--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
காளமேகம்- பாடல்
மாடு கிடப்பாடி மனையாள் உடல்பாதி
தேடுதற்குப் பிள்ளை தினைக் கடம்பன் -நாடில்
அரவு ஆபரணம் பூண் அம்பலவா! பிச்சை
இரவாமல் நீர் என்ன செய்வீர்?
மாடாகிய நந்தி உமது வாகனமானது. உம் மனையாள்
உமையோ உமது உடலில் பாதியானாள் பொருள்
தேடி வருவதற்குரிய உமது பிள்ளை முருகன் தினைப்
புனத்திலும் கடம்ப மலர்ச்சோலைகளிலும் சுற்றிக்கொண்டிருப்பவன். பாம்பு அணிகலனைப் பூண்டவாறு பொன்னம்பலத்தில் வீற்றிருக்கும் சிவனே! ஆராய்ந்து பார்த்தால் நீர் பிச்சை எடுக்காது வேறு என்ன செய்ய முடியும்?
வெ.சுப்பிரமணியன் ஓம்
v_dotthathri/i339es9p56ne
வாணியன் பாடிட, வண்ணான் சுமக்க, வடுகன் செட்டி
சேணியன் போற்ற, கடல்பள்ளி தொழ, தீங்கரும்பைக்
கோணியன் வாழ்த்த, கருமான் துகில்தனைக் கொண்டணிந்த
வேணியன் ஆனவன் தட்டான் புறப்பட்ட வேடிக்கையே!
மிக அழகான பாடல். பழைய தமிழ் சமூக வாழ்க்கையைச்
சொல்வது. புலவர்கள் விளக்கியவாறு உரையைத் தருகிறேன்.
இன்றைய வாழ்க்கைமுறை மாறிவிட்டது. எனவே பலருக்கும் இப்பாடல் புரிவதில்லை.
தினமணியிலே பிழைபட்ட உரை பார்க்கிறேன். தீங்கரும்பைக் கோணியன்
- கோன், கோனார் என்றெல்லாம் போகிறது. அது பிழை. சேணியன் - இந்திரன்.
வேணியன் என்பது தமிழின் பழைய அந்தணனை (அம்பட்டனை).
வேணி - முடி திருத்தி அழகாக்குவது இருபாலருக்கும் வேணியரே.
அந்தணனாக இருந்து கருமானை வேட்டலைக் குறிப்பிடுகிறார் காளமேகம்.
நா. கணேசன்