"ஆய கலைகள்" என்பதில் "ஆய" என்பதன் பொருள் என்ன ?
"ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய வுணர்விக்கும் என்னம்மை -- தூய
உருப்பளிங்கு போல்வாள்என் உள்ளத்தி னுள்ளே
இருப்பளிங்கு வாரா திடர்."
--கம்ப நாடர்
| பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா; மால், அயனும், கண்டாரும் இல்லை; கடையேனைத் தொண்டு ஆகக் கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு, நெஞ்சமே! உண்டாமோ கைம்மாறு? உரை. |
ஆய = ஆராய
ஆய கலைகள் = ஆராய்ந்ததில் கண்ட கலைகள்
ஆய = ஆராய
ஆய கலைகள் = ஆராய்ந்ததில் கண்ட கலைகள்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஆய = ஆராய
ஆய கலைகள் = ஆராய்ந்ததில் கண்ட கலைகள்
--
நண்பர் அண்ணா கண்ணன்,கலைகளில் ஆய்ந்தவை என்ன ? ஆராயாதவை என்ன ? கம்பர் ஆய்ந்த கலைகள் 64 என்றால் ஆராயாத கலைகள் வேறு என்ன ?சி. ஜெயபாரதன்.
அன்பு நண்பர் ஜெயபாரதன்,
'ஆய' என்பதைக் கவிசொல்லி, தன்கூற்றாகவோ, பிறர்கூற்றாகவோ சொல்லியிருக்கலாம்.
எனக்குத் தெரிந்து இவ்வளவு கலைகள் என்றோ, இதுவரை வல்லோர் ஆராய்ந்து கண்டறிந்தவை இத்தனை கலைகள் என்றோ சொல்லலாம்.
பொதுவாக, கலைகளுக்கு எண்ணிக்கை உரைப்பது பொருந்தாது; கலைகள் கணந்தோறும் பெருகுபவை; கலை என்பது துறை சார்ந்தது என்பதை விட, ஒரு செயலை எவ்வாறு செய்கிறோம் என்பதைப் பொறுத்தது.
--
நண்பர் நா. கணேசன்,நண்பர் அண்ணா கண்ணன் சொல்வதுபோல் இசை ஞான முறைகளும், நடனக் கலை நளினமும் பெருகும் டிஜிட்டல் கணனி யுகத்தில் கலைகளின் எண்ணிக்கை வளர்வது. எண்ணிக்கை குறையாது.எழுதிச் செல்லும் கலைமகளின் மடிக்கணனிஎழுதி எழுதி மேற் செல்லும்.
கலைகள் மொத்தம் 64 என்பது பழைய மரபு. 8 என்பது அடிப்படையான எண். எண் என்றாலே 8 என்றும், ந்யூமரல் என்றும்பொருள் இருக்கிறது. அதற்கு இரட்டியாக, எண்ணெண் கலைகள் என்று காட்டியுள்ளனர்.உண்மைதான். 8, 8^2 (= 64) என்று நம் முன்னோர்கள் கண்டனர்.இப்போது, 8^3, 8^4, 8^5, 8^6, ... 8^n என்று விரிக்கலாம்.ஆனால் அடிப்படையாக எத்தனை கலைகள் மனிதகுலத்திடம் உள்ளன?64-ஆ? 64-க்கும் குறைவா? அதிகமா?நா. கணேசன்--To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
கலைகளுக்கான எண்ணிக்கை, அவற்றைத் தொகுத்தவர்களின் வசதி, ஆற்றல், அவர்களிடமிருந்த தரவுகள் ஆகியவற்றைப் பொறுத்தது; இதற்கும் எட்டின் அடுக்குகளுக்கும் தொடர்பில்லை.அடிப்படைக் கலைகள் எனச் சுருக்குவது, மனித ஆற்றலையும் கற்பனையையும் சுருக்குவதாகும்; மேலும் மேலும் நுண்ணிய கூறுகளை மனிதன் ஆராய்கையில், ஒன்றிலிருந்து பலவும் கிளைப்பதே இயல்பு; எனவே, இதற்கு எல்லை வரையறுப்பதாயின், தாம் கண்ட கலைகள் என ஒருவர் தொகுத்துப் பட்டியலிடலாமே ஒழிய, இவைதாம் கலைகள் என அறுதியிட இயலாது.
நண்பர் நா. கணேசன்,நண்பர் அண்ணா கண்ணன் சொல்வதுபோல் இசை ஞான முறைகளும், நடனக் கலை நளினமும் பெருகும் டிஜிட்டல் கணனி யுகத்தில் கலைகளின் எண்ணிக்கை வளர்வது. எண்ணிக்கை குறையாது.
எழுதிச் செல்லும் கலைமகளின் மடிக்கணனி
எழுதி எழுதி மேற் செல்லும்.சி. ஜெயபாரதன்
அந்நிலை ஆய அண்ணல் ஆண்டு நின்று அன்னை! நின்னை
துன் இருங்கானும் யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி
இன் உயிர் இன்றி ஏகும் இயந்திரப் படிவம் ஒப்பான்
தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை வந்து சார்ந்தான்.
(சுந்தர காண்டம் – உருக்காட்டு படலம்)
இதில் அத்தன்மை பெற்ற ராமன் என்ற பொருளில் ஆய என்று வருகிறது.
தீயிடைக் குளித்தவத் தெய்வக்
கற்பினாள்
வாயிடை மொழிந்த சொல் மறுக்க
வல்லமோ
நோய் உனக்கு யான் என நுவன்றுளாள்
அவள்
ஆயவள் சீதை பண்டு அமுதின்
தோன்றினாள்
(யுத்த காண்டம் – இராவணன் மந்திரப் படலம்)
இங்கு ஆயவள் என்பதில் திருமகளின் அம்சமான சீதை என்று வரும்.
நடு ஒக்கும் தனி நாயகன் நாமம்
விடுகிற் கின்றலன் ஆகலின்
வேலை
மடுவொத்து அங்கு அதின் வங்கமும்
அன்றாய்
குடுவைத் தன்மையது ஆயது குன்றம்.
(யுத்த காண்டம் – இரணியன் வதைப் படலம்)
இதிலோ ஆயது என்பது ஆனது போல் தான் தெரிகிறது.
காயத்தால் பெரியர்; வீரம் கணக்கு
இலர்; உலகம் கல்லும்
ஆயத்தர்;வரத்தின் தன்மை அளவு அற்றார்; அறிதல் தேற்றா
மாயத்தார்; அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ மற்று ஓர்
தேய்த்தார்தேயம் சேறல் தெறு விலோர் செருவில் சேறல்.
இங்கோ ஆயத்தர் என்பதைல் தயாராய் இருப்பவர் என்றும் சொல்கிறார்.
ஆக மொத்தம் நாம எதிர்பாக்கும் ஆய கலைகள் என்பதற்கு இப்படித்தான் கம்பர் பதில் தெரிகிறது.
லிட்டில் அந்தமான் தீவிலிருந்து அந்தமான் தமிழ்நெஞ்சன்.
ஆக மொத்தம் நாம எதிர்பாக்கும் ஆய கலைகள் என்பதற்கு இப்படித்தான் கம்பர் பதில் தெரிகிறது.
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை .. தூய
உருப் பளிங்குபோல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள், இங்கு வாராது இடர்.
--
அண்ணா,கம்பர் என்று எழுத வந்து காளமேகத்தின் பெயரைக் குறிப்பிட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். கம்பரின் சரஸ்வதி அந்தாதியில் வரும் வெண்பா அது. பின்னர் பி. சுசீலாவின் அருமையான குரலில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது:
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும், கம்பர் பாட்டுதான். கவனப் பிழை. ஒரு பக்கத்தில் வேலையையும் மறுபக்கத்தில் இங்கேயும் மாற்றி மாற்றி செய்துகொண்டிருந்தால் தவறு ஏற்பட்டுவிடுகிறது. இருந்தாலும் தப்பு தப்புதான். சுட்டியதற்கு நன்றி சொக்கன்.
ஆக, ஆயத்தில் (கற்றோர் மத்தியில்) accomplished persons அறிந்திருக்கும் கலைகளாக அங்கீகரிக்கப்பட்ட கலைகள் அறுபத்தி நான்கு எனக் கொள்ளலாம் அல்லவா?
இப்ப, தான் பிடிச்சதே பிடின்னு ஒரு மூணு வயசுக் குழந்தை வாஆஆ ஆஆன்னு அடம் பிடிச்சு ‘நான் சொல்றத எல்லாரும் ஏத்துக்கற வரைக்கும் ஒத்தி ஒட்டித்தான் ஆவேன்‘னு கையக் கால ஒதச்சுக்கிட்டு கதறப் போவுது.
அன்புடையோரே, வணக்கம்.
ஆயம் என்ற சொல்லுக்கு சங்கம், குழுமம், conclave of illustrious/learned personages என்ற பொருள் உண்டு. எண்பேராயம் என்ற சொல் அந்தப் பொருளில் உண்டு அல்லவா?
ஆகா கற்றோர் கூடிய ஆயத்தில் அறிஞன் எனப் போற்றப்படுபவன் சாதாரணமாக அறிந்திருக்க வேண்டிய கலைகள் அறுபத்திநான்கு.
வாத்ஸ்யாயனர் தந்த காமசூத்திரத்திலும் பொது இடங்களில், மக்கள் கூட்டங்களில் விரும்பப்படுபவன் அறிந்திருக்க வேண்டிய கலைகள் அறுபத்தி நான்கு என்று வரும்.
ஆக, ஆயத்தில் (கற்றோர் மத்தியில்) accomplished persons அறிந்திருக்கும் கலைகளாக அங்கீகரிக்கப்பட்ட கலைகள் அறுபத்தி நான்கு எனக் கொள்ளலாம் அல்லவா?
பணிவன்புடன்,
புவனேஷ்வர்
இந்தக் கேள்விக்கு பாமரனின் பார்வையில் கம்பரைக் கோடிட்டே பதில் சொல்லலாம் என்று வருகிறேன்.
ஆய என்பது ஆகிய என்பதைக் குறிக்க வேண்டுமானால், ஆய என்பதற்கு முன்னால் 64 கலைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு ஆகிய 64 கலைகள் என்பது பொருந்தும்; இங்கே ஆய கலைகள் எனத் தொடங்குவதால், ஆராய (ஆராய்ந்து கண்ட) என்ற பொருளே அதிகப் பொருத்தம் உடையதாய்த் தெரிகிறது.
கலைகளின் எண்ணிக்கையைக் குறித்து வினவுகையில் அடிப்படைக் கலை, அதன் கிளைகள் என்ற கண்ணோட்டத்தை நா.கணேசன் முன் வைக்கிறார்.நடனம் என எடுத்துக்கொண்டால், அதன் ஒவ்வொரு வகையுமே தனித் தனிக் கலைகளே ஆகும்; அவற்றை ஒட்டுமொத்தமாக நடனக் கலை எனக் குறிப்பிடுவது, அதிலிருந்து நாம் எவ்வளவு விலகியிருக்கிறோம் எனக் காட்டும்; இது, நட்சத்திரக் கூட்டத்தை நாம் தொலைவிலிருந்தவாறு ஒற்றை நட்சத்திரமாகக் காண்பதைப் போன்றது.
ஆய என்பது ஆகிய என்பதைக் குறிக்க வேண்டுமானால், ஆய என்பதற்கு முன்னால் 64 கலைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு ஆகிய 64 கலைகள் என்பது பொருந்தும்; இங்கே ஆய கலைகள் எனத் தொடங்குவதால், ஆராய (ஆராய்ந்து கண்ட) என்ற பொருளே அதிகப் பொருத்தம் உடையதாய்த் தெரிகிறது.
ஆராய (ஆராய்ந்து கண்ட) என்ற பொருள் வரவேண்டும் என்றால் “ஆய கலைகள் 64” என்று பாடமாட்டார்கள்.ஆய் கலைகள் என்று பாடுவர். கொல்களிறு, சொல்பாடல் (சொல்கிற பாடல்), ...
tribunal = தீர்ப்பாயம்
என்பதில் வருவது போன்று மன்றம் சொன்ன தீர்வு, அதாவது, அறிஞர்களின் முடிவான கூற்றுப்படி 64 கலைகள் என்ற பொருளில் குறிப்பிடப் பட்டிருக்கலாம்.
..... தேமொழி
On Thursday, September 5, 2013 7:41:04 AM UTC-7, N. Ganesan wrote:
. உலகில் ஆணும், பெண்ணும்பல பில்லியன்கள் இருக்கலாம்.
ஆகும் - ஆம்போகும் - போம்
வேகும் - வேம்:
அன்புடையோரே, வணக்கம்.
ஆயம் என்ற சொல்லுக்கு சங்கம், குழுமம், conclave of illustrious/learned personages என்ற பொருள் உண்டு. எண்பேராயம் என்ற சொல் அந்தப் பொருளில் உண்டு அல்லவா?
ஆக கற்றோர் கூடிய ஆயத்தில் அறிஞன் எனப் போற்றப்படுபவன் சாதாரணமாக அறிந்திருக்க வேண்டிய கலைகள் அறுபத்திநான்கு.
வாத்ஸ்யாயனர் தந்த காமசூத்திரத்திலும் பொது இடங்களில், மக்கள் கூட்டங்களில் விரும்பப்படுபவன் அறிந்திருக்க வேண்டிய கலைகள் அறுபத்தி நான்கு என்று வரும்.
ஆக, ஆயத்தில் (கற்றோர் மத்தியில்) accomplished persons அறிந்திருக்கும் கலைகளாக அங்கீகரிக்கப்பட்ட கலைகள் அறுபத்தி நான்கு எனக் கொள்ளலாம் அல்லவா?
Perhaps, this term was coined to collectively represent those arts expected to be mastered by those present in an assembly of learned people.
PhD படிக்க coursework பண்ணவேண்டும். அதை PhDக்கான coursework என்று சொல்லாமல் PhD coursework என்று சொல்கிறோமல்லவா? அது போல ஆயத்துக்கான கலைகள் என்பதை ஆய கலைகள் என்று சொல்கிறோம் போலும்.வேந்தன்> ஆயக்கலைகள் என்றால் நீங்க சொல்லுவது பொருந்தலாம்அவர்கள் ஆய கலைகள் என்றுதான் கேட்டார்கள்
5 செப்டம்பர், 2013 10:22 AM அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
. உலகில் ஆணும், பெண்ணும்பல பில்லியன்கள் இருக்கலாம்.ஓ அப்படியா?
அந்தக் காலத்தில் 84 லட்சம் யோனிபேதம்(ஸ்பீஸிஸ்) என்பது சமணர்கள் கோட்பாடு.
--