Fwd: எதியோபிய நாகரிகர் முன்னோர் தமிழர்

197 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 6, 2011, 3:02:45 PM4/6/11
to மின்தமிழ்
Dear Seshadri Sridhar,
 
I'll appreciate reading your essays in MT list itsef.
 
Thanks for your consideration,
N. Ganesan


 
---------- Forwarded message ----------
From: seshadri sridharan <ssesh...@gmail.com>
Date: 2011/4/6
Subject: எதியோபிய நாகரிகர் முன்னோர் தமிழர்
To: ssesh...@gmail.com


எதியோபிய நாகரிகர் முன்னோர் தமிழர்
 
எதியோபிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிபது நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோபிய நாகரிகரே  எகிபது நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது. ஆயினும் மேலையர் எகிபதையே பெருமைபட பேசுகின்றனர். உலகில் பலருக்கு எதியோபியாவில் பழம் நாகரிகம் இருந்ததே அறியாமல் உள்ளனர். எதியோபிய நாகரிகம் காலத்தால் எகிபதினும் முற்பட்டது, இதாவது, 9,500 ஆண்டுகள் பழமையுடையதாய் சொல்லப்படுகிறது.
 
இங்கு சிந்து எழுத்துகளை ஒத்த எழுத்துகள் மண்டி எனும் ஊரில் கண்டெடுக்கப் பட்டன. இதற்கு பிற்பட்டதே எகிபதின் எழுத்துகள். நாகரிகத்தில் எதியோபியா எகிபதுக்கு சற்றும் குறைவில்லாதது..
 
எதியோபிய நாகரிக மன்னர்  பெயர்களைக் காணும் போது இவர்களுடைய முன்னோர் தமிழராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை தோற்றுவிக்கிறது. இந்நாகரிக மன்னர் பெயர்களில்  சேரர் பெயர்கள் இடம்பெறுவது சேரம் ஆட்சி ஒர் காலத்தே இங்கு வழங்கி இருக்க வேண்டும் எனபதை உணர்த்துகிறது.
 
தமிழோடு ஒத்துள்ள இந்நாகரிக மன்னர் பெயர்களை சிந்துவெளி முத்திரைப் பெயர்களோடும், சங்க இலக்கியப் பெயர்களோடும், பிற நாகரிக மன்னர்தம் தமிழ்ப் பெயரோடும் ஒப்பிட்டு ஆய்கிறது இக்கட்டுரை. இந் நாகரிக மன்னர் பெயர் ஒப்பீடு இந் நாகரிகங்களின் மக்கள் ஒரு குலைக் காய் போல் ஒரு மூல நாகரிகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும், அதோடு அம்மூல தாய் நாகரிகம் தமிழர்  உடையது என்று விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். இவ்வுலகில் எழுத்துகள்  சற்றொப்ப 6.500 ஆண்டுகள் அளவில் தோன்றின அதற்கு முன் எழுத்துகள் கிடையா.  தமிழின் காலம் கல்வெட்டு, சங்க இலக்கியச் சான்றுகளின் படி 2,500 ஆண்டுகள் பழமையதாக சொல்லப்படுகின்றது. எதியோபிய மன்னர்தம் தமிழ்ப் பெயர்கள் 6,500 ஆண்டுகள் பழமை மிக்கதால் தமிழின் பழமையை 6,500 ஆண்டுகளுக்கு முன் போடலாம், அதோடு எதியோபியாவில் கிடைத்த மட்பாண் டங்கள் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளை முழுதும் ஒத்துள்ளதால்  தமிழும் தமிழர் நாகரிகமும்   9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக, இதாவது, 10,000 ஆண்டுகள் தொன்மையதாய் கொள்ளலாம்.
 
இப்பெயராய்வு எதியோபிய மன்னர் Tafari Mokonnen 1922 இல் வெளியிட்ட மன்னர் பெயர் பட்டியலை அடிப்படையாகக் கொள்கிறது.
 
ஓரிப் பழங்குடியில் மொத்தரம் 21 பேர் ஆண்டுள்ளனர். அதில் முதலாமவர்
 
O r i or aram 4530-4470BC - தமிழில் ஓரி என்பது செப்பமான் வடிவம்.  கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்படுபவன் வல் வில் ஓரி என்பான். எனவே ஓரி எனம் பெயர் 6,500 ஆண்டுகள் பழமையது.
 
Gariak 4470-4404 BC தமிழில் காரி அக் >  காரி அக்கன்  என செப்பமாக படிக்கலாம். சங்க இலக்கியத்தில் கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக குறிக்கப்படுபவன் மலையமான் திருமுடிக் காரி என்பான். இப்பெயர் கொரிய நாகரிகத்தில் Dangun  வழிமரபில் ஒரு மன்னனுக்கு Gareuk 2182-2137 BC என இடப்பட்டுள்ளது. தமிழில் காரி அக் > காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். அக்கன் - வடலூர் வட்ட மருங்கூரில் கிடைத்த பிராமி எழுத்து பொறித்த பானைஓட்டில் அதியகன் எனறு உள்ளது. இதை அத்தி + அக்கன் என பிரித்து படிக்க வேண்டும். அக் பிற நாகரிகங்களில் அல், ஐ, இ, உ, அம் ஈறு பெற்றும் வரும். தெலுங்கில் அக்கராஜு என்ற வழக்குள்ளது. எகிபது நாகரிகத்தில் 4, 7 & 8 ஆம் ஆள்குடிகளில் காரி என பெயர் கொண்டோர் பலர்.
 
Elaryan 4404-3836 BC - தமிழில் எல் அரையன் எனபது செப்பமான் வடிவம். எல் - ஒளி, சிவப்பு ஆகிய பொருள்களை கொண்டது. எல்லன், எல்லப்பன் ஆகிய பெயர்கள் இன்றும் வழங்குகின்றன. மேலை நாடுகளில் எல் வழங்குகிறது. அரயன் - அரசன் எனும் பொருள் உடையது. இப்பெயர் தமிழ் இலக்கியத்தில் பல்லிடங்களில் ஆளப்பட்டுள்ளது.
 
Eylouka 3836 - 3932 BC (QUEEN) -  தமிழில் அரசி எயில் அக்கா > எழில் அககாள் என செப்பமாக படிக்கலாம். இது ஒரு தூய தமிழ்ச் சொல்.  பண்டைத் தமிழகத்தில்  பெண் அரசுப்  பொறுப்பேற்றதற்கான சான்று இல்லா நிலையில் எதியோபியாவில் பெண் ஆள்வதற்கு தடை இருந்ததில்லை என்பதற்கு இவள் சான்று.
 
Kam 2713 - 2635 BC - தமிழில் காம் > காமன் என செப்பமாக படிக்கலாம். காமன் ஒரு தூய தமிழ்ச் சொல் சமஸ்கிருதம் அல்ல.இங்கு அன் ஈறு இல்லாமல் உள்ளது. சிந்துவெளி முத்திரைகளில் காமன் என்ற பெயர் வழங்குகின்றது. 63 நாயன்மாருள் ஒருவர் கலிக் காம நாயனார். அதில் காமன் இடம்பெற்றுள்ளது. சப்பான் நாகரிகத்தல் காம என்ற பெயர் வழங்குகிறது.
 
Elektron 2515 - 2485 BC - தமிழில் எல்லி கீற்றன் என்பது செப்பமான வழக்கு. எல் இகர ஈறு  பெற்றுள்ளது. சீன நாகரிகத்தில் Liao ஆள்குடி அரசனின் இயற்பெயர் Yelu Abaoji 907 -926 AD - தமிழில் எல்லு அப்பய்ய தி > எல்லு அப்பய்யன் தி என செப்பமாக படிக்கலாம். இங்கு எல் உகர ஈறு பெற்றுள்ளது. அப்பய்யன் - அப்பய்ய தீக்ஷிதர் என்பவர் நாயக்கர் கால அறிஞர். தி -- சீனத்தில் வேந்தன் என பொருள் தரும்.
 
Manturay 2180- 2145 BC - தமிழில் மாந்தரை என்பது செப்ப வடிவம். ஐகார ஈறு பெற்றுள்ளது. மாந்தரன் சேரர்க்குரிய பெயர். எதியோபிய நாகரிகத்தில் சேரர் ஆட்சி எற்பட்டதற்கான முதல் சான்று. மாந்தர > மாஞ்சர என மருவி நடு ஆப்பிரிக்கா வில் கிளிமாஞ்சரோ என்ற மலைக் காட்டிற்கு பெயராக வழங்குகிறது.
 
Azagan 2085 - 2055 BC - தமிழில் அழகன் என்பது செப்பமான வடிவம். தமிழுக்கே சிறப்பான ழகரமும் அன் ஈறும் இடம் பெற்றுள்ளன. அழகப்பன், அன்பழகன் ஆகியன இன்றும் வழங்கும் தமிழ்ப பெயர்கள்.
 
Ramen Phate 2020-2000 BC - தமிழில் இராமன் வட்டி என்பது செப்பமான தமிழ் வடிவம். இங்கு வகரம் பகரமாக திரிந்துள்ளது. இராமன் ஒரு தூய தமிழ்ச் சொல்.  வாலமீகி இராமாயணத்திற்கு முன்பே சங்க இலக்கியங்களில் பயின்று வருகிறது. எகிபது மன்னர் பலர் இப்பெயர் கொண்டுள்ளனர். காட்டாக, Ramesses I 1295-1294 BC -  தமிழில் இராமி சே > இராமி சேயன் என செப்பமாக படிக்கலாம். இராமன் இகர ஈறு பெற்றுள்ளது. சேயன் - சிந்து வெளி முத்திரைகளில் பரவலாக அன் ஈறு பெற்றும், பெறாமல் சேய் எனறும், இன்னம் குறுக்கமாக சே என்றும் வழங்குகிறது.
 
Wan Una 2000 BC - தமிழில் வண் உன்ன > வண்ணன் உன்னன் என செப்பமாக படிக்கலாம். வண்ணன் - சிந்து வெளி முத்திரைகளில் வழங்கும் பெயர். சீன நாகரிகத்தில் மேற்கு Han ஆள்குடி அரசர் ஒருவர் பெயர் Liu Bang 206 -195 BC - தமிழில் ளிய பண் > ளியன் வண்ணன் என செப்பமாக படிக்கலாம். வ- ப திரிபு. சீன மொழியில் ன்>ங் என மூக்கொலி பெறும். சிந்து வெளியில் ஒளியன் என்ற பெயர் அருகி வழங்குகிறது.  உன்னன் - தமிழக சிந்து எழுத்து பானைஓடுகளில் பொறிக்கப்பட்ட பெயர். இகர ஈறு பெற்று உன்னி என்றும் ஆகும். இது உன்னி சேரநாட்டு வழக்கு. எகிபது நாகரிகத்தில் 5 ஆம் ஆள்குடி மன்னன் ஒருவன் பெயர் Unas 2375 -2345 BC - தமிழில் உன்னs > உன்னன் என செப்பமாக படிக்கலாம்.
 
Piori 2000 - 1985 BC - தமிழில் பய் ஓரி > வய் ஓரி > வய்யன் ஓரி என செப்பமாக படிக்கலாம். வய் - வெம்மை,  வைதல் என்பதன் வேர், வய்யன் - சிந்து வெளியில் வழங்குகிறது, செங்கல்பட்டு அருகே வய்யா/வையா ஊர் என ஓர் ஊர் உள்ளது. இது சீன நாகரிகத்தில் Xi, Bi என திரிந்து பேரளவில் வழங்குகிறது.
 
Kosi Yope (queen) 1871 - 1890 BC - தமிழில் அரசி காதி யாப்பி > காத்தி யாப்பி என செப்பமாக படிக்கலாம். தகரம் சகர இன ஒலியான ஸகரமாக திரிந்துள்ளது. காத்தி - தமிழக ஊர்புறங்களில் பெண் பெயராக வழங்குகிறது.ஆண் பால் பெயரான காத்தன் சிந்து வெளி முத்திரைகளில் வழங்குகிறது, அங்கு ஒரு பெண் பால் பெயர் கூட காணப்படவில்லை. யாப்பி - இது ஒரு முது பழந்தமிழ்ச் சொல். ஆண் பால் பெயர் யாப்பன் என்பது.
 
Etiyopus I 1856 - 1800 BC - தமிழில் எட்டி யாப்ப > எட்டி யாப்பன் என செப்பமாக படிக்கலாம். எட்டி - வணிகர்க்கு உயர்ந்தோன் எனும் பொருளில் பட்டமாக அளிக்க பட்டது. எட்டியப்பன் இன்றும் தமிழகத்தில் வழங்குகிறது. யாப்பன் - ஒரு பழந்தமிழ் பெயர். தென் அமெரிக்க இன்கா நாகரிகத்தல் ஒரு மன்னன் பெயர் . Pachacutec Inca Yupanqui 1438 - 1471 AD .- தமிழில் பச்சகுடி யாப்அங்கை > பச்சைகுடி யாப்பன்  அங்கை என செப்பமாக படிக்கலாம். அஙகன்  அங்கு ஆகிய பெயர்கள் சிந்து வெளி  முத்திரையில் வழங்குகின்றன. அங்கப்பன், அங்கையன் இன்றும் தமிழக்த்தில்  வழங்கும் பெயர்கள். இன்கா, மாயன் நாகரிகங்களும் தமிழர் நாகரிகங்களே.
 
Lakndun Nowarari  . தமிழில் ள கந்தன்  நவ்வர்  அரி என்பது செப்பமான வடிவம்.  இள  - இளமைப் பொருள். சங்க இலக்கியங்களில் இளங்குமணன், இளஞ் சேன்(ட்) சென்னி என வழங்குகிறது. ஐரோப்பாவில் படை நடத்திய Huna மன்னன் அத்திளா > அத்தி+இள எனபான். சிந்துவெளி முத்திரையில் அத்திள வழங்குகிறது. கந்தன் -  சிந்துவெளி முத்திரையில் அருகி வழங்குகிறது. இகர ஈறு பெற்று கந்தி எனவும் ஆகும். புகார் நகரின் அக ஊர் ஒன்றுக்கு பெயர் காகந்திபுரம். நவ்வன் - சிந்துவெளி முத்திரையிலும், தமிழக பானைஓட்டு சிந்து எழுத்திலும் காணப்படுகிறது. இங்கு அர் ஈறு பெற்றுள்ளது. அரி > அரியா இன்றும் தமிழகத்தில் வழங்கும் பெயர். புதுச்சேரியின் ஓர் ஊர் அரியான்குப்பம் > அரியாங்குப்பம்.
 
Senuka I 1700 -1683 BC - தமிழில் சேன் உக்க > சேனன் உக்கன் என செப்பமாக படிக்கலாம். சேனன் - சிந்து வெளிப் பெயர். இளஞ் சேன்(ட்) சென்னியில் பயில்கின்றது. உக்கன் - சிந்து வெளி  முத்திரைப் பெயர் 5,300 ஆண்டு சிந்து மட் பாண்டத்தில் உக்கங்கு என பொறிக்கப்பட்டுள்ளது.
 
Aktis Sanis 1531 BC - தமிழில் அஃகுதி சாணி > அஃகுதை சாணன் என செப்பமாக படிக்கலாம். அஃகுதை - சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் பெயர். சாணன் - இகர ஈறு பெற்று சாணி ஆகியது. யகர சகர திரிபில் யாணன் > சாணன் ஆகும். யாணனும் சாணனும் சிந்து முத்திரைப் பெயர்கள். சீனத்தில் Yang உண்டு.
 
Mandes 1531 - 1514 BC - தமிழில் மாந்தி என்பது செப்பமான வடிவம். உகர ஈறு பெற்று மாந்து எனவும், ஐகாரம் பெற்று மாந்தை எனவும் ஆகும். மாந்தரன் > மாந்து + அரன் ஒரு சேரப் பெயர். மாந்தை சேரர் நகரம்.
 
Amoy 1481 -1460 BC - தமிழல் ஆமை > ஆமன் இதன் செப்பமான வடிவம். யா > ஆ திரிபு, யானை - ஆனை, யாந்தை - ஆந்தை போல் யாமன் ஆமனாக திரிந்தது. ஐகார ஈறு பெற்று ஆமை ஆனது. குட்டாமன் - குட்டை+ஆமன் கேரளத்தில் இன்றும் வழங்குகிறது. முட்டத்து ஆமக் கண்ணியார் > முடதாமக்கண்ணியார் பெண் புலவர்.
இசுரேலின் யூதேய அரசன் பெயர் Amon 642-640 BC .
 
Titon Satiyo 1256 - 1246 BC - தமிழில் திட்டன் சாத்தைய >  திட்டன் சாத்தையன் என செப்பமாக படிக்கலாம்.  திட்டன் - திட்டன் குடி > திட்டக்குடி ஓர் தமிழக ஊர். கார்தேஜ் நாகரிக அரசியின் பெயர் Dido 814 BC. காசுமீர அரசிப் பெயர் Dida 958 AD. அரசிகளின் பெயர்கள் கடுஒலி பெற்றுள்ளன.   சாத்தன் + அய்யன் ஒரு கூட்டுப் பெயர். சாத்தன் - சிந்து வெளி முத்திரைப் பெயர். சாத்தப்பன் இன்று வழங்கும் பெயர். கொரிய நாகரிக Danjun வழிவந்த மன்னன் பெயர் sotae 1357 -1285 BC . சாத்தை > ஐகார ஈறு பெற்றுள்ளது.
 
Sanuka 1231 - 1226 BC  - தமிழில் சாண் உக்க > சாணன் உக்கன் என செப்பமாக படிக்கலாம். யகர சகர திரிபில் யாணன் சாணன் என திரிந்தது. சாணன் உக்கன் சிந்து வெளிப் பெயர்கள். ஈரானின் ஈலம் நாகரிக மன்னன் பெயர் .Ukku-Tanish 2500 BC   என்பது . பாபிலோன் மன்னன் பெயர் Nabu Suma Ukin II 732 BC.  சீன நாகரிகத்தில் Shang  ஆள்குடி மன்னன் கோவில் பெயர் Tai Zang 1600 BC தமிழில் தாய் சாண் என்பது. சீனத்தில் ன்>ங் என மூக்கொலி பெறும்.
 
Wiyankihi I 1140 - 1131 BC - தமிழில் வய்யங்கி > வய்யன்+ அங்கி என செப்பமாக படிக்கலாம் . சங்க இலக்கியத்தில் ஒரு மன்னன் பெயர் வய் ஆவி என்பது.
சீன நாகரிகத்தில் shang ஆள்குடியில் ஒரு மன்னனுடைய இயற்பெயர் Bian 1600 BC. அதே ஆள்குடியில் இன்னொரு மன்னனுக்கு ஆட்சிப் பெயர் Xiao xin 1300 - 1251 BC - தமிழில் வய்ய வய்யன் என்பது. சீனத்தில் வய்>Xi என்றும் Bi என்றும் திரிந்துள்ளது.
 
Ramenkoperm 1057 -1043 BC - தமிழில் இராமன் கோப்பெரும் என்பது செப்பமான வடிவம். கோப்பெரும் பெண்டு சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் பெண் பெயர். சோழன் ஒருவன் கோப்பெருஞ் சோழன் எனப்பட்டான்.
 
Pino stem 1073 BC - தமிழில் பிண்ண சேம் > விண்ணன் சேமன் என செப்பமாக படிக்கலாம். வ - ப திரிபு.  விண்ணன் - சங்க இலக்கியத்தில் விண்ணன் தாயன் என்ற பெயர் இடம்பெறுகிறது. கொரிய நாகரிகத்தில் Dangun வழிவந்த மன்னன் பெயர் Wina 1610 - 1552 BC தமிழில் விண்ண > விண்ணன். சேமன் - சிந்து முத்திரையயில் வழங்கும் பெயர். ஏமன் சகரமுன்மிகை(Prothesis) பெற்று சேமன் ஆனது. விழுப்புரம் அருகே ஏமப்பூர் என்று ஓர் ஊர் உள்ளது.
 
Hanyon I 957 -956 BC - தமிழில் கான் யாண் > கானன் யாணன் என செப்பமாக படிக்கலாம். இங்க ககரம் ஹகரமாகியது. சிந்து வெளி முத்திரைகளில் அன் ஈறு பெறாமல் இவ்விரு பெயரும் வழங்குகின்றன. சீனத்தின்  கிழக்கு Han குடியில் ஒரு மன்னன் பெயர்   Yan Kan220 AD - தமிழில் யாண் கான். ன்>ங் என மூக்கொலி பெறும்.
 
Sera I (Tomai) 956 - 930 BC -  தமிழில் சேர (தாமை) > சேரன் (தாமன்) என செப்பமாக படிக்கலாம். தாமன் ஐகார ஈறு பெற்றுள்ளது. அல் ஈறு பெற்றும் வழங்கும். தாமல்  காஞ்சி மாவட்டத்தில் உள்ள ஓர் ஏரி. சேரன் சேரர்க்கான குடிப்பெயர். பாபிலோன் மன்னன் ஒருவன் பெயர் Tiglath Pileser 732 -729 BC - தமிழில் திகழ் ஆத் வில்லி சேர் > திகழ் ஆதன் வில்லி சேரன் என செப்பமாக படிக்கலாம். நெடுஞ் சேரல் ஆதன் ஒரு புகழ் மிக்க சேர மன்னன்.  சேரர் வில்லவர் எனப்பட்டதுடன் அவர் கொடிச் சின்னமும் வில்.  இப்பெயர் சேரர் பாபிலோனையும் ஆண்டதற்கு ஒரு சான்று.
 
Nicauta Kandae(queen) 740 - 730 BC - தமிழில் அரசி நய் காத்த கந்தை எனபது செப்பமான் வடிவம். நய்யன் காத்தன் கந்தன் சிந்துவெளி முத்திரைகளில் பயில்வுறுகிறது. கந்தை பெண் பாலை தெளிவாக குறித்து வந்துள்ளது.
 
Erda Amen Awseya 681 - 675 BC - தமிழில் எருத ஆமன் அவ் சேய > எருதன் ஆமன் அவ்வன் சேயன் என செப்பமாக படிக்கலாம். எருதன்- எருதின் வலிமையை ஆணின் வலிமைக்கு ஒப்பிட்டு இடும் பெயர். காளை என்ற பெயர் இதற்கு சான்று. சீனத்தின் தெற்கு Nan Liang அரசின் ஓர் அரசன் பெயர் Tufa Rutan 402 - 414 AD  - தமிழில் தூவா ருதன் > தூவான் எருதன் என செப்பமாக படிக்கலாம். தூவாக்குடி தமிழக ஊர். சேயன் - கொரிய நாகரிகத்தில் Gija வழிவந்த மன்னன் பெயர் Seon hye 925 -898 BC தமிழில் சேயன்  கயி என்பது செப்பமான வடிவம். கயி சிந்து வெளியில் காஇ என பயில்வுற்றுள்ளது. அவ்வன் - தேனி வட்டம் புலிமான்கோம்பையில் கிட்டிய நடு கல் பிராமி கல்வெட்டில் வேள் ஊர் அவ்வன் பதவன் என்று பொறிக்கப்பட்டு உள்ளது.
 
Gasiyo Eskikatir  - தமிழில் காத்தய்ய இசக்கி கதிர் > காத்தய்யன் இசக்கி கதிர் என செப்பமாக படிக்கலாம். ககரம் கடுஒலி பெற்றுள்ளது. தகரம்சகர இன ஒலி ஸகரமாக தரிந்தது. காத்தவராயன் இன்றும் வழங்கும் பெயர். இசக்கியம்மன், இசக்கிமுத்து ஆகிய பெயர்கள் தமிழகத்தில் வழங்குகின்றன. பாபிலோன் மன்னன் ஒருவன் பெயர் Ishki bal 1732 BC  - தமிழில் இசக்கி பால் > இயக்கி வால் என செப்பமாக படிக்கலாம். வால் -  ஒளிரும் வெண்மை எனப் பொருள், வ>ப திரிபால் பால் என வழங்கும். பால் - வெண்மைப் கருத்து வேர். கதிர்- கதிரேசன் என தமிழகத்தில் வழங்குகிறது. ஈலம் நாகரிகத்தல் ஒரு மன்னன் பெயர் Kutir Nahhunte 1740 BC - தமிழில் கதிர் நக்கந்தி > கதிர் நக்கன் கந்தி என செப்பமாக படிக்கலாம். நக்கன்  சிந்து முத்திரைப் பெயர். கந்தன் > கந்தி ஆகும்.
 
Tomadyan Piyankhi III 671 - 659 BC - தமிழில் தாம் அதியன் பய்யங்கி > தாமன் அதியன் வய்யங்கி என செப்பமாக படிக்கலாம். அதியன் சேரக் கிளை மரபினரான அதியமான்கள் குடிப்பெயர்.
 
Elalion Taake 402 -392 BC - தமிழில் எல்லாளியன் தக்கி என்பது செப்பமான வடிவம். எல்லாளன் என்ற தமிழ் மன்னன் ஈழத்தை மிக சிறப்பாக ஆண்டவன். சீனத்தின் Tiefu பழங்குடி வேள் பெயர் Liu Eloulou 356 -358 BC - தமிழில் ளிய எல்லாள > ஒளியன் எல்லாளன் என செப்பமாக படிக்கலாம். ஒளியன் சிந்து முத்திரைப் பெயர். திரை நகர போனீசிய மன்னன் பெயர் Elulaios 729- 694 BC - தமிழில் எல்லளைய > எல்லாளியன் என செப்பமாக படிக்கலாம். தக்கை - தக்கி, தக்கு, தக்கன் என்றும் வழங்கும். கோவை சூலூரில் கட்டிய சிந்து எழுத்து பொறித்த மட்கலனில் தக்க இன்னன் என பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. சப்பானிய வேந்தரின் ஈமப் பெயர் Taka Kura 1168 - 1180 AD - தக்க குர > தக்கன் குரவன் என செப்பமாக படிக்கலாம்.
 
Atserk Amen III 382 BC - தமிழில் ஆட் செருக் ஆமன் > ஆடு செருக்கு ஆமன் என செப்பமாக படிக்கலாம். ஆடு - வெற்றி, செருக்கு -- பெருமிதம்.  ஆடு செருக்கு ஆமன் எனறால் வெற்றிச் செருக்கள்ள ஆமன் என பொருள்.  இது கடல் பிறகோட்டிய செங்குட்டுவன், சித்திர மாடத்து துஞ்சிய பாண்டியன் என்பது போல வினைச் சிறப்பு சுட்டிய பெயர்.
 
Kolas 295 - 285 BC - தமிழில் காள> காளன்என செப்பமாக படிக்கலாம். இது சிந்துவெளி முத்திரையில் காணப்படும் பெயர். தமிழகத்தில் இன்றும் வழங்குகிறது. காளி இதன் பெண் பால் பெயர். நடு ஆப்பிரிக்காவில் ஒரு மன்னன் பெயர் அலி காளன் என்பது.
 
Stiyo 269 - 255 BC -  தமிழில் திய்ய > திய்யன் என செப்பமாக படிக்கலாம். தேனி வட்டம் புலிமான்கோம்பை என்ற ஊரில் பேடு திய்யன் அந்தவன் என்ற பெயர் பொறித்த பிராமி நடுகல் கண்டெடுக்கப்பட்டது. திய்யன் என்ற கேரள சாதிப் பெயர் மிக பின்னர் ஏற்பட்டது. கொரிய நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Deun gol 874 - 849 BC தமிழில் திய்யன் கோல் என செப்பமாக உள்ளது. தகர இனக் கடுஒலி பெற்றுள்ளது. கோல் - கோலப்பன் இன்றும் வழங்கும் பெயர்.
 
Sanay 99 BC தமிழில் சாணை என செப்பமான வடிவம் பெற்றுள்ளது. ஐகார ஈறு பெற்றுள்ளது. சாணன் --  காண்க www.yatumayinan.com.
 
Bawawl 70 - 60 BC தமிழில் பவ்வல் > வவ்வல் என செப்பமாக படிக்கலாம். அன் ஈறு பெற்று வவ்வன் ஆகும். சீனத்தில் Xia அரசின் ஓர் அரசன் பெயர் Helian Bobo 407 - 425 AD - தமிழில் கிளியன் பப்ப > கிளியன் வவ்வன் என செப்பமாக படிக்கலாம். வகரம் பகர கடுஒலியாக திரிந்துள்ளது. இவன் மரபினர் எல்லாரும் கிளியன் பட்டம் தாங்கியுள்ளனர். சோழ மன்னர் சிலர் கிள்ளி  எனப்பட்டனர். 
 
Barawas 60 - 50 BC - தமிழில் பரவன் என செப்பமாக படிக்கலாம்.  பகரம் கடுஒலி பெற்றுள்ளது. தமிழில் பரவன் மீனவரை குறிக்கும். கடல் பரவை எனப்படும்.
 
Serada 105 -121 AD தமிழில் சேர் ஆத > சேரன் ஆதன்  என செப்பமாக படிக்கலாம். சேர மன்னர்களே ஆதன் என்ற பெயர் கொண்டிருந்தனர். காட்டாக, இமய வரம்பன் நெடுஞ் சேரல் ஆதன்.
 
Azegan Malbagad  200 - 207 AD - தமிழில் அழகன் மால் பகடு என செப்பமாக படிக்கலாம். மால் -- கருமைக் கருத்து, பகடு - எருமை, ஆண் எருமையின் வலிமை ஒடு ஒப்பிட்டு இப்பெயரை சூட்டி இருக்கலாம்.
 
கிறித்தவ மதப் பரவலால் தமிழ்ப் பெயர்கள் ஒழிந்தன. ஆங்காங்கே கலப்பு பெயராக Tseyon / Tsion -   திசையன் போன்ற பெயர்கள் வழக்கூன்றின.
 
தமிழகம், சிந்துவெளி அல்லாத பிற நாகரிகங்களில் அகரம் ஒகரமாயும், வகரம் பகரமாயும், தகரம் சகரமாயும் திரிந்துள்ளன.  அப்பெயர்களை தமிழாய் படிக்க மூல எழுத்தையே நாட வேண்டும்.
 
மேற்கு நாகரிக மன்னர் பெயர்களும், கிழகக்கு நாகரிக மன்னர் பெயர்களும் தமிழாய் இருப்பது  இடைப்பட்ட சிந்து நாகரிகமும்  தமிழர் நாகரிகமே என்பதை இது வரை மறுத்து வந்தவர்களை நம்பிக்கைப்படுத்த உதவும். எதியோபிய மன்னர் பெயர்கள் தமிழல்ல என மறுப்போர்  சங்க இலக்கியஙகளில் கற்றத்துறைபோகிய தமிழ் அறிஞர்களை உசாவ வேண்டுகிறேன். அதோடு Indus Script Dravidian, 1995 என்ற நூலை மேற்கோளாக கொள்ளும்படி வேண்டுகறேன்.
 
மிகப் பலர் எண்ணுவது போல் மூலதாய் நாகரிகமான தமிழர் நாகரிகத்திற்கு ஆப்பிரிக்காவோ, சுமேரியாவோ, சிந்து வெளியோ அல்லது கிழக்கு நாகரிகங்களோ தாயகம் அல்ல. தமிழ் இலக்கியங்கள் தமிழர் தாயகத்தை தென்புலம் என்கின்றன. அயினும் அதற்கு தொல்லியல் சான்று ஏதும் இல்லை. இது தொடர்பாக தமிழ்நாடு தொல்லியல் துறை அடிக்கடல் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக    தெரிவித்தள்ளது. நல்ல முடிவுகள் வரும் என எதிர் பாரக்கலாம்.
 
 இப்பெயர் ஒப்பாய்வு ஒரு புதிய களமாக ஏற்கபட்டு விரிந்து பரவினால் தமிழ் நாகரிகத்தின் எல்லையும், காலமும் விரிந்து இருப்பதை நிறுவ இயலும்.
 
 
சேசாத்திரி. 

ethiopian rulers.doc

seshadri sridharan

unread,
Apr 6, 2011, 2:58:47 PM4/6/11
to ssesh...@gmail.com
ethiopian rulers.doc

விஜயராகவன்

unread,
Apr 6, 2011, 4:12:52 PM4/6/11
to மின்தமிழ்
திருவாளர் சேச்சாத்திரியே

தொடருக. . ரொம்ப நாளாக இணையத்தில் ஹாஸ்யங்களை பார்க்கவில்லை.


நன்றி

விஜயராகவன்


On Apr 6, 8:58 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> எதியோபிய நாகரிகர் முன்னோர் தமிழர்
>
> எதியோபிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம்
> தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிபது நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும்
> உண்மையில் எதியோபிய நாகரிகரே  எகிபது நாகரிகத்தையும் அமைத்ததாக

ொம்ப நா சொல்லப்படுகிறது. ஆயினும் மேலையர் எகிபதையே பெருமைபட

> ...
>
> read more »
>
>  ethiopian rulers.doc
> 79KViewDownload

வேந்தன் அரசு

unread,
Apr 6, 2011, 9:10:38 PM4/6/11
to mint...@googlegroups.com
தமிழரின் முன்னோர் எதியோப்பியர்னு ஏன் சொல்ல கூடாது?

--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

Raja sankar

unread,
Apr 6, 2011, 9:39:39 PM4/6/11
to mint...@googlegroups.com
கதையா சொல்லாம். கோலிவுட்டில் ஒரு படம் எடுக்கலாம். ஆனா அதை அறிவியல்ன்னு நம்ப யாரும் தயாரா இல்லை.

ராஜசங்கர்



2011/4/7 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

seshadri sridharan

unread,
Apr 7, 2011, 12:58:18 AM4/7/11
to mint...@googlegroups.com


2011/4/7 Raja sankar <errajasa...@gmail.com>
கதையா சொல்லாம். கோலிவுட்டில் ஒரு படம் எடுக்கலாம். ஆனா அதை அறிவியல்ன்னு நம்ப யாரும் தயாரா இல்லை.

ராஜசங்கர்

அமெரிக்க கருப்பின வரலாற்றிஞர் Clyde ahmad winters எகிபது போல் எதியோபிய அயலார் ஆட்சிக்கு உட்படாதது. இது அடிமைப்படாத கருப்பின நாகரிக உச்சத்தின் சான்று என்றதுடன் எதியோபிய மட்பாண்டங்கள் தமிழக பெருங்கற்கால மட்பாண்டங்களை மிகவும் ஒத்துள்ளன எனவே தமிழர்கள் எதியோ பியாவினர் என கருத்தரைக்கிறார். சுமேரிய நாகரிகத்தையும் எதியோபியரே உருவாக் கியதாக சொல்கிறார்.  ஆயினும் தமிழர் நாகரிகத்திற்கும் எதியோபிய நாகரிக்ததுற்கும்
ஒற்றுமை உள்ளதை ஒப்புக் கொள்கிறார் அவருடைய  கட்டுரை Google ல் Clyde ahmad winters on Ethiopia என குறிப்பிட்டால் வரும்.
சேசாத்திரி
 
2011/4/7 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
தமிழரின் முன்னோர் எதியோப்பியர்னு ஏன் சொல்ல கூடாது?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Raja sankar

unread,
Apr 7, 2011, 1:15:07 AM4/7/11
to mint...@googlegroups.com
எத்தியோப்பினர் தமிழ் பேசினார்கள் என்றோ அல்லது அங்கு பரவலாக தமிழ் எழுத்துக்கள் கண்டெடுப்பட்டதற்கான ஆய்வு ஏதும் இல்லாதவரையில் அப்படி இருக்கும் என்ற முன்முடிவு எடுத்துக்கொண்டு செய்யப்படும் ஏதும் எத்தியோப்பினர் தமிழர்கள் என நீருபிக்காது.

மண்பாண்டங்களை கொண்டு ஒற்றுமை இருக்கிறது என்று சொல்வதற்கு அவர்கள் தமிழர்களாக இருந்தார்கள் என்று சொல்வதற்கு இருக்கும் வித்தியாசம் சிலருக்கு புரியாததில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

ராஜசங்கர்

2011/4/7 seshadri sridharan <ssesh...@gmail.com>

N. Ganesan

unread,
Apr 7, 2011, 1:43:57 AM4/7/11
to மின்தமிழ்

On Apr 6, 11:58 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:

>
> > அமெரிக்க கருப்பின வரலாற்றிஞர் Clyde ahmad winters எகிபது போல் எதியோபிய
> > அயலார் ஆட்சிக்கு உட்படாதது. இது அடிமைப்படாத கருப்பின நாகரிக உச்சத்தின்
> > சான்று என்றதுடன் எதியோபிய மட்பாண்டங்கள் தமிழக பெருங்கற்கால மட்பாண்டங்களை
> > மிகவும் ஒத்துள்ளன எனவே தமிழர்கள் எதியோ பியாவினர் என கருத்தரைக்கிறார்.
> > சுமேரிய நாகரிகத்தையும் எதியோபியரே உருவாக் கியதாக சொல்கிறார்.  ஆயினும் தமிழர்
> > நாகரிகத்திற்கும் எதியோபிய நாகரிக்ததுற்கும்
> > ஒற்றுமை உள்ளதை ஒப்புக் கொள்கிறார் அவருடைய  கட்டுரை Google ல் Clyde ahmad
> > winters on Ethiopia என குறிப்பிட்டால் வரும்.
>
> சேசாத்திரி
>
>

இந்த Clyde ahmad winters உடன் வன்பாக்கம் பல வருடங்களுக்கு
முன்னர் வாதாடியிருக்கார்.

க.

விஜயராகவன்

unread,
Apr 7, 2011, 2:12:45 AM4/7/11
to மின்தமிழ்
On Apr 7, 3:10 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> தமிழரின் முன்னோர் எதியோப்பியர்னு ஏன் சொல்ல கூடாது?
>
> --
> வேந்தன் அரசு


சொல்லலாமே, என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். கீபோர்ட் உங்களுடையது,
தட்டுங்கள் வேண்டியபடி. உங்கள் அடிப்படை மனித உரிமைகள் உள்ளன.


விஜயராகவன்

செல்வன்

unread,
Apr 7, 2011, 3:09:33 AM4/7/11
to mint...@googlegroups.com
சொன்னா நம்ப மாட்டீங்க...இன்னிக்கு மதியம் சிகாகோல ஒரு எத்தியோப்பிய உணவகத்தில் உணவு அருந்திகொண்டே ஐபோனில் இந்த இழையை படித்து சிரித்து கொண்டிருந்தேன்.

எத்தியோப்பிய உணவுகளுக்கும் நமது தமிழ்நாட்டு கிராம உணவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு..எத்தியோப்பிய உனவை உண்டால் அது தமிழ்நாட்டு குக்கிராமத்து உணவை உண்டது போலவே இருக்கும்.இஞிச்ரா என்ற டெப்ளவர் மாவால் செய்யபட்ட தோசை நம்ம ஊரு கம்பு தோசை மாதிரி இருக்கும்..தொட்டுக்க கீரை, மஞ்சள் பருப்பு, சிகப்பு பருப்புன்னு அப்படியே நம்மை தமிழ்நாட்டு கிராமத்துக்கு அழைத்து செல்லும்.

எத்தியொப்பிய உனவகங்களில் ஸ்பூனோ,போர்க்கோ இல்லை.ஒரே வட்டிலில் குடும்பமா அமர்ந்து விரல்களால் உண்கிறார்கள்.

ஆனா அதுக்காக எத்தியோப்பியர்களின் முன்னோர் தமிழர்கள் என்பது பொருந்தாது.இருவருக்கும் ஒரே மூதாதை என சொல்லலாம்..ஆம், எத்தியோப்பியர்கள், தமிழர்கள் இருவருக்கும் லூசி தான் மூதாதை

7 ஏப்ரல், 2011 1:12 am அன்று, விஜயராகவன் <vij...@gmail.com> எழுதியது:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
செல்வன்



www.holyox.blogspot.com

Raja sankar

unread,
Apr 7, 2011, 3:14:50 AM4/7/11
to mint...@googlegroups.com

அது அரேபிய பண்பாடு. எச்சில் எல்லாம் பார்க்காம ஒரே வட்டிலில் இருந்து எல்லாரும் எடுத்து சாப்பிடுவாங்க.  தமிழ் பாடல்களில் இப்படி ஏதும் குறிப்பாவது இருக்கா?

ராஜசங்கர்



2011/4/7 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Apr 7, 2011, 3:18:21 AM4/7/11
to mint...@googlegroups.com
ஒரே தம்மை நாலு பேரு சேந்து அடிக்கறதும் இதும் ஒண்ணா?:-)

7 ஏப்ரல், 2011 2:14 am அன்று, Raja sankar <errajasa...@gmail.com> எழுதியது:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Raja sankar

unread,
Apr 7, 2011, 3:23:04 AM4/7/11
to mint...@googlegroups.com
தம் அடிச்சுட்டு மல்லாந்த சங்ககால தமிழ் அரசன் பத்தி ஏதும் இருந்தா சொல்லுங்க. உங்களுக்கு டாக்டர் பட்டம் கிடைக்கலின்னாலும் தமிழ் பாதுகாவலர், கீதுகாவலர் பட்டம் ஏதாவது கிடைக்கும்.

பின்ன தம் அடிக்கறத வச்சு எத்தியோப்பியருக்கும் தமிழர்தான் முன்னோர்ன்னு நீருபிக்கறது சும்மாவா?

ராஜசங்கர்

2011/4/7 செல்வன் <hol...@gmail.com>
ஒரே தம்மை நாலு பேரு சேந்து அடிக்கறதும் இதும் ஒண்ணா?:-)

செல்வன்

unread,
Apr 7, 2011, 3:24:15 AM4/7/11
to mint...@googlegroups.com
DSC_4408.jpg

இஞ்சீரா தோசை

IMG00229-20100101-2143.jpg

பொதுவான வட்டில்

செல்வன்

unread,
Apr 7, 2011, 3:28:23 AM4/7/11
to mint...@googlegroups.com
கண்ணப்ப நாயனார் பன்னிகறியை தான் தின்னு பாத்துட்டு சிவனுக்கு கொடுத்தார்

அதனால் ஷேரிங் புட் இஸ் தமிழ்/எத்தியோப்பிய கல்ச்சர்ன்னு நிருபணம் ஆயாச்சு:-)

டாக்டர் பட்டம் எங்கே?:-)


7 ஏப்ரல், 2011 2:23 am அன்று, Raja sankar <errajasa...@gmail.com> எழுதியது:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Raja sankar

unread,
Apr 7, 2011, 3:30:33 AM4/7/11
to mint...@googlegroups.com
தப்பு தப்பு,

சிவன் ஆரிய கடவுள், அவரை கும்பிட்டதால கண்ணப்ப நாயனார் தமிழ் கிடையாது.

சோ, நோ டாக்டர் பட்டம்.

ஆதாரம் ஒரு ஐயாயிரம் பத்தாயிரம் வருடம் முன்னதா இருந்தா ஓக்கே.

ராஜசங்கர்

2011/4/7 செல்வன் <hol...@gmail.com>
கண்ணப்ப நாயனார் பன்னிகறியை தான் தின்னு பாத்துட்டு சிவனுக்கு கொடுத்தார்

கி.காளைராசன்

unread,
Apr 7, 2011, 3:45:31 AM4/7/11
to mint...@googlegroups.com
எத்தியோப்பிய உணவுகளுக்கும் நமது தமிழ்நாட்டு கிராம உணவுக்கும் நெருங்கிய
தொடர்பு உண்டு..எத்தியோப்பிய உனவை உண்டால் அது தமிழ்நாட்டு குக்கிராமத்து
உணவை உண்டது போலவே இருக்கும்.இஞிச்ரா என்ற டெப்ளவர் மாவால் செய்யபட்ட
தோசை நம்ம ஊரு கம்பு தோசை மாதிரி இருக்கும்..தொட்டுக்க கீரை, மஞ்சள்
பருப்பு, சிகப்பு பருப்புன்னு அப்படியே நம்மை தமிழ்நாட்டு கிராமத்துக்கு
அழைத்து செல்லும்.

"எத்தியோப்பியாவில் வீட்டுவிழாக்களில் மணல் பரப்புவார்கள், வாழை கமுகு
மரங்கள் கட்டுவார்கள், தரையில் உட்கார்ந்து சம்மனம் போட்டு வாழை
இழையில்தான் சாப்பிடுவார்கள்" என்று அழகப்பா பல்கலைக்கழகத்தில் MBA
படித்த ஒரு எத்தியோப்பிய மாணவர் என்னிடம் கூறினார்.
அன்பன்
கி.காளைராசன்


--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

செல்வன்

unread,
Apr 7, 2011, 3:48:08 AM4/7/11
to mint...@googlegroups.com
""சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே !
பெரிகட் பெறினே யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே !
சிறு சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே !
பெருஞ்சோற்றாலும் நனி பல கலத்தன் மன்னே !
என்போடு தடிபடு வழியயல்லாம் எமக்கீயும் மன்னே !
அம்பொடு வேல்நுழை வழியயல்லாம் தான் நிற்கும் மன்னே !

கொஞ்சமா கள்ளு கிடைச்சாலும், நிரைய கிடைச்சாலும், கொஞ்சமா உணவு கிடைச்சாலும், நிரைய கிடைச்சாலும் எனக்கு பகிர்ந்து கொடுத்து உண்ணுவான் அதியமான்ன்னு ஒளவையார் பாடறார்

ஒளவையார் ஏன் எத்தியோப்பிய பெண்ணா இருக்க கூடாது?:-)

7 ஏப்ரல், 2011 2:30 am அன்று, Raja sankar <errajasa...@gmail.com> எழுதியது:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
Apr 7, 2011, 3:54:17 AM4/7/11
to mint...@googlegroups.com


7 ஏப்ரல், 2011 2:45 am அன்று, கி.காளைராசன் <kalair...@gmail.com> எழுதியது:

எத்தியோப்பியாவில் வீட்டுவிழாக்களில் மணல் பரப்புவார்கள், வாழை கமுகு
மரங்கள் கட்டுவார்கள்,  தரையில் உட்கார்ந்து சம்மனம் போட்டு  வாழை
இழையில்தான் சாப்பிடுவார்கள்" என்று அழகப்பா பல்கலைக்கழகத்தில் MBA
படித்த ஒரு எத்தியோப்பிய மாணவர் என்னிடம் கூறினார்.


ஆபிரிக்க கலாசாரங்கள் பலவற்றுஜ்க்கும் இது பொது என நினைக்கிரேன் ஐயா..மடகாஸ்கரில் இப்படி இலைபோட்டு உண்பதை டிராவல் சானலில் காட்டினார்கள்.

விஜயராகவன்

unread,
Apr 7, 2011, 4:14:31 AM4/7/11
to மின்தமிழ்
வடுவூர் துரைசாமி ஐயங்கார் 70 வருடம் முன் இருந்த பிரசித்தி பெற்ற கதை
எழுத்தாளர், தமிழ் இலக்கியத்திலேயெ கதைகளை எழுதி பணக்காரனாக ஆனவர் அவர்
ஒருவர்தன் என நினைக்கிறேன். அவருடை ஒரு தியரி , வடகலை ஐயங்கார்கள்தான்
பழைய எகிப்திற்க்கு குடியேறி, எகிப்து நாகரிகத்தை உண்டாக்கினார்கள் !!


விஜயராகவன்


On Apr 7, 9:09 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> சொன்னா நம்ப மாட்டீங்க...இன்னிக்கு மதியம் சிகாகோல ஒரு எத்தியோப்பிய உணவகத்தில்
> உணவு அருந்திகொண்டே ஐபோனில் இந்த இழையை படித்து சிரித்து கொண்டிருந்தேன்.
>
> எத்தியோப்பிய உணவுகளுக்கும் நமது தமிழ்நாட்டு கிராம உணவுக்கும் நெருங்கிய
> தொடர்பு உண்டு..எத்தியோப்பிய உனவை உண்டால் அது தமிழ்நாட்டு குக்கிராமத்து உணவை
> உண்டது போலவே இருக்கும்.இஞிச்ரா என்ற டெப்ளவர் மாவால் செய்யபட்ட தோசை நம்ம ஊரு
> கம்பு தோசை மாதிரி இருக்கும்..தொட்டுக்க கீரை, மஞ்சள் பருப்பு, சிகப்பு
> பருப்புன்னு அப்படியே நம்மை தமிழ்நாட்டு கிராமத்துக்கு அழைத்து செல்லும்.
>
> எத்தியொப்பிய உனவகங்களில் ஸ்பூனோ,போர்க்கோ இல்லை.ஒரே வட்டிலில் குடும்பமா
> அமர்ந்து விரல்களால் உண்கிறார்கள்.
>
> ஆனா அதுக்காக எத்தியோப்பியர்களின் முன்னோர் தமிழர்கள் என்பது
> பொருந்தாது.இருவருக்கும் ஒரே மூதாதை என சொல்லலாம்..ஆம், எத்தியோப்பியர்கள்,
> தமிழர்கள் இருவருக்கும்

> லூசி<http://en.wikipedia.org/wiki/Lucy_%28Australopithecus%29>தான்
> மூதாதை
>
> 7 ஏப்ரல், 2011 1:12 am அன்று, விஜயராகவன் <viji...@gmail.com> எழுதியது:


>
>
>
>
>
> > On Apr 7, 3:10 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > > தமிழரின் முன்னோர் எதியோப்பியர்னு ஏன் சொல்ல கூடாது?
>
> > > --
> > > வேந்தன் அரசு
>
> > சொல்லலாமே, என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். கீபோர்ட் உங்களுடையது,
> > தட்டுங்கள் வேண்டியபடி. உங்கள் அடிப்படை மனித உரிமைகள் உள்ளன.
>
> > விஜயராகவன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> செல்வன்
>

> www.holyox.blogspot.com- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Kannan

unread,
Apr 7, 2011, 4:49:01 AM4/7/11
to mint...@googlegroups.com
எதியோப்பியர்களுக்கும் தமிழர்களுக்கும் நிறைய ஒற்றுமைகளைக்
காட்டமுடியும். அச்சாக அசலாக நம்மைப் போலவே இருப்பர்.

Mother India (BBC) ஆவணப்படம் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த எதியோப்பியர்
கேரளாவில்தான் காலடி வைத்ததாகக் காட்டுகிறது. மேலும் அதர்வண வேதத்தில்
உள்ள ஒலிகள் பெரும்பாலும் வனவிலங்குகளின் ஒலிகளை ஒத்து இருப்பதும்
வேதங்கள் அக்காலத்தில் தோன்றி இருக்கலாம் என்றும் சொல்கிறது.
பேரா.பிச்சப்பனின் ஆய்வுகள் மீள்சோதனைக்கு உள்ளாக்கியுள்ளன. அச்சோதனைகள்
முடிந்தவுடன் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்ப்பில், `தமிழர்களின்
ஆப்பிரிக்கத் தோற்றம்` பற்றிப் பேசச்சொல்லலாம்.

இப்போதுதான் இந்தியாவில் `கோடி` என்பது பிச்சைக்காசு என்றாகிவிட்டதே! நம்
மாணவர்கள் எதியோப்பியா போய் ஆய்வு செய்து வரலாமே! என்ன தடை? நம்ம
தமிழ்த்துறை இன்னும் ”புதுக்கவிதையில் ரத்தம்” என்பது போன்ற
தலைப்புகளில்தான் முனைவர் பட்ட ஆய்வேடுகள் தயார் செய்து கொண்டுள்ளனவா?

இந்தியாவிலிருந்து பண்பாடு ஆப்பிரிக்கா போயிருக்கிறது என்று ஒரு தமிழர்
காட்டுவாராயின் அவருக்கு நோபல் பரிசு நிச்சயம்!

நா.கண்ணன்

2011/4/7 செல்வன் <hol...@gmail.com>
>

sharadha subramanian

unread,
Apr 7, 2011, 5:37:51 AM4/7/11
to mint...@googlegroups.com
என் மகன் u.s.லிருந்து அனுப்பிய ஒர் ப்கிர்வை மின் தமிழ் குழுமத்திற்கு அனுப்பி இருக்கிரேன்,தமிழர்கள் மட்டும் இல்லை இந்தியாவே ஒரு கலத்தில் உலகம் முழுதும் வியாபித்து இருக்குமோஎன நினைக்கத்தோன்றுகிற்து.

----- Forwarded Message ----
From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Thu, 7 April, 2011 2:19:01 PM
Subject: Re: [MinTamil] Re: எதியோபிய நாகரிகர் முன்னோர் தமிழர்

எதியோப்பியர்களுக்கும் தமிழர்களுக்கும் நிறைய ஒற்றுமைகளைக்
காட்டமுடியும். அச்சாக அசலாக நம்மைப் போலவே இருப்பர்.

Mother India (BBC) ஆவணப்படம் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த எதியோப்பியர்
கேரளாவில்தான் காலடி வைத்ததாகக் காட்டுகிறது. மேலும் அதர்வண வேதத்தில்
உள்ள ஒலிகள் பெரும்பாலும் வனவிலங்குகளின் ஒலிகளை ஒத்து இருப்பதும்
வேதங்கள் அக்காலத்தில் தோன்றி இருக்கலாம் என்றும் சொல்கிறது.
பேரா.பிச்சப்பனின் ஆய்வுகள் மீள்சோதனைக்கு உள்ளாக்கியுள்ளன. அச்சோதனைகள்
முடிந்தவுடன் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்ப்பில், `தமிழர்களின்
ஆப்பிரிக்கத் தோற்றம்` பற்றிப் பேசச்சொல்லலாம்.

இப்போதுதான் இந்தியாவில் `கோடி` என்பது பிச்சைக்காசு என்றாகிவிட்டதே! நம்
மாணவர்கள் எதியோப்பியா போய் ஆய்வு செய்து வரலாமே! என்ன தடை? நம்ம
தமிழ்த்துறை இன்னும் ”புதுக்கவிதையில் ரத்தம்” என்பது போன்ற
தலைப்புகளில்தான் முனைவர் பட்ட ஆய்வேடுகள் தயார் செய்து கொண்டுள்ளனவா?

இந்தியாவிலிருந்து பண்பாடு ஆப்பிரிக்கா போயிருக்கிறது என்று ஒரு தமிழர்
காட்டுவாராயின் அவருக்கு நோபல் பரிசு நிச்சயம்!

நா.கண்ணன்

2011/4/7 செல்வன் <hol...@gmail.com>
>
> சொன்னா நம்ப மாட்டீங்க...இன்னிக்கு மதியம் சிகாகோல ஒரு எத்தியோப்பிய உணவகத்தில் உணவு அருந்திகொண்டே ஐபோனில் இந்த இழையை படித்து சிரித்து கொண்டிருந்தேன்.
>
> எத்தியோப்பிய உணவுகளுக்கும் நமது தமிழ்நாட்டு கிராம உணவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு..எத்தியோப்பிய உனவை உண்டால் அது தமிழ்நாட்டு குக்கிராமத்து உணவை உண்டது போலவே இருக்கும்.இஞிச்ரா என்ற டெப்ளவர் மாவால் செய்யபட்ட தோசை நம்ம ஊரு கம்பு தோசை மாதிரி இருக்கும்..தொட்டுக்க கீரை, மஞ்சள் பருப்பு, சிகப்பு பருப்புன்னு அப்படியே நம்மை தமிழ்நாட்டு கிராமத்துக்கு அழைத்து செல்லும்.
>
> எத்தியொப்பிய உனவகங்களில் ஸ்பூனோ,போர்க்கோ இல்லை.ஒரே வட்டிலில் குடும்பமா அமர்ந்து விரல்களால் உண்கிறார்கள்.
>
> ஆனா அதுக்காக எத்தியோப்பியர்களின் முன்னோர் தமிழர்கள் என்பது பொருந்தாது.இருவருக்கும் ஒரே மூதாதை என சொல்லலாம்..ஆம், எத்தியோப்பியர்கள், தமிழர்கள் இருவருக்கும் லூசி தான் மூதாதை
>
> 7 ஏப்ரல், 2011 1:12 am அன்று, விஜயராகவன் <vij...@gmail.com> எழுதியது:
>>
>> On Apr 7, 3:10 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
>> > தமிழரின் முன்னோர் எதியோப்பியர்னு ஏன் சொல்ல கூடாது?
>> >
>> > --
>> > வேந்தன் அரசு

Tthamizth Tthenee

unread,
Apr 7, 2011, 5:52:15 AM4/7/11
to mint...@googlegroups.com
”மேலும் அதர்வண வேதத்தில்

உள்ள ஒலிகள் பெரும்பாலும் வனவிலங்குகளின் ஒலிகளை ஒத்து இருப்பதும்
வேதங்கள் அக்காலத்தில் தோன்றி இருக்கலாம் என்றும் சொல்கிறது.”




நம்முடைய சாமவேதத்தின் உச்சரிப்பும் ஒலியும்
இஸ்லாமிய ஓதுதலின் உச்சரிப்புக்கும் ஒலிக்கும் ஒத்துப்போகிறது

இங்கே துபாயில் இவர்களின் வேதத்தைக் கேட்கும்போதெல்லாம் சாமவேதத்தின் நினைவு வருகிறது

அன்புடன்
தமிழ்த்தேனீ



2011/4/7 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Apr 7, 2011, 5:49:39 AM4/7/11
to mint...@googlegroups.com
2011/4/7 sharadha subramanian <shara...@yahoo.co.in>:

> என் மகன் u.s.லிருந்து அனுப்பிய ஒர் ப்கிர்வை மின் தமிழ் குழுமத்திற்கு அனுப்பி
> இருக்கிரேன்,தமிழர்கள் மட்டும் இல்லை இந்தியாவே ஒரு கலத்தில் உலகம் முழுதும்
> வியாபித்து இருக்குமோஎன நினைக்கத்தோன்றுகிற்து.
>

நமது புராணங்களை நம்பினால் அப்படித்தான் சொல்கின்றன. அது சாத்யமில்லை
என்று சொல்லமுடியாது. Human evolution is full of riddles. இந்தியாவில்
இத்துறைகளெல்லாம் இன்னும் வளரவே இல்லை. இந்தியப்படிப்பு என்பது ஒரு
அலைபோல் இங்கும் அங்கும் ஓடுகிறது. ஒரு காலத்தில் பி.காம், இப்போ ஐடி.
அடிப்படை அறிவியலில் ஆர்வம் இன்னும் வளரவில்லை. இத்துறைகள் முன்னேறி
இந்தியர்கள் ஆய்வில் இறங்கினால் என்ன ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றனவோ!

ஆனால் அதுவரை வெறும் arm chair speculations குறைத்துக் கொண்டால் தெளிவு


கிடைக்கும்.

உங்கள் பெயர் சேஷாத்ரி என்பது. சேசாத்திரி என்று எழுதுவது புதுமையாய்
உள்ளது. எனது நண்பர் எழுதுவார் நா.விச்வநாதன் என்று :-)

நா.கண்ணன்

Maravanpulavu K. Sachithananthan

unread,
Apr 7, 2011, 5:57:25 AM4/7/11
to மின்தமிழ்
இந்திய அரசின் ஐசிசிஆர் உதவியுடன் எதியோப்பியப் பல்கலைக் கழக அழைப்பை
ஏற்று,
கன்னியாகுமரி மாவட்ட ஆய்வாளர் முனைவர் க. பத்மநாதன் அவர்கள் எதியோப்பியா
சென்று வந்ததுடன் தமிழர் எதியோப்பியத் தொடர்புகள் பற்றிய தமது ஆய்வுத்
தகவல் மற்றும் கருத்துரைகளை, ஆய்வுக் களஞ்சியம் மாத இதழில் தொடர்ச்சியாக
எழுதிவருகிறார்கள்,
அவ்வாறே மெக்சிக்கோ சென்றுவந்த அவர், அங்குள்ள தமிழர் மரபுத்
தொடர்புகைளைத் தொடர்ந்து எழுதிவருகிறாகள்.
அக்கட்டுரைகளையும் படிக்கலாம், மின்தமிழ் குழுமத்தாருடன் பகிரலாம்.
நன்றி

On Apr 7, 12:09 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> சொன்னா நம்ப மாட்டீங்க...இன்னிக்கு மதியம் சிகாகோல ஒரு எத்தியோப்பிய உணவகத்தில்
> உணவு அருந்திகொண்டே ஐபோனில் இந்த இழையை படித்து சிரித்து கொண்டிருந்தேன்.
>
> எத்தியோப்பிய உணவுகளுக்கும் நமது தமிழ்நாட்டு கிராம உணவுக்கும் நெருங்கிய
> தொடர்பு உண்டு..எத்தியோப்பிய உனவை உண்டால் அது தமிழ்நாட்டு குக்கிராமத்து உணவை
> உண்டது போலவே இருக்கும்.இஞிச்ரா என்ற டெப்ளவர் மாவால் செய்யபட்ட தோசை நம்ம ஊரு
> கம்பு தோசை மாதிரி இருக்கும்..தொட்டுக்க கீரை, மஞ்சள் பருப்பு, சிகப்பு
> பருப்புன்னு அப்படியே நம்மை தமிழ்நாட்டு கிராமத்துக்கு அழைத்து செல்லும்.
>
> எத்தியொப்பிய உனவகங்களில் ஸ்பூனோ,போர்க்கோ இல்லை.ஒரே வட்டிலில் குடும்பமா
> அமர்ந்து விரல்களால் உண்கிறார்கள்.
>
> ஆனா அதுக்காக எத்தியோப்பியர்களின் முன்னோர் தமிழர்கள் என்பது
> பொருந்தாது.இருவருக்கும் ஒரே மூதாதை என சொல்லலாம்..ஆம், எத்தியோப்பியர்கள்,
> தமிழர்கள் இருவருக்கும்

> லூசி<http://en.wikipedia.org/wiki/Lucy_%28Australopithecus%29>தான்
> மூதாதை
>
> 7 ஏப்ரல், 2011 1:12 am அன்று, விஜயராகவன் <viji...@gmail.com> எழுதியது:


>
>
>
>
>
>
>
>
>
> > On Apr 7, 3:10 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > > தமிழரின் முன்னோர் எதியோப்பியர்னு ஏன் சொல்ல கூடாது?
>
> > > --
> > > வேந்தன் அரசு
>
> > சொல்லலாமே, என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். கீபோர்ட் உங்களுடையது,
> > தட்டுங்கள் வேண்டியபடி. உங்கள் அடிப்படை மனித உரிமைகள் உள்ளன.
>
> > விஜயராகவன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> செல்வன்
>

> www.holyox.blogspot.com

கி.காளைராசன்

unread,
Apr 7, 2011, 6:42:48 AM4/7/11
to mint...@googlegroups.com
”மேலும் அதர்வண வேதத்தில்
உள்ள ஒலிகள் பெரும்பாலும் வனவிலங்குகளின் ஒலிகளை ஒத்து இருப்பதும்
வேதங்கள் அக்காலத்தில் தோன்றி இருக்கலாம் என்றும் சொல்கிறது.”

நம்முடைய சாமவேதத்தின் உச்சரிப்பும் ஒலியும்

வேண்டுதலில் கடைசிநிலை.
அழுது அடம்செய்து இறைவனை அழைக்கும் முறை.
சரியா?
அன்பன்


கி.காளைராசன்

--

s.bala subramani B+ve

unread,
Apr 7, 2011, 7:41:06 AM4/7/11
to mint...@googlegroups.com
ஆய்வு களஞ்சியம் பத்மநாபன் அவர்கள் தான் என்னுடிய முதல் கள ஆய்வுக்கு உடன் வந்தவர்

கன்னியாகுமரி கு ஆய்வு தொடர்பாக செல்பவர்கள் அவரை பார்க்கமால் வர முடியாது 
மிகவும் சுறு சுறுப்பானவர் பல வருடம்களாக ஆர்வம் காட்டுபவர் 
அடிப்படையில்  SBI இல் பணிபுரிந்தாலும் ஒரு பத்திரிக்கையாளர் 

அவரின் எதியோப்பிய கட்டுரைகளை நானும் படித்தேன் 

விரைவில் ஸ்கேன் செய்து அனுப்புகிறேன் 

2011/4/7 Maravanpulavu K. Sachithananthan <tami...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S.Balasubramani B+ve

s.bala subramani B+ve

unread,
Apr 7, 2011, 7:44:18 AM4/7/11
to mint...@googlegroups.com


2011/4/7 s.bala subramani B+ve <sunke...@gmail.com>
ஆய்வு களஞ்சியம் பத்மநாபன் அவர்கள் தான் என்னுடிய முதல் கள ஆய்வுக்கு உடன் வந்தவர்களில்
அவரும் ஒருவர்  



--
S.Balasubramani B+ve

வேந்தன் அரசு

unread,
Apr 7, 2011, 7:57:16 AM4/7/11
to mint...@googlegroups.com


7 ஏப்ரல், 2011 1:15 am அன்று, Raja sankar <errajasa...@gmail.com> எழுதியது:

எத்தியோப்பினர் தமிழ் பேசினார்கள் என்றோ அல்லது அங்கு பரவலாக தமிழ் எழுத்துக்கள் கண்டெடுப்பட்டதற்கான ஆய்வு ஏதும் இல்லாதவரையில் அப்படி இருக்கும் என்ற முன்முடிவு எடுத்துக்கொண்டு செய்யப்படும் ஏதும் எத்தியோப்பினர் தமிழர்கள் என நீருபிக்காது.

 
 
சிந்து எழுத்துகளே எந்த மொழி என மெய்பிக்கப்படா நிலையில் எதியோப்பிய எழுத்துகள் தமிழ் என எப்படி நிறுவ இயலும்
 
சொமாலிய நெடுங்கணக்கு இந்திய மரபு போல், க கா கி கீ என்று இருக்கும் என்பதை சொமாலிய போரின் போது அமெரிக்க தொலைக்காட்சியில் கண்டேன். அவர்கள் ரோமன் எழுத்துகளை பயன்படுத்துகிறார்கள்.
 

N. Kannan

unread,
Apr 7, 2011, 9:20:21 AM4/7/11
to mint...@googlegroups.com
வேடிக்கை! தொலைக்காட்சியில் எதியோப்பியா பற்றிய ஒரு போட்டோஜெர்னல்...

1.எதியோப்பியா மனித குலத்தொட்டில் என்கிறது ஆவணம். அங்கு 2மில்லியன்
வருடத்திற்கு முந்திய மனிதப் பரிணாம எச்சங்கள் கிடைக்கின்றனவாம்.

2. எதியோப்பியர்கள் தமிழர்கள் மிகவும் பாராட்டும் சிலம்புப் பயிற்சியில்
மிகவும் தேர்ந்தவர்களாக உள்ளனர்.

3. சங்கப்பாடல்களில் அதிகம் காணக்கூடிய விழுப்புண் பெற்றவர்களாக ஒவ்வொரு
ஆணும் திகழ்கிறான்.

4. பெண்ணிற்கு ருது மங்களம் செய்வது போல் ஆணுக்கும் உண்டு. அது
என்னவெனில் ஏழு மாடுகளை வரிசையாக நிறுத்தி வைத்து இவன் அதன் மீது தாவி
ஏறி நடந்து வெளியே வருவது. இராதையைப் பெண் கேட்க கண்ணன் ஏழு காளைகளை
ஏறித்தழுவி அடக்கினான் என்று பாகவதம் சொல்லும்.

5. கருப்பு உடலில் வெள்ளைப்பூச்சு அழகு தருகிறது என்று எதியோப்பியர்
நினைக்கின்றனர். உடலெங்கும் 18 திருமண் இட்டுக் கொள்வதோ சாம்பலை (விபூதி)
பூசிக் கொள்வதோ இந்த வழக்கத்தின் நளினமான ஒரு எச்சமாக இருக்கலாம்.

6. எதியோப்பியப் பெண்கள் மாரப்பு அணிவதில்லை. 20ம் நூற்றாண்டின்
ஆரம்பகாலம் வரைக்கும் தமிழகத்தில் ஆணும், பெண்ணும் திறந்த மார்புடன்
இருந்துள்ளனர். நமது சிற்பங்களே அதற்கு மற்றொரு சாட்சி!

பாதியிலிருந்துதான் பார்த்தேன். இவ்வளவு ஒற்றுமை தெரிந்தது.

நா.கண்ணன்

Raja sankar

unread,
Apr 7, 2011, 10:27:01 AM4/7/11
to mint...@googlegroups.com
கண்ணன்,

நீங்கள் சொல்லிய அனைத்தும் பொதுவாக எல்லா ஆப்பிரிக்க இனங்களும் செய்வதுதான். கூடவே தமிழகத்தில் கேள்வி படாதவையும் செய்வதுண்டு. ஒற்றுமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு ஆராயமல் எல்லாவற்றையும் ஒற்று நோக்கி ஆராய்ந்தால் தான் அது சரி.

ஒரு பழக்கம் ஒருவரிடம் இருக்கிறது என்பதே அது இன்னொருவரிடம் இருந்து வந்ததற்கான சான்று அல்ல.

 உங்களுக்கு தெரியாத்தல்ல, அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒரே கண்டுபிடிப்பை இருவர் தனித்தனியாக கண்டுபிடிப்பது சாத்தியம். இதற்கு பல உதாரணங்களை தரமுடியும். அப்படி இருக்கும் போது சில பழக்கங்கள் எத்தியோப்பியரிடம் இருப்பதே அவர்கள் தமிழர்கள் ஆக்காது. தமிழர்கள் இங்கிருந்து அங்கு போனதிற்கு பதிலாக அங்கிருந்தும் இங்கு வந்திருக்கலாமே?

இதே போன்ற ஒன்று தான் நால்வகை வர்க்க அமைப்பு முறையும். உலகின் எல்லா சமூகங்களிலும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் நால்வகை வர்க்க அமைப்பு இருந்ததை பார்க்க இயலும் அப்படி இருக்க அவைகள் அனைத்தும் இந்தியாவின் சாதியில் இருந்துதான் போனது என சொல்ல முடியாது. சொன்னால் அதற்கு பெயர் ஆராய்ச்சியும் அல்ல.


ராஜசங்கர்


2011/4/7 N. Kannan <navan...@gmail.com>

விஜயராகவன்

unread,
Apr 7, 2011, 10:34:05 AM4/7/11
to மின்தமிழ்
அப்புறம் யாராவது தமிழர்கள் ஸ்பெய்ன் சென்றார்கள் என சொல்லப்போரார்கள் -
ஜல்லிக்கட்டு ஆதாரம் வைத்து

விஜயராகவன்


On Apr 7, 4:27 pm, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> கண்ணன்,
>
> நீங்கள் சொல்லிய அனைத்தும் பொதுவாக எல்லா ஆப்பிரிக்க இனங்களும் செய்வதுதான்.
> கூடவே தமிழகத்தில் கேள்வி படாதவையும் செய்வதுண்டு. ஒற்றுமைகளை மட்டும்
> எடுத்துக்கொண்டு ஆராயமல் எல்லாவற்றையும் ஒற்று நோக்கி ஆராய்ந்தால் தான் அது
> சரி.
>
> ஒரு பழக்கம் ஒருவரிடம் இருக்கிறது என்பதே அது இன்னொருவரிடம் இருந்து வந்ததற்கான
> சான்று அல்ல.
>
>  உங்களுக்கு தெரியாத்தல்ல, அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒரே கண்டுபிடிப்பை
> இருவர் தனித்தனியாக கண்டுபிடிப்பது சாத்தியம். இதற்கு பல உதாரணங்களை
> தரமுடியும். அப்படி இருக்கும் போது சில பழக்கங்கள் எத்தியோப்பியரிடம் இருப்பதே
> அவர்கள் தமிழர்கள் ஆக்காது. தமிழர்கள் இங்கிருந்து அங்கு போனதிற்கு பதிலாக
> அங்கிருந்தும் இங்கு வந்திருக்கலாமே?
>
> இதே போன்ற ஒன்று தான் நால்வகை வர்க்க அமைப்பு முறையும். உலகின் எல்லா
> சமூகங்களிலும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் நால்வகை வர்க்க அமைப்பு இருந்ததை
> பார்க்க இயலும் அப்படி இருக்க அவைகள் அனைத்தும் இந்தியாவின் சாதியில்
> இருந்துதான் போனது என சொல்ல முடியாது. சொன்னால் அதற்கு பெயர் ஆராய்ச்சியும்
> அல்ல.
>
> ராஜசங்கர்
>

> 2011/4/7 N. Kannan <navannak...@gmail.com>


>
>
>
> > 1.எதியோப்பியா மனித குலத்தொட்டில் என்கிறது ஆவணம். அங்கு 2மில்லியன்
> > வருடத்திற்கு முந்திய மனிதப் பரிணாம எச்சங்கள் கிடைக்கின்றனவாம்.
>
> > 2. எதியோப்பியர்கள் தமிழர்கள் மிகவும் பாராட்டும் சிலம்புப் பயிற்சியில்
> > மிகவும் தேர்ந்தவர்களாக உள்ளனர்.
>
> > 3. சங்கப்பாடல்களில் அதிகம் காணக்கூடிய விழுப்புண் பெற்றவர்களாக ஒவ்வொரு
> > ஆணும் திகழ்கிறான்.
>
> > 4. பெண்ணிற்கு ருது மங்களம் செய்வது போல் ஆணுக்கும் உண்டு. அது
> > என்னவெனில் ஏழு மாடுகளை வரிசையாக நிறுத்தி வைத்து இவன் அதன் மீது தாவி
> > ஏறி நடந்து வெளியே வருவது. இராதையைப் பெண் கேட்க கண்ணன் ஏழு காளைகளை
> > ஏறித்தழுவி அடக்கினான் என்று பாகவதம் சொல்லும்.
>
> > 5. கருப்பு உடலில் வெள்ளைப்பூச்சு அழகு தருகிறது என்று எதியோப்பியர்
> > நினைக்கின்றனர். உடலெங்கும் 18 திருமண் இட்டுக் கொள்வதோ சாம்பலை (விபூதி)
> > பூசிக் கொள்வதோ இந்த வழக்கத்தின் நளினமான ஒரு எச்சமாக இருக்கலாம்.
>
> > 6. எதியோப்பியப் பெண்கள் மாரப்பு அணிவதில்லை. 20ம் நூற்றாண்டின்
> > ஆரம்பகாலம் வரைக்கும் தமிழகத்தில் ஆணும், பெண்ணும் திறந்த மார்புடன்
> > இருந்துள்ளனர். நமது சிற்பங்களே அதற்கு மற்றொரு சாட்சி!
>

> > பாதியிலிருந்துதான் பார்த்தேன். இவ்வளவு ஒற்றுமை தெரிந்தது.- Hide quoted text -

s.bala subramani B+ve

unread,
Apr 7, 2011, 11:12:42 AM4/7/11
to mint...@googlegroups.com


2011/4/7 விஜயராகவன் <vij...@gmail.com>
அப்புறம் யாராவது தமிழர்கள் ஸ்பெய்ன் சென்றார்கள் என சொல்லப்போரார்கள் -
ஜல்லிக்கட்டு ஆதாரம் வைத்து

விஜயராகவன்

basque,catalan 

Raja sankar

unread,
Apr 7, 2011, 11:33:22 AM4/7/11
to mint...@googlegroups.com
தமிழர்கள் கையால் தான் சாப்பிடுகின்றனர். எல்லோரும் கையால் சாப்பிடுவதால் தமிழர்கள் தான் எல்லோருக்கும் முன்னோர்.

ஒரே ஸ்டேட்மெண்ட் போதுமே? அப்புறம் எதுக்கு ஆராய்ச்சி, செலவு எல்லாம்.

ராஜசங்கர்



2011/4/7 விஜயராகவன் <vij...@gmail.com>
அப்புறம் யாராவது தமிழர்கள் ஸ்பெய்ன் சென்றார்கள் என சொல்லப்போரார்கள் -

N. Kannan

unread,
Apr 7, 2011, 7:27:05 PM4/7/11
to mint...@googlegroups.com
அன்பின் ராஜ சங்கர்:

ஒத்துக்கொள்கிறேன்.

எங்கள் மதுரைப் பல்கலைக்கழக மரபுத்துறை ஆப்பிரிக்க மக்களுக்கும்,
மதுரைக்கள்ளர்களுக்கும் மரபு வழித்தொடர்பு இருப்பதை நிரூபித்தபின் தான்
இம்மாதிரி ஒப்புமைக்கே துணிந்தேன் நான். (மின்தமிழில் இது குறித்து
நீங்களெல்லாம் வருவதற்கு முன் அலசி இருக்கிறோம். தேடுங்கள் கிடைக்கும்)

அடிப்படையாக சில நிரூபணங்கள் ஆகியிருக்க வேண்டும். இல்லையெனில் ஸ்பெயின்
மடாடேர்க்கும் மஞ்சவிரட்டிற்கும் தொடர்புண்டு என்று எழுத வாய்ப்புள்ளது.

நா.கண்ணன்

2011/4/7 Raja sankar <errajasa...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

seshadri sridharan

unread,
Apr 7, 2011, 11:20:16 PM4/7/11
to mint...@googlegroups.com
4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலக மொத்த மக்கள் தொகை சற்றொப்ப வெறும் 4 கோடி தான் என அறிஞர்கள் முடிவு கட்டியிருக்கிறார்கள். இக் கால் வழங்கும் மொழிகளை  40 - 50 மொழிக் குழுக்களாக வகைப்படுத்தி உள்ளனர் அறிஞர் பெரு மக்கள். 2,500 ஆண்டுகளுக்கு முன்னம் இம்மொழிக் குழுவின் ஒவ்வொன்றிலும் ஒரேஒரு மொழி தன் வட்டார வழக்குகளுடன் பேசப்பட்டன. அவ் வட்டார வழக்குகள் பின் தனி மொழிகள் ஆகி ஆயிரக்கணக்கில் பெருகின. இம்மொழிக் குழுவின் முந்து மொழிகள் தம்முள் இலக்கணம், சொற் பொருள் ஆகியவற்றால் ஒத்திருக்கவே இவையும் ஒரு மூலயில் மொழியில் இருந்து வந்திருக்க வேண்டும் என்கின்றனர்  அறிஞர். அதற்கு nostratics என பெயரிட்டுள்ளனர். மேற் சொன்ன மக்கள் தொகை, nostratics நோக்கில் தமிழ் முன்னோர் வேறு இடத்தில் இருந்து எதியோபியாவில் குடியேறியவர்கள் என கொள்ள இடம் உண்டு. ஆதலால் தமிழ் அங்கே பேசப்பட்டிருக்க வேண்டும் அல்லது தமிழர் நாகரிகத்தை உருவாக்கி இருக்க வேண்டும் என்பதில் தவறு இல்லை. அதற்கான சான்று தான் அரசர்களின் இத் தமிழ்ப் பெயர்கள்.
காரி, ஓரி, அழகன், கோப் பெரும், எருதன், அதியன், கந்தை, காளன், சேரன் ஆதன் என்பன அவற்றுள் சில தை எவரும் மறுக்க இயலாது.
 
சேசாத்திரி.

2011/4/8 N. Kannan <navan...@gmail.com>

devoo

unread,
Apr 8, 2011, 1:52:37 AM4/8/11
to மின்தமிழ்
அறிவியல் முறையில் கள்ளர்களின் தோற்றம் கண்டுபிடிப்பு..

மரபணு ஆய்வு முடிவு—1
நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் 24-09-2004 செய்தி(தமிழாக்கம்)

மதுரை பகுதியைச் சேர்ந்த முக்குலத்தோரின் மரபணு குறியீடுகளும் (GENETIC
MARKERS) மலேசியா, நியுகினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வாழும்
பழங்குடி மக்களின் மரபணுக்குறியீடுகளும்---ஒரே மாதிரியாக ஒத்துப்
போகின்றன.

45,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா நோக்கி
மனிதர்கள் அலை அலையாக பரவினர். அதன் விளைவாக ஐரோப்பா- விலும்
அமெரிக்காவிலும் தென்னாசியாவிலும் சீனத்திலும் மனிதர்கள் சிதறிப்
பரவினர்.

http://mazhavaraayarpages.blogspot.com/2011/02/2.html


தேவ்

வேந்தன் அரசு

unread,
Apr 8, 2011, 7:32:01 AM4/8/11
to mint...@googlegroups.com


7 ஏப்ரல், 2011 11:20 pm அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:

 அதற்கான சான்று தான் அரசர்களின் இத் தமிழ்ப் பெயர்கள்.
காரி, ஓரி, அழகன், கோப் பெரும், எருதன், அதியன், கந்தை, காளன், சேரன் ஆதன் என்பன அவற்றுள் சில தை எவரும் மறுக்க இயலாது.
 
 
 
பெயர்களை தவிர்த்து அம்மொழி சொற்களுக்கும் தமிழுக்கும் என்ன உறவு இருக்கு என ஆயணும்
 
 
என்ன தான் ஆங்கிலத்தை தமிழில் கலந்தாலும் பண்ணித்தமிழில் பண்ணி வந்த காரணம் தமிழ் மரபில் ஒட்ட முடியாத காரணம்தானே.
 
 
 
--

seshadri sridharan

unread,
Apr 8, 2011, 7:43:56 AM4/8/11
to mint...@googlegroups.com
இக்கூற்று நான் உள்ளிட்ட எல்லாரும்  சொல்லவது தான். இதற்கு தமிழறிஞர்கள் முன்வரவேண்டும். தமிழ் இன்றும் உளது ஆனால் பழைய எதியோபிய மொழி எப்போதோ அழிந்துவிட்டது.
 
சேசாத்திரி.

2011/4/8 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

N. Kannan

unread,
Apr 8, 2011, 8:03:06 AM4/8/11
to mint...@googlegroups.com
2011/4/8 seshadri sridharan <ssesh...@gmail.com>:

> இக்கூற்று நான் உள்ளிட்ட எல்லாரும்  சொல்லவது தான். இதற்கு தமிழறிஞர்கள்
> முன்வரவேண்டும். தமிழ் இன்றும் உளது ஆனால் பழைய எதியோபிய மொழி எப்போதோ
> அழிந்துவிட்டது.
>

இங்கு சில விஷயங்களை நாம் அவதானிக்க வேண்டியுள்ளது நண்பரே!

தமிழ் என்றுமுளது என்பது உணர்வுக்கூற்று. அதை அறிவியல் கூற்றாக உலகின்
முன் காட்டாதவரை அதற்கு அங்கீகாரமில்லை.

மனித இனம் ஆப்பிரிக்காவில்தான் தோற்றமுற்றது என்பது சமகால அறிவியல்
புரிதல். அதை மாற்றி தமிழர்கள் எதியோப்பியா போய் அங்கு அவர்களுக்கு
தமிழ்ச் சொல்லித்தந்ததால் இப்பெயர்கள் ஒன்றுபோல் தெரிகின்றன என்பதை
‘சாய்வுநாற்காலி’ அறிவியல் என்பர் வேடிக்கையாக!!. களப்பணி செய்து
நிரூபிக்க வேண்டிய உண்மைகள் அவை.

ஆதாரங்கள் உள்ளதெனில் அவைகளை நம் பார்வைக்கு வைத்தால் நலம். முனைவர்
பத்மநாபன் கட்டுரைகளை யாராவது முன்வைக்கலாம். மரபு விக்கியில் நிச்சயம்
சேர்க்கலாம்.

நா.கண்ணன்

s.bala subramani B+ve

unread,
Apr 8, 2011, 8:07:57 AM4/8/11
to mint...@googlegroups.com
என்னை  தொடர்பு  கொள்ளலாம் . மேலும் சில தகவல்களை தருகிறேன் உங்கள் முயற்சியை பண்பாட்டு தொடர்புடன் பிணைத்து செய்யலாம் 
proto sahara மக்களை பற்றியும் டான்சானியா தொடர்புகளையும் அங்கு உள்ள சாஞ்சிபார் (கோமுட்டி லேன்ட் ) துறைமுகத்துடன் சீன மற்றும் தென் நில மக்களின் 9 degree channel இன் வழி மூலம்  தொடர்பையும் கணக்கில் எடுத்து கொள்ளுங்கள் 

வாழ்த்துக்கள் 

சிவ பாலசுப்ரமணி 
 99402 40847
please SMS ( most of the times at survey)


seshadri sridharan

unread,
Apr 8, 2011, 8:16:28 AM4/8/11
to mint...@googlegroups.com, N. Kannan
அதன் ஒரு முயற்சியாகவே நான் எதியோபிய மன்னர் பெயர்களோடு நில்லாமல் 'சப்பானியர் பெயர்களில் தமிழ் வடிவம்' என்ற கட்டுரையை கடந்த ஞாயிறு மின்தமிழுக்கு அனுப்பி இருந்தேன் இவ்விரண்டிலும் பிற நாகரிக மன்னர் பெயர்களையும் பொருந்த மேற்கோள் காட்டி இருந்தேன். எனினும் தேர்ந்த பலரும் ஈடுபட்டால் நீங்கள் கூறியது இயலும்.
 
சேசாத்திரி 

2011/4/8 N. Kannan <navan...@gmail.com>

s.bala subramani B+ve

unread,
Apr 8, 2011, 8:35:00 AM4/8/11
to mint...@googlegroups.com
நன்று
தொடரவும் 


2011/4/8 seshadri sridharan <ssesh...@gmail.com>



--
S.Balasubramani B+ve

கி.காளைராசன்

unread,
Apr 8, 2011, 8:58:17 AM4/8/11
to mint...@googlegroups.com
ஐயா செல்வன் அவர்களுக்கு வணக்கம்,

> ஆபிரிக்க கலாசாரங்கள் பலவற்றுஜ்க்கும் இது பொது என நினைக்கிரேன்
> ஐயா..மடகாஸ்கரில் இப்படி இலைபோட்டு உண்பதை டிராவல் சானலில் காட்டினார்கள்.

தொலைக்காட்சியில் பார்த்தேன்.
ஏதோ ஒரு நாட்டில் அச்சு அசலாக ஓயிலாட்டம் ஆடினார்கள்.
சரியாக நினைவில் வரமாட்டேன் என்கிறது.

அன்பன்


கி.காளைராசன்

--

திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்

ஏற்றுக் கொள்கிறார்,

N. Ganesan

unread,
Apr 8, 2011, 9:15:32 AM4/8/11
to மின்தமிழ்

On Apr 8, 7:03 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/4/8 seshadri sridharan <sseshadr...@gmail.com>:

ப. அருளியின் இயற்பெயர் பத்மநாபன் வரதராஜனா?
சேசாத்ரி அறியலாம்.

நா. கணேசன்

> நா.கண்ணன்

s.bala subramani B+ve

unread,
Apr 8, 2011, 9:57:53 AM4/8/11
to mint...@googlegroups.com
> ஆதாரங்கள் உள்ளதெனில் அவைகளை நம் பார்வைக்கு வைத்தால் நலம். முனைவர்
> பத்மநாபன் கட்டுரைகளை யாராவது முன்வைக்கலாம். மரபு விக்கியில் நிச்சயம்
> சேர்க்கலாம்.

விரைவில்  அனுப்புகிறேன்  
 
ஆய்வு களஞ்சியம் பத்மநாபன் அவர்களின் கைபேசி  
09443275641
ref : orissa balu 
 

seshadri sridharan

unread,
Apr 8, 2011, 11:15:08 AM4/8/11
to mint...@googlegroups.com, N. Ganesan
நான் அறிந்திலேன் அவர் புதுவையில் உறைபவர். தஞ்சை பல்கலை வேரியல்  ஆய்வுத் துறைத் தலைவர் என்பது மட்டுமே எனக்கு தெரியும்
 
சேசாத்திரி

2011/4/8 N. Ganesan <naa.g...@gmail.com>



> நா.கண்ணன்

seshadri sridharan

unread,
Apr 8, 2011, 11:15:26 AM4/8/11
to mint...@googlegroups.com, s.bala subramani B+ve
உலக அறிஞர்களுக்கு ஒரு துப்பு துலங்கவே இக் கட்டுரைகளை வரைந்தேன். இன்னும் தீர்மானமான முடிவிற்கு நான் வரவில்லை. அந்த முடிவை பெருவாரியான ஓட்டெடுப்பில் அறிஞர்களே முடிவு கட்டட்டும்.
 
சேசாத்திரி

2011/4/8 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

விஜயராகவன்

unread,
Apr 8, 2011, 11:44:19 AM4/8/11
to மின்தமிழ்
On Apr 8, 5:15 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> உலக அறிஞர்களுக்கு ஒரு துப்பு துலங்கவே இக் கட்டுரைகளை வரைந்தேன். இன்னும்
> தீர்மானமான முடிவிற்கு நான் வரவில்லை. அந்த முடிவை பெருவாரியான ஓட்டெடுப்பில்
> அறிஞர்களே முடிவு கட்டட்டும்.
>
> சேசாத்திரி


Dear Chechaththiri

Knowledge does not grow by counting votes. Knowledge requires
openmindedness, rigorous methodology, the present state of knowledge
on the same subject, abundant data, first hand information and
aquintance with the subject and lastly a non-ideological approach and
ability to reason with all the viewpoints on the same subject.

Hundreds of intelligent minds have worked on this subject of inter
relationship between languages. have you gone through them for a
start? have you a first hand knowledge of Ethiopian, and the
intracasies of it's grammer, vocabulary, phonetics and linguistics and
it's historical developement?

It is easy to pass opinions based on fleeting imprressions and there
is a whole cottage industry in Tamilnadu, trying to prove the Primacy
of Tamil Language in the world. Late lamented Gnanamuthu Devaneyan is
the patron saint of this cottage industry. The rest of the world will
take the output of this cottage industry for a cultural study of
Tamilnadu rather than gain any insights into Tamil or other languages.


Regards

Vijayaraghavan

Maravanpulavu K. Sachithananthan

unread,
Apr 8, 2011, 12:35:34 PM4/8/11
to மின்தமிழ்
Prof. RM. Pitchappan
Regional Director- 'Genographic-India
now with Chettinad Hospital at Perungudi, Chennai
www.geocities.com/rdbgy/ ; www.nationalgeographic.com/genographic/;

National Geographic Society of Americaவுக்காக மரபணுத் தொடர்புகளை
ஆய்பவர்
.
கீழுள்ள குறிப்புகளைத் தேடுவோர், மேலும் தெளிவடையலாம்.

Robert Caldwell (1856) refers to the remarkable general resemblances
between the Dravidian pronouns and those of aboriginal tribes of
Southern and Western Australia. (p. 51-53, Comparative Grammar, 1856).

Candid expressions on the close resemblances between Australian Koori
and Dravidian languages by W. H. Bleek (1872) in his paper On the
position of Australian Languages is an eye opener.

R. M. W. Dixon (1980) discusses the wider affliation of Australian
languages and says that the Dravidian suggestion deserves to be taken
seriously in The languages of Australia (p.236)

Robert Lawler (1991) in his Voices of the First Day discusses the
agglutinative nature of the Dravidian and Tasmanian languages and goes
on to say that fishermen of the Coramendal coast will easily pick up
words spoken by Tasmanian aboriginals (p.120)

There are many such notices on linguistic and other similarities.
Padma Subramaniam, the dancer from Tamil Nadu, P. Ramanathan, Sutha
Seshaiyan, researchers in Tamilnadu and Mathahlai Somu, writer from
Australia have touched upon this subject in the course of their
treatises on Tamil ancestry.

Robert Lawler (1991) in his Voices of the First Day discussing the
social face of love among aboriginals of Australia, brings out a
Dravidian connection (p.161).

Per Hage (2001) uses linguistic evidence to support her views on The
Evolution of Dravidian Kinship Systems in Oceania, including the
aboriginals of Australia. She quotes N. J. Allen extensively, using
Allen’s world historical theory of kinship where the humanity began
with a tetradic-Dravidian system based on cross cousin marriage.

Robert Lawler (1991) in his Voices of the First Day points to the
physical resemblance of the Dravidians to the aboriginals of Australia
indicating racial similarities and goes on to clarify as to why modern
anthropologists conveniently disregard it (p.121).

Josephine Flood (2006) discusses the biological angle in The Original
Australians, Story of the Aboriginal People (p.185) quoting the work
of Alan Redd and Mark Stoneking. These two geneticists studied
Mitochondrion Deoxyribo Nucleic Acid from present day aboriginals to
find that they are ten times closer to Indians than to New Guineans.
They estimated that the time of separation of Australian Aboriginals
from southern Indians was at 3390 years with 95% certainty. Josephine
also quotes the study of geneticists Pellekaan linking southern
Indians with Kooris.

Spencer Wells (1969) in his Deep Ancestry describes how Ramasamy
Pitchappan showed closer linkages using Y-chromosome markers (p.124).
The Piraan Malai Kallar community near Madurai carry a piece of
genetic trail as a direct genetic link to the Aboriginal community of
Australia.

On Apr 7, 4:44 pm, "s.bala subramani B+ve" <sunkenl...@gmail.com>
wrote:
> 2011/4/7 s.bala subramani B+ve <sunkenl...@gmail.com>


>
> > ஆய்வு களஞ்சியம் பத்மநாபன் அவர்கள் தான் என்னுடிய முதல் கள ஆய்வுக்கு உடன்
> > வந்தவர்களில்
>
> அவரும் ஒருவர்
>
>
>
>
>
>
>
>
>
>
>
> > கன்னியாகுமரி கு ஆய்வு தொடர்பாக செல்பவர்கள் அவரை பார்க்கமால் வர முடியாது
> > மிகவும் சுறு சுறுப்பானவர் பல வருடம்களாக ஆர்வம் காட்டுபவர்
> > அடிப்படையில்  SBI இல் பணிபுரிந்தாலும் ஒரு பத்திரிக்கையாளர்
>
> > அவரின் எதியோப்பிய கட்டுரைகளை நானும் படித்தேன்
>
> > விரைவில் ஸ்கேன் செய்து அனுப்புகிறேன்
>

> > 2011/4/7 Maravanpulavu K. Sachithananthan <tamiln...@gmail.com>

> >> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit


> >> our
> >> > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> >> > > post to this group, send email to minT...@googlegroups.com
> >> > > To unsubscribe from this group, send email to
> >> > > minTamil-u...@googlegroups.com
> >> > > For more options, visit this group at
> >> > >http://groups.google.com/group/minTamil
>
> >> > --
> >> > செல்வன்
>
> >> >www.holyox.blogspot.com
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --

Nagarajan Vadivel

unread,
Apr 8, 2011, 1:02:32 PM4/8/11
to mint...@googlegroups.com
As a person having personal knowledge about Ethiopia and Zanzibar I wish to present my view

1.  When Lord Monroe was the Governor of Madras, a request was made by Briton to send a contingent of infantry to Accra in Ghana to capture the King and capture the kingdom.  Accordingly a ship sailed from Madras and reached the Erythrean port.  Most of the soldiers were maravars from southern Tamilnadu.  The army marched from Ethiopia to Accra from east to west crossing hundreds if villages in Ethiopia.  They were greeted by local people and welcomed by them whole kindheartedly.   The result is the Ethiopian women with sharp nose, dark falling hair and colored skin giving the image that they are women looking like the marava women.   Whenever the rivals battle the army of the winning side not only loot the gold and precious wealth but also rape the women and enjoy sex with them.  This may be the reward for the soldiers and eugenically breed  better warriors .   In Ethiopia there is a lineage directly linking Ethiopians with Tamils. I do not subscribe to the language point of view.

2. In Zanzibar which is now part of Tanzania I was shown the wooden gage in the market place and explained that the slave trade originated and flourished from Zanzibar.  The slaves were purchased inland and brought in wooden gages ans shipped to Accra in the west.I was told that the entire slave trade was financed by merchants from India specifically from Tamilnadu.  The Tamils as merchant navigators were familiar with the Indian Ocean and had trade links with the Greeks, Romans and East African countries. The entry port was the Eritrean seaport located in Ethiopia
Vnagarajan


2011/4/8 விஜயராகவன் <vij...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Apr 8, 2011, 9:08:47 PM4/8/11
to mint...@googlegroups.com


8 ஏப்ரல், 2011 8:16 am அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:

அதன் ஒரு முயற்சியாகவே நான் எதியோபிய மன்னர் பெயர்களோடு நில்லாமல் 'சப்பானியர் பெயர்களில் தமிழ் வடிவம்' என்ற கட்டுரையை கடந்த ஞாயிறு மின்தமிழுக்கு அனுப்பி இருந்தேன் இவ்விரண்டிலும் பிற நாகரிக மன்னர் பெயர்களையும் பொருந்த மேற்கோள் காட்டி இருந்தேன். எனினும் தேர்ந்த பலரும் ஈடுபட்டால் நீங்கள் கூறியது இயலும்.
 
 
காளிச்சரண் எனும் மட்டைஅடி வீரர் மேற்கு இந்திய அணிகளில் விளையாடுவார்
 
அவர் மொழி இந்திய மொழியாக இருக்காது. ஆனால் அவர்பெயரில் இந்தியம் இருக்கு
 
எங்கள் ஊர் தொலைக்காட்சியில் சில தமிழ் பெயர்கள் தென்படும். அவரகள் தென் ஆப்பிர்க்கா போன்ற நாடுகளில் வாழ்வோர்.
 
அமெரிக்காவில் இன்னும் இரண்டு தலைமுறைகளில் நம் பிள்ளைகள் கூட நம் மொழி பேசமாட்டார்கள் பேர் மட்டும் இந்தியம் ஆக இருக்கும் ( கிறுத்துவர் இசுலாமிய தமிழ்ர்கள் என்றால் அதூஉம் போயிடும்
 
நீங்க அப்போது பெயர்ஆராய்ச்சி பண்ணினால் அதுதான் உலகின் மிக பெரிய ஹாஸ்யம் என வஞ்சப்புகழப்படும்


 

seshadri sridharan

unread,
Apr 8, 2011, 11:25:39 PM4/8/11
to mint...@googlegroups.com, வேந்தன் அரசு
3 மாதங்களுக்கு முன்னம் ஐராவதம் மகாதேவன் புலிமான்கோம்பை நடுகல் பிராமி கல்வெட்டை ஆய்நது அதன் பேடு திய்யன் அந்தவன் என்ற குறிப்பை படு என்ற வீழ்ச்சிக் குறிப்பு  மலையாளத்தில் பெடு என வழங்கும் திய்யன் என்பது இன்றும் சாதிப் பெயராக உள்ளது எனவே 2000ஆண்டுகளுக்கு முன் மலையாளம் இருந்தது என சான்று வழங்கி அவர்களும் மலையாளத்திற்கு செம்மொழி உரிமை கோருவது தினமலரில் வெளியானது. அவ்வாறானது அல்ல என பெயர் ஆய்வு. இன்று மதப்பரவலால் மக்கள் தம் மொழி அல்லாத பெயர்களை தாங்குகின்றனர்.  6,500 ஆண்டுகளுக்கு முன் மதங்களே கிடையா. அப்போது வேற்று நிலத்தில் இருந்து எதியோபியாவில் குடியேறிய தமிழர் தம்மினும் நாகரிகத்தில் குறைந்த எதியோபியரொடு கூடிக்கலந்து தம் நாகரிகத்தையும்,, மொழியையும்
அங்கு நிலைநாட்டினர் என கொள்ளவதில் தவறில்லை. இன்று அங்கு தமிழ் வழங்காததால் அது தமிழர் நாகரிகம் இல்லை என்று ஆகாது. இல்லாவிட்டால் தமிழ்ப் பெயர்கள் அங்கு 6,,500 ஆண்டு களுக்கு முன் இடம்பெற்றிருக்கா. எதியோபியர் முன்னோர் தமிழர் எனபதில் தவறில்லை.
 
சேசாத்திரி
2011/4/9 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

N. Ganesan

unread,
Apr 9, 2011, 10:17:42 AM4/9/11
to மின்தமிழ்

On Apr 8, 10:25 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> 3 மாதங்களுக்கு முன்னம் ஐராவதம் மகாதேவன் புலிமான்கோம்பை நடுகல் பிராமி
> கல்வெட்டை ஆய்நது அதன் பேடு திய்யன் அந்தவன் என்ற குறிப்பை படு என்ற வீழ்ச்சிக்
> குறிப்பு  மலையாளத்தில் பெடு என வழங்கும் திய்யன் என்பது இன்றும் சாதிப் பெயராக
> உள்ளது எனவே 2000ஆண்டுகளுக்கு முன் மலையாளம் இருந்தது என சான்று வழங்கி
> அவர்களும் மலையாளத்திற்கு செம்மொழி உரிமை கோருவது தினமலரில் வெளியானது.
> அவ்வாறானது அல்ல என பெயர் ஆய்வு. இன்று மதப்பரவலால் மக்கள் தம் மொழி அல்லாத
> பெயர்களை தாங்குகின்றனர்.  6,500 ஆண்டுகளுக்கு முன் மதங்களே கிடையா. அப்போது
> வேற்று நிலத்தில் இருந்து எதியோபியாவில் குடியேறிய தமிழர் தம்மினும்
> நாகரிகத்தில் குறைந்த எதியோபியரொடு கூடிக்கலந்து தம் நாகரிகத்தையும்,,
> மொழியையும்
> அங்கு நிலைநாட்டினர் என கொள்ளவதில் தவறில்லை. இன்று அங்கு தமிழ் வழங்காததால்
> அது தமிழர் நாகரிகம் இல்லை என்று ஆகாது. இல்லாவிட்டால் தமிழ்ப் பெயர்கள் அங்கு
> 6,,500 ஆண்டு களுக்கு முன் இடம்பெற்றிருக்கா. எதியோபியர் முன்னோர் தமிழர்
> எனபதில் தவறில்லை.
>
> சேசாத்திரி

ஐராவதம் மகாதேவன் தினமலர் கட்டுரை இங்கே அனுப்பமுடியுமா? கா. ராஜன்
அசோகனுக்கு சற்று முன் என்பார்.
ஐராவதம் அசோக சக்கிரவர்த்தி பின்னாடி என்பார்.
இதில் என்ன காலம் கொடுத்துள்ளார்?

--------------------


பேரா. கா. ராஜன் எழுதிய கட்டுரை - அவர் கண்டுபிடித்த
புலிமான்கோம்பைக் கல்வெட்டு - வெளியான
International Journal of Dravidian Linguistics இதழை
என்னை திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தில் வெளியிட
வைத்து ஒரு பெரும்பேற்றை வ. ஐ. சுப்பிரமணியம் ஐயா
வழங்கினார்கள். நீல. பத்மநாபன், இஸ்ரோ தமிழ்ச் சங்கம் முத்து,
நாச்சிமுத்து, ஜெய. கிருஷ்ணன், அனந்தை மன்னர் குடும்பத்தில்
சிலர், அனந்தை தமிழ்ச் சங்கத்துக்கு பற்பநாபர் அம்பலத்து
முன் வீற்றிருக்க ஏராளமான நிலமளித்த சங்கரநாராயண
பிள்ளை + குடும்பம், ... என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு விழா.

முதல் முதலாக புலிமான் கோம்பை கல்வெட்டு
வாசகத்தை தமிழில் கண்டுபிடித்தோர், படித்த செ. ராசு
அவர்கள் கொடுத்தபடி வெளியிட்டேன். எழுதி 5 ஆண்டுகள்
ஓடிவிட்டன.

http://nganesan.blogspot.com/2006/10/blog-post.html

நா. கணேசன்


seshadri sridharan

unread,
Apr 9, 2011, 12:51:30 PM4/9/11
to mint...@googlegroups.com, N. Ganesan
இந்த பேடு திய்யன் அந்தவன் என்ற கல்வெட்டை மலையாளத்தின் செம்மொழிக்கு சான்றாக கூறி இருக்கிறார் என்பதே அச்செய்தி. இது திசம்பர் கடைசி அல்லது சனவரி முதல் வாரத்திலோ வெளியானது. என்னிடம் அதன் படி இல்லை தினமலரில் கேட்டு பெறலாம் அல்லது  மகாதேவனிடமே உசாவலாம் பேசி எண்: 22533230. அவரிடம் இரு முறையே பேசி உள்ளேன்.எதியோபிய நாகரிகர் முன்னோர் தமிழர் கட்டுரையை அவருக்கும் அனுப்பி உள்ளேன். அதை பற்றியும் கேளுங்களேன்.
 
சேசாத்திரி

2011/4/9 N. Ganesan <naa.g...@gmail.com>

N. Kannan

unread,
Apr 9, 2011, 7:17:19 PM4/9/11
to mint...@googlegroups.com
கணேசனார் சுட்டுவது போல் புலவர் செ.இராசு, கொடுமுடி சண்முகனார்,
டாக்டர்.பத்மாவதி போன்ற பலர் முன்னமே `தமிழி; (பிராமி) கல்வெட்டுக்கள்
பற்றிப் பேசியுள்ளனர். ஆனால், ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு வெளிநாட்டு
ஆய்வாளர்களிடம் நல்ல மதிப்பும், சர்வதேச அளவில் எப்படி நமது தொன்மையை
வெளிப்படுத்த வேண்டுமென்ற கலையும் அமையப் பெற்றிருக்கிறது. அதனால்
தற்சமயம், ஐராவதம் ஐயா வாக்கே தேவ (வேத) வாக்கு` என்பது சொல்லப்ப்டாத ஒரு
உண்மையாக உள்ளது. எனவே, எது செய்தாலும் அவர் வழியாகச் செய்தால் உலக
அரங்கில் எடுபடும். இது யதார்த்தம்.

நா.கண்ணன்

2011/4/10 seshadri sridharan <ssesh...@gmail.com>:

seshadri sridharan

unread,
Apr 9, 2011, 10:59:18 PM4/9/11
to mint...@googlegroups.com
உலக அரங்கில் மதிப்புள்ளவர் தவறான கருத்துகளை முன் வைத்தால் அதுவே
மற்றவருடைய உண்மையான ஆய்வுகளுக்கு பெரும் தடையாக அமைந்து விடுகிறது
என்பதைத் தான் மதிவாணன் என்னிடம் கருத்துரைத்தார். அதற்கு தான் மகாதேவன்,
பர்போலா, பார்மர், விச்சல் ஆகியோருக்கு மட்டுமே சிந்து எழுத்தாய்வில்
முடிவு கட்டும் உரிமை வழங்கப்படவில்லை என்பதை மறைமுகமாக உரைத்தேன்.
மகாதேவனால் ஏற்படுத்தப்பட்ட தடையை அவர் தான் தகர்க்க வேண்டும். ஒருவர்
படிக்க முடிந்ததை இன்னொருவரால் படிக்க இயலவேண்டும் என்பதே ஏற்கபடவேண்டும்
மற்ற விதிகள் தள்ளப் படவேண்டும்.

சேசாத்திரி

N. Kannan

unread,
Apr 9, 2011, 11:06:58 PM4/9/11
to mint...@googlegroups.com
இந்திய ஆய்வுமுறைகளில் பண்டைய Feudal mindset இன்னும் இருக்கிறது.
ஆண்டான்-அடிமை என்பது போன்றதொரு மனோபாவம். இதை நான் `ஆலவட்டம்` இழையில்
சொல்லியிருப்பேன். ஆரோக்கியமான ஆய்வுப்போக்கு வளர்த்தெடுக்கப்பட
வேண்டும். நம்பகத்தன்மையுள்ள உயர்தர சஞ்சிகைகள் வரவேண்டும். தமிழ்
ஆய்வுகள் ஆங்கில வடிவில் உலக சஞ்சிகைகளில் வெளிவர வேண்டும்.
மாற்றுக்கருத்துச் சொல்வோரை எதிரியாகக் காணும் போக்கு நீங்க வேண்டும்.
இலக்கிய மற்றும் ஆய்வுச்சூழலில் ஒரு மறைமுக ஜாதீயம் செயல்படுகிறது.
அதாவது, குழுக்கள், சண்டைகள், தாக்குதல் என்று. இது தமிழாய்விற்குள்ளும்
பரவி வருகிறது. இது ஆரோக்கியமானதல்ல.

நா.கண்ணன்

2011/4/10 seshadri sridharan <ssesh...@gmail.com>:

s.bala subramani B+ve

unread,
Apr 9, 2011, 11:24:12 PM4/9/11
to mint...@googlegroups.com
நம் மின் தமிழ்
ஆய்வு முறைகளை உலக தரத்தில் எப்படி செய்யவேண்டும் 
அதற்கான நெறிமுறைகளை, 
அதற்கான வழிகாட்டிகளை 
ஏற்கனவே செய்து வைத்த ஆய்வுகளை மேற்கோள் கொள்ளாமல்  எழுதுபவர்களின்  நூல்களை  எப்படி கையாள வேண்டும் 

என்ற நெறிமுறைகளை தெரிய படுத்த வேண்டும்

மாணவர்களும் மின் தமிழை  பார்க்க தொடங்கி  விட்டார்கள் என்பதால் 

நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

2011/4/10 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S.Balasubramani B+ve

Nagarajan Vadivel

unread,
Apr 9, 2011, 11:36:12 PM4/9/11
to mint...@googlegroups.com
In Tamilnadu among the learned Tamils it is customary to give advice on doing something for the cause of furthering Tamil.  When something is started the same learned Tamils blame that the effort will undermine the exalted position of Tamil.  Within this blow hot blow cold environment Min Tamil may as a bold initiative launch a peer reviewed ejournal for Tamil heritage research.  It is the current practice for many learned societies and organizations to launch international peer reviewed research journal in digital format.
Min Tamil is eminently suited for this with ample resources and experts.
Similarly the contributions made by the forum members be compiled into downloadable PDF documents after suitably editing the contributiond made by the members.  Unless the postings are aggregated it will will remain forever in the servier as bits (bytes) and pieces.  It is a common knowledge that the cyberspace is a dump yard.  There is a need for seggregating the rotten thoughts as waste and aggregate the frozen thoughts for the future generation.
Vnagarajan
 
2011/4/10 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Apr 9, 2011, 11:49:18 PM4/9/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram, Anto Peter
Thank you so much Prof.Nagarajan.

You are consistently the right one to suggest right things most of the time.

An Open Source journal entitled 'An International Journal on Tamil Heritage' .

Sounds lucarative :-)

Do we have the resources, I mean the human resources? Why don't you
start it as a separate thread and discuss?

Regarding the MinTamil Digest. Yes. In fact we've initiated Heritage
Wiki mainly with that intension. In spite of Google search power, it
is really hard to dig up old mails. Google still has some issues with
Tamil language search.

In all our effors editors like Devarajan has helped us immensely. May
be he should initiate, inspire a team to help with him. Rangan has the
habit of collecting his mails and post them in blogs for posterity. We
need to do more thematic collections.

well.well..miles to go before we sleep...

Kannan

2011/4/10 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

--

N. Kannan

unread,
Apr 9, 2011, 11:54:05 PM4/9/11
to mint...@googlegroups.com
அன்பின் பாலு:

மிக, மிக நல்ல யோசனை.

நமக்கு பேராசிரியர் நாகராஜன் போன்ற கல்வித்துறை வல்லுநர்களும், மின்தமிழ்
(generic) வளர்ச்சியில் ஆர்வமுள்ளோரும் இருப்பது அனுகூலமே!

இது தவிர மரபுவழி ஆய்வுத்தடம் (Vedantic/siddhantic methodology)
அறிந்தோரும் உள்ளனர்.

மொழி அறிவு கொண்டோர் உள்ளனர்.

தனி இழையாக இதைப் பேசலாம்.

`தமிழ் ஆய்வுகள் - செய்முறை, களப்பணி, தரவணுகல் (தரவு+அணுகல்),
முடிவுகள், உசாத்துணை வழிகாட்டல்`

என்றொரு இழை ஆரம்பிக்கலாம்.

நா.கண்ணன்

2011/4/10 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:

--

செல்வன்

unread,
Apr 10, 2011, 12:56:55 AM4/10/11
to mint...@googlegroups.com


9 ஏப்ரல், 2011 10:49 pm அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதியது:

An Open Source journal entitled 'An International Journal on Tamil Heritage' .

Sounds lucarative :-)


Interesting.

Kannan ji.....such a journal would play a big role in popularizing research on tamil culture in the academic world.
--
செல்வன்



www.holyox.blogspot.com

Nagarajan Vadivel

unread,
Apr 10, 2011, 1:04:38 AM4/10/11
to mint...@googlegroups.com
Starting a journal is very easy but sustaining it in terms of maintaining the quality and continuity is challenging.  An international online journal can be started by
Obtaining an ISSN number whichis a fairly easy process.  Through Google search and by online registration Min Tamil trustees may register the journal
The prerequisite for ISSN number will be to identify the name for the journal, editor, Editorial board, Consulting editors, Periodicity, Editorial policy, guidelines for contribution, peer review process and circulation of the periodical etc
The new thread proposed will enable the group to consolidate the thoughts and prepare a blue print and road map
Vnagarajan

2011/4/10 செல்வன் <hol...@gmail.com>
--

செல்வன்

unread,
Apr 10, 2011, 1:08:45 AM4/10/11
to mint...@googlegroups.com
Well said nagarajan aiya. Starting a journal is easy, but how do we ensure quality? It all depends on our target market, investment, editor and editorial board. It should attract quality academics to contribute to it. Universities should subscribe to it. It should be widely cited. Pretty challenging task

10 ஏப்ரல், 2011 12:04 am அன்று, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> எழுதியது:

Nagarajan Vadivel

unread,
Apr 10, 2011, 2:18:46 AM4/10/11
to mint...@googlegroups.com


Regarding the MinTamil Digest. Yes. In fact we've initiated Heritage
Wiki mainly with that intension. In spite of Google search power, it
is really hard to dig up old mails. Google still has some issues with
Tamil language search.

In all our effors editors like Devarajan has helped us immensely. May
be he should initiate, inspire a team to help with him. Rangan has the
habit of collecting his mails and post them in blogs for posterity. We
need to do more thematic collections.
 
May I offer a suggestion.  I did a project with O'Riely wring an ebook on the IT applications for Bioinformatics.  They provided me with an electronic book shelf containing the content from various resources in digital format.  The ob is to cut and paste and later edit to compile an ebook
A similar attempt can be considered.  I can create an electronic book shelf with the selected content available with Min Tamil and provide the electronic book shelf for the editors.  In case the email content poses problem always one can start with the low hanging fruits
Vnagaraa n
2011/4/10 N. Kannan <navan...@gmail.com>

devoo

unread,
Apr 10, 2011, 6:20:48 AM4/10/11
to மின்தமிழ்
Nice suggestions Professor Ji
We‘ve to work on this. I need guidance. I tried to locate some of the
old lively
discussions, but google ji is not co operative. Even recent threads
are out of site.
One has to go by dates. I was able to copy Seetha Madam’s
’பயணங்கள்' (1)
only today for Marabu collections, from the profile section of a
different g. group

Dev

On Apr 10, 1:18 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> Regarding the MinTamil Digest. Yes. In fact we've initiated Heritage
> Wiki mainly with that intension. In spite of Google search power, it
> is really hard to dig up old mails. Google still has some issues with
> Tamil language search.
> In all our effors editors like Devarajan has helped us immensely. May
> be he should initiate, inspire a team to help with him. Rangan has the
> habit of collecting his mails and post them in blogs for posterity. We
> need to do more thematic collections.
>
> May I offer a suggestion.  I did a project with O'Riely wring an ebook on
> the IT applications for Bioinformatics.  They provided me with an electronic
> book shelf containing the content from various resources in digital format.
> The ob is to cut and paste and later edit to compile an ebook
> A similar attempt can be considered.  I can create an electronic book shelf
> with the selected content available with Min Tamil and provide the
> electronic book shelf for the editors.  In case the email content poses
> problem always one can start with the low hanging fruits
> Vnagaraa n

> 2011/4/10 N. Kannan <navannak...@gmail.com>


>
> > Thank you so much Prof.Nagarajan.
>
> > You are consistently the right one to suggest right things most of the
> > time.
>
> > An Open Source journal entitled 'An International Journal on Tamil
> > Heritage' .
>
> > Sounds lucarative :-)
>
> > Do we have the resources, I mean the human resources? Why don't you
> > start it as a separate thread and discuss?
>
> > Regarding the MinTamil Digest. Yes. In fact we've initiated Heritage
> > Wiki mainly with that intension. In spite of Google search power, it
> > is really hard to dig up old mails. Google still has some issues with
> > Tamil language search.
>
> > In all our effors editors like Devarajan has helped us immensely. May
> > be he should initiate, inspire a team to help with him. Rangan has the
> > habit of collecting his mails and post them in blogs for posterity. We
> > need to do more thematic collections.
>
> > well.well..miles to go before we sleep...
>
> > Kannan
>

> > 2011/4/10 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>:


> >  > In Tamilnadu among the learned Tamils it is customary to give advice on
> > > doing something for the cause of furthering Tamil.  When something is
> > > started the same learned Tamils blame that the effort will undermine the
> > > exalted position of Tamil.  Within this blow hot blow cold environment
> > Min
> > > Tamil may as a bold initiative launch a peer reviewed ejournal for Tamil
> > > heritage research.  It is the current practice for many learned societies
> > > and organizations to launch international peer reviewed research journal
> > in
> > > digital format.
> > > Min Tamil is eminently suited for this with ample resources and experts.
> > > Similarly the contributions made by the forum members be compiled into
> > > downloadable PDF documents after suitably editing the contributiond made
> > by
> > > the members.  Unless the postings are aggregated it will will remain
> > forever
> > > in the servier as bits (bytes) and pieces.  It is a common knowledge that
> > > the cyberspace is a dump yard.  There is a need for seggregating the
> > rotten
> > > thoughts as waste and aggregate the frozen thoughts for the future
> > > generation.
> > > Vnagarajan
>

> > > 2011/4/10 N. Kannan <navannak...@gmail.com>


>
> > >> இந்திய ஆய்வுமுறைகளில் பண்டைய Feudal mindset இன்னும் இருக்கிறது.
> > >> ஆண்டான்-அடிமை என்பது போன்றதொரு மனோபாவம். இதை நான் `ஆலவட்டம்` இழையில்
> > >> சொல்லியிருப்பேன். ஆரோக்கியமான ஆய்வுப்போக்கு வளர்த்தெடுக்கப்பட
> > >> வேண்டும். நம்பகத்தன்மையுள்ள உயர்தர சஞ்சிகைகள் வரவேண்டும். தமிழ்
> > >> ஆய்வுகள் ஆங்கில வடிவில் உலக சஞ்சிகைகளில் வெளிவர வேண்டும்.
> > >> மாற்றுக்கருத்துச் சொல்வோரை எதிரியாகக் காணும் போக்கு நீங்க வேண்டும்.
> > >> இலக்கிய மற்றும் ஆய்வுச்சூழலில் ஒரு மறைமுக ஜாதீயம் செயல்படுகிறது.
> > >> அதாவது, குழுக்கள், சண்டைகள், தாக்குதல் என்று. இது தமிழாய்விற்குள்ளும்
> > >> பரவி வருகிறது. இது ஆரோக்கியமானதல்ல.
>
> > >> நா.கண்ணன்
>

> > >> 2011/4/10 seshadri sridharan <sseshadr...@gmail.com>:


> > >> > உலக அரங்கில் மதிப்புள்ளவர் தவறான கருத்துகளை முன் வைத்தால் அதுவே
> > >> > மற்றவருடைய உண்மையான ஆய்வுகளுக்கு பெரும் தடையாக அமைந்து விடுகிறது
> > >> > என்பதைத் தான் மதிவாணன் என்னிடம் கருத்துரைத்தார். அதற்கு தான் மகாதேவன்,
> > >> > பர்போலா, பார்மர், விச்சல் ஆகியோருக்கு மட்டுமே சிந்து எழுத்தாய்வில்
> > >> > முடிவு கட்டும் உரிமை வழங்கப்படவில்லை என்பதை மறைமுகமாக உரைத்தேன்.
> > >> > மகாதேவனால் ஏற்படுத்தப்பட்ட தடையை அவர் தான் தகர்க்க வேண்டும். ஒருவர்
> > >> > படிக்க முடிந்ததை இன்னொருவரால் படிக்க இயலவேண்டும் என்பதே ஏற்கபடவேண்டும்
> > >> > மற்ற விதிகள் தள்ளப் படவேண்டும்.
>
> > >> > சேசாத்திரி
>
> > >> --
> > >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> > like to
> > >> visit our Muthusom Blogs at:

> > >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send
> > >> email to minT...@googlegroups.com
> > >> To unsubscribe from this group, send email to
> > >> minTamil-u...@googlegroups.com
> > >> For more options, visit this group at
> > >>http://groups.google.com/group/minTamil
>
> > > --
> > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation.
> > > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit
> > our
> > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post
> > > to this group, send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at
> > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
> > கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
> > கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
>

> > Tamil Heritage Foundation -http://www.tamilheritage.org/


>
> > --
> >  "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

N. Kannan

unread,
Apr 10, 2011, 6:32:52 AM4/10/11
to mint...@googlegroups.com
Devji is right.

MinTamil Google page is useless.

Instead if one searches in Google general webpage, there is a chance.
The problem is the correct keywords to search. More and more Google
group messages become a blackhole!

Kannan

2011/4/10 devoo <rde...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Apr 10, 2011, 9:16:28 AM4/10/11
to mint...@googlegroups.com
My worry is more on the scanned digital resources.  Unlike the manually generated text materials the scanned content will not be amenable to search.  Therefore a team with an editor may audit the resources and re engineer the paraphrased content as searchable.
Probably an approach to download the individual's contribution in threaded discussion with a request to the author of the emails on the topic to condense and summarize his/her contributions.  The editor may be able to used these summaries for preparing the digital digest
Vnagarajan

2011/4/10 N. Kannan <navan...@gmail.com>
Devji is right.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

s.bala subramani B+ve

unread,
May 5, 2011, 3:57:55 AM5/5/11
to mint...@googlegroups.com
may be useful
 
 
On the Problem of Sea Voyages of Ancient Africans in the Indian Ocean
Yu. M. Kobishchanow
The Journal of African History
Vol. 6, No. 2 (1965), pp. 137-141
(article consists of 5 pages)
On the Problem of Sea Voyages of Ancient Africans in the Indian Ocean

The Journal of African History © 1965 Cambridge University Press

Abstract

Ancient and early Byzantine authors: Diodorus (II, 55), 'Pseudo-Callisthenes', Cosmas Indicopleustes and Procopius Caesarensis-mention the navigation of the Indian Ocean by 'Ethiopians' of the African Horn and the Axumite Kingdom in their own ships. The hoard of Kushana gold moneys found at Dabra-Dammo confirms this. The legend in the Kebra Nagast of Ethiopian military expeditions to India incorporates reminiscences about sea voyages to India by ancient Axumites.

s.bala subramani B+ve

unread,
May 5, 2011, 4:01:18 AM5/5/11
to mint...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages