மனுநூலும், வள்ளுவமும்

108 views
Skip to first unread message

Dev Raj

unread,
Mar 4, 2017, 9:39:48 AM3/4/17
to மின்தமிழ்

மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாணடியால்

ஞாலம் முழுதும் நயந்தளந்தான் - வாலறிவின்

வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்

உள்ளுவவெல்லாம் அளந்தார் ஓர்ந்து


கான்நின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
கூநின்று அளந்த குறளென்ப - நூல்முறையான்
வான்நின்று மண்ணின்று அளந்ததே வள்ளுவனார்
தாம்நின்று அளந்த குறள் !
                                              - திருவள்ளுவமாலை

மனுநூல் வெகுவாக விமர்சிக்கப்படுகிறது என்றாலும் மனுநூலுக்கும் , வள்ளுவத்துக்கும் பல ஒற்றுமைகள். உட்கருத்தளவில் பல ஒற்றுமைகள் இருப்பினும், சொற்பொருத்தத்திலும் நெருக்கம் காட்டும் இடங்களைச் சுட்ட முடிகிறது. ஒரு நூலின் கண் எதிர்மறையாகச் சுட்டப்படுவது, மற்றதில் உடன்பாடாக வலியுறுத்தப்படுகிறது. 

மூவாமறையும், மறைவழி நூல்களும் இல்லறத்தைச் சிறப்பித்துப் பேசுவன.  வள்ளுவமும், மனுநூலும் அதையே செய்கின்றன.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் 
இல்வாழ்வான் என்பான் துணை.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை.  

तथैवाश्रमिणः सर्वे गृहस्थे यान्ति संस्थितिम् । । ६.९० । ।
ததைவாஶ்ரமிண​: ஸர்வே க்ருஹஸ்தே யாந்தி ஸம்ஸ்திதிம் |  |  6.90 |  |

[க்ருஹஸ்த: - இல்வாழ்வான்
ஸம்ஸ்திதி: - நிலைபேறு
யாந்தி - அடைகின்றனர்]
---------------------------------------------------------------------------------------------------

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை


देवतातिथिभृत्यानां पितॄणां आत्मनश्च यः ।
न निर्वपति पञ्चानां उच्छ्वसन्न स जीवति ।।

தேவதாதிதிப்ருத்யாநாம் பித்ரூணாம் ஆத்மநஸ்ச ய​: | 
ந நிர்வபதி பஞ்சாநாம் உச்ச்வஸந்ந ஸ ஜீவதி | | [3:72]

[தேவதா - அதிதி - ப்ருத்யாநாம் பித்ரூணாம் ஆத்மநஸ்ச ய​:]


(தென்புலத்தார் - பிதர:

தெய்வம் - தேவதா  

விருந்து - அதிதி

தான் - ஆத்மந:

ஒக்கல் - ப்ருத்யா: [பணியாளர்])

----------------------------------------------------


யதா² க²நந் க²நித்ரேண நரோ வார்யதிகச்ச²தி | 
ததா² குருகதாம் வித்யாம் ஶுஶ்ரூஷுரதிகச்ச²தி || 
[2:218]


தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றணைத் தூறும் அறிவு. 
[396]


[கநநம் - தோண்டுதல், வாரி - நீர், அதிகமநம் - அடைதல்]
------------------------------------------------


அரக்ஷிதா க்ருʼஹே ருத்தா: புருஷேராப்தகாரிபி: | 
ஆத்மாநமாத்மநா யாஸ்து ரக்ஷேயுஸ்தா: ஸுரக்ஷிதா: ||
[9:12]

[ ஆத்மாநம் ஆத்மநா - தன்னைத் தானே]  


சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. [57]
---------------------------------------


தூய்மை -


அத்பி: காத்ராணி ஶுத்யந்தி,
மந​: ஸத்யேந ஶுத்யதி | 
[தர்ம சாஸ்த்ரம்]

[காத்ரம் - உடல்;  அத்பி: நீரால், ஸத்யேந - வாய்மையால்]


புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.
[அறத்துப்பால் :298]
-------------------------------------------------------------

மறை ஓத்தைக் காட்டிலும் ஒழுக்கமே உயர்ந்தது என மனுவும், வள்ளுவரும் ஒரே குரலில் பேசுவர் -

आचाराद्विच्युतो विप्रो न वेदफलं अश्नुते ।
आचारेण तु संयुक्तः सम्पूर्णफलभाग्भवेत् ।।


ஆசாராத்விச்யுதோ விப்ரோ ந வேதபலம் அஶ்நுதே | 
ஆசாரேண து ஸம்யுக்த​: ஸம்பூர்ணபலபாக்பவேத் | | 

[1:109]

[ஆசாராத் விச்யுத: விப்ர: வேதபலம் ந அச்நுதே|]


மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் 
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.


மணக்குடவர் உரை:
பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.
[மணக்குடவர் சமணர்]

---------------------------------------------------------------------------


कृषिगोरक्षं आस्थाय जीवेत् “ "க்ருஷி - கோரக்ஷம் ஆஸ்தாய ஜீவேத்” என்று மநு ஸ்ம்ருதி பத்தாம் அத்யாயத்தில் சொல்லப்பட்டுள்ளது. தர்ம சாஸ்த்ரம் வேளாண்மையை ஆதரித்துள்ளது;
குறளில் உழுதொழிலுக்கென்றே ஓர் அதிகாரம்.

-----------------------------------------------------------------------------

यथोद्धरति निर्दाता कक्षं धान्यं च रक्षति ।
तथा रक्षेन्नृपो राष्ट्रं हन्याच्च परिपन्थिनः । । ७.११०

யதோத்தரதி நிர்தாதா கக்ஷம் தாந்யம் ச ரக்ஷதி | 
ததா ரக்ஷேந்ந்ருபோ ராஷ்ட்ரம் ஹந்யாச்ச பரிபந்திந : || 7.110||


அந்வயம் -

யதா நிர்தாதா கக்ஷம் உத்தரதி, தாந்யம் ரக்ஷதி, ததா ந்ருப: பரிபந்திந: ஹந்யாந் ராஷ்ட்ரம் ரக்ஷதி |

[களை பறிப்பவர் களைகளைக் களைந்து விளையைக் காப்பதுபோல், மன்னனும் தீயோரை ஒறுத்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.]


(கக்ஷம் - களை, தாந்யம் - கூழ், கூலம், ந்ருப: - அரசன்)


கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் 
களைகட் டதனொடு நேர்
[குறள் 550]




சில வரிகளுக்குப் பொருள் நிச்சயம் செய்து கொள்ளத் துணை செய்த  ஆங்கிலச் சுட்டி அளித்த தேமொழியாருக்கு நன்றி



தேவ்



Innamburan S.Soundararajan

unread,
Mar 4, 2017, 8:27:37 PM3/4/17
to mintamil
மிக்க நன்றி, தேவ். குறைந்தது நானாவது படித்து பயன் பெறுவேன்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Mar 4, 2017, 8:58:00 PM3/4/17
to mintamil
எடுத்துக்காட்டுகளுக்கு நன்றி, தேவ் ராஜ் அவர்களே!
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Mar 5, 2017, 1:22:07 AM3/5/17
to மின்தமிழ்
தகவலுக்கு:
கடந்த இரண்டு மூன்று வாரங்களாக "அயோத்திதாசர் இழையில்"
வள்ளுவரும் மனுவும்
வள்ளுவரும் வடமொழி நூல்களும்
என்ற தலைப்புகளில்  பதிவிடப்பட்ட  கட்டுரைகளைத் தவற விட்டிருந்தால்.....

இங்கு சென்று படிக்கலாம்..

Dev Raj

unread,
Mar 5, 2017, 6:02:57 AM3/5/17
to மின்தமிழ்
On Sunday, 5 March 2017 06:57:37 UTC+5:30, இன்னம்பூரான் wrote:
குறைந்தது நானாவது படித்து பயன் பெறுவேன்.


On Sunday, 5 March 2017 07:28:00 UTC+5:30, oruarizonan wrote:
எடுத்துக்காட்டுகளுக்கு நன்றி, தேவ் ராஜ் அவர்களே! 


ஒரு சிலருக்காவது பதிவு பயன்படுவதில் மகிழ்ச்சி.

கொல்லாமைக்கும் ஆயிரம் வேள்விகளுக்குமான ஒப்பீடு வள்ளுவத்தில்;
கொல்லாமைக்கும் நூறு அசுவமேத வேள்விக்குமான ஒப்பீடு மனுநூலில்.

மஹாபாரதம், வடமொழி நீதி நூல்கள், அர்த்த சாஸ்த்ரம் இவற்றுக்கும் 
வள்ளுவத்துக்கும் ஒப்பீடு செய்ய இடமுள்ளது. பாரதம் - ஆதி பர்வம்
அறம், பொருள், இன்பம் மூன்றையும் ‘த்ரிவர்கம்’ எனும் பகுப்பில்
விவரிக்கிறது. அதையே கருப்பொருளாகக் கொண்டு வள்ளுவம்  அமைகிறது.

‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு‘ 
எனும் குறட்பா ததீசி முனிவர் தம் இன்னுயிர் ஈந்து இந்திரனுக்காகத் தம் முதுகெலும்பை வழங்கிய புராண நிகழ்ச்சியைச் சுட்டுகிறது.
இது போன்ற பல புராண - இதிஹாஸ, நம் மரபுசார் நிகழ்ச்சிகளைக் குறட்பாக்களுடன் பொருத்தம் காட்டி எழுதப்பட்ட பிற்கால நூலே ‘இரங்கேச வெண்பா’.

பிற நீதி நூல்கள் செய்தியைக் கூறுவதோடு நின்று விடுகின்றன. இலக்கிய நயம் காண முடிவதில்லை. ஆனால் திருவள்ளுவதேவ நாயனார் காட்டும் இலக்கிய
நயமும், உவமைகளும் ஈடிணையற்றவை. அறிஞர் பெருமக்கள் அதில் பல நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருவதற்கான காரணமும் அதுவே.

ராஜா பர்த்ருஹரியின் சதக த்ரயத்தின் ச்ருங்கார சதகம்,  சிருங்கார ரஸத்தை விவரிக்கிறது; வீட்டின்பத்தை மையமாகக் கொண்டது அவர்தம் ‘வைராக்ய சதகம்’; 
இலக்கிய நயம் மிகுந்து விளங்கும் அந்நூலின்கண் சுருக்கம் காணப்படவில்லை. வள்ளுவத்தின் சொற்செட்டு கற்பனைக்கு எட்டாதது.

அணுவைத் துளைத்து  ஏழ் கடலைப் புகுத்தியவர்  திருவள்ளுவதேவ நாயனார். 


தேவ்

Innamburan S.Soundararajan

unread,
Mar 5, 2017, 6:33:07 AM3/5/17
to mintamil
அவரவர் விருப்பம். அதற்காக, விடுதலையில் போய் ஶ்ரீராமானுஜ வைபவம் எழுத விழைந்தால், அது விழலுக்கு இறைத்து தானே! இல்லை ந்ருசிம்ஹப்பிரியாவில் போய், " ...பாம்பையும், பார்ப்பானையும் கண்டால், பாம்பை விட்டு பார்ப்பானை அடி..." [இந்துத்துவாviன் படையெடுப்பு] என்ற ஈவேராவின் வைரி வரியை பதிவு செய்வார்களா? அ.மாதவையாவும் பார்ப்பனர். பாரதியாரும் பார்ப்பனர். அவர்களின் கண்டனங்கள் பொருத்தமானவையே, அந்தக்காலத்தில். இப்போது ஏன் இந்த பார்ப்பன காழ்புணர்ச்சி மாயை? அதனால் என்ன? இருந்து விட்டு போகட்டுமே. மின் தமிழ் 'எல்லாம் உட்படுத்த அனுமதிக்கும் இழை தானே? செத்த பாம்பை அடிக்காமல், இந்த இரட்டை டம்ளர் கொடூரத்தை ஒழிக்க பாடுபடுங்களேன். மற்ற மதங்களின் தற்கால நிலைமையை அலசுங்களேன். சனாதன தர்மம் மட்டும் தான் சீர்திருத்தப்பட வேண்டுமா? மற்றவர்கள் ஒரு பொருட்டு இல்லையா?இல்லை அச்சமா? பிள்ளையார் கோயில் ஆண்டியை போய் திருப்பாச்சேத்தி அரிவாளால் வெட்டலாம்.அதான்.
ஒரு மேற்கோள்: "...அடியோடு தீண்டாமை ஒழிய வேண்டுமானால், இஸ்லாம் மத வேஷம் போட்டுக்கொள்வது மேல் என்று கருதுகிறேன். (ஈவேரா: குடியரசு 31 05 1936}  பெரியார் சொன்னது ஒன்றையும் மதிக்காத அவரது சீடர்கள் இந்த வேஷமாகவது போட்டு தேங்காய்ப்பட்டண பண்பு பாராட்டி இருக்கலாமே.

இதையெல்லாம் விடுங்கள் தேவ். உங்கள் கடமையை செய்தால் போதுமே.
இன்னம்பூரான்









இன்னம்பூரான்

--

Singanenjam Sambandam

unread,
Mar 5, 2017, 6:45:28 AM3/5/17
to mint...@googlegroups.com

திரு. தேவ் ஐயா அவர்களுக்கு நன்றி,

“”வள்ளுவர் செய் திருக்குறளை

மருவற நன்குணர்ந்தவர்கள்

உள்ளுவரோ மனுவாதி

ஒரு குலதிற்கொரு நீதி.”

என்று பார்த்திருக்கிறேன். அதே மனு சாத்திரத்தில் இருந்து நல்ல கருத்துகளை மேற்கோள்களாக எடுத்து அவற்றை திருக்குறளோடு ஒப்புமை படுத்தி காட்டியிருப்பது வித்தியாசமாக உள்ளது. தொடருங்கள். மீண்டும் நன்றி.

 

Oru Arizonan

unread,
Mar 5, 2017, 8:26:24 PM3/5/17
to mintamil


2017-03-05 4:32 GMT-07:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
//மற்ற மதங்களின் தற்கால நிலைமையை அலசுங்களேன். சனாதன தர்மம் மட்டும் தான் சீர்திருத்தப்பட வேண்டுமா? மற்றவர்கள் ஒரு பொருட்டு இல்லையா?இல்லை அச்சமா? பிள்ளையார் கோயில் ஆண்டியை போய் திருப்பாச்சேத்தி அரிவாளால் வெட்டலாம்.அதான்.//

நான் மின்தமிழ் குழுமத்திற்கு வந்து ஓரிரு திங்களிலேயே எழுதாத துவங்கியதைத் தங்கள் இப்பொழுது எழுதத்துவங்குவதுகுறித்து மிக்க மகிழ்ச்சி, இன்னம்பூராரே!

அன்புடன்,
ஒரு அரிசோனன் 

Dev Raj

unread,
Mar 6, 2017, 1:03:09 PM3/6/17
to மின்தமிழ்
1950லிருந்து 2016 வரையிலும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்
101 திருத்தங்களைக் கண்டுள்ளது. மனு நூலும் மாற்றம் பெற்றது.
அது போன்றே மனுநூலும். மேலும் மேலும் உள்நுழைந்து அதில் 
தவறு காண்பது தேவையற்ற முயற்சி.

‘ஒப்பிலக்கிய’ அடிப்படையில் இந்த ஒப்பீட்டை எடுத்துக்கொண்டு
கடந்து செல்க


தேவ்


 

Dev Raj

unread,
Mar 6, 2017, 1:23:29 PM3/6/17
to மின்தமிழ்
On Sunday, 5 March 2017 17:15:28 UTC+5:30, singanenjan wrote:

“”வள்ளுவர் செய் திருக்குறளை

மருவற நன்குணர்ந்தவர்கள்

உள்ளுவரோ மனுவாதி

ஒரு குலதிற்கொரு நீதி.”

என்று பார்த்திருக்கிறேன். அதே மனு சாத்திரத்தில் இருந்து நல்ல கருத்துகளை மேற்கோள்களாக எடுத்து அவற்றை திருக்குறளோடு ஒப்புமை படுத்தி காட்டியிருப்பது வித்தியாசமாக உள்ளது. தொடருங்கள். மீண்டும் நன்றி.




தங்களது மேலான கருத்துகளுக்கு நன்றி, ஐயா.
‘ஒப்பியல் ‘ எனும் நோக்கில் பல நூல்களோடும்  ஒப்பீடு செய்வதில் தவறில்லை.
ஈழ அறிஞர் கலாநிதி. கைலாசபதி அவர்கள் இத்துறையில் முன்னோடியாக
இருந்தவர்.

கௌடில்யரின் அர்த்த சாஸ்திரமும், வள்ளுவமும் -

अग्नाविव हि सम्प्रोक्ता वृत्ती राजोपजीविनाम्। 
அக்³னாவிவ ஹி ஸம்ப்ரோக்தா வ்ருʼத்தீ ராஜோபஜீவினாம்|
                                                                            -   அர்த்த சாஸ்திரம்  
[ராஜோபஜீவி - வேந்தர்ச் சேர்ந்தொழுகுபவர்]

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க 
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்
                                            - திருக்குறள்


தேவ்    

தேமொழி

unread,
Mar 6, 2017, 3:40:50 PM3/6/17
to மின்தமிழ்
திரு தேவ்.  

நான் குறிப்பிட்டது 

////
தகவலுக்கு:
கடந்த இரண்டு மூன்று வாரங்களாக "அயோத்திதாசர் இழையில்"
வள்ளுவரும் மனுவும்
வள்ளுவரும் வடமொழி நூல்களும்
என்ற தலைப்புகளில்  பதிவிடப்பட்ட  கட்டுரைகளைத் தவற விட்டிருந்தால்.....

இங்கு சென்று படிக்கலாம்..

/////

மேற் குறிப்பிட்ட வரிகளில் ....
நீங்கள் குறிப்பிடும் 

///மேலும் மேலும் உள்நுழைந்து அதில் 
தவறு காண்பது தேவையற்ற முயற்சி.///

எங்கிருக்கிறது?


தவறு காணும் செயலைக் காட்டும்  அந்த வரியை வெட்டி ஒட்டவும்.



அத்துடன் அயோத்திதாசர் நூலும் நீங்கள் கூறும் ஒப்பிலக்கிய வகையில்  ஒப்பிட்டுத்தான் செல்கிறது.  

அடுத்து நீங்கள் சிங்கநெஞ்சம் அவர்களிடம் குறிப்பிடும் பதிலில்... 

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க 
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்
                                            - திருக்குறள்

என்பதும்  அந்த நூலில் இருக்கிறது... 


இப்பகுதியில் பண்டை ஆசிரியர் என்று கெளடலீயர் குறிப்பது வள்ளுவரையே என்றெண்ணுதல் தவறாகாது. இருக்கு வேதத்திற்கு ஆய்வுரை எழுதியவரும் வேதநூல் விற்பன்னருமான சுந்தர்ராஜ் என்பவர் வடநூல்கள் பண்டை ஆச்சாரியார்கள் என்று சுட்டுவது தமிழ் அறிஞர்களையே என்று குறிப்பிடுவார்.

அமைச்சர் இயல்பு கூறும்போது கெளடலீயம் “அரசனைச் சார்ந்தவருடைய வாழ்க்கை சூழலைச் சேர்ந்தொழுகுதல் போன்றதெனக் கூறுப. தீ ஒரு பகுதியையாதல், ஓங்கின் உடல் முழுமையுமாதல் கொளுத்தும் அரசனோவெனின் மக்கள் மனைவியருடன் ஒருவனைச் சேர்த்து அழிக்கவோ ஆக்கவோ வல்லவனாவான்” (ப. 701).

என்றுரைக்கும். திருக்குறள்,

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந் தொழுகுவார் (குறள் 691)

என்று சொல்லழகும் பொருளழகும் தோன்றக் கூறியுள்ள கருத்தே கெளடலீயத்தில் அமைச்சர்க்குக் கூறப்படும் எச்சரிக்கையாக இடம் பெறுகிறது. வள்ளுவர்,






இதற்குரிய சமஸ்கிரத மூலத்தை..


अग्नाविव हि सम्प्रोक्ता वृत्ती राजोपजीविनाम्। 
அக்³னாவிவ ஹி ஸம்ப்ரோக்தா வ்ருʼத்தீ ராஜோபஜீவினாம்|
                                                                            -   அர்த்த சாஸ்திரம்  
[ராஜோபஜீவி - வேந்தர்ச் சேர்ந்தொழுகுபவர்]

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க 
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்
                                            - திருக்குறள்

என எடுத்துப் போட்டு நீங்கள் ஒப்பிலக்கியம் செய்வதாகக் கூறுகிறீர்கள்.  அந்த நூலாசிரியர்  (ப. 701) என்றே குறிப்பும் கொடுத்திருக்கிறார்.


..... தேமொழி

 





 


தேவ்


 
Reply all
Reply to author
Forward
0 new messages