தொடாமையும் தீண்டாமையும் தமிழகத்தில் வளரக் காரணம் பிராமணர்களா? நில உடமையாளர்களா?

224 views
Skip to first unread message

சர்க்கரைச்சீமான்

unread,
Apr 2, 2015, 3:22:03 AM4/2/15
to mint...@googlegroups.com

தமிழகத்தின் குமுகப்பிரிவுகள் தொழில் அடிப்படையில் நிலம் சார்ந்து ஏற்ற தாழ்வுகள் இல்லாமல் அமைந்து நால்வகை வர்ண வேறுபாடுகளின் தாக்கம் இல்லாமல் இருந்த நிலையில் இருந்து மாறி பொதுவழிபாட்டுத் தளமான கோவில்களில் குமுகப்பிரிவினர் அவரவர் இடத்தில் நின்று வணங்கவேண்டும் என்றும் கொல்லாமை அடிப்படையில் பசுக்களைக் கொன்று வாழும் பிரிவினருக்கு இடம் இல்லை என்றும் பிரித்து பொதுவழிபாட்டில் சில பிரிவினர் கோவிலுக்குள் நுழயத் தடை விதிக்கப்பட்டிருந்தது.  மாடு தின்போர் மட்டுமன்று மரமேறி கள் இறக்கும் தொழில் செய்வோரும் எண்ணெய் வித்துக்களை நசுக்கி எண்ணெய் எடுப்போரும் என்று பலருக்கும் ஆகமக் கோவில்கள் கதவைச் சாத்திக்கொண்டது.  

பொது வழிபாட்டில் உருவான உயர்வு தாழ்வு குமுகத்தில் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தி ஒரு சில பிரிவுகளை வளர்ச்சி அடைய வாய்ப்பில்லாமல் அழுத்தியதற்கும் பிராமணர்களே காரணம் என்ற குற்றச் சாடு அவ்வப்போது எழுப்பப்படுவதைப் பார்க்கலாம்.

இது இரண்டு வெவ்வேறு தளங்களில் இந்தச் சிக்கலைப் பார்ப்பதால் வரும்சிக்கல்

தமிழ்நாட்டில் சமய அடிப்படையில் பொதுவழிபாட்டில் ஆகம அடிப்படையில் எந்தப் பிரிவினர் எந்த இடத்தில் நின்று வணங்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டு நூற்றாண்டுக்காலமாக நடைமுறையில் இருந்தது.  கொல்லாமை அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட இந்த வழிபாட்டில் உயிரினங்களைக் குறிப்பாகப் பசுக்களைக் கொன்று உணவாக உண்ணும் பிரிவினருக்குக் கோவிலுக்குள் பொது வழிபாட்டில் இடம் இல்லை என்று தீர்மானிக்கப்பட்டு அவர்களும் அவர்களுக்கென கோவில்களைக் கட்டி வழிபாடு செய்து வணங்கிக்கொண்டிருந்த நிலையில் விதி முறைகளுக்கு மாறாக அவர்களுக்கும் இடம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தி குமுக அமைப்பையும் குமுக அமைதியையும் சீரழிக்க வழிவகுத்தது. யார் விதி முறைகளை மாற்ற வேண்டும் என்று தங்கள் வாழ்க்கையை அமைதியாகக் கழித்துக்கொண்டிருந்தவர்களைத் தூண்டிவிட்டவர்கள் யார்?  ஆகமக் கோவில்களில் பொதுவழிபாடு சமஸ்கிரித்த்தில் மட்டுமே இருக்கவேண்டும் என்ற ஆகம அடிப்படைக்கு எதிராகத் தமிழில் மந்திரம் ஓத வேண்டும் சமஸ்கிரிதம் கூடாது என்று பிரச்சினையைக் கிளப்பியவர்கள் யார் என்பதையும் அறிய வேண்டும்

குமுக வாழ்வியலில் சமூக உறவுகளில் வீதியில் நடக்கக் கூடாது தொடக்கூடாது ஏன் நேருக்கு நேர் பார்க்கவும் கூடாது என்று தொடாமை தீண்டாமை என்று சிலரைத் தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப்பட்டதற்கான காரணிகள் இந்த சமய வழிபாட்டுத் தளத்துக்கு முற்றிலும் வேறானது என்றே கருத வேண்டும்.  ஆதிக்கச் சக்திகளாக நிலைத்து தங்களுக்குச் சேவை செய்ய அடிமைகளை உருவாக்க நிலச் சொந்தத்காரர்கள் உருவாக்கிய பிரிவுகள் நிலம் இல்லாத விவசாயத் தொழிலாளர்களை அடிமைப்படுத்திக் கீழ்மைப் படுத்தியது என்பதே உண்மை.  தஞ்சையில் நிலமற்ற கூலி விவசாயத் தொழிலாளர்களின் உரிமை அவர்களுக்கெதிரான அடக்குமுறைக்கு எதிர்ப்பு என்று தஞ்சையில் மாநாடு நடத்தியவர்களில்குறிப்பிடத்தக்கவர்கள் வக்கீல்கள் கிருஷ்ணசாமி அய்யரும் ஸ்ரீனிவாச ஐயங்காரும் என்பது குறிப்பிடத்தக்கது. சர்க்கரைச் செட்டியார் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் தொழிற்சங்கத்தலைவராகப் பணியாற்றினார் என்பதும் வரலாறு.

கோவில்கள் பிராமணர்களின் ஆதிக்கத்தில் பொது வழிபாட்டில் குமுகப்பிரிவினைகள் உருவாகக் காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டும்போது பொருளாதார அடிப்படையில் குமுக வாழ்வில் தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்களை உருவாக்கியவர்கள் யார் என்று அடையாளம் காணப்படாமல் அதற்கும் பிராமணர்களே காரணம் என்று  கூறிவருவது குழப்புவதாகவே உள்ளது

சசீ



செல்வன்

unread,
Apr 2, 2015, 3:25:05 AM4/2/15
to mintamil
காலைக்குள் இழை சதமடிக்கும் என்ற நம்பிக்கையுடன் உறங்க செல்கிறேன் :-)

Seshadri Sridharan

unread,
Apr 3, 2015, 2:01:06 AM4/3/15
to mintamil
2015-04-02 12:52 GMT+05:30 சர்க்கரைச்சீமான் <

குமுக வாழ்வியலில் சமூக உறவுகளில் வீதியில் நடக்கக் கூடாது தொடக்கூடாது ஏன் நேருக்கு நேர் பார்க்கவும் கூடாது என்று தொடாமை தீண்டாமை என்று சிலரைத் தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப்பட்டதற்கான காரணிகள் இந்த சமய வழிபாட்டுத் தளத்துக்கு முற்றிலும் வேறானது என்றே கருத வேண்டும்.  ஆதிக்கச் சக்திகளாக நிலைத்து தங்களுக்குச் சேவை செய்ய அடிமைகளை உருவாக்க நிலச் சொந்தத்காரர்கள் உருவாக்கிய பிரிவுகள் நிலம் இல்லாத விவசாயத் தொழிலாளர்களை அடிமைப்படுத்திக் கீழ்மைப் படுத்தியது என்பதே உண்மை.  

கோவில்கள் பிராமணர்களின் ஆதிக்கத்தில் பொது வழிபாட்டில் குமுகப்பிரிவினைகள் உருவாகக் காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டும்போது பொருளாதார அடிப்படையில் குமுக வாழ்வில் தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்களை சசீ



தீண்டாமை தொடக்கத்தில் பிணத்தைத் தீண்டல் ஆகாது என்று தொடங்கியது. ஏனென்றால் பிணம் தமோ குணத்தது என்று பௌத்தர்களால் காரணம் காட்டப்பட்டது. இதை செயல் முறைக்கு கொண்டுவந்ததும் அவர்களே. அதனால் இந்திய அறுவை மருத்துவம் வீழ்ந்தது என்று கூறுகிறார் பிரபாத்து ரஞ்சன் சர்க்கார்.  

தொடக்கத்தில் பிணம் தொடுவோர், வெட்டியான் போன்றோர் இதனால்தீண்டத் தகாதவராக கருத்தப்பட்டிருக்க வேண்டும். (பிராமணரில் ஈமத்தொழில் செய்வோர் தரக்குறைவாக மதிக்கப்பட்டது இதற்கு ஒரு சான்று). பின்பு இது படிப்படியே கள் இறக்குவோர்,  மாடுஆடு வெட்டும் தொழில் ஆற்றுவோர் என்று விரிந்து இருக்கவேண்டும். அதே நேரம் பௌத்தம் சரிவுற்று அவர்களில் சிலர் இந்துகளாக, பிராமணர்களாக இன்னும் சிலர் ஏற்கப்பட்டபோது தம் பழைய பௌத்த வழக்கங்களை, இந்த தீண்டாமையை இந்து மதத்தில் புகுத்தி அது பின்னாளில் விரிந்த அளவில் ஆச்சாரம் மடி என்று  ஆகியிருக்க வேண்டும்.  இது மதவழி வந்த தீண்டாமை.

நிலக் கிழமையால் சுரண்டப்பட்டு ஏழைகளாகி வாழ்வாதாரம் இழந்தோர் கட்ட  முறையான  துணியின்றியும் உண்பதற்கு ஆடு கோழி தவிர்த்து எருமை பன்றி மாடு என உண்ணும் நிலைக்கு ஆளானதும் அத்தகையோர் தீண்டாமையில் தள்ளப்பட்டதும் நாயக்கர் காலத்தில் ஏற்பட்டதாகலாம். இன்றைய பெரும்பால் பட்டியல் மக்கள் இவ்வழியினரே. 

கைத்தொழுவான் 
 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Seshadri Sridharan

unread,
Apr 3, 2015, 4:22:33 AM4/3/15
to mintamil
2015-04-03 11:31 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:

தீண்டாமை தொடக்கத்தில் பிணத்தைத் தீண்டல் ஆகாது என்று தொடங்கியது. ஏனென்றால் பிணம் தமோ குணத்தது என்று பௌத்தர்களால் காரணம் காட்டப்பட்டது. இதை செயல் முறைக்கு கொண்டுவந்ததும் அவர்களே. அதனால் இந்திய அறுவை மருத்துவம் வீழ்ந்தது என்று கூறுகிறார் பிரபாத்து ரஞ்சன் சர்க்கார். 

The Medical Science of the Age
17 September 1967, Ranchi

Now I will tell you something about the medical science in the Mahábhárata period.

According to ayurveda, when the balance of the body is lost due to the increase or decrease of váyu or pitta or kapha, disease starts. Medicine is applied to restore balance. If the amount of váyu or pitta decreases, medicine is applied to increase it; if the amount of vayu or pitta increases medicine is applied to decrease it. This is the ayurvedik system of medicine. In the unani system, a similar system of medicine, there are four factors (dhátu) – váyu, pitta, kapha and rakta. The difference between the two systems is that in the unani system one more factor, i.e., rakta, has been added. The other three factors are the same. In both systems crude medicine is applied and surgery ( shalya cikitsa) is simply nominal. In the pure ayurvedik system there is no surgery. But the vaedyaka shástra of India which has been incorporated into the ayurvedik system included surgery.

And one more system is the homoeopathic system popularized by Hahnemann, a great man. In the ayurvedic system and in the unani system the medicine is applied not to treat the disease but to bring about a balance among the aforesaid factors. In homoeopathy, too, whose principle is “Samah samam shamayati” (like cures like), the disease is not treated, but the symptom of the disease is treated. No matter whether the disease is diarrhoea or malaria, the symptom is treated and not the disease. Moreover, the medicine is applied in a subtle form. It is theorized that the subtle affects the crude, hence subtle medicine is applied to cure the crude disease. The more subtle the medicine, the more effective the result on the crude disease.

Allopathic treatment is a direct treatment of the disease. A particular disease is cured with the appropriate kind of medicine.

In India at that time, there was a mixture of ayurveda and vaedyaka shástra. But a strange thing is that homoeopathy incorporates the viśa cikitsá of that era, and through this viśa cikitsá people were familiar with the principle “Samah samam shamayati.” For instance, the Kaoravas gave poison to Bhiima, and people announced that he had died. But the experts in ayurveda gave injections of poison to Bhiima, by which he was cured. This proves that people had the knowledge of viśa cikitsá and the principle “Samah samam shamayati.” i.e., homoeopathy in an elementary form. Homoeopathy was not started by Mahatma Hahnemann, instead it was developed by him.

Viśa cikitsá is native to India, and its first reference is found in the Mahábhárata period. Later on this viśa cikitsá was encouraged not by Aryans, but rather by non-Aryans, and South India, especially Malabar, saw it expand a lot. These people attribute the origin of viśa cikitsá to Lord Krśńa, i.e., viśa cikitsá was originated by Krśńa. And vaedyaka shástra was originated by Lord Sadáshiva. Actually, ayurveda was known to the Aryans earlier than Lord Shiva. But Lord Sadáshiva brought about a blending between vaedyaka shástra and ayurveda.

But the originator of viśa cikitsá was Lord Krśńa. In the Mahábhárata period, it was appreciated a lot, and people discussed it and practised it by applying different venoms such as the venom of the snake, the venom of the spider, the venom of the scorpion, etc., to cure snake bite, spider bite, scorpion bite, etc. In course of time, it was neglected. At last it had some place in the royal family of Cochin. This system is neglected nowadays, but if it is encouraged, a new system will be added to medical science.

Perhaps you know arkavana (arkapatra), generally found in a cremation ground. If this is used either externally or internally, the eye becomes defective. But it was discovered in the Mahábhárata period that if that same arkavana is used in a subtle form, it is a very good medicine for various eye diseases. The same system of “Samah samam shamayati,” i.e., poison roots out poison, is there.

Surgery, which is considered to be a part of allopathy, is not really so; rather it is a part of ayurveda shástra. Since the time of Sadáshiva, it has developed a lot. In vaedyaka shástra, it is also explained how a dead body is to be studied by students. The structure of the human body, how to keep it clean, how it decomposes, is all explained in vaedyaka shástra. This proves that surgery was very developed in that period. There is a very interesting example of surgery. The cousin of Krśńa (the son of the sister of Lord Krśńa�s father) was Jarasandha, the king of Magadha, with his capital at Rajgir. At the time of the birth of Jarasandha, the child had to be cut out of the womb. People saw this child and threw it in the cremation ground. Then there came a very famous non-Aryan (rákśasii) lady doctor known as Jara. She stitched the child in a proper surgical operation and saved it. Since the lady Jara joined (sandhi) the pieces of the child�s body, the name of the child became Jarasandha. This proves that the people were well acquainted with surgery.

It is improper to think that everything in India has come from abroad. I have told you that Bhaskaracarya first discovered that the earth was round, and not Copernicus. That the earth is moving was first discovered by Bhaskaracharya and not by Galileo. The law of gravitation was first discovered by Bhaskaracharya and not by Newton. We give incorrect training to children.

Hence you see that homoeopathy sprang up in India itself. Nor did surgery originate with Aryans, but in India.

Suppose there are two persons. If the mind of either of them is stronger, it will control the other mind and the controlled mind will follow the stronger mind. The stronger mind imposes itself on the other mind either directly or by some artificial means indirectly. Because of the effect of the stronger mind, the controller mind utilizes its mental power against the disease and gets free from it. This sort of treatment by hypnotic spell, people say, was started by Dr. Mesmer of France, and so this system is known as “mesmerism.” But prior to Dr. Mesmer, this system was known to Indians. In India it was named “rákśasii vidyá.” In ancient India (by ancient India I mean the non-Aryans, the natives of India) there was a non-Aryan lady doctor, Kárkatii Rákśasii. This Rákśasii was very famous for her mesmeric treatment. This sort of treatment should therefore not have been known as “mesmerism” – it should have been known as something different.

Hence we find that in the Mahábhárata age, there was surgery, ayurveda, vaedyaka shástra, viśa cikitsá, and homoeopathy; and people were not unacquainted with mesmeric treatment either. This proves that medical science was not underdeveloped.

You can pose the question – if medical science was developed so much, why was it destroyed? The main reason was that touching the dead body, learning about the physical structure of the skeleton of the dead body, etc, was not considered to be lowly by the people of the early Buddhistic age; but after Buddha, people began to take it as lowly. Touching the dead body was considered to be most undesirable. This affected medical science a lot. Surgery especially was much affected, and because of this all medical science was affected.

Six or seven hundred years after Buddha, Buddhists once again discussed medical science a lot and tried their best to develop it But immediately after Buddha it was completely discouraged, and medical science in India had its downfall. Moreover, when people did start to develop medical science, some time after Buddha, there was simultaneously an invasion from outside India, due to which ayurveda, vaedyaka shástra, viśa cikitsá and surgery were discouraged in India and the unani (hakimii) System of medicine began to take root. Because the hakimii system was not much cultivated in this country, the downfall of India as far as medical science is concerned, occurred.

by PR Sarkar on 17 September 1967, Ranchi, Published in: Discourses on the Mahábhárata, chapter: The Medical Science of  the Age 

Seshadri Sridharan

unread,
Apr 3, 2015, 11:24:47 AM4/3/15
to mintamil
எனக்கு அவ்வப்போது சில ஐயம் எழுவதுண்டு. இதாவது, மீனவரும் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் போலவே பொருளியலில் தாழ்ந்து குடிசைகளிலேயே வாழ்கின்றனர். ஆனால் மீனவர்கள் தீண்டாமைக்கு ஆட்படவில்லை ஏன்? 

எனக்கு தோன்றுவது இவர்கள் தமக்கென சில தனி தெய்வ வழிபாடு கொண்டிருந்தனர். பிராமணர்களின் நேரடித் தொடர்பு இல்லாமல் இருந்தனர். அதோடு நிலத்தில் போல் நீரில் நிலக்கிழமை இல்லை அதனால் தீண்டாமைக் கொடுமையில் இருந்து தப்பினர்.  இவர்களை பொருளியலில் மீனவச் செட்டியார்கள் எனப்படும் பட்டினதார்கள் கட்டுப்படுத்தினர். என் கருத்து சரியா என்று சொல்லுங்கள்.

கைத்தொழுவான்  . 

2015-04-02 12:52 GMT+05:30 சர்க்கரைச்சீமான் <radius.co...@gmail.com>:

கோவில்கள் பிராமணர்களின் ஆதிக்கத்தில் பொது வழிபாட்டில் குமுகப்பிரிவினைகள் உருவாகக் காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டும்போது பொருளாதார அடிப்படையில் குமுக வாழ்வில் தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்களை உருவாக்கியவர்கள் யார் என்று அடையாளம் காணப்படாமல் அதற்கும் பிராமணர்களே காரணம் என்று  கூறிவருவது குழப்புவதாகவே உள்ளது - சசீ

Suba.T.

unread,
Apr 12, 2015, 10:53:44 AM4/12/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-03 17:24 GMT+02:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
எனக்கு அவ்வப்போது சில ஐயம் எழுவதுண்டு. இதாவது, மீனவரும் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் போலவே பொருளியலில் தாழ்ந்து குடிசைகளிலேயே வாழ்கின்றனர். ஆனால் மீனவர்கள் தீண்டாமைக்கு ஆட்படவில்லை ஏன்? 

​இங்கு நீங்கள் மீனவர் எனக் குறிப்பிடும் சமூகஇனக்குழு பரதவர்களா? அல்லது வேறு பெயர் இவர்களுக்கு உண்டா?

சுபா


எனக்கு தோன்றுவது இவர்கள் தமக்கென சில தனி தெய்வ வழிபாடு கொண்டிருந்தனர். பிராமணர்களின் நேரடித் தொடர்பு இல்லாமல் இருந்தனர். அதோடு நிலத்தில் போல் நீரில் நிலக்கிழமை இல்லை அதனால் தீண்டாமைக் கொடுமையில் இருந்து தப்பினர்.  இவர்களை பொருளியலில் மீனவச் செட்டியார்கள் எனப்படும் பட்டினதார்கள் கட்டுப்படுத்தினர். என் கருத்து சரியா என்று சொல்லுங்கள்.

கைத்தொழுவான்  . 

2015-04-02 12:52 GMT+05:30 சர்க்கரைச்சீமான் <radius.co...@gmail.com>:

கோவில்கள் பிராமணர்களின் ஆதிக்கத்தில் பொது வழிபாட்டில் குமுகப்பிரிவினைகள் உருவாகக் காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டும்போது பொருளாதார அடிப்படையில் குமுக வாழ்வில் தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்களை உருவாக்கியவர்கள் யார் என்று அடையாளம் காணப்படாமல் அதற்கும் பிராமணர்களே காரணம் என்று  கூறிவருவது குழப்புவதாகவே உள்ளது - சசீ

--

Seshadri Sridharan

unread,
Apr 12, 2015, 11:45:34 AM4/12/15
to mintamil
2015-04-12 20:23 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
2015-04-03 17:24 GMT+02:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
எனக்கு அவ்வப்போது சில ஐயம் எழுவதுண்டு. இதாவது, மீனவரும் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் போலவே பொருளியலில் தாழ்ந்து குடிசைகளிலேயே வாழ்கின்றனர். ஆனால் மீனவர்கள் தீண்டாமைக்கு ஆட்படவில்லை ஏன்? 

​இங்கு நீங்கள் மீனவர் எனக் குறிப்பிடும் சமூகஇனக்குழு பரதவர்களா? அல்லது வேறு பெயர் இவர்களுக்கு உண்டா? - 
சுபா

நான் திருவொற்றியூரில் இருந்த போது என் பையர் பருவத்தில் ஒவ்வொரு நாள் மாலையிலும் அங்கிருந்த குப்பங்களின் வழியே நடந்து கடற்கரைக்கு சென்று பொழுது கழிப்பேன். இவர்களை எவரும் சாதியால் இழிவுபடுத்தி பேசியோ நடத்தியோ பார்த்தறியேன். இவர்கள் பரவரா? பரதவரா?  செம்படவரா? என நான் அறியேன். 

தமிழகத்தில் மீனவர்கள் தீண்டத்தகாதோர் என கூறப்படாமைக்கு அல்லது நடத்தப்படாமைக்கு அந்த கடற்களத்தில் நிலக்கிழமைபோல் கடற்கிழமை என்பது இல்லாமையே காரணம். இதை ஊன்றி கவனிக்குங்கால் தீண்டாமை மருத நிலத்தில் நிலக்கிழமையால் வேரூன்றப்பட்டிருக்கின்றது என்பது விளங்கும். தீண்டாமையை யார் தோற்றினார் என்பதைவிட யார் பரவலாக பரப்பி நடைமுறைப்படுத்தினார், அதிகம் அதனால் பயனுற்றார் என்பதே கருத்தில் கொள்ளப்படவேண்டும். 

மீனவர் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தான் கொடுமைப்படுத்தப்பட்டு போர்த்துகீசியர் துணையை நாடி கிறித்துவம் தழுவினர் என்பது வரலாறு.

bala subramani

unread,
Apr 12, 2015, 1:29:20 PM4/12/15
to மின்தமிழ்

Fishermen of chennai British landed regions are chinns pattinavar and petiys pattinavar esturine based river people called parvatharaja . heads are called as chettiyar . being supporter to foreign sea farer they were friends of British . many. Mukkuvars are at madras. The so called chettiyars many are belongs to shore region .

--

Seshadri Sridharan

unread,
Apr 12, 2015, 10:10:27 PM4/12/15
to mintamil
2015-04-12 22:59 GMT+05:30 bala subramani <sunke...@gmail.com>:

Fishermen of chennai British landed regions are chinns pattinavar and petiys pattinavar esturine based river people called parvatharaja . heads are called as chettiyar . being supporter to foreign sea farer they were friends of British . many. Mukkuvars are at madras. The so called chettiyars many are belongs to shore region .

குறிஞ்சி நில வேட்டுவரான இன்றைய மலைவாழ் மக்களும் தீண்டாமைக்கு ஆட்படவில்லை. அங்கத்து காடுகிழான்கள் இனக்குழுத் தலைவரே அன்றே நிலக்கிழார் போன்ற முதலாளிகள் அல்லர்.

முல்லைநில ஆயர்களான கோனார்களும் தீண்டாமைக்கு ஆட்படவில்லை. இவர்கள் பிராமணர் வாழும் தெருக்களில் நன்றாகப் போய்வந்தனர். கோவில்களிலும் சென்று வந்தனர். 

பாலைநில எயின மக்கள் மறவர்களாகவோ அல்லது மருத நில வேளான் மக்களாகவோ கலந்து போயினர், ஆக குறிஞ்சி, முல்லை, நெய்தல் நில மக்கள் தீண்டாமைக்கு ஆட்படவில்லை. இதற்கு காரணம் இவர்களுக்கு தனியே தெய்வ வழிபாடு உண்டு. ஆதலால் பிராமணர் இவர்களை வல்லாதிக்கம் செய்யமுடியாது. அதே நேரம் இவர்கள் வாழிடங்களில் ஆண்டை எனப்படும் நிலக் கிழார்களுமில்லை. எங்கே தீண்டாமை நிகழ்ந்தது என்றால் நிலப்பண்ணை மருத நிலத்தில் எனலாம். தீண்டாமைக்கு ஆட்பட்டோர் யார் என்று நோக்கினால் அவர்கள் வேளான் கூலிகளே என்பது புலனாகும். இந்தியா முழுவதும் இதுவே நிலைமை. இந்தக் கூலிகள் பி ராமணருக்கும்  நிலப் பண்ணைகளுக்கும் அண்மையாக இருந்தவர்கள்.  இதைக்கொண்டு நிலப்பண்ணை தான் தீண்டாமை வேர்பிடிக்க கால்கோள் இட்டது என உறுதியாக  நம்பலாம். இந்த நிலபபண்ணைகள் தாம் தம்மை ஆண்ட பரம்பரை, ஆளப்பிறந்தவர்கள், அடக்கி ஆண்டவர்கள் என்றெல்லாம் கூறிக்கொள்கிறார்கள். கி.பி. 9 - 10 நூற்றாண்டுகளில் பிராமண மதத்தால் தமிழகத்தில் சிறு அளவு மக்களே தீண்டாமைப் பிடியில் சிக்கினர். ஆனால் இது படிப்படியாகப் பெருகி நாயக்கர் ஆட்சிக்காலத்தில் வலுவுற்ற நிலப்பண்ணை முறையால் 6ல் ஒருவர் தீண்டத்தகாதவர் என்ற நிலைக்கு விரிந்தது. 

குற்றம் நிலவுடைமையாளரிடம் அதிகம் இருக்க பிராமணரை மட்டுமே குற்றம் சாட்டுவது ஒரு பெரும் மோசடி. இந்த மோசடியில் பெரும் பங்கு வடுகருடையதே. வடுகர் நாட்டில் நிலக்கிழமை உச்சம் எய்தியிருந்தது. அதைத்தான் தமிழகத்தில் தமது ஆட்சியில் நடைமுறைப்படுத்தினர்.

கைத்தொழுவான்  
 
2015-04-03 17:24 GMT+02:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:

எனக்கு அவ்வப்போது சில ஐயம் எழுவதுண்டு. இதாவது, மீனவரும் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் போலவே பொருளியலில் தாழ்ந்து குடிசைகளிலேயே வாழ்கின்றனர். ஆனால் மீனவர்கள் தீண்டாமைக்கு ஆட்படவில்லை ஏன்? 

Nagarajan Vadivel

unread,
Apr 12, 2015, 10:32:33 PM4/12/15
to மின்தமிழ்
அன்புடை சேசாத்திரி அய்யா அவர்களின் கனிவான பார்வைக்கு

விடுதலைபெற்ற இந்தியாவில் வடகிழக்கில் மேகாலாயாவில் இன்றுவரை சாதி என்றால் என்ன என்று தெரியாமலே வாழ்ந்துவருகிறார்கள்.  அதற்கு அடிப்படைக் காரணம் எவ்வளவோ புதுமையாக மேற்கத்திய நாகரிகத்தைப் பின்பற்றினாலும் அவர்களுடைய மரபுவழிச் சட்டத்தை அவர்கள் இன்றும் கடைப்பிடித்து வாழ்கிறார்கள். நாடு சுதந்திரம் பெறுவதற்குமுன் அரசாளுமையிலிருந்த ஆளும் குடும்பம் இன்றும் நீதி வழங்கும் அதிகாரத்தை அரசியல் சாசனம் மூலம் பெற்று நடைமுறைப்படுத்தி வருகின்றன

அரசன் இறையாண்மையில் பிரதிநிதி என்றும் எல்லாச் சொத்தும் இறைவனுக்கே என்றும் கருதப்பட்டு வாழ்வதால் அவர்கள் சாதி தீண்டாமை போன்ற தாக்குதலுக்கு ஆட்படவில்லை.  முல்லை, குறிஞ்சி பாலையில் சொத்து யாருக்கும் தனி உரிமையாக இல்லாததால் அங்கு சாதி, தீண்டாமை இருக்கவில்லை.  மருத நிலத்தில் ஆகமக் கோவில்களும், கோவில் சொத்துக்களும் அதை இனாமாகவும் குத்தகைக்கும் எடுத்தவர்களும் கோவில் சொத்தைத் தனதாக்கிக் கொண்டவர்களும் பாதியில் புகுத்தியதே சாதியும் தீண்டாமையும்

இணையவேள்

Seshadri Sridharan

unread,
Apr 12, 2015, 10:53:22 PM4/12/15
to mintamil
2015-04-13 8:02 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
மருத நிலத்தில் ஆகமக் கோவில்களும், கோவில் சொத்துக்களும் அதை இனாமாகவும் குத்தகைக்கும் எடுத்தவர்களும் கோவில் சொத்தைத் தனதாக்கிக் கொண்டவர்களும் பாதியில் புகுத்தியதே சாதியும் தீண்டாமையும் - இணையவேள்


உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி பேராசிரியர் ஐயா. நான் வட்டம் கட்டியதை நீங்களும் ஏற்றுக் கொண்டீர்கள். இதாவது குறிஞ்சி,முல்லை,நெய்தல் நிலத்தில் தீண்டாமை இல்லை என்பதை. ஊரில் உள்ள விளை நிலங்களில் 10ல் ஒன்றுக்கும் குறைவான அளவு நிலங்களே 10;1 கோவிலுக்கு சொந்தமானவை. 9 பங்கு நிலங்கள் வரி செலுத்தியும், போருக்கு ஆளை  அனுப்பியும் அரசனுக்கு தமது நம்பிக்கையை காட்டிய பண்ணைகளுக்கு சொந்தமானவை. இவர்கள் தாம் பாளையக்காரர்கள். எனவே தான் தீண்டாமை இறுக்கம் பண்ணைக் கூலிகளுக்கு ஏற்பட்டது விரிந்த மக்கள் தொகையில்.

Malarvizhi Mangay

unread,
Apr 12, 2015, 11:55:18 PM4/12/15
to mint...@googlegroups.com
I also seconded.

--

செல்வன்

unread,
Apr 13, 2015, 12:03:47 AM4/13/15
to mintamil
மீனவரையும், வேட்டுவர்களையும் தீண்டதகாதவர் ஆக்கினால் அப்புறம் யாரிடம் மீனும், இறைச்சியும், தேனும் வாங்குவது?

அதனால் தான் இவர்கள் தீண்டதகாதவர்கள் ஆகவில்லை. 

rnka...@gmail.com

unread,
Apr 13, 2015, 2:57:52 AM4/13/15
to mint...@googlegroups.com
instead of trying to answer the vexed question who caused the untouchability ( like j&k issue, the question has now lost relevance of what in the past), a more meaningful question (and which I am sure the group members will simply avoid answering), is who is sustaining this in tamilnadu NOW; may be we can ask the Doctors (krishnaswamy and ramdoss) and the people power protagonists

regards
rnkantan

On Thursday, April 2, 2015 at 12:55:05 PM UTC+5:30, செல்வன் wrote:

Seshadri Sridharan

unread,
Apr 13, 2015, 3:35:07 AM4/13/15
to mintamil
2015-04-13 9:33 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
மீனவரையும், வேட்டுவர்களையும் தீண்டதகாதவர் ஆக்கினால் அப்புறம் யாரிடம் மீனும், இறைச்சியும், தேனும் வாங்குவது? அதனால் தான் இவர்கள் தீண்டதகாதவர்கள் ஆகவில்லை. 


இந்த ஐநில மக்களை விடுத்து கைவினைஞர்களை (கருமார், தட்டார், தச்சர், சிற்பி) எடுத்துக்கொண்டால் அவர்கள் ஆண்டை என்றொருவர் இல்லாமல் தம் விருப்பில் வினையாற்றினார்கள் அதனால் அவர்களும் தீண்டாமையில் இருந்து விலக்கப்பட்டனர்.  அவ்வளவு ஏன் மயிர் சிரைக்கும் தொழில் செய்வோர் மதிப்பில் குறைவாக நடத்தப்பட்டாலும் கோவிலில், மங்கல் நிகழ்ச்சியில் நாயனம் இசைக்க அனுமதிக்கப்பாட்டர்கலேயொழிய  தீண்டத்தகாதோர் போல் ஒதுக்கப்பட்வில்லை. ஏனென்றால் அத்தொழிலில்  ஆண்டை என்ற முதலாளி இல்லை அதனால்.

இப்போது புரிகிறதா நிலக்கிழமையில் எப்படி தீண்டாமை வந்ததென்று. எல்லாம் சுரண்டிப் பிழைக்கும் பண்ணை முறையால் தான் என்பது விளங்கிற்றா?.அக்குளில் தருபைப்புல் சுமக்கும் கைபுல் வீரரால் அடிக்கக்கிளம்பும்  மக்கள் மீது தீண்டாமையை தான் ஒருவராக திணிக்கமுடியாது.

Nagarajan Vadivel

unread,
Apr 13, 2015, 4:09:57 AM4/13/15
to மின்தமிழ்

2015-04-13 13:05 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
அக்குளில் தருபைப்புல் சுமக்கும் கைபுல் வீரரால் அடிக்கக்கிளம்பும்  மக்கள் மீது தீண்டாமையை தான் ஒருவராக திணிக்கமுடியாது.


அன்புடை
​ சேசாத்ரி ஐயா
அயோத்திதாசர் பிராமணர்களை உண்மை பிராமணர்கல் என்றும் வேஷ பிராமணர்களும் என்று பகுத்துக் காட்டுகிறார்.  உண்மை பிராமணர்கள் உயர் பண்புடன் சமூகத்தைச் செம்மைப்படுத்தி நல்ல பெயர் பெற்றிருந்தனர்

வேஷ பிராமணர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக அந்தணர் வேஷம் போட்டு அரசனுக்கும் குடிகளுக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்படுத்தினர்.  வேதம் ஓதும் மற்றும் கல்வி கற்பிக்கும் பிராமணர்கள் குமுக அரசாண்மையில் தலையிடாமல் இறை மற்றும் கல்விப்பணி மட்டுமே செய்துவந்தனர்.  வேஷ பிராமணர்கள்  அதிகாரத்துக்கும் செல்வத்துக்கும் ஆசைப்பட்டு குமுகத்தைப் பிரித்தனர்

எனவே ஒட்டுமொத்தமாக எல்லா பிராமணர்களையும் குற்றம் சொல்லக்கூடாது

இணையவேள்

      ​

Malarvizhi Mangay

unread,
Apr 13, 2015, 5:40:37 AM4/13/15
to mint...@googlegroups.com

முடிவு  வரிகள் முத்தானவரிகள்.

--

Anbu Jaya

unread,
Apr 13, 2015, 7:55:38 AM4/13/15
to mintamil
"எனவே ஒட்டுமொத்தமாக எல்லா பிராமணர்களையும் குற்றம் சொல்லக்கூடாது" - சத்தியமான வரிகள். பிராமணர்களுக்கு மட்டுமல்ல மற்ற இனத்தவர்களுக்கும், மதத்தவர்களுக்கும் கூட இது பொருந்தும்.


அன்புடன்,
அன்பு ஜெயா

N. Ganesan

unread,
Apr 13, 2015, 8:32:29 AM4/13/15
to mint...@googlegroups.com


On Monday, April 13, 2015 at 4:55:38 AM UTC-7, Anbu wrote:
"எனவே ஒட்டுமொத்தமாக எல்லா பிராமணர்களையும் குற்றம் சொல்லக்கூடாது" - சத்தியமான வரிகள். பிராமணர்களுக்கு மட்டுமல்ல மற்ற இனத்தவர்களுக்கும், மதத்தவர்களுக்கும் கூட இது பொருந்தும்.


இந்திய ஜாதி அமைப்பில் உணவு பிரமிட் ஒன்று உண்டு. இப்பொழுது மாறிவருகிறது.
வேத கால ஆரியர்கள் மாட்டு மாமிசம் உண்டதை நிறுத்தியது விவசாயத்தின் கால்நடை பொருளாதாரம்.
உணவு பிரமிட் உருவாவதற்கான குறிப்புகள் சம்ஸ்கிருத, பிராகிருத இலக்கியங்களில் நிறையவும்,
தமிழ் இலக்கியங்களில் கொஞ்சமும் - உ-ம்: பரணர், அப்பர், ஆழ்வார்கள், மாணிக்கவாசகர், பொய்யாமொழிப் புலவர், .... -
உள்ளன. அவற்றை ஆராய்ந்து பார்த்தால் ஜாதி அமைப்பு, அதில் சமுக்கங்களின் கொடை
எல்லாம் தெரியவரும். நில உடைமை ஒரு பங்கு வகித்தால், ரிலிஜனுக்கும் முக்கிய பங்குண்டு.

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Apr 13, 2015, 9:01:19 AM4/13/15
to மின்தமிழ்

2015-04-13 18:02 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
இந்திய ஜாதி அமைப்பில் உணவு பிரமிட் ஒன்று உண்டு. இப்பொழுது மாறிவருகிறது.
வேத கால ஆரியர்கள் மாட்டு மாமிசம் உண்டதை நிறுத்தியது விவசாயத்தின் கால்நடை பொருளாதாரம்.
உணவு பிரமிட் உருவாவதற்கான குறிப்புகள் சம்ஸ்கிருத, பிராகிருத இலக்கியங்களில் நிறையவும்,
தமிழ் இலக்கியங்களில் கொஞ்சமும் - உ-ம்: பரணர், அப்பர், ஆழ்வார்கள், மாணிக்கவாசகர், பொய்யாமொழிப் புலவர், .... -
உள்ளன. அவற்றை ஆராய்ந்து பார்த்தால் ஜாதி அமைப்பு, அதில் சமுக்கங்களின் கொடை
எல்லாம் தெரியவரும். நில உடைமை ஒரு பங்கு வகித்தால், ரிலிஜனுக்கும் முக்கிய பங்குண்டு.


அன்புடை
​ கணேசர் ஐயா
தமிழகத்தைப் பற்றிப் பேசும்போது இந்தியாவைக் குறிப்பிடுவது கொஞ்சம் முரணாகத் தெரிகிறது.  தமிழகத்தில் வரலாற்றின் பல காலகட்டங்களில் மண்ணின் மைந்தர்களுக்கும் புலம் பெயர்ந்தோருக்கும் இடையில் சமய மொழி பண்பாட்டு சவ்வூடு பரவல் நடந்தது என்ற கோணத்தில் இதைப் பார்க்கவேண்டும்

தனியர்களாகப் புலம் பெயர்ந்த வேதியர் இங்குள்ள அனாரியப் பெண்களை மணந்து வாழ்ந்ததால் அவர்களின் வாழ்வியல்முறையில் சவ்வூடு பரவியதால் அவர்கள் உணவுப் பழக்கம் மாற்றம் பெற்றிருக்கலாம்.  பாணிக்கிரகம் என்ற அவர்கள் திருமணமுறை தாலிகட்டும் திருமணமாக மாறியதுபோல் உணவுப் பழக்கமும் மாறி இருக்க்வேண்டும் என்பது என் காத்துட்டுக் கருத்து

தெரியும் தெரியும் ஆதாரம் எங்கே உண்மை முனைவர்கள் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது என்று சொல்வீர்கள்.  தேவைப் பட்டால் ஆதாரம் உண்டு

இணையவேள்

N. Ganesan

unread,
Apr 13, 2015, 9:11:02 AM4/13/15
to mint...@googlegroups.com


On Monday, April 13, 2015 at 6:01:19 AM UTC-7, இணையவேள் wrote:

2015-04-13 18:02 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
இந்திய ஜாதி அமைப்பில் உணவு பிரமிட் ஒன்று உண்டு. இப்பொழுது மாறிவருகிறது.
வேத கால ஆரியர்கள் மாட்டு மாமிசம் உண்டதை நிறுத்தியது விவசாயத்தின் கால்நடை பொருளாதாரம்.
உணவு பிரமிட் உருவாவதற்கான குறிப்புகள் சம்ஸ்கிருத, பிராகிருத இலக்கியங்களில் நிறையவும்,
தமிழ் இலக்கியங்களில் கொஞ்சமும் - உ-ம்: பரணர், அப்பர், ஆழ்வார்கள், மாணிக்கவாசகர், பொய்யாமொழிப் புலவர், .... -
உள்ளன. அவற்றை ஆராய்ந்து பார்த்தால் ஜாதி அமைப்பு, அதில் சமுக்கங்களின் கொடை
எல்லாம் தெரியவரும். நில உடைமை ஒரு பங்கு வகித்தால், ரிலிஜனுக்கும் முக்கிய பங்குண்டு.


அன்புடை
​ கணேசர் ஐயா
தமிழகத்தைப் பற்றிப் பேசும்போது இந்தியாவைக் குறிப்பிடுவது கொஞ்சம் முரணாகத் தெரிகிறது. 

தமிழகம் இந்தியாவில் இல்லையா?

N. Ganesan

unread,
Apr 13, 2015, 10:59:59 AM4/13/15
to mint...@googlegroups.com


On Monday, April 13, 2015 at 4:55:38 AM UTC-7, Anbu wrote:
"எனவே ஒட்டுமொத்தமாக எல்லா பிராமணர்களையும் குற்றம் சொல்லக்கூடாது" - சத்தியமான வரிகள். பிராமணர்களுக்கு மட்டுமல்ல மற்ற இனத்தவர்களுக்கும், மதத்தவர்களுக்கும் கூட இது பொருந்தும்.


வடுகர்கள் மாத்திரம் தீண்டாமைக்குக் காரணமில்லை. பேரா. நாகராஜன் சொல்கிறார் 
”மருத நிலத்தில் ஆகமக் கோவில்களும், கோவில் சொத்துக்களும் அதை இனாமாகவும் குத்தகைக்கும் எடுத்தவர்களும் கோவில் சொத்தைத் தனதாக்கிக் கொண்டவர்களும் பாதியில் புகுத்தியதே சாதியும் தீண்டாமையும் ”

மற்ற நிலங்களில் இந்தியா முழுதும் ஜாதி இல்லையா?

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Apr 13, 2015, 11:15:40 AM4/13/15
to மின்தமிழ்

2015-04-13 20:29 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
மற்ற நிலங்களில் இந்தியா முழுதும் ஜாதி இல்லையா?

ஜாதி
​ இல்லை என்று கூறவில்லை.  தமிழகத்தில் நிலம் சார்ந்த துணை அடிப்படையில் அமைந்த தொழில் அடிப்படையில் இருந்த குமுகப் பிரிவு இந்தியாவில் எங்கும் இருந்ததில்லை.  நான்கு வர்ணம் தமிழர்கள் அறியாத கருத்துரு

இங்கே எழுந்துள்ள அடிப்படைக் கேள்வி தொடாமை தீண்டாமை தமிழகத்தில் தோன்றக் காரணமாக இருந்தவர்கள் யார் என்பதே

காசியில் ஆதிசங்கரர் சண்டாளனுடன் அத்வைத வாதம் கேட்டுப் புதிய கோணத்தை உணர்ந்தார்.  தமிழாட்டில் சண்டாளர்கள் அல்லது சண்டாளர்களுக்கு இணையான ஜாதி எது?

மற்ற இடங்களில் பெண்கள் நால்வகை வர்ணத்தில் சூத்திரர்கள் என்று கருதப்பட்டதுபோல் தமிழகத்துப் பெண்டிர்கள் சூத்திரர்களா?

ஆப்பிளை ஆரஞ்சுப் பழத்துடன் ஒப்பிடுவது ஆராய்ச்சி ஆகாது

இணையவேள்​

N. Ganesan

unread,
Apr 13, 2015, 11:19:36 AM4/13/15
to mint...@googlegroups.com


On Monday, April 13, 2015 at 8:15:40 AM UTC-7, இணையவேள் wrote:

2015-04-13 20:29 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
மற்ற நிலங்களில் இந்தியா முழுதும் ஜாதி இல்லையா?

ஜாதி
​ இல்லை என்று கூறவில்லை.  தமிழகத்தில் நிலம் சார்ந்த துணை அடிப்படையில் அமைந்த தொழில் அடிப்படையில் இருந்த குமுகப் பிரிவு இந்தியாவில் எங்கும் இருந்ததில்லை.  நான்கு வர்ணம் தமிழர்கள் அறியாத கருத்துரு

 
பேராசிரியர் ஐயா,

”வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்” - சங்க இலக்கியத்தில் 4 வர்ணங்கள் பேசப்படுவதில்லையா?
ஆராய்ச்சிக்கு வழி காட்டுங்கள்.

நா. கணேசன்



Nagarajan Vadivel

unread,
Apr 13, 2015, 11:30:06 AM4/13/15
to மின்தமிழ்

2015-04-13 20:49 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்

அது
​ வர்ணாசிரமம் என்றால்
சங்க காலத்துச் சூத்திரர்கள் யார்? 
வேளிர்கள் ஷத்ரியர்களா சூத்திரகளா?
தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் பிராமணர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டனரா?
என்ற கிளைக் கேள்விகளுக்கு விடை தேவை

இணையவேள்
 ​

Oru Arizonan

unread,
Apr 13, 2015, 1:18:00 PM4/13/15
to mintamil
//காசியில் ஆதிசங்கரர் சண்டாளனுடன் அத்வைத வாதம் கேட்டுப் புதிய கோணத்தை உணர்ந்தார்.//

சித்தரே,  அந்தப் புதிய கோணம் என்னவென்று மின்தமிழ் உடன்பிறப்புகளுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது. எனவே கீழ் காண்க:

http://www.scribd.com/doc/8949527/Sri-Shankara-Digvijayam 

Sri Shankara at Varanasi

Sri Shankara reached Varanasi, had a dip in the holy Ganges, offered his prayersat the shrine of Sri Vishwanatha and stayed at the city for sometime. Just aspieces made of iron get attracted to a powerful magnet, those who were ripeenough to understand the subtle teachings of the Vedas were drawn towards SriShankara at Varanasi. Of these, the first disciple of Sri Shankara was anillustrious young brahmachari who was named Sanandana on initiation intoSanyasa.One day when Shankara was going with his disciples to the Ganges for middayablutions, he noticed an outcaste approaching them with a pack of four dogs.Shankara and his disciples asked him to keep out of their path. But the hunterraised an issue -

The outcaste responded thus, 'This body comes has its source in the samematerial food and performs the same functions in the case of both a Brahmanaand an outcast. If the question is addressed to the Atman, the witnessingconsciousness, the Atman is the same in all unaffected, by anything that is of thebody. How do differences such as 'This is a Brahmana, this is a chandala' arise inthe non-dual experience? Is the sun changed in the least whether it's reflectionin seen in a pot containing liquor or in the holy Ganges? Is the Akasha in a golden pot different from the one in the mud pot? The one universal,unblemished spirit, is shining alike in all bodies ' is this not the truth?'

Sri Shankara was struck with the chandala's Atma Jnana and exclaimed that aperson who sees the world as Atman only and whose mind is firmly establishedin that conviction is worthy of worship irrespective of whether he is a Brahmanaor an outcaste by birth. 

He admitted, 'I am sure the pure consciousness shinesalike in Mahavishnu as also in flies. All objective phenomena is false ' he who isever established in this consciousness is my Guru, worthy of respect, be he anoutcaste by birth. All objects presented to consciousness are false and unreal,what is inherent in all these is pure consciousness alone, and that pureconsciousness is the 'I'. A man established in such an awareness is indeed aGuru to me.' 

This, Sri Shankara conveyed through his composition calledManisha Panchakam.

ஒரு அரிசோனன் 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Seshadri Sridharan

unread,
Apr 13, 2015, 10:47:35 PM4/13/15
to mintamil
2015-04-13 20:45 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

இங்கே எழுந்துள்ள அடிப்படைக் கேள்வி தொடாமை தீண்டாமை தமிழகத்தில் தோன்றக் காரணமாக இருந்தவர்கள் யார் என்பதே
 
இந்தத் தீண்டாமை வடக்கே தோன்றி புராண சமயம் தமிழகத்தில் வேர்கொண்டபோது கடைபிடித்து ஒழுகப்பட்டது.. அதிலும் திருவரங்கம், தில்லை நடவரசர் கோவில்களில் தான் இது முதலில் கடைபிடிக்கப்பட்டது . இது 8 - 9 ஆம் நூற்றாண்டு ஆகலாம். திருமழிசை ஆழ்வார் பிறப்பால் பறையரேனும் சொன்னவண்ணம் செய்த பெருமாளை கோவிலில் சென்று வழிபட்டதோடு பைநாகப் பாயை சுருட்டிக்கொண்டு வரச் செய்தவர். இவரும் 9ஆம் நூற்றாண்டினரே. ஆக தீண்டாமை தமிழகத்தில் பரவலாக பரவவில்லை என்பதோடு இன்று போல் அன்று ஒரு பெருந்திரளான  மக்களை உள்ளடக்கவில்லை.

//காசியில் ஆதிசங்கரர் சண்டாளனுடன் அத்வைத வாதம் கேட்டுப் புதிய கோணத்தை உணர்ந்தார்.  தமிழாட்டில் சண்டாளர்கள் அல்லது சண்டாளர்களுக்கு இணையான ஜாதி எது?//

பிணத்தைத் கையாளும் வெட்டியான்கள் தாம் இந்த சண்டாளர்கள் என்போர். மகாயான பௌத்தத்தில் தமோ குண பிணத்தைத் தீண்டுவது விரும்பத்தகாததாகியது. அந்த பௌத்தர் புராண சமயம் தழுவியபோது  இந்த பிணம்  தீண்டாமை  பழக்கத்தை புராண மதத்தில் புகுத்தியதால் வெட்டியான்களையும் தீண்டக்கூடாது என்று முடிவு கொண்டதால் தீண்டாமை ஏற்கப்பட்டு பரவியது. தமோ குணத்தை வெறுக்கின்ற, புறம்தள்ளுகின்ற வழக்கம் இன்றும் தந்திரத்தில் முன்மொழியப்படுகின்றது என்பதை ஊன்றி நோக்குவார் இதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். கால ஓட்டத்தில் இதில் இன்னும் அதிக அளவு மக்கள் சேர்க்கப்பட்டார்கள். அவர்கள் தாம் இந்த வேளாண் கூலிகள்.

//மற்ற இடங்களில் பெண்கள் நால்வகை வர்ணத்தில் சூத்திரர்கள் என்று கருதப்பட்டதுபோல் தமிழகத்துப் பெண்டிர்கள் சூத்திரர்களா? - 
இணையவேள்​
 //

பிராமணரேயானாலும் பெண்கள் வேதம் கற்க, ஓத தடை இன்றும் உள்ளது. பெண்களுக்கு பூணூல் அணியப்படாதது இதற்கு ஒரு சான்று. சூத்திரர் என்ற சொல் முதற் காலத்தில் வேதவினை நிகழ்த்தத் தகுதி இல்லாதவரையே குறித்தது. அதனால் பெண்களும் சூத்திராகக் கருதப்பட்டனர். அவ்வளவு ஏன் பூணூல் அணியாத பிராமணச் சிறுவர்களும் சூத்திரராகவே கருதப்பட்டனர், கருதப்படுகின்றனர். அதனால் அவர்கள் வேதம் கற்க தடை உள்ளது. பூணூல் அணிந்தவருக்கு தடை நீக்கப்படுகின்றது. பின்னாளில் சூத்திர என்ற இச்சொல் இழி சொல்லாக பிராமணர்களால் பயன்படுத்தப்பட்டது. ஏனென்றால் வேதம் கற்பது பிறப்பு வழி தான் அமைய வேண்டும் என அமைந்ததால். சூத்திரர் என்றால் பரத்தை மகன் என்ற தவறான பொருளைக் காட்டி வெறுப்பு மனப்பான்மையை ஏற்படுத்தியவர் பெரியார். அப்படி ஒரு பொருள் எந்த சமற்கிருத அகராதியிலும் இல்லை. அவர் தவிர வேறு யாரும் அப்படிப் பொருள் கூறவில்லை. 

Nagarajan Vadivel

unread,
Apr 13, 2015, 11:51:13 PM4/13/15
to மின்தமிழ்

2015-04-14 8:17 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
சூத்திரர் என்றால் பரத்தை மகன் என்ற தவறான பொருளைக் காட்டி வெறுப்பு மனப்பான்மையை ஏற்படுத்தியவர் பெரியார். அப்படி ஒரு பொருள் எந்த சமற்கிருத அகராதியிலும் இல்லை. அவர் தவிர வேறு யாரும் அப்படிப் பொருள் கூறவில்லை. 


அன்புடை
​ சேசாத்திரி ஐயா
ஆவண அடிப்படையில் இது பெரியாரின் தனிக் கருத்த அல்லது இன்னொருவர் கருத்தை மேற்கோள் காட்டினாரா என்று நிறுவுதல் அவசியம்

அயோத்திதாசர் தன்னுடைய சிந்தனை வரிசையில் வேதப் பிராமணர்களையும் வேஷப் பிராமணர்களையும் வேற்றுமைப்படுத்தி வேளாண்மையைத் தொழில் நுட்பமயமாக்கிய வேளாளர்கள் வேளண்மைச் சூத்திர​
ங்களை
​ ​
அறிந்தவர்கள் என்பதால் சூத்திரர்கல் என்றும் குமுகச் சேவை செய்யும் பிரிவுகள் தொழிலியல் நுட்பம்​ அறிந்தவர்கள் என்பதால் சூத்திரர்கள் என்று ​குறிப்பிடப்படுவர் என்று கூறுவார்

பெரியார் வாயில் வேண்டாதவற்றைத் திணிக்கும் முயற்சியாக உங்கள் கூற்று அமைகிறது.  எனவே தெளிவுபடுத்துவது உங்கள் கடமை

இணையவேள்

செல்வன்

unread,
Apr 14, 2015, 2:02:11 AM4/14/15
to mintamil

2015-04-13 22:51 GMT-05:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
பெரியார் வாயில் வேண்டாதவற்றைத் திணிக்கும் முயற்சியாக உங்கள் கூற்று அமைகிறது.  எனவே தெளிவுபடுத்துவது உங்கள் கடமை


Nagarajan Vadivel

unread,
Apr 14, 2015, 2:23:23 AM4/14/15
to மின்தமிழ்
பெரியார் பாதை என்ற இதழில் வெளியானதை கீற்று டிஸ்கியின் வெளியிட்டிருப்பது பெரியார் தி.மு.க ஆட்சியில் இருந்தபோது பேசியது.  சூத்திரனைப்பற்றி அரசியல் சட்டமும் இந்து புராணங்களும் கூறுவதாகச் சொல்லி அதை ஒழிக்கவேண்டும் என்று பேசியதை இப்படி மாற்றிப் போடலாமா?

ஈனசாதி இழிவு ஒழிந்தே ஆகணும்


http://keetru.com/index.php/2012-12-21-08-00-30/162012/22806-2013-01-30-05-46-52

நேரடிக் கேள்வி பெரியார் அவ்வாறு தன்கருத்தாகச் சொன்னாரா அதாவது தமிழ் காட்டுமிராண்டிமொழி என்று சொன்னதுபோல் சொன்னாரா என்பதுவே

இணையவேள்

--

செல்வன்

unread,
Apr 14, 2015, 2:28:15 AM4/14/15
to mintamil
ஒரு கருத்தை ஒருவர் சொல்கையில் அதை இன்னார் சொல்கிறார் எனக்குறிப்பிடாமல், சைட்டேஷன் காட்டாமல் சொன்னால் அது அவரது சொந்தகருத்துதான்.

Nagarajan Vadivel

unread,
Apr 14, 2015, 2:41:33 AM4/14/15
to மின்தமிழ்
அன்புடை செல்வன் ஐயா
//சேசாத்திரியார் இவ்வாறு கூறுகிறார்
சூத்திரர் என்றால் பரத்தை மகன் என்ற தவறான பொருளைக் காட்டி வெறுப்பு மனப்பான்மையை ஏற்படுத்தியவர் பெரியார். அப்படி ஒரு பொருள் எந்த சமற்கிருத அகராதியிலும் இல்லை. அவர் தவிர வேறு யாரும் அப்படிப் பொருள் கூறவில்லை.//
பெரியார் இந்திய அரசியல் சட்டமும் புராணமும் கூறுவதாகப் பேசியிருக்கிறார்
அவர் அதற்கான மேற்கோள்களை அவர் பலகட்டுரைகளை எழுதியுள்ளார். 
நானறிந்தவரையில் தமிழகத்தில் இருந்த சாதிப்பிரிவினைகளை நால்வகை வர்ணத்துள் தொகுக்கும்போது வேளாளர்களைச் சூத்திரர்கள் என்றும் வேளிர்களைச் சூத்திரர்கள் என்றும் பிரித்ததால் குழப்பம் விளைந்தது என்பதே வரலாறு சுட்டும் தகவல்
அயோத்திதாசர் கருத்தும் இதுவே
இணையவேள்

Seshadri Sridharan

unread,
Apr 14, 2015, 6:04:43 AM4/14/15
to mintamil
2015-04-14 11:57 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
ஒரு கருத்தை ஒருவர் சொல்கையில் அதை இன்னார் சொல்கிறார் எனக்குறிப்பிடாமல், சைட்டேஷன் காட்டாமல் சொன்னால் அது அவரது சொந்தகருத்துதான்.

எத்தனை வருடமாக இது இருக் கிறது? 2,000 வருடமாக இருக்கிறது. மேலேயே சொல்லலாம்; நாசமாய்ப் போகட்டும். சுயராஜ்யம் என்கிறார் களே, இதிலே சட்டத்திலே இருக்கிறது - அரசியல் சட்டத்திலே இருக்கிறது, நம்மைத் தேவடியாள் மகன் என்கிறது. அப்புறம், நமக்கு என்னதான் கதி? நாம் எப்போதுதான் மனுஷராகிறது? நாடு நம் நாடு; பார்ப்பான் எல்லாம் பிழைக்க வந்தவன் இங்கே! இந்த இழிவிலே இருக்கிற இவ்வளவு பெரிய சமுதாயம், இந்த 1973இலே, சட்டப்படி தேவடியாள் மகன் என்று இருந்தால் - சாஸ்திரப்படி தேவடியாள் மகன் என்று இருந்தால் - அனுபவத்திலே ஈனசாதி, நாலாஞ்சாதி, தீண்டாத சாதி என்று இருந்தால் - யார்தான் இதற்குப் பரிகாரம் (தேடுவது)? வேறே நாட்டான் நம்மைப் பற்றி என்ன சொல்லுவான் - நம் சங்கதியைச் சொன்னால்?]

இன்றைய தமிழ்த் தேசியர் பெரியாரின் கருத்தியலை உலுக்கு உலுக்கு என்று உலுக்குவது பெரியாரின் இந்த தப்பான விளக்கத்திற்கு  தான். அதிலும் தமிழன் என்ற சொல்லைப் பயன்படுத்தும்  போது தான். திராவிடன் என்ற சொற்பயன்ப்பாடு வரும் போது பெரியார் இதைத் தவிர்க்கிறார் என்று காட்டுகின்றனர்.

Seshadri Sridharan

unread,
Apr 14, 2015, 6:35:41 AM4/14/15
to mintamil
2015-04-14 9:21 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
2015-04-14 8:17 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
சூத்திரர் என்றால் பரத்தை மகன் என்ற தவறான பொருளைக் காட்டி வெறுப்பு மனப்பான்மையை ஏற்படுத்தியவர் பெரியார். அப்படி ஒரு பொருள் எந்த சமற்கிருத அகராதியிலும் இல்லை. அவர் தவிர வேறு யாரும் அப்படிப் பொருள் கூறவில்லை. 
பெரியார் வாயில் வேண்டாதவற்றைத் திணிக்கும் முயற்சியாக உங்கள் கூற்று அமைகிறது.  எனவே தெளிவுபடுத்துவது உங்கள் கடமை இணையவேள்

விடுதலை இதழ் சொல்கிறது, சூத்திரர் என்ற சொல்லுக்கு ஏழு பொருள் காட்டுகிறது அதில்  பரத்தை மகன் என்பதை மட்டும் பெரியார் தெரிந்தெடுத்தது ஏன்? என்று ஒரு கேள்வியும் கேட்கவில்லை. 



N. Ganesan

unread,
Apr 14, 2015, 9:20:46 AM4/14/15
to mint...@googlegroups.com


On Monday, April 13, 2015 at 11:28:15 PM UTC-7, செல்வன் wrote:
ஒரு கருத்தை ஒருவர் சொல்கையில் அதை இன்னார் சொல்கிறார் எனக்குறிப்பிடாமல், சைட்டேஷன் காட்டாமல் சொன்னால் அது அவரது சொந்தகருத்துதான்.

தன் கருத்தாக சொல்லியிருக்கிறார் பெரியார். 1926-ல் காரைக்குடி சிராவயலில் நடந்த சொற்பொழிவு. பின்னர்
1970களில் ராமன், கிருஷ்ணன் இதிகாச நாயகர்களை செருப்பால் அடித்தபோதும் சொல்லியுள்ளார். இறுதிவரை
தன் கருத்தைப் பேசி எழுதியவர். சான்றாக, மனு தர்ம சாத்திரத்தை மேற்கோள்.

நா. கணேசன்
 

Nagarajan Vadivel

unread,
Apr 14, 2015, 9:52:39 AM4/14/15
to மின்தமிழ்


இது சேசாத்திரி அவர்களின் கூற்று.

//சூத்திரர் என்றால் பரத்தை மகன் என்ற தவறான பொருளைக் காட்டி வெறுப்பு மனப்பான்மையை ஏற்படுத்தியவர் பெரியார். அப்படி ஒரு பொருள் எந்த சமற்கிருத அகராதியிலும் இல்லை. அவர் தவிர வேறு யாரும் அப்படிப் பொருள் கூறவில்லை. //

இது உங்கள் கருத்து மனுதர்ம சாஸ்திரத்தை மேற்கோல் காட்டியதாகக் குறிப்பிடுகிறீர்கள்

//தன் கருத்தாக சொல்லியிருக்கிறார் பெரியார். 1926-ல் காரைக்குடி சிராவயலில் நடந்த சொற்பொழிவு. பின்னர்
1970களில் ராமன், கிருஷ்ணன் இதிகாச நாயகர்களை செருப்பால் அடித்தபோதும் சொல்லியுள்ளார். இறுதிவரை
தன் கருத்தைப் பேசி எழுதியவர். சான்றாக, மனு தர்ம சாத்திரத்தை மேற்கோள்.//

இதில் எது சரி?

இணையவேள்

N. Ganesan

unread,
Apr 14, 2015, 11:16:12 AM4/14/15
to mint...@googlegroups.com, vallamai


On Tuesday, April 14, 2015 at 6:52:39 AM UTC-7, இணையவேள் wrote:


இது சேசாத்திரி அவர்களின் கூற்று.

//சூத்திரர் என்றால் பரத்தை மகன் என்ற தவறான பொருளைக் காட்டி வெறுப்பு மனப்பான்மையை ஏற்படுத்தியவர் பெரியார். அப்படி ஒரு பொருள் எந்த சமற்கிருத அகராதியிலும் இல்லை. அவர் தவிர வேறு யாரும் அப்படிப் பொருள் கூறவில்லை. //

இது உங்கள் கருத்து மனுதர்ம சாஸ்திரத்தை மேற்கோல் காட்டியதாகக் குறிப்பிடுகிறீர்கள்

//தன் கருத்தாக சொல்லியிருக்கிறார் பெரியார். 1926-ல் காரைக்குடி சிராவயலில் நடந்த சொற்பொழிவு. பின்னர்
1970களில் ராமன், கிருஷ்ணன் இதிகாச நாயகர்களை செருப்பால் அடித்தபோதும் சொல்லியுள்ளார். இறுதிவரை
தன் கருத்தைப் பேசி எழுதியவர். சான்றாக, மனு தர்ம சாத்திரத்தை மேற்கோள்.//

இதில் எது சரி?

ஆராய்ந்து சொல்லுங்கள் பேராசிரியர் ஐயா. யூனிகோட் மாற்றங்களின் தேவை பற்றி மொழியியல்
அடிப்படையில் விரிவாக் மின்தமிழிலும், இண்பிட்டிலும் நீங்கள் இணையத்தில் தமிழில் எழுதுவதை
ஆவலுடன் படிக்கும் மாணவர்கள் பலர். இந்தியாவின் செம்மொழிகள் இரண்டையும் ஆராயும்
பல பேராசிரியர்கள் ஆய்வுக் கட்டுரைகளை 40 ஆண்டுகளாகப் படித்தும், அவர்களுடன் கருத்தாடியும்
வருபவன் என்ற முறையில் செம்மொழி பற்றிய கடிதம் பார்லிமெண்ட்டில் படிக்கப்பட்ட வரலாறும்,
அதனை நண்பர் கவிஞர் சிற்பி அவர்கள் டில்லியில் மொழிபெயர்த்து வாசித்ததும் நன்கறிவேன்.
கம்ப்பேரட்ட்டிவ் லிட்டெரேச்சர், இந்திய வரலாற்றில் - உ-ம்: சமூக அமைப்பு - சங்கத் தமிழின்
ஆழமான பங்கு அறிந்தவர்கள் செய்தது. அண்மையில் கூட நண்பர் சேசாத்திரி அங்கு என்பதில்
ச் ஏறினால் சங்கு ஆகும் என்று அங்கப்பன், அங்கையன் என்று மீனவர்களிலே பெயர்கள் உண்டு
என்றார். கடல் இல்லாத கோவை மாவட்டத்தில் இப்பெயர் மிகுதிபற்றிச் சொன்னேன்.
சகசிரம் > சாசிரம் > சாயிரம் > ஆயிரம் (தமிழ்) வருவதும் காட்டியுள்ளேன். திராவிடவியல்
மேதை எனப்போற்றப்படுபவர் பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தி. அவர் நூலிலே கூட சாயிரம்
பற்றி சொல்லவில்லை. நான் கொடுத்திருக்கும் சான்றைப் பார்த்திருந்தால் மகிழ்ந்து போற்றியிருப்பார்.
இணையத்தில் தொடக்க காலத்தில் தமிழ் செம்மொழி இல்லை என்று என் போன்றவர்களுக்கு
சொன்னவர் ப. கிருஷ்ணமூர்த்தி. விரிவாக, என் வலைப்பதிவிலும், இங்கும் எழுதியுள்ளேன்.

சகசிரம் > சாசிரம் > சாயிரம் > ஆயிரம் (தமிழ்)  - சேசாத்திரி மற்ற தமிழறிஞர்கள் ஆங்கில
லிங்யுஸ்டிக்ஸ் ஜர்னல்களில் இத் தியரியை மறுத்து எழுதினால் சிறப்பாக இருக்கும். 
செய்யவியலாது என நினைக்கிறேன். In Tamil, consonants m,n, c, y and v are lost word initially
and we don't have prothesis for aayiram to caayiram, caaciram > sahasra (Sanskrit). 

தமிழ்ப் பெயர்கள் எத்தியோப்பியாவில் உள்ளனவா?
சிந்து எழுத்துக்களை நண்பர் சேசாத்திரி (மதிவாணன் முறையில்) படிக்கிறாரே. அது சரிதானா?
ஆராய்ந்து சொல்லுங்கள். மேலும் ஆராய்வோம்.

Seshadri Sridharan

unread,
Apr 14, 2015, 12:14:27 PM4/14/15
to mintamil
2015-04-14 19:22 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
இது சேசாத்திரி அவர்களின் கூற்று.

//சூத்திரர் என்றால் பரத்தை மகன் என்ற தவறான பொருளைக் காட்டி வெறுப்பு மனப்பான்மையை ஏற்படுத்தியவர் பெரியார். அப்படி ஒரு பொருள் எந்த சமற்கிருத அகராதியிலும் இல்லை. அவர் தவிர வேறு யாரும் அப்படிப் பொருள் கூறவில்லை. //

இது உங்கள் கருத்து மனுதர்ம சாஸ்திரத்தை மேற்கோல் காட்டியதாகக் குறிப்பிடுகிறீர்கள்

 1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன் 2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன். 3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன். 4) விபசாரி மகன். 5) விலைக்கு வாங்கப்பட்டவன், 6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்  7) தலைமுறையாக ஊழியம் செய்கிறவன்.
(மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415

இத்தனை பொருள் இருக்க பரத்தை மகன் தான் இதன் பொருள் என்று எப்படி பொருந்த அறிந்தார். பெரியார் .  இந்த மனு தர்ம சாத்திரத்தை மொழிபெயர்த்தவர் யார்? 

Seshadri Sridharan

unread,
Apr 14, 2015, 11:10:39 PM4/14/15
to mintamil
2015-04-14 19:22 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
இது சேசாத்திரி அவர்களின் கூற்று.
இது உங்கள் கருத்து மனுதர்ம சாஸ்திரத்தை மேற்கோல் காட்டியதாகக் குறிப்பிடுகிறீர்கள்
 1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன் 2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன். 3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன். 4) விபசாரி மகன். 5) விலைக்கு வாங்கப்பட்டவன், 6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்  7) தலைமுறையாக ஊழியம் செய்கிறவன்.
(மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415

இத்தனை பொருள் இருக்க பரத்தை மகன் தான் இதன் பொருள் என்று எப்படி பொருந்த அறிந்தார். பெரியார் .  இந்த மனு தர்ம சாத்திரத்தை மொழிபெயர்த்தவர் யார்? 


ஜார்ஜ் புல்லெரின் மனுதர்ம ஆங்கில மொழிபெயர்ப்புத் தொடுப்பைக் கண்டுபிடித்துவிட்டேன் 8 ஆம் அத்தியாயம் 415 பார்க்க  https://docs.google.com/file/d/0Bz1OumJznV7ucmwyelNvQy1CcUU/edit

There are slaves of seven kinds (viz) he who is made a captive under a standard, he who serves for his daily food, he who is born in the house, he who is bought and he who is given, he who is inherited from ancestors, he who is enslaved by way of punishment.


இதில் சூத்திரன் என்றால் அடிமை என்று தான் பொருள் உள்ளது. கணிகை மகன் என்ற பொருட்பாடே இல்லை. வீட்டில் பிறந்தவன் என்று தான் உள்ளதே தவிர கணிகையின் வீட்டில் பிறந்தவன் என்று இல்லை (பிராமணன் வீட்டில் பிறந்த அடிமையின் மகன்/மகள் என்று வேண்டுமானால் பொருள் கொள்ளலாம்). 

ஆக தமிழர் தன்மானத்தை மீட்கிறேன் என்று சொன்ன பெரியார் பல மேடைகளில், எழுத்துகளில் தமிழர் மானம் போகும்படி 1926 முதல் சாகும் வரை தமிழரை பரத்தை மகன் என்று கூறியுள்ளார். இது எத்துணை வெட்கக்கேடு தமிழருக்கு. இருந்தும் சில மதிகேடர்கள் வலிந்து வலிந்து பெரியாரைப் போற்றுகிறார்களே.  

Nagarajan Vadivel

unread,
Apr 14, 2015, 11:42:53 PM4/14/15
to மின்தமிழ்

2015-04-15 8:40 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
1926 முதல் சாகும் வரை தமிழரை பரத்தை மகன் என்று கூறியுள்ளார். இது எத்துணை வெட்கக்கேடு தமிழருக்கு. இருந்தும் சில மதிகேடர்கள் வலிந்து வலிந்து பெரியாரைப் போற்றுகிறார்களே.


​1926 ​முதல் என்பது சரியல்ல.  போகிறபோக்கில் பொத்தாம்பொதுவாகக் கணேசர் அவர்கள் குறிப்பிட்டது ஆதாரம் சுட்டவில்லை.  நீங்கள் சுட்டியது பெரியாரின் இறுதிச் சொற்பொழிவு.  அவர் பிராமணர்களுக்கு எதிரான தீவிரவாதத்தை 1950-ல் தான் அதிலும் அவரது நண்பர் ராஜாஜி முதல்வராக இருந்தபோது தொடங்கினார்

அவர் இந்திய அரசியல் சட்டத்திலும் இருப்பதாகச் சொல்லுகிறார்.  அவர் எந்த ஆதரத்தின் அடிப்படையில் சொன்னார் என்பது ஆய்ந்து முடிவெடுக்க வேண்டிய ஒன்று. பிராமணிய எதிர்ப்பு என்பது திசைமாறி பிராமண எதிர்ப்பு என்று தீவிரவாதம் தலைதூக்கியபோது அவருடைய தளபதிகள் அனைவரும் (ராமனாதன், ப.ஜீவானந்தம், கி.ஆ.பெ) ஒருவர்பின் ஒருவராக எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறினர் என்பதும் அண்ணாவும் அவரது தீவிரவாதத்துக்கு முன்னரே கட்சியைவிட்டு வெளியேறியதும் பெரியாருடைய பிராமணர் எதிர்ப்பும் கருத்தும் அவரது உட்கட்சியிலேயே ஏற்றுக்கொள்ளாத கொள்கை என்பது தெளிவு

இணையவேள்

N. Ganesan

unread,
Apr 14, 2015, 11:50:22 PM4/14/15
to mint...@googlegroups.com
1925-ல் பேச தொடங்கியுள்ளார்:

1926-ல் தலித், ... காரைக்குடி சிராவயல் பிரசங்கம்.

நா. கணேசன்

தேமொழி

unread,
Apr 15, 2015, 12:51:47 AM4/15/15
to mint...@googlegroups.com
அருமையான பகிர்வு... நன்றி.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் சமசுதந்திரம் அடைவதோடல்லாமல், உயர்ந்த நிலைமையையும் அடைய ஆசைப்படுவது ஒவ்வொரு ஜீவனின் சுபாவமாகும். அப்படியிருக்க, உன்னுடைய சமத்துவத்திற்கு நானும் பிரயத்தனப் படமாட்டேன், நீ பிரயத்தனப்பட்டால் அதையும் ஒழிப்பதற்கு நான் பிரயத்தனப்படுவேன் என்று சொல்வது சமத்துவ மனித தர்மமாகுமா? இந்தியாவில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும், மகமதியர்களும், இந்துக்களில் தீண்டாதவர்களும், ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையும் சம உரிமையும் பெற்றாலல்லாது, இந்தியா விடுதலையடையுமென்று நினைப்பது பைத்தியக்காரத்தனமென்றே சொல்லுவோம். சம உரிமையும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டுமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மனம் ஒப்பிக் கொடுப்பதுதான் ஏற்ற மருந்தாகும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உணர்ச்சியை அடக்கி மழுப்பி விடலாமென்று நினைப்பது, சரீரத்தில் ஏற்பட்ட ஒரு புண்ணை மருந்துபோடாமல் மூடிவைத்து விடுவதினால் அது ஆறிப்போகுமென்று நினைப்பதுபோல்தான் முடியும். 

எனக்கு இந்த வரிகளில் உடன்பாடு உண்டு.

..... தேமொழி 

செல்வன்

unread,
Apr 15, 2015, 2:44:09 AM4/15/15
to mintamil
சூத்திரன்/ திராவிடன் எனும் சொல்வழக்கை தமிழரையும், தமிழையும் குறிக்க பயன்படுத்துவதே தவறு.

தமிழர்கள் எக்காலத்திலும் தம்மை சூத்திரர் என அழைத்துக்கொண்டது கிடையாது. சங்க இலக்கியங்களில் எந்த சாதியைகுறித்தும் அச்சொல்லைக்காண இயலாது. அதே போல திராவிடர் என்பது விந்தியமலைக்கு தெற்கே குடியேறிய பிராமணர்களை குறிக்கும் பெயர்தானே ஒழிய ஒட்டுமொத்த தமிழரையும் குறிக்கும் சொல் அல்ல.

சங்க இலக்கியங்களில் தமிழ் எனும் சொல்தான் உள்ளதே ஒழிய திராவிட என்ற சொல்லும் எங்கேயும் கிடையாது. திரமிளம் என்ற வார்த்தையையும் காண இயலாது. வடநாட்டு பிராமணர்களும், சத்திரியர்களும் ஆரியர்கள். தென்னாட்டில் குடியேறிய நம்பூதிரிகள் முதலான பிராமணர்கள் திராவிடர்கள். ராகுல் திராவிட் என்பது போல பெயர் வைத்துக்கொள்வது அவர்களே. இங்குள்ள அய்யர்களும், அய்யங்கார்களும், இன்னபிற தமிழ்சாதிகளும் திராவிடர்களுமல்ல, ஆரியர்களுமல்ல. அவர்கள் தமிழர்களே.

பெரியாருக்கு இது புரியாமல் எல்லா தமிழரையும் திராவிடர் என அழைக்க ஆரம்பித்து பிராமணர்களின் பெயரை தமிழருக்கு சூட்டிவிட்டார்.

Seshadri Sridharan

unread,
Apr 15, 2015, 4:49:22 AM4/15/15
to mintamil


2015-04-15 9:12 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

அவர் இந்திய அரசியல் சட்டத்திலும் இருப்பதாகச் சொல்லுகிறார்.  அவர் எந்த ஆதரத்தின் அடிப்படையில் சொன்னார் என்பது ஆய்ந்து முடிவெடுக்க வேண்டிய ஒன்று. பிராமணிய எதிர்ப்பு என்பது திசைமாறி பிராமண எதிர்ப்பு என்று தீவிரவாதம் தலைதூக்கியபோது அவருடைய தளபதிகள் அனைவரும் (ராமனாதன், ப.ஜீவானந்தம், கி.ஆ.பெ) ஒருவர்பின் ஒருவராக எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறினர் என்பதும் அண்ணாவும் அவரது தீவிரவாதத்துக்கு முன்னரே கட்சியைவிட்டு வெளியேறியதும் பெரியாருடைய பிராமணர் எதிர்ப்பும் கருத்தும் அவரது உட்கட்சியிலேயே ஏற்றுக்கொள்ளாத கொள்கை என்பது தெளிவு - இணையவேள்

நீங்கள் தீண்டாமையை யார் தொடங்கியது என்று இட்ட இந்த இழையில் குறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆகியவற்றில் தீண்டாமை இல்லை ஏனெனில் அங்கு ஆண்டைகள் என்ற கிழார்கள் இல்லை என்பதோடு மருத நிலத்தில் கைவினைஞர்கள் முதலாளி என்போர் இல்லாததால் தீண்டாமைக்கு  ஆட்படவில்லை ஆனால் இந்த மருதநில நிலக்கிழமை வழங்கும் தளத்தில் தான் வேளாண் கூலிகள் தீண்டாமைக்கு ஆட்படுதப்ப்டிருக்கிறார்கள் என்று எரண (logic) முறையில் விளக்கினேன். அடுத்ததாக இழை சூத்திரர் என்ற தலைப்பிற்கு  தாவியது. அதையும்  நான் எரண முறையில் தான் அனுகியுள்ளேன்.  நீங்கள் தரவு கேட்டீர்கள் அதையும் கொடுத்தேன். 

இனி, 1926 ஆ அல்லது 1950 ஆ என்பதை ஒதுக்கிவைத்து பார்ப்போம். சூத்திரர் என்ற சொல்லுக்கு பரத்தை மகன் என்ற பொருள் மூல மனு நூலில் இல்லாதபோது  அரசியல் சட்டத்தில் மட்டும் எப்படி அது வந்துவிடமுடியும். சட்ட மேதை இதை அனுமதித்திருப்பாரா? பெரியார் தவறான பொருள்  கூறி தமிழரில் பிராமணருக்கும் பிராமணரல்லாதருக்கும் இடையே பெரும் மோதலை ஏற்படுத்த முயன்றுள்ளார், அதோடு தமிழரை இவர்தான் பரத்தை மகன் என்று மானக்கேடாகக் பல காலம் கூறியுள்ளார். பெரியாரின் இந்த தவறான பொருட்பாட்டை ஞாயப்படுத்த விடுதலை இதழ் மனு நூலின் மொழிபெயர்ப்பில் இல்லாத ஒரு சொல்லான பரத்தை மகன் என்பதை செருகி மேற்கோளாகக்காட்டி தமிழர் அனைவரையும் இன்னமும் அவமானப்படுத்தி வருகிறது, கேவலப்படுத்துவருகிறது, ஏமாற்றிவருகிறது. இது சரியா ? முறையா?  உமது கருத்து என்ன என்பதை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் பேராசிரியர் ஐயா! 


கைத்தொழுவான் 



 இது உங்கள் கருத்து மனுதர்ம சாஸ்திரத்தை மேற்கோல் காட்டியதாகக் குறிப்பிடுகிறீர்கள்

விடுதலை இதழ் : 1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன் 2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன். 3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன். 4) விபசாரி மகன். 5) விலைக்கு வாங்கப்பட்டவன், 6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்  7) தலைமுறையாக ஊழியம் செய்கிறவன்.
(மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415

இத்தனை பொருள் இருக்க பரத்தை மகன் தான் இதன் பொருள் என்று எப்படி பொருந்த அறிந்தார். பெரியார் .  இந்த மனு தர்ம சாத்திரத்தை மொழிபெயர்த்தவர் யார்? 


ஜார்ஜ் புல்லெரின் மனுதர்ம ஆங்கில மொழிபெயர்ப்புத் தொடுப்பு  8 ஆம் அத்தியாயம் 415 பார்க்க  https://docs.google.com/file/d/0Bz1OumJznV7ucmwyelNvQy1CcUU/edit

There are slaves of seven kinds (viz) he who is made a captive under a standard, he who serves for his daily food, he who is born in the house, he who is bought and he who is given, he who is inherited from ancestors, he who is enslaved by way of punishment.


இதில் சூத்திரன் என்றால் அடிமை என்று தான் பொருள் உள்ளது. கணிகை மகன் என்ற பொருட்பாடே இல்லை. வீட்டில் பிறந்தவன் என்று தான் உள்ளதே தவிர கணிகையின் வீட்டில் பிறந்தவன் என்று இல்லை 

N. Ganesan

unread,
Apr 15, 2015, 8:20:01 AM4/15/15
to mint...@googlegroups.com


On Tuesday, April 14, 2015 at 8:42:53 PM UTC-7, இணையவேள் wrote:

2015-04-15 8:40 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
1926 முதல் சாகும் வரை தமிழரை பரத்தை மகன் என்று கூறியுள்ளார். இது எத்துணை வெட்கக்கேடு தமிழருக்கு. இருந்தும் சில மதிகேடர்கள் வலிந்து வலிந்து பெரியாரைப் போற்றுகிறார்களே.


​1926 ​முதல் என்பது சரியல்ல.  போகிறபோக்கில் பொத்தாம்பொதுவாகக் கணேசர் அவர்கள் குறிப்பிட்டது ஆதாரம் சுட்டவில்லை.  நீங்கள் சுட்டியது பெரியாரின் இறுதிச் சொற்பொழிவு.  அவர் பிராமணர்களுக்கு எதிரான தீவிரவாதத்தை 1950-ல் தான் அதிலும் அவரது நண்பர் ராஜாஜி முதல்வராக இருந்தபோது தொடங்கினார்


இல்லை, பேரா. ஐயா. 1925-ல் இருந்து மறையும்வரை சொல்லிய வாசகம் இது.
1925 பேச்சின் தொடுப்பு அளித்தேன். பார்த்தீர்களா? 1926 காரைக்குடிப் பிரசங்கம்
பறையர்கள், சூத்திரர்கள், தீண்டாமை பற்றி விரிவான சொற்பொழிவு. படித்துப்
பாருங்கள். உங்கள் பெரியார், அண்ணா ஆய்வுகட்குதவும்.

நா. கணேசன்
 
அவர் இந்திய அரசியல் சட்டத்திலும் இருப்பதாகச் சொல்லுகிறார்.  அவர் எந்த ஆதரத்தின் அடிப்படையில் சொன்னார் என்பது ஆய்ந்து முடிவெடுக்க வேண்டிய ஒன்று. பிராமணிய எதிர்ப்பு என்பது திசைமாறி பிராமண எதிர்ப்பு என்று தீவிரவாதம் தலைதூக்கியபோது அவருடைய தளபதிகள் அனைவரும் (ராமனாதன், ப.ஜீவானந்தம், கி.ஆ.பெ) ஒருவர்பின் ஒருவராக எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறினர் என்பதும் அண்ணாவும் அவரது தீவிரவாதத்துக்கு முன்னரே கட்சியைவிட்டு வெளியேறியதும் பெரியாருடைய பிராமணர் எதிர்ப்பும் கருத்தும் அவரது உட்கட்சியிலேயே ஏற்றுக்கொள்ளாத கொள்கை என்பது தெளிவு

இணையவேள்

Geetha Sambasivam

unread,
Apr 15, 2015, 8:45:13 AM4/15/15
to மின்தமிழ்


--

Dev Raj

unread,
Apr 15, 2015, 8:58:39 AM4/15/15
to mint...@googlegroups.com
பெரியார் ஐயா சோதிடர்கள் குறித்துச் சொன்னவற்றையும் ஆராயலாம்


தேவ்
Reply all
Reply to author
Forward
0 new messages