ஆயிரம் தாமரைக் கண்ணான் இந்திரன் - இரணியன் வதைப் படலம்.

1,369 views
Skip to first unread message

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 23, 2013, 7:56:58 AM8/23/13
to mintamil, vallamai, நா. கணேசன், Hari Krishnan, ஐயப்பன் கிருஷ்ணன்
 
 நம் குழுமங்களில் இந்திரனின் ஆயிரம் தாமரைக்? கண்களைப் பற்றி முன்பு சுவையான சூடான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. நண்பர் திரு கணேசன் கம்பனில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு எங்கே என்று கடைசிவரை கூறாததால் இழை நீண்டது. கடைசியில் திரு ஹரிகி சரபுங்கர் வருமிடத்து என்று பாடல் தந்தார்.
 
காரைக்குடி தமுஎ சங்கத்தின் மாத இலக்கியக் கூட்டத்தில் 14.09.2013 அன்று கம்பராமாயணத்தின் யுத்தகாண்டம் பற்றி பேசுவதற்கு ஆர்வலன் என்ற வகையில் ஒத்துக்கொண்டுள்ளேன். ஏற்கனவே கம்பராமாயணச் சிந்தனை ஐந்து மாதங்கள் முடிந்துவிட்டன.
இயன்றவரை சொல்ல த.இ. ப்ல்கலைத் தளத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நண்பர்கள் வாழ்த்து வேண்டுகிறேன்.
 
இரணியவதைப்படலத்தில் நண்பர் திரு மோகனரங்கன் கூறுகிற நாரணன் நாமம் உருசித்தது. இரணியவதைப்படலம் வீடணன் அறத்தின்பால் நிற்பதற்கும் தீமையழியும் என்பதற்குமான முன்னோட்டம்.
 
குரு பிரகலாதனுக்கு இரணியன் பேரைச் சொல்லித்தர முயன்றதும் அவர் கடைசிவரை நாராயணன் பேரைச்சொல்லாமல் சொன்னால் நரகம் புகுவேன், நாக்கு வெந்துபோகுமென்றதும் பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்ற வரிகளை நினைவூட்டின.
குரு - பிரகலாதன், பிரகலாதன் - இரணியன், இரணியன் - நாரணன் உரையாடல்கள், சீயம் சிரித்தது, ககனமுட்டை உடைந்தது அனைத்தும் கம்பச்சித்திரங்கள். 
 
நரசிங்கரது சினமடங்க ஆவித்துணையை அமிழ்தின் பிறந்தாளை அருகில் கொணர்வதும் நாராயணன் தேவியைக் காதலால் நோக்கிப் பிறகு பிரகலாதனைப் பார்த்துத் தந்தையைக் கொன்றதற்குப் பொறுக்கச் சொல்வதும் உளவியற் கருத்துக்கள். இன்றும் இலட்சுமிநரசிம்பர் பல இடங்களில் அருள்பாலிக்கிறார்.
சிவபெருமான் காரைக்கால் அம்மையாரை அன்னை என்றதுபோல பிரகலாதனை ‘எந்தையே’ என்கிறார் பெருமான்.
என்பு பெறாத இழி பிறவியெய்தினும் அன்புபெறும் பேறு அடியேர்க்கு அருள் என்று பிரகலாதன் வேண்டுகிறான். அன்பின் பெருமை தந்தை, தாய் பதவி நல்கிறது.
 
அதனுடன் சினமடங்காத மானுட மடங்கலைக் கண்டு அஞ்சியவர்களில் முளரி ஆயிரம் கண்ணினான் என்று இந்திரன் குறிக்கப்பெறுவதையும் கண்டேன். முன்பு தரப்பட்ட பாடல் தவிரவும் பிறிதொரு பாடலான கீழ்க்கண்ட பாடலிலும் ஆயிரம் தாமரைக் கண்ணினான் என்று இந்திரன் குறிக்கப் பெறுவதைப் பகிர்ந்துள்ளேன்.
 
 
 
 
முன்பு இரணியனுக்கு அஞ்சியோடி ஒளிந்திருந்த தேவர்கள் அவன் இறந்த நிலையில் அங்கு வந்து குழுமி நரசிங்கத்தின் தோற்றத்தைக் கண்டு அஞ்சி நிற்றல்(6469-6470)

6469. ‘முக்கணான் எண்கணானும்,
    முளரி ஆயிரக் கணானும்,
திக்கண் ஆம் தேவரோடு
    முனிவரும், பிறரும், தேடிப்
புக்க நாடு அறிகுறாமல்
    திரிகின்றார், புகுந்து மொய்த்தார்;
“எக்கணால் காண்டும் எந்தை
    உருவம்“ என்று இரங்கி நின்றார். ‘
 
 
 
 

 

 

 

 

முக்கணான்  எண்கணானும்  -  மூன்று  கண்களை உடைய 
சிவபிரானும்   எட்டுக்   கண்களை   உடையபிரமதேவனும்; முளரி
ஆயிரம்  கணானும்
  -  தாமரை  போன்ற  ஆயிரம்   கண்களை
உடையவனான   தேவேந்திரனும்; திக்கண்  ஆம்   தேவரோடு
முனிவரும்  பிறரும் 
-   திசைகள்   தோறும்  சென்று திரிகின்ற 
தேவர்களும் முனிவரும்  மற்றும்  உள்ளவர்களும்;  தேடிப்  புக்க 
நாடு  அறிகுறாமல்  திரிகின்றார்
- இரணியனுக்குப் பயந்து, தேடி
வந்தாலும்   அவர்கள் இருக்கும்   நாடு   எவருக்கும் தெரியாதபடி
திரிந்தவர்கள்; புகுந்து   மொய்த்தார் - (நரசிங்கத்தால் இரணியன்
மாய்ந்தது  தெரிந்து) வந்து திரண்டார்கள்; எந்தை  உருவம்- எம்
பெருமான் கொண்ட  நரசிங்க வடிவத்தை; எக்கணால் காண்டும் -
எந்தக்  கண்களால் காண  இயலும்?; என்று  இரங்கி நின்றார் -
என்று கூறி இரங்கி நின்றார்கள் (த.இ.பல்கலை தளம்)


அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

வேந்தன் அரசு

unread,
Aug 23, 2013, 8:43:24 AM8/23/13
to vallamai, mintamil, நா. கணேசன், Hari Krishnan, ஐயப்பன் கிருஷ்ணன்
கணேசரு டிக்ளேர்டு த வின்னர்.
( அவரை நேரில் பார்த்த போது நீங்க உங்க கருத்தை சரியாக மெய்ப்பிக்கலை என்று சொல்ல கணேசரு புன்னகைத்தார்.)

உரைகாரர் உரை எல்லாம் திருத்துங்க.

நெடுநாளைய வினை தீர்க்க வந்தவருக்கு நன்றி

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
ராஜேந்திரனின் உலகு

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Aug 23, 2013, 9:06:33 AM8/23/13
to vall...@googlegroups.com, mintamil, Banukumar Rajendran, மு இளங்கோவன், Dr. Krishnaswamy Nachimuthu, sirpi balasubramaniam
On Friday, August 23, 2013 4:56:58 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:
 
 நம் குழுமங்களில் இந்திரனின் ஆயிரம் தாமரைக்? கண்களைப் பற்றி முன்பு சுவையான சூடான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. நண்பர் திரு கணேசன் கம்பனில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு எங்கே என்று கடைசிவரை கூறாததால் இழை நீண்டது. கடைசியில் திரு ஹரிகி சரபுங்கர் வருமிடத்து என்று பாடல் தந்தார்.
 

அன்புநிறை வினைதீர்த்தான் ஐயா,

அற்புதமான காட்டு. இன்னும் பல உள. தொகுத்தளியுங்கள்.

நண்பர் பானுவுக்கு ஒரு பாடல் அனுப்பியதும், அதை திரு. பானுகுமார் ஹரிகி அவர்களுக்கு
அனுப்ப உடனே ஹரிகி , பானுகுமார் எனுப்பியது என்று சொல்லாமல், அனுப்பி வைத்த
பாடலைப் பற்றியா சொல்கிறீர்கள்?

இன்னும் பல பாடல்களில் இவை போல கம்பர் தருகிறார். அங்கதம் பாடுவதில்
வள்ளுவருக்கு நிகரில்லை. தமிழில் இன்னொருவர் வள்ளுவருக்கு இணை இல்லாத
துறைகள் பல. அவற்றில் அங்கதச் செய்யுள்களும் அடங்கும். நேற்றுதான்
தேமொழியாருக்கு ‘செவியுணவிற் ...’ குறளில் வள்ளுவனார் குறிக்கும் அங்கதம்
பற்றி விளக்கினேன். வள்ளுவர் தாமரைக்கண்ணான் என்று குறிப்பது இந்திரனை
என்று சமணர்கள் மரபு. சமணர் உரைகளில் காண்க. இதனை முதலில் உவேசா
கொங்குநாட்டார் இலக்கியம் என்கிற சிந்தாமணியில் வள்ளுவருக்கு உரைபோல
விளக்கியருளினார் திருத்தக்க தேவரவர்கள். கொங்குராசாக்களையும் தேவர்
என்பது கல்வெட்டு மரபு (உடனே, இப்பத்த தேவர்தான் கொங்குநாட்டை ஆண்டாங்க
என்று முடிவுக்கு இணையம் எடுத்துவிடக்கூடாது அல்லவா?) . அவரைப்
பின்பற்றி விருத்தத்தில் காவியஞ்செய்தவர் கம்பநாடர். 1000 முளரிக் கணான்,
இந்திரன் மேலில் உள்ளது முளரி. இங்கே முளரி  என்றால் என்ன? என்று கம்பர் பாடியுள்ளார்.
அந்த விருத்தத்தையும் இங்கே இடுங்கள். 

பிற பின்னர்!
நா. கணேசன்

Iyappan Krishnan

unread,
Aug 23, 2013, 9:22:49 AM8/23/13
to வேந்தன் அரசு, vallamai, mintamil, நா. கணேசன், Hari Krishnan

2013/8/23 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

கணேசரு டிக்ளேர்டு த வின்னர்.
( அவரை நேரில் பார்த்த போது நீங்க உங்க கருத்தை சரியாக மெய்ப்பிக்கலை என்று சொல்ல கணேசரு புன்னகைத்தார்.)


கரீக்டு.  அரசு கெஜட்ல திருவல்லபர் எனும் சமண முனிவர் அப்படின்னு வள்ளுவர் பேர மாத்தி ரெஜிஸ்டர் பண்ணிடனும்

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Aug 23, 2013, 9:47:17 AM8/23/13
to vall...@googlegroups.com, mintamil, நா. கணேசன், Hari Krishnan, ஐயப்பன் கிருஷ்ணன்
 // நம் குழுமங்களில் இந்திரனின் ஆயிரம் தாமரைக்? கண்களைப் பற்றி முன்பு சுவையான சூடான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. நண்பர் திரு கணேசன் கம்பனில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு எங்கே என்று கடைசிவரை கூறாததால் இழை நீண்டது. கடைசியில் திரு ஹரிகி சரபுங்கர் வருமிடத்து என்று பாடல் தந்தார். //

அவரு என்ன சொல்ல மாட்டேன், தனக்குத்  தெரியாதுன்னா நினைச்சாரு ?. தனக்குத் தெரிஞ்சா நல்லாருக்குமேன்னு தான் நினைச்சாரு.

N. Ganesan

unread,
Aug 23, 2013, 9:54:17 AM8/23/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, mintamil, Banukumar Rajendran, Dr. Krishnaswamy Nachimuthu


On Friday, August 23, 2013 6:47:17 AM UTC-7, ஜீவ்ஸ் wrote:
 // நம் குழுமங்களில் இந்திரனின் ஆயிரம் தாமரைக்? கண்களைப் பற்றி முன்பு சுவையான சூடான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. நண்பர் திரு கணேசன் கம்பனில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு எங்கே என்று கடைசிவரை கூறாததால் இழை நீண்டது. கடைசியில் திரு ஹரிகி சரபுங்கர் வருமிடத்து என்று பாடல் தந்தார். //

அவரு என்ன சொல்ல மாட்டேன், தனக்குத்  தெரியாதுன்னா நினைச்சாரு ?. தனக்குத் தெரிஞ்சா நல்லாருக்குமேன்னு தான் நினைச்சாரு.

முனைவர் ஐயா,

எவரு அவரு?

எனக்கு நன்றாக தெரிந்த பாடல். அதனால் அவ்விழை துவக்கினேன். இதுபற்றிப் பலர் எழுதியுள்ளனர்.
உங்கள் அவருக்கு அந்த பாடல் தெரியுமா? என்றறிய இம் மடல் உதவும்:

நா. கணேசன் 

Nagarajan Vadivel

unread,
Aug 23, 2013, 10:19:12 AM8/23/13
to vallamai
வள்ளுவர் என்ற பிரிவு கொங்குநாட்டில் ல் நிமித்திகம் சமயக் கணக்கர் என்று அரசவையில் அறவுரைப்போராக இருந்தார்கள் என்று கணேசர் ஐயா விரைவில் வள்ளுவர் மயிலாப்பூர்காரர் என்ற மாயையை உடைத்தெறிவார் என்று நம்பலாம்

வவ


2013/8/23 N. Ganesan <naa.g...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Aug 23, 2013, 12:26:10 PM8/23/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, mintamil, Banukumar Rajendran, Dr. Krishnaswamy Nachimuthu


நான் முனைவேரு எல்லாம் இல்லீங்க். 

மேலே நீங்க குடுத்த இழையும்.. இப்ப படிச்சிட்டு இருக்கிற இழையும் ஒண்ணு தானுங்க்.

Iyappan Krishnan

unread,
Aug 23, 2013, 12:29:55 PM8/23/13
to vall...@googlegroups.com, mintamil, Banukumar Rajendran, Dr. Krishnaswamy Nachimuthu

2013/8/23 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

எனக்கு நன்றாக தெரிந்த பாடல். அதனால் அவ்விழை துவக்கினேன். இதுபற்றிப் பலர் எழுதியுள்ளனர்.

ஹெஹெஹெ.....   அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா #கவுண்டர் இன் சூரியன்

N. Ganesan

unread,
Aug 23, 2013, 12:45:45 PM8/23/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
2013/8/23 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
> ஹெஹெஹெ.....   அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா #கவுண்டர் இன் சூரியன்

அரசியல் முனைவரே, உங்கள் அரசியலுக்கு இதெல்லாம்
சாதாரணந்தான்.

நா. கணேசன்

 

Iyappan Krishnan

unread,
Aug 23, 2013, 1:31:23 PM8/23/13
to vall...@googlegroups.com, mintamil
அந்த இழைய மீள் பார்வை பார்த்தா தெரியும் யாரோடது அரசியல்னு ஐயா :)

எத்தனைப் பேரு ( நானும்  விடாம தொடர்ந்துக் ) கேட்டும் " தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்க " " கம்பராமாயணம் படிக்கிறவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க "  அப்படின்னு தான் ( ஒரு ரெண்டு மூனு மாசம் இருக்குங்களா? )  உங்க கிட்ட இருந்து பதில் வந்துட்டு இருந்தது இல்லீங்களா ?  மறந்திருந்தா ஒருக்கா வெரிஃபை பண்ணிக்கோங்க.


//
எனக்கு நன்றாக தெரிந்த பாடல். அதனால் அவ்விழை துவக்கினேன். இதுபற்றிப் பலர் எழுதியுள்ளனர்.//



அப்படியே அந்த சம்பந்தர் விஷயமும் #ஹிஹி... அதெல்லாம்  இப்ப எதுக்குங்கறீங்களா



Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/8/23 N. Ganesan <naa.g...@gmail.com>
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/SeH5GScj5aU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 23, 2013, 1:54:18 PM8/23/13
to vall...@googlegroups.com, vall...@googlegroups.com

On Friday, August 23, 2013 7:19:12 AM UTC-7, பூனைக் கவிராயர் wrote:
வள்ளுவர் என்ற பிரிவு கொங்குநாட்டில் ல் நிமித்திகம் சமயக் கணக்கர் என்று அரசவையில் அறவுரைப்போராக இருந்தார்கள் என்று கணேசர் ஐயா விரைவில் வள்ளுவர் மயிலாப்பூர்காரர் என்ற மாயையை உடைத்தெறிவார் என்று நம்பலாம்

 

MunaivarkaLE, I have already written
about fictional hagiographies in Tamil
Bhakti era, the prime examples of
fiction is done on Sambandhar
who probably was singing at 30 or 40.
The infant story about him is built
centuries after his death, primarily
by Cekkizaar. The other pure hagiography
is on AaNDaaL. Some Tamil scholars
consider her purana as pure myth,
see Prof. K. Sadasivan's book on
Devadasi cult. Also, Rajaji's essay.
Dr. R. Nagaswamy has talked to me
about this story. See his book,
Ramanuja: Myth & Reality.
 
There is lot of work that needs to
be done in Universities in India and
abroad on Tamil hagiography and
myth builind by Tamil Bhakti across
centuries.
 
Anbudan,
N. Ganesan

Benjamin LE BEAU

unread,
Aug 23, 2013, 2:08:52 PM8/23/13
to vallamai, சொ. வினைதீர்த்தான்
அன்பபிற்கினிய நண்பருக்கு!
வணக்கம்!

காரைக்குடி தமுஎ சங்கத்தின் மாத இலக்கியக் கூட்டத்தில்
14.09.2013 அன்று கம்பராமாயணத்தின் யுத்தகாண்டம் பற்றிப்  பேசுவதற்கு
அணியமாகிக்கொண்டு இருப்பது அறிந்து மகிழ்ந்தேன்.
தங்கள் உரை சிறப்புரையாக அமைவதற்கு நல்  வாழ்த்துகள்.

கம்ப இராமாயணத்தில் பெரிய காண்டம் யுத்த காண்டமே!
ஏறக்குறைய பாதி நூலை அதற்கெனவே கம்பன் ஒதுக்கி இருக்கிறான்.
சுவையான பகுதிகள், சொல்லாட்சிகள், கவி நயங்கள், காவிய நலன்கள்...எனப் பல உண்டு.
முடிந்தவரை எல்லாவற்றையும் படித்து முடித்து அலசிப் பார்த்து
எடுத்துக் கூறுங்கள்!


கம்பனின் திருவருள் பெறுக!
கம்பன் வழிபட்ட நரசிங்கப் பெருமாளின் அருள் நிறைக!
அன்புடன்
பெஞ்சமின்





2013/8/23 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

--

Selvan Kovai

unread,
Aug 23, 2013, 10:03:46 PM8/23/13
to vallamai, mintamil, நா. கணேசன், Hari Krishnan, ஐயப்பன் கிருஷ்ணன்
2013/8/23 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
கணேசரு டிக்ளேர்டு த வின்னர்.
( அவரை நேரில் பார்த்த போது நீங்க உங்க கருத்தை சரியாக மெய்ப்பிக்கலை என்று சொல்ல கணேசரு புன்னகைத்தார்.)



கம்பராமாயணத்தில் ஆயிரம் இடத்தில் ராமனை தாமரைக்கண்ணன் என்கிறார் கம்பர்

குறள் காலத்துக்கு சமமான சங்க இலக்கியம் பலவற்றிலும் தாமரைக்கண்ணன் திருமால் தான்.

முக்கியமா குறளுக்கு முந்தைய வடமொழி இலக்கியங்களில் தாமரைக்கண்ணன் திருமால் தான்.

குறளுக்கு 800 வருடம் கழிச்ச கம்பராமாயணத்தில் 2 இடத்தில் இந்திரனை தாமரைக்கண்ணன் என்பதால் கணேசர் வின்னரு என்பது முறையா?.

தீர்ப்பை மாத்துங்க நாட்டாமை
--
செல்வன்

https://www.facebook.com/holyape

https://www.facebook.com/groups/tamilhealth/


நினைத்த உடனே முக்தியை தந்திடும்
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

தேமொழி

unread,
Aug 23, 2013, 11:59:13 PM8/23/13
to vall...@googlegroups.com

வழக்கின் நோக்கத்தை சரியாகப் படிக்கவும் செல்வன்...


///நம் குழுமங்களில் இந்திரனின் ஆயிரம் தாமரைக்? கண்களைப் பற்றி முன்பு சுவையான சூடான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. நண்பர் திரு கணேசன் கம்பனில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு எங்கே என்று கடைசிவரை கூறாததால் இழை நீண்டது.///


அவர் சொல்லியது போல கம்பராமாயணத்தில் இருக்கிறது என்பது பிரதிவாதியும், சாட்சிகளும் ஒத்துக்கொண்டாகிவிட்டது.

தீர்ப்பை மாற்றச் சொல்வது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தொடர வழி செய்யக்கூடும்.

:-))

..... தேமொழி

Innamburan S.Soundararajan

unread,
Aug 24, 2013, 1:01:57 AM8/24/13
to mintamil, vall...@googlegroups.com
வாழ்த்துக்கள், திரு.சொ.வி. நேற்று மதியம் 'யார் இந்த இந்திரன்' என்பதை பற்றி பாடம் நடந்தது. இந்திரபதவி உயர்ந்தது. இந்திரர்கள் யாவரும் உயர்ந்தவர்கள் அல்லர்.



2013/8/23 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

--

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 24, 2013, 1:46:26 AM8/24/13
to vall...@googlegroups.com, mintamil
 


2013/8/24 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>
வாழ்த்துக்கள், திரு.சொ.வி. நேற்று மதியம் 'யார் இந்த இந்திரன்' என்பதை பற்றி பாடம் நடந்தது. இந்திரபதவி உயர்ந்தது. இந்திரர்கள் யாவரும் உயர்ந்தவர்கள் அல்லர்.

மிக்க நன்றி ஐயா. நெடுநெல்வாடை, முல்லைப்பாட்டு, கம்பராமாயணப் பாடம் என்று மிகவும் சுறுச்றுப்பாக உள்ளீர்கள். எங்கு நடக்கிறது?
வணக்கத்துடன்
சொ.வி

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 24, 2013, 2:15:27 AM8/24/13
to vallamai, mintamil, Benjamin LE BEAU

2013/8/23 Benjamin LE BEAU <benjami...@gmail.com>


காரைக்குடி தமுஎ சங்கத்தின் மாத இலக்கியக் கூட்டத்தில்
14.09.2013 அன்று கம்பராமாயணத்தின் யுத்தகாண்டம் பற்றிப்  பேசுவதற்கு
அணியமாகிக்கொண்டு இருப்பது அறிந்து மகிழ்ந்தேன்.
தங்கள் உரை சிறப்புரையாக அமைவதற்கு நல்  வாழ்த்துகள்.
 
வணக்கம். வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே.
 
 
கம்ப இராமாயணத்தில் பெரிய காண்டம் யுத்த காண்டமே!
ஏறக்குறைய பாதி நூலை அதற்கெனவே கம்பன் ஒதுக்கி இருக்கிறான்.
சுவையான பகுதிகள், சொல்லாட்சிகள், கவி நயங்கள், காவிய நலன்கள்...எனப் பல உண்டு.
தோய்ந்து மொழிந்துள்ளீர்கள்.
வை.மு.கோ உரையின் முன்னுரையில் அவர் கம்பன் மற்ற காண்டங்களை எழுதி அனுபவத்தால் முதிர்ந்து சிறப்பெய்தி யுத்தகாண்டத்தில் முழுவீச்சுடன் காவியம் படைத்துள்ளான் என்று எழுதியுள்ளார்.
 


கம்பனின் திருவருள் பெறுக!
கம்பன் வழிபட்ட நரசிங்கப் பெருமாளின் அருள் நிறைக!
அன்புடன்
பெஞ்சமின்

மனம் நிறைந்த வாழ்த்துக்கு மீண்டும் நன்றி. எறும்பு வெல்லக்கட்டியைக் கடித்ததுபோல் உருசித்தவற்றைத் தனி இழையில் பகிர்ந்துகொள்கிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
 

Innamburan S.Soundararajan

unread,
Aug 24, 2013, 3:34:49 AM8/24/13
to vall...@googlegroups.com, mintamil
புதுச்சேரியில் உள்ள ஃப்ரென்ச் Ecole .

2013/8/24 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

--

வேந்தன் அரசு

unread,
Aug 24, 2013, 8:32:30 AM8/24/13
to vallamai, mintamil, நா. கணேசன், Hari Krishnan, ஐயப்பன் கிருஷ்ணன்



23 ஆகஸ்ட், 2013 10:03 PM அன்று, Selvan Kovai <hol...@gmail.com> எழுதியது:


2013/8/23 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
கணேசரு டிக்ளேர்டு த வின்னர்.
( அவரை நேரில் பார்த்த போது நீங்க உங்க கருத்தை சரியாக மெய்ப்பிக்கலை என்று சொல்ல கணேசரு புன்னகைத்தார்.)



கம்பராமாயணத்தில் ஆயிரம் இடத்தில் ராமனை தாமரைக்கண்ணன் என்கிறார் கம்பர்

குறள் காலத்துக்கு சமமான சங்க இலக்கியம் பலவற்றிலும் தாமரைக்கண்ணன் திருமால் தான்.



இல்லை செல்வன்.
 பிற கீழ்கணக்கு நூல்களில் மாலவனை விட  நெடியவனைத்தான்  பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அதையும் அன்றே சொல்லியுள்ளேன்.
 இந்திரலோகம் துய்ப்போர் உலகம்.
சொர்க்க லோகம் உய்ப்போர் உலகம் (உய்வு பெற்றோர்)
வேறு வேறானவை.

Selvan Kovai

unread,
Aug 26, 2013, 2:49:08 PM8/26/13
to vallamai, mintamil, நா. கணேசன், Hari Krishnan, ஐயப்பன் கிருஷ்ணன்

2013/8/24 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

பிற கீழ்கணக்கு நூல்களில் மாலவனை விட  நெடியவனைத்தான்  பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அதையும் அன்றே சொல்லியுள்ளேன்.



தாமரைக்கண்ணான் என அதிகமாக தமிழ் இலக்கியங்களில் அழைக்கபடுவர் யார்?

குறளுக்கு சமமான, முந்தைய காலகட்ட தமிழ், வடமொழி இலக்கியங்களில் இந்திரன் தாமரைக்கண்ணான் என அழைக்கபட்டது உண்டா?

Selvan Kovai

unread,
Aug 26, 2013, 2:52:37 PM8/26/13
to vallamai

2013/8/23 தேமொழி <them...@yahoo.com>

அவர் சொல்லியது போல கம்பராமாயணத்தில் இருக்கிறது என்பது பிரதிவாதியும், சாட்சிகளும் ஒத்துக்கொண்டாகிவிட்டது.

தீர்ப்பை மாற்றச் சொல்வது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தொடர வழி செய்யக்கூடும்.

:-))


கம்பராமாயணத்தில் இருக்கா இல்லையா என்பது பாயின்டே கிடையாது தேமொழி.

தாமரைக்கண்ணான் என வள்ளுவர் யாரைக்கூறுகிறார் என்பதுதான் பாயிண்டு

வள்ளுவர் காலத்துக்கு முந்தைய எந்த நூலிலிம் இந்திரனை தாமரைக்கண்ணான் என கூறூவதை காட்ட இயலாததால், வள்ளுவருக்கு 1000 ஆன்டு கழித்து பிறந்த கம்பன் எழுதிய நூலில் ஆயிரம் முறை அவர் ராமனை தாமரைக்கண்ணான் என அழைத்ததை மறந்து 2 இடத்தில் மட்டுமே இந்திரனை தாமரைக்கண்ணான் என கூறியது ஆதாரம் என்றால் அது தவறான ஆதாரம்.

amachu

unread,
Aug 26, 2013, 3:07:06 PM8/26/13
to mint...@googlegroups.com, vallamai, mintamil
On Tuesday, August 27, 2013 12:19:08 AM UTC+5:30, செல்வன் wrote:

2013/8/24 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
பிற கீழ்கணக்கு நூல்களில் மாலவனை விட  நெடியவனைத்தான்  பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அதையும் அன்றே சொல்லியுள்ளேன்.


தாமரைக்கண்ணான் என அதிகமாக தமிழ் இலக்கியங்களில் அழைக்கபடுவர் யார்?

குறளுக்கு சமமான, முந்தைய காலகட்ட தமிழ், வடமொழி இலக்கியங்களில் இந்திரன் தாமரைக்கண்ணான் என அழைக்கபட்டது உண்டா?



சமணத்துக்கு முரண் என்று சொன்னதே கேக்கலை. இதெல்லாம் கேட்குமா?

தேமொழி

unread,
Aug 26, 2013, 4:43:26 PM8/26/13
to vall...@googlegroups.com

///கம்பராமாயணத்தில் இருக்கா இல்லையா என்பது பாயின்டே கிடையாது தேமொழி.
தாமரைக்கண்ணான் என வள்ளுவர் யாரைக்கூறுகிறார் என்பதுதான் பாயிண்டு///

இரண்டும் வெவ்வேறு விவாதங்கள் செல்வன். போட்டுக் குழப்பிக்காதீங்க. 

1000 ஐத் தாண்டிய விவாதக் கருத்துக்களில், கம்ப இராமாயணத்தில் தாமரைக் கண்ணன் என்று இந்திரன் குறிபிடப்பட்டுள்ளாரா என்பதும் ஒரு வாதம்.  ஆமாம் குறிபிடப்பட்டுள்ள சான்றுகள் இருக்கிறது என்பது முடிவு.

தாமரைக் கண்ணன் என்று வள்ளுவரால்  குறிப்பிடப் படுபவர் யார் என்பது மற்றொரு விவாதம்?  இதற்கு இதுவரை விடை கிடைத்த நினைவில்லை.

..... தேமொழி 

Selvan Kovai

unread,
Aug 26, 2013, 5:00:14 PM8/26/13
to vallamai

2013/8/26 தேமொழி <them...@yahoo.com>

1000 ஐத் தாண்டிய விவாதக் கருத்துக்களில், கம்ப இராமாயணத்தில் தாமரைக் கண்ணன் என்று இந்திரன் குறிபிடப்பட்டுள்ளாரா என்பதும் ஒரு வாதம்.  ஆமாம் குறிபிடப்பட்டுள்ள சான்றுகள் இருக்கிறது என்பது முடிவு.


கரெக்டு..இதை யார் மறுத்தார்கள்? 

கம்பராமாயணத்தில் இருக்கு என சொன்னால் "எந்த பாடலில்" என எதிர்கேள்வி வருவது இயற்கை. அதையே கொடுக்காமல் இருக்கு, இருக்கு என இழுத்தடித்துகொண்டே போனதால் அந்த இழை சதமடித்தது.

தாமரைக்கண்ணான் என வள்ளுவர் கூறூவது நிருபிக்கபடலை என்கிறீர்கள்..ஆனால் வேந்தர் கணேசருக்கே வாதத்தில் வெற்றி என்கிறார். படிப்பவர்கள் ஏதோ இந்திரன் தான் தாமரைக்கண்ணான் என்பது நிருபிக்கபட்டு கணேசர் வெற்றி அடைந்ததாக கன்பியூஸ் ஆககூடாது என்பதால் தான் அந்த விளக்கத்தை எழுதினேன்:-)

வேந்தன் அரசு

unread,
Aug 26, 2013, 9:08:28 PM8/26/13
to vallamai



26 ஆகஸ்ட், 2013 2:52 PM அன்று, Selvan Kovai <hol...@gmail.com> எழுதியது:


2013/8/23 தேமொழி <them...@yahoo.com>
அவர் சொல்லியது போல கம்பராமாயணத்தில் இருக்கிறது என்பது பிரதிவாதியும், சாட்சிகளும் ஒத்துக்கொண்டாகிவிட்டது.

தீர்ப்பை மாற்றச் சொல்வது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தொடர வழி செய்யக்கூடும்.

:-))


கம்பராமாயணத்தில் இருக்கா இல்லையா என்பது பாயின்டே கிடையாது தேமொழி.

தாமரைக்கண்ணான் என வள்ளுவர் யாரைக்கூறுகிறார் என்பதுதான் பாயிண்டு

வள்ளுவர் காலத்துக்கு முந்தைய எந்த நூலிலிம் இந்திரனை தாமரைக்கண்ணான் என கூறூவதை காட்ட இயலாததால், வள்ளுவருக்கு 1000 ஆன்டு கழித்து பிறந்த கம்பன் எழுதிய நூலில் ஆயிரம் முறை அவர் ராமனை தாமரைக்கண்ணான் என அழைத்ததை மறந்து 2 இடத்தில் மட்டுமே இந்திரனை தாமரைக்கண்ணான் என கூறியது ஆதாரம் என்றால் அது தவறான ஆதாரம்.


வள்ளுவர் காலத்துக்கு முன் மாலவன்தான் தாமரைக்கண்ணான் எனும் பாடல் இருக்கா?

 

DEV RAJ

unread,
Aug 26, 2013, 9:22:37 PM8/26/13
to vall...@googlegroups.com
கம்பர் தயரதன் தேவியர்க்கும் தாமரைக்கண் என்கிறார் -

மொய்குழல் இருவர் தாளும் முறைமையின் வணங்கும் செங்கண் 
அய்யனை அவர்கள் தாமும் அன்புறத் தழுவி, தம்தம் 
செய்ய தாமரைக்கண் நீரால் மஞ்சனத் தொழிலும் செய்தார்


தேவ்

DEV RAJ

unread,
Aug 26, 2013, 9:24:32 PM8/26/13
to vall...@googlegroups.com
On Monday, 26 August 2013 18:08:28 UTC-7, வேந்தன் அரசு wrote:
வள்ளுவர் காலத்துக்கு முன் மாலவன்தான் தாமரைக்கண்ணான் எனும் பாடல் இருக்கா?
 

வள்ளுவர் காலம் எது ?

வேந்தன் அரசு

unread,
Aug 26, 2013, 9:27:50 PM8/26/13
to vallamai



26 ஆகஸ்ட், 2013 9:24 PM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

On Monday, 26 August 2013 18:08:28 UTC-7, வேந்தன் அரசு wrote:
வள்ளுவர் காலத்துக்கு முன் மாலவன்தான் தாமரைக்கண்ணான் எனும் பாடல் இருக்கா?
 

வள்ளுவர் காலம் எது ?

செல்வனை வினவாமல் என்னை மட்டும் ஏன் ஐயா?
 

Nagarajan Vadivel

unread,
Aug 26, 2013, 9:55:00 PM8/26/13
to vallamai
இதில் கால வேறுபாடு மற்றும் ஆசிரியரின் காலம் என்ற அடிப்படையைவிட எடுத்துக்கொண்ட கருத்துவளம் முக்கியமானது

வள்ளுவரின் நோக்கம் குமுக ஒழுங்கு தனிமனித ஒழுக்கம்பற்றிய நீதிக்கருத்துக்களின் தொகுப்பை உருவாக்குவது

கம்பர் இத்துணைக் கண்டம் முழுதும் பரவியிருந்த இதிகாசத்தைத் தமிழில் படைக்க முனைந்தது

முன்னது வேத சாரத்தில் அமைந்த நால்வகை வர்ணங்களைப் பேசுவது என்று சொன்னாலும் இறைவனைப்பற்றி அதிகம் கூறவில்லை

ராமாயணத்தில் தமிழாக்கம் செய்த படைப்பாளர் மூலத்தின் எல்லைக்குள் நிற்கவேண்டும்

தமிழ்ச் சமயங்கள் வடபுலத்தில் போன்று இந்திரன் திருமால் மோதல் முரண்பாடுகளை வலியுறுத்தியதாகத் தோன்றவில்லையே.  இந்திரனும் திருமாலும் இரண்டு திணைகளின் கடவுளர்கள் 

இந்திரனை ஆயிரங்கண்ணான் என்பதும் திருமாலை ஆயிரங்கண்ணான் என்பதும் ஒரே பொருளில் பயன்படவில்லை என்று அறியலாம்

ஆராய்ச்சிக் குஞ்சு


2013/8/27 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

DEV RAJ

unread,
Aug 26, 2013, 10:13:01 PM8/26/13
to vall...@googlegroups.com
On Monday, 26 August 2013 18:27:50 UTC-7, வேந்தன் அரசு wrote:
செல்வனை வினவாமல் என்னை மட்டும் ஏன் ஐயா?


அங்கிட்டுஞ் சரி, இங்கிட்டுஞ் சரி
ரெண்டு பேரும் ஒரே ஊருக்காரவுக;
ஆரக்கேட்டா என்ன ?


தேவ்

Hari Krishnan

unread,
Aug 26, 2013, 10:40:31 PM8/26/13
to vallamai

2013/8/27 தேமொழி <them...@yahoo.com>

1000 ஐத் தாண்டிய விவாதக் கருத்துக்களில், கம்ப இராமாயணத்தில் தாமரைக் கண்ணன் என்று இந்திரன் குறிபிடப்பட்டுள்ளாரா என்பதும் ஒரு வாதம்.  ஆமாம் குறிபிடப்பட்டுள்ள சான்றுகள் இருக்கிறது என்பது முடிவு.

அது ஒரே ஒரு பாடலில்தான்.  30+ பாடல்களில் இராமன் தாமரைக் கண்ணான்.  அதைத் தவிர கமலக் கண்ணன், பதுமக் கண்ணன் என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ள இடங்கள் ஏராளம்.  இவற்றை, இதுவரையில் எடுத்து வைத்துள்ள பற்பல சான்றுகளால் காட்டியுள்ளேன்.  

தாமரைக் கண்ணான் என்று வள்ளுவர் சொல்வது, இந்திரனைத்தான் குறிக்கும் என்பதற்குச் சான்றாக, கணேசர், கம்பனுடைய இந்த ஒரே ஒரு பாடலை வைத்துக் கொண்டு, அதுவும் எந்தப் பாடலில் என்று சொல்லாமல் மழுப்பிக் கொண்டிருந்தார்.

இந்தப் பாடலை நான் ‘தாமரைக் கண்ணான்’ என்று கம்பன் குறிப்பிடும் இடங்கள் என்ற இழையில் மீண்டும் எடுத்துச் சொல்லி, பின்வருமாறும் சொல்லியிருந்தேன்:

==================================
நாழி, நரை தீர் உலகு எலாம் ஆக, 
     நளினத்து நீ தந்த நான்முகனார்தாமே
ஊழி பலபலவும் நின்று அளந்தால், என்றும் 
     உலவாப் பெருங் குணத்து எம் உத்தமனே! மேல்நாள்,
தாழி தரை ஆக, தண் தயிர் நீர் ஆக, 
    தட வரையே மத்து ஆக, தாமரைக் கை நோவ
ஆழிகடைந்து, அமுதம் எங்களுக்கே ஈந்தாய்; 
    அவுணர்கள்தாம்நின் அடிமை அல்லாமை உண்டோ?

(ஆரணிய காண்டம், சரபங்கன் பிறப்பு நீங்கு படலம், பாடல் எண் 29, படலத் தொடக்கத்திலிருந்து பாடல் எண் 102)

நளினத்து நீ தந்த நான்முகனார்தாமே நாழிஆக, ஊழி பலவும் நின்று என்று கொண்டு கூட்டிக் கொள்ள வேண்டும்.

உனது திருவுந்தித் தாமரையில் நீ தோற்றுவித்த நான்முகனாரே, அநேக கற்பகாலமும் ஒழியாமல் நினறு, (உனது திருக் கலியாண குணங்களைத் தானிய ராசியாக் கொண்டு) அளவிட்டாலும், ஒன்றும் குறையாத (ஒன்றும் உலவா) புருஷோத்தமனே, நீயே, முற்காலத்தில் திருப்பாற்கடலே தயிராகவும், பெரிய மந்தர மலையே மத்தாகவும் கொண்டு, உன் தாமரைக் கைகள் நோகுமாறு கடலைக் கடைந்து அமிருதத்தை எடுத்து தேவர்களாகிய எங்களுக்கே அளித்தாய்.  (அப்படிக் கடையும் போது எங்களுடன் சேர்ந்து கடைந்தவர்களாகிய) அசுரர்கள் (அவுணர்கள்) உனக்கு அடிமைகளாக ஆகாமல் இருக்க முடியுமா?

இந்தப் பாடல் இரண்டு விதங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.  எந்தப் படலத்தில் இந்திரனைத் தாமரைக் கண்ணனாக (ஒரே ஒரு பாடலில்) கம்பன் பாடியிருக்கின்றானோ, அதே படலத்தில், உந்திச் சுழியும், கைகளும் தாமரைக்கு உவமையாகத் திருமாலும், திருமாலின் தோற்றமாகிய ராமனும் இந்தப் பாடலில் குறிக்கப்படுகிறார்கள்.

இந்தப் படலத்தில் இந்திரனைத் தாமரைக் கண்ணனாகப் பாடியுள்ள பாடலை, இந்தப் பணியின் முடிவில் விளக்கி, தாமரைக் கண்ணான் உலகு என்ற குறட்பாவுக்குத் திருமால் என்ற பொருள் எவ்வாறு பெரிதும் பொருந்துகிறது என்பதையும் சொல்கிறேன்.  
========================================

இப்போது சரபங்கன் பிறப்பு நீங்கு படலத்தை, இந்த மறுமொழிக்காக எடுத்த போது இந்தப் பாடல் கிடைத்தது:


கண்தாம் அவை ஆயிரமும் கதுவ,
கண் தாமரைபோல் கரு ஞாயிறு எனக்
கண்டான், இமையோர் இறை- காசினியின்
கண்தான், அரு நான்மறையின் கனியை

கண்தாம் அவை ஆயிரமும் கதுவ = தன்னுடைய ஆயிரங் கண்களும் பொருந்துமாறு

கண்தாமரைபோல் கருஞாயிறு என = தாமரைபோன்ற கண்களை உடைய கரிய சூரியன் என்னும்படியான இராமனை,

இமையோர்இறைதான் கண்டான் = இந்திரன் கண்டான்.

இங்கே ஒரே பாடலில், இந்திரன், இராமன் இருவரையும் வர்ணிக்கிறான்.  இந்திரனைச் சொல்லும்போது ‘கண் தாம் அவை ஆயிரமும்’ என்று அடைமொழி இல்லாமலும், இராமனைச் சொல்லும்போது, ‘கண் தாமரைபோல் கரு நாயிறு என’ என்று தாமரைக் கண்ணான் என்ற பெயரால் இராமனையே குறிக்கிறான்.

இந்தப்பாடலை, பானுகுமார் ராஜேந்திரன் எனக்குத் தனிமடலில் அனுப்பியிருந்தது உண்மை.  ஆனால், அவருக்கு அந்த நிமிஷமே நான் எழுதி அனுப்பியிருந்த விடை இது:

2013/3/27 Banukumar Rajendran <banuk...@gmail.com>
Treat this as personal mail sir.

Hope your are doing fine sir!



அன்புள்ள பானுகுமார்,
மிக்க நன்றி.  தாமரைக்கண்ணன் என்ற அடைமொழியால் பரதனையும் தாயர் மூவரையும் கம்பன் குறித்திருப்பதைப் பல சமயங்களில் சுட்டியிருக்கிறேன்.
தாங்கள் சொல்லும் சரபங்கர் பிறப்பு நீங்கு படலத்துப் பாடலையும் அறிவேன்.  இதை கணசேர் வாயால் வரவழைக்க வேண்டும் என்பதற்காக, சீட்டை மறைத்து வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறேன்.  இறுதியில் இந்தப் பாடலையும் சொல்வேன்.  
என் நேர்மை தாங்கள் அறியாத ஒன்றன்று. 
தனிமடலாக அனுப்பிய நயத்தக்க நாகரிகத்தைப் போற்றுகிறேன்.  சற்று அமைதியாக இருந்து வாதத்தைப் பார்க்கவும் என்று கேட்டுக் கொள்கிறேன்.



ஏதோ நானே வந்து, ‘தாமரைக் கண்ணான் என்று கம்பன் இந்திரனை மட்டும்தான் குறிப்பிட்டு விட்டதாக இப்போது என்னுடைய  வாதங்கள் திரிக்கப்பட்டுக் கொண்டுள்ளன.  அவையிலுள்ள தேமொழி உள்ளிட்ட மற்ற அனைவரும் மயக்கமெய்தியுள்ளதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

தாமரைக் கண்ணான் என்று கம்பனே சொல்லியிருக்கிறான் என்று திருவள்ளுவரின் குறளுக்கு இயற்றப்பட்ட பொருளுக்கு ஆதாரமாக திரு கணேசன் சொன்ன கருத்தை மறுப்பதற்காகவே இந்த வாதங்கள் நடைபெற்றன.   இதையும் பேராசிரியர் திரு நாகராசன் அவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், அவர்: 

இதில் கால வேறுபாடு மற்றும் ஆசிரியரின் காலம் என்ற அடிப்படையைவிட எடுத்துக்கொண்ட கருத்துவளம் முக்கியமானது 
 
வள்ளுவரின் நோக்கம் குமுக ஒழுங்கு தனிமனித ஒழுக்கம்பற்றிய நீதிக்கருத்துக்களின் தொகுப்பை உருவாக்குவது
 
கம்பர் இத்துணைக் கண்டம் முழுதும் பரவியிருந்த இதிகாசத்தைத் தமிழில் படைக்க முனைந்தது

என்று சொல்லியிருப்பதால்.

கம்பனைத் துணைக்குக் கூப்பிட்டு திருக்குறளை விளக்க முற்பட்டது திரு கணேசன்.  நான் அல்லன்.  அவர் அவ்வாறு செய்த காரணத்தால்தான், ஓரிடத்தில் சொல்லியிருந்தாலும் ஏற்கத்தக்கது என்றாலும், இந்தக் குறிப்பிட்ட கான்டெக்ஸ்டில், இந்திரனைத் தாமரைக் கண்ணன் என்று யார் குறிப்பிட்டானோ (யார் குறிப்பிடதாகச் சொல்லி போலி வாதத்துக்குத்  துணை தேடினார்களோ--அவனே பற்பல இடங்களில் அதே பெயரால் இராமனைக் குறிப்பிட்டிருப்பதை எடுத்துக் காட்டியிருக்கிறேன்.  இதுவரையில் ஒரு தனி இழையில் இதற்கான சான்றுகளில் பலவற்றைக் கொடுத்திருக்கிறேன்.

இன்று, சம்பந்தப் பட்ட சரபங்கர் வதைப் படலத்தில், ஒரே பாடலில் இந்திரனையும் இராமனையும் குறிப்பிடும் கம்பன், இந்திரனை ‘ஆயிரம் கண்ணன்’ என்றும் அடுத்த அடியிலேயே இராமனைத் ‘தாமரைக் கண்ணன்’ என்று குறிப்பிடுவதையும் எடுத்துக் காட்டியிருக்கிறேன்.

எனவே, இந்த இழையில் ‘வழக்குத் தொடுத்தவரே ஒப்புக் கொண்டுவிட்டார்’ என்பது போன்ற வகையில் யாரோ ஒருவர் எழுதியிருப்பது, வாதங்களைச் சரிவரப் பின்பற்றாமையின் விளைவு என்று எடுத்துக் கொள்கிறேன்.

திருக்குறளை விளக்கக் கம்பனைக் கையில் எடுத்தவர் திரு கணேசர்.  அதை போதுமான அளவுக்குமேல் மறுத்தாகி விட்டது.  இப்போது ஓரளவுக்கு விளக்கமாகவும், இந்த வாதங்களை எந்தத் திசையை நோக்கிச் செலுதத்திக் கொண்டிருந்தேன் என்பதையும் சொல்லியாகிவிட்டது.



-- 
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

DEV RAJ

unread,
Aug 26, 2013, 10:45:14 PM8/26/13
to vall...@googlegroups.com
On Monday, 26 August 2013 18:55:00 UTC-7, பூனைக் கவிராயர் wrote:
வள்ளுவரின் நோக்கம் குமுக ஒழுங்கு தனிமனித ஒழுக்கம்பற்றிய நீதிக்கருத்துக்களின் தொகுப்பை உருவாக்குவது
 
 
ஊழ், கடவுள், மறுமை போன்ற மெய்யியல் சார்
கருத்தியல்களைச் சொல்லாமல் நீதிக்கருத்துகளை
மாந்தருக்குப் புகட்டுவது கடினம்

தேவ்

Hari Krishnan

unread,
Aug 26, 2013, 10:46:25 PM8/26/13
to vallamai

2013/8/27 Hari Krishnan <hari.har...@gmail.com>

கம்பனைத் துணைக்குக் கூப்பிட்டு திருக்குறளை விளக்க முற்பட்டது திரு கணேசன்.  நான் அல்லன்.  அவர் அவ்வாறு செய்த காரணத்தால்தான், ஓரிடத்தில் சொல்லியிருந்தாலும் ஏற்கத்தக்கது என்றாலும், இந்தக் குறிப்பிட்ட கான்டெக்ஸ்டில், இந்திரனைத் தாமரைக் கண்ணன் என்று யார் குறிப்பிட்டானோ (யார் குறிப்பிடதாகச் சொல்லி போலி வாதத்துக்குத்  துணை தேடினார்களோ--அவனே பற்பல இடங்களில் அதே பெயரால் இராமனைக் குறிப்பிட்டிருப்பதை எடுத்துக் காட்டியிருக்கிறேன்.  இதுவரையில் ஒரு தனி இழையில் இதற்கான சான்றுகளில் பலவற்றைக் கொடுத்திருக்கிறேன்.

இப்படி, ஒரே கவிஞன் இருவரை ஒரே அடைமொழியால் குறிப்பிட்டால், ஒரு பாடலில் அவன் குறித்தவனையே குறளுக்கு விளக்கமாகச் சொன்னதை எடுத்துக் கொள்வதா அல்லது பற்பல பாடல்களில் யாரைச் சொல்லியிருக்கிறானோ அவனை எடுத்துக் கொள்வதா?

‘கம்பனே இந்திரனைத்தான் பாடியிருக்கிறான்’ என்ற ஏமாற்று, போலி, திரிப்பு வாதத்தை இன்னமும் பிதற்றிக் கொண்டிருக்கிறார் அவர்.  அவரை நீங்களும் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்!

போகட்டும்.  ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டுப் போடும்போதெல்லாம் ஏமாறுபவர்கள்தாமே நாம் எல்லோரும்.:))

Nagarajan Vadivel

unread,
Aug 26, 2013, 10:57:55 PM8/26/13
to vallamai
மெய்யியசார் கருத்துவளங்களில் வடக்கும் தெற்கும் அடிப்படையில் வேறுபடுவதாகும்.

ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த இந்திரனின் புகழ் கோவர்த்தன மலையை உயர்த்திப்பிடித்த காலத்தில் இருந்து மங்கத் தொடங்கியது

ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற இறைப்போர் நடந்ததில்லை

தமிழகத்தைச் சேர்ந்த தற்கால வசன கவிஞர் ஒருவர் அகலிகையைக் குறைகூறுவதைவிட முக்காலம் உணர்ந்த முனிவரைக் குறைகூறுவார்

முக்காலும் உணரும் முனிவன் நீ ஏமாந்தால 

அக்காலும் அவள் ஏமாந்தது அற்புதமோ

பொய்யன் நீ போலி அறப்போதன் நீ 

என்பதுபோல் பாடியுள்ளார்

தமிழகத்தில் எல்லாக் கடவுளரும் சமம் என்ற நிலை இருந்தது.  அதை மாற்றித் திருமாலும் சிவனுமே உயர் தெய்வங்கள் என்றூ பக்தி இலக்கியங்கள் நிலைநாட்டிக்கொண்டன

வவ


2013/8/27 DEV RAJ <rde...@gmail.com>

--

Hari Krishnan

unread,
Aug 26, 2013, 10:59:50 PM8/26/13
to vallamai

2013/8/27 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

தமிழகத்தில் எல்லாக் கடவுளரும் சமம் என்ற நிலை இருந்தது.  அதை மாற்றித் திருமாலும் சிவனுமே உயர் தெய்வங்கள் என்றூ பக்தி இலக்கியங்கள் நிலைநாட்டிக்கொண்டன

வால்மீகி இராமாயணத்திலும், இந்திரன் கடவுள் அல்லன்.

Nagarajan Vadivel

unread,
Aug 26, 2013, 11:09:09 PM8/26/13
to vallamai
இந்திரனும் வருணனும் வடபுலத்தில் இறைனனாக இல்லையென்றாலும் தமிழகத்தின் ஐவகை நிலப்பாகுபாட்டில் இறைவனாகக் காட்டப்பட்டுள்ளனர்

வவ


2013/8/27 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 26, 2013, 11:16:19 PM8/26/13
to vall...@googlegroups.com
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to vallamai+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>


--
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

DEV RAJ

unread,
Aug 26, 2013, 11:32:07 PM8/26/13
to vall...@googlegroups.com
On Monday, 26 August 2013 20:09:09 UTC-7, பூனைக் கவிராயர் wrote:
இந்திரனும் வருணனும் வடபுலத்தில் இறைனனாக இல்லையென்றாலும் தமிழகத்தின் ஐவகை நிலப்பாகுபாட்டில் இறைவனாகக் காட்டப்பட்டுள்ளனர்


வள்ளுவம் பற்றிப் பேசுங்கால் கம்ப ராமாயணம்
இடைப்பட்டது. அவை இரண்டையும் ஒப்பிடும்
தருணத்தில் கவிராயர் வருணனைப் புகுத்துகிறார்.
வள்ளுவம் வருணனைச் சொல்லிற்றா ?


தேவ்

Nagarajan Vadivel

unread,
Aug 26, 2013, 11:49:53 PM8/26/13
to vallamai

2013/8/27 DEV RAJ <rde...@gmail.com>

கவிராயர் வருணனைப் புகுத்துகிறார்.
வள்ளுவம் வருணனைச் சொல்லிற்றா ?

​நான் வள்ளுவத்துக்கும் ராமாயணத்துக்கும் முந்திய மரபைச் சொல்லுகிறேன்.  

நான் கணினியைப் பற்றிப் படிக்கும்போது என்பேராசிரியர் கணினி என்பது முற்றுப்பெறாத கருவி அதனால் அதற்குக் காரணம்சார் கட்டுப்பாடில்லை

எல்லருடைய கட்டளைக்கும் கட்டுப்படும் என்று சொல்வார்

வள்ளுவம் ​வளைத்த வளைப்புக்கெல்லாம் வளைப்பதால் எவ்வளவு உரைகள் விளக்கங்கள்.  பார்ப்பதைப் பார்வையாளன் பார்வையில் சொல்ல வள்ளுவம் இடங்கொடுப்பதால் இத்தனை வில்லங்கங்கள்

வவ

Hari Krishnan

unread,
Aug 26, 2013, 11:51:38 PM8/26/13
to vallamai

2013/8/27 DEV RAJ <rde...@gmail.com>

வள்ளுவம் பற்றிப் பேசுங்கால் கம்ப ராமாயணம்
இடைப்பட்டது. அவை இரண்டையும் ஒப்பிடும்
தருணத்தில் கவிராயர் வருணனைப் புகுத்துகிறார்.
வள்ளுவம் வருணனைச் சொல்லிற்றா ?

வள்ளுவம் சூரியனை எத்தனைப் பாக்களில் சொல்லியிருக்கிறது?  சொல்லியிருக்கும் ஒரு பாடலிலும் ‘என்பிலதனை வெயில்போலக் காயுமே அன்பிலதனை அறம்’ என்று சூரியனுடைய வெம்மையும் கொடுமையும்தான் குறிப்பிடப்பட்டுள்ளனவே அல்லாமல், இதம் அளிப்பவனாகக் காட்டப்படவில்லை.  ஆனால், அறத்துக்கு எடுத்துக்காட்டாக மிக உயர்ந்த நிலையில் சூரியன் குறிப்பிடப்பட்டுள்ளான் என்பது மறுக்க முடியாதது.

வருணனை ‘ஆழி மழைக் கண்ணா’ என்று ஆண்டாள் பாடியதுபோல் வள்ளுவர் பாடவே இல்லை.  எந்தப் பெயரும் இடாமல், ‘மழை’ ‘புயல்’ என்பன போன்ற சமச் சொற்களால் மட்டுமே குறி்த்திருக்கிறார்.

Hari Krishnan

unread,
Aug 27, 2013, 12:07:11 AM8/27/13
to vallamai

2013/8/27 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

இந்திரனும் வருணனும் வடபுலத்தில் இறைனனாக இல்லையென்றாலும் தமிழகத்தின் ஐவகை நிலப்பாகுபாட்டில் இறைவனாகக் காட்டப்பட்டுள்ளனர்

வவ

கடவுள் என்ற நிலைக்கும், தமிழக ஐவகை நிலப் பாகுபாட்டின் தலைவனாகக் குறிப்பிடப் படும் தன்மைக்கும் ஏராளமான வேறுபாடு உண்டு.  வருணனை, ‘வருணன் மேயப் பெருமணல் நிலமும்’ என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

மாயோன் சேயோன் போன்றோருக்கு ஆலயங்கள் இருந்திருக்கின்றன என்பதற்கு இலக்கிய ஆதாரங்கள் உள்ளன.  வருணனுக்கு எந்த இடத்தில் ஆலயம் இருந்ததாக எந்த இலக்கியம் குறிப்பிடுகிறது?

Hari Krishnan

unread,
Aug 27, 2013, 12:13:22 AM8/27/13
to vallamai

2013/8/27 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

வள்ளுவம் ​வளைத்த வளைப்புக்கெல்லாம் வளைப்பதால் எவ்வளவு உரைகள் விளக்கங்கள்.  பார்ப்பதைப் பார்வையாளன் பார்வையில் சொல்ல வள்ளுவம் இடங்கொடுப்பதால் இத்தனை வில்லங்கங்கள்

அதாவது, வள்ளுவருக்கு, சரியான பொருளில் விளங்குமாறு சொல்லத் தெரியவில்லையா?

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு. 

செலச்சொல்ல வேண்டும் என்றவருக்கே, செலச் சொல்லத் தெரியவில்லை என்ற தொனி தங்கள் எழுத்தில் தென்படுகிறது.  தாங்கள் இதைக் கருதிச் சொல்லியிருக்கலாம்; கருதாமலும் சொல்லியிருக்கலாம்.  ஆனால், the quintessence boils down to வள்ளுவருக்கு, பார்வையாளன், தனக்குத் தோன்றியபடியெல்லாம் பொருள் கொள்ளாமல், தான் கருதிய பொருளைக் காணும் அளவுக்குச் சொல்லத் தெரியவில்லை என்பதே.

தொனிப் பொருள் தவறாக இருக்கலாம்.  இருப்பதையே விரும்புகிறேன். 

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 27, 2013, 12:15:13 AM8/27/13
to vall...@googlegroups.com
On 8/27/13, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:
> ஒரு பாடலிலும் ‘என்பிலதனை வெயில்போலக் காயுமே அன்பிலதனை அறம்’ என்று
> சூரியனுடைய வெம்மையும் கொடுமையும்தான் குறிப்பிடப்பட்டுள்ளனவே அல்லாமல், இதம்
> அளிப்பவனாகக் காட்டப்படவில்லை. ஆனால், அறத்துக்கு எடுத்துக்காட்டாக மிக
> உயர்ந்த நிலையில் சூரியன் குறிப்பிடப்பட்டுள்ளான் என்பது மறுக்க முடியாதது.
>
> வருணனை ‘ஆழி மழைக் கண்ணா’ என்று ஆண்டாள் பாடியதுபோல் வள்ளுவர் பாடவே இல்லை.
> எந்தப் பெயரும் இடாமல், ‘மழை’ ‘புயல்’ என்பன போன்ற சமச் சொற்களால் மட்டுமே
> குறி்த்திருக்கிறார்.

எண்ணிப்பார்க்கவைக்கும் கருத்து.
நன்றி
சொ.வினைதீர்த்தான்.

Selvan Kovai

unread,
Aug 27, 2013, 12:31:45 AM8/27/13
to vallamai

2013/8/26 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

வள்ளுவர் காலத்துக்கு முன் மாலவன்தான் தாமரைக்கண்ணான் எனும் பாடல் இருக்கா?


விஷ்ணு சஹஸ்ரநாமம் (வியாச பாரதத்தில் உள்ளது)

மாயோன் அரவிந்தாக்ஷன் (தாமரைக்கண்ணன்) என அழைக்கபடுகிறார்.

குறளுக்கு முன்பு இந்திரனை தாமரைக்கண்னன் என அழைக்கும் வடமொழிப்பாடல் இருந்தால் கொடுக்கவும்

amachu

unread,
Aug 27, 2013, 4:38:58 AM8/27/13
to mint...@googlegroups.com, mintamil, vallamai, நா. கணேசன், Hari Krishnan, ஐயப்பன் கிருஷ்ணன்


On Friday, August 23, 2013 5:26:58 PM UTC+5:30, சொ.வினைதீர்த்தான் wrote:
 
 நம் குழுமங்களில் இந்திரனின் ஆயிரம் தாமரைக்? கண்களைப் பற்றி முன்பு சுவையான சூடான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. நண்பர் திரு கணேசன் கம்பனில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு எங்கே என்று கடைசிவரை கூறாததால் இழை நீண்டது. கடைசியில் திரு ஹரிகி சரபுங்கர் வருமிடத்து என்று பாடல் தந்தார்.


எப்பையோ கேட்ட கதை இப்போ இந்த பதிலால் மீண்டும் நினைவுக்கு வந்தது.

ஆயிரம் கண் இந்திரனுக்கு வர திலோத்தமை காரணம்.

(அந்த மங்கையைக் காண ஆவலுடன் இருந்த) தேவர்கள் தலைவனுக்கு {இந்திரனுக்கு} ஒவ்வொன்றும் அகலமாகவும், சிவந்தும் முன்பும் பின்பும், இடுப்பிலுமாக ஆயிரம் கண்கள் தோன்றியன. இப்படியே பெரும் தேவன் ஸ்தானுவுக்கு {சிவனுக்கு} நான்கு முகங்களும், வளனைக் கொன்றவனுக்கு {இந்திரனுக்கு} ஆயிரம் கண்களும் உண்டாயிற்று.

http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section213.html

Iyappan Krishnan

unread,
Aug 27, 2013, 8:21:20 AM8/27/13
to vall...@googlegroups.com

2013/8/23 N. Ganesan <naa.g...@gmail.com>
There is lot of work that needs to
be done in Universities in India and
abroad on Tamil hagiography and
myth builind by Tamil Bhakti across
centuries.
 
Anbudan,
N. Ganesan
 


என்னமோ இங்லீஸ்லயே பேஸ்ரார். எனக்கு ஒண்ணும் புரியல. யாராச்சும் இங்கிலீஷு தெரிஞ்சவங்க மொலிபெயர்த்துப் போடவும்.


Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

Iyappan Krishnan

unread,
Aug 27, 2013, 8:31:55 AM8/27/13
to vall...@googlegroups.com
2013/8/27 தேமொழி <them...@yahoo.com>
இரண்டும் வெவ்வேறு விவாதங்கள் செல்வன். போட்டுக் குழப்பிக்காதீங்க. 

1000 ஐத் தாண்டிய விவாதக் கருத்துக்களில், கம்ப இராமாயணத்தில் தாமரைக் கண்ணன் என்று இந்திரன் குறிபிடப்பட்டுள்ளாரா என்பதும் ஒரு வாதம்.  ஆமாம் குறிபிடப்பட்டுள்ள சான்றுகள் இருக்கிறது என்பது முடிவு.

தாமரைக் கண்ணன் என்று வள்ளுவரால்  குறிப்பிடப் படுபவர் யார் என்பது மற்றொரு விவாதம்?  இதற்கு இதுவரை விடை கிடைத்த நினைவில்லை.

..... தேமொழி 

ஒன்றில் இருந்து ஆதாரம் காட்ட இன்னொன்று  கிளர்ந்தது. அதுக்கு ஆதாரம் கேட்டப்போ கிடைச்ச பதில் என்ன தெரியுமா ? " உங்க ஊர்ல தமிழ் அறிஞர்கள் கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க..  கம்பராமாயணம் படிச்சவங்க கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோங்கன்னு ( கிட்ட தட்ட மாசக் கணக்குல ) அல்லது மவுனமே பதிலாய் வச்சிருந்தாரு முனைவர் நாகணேசர்  ஐயா. ஆனா ஹரியண்ணா போட்ட உடனே இதொ இதோன்னு காப்பி பேஸ்ட் பண்ணது எல்லாம்  அடுத்தக் கட்டம்.

பரதன், கும்பகர்ணன், இராவணன், இலக்குவன், இராமன், சீதை என இராமாயண பாத்திரங்கள் ஆய்வு செய்யும் ஒருவர், பெரும்பாலான பாடல்களை மனப்பாடமாகவே சொல்லும் ஒருவர் திரு. பானுகுமார் சொன்ன பின்பு தான் தெரிந்து கொண்டாராம் ( விளக்க மடல் ஹரியண்ணாவிடம் இருந்து ஏற்கனவே வந்திருக்கிறது). ஆனால் இவருக்கு ஏற்கனவே தெரிந்ததாம், ஆனா மாசக்கணக்கில் யார் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டாராம். #அரசியல்ல.இ.சா

//MunaivarkaLE, I have already written
about fictional hagiographies in Tamil
Bhakti era, the prime examples of
fiction is done on Sambandhar
who probably was singing at 30 or 40.//

சமணர்கள் எழுதியத சம்பந்தர் எழுதினதா கதைக் கட்டிட்டாங்கன்னு ஒரு வர்ஷன் போயி இப்ப அடுத்த வர்ஷன். #இன்னும் நிறைய  வர்ஷன் எதிர் பார்க்கிறேன். #அரசியல்ல.இ.சா

அப்படியே அந்த ரெண்டாயிரம் அடி தீர்த்தங்கர்கள் பற்றிய ஆராய்ச்சியும்  வந்தா நல்லா  பொழுது போகும்னு  தோணுது.

Nagarajan Vadivel

unread,
Aug 27, 2013, 8:51:55 AM8/27/13
to vallamai

2013/8/27 Hari Krishnan <hari.har...@gmail.com>

மாயோன் சேயோன் போன்றோருக்கு ஆலயங்கள் இருந்திருக்கின்றன என்பதற்கு இலக்கிய ஆதாரங்கள் உள்ளன.  வருணனுக்கு எந்த இடத்தில் ஆலயம் இருந்ததாக எந்த இலக்கியம் குறிப்பிடுகிறது?

N. Ganesan

unread,
Aug 27, 2013, 9:07:29 AM8/27/13
to vall...@googlegroups.com, mintamil


On Monday, August 26, 2013 6:24:32 PM UTC-7, DEV RAJ wrote:
வள்ளுவர் காலம் எது ?

 Generally taken as 5th century. But the research on Brahmi development, by Prof. K. Rajan, numismatics studies, may
push back VaLLuvar's period as end of 3rd to 4th century. VaLLuvar's era may be 4th century.

N. Ganesan

Hari Krishnan

unread,
Aug 27, 2013, 9:09:10 AM8/27/13
to vallamai

2013/8/27 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

:)

சுட்டியிலுள்ள கட்டுரை பின்வருமாறு சொல்கிறது: 


ரிக் வேதத்தில் வருணன் மிக முக்கியமான கடவுள். உலகம் ஒரு சட்ட நியதிக்குள் இயங்க உதவுபவர் வருணன். மேலும் கடல், நீர் நிலைகள், மழை ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர். இந்திரன் கிழக்கு திக்குக்கு அதிபதி, வருணன் மேற்கு திக்கிற்கு அதிபதி. மித்ரன் என்ற ஒளிக் கடவுளுடன் இவர் ஜோடியாக வைக்கப்படுகிறார். வேத மந்திரங்கள் இவரை மித்ரனுடன் சேர்த்துப் பாடுகின்றன. இது பழந் தமிழர் நம்பிக்கையுடன் மிகவும் பொருந்துகின்றன. வருணனின் வாஹனம் சுறா மீன், முதலை அல்லது கடல் மிருகம்.

இது தாங்கள் முன்னர் சொன்னது.  இதற்குத்தான் விடையளித்தேன்--

2013/8/27 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
இந்திரனும் வருணனும் வடபுலத்தில் இறைனனாக இல்லையென்றாலும் தமிழகத்தின் ஐவகை நிலப்பாகுபாட்டில் இறைவனாகக் காட்டப்பட்டுள்ளனர்

வவ


உங்கள் சுட்டி வேறு எதையோ சொல்கிறது. :)

கட்டுரை மேலும் சொல்கிறது: 

தற்காலத்தில் பிராமணர்கள் நாள் தோறும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தன மந்திரத்தில் வருண வழிபாடு இருக்கிறது.

நானும் நூல் போட்டவன்தான். இது எனக்கும் தெரிந்திருக்கும் வாய்ப்பிருக்கிறது.  :)

Hari Krishnan

unread,
Aug 27, 2013, 9:10:37 AM8/27/13
to vallamai, mintamil

On 27 August 2013 18:37, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Generally taken as 5th century. But the research on Brahmi development, by Prof. K. Rajan, numismatics studies, may
push back VaLLuvar's period as end of 3rd to 4th century. VaLLuvar's era may be 4th century.

I guess it might be typo over there.  Did you mean to say 24th century (AD)?

Nagarajan Vadivel

unread,
Aug 27, 2013, 9:20:14 AM8/27/13
to vallamai
Whether Varunan is worshiped in Tamil country is the specific query for which I have given the God Varuna's image quoted by the author.  That is all.  It is not correct to say that  I agree with all the points of the blog write.  May be another blog writer post that everything came from outside India.

Indira was not a God is not my statement please.  Kindly check the idendity of the person who said so.  I mentioned Varuna as a Tamil God

In a nutshell it is your point of contention that they are not Gods in Tamil pantheon

Nagarajan


2013/8/27 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

Hari Krishnan

unread,
Aug 27, 2013, 9:25:42 AM8/27/13
to vallamai

2013/8/27 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

In a nutshell it is your point of contention that they are not Gods in Tamil pantheon

நட்ஷெல்லை உடைச்சுப் பாருங்க பேராசிரியர் சார்.  வருணனுக்கு ஆலயம் இருக்கிறது அல்லது இருந்தது என்று தமிழிலக்கியச் சான்று இருக்கிறதா என்பதுதான் நான் கேட்ட கேள்வி.   இருப்பதாகக் காட்டினால், சரி என்று ஒப்புக் கொள்ளப் போகிறேன்.  அவ்வளவுதானே.

எண்திசைக் காவலர்களில் யாருக்கெல்லாம் ஆலயம் இருந்தது?  தொல்காப்பியம் சுட்டும் மாயோனுக்கும் சேயோனுக்கும் இருந்திருக்கிறதே!

Hari Krishnan

unread,
Aug 27, 2013, 9:29:50 AM8/27/13
to vallamai

2013/8/27 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Indira was not a God is not my statement please.  Kindly check the idendity of the person who said so.  I mentioned Varuna as a Tamil God

என் பார்வைக்குக் கிட்டிய உங்கள் மொத்த கடிதமுமே இவ்வளவுதான்: 

இந்திரனும் வருணனும் வடபுலத்தில் இறைனனாக இல்லையென்றாலும் தமிழகத்தின் ஐவகை நிலப்பாகுபாட்டில் இறைவனாகக் காட்டப்பட்டுள்ளனர்

வவ

யாரோ சொன்ன கருத்து என்றால், யார் சொன்னது என்பதை நீங்கள் வேறெங்காகிலும் சொல்லியிருக்கலாம்.  ஆனால், ‘காட்டப்பட்டுளனர்’ என்று அறுதியிட்டுச் சொல்லும் வாக்கியத்தை யாருடைய வாக்கியம் என்று எதனடிப்படையில் எப்படிக் கொள்வது?

Iyappan Krishnan

unread,
Aug 27, 2013, 9:30:31 AM8/27/13
to vall...@googlegroups.com

On Tue, Aug 27, 2013 at 6:40 PM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:
I guess it might be typo over there.  Did you mean to say 24th century (AD)?



I think it is  BC ( no no anne... listen listen... this  is not  " BC/MBC "and so on... category  )

N. Ganesan

unread,
Aug 27, 2013, 9:36:54 AM8/27/13
to vall...@googlegroups.com


On Monday, August 26, 2013 11:52:37 AM UTC-7, செல்வன் கோவை wrote:

தாமரைக்கண்ணான் என வள்ளுவர் யாரைக்கூறுகிறார் என்பதுதான் பாயிண்டு


It is already mentioned in Tamil literature clearly. TaamaraikkaNNan is  Indra. 

In Indian religions, lotus and yoni, euphemistically called as 'kaN' (eye), serve as equivalents. There is also a word play
between Sanskrit and Prakrit regarding the story of Indra turning to a cat, hence this story reaching Tamils by Jains (shramaNas),
and the sage Gotama cursing Indra with 1000 yonis. Later, acc. to Kamban, Gotama changes the yonis into lotuses.
That is the reason, Jains call Indra as tAmaraikkaNNan because tAmarai = yoni, seen all over the body of Indra.
Having 1000 yonis (lotus-eyes) all over the body is the reason Jains make Indra (Venthan) as the god of the Marutam landscape
- reading Marutam landscape poems and the behaviour of the Uuran in these poems and the go betweens (pANan, viRali)
will make things clear on why Indra is made the god of Marutam. The Jaina/Shramana story of tAmaraikkaNNaan as Indra
is mentioned in Nalatiyar and KuRaL and its commentators. The SamaNar(ShramaNar) story of 1000 yoni-eyed Indra
using the word play between Sanskrit and Prakrit and turning Indra into a cat is narrated in Tamil throught its existence.

Kamban just borrows the material from Jaina literature. He uses what is tols in Ciivaka CintAmaNi epic, just like he
borrows the epic narration in Viruttam from the earlier Jaina epic author.

N. Ganesan

 
வள்ளுவர் காலத்துக்கு முந்தைய எந்த நூலிலிம் இந்திரனை தாமரைக்கண்ணான் என கூறூவதை காட்ட இயலாததால், வள்ளுவருக்கு 1000 ஆன்டு கழித்து பிறந்த கம்பன் எழுதிய நூலில் ஆயிரம் முறை அவர் ராமனை தாமரைக்கண்ணான் என அழைத்ததை மறந்து 2 இடத்தில் மட்டுமே இந்திரனை தாமரைக்கண்ணான் என கூறியது ஆதாரம் என்றால் அது தவறான ஆதாரம்.

Hari Krishnan

unread,
Aug 27, 2013, 9:48:18 AM8/27/13
to vallamai

On 27 August 2013 19:06, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Kamban just borrows the material from Jaina literature. He uses what is tols in Ciivaka CintAmaNi epic, just like he
borrows the epic narration in Viruttam from the earlier Jaina epic author.

என் வீட்டுக் கெணத்த யாரோ திருடிட்டு போயிட்டாங்க போலீஸ் சார்!  எப்படியாச்சும் கண்டுபிடிச்சிக் குடுங்க!

இதையே திருப்பித் திருப்பிச் சொன்னால், இதிலும் உண்மையிருக்கும் போலிருக்கிறது என்று நம்பத்தான் ஒரு அப்பாவிக் கூட்டம் காத்திருக்கிறதே!

Iyappan Krishnan

unread,
Aug 27, 2013, 9:56:55 AM8/27/13
to vall...@googlegroups.com

On Tue, Aug 27, 2013 at 7:06 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

Kamban just borrows the material from Jaina literature. He uses what is tols in Ciivaka CintAmaNi epic, just like he
borrows the epic narration in Viruttam from the earlier Jaina epic author.

கடன் வாங்குன ரசீது எதுவும் இல்லையா? இங்கல்லாம் சேட்டுக் கடைல கடன் வாங்குனா கூட  ரசீது முக்கியம். திருப்பிக் கட்டனும்ல? அப்புறம்   அந்த ஜைன எழுத்தாளர்கள் எல்லாம் 2000 அடி உயர தீர்த்தங்கர்களாமே?

கம்ப ராமாயணம் வால்மீகி ராமாயணம் அடிப்படையிலன்னுல்ல நினைச்சுட்டு இருந்தேன். சீவகசிந்தாமணி ராமாயணம் தான் கம்பராமாயணத்தோட மூலமா... # அடராமச்சந்திரா #அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

N. Ganesan

unread,
Aug 27, 2013, 10:10:31 AM8/27/13
to vall...@googlegroups.com, mintamil, tiruva...@googlegroups.com


சொ. வினைதீர்த்தான் காட்டிய கம்பன் பாடல்:

6469.‘முக்கணான் எண்கணானும்,
    முளரி ஆயிரக் கணானும்,
திக்கண் ஆம் தேவரோடு
    முனிவரும், பிறரும், தேடிப்
புக்க நாடு அறிகுறாமல்
    திரிகின்றார், புகுந்து மொய்த்தார்;
“எக்கணால் காண்டும் எந்தை
    உருவம்“ என்று இரங்கி நின்றார். ‘
 
1000 தாமரைக்கண்ணான் என்று வள்ளுவர் கூறும் இந்திரன் பெயருக்கு விளக்கமாகப் பல பாடல்களில்
கம்பன் பாடியிருகிறான். இதனைச் சமணக் காவியங்களில் இருந்து பெற்ற கருப்பொருள்.
சம்ஸ்கிருதம் - பிராகிருதம் ஊடாடல் வழியாகச் சமணர்கள் தமிழகத்தில் 2200+ ஆண்டுகளாகச்
சொல்லிவரும் கதைதான் இது.  சம்ஸ்க்ருத - ப்ராகிருத ஊடாடல் சமணர்கள் இந்திரனுக்கு
உடலெல்லாம் 1000 தாமரை (=யோனி) என்பதால் மருதத் திணையின் கடவுளாக்குகிறார்
தமிழுக்கு இலக்கணம் தந்த சமணர் தொல்காப்பியர். சம்ஸ்கிருத-ப்ராகிருத சொல்விளையாட்டு
தான் இந்திரனைப் பூனை என்றாக்குகிறது. இந்தச் சமணர்கதை பாப்புலர். எனவே, அரண்மனைகளில்
ஓவியமாக தீட்டப்பெற்றது. ரோமானிய மாளிகைகளில் படுக்கையறைகளில் காமக்காட்சிகளைக்
காணுதல் போல, இந்திரன் 1000 தாமரைக் கண் பெற்ற கதை தமிழக வளமனைகளில் பிரபலமாக
இருந்திருக்கிறது என்பதற்குச் சங்க இலக்கியம் சான்றாக விளங்குகிறது.

சென்ற மார்ச் 27-ஆம் தேதி, கம்பன்  இந்திரன் தாமரைக்கண்ணான் என்று பல பாடல்களில் பாட
 சமண இலக்கியங்களினின்றும் கடன்பெற்றுள்ளான் என்பதற்கு ஓர் உதாரணம் காட்டினேன்.
சமணக் காப்பியம் கம்பன் விருத்தக் காப்பியம் பாட அஸ்திவாரம். பல கருத்துக்கள், கருப்பொருள்களும்
அங்கிருந்து பெறுகிறான். உ-ம்: வள்ளுவரின் தாமரைக்கண்ணான் இந்திரன் என்பதை
விளக்கும் காப்பியப் பாடல் பார்ப்போம்:

528.
    பொங்கி ஆயிரம் தாமரை பூத்த போல்
    செங் கண் ஆயிரம் சேர்ந்தவன் பொன் நகர்
    கொங்கு தோய் குழலாரொடும் குன்றின் மேல்
    தங்குகின்றது போல் தகை சான்றதே
                                                                                 - திருத்தக்கதேவர்

கம்பனை நன்கு கற்றவர் யாவருக்கும் தெரிந்த பாடல்
இந்திரனை தமிழ், வடமொழி இலக்கியங்களில் சமணர்
ஆயிரம் தாமரைக்கண்ணான் எனக் கூறுவதற்கான
அடிப்படைக் காரணம் கொண்ட பாடல். திருத்தக்கதேவரின்
சிந்தாமணியை அடியொட்டி கம்பன் பாடும் இடங்கள் பல.
அவற்றில் இக் கம்பன் பாடல் முக்கியமான ஒன்று.

செவ் வேலவர் சென்றனர்; சேறல் உறும்
அவ் வேலையின் எய்தினன் ஆயிரமாம்,
தவ்வாது இரவும் பொலி தாமரையின்
வெவ்வேறு அலர், கண்ணினன்,  விண்ணவர் கோன்.
                                    - கம்பன்.

இவ்வாறு இந்திரன் 1000 தாமரைக்கண்ணான் என அழைக்கப்படுகிறான்?
என்பதற்கான விளக்கம் பலமுறை எழுதியுள்ளேன்.வட, தென் மொழி இலக்கியங்கள் 

பறைசாற்றுகின்றன. கொஞ்சம் சொல்லியுள்ளேன்:

https://groups.google.com/group/tiruvalluvar/msg/f44bd10d630e1bf7


நா. கணேசன்


On Friday, August 23, 2013 4:56:58 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:
 
 நம் குழுமங்களில் இந்திரனின் ஆயிரம் தாமரைக்? கண்களைப் பற்றி முன்பு சுவையான சூடான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. நண்பர் திரு கணேசன் கம்பனில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு எங்கே என்று கடைசிவரை கூறாததால் இழை நீண்டது. கடைசியில் திரு ஹரிகி சரபுங்கர் வருமிடத்து என்று பாடல் தந்தார்.
 
காரைக்குடி தமுஎ சங்கத்தின் மாத இலக்கியக் கூட்டத்தில் 14.09.2013 அன்று கம்பராமாயணத்தின் யுத்தகாண்டம் பற்றி பேசுவதற்கு ஆர்வலன் என்ற வகையில் ஒத்துக்கொண்டுள்ளேன். ஏற்கனவே கம்பராமாயணச் சிந்தனை ஐந்து மாதங்கள் முடிந்துவிட்டன.
இயன்றவரை சொல்ல த.இ. ப்ல்கலைத் தளத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நண்பர்கள் வாழ்த்து வேண்டுகிறேன்.
 
இரணியவதைப்படலத்தில் நண்பர் திரு மோகனரங்கன் கூறுகிற நாரணன் நாமம் உருசித்தது. இரணியவதைப்படலம் வீடணன் அறத்தின்பால் நிற்பதற்கும் தீமையழியும் என்பதற்குமான முன்னோட்டம்.
 
குரு பிரகலாதனுக்கு இரணியன் பேரைச் சொல்லித்தர முயன்றதும் அவர் கடைசிவரை நாராயணன் பேரைச்சொல்லாமல் சொன்னால் நரகம் புகுவேன், நாக்கு வெந்துபோகுமென்றதும் பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்ற வரிகளை நினைவூட்டின.
குரு - பிரகலாதன், பிரகலாதன் - இரணியன், இரணியன் - நாரணன் உரையாடல்கள், சீயம் சிரித்தது, ககனமுட்டை உடைந்தது அனைத்தும் கம்பச்சித்திரங்கள். 
 
நரசிங்கரது சினமடங்க ஆவித்துணையை அமிழ்தின் பிறந்தாளை அருகில் கொணர்வதும் நாராயணன் தேவியைக் காதலால் நோக்கிப் பிறகு பிரகலாதனைப் பார்த்துத் தந்தையைக் கொன்றதற்குப் பொறுக்கச் சொல்வதும் உளவியற் கருத்துக்கள். இன்றும் இலட்சுமிநரசிம்பர் பல இடங்களில் அருள்பாலிக்கிறார்.
சிவபெருமான் காரைக்கால் அம்மையாரை அன்னை என்றதுபோல பிரகலாதனை ‘எந்தையே’ என்கிறார் பெருமான்.
என்பு பெறாத இழி பிறவியெய்தினும் அன்புபெறும் பேறு அடியேர்க்கு அருள் என்று பிரகலாதன் வேண்டுகிறான். அன்பின் பெருமை தந்தை, தாய் பதவி நல்கிறது.
 
அதனுடன் சினமடங்காத மானுட மடங்கலைக் கண்டு அஞ்சியவர்களில் முளரி ஆயிரம் கண்ணினான் என்று இந்திரன் குறிக்கப்பெறுவதையும் கண்டேன். முன்பு தரப்பட்ட பாடல் தவிரவும் பிறிதொரு பாடலான கீழ்க்கண்ட பாடலிலும் ஆயிரம் தாமரைக் கண்ணினான் என்று இந்திரன் குறிக்கப் பெறுவதைப் பகிர்ந்துள்ளேன்.
 
 
 
 
முன்பு இரணியனுக்கு அஞ்சியோடி ஒளிந்திருந்த தேவர்கள் அவன் இறந்த நிலையில் அங்கு வந்து குழுமி நரசிங்கத்தின் தோற்றத்தைக் கண்டு அஞ்சி நிற்றல்(6469-6470)

6469. ‘முக்கணான் எண்கணானும்,
    முளரி ஆயிரக் கணானும்,
திக்கண் ஆம் தேவரோடு
    முனிவரும், பிறரும், தேடிப்
புக்க நாடு அறிகுறாமல்
    திரிகின்றார், புகுந்து மொய்த்தார்;
“எக்கணால் காண்டும் எந்தை
    உருவம்“ என்று இரங்கி நின்றார். ‘
 
 
 


It is already mentioned in Tamil literature clearly: TaamaraikkaNNan is Indra. 

In Indian religions, lotus and yoni, euphemistically called as 'kaN' (eye), 
serve as equivalents. There is also a word play 
between Sanskrit and Prakrit regarding the story of Indra turning to a cat, 
hence this story reaching Tamils by Jains (shramaNas), 
and the sage Gotama cursing Indra with 1000 yonis. Later, acc. to Kamban, 
Gotama changes the yonis into lotuses. 
That is the reason, Jains call Indra as tAmaraikkaNNan because tAmarai = 
yoni, seen all over the body of Indra. 
Having 1000 yonis (lotus-eyes) all over the body is the reason Jains make 
Indra (Venthan) as the god of the Marutam landscape 
- reading Marutam landscape poems and the behaviour of the Uuran in these 
poems and the go betweens (pANan, viRali) 
will make things clear on why Indra is made the god of Marutam. The 
Jaina/Shramana story of tAmaraikkaNNaan as Indra 
is mentioned in Nalatiyar and KuRaL and its commentators. The 
SamaNar(ShramaNar) story of 1000 yoni-eyed Indra 
using the word play between Sanskrit and Prakrit and turning Indra into a 
cat is narrated in Tamil throught its existence. 

Kamban just borrows the material from Jaina literature. He uses what is 
tols in Ciivaka CintAmaNi epic, just like he 
borrows the epic narration in Viruttam from the earlier Jaina epic author. 

N. Ganesan 

 
 

 

 

 

 

முக்கணான்  எண்கணானும்  -  மூன்று  கண்களை உடைய 
சிவபிரானும்   எட்டுக்   கண்களை   உடையபிரமதேவனும்; முளரி
ஆயிரம்  கணானும்
  -  தாமரை  போன்ற  ஆயிரம்   கண்களை
உடையவனான   தேவேந்திரனும்; திக்கண்  ஆம்   தேவரோடு
முனிவரும்  பிறரும் 
-   திசைகள்   தோறும்  சென்று திரிகின்ற 
தேவர்களும் முனிவரும்  மற்றும்  உள்ளவர்களும்;  தேடிப்  புக்க 
நாடு  அறிகுறாமல்  திரிகின்றார்
- இரணியனுக்குப் பயந்து, தேடி
வந்தாலும்   அவர்கள் இருக்கும்   நாடு   எவருக்கும் தெரியாதபடி
திரிந்தவர்கள்; புகுந்து   மொய்த்தார் - (நரசிங்கத்தால் இரணியன்
மாய்ந்தது  தெரிந்து) வந்து திரண்டார்கள்; எந்தை  உருவம்- எம்
பெருமான் கொண்ட  நரசிங்க வடிவத்தை; எக்கணால் காண்டும் -
எந்தக்  கண்களால் காண  இயலும்?; என்று  இரங்கி நின்றார் -
என்று கூறி இரங்கி நின்றார்கள் (த.இ.பல்கலை தளம்)


அன்புடன்

Hari Krishnan

unread,
Aug 27, 2013, 10:46:03 AM8/27/13
to vallamai, mintamil

2013/8/27 N. Ganesan <naa.g...@gmail.com>

சென்ற மார்ச் 27-ஆம் தேதி, கம்பன்  இந்திரன் தாமரைக்கண்ணான் என்று பல பாடல்களில் பாட
 சமண இலக்கியங்களினின்றும் கடன்பெற்றுள்ளான் என்பதற்கு ஓர் உதாரணம் காட்டினேன்.
சமணக் காப்பியம் கம்பன் விருத்தக் காப்பியம் பாட அஸ்திவாரம். பல கருத்துக்கள், கருப்பொருள்களும்
அங்கிருந்து பெறுகிறான். உ-ம்: வள்ளுவரின் தாமரைக்கண்ணான் இந்திரன் என்பதை
விளக்கும் காப்பியப் பாடல் பார்ப்போம்:

வந்தாரை வாழ வைக்கும் தமிழகமே!  நீ சொந்த நாட்டானைச் சுரண்ட ஆரம்பித்தது எப்போது!

பராசக்தி வசனம்.  இத்தனை நாளைக்கு பாக்கி பேரை ஒத்தி ஒட்டிட்டு இருந்தீங்க.  இன்னிக்கு ஒங்களையே ஒத்தி ஒட்டியிருக்கீங்க.  இதுதான் நீங்க 27 மார்ச் அன்னிக்கு எழுதினது: 


சொ. வி. ஐயா,
வணக்கம்.

கம்பனை நன்கு கற்றவர் யாவருக்கும் தெரிந்த பாடல்
இந்திரனை தமிழ், வடமொழி இலக்கியங்களில் சமணர்
ஆயிரம் தாமரைக்கண்ணான் எனக் கூறுவதற்கான
அடிப்படைக் காரணம் கொண்ட பாடல். திருத்தக்கதேவரின்
சிந்தாமணியை அடியொட்டி கம்பன் பாடும் இடங்கள் பல.
அவற்றில் இக் கம்பன் பாடல் முக்கியமான ஒன்று.
செவ் வேலவர் சென்றனர்; சேறல் உறும்
அவ் வேலையின் எய்தினன் ஆயிரமாம்,
தவ்வாது இரவும் பொலி தாமரையின்
வெவ்வேறு அலர், கண்ணினன்,  விண்ணவர் கோன்.
                                    - கம்பன்.
இவ்வாறு இந்திரன் 1000 தாமரைக்கண்ணான் என அழைக்கப்படுகிறான்?
என்பதற்கான விளக்கம் பலமுறை எழுதியுள்ளேன்.
வட, தென் மொழி இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. கொஞ்சம்
சொல்லியுள்ளேன்:
https://groups.google.com/group/tiruvalluvar/msg/f44bd10d630e1bf7


எழுத்துப் பிசகாம ஒத்தி ஒட்டியிருக்கீங்க.  எதுக்கு இந்த வேலை கெட்ட வேலை?

சரி.  நானும் ஒங்க ஆட்டத்தான் ஆடியாகணும்.  அதே 27 மார்ச் அன்னிக்கு, நீங்க இதை எழுதறதுக்கு பத்துப் பதினோரு மடல்களுக்கு முன்னால் நான் இப்படி எழுதியிருக்கிறேன்:





2013/3/27 Hari Krishnan <hari.har...@gmail.com>

2013/3/27 Hari Krishnan <hari.har...@gmail.com>
விவாதம் மிகவும் நீண்டு விட்டது.  இந்திரனைத் தாமரைக் கண்ணன் என்ற அடைமொழியால் கம்பன் குறித்திருக்கும் ஒரே ஒரு பாடலை நான் இடவா அல்லது கணேசன் இடுகிறாரா?

அவர் செய்யப் போவதில்லை.  நானே முடித்து வைக்கிறேன்.


செவ் வேலவர் சென்றனர்;
     சேறல் உறும்
அவ் வேலையின் எய்தினன்-

     ஆயிரமாம்,
தவ்வாது இரவும் பொலி
     தாமரையின்
வெவ்வேறு அலர், கண்ணினன்,
     விண்ணவர் கோன்.


இது ஆரணிய காண்டம், சரபங்கர் பிறப்பு நீங்கு படலத்தில் வரும் பாடல்.

மூச்சுத் திணறும் பணியில் இருக்கிறேன்.  நான் ஏன் இவ்வளவு நாள் கம்பன் எழுதவில்லை என்று வாதாடினேன், இந்தப் பாடலால், தாமரைக்கண்ணன் என்னும் அடைமொழி இந்திரனை மட்டும்தான் குறிக்குமா முதலான என் விளக்கங்கள் வந்த பிறகே என் தரப்பு முடிவடையும்.

அதுவரையில் சற்று பொறுத்திருக்கவும்.  பல்கலைக் கழக டாக்டர் ஏட்டுகளோடு நேரடித் தொடர்பில் இருக்கும் கல்விமான் உயர்திரு கணேசன் செய்ய முடியாததை டைப்பிஸ்ட் வேலை பார்த்த நான் செய்து முடித்திருக்கிறேன்.  இது ஒன்று போதும் எனக்கு.

என் தரப்பு வாதங்களையும் விளக்கங்களையும் அவையில் சமர்ப்பிக்கும் வரையில் எந்த முன்முடிபுக்கும் வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.



-- 
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

நான் எழுதி நான்கைந்து மணிநேரம் கழித்தே நீங்கள் ஒத்தி ஒட்டும் ஆட்டத்தைத் தொடங்கினீர்கள்.  இன்னிக்கு நல்லா கதகளி ஆட்டக்காரன் மாதிரி வேஷம் கட்றீங்க.

ஆடுங்க சார் ஆடுங்க.  நீங்க சொல்றதையும் கேட்டுக்க, நம்ப ஒரு அப்பாவிக் கூட்டம் காத்துக்கிட்டுதானே இருக்கு... (இன்னிக்குக் காத்தால கூட ஒரு அம்மணி இப்படித்தான ஏமாந்து போயிருந்தாங்க!)

ஆனா ஒண்ணு.  ரொம்ப நாளைக்கு ஓடாது. :)

Iyappan Krishnan

unread,
Aug 27, 2013, 12:17:51 PM8/27/13
to vall...@googlegroups.com
கடன்பெற்ற கம்பன் கலங்கிவிழி நீருகுத்து
திடமிழந்து,   தீர்த்தங்கரை வேண்டிப் பணிந்து
படங்கொண்ட பாம்பனைமேல் பள்ளித் துயில்வான்
நடங்கள் நவின்றான் நயந்து


இப்படின்னு ஒரு பாட்டும் உண்டு. இதுல இருந்து கம்பர் தீர்த்தங்கர்களிடமிருந்து அறிவு கடன் வாங்கிருக்கார்னு ப்ரூஃப் பண்ணிடலாம்.

#எச்சரிக்கை விரைவில் --- மனம் போன போக்கில் .. கம்பனும்,  சிந்தாமணியும், நொந்தமணியும்   நகைச்சு வை கட்டுரை வெளிவரும் வாய்ப்பிருக்கிறது.

N. Ganesan

unread,
Aug 27, 2013, 12:40:20 PM8/27/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்
In February, I mentioned the Kamban's verses and their indebtedness to
Jaina tradition
of Indra as a cat and the lotus(yoni) eyes all over the Vedic deity Indra. Indra
turning to a cat and getting 1000 yonis (lotuses) is a 2300 years old
(at least) story
among Tamils told by Samana religions' followers. This explains very well
the Jaina tradition in Tamil why Indra is lotus(yoni) eyed all over his body,
and why he is chosen as the deity of Marutam landscape when Jaina authors
gave Tamil its tiNai landscape theory.

Note that no one has mentioned about Indra as 1000 lotus(yoni) eyed
in Kamban, & connection to Ciivaka ChintaamaNi and TirukkuRaL before.
wrote about Indra cat story, and its (Jaina) Prakritism involved
long ago in CTamil (Paris) list.

N. Ganesan

Nagarajan Vadivel

unread,
Aug 27, 2013, 12:50:45 PM8/27/13
to vallamai

2013/8/27 Hari Krishnan <hari.har...@gmail.com>

Indira was not a God is not my statement please.  Kindly check the idendity of the person who said so.  I mentioned Varuna as a Tamil God

என் பார்வைக்குக் கிட்டிய உங்கள் மொத்த கடிதமுமே இவ்வளவுதான்: 

இந்திரனும் வருணனும் வடபுலத்தில் இறைனனாக இல்லையென்றாலும் தமிழகத்தின் ஐவகை நிலப்பாகுபாட்டில் இறைவனாகக் காட்டப்பட்டுள்ளனர்

வவ

யாரோ சொன்ன கருத்து என்றால், யார் சொன்னது என்பதை நீங்கள் வேறெங்காகிலும் சொல்லியிருக்கலாம்.  ஆனால், ‘காட்டப்பட்டுளனர்’ என்று அறுதியிட்டுச் சொல்லும் வாக்கியத்தை யாருடைய வாக்கியம் என்று எதனடிப்படையில் எப்படிக் கொள்வது?

2013/8/27 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
தமிழகத்தில் எல்லாக் கடவுளரும் சமம் என்ற நிலை இருந்தது.  அதை மாற்றித் திருமாலும் சிவனுமே உயர் தெய்வங்கள் என்றூ பக்தி இலக்கியங்கள் நிலைநாட்டிக்கொண்டன

வால்மீகி இராமாயணத்திலும், இந்திரன் கடவுள் அல்லன்.

​​


-- 
அன்புடன்,
ஹரிகி.​​

​vava​

Nagarajan Vadivel

unread,
Aug 27, 2013, 1:28:23 PM8/27/13
to vallamai

2013/8/27 Hari Krishnan <hari.har...@gmail.com>

நட்ஷெல்லை உடைச்சுப் பாருங்க பேராசிரியர் சார்.  வருணனுக்கு ஆலயம் இருக்கிறது அல்லது இருந்தது என்று தமிழிலக்கியச் சான்று இருக்கிறதா என்பதுதான் நான் கேட்ட கேள்

​இது ஒரு சான்று 11-ஆம் நூற்றாண்டில் ஒரிஸ்சாவில் ராஜா ராணி கோவிலில் உள்ள புடைப்புச் சிற்பம்.  இன்னும் தேடவேண்டும். ​


vava
​====================================================================================​




Information about this record

Title: Relief sculpture of Varuna, exterior of the Rajarani temple, c. 11th century CE, Bhubaneswar, Orissa, India
Year:1975
Categories:
Temples, Hindu
Varun̥a (Hindu Deity)
Relief (Sculpture)
Kalinga
Temples
Reliefs (sculptures)
Geographical Area:
Orissa (India)
Bhubaneswar (India)
India





Nagarajan Vadivel

unread,
Aug 27, 2013, 1:32:13 PM8/27/13
to vallamai

2013/8/27 Hari Krishnan <hari.har...@gmail.com>

எண்திசைக் காவலர்களில் யாருக்கெல்லாம் ஆலயம் இருந்தது?  தொல்காப்பியம் சுட்டும் மாயோனுக்கும் சேயோனுக்கும் இருந்திருக்கிறதே!


The highlight of the temple is the fine sculptures of dikpalas or guardians of the eight directions carved around the shrine. Dressed in diaphanous drapery they stand on lotuses, with their mounts below. Starting from East we encounter successively-Indra (lord of the East) holding a thunderbolt and an elephant goad, with the elephant below; the potbellied and beared Agni (southeast), god of fire, with the ram; Yama (South) holding a staff and a noose, with his vehicle the buffalo; Nirriti (southwest), the god of misery, holds a severed head and a sword above a prostrate figure; Varuna (West) holding a noose in his left hand, his vehicle is makara or the crocodile; Vayu (northwest) holding a banner and his vehicle is deer; Kubera (North) placed above seven jars of gems, he has a horse and Isana (northeast) shown with an erect phallus by the side of an emaciated figure. Of these the Agni and the Varuna are particularly impressive.


vava

ஶ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Aug 27, 2013, 2:00:03 PM8/27/13
to vall...@googlegroups.com
On Tuesday, August 27, 2013 10:20:45 PM UTC+5:30, பூனைக் கவிராயர் wrote:

வால்மீகி இராமாயணத்திலும், இந்திரன் கடவுள் அல்லன்.


எல்லா இதிகாச புராணங்களும் எல்லாரும் கடவுள்னு தான் ஆராய்ந்து சொல்கின்றன ;-)

ஶ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Aug 27, 2013, 2:02:43 PM8/27/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்
On Tuesday, August 27, 2013 10:10:20 PM UTC+5:30, N. Ganesan wrote:
In February, I mentioned the Kamban's verses and their indebtedness to
Jaina tradition
of Indra as a cat and the lotus(yoni) eyes all over the Vedic deity Indra. Indra
turning to a cat and getting 1000 yonis (lotuses) is a 2300 years old
(at least) story
among Tamils told by Samana religions' followers. This explains very well
the Jaina tradition in Tamil why Indra is lotus(yoni) eyed all over his body,
and why he is chosen as the deity of Marutam landscape when Jaina authors
gave Tamil its tiNai landscape theory.


ஆயிரங் கண்ணா?

அங்கமெல்லாம் கண்ணா?

எது சமணர் மரபு?

#திலோ எபக்டா?

தேமொழி

unread,
Aug 27, 2013, 2:10:00 PM8/27/13
to vall...@googlegroups.com


http://en.wikipedia.org/wiki/Shri_Varun_Dev_Mandir


Shri Varun Dev Mandir is a Hindu temple located in Manora Island in KarachiSindhPakistan. The temple is devoted to Varuna, the dev of the oceans in Hindu theology.[1] The exact year of the temple's construction or foundation is not known (it may be thousands of years old)[2] but it is widely believed that the current structure was built in around 1917–18.[3] Today, the temple is in a dilapidated state as humid winds are eating into the structure and the rich carvings on the walls of the temple are slowly eroding. At present, the building is not used for worship and the last ritual was held in the 1950s.[4]

Currently, This temple belongs to the Hindu Council of Pakistan. According to a legend, it was around 16th century when a wealthy sailor by the name of Bhojomal Nancy Bhattia bought Manora Island from the Khan of Kalat, who owned most of the land along the coastline at that time and then his family commissioned a temple on the lay terrain.[5]


..... தேமொழி

தேமொழி

unread,
Aug 27, 2013, 2:16:22 PM8/27/13
to vall...@googlegroups.com
Rain god Varuna temple. There is a belief that by applying turmeric paste to Varuna God, its rains

..... தேமொழி

தேமொழி

unread,
Aug 27, 2013, 2:20:28 PM8/27/13
to vall...@googlegroups.com


  • The Nawal Sagar is a large square-shaped artificial lake in the centre of Bundi containing many small islets. A temple dedicated to Varuna, the vedic god of water, stands half-submerged in the middle of the lake. the lake feeds the numerous bavdis in the old city by creating an artificial water table.

தேமொழி

unread,
Aug 27, 2013, 2:44:15 PM8/27/13
to vall...@googlegroups.com

Iyappan Krishnan

unread,
Aug 27, 2013, 2:48:34 PM8/27/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்
கம்ப ராமாயணத்தை எழுதியது கம்பரே அல்ல என்ற அதிர்ச்சித் தகவல் சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. ஒரு சமணர் ( திருத்தக்க தேவரின்  மறு அவதாரமாக இருக்கக்கூடும் என்ற ஐயம் உண்டு ) எழுதியதை  பெயர் மாற்றி கம்பர் என்று ஒருவர் எழுதியதாகக் கட்டுக் கதைக் கட்டிவிட்டு விட்டார்கள். களப்பிரர்கள் காலத்தில் சமணர்கள் எழுதியதை எப்படி சம்பந்தர் என்ற மூன்று வயது குழந்தை எழுதியதாகக் கட்டுக் கதைக் கட்டிவிட்டார்களோ அது போல.

அதாவது தீர்த்தங்கள் கோவிலுக்கு கோவில் வெவ்வேறு பெயரில் அழைக்கப் படுகிறது. பாபநாச தீர்த்தம், விரிஞ்சிபுர சிம்ம தீர்த்தம், திருச்செந்தூர் நாழிக்கிணறு தீர்த்தம், காசி ஞானவாவி தீர்த்தம், கழுக்குன்ற சங்கு தீர்த்தம், நயாகரா தீர்த்தம், மிசிசிபி தீர்த்தம், மஞ்சளாறு தீர்த்தம் என உலகெங்கும் விரவிக் கிடக்கும் தீர்த்தங்களை மக்களின் நலனுக்காக தீர்த்தங்கர்கள் உருவாக்கி வைத்துவிட்டுப் போனார்கள். தீர்த்தங்கர்கள் உருவாக்கிய நீர்நிலை என்பதாலே தீர்த்தம் என்ற பெயர் உருவாகியது என்பது இதில் இருந்து நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

நிலவைப் பார்த்து சமணர்கள் பாடியதைத் தான் இன்று வரைக்கும் அனைத்து கவிஞர்களும் காப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.   சீவக சிந்தாமணி என்ற ஒரு நூலை மட்டும் திருத்தக்க தேவர் எழுதாமல் போயிருந்தால் இன்று கம்பர் காப்பி அடித்து எழுதிய கம்பராமாயணம் இல்லாமலே போயிருக்கும்.     ஆனால்  கம்ப இராமாயணத்தை எழுதியவர் கம்பர் இல்லை என்று ஏற்கனவே  நிரூபித்திருக்கிறோம்.  உதாரணமாக திருத்தக்க தேவர் எழுதிய சீவக சிந்தாமணியில்  இராமன் என்ற கதாப பாத்திரத்தை உருவாக்கி " மராமரங்கள் ஏழும் துளைத்த இராமனின் திறமையை உன்னிடம் காண்கிறேன்" என்று விசயன் சீவகனின் வில் திறமையைப் போற்றிப் பாடியதை அல்லவா கம்பன் இராம அவதாரம் என்று எழுதி வைத்துவிட்டான். ஆகவே கம்பன் என்ற ஒருவன் இல்லவே இல்லை என்பதை நாம் உணர்ந்துக் கொள்ளவேண்டும்.

சிவபெருமானை கம்பன் ஆங்காங்கே சொல்லிச் செல்கிறான் அதுவும் திருத்தக்க தேவரிடம் இருந்து திருடியது என்பதற்கான ஆதாரம் இதோ.

பொலம் கொள் கொன்றையினான் சடை போல் மின்னி என்றும் முக்கண் சினம் திகழ் விடையினானும் செல்வியும் சேர்ந்த்து ஒத்தே என்று சச்சந்த மன்னனைப் புகழும் போதும், குழவி வெண் திங்கள் கோட்டின் மேல் பாயக் குளிர்புனல் விரித்து ஏற்கும் அழலவிர் சூலத்து அண்ணலே போல அருவி நீர்  என்று அருவியைப் புகழும் போதும் முடிச்சடை முனிவன் அன்று வேள்வியில் கொண்ட வேல்கண் என்று மகளிர் கண்களைப் புகழும் போதும் சிவனை அறிமுகப் படுத்துகிறார் திருத்தக்க தேவர். 


ஆயிரம் கண் கொண்ட  இந்திரனை அறிமுகப் படுத்தியது போல , சிவனைதிருத்தக்க தேவர் அறிமுகப் படுத்தாமல் போயிருந்தால் இந்த உலகிற்கு சிவன் என்ற தெய்வம் குறித்து தெரியாமலேயே போயிருக்கும்.  அது மட்டுமல்லாமல் முருகன், திருமகள், திருமால்  என பல தெய்வங்களை தமிழகத்துக்கு ஈந்தப் பெருமை திருத்தக்க தேவரையே சாரும்.  அத்தோடு நின்றுவிடவில்லை. நிலவு, தாமரை போன்றவை சமணர்களால் உலகிற்கு அளிக்கப் பட்ட கொடையே என்பதை சீவகச் சிந்தாமணி மூலம் அறியமுடிகிறது.


இன்னும் ஒரு முக்கியமான கருத்தொன்று உண்டு. அதுவரைக்கும் பெண்கள் வாடையே இல்லாமல் ஆண்கள் மட்டுமே இருந்த சமணர்கள் உலக நன்மைக்காக பெண்களை உருவாக்கி இருப்பார்களோ என்ற ஐயம் சீவக சிந்தாமணியைப் படிக்கும் போது எழுகிறது.  இதற்கு  சீவக சிந்தாமணியில்  குறிப்பிடப்பட்ட பெண்களின் தோற்ற ஒற்றுமை இன்றைய பெண்களுக்கும் இருப்பது நற்சான்றாகும்.


மீண்டும் இரண்டாயிரம் அடி உயரத் தீர்த்தங்கர்கள் வந்து உலகை ரட்சித்து உண்மையை நிலைநாட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் உள்ளங்கை நெல்லிக் கனி போலத் தெளிவு.

ஶ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Aug 27, 2013, 3:00:30 PM8/27/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Wednesday, August 28, 2013 12:18:34 AM UTC+5:30, ஐயப்பன் கிருஷ்ணன் wrote:
கம்ப ராமாயணத்தை எழுதியது கம்பரே அல்ல என்ற அதிர்ச்சித் தகவல் சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.

மாத்தி யோசிக்கறதெல்லாம் ஆய்வுன்னா கரீக்கிட்டுதானே!

DEV RAJ

unread,
Aug 27, 2013, 3:26:04 PM8/27/13
to vall...@googlegroups.com
On Monday, 26 August 2013 21:31:45 UTC-7, செல்வன் கோவை wrote:

2013/8/26 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
வள்ளுவர் காலத்துக்கு முன் மாலவன்தான் தாமரைக்கண்ணான் எனும் பாடல் இருக்கா?

விஷ்ணு சஹஸ்ரநாமம் (வியாச பாரதத்தில் உள்ளது)
மாயோன் அரவிந்தாக்ஷன் (தாமரைக்கண்ணன்) என அழைக்கபடுகிறார்.
குறளுக்கு முன்பு இந்திரனை தாமரைக்கண்னன் என அழைக்கும் வடமொழிப்பாடல் இருந்தால் கொடுக்கவும்


தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் இவ அக்ஷிணீ
[ஆதவனால் மலர்ந்த தாமரைபோன்ற கண்கள்]
எனும் மறை முடிவு முன்பே எடுத்துக்காட்டப்பட்டு விட்டது, செல்வன்.
இதுபோன்ற விவாதம் வரப்போகிறது  என்பது தெரிந்தே.
பழைய இழையிலேயே பார்க்கலாம்


தேவ்





Selvan Kovai

unread,
Aug 27, 2013, 5:08:52 PM8/27/13
to vallamai, mintamil

2013/8/27 N. Ganesan <naa.g...@gmail.com>

1000 தாமரைக்கண்ணான் என்று வள்ளுவர் கூறும் இந்திரன் பெயருக்கு விளக்கமாகப் பல பாடல்களில்
கம்பன் பாடியிருகிறான்.



ஆயிரம் தாமரைக்கண்ணன் என வள்ளுவர் எங்கே பாடினார்?

அவர் கூறீயது தாமரைக்கண்ணன் உலகு என்பது மட்டுமே. வள்ளுவர் காலத்துக்கு பிந்தைய சீவகசிந்தாமணி, கம்பராமாயணத்தை வள்ளூவர் இந்திரனை தான் கூறீனார் என்பதுக்கு ஆதாரமாக எப்படி கொள்ள முடியும்?

தாமரைக்கண்ணன் என தமிழர்கள் பெயர் வைக்கையில் திருமாலை மனதில் இருத்தி தான் வைக்கிறார்கள். தாமரைக்கண்ணன், கமலக்கண்ணன், பங்கயக்கண்ணன், அரவிந்தாக்ஷன், பத்மலோசனன்..அனைத்து பெயர்களும் திருமாலை குறிப்பவையே. இலக்கியங்களில் உவமையின் பொருட்டு "தாமரை போலும் கண்" என சொல்லலாம். ஆனால் தாமரைக்கண்ணன் என்பதை பெயராகவே கொண்ட ஒரே தெய்வம் மாலே. குறளுக்கு முற்பட்ட வடமொழி இலக்கியங்கள் (வேதம், வியாச மகாபாரதம்) உட்பட தாமரைக்கண்ணன் என அழைக்கபடுபவர் திருமாலே. பெருமாளது திவ்ய நாமங்களில் தாமரைக்கண்ணன் என பொருள் தரும் பல பெயர்கள் உண்டு.

இந்திரனுக்கு அப்படி ஒரு பெயரே கிடையாது. உவமைக்கு வேண்டுமனாஅல் எழுதி இருக்கலாம். 

மேலும் சமண இந்திரன் ஒழுக்கமானவன். காமுகன் அல்ல. முனிபத்தினியை கவர நினைத்து ஆயிரம் யோனி/ கண் சாபம் பெற்றவன் வேத இந்திரன். சமண இந்திரன் தேவர் தலைவன். உத்தமன். சமண இந்திரலோகத்தில் அரம்பையர் இல்லை. நடனம் இல்லை. 

DEV RAJ

unread,
Aug 27, 2013, 7:24:40 PM8/27/13
to vall...@googlegroups.com
On Tuesday, 27 August 2013 06:36:54 UTC-7, N. Ganesan wrote:
Kamban just borrows the material from Jaina literature. He uses what is tols in Ciivaka CintAmaNi epic, just like he
borrows the epic narration in Viruttam from the earlier Jaina epic author.
N. Ganesan
 

இந்திரன் பூசை இவள் அகலிகை இவன்
சென்ற கவுதமன் சினன் உறக் கல்லுரு
ஒன்றிய படி இதென்று உரை செய்வோரும்...

இது கம்பருக்குத் தெரியாதா ?
இது ஜெயின் மெடீரியலா ? 


தேவ்

DEV RAJ

unread,
Aug 27, 2013, 8:00:13 PM8/27/13
to vall...@googlegroups.com
பரிபாடல் :

அகலிகை சாபம் பெற்றது -

இந்திரன் பூசை இவள் அகலிகை இவன்
சென்ற கவுதமன் சினன் உறக் கல்லுரு
ஒன்றிய படி இதென்று உரை செய்வோரும்...


இந்திரனுக்கு ஆயிரம்கண்  -

மை இரு நூற்று இமை உண்கண் மான் மறிதோள் மணந்த ஞான்று
ஐ இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள் மலர் உண்கண்,
மணி மழை தலைஇயென, மா வேனில் கார் ஏற்று,
தணி மழை தலையின்று, தண் பரங்குன்று                 
                                
ஐ இருநூற்று மெய்ந் நயனத்தவன்  - ஆயிரங்கண்ணான் [இந்திரன்]

கம்பருக்குப் பரிபாடல் தெரியாதா ? இல்லை,
டாக்டர் நா கணேசனுக்குத் தெரியாதா ? 

வள்ளுவம் சொல்வது தாமரைக் கண்ணானை.

பரிபாடலின் காலம், குறளின் காலம்,
சிந்தாமணி - கம்ப ராமாயணம் இவற்றின்
காலம் அனைத்தையும் ஆராய்ந்து
முடிவு கட்டலாம்.

யுனிவெர்ஸிடி லெவெல்ல யாராச்சும் செஞ்சிருப்பாங்க


தேவ்

வேந்தன் அரசு

unread,
Aug 27, 2013, 8:40:21 PM8/27/13
to vallamai



27 ஆகஸ்ட், 2013 12:17 PM அன்று, Iyappan Krishnan <jee...@gmail.com> எழுதியது:
இந்திரன் கதையும் விருத்தப்பாடல் வகையும் கம்பனுக்கு முன்னோடி தேவர் என்று கணேசர் சொல்லுகிறார்.
இராம காதையை அல்ல.
 


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Hari Krishnan

unread,
Aug 27, 2013, 8:43:16 PM8/27/13
to vallamai

2013/8/28 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

இந்திரன் கதையும் விருத்தப்பாடல் வகையும் கம்பனுக்கு முன்னோடி தேவர் என்று கணேசர் சொல்லுகிறார்.
இராம காதையை அல்ல.
 

அது உண்மையா இருக்க எவ்வளவு சாத்தியம் இருக்கோ, அவ்வளவு சாத்தியமும் இதுக்கும் இருக்கு. :)



--
அன்புடன்,
ஹரிகி.

வேந்தன் அரசு

unread,
Aug 27, 2013, 8:49:52 PM8/27/13
to vallamai



27 ஆகஸ்ட், 2013 12:31 AM அன்று, Selvan Kovai <hol...@gmail.com> எழுதியது:


2013/8/26 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
வள்ளுவர் காலத்துக்கு முன் மாலவன்தான் தாமரைக்கண்ணான் எனும் பாடல் இருக்கா?


விஷ்ணு சஹஸ்ரநாமம் (வியாச பாரதத்தில் உள்ளது)

மாயோன் அரவிந்தாக்ஷன் (தாமரைக்கண்ணன்) என அழைக்கபடுகிறார்.

குறளுக்கு முன்பு இந்திரனை தாமரைக்கண்னன் என அழைக்கும் வடமொழிப்பாடல் இருந்தால் கொடுக்கவும்

பாடல் இருந்தால் என்ன இல்லாகாட்டி என்ன. கதை இருக்கு.

மாலவனுக்கு கண்கள் தாமரைபோல்தான். மேலும். அவருக்கு கண்  மட்டுமல்ல எல்லாமும் தாமரைதான். அவர் ஒரு தாமரைக்காடு. இங்கு சினை ஆகுபெயர்
இந்திரனுக்கு தாமரைகளே கண்கள். ஆயிரம் தாமரைகளை கண்களாக கொண்டவன். இது முதலாகுபெயர்.

வேந்தன் அரசு

unread,
Aug 27, 2013, 8:52:51 PM8/27/13
to vallamai, mintamil



27 ஆகஸ்ட், 2013 5:08 PM அன்று, Selvan Kovai <hol...@gmail.com> எழுதியது:


2013/8/27 N. Ganesan <naa.g...@gmail.com>

1000 தாமரைக்கண்ணான் என்று வள்ளுவர் கூறும் இந்திரன் பெயருக்கு விளக்கமாகப் பல பாடல்களில்
கம்பன் பாடியிருகிறான்.



ஆயிரம் தாமரைக்கண்ணன் என வள்ளுவர் எங்கே பாடினார்?

கணேசர் மாட்டிக்கிட்டார்.

நேரம் இல்லேனா இருக்கும்போது எழுதுங்க. 

புலிகளுக்கு நடுவே தா மரையாக தவிக்காதீங்க.

Hari Krishnan

unread,
Aug 27, 2013, 9:26:44 PM8/27/13
to vallamai

2013/8/27 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

இது ஒரு சான்று 11-ஆம் நூற்றாண்டில் ஒரிஸ்சாவில் ராஜா ராணி கோவிலில் உள்ள புடைப்புச் சிற்பம்.  இன்னும் தேடவேண்டும். ​

தேடுங்க தேடுங்க தேடிக்கிட்டே இருங்க. :)

ஆனா ஒண்ணு,  சிற்பத்துக்கும் விக்கிரகத்துக்கும் உள்ள வித்தியாசத்தப் புரிஞ்சிக்கிட்டுதான் பெரியவங்க தேடுவாங்க.  

Nagarajan Vadivel

unread,
Aug 27, 2013, 9:55:02 PM8/27/13
to vallamai

2013/8/28 Hari Krishnan <hari.har...@gmail.com>

ஆனா ஒண்ணு,  சிற்பத்துக்கும் விக்கிரகத்துக்கும் உள்ள வித்தியாசத்தப் புரிஞ்சிக்கிட்டுதான் பெரியவங்க தேடுவாங்க.  

​அந்த வித்தியாசத்தைப் பெரியவங்க சொல்லலாமே சிறியவர்கள் புரிந்துகொண்டு தேட உதவக்கூடுமல்லவா

வவ​

வேந்தன் அரசு

unread,
Aug 27, 2013, 10:06:11 PM8/27/13
to vallamai



27 ஆகஸ்ட், 2013 9:55 PM அன்று, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> எழுதியது:


2013/8/28 Hari Krishnan <hari.har...@gmail.com>
ஆனா ஒண்ணு,  சிற்பத்துக்கும் விக்கிரகத்துக்கும் உள்ள வித்தியாசத்தப் புரிஞ்சிக்கிட்டுதான் பெரியவங்க தேடுவாங்க.  

​அந்த வித்தியாசத்தைப் பெரியவங்க சொல்லலாமே சிறியவர்கள் புரிந்துகொண்டு தேட உதவக்கூடுமல்லவா

சிற்பம் கல்லில்தான் இருக்கும். சிலா எனில் கல். 
விக்கிரகம் எதிலும்
என் ஊகம்.

Hari Krishnan

unread,
Aug 27, 2013, 10:11:04 PM8/27/13
to vallamai

2013/8/28 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

சிற்பம் கல்லில்தான் இருக்கும். சிலா எனில் கல். 
விக்கிரகம் எதிலும்
என் ஊகம்.

நீங்கதான் சாமி இல்லாதவராச்சே! :))

இல்லாட்டி ஒங்க ஊர் கோயில்ல பிரதிஷ்டை பண்ணியிருக்கறத மூல விக்கிரகம்னு சொல்றாங்களா, மூல சிற்பம்னு சொல்றாங்களான்னு தெரிஞ்சிருக்குமே!

வேந்தன் அரசு

unread,
Aug 27, 2013, 10:22:05 PM8/27/13
to vallamai



27 ஆகஸ்ட், 2013 10:11 PM அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2013/8/28 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
சிற்பம் கல்லில்தான் இருக்கும். சிலா எனில் கல். 
விக்கிரகம் எதிலும்
என் ஊகம்.

நீங்கதான் சாமி இல்லாதவராச்சே! :))

இல்லாட்டி ஒங்க ஊர் கோயில்ல பிரதிஷ்டை பண்ணியிருக்கறத மூல விக்கிரகம்னு சொல்றாங்களா, மூல சிற்பம்னு சொல்றாங்களான்னு தெரிஞ்சிருக்குமே!
 

கடவுள் சிலை =விக்கிரகம். தாங்கஸ்.
 

N. Ganesan

unread,
Aug 27, 2013, 10:28:27 PM8/27/13
to vall...@googlegroups.com, mintamil
On Tuesday, August 27, 2013 7:06:11 PM UTC-7, வேந்தன் அரசு wrote:

சிற்பம் கல்லில்தான் இருக்கும். சிலா எனில் கல். 
விக்கிரகம் எதிலும்
என் ஊகம்.


4500 ஆண்டுகளாக வருணன் வழிபாடு எப்படி இருந்தது? என்று என் ஆய்வுக் கட்டுரைகளில்
எழுதியிருக்கிறேன். சிகாகோ நகரிலும் படங்களுடன் பேசியதைக் கேட்டீர்கள்.
வருணனைத் தொழ எவ்வாறு சிற்பம் அமைக்கணும் என்று விக்ரகவிதி இருக்கிறதும் கொடுத்துள்ளேன்.

அணங்கு என்று சங்க இலக்கியத்தில் அழைக்கப்படும் வருணன் வழிபாடு
எவ்வாறு நடந்தது என்று பாடல்கள் இருக்கின்றன. இரு முக்கியமான layers 
ஆர்ய மொழிபேசுபவர்கள் வந்தனர். அவர்களில் முதற் குழுவினர் தாசர்கள் - வருண பகவானுக்கு
என ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Aug 27, 2013, 10:28:57 PM8/27/13
to vallamai
ஆகம அடிப்படயில் அமைந்த கோவில்களுக்கு மட்டும்தானே இது பொருந்தும்

தமிழ்நாட்டில் உள்ள அய்யனாரும் பெண் தெய்வங்களும் வெறும் சிற்பங்கள்

சிவனும் திருமாலும் மட்டுமே விக்கிரஹங்கள்

தமிழ்நாட்டில் பிரம்மாவுக்குக்கூடக் கோவில்கள் இல்லை அதனால் அவர் வெறும் விருமாண்டி என்று நினைக்கவேண்டியதுதான்

வவ


2013/8/28 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>



27 ஆகஸ்ட், 2013 10:11 PM அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2013/8/28 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
சிற்பம் கல்லில்தான் இருக்கும். சிலா எனில் கல். 
விக்கிரகம் எதிலும்
என் ஊகம்.

நீங்கதான் சாமி இல்லாதவராச்சே! :))

இல்லாட்டி ஒங்க ஊர் கோயில்ல பிரதிஷ்டை பண்ணியிருக்கறத மூல விக்கிரகம்னு சொல்றாங்களா, மூல சிற்பம்னு சொல்றாங்களான்னு தெரிஞ்சிருக்குமே!
 

கடவுள் சிலை =விக்கிரகம். தாங்கஸ்.
 
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

N. Ganesan

unread,
Aug 27, 2013, 10:41:31 PM8/27/13
to vall...@googlegroups.com, mintamil


On Monday, August 26, 2013 9:31:45 PM UTC-7, செல்வன் கோவை wrote:

குறளுக்கு முன்பு இந்திரனை தாமரைக்கண்னன் என அழைக்கும் வடமொழிப்பாடல் இருந்தால் கொடுக்கவும்


இந்திரனை தாமரைக்கண்ணன் என்பது சமண(சிரமண சமயங்கள்) - அதாவது பிராகிருத வடமொழி இலக்கியங்களில்
உள்ள தகவல் இது. அந்த வடமொழி இலக்கியங்களில் உள்ள தகவல். விரிவாக, யுனிவெர்சிட்டி ஆஃப் சிகாகோ
வடமொழிப் பேராசிரியர் எழுதியிருப்பதை அளித்தேனே. படிக்கவில்லையா? படித்து தாங்கள் மொழிபெயர்த்தால்
வள்ளுவரும், பண்டைச் சமணர்களும் இந்திரனை ஏன் தாம்ரைக்கண்ணான் என்கிறார் என்பது விளங்கும்.
வடமொழி இலக்கியச் செய்தி: இந்திரன் தாமரைக்கண்ணான் என்பது. Given the reference pages of the book
by distinguished professor of Sanskrit, University of Chicago here. The Eyes of Indra, pp. 104-111. Pl. translate the chapter of the 
book into Tamil exactly, then people will  understand



நா. கணேசன்
 

--

Hari Krishnan

unread,
Aug 27, 2013, 10:45:16 PM8/27/13
to vallamai, mintamil

2013/8/28 N. Ganesan <naa.g...@gmail.com>

அணங்கு என்று சங்க இலக்கியத்தில் அழைக்கப்படும் வருணன் வழிபாடு
எவ்வாறு நடந்தது என்று பாடல்கள் இருக்கின்றன. இரு முக்கியமான layers 
ஆர்ய மொழிபேசுபவர்கள் வந்தனர். அவர்களில் முதற் குழுவினர் தாசர்கள் - வருண பகவானுக்கு
என ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

அண்ணன் அருகனை விட்டுட்டு வருணனுக்கு வந்துட்டார்.  என்ன போச்சு இப்போ.. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள, வருணனும் தீர்த்தங்கரர்தான் அப்டின்னு வண்டி ஓட்டிட்டா போச்சு!

Iyappan Krishnan

unread,
Aug 27, 2013, 11:03:22 PM8/27/13
to vall...@googlegroups.com
2013/8/28 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
கடன்பெற்ற கம்பன் கலங்கிவிழி நீருகுத்து
திடமிழந்து,   தீர்த்தங்கரை வேண்டிப் பணிந்து
படங்கொண்ட பாம்பனைமேல் பள்ளித் துயில்வான்
நடங்கள் நவின்றான் நயந்து


இப்படின்னு ஒரு பாட்டும் உண்டு. இதுல இருந்து கம்பர் தீர்த்தங்கர்களிடமிருந்து அறிவு கடன் வாங்கிருக்கார்னு ப்ரூஃப் பண்ணிடலாம்.

#எச்சரிக்கை விரைவில் --- மனம் போன போக்கில் .. கம்பனும்,  சிந்தாமணியும், நொந்தமணியும்   நகைச்சு வை கட்டுரை வெளிவரும் வாய்ப்பிருக்கிறது.



இந்திரன் கதையும் விருத்தப்பாடல் வகையும் கம்பனுக்கு முன்னோடி தேவர் என்று கணேசர் சொல்லுகிறார்.
இராம காதையை அல்ல.
 

//On Tuesday, 27 August 2013 06:36:54 UTC-7, N. Ganesan wrote:
Kamban just borrows the material from Jaina literature. He uses what is tols in Ciivaka CintAmaNi epic, just like he
borrows the epic narration in Viruttam from the earlier Jaina epic author.
N. Ganesan//

இதுக்கு அர்த்தம் என்ன வேந்தன் ஐயா ?

N. Ganesan

unread,
Aug 27, 2013, 11:07:22 PM8/27/13
to vall...@googlegroups.com, mintamil
On Tuesday, August 27, 2013 2:08:52 PM UTC-7, செல்வன் கோவை wrote:

இந்திரனுக்கு அப்படி ஒரு பெயரே கிடையாது. உவமைக்கு வேண்டுமனாஅல் எழுதி இருக்கலாம். 

மேலும் சமண இந்திரன் ஒழுக்கமானவன். காமுகன் அல்ல. முனிபத்தினியை கவர நினைத்து ஆயிரம் யோனி/ கண் சாபம் பெற்றவன் வேத இந்திரன். சமண இந்திரன் தேவர் தலைவன். உத்தமன். சமண இந்திரலோகத்தில் அரம்பையர் இல்லை. நடனம் இல்லை. 

தமிழைப் படித்தால் இதற்கு நேர்மாறாக இருக்கிறது. தாமரைக்கண்ணன் என்று வள்ளுவர் குறிப்பது இந்திரனை
என்று எல்லாப் பழைய சமணாசிரியர்களும் கூறியிருக்கிறார்கள். திருத்தக்கதேவர் இந்திரனுக்கு உடல் முழுதும்
கண்கள் தாமரை என்பதை விளக்கியுள்ளார்கள். கம்பன் பல கருத்துக்களையும், விருத்த யாப்பில் காவியம் பாடுதலையும்
தேவரிடம் இருந்து பெற்றுப்பாடியிருக்கிறார். 
கம்பர் தரும் தாமரைக்கண்ணன் இந்திரன் என்னும் விளக்கம் முதலில் விளக்கியது சமணக் காப்பியங்கள் தாம்.
கதை பிராகிருத மூலம் கொண்டது. http://en.wikipedia.org/wiki/Pompeii பொம்ப்பை நகர மாளிகைகளின் படுக்கையறைச்
சித்திரங்கள் போல, சமணர்கள் தரும் இந்திரன் தாமரைக்கண்ணன் ஆன கதையை பரங்குன்றில் டூரிஸம் வளர்க்க
வரைந்துள்ளனர். சமணர்கள் சொல்லிய பிராகிருதக் கதையை பொம்ப்பை மாளிகை ஓவியங்கள் போலப்
பெரிதாக வரைந்தது யவனச் சைத்ரீகர்களாகவும் இருக்கலாம். தமிழர்களின் சித்திரக் கலையைவிட மிக 
ஓங்கியிருந்தது யவனர்களின் சித்திரங்களே. 

சமணாசிரியர் தொல்காப்பியர் அரம்பையர் கோன் இந்திரன் நடவடிக்கையால் தான் மருதத்திணைத் தெய்வம்
என்று படைக்கிறார். காமவின்பம் பற்றி இந்திரன் அதற்குக் கடவுள் என்பது பற்றியும் இலக்கண உரைகள்
விரிவாக உரைக்கின்றன. சீவக சிந்தாமணியில் பல பாடல்கள் இந்திரபோகம் என்பது என்ன? 
அரம்பையர்களுடன் இந்திரன் களியாட்டம் பற்றி விரிவாக உள்ளன. நான் கம்பன் இந்திரன் தாமரைக்கண்ணன்
என்று பாட மூலகாரணமான சிந்தாமணிப் பாடல் தந்திருக்கிறேன். அதிலும், அரம்பையர்களுடன் களிக்கும்
இந்திரனைப் பாடியுள்ளார். பார்க்கவும். இன்னும் நிறையப் பாடல்களில் இந்திரன் பற்றி சிந்தாமணி பேசுகிறது.
இந்தச் செய்திகளை உள்வாங்கி சில நூற்றாண்டுகள் சென்றபின் அவற்றை விரிவாகக் கம்பரும் பாடியுள்ளார்.

இன்னொரு சமணக் காப்பியத்தில் இந்திரன் அரம்பையர்கள் கோனாகப் பாடுவதைப் பார்ப்போம்.
அரம்பையர் - தேவ லோகத்து வேசிகள் என்று அபிதானசிந்தாமணி குறிப்பிடுகிறது.

மாலை, காலை என்றில்லாமல் இந்திர லோகத்தில் என்ன நடக்கிறது?
தோலாமொழித் தேவர், சூளாமணி - சமணக் காப்பியத்தில் வர்ணிக்கிறார்:

இன்ப உலகம்

மைந்தரு மகளிரு மாலை காலையென்
றந்தரப் படுத்தவ ரறிவ தின்மையால்
சுந்தரப் பொற்றுக டுதைந்த பொன்னகர்
இந்திர வுலகம்வந் திழிந்த தொக்குமே.

தாமரைக்கண்ணன் என்பது இந்திரனை - என்னும் சமணர் விளக்கத்தினை
அறியச் சமணக் காப்பியங்களில் இந்திரன், அவன் லோகம் பற்றிய  வருணனை, 
மருதத்திணைப் பாடல்களின் கருப்பொருள், ஏன் இந்திரனை மருதக் கடவுள்
என்று சமணர்கள் தமிழ் இலக்கணம் படைத்தனர் என்று பார்த்தால் புரிந்துகொள்ளலாகும்.

மெகாலிதிக் காலத்தில் சிவன் வழிபாட்டைவிட வருணன் வழிபாடு தான்.
எனவேதான் சிவனுக்கு திணை இல்லை. வருணனுக்குண்டு. பிற்காலத்திலே, சிவன் வருணனின் பண்புகளை
எடுத்துக்கொண்டு வளர்வதைத் தமிழ், வடமொழி இலக்கியங்கள் காட்டிநிற்கின்றன. 

Hari Krishnan

unread,
Aug 27, 2013, 11:08:08 PM8/27/13
to vallamai

2013/8/28 Iyappan Krishnan <jee...@gmail.com>

//On Tuesday, 27 August 2013 06:36:54 UTC-7, N. Ganesan wrote:
Kamban just borrows the material from Jaina literature. He uses what is tols in Ciivaka CintAmaNi epic, just like he
borrows the epic narration in Viruttam from the earlier Jaina epic author.
N. Ganesan//

இதுக்கு அர்த்தம் என்ன வேந்தன் ஐயா ?

வேந்தன் இவ்ளோ அப்பிராணியா இருக்கும்னு நான் நெனச்சுக்கூட பாக்கலியே.

சமுக தலைவர் உயர்திரு களிற்றையன் வாழ்க வாழ்க!  (சமுக=சமணர்களை முட்டாளடிக்கும கலக்கம்.)

Hari Krishnan

unread,
Aug 27, 2013, 11:10:58 PM8/27/13
to vallamai, mintamil

2013/8/28 N. Ganesan <naa.g...@gmail.com>

தாமரைக்கண்ணன் என்பது இந்திரனை - என்னும் சமணர் விளக்கத்தினை
அறியச் சமணக் காப்பியங்களில் இந்திரன், அவன் லோகம் பற்றிய  வருணனை, 
மருதத்திணைப் பாடல்களின் கருப்பொருள், ஏன் இந்திரனை மருதக் கடவுள்
என்று சமணர்கள் தமிழ் இலக்கணம் படைத்தனர் என்று பார்த்தால் புரிந்துகொள்ளலாகும்.

அதாவது உயர்திரு கனக்டிகட் (மாஜி நாசா) டாக்டரு இதெல்லாத்தையும் கரைச்சிக் குடிச்சிட்டார்னு நாம புரிஞ்சி்ககணும்.  அதான் இப்ப விஸர்ஜனம் ஆவுதே... அது பத்தாது சாட்சிக்கு. :)

N. Ganesan

unread,
Aug 27, 2013, 11:20:49 PM8/27/13
to vall...@googlegroups.com, mintamil
On Tuesday, August 27, 2013 5:40:21 PM UTC-7, வேந்தன் அரசு wrote:

இந்திரன் கதையும் விருத்தப்பாடல் வகையும் கம்பனுக்கு முன்னோடி தேவர் என்று கணேசர் சொல்லுகிறார்.
இராம காதையை அல்ல.
 


ஆம். முழு மடலும் முனைவர்கள் படிக்கவேண்டும்.


On Monday, August 26, 2013 11:52:37 AM UTC-7, செல்வன் கோவை wrote:

தாமரைக்கண்ணான் என வள்ளுவர் யாரைக்கூறுகிறார் என்பதுதான் பாயிண்டு



It is already mentioned in Tamil literature clearly. TaamaraikkaNNan is  Indra. 

In Indian religions, lotus and yoni, euphemistically called as 'kaN' (eye), serve as equivalents. There is also a word play
between Sanskrit and Prakrit regarding the story of Indra turning to a cat, hence this story reaching Tamils by Jains (shramaNas),
and the sage Gotama cursing Indra with 1000 yonis. Later, acc. to Kamban, Gotama changes the yonis into lotuses.
That is the reason, Jains call Indra as tAmaraikkaNNan because tAmarai = yoni, seen all over the body of Indra.
Having 1000 yonis (lotus-eyes) all over the body is the reason Jains make Indra (Venthan) as the god of the Marutam landscape
- reading Marutam landscape poems and the behaviour of the Uuran in these poems and the go betweens (pANan, viRali)
will make things clear on why Indra is made the god of Marutam. The Jaina/Shramana story of tAmaraikkaNNaan as Indra
is mentioned in Nalatiyar and KuRaL and its commentators. The SamaNar(ShramaNar) story of 1000 yoni-eyed Indra
using the word play between Sanskrit and Prakrit and turning Indra into a cat is narrated in Tamil throught its existence.

Kamban just borrows the material from Jaina literature. He uses what is told in Ciivaka CintAmaNi epic, just like he
borrows the epic narration in Viruttam from the earlier Jaina epic author.

N. Ganesan

Iyappan Krishnan

unread,
Aug 27, 2013, 11:44:03 PM8/27/13
to vall...@googlegroups.com, mintamil
On Wed, Aug 28, 2013 at 8:50 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

It is already mentioned in Tamil literature clearly. TaamaraikkaNNan is  Indra. 

In Indian religions, lotus and yoni, euphemistically called as 'kaN' (eye), serve as equivalents. There is also a word play
between Sanskrit and Prakrit regarding the story of Indra turning to a cat, hence this story reaching Tamils by Jains (shramaNas),
and the sage Gotama cursing Indra with 1000 yonis. Later, acc. to Kamban, Gotama changes the yonis into lotuses.
That is the reason, Jains call Indra as tAmaraikkaNNan because tAmarai = yoni, seen all over the body of Indra.
Having 1000 yonis (lotus-eyes) all over the body is the reason Jains make Indra (Venthan) as the god of the Marutam landscape
- reading Marutam landscape poems and the behaviour of the Uuran in these poems and the go betweens (pANan, viRali)
will make things clear on why Indra is made the god of Marutam. The Jaina/Shramana story of tAmaraikkaNNaan as Indra
is mentioned in Nalatiyar and KuRaL and its commentators. The SamaNar(ShramaNar) story of 1000 yoni-eyed Indra
using the word play between Sanskrit and Prakrit and turning Indra into a cat is narrated in Tamil throught its existence.

Kamban just borrows the material from Jaina literature. He uses what is told in Ciivaka CintAmaNi epic, just like he

முனைவர் ஐயா,

அதான் முதல்லயே சொன்னேனுங்களே. தொர இங்கீலீசுல பேசுதுன்னு பொலம்பிட்டு போற ஆளுங்க கிட்ட ட்ரையாங் டக்காங்னு இங்கிலீசு பேசுனா எங்களுக்கு புரியாதுல்ல.  அப்புறம் நிலவு, தாமரை, பெண்கள்  பத்தி கூட சமணர்கள் பல பாடல்கள்ல சொல்லிருக்காங்க. அதை அப்படியே காப்பிக்கேட் கம்பன் எழுதிட்டார்னா பாருங்களேன்.  ஏன்னா கம்பனுக்கு சுய அறிவு கிடையாதுன்னு நினைக்கிறேன். அதுவும் இல்லாம நீங்க ஒண்ணு சொல்லிட்டீங்கன்னா அது தப்பாக போக வாய்ப்பிருக்கா சொல்லுங்க ?  அவ்வளவு ஏன் இந்திரன் பூனையா வந்ததை சமணர்கள் எழுதி வைக்க, பரிபாடல்ல கூட அதை அப்படியே காப்பி அடிச்சுட்டாங்கன்னா பாருங்க. ( யாருங்க அது பரிபாடல் காலத்தால் மூத்தது, சீவக சிந்தாமணி முதற்கொண்டு அதுல இருந்து தான் சமணர்கள் காப்பி அடிச்சுட்டாங்கன்னு கைத்தூக்கறது. கம்பன் பரிபாடலை படிச்சிருக்க மாட்டானான்னு எல்லாம் கேட்ட்கும், சமணர்கள் பத்திக் குறை கூறும் அனைவருக்கும் இரவு தூங்கும் போது கண்ணு தெரியாமப் போகக் கடவதுன்னு சாபம் குடுத்துடுவேன். அப்புறம்  ரெண்டாயிரம் அடி தீர்த்தங்கர்கள் கிட்ட சொல்லி உங்க கண்ணுல தூங்கற சமயமாப் பாத்து எலுமிச்சை பிழிஞ்சிட சொல்லுவேன். ஜாக்கிறதை )

 உலகத்துல சமணர்கள் மட்டும் இல்லாம போயிருந்தா எவ்ளோ பெரிய  இன்னல்களுக்கு உள்ளாகி இருக்கும் பாருங்க. நிலவு, சூரியன், தாமரை, முக்கியமா  சமணர்களுக்கு ரொம்ப விருப்பமான இந்திரனின் ஆயிரம் கண்கள், என எல்லாவற்றையும் உலகம் இழந்திருக்கும்.  உலகிற்கு சமணர்கள் நிலவை தராம போயிருந்தா கரண்ட் இல்லாத இந்த கால கட்டத்துல  மக்கள் எவ்ளோ கஸ்டப்பட்டிருப்பாங்கன்னு புரியுது. வாழ்க சமணர்கள். வாழ்க இரண்டாயிரம் அடி தீர்த்தங்கர்கள். #யோசிச்சுப் பார்த்தா சமணர்கள் இல்லைன்னா உலகம் என்னாகிருக்கும்னு ரொம்ப பயம்மா இருக்கு.

N. Ganesan

unread,
Aug 27, 2013, 11:57:09 PM8/27/13
to vall...@googlegroups.com, mintamil

Tamil won't have an independent grammar and literature if Jains did not work for it for 23+ centuries.
They gave the Prakrit story for Indra-Ahalya affair, Valmiki does not say Ahalya turned into stone,
nor that Indra became a cat. These are from Prakrit tradition of Jainas in Tamizakam. This Prakrit
story of Ahalya- Indra was very popular. Indra getting lotus(=yoni) eyes in his bldy, hence his name taamaraikkaNNan
in kuRaL, acc. to its Jain commentators is mentioned in two places in Sangam literature,
and with Ahalya as stone and Indra as cat - this Shramana story occurs thrice in Sangam texts.
Interestingly, VaLLuvar refers to  this Indra-Ahalya story thrice also. Only in 13th century or so,
ParimElazakar tries to shift the long time meaning in these kuRaLs, but earlier authors and
Jaina epics (e.g., ciivaka cintaamaNi) give us the meaning of taamaraikkaNNan for Indra,
and why he's called so. For some 4000 years in Indian art, which BTW was started by 
Shramana religions, lotus has the same meaning as in the name of taamaraikkaNNan for Indra.
Indra is called ceGkaN maal in the Jaina literature, NaalaTiyaar for this reason.

~ NG

Iyappan Krishnan

unread,
Aug 28, 2013, 12:01:28 AM8/28/13
to vall...@googlegroups.com, mintamil
 செலெக்டிவ் காப்பிஃபேஸ்டோஃபோபியா  இருக்கிறவங்களுக்கு தான் எழுதினது மட்டும் கண்ணுக்குத் தெரியும்பாங்க.   ஒருவேளை இது தெரியுதான்னு டெஸ்ட் பண்ணிப் பாக்கலாம்


DEV RAJ
5:30 AM (3 hours ago)

to vallamai

DEV RAJ

unread,
Aug 28, 2013, 12:02:03 AM8/28/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Tuesday, 27 August 2013 20:44:03 UTC-7, ஜீவ்ஸ் wrote:
>>> அப்புறம்  ரெண்டாயிரம் அடி தீர்த்தங்கர்கள் கிட்ட சொல்லி உங்க கண்ணுல தூங்கற 
        சமயமாப் பாத்து எலுமிச்சை பிழிஞ்சிட சொல்லுவேன்.  <<<


ஓ, எலுமிச்சையும் சமணர் கொடையா ?
கண்டுபிடிச்சு சொல்ல இத்தன நேரமா ?



தேவ்
It is loading more messages.
0 new messages