வாணியம்பாடி

127 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 13, 2019, 2:45:34 AM9/13/19
to மின்தமிழ்
source:  https://vaniyartv.wordpress.com/tag/செட்டியார்-வரலாறு/

செட்டியார் வரலாறு

இளவேட்டன் செட்டியார் மன்னர்

நம் வாணியர் குலத்திற்கு பெருமை சேர்த்த இளவேட்டன் வாணியர்

மந்தாரை மலையைப் போன்ற தோள்களை உடையவன் ஒப்பில்லாதவன் புகழ் பெற்றவன் இளவேட்டன் என்னும் பெயர் கொண்டவன் சிறந்தவன் அந்தணர்களுக்கும் துறவிகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் வேண்டியவற்றை கொடுத்து எப்போதும் தர்ம சிந்தை உடையவன் .
சிறந்த வாணியச் செட்டி குலத்தில் பிறந்த அவன் அழகேசன் என்றொரு அரசனுக்கு நண்பனானான் . இந்த அரசன் தன் நண்பனான இளவேட்டன் வாணியனிடம் பொருள் அனைத்தையும் கொடுத்து உன் உறவினர்களுக்கும் உங்கள் வம்சத்திடம் வந்து தர்மம் கேட்பவர்களுக்கு பொருள் கொடுப்பதற்கும் அங்கிருந்து வாழ்வதற்கும் பாடி என்ற நாட்டை உனக்குத் தருகிறேன் என்று கூறினான் . 

அரசன் இவ்வாறு சொன்னவுடன் இளவேட்டனின் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி இளவேட்டனார் அவர்களே இன்று நாங்கள் சொல்வது ஒன்று உண்டு அதை நீங்கள் தட்டி விடாதீர்கள் என்று நம் குல மக்கள் அனைவரும் கூறினார்கள். அவர் கூறியது என்னவென்றால் இந்த அரசன் இருக்கும்வரை உன்னுடைய எந்த சொல்லுக்கும் தடை இருக்காது எனவே இந்த அரசன் இருக்கும் போதே அவன் அளிக்கப்பட்ட இந்த ஊரை நமக்கு உரியதாகி விடு. அதனால் இந்த பூமி உள்ளவரை உன் புகழும் நம் வாணியர் குலத்தின் போகாது என்று கூறினார்கள் மேலும் சிலரோ பாடி என்ற சொல்லினால் நமக்கு பெருமை ஒன்றும் இல்லை எனவே பாடி என்ற பெயருடைய பெயருடன் கூடிய நாகரிக நகரத்தில் நாங்கள் குடியேற்றம் செய்ய வேண்டும் என்று அவர்களில் சிலர் கூறினார்கள்

இளவேட்டனும் அரசனிடம் சென்று அரசினால் வழங்கப்பட்ட பாடி என்னும் நாட்டிற்கு எங்கள் மரபின் பெயரை வைத்து தரவேண்டும் என்று கேட்டான் . சோழ அரசனும் பாடி என்னுமிடம் இனிமேல் வாணியம்பாடி என்று வழங்கப்படும் என்று சொன்னான். இவ்வாறு வாணியம்பாடி என்று பெயரிட்டவுடன் வைசியர் யாவரும் அவ்விடத்தில் குடியேறினர். [...]

இசையினியன்

unread,
Sep 13, 2019, 3:37:11 AM9/13/19
to மின்தமிழ்

படித்ததும் நினைவுக்கு வந்தது.

இதில் வரும் "இளவேட்டைன்" எனும் பெயர். "பொன்னியின் செல்வன்" கதையில் வரும் "பழவேட்டையர் " என்பதை நினைவுபடுத்துகிறது.

அக்கதையிலும் சோழன் வருகிறார். வேட்டையர் வருகின்றனர். சோழனை நட்புப்பிடிக்குள் வைத்து இருக்க முயற்சிகள் செய்கின்றனர். அது போன்றே இது சிறுகதையாக இருக்கிறது.

இக்கதையில் வாணியம்பாடி வருகிறது. அக்கதையில் பழுவூர் வருகிறது.

தேமொழி

unread,
Sep 13, 2019, 3:53:31 AM9/13/19
to மின்தமிழ்

*வாணியம்பாடி* பெயர் காரணம் 


[...]
ஸ்தல வரலாறு:
      ஆக்கும் தொழிலை மையமாக கொண்ட பிரம்மா அவரது மனைவியான  சரஸ்வதியிடம் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களை படைக்கும் திறமை தனக்கு உள்ளதால் தான் தான் பெரியவர் என்று கூறினார். ஆகவேதான் பிரம்மா,விஷ்ணு, சிவன் என்று கூறுகின்றனர் என்று ஆணவத்தில் கூறினார்., அதனை கண்ட சரஸ்வதி  புன்னகைத்தார்.
         ஆதாலால் மிகவும் கோபம் அடைத்ந்த பிரம்மா, சரஸ்வதியை ஊமையாக்கினார்.  கலைமகளும் இதனால் கோபம் கொண்டு  ஸ்ருங்கேரி என்னும் இடத்தில் தவம் மேற்கொண்டார். சரஸ்வதியை பிரிந்த பிரம்மா  மிகுந்த தவம் மேற்கொண்டு தேவர்களின் உதவியுடன், சரஸ்வதியை கண்டுபிடிக்க முயன்றார். அனால் தேவர்கள் கடும் யாகம் மேற்கொண்டால் தான் உதவுவார்கள். ஆனால் மனைவி இல்லாமல் செய்யும் யாகம் பலன் இல்லை என்று தேவர்கள்  கூறினார்.
        பிறகு பிரம்மாவே தீவிரமாக  சரஸ்வதியை தேடி கடைசியில் சிருங்கேரியில் அவரை கண்டுபிடித்து சமாதானம் செய்து அவருடன் அழைத்து சென்றார்.
        அவர்கள் போகும் வழியில் பாலாற்றின் வடக்கு கரையில் உள்ள சிவபெருமானின் கோவிலுக்கு  சென்று  தங்கினார்.
         அங்கு சிவ பெருமான் சரஸ்வதிக்கு பேசும் தன்மையை அளித்தார்.
பெயர் வர காரணம்:
      வாணி எனப்படும் சரஸ்வதி தேவி இந்த தலத்தில் வந்து இறைவன் பேசும் திறமையை  தந்தார். பிறகு வாணி இறைவனை புகழ்ந்து  பாடினார். 
[...]

தேமொழி

unread,
Sep 13, 2019, 4:07:21 AM9/13/19
to மின்தமிழ்
இப்பகுதி நடுநாடு  என்ற பகுதி - அப்பர் பிறந்த திருமுனைப்பாடி  பகுதி.

இங்கு அருகில் கணியம்பாடி என்ற ஊரும் (வேலூருக்குத் தெற்கில்) உள்ளது.

 

N D Logasundaram

unread,
Sep 13, 2019, 10:53:37 AM9/13/19
to தமிழ் மன்றம், mintamil, vallamai, thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan
நூ த லோ சு
மயிலை
 Forwarded Conversation
Subject: [MinTamil] வாணியம்பாடி
------------------------
From: தேமொழி <jsthe...@gmail.com>
Date: Fri, Sep 13, 2019 at 12:15 PM
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>

=============================
From: இசையினியன் <pitchaim...@gmail.com>
Date: Fri, Sep 13, 2019 at 1:07 PM
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
படித்ததும் நினைவுக்கு வந்தது.
இதில் வரும் "இளவேட்டைன்" எனும் பெயர். "பொன்னியின் செல்வன்" கதையில் வரும் "பழவேட்டையர் " என்பதை நினைவுபடுத்துகிறது.
அக்கதையிலும் சோழன் வருகிறார். வேட்டையர் வருகின்றனர். சோழனை நட்புப்பிடிக்குள் வைத்து இருக்க முயற்சிகள் செய்கின்றனர். அது போன்றே இது சிறுகதையாக இருக்கிறது.
இக்கதையில் வாணியம்பாடி வருகிறது. அக்கதையில் பழுவூர் வருகிறது.91a98facfbb5%40googlegroups.com.
============================================================================
From: N D Logasundaram <selvi...@gmail.com>
Date: Fri, Sep 13, 2019 at 1:20 PM
நூ த லோ சு
மயிலை
ஓர் மடல் நகல் பகிர்வு 
தேமொழி <jsthe...@gmail.com>  Fri, Sep 13, 2019 at 12:15 PM
வாணியம்பாடி To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
========================
இதுபோன்றவை தலவரலாறுகள்  போல் சாதிபெருமை பேச எழுந்த வேற்றுக் கற்பனைப் புராணக்கதைகள்
கற்பித்தலைத் தொழிலாகக் கொண்ட பிராமணர் செய்யும் புராணக் கூத்துகளிற்கு இணையான  ஒன்றுதான்  இது
இதனில் to read in between lines என ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினரைப் போற்றிப்
பேச எழ்ந்த ஓர் தனி மனித பரிசில் வாழ்கப்புலவன் கற்பனையின் பிறந்தது அவனது அறிவுதான் இடைஇடைய காண்பது 

மேலும் ஒரு சொல்லிற்கு மனம் போன வழி பொருள் காட்டும் நிலை - இளவேட்டனார் & பாடி'யில் உள்ளன  

மெய்யிற்கு முற்றிலும் புறம்பான = பொய்யான  ஏமாற்று தொழிலாகும் சோசியம் பயன்கொள்ளும் 
திறன்களில் ஒன்றுதான் மக்களிடம் இருப்பதையே காட்டி அதனிலிருந்து கொண்டு தனக்குத்தேவையான 
வற்றை அதனுடன் பிணைத்துப் புகுத்துவது அவ்வடியில் ஒன்றாகத்தான் பாடி  இளவேட்டன் மந்தாரம்  வாணிகன்
 என்பவற்றைக் நான் காண்கின்றேன் 

மந்தாரம் என்பது ஓர் மலை  (சிறு குன்றுதான்) பிகாரில் உள்ளது அது சைவர்களுக்கு சமணர்களும் புனித தலம் ஆகும் 
தேவாரம் திருவாசகம் மற்றும் இந்தியாவில் இவை மேனமையானவை எனும் மலைகளில் ஓன்றாகக் காணப்படுவதே

உவமை மட்டும்தான் சமவெளி பரப்பின் நடுவண்  தனித்து வீங்கி நிற்கக்காணும் குன்று என்பதால் தோளிற்கு ஆளப்பட்டது 
  
நான் காணும் தொடர்புடைய சில செய்திகள் இவை மட்டும்
இளவேட்டனார் எனபவர் சங்கநூல்களின் காலத்து புலவர்
இவர் இயற்றிய 5 பாடல்கள் கீழே காண்க 

இவர் வணிகர் அதாவது அறுவை வணிகர் = துணிகளி விற்பனை செய்யும் வாணிகர் 
வடநாட்டில் பாஜாஜ்  எனும் குலதவர் துணிவணிகம் செய்பவர்களாகுமாம் 

சங்க நூல்களில் 
(மதிரை அறுவை வணிகன்)  இளவேட்டனார் 
எனும் புலவர் 5 பாடல்களுக்கு ஆசிரியராக இருகின்றமையைக்காணலாம் 

மேலும் மந்தார மலை என்பது இன்றைய பீகார் மாநிலத்தில் உள்ளது 
இங்கு மலைக்கு(குன்றிற்கு மேலும் கீழும் சமண சைவ கோயில்கல் பழமையனவை 
எனும் தனித்தன்மையுடன் புனித தலமகின்றவை

செட்டிகள் எனும் சொல் வெண்மை நிறமான தோலை உடையவர்கள் அதாவது கருமை 
நிற திராவிடருக்கு வேறானவர் முருகனை செட்டி என்பார் அருணகிரிநாதர் அதாவது 
செவ்வேள் தகப்பன் சிவனைப் போல் சிவந்தவன் ஆனால் கருப்பு (பச்சை) நிற தாயருக்கு
 மலையரசன் ( பர்வதராசன்)  மகள் பார்வதிக்குப் பிறந்தவன் சிவந்த நிற இந்திரன் மகளாகிய
தெய்வானையையும்  பச்சை நிற வேடர்குல வள்ளியையும் மணந்தவன்
"செக்கச் சிவந்திருப்பாள்  செட்டிமகள் போலிருப்பாள்" என்பது யாதார்த்மாக வெளிவரும் ஓர்
 நாட்டுப்புறப்பாடல் வரி  

பிற்காலத்து ணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக நின்று வாழ்பவர்கள் அல் அதனால்  கலப்பினம்
 ஆனவர்கள் அடிக்கடி சத்திரியர்கள் போல் நாடு விட்டு நாடு சென்றுதான் தன்  தொழிலை செய்பவர்கள் 
ஓர் இடமக இருந்து வாழ்பவர்கள் வேளாளர்கள்தான் மண்னின் மைந்தர்கள் இவர்கள்தான் ஓர் நாட்டு
 மக்களின் இயல் பானவர்களாக கொள்ளத்தக்கவர் அதனல்தன் இவர்களை நாட்டு குடிகள் என்பர் 
==========================================
(1)
மாப்புகை கமழும்
பாடியவர்: மதிரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
திணை: வாகை துறை : மூதின் முல்லை

இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி
நன்னீர் ஆட்டி நெய்ந்நறைக் கொளீஇய
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்
அருமுனை இருக்கைத்து ஆயினும் வரிமிடற்று
அரவுஉறை புற்றத்து அற்றே நாளும்
புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே                              புறநானூறு  328

                            185 குறிஞ்சி - தலைவி கூற்று
நுதல்பசப் பிவர்ந்து திதலை வாடி
நெடுமென் பணைத்தோள் சாஅய்த் தொடி நெகிழ்ந்
தின்ன ளாகுத னும்மி னாகுமெனச்
சொல்லி னெவனாந் தோழி பல்வரிப்
பாம்புபை அவிழ்ந்தது போலக் கூம்பிக்
கொண்டலிற் றொலைந்த வொண்செங் காந்தள்
கன்மிசைக் கவியு நாடற்கென்
நன்மா மேனி யழிபடர் நிலையே
                 [மதிரை அறுவை வாணிகன் இளவேட்டனார்]      குறுந்தொகை

              33 - பாலை - இளவேட்டனார்
படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை
முரம்பு சேர் சிறுகுடி பரந்த மாலை
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து
கல்லுடை படுவில் கலுழி தந்து
நிறை பெயல் அறியாக் குன்றத்து ஊண் அல்லில்
துவர் செய் ஆடை செந் தொடை மறவர்
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை
இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல்
வல்லுவம்கொல்லோ மெல்லியல் நாம் என
விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி
நல் அக வன முலைக் கரை சேர்பு
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே 33

பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகளது குறிப்பு
அறிந்த தோழி தலைமகற்குச் சொல்லியது  
                          நற்றிணை

157 பாலை - இளவேட்டனார்
இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப்
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப
யாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில்
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும்
நம்வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிகக்
கேட்டொறும் கலுழுமால் பெரிதே காட்ட
குறும் பொறை அயல நெடுந் தாள் வேங்கை
அம் பூந் தாது உக்கன்ன
நுண் பல் தித்தி மாஅயோளே

பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம்
உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது                                  
           நற்றிணை
     
344 குறிஞ்சி - மதிரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல்
இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம்
காவல் கண்ணினம்ஆயின் ஆயிழை
நம் நிலை இடை தெரிந்து உணரான் தன் மலை
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம்
சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்ப
செல்வன் செல்லும்கொல் தானே உயர் வரைப்
பெருங் கல் விடரகம் சிலம்ப இரும் புலி
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து
செந் தினை உணங்கல் தொகுக்கும்
இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே

தோழி சிறைப்புறமாகத் தலைமகன் கேட்பச் சொல்லியது    நற்றிணை








Reply all
Reply to author
Forward
0 new messages