பரந்த தேடல்களின் நடுவே, சமணத் தடயங்களைக்
கூர்ந்து நோக்கிப் பார்வைக்கு வைக்கும் தங்கள் உழைப்பு
பாராட்டுக்குரியது. 8.47 நிமிடம் ஓடும் மேற்குறித்த காணொளியில்
4.38-4.40 வரையுள்ள அச்சிறு இடைவெளியில், தீர்த்தங்கரரின்
தலை போல் தோன்றும் ஒரு சிற்பப் பகுதியைக் கண்டேன்.
ஆய்வுக்குரியது.
பயணத்தின்போது ப3ன்னூர் ஊர் வந்தது. மைசூரிலிருந்து புறப்படும்
இப்பயண வழி இடங்களெல்லாம், இராசராச சோழன் கைக்கொண்டு
“முடிகொண்ட சோழ மண்டலம்” எனப் பெயர் வைத்து ஆட்சி செய்த பகுதியே.
ப3ன்னூர், இராசராச சோழனின் பட்டப்பெயருள் ஒன்றான “ஜனநாதன்”
என்னும் பெயரைக்கொண்டு “ஜனநாதச் சதுர்வேதி மங்கலம்”
என்னும் பெயரில் வழங்கியது. ஊரின் இயற்பெயர், கல்வெட்டுகளில்
“வன்னியூர்” எனக் காணப்படுகிறது. பின்னர் 16-ஆம் நூ.ஆ.
காலத்தில், “வாகினிபுரம்” என்னும் பெயர்கொண்டும் இருந்துள்ளது.
தற்பொழுது “ப3ன்னூர்” ; வன்னியூரின் திரிபு.
இங்குள்ள சிவன் கோயிலிலும் விண்ணகரத்திலும்
தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன.
இவை போன்ற சோழர் காலச் சிறு கோயில்கள் சிதைந்த
பின்னர், கோயில்களின் தூண்களையெல்லாம் எடுத்துவந்து
மேற்படிப் பாலம் அமைத்தார்களோ?
சுந்தரம்.