--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வந்தது ஒருவெள்ளம் தந்தது பலவிடைகள்
எந்தவகை யேனும் ஏற்பீர் எனக்கூறிச்
சிந்திக்க வைத்தார்நம் சுவாமி!
கலங்கா வேந்தன் விடை கலக்கல்!
அனந்த்
>மரபு பிறழினால் மன்னித்து அருளும்;
பிழறினால் - பிழன்றால்?
தலைப்பு : வெள்ளம் சொன்ன விடை
இன்னொரு அமைச்சர் கலங்காவேந்தன்சொன்ன விடைதூர்ந்த ஏரிக்குத் துக்கம் வேண்டாம்தெருவே ஏரியானால் சாதனை அல்லவாநிலத்தடி நீரும் உயர்ந்து விட்டதுநமக்குப் பெரும் சாதனை தானே ?துன்பம் கண்டு நாமும் துவள்வதாதுணிந்து எழுவோம் அணியாய் திரள்வோம்வங்கக் கடலும் பொங்கிய சேதிசங்க காலத்தும் உண்டாம் அன்றோஆழியும் வானமும் சீறிப் பொழிந்தால்ஆரே ஆவார் அதற்குப் பொறுப்பு ?வெள்ளம் ,இருட்டில் வந்த மின்னல்வழியைக் காட்டித் தீர்க்கும் இன்னல்வாகை சூடி வெல்ல நமக்குவாய்ப்பு அன்றோ தந்து விட்டதுஅங்கும் இங்கும் அலைந்தோம் ஓடிஅஞ்சாதே என்றார் தலைவர் மோடிதந்தார் நமக்கு நிதியாய்ப் பலகோடிதாவி வாங்கினோம் (நம்)வளர்ச்சி நாடிபொங்கும் மக்கள் வாயை அடைக்கவங்கிக் கணக்கில் வீசுவோம் கொஞ்சம்
என் இடுகையை ரசித்த கவிஞர்கள் சுப்புராமன் , யோகியார் , கோபாலுக்கும் (சுட்டிய திருத்தங்களுக்கும் சேர்த்து) மிக்க நன்றி.
சுவாமிநாதன்
--
பொருள்சிறக்கும் பாடலிங்குப் புஷ்பா கொடுத்தார்
வரவேற்றோம் நாமும் மகிழ்ந்து
அடுத்த அழைப்பு கவிமாமணி சவகர்லால்,,
இதுகவிதை எனச்சொல்லும் வண்ணம் பாடல்
எழுதுவதில் வல்லவர்யார், எதைச்சொன்னாலும்
அதுபுதிதாய் விளங்கிடவே சொற்கள் கூட்டி
அளிப்பவர்யார், பொருளாழம் சொற்க ளுக்குள்
பொதிந்துவந்து படிக்கையிலே புதிய காட்சி
புலப்படவே வைப்பவர்யார், அவரே எங்கள்
நிதிக்கவிஞர் சவகர்லால், இங்கே வந்து
நிகழ்த்துகிற கவிதைக்காய்க் காத்துள்ளோம் நாம்!
நிதிக்கவிஞர்- பொற்கிழிக் கவிஞர்
7வது கண்ணி 2ஆம் வரி:
உருமையுள்ள நாய்கள்
8வது கண்ணி 4ஆம் வரி:
பிளையின்றிக் காத்து
தட்டச்சுப்பிழைகளா அல்லது ஏதேனும் சிறப்புப் பொருள் இருக்கிறதா ?அன்புடன்,குமார்(சிங்கை)
Sent from my iPhone
படையெடுத்து நாட்டின் அசுத்தம் போக்குவோம்நடைபாதைக் குப்பைகளை நாமே அகற்றுவொம்குடைபிடித்து நடந்தாலும் குனிந்து நடப்போமே!அரசுகளும் அதிகாரங்களும் அன்று மட்டுமேபரவசம் தந்திட நாமே என்றென்றுமேஇரந்திடும் ஏழையை அணைத்து காத்திடுவோம்
குரங்கினரிடமிருந்து எம் குவலயம் காத்திடுவோம்! என்கின்ற எண்ணத்தின் எழுச்சி! அருமை!
கடவுள் வாழ்த்து
என் கருத்துக்கு உருத்தந்து அழகு!அவைவணக்கம்சபையோரே அவையோரே சபை என்பதும் அவை என்பதும் ஒன்றே.
வெள்ளம் அளித்த விடை
சின்னத் தூறலும் சிரித்துப் பொழிந்து |பென்னம் பெரியதாய் பெய்து முடித்தது |
அன்னம் தரும் அருமை வயல்களும் | அருமை!
பின்னும் அனைத்தும் மிதந்தது தண்ணீரில் |
துணைகள் பலவும் தனித்து தவித்து அருமைபிளையின்றிக் காத்து பிழை?வெள்ளமும்
துவைத்துப் போட்டது என் தாயகத்தையே! நன்று.மழைநீரின் வேகம் அளித்தது சாதியை அழித்தது சாதியை?
எள்ளளவும் இன்பம் பிறளாது வாழ்வோம்... பிறழாது [இன்பம் பிறழாது என்றால்?]
நல்வாழ்த்துக்களுடன்,கோபால்.
--
பொருள்சிறக்கும் பாடலிங்குப் புஷ்பா கொடுத்தார்
வரவேற்றோம் நாமும் மகிழ்ந்து
2016-03-17 12:16 GMT-05:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அடுத்த அழைப்பு கவிமாமணி சவகர்லால்,,
இதுகவிதை எனச்சொல்லும் வண்ணம் பாடல்
எழுதுவதில் வல்லவர்யார், எதைச்சொன்னாலும்
அதுபுதிதாய் விளங்கிடவே சொற்கள் கூட்டி
அளிப்பவர்யார், பொருளாழம் சொற்க ளுக்குள்
பொதிந்துவந்து படிக்கையிலே புதிய காட்சி
புலப்படவே வைப்பவர்யார், அவரே எங்கள்
நிதிக்கவிஞர் சவகர்லால், இங்கே வந்து
நிகழ்த்துகிற கவிதைக்காய்க் காத்துள்ளோம் நாம்!
நிதிக்கவிஞர்- பொற்கிழிக் கவிஞர்
அன்றுதான்… ஆம்
தண்ணீர்க் காட்டில்
நகரம் மிதந்து கொண்டிருந்த
அன்றுதான்…
பலமுறை கவிதை புனைந்து
கிழித்தெரிந்த காகிதப் புதையல் போல்
நகரம் கிழிந்து கிடந்த
அன்றுதான்…
பெயர் தெரியாத
முதியோர் இல்லம் ஒன்றில்..
பிணங்களுக்கு நீந்தத் தெரியாதென்பதால்
அடுக்கி வைத்து அழகு பார்த்த
ஓர் ஈரம் பிசுபிசுத்த நாள்
அன்றுதான்…
கரைகளில் பிறந்தும்
கரை சேராத பலபேர்
நாளை என்பதை மறந்து
அன்றைக்கான இலவசத்திற்காய்
காத்திருந்த அன்றுதான்…
சின்னஞ்சிறு வயதில்
வயலோரம் நான்பார்த்து
சேற்றில் நின்ற கால்கள் சில
சேற்றுப்புண்ணோடு பிரண்டுகிடந்த
அன்றுதான்…
மரக்கால்களில்
அள்ளித்தந்த கைகள் சில
மறத்துபோய் பிச்சை ஏந்திய
அன்றுதான்…
விரிசல்விட்ட வீடு புறம்கிடக்க
கரிசல் காட்டில் உடல்கள் ஊரிக் கிடக்க
என் இனமோ,
வரிசைக் கட்டி அரிசி ஏந்திய
அன்றுதான்…
பசியில் நொந்து
அங்குல இடைவெளியில்
பானைபானையாய் நீர் இருந்தும்
பாலைவனமாய் வரண்டு கிடந்த
ஊரோரத் தமிழனொருவனின் நாக்கு,
அரசியல் கண்ணாடியில் வாக்காகத் தெரிந்த
அன்றுதான்…
சுனாமி சுருட்டி
‘தானே’ தடம்புரட்டிய
அந்த கடலூரானை
மழை சலவை செய்தது...
உடலளவில் எழுந்து
மனதளவில் குனிந்து கிடக்கும் அவன்
மடியேந்திய அன்றுதான்…
இல்லத்தைக் கடந்து
இல்லத்தரசி கைநீட்ட மாட்டாள்.
அவள் உள்ளத்தை உலுக்கி
தன்மானப் பாத்திரத்தோடு
வீதிகளில் திரியவிட்ட
அன்றுதான்…
ஆம், அன்றுதான்
வெள்ளம் அந்த விடையைச்
சொன்னது!
நாகரீகம் என்பது
வெறும் நகர்மயமாவதல்ல!
நாகரீகம் என்பது
பணம் மட்டும் சார்ந்ததல்ல!
நாகரீகம் என்பது
விழுந்தவனைப் பார்த்து வருந்துவதில்லை!
பரிணாமம் என்பது
பாத்திரத்தில் பரிமாறுவதல்ல!
பரிணாமம் என்பது
இரண்டு அறை, ஒரு கழிவறை
சொந்தம் கொள்வதல்ல!
மனிதாபிமானம் என்பது
உணவு, உடை மட்டும் சார்ந்ததல்ல!
மனிதாபிமானம் என்பது
ஒரு நாள், ஓரிரவு இச்சையல்ல!
தன்மானம் என்பது
கால்சட்டை, மார்சட்டை
மத்தியில் மட்டுமல்ல..
தன்மானம் என்பது
இனம் சார்ந்தது, சுயம் சார்ந்ததல்ல!
விழிப்பதென்பது விழிமட்டும்
சார்ந்ததல்ல!
எழுவதென்பது வலியை மறப்பதல்ல!
மாற்றம் என்பது
தலைகள் மட்டும் மாறுவதல்ல!
வெள்ளம் விடைசொல்லி வழிந்தோடியது
உள்ளம் மட்டும் மிதந்த வண்ணம்!
-
உண்மையுடன்,
கார்த்திகேயன் இமயவரம்பன்
9710849500
நன்றி அய்யா...
பலமுறை கவிதை புனைந்து
கிழித்தெரிந்த காகிதப் புதையல் போல் [ஏன் அது புதையல்?]
நகரம் கிழிந்து கிடந்த அன்றுதான்…
பெயர் தெரியாத முதியோர் இல்லம் ஒன்றில்..
பிணங்களுக்கு நீந்தத் தெரியாதென்பதால்
அடுக்கி வைத்து அழகு பார்த்த [ஐயகோ! தாங்க முடியவில்லை!]
ஓர் ஈரம் பிசுபிசுத்த நாள் அன்றுதான்…
கரைகளில் பிறந்தும் கரை சேராத பலபேர்
நாளை என்பதை மறந்து
அன்றைக்கான இலவசத்திற்காய்
காத்திருந்த அன்றுதான்… [அருமை]
.
மரக்கால்களில்
அள்ளித்தந்த கைகள் சில
மறத்துபோய் பிச்சை ஏந்திய [அருமை!]
அன்றுதான்…
பசியில் நொந்து அங்குல இடைவெளியில்
பானைபானையாய் நீர் இருந்தும்
பாலைவனமாய் வரண்டு கிடந்த [பரிதாபம்!]
ஊரோரத் தமிழனொருவனின் நாக்கு,
நாகரீகம் என்பது
வெறும் நகர்மயமாவதல்ல! [நன்று]
.
மனிதாபிமானம் என்பது
உணவு, உடை மட்டும் சார்ந்ததல்ல! [நன்று! இத்தலைப்பில் நீங்கள் ஒரு கட்டுரை எழுதுங்களேன்!]
.
தன்மானம் என்பது
இனம் சார்ந்தது, சுயம் சார்ந்ததல்ல! [மனித இனமா?].
.
வெள்ளம் விடைசொல்லி வழிந்தோடியது [கேள்வி? வாசிக்கும் அனைவரின் உள்ளத்தில் எழுந்தவை?]
உள்ளம் மட்டும் மிதந்த வண்ணம்! [சோகத்தில்?]
வரிவரியாக! :)
என் படைப்புக்கு, இப்படியான வாழ்த்து, இதுவே முதல் முறை.!
எந்த கவிஞனுக்கும் இது ஒரு பேரானந்தம்!
மிக்க நன்றி.
வெள்ளம் அளித்த விடை
.
.
பலமுறை கவிதை புனைந்து
கிழித்தெரிந்த காகிதப் புதையல் போல் [ஏன் அது புதையல்?]
எனக்கு ஒரு பழக்கமுண்டு, எனது கவிதையின் கிறுக்கல் மொத்தமும் சேர்த்து வைத்திருக்கிறேன்... அதில் நான் பயன்படுத்தி அடித்த வார்த்தைகளில் என்னைப் பற்றிய பல விடயங்கள் விரவிக் கிடப்பதை, அவ்வப்போது கண்டு நகைப்பேன்...
நகரம் கிழிந்து கிடந்த அன்றுதான்…
பெயர் தெரியாத முதியோர் இல்லம் ஒன்றில்..
பிணங்களுக்கு நீந்தத் தெரியாதென்பதால்
அடுக்கி வைத்து அழகு பார்த்த [ஐயகோ! தாங்க முடியவில்லை!]
Little Drops old age home, iyappanthangal... From Dec 1st to Dec 4th, there were 13 deaths... That building was like an island and I witnessed..
கட்டுரை, நிச்சயம் எழுதுகிறேன்... உந்துதலுக்கு நன்றி..
இனம் சார்ந்ததல்ல [மனித இனமா ]
பாடங்கள் அதைத் தான் சொல்லிக் கொடுத்தன... ஆனால் 2009 லிருந்து, எதிர்கொண்ட பிற நிகழ்வுகளின் காரணமாக, என்னில் ஒரு தத்துவப் பிறழ்வு நடந்திருக்கிறது...
இந்த கவிதையைப் பொறுத்தவரை, இதன் அர்த்தம் படிப்பவரின் பார்வை சார்ந்தே இருக்கட்டும், என நான் நினைக்கிறேன்...
தொடர்ந்து ஊக்கம் தாருங்கள். படைக்கத் தூண்டுகிற உள்ளத்தில், கடவுள் ஒளிந்திருக்கிறார்...
-
பாராட்டுகளுக்கு நன்றி...
கை நீட்டு / கையேந்து, வேறுபாடு இதுவரை நான் அறியாத ஒன்று.
நன்றி..
--
உங்கள் கவிதையை மிகவும் ரசித்தேன்
வாழ்த்துகள், பாராட்டுகள்.
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
நன்றி
இல்லத்தரசி கைநீட்ட மாட்டாள்.
அவள் உள்ளத்தை உலுக்கி
தன்மானப் பாத்திரத்தோடு
வீதிகளில் திரியவிட்ட
அன்றுதான்…"
நல்வாழ்த்துகளுடன்,
மீ.விசுவநாதன்
மிக்க நன்றி...
படைக்கத் தூண்டுகிற பாராட்டுக்கள்... !
மிக அருமையான கவிதை.
உள்ளம் மட்டும் மிதந்த வண்ணம்!
உள்ளத் துணர்வுகளைத் தெள்ள எடுத்துரைத்து வெள்ளம் அளித்த விடையின் தாக்கத்தைக் கவிதையில் வெளிப்படுத்திய விதம் மிக அருமை.,
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வெள்ளம் அளித்த விடையின்
உள்ளே உறைந்த பொருளை
விள்ள முயன்ற விதத்தில்
உள்ள புதுமை நன்று.
அனந்த்
குறிப்பு:
கேட்டிட்டேன்?
வினாவை உடைக்கின்ற வெள்ளைக் கமல விடை: இங்கே விடை எப்படி வெள்ளைக் கமலம் ஆகிறது? மென்மையான கமலம் வினாவை உடைக்க வல்லதா?
கூறிடிம்?
வள்ளலாரும் செப்பியதும் முன்னமன்றோ- வள்லலார் கூறியதை விளக்கினால் நன்று.
இருநேரம் இருக்கின்ற காலோடம்? கால ஓடம் (காலவோடம்) ?
விளைவுபல இதுவரையும் நடந்துளதே- விளைவுபல இதுவரையும் நடந்துளவே (பன்மை)
ஒற்று:
வெள்ளமென்ன சொன்னதென்று; தள்ளிநில்லா தமையர்க்கும்; சென்னையென சீரறியும்; சென்னைதனை பார்க்கவைத்த; பெற்றிலாத*ப்* பேதை; கடலமிழ்ந்தப் பழநகராம்; புகாரடைய
கருவிதனை; நானறிய தோன்றவிலை
சந்த வசந்த அன்பர்கள் என்னை அன்புடன் மன்னித்து அருள வேண்டும். பாதி எழுதிய கவிதையை
கேட்டிட்டேன்? - தேமாங்காய்க்காகப் போட்டது. கேட்கின்றேன் என மாற்றுகிறேன்.
வினாவை உடைக்கின்ற - தவறுதான். விடுக்கின்ற என மாற்றுகிறேன்.
வெள்ளைக் கமல விடை - கலைவாணியின் விடையாக அன்மொழிதொகை போல குறிப்பிட்டேன்.
இந்தப் பயன்பாடு தவறா?
வள்லலார் கூறியதை விளக்கினால் நன்று. - இந்தப் பாடலைக் குறித்து அவ்வாறு எழுதினேன்.
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வுனான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே.
சென்னையைக் குறித்துப் பலராலும் பெருமையாக இப்பாடல் வரி குறிப்பிடப் படுகிறது.
கால ஓடம் (காலவோடம்) ? - ஆம்.
மற்ற பிழைகளைச் சுட்டியதற்கு மிக நன்றி. திருத்தி மீண்டும் பதிக்கின்றேன்.
அன்புடன்
ஓகை நடராஜன்.
--
வெள்ளம் அளித்த விடை
உள்ள நதியில் அடிக்கடியே
ஓடிச் செல்லும் பெருவெள்ளம்
கள்ள மாசு பலப்பலவும்
, கரைந்தே ஓடும், அதன் பின்னர்
மெள்ள மெள்ளத் தலை தூக்கும்
வெள்ளம் மீண்டும் வந்தால்தான்
உள்ளம் சுத்தம் கிடவே
ஓடும் வெள்ளம் தான் விடையா?
”தூய்மை யாகும்
உள்ளமெனில்
தொலைந்த வற்றுள் நல்லவையும்
தேய்ந்து போதல் ஓர் பயனோ
திரும்பத் திரும்பச் சேர்ப்பதுவோ
ஓய்ந்து போன பின்னாலே
உருவாக் கங்கள் செய்வதுவோ?
ஆய்ந்து நல்ல எண்ணங்கள்
அழியா திருக்க அருள்வாயே!”
வெள்ளத்திடம்நான்
இதைக் கேட்டேன்
வேண்டிப் பெற்ற விடையிதுதான்
கள்ளம் என்பாய், பொய்யென்பாய்
கனிவு காய்ச்சல், நல்லவைகள்
தெள்ளத் தெளியக் கோடிட்டுத்
தீட்டும் எல்லை இல்லையடா!
அள்ளிச் செல்வேன் ஆனாலும்
அறிவைச் சிதையேன் என்றதுவே
அடித்த உள்ள வெள்ளத்தில்
அடியேன் இழப்புப் பேரிழப்பு
வடித்த வெள்ளம், சக்கையையும்
வாரிச் சென்ற போதினிலும்
படிப்புத் தந்த
புத்தகத்தைப்
பாவி, கொண்டு போயிற்றே
அடித்துச் சொன்ன சொல் பொய்யோ?
அறிவைக் கொண்டு போயிற்றே!
சுத்த அறிவே தொழுந்தெய்வம்
தூய்மை மட்டும் அதிலுண்டு
செத்த சொத்தை என்பதெலாம்
சேர்க்கும் சொத்து, நீகற்ற
வித்தை கூட விளையாட்டு
வெள்ளம் தந்த விடைகேட்டு
புத்தி சிரிக்கும், பெற்றதெது
போதம் தானா? இலை புதிரா?