்த நிலவுலகத்தை ஆட்சி புரிந்து; இனிது கழிந்த மன்னர்-தம் வாழ்நாளை இனிது கழித்திறந்த வேந்தரை யிட்டுப் புதைக்கும்; வன்னி மன்றத்து விளங்கிய காடு-வன்னி மரம் நிற்கும் மன்றத்தால் விளக்கமுற்ற இடுகாட்டின்கண்; தாழி-மட்குடமானது; காணிலியர்-நின் யாக்கையாகிய நோய்தபு நோன்றொடையினைக் காணாதொழிவதாக எ-று
குரால், கூகைப்பெடை. அலையால் அலைப்புண்பதுபற்றிக் கடலை, "துளங்குநீர்" என்றார். தாழி, மன்னர் இறந்தவழி அவர் உடலை மண்ணாற் செய்த பானைக்குள் வைத்துப் புதைப்பது பண்டையோர் மரபு. இதனை முதுமக்கட் டாழி யென்றும் வழங்குப. "வளவன் தேவருலக மெய்தின னாதலின், அன்னோற் கவிக்கும் கண்ணகன் தாழி" (புறம் 228) என வருதல் காண்க. காடு தாழி காணிலியர் என முடித்தலு மொன்று. வன்னி மன்றம், சுடலை நோன்பிகள் மடையிட்டுப் பரவுமிடம் என்று மணிமேகலை கூறும்;”சுடலை நோன்பிகள்ஒடியா வுள்ளமொடு, மடை தீ
யுறுக்கும் வன்னி மன்றம்" (மணி 6: 86) என்பது காண்க. பழைய
வுரைகாரர், "வன்னி மன்ற மென்றது, அக்காட்டில் வன்னி மரத்தை யுடைய இடத்தினை" யென்றும், "அதுதான் பிணத்தொடு சென்றார் எல் லாரு மிருந்து மன்று போறலின், மன்றெனப்பட்டது" என்றும், "விளங் கிய காடென்றது, தன் தொழிலில் விளங்கிய காடென்றவாறு" என்றும் கூறுவர் (ஔவை துரைசாமிப்பிள்ளை)
ஆக, வன்னி என்ற வடமொழிப் பெயர்கொண்ட வன்னி மரம் இறந்தோரைப் புதைக்கும், எரிக்கும் காடுகளோடு தொடர்புடையது. வருணன்
இறத்தலுக்கு அதிதெய்வம். சங்க காலத்தில் விடங்கர் சிற்பம் நாட்டிய, வன்னி மரங்கள் கொண்ட மன்றத்தே மக்கள் கூடி தென்புலத்தோரின்
ஈமச் சடங்குகள் செய்த செய்திகளைத் தொகுத்துப் பார்த்தால் வன்னி என்னும் பரம்பையும், அதுபோன்ற கொன்றையும் சிவனுக்கு விசேடம்
ஆதலை இந்திய சமய வரலாற்றில் விளங்கும்,
நா. கணேசன்