16 நிகண்டுகளிலிருந்து "குயம்" என்ற தமி்ழ் சொல்லின் பொருள்

234 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Nov 14, 2014, 12:46:08 PM11/14/14
to தமிழ் மன்றம், thamizayam, வல்லமை, mintamil, Sivakumar M A, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Raji M
திரு மதி ராஜம் அவர்களுக்கு,

(1)
பொருநராற்றுப்படை வரிகள் தங்கள் சொல் வது போல் பொருள் கொள்ளுதல் சாலும் 

ஆனால்

ஊசி போகிய சூழ்செய் மாலையன்
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன் 10
குயம்மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி                                     வட்ட வள்ள வடிவின மாதர் மார்பு (தனம்)
வரிபுனை வில்லன் ஒருகணை தெரிந்துகொண்டு
யாதோ மற்று அம் மாதிறம் படர் என அகம் 48

இந்த வரிகள் (குறிஞ்சிப்பாட்டு) அல்ல அகம் 48 = அவசரத்தில் செஞ்சாந்து நீவி என்பதால் (தொய்யில் என ) பெண்  என நினைத்தேன் 
ஆனால் இங்கு ஓர் ஆண் மகனின் உருண்டு நிமிர்ந்த குங்கும சந்தன  சந்து நீவின மார்பினைக் குறிக்கின்ற தாகவே உள்ளது மண்டு எனும் 
சொல் சாந்தின் மிகுத்த அளவினை காட்டுவதாகும்
 
பூக்கள் ஊசி கொண்டு கோர்த்த மாலையும் கன்னத்தின் பக்கத்தில் தொங்கும் கண்ணியனா கவும்
வில்லும் கணையும் பேசப்படுவதால் ஆண் என்பதே மெய்யாகும்

மேலும் 

தங்கள் காட்டும் அரிவாள் முதலியன காட்டியுள்ள  சூடாமணி நிகண்டுவில் உள்ளனவே 

குயம் தனம் இளமையோடு கூரரிவாளும் முப்பேர் 158 சூடாமணிநிகண்டு   வட்ட வள்ள வடிவின மாதர் மார்பு (தனம்)
 
இப்போது புதிதாக வைப்பது 16 நிகண்டுகளிலிருந்து 

(1)
திவாகர நிகண்டு        குயம் = 360 - கொங்கை சொர்க்கம் குயம் தனம் நகிலம் தங்கிய குரூஉகண் அம்மம்
                                                                    பயோதரம் இங்கிவை மாதர் முலை என இசைப்பர்
                                                         1158 - குயமும் புள்ளமும் கொடுவாளாகும் 
                                                         1938  அரிவையர் மூலை யும் கொடுவாளும் இளமையும் கருதில் இம்மூன்றும் குயமெனக் கருதுவர் 
(2)
பிங்கள நிகண்டு        குயம் =  3396 - கொங்கையும் அரிவாளும் குயம் எனப்படுமே
(3)
உரிச்சொல் நிகண்டு  குயம் = 228 இலையும் நிலனும் தலம் கொடுவாளும் குயம்
(4)
கயாதர நிகண்டு        குயம்   = 471கோதையர் கொங்கை கொடுவாள் இளமை குயமது என்க 
(5)
 பாரதி தீப நிகண்டு  குயம்    குயம் சொர்க்கம் கொங்கை தனம் நகிலமே குரூஉக்கண் அம்மம் பயோதரம் என் முலையே
(6)
(ரேவண சித்தர் )
அகராதி நிகண்டு    குயம்    குயமென்பாதுவே இளமை யும் அரிவாள் எனவும் ஆகும் முப்பேரே 
(7)
சூடாமணிநிகண்டு குயம் = 158 தனம் இளமையோடு கூரரிவாளும் முப்பேர்
(xxx )
கைலாச நிகண்டு   குயம்   = சொல் சொல்  இடம் பெற வில்லை
(8)
ஆசிரிய நிகண்டு      குயம்    = 87 பேசும் நகிலம் கொங்கை அம்மம் பயோதரம் பெருகிய தனம் குரூஉகண்
(9)                                                              பெருமை பெரு கொங்கை சுவர்க்கம் பறம்பு உடன் பெருத்த குயம் முலையின் பெயர்  
வட மலை நிகண்டு  குயம்    =  குயமேனும் பெயரே இளமையும்முலையும் 
(10)                                                          கொடுவாளெனவும் கூறப்படுமே 
அரும்பொருள் விளக்க நிகண்டு குயம்    =378 குயம் முலை   அரிவாளின்பேர் கொழுமை செர் இளமையமே 
(11)
பொதிகை நிகண்டு குயம்  = 790 குயம் அரிவாளும் கொங்கையும் இளமையும் 
(xxx )
பொருள் தொகை நிகண்டு குயம்   சொல்  இடம் பெற வில்லை
(12)
 நாமதீப நிகண்டு குயம் 417 அரிவாள் புள்ளம் கொடுவாள் குயம் 
                                                   582 கொம்மை குரூஉக்கண் சுவர்க்கம் கொங்கை நகில் செக்கை பறம்பு அம்மம் பயோதரம் குயம் தனம் முலை 
(13)
 நானார்த்த தீபிகை  குயம் 587 குயமே கொ டுவாள் இளமை முலை

(14)
அபிதான மாலை  குயம் = 448  முலைஅம்மம் உரோருகம் சொர்க்கம் குரூஉகண் செக்கை கொங்கை  தனம் நகிலம் பறம்பு மெய்க்கதிர்                                                                            ஆமெனப் புகல்வர் 
(15)
வேதகிரியார் சூடாமணி நிகண்டு குயம் 297 குயம் தனம் இளமையோடு கூரரிவாளும் முப்பேர்
(16)
(குறில் நெடில்)
அகராதி நிகண்டு குயம் = முலை கொடுவாள் இளமை வட்டம் ஊர்க்குருவி நறும் புகை 

N D Logasundaram

unread,
Nov 14, 2014, 1:03:29 PM11/14/14
to தமிழ் மன்றம், thamizayam, வல்லமை, mintamil

ஒர் சிறு மாற்றம் 

3)
உரிச்சொல் நிகண்டு  குயம் = 228 இலையும் நிலனும் தலம் கொடுவாளும் குயம் 

என உள்ளதனை 

உரிச்சொல் நிகண்டு  குயம் = 228 கொடுவாளும் முலை யும் குயம் 
என மாற்றிக் கொள்க 

இலையும் நிலனும்  தலம் என்பது முன் நூற்பா  ஆகும் 



--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

rajam

unread,
Nov 14, 2014, 1:15:17 PM11/14/14
to tamil...@googlegroups.com, வல்லமை, mintamil, Sivakumar M A, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Raji M
திரு நூ த லோ சு ஐயா, வணக்கம்.

“குயமண்டு ஆகம்” என்ற வரி புழங்குவது அகநானூறு 48-இல் என்பதை யான் அறிவேன். குறிஞ்சித் திணைப் பாட்டு” என்பதைக் “குறிஞ்சிப்பாட்டு” என்று பிறழ்படக் குறித்துவிட்டேன், மன்னிக்கவும். அடிப்படைக் காரணம் … பத்துப்பாட்டுள் ஒன்றான குறிஞ்சிப்பாட்டும் எட்டுத்தொகையுள் ஒன்றான அகநானூறு 48-உம் ஒன்றுக்கொன்று மிகவும் தொடர்புடையவை. அகநானூறு 48-இன் விரிவே குறிஞ்சிப்பாட்டு என்பது என் கருத்து. அதுவே என் தட்டச்சில் வெளிப்பட்டதோ என்று நினைக்கிறேன்.

நிற்க. 

நிகண்டுகளின் தரவு அருமை. மிக்க நன்றி. 

ஆயினும், ஒரு சொல்லுக்கு [“குய(ம்)”] தரப்பட்டிருக்கும் இரு பொருள்கள் என்னைக் குழப்புகின்றன: அரிவாள், முலை. 

இந்த இரண்டு பொருளுக்கும் அடிப்படியாக இருக்கும் ஒற்றுமையைத் தேடுதலும் தெளிவுறுதலும் நன்று. 

இப்படிக்கு,
ராஜம்



--


N. Ganesan

unread,
Nov 14, 2014, 2:38:39 PM11/14/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com, podh...@gmail.com


On Friday, November 14, 2014 10:15:17 AM UTC-8, rajam wrote:
திரு நூ த லோ சு ஐயா, வணக்கம்.

“குயமண்டு ஆகம்” என்ற வரி புழங்குவது அகநானூறு 48-இல் என்பதை யான் அறிவேன். குறிஞ்சித் திணைப் பாட்டு” என்பதைக் “குறிஞ்சிப்பாட்டு” என்று பிறழ்படக் குறித்துவிட்டேன், மன்னிக்கவும். அடிப்படைக் காரணம் … பத்துப்பாட்டுள் ஒன்றான குறிஞ்சிப்பாட்டும் எட்டுத்தொகையுள் ஒன்றான அகநானூறு 48-உம் ஒன்றுக்கொன்று மிகவும் தொடர்புடையவை. அகநானூறு 48-இன் விரிவே குறிஞ்சிப்பாட்டு என்பது என் கருத்து. அதுவே என் தட்டச்சில் வெளிப்பட்டதோ என்று நினைக்கிறேன்.

நிற்க. 

நிகண்டுகளின் தரவு அருமை. மிக்க நன்றி. 

ஆயினும், ஒரு சொல்லுக்கு [“குய(ம்)”] தரப்பட்டிருக்கும் இரு பொருள்கள் என்னைக் குழப்புகின்றன: அரிவாள், முலை. 

இந்த இரண்டு பொருளுக்கும் அடிப்படியாக இருக்கும் ஒற்றுமையைத் தேடுதலும் தெளிவுறுதலும் நன்று. 


குயம் =  அரிவாள் என்பது வேறுசொல்லோ? கொய்தல் என்ற வினைச்சொல்லுடன் தொடர்புபடுத்துகிறது சென்னைப் பல்கலை அகராதி.
குயம்¹ kuyam , n. perh. கொய்-. 1. Sickle, reaping-hook, curved knife, அரிவாள். கொடுவாய்க் குயத்து (சிலப். 16, 30). 2. Razor; நாவிதன் கத்தி. அருங்குயந் தான்களைந்து (சீவக. 2500).
----------------

கொய்யும் வாளைப் பிரித்துவிட்டால்,
குயம்/குய்யம் = மென்மை (soft) என்று பொருள்படுகிறது

நா. கணேசன்

rajam

unread,
Nov 14, 2014, 9:49:29 PM11/14/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com, tamil...@googlegroups.com
"கொய்"தல் வேறு; "குயம்" வேறு. 

குயத்தின் செயல் அரிதல். 'கொய்தல்' என்பதைப் "பூக்கொய்தல்" என்பது போன்ற வழக்கிலிருந்து புரிந்துகொள்ளலாம். 

செயல், வடிவு ... இந்த இரண்டு பொருள்நிலைகளையும் நோக்கவேண்டும். 

இப்போதைக்கு என் கருத்து: "குயம்" என்ற சொல்லின் சங்க இலக்கிய வழக்காறு வடிவின் அடிப்படையில் அமைந்தது. வேறு பிற சான்றுகள் கிடைத்தால் என் கருத்தை மாற்றிக்கொள்ளுவேன். 

நன்றி!

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 15, 2014, 6:07:47 AM11/15/14
to mintamil
குய் > குழைதல் பொருளில் தோன்றிய வினைச்சொல்லாம்.

மண்ணைக் குழைத்து பாண்டங்கள் செய்பவன் - குயவன்

குயக்குழி = மண்ணைத் தோண்டி எடுத்த குழி

இனி குழைவான பொருட்களுக்கு மென்மைத் தன்மையும் உண்டு. இதனின்று மென்மைப் பொருளும் தோன்றிற்று என்க. இதனான்,

குயம் = குழையும் தன்மையுடைய தனம்.

குய் என்பது குழைவுத் தன்மையுடைய நெய் / எண்ணெயையும் குறிக்கும்.

குய்ப்புகை = நெய் / எண்ணையின் தாளிப்புப் புகை.

இனி, குழையும் பொருட்களுக்கு வளையும் தன்மையும் உண்டு என்பதால் வளைதல் பொருளும் தோன்றிற்று.

குயம் = வளைந்த அரிவாள்.


இந்த குய் என்னும் வேரில் இருந்தே குஞ்சம் (எ.கா : பட்டுக்குஞ்சம் ), குஞ்சித (வளைந்த), குயம் (புல்), குச்சம் (நாணல்), குச்சு ( புல்லால் வேய்ந்த வீடு), குச்சி ( புல்லின் தண்டுப் பகுதி), போன்ற பல சொற்கள் தோன்றிற்று.


அன்புடன்,

தி.பொ.ச.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
மனமோ வயிறோ கெட்டுப் போனால்
மகிழ்ச்சி தொலைந்து போகும் - அதனால்
நல்லதை மட்டுமே நினைப்போம் ! - உயிர்க்கு
நல்லதை மட்டுமே உண்போம் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 15, 2014, 6:22:15 AM11/15/14
to mintamil
அம்மா

இதோ உங்களின் ஐயத்திற்கு என்னாலான் விடை.


குய் > குழைதல் பொருளில் தோன்றிய வினைச்சொல்லாம்.

மண்ணைக் குழைத்து பாண்டங்கள் செய்பவன் - குயவன்

குயக்குழி = மண்ணைத் தோண்டி எடுத்த குழி

இனி குழைவான பொருட்களுக்கு மென்மைத் தன்மையும் உண்டு. இதனின்று மென்மைப் பொருளும் தோன்றிற்று என்க. இதனான்,

குயம் = குழையும் தன்மையுடைய தனம்.

குய் என்பது குழைவுத் தன்மையுடைய நெய் / எண்ணெயையும் குறிக்கும்.

குய்ப்புகை = நெய் / எண்ணையின் தாளிப்புப் புகை.

இனி, குழையும் பொருட்களுக்கு வளையும் தன்மையும் உண்டு என்பதால் வளைதல் பொருளும் தோன்றிற்று.

குயம் = வளைந்த அரிவாள்.


இந்த குய் என்னும் வேரில் இருந்தே குஞ்சம் (எ.கா : பட்டுக்குஞ்சம் ), குஞ்சித (வளைந்த), குயம் (புல்), குச்சம் (நாணல்), குச்சு ( புல்லால் வேய்ந்த வீடு), குச்சி ( புல்லின் தண்டுப் பகுதி), போன்ற பல சொற்கள் தோன்றிற்று.


அன்புடன்,

தி.பொ.ச.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ekamsath

unread,
Nov 16, 2014, 2:11:08 AM11/16/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, minT...@googlegroups.com, podh...@gmail.com


On Saturday, 15 November 2014 01:08:41 UTC+5:30, N. Ganesan wrote:
 ஒரு சொல்லுக்கு [“குய(ம்)”] தரப்பட்டிருக்கும் இரு பொருள்கள் என்னைக் குழப்புகின்றன: அரிவாள், முலை. 

இந்த இரண்டு பொருளுக்கும் அடிப்படியாக இருக்கும் ஒற்றுமையைத் தேடுதலும் தெளிவுறுதலும் நன்று. 


சித்த மருத்துவ நூல் ஒன்றில் குய்யம் என்பது மர்ம உறுப்புகள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. 
இதற்கு மூலம் குஹ்யம் guhyam गुह्यम् என்ற வட சொல். குஹ் - மறைத்தல், குஹ்யம் - மறைக்கப்படவேண்டியது. 
அரிவாள் என்ற பொருள் தரும் குயம் பழந்தமிழ்ச் சொல்லாக இருக்கலாம். மற்றது வடசொல்லின் திரிபாக இருக்கலாம்.  

Dev Raj

unread,
Nov 16, 2014, 4:16:07 AM11/16/14
to mint...@googlegroups.com
On Saturday, 15 November 2014 23:11:08 UTC-8, கோதண்டராமன் wrote:
சித்த மருத்துவ நூல் ஒன்றில் குய்யம் என்பது மர்ம உறுப்புகள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. 
இதற்கு மூலம் குஹ்யம் guhyam गुह्यम् என்ற வட சொல். குஹ் - மறைத்தல், குஹ்யம் - மறைக்கப்படவேண்டியது. 
அரிவாள் என்ற பொருள் தரும் குயம் பழந்தமிழ்ச் சொல்லாக இருக்கலாம். மற்றது வடசொல்லின் திரிபாக இருக்கலாம்.  

ஆம், சிந்தாமணியில் ’குய்யம்’ சொல்லாட்சி உள்ளது - 

நட்பிடைக் குய்யம் வைத்தான்
    பிறர்மனை நலத்தைச் சோ்ந்தான்
கட்டழற் காமத் தீயிற்
    கன்னியைக் கலக்கி னானு
மட்டுயி ருடலந் தின்றா
    னமைச்சனா யரசு கொன்றான்
குட்டநோய் நரகந் தம்முட்
     குளிப்பவ ரிவர்கள் கண்டாய்.

குய்யம் வைத்தல் - நண்பனை குஹ்யமாக [மறைவாக] வஞ்சித்தல் .
குய்ய ரோகம், குய்ய தீர்த்தம் இவையும் உள்ளன


தேவ்

N. Ganesan

unread,
Nov 16, 2014, 6:36:19 AM11/16/14
to mint...@googlegroups.com, vallamai
பெண்குறிக்கு குய்யம் என்னும் பெயர் குய்- ‘மென்மை’ என்னும் வேர் எனக் கொள்ளலாம்.
 குய்யரோகம், kuyya-rōkam, n. <id. +. Veneral disease peculiar to women, as chancre; பெண்குறியில் வரும் ரோகம். (சீவரட். 313).
குயம்/குய்யம் - மென்மை. குயம் = நகில். எனவே, அண்ணாமலையில் உண்ணாமுலை அம்மன் அபீத-குசாம்பாள்>
குயம் ‘soft breast' > குசம்.

நா. கணேசன்
 


தேவ்

N. Ganesan

unread,
Nov 16, 2014, 9:48:15 AM11/16/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com, podh...@gmail.com, housto...@googlegroups.com, Santhavasantham, thami...@googlegroups.com, panb...@googlegroups.com
அன்பின் சு. கோதண்டராமன் ஐயா,

வணக்கம் கணக்கில.

வேய் ‘மூங்கில்’ - வேய்ங்கடம் > வேங்கடம் (பார்க்க; அகநானூறு)
நய்ப்பு > நப்பு (நப்பாசை)
வை ‘< வீ’’ (=நெல்) வய்+அல் = வயல் =வை + அல் (பீஜம் என்னும் வடசொல் ஆராய்ச்சி. விரிவாக எழுதியுள்ளேன். அங்கே பாருங்கள்)
குய் =  sharp blade grass = தருப்பை (குய்யால் வேய்ந்த குடில். குய்ச்சு > குச்சு. கூர்ச்சரம் = சிந்து நாகரிகம், அண்மையில் காந்தி, வல்லபபாய் பட்டேல், 
பிரதமர் மோதி நாடு - கூர்ச்சர (குச்சர) நாடு என்ற த்ராவிடப் பெயர் இதனாலோ? காலப்போக்கில் கூர்ச்சரம் குஜராத் ஆகியுளது.)

குய்- ‘மென்மை’ என்ற தாதுவேரால் ஆவது குயவன், குயக் குண்டு (= குசவன் கலயம் வனைய மண்ணெடுக்கும் மட்குழி = soft soil pit), ...
பெண்ணுறுப்புகள் யாவுக்கும் குய்- ‘மென்மை’ என்ற தாதுவேர் அடிப்படையாய் தெரிகிறது; குயம்/குய்யம், ... சென்னைப் பேரகராதி காண்க.

க-ப்ரத்யம் ஏற்றிப் பொருள்வளர்ச்சி காணும் இந்திய மொழிகள்:

-க என்னும் விகுதியை ஏற்றிப் பொருள் விரிவு செய்வன இந்திய பாஷைகள். இது ஓர் முக்ய உத்தியாம்.
In the Language of Mathematics, we have generalized eigenvectors (my specialty in Space loads and dynamics),
generalized inverses of Matrices (used heavily in Digital SIgnal Processing, Modal Testing, ...),
similarly we can posit a generalized k-pratya for word genesis in Indian linguistic area.
That is, like -ka ending, -na, -la/-ra endings in Words used to generate words with semantic extension from
their roots which are seen without the -ka, or -na or -la/-ra endings.

தாழை என்னும் கைதை நிலத்தில் வளரும் தாவரத்துக்கு,
சதம் (=100) செய்யுள் இருந்தால் சதகம் என்று பிரபந்தப் பெயராக,
கப்பிரத்தியம் பெறுதல் போல, கைதகம்/கைதகை என்று ஒரு பெயர். 
செய் (நஞ்சை, புஞ்சை, தஞ்சை (தண் + செய்) - இவற்றில் உள்ள ‘செய்’,
கைதையில் உள்ள ’கை’ ஆகும். தகர விகுதி சேதா-வில் உள்ளது போன்ம்.
கண் என்ற சொல்லினின்றும் கண்ணகம் என்று தாமரைப்பொகுளுக்கு
ஒரு பெயர் த்ராவிடமொழிகளில் இருந்து வடமொழிக்குச் சென்றதுபோல
(cf. மஹால்க்ஷ்மி பேரால் கண்ணகி. கர்ணகை/கர்ணகி என்றும் தமிழர் வழங்குவர்),
கைதகை வடமொழியில் கேதகை, கேதகி என்றாகிறது. கேது என்றால்
கொடி. தாழை கொடிவகைத் தாவரம் இல்லை. கேது
என்றால் மின்னல் என்று எஸ். ராமச்சந்திரன் சொல்லியிருக்கிறார்.
ஆனால், கேதுவுக்கு மின்னல் என்று வடமொழிப் பொருள்
ஏதுமில்லை என்பதுவும் குறிப்பிடத்த்தக்கது. மோதியை மோடி என்றும்,
ராகுல் திராவிடரை ட்ராவிட் என்றும் பத்ரிகை, டிவி ஆக்குவதுபோல்,
கேதகி (இந்தியில் கேத்கி) தவறாக கேட்கி என்று எழுதியுளார் எஸ். ராமச்சந்திரன்.

மிழகு தமிழகத்தில் சிறப்பான விளைபொருள் ஆனதால் நாட்டின்/மொழியின்
பெயரே அமைந்த தாவரம். (த)மிழகம் > மிழகு/மிளகு. சிந்து நாட்டிற்கும்
இதுவே பெயர். மிழகம் என்பதை சுமேரியாவில் மெலுஹ (பழம் பலம் என்று
தமிழறியா வடவர் பலுக்கி வடசொல் ஆவது போல், சுமேரியருக்கு ழ வராததால்
மெலுஹ எனறனர். தமிழர் முருகன், அகம், ... எல்லாம் ஹ (voiceless fricative sound)
உச்சரிப்பு சிந்திலும் இருந்தமை சுமேரியாவில் பதிவானது மிக இன்றியமையாத
த்ராவிட பாஷகளின் ஒலியனியல் குறிப்பு. மிழகர் > மிளக்கர் (பாலி) . மிலேச்சர்.
ஹ (voiceless fricative sound) - இதனை தமிழ்க் கடவுள் முருகனின் ஒரு பெயரிலும் காண்கிறோம்.

குய்- என்றால் மென்மை. பென்ணுறுப்புகள் எல்லாவற்றூக்கும் அதனால்
குயம்/குய்யம் என்னும் பண்டைத் தமிழிப்பெயர். எனவே மர்மம்/மறைவானது 
என்ற பொருளூம் குயம்/குய்யம் அடைகின்றன. எழு- எழிங்கம் லிங்கம் 
(பழம் .> பலம், மிழகம் > மிலேச்ச, போல (எ)ழிங்க- > லிங்க. குடிமல்லம் லிங்கம்
இந்தியாவிலேயே பழமை). குய் ‘soft' தரும் சொற்கள் குயம்/குய்யம்.
இவை மறைவுப் பொருள் தரும். 
எனவே, கப்பிரத்தியம் ஏற்று, குய்க- குக- என்று மறைபொருள்/மர்மம்.
மெலுஹ என்று மிழக நாட்டைச் சொன்னவர்கள் குக ( < கு(ய்)க-) என்னும்
சொல்லை குஹ என்றது இன்றும் வடமொழியில் குஹ, குஹ்ய என்றெல்லாம் 
பதிவாகி வழங்குகிறது.

தமிழின் குஹனருளால் வாழ்வோம் வளமுடன்,
நா. கணேசன்

ekamsath k

unread,
Nov 17, 2014, 2:53:23 AM11/17/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
தனத்தைக் குறிக்கும் குயம் என்ற சொல் குய்யம் என்பதை விட குசம் என்பதோடு நெருங்கி இருப்பதாகத் தோன்றுகிறது. 

சு.கோதண்டராமன்
bharathiadi.blogspot.com,
vedamanavan.blogspot.com

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/Y5qn6YWhZ2s/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 17, 2014, 8:38:12 AM11/17/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Sunday, November 16, 2014 11:53:23 PM UTC-8, கோதண்டராமன் wrote:
தனத்தைக் குறிக்கும் குயம் என்ற சொல் குய்யம் என்பதை விட குசம் என்பதோடு நெருங்கி இருப்பதாகத் தோன்றுகிறது. 

திராவிட மொழிகளின் வார்த்தைகளில் மெய்-உயிர்-மெய் வேர் காட்டும். kuy- is the source for kuya- and kuyya. Cf. nal- is the source for nala- and nalla-.
குய- ய-/ச- மாற்றம்: குசவன், குசம் (கொங்கை), ...

N. Ganesan

unread,
Nov 17, 2014, 9:13:44 AM11/17/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Monday, November 17, 2014 5:38:14 AM UTC-8, N. Ganesan wrote:


On Sunday, November 16, 2014 11:53:23 PM UTC-8, கோதண்டராமன் wrote:
தனத்தைக் குறிக்கும் குயம் என்ற சொல் குய்யம் என்பதை விட குசம் என்பதோடு நெருங்கி இருப்பதாகத் தோன்றுகிறது. 

திராவிட மொழிகளின் வார்த்தைகளில் மெய்-உயிர்-மெய்(CVC) வேர் காட்டும். kuy- '= soft' is the source for kuya- and kuyya. Cf. nal- is the source for nala- and nalla-.
குய- ய-/ச- மாற்றம்: குசவன், குசம் (கொங்கை), ...


செய்- > செயல்/செய்யல், செய்யுள்
வெய்- > வெயில், வெய்யில்
ஒய்- > ஒயில், ஒய்யல்(ஒய்யாரம்)
குய்- ’soft'  > குயம், குய்யம்

நல்- > நல-, நல்ல-
வல்- > வலம் (பலம்), வல்லம்

Dev Raj

unread,
Nov 17, 2014, 12:18:45 PM11/17/14
to mint...@googlegroups.com
On Sunday, 16 November 2014 23:53:23 UTC-8, கோதண்டராமன் wrote:
தனத்தைக் குறிக்கும் குயம் என்ற சொல் குய்யம் என்பதை விட குசம் என்பதோடு நெருங்கி இருப்பதாகத் தோன்றுகிறது. 

தமிழ் இலக்கியத்தில் நகிலைக் குயம் எனும் சொல்லால் குறிக்கும் இடங்கள் உண்டா ?


On Saturday, 15 November 2014 01:40:36 UTC-8, N. Ganesan wrote:
> குய்- ‘sharp' அடிப்படையாகக் கொண்டிருக்கும் வடசொல் குஸ-/குஶ- என்னும் புல். இதற்குத் தமிழில் வழங்கும் பெயர்களை நோக்கலாம்: குயம் > குஸம்/குஶம்.


On Sunday, 16 November 2014 03:36:19 UTC-8, N. Ganesan wrote:
> குயம்/குய்யம் - மென்மை. குயம் = நகில். எனவே, அண்ணாமலையில் உண்ணாமுலை அம்மன் அபீத-குசாம்பாள்>
> குயம் ‘soft breast' > குசம்.


குயம் > कुश [kusha]
குயம் > कुच [kuca]

இரண்டும் சரியா ?


தேவ்

Venkataramangopalan

unread,
Nov 17, 2014, 7:51:15 PM11/17/14
to mint...@googlegroups.com



Sent from my ASUS
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 17, 2014, 9:17:59 PM11/17/14
to mint...@googlegroups.com


On Monday, November 17, 2014 4:51:15 PM UTC-8, Thanjavooraan wrote:

அன்பின் தஞ்சாவூரான் ஐயா,

தேவ் அவர்களின் கேள்விக்கு ஆழ்வாரிலிருந்தும், தேவாரத்திலிருந்தும், கொங்குவேள் பெருங்கதையில் இருந்தும்
சான்றுகள் கொடுதுள்ளேன். குயம் = நகில் என்பது சங்க இலக்கியத்திலிருந்து உள்ளது. திருப்புகழில் நிறைய.
குய்- என்னும் வேர் மென்மை என்று பொருள் படுவது. குயம் = மென்மை என்கிறது பிங்கல நிகண்டு.


நா. கணேசன்

N D Logasundaram

unread,
Nov 18, 2014, 12:05:51 PM11/18/14
to mintamil
திரு தேவ் அவர்கள் இவ்வாறு எழுதினார் 

தமிழ் இலக்கியத்தில் நகிலைக் குயம் எனும் சொல்லால் குறிக்கும் இடங்கள் உண்டா ?

உண்டு  காண்க 

தொகு கதிர் முத்துத் தொடை கலிழ்பு மழுக
உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும்
நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட
இலையும் மயிரும் ஈர்ஞ் சாந்து நிழத்த
முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க 20 பரிபாடல் 8 வையை

புனல் பொருது மெலிந்தார் திமில் விட
கனல் பொருத அகிலின் ஆவி கா எழ
நகில்  முகடு மெழுகிய அளறு மடை திறந்து
திகை முழுது கமழ முகில் அகடு கழி மதியின்
உறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர் 75 பரிபாடல் 10 வையை

மிசை அகன்று யரு நகில் மருங்குல் குடியடி பறிந்ததழவிடுமெனத்
திசை அகன்(று)அளவும் அகல் நிதம்ப தடமுடைய மாதர் கடை திறமினோ  தக்கயாகப்பரணி 29

பாங்கு மணிப்பல எயிலும் சுலவு எயிலும் உள மாடம்
ஞாங்கர் அணி துகில் கொடியும் நகில்  கொடியும் உள அரங்கம்
ஓங்கு நிலைத் தோரணமும் பூரண கும்பமும் உளவால்
பூம் கணை வீதியில் அணைவோர் புலமறுகுஞ் சிலமறுகு 12.875 மானக்கஞ்சாற நாயனார் புராணம்

நிறைதலின் ஆல் நிறை தவஞ்செய் இமயப் பாவை
நகில்  உழுத சுவடும் வளைத் தழும்பும் பூண்ட 12.1175 திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்

துகில் புனை விதான நீழல் தூ மலர் தவிசின் மீது
நகில்  அணி முத்த மாலை நகை முக மடவார் வாழ்த்த 12.3129 திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Dev Raj

unread,
Nov 18, 2014, 12:39:44 PM11/18/14
to mint...@googlegroups.com
On Tuesday, 18 November 2014 09:05:51 UTC-8, selvi...@gmail.com wrote:
திரு தேவ் அவர்கள் இவ்வாறு எழுதினார் 

தமிழ் இலக்கியத்தில் நகிலைக் குயம் எனும் சொல்லால் குறிக்கும் இடங்கள் உண்டா ?

உண்டு  காண்க 

தொகு கதிர் முத்துத் தொடை கலிழ்பு மழுக
உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும்
நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட
இலையும் மயிரும் ஈர்ஞ் சாந்து நிழத்த
முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க 20 பரிபாடல் 8 வையை

புனல் பொருது மெலிந்தார் திமில் விட
கனல் பொருத அகிலின் ஆவி கா எழ
நகில்  முகடு மெழுகிய அளறு மடை திறந்து
திகை முழுது கமழ முகில் அகடு கழி மதியின்
உறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர் 75 பரிபாடல் 10 வையை

மிசை அகன்று யரு நகில் மருங்குல் குடியடி பறிந்ததழவிடுமெனத்
திசை அகன்(று)அளவும் அகல் நிதம்ப தடமுடைய மாதர் கடை திறமினோ  தக்கயாகப்பரணி 29

பாங்கு மணிப்பல எயிலும் சுலவு எயிலும் உள மாடம்
ஞாங்கர் அணி துகில் கொடியும் நகில்  கொடியும் உள அரங்கம்
ஓங்கு நிலைத் தோரணமும் பூரண கும்பமும் உளவால்
பூம் கணை வீதியில் அணைவோர் புலமறுகுஞ் சிலமறுகு 12.875 மானக்கஞ்சாற நாயனார் புராணம்

நிறைதலின் ஆல் நிறை தவஞ்செய் இமயப் பாவை
நகில்  உழுத சுவடும் வளைத் தழும்பும் பூண்ட 12.1175 திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்

துகில் புனை விதான நீழல் தூ மலர் தவிசின் மீது
நகில்  அணி முத்த மாலை நகை முக மடவார் வாழ்த்த 12.3129 திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்

ஐயா,

என் கேள்வி வேறு.
தமிழ் இலக்கியத்தில் நகிலைக் குயம் எனும் சொல்லால் குறிக்கும் இடங்கள் உண்டா ?
இந்த இடங்களில் ‘நகில்’ என்றே சொல்லப்படுகிறது.
நகிலை ‘குயம்’ என்று சொல்லுமிடங்களையே
கேட்டேன்


தேவ்

N. Ganesan

unread,
Nov 19, 2014, 1:30:00 AM11/19/14
to mint...@googlegroups.com, vallamai


On Tuesday, November 18, 2014 9:39:44 AM UTC-8, Dev Raj wrote:

ஐயா,

என் கேள்வி வேறு.
தமிழ் இலக்கியத்தில் நகிலைக் குயம் எனும் சொல்லால் குறிக்கும் இடங்கள் உண்டா ?
இந்த இடங்களில் ‘நகில்’ என்றே சொல்லப்படுகிறது.
நகிலை ‘குயம்’ என்று சொல்லுமிடங்களையே
கேட்டேன்

தேவ்

தஞ்சாவூரான் உங்கள் வினாவை மீட்டும் அனுப்பியிருந்தார். அவருக்கு மறுமொழி பார்த்தீர்களா?
Reply all
Reply to author
Forward
0 new messages