காளத்தி மரம் - ஸ்ரீகாளஹஸ்தி தேவாரம் - கண்ணப்ப நாயனார் தலம்: பெயர்க்காரணம்

124 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 5, 2014, 10:52:30 PM7/5/14
to mint...@googlegroups.com, housto...@googlegroups.com, vallamai, tiruva...@googlegroups.com, panb...@googlegroups.com, tamil_...@googlegroups.com, thami...@googlegroups.com
On Sunday, June 29, 2014 7:58:36 AM UTC-7, seshadri sridharan wrote:

NG> காய் என்னும் சொல் காசு என்றாகிறது. உ-ம்: காயா வர்ணன் என்பர் கண்ணபிரானை.
காயாம்பூ என்ற மக்கட்பெயரை காசாம்பூ என்கின்றனர். சங்கப்பாடல்களில்
வேப்பங் காய் போன்ற உருவமுடைய காசு பற்றிக் குறித்துள்ளனர்.

 
காய்ச்சிக் கொட்டியதால் காய்ச்சு < காசு என்றானதாக பாவாணர் விளக்கம் கூறுகின்றார் 

சேசாத்திரி

 இச் செய்தி எந்த நூலில் பாவாணர் சொல்கிறார்? இணையப் பல்கலை தளத்தில்
பாவாணர் நூல்கள் எல்லாமும் கிடைக்கின்றன. ஆனால் ”காய்ச்சிக் கொட்டியதால் காசு” காணோமே.
வேனிற் பருவத்தே வேப்ப மரம் காய்களைக் காய்ச்சுக் கொட்டும் (தரையில்).

காய - காச பாவாணர் விளக்கத்தால் ஆகாயம்/ஆகாசம் என்ற பெயர்க் காரணம் தெரிகிறது. (காயா - காசா பூப்பெயர்)
"விண்ணென வரூஉங் காயப் பெயர்" (தொல். எழுத்து. 305). ஆகாயத்தில் இருக்கும் ஆ என்னும் முன்னொட்டுக்கு
பொருளேயில்லை என்கிறார் பாவாணர். இந்திய பிரதமர் மோதி பெயரால் (மோது/மொத்து என்னும்
வினைச்சொல் செக்கார்களின் ஒரு பெயர் மோதி என்று தருகிறது.) மோதகம் அரிசிமாவை
வெல்லம் போன்றவையுடன் கையால் ஒரு பிடிபிடித்துச் செய்வது. அதனுடன் முன்னொட்டாக
பொருளில்லாத ஆ முன்னொட்டை சேர்த்தால் ஆமோதகம் ஆகிறது. இனிப்பு/இனிமை என்ற இரண்டாம்
பொருளை வடமொழியில் பெறுகிறது. காயா/காசா வண்ணத்தில் உள்ள விண்ணைக்
காயம் (ஆகாயம்) என்பதும், மோதகம் ஆமோதகம் ஆதலும் ஒப்பிடலாம். NG

>நண்பர் திரு கணேசன், வணக்கம். பெண்ணாடம் அம்பாள் பெயர் அழகியகாதலி அம்பாள். அப்பெயரை இன்று ஆமோதானாம்பாள் என்று வடமொழியில் >அழைக்கிறார்கள். அர்ச்சனை அப்பெயரிலேயே செய்கிறார்கள். ஆமோதனாம்பாள் வடமொழிச் சொல்லின் பொருளும் அது அழகியகாதலி என்ற பெயருடன் >பொருந்துகிறதா என்று அறியவும் ஆவல். நன்றி
> சொ.வினைதீர்த்தான். 

’உலகலாம் உணர்ந்து ஓதற்கரியவன்’ என்று அடிஎடுத்துக் கொடுத்தாற்போலக் கொடுகிறீர்கள். எழுதப் பணித்ததால் எழுதுகிறேன் ஐயா. கொஞ்சம் கால  அவகாசம் தேவை. 

காயா/காசா என்றால் கருமை. அதனால் காயம் என்ற பெயர் தொல்காப்பியர் கொடுத்துள்ளார். ஆ என்ற பொருளில்லா முன்னொட்டைச் சேர்த்து ஆகாயம் என்று வடமொழியில் ஆக்கியுள்ளனர். அதேபோல, மோது/மொத்து என்னும் வினையடிப் பிறக்கும் மோதி என்ற செக்கார வாணியர் குலத் தோன்றல் இன்று பாரதமாதாவின் பிரதம மந்திரி. தேவநாகரியைத் திணிக்காமல் மோதி அவர்களுக்குப் பிடித்தமான வடமொழி இலக்கியங்கள் அந்தந்த மாநில எழுத்துக்களில் வளர அவர் உதவவேண்டும். இந்தி மொழி பரவாயில்லை. ஆனால், அதை உர்துவில் எழுதினால் என்ன? கிரந்தத்தில் எழுதினால் என்ன? கன்னடத்தில் எழுதினால் என்ன? தேவநாகரியில் எழுதினால் என்ன? - என்ற வளர்ச்சி நிலையை வடவர் அடைய வேண்டும். இந்தி பாரம்கள், ரயில்கள் அறிவிப்பு பலகைகளை இந்தி லிபியுடன் ஆங்கில எழுத்திலும் தரவேண்டும். அதுவே, இந்தி லிபி திணிப்பில்லா நிலையை இந்தியா அடைந்து நாகரீக வளர்ந்த நாடாக உதவும். பா.ஜ.க சர்க்கார் எல்லா மாநில லிபிகளுக்கும் வளர வாய்ப்பளித்தால் தமிழ்நாட்டில் வேரூன்றும். 

மோதி என்ற சொல்லுடன் தொடர்புடையது மோதகம். இனிமை/இனிப்பு பண்டம். ஆ முன்னொட்டுடன் ஆமோதக ஆகியுள்ளது. ஆமோதந- என்ற பொருளுக்கு நல்ல பொருத்தம் காதல், காதலி. ஏன் அழகியகாதலி ஆமோதநாம்பாள் ஆகிறாள் என அடுத்ததாகப் பார்ப்போம்.  ”கள்ளக் கம்பனை, எங்கள் பிரானை” என்னும் சுந்தரர் தேவாரமும், காளமேகத்தின் பாடலும் ஏன் சுடர்க்கொழுந்து என்னும் இலிங்கத்தை காதலியம்பாள் தழுவுகிறாள் என விளக்கும். பெண்ணாகடம் போலவே Flood Mythology சீகாழியின் தோணியப்பர் மனையாள் பெயரும் பாக்கணும். இப்படி ஒரு வெள்ளத் தொன்மக் கதை ஸ்ரீமத் பாகவதத்திலும் உண்டு. சத்யவிரதன் என்னும் தமிழ் மன்னன் மாத்திரம் பொதியம்லையின் மீதுமிஞ்சுகிறான், மற்ற உலகமெல்லாம் பிரளயத்தில் முழுகிவிடுகிறது. இறைவன் சுயம்பு. நல்லவேளையாக, கிடைத்துள்ள அப்பர் தேவாரத்தில் தமிழ்ப் பெயர் கிட்டியுள்ளது. சுடர்க்கொழுந்தீசன். ஒருவேளை,  அழிபட்ட அப்பர் தேவாரப் பாக்கள் சிக்கியிருந்தால் அழகியகாதலி எனும் பெயரும் பெற்றிருப்போம். 

முதலில் ஊர்ப்பெயர். பெண்ணாகடம். இது பெண்ணா + கடம் என்று தமிழில் பிரியும். பெண்ணை நதிபாயும் நடுநாட்டுப் பிரதேயம். கடம் semi-arid lands. வேங்கடம் = வேம் + கடம் என்பது போல். புராணக் கதைகளில் பெண் + ஆ + கடம் என்று பிரிப்பது கட்டுக்கதை, மொழியியல் ஊர்ப்பெயர் ஆய்வுகளுக்கு ஒவ்வாதது. பெண் - அரம்பையர் (ரம்பா, ஊர்வசி, திலோத்தமா போலும் நடனமாதர்), ஆ - காமதேனு - கடம் - யானை, எனவே ஐராவதம் என்பது தொல்பெயரான பெண்ணாகடத்துக்கு பொருத்தமில்லை.  இது போன்ற புராணக் கதைகள் தமிழின் பெயர்களை எவ்வாறு சிதைக்கின்றன என்பதற்குக் காளத்தி நல்ல உதாரணம்.  காளத்தியை சீகாளத்தி > ஸ்ரீகாளஹஸ்தி = சிலம்பு + பாம்பு + ஆனை வழிபட்ட தலம் என்கிறது புராணம். ஆனால், உண்மையில் பார்த்தால் காளத்தி அவ்விடத்தில் இருந்த மரங்களைக் குறிக்கும்.

காளத்தி என்பது காரத்தி. அத்தி மரத்தில் பல தினுசுகள் உள்ளன. அவற்றில் ஒன்று காளத்தி. காளத்தி - காரத்தி. நாளணன்/நாடணன் நாரணன்,
ஒடியா ஒரியா ஆவது போல தொடர்பு: காளி/காரி. அத்தி, ஆல் போல் ஒரு ஃபைகஸ் மரங்கள் (fig trees). புட்பசூனியம் எனப்படும் அத்தி ஆல் முதலிய மலரில்லா மரவகை. (சங். அக.). அத்தி வகைகளிலே வண்ணங்களால் பேருள்ள அத்திகள் உண்டு
(1) பச்சைஅத்தி பசலத்தி எனப்படுகிறது.
பசலத்தி pacal-atti
, n. < பசு-மை + அத்தி. 1. Falcate trumpet flower. See உதி¹, 2. 2. Wooly crispate trumpet flower. See இராப் பாலை.

(2)
உதும்பரம் என்ற வடமொழிப் பெயர் கொண்ட அத்தி சிவப்பானது. இது செவ்வத்தி.
உதும்பரம், n. < udumbara. Red-wooded fig. See அத்தி. (அக. நி.)

(3) காளத்தி அடர்ந்த காடுகளில் உள்ள ஒரு வகைக் காட்டத்தி.
காட்டத்தி kāṭṭatti
, n. < காடு + அத்தி. 1. Devil-fig. See பேயத்தி. (மலை.) 2. Gaub, m. tr., Diospyros embryopteris; மரவகை.

காளத்தி மரம்: இதன் தாவரவியற் பெயர் Diospyros melanoxylon - கருங்காலி, கருந்தும்பி என்றும் பெயர்கள் இன்று.

அல்லது, 
காளத்தி என்னும் இடப்பெயர் வரக் காரணம் :
Diospyros malabarica (synonym: Diospyros embryopteri) - வரிப்புலி போலக் கருங்கோடுகள்
இருப்பதால் இக் காளத்தி மரத்தைப் புலியத்தி என ஆங்கிலத்தில் அழைக்கின்றனர் - Tiger ebony (This name comes
from South East Asian languages).

In sum, the Purana suggestion of deriving KaaLatti from spider, cobra & elephant is fanciful:
(a) spider (cii - cilanti!!), 
(b) cobra (kaaLam = krushna 'sarpam or nalla pAmbu whose color is black. Cf. (i) nal > al 'night',
(ii) nalla malai 'black mountain' from which karum-peNNaa, now sanskritized as Krushna river flows)
(c) hasti (elephant due to its hand 'haath' in Hindi).

kaaLatti is black atti fig tree, which is either Diospyros_melanoxylon (a.k.a கருங்காலி, கருந்தும்பி)
or Diospyros malabarica (black striped ebony a.k.a. Tiger ebony).

N. Ganesan

 

seshadri sridharan

unread,
Jul 6, 2014, 2:36:18 AM7/6/14
to mintamil
2014-07-06 8:22 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
 
காய - காச பாவாணர் விளக்கத்தால் ஆகாயம்/ஆகாசம் என்ற பெயர்க் காரணம் தெரிகிறது. (காயா - காசா பூப்பெயர்)
"விண்ணென வரூஉங் காயப் பெயர்" (தொல். எழுத்து. 305). ஆகாயத்தில் இருக்கும் ஆ என்னும் முன்னொட்டுக்கு
பொருளேயில்லை என்கிறார் பாவாணர். 

எல்லாவற்றுக்கும் கருமைப் பொருளையே தூக்கிச் சுமந்தால் அது வேரியல் ஆய்வாக இருக்காது.  ஆகாய என்பதில் உள்ள காய > காய் என்ற சொல் ஒளிர்தல் பொருளில் தோன்றியது. நிலாக் காயுது, வெய்ய காயுது என்பன ஒளிர்தல் கருத்தில் வழங்குகின்றன என்பதை நோக்குக.

இந்த காய என்பதே காச ஆகி சமற்கிருதத்திலும் ஒளிப்பொருளிளேயே வழங்குகின்றது. 

That point, that váráńasii, which, as I have said, is situated between ájiṋá and sahasrára cakras, is bright and luminous. It is the true káshi. Káshi is derived from the Saḿskrta root verb kásh + al + striiyám + iniip. Káshi means “very luminous entity”. I think its meaning is crystal-clear.

by shrii shrii Ananda murthii on 22 December 1978, Kalikata, Published in: Ánanda Vacanámrtam Part 7, chapter : Where Is Varanasi

N. Ganesan

unread,
Jul 6, 2014, 2:44:05 AM7/6/14
to mint...@googlegroups.com

கருமை.இருட்டுக் கசமா யிருக்கிறது என்பது உலக வழக்கு.

     கயவாய் = கரிக்குருவி, எருமை.

     கயம் - காயம் = 1. கரிய காயா மலர்.

"காயா மலர்நிறவா"(திவ். பெரியாழ். 1 : 5 : 6)

     காயம் - காயா. "காயாம்பூ வண்ணனிவை கழறு மன்றே" 
     (கூர்மபு.
இராமனவதா.) 2. கரிய வானம்.

"விண்ணென வரூஉங் காயப்பெயர்"
(தொல். எழுத்து. 305)

     "காசமா யினவெல்லாங் கரந்து" (கம்பரா. மருத்து. 40).

     காயா - காசா = 1. காயா மலர்.

     "காசா கடன்மழை யனையானை" (கம்பரா. கங்கை. 53).

     2. எருமை (பிங்.).

     காசா - காசை = காயா மலர்.

     "காசைக் கருங்குழலார்" (பதினொ. ஆளு. திருவுலா, 180).

காசா - காசர

     காசா = எருமை. மேற்காண்க.

     காய் (ஒளிவீசு) என்னும் தென்சொல்லின் திரிபான காச் என்னும் 
வடசொல்லொடு ஆ என்னும் முன்னொட்டுச் சேர்த்து, ஆ-காச 
என்றமைத்து விளங்குவது, தெரிவது, வெற்றிட மாயிருப்பது என்று 
பொருட் காரணங் கூறி, வானத்தைக் குறிப்பர் வடவர். முன்னொட்டிற்குப் 
பொருளேயில்லை.

N. Ganesan

unread,
Jul 6, 2014, 2:52:01 AM7/6/14
to mint...@googlegroups.com, housto...@googlegroups.com, vall...@googlegroups.com, tiruva...@googlegroups.com, thami...@googlegroups.com


மோதி என்ற சொல்லுடன் தொடர்புடையது மோதகம். இனிமை/இனிப்பு பண்டம். ஆ முன்னொட்டுடன் ஆமோதக ஆகியுள்ளது. ஆமோதந- என்ற பொருளுக்கு நல்ல பொருத்தம் காதல், காதலி. ஏன் அழகியகாதலி ஆமோதநாம்பாள் ஆகிறாள் என அடுத்ததாகப் பார்ப்போம்.  ”கள்ளக் கம்பனை, எங்கள் பிரானை” என்னும் சுந்தரர் தேவாரமும், காளமேகத்தின் பாடலும் ஏன் சுடர்க்கொழுந்து என்னும் இலிங்கத்தை காதலியம்பாள் தழுவுகிறாள் என விளக்கும். பெண்ணாகடம் போலவே Flood Mythology சீகாழியின் தோணியப்பர் மனையாள் பெயரும் பாக்கணும். இப்படி ஒரு வெள்ளத் தொன்மக் கதை ஸ்ரீமத் பாகவதத்திலும் உண்டு. சத்யவிரதன் என்னும் தமிழ் மன்னன் மாத்திரம் பொதியம்லையின் மீதுமிஞ்சுகிறான், மற்ற உலகமெல்லாம் பிரளயத்தில் முழுகிவிடுகிறது. இறைவன் சுயம்பு. நல்லவேளையாக, கிடைத்துள்ள அப்பர் தேவாரத்தில் தமிழ்ப் பெயர் கிட்டியுள்ளது. சுடர்க்கொழுந்தீசன். ஒருவேளை,  அழிபட்ட அப்பர் தேவாரப் பாக்கள் சிக்கியிருந்தால் அழகியகாதலி எனும் பெயரும் பெற்றிருப்போம். 


மாக்கைக்கு இரங்கும் குருகும், வளர்சக்ர வாகப்புள்ளும்
தாக்கச் சரபம் குழைந்தது எவ்வாறு? சகதலத்தை
ஆக்கிப் பெருக்கித் திருஅறச் சாலையில் அன்னம்இட்டுக்
காக்கைக்கு ஒரு கொக்கின் கீழே இருக்கும் கருங்குயிலே!
 

எள்கல் இன்றி இமையவர் கோனை
                  ஈசனை வழிபாடு செய்வாள் போல்
         உள்ளத்து உள்கி உகந்து உமைநங்கை
                  வழிபடச் சென்று நின்றவா கண்டு
         வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
                  வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
         கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
                  காணக் கண் அடியேன் பெற்றவாறே! 

                                                                       சுந்தரர் தேவாரம்

A commentary done in 2006,

N. Ganesan

unread,
Jul 7, 2014, 10:30:22 AM7/7/14
to santhav...@googlegroups.com, mintamil, vallamai, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com
kaaLatti - 'black' fig tree, and the Tevaram temple
--------------------------------------------------

There is a famous Sivan temple in Andhra Pradesh state situated near Chennai. There are 80 inscriptions in tiru-kALatti out of which 79 are in Tamil and one in Telugu (ma. po. civajnAnam, tamizakattil piRamoziyin2ar). An important text in Telugu literature is translated into English (For the Lord of the animals; poems from the Telugu : the Kāḷahastīśvara śatakamu of Dhūrjaṭi, V. Narayanarav, H. Heifetz).

Looking at the naming of the forest and site as kALatti (as started in the book "uurum pErum" by Prof. R. P. Sethuppillai, UMadras), this name seems to come from the black atti (Indian fig) trees in that area. Compare atti trees that are classified using their color:
(1) Green atti trees - "pacalatti"
பசலத்தி pacal-atti
, n. < பசு-மை + அத்தி. 1. Falcate trumpet flower. See உதி¹, 2. 2. Wooly crispate trumpet flower. See இராப் பாலை.
(2) Red-wooded atti, [a.k.a Common fig, Cluster fig, Indian fig tree].
This is called uDumbara/udumbara tree in the Vedas, but its name
has not been explained correctly so far in 
(i) Przyluski, J. (1926) "Un ancien peuple du Penjab: Les Udumbura," Journal Asiatique 206: 25-36 and in (ii) F. Southworth, Linguistic Archaeology of South Asia (UPenn). Franklin Southworth says udumbara is from uttu + mara, where *uttu is date-palm tree! will tell about uDumbara/udumbara 'Cluster fig tree of the Veda next.

Looking at black atti fig trees, it can be either of these two atti trees:
(A)Diospyros melanoxylon - கருங்காலி, கருந்தும்பி
or,
(B)
காளத்தி என்னும் இடப்பெயர் வரக் காரணம் :
Diospyros malabarica (synonym: Diospyros embryopteris) - வரிப்புலி போலக் கருங்கோடுகள்
இருப்பதால் இக் காளத்தி மரத்தைப் புலியத்தி என ஆங்கிலத்தில் அழைக்கின்றனர் - Tiger ebony (This name comes
from South East Asian languages).

In sum, the Purana suggestion of deriving KaaLatti as SrikALahasti from spider, cobra & elephant is fanciful:
(a) spider (cii - cilanti!!), 
(b) cobra (kaaLam = krushna 'sarpam or nalla pAmbu whose color is black. Cf. (i) nal > al 'night',
(ii) nalla malai 'black mountain' from which karum-peNNaa, now sanskritized as Krushna river flows)
(c) hasti (elephant due to its hand 'haath' in Hindi).

kaaLatti is black atti fig tree, which is either Diospyros melanoxylon (a.k.a கருங்காலி, கருந்தும்பி)
or Diospyros Malabarica (black-striped ebony a.k.a. Tiger ebony).

N. Ganesan

Dev Raj

unread,
Jul 7, 2014, 3:27:09 PM7/7/14
to mint...@googlegroups.com
On Saturday, 5 July 2014 23:36:18 UTC-7, seshadri sridharan wrote:
எல்லாவற்றுக்கும் கருமைப் பொருளையே தூக்கிச் சுமந்தால் அது வேரியல் ஆய்வாக இருக்காது.  ஆகாய என்பதில் உள்ள காய > காய் என்ற சொல் ஒளிர்தல் பொருளில் தோன்றியது. நிலாக் காயுது, வெய்ய காயுது என்பன ஒளிர்தல் கருத்தில் வழங்குகின்றன என்பதை நோக்குக.
இந்த காய என்பதே காச ஆகி சமற்கிருதத்திலும் ஒளிப்பொருளிளேயே வழங்குகின்றது. 


சேச்சா அவர்களே,

காயக, காயக்லம, காயக்லேஶ , காயகல்ப, காயதண்ட, காயசிகித்ஸா, காயாரோஹண, காயாவரோஹண,
காயஸ்திதி, காயஶுத்தி போன்ற சொற்களிலுள்ள காயத்துக்கும் ’ஒளிர்தல்’ என்று பொருள்கொள்ள வேண்டுமா ?

சங்கதக் காயம், சமையல் [பெருங்]காயம், காயத்தில்[உடலில்] ஏற்படும் [வெட்டுக்]காயம் இவற்றுக்கும்
etymology சொல்லி விளக்கினால் நல்லது

அன்புடன்
தேவ் 

Dev Raj

unread,
Jul 7, 2014, 4:05:28 PM7/7/14
to mint...@googlegroups.com
சேச்சா ஜீ

மேலும் ஒரு சந்தேகம் -
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார்
கமன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்
                               [திருக்குற்றாலக் குறவஞ்சி]   

இதில் இடம்பெறும் காயசித்தி எது ?

ஸர்க்கார் ஜீ  இந்தக் காயசித்தி பற்றி
ஏதாவது கூறியுள்ளாரா ?

N. Ganesan

unread,
Jul 7, 2014, 9:13:13 PM7/7/14
to mint...@googlegroups.com, vallamai


On Monday, July 7, 2014 12:27:09 PM UTC-7, Dev Raj wrote:

காயக, காயக்லம, காயக்லேஶ , காயகல்ப, காயதண்ட, காயசிகித்ஸா, காயாரோஹண, காயாவரோஹண,
காயஸ்திதி, காயஶுத்தி போன்ற சொற்களிலுள்ள காயத்துக்கும் ’ஒளிர்தல்’ என்று பொருள்கொள்ள வேண்டுமா ?

இல்லை என நினைக்கிறேன். காய காய்த்தல் என்னும் வினையின் பெயர்ச்சொல்.
தாவரப்பொருள்களின் பெயரால் மனித வாழ்க்கையின் பயன்களை அழைத்திருக்கிறார்கள்.
குலை (உ-ம்: பனங்காய்களின் குலை)  குலம் என்ற சொல்லைத் தந்துள்ளது. இருக்குவேதத்திலேயே
உள்ள சொல் குலம்.

Germany's Cologne Sanskrit Lexicon:
kAya2 m. (%{ci} Pa1n2. 3-3 , 41) , the body Ka1tyS3r. Mn. &c. ; the trunk of a tree R. ; the body of a lute (the whole except the wires) L. ; assemblage , collection , multitude SaddhP. ; principal , capital Na1r. Br2ih. ; a house , habitation L. ; a butt , mark L. ; any object to be attained L. ; natural temperament L.

காய்க்கும் காய் என சொல்லோடு காய = உடல், projection,  வீடு என்ற பொருள்களுக்கு ஆகிவருகிறது.

நா. கணேசன்

seshadri sridharan

unread,
Jul 8, 2014, 1:52:48 AM7/8/14
to mintamil
2014-07-08 0:57 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Saturday, 5 July 2014 23:36:18 UTC-7, seshadri sridharan wrote:
எல்லாவற்றுக்கும் கருமைப் பொருளையே தூக்கிச் சுமந்தால் அது வேரியல் ஆய்வாக இருக்காது.  ஆகாய என்பதில் உள்ள காய > காய் என்ற சொல் ஒளிர்தல் பொருளில் தோன்றியது. நிலாக் காயுது, வெய்ய காயுது என்பன ஒளிர்தல் கருத்தில் வழங்குகின்றன என்பதை நோக்குக.
இந்த காய என்பதே காச ஆகி சமற்கிருதத்திலும் ஒளிப்பொருளிளேயே வழங்குகின்றது. 


சேச்சா அவர்களே,

காயக, காயக்லம, காயக்லேஶ , காயகல்ப, காயதண்ட, காயசிகித்ஸா, காயாரோஹண, காயாவரோஹண,
காயஸ்திதி, காயஶுத்தி போன்ற சொற்களிலுள்ள காயத்துக்கும் ’ஒளிர்தல்’ என்று பொருள்கொள்ள வேண்டுமா ?




ஆகாயம் என்பது ஒளிரும் வெளுத்த வானத்தைக் குறிப்பது. அதற்குத் தான் நான் காய என்பது ஒளிர்தல் என்ற வேர்பொருளை கூறியிருந்தேன்.   

 உடல் என்ற பொருளில் வரும் காய என்பது சமற்கிருதச் சொல் அதற்கு நான் வேர்பொருள் கூறவில்லை.

N. Ganesan

unread,
Jul 8, 2014, 8:23:02 AM7/8/14
to mint...@googlegroups.com, vallamai


On Monday, July 7, 2014 10:52:48 PM UTC-7, seshadri sridharan wrote:
2014-07-08 0:57 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Saturday, 5 July 2014 23:36:18 UTC-7, seshadri sridharan wrote:
எல்லாவற்றுக்கும் கருமைப் பொருளையே தூக்கிச் சுமந்தால் அது வேரியல் ஆய்வாக இருக்காது.  ஆகாய என்பதில் உள்ள காய > காய் என்ற சொல் ஒளிர்தல் பொருளில் தோன்றியது. நிலாக் காயுது, வெய்ய காயுது என்பன ஒளிர்தல் கருத்தில் வழங்குகின்றன என்பதை நோக்குக.
இந்த காய என்பதே காச ஆகி சமற்கிருதத்திலும் ஒளிப்பொருளிளேயே வழங்குகின்றது. 


சேச்சா அவர்களே,

காயக, காயக்லம, காயக்லேஶ , காயகல்ப, காயதண்ட, காயசிகித்ஸா, காயாரோஹண, காயாவரோஹண,
காயஸ்திதி, காயஶுத்தி போன்ற சொற்களிலுள்ள காயத்துக்கும் ’ஒளிர்தல்’ என்று பொருள்கொள்ள வேண்டுமா ?




ஆகாயம் என்பது ஒளிரும் வெளுத்த வானத்தைக் குறிப்பது. அதற்குத் தான் நான் காய என்பது ஒளிர்தல் என்ற வேர்பொருளை கூறியிருந்தேன்.   

ஆகாயம் என்பதும் வடசொல் தான். காயா மலர்ப் பொருளுடன் ஒப்பிடுகிறார் பாவாணர். காய்தல் என்னும் வினைச்சொல்லுடன்
ஒப்பிடுகிறார் பாவலரேறு ச. பாலசுந்தரனார்.
 

 உடல் என்ற பொருளில் வரும் காய என்பது சமற்கிருதச் சொல் அதற்கு நான் வேர்பொருள் கூறவில்லை.

குலம் (<குலை) என்று வரும் வடசொல் போல காய ‘உடல்’ குடும்பம், குலம் போன்றவற்றை மரத்துடன் ஒப்பிட்டு
வைத்த பெயராக தெரிகிறது. ஒரு குலைக் காய்கள் என்று பங்காளிகளை ஒப்பிடும் வழக்கு இன்றும் உள்ளது.
குலையுடன் தொடர்புள்ள குலம் போல, (மரம் தரும்) காய் போல குழந்தையின் உடலை குல மரம் காய்ப்பதாகக்
கொண்டிருக்கிறார்கள் போலும். காயம் ‘உடல்’ என்ற சொல் ஈரான், ஆப்கானிஸ்தான் மொழிகளில் காணோம்
என்பதும் இது த்ராவிடச்சொல் என்பதற்கு ஓர் சான்று.

கத்தியால் உடலில் ஏற்படும் காயம் = காய்+அம், இங்கு “காய்” என்னும் சொல் இருக்கிறது.
குதம்பைச் சித்தரின் பாடல் காய் = உடல் என்றிருக்கிறது:
’மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்பார்க்குத்
தேங்காய்ப் பால் ஏதுக்கடி குதம்பாய்’

மா + காய் = பெரிய உடலின் பாலையே உண்டு மகிழ்வாக இருப்பவர்க்கு இனிப்பான (தேம் பால்) பால்
வெளியுலகில் இருந்து எதற்கு?

ஆகாயம் = விடிகாலையில் தோன்றும் கருநீல வான் என்னும் பொருள் (ஒப்பு: காயா மலரின் கருநீல வண்ணம்)
காயம் = உடம்பு, இங்கே குலமாம் காய்த்தல் என்னும் பொருள்.

இரண்டுமே திராவிடச்சொற்கள் என்பது இரண்டுக்குமே ஈரான், ஆப்கான் மொழிகளில் ஆர்யச் சொற்களாய்
இல்லாததும் நோக்கலாம்.

நா. கணேசன்

 

N. Ganesan

unread,
Jul 8, 2014, 9:03:39 AM7/8/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


கத்தியால் உடலில் ஏற்படும் காயம் = காய்+அம், இங்கு “காய்” (= உடல் ‘body') என்னும் சொல் இருக்கிறது.
குதம்பைச் சித்தரின் பாடல் காய் = உடல் என்றிருக்கிறது:

காய் (குல விருட்சத்தின் காய் = உடல்). அத்துடன் -அம் விகுதி சேர்த்து wound (வெட்டுக்-காயம்) என்ற
பொருளை ஏற்படுத்தி விரிவாக்கியுளர். ஒப்பீடு: நீர் ‘water', ஆனால், நீர்+அம் = நீரம் ‘wetness' > ஈரம் என்றாவதுபோல்.
பொருள் விருத்தி அடைய புதிய சொற்களாய் தமிழ் விரிதலுக்கு காய் ‘உடல்’ (காய என்று வடமொழிக்கு கொடுத்தது),
காயம் ‘wound' என சொற்களின் வளர்ச்சி, பொருள்களுக்கு தனித்தனியாச் சொல்லாக்கம்

Dev Raj

unread,
Jul 9, 2014, 1:59:39 AM7/9/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Tuesday, 8 July 2014 05:23:02 UTC-7, N. Ganesan wrote:
ஆகாயம் = விடிகாலையில் தோன்றும் கருநீல வான் என்னும் பொருள் (ஒப்பு: காயா மலரின் கருநீல வண்ணம்)
காயம் = உடம்பு, இங்கே குலமாம் காய்த்தல் என்னும் பொருள்.
இரண்டுமே திராவிடச்சொற்கள் ..........

யகரம் சங்கதத்தில் இல்லாத எழுத்தில்லையே !
காயம் எனும் திராவிடச்சொல்லை ஏற்ற சங்கதம்
ஆகாயம் என்பதையும் ஏன் அப்படியே ஏற்கவில்லை ?

ஆகாயம் ஆகாஶம் என்றானதுபோல் காய ஏன் கா
ஆகவில்லை ?


தேவ் 
Reply all
Reply to author
Forward
0 new messages