பரல் நானூறு 3
______________________________________
சொற்கீரன்
அம்பி ஊரும் மணிநீர்ப் பரவை
அலைபடு அலைபடுப் படலம் போன்ம்.
தும்பி நுண்சிறை நுழைபடுத்தாங்கு
துன்புறல் இன்பம் தீண்டத் தீண்ட
அழல்பெரிது ஊழி இன் தீ பெருக்கும்.
பெரும, எந்தன் அமளி பரலிய அனிச்சம்
வேகும் வெந்து தணிப்பெருங்காடு.
கழை வளர் அடுக்கம் ஆடுமழை நீங்கி
சிமைய வாங்கும் ஓங்கு மணல் முன்றில்
கல்லாப்பெருங்கல் புல்லென புலவு மன்.
பொல்லாப் பொய்வான் கொல்பகை தீர்க்கும்.
கலிபரி விசைமான் கடுகியே விரைக.
பாசுவல் பெய்த புன்காற் பந்தர்
வாயில் படுக்கும் இளமணல் விரவி
ஈரம் பிழியக் கிடந்தமை அறிதி.அஃதென்
விழிநீர் தகைத்தே நோன்றல் காட்டும்.
_________________________________________
சிலம்புத்தமிழை
சீந்துவார் இலையோ என
சீற்றம் கொண்டு
தமிழ்ப்பரல் சிலிர்த்ததில்
தெறிதவையே இவை.
_________________________________
சொற்கீரன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/7dfa6368-f34e-4bab-be1c-4a2638d37c23n%40googlegroups.com.
ஆறு திரள்வீர்
_______________________________________________
வடநாட்டார் தூங்கார் என
முக்குடை வேந்தர் முது வீரம்
காத்தார் மூசு தணல் முற்றி.
வில் புலி மீன் எனும்
வேறு திறம் மறந்து ஓர் திறம்
ஒன்றே நெஞ்சில் வைத்தார்.
வடபுலப்புகையின் பகைதனை
வெல்லுதல் அன்றி தமிழா
வேறு புலம் காண்கும் புல்லர்
அல்ல அல்ல யாம் என்றே
புலிகள் ஆகினார் கரிகள் ஆகினார்.
கலிமா துள்ளும் களிப்படை ஆகினார்.
முக்கொடியும் ஓர் கொடியாய்
முத்து சுடர்ந்த வெல் திறம் காட்டினார்.
அஃதே தான் அறிதி!ஒண்தமிழ்ச் செல்வா!
குறு குறு சாதி மத வெறித்தீயில்
கருகிடவோ அந்த கோவூரான்
இத்தீவரி தந்தான்!கேண்மின்.கேண்மின்.
வேல் மறம் உண்டு வேள் மறம் உண்டு.
மீன் மறம் கொண்டு கடலும் வென்றான்.
வல்வில் சாலும் பனிமலை மீதும்
கொடியினை நிறுத்தி கோலம் கண்டான்.
தமிழ் மறம் மூன்றும் ஒரு திறம் கொண்டு
வேர்ப்பகைக் கொன்று முக்குடை காக்க
வடபுலம் தென்புலம் யாவும் ஒருபுலம்
என்ன எழுந்து செந்திசை காட்டி
செயல் மறம் கிளர்ந்து ஒரூஉ ஓர்ந்து
வென்றி கோள்மீன் உறுமீன் அன்ன
கனல் விழி நோக்குமின்.காலம் மறையுமுன்
இமயமும் நகர்ந்தே தென் மின் ஆர்க்கும்
ஆறு திரள்வீர் அடுபகை கொல்வீர்.
_____________________________________________________
செவ்வூர் கிழான்
தங்கள் புறநானூறு 31 "ஒளிப்படம்"கண்டேன்.
தங்கள் பணி ஒப்புயர்வற்றது.
அதைக்கண்ட மறுகணமே
இந்த புதிய புறநானூற்றுப்பாடல் ஒன்றை
யாத்து அளிக்கின்றேன்.
நன்றி.
"செவ்வூர்க் கிழான்"
(இ பரமசிவன்)
___________________________________________________________________________________________________________________________________
பின்குறிப்பு:
இம்மடலும் என் சங்கக்கவிதைச்செய்யுளும் அன்று அந்த ஒளிப்படம் பார்த்த சில நொடிகளில் இயற்றப்பட்டது.