Re: [வல்லமை] Re: சங்க இலக்கியத்தில் இல்லாத திராவிடச் சொற்கள்

44 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 29, 2013, 9:46:51 AM9/29/13
to vall...@googlegroups.com, thami...@googlegroups.com, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com, Jean-Luc Chevillard
On Saturday, September 28, 2013 9:32:19 PM UTC-7, DEV RAJ wrote:
On Sunday, 29 September 2013 01:13:20 UTC+5:30, N. Ganesan wrote:
தமிழின் சுரம் ஸ்வரம் வடமொழியில் ஆகிறது.

சங்க இலக்கியம் சுரம் எனும் சொல்லை எப்பொருளில் சொல்கிறது ?
பிற இலக்கியங்களில் வடசொற் கலப்பு மிகுதி என்பதை 
அறிஞர்கள் ஒருமனத்துடன் ஒப்புக்கொண்டுள்ளனர்.
புண்டரிகம், பங்கயம் அவ்வகை சேர்ந்த சொற்கள்.

 
புடகம்/புண்டரிகம் (< புள்-), அரவிந்தம் தமிழ்/த்ராவிடச் சொற்கள் - வடமொழி பெற்றவை.

சுரம் - தமிழில் இருவகையாகப் பிறந்துள்ளது.
(1) சுரசுர/சரசர - அநுகரணவோசைச் சொல் (ideophone).
இது சுரை (துளை) உள்ள இயற்கைப் பொருள்களில் உருவாக்கும்
hissing, humming ஓசையைக் குறிக்கத் தமிழிலும், பிற இந்திய
மொழிகளில் உள்ளது. சுரம். இதிலிருந்து வடமொழி
உருவக்கும் சொல்: ஸுரம் > ஸ்வரம். ஏழு சுரம் > சப்த ஸ்வரம்,
வேத ஸ்வரம்,... 

சுள்ளி, சூள்ளை, சூடு உறவுடையது சுரீர், சூரியன் - வெம்மையைக் குறிக்கும் 
சொற்கள். -ள்-/-ர்- உறவுண்டு: உ-ம்: காளி/காரி, ஆளத்தி/ஆரத்தி,
நாளிகேரம்/நாரிகேரம் (நாளம்:நார்), நாள்- ‘கருமை’ நாளணன்:நாரணன் ‘விஷ்ணு < விண்ணு’.
சுள்ளி சுரம் ‘பாலை’. இது ஜுரம் என்றாகி ஜ்வரம் என்று வடமொழி செய்துள்ளது.
-ர்-/-ல்- திரிபு ஜ்வரத்திலிருந்து ஜ்வலித்தல், ஜ்வாலா, ... என்று சுள்-/சுரம் ‘வெம்மை’
த்ராவிடச் சொல்லை வடமொழி விரித்துள்ளது. சுவடு:சோடு > ஜோடி, ஜோடனை
ஆதல் போல், சுரம் > ஜுரம் > ஜ்வரம். 

 
ஏதோ அடிப்படை ஸம்ஸ்கிருத இலக்கணத்தில்
ஷட்ஜம் என்னும் சுரம் பற்றி இருப்பதாக எழுதுகிறீர்கள்.
எந்த இலக்கணம்?

ஸமாஸம் இலக்கணம் இல்லையா ?


ஸமாஸம் இலக்கணம் இருக்கிறது: காம்பௌண்ட்.

ஏன் ஷட்ஜம் என்ற பெயர்? என்பதே ஆய்வுக் கேள்வி.
வெறும் வடமொழி இலக்கணம் மாத்திரம் பார்த்தால் இதற்கு விடை கிடைப்பதில்லை.
ஸ ரி க ம ப த நி - முதலெழுத்தாக ஒரு சொல்லைத் தேடியுள்ளனர்.
த என்பது தைவதம். என்ன பொருள்? என்பது தெளிவில்லை என்கின்றனர்.
அதே போல், ஸ என்பதற்கு ஷ என்றாக்கி ஷட்ஜம் என்றனர்.

ஸ சுரமா? ம சுரமா? எது முதற்சுரம் - ஒரு நல்ல கட்டுரை:

ச என்னும் சுரம் 6 இடங்களில் (=தானங்களில்) பிறப்பதில்லையே.
ஆனால், சார்ங்கதேவரும், அதனைப் பின்பற்றி தியாகையரும் (சோபில்லு சப்தஸ்வர ...)
சொல்வது சம்ஸ்கிருத அகராதி (மோனியர்-வில்லியம்ஸ்) தருகிறது.
தமிழில் பரவலாக “குரல்” என்ற கலைச்சொல்லை இசைக்கு, இசைக்கருவிகளும்,
மக்கள் மிடறும் எழுப்பும் சுரமாக ஏராளமான இலக்கியங்கள் சங்க காலத்தில்
இருந்தே பதிவு செய்துள்ளன (பார்க்க: நா. மம்மது, தமிழிசைப் பேரகராதி).

இந்த ‘குரல்’ என்னும் டெக்னிக்கல் சொல்லை தமிழிசைச் சுரத்தின் சொல்லை
சார்ங்கதேவர் ஷட்ஜம் என்று மொழிபெயர்த்து விளக்கம் தந்துள்ளார்.
அதாவது 6 தானங்களில் மனிதன் குரல் எழும்புகிறது. எனவே,
குரல் என்னும் இசைச் சுரம் ஷட்ஜம் என்று பெயர் தருகிறார்கள்.
அதாவது ‘குரல்’ 6 இடங்களில் மனிதன் முகத்தில் தோன்றுதலைச்
சொல்லியுள்ளனர். குரல் என்னும் வார்த்தை > ஷட்ஜம் என்றாகியுள்ளது.
அது ஸ-வுக்கு அருகே உள்ள ஷ என்னும் நாவளை ஒலி ஆகியிருக்கிறது.
ஸ ரி க ம ப த நி எல்லாவற்றுக்கும் அவற்றை முதல் எழுத்தாகக் கொண்ட
பெயர்கள் சுரங்களுக்கு அமைத்துள்ளார் சார்ங்கதேவர்.

தமிழின் சுரம் > ஸ்வரம், குரல் > ஷட்ஜம் (loan translation).

நா. கணேசன்


 


தேவ் 

N. Ganesan

unread,
Sep 29, 2013, 10:28:54 AM9/29/13
to vall...@googlegroups.com, tiruva...@googlegroups.com, karuannam annam, housto...@googlegroups.com, thami...@googlegroups.com, வேந்தன் அரசு, மு இளங்கோவன், Banukumar Rajendran
On Saturday, September 28, 2013 9:32:19 PM UTC-7, DEV RAJ wrote:

சங்க இலக்கியம் சுரம் எனும் சொல்லை எப்பொருளில் சொல்கிறது ?


இரண்டு அடிப்படையான பொருள்களில் சங்க இலக்கியம் 
சுரம் என்னும் சொல்லை ஆள்கிறது.
(1) அனுகரண ஓசை (மொழியியலில் ideophone. ஆப்பிரிக்க மொழிகளின்
இலக்கணத்தில் இருந்து உருவானது. த்ராவிட, துர்க்மேனிய, ஜப்பான் மொழிகளிலும்
இவற்றின் சொல்லாக்கம் மிகுதி). சுரசுர/சரசர.
இதிருந்து சுரம் > ஸ்வரம் (வடமொழியில்)
(2) சுள்-/சுட்-/சுர்- ‘வெம்மை’ என்ற பொருளில். சுரம் பாலை நிலம்.
உ-ம்: சுரம்போக்கு ‘elopement'. சுரம் - தமிழ்ச்சொல்லின் இரு வேர்களின் விளக்கம்:

ஓசை என்னும் பொருளில் வையை நதிக்கரை (மருதத் திணை)
மரங்களில் ஒன்றாக சுரபுன்னை சங்க இலக்கியம் பாடுகிறது.
நெய்தல் திணையிலும் வளரும் மரம் இது. இதன் தாவரவியற் பெயர்:
Long-leaved two-sepalled gamboge, m. tr., Ochrocarpus longifolius;
சுரபுன்னை - ஒலிக்கும் புன்னை. hissing-sound tree.
நாகம் என்பதும் உண்டு. சுரம் - ஓசை. புன்னாகம்
(புன்னை மரங்களில் நாகம் போல் ஒலிக்கும்).

ஆபயன் (வினைத்தொகை குறளில்) - ஆப்பயன் வேறுபாடுபோல்,
சுரபுன்னை - வினைத்தொகை, சுரம் எழுப்புகிற புன்னை.
(சுரப்புன்னை என்றில்லை என்பது ஓர்க.)

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Sep 29, 2013, 11:41:02 AM9/29/13
to vall...@googlegroups.com, tiruva...@googlegroups.com, karuannam annam, housto...@googlegroups.com, thami...@googlegroups.com, வேந்தன் அரசு, மு இளங்கோவன், Banukumar Rajendran


On Sunday, September 29, 2013 8:33:31 AM UTC-7, DEV RAJ wrote:
On Sunday, 29 September 2013 19:58:54 UTC+5:30, N. Ganesan wrote:
சுரம் - ஓசை.
 
எந்த அகராதியில் ? 


எல்லா அகராதியிலும். சுரம் - குரல், ஓசை voice, tone. சுரசுர என்னும் அனுகரணவோசை.
நாகம் போல் ஒலிக்கும் புன்னை - சுரபுன்னை என்னும் வினைத்தொகை.
சங்க இலக்கியத்தில் சுரை என்றால் ஒலி, ஒலி எழுப்பும் துளை,
அதனால் சுரை என பல தாவரங்களுக்கு. உ=ம்: கின்னரச்சுரை ...

 

சுரபுன்னை - வினைத்தொகை, சுரம் எழுப்புகிற புன்னை.
 
வினைத்தொகை ஒரு வினைச்சொல்லும், ஒரு பெயர்ச்சொல்லும் இணைந்த கூட்டுச் சொல். 
முதல் சொல் வினைச்சொல்லாக இருக்கும், பின்வரும் சொல் பெயர்ச்சொல்லாக இருக்கும். 
முன்வரும் வினைச்சொல், மூன்று காலத்தையும் குறிப்பால் உணர்த்தும் சொல்லாக அமையும்.

எடுத்துக்காட்டு -
வீசுதென்றல், ஆடுகளம்

சுரபுன்னை - வினைத்தொகை எனில் சுரந்த புன்னை, சுரக்கின்ற புன்னை, சுரக்கும் புன்னை

எந்த இலக்கணத்தில் சுரபுன்னை வினைத்தொகை? 
அது எதைச் சுரக்கிறது ?


தமிழ் இலக்கணத்தில் சுரபுன்னை வினைத்தொகை. சுரத்தைச் சுரப்பது புன்னாகம்.
 

தேவ்

N. Ganesan

unread,
Sep 29, 2013, 12:40:43 PM9/29/13
to vall...@googlegroups.com, thami...@googlegroups.com, tiruva...@googlegroups.com


On Sunday, September 29, 2013 9:33:45 AM UTC-7, DEV RAJ wrote:
On Sunday, 29 September 2013 21:11:02 UTC+5:30, N. Ganesan wrote:
On Sunday, September 29, 2013 8:33:31 AM UTC-7, DEV RAJ wrote:
On Sunday, 29 September 2013 19:58:54 UTC+5:30, N. Ganesan wrote:
சுரம் - ஓசை.
 
எந்த அகராதியில் ? 


எல்லா அகராதியிலும். சுரம் - குரல், ஓசை voice, tone. சுரசுர என்னும் அனுகரணவோசை.
நாகம் போல் ஒலிக்கும் புன்னை - சுரபுன்னை என்னும் வினைத்தொகை.


சுரம் - குரல், ஓசை எனும்போது பெயர்ச்சொல் ஆகிறது;
சுரபுன்னை என்னும் வினைத்தொகை ஆகும்போது
‘சுர’ வினைச் சொல்லாக வேண்டும்.

அவன் ஒலி எழுப்பினான், என்பதற்கு அவன் சுரந்தான்
என்று கூறலாமா ?

புள்ளும் சிலம்பின காண் என உள்ளது;
புள்ளும் சுரந்தன காண் என்று இல்லை


புள் எழுப்பும் ஓசை சிலம்புதல்.
நாகம் (உ-ம்: புன்னாகம்) எழுப்புவது சுரம் - hissing ஓசை. 
அதனால் தான் சுரபுன்னை என்கிற வினைத்தொகை தமிழ் அமைத்துள்ளது.
சுரபுன்னை, சுரை, சுரசுர- இவற்றில் உள்ள ஓசை
இயற்கை எழுப்புவதை வைத்து சுரம் என்ற தமிழ்ப்பெயர்.
வடமொழி இத்தமிழ்ச்சொல் சுரத்தை ஸ்வரம் என்றாக்கியுளது.

நா. கணேசன்

தமிழ், வடமொழி ஆய்வுமுனைவர்கள் பார்க்கவேண்டியவை பல.
தொடர்புகொள்ள வேண்டும்.

 

தேவ்

Ashraf, N.V.K

unread,
Sep 30, 2013, 6:10:13 AM9/30/13
to tiruva...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com, tiruva...@googlegroups.com
Dear Mr. Ganesan,

While researching on the etymology of various names of elephants in Sanskrit and Tamil, I could not find the words kumki (கும்கி) and makna (மக்கனா) mentioned in any of the Tamil or Sanskrit dictionaries I have with me. Searched online as well with no avail. I am aware the மோழை is the Tamil word for a tuskless male elephant (what about களம்? Does this also mean a makna?). 

Thanks,

N.V. Ashraf Kunhunu
Senior Director & Chief Veterinarian
Wildlife Trust of India
--
You received this message because you are subscribed to the Google Groups "திருவள்ளுவர் சங்கத்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tiruvalluvar...@googlegroups.com.
To post to this group, send email to tiruva...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tiruvalluvar.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

N. Ganesan

unread,
Sep 30, 2013, 10:34:05 AM9/30/13
to vall...@googlegroups.com, tiruva...@googlegroups.com, karuannam annam, housto...@googlegroups.com, thami...@googlegroups.com, வேந்தன் அரசு, மு இளங்கோவன், Banukumar Rajendran
On Monday, September 30, 2013 7:25:21 AM UTC-7, DEV RAJ wrote:
On Sunday, 29 September 2013 19:58:54 UTC+5:30, N. Ganesan wrote:
சுரபுன்னை - வினைத்தொகை, சுரம் எழுப்புகிற புன்னை.
(சுரப்புன்னை என்றில்லை என்பது ஓர்க.)


சிறந்த தமிழறிஞரும், ஆசுகவியுமான இலந்தை அவர்கள்
சுரபுன்னை - வினைத்தொகை என்பதை மறுத்துள்ளமை காண்க -

On Monday, 30 September 2013 18:29:30 UTC+5:30, Ram wrote:
சுர  என்பது வினையேயல்ல. எனவே வினைத்தொகை என்ற பேச்சுக்கு இடமில்லை. 
வலி மிகவில்லை என்பதை மட்டும் கொண்டு வினைத்தொகை என்று சொல்லும் வழக்கமில்லை.

இலந்தை




சுர- என்பது வினைச்சொல். வினைச்சொல்லின் வேர். 

இலந்தையாரே தன்னைக் கவிஞர் என்கிறார்.
தமிழறிஞர் என்பதில்லை. அவர் மடல்களிலேயே பல முறை
குறிப்பிட்டுள்ளார்.

நா. கணேசன்

 
Reply all
Reply to author
Forward
0 new messages