தமிழ் மரபு அறக்கட்டளை சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடு - நாடார் குல மித்திரன்

569 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Apr 14, 2013, 2:05:30 AM4/14/13
to மின்தமிழ், Subashini Tremmel
வணக்கம்.

மின்தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்திய சுதந்திரத்துக்கு முன்னர் நமது முன்னோர்களின் வழித்தடத்துடன் அகிம்சா வழியில் சுதந்திர சிந்தனைகளைத் தொடர்ந்து விதைத்து வந்தவர்கள் குறிப்பாக 20ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் பலர். தமது சிந்தனைகளைத் தமிழர் என்ற ஒரு இனத்துக்கு என ஒட்டு மொத்தமாகவும் தனித்தனியாக இயங்கிய ஜாதி சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளாக இருந்து எனவும் பலர் பல உத்திகளைக் கையாண்டு நாட்டுக்குச் சுதந்திரம் என்பதோடு, தம் ஜாதி மக்களுக்கும், பெண்களுக்கும் சுதந்திரம் வேண்டும் என குரல் கொடுத்தவர்கள் இருந்தனர். அதில் குறிப்பிடத்தக்கவர்களாக இருப்பவர்கள் ஒரு சிலர். இத்தகையோரில் நாடார் சமூகத்தினர் மதித்துப் போற்றும் சமூக சேவையாளர் திரு.சூ.ஆ.முத்து நாடார் அவர்களின் சிந்தனையை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு த.ம.அ வின் சித்திரைப் புத்தாண்டு வெளியீடு மலர்கின்றது.

சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தம் சமூகத்துக்குச் சேவையாற்றி அம்மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் அளவிற்கு உயர்ந்தவராக திரு.சூ.ஆ.முத்து நாடார் அவர்கள் திகழ்கின்றார். 

1919ம் ஆண்டு இவர் தொடக்கிய ஒரு பத்திரிக்கை நாடார்கள் சமூகத்துக்கு மாத்திரமல்லாமல் சுதந்திர எண்ணத்தை விரிவாக்கச் செயலாற்றியதில்  முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் திகழ்ந்தது. நாடார் குல மித்திரன் எனப் பெயரிட்டு இந்தப் பத்திரிக்கையின் முழு பொறுப்பையும் எடுத்துச்  செயல்பட்டு வந்தார் இவர்.அருப்புக்கோட்டையிலிருந்து தாமே ஆசிரியராகவும் திரு.சொக்கலிங்கபாண்டியன் என்பவரை உதவி ஆசிரியராகவும் கொண்டு பணியாற்றினார்.

இந்த மாதாந்திர வெளியீடாக வந்த நாடார் குல மித்திரன் 1919 தொடங்கி 1931ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் தொடர்ந்து வெளி வந்தது. அரசியல் கொள்கைகளோடு நாடார் சமூகத்து மக்களின் மேம்பாட்டிற்காகப் பல சிந்தனைகளை வித்திட்ட ஒரு சஞ்சிகையாகவும் இது திகழ்ந்தது.

மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் வே.ஆணைமுத்து அவர்கள் சூ.ஆ.முத்துநாடார் நூற்றாண்டு விழா மலரில் இப்படிக் குறிப்பிடுகின்றார். 
...அன்று நாடார் குல மக்கள் ஈ.வெ.இராமசாமியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டனர். 

அருப்புக்கோட்டையை அடுத்த பாலையம்பட்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநாடு 31.10.1922 இல் நடைபெற்றது. அம் மாநாட்டின் தலைவர் ஈ.வெ.இராமசாமி. அவர் அன்று தமிழ்நாடு காங்கிரஸ் காரியக் கமிட்டியின் செயலாளர். அருப்புக்கோட்டை பால்ய நாடார்கள் சிலர் அன்று மாலையே அங்கு அவரைப் பேட்டி கண்டு  அடுக்கடுக்காக 15 வினாக்களை ஈ.வெ.ராவிடம் விடுத்தனர்.

அத்தனை வினாக்களையும் உள்வாங்கி ஒரு சொற்பொழிவு போன்று ஈ.வெ.ரா. அளித்த விளக்கமான விடை முழுதும் நாடார் குல மித்திரன் ஏட்டில் வெளிவந்தது.

ஈ.வெ.ரா  அப் பேட்டியின் போது அளித்த விடை அன்றைய இழிந்த சமுதாய அமைப்பை அப்படியே படம் பிடித்துக் காட்டியது. அதனை அடியோடு மாற்றிட அவர் உறுதி பூண்டதை வெளிப்படுத்தியது.

ஈ.வெ.ராவின் சிந்தனைகள் பதிவு செய்யப்பட்டு மற்றவர்களுக்கு இன்று வரையில் ஆய்வுகளுக்குக் கிடைப்பனவற்றுள் இதுவே முதவ்லாவது ஆவணம் ஆகும். பெரியாரின் சிந்தனைகள் தொகுப்பு வரலாற்றில் இது முதன்மை வாய்ந்த ஆவணம் ஆகும். இந்தப் பதிவை முதன் முதலாகச் செய்தவர் அருப்புக்கோட்டை சூ.ஆ.முத்து நாடார் அவர்களே ஆவார். பெரியாருக்கென்று ஒரு சொந்த ஏடு குடி அரசு 2.5.1925 இல் தான் தொடங்கப்பட்டது. ஆனால் 1922 அக்டோபர் பதிவு நமக்கு நாடார் குல மித்திரன் ஏட்டில் கிடைக்கின்றது...


பக்தராகவும், தேசியவாதியாகவும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டார் சூ.ஆ.முத்து நாடார் அவர்கள்.இவர்தான் தனது நாடார் குல மித்திரனில் 1929 பெப்ரவரியை (மாசி மாதம் 14 ஆம் நாள்) ஈ வெ. ராம சகாப்தம் -4 என முதன் முதலாகக் குறித்தார்.

மகாத்மா காந்தி அவர்கள் தன் சுயசரிதையை அரிஜன் பத்திரிக்கையில் ஆங்கிலத்தில் வெளியிட்டு வந்ததை மொழி பெயர்த்து முத்து நாடார் தமிழில் சத்திய சோதனை என்று தலைப்பிட்டு வெளியிட்டார். இது மக்களின் சிந்தனையில் அழியா இடத்தைப் பிடித்தது. 

இலங்கை பர்மா போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்து அங்கெல்லாம் நாடார் குல மக்களின் வளர்ச்சியில் பங்காற்றினார்.

பக்திப் பாடல்கள், அம்மானை பாடல்கள் சுயமரியாதைத் தாலாட்டு பாடல்களை எழுதி தாமே வெளியிட்டு சுதந்திர சிந்தனைக் கொள்கைப் பிரச்சாரகராகத் திகழ்ந்தார்.

இது மட்டுமல்லாமல் பலகலைத் திறன்களும் கொண்டிருந்தார்.  நாடகம் எழுதுதல், மற்போர் செய்தல், சிலம்பம் ஆடுதல், இசை நிகழ்ச்சி நடத்துதல் என தன் திறமையைப் பண்முகப்படுத்தியிருந்தார். வயலின் ஆர்மோணியம் மிருதங்கம் போன்ற இசைக்கருவிகளை மீட்டும் திறனும் பெற்றிருந்தார்.

பொதுப்பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அருப்புக் கோட்டை மாதர் முன்னேற்றச் சங்கத்தினருக்கு  உரிய முத்து நாடார் ஹால் இவரது நன்கொடைக்கு இன்றும் சான்று பகர்ந்து நிற்கின்றது.

நாடார் குல மக்களின் நலன்கருதி அமைக்கப்பட்ட சென்னை அருப்புக்கோட்டை நாடார் லாட்ஜ் வாங்கப்பட இவர் ஆற்றிய பங்களிப்பு முதன்மையானது.

திரு.ஈ.வெ.ரா அவர்கள் 1950ல் திரு.முத்து நாடாரின் 70வது பிறந்த நாளுக்கு வந்திருந்த போது அவ்வேளையில் வெளியிடப்பட்ட  மலருக்கு அளித்த தனது உரையில் இப்படிக் கூறுகின்றார்.
..
நண்பர் முத்து நாடார் அவர்களது நட்பு எனக்கு சுமார் 25 ஆண்டுகளாக இருந்து வருவதாகும். எங்கள் நட்பும், எம்மில் ஒருவரைப் பற்றி ஒருவர் கொண்டுள்ள எண்ணங்களும் இந்த 25 ஆண்டுகளில் ஒரு சிறு மாறுதலுமில்லாது ஒரேபடித்தாய் இருந்து வருவனவாகும் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறேன்.

.. முத்து நாடார் அவர்களது குலத் தொண்டிற்கு எடுத்துக் காட்டு என்னவென்றால் அவர் நாடார் குல மித்திரன் என்று நடத்தினாலும் பெருவாரியான எதிர்ப்புக்கும் தொல்லைக்கும் உள்ளான சுயமரியாதை இயக்கத்தில் கலந்து கொண்டு தொண்டாற்றியதும், ஆங்காங்கு சமுதாய பேதமும் இழிவும் நீங்கும்படியான சீர்திருத்தப் பிரச்சாரம்செய்ததும், குல நலத் தொண்டாற்றுவதற்கு  என்றே துவக்கப்பட்ட நாடார் மகாஜன சங்கத்திற்கு உறுதுணையாய் இருந்து வந்து பணியாற்றியதும் முதலியவையே ஆகும்....

முத்து நாடாரின் உண்மையான நண்பர்
சென்னை            ஈ.வெ.ராமசாமி
30.8.51

இத்தகைய சமூகத்தொண்டாற்றிய இப்பெரியாரின் முயற்சியில் வெளியிடப்பட்ட நாடார் குல மித்திரன் சஞ்சிகையின் 12 ஆண்டுகளின் முழுத் தொகுப்பையும் இந்தச் சித்திரைப் புத்தாண்டு நாளில் வெளியிடுவதில் தமிழ் மரபு அறக்கட்டளை பெருமை கொள்கின்றது. இதன் தொடக்கமாக இன்று 3 சஞ்சிகைகளை வெளியிடுகின்றோம்.

இந்தச் சஞ்சிகைகளோடு திரு.சூ.ஆ.முத்து நாடார் பற்றிய ஏனைய தகவல்களையும் அவ்வப்போது மின் தமிழில் வழங்க உள்ளோம்.

சமூக வரலாற்றில் ஆர்வம் உள்ளோர், அதிலும் குறிப்பாக தமிழகத்தின் 20ம் நூற்றாண்டின் ஆரம்ப கால அரசியல் சமூக நிலையில் ஆர்வம் உள்ளோர்களுக்கு இந்தத் தொகுப்புக்கள் அனைத்தும் விருந்தாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இன்று வெளியிடப்படும் 3 சஞ்சிகைகளையும் சில படங்களையும் த.ம.அ வலைப்பக்கத்தில் இங்கே காணலாம். http://tamilheritagefoundation.blogspot.de/2013/04/blog-post.html

நன்றி:
இத்தகைய வரலாற்று ஆவணம் த.ம.அ வின் மின்னாக்கத்தில் இடம்பெறுவதற்கு முக்கியக் காரணமாக் இருந்தவர்களை நினை கூர்தல் தேவை. இந்த முழு சஞ்சிகையையும் பாதுகாத்து வைத்திருந்த மதுரையைச் சார்ந்த திரு.திருநீலகண்டன் அவர்கள் திரு.முத்து நாடார் அவர்களுக்கு உறவினர். அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த சிவகாசி திருமதி.திலகபாமா அவர்களுக்கு நமது நன்றி என்றும் உரியது. எனது தமிழக பயணத்தின் போது நான் நிச்சயமாக சிவகாசி செல்ல வேண்டும் என்ரு வற்புறுத்திக் கூறிய டாக்டர்.நாகண்ணனுக்கும் எனது நன்றி. த.ம.அ வைப்பற்றிய அறிமுகம் ஆனவுடன் இவற்றை மின்னாக்கம் செய்து பாதுகாப்போம் எனக் கூறியவுடனேயே தாமே முழு பொறுப்பை எடுத்துக் கொண்டு பணியில் இறங்கி தனித்தனிக் கோப்பாக மின்னாக்கம் செய்து தந்துள்ளார் திரு.திருநீலகண்டன் அவர்கள். இவற்றை தனித்தனி மின்னூலாக செய்து நான் த.ம.அ வலைப்பக்கத்தில் இணைக்க உள்ளேன். அதன் தொடக்கமாக இன்று மூன்று இதழ்களின் மின்னூல் வடிவம் உங்கள் பார்வைக்குக் கிடைக்கின்றது. 

குறிப்பு: த.ம.அ வலைப்பக்கம் செர்வர் மேம்பாட்டு பணியில் இருப்பதால் மின்னூல்கள் பக்கத்தில் இவை இன்னமும் இணைக்கப்படவில்லை. பின்னர் இணைத்து தகவல் பகிர்ந்து கொள்ளப்படும்.

அன்புடன்
சுபாஷிணி ட்ரெம்மல்
[தமிழ் மரபு அறக்கட்டளை]


 

K. Loganathan

unread,
Apr 14, 2013, 2:28:16 AM4/14/13
to mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com
நின்னா சுபா அவர்கட்கு 

தங்களுக்கும் த.ம.அ க்கும் என் உளமார்ந்த பாராட்டுகள். அற்புதமானப் பணி. மனிதர்களிடையே சமத்துவத்தை வளர்க்க வேண்டும் எல்லா மனிதர்கலின் அடிப்படை உரிமையே இந்த சமத்துவம் தான். 

 பெரியாரின் சிறந்த பணி அதுதான் ஆனால் அதன் இன்றைய நிலை?

உல்கன்


2013/4/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Subashini Tremmel

unread,
Apr 14, 2013, 3:51:59 AM4/14/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/4/14 K. Loganathan <k.ula...@gmail.com>
நின்னா சுபா அவர்கட்கு 

தங்களுக்கும் த.ம.அ க்கும் என் உளமார்ந்த பாராட்டுகள். அற்புதமானப் பணி. மனிதர்களிடையே சமத்துவத்தை வளர்க்க வேண்டும் எல்லா மனிதர்கலின் அடிப்படை உரிமையே இந்த சமத்துவம் தான். 

 பெரியாரின் சிறந்த பணி அதுதான் ஆனால் அதன் இன்றைய நிலை?


தங்கள் பாராட்டுதலுக்கு நன்றி டாக்டர்.லோகா.

இந்த ஆவணங்களை திரு.ஈ.வெ.ரா அவர்கள் என்ற ஒரு எல்லைக்குள் மட்டும் வைத்துப் பார்க்காமல் அக்கால ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தேவைகள், அவர்களின் வளர்ச்சிக்கான தேவை, அவர்களின் குரல் எத்தகையதாக இருந்தது என்பதனையும் நோக்கவேண்டும் என்று த.ம.அ விரும்புகின்றது.

தொடர்ந்து இந்த இதழ்களில் உள்ள தகவல்களையும் வாசித்து பகிர்ந்து அது தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களையும் செய்வதும் தேவை.

சுபா



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Subashini Tremmel

unread,
Apr 14, 2013, 3:52:57 AM4/14/13
to மின்தமிழ், Subashini Tremmel



2013/4/14 Maalan <maa...@gmail.com>
நன்றி சுபா

சித்திரைத் திருநாளை முன்னிட்டு இந்த வாரப் புதிய தலைமுறை  தமிழ் மரபு தொடர்பான கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. இன்றும் தமிழ்ப்பண்பாட்டில் மிச்சமிருக்கும் கூறுகளைக் குறித்து பேரா.தொ.பரமசிவன் அவர்களும், ஓலைச்சுவடிகள் பற்றி பேரா.உல்ரீகே அவர்க்ளும்,  கட்டிடக் கலை பற்றி திரு.கோகுல் சேஷாத்ரி அவர்களும், அண்மையில் மதுரை அருகே கண்டறியப்பட்ட சங்ககாலக் குகை ஓவியங்கள் பற்றி திரு.வெ.நாராயணமூர்த்தி அவர்களும், கழுகுமலை பற்றி திரு.செந்தில்குமார் அவர்களும்  எழுதியுள்ள கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன: கட்டுரைகளை வாசிக்க: http://www.facebook.com/PutiyaTalaimuraimagazine
அன்புடன்
மாலன்

பகிர்வுக்கு நன்றி திரு.மாலன். 

சுபா
 

2013/4/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>

K R A Narasiah

unread,
Apr 14, 2013, 4:00:59 AM4/14/13
to mintamil
I did not think of him; so I was wrong.
N


2013/4/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--

Nagarajan Vadivel

unread,
Apr 14, 2013, 4:17:16 AM4/14/13
to மின்தமிழ்
வலைப் பூங்காவின் உள்லே நுழைந்து மின்வடுடிச் சேர்க்காப்பட்ட ஆவணங்களைப் பார்த்தேன்

மூன்று ஆவணங்கள் இணைப்பியில் செபடம்பர் அக்டோபர் நவம்பர் ஆக முதல் மூன்று மாத அச்சுப்பொஇரதி எண்ணிம வடிவில்

இணைப்பி இரண்டையும் மூன்றையும் அழுத்தினால் நவம்பர் மாத சஞ்சிகையைக் காட்டுகிறது இணைப்பைச் சரி பார்க்கவும்

அட்டை மட்டும் படிப்பதற்கு ஏற்ற வண்ணம் செங்குத்தாக உள்ளது மற்ற பக்கங்கள் பக்கவாடில் அமைந்துள்ல்ளது.  பி டி எஃப் மென்பொருள் மூலம் அதைச் சுழற்றி நேர் செய்ய வேண்டியது அவசியம்

எங்கள் குடும்பத்தில் திருமண உறவில் சிவகாசி நாடார்கள் வகையில் பெண் எடுத்ததால் நாடார்களில் பல பிரிவுகள் உண்டு என்பதும் அவர்கள் வணிகத்தில் கொடிகட்டைப் பிறந்து அருகில் உள்ள இலங்கையில் வணிகம் செய்து பெரும்பொருள் ஈட்டி திருவிதாங்கூர் அரசின் ஆட்சியிலேயே பெண்கள் மேலுடை அணிந்து உயர் வாழக்கை வாழ்ந்தனர்.சானார் அல்லது மரமேறிகள் என்ற காரணம் காட்டி நாடார்களின் ஒரு பிரிவை சிறுமைப் படுத்தியும் தாழ்த்தியும் முகுகத்தில் குறிப்பாக திருவிதாங்கூரில் நடந்த நிகழ்வுகள் தமிழக வரலாற்றீல் ஒரு கரும்புள்ளி

சிவகாசி விருதுநகர் அருப்புக் கோட்டை மதுரை என்ற பெரிய பிரிவுகள் மட்டுமன்றி சிறு பிரிவுகளும் அவர்களின் மகமை முறையும் ஆராய்ச்சிக்குரியவையாகும்

பெரியாருடன் இணைந்து பணியாறியவர்களில் பெரிதும் அறியப்பட்டவர் பட்டி வீரன்பட்டி செளந்திர பாண்டிய நாடார்.  முத்து நாடார் பற்றிய செய்தி அவ்வளவாக வெளியில் தெரியாமல் இருந்தது

அந்தக் குறையை இந்த ஆவணங்கள் தீர்த்துவைப்பதால் தமிழ் மரபு அறக்கட்டளை பெருமை கொள்ளவேண்டிய சிறந்த செயல் என்பதில் ஐயமில்லை

நாகராசன்


2013/4/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--

கி.காளைராசன்

unread,
Apr 14, 2013, 4:20:04 AM4/14/13
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அருமை. அருமை.
ஆவணப்படுத்துதல் என்பதற்குச் சிறந்ததொரு உதாராணம்.
சிறந்ததொரு பணி. பாராட்டுகள்.
திருநீலகண்டன்தம்பதியினருக்கும், திலகபாமா அவர்களுக்கும் நன்றிகள்.

அன்பன்
கி.காளைராசன்

2013/4/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>
வணக்கம்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

Tthamizth Tthenee

unread,
Apr 14, 2013, 4:22:10 AM4/14/13
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அருமையான  உத்தியைக் கையாண்டிருக்கிறார்  திருமதி சுபாஷிணி ட்ரெம்மல் அவர்கள்

நல்ல ஆவணம்

அன்புடன்
தமிழ்த்தேனீ


2013/4/14 கி.காளைராசன் <kalair...@gmail.com>

Subashini Tremmel

unread,
Apr 14, 2013, 4:32:05 AM4/14/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/4/14 K R A Narasiah <naras...@gmail.com>

I did not think of him; so I was wrong.
N

You will find lots of interesting information in this collection of magazine that you can use and reference in your Kalam Kondra Virunthu.  
Happy New Year.

Suba

Subashini Tremmel

unread,
Apr 14, 2013, 4:38:53 AM4/14/13
to மின்தமிழ், Subashini Tremmel



2013/4/14 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

வலைப் பூங்காவின் உள்லே நுழைந்து மின்வடுடிச் சேர்க்காப்பட்ட ஆவணங்களைப் பார்த்தேன்

மூன்று ஆவணங்கள் இணைப்பியில் செபடம்பர் அக்டோபர் நவம்பர் ஆக முதல் மூன்று மாத அச்சுப்பொஇரதி எண்ணிம வடிவில்

இணைப்பி இரண்டையும் மூன்றையும் அழுத்தினால் நவம்பர் மாத சஞ்சிகையைக் காட்டுகிறது இணைப்பைச் சரி பார்க்கவும்
நன்றி. இப்போது சரி செய்தாகி விட்டது. மீண்டும் ஒரு முறை பாருங்கள்.

அட்டை மட்டும் படிப்பதற்கு ஏற்ற வண்ணம் செங்குத்தாக உள்ளது மற்ற பக்கங்கள் பக்கவாடில் அமைந்துள்ல்ளது.  பி டி எஃப் மென்பொருள் மூலம் அதைச் சுழற்றி நேர் செய்ய வேண்டியது அவசியம்
ஆமாம். தற்சமயம் வாசிப்பவரே பக்கங்களை திருப்பிக் கொண்டு வாசிக்க கேட்டுக் கொள்கின்றேன்.  

எங்கள் குடும்பத்தில் திருமண உறவில் சிவகாசி நாடார்கள் வகையில் பெண் எடுத்ததால் நாடார்களில் பல பிரிவுகள் உண்டு என்பதும் அவர்கள் வணிகத்தில் கொடிகட்டைப் பிறந்து அருகில் உள்ள இலங்கையில் வணிகம் செய்து பெரும்பொருள் ஈட்டி திருவிதாங்கூர் அரசின் ஆட்சியிலேயே பெண்கள் மேலுடை அணிந்து உயர் வாழக்கை வாழ்ந்தனர்.சானார் அல்லது மரமேறிகள் என்ற காரணம் காட்டி நாடார்களின் ஒரு பிரிவை சிறுமைப் படுத்தியும் தாழ்த்தியும் முகுகத்தில் குறிப்பாக திருவிதாங்கூரில் நடந்த நிகழ்வுகள் தமிழக வரலாற்றீல் ஒரு கரும்புள்ளி

சிவகாசி விருதுநகர் அருப்புக் கோட்டை மதுரை என்ற பெரிய பிரிவுகள் மட்டுமன்றி சிறு பிரிவுகளும் அவர்களின் மகமை முறையும் ஆராய்ச்சிக்குரியவையாகும்

பெரியாருடன் இணைந்து பணியாறியவர்களில் பெரிதும் அறியப்பட்டவர் பட்டி வீரன்பட்டி செளந்திர பாண்டிய நாடார்.  முத்து நாடார் பற்றிய செய்தி அவ்வளவாக வெளியில் தெரியாமல் இருந்தது
உண்மை. 

அந்தக் குறையை இந்த ஆவணங்கள் தீர்த்துவைப்பதால் தமிழ் மரபு அறக்கட்டளை பெருமை கொள்ளவேண்டிய சிறந்த செயல் என்பதில் ஐயமில்லை
சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள். 

சுபா

N. Kannan

unread,
Apr 14, 2013, 8:54:11 AM4/14/13
to மின்தமிழ்
2013/4/14 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
> அந்தக் குறையை இந்த ஆவணங்கள் தீர்த்துவைப்பதால் தமிழ் மரபு அறக்கட்டளை பெருமை> கொள்ளவேண்டிய சிறந்த செயல் என்பதில் ஐயமில்லை
>

விடுதலை! விடுதலை! விடுதலை!

பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுதலை!
திறமை கொண்டதீமை யற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)

என்ற பாடலை இந்திய அரசின் சாசன உரிமைகளைக் கொண்டு நிஜமாக்கிய சமூகம் நாடார் சமூகம்.

நாங்கள் படிக்கும் போது எனக்கும் என் அக்காமார்களுக்கும் நாடார் குல
நண்பர்களுண்டு. குறிப்பாக பாண்டி எனும் என் நண்பன் ஆரம்பப்பள்ளி சென்ற
ஒவ்வொரு நாளும் திராட்சை, பேரீட்சம் என்று ஏதாவதொன்று அவர்கள் பலசரக்குக்
கடையிலிருந்து கொண்டு வந்து என்னை அழைத்துச் சென்றதை இன்றளவும் மறக்க
முடியவில்லை.

திலகபாமா அவர்களைச் சந்தித்த போது அவரின் மாமியார் என் நண்பராகிவிட்டார்.
அவரொரு முன்னாள் பள்ளி ஆசிரியை. இவர் தானாக ஹிந்தி கற்றுக்கொண்டு
சிவகாசியில் பல்லாயிரம் பேர்களுக்கு ஹிந்தி சொல்லிக்கொடுத்து
இருக்கிறார். “ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே! காரியத்தில் கண்
வையடா! எனும் பழமொழியை மெய்பிப்பது சிவகாசி. ஊரே ஹிந்தி எதிர்ப்பில்
எரிந்து கொண்டிருக்கும் போது இவர் அம்மக்களுக்கு ஹிந்தி
சொல்லிக்கொடுத்திருக்கிறார். காரணம் தன் சமூகம் முன்னேற வேண்டுமென்ற
ஆவல். நான் போய் வந்த பின் துணிந்து இந்தியாவின் ”மினி ஜப்பான்” சிவகாசி
என்று சொல்வேன். அங்கு வெட்டிபயல்களுக்கு இடமே இல்லை. ஆச்சர்யமான ஊர்!
சுத்தமாகவும் இருக்கிறது.

திலகபாமாவுடன் சுறு, சுறு சுபாவை இணைத்தால் ஏதாவது மேஜிக் நடக்கும் என்று
தெரியும். இதோ! ஆகஸ்ட் மாதம் எம் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஆய்வு
செய்ய வாய்ப்புள்ளதா என்று கண்டறிய, பேரா.பரமசிவத்துடன் காளியம்மா
கல்லூரி செல்லப்போகிறேன்.

திருநீலகண்டன்தம்பதியினருக்கும், திலகபாமா அவர்களுக்கும் நன்றிகள்.

நா.கண்ணன்

N. Ganesan

unread,
Apr 14, 2013, 10:00:51 AM4/14/13
to மின்தமிழ், vall...@googlegroups.com
On Apr 14, 5:54 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2013/4/14 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>:

ராஜபாளையம் மதுமிதா அவர்களை கோவை செம்மொழி மாநாட்டில் பார்த்தேன்.
சிவகாசி திலகபாமாவும்
வந்திருந்தாரா?

மலையாளர் தேசத்தார் இன்று டில்லி அரசில் எல்லாம் நல்ல அதிகாரம் பெறுதற்கு
முக்கிய காரணம்
அவர்களின் ஹிந்தி அறிவுதான். கிரந்த லிபியில் இருந்து பிறந்த இன்றைய
மலையாள எழுத்து, அதற்கு
அடுத்த படியாக ஹிந்தி எழுத்து அறிய மலையாளிகளுக்கு மிக உதவுகிறது.

நேற்று கிரந்தம் தனி எழுத்தாக யுனிகோடில் ஆகக்கூடாது என்று நூதலோசு ஐயா
எழுதிய
ஆவணமும் மடலும் யுனிகோர் க்ரூப்பில் கண்டு அதிர்ச்சியாக இருந்தது. அறிஞர்
நூதலோசு
“The present proposal of Grantham in pipeline will clone classical t
language - Sanskrit”
என்கிறார். அவர் எழுதும் ஆவணத்தைக் கேட்டுப் பெற்று இக்குழுவில்
வைக்கவும். என் போன்ற க்ரந்த மாணவர்கள் ஆராய்ந்து சொல்கிறோம். எல்லோரும்
பங்குபெறலாம். க்லாஸிகல் லான்யுஏஜ் சம்ஸ்கிருதத்தை
எப்படி யுனிகோட் க்ரந்தம் க்லோன் செய்யும்? அதனால் என்ன அறிஞருக்குக்
கவலை?
இப்போதுள்ள யுனிகோட் க்ரந்தத்தில் ஏற்கெனவே ல, ள இருப்பதை வேந்தன்
ஐயாவுக்கு மறுமொழி
கொடுத்திருந்தேன். தமிழின் ள க்ரந்தமாக இருப்பது சிறப்பு. மலையாளம்,
தமிழ் திவ்யப்ரபந்தம்,
தேவாரம் போன்றன க்ரந்த லிபியில் எழுதும் வரலாற்றைச் சுருக்கமாகக்
குறிப்பிட்டு அறிஞர்
மடலுக்கு மறுமொழி எழுதினேன்.

ஏற்கெனவே, கிரந்தத்தில் ஒருபகுதி யுனிகோடில் ஏறிய பிறகு என்ன பிரச்சினை
என என் போன்றவர்களுக்குப் புரியவில்லை. கல்வெட்டுக்கள், பழைய கால
புஸ்தகக்கள் போல ஆர்ய, த்ராவிட பாஷைகள் எழுத
கணியுகத்துக்கு ஏற்ப க்ரந்தலிபி மலரவேணும். க்ரந்தம் கற்றால் மலையாளம்,
ஹிந்தி போன்ற லிபிகள் கற்க ஒரு கல்வித்துணை தூண்டுகோலாக இருக்கும்.
ஹிந்தி எழுத்தும், தமிழ் எழுத்தும் ஒரு பக்கத்தில் அச்சடித்தால்
பொருத்தமாக இல்லை. ஆனால், பாலும் தேனும் போல க்ரந்தமும், தமிழும் கலந்தே
இயங்குவதை சிலாகிகிதங்களில் 2000 ஆண்டுகளாய் தமிழகத்தின் மரபு.

தமிழர் போற்றிய மரபான க்ரந்தலிபி ஆர்ய-த்ராவிட பாஷைகள் செம்மொழிகள்
இரண்டனுக்கும் பயன்பட வேண்டும். விஜய வருஷத்தில் கொற்றவை அருள் செய்வாள்.

நா. கணேசன்

கவலைப்பட வேண்டாம் என யுனிகோர் குழுவில் யான் இட்ட மடல்கள்:

Grantha script is the one that gave rise to both Malayalam and Tamil
scripts.
And, Grantha for North Indian languages is already in the pipeline,
I gave the proposal to encode Grantha like major Indian scripts in the
ISCII model.
Grantha was and is used to write sacred texts, 1500 years old, not
just in
Sanskrit but also Dravidian languages.

All the best,
N. Ganesan

எஸ்ஆர்எம் வேந்தர் பொன்னவைக்கோ அவர்களுக்கு எழுதிய மறுமொழி:
Dear sir,

It does not make sense to write place and person names wrongly in
Grantha text. We will lose semantics totally.

And, with so many properties - glyphs, virama, chillu forms (which
Tamil lacks) - quite different from Tamil, we need to make Grantha
script fully functional for both (Indo)Aryan and Dravidian. ISO
standards cannot discriminate between language families, and note we
have Grantha letters in Tamil block itself already. That is the
standard procedure.

N. Ganesan

N. Kannan

unread,
Apr 14, 2013, 10:17:04 AM4/14/13
to மின்தமிழ்
எப்படித்தான் அலுக்காமல், சலிக்காமல் எல்லா இழைகளிலும் கிரந்தப்
பிரச்சனையை நுழைக்க முடிகிறதோ! இதைப்பார்த்துவிட்டு அவர் பதில் போடுவார்,
பிறகு இழையின் கவனம் கலைந்து சண்டைக்கோழி இழையாகிவிடும்.

நம் சுயம் முக்கியம்தான். ஆனால் அதுவே எப்போதும் முக்கியமல்ல.
இத்தனையாண்டு காலம் மடலாடும் தங்களுக்கு ‘இழைத்திருட்டு’ என்றால்
என்னவென்று தெரியாததா?

இப்பிரச்சனையை வேறு இழையில் தொடருங்கள். இங்கு வேண்டாம்.

நா.கண்ணன்

2013/4/14 N. Ganesan <naa.g...@gmail.com>:
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>
>



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Thiruvengada Mani T.K.

unread,
Apr 14, 2013, 10:35:27 AM4/14/13
to mint...@googlegroups.com
வாழ்த்துகள் சுபா
ஸ்டெல்லா ஆண்ட்டோவின் பரதவர் இழை பாதியில் நின்று வி்ட்டதே.. அவரும் தொடர்ந்தால் நல்லது.
மணி


2013/4/14 N. Kannan <navan...@gmail.com>



--
Dr.T.K.Thiruvengada Mani

seshadri sridharan

unread,
Apr 14, 2013, 10:43:57 AM4/14/13
to mint...@googlegroups.com
//மலையாள தேசத்தார் இன்று டில்லி அரசில் எல்லாம் நல்ல அதிகாரம் பெறுதற்கு
முக்கிய காரணம் > அவர்களின் ஹிந்தி அறிவுதான். கிரந்த லிபியில் இருந்து
பிறந்த இன்றைய மலையாள எழுத்து, அதற்கு அடுத்த படியாக ஹிந்தி எழுத்து
அறிய மலையாளிகளுக்கு மிக உதவுகிறது.//

அதை ஏன் கேட்கிறீர்கள் அந்த வெட்கக் கேட்டை. சொன்னால் வெட்க்க் கேடு
சொல்லாட்டி மானக் கேடு சரி சொல்றேன்.

திராவிடம்! திராவிடம்!! என்று பேசினார்கள். அந்த திராவிடத்திற்கு ஆரியம்
தலைமை ஏற்றதோ 1987 இல் வி. என். சானகி வடிவில். பின்பு செயலலிதா வடிவில்.
எல்லாம் பின் வாசல் வழியாக வந்தது தான் . ஒன்றும் இல்லை! இவர்கள் திராவிட
ஏமாற்று மோசடித் தலைமைக்கு வைப்பாட்டிகளாக இருந்தார்கள். திராவிட
கொள்ளைக் கும்பல் ஒற்றுமை இன்மையால் இவர்களை முன்னிலைப்படுத்தி பிழைப்பு
தேடிக் கொண்டது. மொத்தத்தில் திராவிட ஏமாற்றால் ஏமாந்தவன் தமிழன் தான்.

இதே போலத் தான் மலையாளி வின்சென்டு சார்சு பின் வாசல் வழியாக
சோனியாளுக்கு வைப்பாளன் ஆனான். அந்த உறவில் மேலோங்கியது தான் மலையாள
தில்லி அதிகாரம். போதாத குறைக்கு உரோமன் கிறித்தவம் வேறு இந்திய
அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறது. இதற்கும் இந்திக்கும் எந்தத்
தொடர்பும் இல்லை.

எத்தனையோ தமிழர் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றி பெற்று வட
மாநிலங்களில் பணியாற்றுகிறார்கள். இந்தியை அறிந்தே பணியாற்று கிறார்கள்.
ஆனாலும் அவர்களால் மலையாள மாபியா போல் தில்லி அதிகாரத்தை கைப்பற்ற
முடியவில்லையே ஏன்?

இந்தியால் தில்லி அதிகாரத்தை கைப்பற்றலாம் என்பது ஒரு சப்பைக் கட்டு
காரணம். தில்லி என்பதே இனி இல்லவே இல்லை என்ற நாள் எப்போது வரும்!!
ஆருடம் சொல்லுங்கள்.


சேசாத்திரி

Subashini Tremmel

unread,
Apr 14, 2013, 10:45:15 AM4/14/13
to மின்தமிழ், Subashini Tremmel
டாக்டர். கணேசன்,

இன்றைய இந்தச் சிறப்பு வெளியீட்டிற்கும் இந்த உங்களின் மடலிற்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குத் தெரியவில்லை. 

இது ஒரு வரலாற்று சஞ்சிகைத் தொகுப்பு பற்றிய அறிவுப்பு.

இதனை டவுன்லோட் செய்து வாசித்து  அதிலுள்ள விஷயங்களை கலந்துரையாடல்களுக்குக் கொண்டு வந்தால் அதனால் பயனுண்டு. அதை விடுத்து ஏன் யூனிகோட் விஷயத்தை இங்கே கொண்டு வந்து குழப்பத்தை ஆரம்பிக்கின்றீர்கள் ?

focused reading என்பது தேவை ஐயா.

சுபா





2013/4/14 N. Ganesan <naa.g...@gmail.com>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.


Nagarajan Vadivel

unread,
Apr 14, 2013, 10:45:40 AM4/14/13
to மின்தமிழ்
1919 ஆம் ஆண்டில் சென்னையில் அச்சடிக்கப்பட்ட இந்த மாத இதழின் அச்சுருக்களை ஊன்றிக் கவனித்தால் இதுவே அக்காலத்தில் அச்சு ஊடகத்தில் பயன்பட்ட எழுத்துக்கள் கிரந்த வடிவில் அமைக்கப்பட்ட தமிழ் நெடுங்கண்க்கு எழுத்துக்கள் என்பது தெளிவாகும்

இப்போது இந்த நூல மின் வருடி ஒரு படமாக வெளியிடப்பட்டுள்ளது.  நாளைக்கு இது தட்டச்சு செய்யப்பட்டு எண்ணிம வடிவில் வெளியாக இன்றைய ஒருங்குறியீட்டு வரிவடிவம் எள்ளளவும் உதவாது

ஆயிரக்கணக்கான அச்சு வளங்கள் இதுபோல் தனியாரிடம் தஞ்சம் புகுந்துள்ளது அவர்களின் அருட்கொ டையால் தமிழ் மரபுக் கட்டளைக்குச் சென்றடையும் செல்வங்களை எவ்வாறு அதன் மூலவடிவம் மாறாமல் எண்ணிமப்படுத்துவது என்பது ஒரு பெரிய சவால்

ஒருங்குறியீட்டில் யூடிஎஃப் 32-ல் முன் யோசனையுடன் திட்டமிட்டுச் செயல்படவேண்டிய சூழ்நிலை ஏற்படும்

கணேசர் ஐயா மனது வைத்தால் யூ டி எஃப் 32-லும் யூ டி எஃப் 64-லிலும் எல்லா வரிவடிவ எண்களையும் பயன்படுத்துவது எப்படி என்று இப்போதிருந்து சிந்தனை செய்யலாம்

யூ டி எஃப்  8 செத்த பாம்பு யூ டி எஃப் 16 முற்றுப்பெறாத நிலை  எல்லாவற்றையும் விட்டொழித்து புதிய சிந்தனை ஐயா மனதில் தோன்ற வேண்டும்  தோன்றுமா?

நாகராசன்


2013/4/14 N. Kannan <navan...@gmail.com>

Subashini Tremmel

unread,
Apr 14, 2013, 10:50:43 AM4/14/13
to மின்தமிழ், Subashini Tremmel
திரு.கணேசனின் கடிதத்தைப் பார்த்ததுமே நினைத்தேன் .. இப்படி சில உருவாகும் என்று.. நினைத்த்தௌமே நடந்தது.

திரு.சேசாத்ரி..கோபித்துக் கொள்ளாமல் இந்த வெளியீட்டில் நான் எழுதியிருக்கும் விஷயத்தைப் பாருங்கள்.

ஒரு மனிதர் 12 வருடங்கள் தன் சொந்த காசைப் போட்டு மாதா மாதம் சுயமரியாதை மக்கள் மேம்பாடு பெண்கள் மேம்பாடு என்ற வகையில் உழைத்திருக்கின்றார். அதுவும் அந்தக் காலகட்டத்தில். அவரது உறவினர் இந்த சஞ்சிகைகளைப் போற்றி பாதுகாத்திருக்கின்றார். னம்மில் பலர் 10 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் பல நூல்களையும் சஞ்சிகைகளையும் தூக்கி வீசிவிடும் நிலையில்..

அவற்றை நான் மின்னூலாக்கி வெளியிடுகின்றேன்.. இந்தப் பதிவுக்கு ஏற்ற வகையில் இந்த இழை தொடர்பில் இந்த சஞ்சிகையை ஒரு மரியாதைக்காவது பார்த்து அது தொடர்பில் சில கருத்து சொல்லலாம் இல்லையா.. 

அதை விடுத்து உடனே இன பாகுபாட்டு விஷயத்தை தூக்கிக் கொண்டு வந்து விட்டீர்கள்.

சில  வேளைகளில் இவ்வகை கடிதங்கள் அலுப்பு  மட்டுமே தருகின்றன..

சுபா


2013/4/14 seshadri sridharan <ssesh...@gmail.com>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.


Nagarajan Vadivel

unread,
Apr 14, 2013, 10:56:01 AM4/14/13
to மின்தமிழ்
இந்த்யாவின் அரசாளுமை வரலாற்றை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு ஆட்சியிலும் ஒரு குழு மேலாதிக்கம் செலுத்தியது தெரிய வரும்.

Every dog has its own day

இந்தியப் பாராளுமன்றம் செயல்பாட்டுக்கு வந்தபோது பணிபுரிந்த 14 சுருக்கெழுத்தாளர்களில் 11 பேர் மதராஸிகள்

1970-ல் நான் டில்லியில் இருந்த காலத்தில் காதுபடவே மதராஸிகளின் கொட்டத்தைப்பற்றி மற்ற மாநிலத்தவர் வெளிப்படையாகச் சொல்வதுண்டு

இப்போதும் மதராஸிகளின் ஆதிக்கமே உச்சத்தில் உள்ளது

மதராஸி மாஃபியா என்று சொன்னால் என்ன தவறு ஏன் மலையாளிகள் மாஃபியா என்றூ சொல்லவேண்டும்

நாகராசன்




2013/4/14 seshadri sridharan <ssesh...@gmail.com>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---

Thirumoorthy Kasi

unread,
Apr 14, 2013, 11:01:44 AM4/14/13
to mint...@googlegroups.com
வணக்கம் நல்ல படியாக நடுந்து கொள்ளுங்கள் .இன்று நல்ல நாள் தமிழர் திரு நாள் 


2013/4/14 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

N. Ganesan

unread,
Apr 14, 2013, 11:28:11 AM4/14/13
to மின்தமிழ், vall...@googlegroups.com
On Apr 14, 7:45 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> 1919 ஆம் ஆண்டில் சென்னையில் அச்சடிக்கப்பட்ட இந்த மாத இதழின் அச்சுருக்களை
> ஊன்றிக் கவனித்தால் இதுவே அக்காலத்தில் அச்சு ஊடகத்தில் பயன்பட்ட எழுத்துக்கள்
> கிரந்த வடிவில் அமைக்கப்பட்ட தமிழ் நெடுங்கண்க்கு எழுத்துக்கள் என்பது
> தெளிவாகும்
>
> இப்போது இந்த நூல மின் வருடி ஒரு படமாக வெளியிடப்பட்டுள்ளது.  நாளைக்கு இது
> தட்டச்சு செய்யப்பட்டு எண்ணிம வடிவில் வெளியாக இன்றைய ஒருங்குறியீட்டு
> வரிவடிவம் எள்ளளவும் உதவாது
>

திலகபாமா மூலம் சுபாஷிணி எண்ணிமப்படுத்திய 3 இதழ்களும் பார்த்தேன்.
சிறப்பான பணி. சுபா அவர்கள் உழைப்புக்கு தமிழர்கள் நன்றிக்கடன்
பட்டுள்ளனர்.
இந்த 3 பிடிஎப் கோப்பும் பார்த்து மாதிரியாக வைத்து, முத்துநாடார்
நடத்திய
பத்திரிகை முழுவதும் மதுரையில் பிடிஎப் செய்ய நாடார் சங்கத்தவர் முன்வர


வேண்டும்.

பொருளாதார வளம் மிகுந்தவர்கள், சில கல்லூரி மாணவர்களை இப்பணியில்
ஈடுபடுத்தி, ரூபாயும் செலவிட்டால் எல்லாமும் பிடிஎப் ஆகிவிடும்.


வாழ்த்துக்கள்.

இதுபோன்ற ஆயிரக்கணக்கான பத்திரிகை இதழ்கள் பொள்ளாச்சி நசன் ஐயா
சேர்த்துவருகிறார். வள்ளல் அழகப்பர் ஊர்க்காரர் கோட்டையூர் ரோஜ முத்தையா
தொகுப்பு (சிக்காகோ பல்கலை இப்பொழுது சென்னைக்கு நகர்த்தி
பெருநூலகம் அமைத்து நடத்துகிறது). புதுக்கோட்டை ஞானாலாயா கிருஷ்ணமூர்த்தி
தொகுப்பு, நாமக்கல் ராமசாமியார், விருத்தாசலத்தில் பல்லடம் மாணிக்கம் ஐயா
தொகுப்பு, பெரியார் விடுதலை இதழ் நூலகம் (புலவர் ந. இராமநாதனார்
வளர்த்தது)
எனப் பல நூலகங்கள் உள்ளன.

நான் பார்த்த அளவில் முத்துநாடார் அச்சடித்த எந்த எழுத்தும் யுனிகோடில்
வெள்ளுரையாக வெளியிட முடியாமல் இல்லையே. டைப் அடிக்கத் தான் ஆட்களை
பிடிக்கவேண்டும். காலப்போக்கில் நாடார் மகாஜன சங்கம் வெள்ளுரையாக
முத்து அவர்களின் அச்சுக்களைக் யுனிகோட் செய்துவிடும் என எண்ணுகிறேன்.
எந்த எழுத்தை யுனிகோடில் எழுத முடியாது என்று பேராசிரியர் விளக்கினால்
ஆவன செய்ய முயலலாம். நன்றி,

16-ஆம் நூற்றாண்டில் தமிழர் ஒருவருக்கு பணம் கொடுத்து பார்திரியார்கள்
சில வார்த்தைகளை எழுதி இருக்கலாம். என்ரிக்கு பாதிரியார் எழுத்து
என நாம் நினைப்பது ஒரு தமிழர் எழுத்தாகவே இருக்கலாம். அந்த
போர்த்துகீஸ் ஒரிஜினல், தமிழ் என யுனிகோடில் வலைப்பக்கம் செய்யலாம்.
அப்போது அழகாக அந்த தமிழ் யுனிகோடில் தெரியும். 16-ஆம் நூற்றாண்டிலே
எழுதின தமிழே வலைப்பக்கம் செய்ய முடிகிறபோது ஏன் முத்து நாடார்
அச்சை மின்தமிழில் தட்டெழுதவியலாது? என புரியவில்லை.

> ஆயிரக்கணக்கான அச்சு வளங்கள் இதுபோல் தனியாரிடம் தஞ்சம் புகுந்துள்ளது
> அவர்களின் அருட்கொ டையால் தமிழ் மரபுக் கட்டளைக்குச் சென்றடையும் செல்வங்களை
> எவ்வாறு அதன் மூலவடிவம் மாறாமல் எண்ணிமப்படுத்துவது என்பது ஒரு பெரிய சவால்
>

பணம் அந்தந்த ஜாதி சங்கங்கள் கொடுத்தால் எல்லாம் யுனிகோட் ஆகிவிடும்.
தமிழர்களிடம் தமிழ் நூல் தட்டெழுத பணம் வாங்கி ஒருங்கிணைப்பது ஒன்றே
பெருஞ்சவால்.

தேவாரம் தளம் இருக்கிறது. சச்சி ஐயா அவர்களின் சாதனை அது.
அதனை மாதிரியாகக் கொண்டு நாடார்குல மித்திரன் தளம் உருவாக
திலகபாமா, நாடார் சங்கத்தவர் முன்வர வேண்டும்.

நகரத்தார்கள் அச்சுக்கள் பல உள்ளன. நகரத்தார் சங்கங்கள் கூடி
யுனிகோடில் தரலாமே.

> ஒருங்குறியீட்டில் யூடிஎஃப் 32-ல் முன் யோசனையுடன் திட்டமிட்டுச்
> செயல்படவேண்டிய சூழ்நிலை ஏற்படும்
>
> கணேசர் ஐயா மனது வைத்தால் யூ டி எஃப் 32-லும் யூ டி எஃப் 64-லிலும் எல்லா
> வரிவடிவ எண்களையும் பயன்படுத்துவது எப்படி என்று இப்போதிருந்து சிந்தனை
> செய்யலாம்
>
> யூ டி எஃப்  8 செத்த பாம்பு யூ டி எஃப் 16 முற்றுப்பெறாத நிலை  எல்லாவற்றையும்
> விட்டொழித்து புதிய சிந்தனை ஐயா மனதில் தோன்ற வேண்டும்  தோன்றுமா?
>

இப்போதைக்கு நாடார், நகரத்தார், வாணியர் சங்க இதழ்கள் முதலில் யுனிகோட்
ஆகட்டும். பிறகு நீங்கள் தரப்போகிற யுடிஎப் 16, 32, 64, 128, ....
இதுபோன்ற
குறியீடுகளுக்கு கன்வெர்ட் செய்துகொள்ளலாம். எப்போது வரும் இவையெல்லாம்?

அன்புடன்,
நா. கணேசன்

> நாகராசன்
>
> 2013/4/14 N. Kannan <navannak...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > எப்படித்தான் அலுக்காமல், சலிக்காமல் எல்லா இழைகளிலும் கிரந்தப்
> > பிரச்சனையை நுழைக்க முடிகிறதோ! இதைப்பார்த்துவிட்டு அவர் பதில் போடுவார்,
> > பிறகு இழையின் கவனம் கலைந்து சண்டைக்கோழி இழையாகிவிடும்.
>
> > நம் சுயம் முக்கியம்தான். ஆனால் அதுவே எப்போதும் முக்கியமல்ல.
> > இத்தனையாண்டு காலம் மடலாடும் தங்களுக்கு ‘இழைத்திருட்டு’ என்றால்
> > என்னவென்று தெரியாததா?
>
> > இப்பிரச்சனையை வேறு இழையில் தொடருங்கள். இங்கு வேண்டாம்.
>
> > நா.கண்ணன்
>

> > 2013/4/14 N. Ganesan <naa.gane...@gmail.com>:

> ...
>
> read more »

ஆடு பாம்பே படம் எடுத்து

unread,
Apr 14, 2013, 11:56:27 AM4/14/13
to mint...@googlegroups.com, Subashini Tremmel

என்னால் இன்னும் அக்டோபர் இதழைப் பார்க்க முடியவில்லை.  முதல் இதழின் இறுதிப் பக்க விளம்பரத்தில் முத்து நாடார் அவர்கள் எழுதிய நாவல் பற்றிய விளம்பரம் (மேலே உள்ள படம்) வெளியாகியுள்ளது

நவம்பர் இதழில் சிதம்பர மகிமை பற்றிய கட்டுரை அந்த மகிமையில் லட்ச ரூபாய்க்க்ய் மேல் இருப்பதும் அது சிலர் கையில் சிக்கியுள்ளதையும் அந்தப் பணத்தைக் கல்விக்குச் செலவழிக்கவேண்டும் என்று வலியுறுத்தும் கட்டுரை உள்ளது

நாகராசன்

Subashini Tremmel

unread,
Apr 14, 2013, 12:00:32 PM4/14/13
to மின்தமிழ், Subashini Tremmel
உங்கள் பக்கத்தை reload செய்யுங்கள். காலையில் மாற்றிப் போட்ட போதே சோதித்துப் பார்த்தேன். அக்டோபர் வந்ததே.
சுபா


2013/4/14 ஆடு பாம்பே படம் எடுத்து <radius.co...@gmail.com>

Subashini Tremmel

unread,
Apr 14, 2013, 12:08:14 PM4/14/13
to மின்தமிழ், Subashini Tremmel



2013/4/14 N. Ganesan <naa.g...@gmail.com>

On Apr 14, 7:45 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> 1919 ஆம் ஆண்டில் சென்னையில் அச்சடிக்கப்பட்ட இந்த மாத இதழின் அச்சுருக்களை
> ஊன்றிக் கவனித்தால் இதுவே அக்காலத்தில் அச்சு ஊடகத்தில் பயன்பட்ட எழுத்துக்கள்
> கிரந்த வடிவில் அமைக்கப்பட்ட தமிழ் நெடுங்கண்க்கு எழுத்துக்கள் என்பது
> தெளிவாகும்
>
> இப்போது இந்த நூல மின் வருடி ஒரு படமாக வெளியிடப்பட்டுள்ளது.  நாளைக்கு இது
> தட்டச்சு செய்யப்பட்டு எண்ணிம வடிவில் வெளியாக இன்றைய ஒருங்குறியீட்டு
> வரிவடிவம் எள்ளளவும் உதவாது
>

திலகபாமா மூலம் சுபாஷிணி எண்ணிமப்படுத்திய 3 இதழ்களும் பார்த்தேன்.
சிறப்பான பணி. சுபா அவர்கள் உழைப்புக்கு தமிழர்கள் நன்றிக்கடன்
பட்டுள்ளனர்.
நன்றி. இதில் முழு பங்கும் இதனைப் போற்றிப் பாதுகாத்து நமக்கு தனித்தனி பக்கங்களை மின்னாக்கம் செய்து கொடுத்த அந்த நல்ல மனிதருக்கே சாரும்.
 
இந்த 3 பிடிஎப் கோப்பும் பார்த்து மாதிரியாக வைத்து, முத்துநாடார்
நடத்திய
பத்திரிகை முழுவதும் மதுரையில் பிடிஎப் செய்ய நாடார் சங்கத்தவர் முன்வர
வேண்டும்.
பொருளாதார வளம் மிகுந்தவர்கள், சில கல்லூரி மாணவர்களை இப்பணியில்
ஈடுபடுத்தி, ரூபாயும் செலவிட்டால் எல்லாமும் பிடிஎப் ஆகிவிடும்.
வாழ்த்துக்கள்.

 திரு.முத்து நாடார் அவர்கள் வெளியிட்ட  நாடார் குல மித்திரனின் அனைத்து இதழ்களும் அதாவது  1919 செப்டம்பர் மாத இதழ் தொடங்கி இறுதியான 1931ம் ஆண்டு சஞ்சிகை வரை எனக்கு முழுதும் மின்னாக்கம் செய்து கிடைத்து விட்டன. இனி ஒவ்வொன்றாக நான் எனக்கு நேரம் கிடைக்கும் அவற்றை வரிசையாக  முன்னூலக்கி வெளியிடுவேன்.. இன்று மூன்று சஞ்சிகள வெளியிடப்பட்டவை போல. இனி புதிதாக அவர்கள் இது தொடர்பாக செய்ய ஏதும் இல்லை.



இதுபோன்ற ஆயிரக்கணக்கான பத்திரிகை இதழ்கள் பொள்ளாச்சி நசன் ஐயா
சேர்த்துவருகிறார். வள்ளல் அழகப்பர் ஊர்க்காரர் கோட்டையூர் ரோஜ முத்தையா
தொகுப்பு (சிக்காகோ பல்கலை இப்பொழுது சென்னைக்கு நகர்த்தி
பெருநூலகம் அமைத்து நடத்துகிறது). புதுக்கோட்டை ஞானாலாயா கிருஷ்ணமூர்த்தி
தொகுப்பு, நாமக்கல் ராமசாமியார், விருத்தாசலத்தில் பல்லடம் மாணிக்கம் ஐயா
தொகுப்பு, பெரியார் விடுதலை இதழ் நூலகம் (புலவர் ந. இராமநாதனார்
வளர்த்தது)
எனப் பல நூலகங்கள் உள்ளன.
உண்மை. மிகப் பல சஞ்சிகைகள் அவரது அரும்பணியால் சேகரிக்கப்பட்டன.
 

நான் பார்த்த அளவில் முத்துநாடார் அச்சடித்த எந்த எழுத்தும் யுனிகோடில்
வெள்ளுரையாக வெளியிட முடியாமல் இல்லையே. டைப் அடிக்கத் தான் ஆட்களை
பிடிக்கவேண்டும். காலப்போக்கில் நாடார் மகாஜன சங்கம் வெள்ளுரையாக
முத்து அவர்களின் அச்சுக்களைக் யுனிகோட் செய்துவிடும் என எண்ணுகிறேன்.
எந்த எழுத்தை யுனிகோடில் எழுத முடியாது என்று பேராசிரியர் விளக்கினால்
ஆவன செய்ய முயலலாம். நன்றி,

இதை தனி ப்ராஜெக்டாகச் செய்யலாம். முதலில் சிலர் இன்று வெளியீடு கண்ட 3 சஞ்சிக்கைகளிலும் உள்ள சில சுவாரசியமான விஷயங்களைத் த ட்டச்சு செய்ய ஆரம்பிக்கலாம்.

சுபா


Nagarajan Vadivel

unread,
Apr 14, 2013, 12:53:01 PM4/14/13
to மின்தமிழ்
கணேசர் ஐயா
இந்த சஞ்சிகையின் ஒரே ஒரு பக்கத்தை எழுத்துவடிவில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒருங்குறிய்யிட்டு வழியில் என்னிமப்படுத்திக் காட்டுங்கள்

1982-ல் தமிழக அரசு எழுத்துச் சீர்மையை அறிமுகப்படுத்தும்முன் அச்சு வடிவில் இருந்த நூன் வளங்கள் எல்லாம் கொம்பு சுழி என்று சிறப்பு வரிவடிவங்களைக்  கொண்டிருந்தண

தற்போது ஒருங்குறியீட்டு எண்கள் 1982-ல் அரசின் கொள்கையாக அறிவிக்கப்பட்ட எழுத்துருக்களை அடிப்படையாக வைத்து உருவாக்கியது

அந்தக் குறியீடுகள் இந்த அச்சுவடிவை எப்படி எண்ணிமப்படுத்த முடியும் என்றூ குழப்பாமல் சொல்லுங்கள்

நாகராசன்


2013/4/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--

Nagarajan Vadivel

unread,
Apr 14, 2013, 1:03:15 PM4/14/13
to மின்தமிழ்
கணேசர் ஐயா
இந்த சஞ்சிகையின் ஒரே ஒரு பக்கத்தை எழுத்துவடிவில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒருங்குறிய்யிட்டு வழியில் என்னிமப்படுத்திக் காட்டுங்கள்

1982-ல் தமிழக அரசு எழுத்துச் சீர்மையை அறிமுகப்படுத்தும்முன் அச்சு வடிவில் இருந்த நூன் வளங்கள் எல்லாம் கொம்பு சுழி என்று சிறப்பு வரிவடிவங்களைக்  கொண்டிருந்தண

தற்போது ஒருங்குறியீட்டு எண்கள் 1982-ல் அரசின் கொள்கையாக அறிவிக்கப்பட்ட எழுத்துருக்களை அடிப்படையாக வைத்து உருவாக்கியது

அந்தக் குறியீடுகள் இந்த அச்சுவடிவை எப்படி எண்ணிமப்படுத்த முடியும் என்றூ குழப்பாமல் சொல்லுங்கள்

நாகராசன்


2013/4/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--

Innamburan S.Soundararajan

unread,
Apr 14, 2013, 1:14:29 PM4/14/13
to mint...@googlegroups.com
நான் சிறுவயதில் வசித்த இடங்களில் நாடார் சமூகத்தின் மகிமையும், திறனும் காணக்கிடைத்தன. எனினும், திரு.கு.அ.முத்து நாடார் அவர்களின் பணியும், நாட்டுப்பற்றும், தோழமையும் எனக்கு புது வரவாகக் கிடைத்த பாமர கீர்த்தி. நீலகண்டன் தம்பதியையும், திலகபாமாவையும், சுபாஷிணியையும் வாழ்த்துகிறேன்.
இன்னம்பூரான் 


Innamburan S.Soundararajan

unread,
Apr 14, 2013, 4:33:37 PM4/14/13
to mint...@googlegroups.com
செப்டம்பர் மாத இதழில் வந்துள்ள தமிழ் மொழி கட்டுரையும், அக்டோபர் மாத இதழில் வந்துள்ள ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸ தேவரின் சர்வமத சம்மத ஆன்மீகமும், நவம்பர் மாத இதழில் வந்துள்ள 'இன்னும் தூக்கமா' கட்டுரையும், இன்றைய தமிழுலகில் விரவி வர வேண்டிய கருத்துத்தொகை.

நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்

2013/4/14 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

Rajam

unread,
Apr 14, 2013, 5:08:06 PM4/14/13
to mint...@googlegroups.com, Subashini Tremmel
வணக்கம். 

நன்றி:
இத்தகைய வரலாற்று ஆவணம் த.ம.அ வின் மின்னாக்கத்தில் இடம்பெறுவதற்கு முக்கியக் காரணமாக் இருந்தவர்களை நினை கூர்தல் தேவை. இந்த முழு சஞ்சிகையையும் பாதுகாத்து வைத்திருந்த மதுரையைச் சார்ந்த திரு.திருநீலகண்டன் அவர்கள் திரு.முத்து நாடார் அவர்களுக்கு உறவினர். அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த சிவகாசி திருமதி.திலகபாமா அவர்களுக்கு நமது நன்றி என்றும் உரியது. எனது தமிழக பயணத்தின் போது நான் நிச்சயமாக சிவகாசி செல்ல வேண்டும் என்ரு வற்புறுத்திக் கூறிய டாக்டர்.நாகண்ணனுக்கும் எனது நன்றி. த.ம.அ வைப்பற்றிய அறிமுகம் ஆனவுடன் இவற்றை மின்னாக்கம் செய்து பாதுகாப்போம் எனக் கூறியவுடனேயே தாமே முழு பொறுப்பை எடுத்துக் கொண்டு பணியில் இறங்கி தனித்தனிக் கோப்பாக மின்னாக்கம் செய்து தந்துள்ளார் திரு.திருநீலகண்டன் அவர்கள். இவற்றை தனித்தனி மின்னூலாக செய்து நான் த.ம.அ வலைப்பக்கத்தில் இணைக்க உள்ளேன். அதன் தொடக்கமாக இன்று மூன்று இதழ்களின் மின்னூல் வடிவம் உங்கள் பார்வைக்குக் கிடைக்கின்றது. 


இப்படி உள்ளம் திறந்து … எல்லாப் புகழையும் தனக்கே எடுத்துக்கொள்ளாத சுபாவுக்குக் கன்னத்தில் ஒரு முத்தம்! (அட, நான் கொடுப்பேன் நீங்க என்ன சொல்றது/கேக்குறது?) :-) 

[இடைப்பிறவரல்: தன் திண்ணக்கத்தால் பிறரை வருத்திவிட்டு அவரிடம் அதற்காக மன்னிப்புக் கேட்பதுக்கும், நன்மை செய்த பிறருக்கு நன்றி சொல்வதற்கு ம் … நாகரிகமும் மனப்பக்குவமும் வேணும், தெரியுமில்லெ?!] 

மின்னாக்கம் செய்யப்பட்ட "நாடார் குல மித்திரன்" இதழின் எல்லாப் பக்கங்களையும் பார்த்தேன், வியந்தேன்; பழைய எழுத்து, சொல், பொருள் ஆட்சியின் அழகில் சொக்கிப்போனேன். கூந்தல் வளர்ச்சிக்காகவும் மற்றும் உடல் நலனுக்காகவும் என்று அமைந்த விளம்பரங்கள் அருமை! 

இந்தப் பழைய பக்கங்களை அப்படியே உள்ளது உள்ளபடி இப்போது கணினியில் தட்ட முடியாது. 

என்னிடம் 1928-இல் அச்சான வீரமாமுனிவரின் சதுரகராதி இருக்கு. அதன் பக்கங்க ள் தொட்டாலே உதிருகின்றன. தொடாமல் எப்படி மின்னாக்கம் செய்ய என்று தெரியவில்லை. அதே போல 1932-இல் அச்சான பாரதி நூல்கள் என்ற புத்தகமும். இதெல்லாம் என் காலத்துக்குப் பிறகு அம்போ என்று எங்கே போகும் என்று தெரியாது, மக்களே. 

இந்த மின்னாக்கம் செய்த சஞ்சிகைகளைப் பாதுகாத்துவைத்த குடும்பத்தினருக்கு நன்றி! 

அன்புடன்,
ராஜம் 



[தமிழ் மரபு அறக்கட்டளை]



N. Ganesan

unread,
Apr 14, 2013, 8:53:31 PM4/14/13
to மின்தமிழ்
On Apr 14, 10:03 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> கணேசர் ஐயா
> இந்த சஞ்சிகையின் ஒரே ஒரு பக்கத்தை எழுத்துவடிவில் எந்த மாற்றமும் இல்லாமல்
> ஒருங்குறிய்யிட்டு வழியில் என்னிமப்படுத்திக் காட்டுங்கள்
>
> 1982-ல் தமிழக அரசு எழுத்துச் சீர்மையை அறிமுகப்படுத்தும்முன் அச்சு வடிவில்
> இருந்த நூன் வளங்கள் எல்லாம் கொம்பு சுழி என்று சிறப்பு வரிவடிவங்களைக்
> கொண்டிருந்தண
>
> தற்போது ஒருங்குறியீட்டு எண்கள் 1982-ல் அரசின் கொள்கையாக அறிவிக்கப்பட்ட
> எழுத்துருக்களை அடிப்படையாக வைத்து உருவாக்கியது
>
> அந்தக் குறியீடுகள் இந்த அச்சுவடிவை எப்படி எண்ணிமப்படுத்த முடியும் என்றூ
> குழப்பாமல் சொல்லுங்கள்
>
> நாகராசன்
>

Dear Prof. Nagarajan,

(1) For doing this Nadar jathi magazine, we do not need any change
from current
Unicode standard for Tamil. Everything will work. I don't understand
why
we need any new UTF 32, 64, 128 etc., & don't know who or when they
all will come.
If you ask me, there is no need for those & nothing is being planned
for Tamil
by TN Govt. officials as of now.

(2) The current generation of Tamils know what is printed on web pages
as
plain-text data, and that is the script in modern practice taught in
schools,
printed in news media and so on. So if anyone types these issues
of Nadar Kula Mithran, they will appear correctly with no loss as per
current
Tamil writing and teaching.

(3) If you want the old deprecated "vaathu" forms of 12 letters, fonts
are
available and can make use of them. But these font may only be of
historic
interest, and Muthu Nadar's patrikai can be widely made in current
Tamil form.
Especially so, because it is the EVR Periyar's form, and Tiru. Muthu
was
an ardent supporter of Periyar in his life.

Hope this helps,
N. Ganesan

Nagarajan Vadivel

unread,
Apr 14, 2013, 9:49:54 PM4/14/13
to மின்தமிழ்
Dear Dr.Ganesan
No argument.  Only action
Digitize one page using Unicode
Let us look at the result
Nagarajan


2013/4/15 N. Ganesan <naa.g...@gmail.com>

seshadri sridharan

unread,
Apr 14, 2013, 10:16:14 PM4/14/13
to mint...@googlegroups.com
அம்மணி இனவெறுப்பை நான் காட்ட வில்லை கணேசர் கருத்துக்குத் தான் என்
மறுப்பு கருத்தைக் கூறி இருந்தேன். பிராமணர்களே இனி இது பிழைப்பிற்கு
உதவாது என்று ஒதுங்கிவிட்ட நிலையில் கணேசர் கிரந்த வெறியராகவே
மாறிவிட்டது தான் விந்தையாக உள்ளது.


மற்றபடி நீங்கள் மின்னூலாக்கி வெளியிடும் பணி அரும் பணி அதை தான் பாரட்டுகிறேன்.


சேசாத்திரி


2013/4/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

seshadri sridharan

unread,
Apr 14, 2013, 10:25:23 PM4/14/13
to mint...@googlegroups.com
ஐயா! சுருக்கெழுத்துப் பணியும் துறைச் செயலர் பதவியும் ஒன்றா? என்று
ஒப்பிட்டு சொல்லுங்கள். மலையாளிகள் இருப்பது செயலர்களாக. அவர்களை மலையாள
மாபியா என்றது அமெரிக்கத் தூதரகம் தான். அதைத் தான் குறிப்பிட்டு
உள்ளேன்.

சேசாத்திரி

2013/4/14 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Apr 14, 2013, 10:30:35 PM4/14/13
to மின்தமிழ்
ஐயா
உங்களுடைய தனிப்பட்ட கருத்து என்பது சரியா தவறா என்று விவாதிக்க இயலாது.  தனிப்பட்ட கருத்துக்களில் சரி தவறூ என்று சொல்ல ஒன்றுமேயில்லை

நீங்கள்  இப்போதுசுட்டிக் காட்டும் அமெரிக்கத் தூதரகத்தின் ஆவணமும் அது எந்தக் கால கட்டத்தில் எந்தப் பின்னணியில் குறிப்பிடப்பட்டது என்பதைச் சரிபார்க்க வேண்டும்

நாகராசன்


2013/4/15 seshadri sridharan <ssesh...@gmail.com>

coral shree

unread,
Apr 14, 2013, 10:39:23 PM4/14/13
to mint...@googlegroups.com
அன்பின் சுபா,

மிகப்பயனுள்ள பகிர்வு. வாசித்துக் கொண்டிருக்கிறேன். நன்றி சுபா.

அன்புடன்
பவளா

2013/4/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Subashini Tremmel

unread,
Apr 15, 2013, 8:22:53 AM4/15/13
to Rajam, Subashini Tremmel, மின்தமிழ்


2013/4/14 Rajam <ra...@earthlink.net>

வணக்கம். 

நன்றி:
இத்தகைய வரலாற்று ஆவணம் த.ம.அ வின் மின்னாக்கத்தில் இடம்பெறுவதற்கு முக்கியக் காரணமாக் இருந்தவர்களை நினை கூர்தல் தேவை. இந்த முழு சஞ்சிகையையும் பாதுகாத்து வைத்திருந்த மதுரையைச் சார்ந்த திரு.திருநீலகண்டன் அவர்கள் திரு.முத்து நாடார் அவர்களுக்கு உறவினர். அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த சிவகாசி திருமதி.திலகபாமா அவர்களுக்கு நமது நன்றி என்றும் உரியது. எனது தமிழக பயணத்தின் போது நான் நிச்சயமாக சிவகாசி செல்ல வேண்டும் என்ரு வற்புறுத்திக் கூறிய டாக்டர்.நாகண்ணனுக்கும் எனது நன்றி. த.ம.அ வைப்பற்றிய அறிமுகம் ஆனவுடன் இவற்றை மின்னாக்கம் செய்து பாதுகாப்போம் எனக் கூறியவுடனேயே தாமே முழு பொறுப்பை எடுத்துக் கொண்டு பணியில் இறங்கி தனித்தனிக் கோப்பாக மின்னாக்கம் செய்து தந்துள்ளார் திரு.திருநீலகண்டன் அவர்கள். இவற்றை தனித்தனி மின்னூலாக செய்து நான் த.ம.அ வலைப்பக்கத்தில் இணைக்க உள்ளேன். அதன் தொடக்கமாக இன்று மூன்று இதழ்களின் மின்னூல் வடிவம் உங்கள் பார்வைக்குக் கிடைக்கின்றது. 


இப்படி உள்ளம் திறந்து … எல்லாப் புகழையும் தனக்கே எடுத்துக்கொள்ளாத சுபாவுக்குக் கன்னத்தில் ஒரு முத்தம்! (அட, நான் கொடுப்பேன் நீங்க என்ன சொல்றது/கேக்குறது?) :-) 

[இடைப்பிறவரல்: தன் திண்ணக்கத்தால் பிறரை வருத்திவிட்டு அவரிடம் அதற்காக மன்னிப்புக் கேட்பதுக்கும், நன்மை செய்த பிறருக்கு நன்றி சொல்வதற்கு ம் … நாகரிகமும் மனப்பக்குவமும் வேணும், தெரியுமில்லெ?!] 

:-)))

உங்கள் அன்பிற்கு என் நன்றி அம்மா.

 
மின்னாக்கம் செய்யப்பட்ட "நாடார் குல மித்திரன்" இதழின் எல்லாப் பக்கங்களையும் பார்த்தேன், வியந்தேன்; பழைய எழுத்து, சொல், பொருள் ஆட்சியின் அழகில் சொக்கிப்போனேன். கூந்தல் வளர்ச்சிக்காகவும் மற்றும் உடல் நலனுக்காகவும் என்று அமைந்த விளம்பரங்கள் அருமை! 

வரும் நாட்களில் முடிந்தால் மேலும் இதன் தொடர்ச்சி சஞ்சிகைகளை வெளியிடுகின்றேன்.நான் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்ததிலே பல விஷயங்கள் இருப்பதைக் கண்டேன். எல்லாம் சுவையான பற்பல விஷயங்கள். அவற்றைப் பர்றி நாம் இங்கே கலந்துரையாட வேண்டும்.

இந்தப் பழைய பக்கங்களை அப்படியே உள்ளது உள்ளபடி இப்போது கணினியில் தட்ட முடியாது. 

என்னிடம் 1928-இல் அச்சான வீரமாமுனிவரின் சதுரகராதி இருக்கு. அதன் பக்கங்க ள் தொட்டாலே உதிருகின்றன. தொடாமல் எப்படி மின்னாக்கம் செய்ய என்று தெரியவில்லை. அதே போல 1932-இல் அச்சான பாரதி நூல்கள் என்ற புத்தகமும். இதெல்லாம் என் காலத்துக்குப் பிறகு அம்போ என்று எங்கே போகும் என்று தெரியாது, மக்களே. 

உடனே பாதுகாத்தல் முக்கியமாயிற்ரே. காமெராவில் நீங்கள் சில சாம்பிள்கள் எடுத்து எனக்கு அனுப்பி வையுங்களேன். நீங்கள் பக்கங்களைத் திருப்ப ஒரு மெல்லிய கருவியை பயன்படுத்துவது உதவும்.

சுபா

N. Ganesan

unread,
Apr 14, 2013, 10:17:22 PM4/14/13
to மின்தமிழ்
On Apr 14, 6:49 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> Dear Dr.Ganesan
> No argument.  Only action
> Digitize one page using Unicode
> Let us look at the result
> Nagarajan
>

Anyone can type and see Nadar Kula Mithran & look at the results.
No UTF-32 or 64 for these.

N. Ganesan

Nagarajan Vadivel

unread,
Apr 15, 2013, 9:47:33 AM4/15/13
to மின்தமிழ்
ஐயா

அப்படியே பதக்காக யூனிகோடில் கிரந்தம் இழக்கி வந்துவிடுங்கள் அங்கே லோகு ஐயா உங்களுக்காகக் காத்திருக்கிறார்.  நானும் பின்னூட்டம் இட்டுள்ளேன்

தங்களுடைய மேலான மறுவினை எதிர்வினை தேவை

இங்கே ரெம்ப நேரம் தங்க விட மாட்டாங்க

துரத்துவதற்கு முன்னால் நாமளே போயிடுவோம்

நாகராசன்



N. Ganesan

N. Ganesan

unread,
Apr 15, 2013, 11:16:12 AM4/15/13
to மின்தமிழ்
On Apr 15, 6:47 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

Dear professor,

I am not sure what you are saying that
current unicode cannot handle, and what
we need is utf-16, 32, 64, ... & we don't
when you are going to give these for
Tamils to use. I will be waiting.
Regarding grantha, it is already decided that
we need separate encoding, not devanagari.

Nadar Kula Mithran magazine should be
made into plain-text veLLurai by those
interested - Nadars and others. Current
encdoing can handle all that is in this
magazine. Even 2000 year old Sangam
texts, 16th century Tamizar writings,
all 20th century writings like Nadar magazine,
- all are handled in that encoding.

N. Ganesan

Subashini Tremmel

unread,
Apr 22, 2013, 5:18:52 PM4/22/13
to மின்தமிழ், Subashini Tremmel
வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1920ம் ஆண்டு ஜனவரி மாத இதழை இன்று வெளியிடுகின்றேன். 

இந்த இதழின் உள்ளடக்கம்:
  • கடவுள் வணக்கம்
  • பொன்னுசாமி நாடார்
  • மதுரை ராமனாட்ஜில்லா கான்பரன்ஸ்
  • நாடார் ஜனங்களுக்குச் சில குறிப்பு
  • தாய்க்கும் பிள்ளக்கும் சம்பாஷணை
  • இலங்கை வர்த்தகம்
  • கற்கை நன்று
  • மித்திரனுக்கு வேண்டியதென்ன
  • நாடார்களும் கோம்பை நகரமும்
  • அநுதாபக்கவி
  • வியாசநேகர்களுக்கோர் விண்ணப்பம் - வந்தனோபசாரம்
  • கையெழுத்தில்லாக் கடிதம்
  • துண்டு துணுக்குகள்
  • எனது வந்தனம் (ஆசிரியர்)
  • அநுபந்தம்

இந்த மின்னிதழை தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இங்கிருந்து தரவிறக்கி வாசிக்கலாம்.

அன்புடன்
சுபாஷினி ட்ரெம்மல்
[தமிழ் மரபு அறக்கட்டள]

 




2013/4/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>

DEV RAJ

unread,
Apr 23, 2013, 9:38:47 AM4/23/13
to mint...@googlegroups.com
On Monday, 15 April 2013 07:46:14 UTC+5:30, seshadri sridharan wrote:
கணேசர் கிரந்த வெறியராகவே .....


அந்த லிபியில் கணேசர் ஐயா காட்டும் ஆர்வத்தை வெறி
என்று பழிப்பது முற்றிலும் தவறு. சமணரின் பல நூல்களும்
மணிப்ரவாளத்தில் உள்ளன. க்ரந்தம் என்றால் சமயச்
சடங்கைக் கூறும் நூல்கள் எனும் முன்முடிவோடு பேசுவதும்
தவறு. பிற துறை சார்ந்த நூல்களும் அதில் உள்ளன.

சேச்சா வழக்கம்போல் துவேஷ விஷம் கக்குகிறார்



தேவ்

Subashini Tremmel

unread,
Apr 25, 2013, 5:29:24 PM4/25/13
to மின்தமிழ், Subashini Tremmel
இந்தச் சஞ்சிகையை யாரும் பார்க்கவில்லையோ என நினைத்து ப்ளோக் எண்ணிக்கியைப் பார்த்தால் முதல் 3 சஞ்சிகைகள் வெளியீடு இதுவரை 161 பார்வைகள் எனவும் இறுதிப் பதிவை 37 பேர் இதுவரை பார்த்திருப்பதாகத் தெரிந்தது. வாசித்த நண்பர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டாலும் இப்பகிர்வு சுவையாக அமையுமே. 

சுபா


2013/4/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Innamburan S.Soundararajan

unread,
Apr 25, 2013, 5:34:54 PM4/25/13
to mint...@googlegroups.com
நான் கொஞ்சம் கொஞ்சமாக பார்த்து வருகிறேன். ஒரு முறை கருத்து பகிர்ந்துக் கொண்டதாக ஞாபகம்.
இ 

2013/4/25 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--

Subashini Tremmel

unread,
Apr 25, 2013, 5:40:49 PM4/25/13
to மின்தமிழ், Subashini Tremmel
வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1920ம் ஆண்டு பெப்ரவரி மாத இதழை இன்று வெளியிடுகின்றேன். 

இந்த இதழின் உள்ளடக்கம்:
  • கடவுள் வணக்கம்
  • எனது சந்தோஷம்
  • இலங்கை நாடார்கள் வர்த்தகம்
  • தூத்துக்குடி
  • பத்திராதிபர் குறிப்பு
  • வினோத கணித வினா
  • பொது சமாச்சாரம்
  • கல்லூருணி
  • மதிப்புரை
  • என் ஆடையாபரணம்
  • அநுபந்தம்

இந்த மின்னிதழை தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இங்கிருந்து தரவிறக்கி வாசிக்கலாம்.

அன்புடன்
சுபாஷினி ட்ரெம்மல்
[தமிழ் மரபு அறக்கட்டளை]


2013/4/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Apr 25, 2013, 9:18:15 PM4/25/13
to mint...@googlegroups.com, Subashini Tremmel
வணக்கம்.

மிகப்பெரிய,
கிடைத்தற்கரிய
ஒரு ஆவணத்தை பெரிதும் முயன்று மின்னாக்கம் செய்துள்ளீர்கள்.

பாராட்டுகள்.   தொடரட்டும் தங்களது தமிழ்த்தொண்டு.

அன்பன்
கி.காளைராசன்

2013/4/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Subashini Tremmel

unread,
Apr 29, 2013, 2:17:24 PM4/29/13
to மின்தமிழ், Subashini Tremmel
வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1920ம் ஆண்டு ஏப்ரல் மாத இதழை இன்று வெளியிடுகின்றேன்.

இந்த இதழின் உள்ளடக்கம்:
Inline image 1

  • கடவுள் வணக்கம்
  • சென்னை மாகாணப் புதுச்சட்ட சபையும் நாடார்களும்
  • எனது கதை
  • கிளைச்சங்கம்
  • மானிடவர்க்க முன்னேற்றம்
  • கடிதங்கள்
  • விநோத விடுகதை வினா
  • சில்லரைக் குறிப்புக்கள்
  • இலங்கை நாடார்களும் சங்கமும்
  • சங்கப்பூர்த்தி விஷேஷங்கள்
  • லண்டன் கடித மொழிபெயர்ப்பு
  • மதுரைச் செய்தி


இந்த மின்னிதழை வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
சுபாஷிணி ட்ரெம்மல்
[தமிழ் மரபு அறக்கட்டளை]


2013/4/26 கி.காளைராசன் <kalair...@gmail.com>
image.jpg

Rajam

unread,
Apr 29, 2013, 2:38:26 PM4/29/13
to Minthamil, Subashini Tremmel
இந்த இதழை விரைவாகக் கண்ணோட்டமிட்ட போது … கடைசிப் பக்கத்தில் உள்ள விளம்பரத்தில் உள்ள பெயர் ஒன்று (வி.எ.எஸ்.பாணி) என் பேராசிரியர் திரு ஔவை துரைசாமிப் பிள்ளை அவர்கள் சொன்ன ஒரு நகைச்சுவைத் துணுக்கை நினைவுபடுத்திய து. 


இந்த இதழின் கடைசிப் பக்கத்தில் உள்ள "வி.எ.எஸ்.பாணி" என்பது "வி.எ.சக்கரபாணி" என்ற பெயரின் சுருக்கமாக இருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது. அந்தக் காலத்தில் அப்படித்தான் பெயர்களைச் சுருக்குவார்கள். 


வகுப்பில் ஒரு நாள் இதைப் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது ஔவை சொன்னார்: "போகப் போக என் பெயரையும் ('துரைசாமி') ஒரு நாள் 'டி.எஸ்.மி' என்று சொல்லத் தொடங்கிவிடுவார்கள்" என்று! :-) 


சங்க காலப் பெயர்களுக்கும் (வடம வண்ணக்கன் தாமோதரனார், தங்கால் ஆத்திரேயன், மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார், … ) பிற்காலத்தில் சுருக்கி வழங்கப்பட்ட பெயர்களுக்கும் எவ்வளவு வேறுபாடு! ஒருவருடையை identity-ஐயே குலைத்துவிடும் வழக்கம் தோன்றியது ஏன் என்று ஆராயலாம்! 



Begin forwarded message:

N. Ganesan

unread,
Apr 29, 2013, 3:10:23 PM4/29/13
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com

On Apr 29, 11:17 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> வணக்கம்.
>
> நாடார் குல மித்திரன் 1920ம் ஆண்டு ஏப்ரல் மாத இதழை இன்று வெளியிடுகின்றேன்.
>

Thanks. People like Sri. Muthu Nadar are the reason for their caste
growth
mentioned in BBC analysis today.
http://www.bbc.co.uk/news/world-asia-india-21972989

Nadars have grown a long way from Rev. Caldwell's days.
& provide a model for all Hindu castes of India to follow.

N. Ganesan

> இந்த இதழின் உள்ளடக்கம்:
> [image: Inline image 1]
>

>    - கடவுள் வணக்கம்
>    - சென்னை மாகாணப் புதுச்சட்ட சபையும் நாடார்களும்
>    - எனது கதை
>    - கிளைச்சங்கம்
>    - மானிடவர்க்க முன்னேற்றம்
>    - கடிதங்கள்
>    - விநோத விடுகதை வினா
>    - சில்லரைக் குறிப்புக்கள்
>    - இலங்கை நாடார்களும் சங்கமும்
>    - சங்கப்பூர்த்தி விஷேஷங்கள்
>    - லண்டன் கடித மொழிபெயர்ப்பு
>    - மதுரைச் செய்தி


>
> இந்த மின்னிதழை வாசிக்க இங்கே

> செல்க!<http://tamilheritagefoundation.blogspot.com/2013/04/1920_29.html>


>
> அன்புடன்
> சுபாஷிணி ட்ரெம்மல்

> *[தமிழ் மரபு அறக்கட்டளை]*
>
> 2013/4/26 கி.காளைராசன் <kalairaja...@gmail.com>


>
>
>
> > வணக்கம்.
>
> > மிகப்பெரிய,
> > கிடைத்தற்கரிய
> > ஒரு ஆவணத்தை பெரிதும் முயன்று மின்னாக்கம் செய்துள்ளீர்கள்.
>
> > பாராட்டுகள்.   தொடரட்டும் தங்களது தமிழ்த்தொண்டு.
>
> > அன்பன்
> > கி.காளைராசன்
>

> > 2013/4/26 Subashini Tremmel <ksubash...@gmail.com>


>
> >> வணக்கம்.
>
> >> நாடார் குல மித்திரன் 1920ம் ஆண்டு பெப்ரவரி மாத இதழை இன்று
> >> வெளியிடுகின்றேன்.
>
> >> இந்த இதழின் உள்ளடக்கம்:
>

> >>    - கடவுள் வணக்கம்
> >>    - எனது சந்தோஷம்
> >>    - இலங்கை நாடார்கள் வர்த்தகம்
> >>    - தூத்துக்குடி
> >>    - பத்திராதிபர் குறிப்பு
> >>    - வினோத கணித வினா
> >>    - பொது சமாச்சாரம்
> >>    - கல்லூருணி
> >>    - மதிப்புரை
> >>    - என் ஆடையாபரணம்
> >>    - அநுபந்தம்
>
> >> இந்த மின்னிதழை தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இங்கிருந்து<http://tamilheritagefoundation.blogspot.com.es/2013/04/1920_25.html>தரவிறக்கி வாசிக்கலாம்.


>
> >> அன்புடன்
> >> சுபாஷினி ட்ரெம்மல்

> >> *[தமிழ் மரபு அறக்கட்டளை]*
>
> >> 2013/4/22 Subashini Tremmel <ksubash...@gmail.com>


>
> >>> வணக்கம்.
>
> >>> நாடார் குல மித்திரன் 1920ம் ஆண்டு ஜனவரி மாத இதழை இன்று வெளியிடுகின்றேன்.
>
> >>> இந்த இதழின் உள்ளடக்கம்:
>

> >>>    - கடவுள் வணக்கம்
> >>>    - பொன்னுசாமி நாடார்
> >>>    - மதுரை ராமனாட்ஜில்லா கான்பரன்ஸ்
> >>>    - நாடார் ஜனங்களுக்குச் சில குறிப்பு
> >>>    - தாய்க்கும் பிள்ளக்கும் சம்பாஷணை
> >>>    - இலங்கை வர்த்தகம்
> >>>    - கற்கை நன்று
> >>>    - மித்திரனுக்கு வேண்டியதென்ன
> >>>    - நாடார்களும் கோம்பை நகரமும்
> >>>    - அநுதாபக்கவி
> >>>    - வியாசநேகர்களுக்கோர் விண்ணப்பம் - வந்தனோபசாரம்
> >>>    - கையெழுத்தில்லாக் கடிதம்
> >>>    - துண்டு துணுக்குகள்
> >>>    - எனது வந்தனம் (ஆசிரியர்)
> >>>    - அநுபந்தம்
>
> >>> இந்த மின்னிதழை தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இங்கிருந்து<http://tamilheritagefoundation.blogspot.com.es/2013/04/1920.html>தரவிறக்கி வாசிக்கலாம்.


>
> >>> அன்புடன்
> >>> சுபாஷினி ட்ரெம்மல்

> >>> *[தமிழ் மரபு அறக்கட்டள]*
>
> >>> 2013/4/14 Subashini Tremmel <ksubash...@gmail.com>

> ...
>
> read more »
>
>  image.jpg
> 27KViewDownload- Hide quoted text -
>
> - Show quoted text -

Subashini Tremmel

unread,
May 4, 2013, 6:24:52 PM5/4/13
to மின்தமிழ், Subashini Tremmel

வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1920ம் ஆண்டு மே மாத இதழை இன்று வெளியிடுகின்றோம்.

இந்த இதழின் உள்ளடக்கம்:

  • கடவுள் வணக்கம்
  • கும்மாப்பட்டியில் இந்துக்களின் கொடுமை
  • ஞானப்பிரகாசம்
  • கடிதங்கள்
  • பெருநாழி
  • திருமங்கலம்
  • சங்கரர் வெண்பா
  • நமது மித்திரன் வரவேற்பும் வாழ்த்தும்
  • விடுகதை வினா
  • ஆடவர் தருமம்
  • என் சரிதை
  • ஒரு மாணவனின் குறிப்புக்கள்
  • விகடனும் விண்ணப்ப வியாசமும்
  • நமது நாவல்
  • கோடைகாலத்திற்கு.. விளம்பரம்


இந்த மின்னிதழை வாசிக்க!

அன்புடன்
சுபாஷிணி ட்ரெம்மல்
[தமிழ் மரபு அறக்கட்டளை]


2013/4/29 Subashini Tremmel <ksuba...@gmail.com>
வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1920ம் ஆண்டு ஏப்ரல் மாத இதழை இன்று வெளியிடுகின்றேன்.


coral shree

unread,
May 4, 2013, 8:21:35 PM5/4/13
to mint...@googlegroups.com
அன்பின் சுபா,

பகிர்விற்கு நன்றி. அவசியம் வாசிக்கத் தூண்டும் தலைப்புகள். வாசித்துவிட்டு வருகிறேன்.

அன்புடன்
பவளா

2013/5/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

                                                               
                 

Take life as it comes.

Subashini Tremmel

unread,
May 11, 2013, 12:20:49 PM5/11/13
to மின்தமிழ், Subashini Tremmel
வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1920ம் ஆண்டு ஜூன்மாத இதழை இன்று வெளியிடுகின்றோம்.

இந்த இதழின் உள்ளடக்கம்:

  • கடவுள் வணக்கம்
  • சென்னை நாடார்களும் ஐக்கிய சங்கமும்
  • நமது ரகசியம்
  • கடிதங்கள்
  • என் சரிதை
  • சங்கரர் வெண்பா
  • ஒரு மாணவனின் குறிப்புகள்
  • சங்க விசேஷங்கள்
  • வருண நிலையின் வாய்ப்போக்கு
  • விடுகதை வினாவிடை
  • நிகழ்கால விஷயங்கள்
  • மிஸ்டர் அஸரியா நாடார்

K R A Narasiah

unread,
May 11, 2013, 5:49:44 PM5/11/13
to mintamil
WENT THROUGH GREAT!
Narasiah


2013/5/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
May 18, 2013, 3:25:47 AM5/18/13
to மின்தமிழ், Subashini Tremmel
வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1920ம் ஆண்டு ஜூலை மாத இதழை இன்று வெளியிடுகின்றோம்.

இந்த இதழின் உள்ளடக்கம்:


  • கடவுள் வணக்கம்
  • மதுரை ராமநாதபுரம் ஜில்லாக் கான்பரென்ஸ்
  • இந்துமதமும் திருவாதி சுரமண்ய முதலியாரும்
  • கண்விழித்துப் பாருங்கள்
  • கடிதங்கள்
  • வாழ்க்கை
  • என் சரிதை
  • உபகாரம்
  • தமிழ்ச்சங்கம்
  • தைரிய முதலியார்
  • ஞானாம்பிகை
  • நிகழ்கால விஷயங்கள்
  • மனானந்த மஞ்சரி

N. Kannan

unread,
May 20, 2013, 9:18:33 AM5/20/13
to மின்தமிழ்
இதை வாசிக்கும் போது பல உண்மைகள் தெரிகின்றன, பல பொய்களும் பல்லிளிக்கின்றன.

உதாரணமாக இப்பத்திரிக்கையின் நடை அக்காலத்திற்கு ஒப்ப சமிஸ்கிருதம் கலந்த மணிப்பிரவாளமாக உள்ளது. எனவே ஐயர்மார்கள்தான் மணிப்பிரவாளத்தைக் கொண்டு வந்து தமிழைக் கெடுத்தது என்று சொல்லமுடியாது. நாடார் குல மித்திரனும் சளைக்காமல் மணிப்பிரவாளம் பேசுகிறது.

மேலும் ஆங்கிலம் கலந்த மணிப்பிரவாளம் என்பது அப்போதே உருவாகி நிலைத்துவிட்டதும் புரிகிறது!

அதிலொரு வேடிக்கை என்னவென்றால், ‘ஐயர்’ என்று ஒருவரைச் சொல்ல அது ஆட்சேபிக்கப்பட. இவர் நான், ‘ஐயர்’ என்ற சாதியைச் சொல்லவில்லை, ‘ஐயர்’ என்ற மரியாதைச் சொல்லைப் பயன்படுத்தினேன் என்று நழுவுகிறார். இந்த தைர்யத்தில்தான் மு.கருணாநிதியும், ‘ஐயன்’ வள்ளுவன் என்று சொன்னார் போலும் (வள்ளுவருக்கு இப்போதும் பூணூல் இருக்கிறதோ?) :-))

இன்னும் சுவாரசியமான விஷயம் அப்போது சட்டசபை அமளி துமளிப்பட்டிருக்கிறது எனும் சேதி. கூச்சலை அடக்க முடியாமல் அக்கிராசனர் வெளியே போய்விடுகிறார்.

சபாஷ்! தமிழகம் :-))

எவ்வளவு விஷயங்கள் கிடைக்கின்றன, இம்மாதிரி பழைய புத்தகங்களை வாசித்தால். ராஜயோகம் என்று சும்மாவா அண்ணன் சொன்னாரு!

நா.கண்ணன்


2013/5/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Innamburan S.Soundararajan

unread,
May 20, 2013, 9:37:59 AM5/20/13
to mint...@googlegroups.com
அவை மட்டுமல்ல. அழகிய இலக்கியநடை, நையாண்டி, விளம்பர உத்திகள். நான் பின்னேற்றம் தான் அடைந்து விட்டோம்


2013/5/20 N. Kannan <navan...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jun 8, 2013, 4:28:25 AM6/8/13
to மின்தமிழ், Subashini Tremmel
வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1920ம் ஆண்டு ஆகஸ்ட் மாத இதழை இன்று வெளியிடுகின்றோம்.

இந்த இதழின் உள்ளடக்கம்:

  • கடவுள் வணக்கம்
  • மித்திரன் வேலையும் பற்பலர் யோசனையும்
  • கடிதங்கள் - பர்மா கமுதி நாடார் அசோஸியேஷன், இரங்கூன்
  • பந்தல்குடி நாடார்களின் நிலமை
  • சங்க விஷேஷங்கள்
  • ஒரு விநோத சம்பாஷணை
  • அறம்
  • நிகழ்கால விஷயங்கள்

இந்த மின்னிதழை வாசிக்க!

அன்புடன்
சுபாஷிணி ட்ரெம்மல்
[தமிழ் மரபு அறக்கட்டளை]


2013/5/20 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>



--

Subashini Tremmel

unread,
Jun 30, 2013, 2:24:18 AM6/30/13
to மின்தமிழ், Subashini Tremmel

வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1921ம் ஆண்டு செப்டம்பர் மாத இதழை இன்று வெளியிடுகின்றோம். இந்த இதழில் முந்தைய இதழ்களிலிருந்து maaற்றம் தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது. உதாரணமாக இந்த இதழில் கடவுள் வணக்கம் இல்லை. அத்துடன் தலைப்புப் பகுதியில் அருப்புக் கோட்டை நாடார் கல்விப் பிரசங்க சபையினிலிருந்து வெளிவரும்.. என்ற குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு அரசியல் நிகழ்வுகள் பற்றி விரிவாக அலசப்படுகின்றன. மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.

    • இந்த இதழின் உள்ளடக்கம்:
    • ஷத்திரிய மித்திரன்
    • வெளியூர் வர்த்தமானம்
    • தஷ்ண் மாநாடு
    • எனது வந்தனம் - ஆசிரியர்
    • மானிடயாக்கையின் பயனும் மது உண்பதால் வருங் கேடும்
    • 4-8-21 சென்னை சட்ட சபையில் ஸ்ரீமான் சௌந்தர பாண்டிய நாடார்
    • சோப்பு செய்யும் முறை - விளம்பரம்
    • பணத்தை அபிவிருத்தி செய்யும் வழியைத் தேடுங்கள்

    இந்த மின்னிதழை வாசிக்க!

    அன்புடன்
    சுபாஷிணி ட்ரெம்மல்
    [தமிழ் மரபு அறக்கட்டளை]


    2013/6/8 Subashini Tremmel <ksuba...@gmail.com>

    Subashini Tremmel

    unread,
    Aug 26, 2013, 12:16:59 PM8/26/13
    to மின்தமிழ், Subashini Tremmel
    வணக்கம்.

    நாடார் குல மித்திரன் 1921ம் ஆண்டு அக்டோபர் மாத இதழை இன்று வெளியிடுகின்றோம். இந்த இதழில் முந்தைய இதழ்களிலிருந்து மாற்றம் தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது. உதாரணமாக செப்டம்பர் மாத இதழ் போல இந்த இதழில் கடவுள் வணக்கம் இல்லை. அத்துடன் தலைப்புப் பகுதியில் அருப்புக் கோட்டை நாடார் கல்விப் பிரசங்க சபையினிலிருந்து வெளிவரும்.. என்ற குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது.  மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


    இந்த இதழின் உள்ளடக்கம்:

    • சோப்பு செய்யும் முறை
    • கலியுக மகிமை
    • மகாத்மா காந்தியின் தென்னிந்தியா சுற்றுப் பயணம்
    • மறுப்பு
    • கடிதங்கள்
    • திருவாங்கூரில் நாடார்கள்
    • நாடார் மகாஜன சங்கமும் பிரசாரமும்
    • கோட்டாறு மகாநாடு
    • நாடார் பங்கு லிமிடெட்

    N. Kannan

    unread,
    Aug 26, 2013, 10:44:16 PM8/26/13
    to மின்தமிழ்
    சுபா:

    திலகபாமா ஒரு பொக்கிஷம்.

    சமீபத்தில் த.ம.அ யும் காளீஸ்வரி (தன்னாட்சி) கல்லூரியும் இணைந்து செயல்படும் ’முதுசொம் காப்போம்’ திட்டத்தில் திலகபாமாவின் சேகரிப்பில் இருக்கும் அரிய அறிவியல் நூலொன்றை மாணவர்கள் மின்னாக்கம் செய்ய உள்ளனர். காளீஸ்வரி கல்லூரி முதல்வர் பேராசிரியை, முனைவர் கண்மணி அவர்களும் ஒரு தமிழ்த் தகவல் பொக்கிஷம். அவர்களையும் சிறு, சிறு உரைக்கோப்புகளாக நமது மண்ணின் குரலுக்கு அளிக்க வேண்டியுள்ளேன். நாம் ஒவ்வொருவரும் எப்படி நமது local history பற்றிய விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்கு கவிதாயினி திலகபாமா ஒரு முன்னுதாரணம்.

    நான் அங்கிருந்த சமயத்தில் ஸ்ரீ பாலப்ராஜபதி அடிகளார் இந்திய அளவில் நாடார் மகாஜனங்களை ஒருங்கிணைக்கும் ஒரு மாபெரும் திட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார். நாடார் சமூகத்தைச் சேர்ந்த வைகுந்த ஐயா அவர்கள் ஒரு ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தி கேரளாவில் பிரபலமான நாராயண குருவிற்கு ஆதர்சமாக இருந்திருக்கிறார். அவருடன் இணைந்து தமிழ் மரபு அறக்கட்டளை அயலகத் தமிழர்களுக்கும், பிற இனத்தவருக்கும் வைகுந்ததாசரின் ஆஸ்ரமத்தில் தங்கி இந்துமத தர்மத்தை அறிந்து கொள்ள திட்டமொன்று இயற்றியுள்ளது. 

    நா.கண்ணன்


    2013/8/27 Subashini Tremmel <ksuba...@gmail.com>

    --
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
    For more options, visit https://groups.google.com/groups/opt_out.

    coral shree

    unread,
    Aug 27, 2013, 12:41:23 AM8/27/13
    to மின்தமிழ்
    ​ன்பின் சுபா,

    பகிர்விற்கு நன்றி. அவசியம் வாசிக்க வேண்டும்.

    அன்புடன்
    பவளா​


    2013/8/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>

    --
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
    For more options, visit https://groups.google.com/groups/opt_out.



    --

                                                                   
                     

    Take life as it comes.
    All in the game na !!

    Pavala Sankari
    Erode.
    Tamil Nadu.

    Subashini Tremmel

    unread,
    Aug 27, 2013, 4:54:10 PM8/27/13
    to மின்தமிழ், Subashini Tremmel



    2013/8/27 N. Kannan <navan...@gmail.com>

    சுபா:

    திலகபாமா ஒரு பொக்கிஷம்.

    சமீபத்தில் த.ம.அ யும் காளீஸ்வரி (தன்னாட்சி) கல்லூரியும் இணைந்து செயல்படும் ’முதுசொம் காப்போம்’ திட்டத்தில் திலகபாமாவின் சேகரிப்பில் இருக்கும் அரிய அறிவியல் நூலொன்றை மாணவர்கள் மின்னாக்கம் செய்ய உள்ளனர். காளீஸ்வரி கல்லூரி முதல்வர் பேராசிரியை, முனைவர் கண்மணி அவர்களும் ஒரு தமிழ்த் தகவல் பொக்கிஷம். அவர்களையும் சிறு, சிறு உரைக்கோப்புகளாக நமது மண்ணின் குரலுக்கு அளிக்க வேண்டியுள்ளேன். நாம் ஒவ்வொருவரும் எப்படி நமது local history பற்றிய விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்கு கவிதாயினி திலகபாமா ஒரு முன்னுதாரணம்.
    ஆம் கண்ணன். நான் நேரில் பார்த்த போதே தெரிந்து கொண்டேன். 

    சுபா



    --

    Subashini Tremmel

    unread,
    Aug 27, 2013, 4:56:03 PM8/27/13
    to மின்தமிழ், Subashini Tremmel



    2013/8/27 coral shree <cor...@gmail.com>

    ​ன்பின் சுபா,

    பகிர்விற்கு நன்றி. அவசியம் வாசிக்க வேண்டும்.

    அன்பு பவளா,

    உங்களுக்கு நேரம் வாய்க்கும் போது இதுவரை நான் மின்னாக்கம் செய்து வெளியிட்டுள்ள  1920ம் ஆண்டு வெளிவந்த மின்னூல்களை பார்த்து அதில் வந்துள்ள சில முக்கிய விஷயங்களை ஆய்வு செய்து உங்கள் பார்வையில் ஒரு கட்டுரை ஒன்று செய்யுங்களேன்.

    சுபா



    --

    coral shree

    unread,
    Aug 27, 2013, 7:46:52 PM8/27/13
    to மின்தமிழ்
    ஆம் சுபா, திரு தேவ் சாரும் , திரு கணேசன் சாரும் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போது அவசியம் செய்கிறேன். 

    அன்புடன்
    பவளா


    2013/8/28 Subashini Tremmel <ksuba...@gmail.com>

    Subashini Tremmel

    unread,
    Aug 28, 2013, 9:45:37 AM8/28/13
    to மின்தமிழ், Subashini Tremmel
    வணக்கம்.

    நாடார் குல மித்திரன் 1921ம் ஆண்டு அக்டோபர் மாத இதழ்கள் மூன்று வெளிவந்திருக்கின்றன. அக்டோபர் மாதம் வெளிவந்த இரண்டாம் இதழை இன்று வெளியிடுகின்றோம்.
    குறிப்பு:மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


    இந்த இதழின் உள்ளடக்கம்:
    • கலியுகமகிமை
    • கடிதங்கள்
    • நாடார் பாங்கு
    • கம்பர் யார்
    • செய்தித் திரட்டு
    • நாடார் மகாஜன சங்கமும் பிரசாரமும்
    • கோவில்களில் ஆதிதிராவிடர் பயம்

    இந்த மின்னிதழை வாசிக்க!

    அன்புடன்
    சுபாஷிணி ட்ரெம்மல்
    [தமிழ் மரபு அறக்கட்டளை]


    2013/8/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>

    Subashini Tremmel

    unread,
    Aug 30, 2013, 10:58:46 AM8/30/13
    to மின்தமிழ், Subashini Tremmel
    வணக்கம்.

    நாடார் குல மித்திரன் 1921ம் ஆண்டு அக்டோபர் மாத இதழ்கள் மூன்று வெளிவந்திருக்கின்றன. அக்டோபர் மாதம் வெளிவந்த மூன்றாம் இதழை இன்று வெளியிடுகின்றோம்.
    குறிப்பு:மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


    இந்த இதழின் உள்ளடக்கம்:
    • கலியுகமகிமை
    • கடிதங்கள்
    • நாடார் பாங்கு
    • கம்பர் யார்
    • செய்தித் திரட்டு
    • நாடார் மகாஜன சங்கமும் பிரசாரமும்
    • கோவில்களில் ஆதிதிராவிடர் பயம்

    இந்த மின்னிதழை வாசிக்க!

    அன்புடன்
    சுபாஷிணி ட்ரெம்மல்
    [தமிழ் மரபு அறக்கட்டளை]



    2013/8/28 Subashini Tremmel <ksuba...@gmail.com>

    Subashini Tremmel

    unread,
    Aug 30, 2013, 11:04:23 AM8/30/13
    to மின்தமிழ்
    நண்பர்களே,

    இழையின் உள்ளடக்கத்தில் 2ம் இதழின் உள்ளடக்கத்தை இணைத்து விட்டேன். அதனை மார்றி கீழ்கண்டவாறு வாசிக்கவும்.

    இந்த இதழின் உள்ளடக்கம்:
    • அமெரிக்காவைப் பற்றிய விவரங்கள்
    • மிஸ்டர் அசரியா நாடார் லண்டனிலிருந்து எழுதுகிறார்
    • கடிதங்கள்
    • சங்க விஷயம்
    • நாடார் மஹாஜன சங்கப் பிரசாரம்
    • குல வர்த்தமானம்
    • சமயோசித நன்மொழி
    • இந்திய வீரர்கள்
    சுபா
      


    2013/8/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>

    Subashini Tremmel

    unread,
    Sep 3, 2013, 2:31:00 AM9/3/13
    to மின்தமிழ், Subashini Tremmel
    வணக்கம்.

    நாடார் குல மித்திரன் 1921ம் ஆண்டு நவம்பர் இதழை இன்று வெளியிடுகின்றோம்.
    குறிப்பு:மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


    இந்த இதழின் உள்ளடக்கம்:

    • சங்க விஷயம்
    • செய்தித் திரட்டு
    • ஆளைக்கண்டு மிறட்டுதாம் ஆலங்காட்டுப் பிசாசு
    • தமிழ் நாடுகளில் வழங்கி வரும் பழமொழிகள்
    • குலக்குறிப்பு
    • கடிதங்கள்
    • சுவாமி விவேகாநந்தரின் பிரச்சாரம்
    • மலபார் ஜில்லாவும் மாப்பிள்ளைமாரும்


    இந்த மின்னிதழை வாசிக்க!

    அன்புடன்
    சுபாஷிணி ட்ரெம்மல்
    [தமிழ் மரபு அறக்கட்டளை]


    2013/8/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>

    Subashini Tremmel

    unread,
    Sep 5, 2013, 10:26:07 AM9/5/13
    to மின்தமிழ், Subashini Tremmel
    வணக்கம்.

    நாடார் குல மித்திரன் 1921ம் ஆண்டு டிசம்பர் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. டிசம்பர் மாதம் வெளிவந்த முதல் இதழை இன்று வெளியிடுகின்றோம்.
    குறிப்பு:மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


    இந்த இதழின் உள்ளடக்கம்:

    • மகாத்மா காந்தியவர்களுக்கு பத்திராதிபர் 20-6-21ல் எழுதிய கடிதம்
    • நாடார் மகாஜன சங்கமும் பிரசாரமும்
    • கடிதங்கள்
    • சங்க விஷயங்கள்
    • கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார்களுக்கு விஞ்ஞாபனம்
    • முற்கால ஜப்பான்

    இந்த மின்னிதழை வாசிக்க!

    அன்புடன்
    சுபாஷிணி ட்ரெம்மல்
    [தமிழ் மரபு அறக்கட்டளை]


    2013/9/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>



    --
    http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!

    Subashini Tremmel

    unread,
    Sep 8, 2013, 4:15:19 AM9/8/13
    to மின்தமிழ், Subashini Tremmel
    வணக்கம்.

    நாடார் குல மித்திரன் 1921ம் ஆண்டு டிசம்பர் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. டிசம்பர் மாதம் வெளிவந்த இரண்டாம் இதழை இன்று வெளியிடுகின்றோம்.
    குறிப்பு:மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


    இந்த இதழின் உள்ளடக்கம்:

    • சமயோசித நன்மொழி
    • கடிதங்கள்
    • பத்திராதிபர் கடிதத்திற்கு தேவதாஸ் காந்தியின் பதில்
    • நமது மித்திரன் புதியபோஷகப்பிரபு
    • நம் குல கல்விப்பிரியர்களுக்கு ஓர் விண்ணப்பம்
    • சங்க விஷயங்கள்



    இந்த மின்னிதழை வாசிக்க!

    அன்புடன்
    சுபாஷிணி ட்ரெம்மல்
    [தமிழ் மரபு அறக்கட்டளை]


    2013/9/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>

    Subashini Tremmel

    unread,
    Sep 9, 2013, 12:38:49 PM9/9/13
    to Themozhi, மின்தமிழ், Subashini Tremmel
    இணைத்து விட்டேன் தேமொழி. சோதித்துப் பாருங்கள்.
    குறிப்பிட்டமைக்கு நன்றி.

    அன்புடன்
    சுபா


    2013/9/9 Themozhi <them...@yahoo.com>
    நாடார் குல மித்திரன் - 1921 டிசம்பர் (2) மின்னூல்
    இந்த மின்னிதழை வாசிக்க! <<<வலைப்பூவில் இங்கு சுட்டி கொடுக்கவும் சுபா.  

    அன்புடன்
    ..... தேமொழி

    Subashini Tremmel

    unread,
    Dec 13, 2013, 2:29:09 AM12/13/13
    to மின்தமிழ், Subashini Tremmel
    வணக்கம்.

    நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஜனவரி மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. ஜனவரி மாதம் வெளிவந்த இரண்டாம் முதல் இன்று வெளியிடுகின்றோம்.

    குறிப்பு:மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


    இந்த இதழின் உள்ளடக்கம்:
    • பால்ய விவாகத்தின் கெடுதி
    • தலத்தால் பெருமையா? குலத்தால் பெருமையா?
    • வேல்ஸ் இளவரசர் - இந்தியாவில் அவரது முதல் பிரசங்கம்
    • கடிதங்கள்
    • சென்னை சட்டசபை - முக்கியமான நடபடிக்கைகள்
    • நாடார் மகாஜன சங்கம் - 7வது கன்பரன்ஸ் - வரவு செலவு கணக்கு
    • குலவீரன்
    • சங்க விஷயங்கள்
    • பலதிரட்டு (சிறிய செய்திகள் திரட்டு)
    • கைது செய்யப்பட்ட முக்கிய ராஜீயத் தலைவர்கள்
    • மதுபான  மாண்பு
    • விளம்பரங்கள் (இங்கிலீஷ் காஸ் அடுப்பு, இரவில் மணிபார்க்கும் 8 மூலை ரேடியம் ரிஸ்ட்வாட்ச், பயோகிராப்)


    இந்த மின்னிதழை வாசிக்க!

    அன்புடன்
    சுபாஷிணி ட்ரெம்மல்
    [தமிழ் மரபு அறக்கட்டளை]


    2013/9/8 Subashini Tremmel <ksuba...@gmail.com>

    Subashini Tremmel

    unread,
    Dec 13, 2013, 2:30:44 AM12/13/13
    to மின்தமிழ், Subashini Tremmel



    2013/12/13 Subashini Tremmel <ksuba...@gmail.com>
    வணக்கம்.

    நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஜனவரி மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. ஜனவரி மாதம் வெளிவந்த இரண்டாம் முதல் இன்று வெளியிடுகின்றோம்.

    இதனை  
    ஜனவரி மாதம் வெளிவந்த முதல் சஞ்சிகையை இன்று வெளியிடுகின்றோம்.
    என மாற்றி வாசித்துக் கொள்ளவும்.


    குறிப்பு:மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


    இந்த இதழின் உள்ளடக்கம்:
    • பால்ய விவாகத்தின் கெடுதி
    • தலத்தால் பெருமையா? குலத்தால் பெருமையா?
    • வேல்ஸ் இளவரசர் - இந்தியாவில் அவரது முதல் பிரசங்கம்
    • கடிதங்கள்
    • சென்னை சட்டசபை - முக்கியமான நடபடிக்கைகள்
    • நாடார் மகாஜன சங்கம் - 7வது கன்பரன்ஸ் - வரவு செலவு கணக்கு
    • குலவீரன்
    • சங்க விஷயங்கள்
    • பலதிரட்டு (சிறிய செய்திகள் திரட்டு)
    • கைது செய்யப்பட்ட முக்கிய ராஜீயத் தலைவர்கள்
    • மதுபான  மாண்பு
    • விளம்பரங்கள் (இங்கிலீஷ் காஸ் அடுப்பு, இரவில் மணிபார்க்கும் 8 மூலை ரேடியம் ரிஸ்ட்வாட்ச், பயோகிராப்)


    இந்த மின்னிதழை வாசிக்க!


    சுபா

    Suba.T.

    unread,
    Apr 26, 2014, 4:54:53 PM4/26/14
    to மின்தமிழ், Subashini Tremmel
    வணக்கம்.

    ஓரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நாடார் குல மித்திரன் மின்னூல்கள் தொடர்கின்றன.

    நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு பெப்ரவரி மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. பெப்ரவரி மாதம் வெளிவந்த முதல் இதழை இன்று வெளியிடுகின்றோம்.

    குறிப்பு:மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


    இந்த இதழின் உள்ளடக்கம்:
    • நாடார் மகாஜனங்களின் நிலமை
    • சென்னை சட்ட சபையில் கமுதி தண்டப் போலீஸ்வரி
    • செட்டாயிருந்தால் செல்வனாகலாம்
    • தற்காலப்போக்கும் நமது கடமையும்
    • ஆலயங்களும் நாடார்களும்

    வாசிக்க இங்கே செல்க!

    அன்புடன்
    சுபாஷிணி ட்ரெம்மல்
    [தமிழ் மரபு அறக்கட்டளை]

    Mathivanan

    unread,
    Apr 27, 2014, 12:02:24 AM4/27/14
    to mint...@googlegroups.com

     

    -- இந்த தமிழனை பாராட்டுவோமே

    தமிழ்நாட்டு மின்சார பிரச்சனைக்கு தீர்வுஇதுதான் தமிழன் கண்டுபுடிப்பு

    தயவு செய்து படித்துவிட்டு ஷேர் பண்ணவும் ..!

    கே.ஆர்ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்காமுழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும்பெயர்....

    இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தைசெய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ்உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறது.

    இதில் பெருமைக்குரிய விஷயம்,

    இவர் ஒரு தமிழர் "

    என்பதே.

    அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார்இந்தத் தமிழர்கே.ஆர்ஸ்ரீதர்....

    திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங்காலேஜில் (தற்போது என்..டி.)மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துமுடித்தவுடன் அமெரிக்காவில் உள்ளஇல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர்என்ஜினீயரிங் படித்து விட்டுஅதேபல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர்பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.

    மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரைநாசா அமைப்பு உடனடியாக வேலைக்குஎடுத்துக் கொண்டது.

    அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ளஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின்இயக்குநராக அவரை நியமித்தது.

    செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா?

    அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக்கண்டுபிடிப்பது எப்படிஎன்பது பற்றி ஆராய்ச்சிசெய்வதே ஸ்ரீதரின் வேலை.

    முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன்சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார்செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியைமேற்கொண்டார்.

    இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும்பெற்றார்.

    ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரெனஅந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது.

    என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்தவிஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.

    அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்துபார்த்தார் ஸ்ரீதர்அதாவதுஏதோ ஒன்றிலிருந்துஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப்பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி,அதனோடு இயற்கையாகக் கிடைக்கும்எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்றுஆராய்ந்து பார்த்தார்.

    அடஎன்ன ஆச்சரியம்மின்சாரம் தயாராகிவெளியே வந்தது.

    இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையானமின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார்செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர்உருவாக்கி இருக்கிறார்தான் கண்டுபிடித்தஇந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில்செய்து காட்டிய போது அத்தனைவிஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தைபயன்படுத்திவர்த்தக ரீதியில் மின்சாரம்தயாரிக்க வேண்டுமெனில் அதற்கானஇயந்திரங்களை உருவாக்க வேண்டும்இதற்குபெரிய அளவில் பணம் வேண்டும்.

    இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும்பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல்நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும்.

    ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார்.

    அவர் பெயர்ஜான் டூயர்சிலிக்கன்பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப்பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமானகிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான்டூயர்.

    அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்டநெட்ஸ்கேப்அமேசான்கூகுள் போன்றநிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்துநிற்கக் காரணம்ஜான் டூயர் ஆரம்பத்தில்போட்ட முதலீடுதான்.

    கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர்தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25மில்லியன் டாலர்தான்.

    ஆனால்ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தகரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்டமுதலீடு 100 மில்லியன் டாலர்.

    இது மிகப் பெரும் தொகைஎன்றாலும் துணிந்துமுதலீடு செய்தார் ஜான்காரணம்ஸ்ரீதர்கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்குஉகந்தது.

    பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போதுசுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும்.

    அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி,அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.

    எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும்பங்கம் வராத மின் உற்பத்தித்தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்புஇருக்கும் என்று நினைத்தார் அவர்.

    தவிரஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டுகுறைவான செலவில் மின்சாரம் தயார் செய்யமுடியும்.

    இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம்குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின்இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை.

    இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின்கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர்அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.

    நல்லவேளையாகஜான் டூயரின் எதிர்பார்ப்புபொய்க்கவில்லை.

    கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டுபலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம்பாக்ஸ்என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ்தயார் செய்துள்ளார்.

    சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப்பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம்.

    இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கைஎரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம்உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார்.

    இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாணவாயுவையும் செலுத்தலாம்.

    அல்லது சூரிய ஒளியைக் கூடபயன்படுத்தலாமாம்.

    இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும்வைத்துக் கொள்ளலாம்.

    வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம்என்பது சிறப்பான விஷயம்.

    உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின்இணைப்புப் பெறாமல்இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒருகாட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம்கொடுத்தால்அதனால் அரசாங்கத்துக்கு எந்தலாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின்இணைப்புக் கொடுப்பதில்லை.

    கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமேபொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிறநிலை அந்த கிராம மக்களுக்கு.

    ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்மட்டும் இருந்தால்உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார்செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர்.

    ஒரு 'ப்ளூம் பாக்ஸ்உங்களிடம் இருந்தால்இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம்கிடைத்துவிடும்.

    இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்குமுதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம்கிடைத்துவிடும்.

    அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம்பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின்எண்ணிக்கை குறையக் காரணம்.

    இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரியநிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைபயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

    கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத்தொழில்நுட்பத்தை வாங்குவதற்கானகான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது.

    'ப்ளூ பாக்ஸ்மூலம் கூகுள் உற்பத்தி செய்யும்400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒருபிரிவுக்கே சரியாகப் போகிறது.

    வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட்மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கிஇருக்கிறது.

    இப்போது Fedex, E bay, கோக்கா கோலா,அடோப் சிஸ்டம்சான் பிரான்சிஸ்கோஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்தபுதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம்தயார் செய்கின்றன.

    100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒருபாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்அட,அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா?என நீங்கள் நினைக்கலாம்.

    ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டுஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது.

    தனக்குத் தேவையான 500 கிலோ வாட்மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார்செய்துவிடுகிறது.

    இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதேமாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின்கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.

    இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில்அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம்பாக்ஸ்இருக்கும்.

    சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கிபயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர்.

    அந்த அளவுக்கு விலை குறையுமா என்றுகேட்டால்ஒரு காலத்தில் லட்சத்தில் விற்றகம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள்கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின்ஆதரவாளர்கள்.

    ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில்நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள்அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள்என்பதில் சந்தேகமில்லை...

    நமது மத்திய மாநில அரசுகள் இவருடையதொழில் நுட்ப அறிவியலை பயன் படுத்துமாஎன்பது .?

    இந்த தமிழனை பாராட்டுவோமே 

தமிழ்நாட்டு மின்சார பிரச்சனைக்கு தீர்வு இதுதான் தமிழன் கண்டுபுடிப்பு

தயவு செய்து படித்துவிட்டு ஷேர் பண்ணவும் ..!

கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.... 

இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. 

இதில் பெருமைக்குரிய விஷயம், 

" இவர் ஒரு தமிழர் "

என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்....

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். 

மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது.

அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. 

செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? 

அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. 

முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். 

இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.

ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. 

என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. 

அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். 

அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.

இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும்.

இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். 

ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். 

அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். 

அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான். 

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். 

ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர்.

இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. 

பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். 

அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. 

எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். 

தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். 

இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. 

இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. 

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். 

இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். 

இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். 

அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். 

இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். 

வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. 

கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. 

ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர். 

ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். 

இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.

அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம். 

இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. 

கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 

'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. 

வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. 

இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. 

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். 

ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. 

தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. 

இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.

இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும். 

சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். 

அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். 

ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை...

நமது மத்திய மாநில அரசுகள் இவருடைய தொழில் நுட்ப அறிவியலை பயன் படுத்துமா என்பது .?

     



    Sent from my iPhone
    --
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
    For more options, visit https://groups.google.com/d/optout.

    Suba.T.

    unread,
    May 18, 2014, 11:13:35 AM5/18/14
    to மின்தமிழ், Subashini Tremmel

    வணக்கம்.

    நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு பெப்ரவரி மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. பெப்ரவரி மாதம் வெளிவந்த இரண்டாம் இதழை இன்று வெளியிடுகின்றோம்.

    குறிப்பு: இந்த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு சற்று தெளிவு குறைவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


    உள்ளடக்கம்:
    • தஷணமகாநாடு
    • வாசகர் கடிதங்கள்
    • கான்பரென்ஸ் கதை
    • நாடார் மஹாஜன சங்கம் மதுரை கவுன்ஸில் மீட்டிங்கு
    • தென்னிந்தியாவில் புகையிலைப் பயிரில் விழும் பூச்சி புழுக்கள்
    • இந்தியவீரர்

    வாசிக்க இங்கே செல்க!

    அன்புடன்
    சுபாஷிணி ட்ரெம்மல்
    [தமிழ் மரபு அறக்கட்டளை]


    2014-04-26 22:54 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
    வணக்கம்.

    ஓரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நாடார் குல மித்திரன் மின்னூல்கள் தொடர்கின்றன.

    நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு பெப்ரவரி மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. பெப்ரவரி மாதம் வெளிவந்த முதல் இதழை இன்று வெளியிடுகின்றோம்.

    குறிப்பு:மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


    இந்த இதழின் உள்ளடக்கம்:
    • நாடார் மகாஜனங்களின் நிலமை
    • சென்னை சட்ட சபையில் கமுதி தண்டப் போலீஸ்வரி
    • செட்டாயிருந்தால் செல்வனாகலாம்
    • தற்காலப்
      ​ ​
      போக்கும் நமது கடமையும்
    • ஆலயங்களும் நாடார்களும்

    வாசிக்க இங்கே செல்க!

    அன்புடன்
    சுபாஷிணி ட்ரெம்மல்
    [தமிழ் மரபு அறக்கட்டளை]


     

    Suba.T.

    unread,
    May 27, 2014, 12:18:21 PM5/27/14
    to மின்தமிழ், Subashini Tremmel
    வணக்கம்.

    நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு மார்ச் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. மார்ச் மாதம் வெளிவந்த முதலாம் இதழை இன்று வெளியிடுகின்றோம்.

    குறிப்பு: இந்த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு தெளிவு மிக குறைவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


    உள்ளடக்கம்:
    • சென்னைக்கேகும் நாடார்களுக்கு வசதி
    • மிஸ்டர் அஸரியா நாடாரவர்கள் போட்டோ படம்
    • மேலக்கோட்டையூர் சின்னையாபுரம் நாடார் ஷத்திரியவித்தியாபி விர்த்திசங்கம் - 2வது ஆண்டு நிறைவு விழா
    • நம் தாய்பாஷை ஜலதோஷத்தால் வருந்துகிறாள்
    • நற்போதனைகள்
    • செய்தி திரட்டு
    • அருப்புக்கோட்டை ச்ர் முத்துமாரியம்மன் இரதோர்ச்சவம்
    • நாடார்களுக்கோர் எச்சரிக்கை
    • சங்க விஷயங்கள்
    • பொது வர்த்தமானம்

    வாசிக்க இங்கே செல்க!

    அன்புடன்
    சுபாஷிணி ட்ரெம்மல்
    [தமிழ் மரபு அறக்கட்டளை]

    Suba.T.

    unread,
    May 28, 2014, 3:32:17 AM5/28/14
    to மின்தமிழ், Subashini Tremmel
    வணக்கம்.

    இன்றும் ஒரு சஞ்சிகையை வெளியிடுகின்றோம்.

    நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு மார்ச் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. மார்ச் மாதம் வெளிவந்த இரண்டாம் இதழை இன்று வெளியிடுகின்றோம்.

    குறிப்பு: இந்த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு தெளிவு சற்று குறைவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


    உள்ளடக்கம்:
    • பொதுச்சமாச்சாரங்கள்
    • நாடார் மகாஜன சங்கப்பிரசாரம்
    • குறிப்புகளும் அபிப்ராயங்களும்
    • ஆஷியுமல்ல, ஆச்சியுமல்ல, ஆத்தியே சரி
    • ஆலயச் சம்த்துவம்
    • கடிதங்கள்
    • தூங்கியது போதும்
    • மகாத்மா கைது செய்யப்பட்டார்
    • ஆசிரம வாசம்

    அத்துடன்
    நாடார் குல மித்திரன் பத்திராதிபர் சூ.ஆ.முத்து நாடாரவர்களால் பாடப்பட்ட நடராஜப்பதிகம், ஸ்ரீ முத்துமாரியம்மன் பதிகம் பற்றிய நூல் அறிவிப்பும் இடம்பெறுகின்றது.


    வாசிக்க இங்கே செல்க!

    அன்புடன்
    சுபாஷிணி ட்ரெம்மல்
    [தமிழ் மரபு அறக்கட்டளை]

    Suba.T.

    unread,
    Jun 1, 2014, 2:05:19 AM6/1/14
    to மின்தமிழ், Subashini Tremmel
    வணக்கம்.

    இன்றும் ஒரு சஞ்சிகையை வெளியிடுகின்றோம்.

    நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. ஏப்ரல் மாதம் வெளிவந்த முதலாம் இதழை இன்று வெளியிடுகின்றோம்.

    குறிப்பு: இந்த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு தெளிவு சற்று குறைவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


    உள்ளடக்கம்:
    • விஷேஷ கவனிப்பு
    • மாதர்கதி
    • பாம்பு கடிக்காமல் பார்த்துக் கொள்வதும் பாம்புக் ககடிக்கு சிகித்ஸை செய்வதும்
    • கடிதங்கள்
    • மகாத்மா காந்தி
    • செய்தித் திரட்டு
    • சங்க விஷயங்கள்
    • ஆசிரம வாசம்
    • அமெரிக்கா தேசத்தில் பத்திரிகையின் அபிவிருத்தி

    அத்துடன் ..
    அனுபோக கைத்தொழில் போதினி என்ற தலைபிலான கைத்தொழில் சாஸ்திரத்தை விளக்கும் நூல் பற்றிய விளம்பரமும் இந்த இதழில் உள்ளது.


    வாசிக்க இங்கே செல்க!

    அன்புடன்
    சுபாஷிணி ட்ரெம்மல்
    [தமிழ் மரபு அறக்கட்டளை]

    Suba.T.

    unread,
    Sep 14, 2014, 1:42:05 PM9/14/14
    to மின்தமிழ், Subashini Tremmel
    வணக்கம்.

    இன்றும் ஒரு சஞ்சிகையை வெளியிடுகின்றோம்.

    நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. ஏப்ரல் மாதம் வெளிவந்த இரண்டாம் இதழை இன்று வெளியிடுகின்றோம்.

    குறிப்பு: இந்த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு தெளிவு சற்று குறைவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


    இந்த இதழின் உள்ளடக்கம்:
    • பொதுச் சமாச்சாரங்கள்
    • ஔவையின் வாக்கு
    • இந்தியாவின் இராணுவச் செலவு
    • குலக்குறிப்பு
    • சங்க விஷயங்கள்
    • தியாக புத்தியுள்ள 42 வீரர்கள்
    • ஆசிரம வாசம்




    அத்துடன் ..
    அனுபோக கைத்தொழில் போதினி என்ற தலைபிலான கைத்தொழில் சாஸ்திரத்தை விளக்கும் நூல் பற்றிய விளம்பரமும் இந்த இதழில் உள்ளது.


    வாசிக்க இங்கே செல்க!

    அன்புடன்
    சுபாஷிணி ட்ரெம்மல்
    [தமிழ் மரபு அறக்கட்டளை]

    http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
     
    http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
    http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
    http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
    http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
    http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
    http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை

    Suba.T.

    unread,
    Nov 15, 2014, 2:39:54 AM11/15/14
    to மின்தமிழ், Subashini Tremmel
    வணக்கம்.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாடார் குல மித்திரன் சஞ்சிகையின் மின்னாக்கம் தொடர்கின்றது. நண்பர் அருண்குமார் ஞானசம்பந்தம் 1922ம் ஆண்டிற்கான மின்னூலாக்கப்ப்பணிகளைத் தொடங்கியிருக்கின்றார. ஏனைய சஞ்சிகைகளையும் அவரே தொடர்ந்து செய்தளிப்பாரென்று நினைக்கின்றேன். இது தொடரும் பட்ஷத்தில் வாரம் 2 என்ற வகையில் இந்தச் சஞ்சிகையின் தொடர்ச்சியான வெளியீடுகளைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

    இன்று வெளியிடப்படுவது 1922ம் ஆண்டு மே மாதம் வெளிவந்த சஞ்சிகை. மே மாதம் இரண்டு வெளியீடுகள் இருந்திருக்கின்றன. இன்று முதலாவது சஞ்சிகை வெளியிடப்படுகின்றது.

    இந்த இதழின் உள்ளடக்கம்
    • பொது சமாச்சாரங்கள்
    • நாடார் மகாஜன சங்கம் பிரசாரம்
    • 8-வது கான்பரன்ஸ் சிவகாசி
    • எச்சரிக்கை
    • கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா?
    • ஆசிரம வாசம்
    நன்றி: திலகபாமா, அருண்குமார் ஞானசம்பந்தம்

    வாசிக்க இங்கே செல்க!

    அன்புடன்
    சுபாஷிணி ட்ரெம்மல்
    [தமிழ் மரபு அறக்கட்டளை]




    2014-09-14 19:42 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
    வணக்கம்.

    இன்றும் ஒரு சஞ்சிகையை வெளியிடுகின்றோம்.

    Suba.T.

    unread,
    Nov 26, 2014, 3:25:38 PM11/26/14
    to மின்தமிழ், Subashini Tremmel
    வணக்கம்.

    நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகையில் இன்று வெளியிடப்படுவது 1922ம் ஆண்டு மே மாதம் வெளிவந்த சஞ்சிகை. மே மாதம் இரண்டு வெளியீடுகள் இருந்திருக்கின்றன. இன்று இரண்டாவதாக வெளியிடப்பட்ட சஞ்சிகை இணைகின்றது

    இந்த இதழின் உள்ளடக்கம்
    • நாடார் மகஜனசங்க 5-வது கான்பரன்ஸ் ரிப்போர்ட்
    • ஹிதோபதேசம்
    • ஜீவகாருண்யம்
    • நிருபத்திரட்டு
    • நமது மித்திரன் வளர்ச்சி
    • குலமாதா வருந்துகின்றாள்
    • குலவர்த்தமானம்
    • அபிப்ராயம்
    • ஆசிரமவாசம்

    இத்தோடு விகடவேசயர்மாலை, திருமுத்துமாரியின் திருவிழாச்சிந்து ஆகிய நூல் வெளியீடுகளைப்பற்றிய செய்திகளையும் காணலாம்.

    நன்றி: திலகபாமா, அருண்குமார் ஞானசம்பந்தம்

    வாசிக்க இங்கே செல்க!

    அன்புடன்
    சுபாஷிணி ட்ரெம்மல்
    [தமிழ் மரபு அறக்கட்டளை]

    Suba.T.

    unread,
    Dec 10, 2014, 2:45:32 PM12/10/14
    to மின்தமிழ், Subashini Tremmel
    வணக்கம்.

    நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகையில் இன்று வெளியிடப்படுவது 1922ம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்த சஞ்சிகை. ஜூன் மாதம் இரண்டு வெளியீடுகள் இருந்திருக்கின்றன. இன்று முதலாவதாக வெளியிடப்பட்ட சஞ்சிகை இணைகின்றது

    இந்த இதழின் உள்ளடக்கம்
    • நாடார் மகாஜனசங்க 5-வது கான்பரன்ஸ் ரிப்போர்ட்
    • இருவர் சம்பாஷணை
    • தீண்டாமை
    • நாடார் மகாஜன தொண்டர்படை
    • ஜெர்மனியில் கைத்தொழில் கல்வி - கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள்
    • பிரச்சாரங்கள்

    இத்தோடு அனுபோக கைத்தொழில் போதினி என்ற நூல்  பற்றிய வெளியீட்டுச் செய்திகளையும் காணலாம்.

    நன்றி: திலகபாமா, அருண்குமார் ஞானசம்பந்தம்

    வாசிக்க இங்கே செல்க!

    அன்புடன்
    சுபாஷிணி ட்ரெம்மல்
    [தமிழ் மரபு அறக்கட்டளை]

    Suba.T.

    unread,
    Dec 13, 2014, 4:35:12 AM12/13/14
    to மின்தமிழ், Subashini Tremmel
    வணக்கம்.

    நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகையில் இன்று வெளியிடப்படுவது 1922ம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்த சஞ்சிகை. ஜூன் மாதம் இரண்டு வெளியீடுகள் இருந்திருக்கின்றன. இன்று இரண்டாவதாக வெளியிடப்பட்ட சஞ்சிகை இணைகின்றது

    இந்த இதழின் உள்ளடக்கம்
    • நாடார் மகாஜனசங்க 5-வது கான்பரன்ஸ் ரிப்போர்ட்
    • ஹீதோபதேசம் இருவர் சம்பாஷணை
    • ஸ்ரீ கிருஷ்ணலீலை
    • உலகானுபவங்கள்
    • பொதுச்சமாச்சாரங்கள்
    • நாடார் குல மித்திரன்  மாதம் மும்முறை 
    • சிவகாசி கான்பரன்ஸ்
    • இந்தியாவும் ஸர்வதேச ஸங்கமும்

    இத்தோடு அனுபோக கைத்தொழில் போதினி என்ற நூல்  பற்றிய வெளியீட்டுச் செய்திகளையும் காணலாம்.


    நன்றி: திலகபாமா, அருண்குமார் ஞானசம்பந்தம்

    வாசிக்க இங்கே செல்க!

    அன்புடன்
    சுபாஷிணி ட்ரெம்மல்
    [தமிழ் மரபு அறக்கட்டளை]

    2014-12-10 20:45 GMT+01:00 Suba.T. <ksuba...@gmail.com>:
    வணக்கம்.

    Message has been deleted

    தேமொழி

    unread,
    Mar 2, 2015, 9:39:43 PM3/2/15
    to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
    நாடார் குல மித்திரன் - 1922 - நவம்பர்  1 வது இதழ்



    வணக்கம்.

    நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகையில் இன்று வெளியிடப்படுவது 1922ம் ஆண்டு நவம்பர்  வெளிவந்த 1 வது இதழ் (மலர் 4 - இதழ் 7).

    மாதம் மும்முறையாக (1, 11, 21 ஆம் தேதிகளில்) நவம்பர்  மாதம் மூன்று  வெளியீடுகள் வெளிவந்துள்ளன.
    இன்று 1922 - நவம்பர்  மாதத்தின் முதல் இதழாக வெளியிடப்பட்ட சஞ்சிகை மின்தொகுப்பில் இணைகின்றது.

    இந்த இதழின் உள்ளடக்கம்:
    மனனமாலை (ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்),  கற்பகம் என்பவர் எழுதிய "குடும்பமும் நமது கடமையும்" என்ற  மனவளக்கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
    ஸ்ரீ கிருஷ்ணலீலை, பழமொழிக் களஞ்சியம் என்ற பகுதிகளும் இடம் பெற்றுள்ளன.

    அக்காலச் செய்திகளாக தரப்படுவன:
    தபால் கட்டண உயர்வின் தாக்கம்,
    ஆங்கில அரசின் சட்டங்களும் அபராதங்களும் இந்தியாவின் நெசவுத் தொழிலை அழிப்பது,
    மலபார் கலகத்தில் ஈடுபட்டதாக கருதப்பட்டவர்கள் தூக்கிலடப்பட்டது,
    திருநெல்வேலி - திருச்செந்தூர் இருப்புப்பாதை துவக்க வேலைகள்,
    நாடார்களின் ஆலயப்பிரவேசத்திற்கு காங்கிரஸ் உதவும் என்று கருத்துரைத்தவரை விமர்சித்தல்,
    இங்கிலாந்தின் புதிய மந்திரி சபை பதவியேற்பு,
    இந்தியர்களின் தினசரி சராசரி வருமானம் 9 பைசா,
    மதுரை மாநாட்டில் சோமசுந்தர பாரதி நாடார்களைப் பற்றிய தவறான கருத்தை வெளியிட்டது,
    மறைந்தவர் நினைவாக நூல்நிலையம் அமைத்தல்,
    போன்ற செய்திகள் குறிப்பிடத்தகன.

    தேவை இசையாசிரியை என்ற விளம்பரமும் உண்டு. 
    "சௌந்தரகாந்தி" (பாண்டியர்களைப் பற்றிய புதினம்), "கைத்தொழில் போதினி", "அமரர் புராணம்" , பெண்முன்நேற்றதிற்காக எழுதப்பட்ட "மனோசுந்தரம்" என்ற  நூல்கள் வெளிவந்துள்ளதை  விளம்பரங்கள் அறிவிக்கின்றன.
      

    நன்றி: திலகபாமா
    மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி
    தேமொழி

    [தமிழ் மரபு அறக்கட்டளை]


    பிற இதழ்களின் தொகுப்பு: தமிழ் மரபு நூலகத்தில்

    rajam

    unread,
    Mar 2, 2015, 10:11:35 PM3/2/15
    to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
    இந்தப் பதிவுகளைத் தொடக்கத்திலிருந்தே பார்த்துவருகிறேன். எனக்கும் நாடார் குலத்து மக்களுக்கும் தொடர்பு மிகுதி. [நாங்க தெக்கத்திக்காரங்க!]

    பழைய தாள் வெளியீடுகளைச் சேர்த்துவைத்து இன்று மின்வெளிக்குக் கொடுக்கும் செல்வி திலகபாமாவுக்கு என் நன்றி. [திலகாவின் அத்தையும் நானும் நெருங்கிய தோழியர்.]

    மின்னாக்கும் பணியைச் செவ்வனே செய்துவரும் சுபா, தேமொழி, இன்னும் பிறருக்கும் மிக்க நன்றி.

    இவண்,
    ராஜம்

    தேமொழி

    unread,
    Mar 2, 2015, 10:19:38 PM3/2/15
    to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
    குறிப்பு:

    இந்த இழையில் சற்று முன்னர் நான் பதிவிட்ட "நாடார் குல மித்திரன்"  மின்னாக்க இதழ்களின் சுட்டிகளின் தொகுப்பு பட்டியலில் நான் செய்துவிட்ட குளறுபடியினால் அப்பதிவினை நீக்கிவிட்டேன்.  குழப்பத்திற்கு மன்னிக்கவும் ...


    மீண்டும் அப்பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது....

    சுட்டிகள்  சரியான பதிவுகளுக்கு எடுத்துச் செல்லவில்லையெனில் கவனத்திற்குக் கொண்டுவருமாறு கேட்டுக் கொள்கிற்றேன்.  

    இப்பட்டியலை தமிழ்மரபு நூலகத்தின் இந்தப் பக்கத்திலும் காணலாம் ....


    நாடார் குல மித்திரன் ...இதுவரை....ஒரு மீள் பார்வை......


    Tuesday, March 3, 2015

    நாடார் குல மித்திரன்


    திரு.சூ.ஆ.முத்து நாடார்


    1919ம் ஆண்டு திரு.சூ.ஆ.முத்து நாடார் தொடக்கிய ஒரு பத்திரிக்கை நாடார்கள் சமூகத்துக்கு மாத்திரமல்லாமல் சுதந்திர எண்ணத்தை விரிவாக்கச் செயலாற்றியதில்  முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் திகழ்ந்தது. நாடார் குல மித்திரன் எனப் பெயரிட்டு இந்தப் பத்திரிக்கையின் முழு பொறுப்பையும் எடுத்துச்  செயல்பட்டு வந்தார் இவர்.அருப்புக்கோட்டையிலிருந்து தாமே ஆசிரியராகவும் திரு.சொக்கலிங்கபாண்டியன் என்பவரை உதவி ஆசிரியராகவும் கொண்டு பணியாற்றினார்.

    இந்த மாதாந்திர வெளியீடாக வந்த நாடார் குல மித்திரன் 1919 தொடங்கி 1931ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் தொடர்ந்து வெளி வந்தது. அரசியல் கொள்கைகளோடு நாடார் சமூகத்து மக்களின் மேம்பாட்டிற்காகப் பல சிந்தனைகளை வித்திட்ட ஒரு சஞ்சிகையாகவும் இது திகழ்ந்தது.

    சமூக வரலாற்றில் ஆர்வம் உள்ளோர், அதிலும் குறிப்பாக தமிழகத்தின் 20ம் நூற்றாண்டின் ஆரம்ப கால அரசியல் சமூக நிலையில் ஆர்வம் உள்ளோர்களுக்கு இந்தத் தொகுப்புக்கள் அனைத்தும் விருந்தாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.



    தமிழ் மரபு அறக்கட்டளையினால் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ள 
    நாடார் குல மித்திரன் இதழ்கள்:

    1919 ஆண்டு செப்டம்பர் மாத இதழ் [1:1]
    (THF released it on: April 13, 2013)

    1919 ஆண்டு அக்டோபர் மாத இதழ் [1:2]
    (THF released it on: April 13, 2013)

    1919 ஆண்டு நவம்பர் மாத இதழ் [1:3]
    (THF released it on: April 13, 2013)

    ***
    1920ம் ஆண்டு ஜனவரி மாத இதழ் [1:5]
    (THF released it on: April 22, 2013)

    1920ம் ஆண்டு பெப்ரவரி மாத இதழ் [1:6]
    (THF released it on: April 25, 2013)

    1920ம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ் [1:8]
    (THF released it on: April 29, 2013)

    1920ம் ஆண்டு மே மாத இதழ் [1:9]
    (THF released it on: May 4, 2013)

    1920ம் ஆண்டு ஜூன்மாத இதழ் [1:10]
    (THF released it on: May 11, 2013)

    1920ம் ஆண்டு ஜூலை மாத இதழ் [1:11]
    (THF released it on: May 18, 2013)

    1920ம் ஆண்டு ஆகஸ்ட் மாத  இதழ் [1:12]
    (THF released it on: June 8, 2013)

    ***

    இக்காலக்கட்டத்தில் ...
    நாடார் குல மித்திரன் மாதம் இருமுறை பதிப்புகள் என வெளிவரத் துவங்கியது
    பத்திரிக்கையின் தோற்றத்திலும் மாற்றம் நிகழ்ந்தது ...

    1921ம் ஆண்டு செப்டம்பர் மாத இதழ் - 1[3:1]
    (THF released it on: June 29, 2013)

    1921ம் ஆண்டு அக்டோபர் மாத இதழ் - 1[3:3]
    (THF released it on: August 26, 2013)

    1921ம் ஆண்டு அக்டோபர் மாத இதழ் - 2 [3:4]
    (THF released it on: August 28, 2013)

    1921ம் ஆண்டு அக்டோபர் மாத இதழ் - 3 [3:5]
    (THF released it on: August 30, 2013)

    1921ம் ஆண்டு நவம்பர் மாத இதழ் - 1 [3:6]
    (THF released it on: September 2, 2013)

    1921ம் ஆண்டு டிசம்பர் மாத இதழ் - 1[3:7]
    (THF released it on: September 5, 2013)

    1921ம் ஆண்டு டிசம்பர் மாத இதழ் - 2 [3:8]
    (THF released it on: September 8, 2013)

    ***

    1922ம் ஆண்டு ஜனவரி மாத இதழ் - 1[3:9]
    (THF released it on: December 12, 2013)

    1922ம் ஆண்டு பெப்ரவரி மாத இதழ் - 1[3:11]
    (THF released it on: April 26, 2013)

    1922ம் ஆண்டு பெப்ரவரி மாத இதழ் - 2 [3:12]
    (THF released it on: May 18, 2014)

    1922ம் ஆண்டு மார்ச் மாத இதழ் - 1 [3:13]
    (THF released it on: May 27, 2014)

    1922ம் ஆண்டு மார்ச் மாத இதழ் - 2 [3:14]
    (THF released it on: May 28, 2014)

    1922ம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ் - 1[3:15]
    (THF released it on: May 31, 2014)

    1922ம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ் - 2 [3:16]
    (THF released it on: September 14, 2014)

    1922ம் ஆண்டு மே மாத இதழ் - 1 [3:17]
    (THF released it on: November 14, 2014)

    1922ம் ஆண்டு மே மாத இதழ் - 2 [3:18]
    (THF released it on: November 26, 2014)

    1922ம் ஆண்டு ஜூன் மாத இதழ் - 1 [3:19]
    (THF released it on: December 10, 2014)

    1922ம் ஆண்டு ஜூன் மாத இதழ் - 2 [3:20]
    (THF released it on: December 13, 2014)

    1922ம் ஆண்டு நவம்பர்  மாத இதழ் - 1 [4:7]
    (THF released it on: Maech 3, 2015) 






    rajam

    unread,
    Mar 2, 2015, 10:28:15 PM3/2/15
    to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
    மிக மிக நன்றி, தேமொழி. 

    இங்கே சிலர் (குறிப்பாக வெள்ளைத் தோலர்) 'Nadars are just a notch above the Paraiyas' என்று பேசிவருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அவர்களுக்கு இந்தக் குலமித்திரன் பதிவுகள் ஒரு படிப்பகமாக அமையும் என்று நம்புகிறேன்.

    சுபாவுக்கும் திலகாவுக்கும் மிக்க நன்றி. 

    அன்புடன்,
    ராஜம்


    --
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/X6VR9tdwfI8/unsubscribe.
    To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

    தேமொழி

    unread,
    Mar 2, 2015, 10:41:16 PM3/2/15
    to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
    நன்றி அம்மா.

    நூல்கள் பலவும்  வெளியிட்டுள்ளார்கள் எனத் தெரிகிறது.  அவையெல்லாம் இப்பொழுது யாரிடமாவது இருக்குமா எனவும் தெரியவில்லை. 

    இலக்கியப் பணியில் பெரும்பங்காற்றியுள்ளார்கள் எனத் தெரிகிறது.  

    ஆனால் அவர்கள் ஆற்றிய பணி வெளியில்  தெரியாமல் போனதற்கு (அதாவது என் போன்றோருக்கு) கொஞ்சம் வியப்பாகவும் இருக்கிறது.


    ..... தேமொழி

    To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/X6VR9tdwfI8/unsubscribe.
    To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

    சி. ஜெயபாரதன்

    unread,
    Mar 2, 2015, 11:41:31 PM3/2/15
    to mintamil, Subashini Tremmel
    ​நூலின் பெயர் :

    தமிழக நாடார்கள் வரலாறு

    டாக்டர் இராபர்ட் எல். ஹார்டுகிரேவ் M.A.,PhD
    பேரசிரியரரசுத்துறை,
    டெக்ஸஸ் பல்கலைக் கழகம்.
    U.S.A.

    தமிழாக்கம்
    பெரா எஸ்.டி. ஜெயபாண்டியன்,
    M.A [History]​, M.A, [ECONOMICS]
    காமராஜ் கல்லூரி, 
    தூத்துக்குடி : 628 003

    நாடார் மகாஜன சங்கம்
    2. தெற்குச் சித்திரை வீதி,
    மதுரை.

    சுமார் 500 பக்கம், 2003


    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

    சி. ஜெயபாரதன்

    unread,
    Mar 3, 2015, 12:03:02 AM3/3/15
    to mintamil, Subashini Tremmel
    ​பிழை திருத்தம்​

    2015-03-02 23:40 GMT-05:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
    ​நூலின் பெயர் :

    தமிழக நாடார்கள் வரலாறு

    டாக்டர் இராபர்ட் எல். ஹார்டுகிரேவ் M.A.,PhD
    பேரசிரியரரசுத்துறை,
    டெக்ஸஸ் பல்கலைக் கழகம்.
    U.S.A.

    தமிழாக்கம்
    ​பே
    ரா
    ​சிரியர் :​
    எஸ்.டி. ஜெயபாண்டியன்,
    M.A [History]​, M.A, [ECONOMICS]
    காமராஜ் கல்லூரி, 
    தூத்துக்குடி : 628 003

    நாடார் மகாஜன சங்கம்
    2. தெற்குச் சித்திரை வீதி,
    மதுரை.

    சுமார் 500 பக்கம்,
    ​மூன்றாம் பதிப்பு ​
    2003
    ​   விலை : ரூ 500 (?)​
     

    Suba.T.

    unread,
    Mar 3, 2015, 2:35:11 PM3/3/15
    to தேமொழி, மின்தமிழ், Subashini Tremmel
    தேமொழி,

    இந்தப் பணியை பொறுப்பேற்றுக் கொண்டமைக்கு என் நன்றி.
    தொடர்ந்து நேரம் கிடைக்கும் போது பதிவிட்டு வாருங்கள். எனது பணிச்சுமையில் ஒன்று உங்களுக்கு வந்து சேர்ந்துள்ளது. இப்படி பலரும் நமது பணிகளை பகிர்ந்து கொண்டு பொறுப்பெடுத்துக் கொண்டு தொடர வேண்டும். நமது குழுவின் தன்னார்வலர்கள் மேலும் பெருக வேண்டும் என்பதே என் ஆசை.

    பொதுக்குறிப்பு..

    நாடார் குல மித்திரன் ஒரு சாதியின் அடையாளச் சின்னம் என நாம் அதன் எல்லையை குறுக்கி விட முடியாது. 1920களில் தமிழக நிகழ்வுகள் பலவற்றை குறித்து வைத்திருக்கும் ஆவணமாக இது திகழ்கின்றது. அதுமட்டுமன்றி ஆப்பிரிக்கா, இங்கிலந்து, பர்மா, மலாயா ஆகிய நாடுகளின் நிகழ்வுகளையும் தாக்கங்களையும் கூட அறிந்து கொள்ளக் கூடிய வகையில் இந்தச் சஞ்சிகை அமைந்திருக்கின்றது என்பதும் கூடுதல் சிறப்பு.

    அன்புடன்
    சுபா

    --
    Suba.T.

    Nagarajan Vadivel

    unread,
    Mar 3, 2015, 8:37:03 PM3/3/15
    to மின்தமிழ்
    நினைவிலிருந்து ஒரு தகவல்.
    நீதிக்கட்சி பிராமணரல்லாத உயர்சாதி முன்னேற்றத்துக்குப் பாடுபட்டு மற்ற பிரிவுகளைக் கண்டும் காணாது இருந்த காலத்தில் அவர்களுக்குக் குரல்கொடுக்க உருவான சுயமரியாதைக் கழகத்தில் முன்னணிவீரராக விளங்கியவர் முத்துநாடார்.  சுயமரியாதைக் கழகம் இந்துக்கடவுளர் எதிர்ப்புக்குத் திசைமாறிச் செல்வதை உணர்ந்து அவர் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறியவர்

    முத்துநாடாரின் எழுத்துக்கள் சுயமரியாதைக் கருத்துக்களை விளக்குவதாகவும் சமய நல்லிணக்கத்தை வளர்ப்பதாகவும் அமைந்து நாடார்குல நண்பனாகவே விளங்கிவந்தது

    கணினிதாசன்

    --

    Innamburan S.Soundararajan

    unread,
    Mar 3, 2015, 8:43:49 PM3/3/15
    to mintamil
    நான் இதை அமெரிக்கா வாழ் நாடார் பெண்ணரசி ஒருவருடன் பகிர்ந்து கொண்டேன். அவர் வியந்தே போனார்.

    Suba.T.

    unread,
    Mar 4, 2015, 1:18:22 AM3/4/15
    to மின்தமிழ், Subashini Tremmel
    2015-03-04 2:37 GMT+01:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
    நினைவிலிருந்து ஒரு தகவல்.
    நீதிக்கட்சி பிராமணரல்லாத உயர்சாதி முன்னேற்றத்துக்குப் பாடுபட்டு மற்ற பிரிவுகளைக் கண்டும் காணாது இருந்த காலத்தில் அவர்களுக்குக் குரல்கொடுக்க உருவான சுயமரியாதைக் கழகத்தில் முன்னணிவீரராக விளங்கியவர் முத்துநாடார்.  சுயமரியாதைக் கழகம் இந்துக்கடவுளர் எதிர்ப்புக்குத் திசைமாறிச் செல்வதை உணர்ந்து அவர் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறியவர்

    முத்துநாடாரின் எழுத்துக்கள் சுயமரியாதைக் கருத்துக்களை விளக்குவதாகவும் சமய நல்லிணக்கத்தை வளர்ப்பதாகவும் அமைந்து நாடார்குல நண்பனாகவே விளங்கிவந்தது

    ​இக்கூடுதல் தகவல்கள் இவ்விழைக்கு மேலும் பலம் சேர்ப்பவை.

    சுபா​
     

    சி. ஜெயபாரதன்

    unread,
    Mar 4, 2015, 11:39:49 AM3/4/15
    to mintamil, Subashini Tremmel
    மதுரை நாடார் மகாஜன சங்கத்தின் உன்னத கல்விப் பணி.

    மதுரை நாடார் மகாஜன சங்கம், உயர்குடி எனக் கருதப்பட்டுக் கல்லூரியில் அரசாங்கப் பண உதவி கிடைக்காமல் இடருற்று, ஒதுக்கப்பட்ட ஏழை நாடார் மாணவருக்குப் பண உதவி செய்து, பட்டம் பெறப் பல்லாண்டு பணி செய்து வருகிறது.

    இந்திய சுதந்திரப் போரில் தந்தையார் பங்கெடுத்து வறுமையில் உழன்ற போது நான்கு வருடப் படிப்புக்குப் பண உதவி செய்து என்னைப் பொறியல் பட்டதாரி ஆக்கியது மதுரை நாடார் மகாஜன சங்கம் என்று சொல்லிப் பெருமைப் படுகிறேன்.

    அப்பணி இப்பவும் தொடர்கிறது.  நான் இப்போது மதுரை நாடார் மகாஜன சங்கத்துக்குப்
    நன்கொடை அளித்து வருகிறேன்.


    சி. ஜெயபாரதன், கனடா.

    ++++++++++++++++++++++++++++++++++++++



    2015-03-02 23:40 GMT-05:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
    ​நூலின் பெயர் :

    தமிழக நாடார்கள் வரலாறு

    டாக்டர் இராபர்ட் எல். ஹார்டுகிரேவ் M.A.,PhD
    பே
    ​ரா

    சி. ஜெயபாரதன்

    unread,
    Mar 4, 2015, 12:13:20 PM3/4/15
    to mintamil, Subashini Tremmel

    தேமொழி

    unread,
    Mar 7, 2015, 5:40:23 AM3/7/15
    to mint...@googlegroups.com, ksuba...@gmail.com, vall...@googlegroups.com

    நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=55073


    பெரியாரின் பேட்டி

    • Saturday, March 7, 2015, 7:12



    – தேமொழி.

    அருப்புக்கோட்டை காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளரான “ஈரோடு ஸ்ரீமான் ஈ. வெ. ராமசாமி நாயக்கர்” என்றழைக்கப்பட்ட பெரியாருடன் அக்டோபர் 31, 1922 அன்று மாலை 8 – 9 மணி வரை நாடார் குலமக்களில் சிலர் ஒரு நேர்காணலில் பங்கு பெற்றார்கள்; அப்பொழுது நாடார்குல மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பெரியார் உரைத்த பதில்கள் சுருக்கமாக இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளது. இது அக்கால தமிழக நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு ஆவணம் என்ற கோணத்தில் வழங்கப்படுகிறது:

    _________________

    சென்னை காங்கிரஸ் பிரிவில் நாடார் இனத்தவரின் எண்ணிக்கை ஒரு நூறைக் கூட எட்டவில்லை. உங்களுக்கு காங்கிரசின் மீது நம்பிக்கை ஏற்படும்படி காங்கிரசின் நடவடிக்கை இல்லாதது இதற்கோர் காரணமாக இருக்கலாம். தற்பொழுது நடந்த மதுரை தென்காசி மாநாடுகளுக்குப் பிறகு நிலைமை மிகவும் மோசமானதாக எனக்குத் தோன்றுகிறது.

    இந்நிலைக்கு அடிப்படைக்காரணமான ஊழல்களை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை. நிலைமையின் தீவிரத்தை நான் சரியாகக் கணிக்காததால், மூன்று நான்கு அதிகமான வாக்குகளினால் நாடார்களைப் பற்றிக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் * தோல்வியடைந்துவிட்டது.

    pages finalபஞ்சமர்கள் கோவிலில் நுழைய ஒப்புதல் கிடைக்கும் வரை நாடார்களும் பொறுமை காத்து, பிறகு அனைவரும் கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்று கூறுவது சரியல்ல. அது நாடார் குல மக்களை நையாண்டி செய்வதற்கு ஒப்பாகும்.

    சென்னை மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களை விட தென்மாவட்டங்களில் சாதிக்காழ்ப்புணர்வும் கண்மூடித்தனமும் அதிகமாக இருக்கிறது. வடமாவட்டங்களின் சில பகுதிகளில் நாடார்குலத்தையும்விட தாழ்ந்த குலம் என்று கூறப்படுபவர்கள் கோவிலுக்கு நுழையத் தடை இல்லை. ஆனால் நாடார்குல மக்களை தடை செய்யும் தெற்கு மாவட்ட மக்களின் இந்த மனநிலைக்குக் காரணம் புரியவில்லை.

    எனது கட்டுப்பாட்டில் இருக்கும் 18 தேவஸ்தானங்களில் பஞ்சமர் என்று ஒதுக்கப்படுபவரும் கூட கோவிலுக்குள் செல்ல நான் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அரசாங்கம் வழங்கிய பெருமைமிகு “ராவ்பகதூர்” பட்டங்களைப் பெற்றோர் என் முயற்சியின் குறுக்கே நிற்கிறார்கள். ஆனால் விரைவில் நிலைமை மாறும் என்று தெரியும் அறிகுறிகள் சிலவற்றினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    சமீபத்தில் நான் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்ற பொழுது மேலாடையை நீக்கிவிட்டு உள்ளே நுழையும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். ஆனால், நான் கோவில் உள்ளே சென்ற பொழுது போலீஸ் காவலர் தலையில் தொப்பி, இடுப்பில் கச்சை, காலில் பூட்ஸ் ஆகியவற்றை அணிந்து நின்று கொண்டிருக்கிறார். இது நம் மக்களுக்கு ஏனோ கண்ணில் படவில்லை. இதைத்தான் பக்தியின் குருட்டுத்தனம் என்று நான் குறிப்பிடுகிறேன். இதற்குப் பிறகு பக்தியின் அடிப்படையில் மட்டுமே என் மேலாடையை எடுக்கச் சொன்னார்கள் என்று எப்படி நான் பொருள் கொள்வது?

    உயர்வு தாழ்வு எண்ணங்களும், அதன்பொருட்டு சண்டைகளும் தமிழக தென்பகுதியில்தான் அதிகம் இருப்பது கண்டு என் மனம் கவலை அடைகிறது. இவையெல்லாம் அடியோடு ஒழிந்து சமத்துவம் ஏற்படாதவரை நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் அது நிலைக்காது.

    அந்நியர்கள் நம்மை ஆட்சி செய்யும் நிலைக்குக் காரணம் நாமே. அவர்களை வெளியேற்றுவதும் நம் கையில்தான் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே நானும் திருவாளர் வரதராஜுலு நாயுடு அவர்களும் குறைந்தது இரண்டு மாதங்களாவது தென்னகத்தின் இப்பகுதியில் பணியாற்ற எண்ணியுள்ளோம்.

    காங்கிரசார் நாடர்களின் உரிமை பற்றி மாநாடுகளில் பேசுகிறார்களோ இல்லையோ, ஆனால் நாட்டின் சுதந்திரம் கிடைக்க தங்கள் நடைமுறைகளில் நல்வழியைக் கடைபிடிக்க வேண்டும். தங்கள் செயல்களில் நேர்மையின்றி, நாடர்களின் உரிமைகளைக் கருத்தில் கொள்ளாது, அவர்களுக்காக தங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்காவிட்டால் காங்கிரசின் செய்கையில் நேர்மை இல்லை என்றாகிறது. நேர்மை இல்லாவிட்டால் இயக்கத்தில் வெற்றி காண இயலாது. இந்த நிலைமையை நீட்டிப்பதில் பயனில்லை.

    காங்கிரசில் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மக்கள் இருக்கிறார்கள். நாடார்களுக்கு எதிராக போலிக்காரணங்கள் கூறுவதும், நாடர்குல தீர்மானம் பற்றி தங்களுக்கு தடையொன்றுமில்லை என்றும், ஆனால், மற்றவர்கள்தான் அவர்கள் விருப்பத்திற்குத் தடை செய்வது போல பேசுபவர்களை நானறிவேன். ஆனால் இவர்களின் எண்ணிக்கையில் வெகு சிலரே. இவர்களைப் பொருட்படுத்தக் கூடாது. நாட்டுக்கு உழைப்பதைக் கடமையாகக் கொண்டுள்ள உண்மையான நாட்டுப் பற்றுள்ளவர்களும் காங்கிரசில் உள்ளனர்.

    நாடார்குல மக்களில் சிலர் சில நாட்களுக்கு முன்னர் சமத்துவம் மறுக்கப்படும் இந்துக் கோவிலில் நுழைய முற்பட்ட செயலை நானறிவேன். உங்களுக்காக எந்த உதவியும் செய்ய நான் தயாரக உள்ளேன், ஆனால் தற்போதைய நிலைமை உதவிகரமாக இல்லை. அந்நியர் கையில் ஆட்சி இருக்கும்வரை, நமக்கு இதில் வெற்றி கிடைக்காது. இந்தியர்கள் கையில் ஆட்சி கிடைக்கும்வரை வெற்றி வாய்ப்பு குறைவு, ஆனால் நம் கையில் அதிகாரம் கிடைக்கும் நாள் நெருங்குகிறது என்பது என் கருத்து. சுதந்திரம் பெறுவது உடனே கிடைக்காவிட்டால் அது வெகு காலத்திற்கு தள்ளிப் போய்விடும். ஆகவே, அன்பு நாடார்குல நண்பர்களே அதனால் நீங்கள் இந்தியாவின் சுதந்தரத்திற்காகப் பாடுபடுங்கள்.

    ஸ்ரீனிவாசய்யங்கார் உங்கள் ஆதரவாளர்தான் என்பது எனக்கு நன்கு தெரியும். உங்களுக்கும் அவரைப்பற்றித் தெரியும். ஆனால், மதுரை மாநாட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்காக அவரைக் குறை சொல்வதில் பயனில்லை. நாடார்களைப் பற்றிக் கொண்டுவந்த தீர்மானம் தோற்றுப் போனதில் அவர் வேண்டுமென்று உங்களுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கவில்லை என்பதாக நான் கருதுகிறேன். நாடார்குல மக்களின் தியாகங்கள் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மட்டும் இது போன்ற சமூகக்குறைகளை எதிர்கொள்ளாமல் இருந்திருக்க நேர்ந்திருந்தால் சிறந்த நாட்டுப்பற்றுள்ளவர்கள் என்பவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.

    உங்களது மனக்குறைகளை கடந்த 15 ஆண்டுகளாகவே நானறிவேன். அதைப்பற்றி பலமுறை பேசியும் உள்ளேன். பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டபிறகு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக உங்களுடன் நன்கு பழகும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. உங்களிடம் நான் நன்றியும் நல்லெண்ணமும் கொண்டுள்ளேன். இது முகத்திற்கெதிரில் கூறும் வெறும் புகழ்ச்சி உரை அல்ல. ஆனால், நீங்கள் எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி. உங்களிடம் பல நல்ல குணங்கள் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக உள்ள நல்ல குணம் நீங்கள் சொன்ன சொல் மாறது இருப்பது.

    இதற்குச் சான்றாக ஒரு நிகழ்வைக் காட்ட விரும்புகிறேன். நான் மதுவிலக்குக்கு எதிராக போராடிய பொழுது “கள் குத்தகை” எடுக்கும் நாடர்கள் சிலரிடம் நாட்டின் நலத்திற்கு முன்னுரிமை அளித்து குத்தகை எடுப்பதைத் தவிர்க்கும்படி வேண்டிக் கொண்டேன். அவர்களும் என் வேண்டுகோளை ஏற்றனர். ஒருமுறை இதற்காக நாடார் ஒருவரை அணுகி என் வேண்டுகோளை வைக்கச் சென்றபொழுது, அரசு 144 தடை விதித்து, அந்த சட்டத்தின் கீழ் என்னை ஊரை விட்டு வெளியேறச் சொன்னார்கள். எனினும், அந்த நாடார் எனக்கு ஆறுதல் சொல்லி, நான் பேச்சு மாறமாட்டேன், உங்கள் அறிவுரைப்படி குத்தகை எடுக்க மாட்டேன் என்று கூறி என்னைத் தேற்றி அனுப்பி வைத்தார்.

    அவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றி குத்தகையும் எடுக்கவில்லை என்று நான் மகிழ்ந்தேன். ஆனால், அந்தக் குத்தகையை வேளாளர்களில் சிலரும், கவுண்டர்களில் சிலரும் எடுத்த பொழுது வருத்தமுற்றேன். இறுதியாக நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது, சமீபத்திய நிகழ்வுகளின் காரணமாக மனம் வருந்தி காங்கிரஸ் மீது வெறுப்பு கொள்ளாதீர்கள். இயன்றால் காங்கிரஸ் உறுப்பினராகுங்கள். முதலில் நாட்டிற்கும் பிறகு உங்கள் சாதிக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.

    உங்களை என்றும் நான் நினைவில் கொள்வேன், எனக்கு நீங்கள் கொடுத்த மரியாதை மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்களை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன். திருப்பூரில் நடக்கவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிற்கு உங்களில் ஒருசிலராவது வரவேண்டும் என்று விருப்பத்துடன் அழைக்கிறேன்.

    _________________

    * இத்தீர்மானம் தொடர்ந்து வந்த திருப்பூர் மாநாட்டில் நிறைவேறியது என்று இந்த இதழிலேயே மற்றொரு செய்தி அறிவிக்கிறது. ஆனால் அப்பொழுது தீர்மானத்தை நிறைவேற்ற ஏற்பட்ட தடைகளையும், மாநாட்டில் நடந்த கூச்சல் குழப்பங்களையும், தீர்மானத் தடைக்கு பாமரகள்தான் காரணம் என்று பழிபோட்ட கற்றறிந்த காங்கிரஸ் உறுப்பினர்களின் உண்மை குணத்தையும் கண்ட நாடார்குல மக்கள், தீர்மானம் நிறைவேறியும் மகிழ்ச்சி அடையாததை, அந்த இதழின் 4 வது பக்கத்தில் “குளிக்கப் போன இடத்திலா சேற்றைப் பூசிக்கொள்வது” என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட செய்தியொன்று குறிப்பிடுகிறது.

    _________________

    பெரியாரின் நேர்காணல் தகவல் இடம் பெற்ற பத்திரிக்கை:
    நாடார் குல மித்திரன், பதிப்பு: நவம்பர் 11, 1922 , மலர் 4: இதழ் 8, பக்கம் எண்: 2 – 3
    ‘தமிழ் மரபு அறக்கட்டளை’மின்னாக்கம் செய்துள்ள இந்த இதழை இந்த சுட்டியில் காணலாம்

    மற்றும் பல ‘நாடார் குல மித்திரன்’ பத்திரிக்கையின் மின்னாக்கங்களின் தொகுதியை
    “தமிழ் மரபு நூலகம்” வலைத்தளத்தில் காணலாம்



    தேமொழி

    unread,
    Mar 7, 2015, 6:06:25 AM3/7/15
    to mint...@googlegroups.com, ksuba...@gmail.com

    Saturday, March 7, 2015


    நாடார் குல மித்திரன் - 1922 - நவம்பர் 2 வது இதழ்



    வணக்கம்.

    நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில் இன்று வெளியிடப்படுவது
    1922ம் ஆண்டு நவம்பர் 11  வெளிவந்த 2 வது இதழ் (மலர் 4 - இதழ் 8).


    மாதம் மும்முறையாக (1, 11, 21 ஆம் தேதிகளில்) நவம்பர்  மாதம் மூன்று  வெளியீடுகள் வெளிவந்துள்ளன.

    இன்று 1922 - நவம்பர்  மாதத்தின் இரண்டாவது  இதழாக வெளியிடப்பட்ட சஞ்சிகை மின்தொகுப்பில் இணைகின்றது.


    இந்த இதழின் சிறப்பு:  பெரியாருடன் ஒரு நேர் காணல் - அருப்புக்கோட்டை காங்கிரஸ் மாநாட்டிற்காக வந்திருந்த காங்கிரஸ் கட்சியுன் செயலாளரான ஈ. வெ . ரா வுடன் நாடார்குல மக்களின் நேர்காணல்
    (இந்த நேர்காணல் கருத்துகள் இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளது)

    குலவர்த்தமானம் என்ற பகுதியில் நாடார் சங்க அறிவிப்புகள், உலக நடப்புகளைப் பற்றிய துண்டு துணுக்குகள், விகடக்கொத்து, பழமொழிகள்,  குறிப்புகளும் அபிப்பிராயங்களும் போன்ற வழக்கமான பகுதிகள் தொடர்கின்றன.

    பிரிட்டிஷ் கவர்ன்மெண்டில் மாறுதல் - "நமது"*** மாஜி பிரதம மந்திரி என்று பிரிட்டிஷ் பிரதமர் "லாயிட் ஜார்ஜ்" அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள் என்ற தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    சீமைப்பதிரிக்கைகள் பகுதி (6 ஆம்  பக்கத் தகவல் தரும் செய்தி), அக்காலத்திலும் ஆங்கில பத்திரிக்கைகள் உலகம் முழுவதும் அதிக விற்பனையாகும் பொழுது தமிழ் பத்திரிக்கைகளுக்கு ஆதரவு இல்லாதிருந்திருப்பது தெரிய வருகிறது.  ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் ஆசிரியர் தரும் கருத்து இன்றைய தமிழக நூல் விற்பனை நிலையையும் ஒத்திருப்பது, தமிழர்கள் எக்காலத்திலும் படிப்பதில் ஆர்வமுள்ள வாசகர்களல்ல என்பதையே காட்டுகிறது.

    வழக்கமான ஸ்ரீ கிருஷ்ணலீலை பகுதியும் அதில் கண்ணன் யசோதையால்  கயிற்றால் கட்டப்படும்   கதையும் விவரிக்கப் பட்டுள்ளது (7 ஆவது பக்கம்).

    தியாகராஜன் அல்லது திறமையுள்ள ஓர் வாலிபன் என்ற தொடர்கதை துவங்கியுள்ளது, ஆனால் ஆசிரியர் யார் என்ற குறிப்பு இல்லை.


    விளம்பரங்கள்:
    வழக்கம் போல முதல் மற்றும் கடைசி பக்கங்கள் விளம்பரங்களால் நிரம்பியும், இடையிடையே சில பக்கங்களிலும் விளம்பரங்கள் காணப்படுகின்றன. 

    சௌந்தரகாந்தி நூல், மனோசுந்தரம் நூல், அமரர் புராணம் நூல்,  சங்கீத மஞ்சரி என்ற நூல்களுக்கும் ...
    தேசானுகூலன்  பத்திரிகை, தத்துவ இஸ்லாம் பத்திரிகை , ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கைகளுக்கான விளம்பரங்களும் உண்டு.

    பள்ளி இறுதி வகுப்பு /VI பாரம் முடித்த, ஆங்கிலம் படித்துள்ள 23 வயது வேளாளசைவ மணமகனுக்கு "அழகும் சொத்தும்" உள்ள எந்த இனத்தைச் சார்ந்த பெண்ணானாலும் தேவை என்றும், சொத்துள்ளவர்கள் 'மட்டும்' தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.


    லேகிய  விற்பனை விளபரங்களுமுண்டு, ஊர்க்குருவி லேகிய விளம்பரம்  'வெண்பா' பாடலாகவும்  எழுதப்பட்டுள்ளது.




    நன்றி: திலகபாமா
    மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி



    வாசிக்க இங்கே செல்க!


    அன்புடன்
    தேமொழி
    [தமிழ் மரபு அறக்கட்டளை]




    பிற இதழ்களின் தொகுப்பு: தமிழ் மரபு நூலகத்தில்


    *** [தனிப்பட்ட கருத்து...இங்கிலாந்து பிரதமரை நமது பிரதமர் என்று குறிப்பிட்டுள்ளதைப் படிப்பது  சுதந்திர இந்தியாவில் பிறந்த வளர்ந்த காரணத்தினால் படிப்தற்கு  வேதனை தருவதாக  இருக்கிறது]


    தேமொழி

    unread,
    Mar 10, 2015, 11:49:41 PM3/10/15
    to mint...@googlegroups.com, ksuba...@gmail.com

    Tuesday, March 10, 2015


    நாடார் குல மித்திரன் - 1922 - நவம்பர் 3 வது இதழ்

    வணக்கம்.

    நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகையில் இன்று வெளியிடப்படுவது
    1922ம் ஆண்டு நவம்பர் 21  வெளிவந்த 3 வது இதழ் (மலர் 4 - இதழ் 9).


    மாதம் மும்முறையாக (1, 11, 21 ஆம் தேதிகளில்) நவம்பர்  மாதம் மூன்று  வெளியீடுகள் வெளிவந்துள்ளன.

    இன்று 1922 - நவம்பர்  மாதத்தில் மூன்றாவதாக வெளியிடப்பட்ட சஞ்சிகை மின்தொகுப்பில் இணைகின்றது.

    இந்த இதழில்: 
    வீரமாமுனி எழுதிய  ஸ்ரீ கிருஷ்ணலீலை பகுதியும் அதில் கண்ணன் மரத்திடை தவழ்ந்த  கதையும் விவரிக்கப் பட்டுள்ளது (2 ஆவது பக்கம்)

    தியாகராஜன் அல்லது திறமையுள்ள ஓர் வாலிபன் என்ற தொடர்கதையை எழுதுபவர் ஒரு கல்லூரி மாணவன் என்பதாகத் தெரிகிறது. 

    இங்கிலாந்தின் தற்கால நிலை என்ற கட்டுரை உலக அரசியலை, இந்தியாவின் ஒத்துழையாமை இயக்கத்தை, இங்கிலாந்து  ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகளுடன் கொண்ட உறவை, மத்தியக் கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகளில் அதன் தாக்கத்தை இரு பத்திகளில் அலசுகிறது.


    நாடார் கைத்தொழில் அபிவிருத்தி என்ற கட்டுரை இயந்திரமயமாக்கலால் கைத்தொழில்கள் நசித்துப் போனதுடன், கைத்தொழில் என்றாலே வியப்புடன் பார்க்கப்படும் நிலைமை ஒரு  நூறாண்டுக்கு  முன்னரே இந்தியாவில் ஏற்பட்டுவிட்டதைக் குறிப்பிடுகிறது. பத்துகஜம் நீளத்துணியும் ஒரு கைப்பிடிக்குள் அடங்கும் வகை நெய்யப்படும் சிறப்பு மிக்க "டாக்கா மஸ்லீன்" போன்றவற்றை உருவாக்கிய நெசவுத் தொழில்  புறக்கணிக்கப்பட்டு, ஒரு சிறு குண்டூசியும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும்  அளவிற்கு இங்கிலாந்து அரசு இந்திய பொருளாதார  நிலைமையில் மாற்றம் செய்துவிட்டது  சுட்டிக்காட்டப்படுகிறது. இயந்திரங்களால் குறைந்தவிலையில் பொருட்களை தயாரிக்கும் வண்ணம்நிலைமை மாறியதும்,   தொழிற்புரட்சியில் இந்தியா பின்தங்கியதும் இதற்குக் காரணமாகக் காட்டப் படுகிறது.  இலங்கையின் ராஜா தேவாரம் நாடார் என்ற பொறியியல் படித்தவருக்கு உதவி செய்து அவருடன் இணைந்து தொழிசாலைகள் அமைத்து, அதில் 90%  நாடார் குல மக்கள் பங்கு பெற்று தொழில் செய்து, அக்குல மாணவர்களை அயல்நாட்டிற்கு பொறியியல் கல்வி பயிலவும், இந்திய அரசு ஆட்சியின் ICS சிவில் பட்டங்கள் பெறவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும்,   தென்னாட்டில் நாடார் முயற்சி வடநாட்டின் டாடா போல இருக்க வேண்டும்  என்ற திட்டங்கள் முன்வைக்கப் படுகிறது.  ராஜா தேவாரம் நாடாரின் தொழிற்திறமை பற்றிய தனிக்கட்டுரையும் கொடுக்கப்பட்டுள்ளது.

    ராஜாஜியின் தலைமையில் சென்னை சட்டசபை நடப்பதும், சென்னை சட்டசபைக்கு திருநெல்வேலிக்கான பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதில் லஞ்ச ஊழல் நடந்ததெனவும்,  டெல்லியில் பூகம்பம், கொழும்புவில் வெள்ளம், பஞ்சாபில் அகாலிகள் தாங்கள் நடத்திய மதப் போராட்டத்தில் வெற்றி, காங்கிரசில் உள்ள பிளவு நேர் செய்யப்பட்டது நாக்பூரில்  காங்கிரஸ் மாநாடு நடந்தது.  ஜான்சியில் கணவரின் மறைவுக்குப் பின்னர் உடன்கட்டை ஏறிய 19  வயது பெண் ...
    அந்நாளில் சென்னை மாகாண மக்கட்தொகை விவரம்:
    மொத்த மக்கதொகை     42,794,155
    இந்துக்கள்                            37,942,191
    இஸ்லாமியர்கள்              2,865,235
    கிறிஸ்துவர்கள்                 1,390,672
    போன்ற  தகவல்கள் இந்த இதழில்  கிடைக்கின்றன.


    குலவர்த்தமானம் என்ற பகுதியில் நாடார் சங்க அறிவிப்புகள், உலக நடப்புகளைப் பற்றிய துண்டு துணுக்குகள், விகடக்கொத்து, பழமொழிகள்,  குறிப்புகளும் அபிப்பிராயங்களும் போன்ற பகுதிகள் வழக்கம் போல தொடர்கின்றன. இப்பத்திரிக்கையின் முக்கியப்பங்கான நாடார் மக்களை  ஒன்றுபடுத்தும் நோக்கத்தை முன்னிறுத்தி அதற்குரிய செய்திகள், செயல் திட்டங்கள்   இடம் பெற்றுள்ளன. நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்விக்காக கட்டணம் கட்டுவதில் உதவி செய்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
    வழக்கம் போல முதல் மற்றும் கடைசி பக்கங்கள் விளம்பரங்களால் நிரம்பியும், இடையிடையே சில பக்கங்களிலும் விளம்பரங்கள் காணப்படுகின்றன.
    சௌந்தரகாந்தி நூல், மனோசுந்தரம் நூல், அமரர் புராணம் நூல்,  சங்கீத மஞ்சரி என்ற நூல்களுக்கும் ...
    தேசானுகூலன்  பத்திரிகை, தத்துவ இஸ்லாம் பத்திரிகை , ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கைகளுக்கனா விளம்பரங்களும் உண்டு.
    It is loading more messages.
    0 new messages