--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
rnkantan
Ps: vaisampayana was the legendary disciple of vyasa who heard/listened to jaya 8800 verses and expanded it to 24000 stanzas of (mahaabharat) . people who recite vishnu sahashranaam and do yajur ved rites would hv come across vaisampaayana..
நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும் பேரா.அ.ராமசாமி எழுதிய நூல் இன்று வாசிக்க ஆரம்பித்தேன். முதல் அத்தியாயம் வாசித்து முடித்தேன்.//வரலாற்றை எழுத உதவும் சான்றுகளை மறுபரிசீலனை செய்வதும், மரபு நிலையில் பயன்படுத்தும் சான்றுகள் போதாமல் போகின்ற நிலையில் புதிய சான்றுகளைத் தேடுவதும் தவிர்க்க முடியாதனவாகின்றன// இதனை முக்கியக் கருத்தாகக் காண்கின்றேன். ஆய்வுலகில் பலர் ஒரு முடிவைமுடிவென்று முடிவு கட்டிவிட்டு மறு பரிசீலைக்கு தயாராக மறுப்பவர்களாக இருப்பதை விவாதங்களில் பார்க்கும் போது, இத்தகைய வாசகங்கள் புத்துணர்ச்சி அளிக்கின்றன.இலக்கியச் சான்றுகள் வரலாற்று ஆய்விற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்ற குறிப்பும் எவ்வகைக் காரணங்களால் அவை பொதுவாக நம்பகத்த்மைக்கு சவாலாகின்றன என்பதும் எதனைக் கருத்தில் கொண்டால் இலக்கியங்களைப் பயன்படுத்தலாம் என்பதும் சிறப்பாக இங்கே சொல்லப்பட்டுள்ளன.புதிய இலக்கிய வகைகள் தோன்றுவதன் காரணம், பழைய இலக்கிய வடிவம் புதிய உள்ளடக்கத்தை ஏற்றலுக்கான காரணம் ஆகியவையும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.தலபுராண இலக்கியங்கள் 16-18ம் நூற்றாண்டில் விரிவாகத் தோன்றியமையும் முக்கிய தலபுராண எழுத்தாளர் பட்டியலும் எனக்குப் பயனுள்ளதாக உள்ளது. தமிழ் மரபு அறக்கட்டளை தல புராண நூல்கள் மின்னூல் சேகரிப்பு என்ற திட்டத்தைத் தொடங்கி சில நூல்களை வலையேற்றியுள்ளோம். அந்த வகையில் இது ஆர்வமளிப்பதாக உள்ளது.முந்தைய இலக்கிய வடிவங்கள் நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் புதிய வடிவம் பெற்றமையும், உள்ளடக்கத்தில் சூழலுக்கேற்ற மாற்றம் பெற்றமையும் மிகச் சிறப்பாக இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளதாகக் கருதுகின்றேன்.நூலுக்கு அமைந்திருக்கும்முன்னுரை மனதைக் கவர்ந்தது. அறிஞர் தி.சு.நடராசன் அவர்களின் எழுத்து நடையும் உட்பொருளும் மிக அருமை.வாசிப்பு தொடர்கின்றது...சுபா
இந்த அத்தியாயம் நாயக்கர் காலத்தில் பொருளாதார நிலை, நில உரிமை, வேளாண்மை நிலை, வரவு பங்கீடு முறை என்பன பற்றிய தகவல்களைக் கொண்டதாக இருக்கின்றது. நாயக்கர் கால ஆட்சியில் பொருளாதாரம் தொடர்பான மிக விரிவான ஆய்வாக இந்தப் பகுதி அமைந்திருக்கின்றது.
நில உரிமை எனும் போது அதில் அரசன், பாளையக்காரன், மானியதாரர்கள், பின் உழவர்கள் என இவர்களுக்கும் நிலத்திற்கும் உள்ள உறவு பற்றிய சான்றுகள் சார்ந்த ஆய்வாக அமைந்திருக்கின்றது.
பண்ணை முறை எனும் பகுதி, ஒரு பண்ணையில் தொடர்புடையோராக உள்ளவர்களைப் பட்டியலிட்டு பின் அதில் அவர்களுக்குரிய செயல்பாடுகளையும் உரிமைகளையும் நன்கு விவரிக்கும் பகுதியாகவும் இருக்கின்றது. நில உரிமையாளன், பண்ணை விசாரிப்பான், கணக்குப்பிள்ளை, உழவர்கள் என்ற நான்கு பிரிவுகளுக்குமான செயலாடுகள் இதில் சொல்லப்படுகின்றன.
நிலத்தில் செய்யப்படும் விவசாயத்திலிருந்து வரும் வருவாய் பகிர்ந்து கொடுக்கப்பட்ட அளவு பற்றிய விபரங்கள் சொல்லப்படுகின்றன. பண்ணையாரைச் சார்ந்த உழவர்கள் பற்றிய விவரணை உள்ள பகுதியில் கொத்தடிமை முறை பற்றியும் சில குறிப்புக்கள் வருகின்றன. இணைக்கப்பட்டுள்ள அட்டவணைகள் வருமானம் எவ்வாறு பிரிக்கப்பட்டது என்பதற்குச் சான்றாகவும் அமைகின்றன.
வயலில் விவசாயம் செய்யப்படும் முறை பற்றி விளக்கும் பகுதி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. காரணம் இப்பகுதியில் படிப்படியாக நிலம் தயார் செய்யப்படும் விதம், அவற்றை விவரிக்கும் சொற்கள் பற்றிய குறிப்புக்கள், கருவிகள் என்பன படிப்படியாக விளக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக வருகின்ற நீர்ப்பாசனம் அதன் உரிமை ஆகிய விளக்கங்களும் அரசின் கட்டுப்பாட்டில் நீர்ப்பாசன மேலாண்மை இருந்தது என்பதை விளக்குகின்றது.
பள்ளு இலக்கியங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை இப்பகுதி எனக்கு ஏற்படுத்தியுள்ளது.
வாசிப்பு தொடரும்..
2016-06-05 12:36 GMT+02:00 Suba <ksuba...@gmail.com>:
நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும் பேரா.அ.ராமசாமி எழுதிய நூல் இன்று வாசிக்க ஆரம்பித்தேன். முதல் அத்தியாயம் வாசித்து முடித்தேன்.//வரலாற்றை எழுத உதவும் சான்றுகளை மறுபரிசீலனை செய்வதும், மரபு நிலையில் பயன்படுத்தும் சான்றுகள் போதாமல் போகின்ற நிலையில் புதிய சான்றுகளைத் தேடுவதும் தவிர்க்க முடியாதனவாகின்றன// இதனை முக்கியக் கருத்தாகக் காண்கின்றேன். ஆய்வுலகில் பலர் ஒரு முடிவைமுடிவென்று முடிவு கட்டிவிட்டு மறு பரிசீலைக்கு தயாராக மறுப்பவர்களாக இருப்பதை விவாதங்களில் பார்க்கும் போது, இத்தகைய வாசகங்கள் புத்துணர்ச்சி அளிக்கின்றன.இலக்கியச் சான்றுகள் வரலாற்று ஆய்விற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்ற குறிப்பும் எவ்வகைக் காரணங்களால் அவை பொதுவாக நம்பகத்த்மைக்கு சவாலாகின்றன என்பதும் எதனைக் கருத்தில் கொண்டால் இலக்கியங்களைப் பயன்படுத்தலாம் என்பதும் சிறப்பாக இங்கே சொல்லப்பட்டுள்ளன.புதிய இலக்கிய வகைகள் தோன்றுவதன் காரணம், பழைய இலக்கிய வடிவம் புதிய உள்ளடக்கத்தை ஏற்றலுக்கான காரணம் ஆகியவையும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.தலபுராண இலக்கியங்கள் 16-18ம் நூற்றாண்டில் விரிவாகத் தோன்றியமையும் முக்கிய தலபுராண எழுத்தாளர் பட்டியலும் எனக்குப் பயனுள்ளதாக உள்ளது. தமிழ் மரபு அறக்கட்டளை தல புராண நூல்கள் மின்னூல் சேகரிப்பு என்ற திட்டத்தைத் தொடங்கி சில நூல்களை வலையேற்றியுள்ளோம். அந்த வகையில் இது ஆர்வமளிப்பதாக உள்ளது.முந்தைய இலக்கிய வடிவங்கள் நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் புதிய வடிவம் பெற்றமையும், உள்ளடக்கத்தில் சூழலுக்கேற்ற மாற்றம் பெற்றமையும் மிகச் சிறப்பாக இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளதாகக் கருதுகின்றேன்.நூலுக்கு அமைந்திருக்கும்முன்னுரை மனதைக் கவர்ந்தது. அறிஞர் தி.சு.நடராசன் அவர்களின் எழுத்து நடையும் உட்பொருளும் மிக அருமை.வாசிப்பு தொடர்கின்றது...சுபா
நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும் பேரா.அ.ராமசாமி எழுதிய நூல் இன்று வாசிக்க ஆரம்பித்தேன். இரண்டாம் அத்தியாயம் இன்று மாலை வாசித்தேன்.
இந்த அத்தியாயம் நாயக்கர் காலத்தில் பொருளாதார நிலை, நில உரிமை, வேளாண்மை நிலை, வரவு பங்கீடு முறை என்பன பற்றிய தகவல்களைக் கொண்டதாக இருக்கின்றது. நாயக்கர் கால ஆட்சியில் பொருளாதாரம் தொடர்பான மிக விரிவான ஆய்வாக இந்தப் பகுதி அமைந்திருக்கின்றது.
நில உரிமை எனும் போது அதில் அரசன், பாளையக்காரன், மானியதாரர்கள், பின் உழவர்கள் என இவர்களுக்கும் நிலத்திற்கும் உள்ள உறவு பற்றிய சான்றுகள் சார்ந்த ஆய்வாக அமைந்திருக்கின்றது.
பண்ணை முறை எனும் பகுதி, ஒரு பண்ணையில் தொடர்புடையோராக உள்ளவர்களைப் பட்டியலிட்டு பின் அதில் அவர்களுக்குரிய செயல்பாடுகளையும் உரிமைகளையும் நன்கு விவரிக்கும் பகுதியாகவும் இருக்கின்றது. நில உரிமையாளன், பண்ணை விசாரிப்பான், கணக்குப்பிள்ளை, உழவர்கள் என்ற நான்கு பிரிவுகளுக்குமான செயலாடுகள் இதில் சொல்லப்படுகின்றன.
நிலத்தில் செய்யப்படும் விவசாயத்திலிருந்து வரும் வருவாய் பகிர்ந்து கொடுக்கப்பட்ட அளவு பற்றிய விபரங்கள் சொல்லப்படுகின்றன. பண்ணையாரைச் சார்ந்த உழவர்கள் பற்றிய விவரணை உள்ள பகுதியில் கொத்தடிமை முறை பற்றியும் சில குறிப்புக்கள் வருகின்றன. இணைக்கப்பட்டுள்ள அட்டவணைகள் வருமானம் எவ்வாறு பிரிக்கப்பட்டது என்பதற்குச் சான்றாகவும் அமைகின்றன.
வயலில் விவசாயம் செய்யப்படும் முறை பற்றி விளக்கும் பகுதி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. காரணம் இப்பகுதியில் படிப்படியாக நிலம் தயார் செய்யப்படும் விதம், அவற்றை விவரிக்கும் சொற்கள் பற்றிய குறிப்புக்கள், கருவிகள் என்பன படிப்படியாக விளக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக வருகின்ற நீர்ப்பாசனம் அதன் உரிமை ஆகிய விளக்கங்களும் அரசின் கட்டுப்பாட்டில் நீர்ப்பாசன மேலாண்மை இருந்தது என்பதை விளக்குகின்றது.
பள்ளு இலக்கியங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை இப்பகுதி எனக்கு ஏற்படுத்தியுள்ளது.
வாசிப்பு தொடரும்..
சுபா
சுபா,சு.கி.ஜெயகரன் அவர்களின் குமரி நில நீட்சி நூல் குறித்த தங்கள் பார்வை என்ன?
பழந்தமிழ் காவியமான சிலப்பதிகாரம் 'குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள' எனக் கூறுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் குமரிமலை குறித்தும், அதிலிருந்து தோன்றிய பஃறுளியாறு குறித்தும், குமரி ஆறு குறித்தும் செய்திகள் உள்ளன. இச்செய்திகள் எத்தனை உண்மையானவை? பல தமிழ் அறிஞர்கள் 'குமரிக்கண்டம்' என்று ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்ததாகவும் அங்கு தமிழ் நாகரிகம் ஒரு உயர்ந்த நிலையை அடைந்திருந்ததாகவும் கூறுகின்றனர். பிரம்மஞான சபையினர் 'லெமூரியா' எனகடலில் ஆழ்ந்து போன ஒரு நிலப்பரப்பு குறித்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இவர்கள் மூலம், இந்தியாவில் பரவிய லெமூரியாக் கோட்பாடும் குமரிக்கண்டமும் இணைந்த ஒரு சித்தாந்தமாகிற்று. புலவர் குழந்தை, அப்பாதுரை, இரா.மதிவாணன் போன்றவர்கள் குமரிக்கண்ட வரைபடங்களை உருவாக்கினர். இந்த பின்புலத்தில்தான் நிலவியல் ஆய்வாளரான சு.கி.ஜெயகரன் அவர்களின் 'குமரி நிலநீட்சி' எனும் நூலை காண வேண்டும். அவர் இக்கற்பனைகள் 'கவித்துவ சுதந்திரத்துடன்' அதீத தமிழ் பற்றினால் உருவாக்கப்பட்டவையென்பதுடன் இவற்றிற்கு அறிவியல் அடிப்படை எதுவும் இல்லையெனவும் காட்டுகிறார். எனில் கடல் கொண்ட குமரிக் கோடு என்பது வெறும் கற்பனைதானா? நிலவியல், ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி, இலக்கிய ஆதாரங்கள் மற்றும் தொல்மானுடவியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு யதார்த்த நிலைப்பாட்டினைத் தன் முடிவாகத் தருகிறார் ஜெயகரன். வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் தமிழகம்-இலங்கை கடற்கரைகளை ஒட்டியிருந்து பின்னர் கடலில் மூழ்கிய நிலப்பரப்புகளே குமரி எனும் நிலநீட்சி குறித்த மரபின் வித்தாகும் எனக்கருதும் ஜெயகரன் அவ்வாறு கடல் நீர்மட்ட உயர்வில் உயிர்தப்பியவர்களிடமிருந்து குமரி நிலநீட்சி குறித்த நினைவு இன்றும் நம்மிடம் நிலவுவதாகக் கூறுகிறார். குமரி மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்களான முட்டம் போன்ற இடங்களில் அண்மைக்கால நினைவுகளில் கூட கடல் கொண்ட நிலப்பரப்பு குறித்த விவரணைகள் நிலவுகின்றன. நிச்சயமாக எனில் தொல்பழம் மானுடக்குடியேற்ற எச்சங்கள் இன்றும் தென்னக ஆழ்கடலில் - நாம் கண்டடையக் காத்தபடி - துயில் கொண்டிருக்கக் கூடுமா? இனிவரும் நாட்களில் தென்னகக் கடல்களில் ஆழ்கடல் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டால் அது இம்மர்மங்களுக்கு விடை பகரக் கூடும்.
--
குமரிக் கண்டம் ஓர் புவியியல் பார்வை ; எனும் தலைப்பில் தொடர் எழுத விருப்பம். குமரிக்கண்ட ஆதரவாளர்கள் எனக்கு மறுமொழி கொடுத்து ஒரு பட்டிமன்றம் அமைத்தால் நன்றாக இருக்கும். பல உண்மைகள் வே ளிச்சத்திற்கு வரும். ஆனால் சில் இடங்களில் கூறியது கூறல் ஆகி விடும்.
சுமதி, ஜெயகரன் ஆகியோரின் நூல்களை நான் படித்தேனில்லை. என் நோக்கம் துறை சாரா பெருமக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழியில் எழுத வேண்டும் என்பதே. குறை காணின் குறிப்பிடுக. .
2016-06-14 12:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/nVY2mdvRu2A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
--
மதிப்பிற்குரிய பரமசிவம் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம்.தமிழின் தொன்மை குறித்தோ வளமை குறித்தோ இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. இந்தி மொழி வளர்ச்சிக்கு செலவிடப்படும் தொகை பல கோடிகள். தமிழுக்கு ஒதுக்கப்படும் சிறுதொகையும் செலவிடப் படுவதில்லை. நம் தலைவர்கள் அப்படி.குமரிக்கண்டம் பற்றி ஜி.எஸ் .ஐ . எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை. இது முழுக்க முழுக்க ஏ . எஸ் .ஐ . மற்றும் மாநிலத்தொல்லியல் துறை சார்ந்தது..நாம் சொல்லும் உண்மைகள் அறிவு சார்ந்தவையாக இருக்க வேண்டும்.....உணர்வு சார்ந்ததாக மட்டும் இருக்கக்கூடாது என்பதே என் எண்ணம். அப்போதுதான் அடுத்தவன் நம்மை மதிப்பான்.### இப்போது அறிவியல் பூர்வமாக குமரிக்கண்டத்தை மறுப்பவர்களுக்கு அதே அறிவியல் மூலம் குமரிக்கண்டம் தமிழர்களின் தொன்மையைக்குறிக்க ஆயிரக்கணக்காய் கூகிள் லிங்குகள் காட்ட இயலும்###தயவு செய்து காட்டுங்கள் .....நானும் தெரிந்து கொண்டு என் கருத்தி மாற்றி மகிழ்வேன். தற்போது நான் எழுதிவரும் "குமரிக்கண்டம்?" தொடர் கட்டுரையை ஓய்வு கிட்டும்போது பாருங்கள்.இதில் முன்பு கூறியதையே சில இடங்களில் தொடர்ச்சி கருதி கூறி வருகிறேன். மாற்றுக் கருத்தைத் தெரிவியுங்கள். மகிழ்வேன் . வணக்கம்.
2016-06-22 12:44 GMT+05:30 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>:
--
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
அனிச்ச மலர்கள் - சிறுகதை நூல் விமர்சனம்
+++++++++++++++++++++++++++++++++++++++++
அங்கும் இங்கும் நகர முடியாமல் நீண்ட பயணங்கள் அமைந்து விட்டால் புத்தகங்கள் வாசிப்பது தான் ஒரே வழி.
சான் பிரான்சிச்கோவிலிருந்து சிக்காகோ விமானப்பயணத்தில் தோழி தேமொழி எழுதிய அனிச்ச மலர்கள் நூல் பயண அலுப்பை மறக்கச் செய்தது. அன்றே இந்த நூலைப் பற்றி எனது கருத்தை எழுதி இருக்கலாம். ஆயினும் இரண்டு கதைகளை முழுதாக முடிக்காததால் அதனையும் முடித்து எழுத நினைத்திருந்தேன். இன்று வாசித்து முடித்ததால் இந்த நூல் பற்றிய என் கருத்தை பதிகின்றேன்.
தமிழர்கள் தம் தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்த பின்னர் வாழ்க்கையைப் புதிதாகத் தொடங்கும் காலகட்டத்தில் தம் தாயகத்துடனான ஒட்டுதல் அதிகமாக இருப்பது இயற்கை. ஆனால் படிப்படியாக மனம் புலம் பெயர்ந்த நாட்டில் அதன் சூழலுக்கேற்ப தம்மை மாற்றிக் கொண்டு அங்கு வாழ்க்கை நிலைபெற்றுப் போகும் போது அந்தச் சூழலுக்கேற்ப மனித மனம் புதிய விசயங்களை ஏற்றுக் கொள்ள பழகி விடுகின்றது. அத்தகைய புதிய விசயங்களைப் பதியும் ஆவணங்களாகவே புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் அமைந்து விடும் போது அது புதிய இலக்கிய வடிவமாக நமக்கு காட்சியளிக்கின்றது..
தமிழர் புலம் பெயர்ந்த நாடுகள் பல. அதில் அமெரிக்காவிற்கு இந்தியத் தமிழர்களின் வரவு என்பது பல ஆண்டுகளாக நிகழ்வது.
அமெரிக்க வாழ் தமிழர்களின் வாழ்க்கை நிலையை, உள்ளூர் சூழலை படம் பிடித்துக் காட்டும் வகையில்புதிய இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும். தமிழகத்து சூழலை மட்டும் விவரிக்கும் இலக்கியங்கள் மட்டுமே உலகத் தமிழர்களின் பார்வையை பிரதிபலிக்கும் இலக்கியங்களாகி விட முடியாது. புலம் பெயர்ந்த தமிழர்களின் இயல்பான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் பதிவுகளாக வெளிவரும் புனை கதைகள் அந்த விடுபட்ட இடங்களை நிரப்பும் வகை செய்ய இயலும். அந்த வகையில் இந்தச் சிறு கதைத் தொகுப்பும் அமைகின்றது.
இந்த சிறுகதைத் தொகுப்பு நூலில் ஓரிரு கதைகள் இந்தியச் சூழல் நிகழ்வுகளின் பிரதிபலிப்புக்களாக அமைந்திருக்கின்றன. பெரும்பாலானவை அமெரிக்க சூழலை கதைக் களமாகக் கொண்டிருக்கின்றன.
ஒரு வகையில் கதைகள் சாதாரண நிகழ்வுகளை பதிவது போல அமைவதால் ஆச்சரியப்பட வைக்கும் முடிவையோ திகைப்புக்குள்ளாக்கும் முடிவையோ தரவில்லை. ஓரிரு கதைகள் வாசித்து முடித்த பின்னரும் கதை மாந்தர்களைப் பற்றியும், கதைக் களத்தைப் பற்றியும் யோசிக்க வைக்கின்றன.
இதில் மிகச் சிறந்த கதைகளாக நான் பார்ப்பது நூலின் முதல் கதையான “சிலை அழுதது” என்ற தலைப்பிலான கதையும் “காசியில் பிடிச்சத விடனும்” என்ற தலைப்பிலான கதையும் எனலாம்.
இரண்டுமே வாசிக்கும் வாசகரின் மனதை வலிக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றன.
தேமொழி சின்ன சின்ன நுட்பமான விசயங்களையும் கதையின் ஓட்டத்தில் இணைத்து ஒவ்வொரு விசயங்களையும் வாசகர்கள் மனத்திறையில் காட்சிப்படுத்திப் பார்த்து கதைக்குள் பிரவேசித்து உலா வரும் வகையில் எழுதி இருக்கின்றார்.
மேலும் தொடர்ந்து இவர் சிறுகதைகளைப் படைக்க வேண்டும். ஏனையோர் சாதாரண விசயங்கள் என ஒதுக்கிச் செல்பனவற்றை ஒரு பொருளாக்கி, கதைக்களமாக்கி சாமான்யமான விசயங்களும் கூட முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமையக்கூடும் என்பதைக் காட்டும் திறனுடன் இப்படைப்பை வழங்கியிருக்கின்றார்.
நூலாசிரியர் முனைவர் தேமொழிக்கு என் பாராட்டுக்கள்!
suba
<font color="#666666" size="1" face="verda
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/nVY2mdvRu2A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
அன்பின் சுபா!
இன்றைக்குப் பெண்கள் வெளினாடுகளுக்கு வீட்டுவேலைக்கு அனுப்பப்படுவது , எந்தவகையில் சேர்க்கப்படலாம்?
அன்றைய கட்டிடங்கள் மட்டுமல்ல, இன்றைய கட்டிடங்களும் வேர்வைத் துளிகள் தான்.
நாம் குடிக்கும் தண்ணீருக்கும், நம் வீட்டில் 24 மணினேர விளக்குக்கும் யாரோ ஒருவர் வேலை வாங்கிக் கொண்டிருக்கிறோம்.நம் கழிவரயை அலம்ப யாரொ வரவேண்டியிருக்கிறது. நம் குழந்தைகளை வளர்க்க ஆயா தேவைப்படுகிறது.
நாமும் அடிமை வியாபாரிகள் தான் என்பது என் சொந்தக்கருத்து.
Gladiator நீன்கள் பார்த்திருப்பீர்கள். இல்லையேல் பார்த்துவிடுன்கள் பல இரவுகள் உங்க்களுக்குத்தூக்கம் வராது.
Gladiator is a 2000 British-American epic historical drama film directed by Ridley Scott, and starring Russell Crowe, Joaquin Phoenix, Connie Nielsen, Ralf Möller, Oliver Reed (in his final film role before his death), Djimon Hounsou, Derek Jacobi, John Shrapnel, and Richard Harris. Crowe portrays the fictional character, loyal Roman general Maximus Decimus Meridius, who is betrayed when Commodus, the ambitious son of Emperor Marcus Aurelius, murders his father and seizes the throne. Reduced to slavery, Maximus rises through the ranks of the gladiatorial arena to avenge the murders of his family and his emperor.-------பார்வதி
10 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 8:05 அன்று, Aravindan Neelakandan <aravindan.neelakandan@gmail.com> எழுதியது:
பூந்தமல்லி உழவர்கள் எழுச்சி போன்றவை பறையர் சமுதாய மக்களை ‘அடிமைகளாக’க் காட்டவில்லை என்பதை சுட்ட விரும்புகிறேன்.
பொதுவாக இந்திய சமுதாய பரிணாம வளர்ச்சியை மேற்கத்திய அலகுகளையும் புரிதல் சட்டகங்களையும் கொண்டு அறிதலென்பது நரி வாலால் பெருங்கடல் அளந்த கதைதான்.
பறையர் சமுதாய மக்கள் பூசகர்களாகவும் இருந்தனர்.
நிலவுடமை சாதி என கருதப்பட்ட வெள்ளாளர் சாதியினரில் குமரி மாவட்டத்தில் புளுக்க வெள்ளாளர் என்பவர்கள் தம்மைத்தாமே விற்றுக்கொண்டனர். இவர்கள் பின்னாட்களில் நிலமில்லா கூலி செய்யும் சமுதாயங்களில் கலந்தனர் என கேள்விப்பட்டிருக்கிறேன்.
உண்மையைச் சொன்னால் நம் ‘பேராசிரியர்கள்’ மார்க்ஸ் ஏங்கல்ஸ் (இருவருமே இனவாதிகள் ஐரோப்பியமைய சிந்தனையாளர்களென்பதும் பொதுவாக மார்க்சியர்களே சித்தாந்த அடிமைகளென்பதும் வேறு விசயம்) கடந்து சிந்திக்க வேண்டி உள்ளது. இவ்விதத்தில் பாபா சாகேப் அம்பேத்கர், காந்திஜி, தரம்பால், எம்.சி.ராஜா, மகாத்மா ஐயன் காளி போன்றவர்களின் அடிச்சுவட்டில் நம் வரலாற்றை நாம் நம் அறிதல் முறைகளின் மூலம் அணுக வேண்டிய அவசியமும் உள்ளது.
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்
++++++++++++++++++++++++
பகுதி 2
தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.
இந்த நூலில் இரண்டாவது கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் முனைவர்.கா.ராஜன் அவர்களின் “ இலங்கை, தென்னிந்தியவிற்கு இடையேயான கடல்கடந்த பண்பாட்டு உறவுகள்” என்ற கட்டுரை.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்தியக் கடற்கரை பகுதிகள் கடல்கடந்து பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டிருந்தன என்ற கருத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை இது.
கடல்வழித் தொடர்பால் இரு நாடுகளிலும் காணப்பெறும் மொழி, குகைக்கல்வெட்டுக்கள், நாணயங்கள், முத்திரைகள், மோதிரங்கள், பானையோடுகள் போன்றனவற்றின் ஒத்த அமைப்புக்கள் இரு நிலப்பகுதிகளுக்குமிடையே காணப்படும் பண்பாட்டு ஒற்றுமைகளை உறுதி செய்வதைக் காண்கின்றோம்.
ஒரே வகையிலான இரும்புக்கால ஈமச்சின்னங்களின் எச்சங்கள் இன்று அகழ்வாய்வுகளில் கிடைக்கின்றன.
கி.மு.3ம் நூ என சுட்டப்படும் மாங்குளம் கல்வெட்டுக்களில் காணப்படும் சாத்து, நிகமம் என்ற சொற்கள் வணிகக் குழுக்களைச்சுட்டுகின்றன. ஆக, வரலாற்று தொடக்ககாலத்திலேயே இத்தகைய வணிக குழுக்கள் இடம்பெயர்ந்து நீண்ட தூரம் சென்று வணிகம் செய்தன என அறியமுடிகின்றது.
பண்டைய வணிக வழிகளில் குவியல்களாகவும் உதிரியாகவும் கண்டெடுக்கப்பட்ட ரோமானிய நாணயங்கள் அயலகத்தார் தமிழகம் வந்து வணிகத்தில் ஈடுபட்டமைக்குச் சான்றாக அமைகின்றது.
இலங்கையில் பௌத்த மதத்தை அறிமுகப்படுத்திய அசோகர் காலத்தில் தான் பிராமி எழுத்துக்கள் இலங்கைக்கு அறிமுகமாகின என்ற கூற்றுக்கு மறுப்பாக அனுராதபுரத்தில் நிகழ்த்திய அகழ்வாய்வில் மகதப் பேரரசுக்கு முன்னரே அதாவது கி.மு 4-5 நூ வாக்கிலேயே பிராமி எழுத்துக்கள் இலங்கையில் இருந்தமையைத் தொல்லியல் ஆய்வுகள் காட்டுவதாக இக்கட்டுரை குறிப்பிடுகின்றது.
இன்று மீனவர்கள் என தமிழகத்தில் அறியப்படுவோர் பரதவர்கள் என்பவர்கள். நாவாய், அதாவது கப்பல் வடிவத்துடன் அதனை செலுத்தும் பரதவ சமூகத்து மக்களைச் சுட்டும் ”பரத” என்று பிராமி எழுத்துப் பொறித்த ஒரு பானையோடு இலங்கையில் துவாகலா என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கப்பலைச் செலுத்தும் மாலுமியாகக், கடலை ஆளும் வணிகராக இந்த பரதவ குல மக்கள் இருந்திருக்கின்றனர் என இரு நிலப்பகுதி ஆய்வுகளும் நல்ல சான்றுகளைத் தருகின்றன.
ஒரு கப்பல் தலைவன் ஒருவனின் இரு மகன்களான சேனா, கோத்திகா ஆகிய இருவரும் இலங்கையில் முதன் முதலில் தமிழ் ஆட்சியை நிறுவினர் (கி.மு 177-155) என மகாவம்சம் நூலின் வழி அறிய முடிகின்றது.
இப்படிப் பல ஆய்வுத்தகவல்களை இக்கட்டுரை வழங்குகின்றது. இலங்கை மட்டுமல்லாது ஏனைய கிழக்காசிய நாடுகளில் தொடர்ச்சியான ஆய்வுகள் செய்யப்படுமானால் தமிழகத்திற்கும் ஏனைய கிழக்காசிய நாடுகளுக்குமான வணிகத் தொடர்புகளும் தமிழின் ஆளுமையும் மேலும் புலப்பட வாய்ப்பு பெருகும் என்ற எண்ணத்தை இக்கட்டுரை வழங்குகின்றது.
-சுபா
பிரசுரிப்பாளர்: வாஸ்து வேத ஆய்வு நிறுவனம்
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/nVY2mdvRu2A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
மதிப்புக்குரிய நண்பர் அரவிந்தன் நீலகண்டன்,நலமா ?நாமிருவரும் விஞ்ஞானக் கட்டுரைகள் திண்ணையில் 2001 முதல் எழுதி வந்தது நமக்கும், நமது தமிழ்ச் சந்ததிகளுக்கும், பிறருக்கும் நிகழ்கால, எதிர்கால வரலாற்றுப் பதிவுகளாய்க் காலச் சிமிழ்களாய் [Time Capsules] புதைத்து வைக்கத்தான். யாராவது தோண்டி எடுக்க வருவார்.நான் கடவுளைப் பற்றி எழுதிய கட்டுரையை எப்போதாவது படித்தீர்களா ?இப்போது எங்கே பணிசெய்து வருகிறீர்கள் ? உங்கள் திடீர்மடல் பார்த்து மகிழ்ச்சி.சி. ஜெயபாரதன்
--
நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்++++++++++++++++++++++++
பகுதி 5
சேர மன்னன் நெடுஞ்சேரலாதனுக்கும் யவனருக்கும் நடைபெற்ற போர் பற்றியும் இக்கட்டுரை சொல்கின்றது. வட மேற்கிந்தியாவில் ஆண்ட இந்தோ-கிரேக்க மன்னன் ட்ரிமிட்டிஸ் சேரநாடு வரை படையெடுத்து வந்து வென்றதாகவும் பின்னர் காரவேலன் அந்த யவன மன்னரை தோற்கடித்தான் என்ற செய்தி இரண்டாம் பத்தில் இடம்பெறுவதையும் கட்டுரையாசிரியர் சுட்டுகின்றார்.சுவாரசியமான பல தகவல்கள் இக்கட்டுரையில் இருந்தாலும் சில கேள்விகளும் எழுகின்றன. வட இந்தியாவில் ஆண்டவர்கள் யவனர்கள் என சுட்டப்பட்டதன் காரணம் அவர்கள் பூர்வீகமா அல்லது அவர்கள் உண்மையில் கிரேக்கத்திலிருந்து வந்தவர்களா? இந்தோ-கிரேக்க மன்னன் ட்ரிமிட்டிஸ் வென்றான் எனும் போது எந்தப் போரில், எங்கு யாரைத் தோற்கடித்து வென்றான் என்ற விளக்கம் கட்டுரையில் முழுதாக வழங்கப்படவில்லை.
அன்றைய காலகட்டத்தில் சேரநாடும் இணைந்த வகையில் அகண்ட தமிழகமாக தென் இந்தியா இருந்திருக்கின்றது. சங்கப்பாடல்கள் இங்கெல்லாம் தமிழும் தமிழர் வாழ்வும் சிறப்புற்றிருந்தமையைப் பாடியிருக்கின்றனர். இன்றோ தமிழகத்தின் கடற்கரை நகரங்களில் வாழும் மீனவ மக்கள் ஏழைகளாக அறியப்படுகின்றார்கள். இது சரி செய்யப்பட வேண்டிய சமூகப் பிரச்சனையாக நன கருதுகின்றேன். - சுபா
இந்த தொடர் த.ம.க. வின் இலக்குகளை நோக்கி பீடுநடை போடுகிறது. மாணவர்களின் கவனத்தை ஈர்க்க மற்றவர்களும் உதவவேண்டும். நான் என்னால் இயன்றதை செய்கிறேன். இது என் தரப்பு.ஆங்கிலத்தில் 'எல்லாவற்றையும் உட்படுத்திய' என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உண்டு. அது என் இலக்கு.இன்னம்பூரான்
நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்
++++++++++++++++++++++++
பகுதி 6
தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.
இந்த நூலில் ஆறாவது கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் ச.செல்வராஜ் அவர்களின் “ தமிழகக்கடற்கரை துரைமுகப்பட்டினங்களும் அகழாய்வுகளும்” என்ற கட்டுரை.
இக்கட்டுரை பண்டைய தமிழகத்தோடு கிரேக்கர்கள் ஏற்படுத்திக் கொண்ட வாணிகத்தொடர்பை விளக்கும் வகையில் தொடங்குகின்றது.
கி.பி.1ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பெரிப்ளூஸ் ஆஃப் எரித்திரியன் சீ என்ற நூலிலும் பின்னர் பிளினி எழுதிய உயிரியல் நூலிலும், தாலமி எழுதிய பூகோள நூலிலும் தமிழகத்தின் கடல் வணிகம், துறைமுகங்கள் பற்றிய தகவல்கள் பல கிடைப்பதாக கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ஆக சங்க நூல்களில் காண்பது போலவே அயல் நாட்டவர் நூற்களிலும் இக்குறிப்புக்கள் வருகின்றன என்ற செய்தியை இதன் வழி அறிய முடிகின்றது.
சங்ககால துறை முகங்களாக கீழ்க்காணும் பட்டினங்களை இக்கட்டுரை பட்டியலிடுகின்றது.
இடைக்காலத் துறைமுகங்களாக கீழ்க்கண்பவை குறிப்பிடப்படுகின்றன
இந்த பட்டினங்களின் விளக்கங்களோடு அங்கு கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் குறிப்பிடப்படுவதும் இக்கட்டுரையின் சிறப்பாக அமைகின்றது.
சங்ககால துறைமுகங்கள் இன்று மறைந்தும் அழிந்தும் விட்டன. ஆனால் இந்தப் பகுதிகளில் விரிவான ஆய்வுகள் மென்மேலும் தொடரப்படும் போது பண்டைய கடல் வணிகம் தொடர்பான புதிய தகவல்கள் மேலும் கிடைக்க வாய்ப்புண்டு!
சுபா
நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்
++++++++++++++++++++++++
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/nVY2mdvRu2A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
மிக அருமையான பயனுள்ள நூல் குறித்த தகவல்களுக்கு நன்றி.இந்நூல் இணையத்தில் கோப்பாகக் கிடைக்கிறதா?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
"... பொதுவாக, ஐரோப்பா என்றால் பலருக்கும் மனதில் தோன்றுவது இங்கிலாந்து. ஆனால் ஸ்பெயின் உலக அளவில் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கத்தை நினைவு கூற பலருக்கு தோன்றுவதில்லை. இதற்குக் காரணம் பொதுவாகவே பலருக்கு உள்ள குறைந்த வாசிப்பு என்பதுதான். "
̀இது உண்மை தான்
--
நூல் விமர்சனம்
நூல்:கண்ணகி கோவிலும் வைகைப் பெருவெளியும்
ஆசிரியர்: பாவெல் பாரதி
பதிப்பகம்: கருத்து=பட்டறை, மதுரை
தமிழ் பண்பாட்டில் முக்கியத்துவம் பெறும் தொன்மை வழிபாட்டில் கண்ணகி வழிபாடு மிக முக்கியத்துவம் பெறும் ஒன்று. தாய் தெய்வ வழிபாட்டையே தங்கள் பண்டைய வழிபாட்டு நெறியாகக் கொண்டிருந்த தமிழ் மக்களின் வாழ்வியல் நெறியில் கொற்றவை, காளி, மற்றும் கேரளத்தில் முக்கியத்துவம் பெறும் பகவதி அம்மன், ஈழத்தில் முக்கியத்துவம் பெறும் கண்ணகை வழிபாடு என்பவை தாய்தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியைச் சான்று பகர்கின்றன. கண்ணகி இலக்கியத்தின் ஊடாக நமக்கு அறிமுகம் பெறுவது சிலப்பதிகாரத்தின் வழியாக என்றாலும்கூட, வாய்மொழி இலக்கியங்கள் என்ற அடிப்படையில் நாட்டார் இலக்கியங்களாகும் கண்ணகியின் கதை தமிழ் சமூகத்தில் ஊடுருவி ஆழப் புதைந்துள்ளது. கண்ணகியின் வாழ்க்கையின் வெவ்வேறு படிநிலைகளை விவரிக்கும் பல்வேறு நூல்கள் வந்திருக்கும் சூழலில், மதுரை மாநகரில் கொலையுண்ட தன் கணவனுக்காகப் பாண்டிய மன்னனின் அவையில் நீதி கேட்டு, பின்னர் தன் கோபம் குறையாது நகரத்தை எரித்து, அங்கிருந்து புறப்பட்டு 14 நாட்கள் கடந்து ஒரு குன்றுப் பகுதிக்கு வந்து கண்ணகி தன் உயிர் நீத்த பகுதி எது, என்பதை ஆராயும் வகையில் வெளிவந்திருக்கும் நூல் ஆய்வாளர் பாவெல் பாரதி எழுதியிருக்கும் "கண்ணகி கோவில் வைகை பெருவெளியும்".
நூலின் முதல் பகுதி, சிலப்பதிகாரத்தின் மதுரை காண்டம் கூறும் 'நெடுவேள் குன்றம்' என்பது எங்கு உள்ளது, என்பதை ஆராய்கின்றது. நூலாசிரியர் இத்துறையில் இதுகாறும் முன்னோடிகளாக ஆய்வுசெய்த தொ.மு. சி.ரகுநாதன், இராகவையங்கார், கே முத்தையா, புலவர் சி கோவிந்தராசன் போன்றோரது ஆய்வுகளை ஆய்ந்து அலசி தனது கருத்துக்களையும் சேர்த்து 'நெடுவேள் குன்றம்' எங்கு இருக்கின்றது என்பதை தனது களப்பணிகளின் வழியாகவும், நூலாய்வுகளின் துணையுடனும் உறுதி செய்கிறார்.
நூலின் இரண்டாவது பகுதியானது, முதல் பகுதியில் உறுதி செய்யப்பட்ட நெடுவேள் குன்றத்தில் உள்ள மங்கலாதேவி கோட்டத்தை ஆராய்கிறது. தேனி மாவட்டம், கூடலூர் அருகே வனப்பகுதியில் கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் எல்லையில் அமைந்திருக்கும் வேங்கை கானல் மலைமுகட்டில் உள்ள மங்கலதேவி கோட்டமே 'கண்ணகி கோட்டம்' என்பதை குறிப்பிட்டு, சிதிலமடைந்திருக்கும் இக்கோவிலில் உள்ள 9 கல்வெட்டுகளைப் பற்றிய தகவல்களைக் கூறுகிறது.
இந்தக் கோவிலில் இரண்டடி உயரம் உள்ள பெண் தெய்வச் சிலை ஒன்று கிடைத்ததாகவும், ஆனால் தற்சமயம் இந்தச் சிலை அங்கு இல்லை என்ற செய்தியையும் நூலாசிரியர் பதிகின்றார். இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் ஒரு செய்தியாகும்.
இக்கோயில் கல்வெட்டுக்கள் இராசராச சோழன் காலத்திலும், பின்னர் பாண்டிய மன்னன் ஸ்ரீ குலசேகர பாண்டியன் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட போது செதுக்கப்பட்ட கல்வெட்டுகளாகும். இந்தக் கல்வெட்டுகள் மங்கல மடந்தை கண்ணகியை 'ஸ்ரீ பூரணி' என்று குறிப்பிடுகின்றன என்பதைக் காணும்போது, வைதீக சமயத்தின் தாக்கம் இக்காலகட்டத்தில் வழக்கிலிருந்தமையினால் தமிழ் பெயரிலிருந்து சமஸ்கிருத பெயருக்குக் கண்ணகி தெய்வத்தின் பெயர் மாறிய நிலையைக் காண முடிகிறது.
தமிழகத்தில் தோன்றி நிலைபெற்ற கண்ணகி வழிபாடு இலங்கையில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் முக்கியத்துவம் பெறும் வழிபாடாக அமைந்திருக்கின்றது. இலங்கை மலையகப் பகுதிகளிலும் கண்ணகி கூத்து வழக்கிலுள்ளது. யாழ்ப்பாணத்தில் மட்டும் கண்ணகிக்கு 75 கோயில்களும், மட்டக்களப்பில் 30 கோயில்களும் உள்ளன என்பதை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். தமிழ் மரபு அறக்கட்டளையின் அண்மைய பதிவான தொல்லியல் அறிஞர் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுப் புலத்தின் தலைவர் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களது கண்ணகி தொன்மம் பற்றிய பேட்டியில், கண்ணகி வழிபாடு இலங்கையில் பெறுகின்ற முக்கியத்துவம் பற்றி அவரது விளக்கங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை.
நூலின் மூன்றாவது பகுதி முக்கியத்துவம் பெறுகிறது. இப்பகுதியில் நூலாசிரியர் மதுரையில் தொடங்கி, நெடுவேள் குன்றம் வரை காணப்படும் கண்ணகி தொன்மத்தின் தடயங்களை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு அவை ஒவ்வொன்றையும் விரிவாக விளக்குகின்றார். செல்லத்தம்மன் கோயில் கண்ணகி சிலை, கோவலன் கொலையுண்டதாகக் கருதப்படும் கோவலன் பொட்டல் மேடு, விராட்டிபத்து திரும்பிப்பார்த்த அம்மன் கோயில், குன்னுவரன்கோட்டை கண்ணகி பாலம், குள்ளப்புரம் மருத காளி கோயில், கம்பம் சாமுண்டிபுரம் சாமுண்டி அம்மன் கோயில் என ஒவ்வொன்றும் கண்ணகியின் துன்பத்திற்குச் சான்று பகரும் அடையாளங்களாக அமைந்திருப்பதை ஆசிரியரின் விரிவான விளக்கம் உறுதி செய்கிறது.
பழந்தமிழர்களின் தாய்த் தெய்வக் கோயில்களான அம்மன் கோயில்கள் மிகப் பெரும்பாலும் வடக்கு நோக்கியே அமைந்திருப்பதன் காரணம், தமிழகம் முப்புறமும் கடல் சூழ்ந்த நாடாகவே இருக்கும் சூழலில், எதிரிகளின் படைகள் வட திசையிலிருந்து மட்டுமே வர முடியும் என்பதால், காக்கும் தெய்வமாகிய கொற்றவை தன் மக்களைக் காக்க ஆயுதம் ஏந்தி வடதிசை நோக்கி நிற்கும் வகையில் கோயில்கள் கட்டப்பட்டன என்ற செய்தியை நூல் பதிகின்றது.
கண்ணகி, வைகையின் வடகரை ஓரமாகவே 14 நாட்கள் நடந்து சென்று தன் உயிரை நீத்தார் என்பதைக் கூறும் வகையில் வைகை நதியின் சிற்றூர்கள் ஒவ்வொன்றின் பெயர்களும் நூலில் குறிப்பிடப்படுகின்றன.
நூலின் நான்காம் பகுதி நாட்டார் கதை மரபில் கண்ணகி தொன்மம் வெவ்வேறு கதை படிமங்களாக உருமாற்றம் பெற்றிருக்கும் செய்தியைக் கூறுகிறது. இதே பகுதி கண்ணகிக்கு வடமொழி மூலத்தைக் கற்பிக்க 'திருமாவுண்ணி' என வலம்வரும் திரிபை பற்றியும், ஈழத்தில் கண்ணகி 'கண்ணகை அம்மன்' என்று அழைக்கப்படுகின்றார் என்பதையும் குறிப்பிடுகிறது. தமிழகத்தில் வழக்கிலுள்ள கண்ணகி தொன்மம் பற்றிய சில கதைகளை நூலாசிரியர் இந்த நூலில் இணைத்திருக்கிறார். நாட்டார் மரபில் உள்ள செய்திகள் நூல் வடிவில் இதில் ஆவணப்படுத்தப்பட்டிருப்பது பாராட்டுதற்குரியது.
நூலின் இறுதிப் பகுதியில் மதுரையிலிருந்து நெடுவேள் குன்றம் கண்ணகி கோயில் வரை கண்ணகி 14 நாட்கள் நடந்து சென்ற பாதையாக அறியப்படும் வைகை நதிக்கரை சிற்றூர்களை வரைபடத்தின் வழியாக ஆசிரியர் காட்டுகின்றார். இது வரவேற்கத்தக்க ஒரு முயற்சி.
ஆய்வுத் தரம்வாய்ந்த இந்த நூலில் நூலாசிரியர் சான்றுகளைக்குறிப்பிடும் நூலின் ஒவ்வொரு பகுதியிலும் சான்றுகளைக் குறிப்பிடும்போது ஆய்வில் தான் துணைக்குறிப்புக்குப் பயன்படுத்திய நூல்களில் பெயர்களைக் குறிப்பிட்டு , பக்கங்களையும் குறிப்பிட்டு, ஒவ்வொரு பக்கங்களிலும் பின்குறிப்பு (Footnote)சேர்த்திருந்தால் நூலுக்கு ஆய்வுத்தரம் மிகுந்து சிறப்புக் கூட்டி இருக்கும். அடுத்த பதிப்பில் நூலாசிரியர் இதனைக் கவனத்தில் கொள்வார் என எதிர்பார்க்கிறேன்.
மிகுந்த ஆய்வுக் கண்ணோட்டத்துடன் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு நூல் வடிவம் பெற்றிருக்கிறது. தமிழக தொல்லியல் அறிஞர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களின் முன்னுரை நூலுக்கு வழிகாட்டுகிறது. வைகைக்கரை நாகரீகம் தமிழர் நாகரிகத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொள்ளப்படும் இக்காலகட்டத்தில் கண்ணகி பயணித்த நெடுவழிப் பாதையை ஆராயும் இந்த நூல் ஒரு நல்வரவு. நூலாசிரியருக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
-முனைவர்.க.சுபாஷிணி
*கடாரம் - நூல் விமர்சனம்*
கிழக்காசிய நாடுகளின் பண்டைய வரலாறுகள் பற்றிய கலந்துரையாடல்களும் ஆய்வுகளும் மிகக் குறைவாக அங்கொன்றும் இங்கொன்றுமாகவே அமைகின்றன. தமிழ் வரலாற்று ஆய்வாளர்களின் கவனச்சூழலும் பெரும்பாலும் தமிழக நிலப்பரப்பு சார்ந்தவகையில் மைய ஆய்வுப் பொருளாக அமைந்து விடுவதும், சில விதிவிலக்குகளாக அவ்வப்போது இலங்கை பற்றிய பண்டைய வரலாற்றுச் செய்திகளை ஆராய்வதுமாகவே உள்ளது. இதனைத் தாண்டி அவ்வப்போது கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம், லாவோஸ், கம்போடியா, பர்மா அடங்கிய பகுதிகளில் கடந்த நூற்றாண்டுகளின் வரலாற்று நிகழ்ச்சிகளைப் பற்றிய கலந்துரையாடல்கள் மிக மிகக் குறைவாகத்தான் இருக்கின்றன.
ஐசிங் போன்ற பண்டைய சீன வணிகர்களின் குறிப்புக்களும், தாலாங்துவோ (Talang Tuo) போன்ற கல்வெடுக்களும், தற்காலத்தில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை ஆய்வுகளும், அண்மைய கால கம்போடிய அகழ்வாய்வுகளும் இத்துறைக்கு ஓரளவேனும் வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றன. மறைந்த மலேசிய மருத்துவர் மற்றும் வரலாற்று ஆய்வாளரான டாக்டர் ஜெயபாரதி அவர்கள் தொடர்ச்சியாக கிழக்காசிய நாடுகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு அவ்வப்போது நல்ல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதிக் கொண்டிருந்தார். இந்தோனேசியாவில் பிறந்தவர் என்பதோடு மலேசியச் சூழலில் இருந்தமையினால் அவரது ஆய்வுகள் கிழக்காசிய நாடுகளில் பண்டைய வரலாற்றுத் தகவல்களையும் ஆராயும் வகையில் அமைந்திருந்தது. இதைத் தவிர அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றுமென பேசப்பட்ட கிழக்காசிய நாடுகளின் பண்டைய வரலாற்று செய்திகளும் உள்ளூர் எழுத்தாளர்களின் கதைகளும் மட்டுமே இப்பகுதிகளிலும் பண்டைய காலத்தில் பலம் பொருந்திய பேரரசுகள் ஆட்சி செய்தன என்பதை நமக்கு அவ்வப்போது நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய முயற்சிகளில் ஒன்றாக எழுத்தாளர் மாயா என்ற மலர்விழி பாஸ்கரன் எழுதி 2017 ஆம் ஆண்டு வெளிவந்த கடாரம் என்ற நூல் அமைகின்றது.
700 பக்கங்கள்; 49 பகுதிகள்; கூடுதலாக ஒரு சிறப்புப் பகுதியாகச் சோழப்பேரரசன் இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி இணைக்கப்பட்டு, பண்டைய கிழக்காசியாவின் பெயர்கள் தமிழில் வழங்கப்பட்ட ஒரு வரைபடமும் இணைக்கப்பட்டு இந்த வரலாற்று நாவல் அமைந்திருக்கின்றது.
இன்றைய மலேசியச் சூழலில் மலாயாவின் பண்டைய சிறப்பு என்பது கிபி 15ஆம் நூற்றாண்டில் மலாக்காவில் எழுச்சி பெற்ற மலாய் அரசினை தொடங்கிய பரமேசுவரா அல்லது மன்னர் இஸ்கந்தர் ஷா ஆட்சிக் காலத்திலிருந்து தொடங்குவதாகவே பெரும்பாலும் பேசப்படுகின்றது என்பதோடு பள்ளிக்கூட பாட நூல்களிலும் பாடமாக உள்ளது. ஆயினும் இன்றைய மலேசியாவின் வடபகுதி கெடா மாநிலத்தில் ஆங்கிலேயக் காலனித்துவ ஆதிக்கத்தின் போது நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட சான்றுகளின் படியும், இன்றைய பேராக் மாநிலத்தில் செய்யப்பட்ட அகழாய்வுகளின் போது கண்டெடுக்கப்பட்ட வரலாற்று தொல்லியல் சான்றுகளின் அடிப்படையிலும் இப்பகுதிகளில் ஆட்சிசெய்த ஸ்ரீ விஜய, லங்காசுக்கா, கங்கா நெகாரா, போன்ற பண்டைய அரசுகள் பற்றிய செய்திகள் கிடைக்கத் தொடங்கின. இவை மட்டுமன்றி இன்றைய தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பல்லவ கிரந்த கல்வெட்டுக்களும், தமிழ் கல்வெட்டுக்களும் இங்கு முன்னர் ஆட்சிசெய்த பண்டைய அரசுகளின் வரலாற்றுச் செய்திகளை வழங்கும் முக்கிய சான்றுகளாக அமைந்திருக்கின்றன. இதுவரை கிடைக்கப்பட்ட கல்வெட்டுச் சான்றுகளும் கோயில் கட்டுமானங்களில் சிதைந்த சில பகுதிகளும் ஓரளவு இப்பகுதிகளின் வரலாற்றினை ஊகிக்கத்தக்கனவாக இருந்தாலும் அவை இன்றளவும் வரலார்றுச் சான்றுகளால் நிரப்பப்படவேண்டிய இடைவெளிகள் நிறையவே இருக்கின்றன என்பதை நமக்குக் காட்டிக் கொண்டே இருக்கின்றன. இந்த இடைவெளிகளை நிரப்புவதற்கு மேன்மேலும் பல அகழ்வாராய்ச்சிகள் கிழக்காசிய நாடுகளில் செய்யப்படவேண்டிய தேவை உள்ளது. எது எப்படியாகினும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும், தமிழ் நிலத்தை ஆட்சி செய்த பண்டைய பேரரசுகளுக்கும், கிழக்காசிய நாடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
மலர்விழி பாஸ்கரனின் இந்தக் கடாரம் என்ற நூல் மாமன்னன் ராஜேந்திர சோழனின் கடற்படை கடாரத்தை நோக்கி மேற்கொண்ட போர் சூழலை விளக்கும் ஒரு முயற்சி. மிக நுணுக்கமான செய்திகள் பலவற்றைச் சேகரித்து அவற்றைக் கற்பனையுடன் கலந்து இந்த நூலில் மிகச் சுவாரசியமாக இவர் வழங்கி இருக்கின்றார். ஸ்ரீவிஜய பேரரசு, மாமன்னன் முதலாம் ராஜராஜன் காலத்தில் சோழப் பேரரசுடன் நல்ல நட்புறவுடன் இருந்தது என்பதற்குச் சான்றாகத் தஞ்சாவூர் பெரிய கோயில் கல்வெட்டுக்கள் சான்று பகர்கின்றன. அந்த நட்பிற்கு இலக்கணமாக நாகையில் கட்டப்பட்ட புத்த விகாரை இருந்தது. ஆனால் நமது துர்பலன்; வணிகம் செய்ய வந்து நாகையில் காலூன்றிய டச்சுக்காரர்களால் அது கடந்த இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு சிதைக்கப்பட்டது.
வணிக நட்பு நிலைத்திருந்த மாமன்னன் ராஜராஜன் காலத்திலிருந்த அந்த நிலை மாறி, கடல் கடந்து போர் செய்யத்தூண்டிய பகை உணர்வு எதனால் ஏற்பட்டது என்பது வரலாற்று ஆய்வாளர்கள் சிந்தனையில் இருக்கும் ஒரு முக்கியக் கேள்வியே. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மிக முக்கியமான நிலப்பகுதியாக புவியியல் ரீதியில் அமைந்திருக்கும் பகுதிதான் இன்றைய மலேசியா மற்றும் இந்தோனேசியா என்று சொல்லப்படுகின்ற அன்றைய ஸ்ரீவிஜய அரசு. இந்த ஸ்ரீவிஜய அரசு என்பது பௌத்த மதம் தழுவிய மலாய் மன்னர்கள் ஆட்சி செய்த ஒரு பேரரசு. கிபி ஏழாம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி ராஜேந்திரனின் கடற்படை கடாரத்தைக் கைப்பற்றும் வரை இப்பகுதியில் நீண்டகாலம் ஆட்சிசெய்த சிறப்புப் பெற்றது இந்த ஸ்ரீவிஜய பேரரசு.
இந்த நாவலில் ஆசிரியரின் சொல்வளமும் வரலாற்றுப் பின்னணியுடன் கதையைக் கொண்டு செல்லும் பாங்கும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றது. இந்த நாவலில் குறிப்பிடப்படும் கப்பல்களில் தான் எத்தனை விதமான கப்பல்கள்..! தமிழர்களின் கடல் வணிகமும் கடலை ஆட்சி செய்யும் திறனும் கிரேக்கர்களும் ரோமானியர்களும் அரேபியர்களும் அறிந்து தங்கள் குறிப்புக்களில் எழுதி வைத்த ஒன்று தானே.
மலேசியாவின் வடக்குப் பகுதி மாநிலங்களான பெர்லிஸ், கெடா போன்ற மாநிலங்களும், தக்கோலம் என நூலாசிரியர் சுட்டிக்காட்டும் இன்றைய தாய்லாந்து பகுதிகளும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதி தான். இன்றும் அதில் மாற்றமில்லை. அடர்ந்த காடுகளும், அருவிகளும், நீரூற்றுகளும், நதிகளும் என இன்றும் கூட மலேசியாவின் இந்தப் பகுதி அதன் இயற்கை வளத்திற்கு சற்றும் குறையவில்லை. நாவலில் ஆங்காங்கே ஆசிரியர் இந்த இயற்கை எழிலை நம் கண்முன்னே சாட்சியாக கொண்டுவந்து காட்டுவதில் வெற்றி பெறுகின்றார்.
நாவலில் கூடுதலாக மலாய் பெண்களுக்கே உள்ள கூடுதல் சிறப்பு அம்சமான துணிவையும், வணிகத் தொழில் ஈடுபாட்டையும் தற்காப்புக் கலையில் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் கொண்டுசெல்வது மலேசிய மக்களின் இயல்பான பண்பாட்டினை அறிந்து இந்த நாவலை அவர் விவரித்திருப்பதை உறுதி செய்கிறது.
வரலாற்று நாவல்கள் எழுதும்போது வரலாற்றுச் சான்றுகளும் அனுபவங்களும் அந்த நாவல் உயிரோட்டத்துடன் அமைவதற்கு உறுதியளிக்கும். இந்த நாவல் உருவாக்கத்திற்காக நூலாசிரியர் மாயா விரிவான களப்பணியும் செய்திருக்கின்றார் என்பதை மலேசிய நாட்டில் பிறந்து வளர்ந்த என்னால் இந்த நாவலின் வழியே பயணிக்கும் போது உணரமுடிகின்றது.
சோழர்கள் சிறந்தவர்களா ஸ்ரீவிஜய மன்னர் பரம்பரையினர் சிறந்தவர்களா என்ற கேள்விக்கே இடமில்லாமல் நாவல் முழுவதும் நடுநிலையோடு கதைக்களம் நகர்கின்றது. ஒவ்வொரு பகுதியும் நிறைவுறும் போது அடுத்து என்ன, என்ற கேள்வி நம்மைத் துரத்துகிறது. இதுவே நாவலை விரைந்து வாசிக்க வைக்கின்றது. ஒரு த்ரில்லர் படம் பார்ப்பது போல ஒரு அனுபவம்.
பண்டைய தமிழக வரலாற்றை ஆராயும்போது தமிழர்களின் வணிகத்தையும் அந்த வணிகத்தைச் சாத்தியப்படுத்திய கடற்பயணங்களையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது. வணிக முயற்சிகளும் அரசும் அரசியலும் சேர்ந்தே இணைந்து பயணிப்பவை. இது பண்டைய காலத்திற்குப் பொருந்தும் ஒன்று மட்டுமல்ல. இன்றும் அரசுகளை பின்னிருந்து வழிநடத்துவது வணிகம் தானே. கடற்கொள்ளையர்கள் இப்பகுதியில் இருந்தனர், இப்பகுதியில் நிகழ்ந்த வணிகங்களில் பலத்த இடையூருகளைச் செய்தனர் என்ற மலாய் வரலாற்றுச் செய்திகளையும் உள்வாங்கிக் கொண்டு கதை சம்பவங்களில் கடற்கொள்ளையர்களைப் பற்றியும் புகுத்தத் தவரவில்லை.இந்த நாவல் சோழர் காலத்தில் வணிக அமைப்புகள் இயங்கிய தன்மையையும் அவற்றின் பலத்தையும், எந்தெந்த வகையில் அவை அரசுகளோடு இணைந்து செயல்பட்டன என்பதையும் வாசகர்களுக்கு மிக அழகாகக் காட்டிச் செல்கிறது. நாவலின் சிறப்பாக இதனை நான் காண்கின்றேன்.
நாவலினூடே பயணிக்கும்போது நான் பிறந்து வளர்ந்து கல்வி கற்று பணியாற்றிய மலேசியாவின் பல பகுதிகள் மனக்காட்சியில் வந்து செல்கின்றன; நேரில் சென்று பார்த்து வந்த தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளும் மனக்கண்ணில் விரிகின்றன. தனிப்பட்ட வகையில் எனக்கு ஸ்ரீ விஜயா லங்கா சுக்கா, கமெர் ஆகிய பேரரசுகளின் வரலாற்றில் ஆழமான விருப்பம் இருப்பதாலும் இந்த நூல் என் மனதைக் கவர்வதாக அமைகின்றது.
நூலாசிரியர் மாயா என்ற மலர்விழி பாஸ்கரன் கிழக்காசிய நாடுகளைப் பற்றிய ஆய்வுப் பணியில் தன்னை மேலும் தீவிரத்துடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். சிறந்த எழுத்தாளுமையும், சொல் வளமும், கற்பனைத் திறனும் இவருக்கு இருக்கின்ற பலம்.
தமிழக பல்கலைக்கழகங்களின் வரலாற்று புலனங்களின் ஆய்வு மாணவர்கள் கிழக்காசிய பண்டைய வரலாற்று ஆய்வின் பால் தங்கள் கவனத்தைச் செலுத்தி இந்த நாடுகளுடன் இணைந்த வகையிலான அகழாய்வுப் பணிகளையும் முன்னெடுக்க வேண்டும். இத்தகைய முயற்சிகள் தமிழ் மக்களுக்கும் தமிழ் நிலத்திற்கும் ஏனைய கிழக்காசிய நாடுகளுக்குமான நீண்ட நெடிய தொடர்புகளுக்குச் சான்று தந்து கிழக்காசிய நாடுகளின் பண்டைய வரலாற்றில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்கு நிச்சயம் உதவும்.
கங்கை கொண்ட சோழன் கடாரம் கொண்டான் என்று வரலாற்றில் சிறப்பிடம் பெற வைத்த வரலாற்று நிகழ்வினை தன் கற்பனைக்கூறுகளையும் சேர்த்து நாவலாக்கித் தந்திருக்கும் மலர்விழி பாஸ்கரனுக்குப் பாராடுக்கள்.
-சுபா
சில ஆண்டுகளுக்கு முன்னர் வால்காவிலிருந்து கங்கை வரை நூலை வாசித்தபோது மிகப்பெரிய பிரமிப்பு. எப்படி இந்த நூலாசிரியரால் இவ்வளவு செய்திகளை இவ்வளவு சுவாரசியமாகத் தர முடிகிறது என்ற வியப்பு அது. நான் மிக அண்மையில் வாசித்த நூல் அதே நூலாசிரியர் எழுதிய மற்றுமொரு நூல் `ஊர்சுற்றிப் புராணம்`. என்னுடைய ஆழ்மனதின் ஆர்வத்தோடு இணைந்து செல்வதால் இந்த நூலாசிரியரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்று தேடியதில் ஒரு நூல் கிடைத்தது.
ராகுல் சாங்கிருத்யாயன் - சாகித்ய அகாதமி வெளியீடாக பிரபாகர் மாச்வே என்பவரால் ஆங்கில மொழியில் எழுதப்பட்டு 1986ஆம் ஆண்டு வெளியீடு கண்டது இந்த நூல். இதனைத் தமிழாக்கம் செய்து திரு.வல்லிக்கண்ணன் தமிழ் வாசகர்களுக்காக வழங்கியிருக்கின்றார்.
இந்த நூலில் ஐந்து பகுதிகள் இருக்கின்றன. முதலில் வருவது ராகுல் சாங்கிருத்யாயன் பற்றிய ஒரு அறிமுகம். இது ஆரம்பம் தொடங்கி இறுதிவரை அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை மட்டும் மையப்படுத்தி அவரது சிறப்புத் தன்மையை வெளிப்படுத்தி விவரிக்கும் ஒரு பகுதி. இரண்டாம் பகுதி வாழ்க்கை என்ற தலைப்பில் பண்டிதர் ராகுல் சாங்கிருத்யாயனின் வாழ்க்கை குறிப்பாகவும் அவரது கல்வித் தேடல், அவர் செய்துகொண்ட பெயர் மாற்றங்கள் அப்போதைய நிகழ்வுகள், திருமணம், வாழ்க்கைத் துணை பற்றிய செய்திகள், மற்றும் விரிவான அவரது பயணங்கள், திபெத், ரஷ்யா, இலங்கை, ஆகிய நாடுகளில் அவர் நீண்ட காலம் தங்கியிருந்து பணியாற்றிய அல்லது ஈடுபாடு கொண்ட செயல்பாடுகளைப் பற்றி விவரிக்கும் பகுதி.
மூன்றாவதாக வருவது படைப்புகள் என்னும் பகுதி. ராகுல் சாங்கிருத்யாயன் ஒரு துறையில் மட்டுமே திறன் பெற்றவர் அல்ல. பல துறைகளில் ஈடுபாடு கொண்டு, அதிலும் குறிப்பாக, ஆழமான ஈடுபாடு கொண்டு வெவ்வேறு துறைகளைப் பற்றி தனது ஆய்வுகளையும் சுய அனுபவங்களையும் கருத்துக்களையும் அவர் நூலாக வடித்திருக்கிறார். அந்த வகையில் இந்தப் பகுதியில் அவரது எழுத்தாக்கத்தில் வெளிவந்த கற்பனை படைப்புகள், வாழ்க்கை வரலாறு - சுயசரிதை, பயண விவரிப்புகள் அல்லது பயணக்குறிப்புகள் என்ற வகையிலான செய்திகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இதற்கு அடுத்து வருவது நான்காவது பகுதி. இது அவரது இலக்கிய சாதனைகளை விவரிக்கும் ஒரு பகுதி. இன. மத பேதமற்று. அறிவு ஒன்றை மட்டுமே தேடுவதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் ராகுல் சாங்கிருத்தியாயன் என்கின்றார் நூலாசிரியர். இந்தப் பகுதியில் அவரது முக்கிய நண்பர்களைப் பற்றிய தகவல்களை நூலாசிரியர் வழங்குகின்றார். நூலாசிரியர் பிரபாகர் அவர்களும் ராகுல் சாங்கிருத்யாயனுக்கு உற்ற நண்பராக இருந்தவர் என்ற கருத்துக்களையும் நூலில் அறியமுடிகின்றது என்பதோடு ஒருசில இலக்கியப் பணிகளில் ராகுலுடன் நூலாசிரியர் பிரபாகர் இணைந்து செயலாற்றி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நூலின் இறுதிப் பகுதியில் இரண்டு குறிப்புகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதில் முதலாவது ராகுலின் வாழ்க்கையில் நிகழ்ந்த மிக முக்கிய நிகழ்ச்சிகளின் பட்டியல். இரண்டாவது பண்டிதர் ராகுல் சாங்கிருத்யாயன்னின் படைப்புகள். இந்தப் பட்டியலைப் பார்க்கும்போது வாசிக்கும் நமக்கே திகைப்பு ஏற்படுகின்றது. நாவல்கள், சிறுகதைகள், சுயசரிதை நூல்கள், வாழ்க்கை வரலாறு நூல்கள், பயணநூல்கள், கட்டுரைகள் என 74 இலக்கிய நூல்கள் இந்தப் பட்டியலில் இடம் பெறுகின்றன. இதற்கடுத்து, இதர நூல்கள் என்ற தொகுப்பில் அறிவியல், சமூகவியல், அரசியல், தத்துவம், சமயம், பயண நூல், அகராதி மற்றும் லெக்சிகன், இலக்கிய வரலாறு, நாட்டார் பாடல், ஆய்வு, வரலாறு, தொகுப்பு, மொழிபெயர்ப்பு, சமஸ்கிருத பதிப்பித்தல் அல்லது மொழிபெயர்ப்பு என 72 நூல்கள் பட்டியலில் இடம் பெறுகின்றன.
1893 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் அசாம்கார்க் மாவட்டத்திலுள்ள கனிலா சர்க்கார் பன்னூர் என்னும் கிராமத்தில் பிறந்தார். அவரது இளமைப் பருவம் துயரம் நிறைந்த அனுபவத்தையே அவருக்கு வழங்கியது. மிக இளம் வயதிலேயே தனது அன்னையையும் சகோதரியையும் இழந்தார். அவருக்கு மிகச் சிறிய வயதிலேயே திருமணம் நடைபெற்றிருக்கின்றது. ஆனால் யாருடன் நடைபெற்றது என்பதை அறியும் முன்னரே அவர் தனது பயணத்தைத் தொடங்கி விட்டதால் அந்தத் திருமணம் அவரது வாழ்க்கையில் முக்கிய இடம் பெறவில்லை.
ராகுலின் வாழ்க்கையில் 1915 முதல் 1922 வரையிலான காலகட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது. இளம் வயதிலேயே உலகத்தை அறிந்து கொள்ள வேண்டும் என ஓரிருமுறை வீட்டிலிருந்து வெளியேறி பிறகு மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்தவர் தனது தேடலுக்கு எல்லை இல்லை என்பதை உணர்ந்து கொண்டு இயல்பான வாழ்க்கையிலிருந்து புரட்சிகரமான ஒரு வாழ்க்கையை முன்னெடுத்த காலகட்டமிது.
ராகுல் தன் கைப்பட எழுதிய அவரது குறிப்புகள் 3000 பக்கங்களுக்கு மேலாகும். அவரது படைப்புகளும் குறிப்புகளும் இந்தி, சமஸ்கிருதம், பாலி, திபெத், போஜ்புரி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டவை. அவரது நூல்கள் இன்று தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் மற்றும் ரஷ்ய, பர்மிய மொழிகளிலும் வெளிவந்துள்ளன.ராகுல் சாங்கிருத்யாயனின் வாழ்க்கைக் குறிப்பை கூறும் இந்த நூலை எழுதிய நூலாசிரியர் பிரபாகர் 1948ஆம் ஆண்டு அலகாபாத் இந்தி சாகித்திய சம்மேளனத்தில் அவரோடு இணைந்து 16,000 வார்த்தைகள் கொண்ட அலுவலககாரியத்திற்கான சொற்களை விளக்கும் ஆங்கில-இந்தி அகராதி நூல்தயாரிப்பதில் பணியாற்றியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் சாங்கிருத்யாயனின் வாழ்க்கையில் பயணங்களே முக்கிய இடம் பெறுகின்றன. ஊர் ஊராகச் சென்று கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் அங்குள்ள சூழலுக்கேற்ப மக்களையும். ஊர்களின் சிறப்பையும் புரிந்துகொண்டு வாழ்க்கை பயணத்தைச் செலுத்த வேண்டும். புதிய செய்திகளைக் கற்கவேண்டும். புதிய அனுபவங்களைத் தேடிப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அவரது முழு வாழ்க்கையும் அமைந்தது. முழுமையான பள்ளிக் கல்வி என்பது அவரது வாழ்க்கையில் இடம்பெறவில்லை என்றாலும் அவரது தீவிர தேடுதலும் கற்றலும் அவர் ரஷ்யாவின் லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பையும், இலங்கையில் வித்யாலங்காரா பல்கலைக்கழகத்தில் பௌத்த தத்துவவியல் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பினையும் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது என்பது வியக்க வைக்கிறது.
தனது வாழ்க்கையில் அவர் நான்கு முறை திபெத் நாட்டிற்குச் சென்றிருக்கின்றார். இறுக்கமான கெடுபிடிகளை சந்தித்த போதும் பல்வேறு வகையில் தான் சந்தித்த தடைகளையெல்லாம் கடந்து அவரது ஒவ்வொரு பயணங்களும் அமைந்திருக்கின்றன.
ராகுல் சாங்கிருத்யாயன் பிறந்தபோது அவருக்கு இட்ட பெயர் கேதார்நாத் பாண்டே. தனது பத்தொன்பதாவது வயதில் அவர் ராகுல் பராசா மடத்தில் முறையாக சாதுவாகச் சேர்ந்தபோது அவரது பெயர் ராம் உதார் தாஸ் என மாற்றப்பட்டது. அந்த மடத்தின் வருங்கால வாரிசாகவும் தலைவராக வருவதற்கு வாய்ப்பிருந்தும், சடங்கு சம்பிரதாயங்களில் ஈடுபாடின்றி அவர் அங்கிருந்து வெளியேறினார். வெளியேறினார் என்று சொல்வதற்கு பதில் ஓடிப்போனார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
பயணச்சீட்டு இல்லாமலேயே பல பல ஊர்களுக்குப் பயணித்து, அங்குக் கிடைத்த பணிகளைச் செய்து கொண்டு, உலக அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு தெற்கு நோக்கி வந்து திருப்பதி, தமிழகத்தின் காஞ்சிபுரம் என பல ஊர்களுக்கு அவர் வந்து தங்கியிருந்தார். அவர் கற்றுக் கொண்ட ஏராளமான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று.
இடையில் ஒரு ஆசிரமத்தில் தங்கி பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இந்திய அரசின் தொல்பொருள் ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த ஊழியர் ஒருவருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டு புகைப்படக்கலை, மற்றும் பிராமி கல்வெட்டு எழுத்துக்களை வாசிப்பதிலும் தனது ஆர்வத்தை உருவாக்கிக்கொண்டார். அரசியலிலும் ஆர்வம் கொண்டு சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்த அரசியல் நிகழ்வுகளால் அவர் சிறைவாசம் அனுபவிக்கும் நிலையும் ஏற்பட்டது.
அதன் பின்னர் 1922ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராகுல், ஜில்லா காங்கிரஸ் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். படிப்படியாக ராகுலின் ஆர்வம் கம்யூனிசத்தின் புரட்சி கொள்கைகள் பக்கம் சென்று கொண்டிருந்தது. அக்காலகட்டத்தில் அவர் நேபாளத்திற்குச் சென்று வந்தார். நேபாளத்தில் இருந்த போது தனது பெயரை செவாங் என்று மாற்றிக்கொண்டார். புத்த மத பண்டிதர்கள் சன்னியாசிகள் ஆகியோரை பார்த்து பழகி நட்பு ஏற்பட்டது. தன்னை லாமாவின் சீடர் என அவர் அறிவித்துக் கொண்டார்.
திபெத்திற்கு சென்று திரும்பியபோது அவருக்குச் சில நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. சில நூல்களை அவர் காசு கொடுத்து வாங்கிக் கொண்டார். தன்னோடு 1619 திபெத்திய கையெழுத்துப்பிரதி நூல்களையும் கொண்டு வந்தார். தற்போது இந்த அனைத்து புத்தகங்களும், அவரது எழுத்துப் பிரதிகளும் பட்னா அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுலின் பயணங்கள் இந்திய உபகண்டத்தில் மட்டுமன்றி திபெத், நேபாளம், இலங்கை, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், கொரியா, மஞ்சூரியா, ஈரான், சிங்கப்பூர், மேலும் பல நாடுகள் என இடைவிடாத பயணமாக அமைந்தது. இன்று நாம் காணும் பயண போக்குவரத்து வசதிகள் இல்லாத அக்காலகட்டத்தில் ஒரு தனிமனிதர் எவ்வளவு ஈடுபாட்டுடன் இத்தகைய பயணங்களைச் செய்து இருக்கின்றார் என்று அறிந்து கொள்ளும் போது அவரது பயணத்தின் மீதான தீவிரமான ஆர்வம் நம்மைச் சிலிர்க்க வைக்கின்றது.
பிறகு கல்கத்தா சென்றபோது அங்கு மகாபோதி சங்கம் அவருக்கு உதவியது.
ஸ்ரீலங்காவில் வித்யாலங்கார் பரிவீனாவில் 1927ஆம் ஆண்டு மே மாதம்
இணைந்தார். அங்கு ஏராளமான புத்த மத நூல்களைக் கற்றார். வரலாறு பற்றிய தனது
அறிவை வளப்படுத்திக் கொண்டார். அதன்பிறகு படிப்படியாக அவருக்கு ஏற்பட்ட
நட்புகளின் வழியாக அவர் சோவியத் ரஷ்யாவுக்கு அழைக்கப்பட்டார். அங்கு
லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராக இணைந்தார்.
ராகுல் ரஷ்யாவில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இந்தோ திபெத்திய பிரிவின் செயலாளராகப் பணியாற்றிய லோலா (எலினா நார்வர்தோவ்னா ரோவ்ஸ்காயா) என்ற பெண்மணியைச் சந்தித்தார். அப்போது இந்தப் பெண்மணியார் திபெத்திய-சமஸ்கிருத அகராதி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். ராகுல் லோலாவுக்குச் சமஸ்கிருதம் கற்றுக் கொடுத்தார். லோலாவிடம் ரஷ்ய மொழி கற்றுக் கொண்டார். நட்பு காதலாக மலர்ந்தது. பிறகு திருமணத்தில் முடிந்தது. அவர்களுக்கு 1938ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ஒரு மகன் பிறந்தான். இகார் என அவனுக்குப் பெயர் சூட்டினார்கள்.
இடையில் மீண்டும் அவர் இந்தியா திரும்ப வேண்டியிருந்தது. பிறகு 1945 ஜூலையில் மீண்டும் ரஷ்யா சென்றபோது மனைவியையும் மகனையும் சந்தித்தார். அதற்குப் பின்னர் அவர் இந்தியா திரும்பிய பிறகு லோலாவையும் தன் மகனையும் மீண்டும் சந்திக்கவில்லை.
இந்தியாவிற்குத் திரும்பிய சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் இந்திய நேபாள பெண்மணியான டாக்டர்.கமலா பெரியார் என்பவரை மணந்தார். அவர்கள் மசூரியில் சில வருடங்கள் வாழ்க்கை நடத்தினர். ஜெயா என்ற மகளும் ஜேடா என்ற மகனும் இவர்களுக்குப் பிறந்தனர். பின்னர் இலங்கையில் பௌத்த சமய பேராசிரியராகப் பணி கிடைக்கப்பெற்று அங்கு சென்றார். அங்கிருந்த காலகட்டத்தில் அவருக்குப் பல வகையான நோய்கள் ஏற்பட்டு உடல் பாதிக்கப்பட்டு ஆரோக்கியம் சிதைந்த நிலையிலேயே இருந்தார்.
அவரது ரஷ்ய மனைவி லோலா மறுமணம்
செய்துகொள்ளவில்லை. ராகுல் சாங்கிருத்யாயன் இரண்டு ஆண்டுகாலம் ஞாபகமறதி
நோயினால் பீடிக்கப்பட்டு 1963 ஆம் ஆண்டு காலமானார். அவரது மறைவுக்குப்
முன்னர் ஞாபக மறதி நோயில் பீடிக்கப்பட்டிருந்த சமயத்தில் 1962 ஆம் ஆண்டு
ரஷ்யாவுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அப்போது தன் மனைவியைக்
கண்டபொழுது ராகுலின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடியது என அக்காட்சியை
நூலாசிரியர் விவரிக்கும்போது இப்பகுதியை வாசிக்கும் வாசகர்களாகிய நமக்கு
ஏற்படும் ஆழ்ந்த துயரத்தைத் தவிர்க்க முடியவில்லை.
தனது வாழ்வின் இறுதிக் கட்டமான இரண்டு வருட காலம் நினைவற்ற நிலையில் இருந்து ஏப்ரல் 14ம் தேதி,1963 ஆம் ஆண்டு டார்ஜிலிங்கில் அவர் காலமானார். அவர் தகனம் செய்யப்பட்ட இடத்தில் இப்போது ஒரு நினைவுச்சின்னம் வைக்கப்பட்டுள்ளது.
இந்த அசாத்தியமான மனிதர் 34 க்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்திருந்தார். பலமொழிகளில் ஆழ்ந்த திறனும் பெற்றிருந்தார். தனது ஓய்வு நேரங்களை வாசிப்பதிலும், எழுதுவதிலும், பயணங்களிலும் உலகை தெரிந்துகொள்வதிலுமே செலவிட்டார்.
ராகுல் சாங்கிருத்யாயன் `இந்திய பயணக்குறிப்புகளின் தந்தை` என இன்று சிறப்பித்து அழைக்கப்படுகின்றார். பிறப்பினால் இந்து சமயத்தைச் சார்ந்தவராக இருந்து, பின்னர் பௌத்த சமயத்தை ஏற்று தன்னை பௌத்தராக அடையாளப்படுத்திக் கொண்டவர் என்பதோடு மார்க்சிய சித்தாந்தத்திலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். இவரது சிறந்த இலக்கிய படைப்புகளைக் கௌரவிக்கும் வகையில் இந்திய அரசு அவருக்கு 1963 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதினை வழங்கிச் சிறப்பித்தது.
ராகுல் சாங்கிருத்யாயனின் நூல்களில் சிகரம் வைத்ததுபோல் அமைவது அவரது வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூல். இந்த நூல் ஒரு வரலாற்று நாவல் என்ற அடிப்படையில் எழுதப்பட்டது. இது ஆரியர்களின் இந்தியாவிற்கான புலம்பெயர்வை விபரிக்கும் ஒரு நாவலாகும். இது கிமு 6000 தொடங்கி 1942ஆம் ஆண்டு முடியும் வகையில் நடைபெறும் சம்பவங்களை கதைக்களமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. இந்த நூல் 1942 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்பு கொண்டது இந்த நூல்.
பல்வேறு விருதுகள் இவரைச் சிறப்பித்தன. காசி பண்டிதர் சபை இவருக்கு ` மகாபண்டிதா` என்ற விருதினை வழங்கியது. இலங்கையின் வித்யாலங்கார பரிவீணா இவருக்கு `திரிபீடகாச்சார்யா` என்ற பட்டத்தினை வழங்கியது. அலகாபாத் இந்தி சாகித்ய சம்மேளனம் இவருக்கு `சாகித்திய வாசஸ்பத்ஜி` என்ற சிறப்பினை வழங்கியது. பாகல்பூர் பல்கலைக்கழகமும், இலங்கை வித்யாலங்காரப் பல்கலைக்கழகமும் இவருக்கு டி.லிட் (ஹான்ர்ஸ்) பட்டம் வழங்கின. இந்திய அரசின் பத்மபூஷன் விருதினையும் பெற்றார்.
ராகுல் சாங்கிருத்யாயனின் வாழ்க்கை வரலாற்றினை விவரிக்கும் இந்த நூல் தேடலையும் பயணத்தையுமே வாழ்க்கையாகக் கொண்ட ஒரு மனிதரை நமக்கு அறிமுகப்படுத்துகின்றது. ` நாம் கற்றது கைமண்ணளவு` என்பதை ஆணி அடித்தார் போல நம் சிந்தனையில் ராகுல் சாங்கிருத்யாயனின் ஒவ்வொரு செயல்பாடுகளும் நிரூபித்துச் செல்கின்றன. வாசிக்கும்போதே ஆர்வம் தொற்றிக் கொள்ளக் கூடிய வாழ்க்கை வரலாறு நூல் இது. வாசித்து இந்த அசாதாரண மனிதரை அறிந்து கொண்ட அனுபவத்தைப் பெற்றதில் அகமகிழ்கின்றேன்.
26.3.2020
தமிழக வண்ணார் - வரலாறும் வழக்காறுகளும்
நூல் விமர்சனம் - முனைவர்.க.சுபாஷிணி
(பகுதி 1)
மாதப் பூப்பின் போது வடியும் குருதியைத் தடுத்து நிறுத்த பழைய துணிகளைப் பயன்படுத்தும் வழக்கம் முன்பிருந்தது. துணிகளைத் துவைத்து மீண்டும் பயன்படுத்தி வந்தனர். பூப்புக் குருதி கரையும் துர்நாற்றமும் கொண்ட துணிகளையும் அப்போது உடுத்தியிருந்த சேலைகளையும் பொட்டலமாகக் கட்டி வீட்டின் கொல்லை பகுதியில் வைத்து விடுவர். ஊர்ச்சோறு எடுக்க வரும்போது இச்செய்தி வண்ணாரப் பெண்ணிடம் தெரிவிக்கப்படும். அவர் மறுநாள் வந்து அவற்றை எடுத்துச் செல்வார். வீட்டுக்காரப் பெண் குச்சியால் எடுக்கும் துணிகளை அவர் சுமந்து செல்ல வேண்டிய அவலநிலை. `மூட்டு துணி` என்று தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் `தீட்டுத்துணி`, `தீண்டல் துணி` என்று தென் மாவட்டங்களிலும் அழைக்கப்பட்ட துணியை வெளுத்துத்தரும் பணி என்பது வண்ணார் மீது திணிக்கப்பட்ட கொடுமையான பணியாகும். சானிடரி நாப்கின் அறிமுகம் இக்கொடுமையில் இருந்து மக்களை விடுவித்துள்ளது என்றாலும், சில கிராமங்களில் இக்கொடுமை தொடரத்தான் செய்கிறது.
- திரு.ஆ.சிவசுப்பிரமணியன், (பக் 47)
நாடோடிகளாக, வேட்டையாடும் சமூகமாக இருந்து, பின்னர் படிப்படியாகக் குழுக்களாக உருவாகி, விவசாயம் கற்று ஓரிடத்தில் நிலைபெற்று, கிராமம், நகரம், நாடு என்ற நீண்ட வளர்ச்சியைக் கடந்து வந்துள்ளது இந்த மனிதகுலம். காலத்துக்குக் காலம் வாழ்க்கை அனுபவங்களைக் கற்று தன் அறியாமையிலிருந்தும், தவறுகளிலிருந்தும், தன்னைப் படிப்படியாக உயர்த்திக் கொண்டே வருகிறது இந்த மனிதகுலம். இந்த படிப்படியான கற்றலே தொழில்நுட்ப வளர்ச்சி என்றும் அறிவியல் வளர்ச்சி என்றும் சமூக நீதி என்றும் சமூக சட்ட திட்டங்கள் என்றும் தனி மனித உரிமை என்றும் பொது மனித வாழ்க்கைக்கான நெறிகளாக நமக்கு வழிகாட்டிகளாக அமைகின்றன. இத்தனை மாற்றங்கள் வந்துவிட்ட இந்தக் காலகட்டத்திலும் கூட மனிதக்குலத்துக்குப் பொருந்தாத சாதிப்பகுபாடு என்ற ஒரு விஷயத்திலிருந்து தமிழினம் இன்னும் விடுபடாமல் இருப்பது தமிழினத்தின் அவலம்தான். தனி மனித உரிமையை ஏற்றுக்கொண்டு தொழில்ரீதியான மனித பாகுபாட்டைக் கடந்து ஏனைய உலக இனங்கள் சமூக சிந்தனைத் தளத்தில் சுதந்திரம் அடைந்து விட்டன, நாகரீகம் பெற்றுவிட்டன. ஆனால் உலகின் ஏனைய இனங்களிலிருந்து மாறுபட்டு, மனிதருக்குள் தொழில்ரீதியாக சாதியை வலியுறுத்தி உயர்வு தாழ்வைக் கட்டமைக்கும் பண்பாட்டைப் பிடித்துக்கொண்டு இருப்பதாலேயே இந்தியச் சமூகம் உலக அளவில் பல படிநிலைகளில் சரிந்து கீழே இருக்கின்றது, மனித உரிமை தளத்தில்.
பண்பாட்டுத் தளம், மக்கள் வரலாறு, மானுடவியல், சமூகவியல், வரலாறு என்று பன்முகத் தன்மையில் தனது ஆய்வினைத் தொடர்ந்து நிகழ்த்தி கொண்டும், அந்த ஆய்வுகளின் வழி தான் அறிந்த செய்திகளை நூலாக்கித் தருவதிலும் குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட்டு வருபவர் திரு ஆ.சிவசுப்பிரமணியன். இவரது நூல்கள் தமிழகத்தின் பண்பாட்டுத் தளத்தினை அறிந்துகொள்ள ஆய்வாளர்களுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் உதவுகின்றன. அந்த வகையில் திரு.ஆ.சிவசுப்பிரமணியன் எழுதி, 2014 ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்த நூல் `தமிழக வண்ணார் வரலாறும் வழக்காறுகளும்`.
முதலில் நூலின் அமைப்பைப் பற்றிப் பார்ப்போம். நூலில் ஒன்பு கட்டுரைகள் வண்ணார் என்ற சமூகத்தினரின் பல்வேறு விஷயங்களைப் பேசுகின்றன. இதற்குத் துணையாகச் சில பின்னிணைப்புகள் நூலில் இடம்பெறுகின்றன. தமிழ்ச்சூழலில் சாதிக் கட்டமைப்பு வரையறையில் வண்ணார் சமூகத்தினர் எந்த வகையில் அடங்குகின்றனர் என்பதைப்பற்றி இந்த முதல் ஒன்பது கட்டுரைகளும் விளக்குகின்றன. தமிழ்ச்சூழலில் உயர் சாதி மற்றும் ஆதிக்க சாதி என்ற இரண்டு பெரும் பிரிவுகளுக்குள் வண்ணார் சமூகத்தினர் எந்த வகையில் இடம்பெறுகின்றனர் என்பதையும், ஒடுக்கப்பட்ட அல்லது தலித் என்று அடையாளப்படுத்தப்படும் சமூகத்தினர் சூழலில் வண்ணார் சமூகத்தினர் எவ்வாறு இடம்பெறுகின்றனர் என்பதையும் துல்லியமாக எளிய முறையில், அதே வேளை சான்றாதாரங்களுடன் இந்தக் கட்டுரைகள் வாசிப்போருக்குப் புரிதலை ஏற்படுத்துகின்றன.
சங்க இலக்கியங்களில் வண்ணார் தொழில் மற்றும் அத்தொழிலுக்குத் தொடர்புடைய தொழில்நுட்பமாகிய உவர் மண் சேகரித்தல், துணி வெளுத்தல் போன்ற பல்வேறு தொழில்முறை செய்திகள் எவ்வகையில் குறிப்பிடப்படுகின்றன என்பதை ஆசிரியர் இலக்கியச் சான்றுகளுடன் விவரிக்கின்றார். சங்ககாலத்தில் இருந்த தொழில்முறை சிறப்பு அதாவது skill-based specialization என்ற நிலையிலிருந்து மாறி படிப்படியாக வண்ணார் சமூகத்தவர் `அடிமைகள்' என்ற கீழ் நிலைக்குத் தள்ளப்பட்ட அவலச்செய்தியை இந்த கட்டுரைகள் நமக்கு விளக்குகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் கரிசூழ்ந்தமங்கலம் என்ற கிராமத்தில் உள்ள கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்று கோவிலுக்குக் கொடையாக வண்ணார்களை அடிமைகளாக வழங்கிய செய்திகளையும் பதிகின்றது.
வண்ணார்களில் பெரும்பாலானோர் சமூகத்தில் மிகத் தாழ்ந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தாலும் இச்சமூகத்தினர் சிலர் நிலவுடைமையாளர்களாக இருந்தார்கள் என்பதைக் குறிப்பிடக்கூடிய கல்வெட்டுகளும் உள்ளன என்பதை நூலில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளின் வழி அறிய முடிகின்றது. இச்செய்திகள் வண்ணார்கள் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்றும், கோவில் திருப்பணியில் பங்கு கொண்டார்கள் என்ற செய்தியையும் குறிப்பிடுகின்றன. அந்த வகையில் குறிப்பிடத்தக்க ஒரு கல்வெட்டாக திருத்துறைப்பூண்டி வட்டம், வடகாடு கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோவிலில் உள்ள கி.பி.12 அல்லது 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று இக்கோயிலுக்குப் பள்ளர், பறையர், வண்ணார் ஆகிய சமூகத்தவர்கள் நிலக்கொடை வழங்கியுள்ளார்கள் என்பதைக் குறிப்பிடுகிறது.
இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக வண்ணார் சமூகத்தவர்களில் ஒருசிலர் பொருளாதார மேம்பாட்டுடன் இருந்தாலும்கூட பொதுவாகவே, வண்ணார் சமூகத்தவர் தமிழ்ச்சூழலில் தாழ்த்தப்பட்டு, உயர் குடிகளுக்கு ஒருவகையான அடிமைகளாகவே பார்க்கப்பட்டனர் என்பதை நூல் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்துகின்றது.
நமது பண்பாட்டுச் சூழலில் சில செய்திகள் அதன் ஆழமான உட்பொருளை உணர்ந்து கொள்ளும் போது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
`ஊர் சோறு எடுத்தல்`. ஒரு நாள் முழுதும் ஆற்றங்கரையில் அல்லது படித்துறையில் துணிகளைத் துவைத்து, வெள்ளாவி வைத்து, தூய்மைப்படுத்தி, காயவைத்து ஊர் மக்களுக்கு அவர்கள் உடை அணிந்து வாழ உதவுகின்ற வண்ணார்களுக்கு ஊர் மக்களே வழங்குகின்ற உணவு `ஊர் சோறு எடுத்தல்` என்று குறிப்பிடப்படுகின்றது. வெளிப்படையாகப் பார்க்கும்போது இது ஒரு மனிதாபிமான செயல் தானே என்று நினைக்க வைக்கும் இச்செயலுக்குப் பின் இருக்கும் மிகப்பெரிய சமூக அநீதி கொடியது, அசிங்கமானது. அதனை மிகத் துல்லியமாக நூலாசிரியர் நூலில் உள்ள கட்டுரைகளின் வழி விளக்குகின்றார்.
நாள்தோறும் மாலையில் ஊரில் வீடு வீடாகச் சென்று சோறும் குழம்பும் இவர்கள் பெற்றுக் கொள்வார்கள். அன்றைக்கு இரவு சாப்பிட்டது போக மிஞ்சிய உணவை நீர் ஊற்றி வைத்து தங்களின் வளர்ப்புப் பிராணிகளான கழுதை, நாய், ஆடு போன்றவற்றுக்கு இந்த உணவைக் கொடுத்து விடுவார்கள். ஆனால் இப்படி ஒரு ஊர்ச்சோறு எடுக்கச் செல்லும்போது வீட்டுக்கார மனிதர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் கையைக் கழுவாமல் எச்சில் கையாலேயே சோறு எடுத்துப் போடுவதுண்டு. சிலர் குழந்தைகள் அல்லது வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டு மீதம் வைத்த உணவையும் கலந்து போட்டு விடுவர். பலவேளைகளில் திட்டிக்கொண்டே உணவு வழங்குவர். விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூரில் உள்ள கொங்கணம் என்ற கிராமத்தில் நிலக்கிழார் ஒருவரிடம் ஊர் சோறு வாங்க சென்றபோது குழம்பு கேட்டதற்காக வாயிலிருந்த வெற்றிலைச் சாற்றை சோற்றில் துப்பி, `இந்தக் குழம்பை வைத்துக்கொள்` என்று அனுப்பிய களப்பணியில் சேகரித்த அவலச் செய்தியையும் நூலில் காணமுடிகின்றது. இத்தகைய அவமானங்கள் நிகழ்ந்தாலும், பலவேளைகளில் `ஊர் சோறு` எடுப்பதை வண்ணார் சமூகத்தவரால் தவிர்க்க முடியாத சூழலும் நிகழ்ந்திருக்கின்றது. ஊர் சோறு எடுக்கும் வரை அவர்கள் அடிமைகள் என்பதை உறுதிப்படுத்தும் எழுதப்படாத பொதுப்போக்கு இயங்கிக் கொண்டிருப்பதை ஆதிக்க சாதியினர் தொடர்ந்து விரும்புவதால், ஊர் சோறு எடுக்காமல் போகும்போது பல்வேறு வகை பிரச்சினைகளுக்கும் வண்ணார் சமூகத்தவர்கள் ஆளாகிறார்கள் என்ற செய்தியையும் நூல் சொல்கிறது.
துரும்பர் என்ற வண்ணார் சாதியில் ஒரு தனிப் பிரிவினைப் பற்றியும் நூல் பேசுகிறது. புரத வண்ணார், புறத்து வண்ணார், பறஏகாலி, பறவண்ணார் எனப் பல்வேறு பெயர்களால் சுட்டப்படுபவர்கள் இவர்கள். இவர்கள் தீண்டத்தகாதோர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட, அதாவது இன்று தலித் என்று அடையாளப்படுத்தப்படும் சமூகத்தினருக்குத் துணி வெளுக்கும் சேவை செய்யக் கூடிய ஊழியம் செய்பவராக அறியப்படுகின்றனர். இவர்கள் தாழ்த்தப்பட்டோருக்கு வண்ணார் சேவை செய்வதால், தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கீழ் மேலும் தாழ்த்தப்பட்டவர்களாக ஆதிக்க சாதியினரால் அடையாளப் படுத்தப்படுவதால், இவர்கள் இரட்டை தீட்டு முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
தீண்டத்தகாதோர் என்பவர்கள் தொட்டால் தீட்டு என்பது உயர் சாதி மற்றும் ஆதிக்க சாதி சமூகம் உருவாக்கி வைத்துள்ள ஒரு அமைப்பு. இதன்படி தீண்டத்தகாதோர் என்று இவர்களால் ஒதுக்கப்பட்ட சமூகத்தவர்களுக்கு இவர்கள் அழுக்கு துணிகளைச் சுத்தம் செய்வதால், மேலும் ஒரு தீட்டு இவர்களுக்குக் கூடுவதாகவும் இதன் அடிப்படையில் இந்த பறவண்ணார் சமூகத்தவர் `பார்த்தாலே தீட்டு` என்ற வகையில் ஒதுக்கப்பட்டு, கொடுமையான வகையில் சமூக அவலத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
உளவியல் ரீதியாக தங்கள் சுயமரியாதையையும், தன்மானத்தையும் சிதைத்துத் தாக்கும் வகையில் பல்வேறு சமூக தாக்குதல்களுக்கும் உள்ளாகும் வண்ணார் சமூகத்தவர்களுக்கு உள்ள மேலும் ஒரு பிரச்சனையாக அமைவது அவர்களுக்குத் தேவைப்படுகின்ற சாதிச்சான்றிதழ். இன்றைய கால சூழலிலும்கூட சாதி சான்றிதழைப் பெறுவதில் வண்ணார் சமூகத்தவர் மிகுந்த பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர் என்பது வருத்தத்திற்குரிய செய்தி.
சாதிச் சான்றிதழைப் பெற்றால்தான் இவர்களின் குழந்தைகள் உயர்கல்விக்குச் செல்வதற்கு அல்லது சமூகத்தின் மிக அடித்தளத்தில் வாழ்கின்ற இவர்களின் வாழ்க்கையில் சிற்சில மேம்பாடுகளைப் பெற்றுக்கொள்ளும் சலுகைகளைப் பெறுவதற்கு உதவியாக அமையும். ஆனால் இதற்கு மாற்றாகச் சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டிய அதிகாரிகள் பல்வேறு நிபந்தனைகளை வண்ணார் சமூக மக்களிடம் வைப்பதன் காரணத்தினால் அவர்களின் துன்பம் அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.
உதாரணமாக, புதிரை வண்ணாரிடம் கழுதை இருக்கிறதா? துணி வெளுப்பதற்குப் பாரம்பரிய வெள்ளாவி அடுப்பு முறை பயன்படுத்தப்படுகிறதா? அந்த ஊரில் அவர் தான் துணிகளை வெளுத்தார் என்பதற்குச் சாட்சியாக யார் இருப்பார்கள்..? என்று சாட்சிகளாகக் கழுதையையும் வெள்ளாவி அடுப்பையும் அதிகாரிகள் கேட்பது தொடர்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மேலும் ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ்கின்ற இவர்களுக்குத் தேடிச்சென்று உதவுவதுதான் அரசு அதிகாரிகளின் செயல்பாடாக இருக்க வேண்டுமே தவிர அவர்களை மேலும் மேலும் சிரமத்துக்கு உள்ளாக்கி அவர்களின் குழந்தைகள் வாழ்வில் மேம்பட உள்ள எல்லா கதவுகளையும் அடைக்கும் செயல்பாடுகள் சமூகத்திற்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை அரசு இயந்திரமும் உணர்ந்து செயல்பட வேண்டியதும் அவசியமாகின்றது.
தொடரும்
-சுபா
நூலாசிரியர் - ஆ.சிவசுப்பிரமணியன்
பதிப்பு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை ரூ 135/-
தமிழக வண்ணார் - வரலாறும் வழக்காறுகளும்
நூல் விமர்சனம் - முனைவர்.க.சுபாஷிணி
(பகுதி 2)
இந்த நூலில் வண்ணார் தொழில்நுட்பம் பற்றி பேசும் ஒரு கட்டுரை, துணிகளில் அழுக்கு எடுக்கும் தொழில்நுட்பம், துணிகளை அடையாளப்படுத்தப் போடப்படுகின்ற துணிகளில் உள்ள குறியீடுகள், உவர் மணல் சேகரித்தல், வெள்ளாவி வைத்தல் ஆகிய தொழில்நுட்பங்களை விளக்குகின்றது. இன்று laundry service என்று வணிகமயமாக்கலின் வளர்ச்சியில் பெரிய நகரங்களில் துணி துவைக்கும் கடைகள் வரத் தொடங்கிவிட்டன. இப்படி புதிய முறையில் மேலைநாடுகளின் தொழில்நுட்ப முறைகளை அறிந்து, அந்த வகையில் தனது தொழிலை மேம்படுத்திக் கொண்ட வண்ணார் சமூகத்தவர்கள் சிலரும் உண்டு. ஆனாலும் கூட இன்றைய காலச் சூழலில் ஆதிக்க சாதியினர் இத்தகைய புதிய வணிக உத்தியை மேற்கொள்வதும், அவர்களுக்கு ஊழியம் செய்யும் வேலையாட்களாக வண்ணார்களைப் பணிக்கு வைத்துக் கொள்வதும் தான் இயல்பு நிலையில் இருப்பதாக நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.
வண்ணார்கள் பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி துணியில் உள்ள அழுக்கினை நீக்கி தூய்மைப்படுத்திக் கொடுத்தாலும்
துணியைப் பெற்றுக்கொள்ளும் உயர்சாதி சமூகத்தவர் எனக் கூறிக்கொள்ளும் பிராமணர்களும் வேளாளர்களும் துணிகளின் மீது தண்ணீர் தெளித்துத் தீட்டு கழித்த பின்னரே பெற்றுக் கொள்வது வழக்கம். இதைச் சாதி வழக்கின் அடையாளம் எனக் கருதி இடைநிலை சாதியினரும் இச்செயலை ஒரு சடங்காக மேற்கொள்கின்றனர் என்பதையும் ஆசிரியர் குறிப்பிடத் தவறவில்லை.
தீட்டு என்பதே சுயநலத்துடன் கட்டமைக்கப்பட்ட ஒரு நீதிக்குப் புறம்பான கருத்து. அதில் தண்ணீரைத் தெளித்தால் தீட்டு போய்விடும் என நம்புவதும், அதில் உண்மையில்லை என்பதை அறிந்த பின்னரும், எளிய மக்களை நம்பவைத்து சாதிப்படிநிலையில் தம்மை உயர்ந்தோராகக் காட்டிக் கொள்ள இத்தகையோர் மேற்கொள்ளும் முயற்சிகளும் அறுவெறுப்பையே ஏற்படுத்துகின்றன.
வண்ணார் சமூகம் சார்ந்த புராணக் கதைகளும் சடங்குகளும் தமிழ் சமூகத்தில் வழக்கில் உள்ளன. அந்த வகையில் தடிவீரசாமி கதை, சின்னணைஞ்சான் கதை, புல மாடன் கதை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுக்குள் அடிப்படையாக இருப்பது வண்ணார் சாதியைச் சார்ந்த ஒருவர், பிராமண குலத்து அல்லது ஆதிக்கசாதி குலத்தில் பிறந்த ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொள்வதால் அவர்கள் கொலை செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டவர் தங்களை ஆவியாக வந்து தாக்கி தண்டனை கொடுப்பார் என்ற அச்சத்தின் பெயரில் அவர்களைக் கடவுள் ஆக்குவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தெய்வங்கள். சாதி மாறி காதலித்து கொலையுண்ட இளைஞர்கள் இளம்பெண்கள் இன்று தெய்வங்களாக நிலைபெற்று விட்டார்கள். இன்று ஆணவக்கொலை எனக்கூறப்படும் செயலே அன்று சாதி எதிர்ப்பாளர்களால் நிகழ்த்தப்பட்டு பின்னர் கொலையுண்டவர்கள் சாமிகள் ஆக்கப்பட்ட நிலை ஏற்பட்டது. ஈனமுத்து, வண்ணாரமாடன், மந்திரமூர்த்தி சோணமுத்து ஆகிய சாமிகள் இவ்வகையில் கொலையுண்ட மனிதர்கள்தான் என்பதை இந்த நூல் விவரிக்கின்றது.
கிராமப்புறங்களில் ஆற்றுப் பகுதிகளில் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்த வண்ணார் சமூகத்தினர் நகரமயமாக்கலின் விளைவாக பெரு நகரங்களுக்குக் குடி பெயர்ந்து அருகாமையிலுள்ள ஆற்றுத் துறைகளில் தங்களுக்கானக் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு தங்கள் தொழிலைத் தொடர்ந்தார்கள். டோபி கானா என்ற சலவைத் துறைகள் இந்த வகையில் உருவாயின. தமிழகம் மட்டுமன்றி மலாயாவிற்குக் குடிபெயர்ந்த தமிழ் மக்களில் வண்ணார் சமூகத்தைச் சார்ந்த சிலர் மலேசியாவின் பினாங்கு பகுதியில் தங்கள் குடியிருப்பை அமைத்து தொழில் புரிந்தனர். அதனைச் சான்று பகரும் வகையில் பினாங்கில் இன்றளவும் டோபி காட் என்ற பகுதியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆற்றுப் பகுதியை ஒட்டி தமிழ் மக்கள் வாழ்ந்து துணி சலவை செய்து கொடுத்த அந்தக் காலம் இன்று மறைந்து விட்டது. கல்வியும் பொருளாதார மேம்பாடும் செய்த ஆக்கப்பூர்வமான சமூக மாற்றம் இது. இன்று வண்ணார்கள் என அடையாளப் படுத்தப் படுவது மலேசியச் சூழலில் இல்லை என்றாலும் இச்சமூகத்தினர் இப்பகுதியில் வாழ்ந்தார்கள், அவர்கள் தொழில் புரிந்தார்கள் என்பதற்கு அடையாளமாக இப்பகுதி இன்னமும் அதே பெயரில் `டோபி காட்` என்றே வழக்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல தமிழ் மக்கள் புலம் பெயர்ந்த ஏனைய தீவுகள் அல்லது நாடுகளில் இத்தகைய அடையாளங்கள் நிறுவப்பட்டனவா என்பதை ஆராய வேண்டியதும் அவசியமாகின்றது.
இந்த நூலுக்கு முத்தாய்ப்பாக அமைவது இதில் பின்னிணைப்பாகச் வழங்கப்பட்டுள்ள கழுதையைப் பற்றிய செய்தி. தமிழ்ச் சமூகத்தில் கழுதை எந்த வகையில் சிறப்பிடம் பெறுகின்றது என்பதை இப்பகுதி ஆராய்கின்றது. வீட்டு விலங்காகக் குதிரை பயன்படுவதற்கு முன்பே மனிதகுலம் கழுதையைத் தங்கள் வீட்டு விலங்காகப் பயன்படுத்தி வந்துள்ளது என்பதை பல்வேறு சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன. ஆசிய நாடுகள் மட்டுமன்றி ஐரோப்பியச் சூழலிலும் கழுதைகள் மக்களின் தொழில்சார்ந்த அல்லது பயணத்தில் உதவக்கூடிய ஒரு விலங்காக இருந்து வந்துள்ளது. இன்றும் கூட ஸ்பெயின் நாட்டில் கழுதை ஊர்சுற்றிகளுக்கு உதவும் ஒரு விலங்காக நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கச் செய்தி. கோவேறு கழுதை எனச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கழுதை தலைவன் அமர்ந்து செல்ல பயன்படுத்திய ஒரு விலங்குதான். வண்ணாரின் வாழ்வில் கழுதைக்கு மிகச்சிறந்த ஒரு இடமுண்டு. நாட்டார் மருத்துவ முறைகளில் கழுதை சிறப்பிடம் பெறுகிறது. கழுதைப்பால், கழுதை முடி, கழுதையின் மூச்சு ஆகியவை பல்வேறு மருத்துவ குணம் உள்ளவையாக `பாட்டி வைத்தியம்` என அடையாளப்படுத்தப்பட்டு மக்கள் மருத்துவத்தில் வழக்கிலுள்ளது.
வீட்டு விலங்காகத் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வியல் தேவைகளுக்குத் துணை இருக்கும் கழுதை இன்று வைதீக தாக்கத்தினால் அதன் சிறப்பு இழந்து ஒடுக்கப்பட்ட விலங்காகக் காணப்படுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் விலங்கும் ஒடுக்கப்பட்ட அடையாளம் பெறுவது இயல்புதானே!
பசுமாட்டின் சிறுநீரும் சாணியும் பெறுகின்ற உயர்குல அந்தஸ்து பிராமணர் குல மேண்மைப்படுத்தலின் வெளிப்பாடு. வைதீகத்துக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் நடந்த போராட்டத்தில் வைதீகம் வெற்றிகண்டு தமிழ்ப் பண்பாடு தோல்வி கண்டதன் வெளிப்பாடுதான் பசுமாட்டிற்கு ஏற்பட்டுள்ள சிறப்பும் கழுதைக்கு ஏற்பட்டுள்ள ஒடுக்குமுறையும் என்று நான் காண்கிறேன்.
பசு என்றால் புனிதத்தன்மைக்கான அடையாளம் என்றும் கழுதை என்றால் முட்டாள் தனத்திற்கான அடையாளம் என்றும் தமிழ் மக்கள் ஒட்டுமொத்த சிந்தனையில் வெற்றி கண்டுள்ளது வைதீகம். இதனால்தான் திட்டும் போது கூட ஒருவரைத் தாழ்த்திப் பேச கழுதை என்று திட்டுவதும், கிராமங்களில் தண்டனை கொடுக்கும் போது கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் வருவது மரியாதை குறைவு என்றும், தோற்றுப்போன மன்னர்களின் நிலத்தில் கழுதையைக் கொண்டு ஏறு பூட்டி உழுவது மிகப்பெரிய அவமானம் பொருந்திய தண்டனை என்றும் நம் தமிழ் வரலாறு காட்டுகிறது. நமக்கு ஊழியம் செய்து நம் வீட்டு விலங்காக இருந்த கழுதையை நாமே தரம் தாழ்த்தி ஒடுக்கி வைத்து விட்டோம். இந்தச் சமூகப் பார்வையின் பின் இருக்கும் அரசியலைப் புரிந்து கொண்டால்தான் விலங்கினங்களின் மீது நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் அடையாளங்களை விலக்கி மனிதர்களில் எப்படி சமத்துவத்தைப் பேணவேண்டும் என வலியுறுத்துகின்றோமோ அதே போல விலங்கினங்களின் மீதும் சமத்துவப் போக்கை கடைபிடிக்க நம்மை நாம் தயார்ப்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த நூலில் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டுள்ள `சட்டநாதன் அறிக்கையில்` வண்ணார்கள் சமூகத்தைப் பற்றிய அறிக்கை பகுதியை ஆசிரியர் இணைத்துள்ளார். கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு தேவைகளில் வண்ணார் சமூகத்தவரின் நிலை கவலைக்கிடமான சூழலில் இருப்பதை சட்டநாதன் ஆணையம் வெளிப்படுத்துகிறது. 1970ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையானது 40 ஆண்டுகள் கடந்த பின்னும் கூட குறிப்பிடத்தக்க வகையிலான பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பது யோசிக்க வைக்கின்றது.
இந்த நூலைப் படித்து முடித்தபோது தனிப்பட்ட முறையில் ஒரு வித மன அழுத்தத்தை நான் உணர்ந்தேன். கிராமப்புற சூழல் என்றால்
பசுமையும் அழகும் எளிமையும் என்று நமது பொது மனம் நினைக்கும். ஆனால் கிராமச் சூழல் என்பது மிக இறுக்கமான, மனித உரிமைக்கு எதிரான சாதிக் கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு அமைப்பு என்பதை இவ்வகை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. சக மனிதரை மனிதராகக் கூட பார்க்காத உயர்வு தாழ்வு சிந்தனை நிறைந்த கிராமப்புற வாழ்வு என்பது இன்றைய நாகரிக உலகத்திற்குத் தேவையற்ற ஒன்று என்றே கருதுகிறேன். எல்லா மனிதரும் ஒன்றே. நம்முடைய சுய தேவைகளை நாமே பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற சுய கல்வியும் தெளிந்த அறிவும் தமிழ்ச்சூழலில் பெருகவேண்டும்.
நாங்கள் படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்வோர் சிந்தனையில் கூட சாதிப் படிநிலைகள் ஆழப் புதைந்து இருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில், சிதைக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைய பல்வேறு சமூக நலன் சார்ந்த செயல்பாடுகளை அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். `எத்தனை காலம் சலுகைகளைக் கொடுப்பீர்கள்` என்ற கேள்வியை ஒதுக்கிவிட்டு, மனிதாபிமானத்துடன் தமிழ்ச் சமூகத்தில் ஆதிக்கசாதியினரால் ஒடுக்கப்பட்ட பிரிவினர் இத்தனை காலம் ஒடுக்கப்பட்டு, பல்வேறு அவமானங்களுக்கு உள்ளாக்கப்பட்ட அம்மக்கள் தங்கள் வாழ்க்கையில் மேன்மையடைய தடை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.
வரலாற்றில் பொதுவாகவே அரசர்களின் வீரமும் வெற்றிகளும் புகழப்படுகின்றன. பொதுவாகவே சாமானிய மனிதர்களின் செயல்பாடுகளும், போராட்டங்களும் கல்வெட்டுகளில் குறிக்கப் படுவதில்லை. ஆனால் வாய்மொழி இலக்கியங்களாக இன்னும் ஆங்காங்கே சாமானிய மனிதர்களின் செய்திகள் வாய்வழி இலக்கியங்களாக உலாவரும் மரபு இருக்கின்றது. வாய்மொழி இலக்கியங்கள் நம் சூழலில் தொலைந்து மறைவதற்கு முன் அவற்றைப் பதிவாக்கி அவற்றுள் புதைந்து கிடக்கும் வரலாற்றையும் போராட்டங்களையும் வழிகளையும் அலசித் தேர்ந்தெடுத்து ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்த வேண்டியது நம் முன் இருக்கும் கட்டாயத் தேவை. அதனைச் செய்வதற்கு ஆய்வுத் திறமும் திறந்த மனமும் படைத்த ஆய்வாளர்கள் முன்வரவேண்டியது இன்றைய கட்டாய தேவை.
----
நூலாசிரியர் -ஆ.சிவசுப்பிரமணியன்
அன்பின் சுபாஷிணி. நலம். நலம் அறிய அவா. உங்களுடையநெசவாளர்களும் துணிவணிகர்களும்நூலாசிரியர்: எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (தமிழில் ந.அதியமான்)நூல் விமர்சனம்: முனைவர்.க.சுபாஷிணி[பகுதி-1]இதை என் மாணாவிகளுக்கு பாடமாக போதிக்க விரும்புகிறேன். முன்னனுமதி நாடுகிறேன். என் மாணவிகளை பற்றி நீங்கள் அறிவீர்கள்.அன்புடன்,இன்னம்பூரான்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/nVY2mdvRu2A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/c55a39b6-f4b9-4775-9706-d70e1c5b22b4n%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2B7UAUUpGhWgqMN%2Bckhh_smVbssq_QsiyqicnRdHB6kLbi_vKg%40mail.gmail.com.